Tag Archives: War

அஞ்சனி

நல்ல சிறுகதை என்பது நல்ல நாவலைப் போல. முழு வாழ்க்கையையும் உணர்த்தும்.

நியு யார்க்கரில் லாரா (Lara Vapnyar) எழுதிய Siberian Wood அந்த ரகம்.

கதை எதைப் பற்றியது?

அ) திருமணம்; விவாகரத்து; மறுமணம் என்னும் சுழற்சியில் எவ்வாறு சிக்குகிறார்கள்?

I was too focussed on the struggles of motherhood at that age to see the magnitude of suffering that childlessness could cause. I’d spend hours discussing with other young mothers how tied down we felt. It was so much easier to list the hardships of having a child than to pinpoint the things that made it worthwhile. What was it that made it worthwhile, anyway? It was not about being fulfilled, no, though it was about being full—full of care, full of worry, full of affection, full of a love so great and pressing that it was almost indistinguishable from pain, full of something heavy and real that made you feel grounded, rather than weightless. You felt more there. That was precisely what Daria desperately wanted—to feel rooted, securely tied down.

ஆ) அமெரிக்காவில் குடிபுகுவதற்காக காதல் பாவ்லா கல்யாணம் செய்யும் வந்தேறி நிலைமை என்ன?

He was in awe of New York City—the streets, the buildings, the traffic, the people, the energy, the art! The Met was just stunning, especially the wooden sculptures made by the Asmat people. They were breathtakingly complex—it was as if tree roots were growing out of a person’s body, connecting her to her ancestors, who had roots growing out of their bodies, too, connecting them to the deeper past, and it went on and on. It was a brilliant way to show continuity of life, to hint at immortality.

இ) எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் டாரியா (Daria), குழந்தையைப் போன்ற பேரெல்லை இலட்சியக் கனவாக, எவ்வாறு எல்லாவற்றிலும் முழுமையை எதிர்பார்த்து நிராசையை எதிர்கொள்கிறாள்?

Mark thought that there was something silly and artificial about Daria’s fantasies. As if she had no idea what a family was or how it operated but took her clues from children’s picture books.

ஈ) நெகிழ்ந்து வளையும் நாணலையும் நெடிந்து தனித்து நிற்கும் பனை மரத்தையும் கடற்கரையில் பார்ப்போம். வாழ்வில் இணைத்தால்?

She was vegetarian and knew her way around vegetables, often using ingredients that Mark hadn’t even heard of, like kohlrabi or Japanese turnips or chicory.

உ) நிச்சயமின்மையை எண்ணிப் பார்த்து விளையும் பயங்களைக் கண்டு அஞ்சி நடுங்கி எலிவளையத்துக்குள் சிக்குறுகிறோமா? அடுத்த வேளை எங்கு இருப்போம், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், இன்னொருவருடன் ஓப்பிடாமல் — இலக்கை அடைய உயரப் பறக்கும் பட்டாம்பூச்சியாக பறந்து திரியலாமா?

There was a photo of Daria in the middle of a sea of volcanic ash, kneeling over a puny tree. She had her head cocked to one side, and her self-conscious smile suggested that she knew some people might find her endeavor ridiculous, like that of a child “planting” a stick in the sand. And yet she was doing it anyway. There was something inspiring in her insistence on continuing to try when most people would have given up, in her ability to preserve hope, no matter how absurd it was.

வாரயிறுதி விருந்தில் கதை ஆரம்பிக்கிறது. அந்த சந்திப்பில் நமக்கு கதாமாந்தர்கள் அறிமுகம் ஆகிறார்கள்.

துள்ளலான துவக்கம். தொடர்ந்து வாசிக்க வைக்கும் ஆர்வம். நடுநடுவே அருங்காட்சியக விமர்சனம்; கலையரங்க நையாண்டி; பலான விஷயம்; சுவையான தகவல் சரடு. எல்லாவற்றையும் விட சம்பவங்களினால் கோர்க்கும் லாவகம். இருபதாண்டு கால விஷயங்களை பத்து பக்கங்களில் பசுமையாகத் தரும் சாமர்த்தியம்.

தமிழ்ச் சிறுகதைகளோடு ஒப்பிடாமல் இருக்க முடியவில்லை.

நீதி போதனை இல்லை. “இது மட்டுமே சரி!” என்னும் தீர்ப்புகள் இல்லை. வட்டார வழக்கு ஜாலங்கள் இல்லை. கேள்விகளை எழுப்பி, பக்கத்து வீட்டு மனிதர்களை உணர்த்தி, உக்ரெயின் – ரஷியா போரையும் நினைவிற்குக் கொணர்ந்து, நீண்ட நாள் நினைவில் தங்கும் குணச்சித்திரங்களை சிந்தையில் தேக்கும் ஆக்கம்.

கச்சிதம்.

IPL, LPL, LTTE, IPKF – T20 and Team Names

பத்து வயதிருக்கும். வீட்டில் எதையும் படிக்கும் சுதந்திரம். அந்த அட்டை கிழிக்கப்பட்ட நூல் வாசிக்கக் கிடைத்தது. ரஜினியின் படமான ‘தர்ம் யுத்தம்’ போல் அந்த 1983 கொலைகாரர்கள், கறுப்பு ஜூலை அராஜகவாதிகள் எல்லோரையும் தீர்த்துக் கட்ட எவராவது பிறக்க மாட்டார்களாக என மனம் துடிதுடிக்க வைத்த புத்தகம். கற்பனையில் பல்வேறு சண்டைகளை எண்ணிப் பார்த்து சமாதானம் அடைவேன்.

இன்றைய காலகட்டத்தில் இலங்கை பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் நடத்துகிறது. அதற்கான அணிகளின் பெயர்களில் இயக்கங்களின் பெயரைப் போட்டால் எப்படி இருக்கும்!?

இலங்கையில் இருக்கும் தமிழருக்கான சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இயக்கங்கள் செயல்பட்டன. ஈழ இயக்கங்களில் புகழ்பெற்றவற்றின் பெயர்கள் (அகரவரிசைப்படி):

1. ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எஃப். – Eelam National Democratic Liberation Front (ENDLF))
2. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) (Eelam People Democratic Party (EPDP))
3. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பிஆர்.எல்.எஃப். – Eelam People’s Revolutionary Liberation Front (EPRLF))
4. ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம் (ஈரோஸ் – Eelam Revolutionary Organization of Students (EROS) – ஈ.ஆர்.ஓ.எஸ்.)
5. தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்.டி.டி.ஈ – Liberation Tigers of Tamil Eelam (LTTE) – எல்.ரி.ரி.ஈ.)
6. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (ப்ளாட் (அ) புளொட் – People’s Liberation Organization of Tamil Eelam (PLOTE) – பி.எல்.ஒ.டி.ஈ.)
7. தமிழீழ விடுதலை இயக்கம் (டெலொ (அ) ரெலா – Tamil Eelam Liberation Organization (TELO) – டெலோ)
8. தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் (டி.எம்.வி.பி. – Tamileela Makkal Viduthalai Pulikal (TMVP))
9. தமிழர் விடுதலைக் கூட்டணி (அரசியல் கட்சி) (டுல்ஃப் (அ) ரி.யு.எல்.எப் – Tamil United Liberation Front (TULF) – டி.யு. எல்.எஃப்)

இலங்கை ப்ரீமியர் லீக் எல்.பி.எல் டி20 அணிகளின் பெயர்கள்:

1. Colombo Strikers – கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் என்பதற்கு பதில்: கொழும்பு கொமாண்டோக்க‌ள்
2. Dambulla Aura – டம்புல்லா ஆரா என்பதற்கு பதில்: தம்புள்ளை துள்ளர்கள்
3. Galle Titans – கேலே டைட்டன்ஸ் என்பதற்கு பதில்: கல்லே கெரில்லாக்கள்
4. Jaffna Kings – ஜாஃப்னா கிங்ஸ் என்பதற்கு பதில்: யாழ்ப்பாண புலிகள்
5. B-Love Kandy – கண்டி பி-லவ் என்பதற்கு பதில்: கண்டி கழுகுகள்

இன்னும் ஆர்வமாக இலங்கை டிவெண்டி 20 பார்ப்போமோ?

குரங்கில் இருந்து பிறந்து…

ape:
வினைச்சொல்:
மற்றவரைப் போல் நடி; குறிப்பாக – சிந்திக்காமலோ பொருளற்ற நகைப்புக்கிடமான அறிவுகுறைந்த வகையில் நடத்தைகளை கண்மூடித்தனமாகப் பின்பற்று.
ஒத்தச்சொல்: கண்டுபாவித்தல், விகடன், ஒற்றிப் பிரதியெடுத்தல், கிளி, இன்னொருவரின் செய்கையை கண்டுசெய்தல், பகடி, பரிகசித்தல்

இது நம்முடைய அர்த்தம். ஒன்றைக் கண்டு பிரதிபலித்தலை ‘ஏப்’ (ape) என்கிறோம். அகரமுதலியில் ‘ஏப்’ எனத் தேடினால், பாவித்தல், பாசாங்கு செய்தல், கிளிப்பிள்ளை போல் யோசிக்காமல் பிரதிபலித்தல் என அர்த்தம் சொல்கிறார்கள்.

ஆனால், அறிவியல் ஆராய்ச்சியின் படி பார்த்தால் ஒரு விஷயத்தைக் காண்பித்தால் மனிதக் குரங்கு அதனை நினைவில் வைத்திருக்கிறது.  வெறுமனே கண்ணாடியாக புத்தியில்லாமல் பிரதிபலிப்பதில்லை. அந்தச் செய்கையை வருங்காலத்தில் எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு செயலையும் நினைவுகூர்ந்து அதற்கேற்ப தன் கண்ணோட்டத்தைச் சொல்கிறது. சொல்லையும் அதற்கேற்ற செய்கையையும் அந்த செய்கையின் பின் விளைவுகளையும் நினைவில் நிறுத்திக் கொள்ளும் குரங்குகள், சிந்தித்த பின் செயல்படுகிறது. நான் கூட இவ்வளவு நிதானமாக என் தரப்பின் செய்கைகளுக்கு, யோசித்து நிதானமாகச் செயல்படுவதில்லை

செய்தி: Great Apes Make Anticipatory Looks Based on Long-Term Memory of Single Events: Current Biology

கொரில்லாக் குரங்கு மட்டுமல்ல… நாய் கூட ஆயிரக்கணக்கான வார்த்தைகளைக் கற்றுத் தேர்ந்திருக்கிறது. நாம் சொல்வதைப் புரிந்து கொள்கிறது. நம்மிடம் பதிலுக்கு பதில் உரையாடாமல், நாம் சொல்லும் வார்த்தையை வைத்து, அது ஒரு பொருளா அல்லது வினைச் சொல் கட்டளையா என பகுக்கத் தெரிந்திருக்கிறது. நாம் உரைப்பது – பந்தா, எந்த நிறப் பந்து, அல்லது எந்த பொம்மை என்று புரிந்து கொண்டு, அதற்கேற்ப ஈடு கொடுக்கிறது: What a Border Collie Taught a Linguist About Language | WIRED

மொழி எவ்வாறு உருவானது? கபிகள் பேசுமா? சைகை மொழியை சிம்பன்ஸிக்கு எப்படிக் கற்றுத் தருவது? மிருகங்களை சுதந்திரமாக வாழவிடாமல், நம் கண்காட்சிக்கென, விலங்கியல் பூங்காவில் அடைத்து வைப்பது தகுமா? அவற்றின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்து கொள்கிறேன் என்னும் சாக்கு சொல்லி, வீட்டிற்குக் கொண்டு வந்து தத்துவவியல் விஞ்ஞானியோ அறிவியல் ஆய்வாளரோ ஆராயலாமா?

இந்தக் கேள்விகளுக்கு பதிலாக அல்லது நீட்சியாக இந்த ஆராய்ச்சியை படிக்கலாம்: There is a moral argument for keeping great apes in zoos | Aeon Ideas

இதெல்லாம் மிருகங்களைப் பற்றின செய்திகள். மனிதனுக்கு ஆறறிவு இருக்கிறது. அவனுக்கும் இந்த மந்தைக் கூட்டத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் உறுமுவது எனக்குக் கேட்கிறது. உங்களுக்கு ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறேன்.

நடிகர் சூர்யாவின் உயரம் 5′ 7″
நடிகை அனுஷ்காவின் 5′ 10″
சிங்கம் படப்பிடிப்பில் ஸ்டூல் போட்டார்களா அல்லது சூர்யாவிற்கு ஹை- ஹீல்ஸ் செருப்பு கொடுத்தார்களா என்பதை பட்டிமன்றத் தலைப்பாக்கலாம். இது மிருகத்தின் சுபாவம். மண்டியிட வைப்பது மன்னனின் சுபாவம் என்றால், ஆண்மகனுடன் டூயட் பாடும் காதலி தாழ்தளத்தில் நின்று சிருங்கார ரசம் முகத்தில் கொணர வேண்டும் என்பது சினிமா சுபாவம்.

அது சினிமா. நிஜமல்ல. அதைக் கூட விட்டுவிடலாம். நீங்கள் தற்படம் (செல்ஃபீ) எடுப்பதையும் அது எவ்வாறு நம் முன்னோரின் குணநலனோடு ஒத்துப் போகிறது என்பதையும் எவ்வாறு ஒவ்வொரு சுய புகைப்படத்திலும் உங்களின் விலங்கு மனோபாவம் வெளிப்படுகிறது என்பதையும் இங்கே ஆராய்கிறார்கள்: The Psychology of Selfies | Psychology Today

இது தற்கால ஆராய்ச்சி. கொஞ்சம் சங்க காலத்திற்குச் செல்வோம். தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் சொல்லும் பேரிலக்கியம் என்ற பெருமை கொண்டது. குமரி முனையிலிருநது இலங்கைக்குக் குரங்குப் படைகள் அணை அமைத்தன என்று மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலையில் கூறுகின்றார். அதில், ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய பாட்டில்:

பழ வினைப் பயத்தான் பிழை மணம் எய்திய
எற்கெடுத்து இரங்கி தன் தகவு உடைமையின்
குரங்கு செய் கடல் குமரி அம் பெருந் துறைப்
பரந்து செல் மாக்களொடு தேடினன்
– (மணிமேகலை 5133 – 38)

குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறை-குரங்குகளாலே இயற்றப்பட்ட திருவணையையுடைய கடலின்கண் அமைந்த பெரிய புண்ணியத் துறையாகிய கன்னியாகுமரித் துறையில் ஆடுதற் பொருட்டு என்பது பொருள். குரங்கு செய்கடல் என்றது தென்கடலை அறிவிக்கிறது. குமரி என்பது கன்னியாகுமரியைக் குறிக்கிறது.

”நம் உலகத்தில் இரு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்: ஒருவர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் என்பவர்; இன்னொருவர் உலகை இரண்டாகப் பிரிப்பவர்கள்.” என்பதற்கேற்ப, 1968ல் முதன் முதலாக ‘பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ படப்பிடிப்பு நடத்தியபோது அந்த சம்பவம் நடந்தது. திரைப்படத்தில் இரு தரப்பினருக்கு இடையே போர் நிகழுமாறு காட்சியைப் படமாக்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு தரப்பில் கொரில்லாக்கள். அவர்களுக்கு எதிராக குரங்குகளாக ஆயிரக்கணக்கான துணைநடிகர்கள் போர் புரிந்தார்கள். இடைவேளை வந்தது. கொரில்லாவாக வேஷம் கட்டியவர்கள் எல்லோரும் ஒரு பக்கம் சேர்ந்து உணவு உட்கொண்டார்கள். அதன் எதிர்ப்புறம் குரங்காக வேடம் தரித்தவர்கள் கொரில்லா வேஷதாரிகளிடம் இருந்து விலகி தனியே உணவு உண்டார்கள். நாம் எங்கே பார்த்தாலும் பேதம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இனம், மதம், பூர்விகம், நிறம், பிறப்பிடம், மொழி, உடலமைப்பு, பால், மொழி, வசிப்பிடம், வேலை, பணம், வயது… எண்ணற்ற வகைகளில் நம்மவர்களைத் தேர்ந்தெடுக்கிறோம்: Why Your Brain Hates Other People: And how to make it think differently – Overcoming Us vs. Them

’பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்’ வரிசைப் படங்கள் இதையெல்லாம் சற்றே நீட்டித்து அறிவியல் புனைவாக, கற்பனை செய்து பார்க்கின்றன:

இந்த ஜூலை மாதம் ”வார் ஃபார் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்” வெளிவந்தது. சமீபத்தில் தூசி தட்டி மீண்டும் இந்த குரங்கு சாம்ராஜ்யத்தை படமாக்கத் துவங்கிய பிறகு, வரும் மூன்றாம் படம் இது. இந்தப் படத்திலும் குரங்குகள் பேசுகின்றன. மனிதர்கள் மெதுவாகப் பேச்சை இழந்து வருகிறார்கள். மனிதனின் அறிவியல் ஆற்றல் அவனின் அழிவிற்கு இட்டுச் சென்றிருக்கிறது. சண்டை ஆயுதங்களைக் கொண்டு ஒருவரையொருவர் கொன்று குவிக்க தொழிநுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்தும் வர்க்கமாக மானுடம் சித்தரிக்கப்படுகிறது. குடியுரிமைக்காகக் குரங்குகள் குரல் எழுப்புகின்றன. சம அந்தஸ்துடன் வாழாவிட்டாலும், தங்களின் காட்டில், ஒரு மூலையில் ஒதுக்குப்புறமாக, மனிதனின் நகரங்களுக்குள் வராமல் ஒளிந்து வாழப் போராடுகின்றன.

2011-ல் முதல் பகுதி வந்தது – ஏற்றம்: rise
2014-ல் இரண்டாம் பகுதி வெள்ளித்திரையில் வெளியானது – வைகறை: dawn
இந்த வருடம் இறுதி பாகம் – யுத்தம்: war

ஹாலிவுட் மசாலப் படங்களைப் பார்க்கும்போது மூளையைக் கழற்றிவைத்து விட்டு பார்ப்பது உங்களின் அறிவிற்கு குந்தகம் விளைவிக்காது. அதற்காகவே இந்தக் கட்டுரையின் துவக்கத்தில் இந்தப் படம் நிஜத்திலேயே நடக்கும் என்னும் தோற்றமயக்கத்தை ஏற்படுத்தும் உண்மைச் செய்திகளைப் பகிர்ந்து கொண்டேன். அந்தச் செய்திகளைப் போல் இந்தப் படமும் படு தீவிரமாக குரங்குகளின் ராஜாங்கத்தை விளக்குகிறது. வந்தியத்தேவனை குதிரையில் கற்பனை செய்த எனக்கு, ஒராங்குட்டான் அதே குதிரையை ஓட்டுவதை திரையில் பார்க்கும்போது மெல்லிய சிரிப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. எனினும், இந்தப் படமும் முந்தையப் படங்கள் போலவே வெறுமனே கேலி செய்து ஒதுக்க முடியாதபடி யோசிக்கவும் வைத்தன.

அது எப்படி சாத்தியமாகிறது?

முதலில் சீஸராக நடித்தது மனிதன். அவர் பெயர் ஆண்டி செர்கிஸ். கோச்சடையான் படத்தின் ரஜினி போல் நிழல் உருவமாக உயிர் கொடுக்கிறார்.

இரண்டாவதாக படத்தின் துவக்கக் காட்சியில் “விவேகம்” அஜீத் போல் சீஸர் அறிமுகம் செய்யப்படுகிறார். போரில் வெற்றியை அடைகிறார். அதன் பின் ஒவ்வொரு விதமான குரங்கும் அவர் வரும் வழிவிட்டு விலகி, வணக்கம் செலுத்தி, மரியாதையையும் தலைவன் என்னும் மதிப்பையும் உணர்த்துகின்றன. அதன்பின் வரும் இரண்டரை மணி நேரமும் சீஸரின் பார்வையிலேயே கதை சொல்லப்படுகிறது. சீஸர் எவ்வாறு தன் குடும்பத்தை இழக்கிறது என்பதில் துவங்கி, மனிதன் போல் கோபம் தலைக்கேறி பழிவாங்கும் வெறி தலைதூக்குவதிற்குச் சென்று, கடைசியில் சிறைபிடிக்கப்பட்டு, தப்பிக்க யோசிப்பது வரை எல்லாம் சீஸர். ”அபாயம் தவிர்த்துத் தடுத்தாட் கொண்டருள்வாய்; நிழல் வெயில் நீர் நெருப்பு மண் காற்று வானதிலும் பகைமையை அகற்றி அபயமளித்திடுவீர் உணர்விலே ஒன்றி என்னை நிர்மலமாக்கிடுவாய்; யான்/எனது அற்ற மெய்ஞ்ஞானமது அருள்வாய் நீ” என சீஸர் குரு கவசம் பாடாத குறையொன்றுதான் படத்தில் பாக்கி.

சக மனிதர்களைக் கொல்லத் துடிக்கும் கர்னல் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் தன் சக உயிர்களைக் காத்து பேண நினைக்கும் சீஸர். சாதாரண மாஸ் ஹீரோ படத்தில் கர்னலை வில்லன் என்று நிலைநிறுத்துவார்கள். இந்தப் பக்கம் சீஸரை தலைவராக, அதிநாயகராக உயர்வு நவிற்சியில் அமிழ்த்துவார்கள். கர்னலின் ஒரு கொடூரச் செய்கையைக் காட்டிவிட்டு; அதற்கு மாற்றாக சீஸரின் உன்னதமான பதிலை காட்சியாக நிறுத்துவார்கள். அப்படியெல்லாம் அல்பத்தனம் இந்தப் படத்தில் இல்லை. சீஸர் கம்பியெண்ணுகிறாரா… நாமும் கூண்டில் இருக்கிறோம். சீஸர் பிரம்படி வாங்குகிறாரா… நமக்கும் ரத்தம் வருகிறது. சீஸர் மண் சுமக்கிறாரா… நமக்கு பாரம் அழுத்துகிறது. கையாலாகவராக சீஸர் இருக்கிறாரா… நமக்கும் அடுத்து எப்படி அவரின் நண்பர்கள் யோசிப்பார்கள்; எவ்வாறு தைரியமாக செயலில் இறங்குவார்கள், அதில் எவ்வளவு வெற்றி பெறுவாரகள் என்பதெல்லாம் அவ்வப்போதுதான் தெரிகிறது.

படத்துவக்கத்தில் குரங்கிற்கு கோபம் வந்தால் மனிதத்தன்மையை இழக்குமா என்பது கேட்கப்படுகிறது. மனிதத்தன்மை என்பதை மன்னித்தருள்வது என்று பார்க்கிறேன். மனிதனே காருண்யத்தை விட்டுவிட்டு ஒரு கண்ணிற்கு இரண்டு கண் என்று பிடுங்கிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. எனவே, ஆத்திரம் அட்டுமீறினால், மனிதன் குரங்காவானா? கொஞ்சம் நேரம் கழித்து சூதானம் திரும்பியவுடன் குரங்காக நடந்தவரை மனிதனாகக் கருதலாமா?

ஸ்காட் எஃப் ஃபிட்ஸ்ஜெரால்ட் மொழியில் சொல்வதனால்:

“முதல் தரமான புத்திசாலித்தனத்திற்கான சோதனை எதுவென்றால் – மண்டைக்குள் எதிரும் புதிருமான இரு கருத்துகளை மோதவிட்டுக் கொண்டிருந்தாலும், செயல்பாட்டில் எந்த சுகவீனமும் இல்லாமல் இருத்தல்”

நம் சிந்தனையை நாம் இழந்தால் அப்போதும் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வோமோ? மொழி என்னும் பேசும் சக்தியை ஏதோவொரு கொடிய வியாதி தாக்கி கொள்ளை போய்விட்டால், அப்போது எப்படி யோசிப்போம்? மனிதனோடு வளர்வதால் உரையாடும் சக்தி பெற்ற குரங்கு, தன் சொந்த பாஷையான ஊளை சத்தத்தை மறந்து விடுமா? ஆந்தை அலறும், யானை பிளிறும் என்பது போல் குரங்கு அலப்பும் என்பது மரபு. விலங்கியல் பூங்காவில் வளரும் குரங்கு சகமாந்தர் போல் பேசினால் மனிதர் எனக் கருதலாமா?

பாகுபலி போன்ற மெகா பட்ஜெட் இந்தியப் படங்களில் வரும் கிராஃபிக்ஸ் யானைகளைப் பார்த்தால் கேலிச் சித்திரங்கள் போல் விழுந்து விழுந்து விலா நோக சிரிக்கவைக்கின்றன. ஆங்கிலப் படங்களில் இந்தக் குறை கிடையாது. செய்வதை செவ்வனே சிறப்பாகச் செய்கிறார்கள். அரைகுறை வேலை கிடையவே கிடையாது. அந்தக் குரங்கு பேசினால் வாயசைப்பு முதல் உடல் மொழி வரை மனதில் நம்பவைக்கும்படி இருக்கிறது. அதன் கண்ணில் அப்படியொரு தீவிரம். அதன் முகத்தில் தலைமைப் பண்பு. தோள் அசைவில் ”முதல்வனே வனே வனே வனே வனே முதல்வனே வனே வனே வனே” என முழங்க வைக்கும் பாவம். குரங்குகள் அழுதால் நானும் கிட்டத்தட்ட பரிதாபம் கலந்த சோக மனநிலைக்குச் செல்கிறேன். அந்த ஜந்துக்கள் மனிதரைப் போல் தன்னைத் தானே ஆராய்ந்து அலசி சுய பகுப்பாய்வு செய்தால், அப்படித்தானே ஒருவர் தன் வாழ்வின் முடிவுகளை ஆராய்வார் என எண்ணுகிறேன்.

அதை சிறைப் பிடித்து குரங்கைக் கூண்டில் அடைத்தால், ஏதோ தப்பாக செய்வதாக உணரவைப்பதில் திரைக்கதாசிரியரும் மாயாஜால வடிவமைப்பாளரும் வாகை சூடுகிறார்கள். குரங்குகளும் மனிதர்கள்தானே என தோன்றவைப்பதில் இந்தத் திரைப்படம் வெற்றியைடைகிறது.

அடுத்த படத்தில் டிவிட்டரில் 140 எழுத்துகளுக்குள் தன் கருத்தை வெளிப்படுத்தி, “ஓவியா ஆர்மி”யை உருவாக்கும் என தோன்றவைப்பதில் பிக் பாஸ் யார் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. அப்போது நான் மரம் விட்டு மரம் தாவிக் கொண்டிருப்பேன்.

போரும் அரசியலும்: ரத்தசரித்திரம்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். உலக வர்த்தக மையத்தை இடித்த தாலிபான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துகிறது. அப்படியே, சும்மா கொஞ்சம் மகாபாரத புராணக் கதை.

துரோணருக்கு முன்பு பாண்டவர்களுக்கு ஆசிரியராக, குருவாக இருந்தவர் கிருபர். கிருபருடைய சகோதரி கிருபியை, துரோணருக்கு மணம் செய்வித்தார்.

கிருபர், கௌரவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். துரியோதனனிடம் நன்றியுடன் வாழ்ந்து வந்த அவர், மகாபாரதப் போரில் கௌரவப் படையின் 11 படைத்தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார். அர்ஜுனன் மகன் அபிமன்யுவை தீர்த்துக் கட்டியவர்களில் முக்கியாமானவர்.

கிருஷ்ணரின் சதியால் அசுவத்தாமாவை படைத் தளபதியாக நியமிக்கவே இல்லை. மகாபாரதப் போரின் இறுதியில் எஞ்சிய கௌரவர்களுள் கிருபர், கிருதவர்மன், அஸ்வத்தாமா ஆகிய மூவரே. மூவரும் பாண்டவர்கள் அடைந்த வெற்றிக்குப் பிறகு, துரியோதனனின் வீழ்ச்சியால் மனம் கொதித்திருந்தார்கள். அஸ்வத்தாமா, பாண்டவர்களை வேரோடு அழிக்க நினைத்தான்.

கிருபர், அவனுக்குப் பல அறிவுரைகளைக் கூறினார். கிருஷ்ணரின் சகாவான கிருதவர்மா என்ற யாதவ குல மன்னரும் அவ்வாறே கூறினார். ஆனால் கிருபரின் யோசனையை அஸ்வத்தாமா ஏற்கவில்லை. அஸ்வத்தாமா கிருபரின் உடன் பிறந்த கிருபியின் மகன். துரோணருக்கு முன்பே அஸ்வத்தாமன் கருத்தரிப்பு நடந்துவிட்டது.

அஸ்வத்தாமா இரவோடு இரவாக பாண்டவர்களின் பாசறை நோக்கிச் சென்ற போது, கிருபரும், கிருதவர்மனும் உடன் சென்றார்கள். அஸ்வத்தாமா பாசறைக்கு உள்ளே சென்றபோது, கிருபர், கிருதவர்மன் இருவரும் பாசறையின் முன்வாசலில் ஒருவரும், பின்வாசலில் ஒருவருமாக காவலுக்கு நின்றார்கள். பாஞ்சாலியின் புதல்வர்களையும் திருஷ்டத்யும்னனையும் கொன்ற பிறகு, மூவரும் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்று இந்தச் செய்தியைக் கூறிய பின்பே துரியோதனனின் உயிர் பிரிந்தது.

கிருபர் ஹஸ்தினாபுரத்தில் அனைவராலும் போற்றத்தக்கவராக வாழ்ந்தார். அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்து இளவரசனுக்கு கிருபரே, ஆசாரியராக இருந்து அஸ்திர வித்தைகளைக் கற்றுத்தந்தார்.

மேரி என்றால் மன்னிப்பு; மேற்கு என்றால் ஆக்கிரமிப்பு

பிரித்தாளும் சூழ்ச்சி என்பதை பிரித்தானியர் இன்றளவும் விடவில்லை என்பதற்கு நல்ல உதாரணம் வடக்கு அயர்லாந்து.

பெல்ஃபாஸ்ட் நகரின் கத்தோலிக்கர்களுக்கும் புரோட்டஸ்டண்டுகளுக்கும் நடுவே சுவர் எழுப்புவதை சரித்திர பின்னணியில் விவரிக்கிறது: The American Scholar: Belfast: City of Walls – Robin Kirk

இங்கிலாந்தின் அங்கமாக இருப்பதை கத்தோலிக்கர்கள் விரும்பவில்லை. அரசி ஆளும் யுனைடெட் கிங்டம் கீழே இருப்பதை ப்ரோட்டஸ்டண்ட்டுகள் விரும்புகிறார்கள். இரு சாராரும் அடித்துக் கொண்டு சாகாமல் இருப்பதற்காக பெரிய தடுப்பு அரண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.

எல்லாம் இரண்டு மயம். பக்கத்து பக்கத்து தெருக்களில் தனித் தனி மருத்துவமனை. ஒரே சாலையின் இரு புறங்களில் இரண்டு பாடசாலைகள். காசு விரயம் ஆகிறதே என்று இங்கிலாந்து மாளிகையின் அரச குடும்பம் லண்டனில் இருந்து கவலை கொண்டிருக்கிறது.

1984ன் ஞாயிறு காலை. தேவாலயத்தின் வாசல். திருப்பலி முடிந்து வெளியே வருகிறார் அரசு மெஜிஸ்திரேட்டின் மகள். எதிர் அணிக்கு அப்பா வேலை செய்ததற்காக கொலை செய்கிறார் மேரி மெகார்டில். குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக்கு சிறை செல்கிறார் மேரி. சில வருடம் முன்பு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் அரசாங்கத்தின் உயர் பதவியில் அமர்கிறார் மேரி. அந்தக் கொலையை கேட்டால் ‘துன்பியல் நிகழ்வு’ என்கிறார் மேரி.

Dalit leader of Tamil Nadu Pasupathi Pandian, the founder of Marutham Makkal Munnetra Kazhagam party is Dead


தேவேந்திர குல கூட்டமைப்பு தலைவர் பசுபதிபாண்டியன், இன்று இரவு 9 மணியளவில் திண்டுக்கல் பக்கம் நந்தவனப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் 3 பேர் கொண்ட மர்ம நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது.

இவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கமுள்ள தாளமுத்து நகர். இங்குதான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு குண்டு வீசியும், வெட்டியும் கொல்லப்பட்ட இவரது மனைவி வழக்கறிஞர் ஜசீந்தா பாண்டியன் உடல் அடக்கம் செய்யப்பட்டு சமாதி வைக்கப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டு, அந்த பெயரில் தனிப்பட்டியல் உருவாக்க வேண்டுமென தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் இவர் வலியுறுத்தினார்.

பசுபதி பாண்டியன், தென்தமிழகம் நன்கு அறிந்த தலித் சமுதாய தலைவர். ஆரம்பத்தில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் இணைந்து செயல்பட்டவர். அம்மன்புரம் வெங்கடேச பண்ணையாருடன் (திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சர் ராதிகா செல்வியின் கணவர்) ஏற்பட்ட மோதல்களின் காரணமாக திண்டுக்கல் சென்ற இவர், கடந்த சில வருடங்களாகவே, மீண்டும் தென் மாவட்டங்களில், தனது சமுதாய நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வந்தார். பல்வேறு அரசியல் ரீதியான போராட்டங்கள், உண்ணாவிரதம், பொதுக்-கூட்டம் என்று தலித் சமுதாய மக்களின் கவனத்தைத் தன்பால் மீண்டும் திருப்பிவிட முயன்றார்.

Video taken in Nakkasalem_perambalur district: Dhevendra kula vellaalar commuinty board and flag hosting with Maaveeran. Pasupathi Pandian on 22.08.2010.

தேவேந்திர-குல வேளாளர் கூட்டமைப்பு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, ராம-நாதபுரம், சிவகங்கை, திருச்சி ஆகிய 7 தொகுதிகளில் ஜாதி செல்வாக்குடன் இருக்கிறது.

தியாகி இமானுவேல் சேகரனின் நினைவுநாளை தமிழ்ச் சமூகங்களின் சமத்துவ நாளாக அரசு அறிவித்து ஆண்டுதோறும் விழா நடத்த வேண்டும் என்றும் பசுபதி பாண்டியர் போராடினார்.

சி. பசுபதி பாண்டியன் பேச்சில் இருந்து:

“எங்களுடை பூர்வீகத் தொழில் விவசாயம். இந்தியாவில், தமிழகத்தைத் தவிர விவசாயம் செய்யும் மக்களை யாரும் எஸ்.சி. என அழைக்கவில்லை. எங்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை.

எங்களுடைய மக்கள் தொகையைக் கணக்கிட்டு விகிதாசார அடிப்படையில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழன் என்ற மரியாதையை எங்களுக்கு வழங்கினால் போதும். பல்வேறு ஜாதிக் கலவரங்களால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மிகவும் இழப்புகளைச் சந்தித்து விட்டோம்.

தில்லியில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும், ஆதிதிராவிடர் பட்டியலிலிருந்து எங்களுடைய தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை நீக்காவிட்டால், ஒரு லட்சம் பேர் இஸ்லாத்துக்கு மாறுவதைத் தவிர வேறுவழியில்லை.

தமிழகத்தில் பல இடங்-களில் ஜாதிக் கலவரத்திற்கு கிருஷ்ணசாமிதான் காரணமாக உள்ளார், மதுரை உத்தம-புரத்தில் நடந்த கலவரத்தில் சுரேஷ் என்ற வாலிபர் துப்பாக்கிச் சூட்டில் இறந்து போனார். மாஞ்சோலை பிரச்னைக்காக கிருஷ்ணசாமி நடத்திய ஊர்வலத்தில், 17 பேர் இறந்து போயினர். அங்கு ஏற்பட்ட கலவரத்தால் தலித் மக்களுக்கு என்ன லாபம்? இலங்கைத் தமிழர் பிரச்னை பற்றி எரியத் தொடங்கிய நேரம் அதனை சற்றுத் திசை திருப்பவே அந்தக் கலவரம் பயன்பட்டது.”

இராவணன் படப்பாடல்: அமெரிக்க கடன், போர், வர்த்தகம், நிதி தரம்

இந்த கடன எப்ப வந்து நீ கேக்கறே
என் சொகுசுக்குள்ள கேள்விக்குறிய நீ வெதச்சே

அடி நியூ புக்லாந்து பெரிசுதான்
சின்ன ஸ்கானர் உயரம் சிறிசு தான்
ஒரு கூகிள் தேஞ்சு பறக்குதடி
மொத்த புக்கும் நெட்டில் கிடைக்குதடி

சொத்தே போகுதே சொத்தே போகுதே
சொவ்வறைய நீ கொஞ்சம் சுழிக்கையில

அமெரிக்கன் தவிக்கிறன் அவிச்சத கேட்கிறன்
அஸ்திரத்த விடணும் உன் மேலே

அக்கரைச் சீமையில் நீயிருந்தும்
ஏரியலில் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்
அடிக்கடி ராணுவம் துடிக்குதடி

லிபியாவும் கியூபாவும் தூரம் தூரம்
ஒட்ட நினைச்சு ஆகல

டெமொக்ரட்ஸ் சொல்லும் நல்ல சொல்ல
டெவில் புத்தி கேட்கல

தனியா தவிச்சு ஆப்கானிஸ்தானில் தடம் கெட்டு திரியுதடி
தனியா குறுகி சீனா தள்ளிவிட்டு சிரிக்குதடி

இந்தச் சண்டைக் கிறுக்கு தீருமா
அடி ஹெல்த்கேர் விட்ட ஒபாமா மாறுமா

என் தேக்கத்தை தீர்த்து வச்சு வளருமா

லண்டனும் நியுயார்க்கும்
சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
டாலரும் யூரோவும்
இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(சொத்தே போகுது)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல
இந்தியாவும் பெர்சியாவும் தப்பிப் போகும் பணப்புழக்கத்தில

கத்தி காட்டி சதி போட்ட அரசருக்குள்ள
கத்தி குத்தில்லாத அரசாட்சியுமில்ல

எட்ட இருக்கும் சென்னையப் பார்த்து
இறக்குமதியாக்கிறது காரை
தொட்டு விடாத தூரம் இருந்தும்
பங்கோ வர்த்தகமோ போகல

கள்ளா காவியமா ஒரு பாகுபாடு தெரியலயே
கள்ளா இருந்தும் உடம்புல கிக்கு ஏறலியே

என் பாண்டும் ஒருநாள் சாயலாம்
என் மியூசியத்துல உன்பொருள் போகுமா

நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து கொலம்பசுக்குள்ள

லண்டனும் நியுயார்க்கும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே
டாலரும் யூரோவும் இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(சொத்தே போகுது)


அசல்

பாடியவர்– கார்த்திக், இர்பான்

இசை – A.R. ரகுமான்

படம் இராவணன்

இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்தே
என்புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்சே

அடி தேக்கு மரக்காடு பெரிசுதான்
சின்ன தீக்குச்சி உயரம் சிறிசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கடும் தேக்கு மரக்காடு வெடிக்குதடி

உசிரே போகுதே உயிரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

மாமன் தவிக்கிறன் மடிப்பிச்சை கேட்கிறேன்

மனசைத் தாடி என் மணிக்குயிலே

அக்கரைச் சீமையில் நீயிருந்தும்

ஐவிரல் தீண்டிட நினைக்குதடி

அக்கினி பழமென்று தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஒட்ட நினைச்சு ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய உடம்பு கேட்கல

தனியா தவிச்சு உசிர் தடம் கெட்டு திரியுதடி

தனியா குறுகி என்னை தள்ளிவிட்டு சிரிக்குதடி

இந்த மன்மத கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா

என்மயக்கத்தை தீர்த்து வச்சு மன்னிச்சிடுமா

சந்திரனும் சூரியனும்

சுத்தி ஒரு கோட்டில் வருகுதே

சத்தியமும் பத்தியமும்

இப்ப தலை சுத்திக்கிடக்குதே

(உசிரே போகிறதே)

இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதிசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்ட மனசுக்குள்ள

விதி விலக்கில்லாத விதியுமில்ல

எட்ட இருக்கும் சூரியன் பார்த்து

மொட்டு விரிக்குது தாமரை

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலயே

பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலயே

என் கட்டையும் ஒருநாள் சாயலாம்
என் கண்ணில உன்முகம் போகுமா
நாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணிருந்து மனசுக்குள்ள
(உசிரே போவுது)

ஆப்கானிஸ்தான் போர்

Surrender of Afghanistan police force to unarmed Taliban with glee in
Baghlan province :: Full Show: September 29, 2009 | Worldfocus (The segment starts at 11:33)

வீடியோவில் விரிவாக காண்பிப்பதன் செய்தி சுருக்கம்:

அமெரிக்க இராணுவத்திடம் இருந்து பயிற்சி பெற்ற போலீஸ்காரர்களையும் போர்வீரர்களையும் நம்ப முடியவில்லை. எழுபது ஆப்கானிஸ்தானிய படைவீரர்கள், வெறும் பத்து பேர் கொண்ட தாலிபானிடம் சரணடைகிறார்கள்.

இத்தனைக்கும் தாலிபேனிடம் இருந்து ஒரு துப்பாக்கி வெடிக்கவில்லை; குண்டு போடப்படவில்லை.

சாதாரணமாக, இந்த மாதிரி சரணாகதிகளுக்கு, கண்ணிவெடி போன்ற குண்டுவெடிப்புகள் காரணமாக இருக்கும். இங்கே அந்த மாதிரி எதுவும் இல்லை. தங்கள் துப்பாக்கி, இன்ன பிற ஆயுதங்களை வெகு சந்தோஷமாக அல்-க்வெய்தாவிடம் கொடுத்துவிட்டு, ஜீப்பில் ஏறி சென்று விடுகிறார்கள்.

இப்பொழுது இந்த திருட்டு வீடியோ வெளிப்பட்டது ஏன்?

1. நிஜமாகவே அல் – கெவெய்தாவிற்கு விசுவாசமானவர்கள். தாலிபான் இட்ட கோட்டைத் தாண்டாதவர்கள்.

2. ஊழல், லஞ்சம் மலிந்த நாடு. சோம்பேறிகள்… பொலிடிகலி கரெக்டாக சொன்னால், உல்லாசபுரிவாசிகள் அபப்டித்தான் பொறுப்பின்றி நடந்துகொள்வார்கள்.

3. ஊரான் வீட்டு அமெரிக்க நெய்; கடைத் தேங்காய்; வழியில் அல்லா. உடைக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் மேலும் படைவீரர்களை அனுப்பி வைக்குமாறு இராணுவத் தளபதி வெளிப்படையாகவும், வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களின் மூலமாகவும் அழுத்தமளித்து வருகிறார். அப்பொழுது, இந்த மாதிரிக் காட்சிகள் வெளியாவதால், உள்ளூர் காவலர்களின் லட்சணம் உலக அரங்கில் அம்பலமாகும்.

ஒபாமாவும் துணை ஜனாதிபதி பிடெனும் மேலும் மேலும் படை வீரர்களை குவிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆப்கானிஸ்தானே தன்னிறைவை எட்டவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர்கள். கடந்த ஆண்டில் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதை பராக் ஒபாமா வலியுறுத்தி வந்தார்.

இராக்கில் இருந்து முழுமையான படை விலகல். ஆப்கானிஸ்தானில் கொஞ்சம் ஆள் கூட்டப்படும். அதன் பின் முழுமையாக, வெகு சீக்கிரமாகவே அனைவரும் சொந்த நாடு திரும்புவார்கள். இதுதான் ஜனநாயகக் கட்சியின் தேர்தல் அறிக்கை.

ஜார்ஜ் புஷ்ஷும் டிக் சேனியும் பதவியிறங்கிய பின் சோகத்தில் ஆழ்ந்த Military Industrial Complexம் இப்பொழுது சுறுசுறுப்பாக இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட விரும்பும்.

Matt-bors-comics-cartoons-graphics-swimsuit-afghan-war-draft-GWB-bush-GOP-dems-reps

தொடர்புள்ள பதிவுகள்:

1. Why We Fight – A Film By Eugene Jarecki :: சண்டக்கோழி அமெரிக்கா

2. Three Books and a Movie

3. Pratap Chatterjee on “Halliburtons Army”

கொசுறு விழியம், பேட்டி:

The AfPak War: Combating Extremism in Afghanistan and Pakistan – washingtonpost.com

மீண்டும் கார்சாய்: ஆப்கானிஸ்தான் தேர்தல் களம்

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

President Hamid Karzai was photographed by an election worker in Jalalabad, Afghanistan, on Monday as he official registered to stand for reelection. His running mates are seated to his right.

  • ஆப்கானிஸ்தானில் ஆகஸ்ட் 20ஆம் தேதி தேர்தல் நடக்கப் போகிறது.
  • தாலிபானிடமிருந்து விடுதலையாகி ஏழு வருடங்கள் கழிந்துவிட்டது; 31 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கரைந்துவிட்டது.
  • நான்கு டஜன் வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இரு பெண்கள், முன்னாள் கேபினட் அமைச்சர்கள், புத்தம்புதிய அமெரிக்க அடிவருடிகள், கம்யூனிஸ்ட்கள், நமது ஊர் சகுந்தலா தேவி போல் குழந்தை ஜீனியஸ் எல்லாரும் நிற்கிறார்கள்.
  • Simple majority போதாது. 20 சதவிகிதம் வாக்குப் பெற்றுவிட்டு, “தனிப் பெரும்பான்மை எமக்கே! ஆட்சி நமதே!” என்று முழங்க முடியாது. குறைந்தபட்சம் 50% வாக்குகளுக்கு மேல் பெற்றால்தான் வெற்றி. இல்லையென்றால், முதல் இரண்டு இடங்களை வென்ரவர்களுக்குள், மீண்டும் ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதிச்சுற்று வாக்குப் பதிவு நடக்கும்.
  • அங்கும் ஜாதி/இன வாரியாகத்தான் வோட்டு விழுகிறது. பெரும்பான்மை சமூகமான பஷ்டூன் இனத்தைச் சேர்ந்தவர் அமீது கர்சாய்.
  • பதினாறு மில்லியன் பேர் ஏழாயிரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கப் போகிறார்கள்.
  • வாக்காளருக்கான அடையாள அட்டைப் பதிவை தாலிபான்கள் தடுக்கவில்லை. கடந்த 2004, 2005 தேர்தல்களைப் போலவே இந்த தடவையும் தாலிபானால், தேர்தலுக்கு பிரச்சினை வராது என்கிறார்கள்.
  • எனினும், ஒரு லட்சம் போலீஸ், அதன் மேல் இன்னொரு லட்சம் இராணுவ வீரர்கள், அவர்களின் பாதுகாப்புக்கு மேலும் இன்னொரு லட்சம் வெளிநாட்டு படைவீரர்கள் போட்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பில் பணிபுரிபவர்களில் முக்கால்வாசிப் பேர் அமெரிக்கர்கள்.

வேட்பாளர்கள்

Dr. Abdullah in Kabul after filing to run for president.

Dr. Abdullah in Kabul after filing to run for president.

  • ஹமீத் கார்சாய்க்கு துணையாக இரு உதவி ஜனாதிபதிகள் உறுதுணையாக களத்தில் நிற்கிறார்கள்.
    • மில்லியன் கணக்கில் ரூபாய் நோட்டை அச்சிட்டு சொந்தப் புழக்கத்திற்கு பதுக்கிக் கொண்டதால், மந்திரிசபையை விட்டு கல்தா கொடுக்கப்பட்ட மொஹம்மது காசிம் Mohammed Qasim Fahim.
    • முன்னாள் முஜாஹிதீன் முகமது கரீம் Muhammad Karim Khalili
  • அமீது கர்சாயிடம் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அப்துல்லா, அவரிடமிருந்து விலகி சரியான போட்டியாக விளங்குகிறார். எனினும், கர்சாயை தோற்கடிப்பது துர்லபம்.
  • முன்னாள் நிதியமைச்சர் அஷ்ரஃப் கனி (Ashraf Ghani)யும் போட்டியிடுகிறார்.
  • தற்போதைக்கு ரமஜான் பஷர்தோஸ்த் (Ramazan Bashardost) மக்கள் மனதை ஒவ்வொரு வோட்டாக சேமித்து, நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
    • தென் சென்னை சிட்டி பாபு மாதிரி மெத்த படித்தவர்.
    • முனைவர்.
    • பிரான்சில் குப்பை கொட்டியவர்.
    • அல் க்வெய்தாவை வீழ்த்திய அமெரிக்காவிற்கு செல்லப்பிள்ளையாக இருந்துகொண்டு, அரசை மொத்தமாக குத்தகை எடுத்து, லஞ்சத்தை அனாயசமாக நிறைவேற்றும் கர்ஸாயின் ஊழல் ராஜாங்கத்தை ஒழிக்கிறேன் என்கிறார்.
    • காந்தியை மேற்கோள் காட்டுகிறார்.
    • புத்தகப் புழு.
    • இணைய தளம் வைத்திருக்கிறார்.
    • 15% சதவிகித மக்களைக் கொண்ட ஹசாரா இனத்தைச் சேர்ந்தவர்.
    • முன்னாள் மந்திரிசபையில், திட்டத்துறை அமைச்சராக இருந்தபோது தனது சம்பளத்தை தானமாக, தன்னுடைய ஊழியர்களுக்கு வழங்கியவர்.
    • கறை படிந்த தொண்டு நிறுவனங்களைத் தடை செய்கிறேன் என்று 2000க்கும் மேற்பட்ட ஊழல் என்.ஜி.ஓ.க்களை தடை செய்து, லஞ்ச ஒழிப்பில் அக்கறை காட்டியதால், அமைச்சரவையை விட்டு நீக்கப்பட்டவர்.

அமெரிக்கா

  • தன்னுடைய எதிரிகளை ஹமீது கர்சாய் போட்டுத் தள்ளிவிட்டு, “அமெரிக்கா குண்டு போட்டுச்சு! அதான் செத்துட்டாங்க!” என்று திருட்டுப் பட்டம் கட்டிவிட்டதாக அமெரிக்கா நினைக்கிறது.
  • அமெரிக்காவிற்கு புதிய முகம் தேவை. ஏழாண்டுகளாக கர்சாயைப் பார்த்து ஆப்கானிஸ்தர்களுக்கும் அலுத்துவிட்டது.
  • தொடரும் தாக்குதல்களில், சில அப்பாவிகளும், பல உள்ளூர்வாசிகளும் துர்மரணம் அடைந்த கோபத்தில், தாலிபான் மீண்டும் எழுச்சியடைவதற்கு வாய்ப்பு அதிகம். இந்த சமயத்தில், பழைய பெருச்சாளிகளுடன் கூட்டணி அமைத்துள்ள சாமர்த்தியசாலி மீது அச்சம் கலந்த பயம் எழுந்துள்ளது.

அசைக்க முடியாத உப ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு + பணபலம் + பெரும்பான்மை சமூகத்தின் சின்னம் + கடைசி நிமிட அரசியல் பேர வித்தகர் என்பன எல்லாவற்றுக்கும் மேல் சர்வ அதிகாரமும் கொண்டவர் என்பதால் அடுத்த ஐந்தாண்டுக்கு கர்சாயைப் பொறுத்துக்கொள்ள அமெரிக்கா தயார். இந்தத் தேர்தல் அவருக்கு எச்சரிக்கை மணி மட்டுமே.

Pratap Chatterjee on “Halliburtons Army”

  • page14_halliburton__s_armyடிக் சேனிக்கு மட்டும் ‘ஹாலிபர்டனி’ன் எல்லா புகழும் சென்றடையக் கூடாது. இரண்டாம் உலகப்போரில் இருந்து வாடகைக்கு போர் வீரர்களை குத்தகை விடும் நிறுவனமாக ஹாலிபர்டன் திகழ்கிறது.
  • இராக் போரை ஹாலிபர்டனுக்கு ஏலம் கொடுத்தவர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஆவார். அதே ரம்ஸ்ஃபீல்ட் லின்டன் பி. ஜான்ஸன் காலத்தில் ஹாலிபர்டனை மிகக் கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.
  • டிக் சீனி தலைமைப் பொறுப்பை எடுத்தவுடன் வெறும் 100 மில்லியன் பண்ணிக் கொண்டிருந்த ஹாலிபர்டன் 2.3 பில்லியன் பணக்கார நிறுவனமாக மாறியது.
  • டிக் செனி துணை ஜனாதிபதி ஆகியவுடன் வாஷிங்டனில் ஹாலிபர்டன் லாபி செய்வதற்கான நிதியை சரி பாதியாக குறைத்துக்கொன்டது.
  • இராக் போர் முடிந்தாலும் ஹாலிபர்டனின் லாபத்திற்கு எந்தக் குறைவும் இருக்காது. போஸ்னியாவில் ஆகட்டும் அல்லது பிறிதொரு போர்க்களத்தில் ஆகட்டும்; அங்கே, அவுட்சோர்சிங் முறையில் ஹாலிபர்டனுக்குத்தான் கான்ட்ராக்ட் விடப்படும்; விடப்படுகிறது.
  • பராக் ஒபாமாவினால் ஹாலிபர்ட்டன் குத்தகையை ரத்து செய்ய இயலாது. ஆனால், கொடுக்கும் பணம் எவ்வாறு, எதற்காக, எப்படி செலவாகிறது என்பதற்கு கணக்கு கேட்க முடியும்.
  • தெற்காசியர்களும் இந்தியர்களும் கொத்தடிமையாக மலம் அள்ளுவதற்கும் ஆபத்தான வேலைக்கும் வைக்கப்பட்டு ஹாலிபர்ட்டனுக்கு கிடைக்கும் கொள்ளை லாபம் குறைந்து, இந்த தகிடுதத்தங்கள் அம்பலம் ஏறுமாறு வெளிப்படையான செயல்பாடுகள் அரங்கேறக் கூடும்.
  • Labor exploitation and an unofficial “caste system” perpetrated by Halliburton/KBR and its subcontractors, with sliding pay scales based on workers’ nationalities.

தொடர்புள்ள சில சுட்டி:

1. நேர்காணல்: Pratap Chatterjee: Texas Monthly February 2009: “An extended interview with the author of Halliburton’s Army: How a Well-Connected Texas Oil Company Revolutionized the Way America Makes War.”

2. ப்ரதாப் சாடர்ஜியின் வலைப்பதிவு: Pratap Chatterjee's blog | The War Comes Home, A Project of KPFA Radio