Tag Archives: India

வேலையில்லாதவன்தான்! வேலை தெரிஞ்சவன்தான்?

Jobs-Employment-recession-life-alternate-IT-Info-Techரிச்சர்டை எனக்கு பத்து வருஷமாகத் தெரியும். அமெரிக்காகாரன். என்னுடன் ஆறு வருடம் கூட வேலை பார்த்தவன். செய்ய சொன்னதை மட்டும் செய்து முடிக்காமல், சொல்லாததையும் சூட்சுமமாக செய்து தருபவன். சாமர்த்தியம் இருக்கிறது என்னும் தன்னம்பிக்கை நிறைந்தவன்.

கடந்த ஒன்பது மாதங்களாக வேலை தேடிக் கொண்டிருக்கிறான்.

என்னுடைய உலகம் எனப்படுவது தமிழ்ப் பதிவுகள், பதிவு அரசியல் என்று முடங்கியதாக கருதப்பட்டால், அவனுடையதில் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ, லீனக்ஸ், வீட்டிலேயே பியர் தயாரிப்பது என்று பிறிதொரு திரிசங்கு சொர்க்கம். ஃபேஸ்புக், லிங்ட் இன், ப்ளாக்ஸோ எதிலும் எப்போதும் காணக் கிடைக்க மாட்டான். ஏதோ நினைப்பு வர, எப்படியோ தொடர்பு கொண்டால், வேலை போன விஷயத்தை சொன்னான்.

வாயுள்ள புள்ள பொழச்சுக்கும் என்பது தமிழ் பழமொழியாக இருந்தாலும், அந்தக் காலத்திலேயே டவுன்லோட் எழுத்தாளர் எவராவது அதை அமெரிக்காவில் இருந்து இடம் பெயர்த்திருக்க வேண்டும் என்பது என்னுடைய சம்சயம்.

ரிச்சர்ட் அக்மார்க் கீக். இந்த மாதிரி ISTJ பசங்களுக்கு வேலை போனால் ரொம்ப துர்லபம் என்று சொல்லி இருக்கிறார்கள்

வாசிக்க: Why Layoffs Hit IT Professionals So Hard | CIO – Blogs and Discussion: “Sure, IT jobs are difficult to find. But making matters worse, many IT professionals lack the personality traits that make career change easier, even exciting, for others.”

Introverted Sensing Thinking and Judging – அகமுக ஆய்வு உணர்வு சிந்தனைத் தீர்ப்பாளர் – ஆளுக்கு காற்றில் வாய்ப்பந்தல் போட வராது. எத்தனாந் தேதிக்குள் எவை வேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லிவிட வேண்டும். டைடானிக் கப்பல் நிறைய தகவல் கொடுத்தாலும், வகுந்தெடுத்து, முத்துக் குளிப்பார்கள். அனுபவத்தின் அடிப்படையில் முடிவெடுப்பார்கள்.

Statue-of-liberty-suicide-finance-USA-America-Suicideஇளைய தளபதி விஜய் சொல்வது போல் இதயத்தில் யோசிக்கும் க்ரூப் அல்ல. மூளையை உபயோகித்து முடிவை எடுப்பவர். ‘ஏதோ… பட்சி சொல்லுது!’ என்றால், எந்தப் பட்சி, எவ்வாறு தோற்றம் இருந்தது என்று கனவைக் குதறி, நினைவுலகத்திற்கு மீட்பவர்.

ரிஸ்க் எடுப்பதை ரஸ்க் உண்பது போல் செய்யும் INTPs (Introverted Intuitive Thinking Perceiving – அகமுக ஆய்வு இயலுணர்வு சிந்தனை உணர்வாளர்) & ENFPs (Extroverted Intuitive Feeling Perceiving) தரப்பினரின் தாரக மந்திரம் ‘மாற்றம் மட்டுமே நிரந்தரம்’. நொடிக்கொரு புது சாஃப்ட்வேர் பிறக்கும் ISTJ மக்களுக்கோ மாற்றமே அலர்ஜி.

ரிச்சர்ட் அனேகமாக ISTJ ஆகத்தான் இருப்பார். ஐ.டி துறையில் வேலை பார்ப்பவரில் மிகப் பெரும்பான்மையானோர் ISTJ என்கிறது ஆய்வு.

இந்தியர்கள் Introverted; சாதாரணமாக தனக்குள்ளேயே யோசித்துக் கொள்பவர்கள். ஏதாவது பார்ட்டி நடந்தால் கூட ஒதுக்குப்புறமாக தனியாகப் போய் தெரிந்தவர்களோடு அரட்டை அடிப்பதை விரும்புவர்கள். Judgingம் கூட வந்து சேர்ந்து கொள்ளும். சட்டு சட்டென்று ஆளை எடை போடுவதில் இருந்து, தக்காளியை பொறுக்குவது வரை தீர்ப்பு எழுதித் தருபவர். ‘அவரவருக்கு அதது’ என்று Perceiving ஆக விட்டுத் தள்ளாத சமூக அமைப்பு. ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’ என்று கதையின் முடிவில் ஈசாப் நீதி சொன்னால்தான் சமாதானம் ஆகும் குமுகம்.

ஆனால், கணினித் துறையில் நிறைய இந்தியர்கள் நுழைந்ததற்கு காரணம் வேளாவேளைக்கு வேலை என்பதனால்தானேயொழிய இந்த ISTJ காரணம் அல்ல. எனவே, தெற்காசியர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஸ்னான ப்ராப்தி வாய்த்ததற்கு ISTJஐ மட்டும் கை காட்டக் கூடாது.

ரிச்சர்டின் பாஸ் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன். அவருக்கும் வேலை போய் விட்டது தெரியவந்தது. நாலு ஈமெயில், ஏழு போன் வாயிஸ் மெயில் தாண்டியவுடன் என்னுடைய பழைய பாஸ் குரல், லாரி டிரைவர் ராஜாக்கண்ணுவாக கேட்க கிடைத்தது.

Dilbert-Outsourcing-Employment-Obama-Rich-Bangalore‘என்ன செய்யறீங்க இப்போ?’

‘டிரக் ஓட்ட ஆரம்பிச்சிருக்கேன். உன்னோட முதலாளியா இருந்தப்ப கிடச்சத விட அதிகமா கொடுக்கிறாங்க. அலாஸ்கா முழுக்க சுத்தியாச்சு. இந்த அனுபவத்த வச்சு பெஸ்ட்செல்லர் எழுடிண்டு இருக்கேன்.’

எவனாவது முட்டை வீசினால், அதை கேட்ச் பிடித்து ஆம்லெட் போட்டுக்க என்பார்கள். அது போல், வீசப்பட்ட தக்காளியை சேர்த்து, ரசம் ஆக்கி குடித்துக் கொண்டிருக்கிறார். மாற்றத்தை சப்புக் கொட்டி சாப்பிடுகிறார்.

இந்த வேலைதான் செய்வேன். இதுதான் எனக்குப் பிடித்தமானது. வெள்ளை சொக்கா உத்தியோகம் கிடைத்தால் மட்டுமே உழைப்பேன் என்று இராமல், கிடைத்ததை வைத்து கொண்டாடுகிறார்.

ரிச்சர்ட் மாதிரி வேலை இழந்த பல நண்பர்கள் சொந்த நிறுவனம் தொடங்குவதைத்தான் முதலில் விரும்புகிறார்கள். நிறைய பயணம். புதிய சந்திப்பு. நிலையில்லா இருப்பிடம். தினம் ஒரு க்லையன்ட் என்று வழக்கப்படுத்துவது ISTJ மக்களுக்கு சிரமமானது. நல்ல நாளிலேயே இந்தியனுக்கு இடர்நிறைந்த பாதையை தேர்ந்தெடுப்பது பயங்கொடுப்பது. ஆனால், வியாபாரத்தில் சோதனை செய்துதானே ஆக வேண்டும்?

குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டிப் பழக்கப்பட்ட நெஞ்சத்திற்கு Comfort zoneஐ விட்டு வெளியே வர வேண்டும். ஆனானப்பட்ட, மணிரத்னமும் ஷங்கரும் சூப்பர் ஸ்டாரும் கூட ஃபார்முலாவை விட்டு இம்மி நகருவதில்லை. நம்ம பாடு எப்படியோ!

India Elections 2009: Cartoons: The New Yorker

ஒபாமா: ‘இந்தியா போக்கிரி நாடு’?

ஜார்ஜ் புஷ் பதவி விலகிய பிறகு இந்தியாவின் மவுசு குறைந்து போய் விட்டதாக வாஷிங்டன் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.

நியு யார்க் டைம்ஸ் பத்தி எழுத்தாளர்கள் துவங்கி டெமொக்ரட்ஸ் கருத்தாக்கத்தை தலையங்கம் தீட்டுபவர் பலரும் இந்தியாவின் செல்வாக்கை குறைத்து, மண்டையில் தட்டி மிரட்ட வேண்டிய அவசியத்தை எடுத்து வைக்கிறார்கள்.

    1. அணு ஆயுதம் வைத்திருக்கும் நாடெல்லாம் நம்ம நாடாக இருக்கவேண்டும். பாகிஸ்தான் என்ன? இந்தியா என்ன? இரண்டும் ஒரே வைரஸ் புகுந்த கணினி மாதிரி அச்சுறுத்தல் தருபவை.
    2. பாகிஸ்தான் தலைவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்ல! அதனால் தாலிபான் + அல் க்வெய்தா பக்கம் வேண்டுமென்றே சாய்பவர்கள் கிடையாது. பாகிஸ்தானுக்கு இந்திய வெறுப்பு உள்ளது. இருந்துட்டுப் போகட்டுமே.
    3. காஷ்மீர் பிரச்சினையை இந்தியா தீர்க்க நினைத்தால் சுபமஸ்து போடலாம். ஆனால், என்றாவது அமெரிக்கா சொல்வதை செவிமடுத்து ஒரு வார்த்தையாவது கேட்கிறார்களா? திபெத்துக்கு சுண்ணாம்பு; காஷ்மீருக்கு வெண்ணெய்யா?
    4. அமெரிக்காவிற்கு பணம் வேண்டுமானால் ஆபத்பாந்தவராக அள்ளிக் கொடுக்கும் சீனாவை திருப்தி செய்யவேண்டும். தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அச்சிடும் கடன் பத்திரத்தை வாங்கும் சைனா சொற்படி கேட்கவேண்டும்.
    5. சுதந்திர நாட்டோடு நட்பு வைத்திருப்பதை விட அதிகாரத்தைப் பிடிக்குள் வைத்திருக்கும் தலைவர்களுடன் உறவாடுவதே ஸ்திரத்தன்மைக்கு வழிகோலுகிறது. குடியாட்சியை விட மன்னராட்சியும் கொடுங்கோல் அரசுகளுமே உத்தமம்.
    6. இந்தியாவிற்கு அவுட்சோர்சிங்  செய்தோம். கால் சென்டர்களை அனுப்பினோம். பதிலுக்கு என்ன கிடைத்தது? சீனாவிற்கும்தான் தொழிற்பேட்டைகளை ஏற்றுமதி ஆக்கினோம். எவ்வளவு முதலீடு கிடைக்கிறது? சீனா சொன்னால் வட கொரியா தலையாட்டுகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதம் கூட பயப்படுகிறது. இந்தியாவினால் உள்ளூர் மும்பையைக் கூட காப்பாற்ற வக்கில்லை.
    7. வல்லரசாக வேண்டுமானால், நல்லரசாக நடிக்கவாது தெரியவேண்டும். மனித உரிமை துஷ்பிரயோகத்தில் முன்னிலை வகித்து, பர்மா, இலங்கை, சுடான் என்று நசுக்கல் நாடுகளை அரணாகக் கட்டிக் காக்கும் இந்தியாவை கண்டித்து Non aligned Movement என்னும் கண்ணெரிச்சல் இயக்கத்தை முடக்க வேண்டும்.
    8. வாக்கு கொடுத்தால் காப்பாற்றத் தெரியணும். 123 அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திடுவது; நாளை இடதுசாரி ஆதரவு கிடைக்கவில்லை என்று பேரம் பேசுவது. நிலையான உறுதி கிடைக்காத இடத்தில் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கு?
    9. Nuclear Non-Proliferation Treaty (NPT) ஆகட்டும்; தோஹா ஆகட்டும்; சுற்றுச்சூழல் வர்த்தகம் ஆகட்டும். ஆளுங்கட்சி மாறினாலும் இம்மி கூட விட்டுக் கொடுக்காத முரண்டுக் குழந்தை நிலைப்பாடு.
    10. இந்தியாவை எப்பொழுது வேண்டுமானாலும் தூண்டில் போட்டு இழுக்கலாம். எதிரிகளை மிக அருகில் நெருக்கமாக வைப்பதுதான் இன்றைய உடனடி தேவை.


      India Elections 2009: Irrelevant Online Crowd

      அனைவரையும் வாக்களிக்க அழைக்கிறோம்.

      அதன் தொடர்ச்சியாக இணையத்தில் தேர்தல் பிரச்சாரமும் தகவலும் சூடு பிடிப்பதாக சிலர் சொல்கின்றனர்:

      1. Online resources for the Indian general election 2009 – Part 1 – Play Things

      2. India’s First Digital Election is a collaborative wiki to compile a database of internet and mobile initiatives being used in the 2009 Indian general elections by political parties, individual politicians, and civil society groups.

      3. Mumbai Votes – Election Campaign Resource

      விளம்பரத்திற்கும் ஊடகத்திற்கும் மெகா பொக்கீடு என்கிறார்கள்:

      Indian political parties are flush with funds: “Congress, India’s oldest and now the ruling party, is set to splurge a whopping Rs.20 billion (Rs.2,000 crore/$400 million) in this election.
      :::
      Abraham said the main beneficiary of the huge spending would be the media sector.

      “The sectors that would directly benefit would be mainly media, be it print, audio or visual, communication and transportation

      கருத்துப்படங்களும் பட்டை கிளப்புகிறது:

      myspace-twitter-social-networking-technology-voters

      உங்கள் அலுவலில் ரிசப்ஷனிஸ்ட் இருப்பார். கொஞ்சம் அழகாக; நிறைய இளமையாக; அவ்வப்போது மாறிக் கொண்டு; அது போல் கட்சிகள் வலையில் செலவழிப்பதை இன்னும் அவசியமில்லாத அலங்காரமாகவே கருதுகின்றன. ஏன்?

      • ரிசப்ஷனிஸ்ட் நிரலாளர் ஆக மாறுவது எல்லாம், ‘கண்டு  கொண்டேன்; கண்டு கொண்டேன்’ தபூ சினிமாவில் நடக்கும். நிஜத்தில், வாக்காக மாறாது.
      • வளர்ந்த நாடுகளிலேயே வலையில் இருந்து எழுந்து வந்து வாக்குப் போடுவோர் அரிது. பாமர இந்தியாவில்:
      Rank Country Literacy Rate
      59 Maldives 96.3
      85 China 90.9
      86 Sri Lanka 90.7
      87 Indonesia 90.4
      88 Vietnam 90.3
      89 Myanmar 89.9
      93 Malaysia 88.7
      109 Mauritius 84.3
      147 India 61.0
      160 Pakistan 49.9
      162 Nepal 48.6
      164 Bangladesh 47.5
      165 Bhutan 47.0
      • இணையத்தில் சாதிச்சங்கத்திற்கு வலையகம் இருக்கிறதா? அப்படியே மொத்த உறுப்பினரின் வாக்குகளும் விழுமா?

      obama-caste-community-india-cartoons-toi-ninan-mayavathy

      • சன் டிவி சீரியல், தி ஹிந்து ஓப்பன் பேஜ் அபாயின்ட்மென்ட் என்றிருப்போரே target இல்லை என்னும்போது இணையம் எம்மாத்திரம்?

      Therthal 2009: Our Next PM – Mayavathy

      இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஏன் மாயாவதிக்கு அந்த நாற்காலி கிடைக்கும்? எப்படி பொருத்தம்?

      காங்கிரஸ், பாரதிய ஜனதா தலைமையிலான அணிகளுக்கு மாற்றாக வலுவான அணியை உருவாக்கிய இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளின் தலைவர்களை மட்டும் சேர்ப்பது என்ற பழைய பாணியைக் கைவிட்டுவிட்டு, பாரதிய ஜனதா + காங்கிரசின் தோழமைக் கட்சிகளையே ஒன்றன்பின் ஒன்றாக வெளியில் இழுத்துள்ளனர்.

      mayavathy-deve-gowa-tdp-trs-third-front-alliance

      • கடந்த தேர்தலில் 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக, இப்போது ஒரு கை விரல்கள் கூட காணாத அளவு சுருங்கி விட்டது. பாஜக கூட்டணியால் ஆட்சியை பிடிக்கமுடியாது.
      • முலாயம் சிங் யாதவ் குறித்து நீங்கள் அறிவீர்கள் அல்லவா? XLRI Alumna takes on Mulayam Singh Yadav « Gautam’s Net

      up-corruption-samajwadimulayamundisclosedassets

      மாவட்ட தேர்தல் அதிகாரியை மிரட்டிய சமாஜ்வாடி கட்சி

      நீங்கள் ஒரு பெண் அதிகாரியாக இருப்பதால் என்னை நானே கட்டுப் படுத்திக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் பெண்ணாக இல்லையென்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வந்திருக்கும். – ஆபாச வார்த்தைகளால் பெண் கலெக்டரை திட்டிய முலாயம்சிங்

      நிதிப்பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, பொருளாதார மந்த நிலை, விஷம்போல் ஏறும் விலைவாசி

      point-blank-blogspotrisingfoodprices

      • சாதாரண மக்களைப் பாதிக்கும் பொருளாதார கொள்கையில் எத்தகைய மாற்றத்தையும் பாஜக, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.

      வேலையில்லாத் திண்டாட்டம், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு, கட்டுமானத் தொழில் பாதிப்பு, வாகனம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் தேக்க நிலை, ஜவுளித் தொழில் பாதிப்பு, ஏற்றுமதி பாதிப்பு

      • பொருளாதார கொள்கையை வகுப்பதில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அவை பின்பற்றிய கொள்கைகள் தனியார் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கு சாதகமானவையாகும். இவ்விரு கட்சிகளும் தொழில் நிறுவனங்களின் நிதியை சார்ந்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

      சட்டம்- ஒழுங்கு சீரழிவு

      • இவ்விரு கட்சிகளின் ஆட்சியில் எல்லையை கூட பாதுகாக்க முடியவில்லை. இதனாலேயே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

      சமூக சீர்திருத்தம்

      • பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை: உத்தரப் பிரதேசத்தில் அரசு நிறுவனங்கள் தனியார் வசம் கொடுக்கப்பட்டால் கூட இட ஒதுக்கீடு முறையை கட்டாயம் அமல்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் வழங்கும்.
      • தங்கள் கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் உயர்வகுப்பினருக்கும் உரிய இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்று மாயாவதி குறிப்பிடுகிறார்.

      bsp-mayawati-uttar-pradesh-elephant-dalits-polls

      • பாரதிய ஜனதாவுடன் நட்புறவு: உத்தரப் பிரதேசத்தில் இதற்கு முன் மூன்று முறை முதலமைச்சராகப் பதவி ஏற்றார் மாயாவதி. அந்த மூன்று முறையுமே பாரதிய ஜனதாவின் உதவியால்தான் அவர் முதல்வர் ஆனார். பாரதிய ஜனதாவின் லால்ஜி தாண்டனைத்தான் மாயாவதி அண்ணனாகக் கருதுகிறார்.

      adade-1mathy-third-mayavathy-pawar-jj-admk

      கார்ட்டூன்: இந்திய அரசியலும் தமிழக எம்பி பேரங்களும்

      Congress: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

      நன்றி: தினமணி

      தொடர்புள்ள பதிவு: Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி

      கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது

      2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.

      இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.

      கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.

      • உத்தரபிரதேசத்தில் முலாயம் சிங்,
      • பீகாரில் லல்லு பிரசாத்,
      • மராட்டியத்தில் சரத்பவார்,
      • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி

      ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.

      காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.

      DMDK Vijaikanth Alliance Partner Cartoons

      DMDK Vijaikanth Alliance Partner Cartoons

      காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.

      தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

      Number of Seats & Vote Percetage of Congress

      Seats & Votes

      தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.

      Nanjangud Temple

      Temple of Nanjundeshwar: Mysore

      Temple of Nanjundeshwar: Mysore

      மேலும்: ஃப்ளிக்கர்

      சுதந்திரம்: விடுதலையும் பேச்சுரிமையும்

      பத்ரி: எண்ணங்கள்: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை:

      தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

      இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது.

      கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.

      மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?

      எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.

      காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.

      தீவிரவாதம் பற்றி முணுமுணிப்பை வெளியிட்டதற்கு முட்டிக்கு முட்டி தட்டிய கதை:

      “The Statesman” republished an op-ed from “The Independent,” Britain – “Why should I respect these oppressive religions?”. Some Muslims in Calcutta went berserk like they did in the case of Taslima Nasreen. A case was filed against editor – Ravindra Kumar, and the publisher – Anand Sinha, and they were arrested./blockquote>

      இப்பொழுது சமீபத்திய (பழைய!?) செய்தி:

      கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று (ஃபெப்ரவரி 11) கைது செய்யப் பட்டனர்.

      இஸ்லாம் மதத்தினை தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.

      முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

      எதை அச்சில் இட்டார் என்று இவ்வளவு கொந்தளித்தார்கள்?

      All people deserve respect, but not all ideas do. I don’t respect the idea that a man was born of a virgin, walked on water and rose from the dead. I don’t respect the idea that we should follow a “Prophet” who at the age of 53 had sex with a nine-year old girl, and ordered the murder of whole villages of Jews because they wouldn’t follow him.

      இந்தியாவின் பொருளாதாரத்தை சுதேசிக் கொள்கை காக்கிறது

      India Retains Optimism and Economic Growth – NYTimes.com: By HEATHER TIMMONS (NYT):

      • முரசொலி மாறன் முதல் மன்மோகன் சிங் வரை எல்லோருமே இந்தியா முழுமையாக உலகமயமாவதை விரும்பவில்லை. உள்நாட்டு வியாபாரிகளுக்கு வரி பாதுகாப்பு, விவசாயிகளுக்கு கடன் ரத்து, வியாபார ஏற்றுமதிக்கு சாதகமில்லாத சூழல் போன்றவற்றை அமைத்து வைத்தார்கள். அதுவே, இப்போதும் இந்தியாவை உலகப் பொருளாதார சுனாமியில் இருந்து ரட்சிக்கிறது.
      • சாதாரணமாக இந்தியர்கள் சாப்பாட்டுக்கும் இருப்பிடத்துக்கும் போக பாக்கி எல்லாவற்றையும் வங்கி சேமிப்பிலோ, தலையணை உறைப் பதுக்கலிலோ ஈடுபடுவார்கள். இப்போது அது 35 சதவிதமாகக் குறைந்தாலும், வருடத்துக்கு அமெரிக்க டாலர் 200 பில்லியன் கிடைக்கிறது. அமெரிக்கரிடம் இந்த வருங்கால தொலைநோக்கு சேமிப்புப் பழக்கம் கிடையாதே!

      india-economy-gdp-2007-swadesi-self-reliance-finance