வேதாள உலகம்
- 1948-இல் வந்த படம். ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் இயக்கம். பத்மினி நாட்டியம் ஆடி அறிமுகமான முதல் தமிழ் படம்.
- ‘உன்னாலே உன்னாலே’வில் நாயகன் பிற மாந்தருடன் சல்லாபிப்பதை, நாயகி ஒட்டுக் கேட்பது போல் காட்சியமைப்பு; இதில் அன்னையின் இறைவேண்டுதலை நாயகன் ஒட்டுக் கேட்டுவிடுகிறார்.
- ‘இம்சை அரசன் புலிகேசி’ போல் அணுகுண்டு, அராஜக அரசு என்னும் சமகால நிகழ்வுகளைப் பொருத்தமாக நுழைத்திருக்கிறார்கள்.
- நாயகி கனவு கண்டால் கூட தானே டூயட்டில் நுழையாமல் ‘குமாரி கமலா’ ஆடுகிறார்
- ‘ராசாக்குட்டி’ என்று கிண்டலாக அழைப்பது இந்தப் படத்தில்தான் துவங்கியதா என்று தெரியவில்லை
- அம்சமான திரைக்கதை. பில்லா எல்லாம் தூசி தட்டுவதற்கு பதில், இந்த மாதிரி ‘க்ளீன் எண்டெர்டெயினர்’ மறுபதிப்பாக்கலாம்.
- எளிமையான் நகைச்சுவை. தற்கால ‘கனிமொழி’ அரசியல் கூட காமாலைக் கண்ணர்களுக்குத் தட்டுபடலாம் 🙂