Daily Archives: ஜூலை 17, 2009

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

Achamundu Achamundu: 10 Questions

ஜெயமோகன் வந்துபோன களேபரத்தில் இட்லி-வடை கேள்வி + குறுவட்டு வாய்ப்பு நழுவிவிட்டது.

அதனால் என்ன 🙂

1. Achamundu Achamundu சென்சார் ஆகிவிட்டதா? அடல்ட்ஸ் ஒன்லியா? அல்லது குழந்தைகளுடன் பார்க்கும் ‘ஏ’ படமா? (வேட்டையாடு… விளையாடு, வாரணம் ஆயிரம் போன்ற தமிழ் சினிமாக்கள், யு/ஏ, யு என்று வந்தாலும், போதை, வன்முறை, பதின்மருக்கான கதைக்களம் கொண்டிருக்கும். அந்த மாதிரி பெற்றோர் நெளியும் காட்சிகள் இருந்தால் குழந்தையை வீட்டில் விடுவதற்காக கேட்டு வச்சுக்கலாமேன்னு…)

2. பாஸ்டனில் கூட இத்துப் போன (நாடக சபா) தியேட்டரில்தான் பெரும்பாலும் ரிலீஸ் செய்கிறார்கள். இந்த லட்சணத்தில் சென்னை தவிர்த்த தமிழக/ஆந்திர கிராமங்களுக்கு ரெட், 4கே துல்லியம் எல்லாம் எவ்வளவு ரீச் ஆகும்? தேவையா? ஆய பயன் என்ன?

3. வில்லன் என்பவர் தமிழ் சினிமாவின் தாத்பர்யமான கெட்ட கதாபாத்திரத்தின் குறியீடு மட்டுமா? அல்லது எவ்வாறு அப்படி ஆனார், அவருக்குள்ள நியாயங்கள் என்று பன்முகப் பரிணாமம் உண்டா?

4. இந்தப் படத்திற்கு exotic factor தவிர்த்து அமெரிக்கா எதற்கு? இந்தியாவிலேயே கதைக்களன் + பின்புலம் சரிப்படுமா? தேசிக்களின் அகச்சிக்கல்களின் மீது படம் வெளிச்சம் பாய்ச்சுகிறதா?

5. உங்களின் உதவி இயக்குநர்கள் குறித்து? எவ்வாறு திரைக்கதையில் உதவினார்கள்? எப்படி டீம் உருவானது?

6. வசனம் எழுத, கதை தோன்ற யார் inspiration? எந்த நொடியில், எதைப் பார்த்தவுடன் கரு உதித்தது? ஏதாவது புத்தகம்… சமகால ஹாலிவுட்/உலக சினிமா போன்றவற்றால் பாதிப்பு ஏற்பட்டதா?

7. நியு யார்க்கில் சினிமா கற்றுக் கொண்டதற்கும், தமிழ் சினிமாவிற்கும் என்ன வேறுபாடு? எங்கே ஒற்றுமை? ஆறு வித்தியாசம் ப்ளீஸ்…

8. படத்தின் பட்ஜெட், எத்தனை ப்ரின்ட், எங்கெல்லாம் வெளியீடு போன்ற தகவல்கள் தூவ முடியுமா?

9. இதுவோ புதுமுகங்களின் காலம்; கல்லூரி, சுப்ரமணியபுரம்… ஃப்ரெஷ் முகம் போட்டால் இந்த கேரக்டருக்கு பாந்தம் கூடியிருக்கும் என்று எண்ணியதுண்டா?

10. கேபி, பாரதிராஜா போல் எல்லா இயக்குநருமே மிகச் சிறந்த நடிகர்கள்.நீங்க எப்போ ஹீரோ ஆகப் போறீங்க? தருண் கோபி, பேரரசு, சேரன், சுந்தர் சி வரிசையில் அடுத்த கதாநயகனாக ஆவீர்களா?

11. Finally, can you share some ஜிலு ஜிலு photos of அச்சமுண்டு… அச்சமுண்டு!, Prasanna-Sneha together, making of AA & Sneha alone?

ஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்

புத்தக கடையில் ஜெமோ விரும்பி வாசிக்க எடுத்த நூல்களின் பட்டியல்:

1. Confessions of a Philosopher – Bryan Magee

2. If on a winter’s night a traveler – Italo Calvino

3. 2666 – Roberto Bolano

4. Ludwig Wittgenstein: The Duty of Genius – Ray Monk

5. Pragmatism: The Classic Writings – Edited by H S Thayer

6. The Meaning of Truth: William James

7. Evolution and the Founders of Pragmatism: Philip P Wiener

8. The Geography of Thought: Richard E Nisbett

ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்

ஜெயமோகனை சந்தித்த கதை தொடர்கிறது.

நான்: இப்போ எழுதறதில் எதையாவது படிச்சு ரெஃபர் பண்ணுகிற மாதிரி உங்களுக்கு யாராவது இருக்காங்களா? உங்களைக் கவர்ந்தவர்கள்?

“நெறைய பேரு இருக்காங்க. அப்பப்ப சொல்லிடுவேன். உங்களுக்கு அறிமுகமானவர்களில் சேதுபதி அருணாச்சலத்தையும் அரவிந்தன் நீலகண்டனையும் தற்காலத்தின் மிகச் சிறந்த வளரும் எழுத்தாளர்களாக நான் கருதுகிறேன். அந்த வயதில் நான் வாசித்ததை விட, இவர்களின் அகலமும், ஆழமும் நீளமும் அதிகம்.

சொல்லப் போனால், அ.நீ. குறிப்பிடத்தக்க படைப்பாளியாக, தமிழிலக்கிய கர்த்தாவாக வரவேண்டியவர்; வந்திருக்கக் கூடியவர். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருடைய முனைப்பெல்லாம், தன்னார்வத் தொண்டில் இருப்பதும் நல்லதே.

சுய உதவிக் குழு, மகளிர் நலன், விவேகானந்தா கேந்திரா என்று அயராது உழைக்கிறார்.

எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் இவர்கள் இருவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

நேசகுமாரை…”

ட்ரெயின் வரும் சத்தத்தில் ஜெயமோகன் உரையாடல் முற்றுப் பெற்று வெங்கட் சாமிநாதனுக்கு தாவிவிட்டது.

“வெங்கட் சாமிநாதனின் நகையுணர்வு மெலிதானது; பிரசித்தி பெற்றது. யாத்ராவில் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் போடுகிறார்.

‘இந்தப் புத்தகத்தில் 13 வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • ஆசிரியர் பெயர்
  • பக்கங்கள்
  • பதிப்பகம்
  • விலை
  • அச்சிட்டவர்
  • புத்தகத் தலைப்பு

இப்படி போகிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ’35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’

இன்றைய அளவிலும் கறாரான கருத்துக்கு சொந்தக்காரர்.

வெ.சா. விமர்சனத்தை தனியாகவும், சொந்த வாழ்க்கையில பிரதிபலன் பார்க்காம உதவறதையும் தனித்தனியா வத்திருந்தார். அவர் நேர்மையாக, கடுமையாக விமர்சித்த பலருக்கு தனிப்பட பலப் பல விஷயங்கள் செய்திருக்கார்.

அதை வெளியில் யாருக்கும் சொன்னதுமில்லை. உதவி பெத்துண்டவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்!

நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்.”

நான்: அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே! சுஜாதாவைப் சந்திச்சவங்க சொன்னதில் இருந்து எனக்கு பயம் வந்துடுச்சு.