பயத்திற்கும் நம்பிக்கைக்கும் நடுவே தேர்தல் நடக்கிறது.
அச்சமூட்டுவது எப்படி?
‘அன்னியர் இத்தாலியர் இந்தியப் பிரதமர் ஆகலாமா?’ – சோனியா காந்தியை பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கிறது. ‘மோடி மட்டும் பி.எம். ஆனால், மொத்த பாரதமும் பாகிஸ்தான் மாதிரி ஆகிவிடும்!’ – சந்தேகப் புகையை கிளப்பி துன்பப் பாதையை காட்டுகிறார் ஷிண்டே.
நம்பிக்கையை விற்பது எப்படி?
நான்காண்டுகளுக்கு முந்தைய அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஒபாமா எல்லோருக்கும் தெரிந்த உதாரணம். வாஜ்பேயி ‘இந்தியா ஓளிர்கிறது’ என்றார்; தோற்றார். ‘நிலையான அரசாங்கம்’ என்பதை இந்திரா காங்கிரஸ் முன்வைத்து வி.பி. சிங் + தேவி லால் – சந்திரசேகர் ஜனதாவை வென்றது.
உலகின் எல்லா தேர்தல்களிலும் பீதிக்கு எதிராக ஆசை வார்த்தை போட்டியிடுகிறது.
என்னிடம் சிக்ஸர் அடிக்க விருப்பமா அல்லது விக்கெட் விழாமல் இருக்க விருப்பமா என்று கேட்டால், எளிதாக விடை சொல்லி விடுவேன். ஒவ்வொரு பந்தையும் தூக்கி அடிப்பேன். ஆனால், விக்கெட்டிற்கு பதில் விரை என்று மாற்றினால், சிக்சர் பக்கமே செல்ல மாட்டேன்.