Tag Archives: கமல்

நித்தியானந்தா – ஆராதித்து கொண்டாடப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

உதவி: ஜெயமோகன் – ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 1

இரண்டு சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. இரண்டுமே சோ ராமசாமி நடித்த படங்கள். இரண்டுமே இளையராஜா குடும்பத்தினர் இசையமைத்தவை. 1981ல் வெளிவந்த கழுகு. 1998ல் வெளிவந்த காதலா… காதலா.

இந்த இரு படங்களுக்கும் நடுவே உள்ள தூரம் என்பது இரு தலைமுறைகளுக்கு, இரு காலகட்டங்களுக்கு நடுவே உள்ள தொலைவு. கழுகு எண்பதுகளில் வெளியானாலும் அது உண்மையில் இக்கால மனநிலைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்திய படம். 2020க்குப் பின்னால் வலுப்பெற்ற மனநிலைகளையும் எண்ணங்களையும் காட்டும் படம் காதலா… காதலா.

கழுகு இந்தியாவில் தொண்ணூறுகளில் நிலவிய ஆன்மிகத் தேடல்களையும் பா.ஜ.க.வின் வளர்ச்சியையும் பற்றிப் பேசுகிறது. ‘போலி சாமியார்’ என்ற சொல்லாட்சி அன்று மிகப்பிரபலம். இணையான இன்னொரு சொல்லாட்சி ‘மதவாத அரசியல்’. ஒரே பிரச்சினையின் இருமுகங்கள். இவ்விரு சரடுகளையும் பின்னியே கமல் கதைகளும் சத்யராஜ் படங்களும் வெளிவந்தன.

கழுகு நகரத்தில் செல்வம் சம்பாதித்த பிறகு தோன்றும் வெறுமையைக் காட்டுகிறது. அவர்களின் மனக்கசப்பும், விரக்தியும், வெற்றி அடைந்ததனால் உண்டான ஏமாற்றமும், ஒட்டுமொத்தமான தேடலின்மையும் அதன் காட்சிகளில் வெளிப்படுகின்றன. ’நேர்மை மட்டும் இருந்தாப் போதுமா சாமீ? கூட அதிர்ஷ்டமும் வேணும்!’ என்னும் வியாபாரியின் வசனங்களைத் தொடர்ந்து ‘போன வருஷம் நல்லா இருந்தா மனைவி செத்துப் போயிட்டா!’என்று அவன் சொல்வது உதாரணம்.

முழுமையான தீவிரவாதத்தில் முடியும் ‘கழுகு’க்கு நேர் மாறான படம் ‘காதலா… காதலா’. தலைப்பே அதைச் சொல்லிவிடுகிறது.

எண்பதுகளில்தான் கோவில் பூசாரிகளும் அர்ச்சக்ர்களும் காவியுடை தரித்து வெளிவர ஆரம்பித்து வைய விரிவு வலையில் இணைத்த கம்ப்யூட்டரில் புகுந்த வைரசு போல பரவினர்.

அவர்களில் முதன்மையானவரான பங்காரு அடிகளை அடிபப்டையாகக் கொண்டு உருவான படம் அது. மெயின் சாமியார் பெயரே ஸ்ரீலஸ்ரீ ஆனந்த விகடனாந்தா.

எழுபது எண்பதுகள் ஆன்மிகக் கதைகளைப் பேசின. பக்தர்கள் கோவில் செல்பவர்களாக, எந்தக் கஷ்டத்திலும் கடவுளை மலைபோல் நம்புபவராக இருக்கவேண்டும் என இலக்கியமும் ஏபி நாகராஜனும் அறைகூவின. ஆனால் எண்பதுகளின் தொடக்கத்தில் வெளிவர ஆரம்பித்த ஜெகதீசன் மற்றும் இராம நாராயணன் திரைப்படங்கள் ஒரு தனிமனிதனின் மேஜிக் கொண்டு தெய்வம் மனுஷ ரூபேனாம் என்று சொல்ல ஆரம்பித்தன.

அகத்தியரும் கேபி சுந்தராம்பாளும் எழுபதுகளின் இலட்சிய புருஷர்கள். எண்பதுகளில் கேயார் விஜயாவும் தீபிகா சிகாலியாவும் அந்த இடத்துக்கு வந்து அமர்ந்தார்கள். சினிமாவிலோ தொலைக்காட்சியிலோ சீதாவகவோ அம்மனாகவோ வந்துவிட்டு கொஞ்சம் கவனமாக செயல்பட்டால் பணமும் அதிகாரமும் கைவரும், அதுவே வாழ்க்கையின் வெற்றி என அந்தப்படங்கள் சொல்லின.

அன்றைய சூழலை வைத்தே அந்தக் கூற்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எண்பதுகளில் இந்தியா கடைப்பிடித்துவந்த அரைகுறை சோஷலிசம் மீதான நம்பிக்கை தகர்ந்தது. வேலூர் ஜலகண்டேசுவரர் செயலிழந்து மூடியிருந்தார். திராவிட கட்சிகளின் ஹிந்து அறநிலையத்துறையின் பெரும் கபளீகரத்தினால் கோவில் மானியங்கள் உறைந்து நின்றது. விளைவாக உச்சகட்ட நம்பிக்கையின்மை. நாம் முன்னுதாரணமாகக் கொண்ட மூலஸ்தானமே தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்நிலையில்தான் டிஜிஎஸ் தினகரன் பாணி ’கடவுளைக் கண்டேன்’ குரல்கள் எழ ஆரம்பித்தன. பிரார்த்தனை கிளப் கோரிக்கைகள் எழுந்தன. அந்தப் பொதுவான எண்ண ஓட்டம்தான் மெல்ல மெல்ல முதிர்ச்சி கொண்டு புட்டபர்த்தி சாய் பாபா ஆக செயல்வடிவம் பெற்று திருமூலரைத் தூக்கிப்போடச்செய்தது. இயேசுவின் முகமான சகோதரர் வந்து சேர்ந்தார். ஆன்மிகத்தை விற்கும் சுவிசேஷ நற்செய்தி கூட்டம் ஆரம்பித்தது.

ஆன்மிக எளிமையமாக்கல் கீழ்மட்ட வறுமையை பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நடுத்தரவர்க்கத்துக்கு வாய்ப்புகளை அதிகரித்தது. தெய்வத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்தது. வேலை நெருக்கடியினால் உருவான மன அழுத்தங்களுக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக அந்த ஆன்மிக நிறுவனங்கள் அமைந்தன.

கடவுளை வேண்டி வரங்களைப் பெறுவது என்பதே நம்முடைய பழைய மனநிலையாக இருந்தது. பண்பாடுகளை ஒரு நியதியாக, கடமையாக நாம் கற்பிதம்செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தை கார்ப்பரேட் சாமியாரிசம் உருவாக்கியது. பணத்தைக் கொடுத்து நிம்மதியைப் பெறுவதை வாழ்க்கைவிதியாகக் கொண்ட ஒரு சமூகத்தை கட்டமைக்க வேண்டியிருந்தது. அதைச்செய்தவை கார்பரேட் ஆன்மிக நூல்கள்.

பொதுநலன், சமூகநலன் எதைப்பற்றியும் கவலைகொள்ளவேண்டாம் என அவை கற்பித்தன. ஆசாமியிடம் நெருங்குவதே வாழ்க்கையின் பயன் என்று சித்தரித்தன. நம்முடைய மீடியா பிரக்ஞையில் இந்தக் கார்ப்பரேட் சாமிகள் உருவாக்கிய பெரும் மாற்றத்தை நாம் இன்னும் சரியாக மதிப்பிடவில்லை.

எண்பதுகளில் இருந்து நம் ஆலயச்சூழல் எப்படியெல்லாம் மாறிவந்திருக்கிறது என்று பார்த்தாலே இது புரியும். எண்பதுகளில் ஆலயங்கள் ஜாதிகளின் நாற்றங்கால்கள். சமூகம் சார்ந்த கொண்டாட்டங்களும் சாதி சார்ந்த வர்த்தகங்களும் கொண்டவை. இன்றைய கோவில்களில் இன அரசியலே இல்லை. பக்தர்கள் முழுக்கமுழுக்க தொழில்முறை நோக்கு கொண்டவர்கள். அன்று இலக்கியபிரக்ஞை கொண்ட, சொற்பொழிவுகளைக் கேட்கும் பழக்கம் கொண்ட, கலைத்திறன் கொண்ட பக்தர்கள் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர். இன்று, பணக்கார பக்தர்கள், ஊடகத்தில் செல்வாக்கு மிக்க பக்தர்களே ஆலயங்களின் நாயகர்கள்.

இந்தமாற்றம் நிகழ ஆரம்பிக்கும் காலகட்டத்தைக் காட்டுகிறது காதலா… காதலா. ஆனால் அன்று இந்தச் சுயநலச் சிந்தனைகள் இன்னும் முதிரவில்லை. முந்தைய இலட்சியவாதத்தின் சாயலும் கொஞ்சம் இருந்தது. அந்தப்படத்தில் கமல்ஹாசன் (இராமலிங்கம்) கொஞ்சம் இலட்சியவாத நோக்கு கொண்டிருக்கிறான். சேவைகள் செய்கிறான். ஆனால் கழுகு முந்தைய காலகட்டத்தின் முற்றிய விரக்தியைக் காட்டுகிறது.

இன்றைய இளைஞர்களால் கழுகு காட்டும் சூழலை, அந்த மனநிலையை சரியாகப் புரிந்துகொள்ளமுடியாமல் போகலாம். இரண்டாமுலகப்போருக்குப் பின்னால் மேலைநாடுகளில் உருவான ஓஷோவும் கிருஷ்ணமூர்த்திகளும்

நம்பிக்கை இழப்பும் கலையில், இலக்கியத்தில், தத்துவத்தில், ஆன்மிகத்தில் கொந்தளிப்பை உருவாக்கிக்கொண்டிருந்தன. இளைய தலைமுறை எதிர்ப்பும், விரக்தியும் கொண்டதாக தெருவில் இறங்கியது.

மருத்துவ சிகிச்சைகளில் ப்ரானிக் ஹீலிங் [Pranic Healing] உருவாகி வந்தது. பொதுப்பேச்சில் கட்டிப்புடி வைத்தியம் என இதைச் சொல்வார்கள். அரசியலில் திராவிட பாணி வன்முறைக்கிளர்ச்சி எழுந்தது. கம்யூனிஸ்ட் அளவில் அது பரவியது.

தமிழகத்தில் காஞ்சிப் பெரியவர் காலகட்டம் முடிந்தபின் பிறந்த தலைமுறை குருபீடங்களில் நம்பிக்கை இழந்தது. பெரியாருக்குப்பின் பக்தி பரவலாகியது, ஆனால் சங்கர மடத்தின் சனாதனத் திட்டங்கள் காரணமாகத் ஆன்மிகம் வளரவில்லை. ஆகவே வெறுமையான சம்பிரதாயம் உருவாகியது. ஒரு தலைமுறையே செயலற்று சோகம் கொண்டு வீட்டில் முடங்கியது.

அவர்களுக்கு கூட்டுப் பிரார்த்தனையின் மனநிலைகளும் பங்காரு அடிகள் பாணி தனிநபர் தொழுகை குணப்படுத்தல்களும் பெரும் ஈர்ப்பை அளித்தன. காவியுடை அணிவது, இரண்டு வார்த்தைகளில் புரியாமல் பேசுவது, ஆங்கில வார்த்தகளைப் பயன்படுத்துவது என ஒரு உலகம். இன்னொரு உலகம் மிடையம் சார்ந்தது. இந்தியாவில் சுப்பிரமணிய சாமியும் சந்திரசுவாமியும் அரசால் கொடூரமாக நசுக்கப்பட்டபோது மனச்சோர்வு கொண்டவர்களின் எண்ணிக்கை மேலும் பெருகியது.

இந்தக்காலகட்டத்தில்தான் நான் என் முதிரா இளமையை ஆரம்பித்தேன் என்பதனால் எனக்கு நேரடி மனப்பதிவே உண்டு. அக்கால எழுத்துக்களில் திரைப்படங்களில் எல்லாம் இந்த திக்கற்ற பார்வதியையும் நல்லதங்காளையும் காணலாம். அந்த சோகத்தை உடல்மொழி மூலம் துலாபாரம் என்ற படத்தில் கச்சிதமாக வெளிப்படுத்திய சாரதா பெரும் விருது பெற்றார்.

தமிழில் அந்த சோகத்தைப் பதிவுசெய்த பிற திரைப்படங்கள் என மழலைப் பட்டாளம் [1980] உருவங்கள் மாறலாம் போன்றவற்றைச் சொல்லலாம்.

இலக்கியத்தில் மிக அழுத்தமான பதிவுகள் ஜெயகாந்தனிடத்திலும், ஜே.ஜே குறிப்புகளிலும் ஜீனோவுள்ளும் கந்தசாமிப் பிள்ளையிடத்திலும் கிடைக்கப் பெற்றவை.

நித்தியானந்தாவைப்பற்றிப் பேசுவதற்காகவே இந்த விரிவான சித்தரிப்பை அளித்தேன். இந்த காலகட்டப்பிரிவினை இல்லாமல் நித்தியானந்தாவை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. இப்படிச் சொல்லலாம்.

நித்தியானந்தா முந்தைய காலகட்டத்தை நோக்கிப் பேசியவர். இன்று அவரை இரண்டாம் கட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் தேவைக்கும் பார்வைக்கும் ஏற்ப புரிந்துகொள்கிறார்கள்.

விச்வரூபம் – ஆஸ்கருத்துவம்

முந்தைய தொகுப்பு: சினிமா – கோடம்பாக்குவம்

http://twitter.com/#!/snapjudge/status/20590004640157696

http://twitter.com/#!/snapjudge/status/17976396995362816
http://twitter.com/#!/snapjudge/status/18004299594338305
http://twitter.com/#!/snapjudge/status/18006345210920960
http://twitter.com/#!/snapjudge/status/18008901370777601
http://twitter.com/#!/snapjudge/status/18008220173869058

Kamal Hassan introduces Viswaroopam with Yugi Sethu, Puja Kumar and Andrea Jeremiah

முந்தைய கமல் பதிவு: சலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா

கமல்ஹாசனின் விஸ்வரூபம் – நியு யார்க் நகரமும் சென்னை உளவாளிகளும்

About Pooja Kumar: Punjabi girl of Indian origin. Crowned Miss India USA, Pooja worked as VJ for Channel V and was a newsreader on the show Namaste America:

Andrea chats her new looks

கதக் நடனத்திற்கு பாடல் எழுதிய அனுபவமும் புதிய தொழில்நுட்பங்களின் அணிவகுப்பும்: ஷங்கர் – எசான் -லாய் இசை

‘உலகத் தரத்திற்கான திரைப்படத்தை தமிழ் சினிமா இன்னும் எடுக்கவேயில்லை; எந்திரன் ஆகட்டும்; தசாவதாரம் ஆகட்டும்; சிறப்பான படமாக இருக்கலாம். ஆனால், இனிமேல்தான் நாம வித்தியாசமான, முக்கியமான சினிமாவை கொடுக்கணும்!’:

2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers

சென்றவை:
1. விகடன் விருதுகள் – 2010

2. விகடன் அவார்ட்ஸ் 2008

3 Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

4. Tamil Film Songs – Best of 2007 Movie Music

5. 2007 -Year in Review

6. 2006 Reminiscences

7. Year in Reviews – 2006

8. டாப்டென் – 2005

9. பிடித்த 10 படங்கள்

சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்

சினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்

கதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்

கதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்

துணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக

வில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு

காமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்

ஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா

வில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்

முதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று

கன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா

பேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்

பாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன

கேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்

எடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்

ச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்

ஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்

டயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி

ஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்

டான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்

கலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு

ஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு

ஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ

பாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்

பின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்

பாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன

தயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்

இலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்

நாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்

சிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்

புதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்

கட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்

மொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்

புத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்

சிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்

இன்ன பிற

விளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்

வீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா

பயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்

டிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை

டிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி

நெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.

தொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)

தொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி

பண்பலை: ஹலோ எப்.எம்.

பண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை

எப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை

விளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்

மோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்

கார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ

சலங்கை ஒலி: கமல், பஞ்சு அருணாச்சலம், கே விஸ்வநாத், இளையராஜா

தமிழ்ப்பதிவுகளில் சலங்கை ஒலி திரைப்பட விமர்சனங்கள்

திரைப்படம்:

இந்தப் படம் இன்றும் ஏன் பிடித்திருக்கிறது?

படம் முழுக்க புடைவை மட்டுமே கட்டி வரும் ஜெயப்பிரதாவில் ஆரம்பிக்கலாம். வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒருத்தி இருப்பாள். ஜெயலலிதா பின்னால் கூட சசிகலா இருக்கிறார். ராசாவிற்கு பின் கனிமொழி. ஜயப்பிரதா பிறிதொருவருடன் சென்று விட்டதால் – கமல், (படத்தில் நடன மேதை பாலு) வாழ்வில் தோல்வி அடைகிறார்.

எண்பதுகளை பிரதிபலிக்கும் படம். இன்றும் சுப்பிரமணியபுரத்தைக் கொஞ்சுகிறோம். இந்தப் படம் 83ல் வந்ததால், அந்த ஆண்டு தோட்டா தரணி சாமான் செட் கலாச்சாரங்களை முகர வைக்கிறது.

இயக்குநர் விஸ்வநாத்தின் சிப்பிக்குள் முத்து, சங்கராபரணம் போன்ற பிற படங்களை மீண்டும் பார்த்தால் கவரலாம். ஆனால், இதில் சின்ன விஷயங்களில் நகாசு செய்திருக்கிறார். விமர்சனங்களைப் படபடப்பாக நகம் வெட்டியுடன் பார்க்கும் ஷைலஜா, பாலுவின் எழுத்தைப் பார்த்தவுடன் கடிக்க ஆரம்பிப்பது அந்த மாதிரி ஒரு ரகம். மாதவியின் புருஷன் (பாஸ்கர் – லஷ்மியின் முதல் கணவர்?) காபி கொடுக்கும்போது தர்மசங்கடமாய் நிலம் பார்க்கும் தருணம் இன்னொரு சாம்பிள். சரத்பாபுவின் பாடல்வரி, கமலின் இசை + நடன கோர்ப்பு, ஜெயப்பிரதாவின் ஒருங்கிணைப்பு என சொல்ல நினைக்கும்போது கையை வாய்க்கு கொண்டுபோகும் தற்செயலாக மற்றொரு இயல்புத்தனம்.

கதாநாயகியைப் பற்றி எழுதாவிட்டால் அடுக்காது. (ஏற்கனவே எழுதிட்டேனோ?) தெலுங்குப் படங்களில் ஹீரோயின்களை எப்பொழுதுமே அழகாக்கி இருக்கிறார்கள். காதில் ஜிமிக்கி, மைக்கேல் ஃபெல்ப்ஸ் தங்கம் வெல்ல நீஞ்சுவது போல் அகல விரியும் ஐடெக்ஸ் மை போட்ட இமை, கேசவர்த்தினி கூந்தல், அந்தக் கறுப்பை நிறைத்து டிவியில் இருந்தும் வாசம் வரவைக்கும் மல்லிகைப்பூ, காதின் முன் எட்டிப் பார்க்கும் இரண்டே இரண்டு சுருள்முடி, தரையைப் பெருக்குமோ என வியக்க வைக்கும் ஆளுமை தரும் டிசைனர் சாரியை மிஞ்சும் பாந்தம் – அமர் சிங் சும்மாவா கவுந்தார் என்று ஆச்சரியப்பட வைக்காத நிவாஸின் கேமிரா.

டப்பிங் மாந்தர்களின் பெயர்களைப் போடாதது பெருங்குறை. மூன்றாம் கட்ட நடிகர் எல்லோருக்கும் மைக் மோகனின் பினாமி சுரேந்தர் குரல் கொடுத்திருக்கிறார். ஜெயப்பிரதாவிற்கு? ஸ்ரீதேவி மாதிரி படுது.

தமிழ்ப்படம் என உணரவைக்கும் பஞ்சு அருணாச்சலம் வசனங்கள்.

  • ‘ஆலோசனைய வச்சுகிட்டு என்ன செய்யறது? அத அப்படியே செயல்படுத்த வாய்ப்பு வேணும்!’
  • ‘பைத்தியத்துக்கும் வெறிக்கும் அளவு இருக்கணும்டா’
  • ‘அந்தப் பையனும் நீங்களும் கேமிராவோட சர்க்கஸ் செஞ்சப்ப எடுத்தேன்’.
  • ‘நாட்டியம் கத்துக்கவே இவனுக்கு நேரம் சரியாப் போயிடும். நாம இங்கே சமையற்கட்டிலயும், கல்யாண சமையல்லயும் எண்ணெய்ப் புகையிலயும் நம்ம காலம் முடிஞ்சுடும்.  இன்னொரு ஜென்மம் எடுத்து, அவன் நாட்டியத்துல கரை கண்டு, அவன் ஆடுவான்… நாம பார்க்கலாம்.’
  • ‘இந்த உறவுக்காரங்கள்னாலே இதான் தொந்தரவு. அடுத்தவங்க கஷ்டத்தப் பத்தி கவலப்பட மாட்டாங்க. எப்ப குத்தம் சொல்லலாம்னு காத்திருப்பாங்க!’

இவர்களெல்லாம் உபதெய்வங்கள். இன்னும் மூணு பேர் இருக்கிறார்கள். அவர்கள் மும்மூர்த்திகள்.

1. இளையராஜா

கண்ணை மூடிக் கொண்டு ஒரு தடவை படம் பாருங்களேன்.

2. கமலஹாசன்

நண்பனைப் பாடி அழைக்கிறார். உக்கிரமாக நடனம் ஆடுகிறார். நாயகன் மாதிரி அழத் தெரியாமல் அழாமல், கே விச்வநாத் சொன்ன பேச்சைக் கேட்டு அடக்கி வாசித்திருக்கிறார்.

3. எஸ் பி ஷைலஜா

அண்ணன் பாடினாலும், இவங்கதானே sole வில்லி?

ஆனாக்க… எல்லாத்துக்கும் கில்லாடி திரைக்கதையாளர் விஸ்வநாத். ஒவ்வொரு சீனும் உங்களுக்கு நினைவிருக்கும்.

  • இது ரகு (சரத்பாபு) & பாலு (கமல்) நட்புக்கான கற்பைப் பற்றிய படமா?
  • When Harry met Sallyஆக ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன உறவை ஆராய்கிற படமா?
  • கணவனை இழந்த தாய்க்கும் பதின்ம வயதுக் குழப்பத்தில் இருக்கும் மகளுக்கும் இடையேயான சிக்கல்களைப் பேசுகிற படமா?
  • அம்மாவை அண்ணியிடமும் காதலியிடமும் சிஷ்யையிடமும் தேடுபவனைப் பற்றிய படமா?
  • நடனத்தையும் ஆடுகலைஞர்களின் வாழ்வையும் அலசும் படமா?
  • பாலுவின் சமரசமற்ற ஐடியலிசத்தையும் மாதவியின் வாழ்க்கை ரியலிசத்திற்குமான போராட்டத்தை சொல்லும் படமா?
  • தலையெழுத்து விதிக்கும் தன்முனைப்பு செயல்பாட்டிற்கும் இடையே இருக்கும் தத்துவ சிக்கலா?

10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

சாரு நிவேதிதா கமல்ஹாசன்
வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார்
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார்.
35 ஆண்டுகளாக எழுதுகிறார் 50 ஆண்டுகளாக கலைச்சேவை
எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது.
சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா
சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார்.
மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம்
அமரந்தா, அவந்திகா வாணி, சரிகா
நடிகர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர்
சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு.

ட்விட்டரும் நானும் (2)

முந்தைய ட்வீட்ஸ்

அ. தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

ஆ. டிவிட்டவோ உளறவோ வேண்டியது

இ. ட்விட்டர்த்துவம்

1. What’s wrong with asking for credentials from illegal immigrants in Arizona? If you have it, why can’t you carry a simple license? #immi #AZ

2. was explaining a theory that Faisal Shahzad could be a handiwork of team like ‘Men Who Stare at Goats’ implanted by Team USA.

3. If only Super Singer Junior allows winners by relatives of producers, the picks should be: 1. Vishnu Charan; 2. Bala sarangan #VijayTV #Star

4. 1000thil Oruvan: fun to watch; doesn’t connect; inventive but does not satisfy the inner need for relating to the characters.

5. VTV: Gautam is getting into Bharatiraja/KB type syndrome in which success breeds stereotyped siblings with minimal variations.

6. அவள் பெயர் தமிழரசி: எ.கொ.சா.இ; joins the select list of classic ‘Gigli‘ genre movies in Tamil.

7. அங்காடித் தெரு: அண்ணாச்சியின் மறுபக்கத்தையும் ஓரமா காமிக்கலாம்; சினேகா இடைச்சொருகல் தவிர இன்னொரு பருத்தி வீரன்.

8. Inglorious Basterds: Conspiracy theories consolidated; touches from slavery to smartness with current amnesty regime for dictators.

9. I was appreciating ‘Up in the Air’ to my colleague. He asked me back ‘Do you have any movie that you don’t like?’ My reply: ‘I’m like Gandhi

10. அடுத்தவரோட வேலைக்கு உலை வைக்கிற நுட்பத்தை நுழைக்கிறவருக்கு, அவரோட வேலையில உலை வைக்க ஒரு நாடு பிறந்திருக்கும். #IT #Outsourcing #Tech

11. @peyarili நான் நீங்கதான் விசுவாமித்திரரின் மித்திரர்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

12. அக்கால scientistகள்? Seismologist: அகத்தியர்; Anthropologist: வியாசர்; Ethnologist: வால்மீகி; Geophysicist, Geologist, volcanologist யாரு?

13. Volcanic Ash Cloud இமாலயத்தில் எரிமலை வெடித்தால் கைலாயத்தில் நெற்றிக்கண் திறந்தது எனலாம்.

14. நிலைப்பாடு தமிழ் அல்ல. ‘லைப்’ (life) நடுவில் crisis கொடுக்கிறது. செயலைப் பாடினால் செயல்பாடு?

15. அழகியர் எவ்வாறு காரியத்தில் கண் வையாரோ, அவ்வாறே, தமிழ்ப்பதிவர் தமிழைத் தழைக்க வையார். #Tamils #NewYear

16. Paandavar Bhoomi Memorial Pole in Africa & Oceania. #memorials http://post.ly/XkOZ

17. கறுப்பு, வெளுப்பாவதை புகைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் பார்க்க பார்க்க, என் கண் முன்பே @writerpara நரைக்க கவலையா? கல்வியா?

18.When you say ‘I like’ Catcher in the Rye novelist dies in Google Reader what are you conveying? #Share

19. Today I was one of the last persons getting off the train. Never noticed so many disabled, cane wielders when I used to be one among the 1st

20. ‘சின்னத்தம்பி’யில் மனோரமாவுக்கு நடக்கும் வைபவத்தின் தீவிரத்தோடு, ‘யாரடி நீ மோகினி’யில் தனுஷ் வேலையிழப்பதை ஒப்பிடலாமா? #Ceremony

21. ட்யூனை சுட்டது யார் தேவா-வா? நெப்ட்யூனை சுட்டது யார் நாந்தானே அட நாந்தானே! யுரேனஸ் உதடுகள் உன்னுது? வைரத்தை வெட்டுவது யாரது!

22. Losing one glove is certainly painful;but nothing compared to the pain of losing one, throwing away the other & finding the first one -Hein

23. Misterக்கும் Ministerக்கும் in வித்தியாசம். அதே போல் கடி x கிண்டி [க + in + டி] என்றால் ட்விட் கேஸ் தயார். #Tamil99

24. இந்தியாவிற்கு எதிர்மாறாக மேடைப் பேச்சில் நாகரிகமாகவும், டிவி விளம்பரங்களில் ஏச்சும் பேச்சுமாகவும் இருக்கிறது. #Campaign

25. கிட்னியில் கல் தோன்றுமளவு சிறுநீர் தேக்கக் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ, அது போல் டேட்டாபேஸ் ரொம்புமளவு காத்திருத்தல் தகாது. #TwitGas

26. தான் விடும் குறட்டை பிறர் தூக்கத்தைக் கெடுப்பது தனக்கேத் தெரியாது; அது போல் தன் ட்விட்டின் கரியமில வாயு நச்சையும் அறியார். #TwitGas

27. reminded me of ‘Fight club’ quote: When people think you’re dying, they really, really listen to you, instead of just…

28. EKSI Moment: Even kids can SMS the pledge donation money to Red Cross 4 Haiti. They shd hv basic restrictions for 18+ minors offensive texts

29. பாத்ரூம் போனா உச்சாவோ ரெண்டுக்கோ போவணுங்கிற மாதிரி தமிழருக்கு இலக்கியமோ அறிவுப்பசியோ மட்டுமே சமைக்கப்படும். #TamBooks

30. வேலையில் இந்தப் பெயரின் infamousnessஐ குறிப்பிடுவது விருப்பமில்லை. வலையில் ‘என்ன வேலை’ வினவலையும் விரும்புவதில்லை.

31. As a Employee cum Blogger which gives you more kick? Tough problem analyzed & solved at work (or) A post being received well & reaches mass?

32. குறளுக்கு புராணக்கதை சொல்லும் ஏழாங்கிளாசு வாத்தி போல கதாகாலட்சேபமும் விஜய் ஆன்டனிகளை ஏசுவதாக டெம்பிளேட் ரம்பம். #Piraisoodan

33. ‘ஏதாவது ஹிட் படத்தை II ஆக்கலாம்’ என்ற நிபந்தனையோடு தமிழ் சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பு தந்தால், எந்தப் படம் தேர்ந்தெடுப்பீர்கள்?

34. சூத்திரனே சூத்திரமறிந்த சூத்ரதாரி என்பதற்கும் சூத்ரதாரியே சூத்திரமறிந்த சூத்திரன் என்பதற்கும் உள்ள இலக்கண வித்தியாசம் என்ன? #Sentenced

35. தனி மடலுக்கு பதில் போடாமல், பொது ட்விட்டுக்கு @ போடுவது, பொண்டாட்டியை தூங்கவிட்டுட்டு PPVஇல் பலான படம் பார்ப்பது போலாம். #Twithuvam

36. If I am in Starbucks I get free wi-fi, but no free coffee; If I am at work, I get free coffee with Iron curtains. At home?

37. Learning 48%; Money 31%; and Thinking -25%; Numbers -66%; Sex -85% for the list http://twitter.com/snapjudge/chattytamils

38. @icarusprakash கலக்கல்! “பச்சை சுடிதார் உள்ள வாங்க என்றார். நான் ம.வே.சிவகுமாராக இருந்திருந்தால், ‘எதுக்கு உள்ள’ என்று கேட்டிருப்பேன்.”

39. Watched Harry Potter 6 followed by HP2: Chamber of secrets. Its all falling in place now. Need to watch all of them again in reverse order.

40. How close was the 2nd half of Sujatha’s ‘Pirivom.. Santhippom’ to ‘Anandha Thandavam’? 1st part remained faithful to original AFAI remember.

41. இன்றைய சந்தேகம்: புனைப்பெயரை வைத்து அழைப்பது உங்களுக்குப் பிரியமா (எ.க.: மனுஷ்யபுத்திரன்). (அ) உண்மைப் பெயரா? (உ.: ஹமீது)? #Thalavedichurum

42. அடுத்தது என்னனு தெரியாம இருக்கறத விட, அந்தப் பாட்டை ஸ்கிப் செய்ய முடியாம பொறுமை காப்பதும் சுகம். iPhone shuffleனும் சுகம்.

43. ‘பியர்கடல் பிரந்தாமன்’ கூல். இதே மாதிரி அறுபடை வீடு, பரலோக பரமபிதா, கைலாயவாசி ஆகியோருக்கும் ஏதாவது இருக்கா?

44. கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்கள்’தான் நாளைய இயக்குநர்கள் என்றால், கவலையளிக்கிறது. நல்ல கான்செப்ட்; திராபையான கதைத் தேர்வு.

45. நேற்று அதிக ட்வீட்டுகளை சுவாரசியத்தோடு வழங்கிய பெருமையைத் தட்டிச் செல்பவர்: @vaamanikandan

46. அரசியல்/சினிமா தல மறைந்தவுடன் ஏன் கலாட்டா? 1. ஆள் அவுட்டானபிறகுதான் அவர் மேல கோபத்தக் காட்டமுடியும். 2. ஹீரோவை அடித்து நொறுக்கலாம்.

47. மற்றவர்கள் கருத்து சொல்லும் ட்விட்டரைப் பார்த்தால் தன்னாலே கீபோர்ட் சதை ஆடுதே! இது peer pressureஆ? blood pressureஆ? #Twitthuvam

48. இதை நடைமுறையாக்க என்னுடைய யோசனை. Child offenders could be posted as Security officers. They get kicks & get the job done too.

49. Which is a classic lyric? 1. இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்? (or) 2. மீயா மீயா பூனை; நான் மீசை வச்ச யானை & நான் ஆத்தா வுட்ட புஸ்ஸு.

50. அந்த வரி தவறு என்கிறார் நண்பர். ‘அஞ்சு மணி பஸ்; நான் அதை உட்டா மிஸ்’ஸாம். என்னுடைய காதுகளில்தான் எசகுபிசகு போல…

51. இந்தப் பாடலுக்கு இசையமைப்பது அசெம்பிளி மொழியில் வெப்சைட் உருவாக்கியது மாதிரி என்கிறார் ஆன்டனி. #Objects

52. சமீபத்திய ‘அரசு இலவச மருத்துவ முகாம்’ சென்று வந்த நண்பர் இலவச ஈசிஜி முதல் எலும்புத்தேய்வு சோதனை வரை செய்துகொண்டு DMK அனுதாபியாகி விட்டார்.

53. ‘Chennai Merina is ultra clean; Everything in Govt. schools r free & quality has improved. Why shd I vote 4 somebody else & take risk?’ #DMK

54. பிடுங்கிய மைக் முன் விடாக்கொண்டரில் டாப் யார்? 1. பிறைசூடன் 2. டியெஸ்பி தேவிஸ்ரீபிரசாத் 3. டி ராஜேந்தர் 4. ஹரீஷ் ராகவேந்திரா #Music #TV

55. என் டி திவாரி செய்கை மேல் உள்ள கோபத்தை விட அவன் மீதுள்ள பொறாமைதான் கோபத்தைக் கிளறுகிறது என்பார் பர்னாலாவின் மகன். #NDT #Males

56. பெரியார் வாழ்க்கை வரலாறு கொண்டு வந்தால் அரசு இன்சென்டிவ் ஏதாவது உண்டா? இன்னும் இரு பதிப்பகங்களும் திடீரென்று கொணர்ந்துள்ளதாம்.

57.சுயநலத்தில் டாப் நாடு எது? 1. நவூரு 2. இஸ்ரேல் 3. அமெரிக்கா 4. சீனா – http://nyti.ms/55FtSo

58. Writer நாகார்ஜுனன் ஏன் நடுவில் கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசம் இருந்தார் தெரியுமா? தெலுங்கில் ஹீரோவாக நடிக்கிறீர்களாமே என்று விசாரித்ததால். #Mokkai

59. Happy 60th Birthday to China: Unlike India it has organized corruption, people don’t have freedom to voice the divide between rich & poor.

60. Big Bang Theory is certainly a must-watch; geared for men; with geeks as social outcasts. simple, laugh a minute ritual to unwind. #TV #CBS

61. Question to IR bashers: Ilaiyaraja had written 4/5 books while ARR is yet to write any?

62. How will a TV serial look like if Rajinikanth acted in it? Watch ‘Aaril irunthu Arupathu varai’. #Psenti #Films

63. It’s Always Sunny in Philadelphia is pretty funny, edgy, comedy central-ish. Living without Sun TV is good. Started picking other TV serials

64. All the Indian Grocery stores in New England has variety of books on Hinduism, Krishna, Q&A by ISKCON prominently for a token donation. #God

65. Kaalachuvadu & Uyirmai are better selling (read – more money, cashflow, personnel) but doesn’t respond to e-mails of Subscribers @uyirmmai

66. Have to really appreciate Anyindian & Vaarthai for customer delight; replied for my trivial query over the weekend; resolved it @ivansivan

67. Comcast customer service is great. Patient responses; quick dispatches; solves quirky requests. Nice variety of free OnDemand DVR choices.

68. #Films Superman Returns: Kevin Spacey does justice even to masala chars; For a predictable Rajni like heroic movie, gripping narration.

69. #Films Bheja Fry: Overzealous Milind Soman; always scoffing Sarika; Aam Aadmi idiot hero; Nice premise; Drama like bg & boring developments.

70. 2 new movies recently released which I am looking forward to watch in DVD: Blind Date (Stanley Tucci) & Disgrace (Malkovich & Coetzee novel)

71. பரிதாபமாக பார்வை விட்டு அனுதாபம் சம்பாதிக்கும் போட்டியில் ‘North Station’ வாயிலில் அமர்ந்திருக்கும் ‘Traveling hungry’ போர்டுகாரர் வெல்வார்.

72. 50+ குடுமிகாரர் முக்கிய சாலையின் நடுவில் உற்சாகமாக ஸ்கேட்டிங். அவரின் ஐ-பாடில் ‘இமயம்’ சிவாஜி ‘திருமாலின் திருமார்பில்’ டூயட் பாடியிருபபார்.

73. Writers Nanjil Nadan & S Ramakrishnan have written songs for Suga’s Padithurai; Tamil Film Heroine talks in Tamil! http://bit.ly/2OU8CD

74. Whatever unwritten & hidden in the post is spelled out explicitly via tags. If post is a Cliff Notes, then tags are poems.

75. Started reading Penguin Classic The Love Letters of Abelard and Heloise: http://bit.ly/15tw1p #Romance #Books

76. Tamanna appeared in a single second shot as bride on Shahrukh’s ‘Om Shanthi Om’. Blink after interval & U wud hv missed it. #priorlife

77. What was the first Tamil film to have a scene of a person relieving himself? #Bathrooms #Grossness #Movies

78. was reading this to get motivated to clarify my doubt in Tamil Cinema http://is.gd/3Bn1n

79. @anantha Remembered some Nammavar fight sequences; Nandha ceremony; 7G lecture; but MMKR… thanks!

80. catching up on old DVR; ‘Surviving Suburbia’ is pretty realistic & funny too. Not sure whether women also reciprocate that thought. #TV

81. #Films ‘Welcome to Sajjanpur’: Scary thoughts of Shyam Benegal’s artsy stuff went away. Amrita Rao is 2 chocolatey; matter of fact narrative

82. What is the similarity between IE8 & FF3.5? They both crash when you visit Tamil blogs with their numerous aggregator toolbars, scripts.

83. ‘முதல் வாரத்திலேயே ‘உன்னைப் போல் ஒருவன்’ காலியாக கிடைக்கிறது. கல்லூரி வட்டாரத்தில் மோகன் லால் வசனம் புரியவில்லை’ என்றும் சொன்னார்கள். #UPO

84. 4 girl students frm Panimalar polytechnic missing: http://bit.ly/3MOOKc The women in teens shd hv their right to privacy or it a news item?

85. Arunthathi has a tap & water scene in which the victim slips & hurts himself; Eeram has the same, in which she dies. Where is the original?

86. அந்த ‘அபூர்வ ராகங்கள்’ வழக்கு ரொம்ப பிரசித்தமாச்சே… பாலச்சந்தரின் எந்தக் கதையுமே அவருக்கு சொந்தமில்லையா!? #Films #KB

87. Kancheevaram: Original Story, Screenplay, Movie was written by Suprabharathi Manian; inspired by Priyadarshan: http://bit.ly/3SooxN #Films

88. ‘மச்சான்னு கூப்பிடறதாலே நமீதா உனக்கு கொழுந்தியாளும் இல்லை. உன் கொழுந்தியாள் உன்னை மச்சான்னு கூப்பிடறதாலே அவ நமீதாவும் இல்லை!’ #SMS #Vikatan

89. ‘கமல் தீர்க்கதரிசி. இல்லையென்றால், அவரது குழனதைக்கு ஸ்ருதி என்று அப்போதே பெயர் வைத்திருப்பாரா?’ Literal quote from Gowthami in Vikadan #Film

90. புனைப்பெயரை மனுஷ்யபுத்திரன் என்று வைத்துக்கொண்டால் கவிலக்கியத்துவம். மனுஷய புள்ள என்றால் ப்ளாகத்துவம். ‘ப்’ எங்கே என்றால் சின்னபுள்ளத்தனம்.

91. Kalainjar Karunanidhi’s ‘நீயின்றி நானில்லை’ film title has been changed to ‘பெண் சிங்கம்’. Is it a reference to tagless Kanimozhi? #DMK

92. Actress Tamanna never sees a complete movie or preview of her acted film. She just watches her songs picturization in complete. frm Vikadan

93. ரொம்ப நேரமாக எங்களின் அலுவல் கட்டிடத்தின் மேல் ஹாலிவுட் படம் போல் ஹெலிகாப்டர் அப்படியே நின்று கவனிக்கிறது. வெளியே சென்றதால்தான் தெரிகிறது.

94. Pasanga: Taboo things aren’t watchable by teens like Mid-life crisis of middle-classers in Films. Explores bullying, nepotism, Consanguinity

95. Nadodigal: Cutesy leading ladies; late blooming Sasikumar; open ended real life interpretations without making Cheranish preachments. #Films

96. Arundhathi: Harry Potter met Chandramuki with Vittalacharya strewn in. Except 4 Anouska’s graceless classical dancing, good masla. #Films

97. A broken plastic spoon showed his head inside Complan bottle like a severed human raising its lame hand for help from Sri Lanka.

98. I asked her, ‘Cold! Isn’t it?’. Got reply. ‘It is Friday. Yeh.’ எத்தனை நாளானாலும் இந்த அமெரிக்கன் accentம் வராது. தாட்சணய கேள்விகளும் போகாது

99. அச்சுதனில் இருந்து பிதாச்சுதன் வந்ததா? சூத்தியாவில் இருந்து மதுசூதனுக்குப் போகலாமா? விஷ்ணு 1K நாமமான சுதன்வா டு சுதர்சன் to Shubhanallah!

100. “ஆரஞ்சு நிறம் குறைவாயிருக்கிறது . கால்களை நீருக்குள் அமிழ்த்தியிருக்கும் கொக்குகளை வரைகிறான்.” -நரன்: http://bit.ly/hQJSI #Quotes #TamilBlog

101. Old habits die hard or is it tired hands at keyboard or a longing for Indian cultural heritage? Typed dd/mm/yy in a doc & got befuddled resp

102. குமாரசெல்வா சிறுகதையும் கானகனின் ஊடகம் குறித்த குற்றப்பட்டியல் கட்டுரையும் தவிர பிற எதுவும் இ.வா. காலச்சுவடில் கவனிப்பைக் கோரவில்லை. #Magz

103. What is common between Jeyamohan, A Muttulingam, Manushyaputhiran, Charu Nivethitha speeches in public? All say ‘I don’t read Tamil blogs’.

104. Sruthi: ‘Nothing new to be done in Music; Music itself is couple of 100 years old.’ “Even from AR Rehman I can learn.” http://bit.ly/37p4su

105. People in China eat 5 times because of food abundancy & can be compared to Movies reel abuse: http://bit.ly/biZMZ #Kamal #UPO #Quotes #Video

106. ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படிக்கத் தெரியுமான்னு @shrutihaasan போட்டு கேட்கலாம்; அல்லது ப்ளேசிக்கு எழுத வருமான்னும் கேக்கலாம். #UPO

107. What will be your keywords if a Twitter client allows you to hide tweets automatically based on their appearance (like spam filters)?

108. ‘ஆண்டவனப் பார்க்கணும்… அவனுக்கு ஊத்தணும்’ (மக்கள் என் பக்கம்) சத்யராஜ் பாடலை எழுதியவர் கபீர்தாஸா? ஆதிசங்கரரா?: http://bit.ly/RkzSi

அடுத்தவரப் பத்தி எழுதணும்னா ட்விட்டு (140க்குள் முடி); உன்னப் பத்தி எழுத (பெத்த) பதிவு என்று வழக்கப்படுத்திக்க ராசா. #Twithuvam

ஸ்ருதிஹாசன் இசை: உன்னைப் போல் ஒருவன்: ஒலி அனுபவம்

முந்தைய பதிவுகள்:

1. Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs

2. உன்னைப் போல் ஒருவன் :: முன்னோட்டம்
Unnai-Pol-Oruvan-Covers-Wrappers-CD-Music-Listing
முதலிலேயே சொல்லி விடுகிறேன். இந்த விமர்சனம் எழுதுவதற்கு மூன்று காரணம்.

  1. வாரிசு: இரா முருகனோ மனுஷ்யபுத்திரனோ இன்னாரின் மகன் என்பதால் வசனம் எழுதும் வாய்ப்பையோ, தயாரிப்பாளரின் வழித்தோன்றல் என்பதால் பாடலை கவிதையாக்கும் இடத்தையோ அடையவில்லை. கார்த்திக்ராஜாவால் கூட முடியலியே!
  2. சுரேஷ் கண்ணன்: ரகுமானின் ‘ரோஜா’ திரைப்படத்தின் பாடல்களை கேட்ட போது எனக்குள் எழுந்த அதே மாதிரியான ஒரு புத்துணர்ச்சியான இசையைக் கேட்கும் உணர்வு இந்த ஆல்பத்தைக் கேட்கும் போது எனக்குள் எழுந்தது. அப்படியா 😯
  3. முதன்முதலாக: ஹிந்தியில் நாயகி வேடம். தமிழ் & தெலுங்கில் இசையமைப்பாளர் என்று அறிமுகமாகும் சுருதிஹாசனுக்கு வரவேற்பு.

Recession காரணமா என்று தெரியல. இந்த ஆல்பம் மனநிலையை சோகமுறச் செய்கிறது. இளையராஜாவிற்குப் பிறகு ஏ ஆர் ரெஹ்மானின் மலரோடு மலரின்று மரித்தாளும் (அல்லது மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாளும் போது – மணி ரத்னத்தின் மும்பை) போன்றவற்றிற்கு பிறகு நெகிழ்ச்சியுற மட்டும் வைக்காமல், யூத்துக்குப் பிடித்த புத்திசையாக வந்திருக்கிறது.

டைட்டில் சாங்கான ‘உன்னைப் போல் ஒருவன்’ எல்லாம் இசைத்தட்டு கொண்டு நல்ல 50,000 டாலர் ஸ்பீக்கர்+ஆம்ப் சங்கதி கொண்ட சவுண்ட்ப்ரூஃப் வீட்டில் கேட்கவேண்டும். கணினியில் மின்னஞ்சலுக்கு ஒரு காது, காதில் கேட்கும் கமல் குரலுக்கு இன்னொரு காது என்பது ஆகாது. ஆனால், அப்படிக் கேட்டால் போரடிக்கிறது.

சோறு தின்ற பிறகு ஊக்கமுற கடைசியாக ரிப்பீட்டில் ஓட்டியது ‘ஜெகடம் ஜெகடம் ஜெகடம் ஜெகட ஜெகட ஜெகட ஜெகடம்’. நாடோடிகள் அலுத்த பிறகு கமலின் ‘அல்லா ஜானே’ இப்போது கை கொடுக்கிறார். அதுவும் பாடலின் இறுதில் ஓலமிட்டு அழும் குரல்களின் சங்கமிப்பில், புரியாத ஸ்பெக்கை நாலு முறை திட்டிக் கொண்டே, உரத்தப் படித்தால் மண்டையில் ஏறுவது சிறப்பம்சம். மொத்தத்தில் எது #1 என்றால், அது கமல்தான்.

கம்பேர் செய்தே பழக்கமாகியதால் பெண்குரலில் வரும் அல்லா ஜானே காதிலேயே விழமாட்டேங்குது. இருவத்திமூன்று முறை முழுக்க பாடியதாக playcount சொன்னாலும் விண்டோஸ் மீடியா ப்ளேயர் பழுதோ என்று யோசிக்க வைக்கிறது.

வரிகள் எல்லாம் தனித்து, துருத்தி நிற்காதவாறு இசை மேலோங்கியிருப்பது மேற்கத்திய நாகரிகம். சொல்லப் போனால், பாதி (என்பது பொய்; அனைத்து ஆங்கில) பாப் பாடல்களிலும் கவிதையை இதுகாறும் நான் கவனித்ததில்லை. ஷநாயா ட்வெயினோலானிஸ் மாரிசட்டோ… என்ன மாதிரி ஆடை போட்டிருக்கிறார், ஒரே வரியே மீண்டும் மீண்டும் திரும்ப திரும்ப வருகிறதா என்பது மட்டுமே என் லட்சியம். இந்த டெக்னிக்கை ஓரளவு விஜய் ஆன்டனி செய்து வருகிறார். அவர் வாழ்க.

மும்பை (இல்லே… பாம்பே) ஜெயஸ்ரீ அனைத்துப் பாடல்களும் ஒரே மாதிரி பாடுகிறார் என்று குற்றம் சொல்லும் தொனியில் சில ‘உன்னைப் போல் ஒருவன்’ திரையிசை விமர்சனம் படித்தேன். அதே போல், கமல்ஹாஸன், நாகூர் ஹனீஃபா மாதிரி தேவையின்றி குரல் மாற்றிப் பாடியிருக்கிறார் என்று ‘ஏன் இந்த வீண் ஆசை? எவ்வாறு இன்னொரு ஸ்டைலில் போடலாம்?’ என்னும் வேறு இசை ரிவ்யூக்களும் கண்ணில் பட்டது.

ஒரே மாதிரி பாடுவது ரொம்ப சிரமம். இப்போ சம்பந்தமில்லாம உவமை போட்டுக்கலாம். டென்டுல்கர் அதே சென்சுரியத்தான் ஒவ்வொரு தடவையும் அடிக்கிறார். அதற்காக, போன சதம் மாதிரியே எதற்கு மீண்டும் சதம்? இந்த வாட்டி திலீப் தோஷி மாதிரி சூனியம் போடுங்க என்றா சொல்ல முடியும்?

டூயட் இல்லை. ஆதவனின் ‘டமக்கு தமக்கு’, நினைத்தாலே இனிக்கும் ‘அல்லா’, கண்டேன் காதலை ‘சுத்துது சுத்துது’ போன்ற குத்து கூட மிஸ்ஸிங். ஆனால், ராப் உண்டு. சுருதியை ‘வானம் எல்லை என்பது இன்று இல்லை’ இனிமையை நினைத்து மகிழ, ப்ளேஸி நடுவே புகுந்து கலாய்க்கிறார்.

அந்தக் காலத்தில் பாடல் திருடு போயிடுமோ என்று பயந்து குருகுக போன்ற முத்திரைப் பெயர்களை உள்ளே போட்டு பாடல் எழுதினார்கள். ப்லேசியும் அந்தப் பாரம்பரியத்தில் நாலு வார்த்தையில் மூன்று வார்த்தை தன் பெயர்ச்சொல்லை ஏற்ற இறக்கமில்லாமல் உச்சரித்து நிலை நாட்டுகிறார். வேண்டிய பாடலை மட்டும் தரவிறக்குவது வசதி. வேண்டிய பாட்டில் வேண்டாத இடங்களை எடிட் செய்யும் வசதியும் நாளடைவில் சுளுவானால் அதை விட வசதி.

ப்ளேசியைக் கேட்பதற்கு மனத்தடை உள்ளவர்களுக்காக பம்பாய் ஜெயஸ்ரீயுடன் கமல். ‘நிலை வருமா’ ரொம்ப நாளுக்கு டிஸ்டர்ப் செய்யக்கூடியது. எது என்றும் இனியது என்றால், அது இதுதான்.

சாரு நிவேதிதாவின் ‘ராஸ லீலா‘வை விமர்சிக்க வேண்டுமென்றால் கூட காசு கொடுத்து புத்தகம் வாங்கித்தான் குப்பை என்றோ, புரியலை பட்டயமோ தரவேண்டும் என்பது திண்ணம். அப்படியிருக்க ஓரளவு மீண்டும் மீண்டும் கேட்கக் கூடிய பாடல் கொடுத்தவருக்கு பாராட்டுகள் மட்டுமே சொல்லி செல்ல வேண்டும்.

தொடர்புடைய பதிவு: Song of the Day: allah jaanE from unnai pol oruvan.

Unnai Pol Oruvan: Music Reviews: Twitter, Tamil Blogs

முந்தைய பதிவு: Kamal’s ‘உன்னைப் போல் ஒருவன்’: Preview « Snap Judgment

  • donion: Shruti Haasan is a great environmentalist; heavy reuse and recycling in songs of unnai pOl oruvanView Tweet
  • milliblog: Shruti’s music is amateurish, while masquerading as polished. Milliblog music review of Unnaipol Oruvan: http://j.mp/k2T9
  • orupakkam: உன்னைப் போல் ஒருவன் இசை – Didnt fail. Kamal & Bombay Jayshree’s number is the pick of the lot. இது ஒரு குடும்ப இசை ஆல்பம் 🙂View Tweet
  • ursmusically: As a composer, Shruthi Haasan makes quite a promising debut in ‘Unnai Pol Oruvan’. She has tried something diff in limited space.View Tweet

writercsk:

  1. shruthi has that spark..about 14 hours ago from web
  2. unnai pol oruvan – nilai varuma song is good..about 14 hours ago from web
viswaa88: Unnai Pol Oruvan songs literally rocking!!! \m/View Tweet
chanduji: UNNAI POL ORUVAN – songs not so great for the first hearing! may be will get used to it soon!!!View Tweet
girsubra: Allah Jaane .. from the album-Unnai pol Oruvan is awesome.I think ,kamal Hassan -the singer doesnt always get the credit he deservesView Tweet
graja: Hearing song Nilai varuma sung by kamal & bombay jayasree from #Unnai pol oruvan… Music by Shruthi hassan— Nice #MelodyView Tweet

Vanthiyathevan: என் உளறல்கள்: Exclusive : உன்னைப்போல் ஒருவன் இசை விமர்சனம்

Suresh Kannan: பிச்சைப்பாத்திரம்: உன்னைப் போல் ஒருவன் இசைப் பாடல்கள் – ஒரு பார்வை..

Mugil: கமலஹாசனின் குடும்பப் பாடல்!

டக்ளஸ் :: உன்னைப்போல் ஒருவன்- பாடல்கள் ♠ ராஜு ♠

  • srikanthvaradan: Shruti hasan has done a neat job in unnai pol oruvan…. pick of the album is Nilai varuma…. sung by kamal and bombay jayashree… —  View Tweet
  • dvimal24: Unnai Pol Oruvan” songs are really good – seems to be a promising entry for Shruthi Hasaan!!!View Tweet
  • boo3dmax: unnai pol oruvan – not very bad; raghav identity – seems good #musicView Tweet
  • ramnaganat: Heard Unnai pol oruvan songs…not good…but heard most of these songs will not be in the movie…this one’s good…View Tweet
  • ram_zone: Unnai Pol Oruvan – My Pick, Nilai Varuma…View Tweet
svgan_in: Sorry. I dont like Unnaipol oruvan‘s music 😦View Tweet
rahultwitz: Gud peppy numbers from Shurti Hassan..Unnaipol Oruvan!!.hope she wud turn sth big..View Tweet
sridharv86: Not impressed with ‘Unnaipol Oruvan‘. Except for a couple of songs.View Tweet
ajaybharathi: I don find the music for “Unai pol Oruvan” that impressiveView Tweet
RinjuRajan: a day of surprises! 🙂 unnaipol oruvan music rocks!View Tweet
charanftp3: Giving the composing job to Shruti was indeed a big move,but she makes a terrible mess of the Unnaipol Oruvan soundtrack-Disappointing!View Tweet
shrinivassg: Unnaipol Oruvan Audio .. Very disappointing stuff !View Tweet
  • Listened to Unnaipol Oruvan atleast 10 times.. Listen to the album with open mind and the songs are apt for the plot very intriguing lyricsView Tweet
  • Kamal’s rational taught all over the unnaipol oruvan lyrics listened to all the songs atleast 10 times good stuffView Tweet

சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா?

சன் டிவியில் செய்திகள். சர்வக்ஞர் சிலை திறப்பு விழா. மகள் படித்த புத்தகம் குறித்தும் குமான் குறித்தும் விசாரித்துக் கொண்டே அரைக் கண்ணில் தொலைக்காட்சியிலும் பார்வை. சட்டென்று ‘சூப்பர் ஸ்டார்’ மின்னி மறைகிறார்.

உணர்ச்சி வேகத்தில், ‘அது யாரு தெரியுதா?’ என்று மகளையும் பார்த்தாலே பரவசமாக்குபவரைக் கேட்கிறேன்.

அரை நம்பிக்கையுடன் ‘ரஜினியா?’

‘ஆமாண்டி… ஆமா!’

‘எங்கே?’

DVR இயங்கத் துவங்குகிறது. திரும்ப அந்தக் காட்சியை ஃப்ரீஸ் செய்கிறேன்:

Rajinikanth-Kalainjar-Sarvaknjar-Valluvar-Statue-Events-RM-Veerappan

‘இவர்தானே?’ சந்தேகாஸ்பதமாக சுட்டுகிறாள்.

ரஜினிகாந்த் என்று அவள் நினைத்தவர்: (மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எஸ்.ஜெகத்ரட்சகன்)

Rajniganth-Madras-Sarvakjar-Statue-Pictures-highlights

சன் நியூசில் ஏனோ கமல் கலந்துகொண்டதைக் காட்டவில்லை.

பொன்விழா ஆண்டிலும் கமல்ஹாசன் எப்படி இருக்கிறார் பாருங்க:

Kamal-Vairamuthu-Sarwakjar-Veerapandi-aarumugam-Ki-Veeramani-Chennai-Functions-Photos


சர்வக்ஞர்

1. தினமணி :: சர்வக்ஞர் கூறும் அறம் « தமிழ்ச்செல்வி

2. தமிழ்ஹிந்து :: த்ரிபதி சர்வக்ஞர் & வள்ளுவர் « ஜடாயு » வழிகாட்டும் வசனகர்த்தர்கள்: “”

3. புகைப்படங்கள்: என்வழி