Tag Archives: Cinema

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂

இளையராஜா இசையில் இறுதியாக இதம் தந்த இந்தி அல்லாத இனியவை எது?

இளையராஜா இசையில் கடைசியாக மனதை அள்ளிய பாடல் பெற்ற படம் எது? Cheeni Kum சொல்லக்கூடாது. எனக்கு ‘சேது’.

இதுதான் என்னுடைய கேள்வி. ட்விட்டரில் வெளியான மற்றவர்களின் எண்ணங்கள்:

neotamizhan @bsubra இளங்காத்து வீசுதே…. பிதாமகன்

spinesurgeon @bsubra உன்னைவிட (விருமாண்டி) . அத்ற்கு முன் எங்கே செல்லும் இந்த பாதை (சேது)

sivaramang @bsubra ‘kaiyetha kombatho’ from vinodayathra –http://tinyurl.com/5ay368, if tamil katrilvarum&kajuraho from ONOK http://tinyurl.com/644jfh

santhoshguru @bsubra Sihi Gaali from a Kannada movie Aah Dinagalu

paval @bsubra நீ பார்த்த பார்வைக்கு.. (ஹே ராம்!)

neotamizhan @bsubra @paval இசையில் தொடங்குதம்மா…. ஹே ராம்

krgopalan @bsubra எளங்காத்து வீசுதே…! (பிதாமகன்)

sudgopal @bsubra “மயில் போல பொண்ணு ஒண்ணு..” பாரதி

anbudan_BALA @bsubra பாட்டு தொண்டையில நிக்குது, மொட்டையும் ஜானகியும் பாடின பாட்டு, படம்:அவதாரம்

rarunach @anbudan_BALA Thendral vandhu veesum bodhu?

sureshkannan70 @bsubra //இளையராஜா இசையில் // நினைவிலிருப்பது ” உன்ன விட” (விருமாண்டி) சேதுக்கப்புறம் எதுவுமே பிடிக்கலையே? இணையத்துல உதைக்கப் போறாங்க.

sureshkannan70 பாலாவிற்கு போட்டிக் கேள்வி: ரகுமானின் இசையில் கடைசியாய் நன்றாக அமைந்திருப்பதாக தோன்றின பாடல் எது? எனக்கு ‘மருதாணி” (சக்கரகட்டி)

mohandoss @bsubra எனக்கு விருமாண்டி

sugavasi @bsubra “பிதாமகன்”-ல் “எளங்காத்து வீசுதே”….Loved it. The BGM for the movie was also great.

nandhakumar @bsubra எனக்கு விருமாண்டியும் ஹேராமில் இசையில் தொடங்குதம்மாவும்தான்…

ilavanji @bsubra விரு விரு மாண்டி விருமாண்டி!!! 🙂

rozavasanth @bsubra கடைசியாய் எரிச்சலை கிளப்பியது மாயாபஜார், அஜந்தா, க.க.பா., உளியின் ஓசை, தனம் அட எல்லாமே!

bmurali80 @bsubra ஒரு நாள் ஒரு கனவு – ஃபாசில் படம், இளையராஜா இசையில். 3 பாடல்கள் கிளாஸ்…

icarusprakash @bsubra : kajuraho kanavile – http://tinyurl.com/6eodmz

sudgopal @bsubra “எனக்குப் பிடித்த பாடல்…” ஜூலி கணபதியையும் சேர்த்துக்கோங்க

parisalkaaran @bsubra இளையராஜா இசையில்… நீங்க கேட்டதுக்கு என் பதில் இளங்காத்து வீசுதே…. (பிதாமகன்)

penathalar @bsubra இளங்காத்து வீசுதே. வானவில்லே வானவில்லே

valluvan @bsubra Virumandi

rozavasanth @bsubra சரி, கேள்விக்கான பதில், கடைசியாக மனதை அள்ளியது (சொல்லப்போனால் அழ வைத்தது) ̀அழகி’.

rozavasanth @donion உங்களுக்கு ஜூலி கணபதியின் இசை பிடிக்கவில்லையா? (பிடித்திருந்ததாக எனக்கு நினைவு, இப்போது சரியாக தெரியவில்லை.)

icarusprakash @donion we tend to ignore these just becoz the films are bad. I zapped when i saw athu oru… few weeks back in tv

icarusprakash @donion even i thought so. but u shud spend some time listening to the BGM scores of julie ganapathy and athu oru kana kalam.

rarunach @bsubra My last ilaiyaraja favorite was “Onna vida” from Virumandi. (Used Imdb for ilaiyaraja’s filmography!). Kaasi, how about you?

thendral @bsubra கடைசியா அவரு இசை அமைத்த படம் எது…? ம்ம்ம் 😉

Knolஇல் எழுத முயன்றது

தென்னக பிலிம்பேர் விருதில் ஜெயப்ரதா காட்சியளித்தார். இந்த வருட ஆரம்பத்தில் புருஷன் போனி கபூர் சமேத ஸ்ரீதேவி தனி ஆவர்த்தனமே ஆடியிருந்தார். அது ஹிந்தி ஃப்லிம்ஃபேர்.

ஆபிதின், சாரு நிவேதிதா, நாகூர் ரூமி எல்லோரும் கலைப்பயணத்தை ஒருங்கேத் துவக்கியவர்கள்.

கஜோலும் ஷில்பா ஷெட்டியும் ஒரே படத்தில் ‘பாசிகர்’ ஆனார்கள்.

இந்த மாதிரி ஒன்றாகத் தோன்றி திசை மாறியவர்களை Knolஇல் துட்டாக ஆக்க எண்ணம்.

பிள்ளையார் சுழித்தேன்.

சரிப்படாமல் போக, ‘உன்னைத்தானே தஞ்சமென்று’ ராதிகா, ‘சங்கீத ஸ்வரங்கள்’ பானுப்ரியா, ‘அதிசய ராகம்’ ஸ்ரீவித்யா, ‘கீழ்வானம் சிவக்கும்’ மேனகா, ‘விழிகள் மேடையாம்’ பூர்ணிமா ஜெயராம், ‘கண்ணின் மணியே’ சுகாசினி, ‘சேலை கட்டும்’ அமலா, ‘தென்றல் வந்து’ ஜெயஸ்ரீ என்று மனங்கவர்ந்த நாயகிகளைக் கொண்டு தொடராக மாற்றப் பார்த்தேன். அதிலும் ட்விட்டர் போல் சுருக்கெழுத்து கவனச்சிதறல்.

எழுதாமல் விட்டதை தூக்கிப் போடாமல் இருக்க Obsessive blogging disorder போய் Blogging Attention Disorder BAD ஆக வந்துவிட்டது.

இன்றும் கஜோல் சூப்பர் ஹீரோயின். ஷில்பா ஷெட்டி அனைத்து உலகத் தொலைக்காட்சிகளிலும் பேட்டியளிப்பவர். ரிச்சர்ட் ஜெருக்கு முத்தம் கொடுத்தால் சர்ச்சை வரவழைப்பவர். Celebrity பிக் பிரதரில் வாகை சூடியவர்.

ஷாரூக் இன்னும் ஹீரோவாகவே தேய்கிறார்.

நடனத்தில் எத்தனைவகைப்படும்? ட்விஸ்ட், வால்ட்ஸ், சல்ஸா, பாங்ரா பலவகைப்படும். இராயர் காபி க்ளபில் இலக்கியம் பயிற்றுவித்தால் கல்லூரி டான்ஸ் க்ளபில் கூடப்படிப்பவரின் இடையைப் பிடிப்பதை பயிற்றுவித்தார்கள். ஷாரூக் மாதிரி கண்ணாடி; ஷில்பா ஷெட்டி மாதிரி சகா. இந்தப் பாட்டில் வரும் ட்விஸ்ட் மட்டும் வரவேயில்லை.

மூதாட்டி ஜெயபிரதாவை பார்த்தவுடன் ‘சலங்கை ஒலி’ தோன்ற; அது ‘வறுமையின் நிறம் சிவப்பு’க்கு இட்டுச்செல்ல; அங்கிருந்து நடிப்பு வராத கேஸ் என்று மார்க் போட்ட கஜோல் ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ ஆக தங்கிப் போனதில் தாவி; ஷில்பா ஷெட்டிக்கு கணவன் கிடைப்பானா ஆணாதிக்கமாக; ரோஜா நாயுடு கட்சியில் சேர்ந்து தோற்ற காட்சியை கூகிள் புகைப்படத் தேடலில் துழாவி Knolஇல் நின்றது.

ஒரே சமயத்தில் கமலுடன் ஜோடி கட்டியவர்கள். விகல்பமில்லாமல் ஹிந்திக்கு சென்று தொடை தெரிய கச்சை கட்டியவர்கள். சமகாலத்தினர்.

எல்லோராலும் ஜெயலலிதாவாக முடிவதில்லை.

Dasavatharam – Eight Year old’s Take

XKCD - Butterfly EffectHi Daddy,

I saw Dasavatharam. It was good but for the fights, monkey scene, villian dying and the tsunami, I closed my eyes. I liked all the different Kamal roles. I had a doubt if the japanese guy was a Kamal. I did’nt really like it because I closed my eyes most of the times. Now, I know what a tsunami is.

You were right. 10A did go fast. Mostly there was only the normal Kamal named Govindaraj. I liked the first song in the movie. I know the first line in the first song. 10A is not made for kids!!!!!!!!!!!!!!!

கார்ட்டூன்: xkcd – A webcomic of romance, sarcasm, math, and language – By Randall Munroe

அவ்தார் சிங்கும் ஏமி வைன்ஹவுசும்: Kamal is a Visionary – Sridhar Narayan

கமல் வருங்காலத்தை புட்டு பிட்டு வைக்கிறார் என்கிறார் ச்றீதர் நாராயன்.

நிஜ செய்தி: BBC NEWS | Entertainment | Singer Winehouse has lung disease

தொடர்புள்ள விமர்சன பின்னூட்டம் #1: Sridhar Narayanan said…:

தொண்டையில் வளர்ந்திருக்கும் புற்று நோயை துப்பாக்கி தோட்டா துளைத்து சரி செய்து விட்டதாக கூட ஒரு காட்சி வருகிறது. There is no magic bullet for cancer என்று புற்றுநோய் மருத்துவர்கள் சாடலாம். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனையை விரிவாக்கலாம்.

தொடர்புள்ள அறிவியல் ஆராய்ச்சி #2: Sridhar Narayanan said…: ஒரு Magic Bullet-னால் பாடகர் அவ்தார் சிங்கின் கேன்சர் குணமாகிறது.

தொடர்புள்ள ஆன்மிக சொற்பொழிவு மறுமொழி #3: Sridhar Narayanan said…: மனைவியின் மேல் மாறாப்பாசம் வைத்திருக்கும் அவ்தாரின் தொண்டை கேன்சரை ‘magic bullet’னால் சரி செய்கிறார்.

அவ்தார் சிங்கும் பாடகர்; ஏமி வைன்ஹவுஸும் பாடகர்!
Aவ்தார் சிங் முதலெழுத்தும் ஏ; Aமி வைன்ஹவுசுக்கும் ஏ!!
அங்கும் உடல்நிலை சரியில்லாவிட்டாலும் மேடையேறும் வித்தகர்; இங்கும் அரங்கேறுகிறார் ஏமி!!!

வாவ்!!!!

எமக்கு பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் ‘கமலின் தொலைநோக்கு பார்வைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்கிறார் ஸ்ரீதர் நாராயண்.

‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

முந்தைய சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

அதன் பிறகு வந்த செய்திகள் & கிசுகிசு புனைவுகளின் தொகுப்பு:

1. தசாவதாரம் விழாவில் நடிகர் விஜய் கார் மறிப்பு: “மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்தார்”

2. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் :: Kumudam Welcomes U

`வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு ஃப்ரேமை அழகுபடுத்த ஐந்து நிமிடம்தான் தேவைப்பட்டது. பிறகு அடுத்த ஃப்ரேமிற்குப் போய் விட்டேன். ஆனால் தசாவதாரத்தில் ஒரு ஃப்ரேமில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கும். அதே ஃப்ரேமில் இரண்டு வாரங்கள் கழித்து வேறு கெட்டப்பில் கமல் இருப்பார்.

மீண்டும் அதே ஃப்ரேமில் ஒரு மாதம் கழித்து வேறொரு கெட்டப்பில் கமல் இருப்பார். இந்த எல்லா கெட்டப்பில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் ஏற்றமாதிரி ஒரே லைட்டிங்கை வைக்க வேண்டும். இது ரொம்ப சிக்கலான விஷயம்.

அதேபோல் மேக்கப் போட்டு ஒரு மணி நேரம் மட்டும்தான் மேக்கப் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நேரம் ஆக ஆக மேக்கப் இளக ஆரம்பிக்கும். அதனால் முதலில் உள்ள ஸ்கின் டோன், கலர், எல்லாம் மாறிவிடும். அதற்கேற்றபடி ஒளிப்பதிவு செய்யவேண்டும். இதுபோன்று நிறைய சவால்கள்.

இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலிலான படம். அதற்கான தகுதி இப்படத்தில் எல்லாவிதத்திலும் இருக்கிறது. ஒரு இன்ச் கேமரா ஆங்கிள் மாறினாலும் கூட ஒட்டு மொத்த காட்சியுமே சொதப்பலாகிவிடும். இதனால் பக்காவாக ஸ்டாரி போர்ட் தயார் செய்து ஷூட் செய்தோம். இதைக் கவனிக்கவே எட்டு உதவியாளர்கள் உழைத்தார்கள்.”

3. இது வரை 48 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள ஏரியா வியாபாரம்: Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts – அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா எவ்வளவு? கலைஞர் தொலைக்காட்சி எத்தனை கோடி தரும்??

தொடர்புள்ள விற்பனைப் பதிவுகள்:

அ) உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

ஆ) AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income: “சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி”

இ) Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss: “ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்”

ஈ) Why ‘Sivaji’ is delayed?: “65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது”

உ) ‘தயாரிப்பாளர்களை வாழ விடுங்கள்; நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தக் கூடாது’

ஊ) அதிகாரபூர்வ வருமானமும் ஏய்ப்பு வரி விவரங்களும் :: கொடுப்பது ஒன்று எக்செல் கோப்பில் கோர்ப்பது இன்னொன்று

எ) Kuruvi makes box-office History – Super hit Tamil Cinema of the century: Ilaiya Thalapathi Vijai & Director Tharani: “பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் ‘குருவி’!”

ஏ) சிவாஜி – விற்பனை விவரங்கள்

நேற்றைய விவகாரம்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

நன்றி: Kamal and Oscar Ravi reply to Journalists – Scans | Kollywood Today

கமலின் கடிதம்:

Fans, scribes cane-charged at Chennai movie function

Kamal\'s reply for Chennai Audio release event mishaps

Letter from Oscar Films:

காஸெட், ஒலிப்பேழை, வட்டு வெளியீடு - விழா சர்ச்சைகள்

கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

Dasavatharam Posters Bannersகே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: (முந்தைய இடுகை: Dasavatharam « Tamil News)

  1. இரங்கராஜ நம்பி
  2. கோவிந்த் இராமசாமி
  3. அவ்தார் சிங்
  4. பல்ராம் நாயுடு
  5. Audio wrappers Initial Gossipsக்ரிஸ்டியன் ப்ளிட்சர்
  6. ஷிங்கென் நரஹாஜி
  7. ஜார்ஜ் புஷ்
  8. வின்சென்ட் பொவராகன்
  9. கிருஷ்ணவேணி பாட்டி
  10. கலிபுல்லா கான்

கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

அம்மாவின் விவரிப்பில் மொத்தமாக 24½ நிமிடங்கள். இன்னமும் கால் கிணறு ராமானுசனைக் கூட தொடவில்லை என்கிறார். சிறுவர்களுக்கு கதை சொல்லும் பாணியிலான பாக்கி சொற்பொழிவு நேரம் கிடைக்கும்போது…

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமூலர் பதிந்தது. அதன் பிறகு இப்பொழுதுதான் கமல்ஹாசன் புண்ணியத்தில் இராமானுஜரைக் குறித்த குழந்தைகளுக்கான குரல் பதிவுகள் – நான்கு பாகங்களாக:

1. இ – ஸ்னிப்ஸ் :

2. ஐ – மீம்: (மேலே சரியாக வேலை செய்யாவிட்டால் மாற்று mirror)

  1. தசாவதாரத்தில் இராமானுஜர் சரித்திரம் பொருத்தமா? இல்லையா!
  2. கல்லைக் கட்டியதும் கண்களைப் பிடுங்குவதும்
  3. அதிகப் பிரசங்கியா? அந்த நாள் கலகக்குரலா?
  4. கடைசி வரை அசின் இருந்தாரா? நம்பி எத்தனை நம்பி!

தொடர்புள்ள சில சேரிய சுட்டிகள்:

தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

எட்டுக்குடி முருகன் தலம். இது பத்து எட்டாக்குடியர்களைப் பற்றிப் பேசும் பதிவு. முதலில் செய்தி:

Ramadoss whines against wine this time – Politics/Nation – News – The Economic Times: “After rapping Shah Rukh Khan and Saif Ali Khan for smoking on screen and endorsing junk food, respectively, Union health minister Anbumani Ramadoss has spoken out against the Indian Premier League (IPL) for allegedly promoting liquor through surrogate advertising. Asked about surrogate advertising in IPL (liquor baron Vijay Mallya’s team is called ‘Royal Challengers’ named after a whiskey brand owned by his UB Group) the minister said he would take the issue up with the Information and Broadcasting (I&B) ministry.”

இதைத் தொடர்ந்து ரீடிஃப் ஹிந்தி சினிமாவில் நினைவில் நின்ற பத்து குடிக்காட்சிகளைக் கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் நினைவுக்கு வந்தவை:

1. ‘உயர்ந்த உள்ளம்‘ – குடிகார கமலை, வீட்டு சிப்பந்தி அம்பிகா சீர்திருத்துவார். (அல்லது ‘நானும் ஒரு தொழிலாளி‘யா?)

2. ‘பாட்சா‘ – ‘எட்டு எட்டா மனுசன் வாழ்வப் பிரிச்சுக்கோ பாடலின் முன் காக்டெயில் அடிக்கும் ரஜினி

3. ‘மறுபடியும்‘ – ரேவதி செல்லும் விருந்தில் முன்னாள் கணவனைப் பார்த்து கோபமுற்று மதுவருந்துவது

4. ‘சிந்து பைரவி‘ – சிந்து மீண்டும் ஜேகேபி வீட்டிற்கு வந்து அவருக்கு ஊற்றிக் கொடுக்கும் காட்சி.

5. ‘நவராத்திரி‘ – சிவாஜி: ‘இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இதுதான் எங்கள் உலகம் எங்கள் உலகம்’

6. ‘ஒளிவிளக்கு‘ – ம.கோ.ரா.: ‘தைரியமாகச் சொல் நீ மனிதன்தானா; இல்லை நீதான் ஒரு மிருகம்’

7. ‘மாமன் மகள்‘ – கவுண்டமணி & சத்யராஜ் மணிவண்ணனுடன் இளநீரில் கலந்தடிக்கும் க்ளாசிக்

8. ‘ஜெய்ஹிந்த்‘ – ‘போதையேறிப் போச்சு; புத்தி மாறிப் போச்சு’

9. ‘திருடா திருடா‘ – பணம் கடத்தப்பட்டு அறிந்தவுடன் சந்தோஷத்தின் உச்சத்தில் மேஜையில் உள்ள உயர்ரக பானங்களை உடைத்தெறியும் விக்ரம் (சலீம் கௌஸ்)

  • கார்த்திக் நண்பர்களுடன் தண்ணியடிப்பது,
  • ஏற்றிக்கொண்ட விஜயகாந்த் நாயகி வீட்டுக்கு சென்று வீராப்பு பேசுவது,
  • நவீன சுந்தர் சி,
  • நிரந்தர கோப்பையுடன் மேஜர் சுந்தர்ராஜன்,
  • சென்னை சல்பேட்டாவுடன் சுருளிராஜன்,
  • டிக்.. டிக்… டிக் என்று காலையில் பார் அருளும் தேங்காய் ஸ்ரீனிவாசன்,
  • குடிகார வில்லன்களாக மிளிர்ந்த ரகுவரன்,
  • ஹீரோவான பிறகும் புட்டிக்கு அந்தஸ்து வழங்கிய சத்யராஜ்,
  • தெரியாமல் குடித்துவிட்டு சேஷ்டை செய்யும் க்யூட் கதாநாயகியின் இலக்கணமான குஷ்பு
  • விக்கிக் கொண்டே ‘உன்னைக் கண் தேடுதே’ வரும் கணாளனே கண்கண்ட தெய்வம்
  • குடிகாரர் என்றாலே லுங்கி, மீசையுடன் மனைவியை இம்சிப்பவர் என்று பதிய வைத்த வண்ணக்கிளியின் ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’
  • அயல்நாட்டுக்கு சென்றவர்கள் குடித்து சீரழிந்தவர்கள் என்று சித்தரித்த சிரஞ்சீவியின் ’47 நாட்கள்’

வசூல்ராஜா தாதா ஆக குடியை விட்டிருக்கிறார்; சிங்காரி சரக்கு நல்ல சரக்கு என்று குத்து போட்டிருக்கிறார்; சாகர சங்கமம் கிணற்று மேல் ஆட்டம் கண்டிருக்கிறார்; ‘இந்துருடு சந்துருடு‘ என்று ஹை கிளாஸ் ஏந்தியிருக்கிறார்; ‘விருமாண்டி’ என்று சி கிளாசும் அடித்திருக்கிறார்; சோகம் என்றால் குடிக்க வேண்டும் என்று ‘வாழ்வே மாயம்‘ ஆக்கியிருக்கிறார்; ‘உன்னால் முடியும் தம்பி‘ என்று சீர்திருத்தி இருக்கிறார்!

அந்த மாதிரி தசாவதாரக் கலைஞனைத் தடுக்கும் முயற்சியா (இது) இந்த வார கமல் கோட்டா பதிவு.

உதவிய பதிவு: இட்லி-வடை :: குடி குடியை கெடுக்கும்