’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.
அகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:
வலம்
- – சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).
- – பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).
- – முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;
- – வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.
- – வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).
- – வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்
- – வலப்பாரிசம்: 1. Army; சேனை. (W.) 2. Strength, power; வலி.
- – வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து
- – வலவன்: Capable man; சமர்த்தன்.
- – வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).
இவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா?
By Allah (Arabic: Wallah, وَٱللّٰه) is an Arabic expression meaning “[I promise] by God” used to make a promise or express great credibility on an expression. It is considered a sin among Muslims to use this phrase and follow it up with a lie.
எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.
பொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:
இதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:
- கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
- இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.
- நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
- போன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.
- வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சி – சொல்வனம் ரவிஷங்கர்
- சிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்
- மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
- சமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து, ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.
- இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? – லக்ஷ்மணப் பெருமாள்
- இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன
- அருகி வரும் யானைகள் – பி.ஆர்.ஹரன்
- திண்ணையில் இவரின் சில கட்டுரைகளை (யானைகளும், கோவில்களும், ஆன்மீகப் பாரம்பரியமும் ) படித்திருந்தனால், இதைப் பார்த்தால் புதியது போலவேத் தோன்றவில்லை. தொடர் என்று வேறு சொல்லி இருக்கிறார்கள். வலையில் வெளியான விஷயத்தைத் தவிர்க்கலாம்.
- மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
- ஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை!’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.
- பழைய பாடல் (சிறுகதை) – சுகா
- ஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.
- ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
- காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
- சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
- சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
- கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.
- வலம் முதல் இதழை கூகிள் ப்ளே மூலம் வாங்க Google Play (https://play.google.com/store/books/details?id=DyU6DQAAQBAJ) செல்லவும். மின்னிதழ் விலை: ரூ 20/-
- பிடிஎஃப் இதழை வாங்கி அப்படியே வாசிக்க: (ஃப்ளாஷ் தேவை – எனவே ஸ்லேட், ஐபேட், டாப்லெட் போன்றவற்றில் வாசிப்பதில் சற்றே சிரமம் இருக்கும்): http://nammabooks.com/buy-valam-magazine
- வலம் அச்சு இதழுக்கு ஆன்லைனில் சந்தா செலுத்த: https://www.nhm.in/shop/Valam-OneYearSubscrpition.html
- புத்தகத்தின் முதல் ஐந்து பக்கங்களை முன்னோட்டம் பார்க்க http://www.valamonline.in/2016/10/Valam-Issue-01-Oct2016.html