Monthly Archives: மே 2007

Salma – Sila Kavithaigal

சல்மா தொண்ணூறுகளின் இறுதியில் எழுத்தொடங்கிய தமிழின் முக்கியமான இளம் கவிஞர்களில் ஒருவர். காலச்சுவடு வெளியீடாக ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ என்ற கவிதை நூலும் உயிர்மை வெளியீடாக ‘பச்சை தேவதை’ என்ற கவிதை நூலும் உட்பட மூன்று கவிதைத் தொகுப்புகளும் சமீபத்தில் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்று ஒரு நாவலும் வெளிவந்திருக்கின்றன. சல்மா சிறுகதைகளும் எழுதுகிறார்.

ஏராளமான எதிர்ப்புகளுக்கிடையே பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுக் கவுன்சிலராக இருந்தவர். பொது நூலகங்களுக்குச் சிறந்த நூல்களைத் தெரிவு செய்யும் நூல் தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.

பயண நேரம் – சல்மா

பயணம் நிகழ்கையில்
ஜன்னலோர இருக்கை வாசிகள்
அதிர்ஷ்டசாலிகள்

சீறும் காற்று
முடியைக் கலைக்கவும்
கண்ணில் தூசு விழவுமாய்
அசௌகர்யங்கள் இருந்தாலும் கூட

மனிதருள்,
இயற்கையுள் நுழைய
வேண்டும் ஜன்னலோர இருக்கைகள்

பாதையோரத்தில்
இடிந்து கிடக்கும்
ஒற்றைச் சுவர்
என்னவாய் இருந்திருக்கும்?
அது ஓர்
அச்சம் தரும் நினைவு

முடிவு நேரம் அறிவிக்கப்படாத
பயணம் துரிதப்படுத்துகிறது
எல்லாவற்றையும் முடிக்க

ஏதொன்றுமே
முடிவடைவதில்லை.

பயணம் முடியும் வேளை
தகிக்கும் நிறைவின்மை
அச்சுறுத்துகிறது அனைவரையும்

சமயத்தில் எரிக்கிறது
எல்லாவற்றையும்

Continue reading

Tamil Poet Salma Interview – Thozhiyar/Chandravathana

தோழியர்எழுதியவர்: சந்திரவதனா (ஜேர்மனி)

இப்பதிவு எழுதப்பட்ட தேதி: Wednesday, June 9th, 2004 நேரம்: 8:23 am
பிரிவு: நேர்காணல்.

கவிஞர் சல்மா – நேர்காணல்


ஒரு மாலையும் இன்னொரு மாலையும் கவிதைத் தொகுப்பின் மூலமாக கவனம் பெற்ற முக்கியக் கவிஞர்

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர். அப்பா சம்சுதீன். அம்மா சர்புன்னிசா. 37 வயதாகும் சல்மாவின் இயற்பெயர் ரொக்கையா பீவி. கணவர் மாலிக். வலி நிறைந்த துயரங்களை எளிய மொழியில் கூறும் சல்மாவின் கவிதைகள் அவரது சொந்த அனுபவங்களாக மட்டுமே நிற்காமல், பெண்களின் பொதுவான துயரங்களாக விரிகின்றன. இரண்டு புதல்வர்களைக் கொண்ட சல்மா துவரங்குறிச்சி (பொன்னம்பட்டி) பேரூராட்சித் தலைவராகவும் இருந்துவருகிறார்.

சில கதைகளும் எழுதியுள்ள இவர் இப்போது ஒரு நாவல் எழுதியுள்ளார். “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற அந்த நாவல் விரைவில் காலச்சுவடு வெளியீடாக வர உள்ளது. உதவி ஆசிரியர் பெ. அய்யனார் துவரங்குறிச்சியில் சல்மாவின் வீட்டில் அவரை சந்தித்து உரையாடினார். கவிதை, வாழ்க்கை, அவரது இலங்கைப் பயணம் என்று பலதரப்பட்ட விஷயங்கள் பற்றி மூன்று மணி நேரத்திற்கு மேல் நடந்த இந்தச் சந்திப்பின் முக்கியமான பகுதிகள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. “பல ஆண்டுகளுக்கு முன்பு நகுலனைத் திருவனந்தபுரத்தில் சந்தித்து “புதிய பார்வை” இதழுக்காக நேர்கண்டபோது எனக்கு ஏற்பட்ட மனரீதியான பாதிப்பை சல்மாவுடன் உரையாடியபோது உணர்ந்தேன்.” என்கிறார் அய்யனார்.
“எழுத்துதான் எல்லா நம்பிக்கைக்கும் காரணம்.”
“பொய்யான மதிப்பீடுகள் மூலம் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்”
“ஆணின் சிந்தனையை இரவல் வாங்கித்தான்
பெண்ணும் சிந்திக்க வேண்டியுள்ளது”

நேர்காணல் – கவிஞர் சல்மா

சந்திப்பு – பெ.அய்யனார்

இஸ்லாமியப் பெண்களுக்கான அடையாளம் மட்டும்தானே உங்கள் கவிதைகளில் உள்ளது?

Continue reading

Language of Lawyers – Tamil Nadu Courts Official Talk

மொழிப் பிரச்னை

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாக்கும் தமிழக அரசின் முடிவு நீதித் துறையினரிடம் வேற்பட்ட கருத்துகளை ஏற்படுத்தியுள்ளது

பிற மாநிலங்கள் போல் தமிழ்நாட்டிலும் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.

  • 2006 வரை துணை நீதிமன்றங்களில் தேங்கியவை:
    • 4,43,656 சிவில் வழக்குகளும்
    • 4,13,153 கிரிமினல் வழக்குகளும்
  • உயர்நீதிமன்றத்தில் இவற்றின் எண்ணிக்கை
    • 3,72,973 சிவில் வழக்குகள்
    • 38,985 கிரிமினல் வழக்குகள்
  • வழக்குகளை விரைவாக முடிக்க மாநில அரசு 2007-08-இல் 50 விரைவு நீதிமன்றங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • நீதித்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்ற கட்டிடங்கள் கட்டித்தர ரூ 213 கோடி திட்டத்தை செயல்படுத்த நடப்பு நிதியாண்டில் நிதி ஒதுக்கும்படி மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுள்ளது.

இந்தச் சூழலில் நீதிமன்றத்தின் வழக்குமொழியை மாற்றும் முயற்சி நீதித்துறையின் நடைமுறைகளை தாமதப்படுத்தும்?

மேலும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் பேசாத நீதிபதிகளின் நியமனங்களிலும் பிரச்னைகள் வரும்!

நன்றி: இந்தியா டுடே

How to bring change in Bureaucracy

அரசின் கவனத்திற்கு

எண்பதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சேர்ந்து நிர்வாக சீர்திருத்தக் கமிஷனுக்கும் ஆறாவது சம்பளக் கமிஷனுக்கும் சில யோசனைகளை முன்வைக்கிறார்கள்.

1. அதிகாரிகள் சிறப்பாக செயல்பட

  • மூத்த பதவிகளுக்கு வெளியிலிருந்து ஆளெடுக்க வேண்டும்
  • குறிப்பிட்ட வேலைக்குத் தகுதியானவர்களையே நியமிக்க வேண்டும்
  • பதவிக்காலத்தின் மத்தியில் மீண்டும் அந்தப் பதவிக்கு ஆள்கேட்டு விளம்பரம் செய்யவேண்டும். அதே பதவியிலிருப்பவரும் விண்ணப்பிக்கலாம்.

2. சிறப்பான செயல்பாட்டிற்கு

  • பொதுப்பணம் சரியாக செலவழிக்கப்பட்டதா என அறிய கள அறிக்கைகளைப் பெற வேண்டும்.
  • உள்ளாட்சி மன்றத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்களை நியமிக்க வேண்டும்
  • தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சிப் பிரமுகர்கள் மேயர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நன்றி: இந்தியா டுடே

Tamil Movies – Income & Expenses: Budget Calculations

நன்றி: இந்தியா டுடே

பருத்தி வீரன்
செலவு: ரூ. 6.5 கோடி
வசூல்: ரூ. 10 கோடி

மொழி
செலவு: ரூ. 3.5 கோடி
வசூல்: ரூ. 4 கோடி

பச்சைக்கிளி முத்துச்சரம்
செலவு: ரூ. 5-6 கோடி
வசூல்: ரூ. 6 கோடி

வெயில்
செலவு: ரூ. 2.5 கோடி
வசூல்: ரூ. 4 கோடி

குப்பி
செலவு: ரூ. 1.4 கோடி
வசூல்: ரூ. 1.1 கோடி

George Carlin’s Views on Aging

Do you realize that the only time in our lives when we like to get old is when we’re kids? If you’re less than 10 years old, you’re so excited about aging that you think in fractions.

“How old are you?” “I’m four and a half!” You’re never thirty-six and a half. You’re four and a half, going on five! That’s the key

You get into your teens, now they can’t hold you back. You jump to the next? number, or even a few ahead.

“How old are you?” “I’m gonna be 16!” You could be 13, but hey, you’re gonna be 16! And then the greatest day of your life . . you become 21. Even the words sound like a ceremony . YOU BECOME 21. YESSSS!!!

But then you turn 30. Oooohh, what happened there? Makes you sound like bad milk! He TURNED; we had to throw him out. There’s no fun now, you’re Just a sour-dumpling. What’s wrong? What’s changed?

You BECOME 21, you TURN 30, then you’re PUSHING 40. Whoa! Put on the brakes, it’s all slipping away. Before you know it, you REACH 50 and your dreams are gone. But wait!!! You MAKE it to 60. You didn’t think you would!

So you BECOME 21, TURN 30, PUSH 40, REACH 50 and MAKE it to 60.

You’ve built up so much speed that you HIT 70! After that it’s a day-by-day thing; you HIT Wednesday!

You get into your 80s and every day is a complete cycle; you HIT lunch; you TURN 4:30; you REACH bedtime And it doesn’t end there. Into the 90s, you start going backwards; “I Was JUST 92.”

Then a strange thing happens. If you make it over 100, you become a little kid again. “I’m 100 and a half!” May you all make it to a healthy 100 and a half!!

HOW TO STAY YOUNG
1. Throw out nonessential numbers. This includes age, weight and height. Let the doctors worry about them. That is why you pay “them.”

2. Keep only cheerful friends. The grouches pull you down.

3. Keep learning. Learn more about the computer, crafts, gardening, whatever. Never let the brain be idle. “An idle mind is the devil’s workshop.” And the devil’s name is Alzheimer’s.

4. Enjoy the simple things.

5. Laugh often, long and loud. Laugh until you gasp for breath.

6. The tears happen. Endure, grieve, and move on. The only person, who is with us our entire life, is ourselves. Be ALIVE while you are alive.

7. Surround yourself with what you love, whether it’s family, pets, keepsakes, music, plants, hobbies, whatever. Your home is your refuge.

8. Cherish your health: If it is good, preserve it. If it is unstable, improve it. If it is beyond what you can improve, get help.

9 Don’t take guilt trips. Take a trip to the mall, even to the next county; to a foreign country but NOT to where the guilt is.

10.Tell the people you love that you love them, at every opportunity.

AND ALWAYS REMEMBER:
Life is not measured by the number of breaths we take, but by the moments that take our breath away

Periyar Movie – Rajni Quote: Banner Ad

Rajni_fans_discussions_Udhyam_Periyar Banner_Quote.JPG

பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லையே!: ரஜினி ஏக்கம்

“பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இல்லாமல் போய்விட்டேனே’ என்று “பெரியார்’ திரைப்படத் தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் ரஜினிகாந்துக்காக “பெரியார்’ படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்து வியந்த ரஜினிகாந்த், படத்தைப் பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வியாழக்கிழமை கடிதம் எழுதியிருந்தார். அதன் விவரம்:

“பெரியார்’ படம் பார்த்து பிரமிப்பு அடைந்தேன். பெரியாருடைய கொள்கைகளை அறிந்திருக்கிறேன். ஆனால் அவருடைய வாழ்க்கை வரலாறு எனக்கு அவ்வளவாகத் தெரியாது. இந்தப் படத்தின் மூலம் அவருடைய வாழ்க்கை வரலாற்றை அறிந்த பிறகு பெரியார் மேல் எனக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. சமூக நலனுக்காகப் போராடிய காலங்களில் அவருடன் நாம் இல்லையே என்ற ஏக்கம் படம் பார்க்கும்போது ஏற்பட்டது. இருந்தாலும் அவருடன் நெருங்கிப் பழகிய முதல்வர் கருணாநிதி, கி.வீரமணி ஆகியோரோடு எனக்கு பழகுகின்ற வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்தத் திரைப்படம் உருவாவதற்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கும், பெரியாராகவே வாழ்ந்து காட்டிய நடிகர் சத்யராஜுக்கும், அருமையாக இயக்கிய ஞானராஜசேகரனுக்கும் என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Did you visit Experiences

Living is like tearing through a museum. Not until later do you really start absorbing what you saw, thinking about it, looking it up in a book, and remembering – because you can’t take it in all at once.
Audrey Hepburn

Science vs Art

If scientific reasoning were limited to the logical processes of arithmetic, we should not get very far in our understanding of the physical world. One might as well attempt to grasp the game of poker entirely by the use of the mathematics of probability.
Vannevar Bush

I will get the worshippers; Where are my Angels?

அக்சர்தாம் குறித்து துளசி விரிவாக எழுதிவிட்டார்.

போதாக்குறைக்கு, எத்தனித்தை நியு யார்க் டைம்ஸ் தெளிவாக பிடித்திருக்கிறது:

The Disney Touch at a Hindu Temple – New York Times: “There is no doubt about it — we have taken the concept from Disneyland,” said Jyotindra Dave, the chief public relations officer for the organization that built the temple, which opened in November. “We visited five or six times. As tourists, I mean. And then we went away and worked out how they did everything.”

An indoor boat ride, a large-format movie screen, a musical fountain and a hall of animatronic characters that may well remind us that, really, it’s a small world after all.

The crowds here aren’t pilgrims; they’re day trippers.

The film adaptation of the Bhagwan Swaminarayan’s pilgrimage, with its lovely swooping shots of the Himalayas, is a far less gory take on Mel Gibson’s blockbuster evangelism.

People cut in line and tread on my toes, which strike me as things Bhagwan Swaminarayan would not do. It seems the combined efforts of the Akshardham’s robots, elephants and talking boats in relaying BAPS’s essential message of humble compassion may still not have been enough.

இப்போது என் பங்கு:

இம்ரான் ஹாஷ்மி படத்தில் நாயகி ஆடையணிவது போல் இடுப்பில் துளியூண்டு கச்சை கட்டிப் புறப்படுகிறார் நீலகண்ட். ‘வா வா கண்ணா வா‘ பாடலில் பனியில் பரதநாட்டியம் ஆடிய அமலா பிச்சை வாங்க வேண்டும். கிராபிக்ஸ் துணையுடன் எவரெஸ்ட் உச்சி முதல் அமேசான் காடுகள் தொட்டு சஹாரா பாலைவனம் வரை உலாவுகிறார். இயக்குனர் ஷங்கர் இந்த ஐ-மேக்ஸைப் பார்த்தால் ‘சிவாஜி‘யில் ரஜினியை கலக்க வைத்திருப்பார்.

வீ வாண்ட் ஷிவாஜி-தி பாஸ் இன் 3-டி ஐ-மேக்ஸ்கோப்.

It is a Small World‘ படகுப் பயணம் பருவத்துக்குத் தக்கவாறு டிஸ்னிவோர்ல்டில் மாறும். நத்தார் பொழுதில் பனி புலரும். பூப்புலரும் காலத்தில் உலக மலர்களின் அணிவகுப்பு நடக்கும். இங்கு சுவாமிநாராயண் & கோ.

டிஸ்னியில் விழியமாகப் படம் எடுக்கலாம். இங்கு அரூபசுந்தரன். புகைப்படம் கிடையாது.

162 அங்குலம் உயரத்தில் பிரும்மாண்ட பாலகனாக நீலகண்டனைப் பார்த்தவுடனே தமிழ் அரங்கு வாயிலில் இருக்கும் கட்-அவுட் நினைவுக்கு வருகிறது. பாலபிஷேகம் செய்யலாம்.

ஜெயபிரதாவையும் ஜெயசுதாவையும் மட்டும் திரையில் பார்த்த காலங்களில் தெலுங்கு மட்டுமே சுந்தரிகளைத் தயாரிக்கும் மாநிலம் என்னும் கருத்தாக்கத்துடன் திரிந்தேன். நெடுங்காலம் கொண்டிருந்த கருத்தாக்கம் மவுண்ட் கேரமல் கல்லூரியை பெங்களூரிலும், எல்.எஸ்.ஆரை புது தில்லியிலும் பயணித்தவுடன் பொடியாகி மாறிப்போனது. அக்ஷார்தாம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பாவையர்கள் கேட் மாஸ் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து கேட்-வாக் பழக வேண்டியவர்கள். சிலைகளை மட்டுமல்ல, மட்டுறுத்தர்களையும் பொறுக்கியிருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சென்று வர 145 ரூபாய்தான். ரொம்பவேக் குறைச்சல். பெருந்திரைப் படங்களுக்கு 450 ரூபாய் (பத்து அமெரிக்க வெள்ளி) கறப்பார்கள். படகு உல்லாசம், யானை சிற்பங்கள், பொம்மலாட்டம் எல்லாம் சேர்க்கும் டிஸ்னியில் குறைந்தது 3,000 ரூபாய் ($ 65+) ஆகும்.

ஒரு காட்சியில் குறைந்தது 500 பேர் அமரலாம். நான் சென்றிருந்த வியாழன் மாலை நிறைந்த அரங்கு. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகளாவது நிறையும் என்றால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் வருமானம். மாதத்துக்கு ஒரு கோடி ($ 250,000) கல்லாப்பெட்டி நிறைக்கும். சீரிய வணிகமாகத் தொடங்க முனைவோருக்கு வங்கியில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகம்.

நடக்க முடியாதவர்களுக்காக சக்கர நாற்காலியை இலவசமாகத் தருவதாக அறிவிப்பு. குறிப்பிட்ட நேரத்துக்குள் திருப்பித் தராவிட்டால், நூறு ரூபாய் குடக்கூலி. உள்ளே சென்று படம் பார்த்து, தங்க விக்ரகத்தை சைட் அடித்து திரும்புவதற்குள் வாடகை வசூல். தொடக்கத்திலேயே ‘வாடகைக்கு’ என்று போட்டால், கஷ்டப்பட்டு நடந்துவிடுவோம் என்னும் மத்யமரை பதமாகக் கறக்கும் லாவகம்.

நாள் முழுக்க செலவழித்த திருப்தியில் என் அம்மாவுக்கு ‘கிருஷ்ணருக்கு இப்படி ஒரு கோவில் எழுப்பலாமே!’ என்னும் எண்ணம் பிறந்தது. 55 நிமிட பாகவதம். கோபியருடன் ஓடப் பயணம், அசுரன்களுடன் பாவைக்கூடம் என்று விவரித்தார். கிழக்குக் கடற்கரை சாலையில் எழுப்பினால் மாயாஜாலுக்கு நல்ல போட்டியாக விளங்கும்.

அதை விட ரஜினிக்கு அருங்காட்சியகம் எழுப்பலாம். முக்கிய மைல்கல்களுக்கு பொம்மலாட்டம். பரிசல் காட்சியில் அபூர்வ ராகங்கள் தொடங்கி சிவாஜி சூப்பர் ஸ்டார் இசை பின்னணி. அம்பிகா போன்ற சந்தை இழந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு. இயக்குநர்களின் சொற்பொழிவு. கலைக்கூடம் என்பதால் அரசின் வரிச்சலுகையோடு அமர்க்களப்படுத்தலாம்.

சிவாஜியோ… சுதர்சனரோ…
என்னுடைய முதலீட்டாளர்கள் எங்கே?