Tag Archives: திரைப்படம்

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

Aayirathil Oruvan is Ravanan

எதெதற்கோ முடிச்சுப் போடுகிறோம்! செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஐயும் மணி ரத்னத்தின் ‘இராவணன்‘ஐயும் கோர்த்து விட முடியாதா?

படத்தின் துவக்கம் கடத்தல். தொல்பொருள் ஆய்வாளர் பிரதாப் போத்தன் காணாமல் போவதில் ஆ.ஒ. ஆரம்பிக்கிறது. ஐஸ்வர்யா ராய் கடத்தப்படுவது ராவணன் முதற்காட்சி.

இரண்டு படங்களிலும் முக்கியமாக சொல்லப்படுவது ஜென்ம ஜென்மமாகத் தொடரும் வன்மம்; தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே உள்ள தீராப்பகை. சோழரும் பாண்டியரும் இரண்டாயிரம் வருடங்களாக சண்டை போடுகிறார்கள். காவல்துறையும் ராபின் ஹூட்களும் அனுமார் காலத்தில் இருந்தே பிணக்கில் இருக்கிறார்கள்.

சோழர் மகன் காணாமல் போய், அதன் பின் கடல் கடந்தது ஐதீகம். இராமர் கடலில் பாலம் கட்டி அதை வானர சேனையுடன் கடந்ததும் நம்பிக்கை. இராவணன் சீதையை விட்டுவிடுவான் என்பது மட்டும் நம்பக்கூடியதா என்ன?

பிரதாப் போத்தன் புகைப்படத்தை வைத்து அடையாளம் கேட்டு அடுத்த இடங்களுக்கு செல்வது போல், வீராவின் நிழற்படமும் படம் நெடுக முக்கிய பாத்திரம்.

‘நீ என்ன பொட்டையா?’ என்று ஆணைப் பார்த்து ஆயிரத்தில் ஒருத்தி கேட்பாள். அவனிடம் இல்லாத அதே தைரியத்தை ராகினியிடம் பார்த்து வியப்பது ‘இராவணன்’.

தசரதன் தன் மகனைக் காட்டுக்கு அனுப்பியது போல் அப்பாவும் மகளுக்கும் பிரச்சினையால் வீட்டை விட்டு வந்து காடு/மலை என்று கஷ்டப்படுபவள் லாவண்யா – ஆண்ட்ரியா.

சீதை தன்னுடைய நகைகளை வழித்தடத்தில் விட்டுப் போனது காப்பியம். பிரதாப் தன்னுடைய கறுப்புப் பையை விட்டுப் போவது ஆயிரத்தில் ஒருவன்.

ஆ.ஒ. சோழ சாம்ராஜ்யத்தில் நார்த் இந்தியன் ஸ்டைல் கோவில் கட்டுகிறார்கள்; திருநெல்வேலியில் உள்ள ஆரிய சமாஜத்தில் திருமணம் கட்டுகிறார் இராவணன்.

வாலியை மறைந்திருந்து தாக்குகிறான் இராமன். ஆயிரத்தில் ஒருவன் கிளாடியேட்டர் மைதானத்தில் நேருக்கு நேர் போர் புரிகிறான்.

வாலிக்கு பயந்து குகையில் பரிவாரங்களுடன் வாழ்ந்தவன் சுக்ரீவ ராஜா. சோழ அரசரும் பாண்டியனுக்கு பயந்து அடங்கி, மறைந்து வாழ்கிறார்.

‘மண்டையோடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ’ என்பான் சோழன். வீராவும் அங்ஙனமே பலி கொடுத்து வாழ்கிறான்.

இடர்வழி

ஆயிரத்தில் ஒருவனில் ஏழு சிக்கலைக் கடந்து இறுதி லட்சியத்தை அடைகிறார்கள்.

முதலில் கடல். ஜெல்லி ஃபிஷ் தாக்குதல்; அட்டை போல் ஒட்டிக் கொண்டு இராணுவ வீரர்களைப் பறிக்கிறது. இராவணனில் ஓடும் ஜீப்களில் ஏறி இராணுவத் தளவாடங்களைப் பறிக்கிறது.

இரண்டாவது காட்டுவாசிகள். வீராவிற்கு இல்லாத டியாள் கூட்டமா!

அடுத்தது காவல் வீர்களில் எறிகணைத் தாக்குதல். நடுக்காட்டில் போட்ட கூடாரம் சீரழிகிறது. பலர் இறக்கிறார்கள். அங்கேயும் வெடிகுண்டுகளுடன் வலியோரை நோக்கிய வெறிப் பாய்ச்சலும் பேரழிவும் உண்டு.

தொடர்வது சர்ப்பம். பாம்பில் இருந்து தப்பிக்க தண்ணீர் உபாயம். இராவணனில் சதா சர்வகாலமும் தண்ணீரில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். பின்னிப் பிணையும் பாம்பை உருவகமாகப் பார்த்தால், பாசத்தை சொல்லலாம். பசுமையான சூழலில் தான்தோன்றியாக உருவாகும் நாகம் போல் பச்சிளம் காரிகையைப் பார்த்தவுடன் வீராவிற்கு தடாலடியாக உதிக்கும் காதல்.

பின் பசி, தாகம் & புதைகுழி. நடராஜன் வடிவத்தில் சுரிமண். இராமேஸ்வரத்தில் சிவனை வழிபட்டுத்தானே கிளம்புகிறார் இராம்ர். அதே போல் இங்கேயும் இறைவணக்கம்.

கடைசியாக கிராமம். அங்கே மான் கேட்டாள் சீதை. இங்கே ஒட்டகம் கேட்கிறான் கார்த்தி.

மேம்போக்கு வழி

தற்கால பெரும் பொக்கீடு படங்களின் அடியொற்றி, தசாவதாரம் போல் பட்டாம்பூச்சி விளைவை இரண்டுமே குறிப்பால் உணர்த்துகின்றன. ‘ஓ லீசா… எல்லீஸா’வில் பட்டர்ஃப்ளை தலை காட்டுகிறது. அங்கே ஐஸ்வர்யாவினால் ஃப்ளை விரிவடைகிறது.

இராமனையும் இலக்குவனையும் பின் தொடர்ந்தது சீதை. அனிதாவையும் ஆன்ட்ரியாவையும் பின் தொடர்வது பருத்திவீரன்.

குரங்கு கூடவே வருவது போல் கார்த்தி இறுதி வரை துணை இருக்கிறார். தோளில் பையனைத் தூக்கி கடல் கடக்கிறார்.

ஆயிரத்தில் ஒருவனை ஆந்த்ரபாலஜிஸ்ட்டை பைத்தியமாக்கிறார்கள். இராவணனில் இராச்சிய விசுவாசத்தை கேலிக்குள்ளாக்குகிறார்கள்.

Low Class King? – Rajadhi Raja: Nabigalnaa Mecca; Rajannaa Pakkaa!

சினிமா போஸ்டர் இங்கே:

Nabigal-Rajadhi-Raja-Ragava-Lawrence-Shakthy-Chidmbaram-Poster-Ad-Cinema-Islam-Muslim

நபிகள்னா மெக்கா! ராஜான்னா பக்கா – தமிழ் சினிமா: ராஜாதி ராஜா


கண்டனம் அங்கே:

கூத்தாநல்லூர்: இயக்குனர் சக்தி சிதம்பரத்திற்கு சென்னை சுன்னத் வல் ஜமாஅத் கண்டனம்: “தமிழகத்தில் முன்னணி செய்தித்தாள்களில் சினிமா விளம்பரம் பகுதியில் ராஜாதி ராஜா என்ற திரைப்படத்தின் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் மக்கா மதினா படத்தை ஒரு பகுதியிலும், அந்த திரைப்படத்தின் ஹீரோ படத்தை ஒரு பகுதியிலும் பிரசுரித்து, நபிகள்னா மெக்கா ராஜான்னா பக்கா என்ற வசனத்தையும் போடப்பட்டிருக்கின்ற அச்செய்தி (விளம்பரம்) ஒட்டுமொத்த இசுலாமியர்கள் மனதை புண்படுத்துகின்ற செயலாக உள்ளது.”

படைப்பின் உச்சம் எது? ‘நான் கடவுள்’படமா! நாக்க முக்க பாடலா?

பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்‘ என்று எழுதியதற்கு புலவர் விக்கிரமாதித்தன் கடவுளை செல்லமாக அழைத்தது போல் என்னையும் கொஞ்சி மறுமொழி வந்தவுடன் நானும் கடவுள் என்று விளங்கியது.

அன்பே சிவ’மாக கமல் வந்து இன்னும் ‘நீயும் கடவுள்’ என்று நெக்குருகாதது பாக்கி இருக்கு. நெஞ்சை கனக்க செய்வது கமலின் சாமர்த்தியம். மைக்கேல் மூர் மாதிரி டாகுமென்டரி சிதறல் செய்வது பாலா சாமர்த்தியம்.

நிறைய விமர்சனம் படித்து, எல்லாவற்றிலும் கொஞ்சம் பிரசாதமாய் எடுத்து லட்டு விநியோகம் செய்யும் ஆசையுடன் வலைப்பதிவில் கிடைத்த இடுகையெல்லாம் மேய்ந்ததில் பைத்தியக்காரன் (Naan Kadavul: Paithiyakkaran – Metaphors, Symbolism, Balachander Shots, Intentions) பிரித்துப் போட்டிருந்தார்.

குருவி, சிலம்பாட்டம், ஜி போன்ற படங்களை பாலா என்று பெயர் போட்டவர் இயக்கி இருந்தால், பைத்தியக்காரனிடம் இருந்து இன்னும் பல சுவாரசியமான விமர்சனம் கிடைத்திருக்கும். இயக்குநர் பாலாவும் எழுத்தாளர் ஜெயமோகனும் தங்கள் பெயரை அவுட்சோர்ஸ் செய்தால், அழகுள்ளபோதே ஐந்து ஷிஃப்ட் செய்யும் நடிகையாக பணம் பார்க்கலாம். பைத்தியக்காரனும் நுண்மையான டபுள் மீனிங் கொடுப்பார்.

நான் இது போல் நுட்பமாக அவதானித்து நிறைய எழுதுபவன். சாம்பிளுக்கு: வேர் இஸ் தி பார்ட்ட!?

பெருமாள்முருகனின் நிழல் முற்றம்’ ஆரம்பித்து எல்லோரும் திருட்டு டவுன்லோடிட்டு பார்த்து டெலீட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் தொட்டு சினிமாவை பார்த்த கதை முதற்கொண்டு இல்லாததையும் இன்னாததையும் கூறல் ஆசை. வயாகரா போட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். ஆறு வாரம் கழித்து சாந்திமுகூர்த்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும், வயாகரா வந்துவிடுகிறேன் என்று வெளிப்படுகிறது இங்கே.

விடுதலை

இந்து மதம் பயமுறுத்தும். ‘உம்மாச்சி கண்ணைக் குத்தும்.’ தற்கொலை தீவிரவாதியானால் இஸ்லாத்தில் மோட்சம். ஃபாதரின் மகளுடன் ஜல்ஸா செய்து பாவ மன்னிப்பு கேட்டாலும் கிடைக்கும்.

ஹிந்துவாக இருந்தால் அன்னியன் வந்து கருட புராணம் தண்டனை கொடுப்பார். ஃபுல்லாகி, பூண்டு ஊறுகாய் ஆகி, புழு ஃப்ரை ஆகி, பறவைக் காய்ச்சல் வரும் ஏழேழு ஜென்மம் உண்டு.

கத்ரீனாவில் அகப்பட்டவருக்கு விடுதலை என்பது நியு யார்க்கில் தஞ்சம் புகல். ஆப்பிரிக்காவில் இன அழித்தொழிப்பில் சிக்கியவருக்கு விடுதலை refugee ஸ்டேட்டஸ்.

பௌத்தத்தின் விடுதலை ‘ஆசை’.

கேபிடலிஸ விடுதலை அப்போதைக்கு பிழைத்துப் போவது; நிஜத்தை விட்டு ஓடிப்போவது; குளிர்ந்தால் பக்கத்துவீட்டு நெருப்பில் கதகதப்பு கோருவது.

கம்யூனிச விடுதலை தலைமைக்கு அடிபணிந்து, கடைநிலை யூனியன் மெம்பராய் உழைத்துக் கொட்டுவது.

இதெல்லாம் படத்தில் இருக்கிறதா என்று அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வரவேண்டாம். படத்தில் பிச்சைக்காரர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல் கடைநிலை சிப்பந்தி. கொஞ்ச நாள் கழித்து ப்ராஜெக்ட் மேனேஜர் பழனி ஆகிறார். அப்புறம், மேலும் பதவி உயர்வு பெற்று பிச்சைக்காரரை வைத்து பணக்காரர் ஆவது விடுதலை என்கிறார்.

ப்ளாகருக்கு விடுதலை எது? நீண்ட பதிவை பின்னூட்டத்தில் சம்ஹரிப்பது. அகோரிக்கு விடுதலை எது? சம்ஹரிப்பு தனக்கானது என்று சஞ்சரிப்பது.

கொஞ்சம் விளம்பர இடைவேளை: நான் கடவுள் தொடர்பான முந்தைய பதிவுகள்

வாந்தி

மல்டி டாஸ்கிங் கிங் ஆக இருக்கலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பன்மொழி பண்டிட் ஆக இருக்கலாம். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு ராகுகாலத்தில் பல ஃபிகர் வரும். ஆனால், உங்க சைட்டு எதுன்னு புரிஞ்சுண்டு, அதை மட்டும் லுக்கு விடுவீங்க இல்லியா?

சொல்ல வந்ததை மட்டும் சொல்வது கலை. தெரிந்ததை எல்லாம் சொல்வது பல்சுவை இதழ்; வலைப்பதிவு; நாவல்/காவியம். ஆனால், சினிமா அல்ல.

இவரோட இப்பொழுது வந்த இன்னொரு படம் ‘அஞ்சாதே‘. நான்கு ட்ராக்கில் செல்லும்:
1. காவல்துறை
2. நட்பு
3. செல்வந்தச் சிறுமி கடத்தல்
4. காதல்

இப்பொழுது அஞ்சாதேவைப் பார்த்து கைக்கிளை கொண்ட நான் கடவுள் கிளை:
1. வறியவர்
2. காசி அகோரி
3. தாய் – மகன்
4. தெய்வம்

முன்னது கோர்த்த விதத்தினால் சிமெண்டும் மணலும் சரியாகக் கலந்த கலவை.

பீரும் விஸ்கியும் வைனும் கலந்து கட்டி அடிக்கலாம்; தப்பில்லை. ‘நான் கடவுள்’ குளுகுளு பியர் ஏற்றுகிறது. அதற்குப் பிறகு கொனியாக், வைன், வெர்மவுத் என்று சகலத்தையும் சர்பத் போல் கலக்கு கலக்க, எனக்கு மைக்கேல் மூர் இயக்கி, பில் மெஹர் ஹீரோவாக, ஆன் கூல்டர் நாயகியாக நடித்து, ரஷ் லிம்பா வசனம் எழுதிய படம் பார்த்த அஜீரணம்.

இப்போது சித்தர் பாடல் ப்ரேக்:

அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. (212)

தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. (49)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. (50)

சிவவாக்கியரின் சிவவாக்கியம் 205வது பாடல்.

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

அடைவுறுதல்

படம் பார்த்தால் நம்ப வேண்டாம்; மயங்கணும்.

கதையில் லயித்து ஒன்றவேண்டாம்; என்றாவது பிச்சைக்காரரைப் பார்த்தால் ‘வெண்ணிலவே! வெண்ணிலவே!! விண்ணைத்தாண்டி வருவாயா?’னு கனவு கஜோள்ளோடு டூயட்டணும்.

ஆளவந்தான்‘ புத்திசாலித்தனம் வேண்டாம்; ‘தசாவதார‘த்தின் பரபரப்பிலோ வித்தை காட்டலிலோ சொக்கணும்.

ஆவணப்படம் எடுத்தால் கூட ஒன்றவைக்கும் சிரத்தையும் தகவலில் உள்ள துல்லியத்திற்கும் புனைவுலக 70 எம் எம்மில் மினுக்கிட வேணாம்; பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் வாரணம் ஆயிரமின் drug பயன்பாட்டின் வீச்சும் வீரியமாவது தைக்க வேணாமோ?

வேணாம்கிறார் பாலா. ஒத்து ஊதுகிறார் சாரு நிவேதிதா.

ஏ ஆர் ரெஹ்மான் – ஆஸ்கார் விருது

பழசு: That Old Feeling: Isn't It Rahmantic? – TIME: “A.R. Rahman is not just India’s most prominent movie songwriter — in a land of a billion people where movie music truly is popular music — but, by some computations, the best-selling recording artist in history. His scores have sold more albums than Elvis or the Beatles or all the Jacksons: perhaps 150 million, maybe more.”

“Before coming, I was excited and terrified. The last time I felt like that was during my marriage. There’s a dialogue from a Hindi film called “Mere paas ma hai,” which means “I have nothing but I have a mother,” so mother’s here, her blessings are there with me. I am grateful for her to have come all the way. And I want to thank the Academy for being so kind, all the jury members. I want to thank Sam Schwartz, I/D PR, all the crew of Slumdog, Mr. Gulzar, Raqueeb Alam, Blaaze, my musicians in Chennai and Mumbai. And I want to tell something in Tamil, which says, which I normally say after every award which is ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ — “God is great.” Thank you”

“I just want to thank again the whole crew of SLUMDOG MILLIONAIRE, especially Danny Boyle for giving such a great opportunity. And the whole, all the people from Mumbai. The essence of the film which is about optimism and the power of hope in the lives, and all my life I had a choice of hate and love. I chose love and I’m here. God bless”

தொடர்புள்ள பதிவுகள்:

1. Pa. Raghavan | writerpara.com » பா ராகவன் » உலகை வென்ற இசை: அப்போது சொன்ன ‘எல்லா புகழும் இறைவனுக்கே’வைத்தான் இப்போதும் ரஹ்மான் சொன்னார். ஆஸ்கர் மேடையில் அபூர்வமாக ஒலித்த தமிழ்க்குரல். (இது எல்லா முஸ்லிம்களும் சொல்வது. நல்லது எது நடந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் என்பது வழக்கம். அதன் தமிழாக்கமே இது.) ஒன்றல்ல, இரண்டு விருதுகள். மணி ரத்னத்தைப் போலவே ஸ்லம் டாக் மில்லியனரின் இயக்குநர் டேனி பாயில் (Danny Boyle) ரஹ்மான் வாழ்வில் மறக்க முடியாத மனிதராகிப் போனார்.

2. jeyamohan.in » ஜெயமோகன் » ஏ.ஆர்.ரஹ்மான்,ரஸூல் பூக்குட்டி: ஏ.ஆர்.ரஹ்மானைப் பற்றி ஷாஜி சொல்லும்போது அவரது இசையமைக்கும் முறையைப் பற்றிச் சொன்னார். பாடகர்களிடம் அவர்கள் சொந்தக் கற்பனையை உபயோகித்துப் பாடச்சொல்கிறார் . இசைக்கலைஞர்கள் தங்கள் கற்பனைப்படி வாசிக்கிறார்கள். சிறந்ததைப் பொறுக்கி பொருத்தி அவர் பாடல்களை உருவாக்குகிறார். நா.முத்துக்குமாரும் அதைச் சொல்லியிருக்கிறார். ரஹ்மான் பல்லவி சரணம் என்று மெட்டு கொடுப்பதில்லை. அரைமணிநேரம் அந்த மெட்டை வாசித்தோ பாடியோ கொடுத்து விடுகிறார். அதற்கு எழுதப்படும் பலநூறு வரிகளில் இருந்து சிறந்ததை எடுத்துக் கொள்கிறார்

3. ஷாஜி சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் : ஆர்.கெ.சேகர் முதல் ஆஸ்கார் வரை : முறையாக இசை பயின்றாலும்கூட திலீப் இசைத்துறைக்கு வர விரும்பவில்லை. ஒரு மின்பொறியாளராக வரவேண்டுமென்பதே அவரது விருப்பமாக இருந்தது. ”அப்போது நான் இசைமீது வெறியோடு இருக்கவில்லை. எனக்கு தொழில்நுட்பத்திலேயே ஆர்வமிருந்தது. குழந்தையாக இருந்தபோது எனக்கு சோறுபோடும் தொழிலாக மட்டுமே இசையை நினைத்தேன். அது என் அப்பாவின் அன்றாட வேலை. எனக்கு அதில் தனியான ஆர்வமேதும் இருக்கவில்லை” அவர் சொன்னார்.

திலீபின் இசையார்வம் அவரது தந்தை வாங்கிவைத்திருந்த யூனி வோக்ஸ், க்ளாவியோலின் போன்ற மின்னணு இசை கருவிகளைச் சார்ந்து வளர்ந்தது. அக்காலங்களில் மின்னணு இசைக்கருவிகள் இந்திய இசையில் மிகமிகக் குறைவு. ”என்னால் அந்த கருவிகளில் இருந்து கண்ணை விலக்க முடிந்ததில்லை. தடைசெய்யபப்ட்ட அபூர்வமான விளையாட்டுப்பொருட்களாக அவை எனக்குத் தோன்றின” திலீப் தன் நாளின் பெரும்பகுதியை அக்கருவிகளில் விளையாடுவதில் செலவழித்தார், அதுவே அவரது எதிர்காலத்தை வடிவமைத்தது.

4. Shaji Chennai: A R Rahman: From R K Sekhar to Oscar: It was his jingle composed for advertising Allwyn Trendy wrist watches in 1987 that won Dileep recognition as composer in his own individual capacity. He became a full-time composer of advertisement jingles. He composed music for three hundred advertisements in five years. His jingles became famous. He later commented: “Composing music for jingles created awareness in me about the precision in music. In the few seconds given to us we have to create a mood and convey a message as well. Jingles taught me discipline in music.” The signature tune of Asianet was also composed by him.

5. ஆஸ்கார் நாயகன் ரஹ்மான்: எஸ். ராமகிருஷ்ணன்: RAMAKRISHNAN ::: “அவர் எதையும் உடனே மறுப்பதில்லை, மாறாக அவர் தான் யோசிப்பதாக சொல்கிறார். அது போலவே தனது இசை மற்றும் தான் செய்து கொண்டிருக்கும் வேலைகள் பற்றி அதிகம் விவாதிப்பதுமில்லை.

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே தமிழில் சொல்லிய நிமிசம் என்னை அறியாமல் கண்கள் ததும்ப துவங்கியது. அது ரஹ்மான் வாங்கிய விருது மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக இந்திய சினிமா கண்டு கொண்டிருந்த கனவை ரஹ்மான் நிறைவேற்றி காட்டியுள்ளார் என்ற உச்ச சந்தோஷத்தின் வெளிப்பாடு. ”

6. LOSHAN – லோஷன்: எல்லாப் புகழும் ஒஸ்கார் ரஹ்மானுக்கே..:

பீ.சுசீலா(கண்ணுக்கு மையழகு)
டி.கே.கலா(குளிச்சா குத்தாலம்)
கல்யாணி மேனன்(முத்து படப்பாடல்)
சீர்காழி சிவ சிதம்பரம் (ஓடக்கார மாரிமுத்து,அம்மி மிதிச்சாச்சு)
டி.எல்.மகராஜன்(நீ கட்டும் சேலை)
M.S.விஸ்வநாதன் (மழைத்துளி மழைத்துளி)

7. ஆஸ்கர் சிகரத்தில் வெற்றிக்கொடியேற்றிய ஏ ஆர் ரஹ்மான் :: கோவி லெனின் – நக்கீரன்: ரங்கீலா உள்ளிட்ட நேரடி இந்திப்படங்களுக்கு அவர் இசையமைத்த விதமும், வந்தேமாதரத்திற்கு புதிய இசைவடிவம் கொடுத்து அதனை இந்தியாவின் இரண்டாவது தேசியகீதமாக்கிய திறமையும் அவரது புகழை உயர்த்தின. ரகுமானே நவீன இந்திய இசையின் அடையாளம் என உலக நாடுகளால் பார்க்கப்பட்டது.

8. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: 81வது வருட ஆஸ்கர் விருதில் இந்தியர்கள்: ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக Best Sound Mixing-க்கான ஆஸ்கர் விருது பெற்ற ராசுல் பூக்குட்டியின் நேர்காணலை சில நாட்களுக்கு முன் ஒரு பத்திரிகையில் படித்த போது “ஒரு திரைப்படம் என்பது பல்வேறு நுட்பக் கலைஞர்களின் கூட்டால் உருவாக்கப்படுகிறது. ஆனால் திரைக்குப் பின்னால் உள்ள பல கலைஞர்களின் உழைப்பிற்கு வெளிச்சமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை” என்று வருத்தப்பட்டார். “ஸ்லம்டாக் மில்லியனரை விட நான் அதிகம் உழைத்தது ‘Gandhi My Father’ திரைப்படத்திற்கு. ஆனால் அதைப் பற்றி யாரும் பேசவில்லை”

9. கணேசன் செந்தில்குமரன் : கணேஷின் பக்கங்கள்!: ஏ.ஆர்.ரகுமான்-ப‌ரவசம்: “எதில் லைவ்வாக போடுகிறார்கள் என்று தேடிய போது StarMovies ல் ஓடிக் கொண்டிருந்தது.

தமிழ்நாட்டில் ஏதாவது சினிமா விழாக்களில், இங்க்லீஷில் பேசுவதை ஸ்டைலாகவும், பெருமையாகவும் நினைக்கும் ஸ்ரேயாக்களுக்கும், த்ரிஷாக்களுக்கும் கொடுத்த மூக்குடைப்பு.

10. ஒஸ்கார், ரகுமான், விருதுகள், உலகமயமாதல், இந்திய மேலாதிக்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் போர். :: படங்காட்டுதல் அல்லது பயமுறுத்துதல்: ரகுமான் இந்திய தேசியத்தினது ஒதுக்கல்களை விமர்சித்தோ அல்லது பாரம்பரிய இந்திய இசைக்கூறுகளை முன்னிறுத்தியோ தனது இசைப்பயணத்தை தொடர்ந்திருந்தால் இந்நிலையை அடைந்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. இவ்வாறே மாயா அருள்பிரகாசம் தீவிரவாத எதிர் நிலைப்பாட்டை எடுத்தவாறு புலிகளை விமர்சித்திருந்தால் அவருக்கு இந்நேரம் ஒச்கார் கிடைத்திருக்கக் கூடும். ஆளும் வர்க்கங்கள் சில அளவீடுகளைக் கொண்டுள்ளன. அவற்றைத் திருப்தி செய்பவர்களுக்கு மாத்திரமே வளர்ச்சி, புகழ், விருது எல்லாம் சுலபமானவை. மாயாவிற்கான வாய்ப்பு அவரது அரசியல் நிலப்பாடால் தகர்ந்து போயிருக்கலாம் என்பதை நினைத்து வருத்தப்படுவதா அல்லது ரகுமானது அரசியல் நிலைப்பாடற்ற நிலையைக் கண்டு சந்தோசப்படுவதா என்பது அவரவர் நிலைப்பாடு.

இந்தியர்கள் பெரிய அளவில் ஏற்கனவே புகழ்பெற்றிருக்கின்றார்கள். ஆனால், அவர்கள் பெரும்பாலும் மேற்கத்தையவர்களாக முற்றுமுழுதாக மாறிப்போன இந்தியர்களே.

11. குசும்பு: ஆஸ்கார் A.R. ரஹ்மான் விருதும் என் வருத்தமும்!!!: A.R. ரஹ்மான் ஒரு ஆங்கிலேயே அடிவருடி—–> முன்போக்கு சிந்தனையாளர் முனுசாமி

12. குமரன் குடில்: ஆஸ்கர் வாழ்த்துக்களும் மனசாட்சியின் குரலும் 🙂: எஸ்.ஜே.சூர்யா

ரொம்ப மகிழ்ச்சி. நான் ரஹ்மானோடு பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.

என்னை யாரும் மறந்திடாதிங்க. நானும் டைரக்டர் தான்… டைரக்டர் தான்… ஆமா, சொல்லிட்டேன்.

Naan Kadavul: Something is Missing

நான் கடவுள் திரைப்பட விமர்சனங்கள்:

முந்தைய பதிவு: சென்சார் விமர்சனம் + கதை

1. உண்மைத்தமிழன்: First Day; First Look: ஆர்யா பேசும் மொத்த வசனங்களை ஒரு A4 பேப்பரில் எழுதிவிடலாம்.
:::
டைட்டில் காட்சியில் துவங்கி, இறுதிக் காட்சி வரை எங்கும் காவிக்கொடிகள்.. பக்தி, ஆன்மீகம்.. ஜோதிடம், சாஸ்திரம், சடங்குகள், சமஸ்கிருதம், கேள்விகள்.. கடவுளைத் தேடும் பணி என்று படம் முழுவதும் இந்துத்துவா மயம்தான். வலையுலகத்தினருக்கு கடும் பணிகள் காத்திருக்கின்றன.
:::
சென்ற வாரம்தான் Slumdog Millonaire படத்தினைப் பார்த்துத் தொலைத்துவிட்டதனால், இத்திரைப்படத்தின் பிச்சைக்காரத்தனமான வாழ்க்கை முறைகள், என் இதயத்தைத் துளைத்து நுரையீரலைத் தொடவில்லை.

bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018

2. செய்திகள் மட்டுமே சித்திரமானால்:
மூலம்: ஜெயமோகன், இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலக் கட்டுரை
தமிழில்: ஜடாயு

“இந்த ஸ்லம்டாக் மில்லியனர் (Slumdog Millionaire) படத்தில் உங்கள் ஏழாம் உலகம் நூலில் உள்ளது போன்றே பல காட்சிகள் உள்ளன, நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும்” என்று வேறு தொலைபேசியில் சொன்னார் ஜீவானந்தம்.

இந்தச் செய்தி கொஞ்சம் கவலையையும் ஏற்பத்தியது. ஏனென்றால், 2003-ல் வெளிவந்த இந்தப் புதினத்தில் உள்ள சில நிகழ்ச்சித் தொடர்களை, இப்போது வெளிவரும் தறுவாயில் இருக்கும், நான் வசனம் எழுதியிருக்கும் பாலாவின் நான் கடவுள் படத்தில் நாங்கள் பயன்படுத்தியிருந்தோம். நான் கடவுள் படத்தை மூன்று வருடங்கள் முன்பே எடுக்க ஆரம்பித்து விட்டோம். அதென்னவோ, சரியாக இந்த நேரத்தில் இப்படி ஒரு ஆங்கிலப் படம் வருகிறது.

3. Cable Sankar: நான் கடவுள் – சினிமா விமர்சனம்.: பிச்சைகாரர்களை மேய்க்கும் முருகன், திருநங்கை பெண், அவர்களின் தலைவன், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர், அந்த போலீஸ் ஏட்டு, உடல் ஊனமுற்ற அம்பானி பற்றி பேசும் சிறுவன், இரண்டு கை, கால் இல்லாத எப்போது கண் மூடி, வாய் பேசாதிருக்கும் சாமியார், சாமியார் என்று சொல்லிக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை வாழும் சாமியார்கள், கீச்சு குரல் சாமியார், சாமி வேடமிட்டு பிச்சையெடுக்கும் குறை கொண்ட பெண்கள், என்று நிஜ பிச்சைகாரர்களை நம் கண்முன்னே வாழ விட்டிருக்கிறார்கள்.

கவிஞர் விக்ரமாதித்தன் மனநிலை குன்றிய குழந்தையை அந்த கும்பலில் வைத்து காப்பாற்றும் ஒரு பிச்சைகாரர்.

அழகன் தமிழ்மணி ருத்ரனின் அப்பாவாக வந்திருக்கிறார். அமமாவாக பாரதி.

பல ஆண்டுகளுக்கு முன்னால் தன்னால் எங்கே விட்டோம் என்று தெரியாமல் அலையும் தகப்பனுக்கு, ருத்ரனை பார்த்ததும் ஞாபகம் வருவது ‘என் புள்ளைய எனக்கு தெரியாதா’ என்பதெல்லாம் சரியான ஜல்லியடிப்பு. பூஜாவிடம் நீ வயசுக்கு வந்திட்டியான்னு கேட்கும் பிச்சைகார தலைவன், அவளை பாலியல் பலாத்காரம் செய்யாமல் கடைசிவரை பாதுகாப்பது படத்தின் இயல்பு நிலைக்கு மாற்றான காட்சிகள்.

பாலா சார் இன்னும் எத்தனை நாளைக்குதான் பழைய காமெடி என்கிற பெயரில் எம்.ஜி.ஆர், சிவாஜி பாடல்களை வைத்து பாடி மிமிக்கிரி செய்து படத்தை ஓட்டுவீர்கள். அந்த காட்சிகள் படத்துக்கு எந்த விதத்தில் உதவியிருக்கிறது என்றே புரியவில்லை.

4. அயன்:

Cinema Critics: விளிம்பு நிலை மக்களைப் பற்றி மட்டுமே அதிகமாகப் படம் எடுத்திருக்கிற பாலா

  1. சேது – தேவதாசிகள்
  2. நந்தா – அகதிகள் மற்றும் இளம் கொலைகாரர்கள்
  3. பிதாமகன் – கஞ்சா விற்பவர்கள்

இந்தப் படத்துக்கு எடுத்துக் கொண்ட கதைக்களம். . . .

‘வாழத்தெரியாதவங்களுக்கு நீ அளிக்கும் மரணம் தண்டனை வாழ இயலாதவர்களுக்கு நீ அளிக்கும் மரணம் வரம்’

பேசாமலேயே மொழி படத்துல கலக்கின ஜோதிகாவை விட்டுவிட்டு பிரியாமணிக்கு தேசிய விருது கொடுத்த விஷயம் எனக்கு வருத்தம் தான். பூஜாவுக்கு பெரிய ஜே. . . .

5. லக்கிலுக் / மடிப்பாக்கம்

யுவகிருஷ்ணா: Movie Reviews: ‘தொப்பி, திலகம்’ மேட்டரில் ஜெமோ அண்ணாச்சியை கண்டித்த சினிமாக்காரர்களை அதே சினிமா மூலமாகவே மறுபடியும் வம்புக்கு இழுத்திருக்கிறார்.

ட்விட்டரில் வந்த சுறுக் + நறுக் கருத்துக் கோர்வை

நான் கடவுள்: சென்சார் விமர்சனம் + கதை

இந்து மதத்திற்கு எதிரான படமா?

முந்தைய நான் கடவுள் பதிவு

இளையராஜாவின் இசைக்கூடம். திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது நான் கடவுள். படத்தை ராஜா பார்க்க, ராஜாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறார் பாலா. டென்ஷன்…டென்ஷன்… ஒவ்வொரு விரல் நகமாக கடித்துத் துப்பிக் கொண்டிருக்கிறார் பாலா! படம் முடிந்ததும் விருட்டென்று எழுந்து தனது அறைக்குள் போய்விடுகிறார் இசைஞானி. அவ்வளவுதான், பல மணி நேரங்கள் யாரையுமே அவர் சந்திக்கவில்லை பாலா உட்பட!
bala-arya-movies-ilaiyaraja-films-reviews-naan-kadavul-stills-029
படத்தை பார்த்து பிரமித்து போயிருக்கும் சென்சார் போர்டு உறுப்பினர் ஒருவரிடம் பேசினோம். “சண்டைக்காட்சிகள் மிகவும் அச்சமூட்டும் படியாக இருந்ததால் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்தோம்.”

“காஞ்சிபுரம் அருகில் குடியிருக்கும் ஒருவருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இந்த குழந்தை உங்களிடம் வளர்ந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்று ஜோதிடர் சொல்ல, குழந்தையை காசியில் விட்டு விட்டு வருகிறார்கள். அவன் அங்குள்ள சாமியார்களிடம் வளர ஆரம்பிக்கிறான். பாஷையிலிருந்து அனைத்து பழக்க வழக்கங்களையும் சாமியார்களிடம் கற்றுக் கொள்கிறான் சிறுவன். அவனை வாலிப வயதில் மீண்டும் சந்திக்கிறார் அவனது அப்பா. பிள்ளை இப்படி இருக்கிறானே என்ற அதிர்ச்சியில் மறுபடியும் சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். இங்கு வருபவன், குழந்தைகளை கடத்தி முடமாக்கி பிச்சையெடுக்க வைக்கிற வில்லன்களுக்கு தானே கடவுளாகி தண்டனை கொடுக்கிறான். இதில் பூஜாவும் குழந்தை பருவத்தில் கடத்தி வரப்பட்டு வில்லன்களால் கண்கள் குருடாக்கப்பட்ட பெண். அவளையும் அந்த கூட்டத்திலிருந்து மீட்கிறான் என்று முடிகிறது கதை. இதில் வருகிற க்ளைமாக்சை நான் சொல்வது தர்மமில்லை” என்று முடித்துக் கொண்டார் அந்த சென்சார் போர்டு உறுப்பினர்.

bala-arya-movies-kasi-varanasi-reviews-naan-kadavul-stills-009
நர மாமிசம் சாப்பிடுபவர்களை கொடூரி என்பார்களாம். இந்த கொடூரியாகவும் ஒரு காட்சியில் வருகிறாராம் ஆர்யா. பல்லாயிரக்கணக்கான சாமியார்கள் ஓரிடத்தில் கூடும் கும்பமேளா நிகழ்ச்சியில், எவ்வித ஆர்ப்பாட்டமும் செய்யாமல் கேமிராவோடு ஊடுருவி பல காட்சிகளை எடுத்திருக்கிறார்களாம்.

கடந்த மூன்று வருடங்களாக நான் கடவுளை உருவாக்கி வருகிறார் பாலா. ஆனாலும், படப்பிடிப்பு நடந்தது மொத்தம் 369 நாட்கள்தானாம். பாலா, பூஜா தவிர்த்து படத்தில் 50க்கும் மேற்பட்ட புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இவர்களில் பலர் நிஜமான மன நோயாளிகள். ஊடல் ஊனமுற்ற பிச்சைக்காரர்கள். இவர்களை நடிக்க வைப்பதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்துக் கொண்டாராம் பாலா. இதன் காரணமாகவும், பெரிய குளம் ஏரியாவில் எப்போதாவது தலை காட்டும் வெயிலாலும்தான் படப்பிடிப்பு தாமதமானது என்கிறார்கள் யூனிட்டில்.
bala-arya-movies-previews-films-reviews-naan-kadavul-stills-018
சரி, முதல் பாரா சஸ்பென்சுக்கு வருவோம். இளையராஜா பாலாவிடம் என்னதான் சொன்னார்? ஒரு முழு நாள் அமைதிக்கு பிறகு அவர் சொன்னது இதுதான். “என்னாலே பேசவே முடியலே. இந்த படத்தை உலகமே கொண்டாட போவுது பாரு…!”
bala-arya-movies-watch-downloads-reviews-naan-kadavul-stills-020
நன்றி: தணிக்கை துறையின் விமர்சனம்

Naan Kadavul – Lyrics

bala-arya-jeyamohan-cinema-films-reviews-naan-kadavul-stills-030ஒரு காற்றில் அலையும் சிறகு
எந்த நேரம் ஓய்வு தேடும் ?

கண்ணில்லாது காணும் கனவு
எதை தேடி எங்கு போகும் ?

எங்கெங்கும் இன்பம் இருந்தும்
உன் பங்கு போனதெங்கே ?

இது ஏனென்று பதில் யார் சொல்லுவார்
ஒரு காற்றில் அலையும் சிறகு..

யார்க்கும் போலொரு அன்னை தந்தை
உன‌க்கும் இருந்த‌து உண்டு
யார்க்கும் போலொரு தேகம் தாகம்
உனக்கும் வளர்ந்தது இங்கு
யார்க்கும் போலே விழிகள் இருந்தும்
உலகமோ இருளில் !

ஒளியைப் போலே ஓர் துணை
வந்து சென்ற‌ துன்பம் யார்க்கும் உண்டோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..

வீதி என்றொரு வீடும் உண்டு
உனக்கது சொந்தமென்று
வானம் என்றொரு கூரை உண்டு
விழிகளும் அறியாது

வேலியில்லா சோலைக்காக‌
வந்ததொரு காவல்
க‌ண்க‌ள் கொண்ட தெய்வ‌மும்
காவ‌லையும் கொண்டு சென்ற‌தேனோ ?
ஒரு காற்றில் அலையும் சிறகு..
bala-arya-movies-cinema-films-reviews-naan-kadavul-stills-003
நன்றி: Song of the Day: kaNNil paarvai from naan kadavuL: “‘கண்ணில் பார்வை’ ஷ்ரேயா கோஷல் பாடிய பாடல்.”

oOo

கண்ணில் பார்வை போன போதும்
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்
கண்ணில்லாத பேரைக் கண்டால்
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்
கனவில் கூட இன்பம்
வராமல் இந்த ஜென்மம் !
ஓ தெய்வமே ! இது சம்மதமோ ?
bala-arya-movies-cinema-pooja-reviews-naan-kadavul-stills-028
முந்தைய பதிவு: எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்

மேலும்: Amma Un Pillai naan – Nan Kadavul பாடல் : இசை « Karthik’s Perception
bala-arya-movies-cool-films-reviews-naan-kadavul-stills-005

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி

Where is the Party – Silambattam Inspirations

முதற்கண் வேர் இஸ் தி பார்ட்டி திறனாய்வை வாசிக்கவும். அதன் தொடர்ச்சியாக வேர் இஸ் தி பார்ட்டி? ஆங்.. திருமங்கலத்துல! அரசியலாக்கத்தையும் காணவும்.

இப்போது பிற பரிந்துரை:

  1. பன்ச் சிம்புவின் ஏற்றத்தாழ்வு: வேர் இஸ் தி Parity
  2. சீன சிம்பு பார்ட்டி: வேர் இஸ் தி copper-t
  3. லிட்டில் சிம்புவின் பீட்டர்: வேர் இஸ் தி Potty
  4. ஜூம் கணினி சிம்பு: வேர் இஸ் தி PuTTY
  5. பால் குழப்பம் மன்மதன்: வேர் இஸ் தி Panty டுனைட்
  6. பொய் சொல்லப் போறோம் மாப்பிளை முறுக்கு சிம்பு: வேர் இஸ் தி ப்ராப்பர்டி
  7. பைரேட்ஸ் ஆஃப் தி பீச் வாலிபால் சிம்பு: வேர் இஸ் தி Booty

வேற எதுனாச்சும் தோணிச்சுனா சிம்புவுக்கு சொல்லுங்க 🙂