ஒருத்தருக்கு பெரிய வயறு.
அதுக்காக டாக்டர்கிட்ட போறாரு.
டாக்டர் அவரை சொட்டுநீலம் குடிக்கச் சொல்றாரு.
ஏன்? ஏன்? ஏன்?
ஏன்னா சொட்டு நீலம் குடிச்சா, பல் எல்லாம் நீலமா மாறும். அதாவது ப்ளூடூத்!
ப்ளூடூத்ங்கறது ‘வயர்’லெஸ் ஆச்சே!
ஒருத்தருக்கு பெரிய வயறு.
அதுக்காக டாக்டர்கிட்ட போறாரு.
டாக்டர் அவரை சொட்டுநீலம் குடிக்கச் சொல்றாரு.
ஏன்? ஏன்? ஏன்?
ஏன்னா சொட்டு நீலம் குடிச்சா, பல் எல்லாம் நீலமா மாறும். அதாவது ப்ளூடூத்!
ப்ளூடூத்ங்கறது ‘வயர்’லெஸ் ஆச்சே!
நன்றி: பத்தி: அரபிக் கடலோரம் – காலச்சுவடு :: தமிழில்: சுகுமாரன் [இதழ் 98 – பிப்ரவரி 2008]
மலையாள மொழி இன்று அடைந்திருக்கும் நிலைமை விநோதமானது. மலையாளம் என்பது என்ன? மூன்றேகால் கோடி எண்ணிக்கையுள்ள கேரளயர்கள் அன்றாடம் பேசுகிற மொழி. எழுதுகிற மொழி. நிச்சயமாகக் கேரளத்திலுள்ள பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழியும் எழுத்து மொழியும் மலையாளம் மட்டுமே. உடனடியாக அப்படி இல்லாமல் போய்விடுமென்றும் தோன்றவில்லை.
:::
சட்டபூர்வமான ஆட்சிமொழி மலையாளம். ஆனால், அரசாங்கப் பணிகளில் பெரும்பான்மையும் நடப்பது ஆங்கிலத்தில்தான். எழுத்தறிவு இல்லாத குடிமகனுக்கு நியாயம் கிடைக்க வேண்டிய நீதிமன்ற மொழியும் ஆங்கிலந்தான்.
அதே சமயம்
ஆனால், பாலவாடி முதல் மலையாளியின் முதல் மொழியாகக் கருதப்படுவது ஆங்கிலமே. மலையாளம் வெறும் ‘செக்கண்ட் லாங்வேஜ்’. இந்த விசித்திரமான இரட்டை முகம் எப்படி உருவானது?
‘பயன்பாடு’ என்ற ஒற்றை வார்த்தையே இதற்குப் பதில். மலையாள மொழி மூலம் பயனடைபவர்களுக்கும் பயனடையாதவர்களுக்குமான வேறுபாடு இங்கே தெளிவாகிறது. ‘பயன்’ என்பது என்ன பொருளைத் தருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். நமது வாழ்க்கையை எந்த வகையிலாவது மேம்படுத்துகிற ஒன்று. வாழ்க்கையைப் பராமரிக்க உதவும் ஒன்று. வாழ்க்கையில் நம்பக்கூடிய ஒன்று. இவைதாம் அந்தப் பயன்கள்.
சராசரி மலையாளியைப் பொறுத்தவரை அன்றாட வாழ்க்கையில் கருத்துப் பரிமாற்றத்துக்கான கருவி மலையாளம் மட்டுமே. வீட்டில், வழியில், கடையில், அலுவலகத்தில் எங்கும். அல்லது செய்திகள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க, புரோகிதனின் சொற்களைக் கேட்க எல்லாவற்றுக்கும். பத்திரிகை வாசிக்கும்போதும் தொலைக்காட்சி பார்க்கும்போதும் அவன் அரசியல் கட்சிகள், எழுத்தாளர்கள் போன்ற கருத்துத் தொடர்பாளர்களின் சொற்களையும் மறைமுகமாகக் கேட்கிறான். தொலைக்காட்சிகளில் வரும் கலை நிகழ்ச்சிகளும் சினிமாவும் அவனை மலையாளம் வழியாகவே உல்லாசப்படுத்துகின்றன.
பத்திரிகைகள், தொலைக்காட்சி, இலக்கியம், அரசியல், மதச் சொற்பொழிவுகள், சினிமா இவற்றைவிட்டால் வேறு என்ன? அவன் இவற்றுக்கு ஒரு சந்தை மட்டுமே.
அவன் மூலம் இவர்களெல்லாம் வாழ்கிறார்கள். அவர்கள் அவனிடம் மலையாளத்தில் அரசியலை விற்கிறார்கள்; மதத்தை விற்கிறார்கள்; இலக்கியத்தை விற்கிறார்கள்; பத்திரிகையை விற்கிறார்கள்; தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விற்கிறார்கள். அவன் கொடுக்கும் சந்தாக்கள், காணிக்கைகள், நன்கொடைகள், விலைகள் ஆகியவற்றால் அவர்கள் கேரளத்தில் வலிமையானவர்களாகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்குள்ளவர்களாகவும் மாறுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அவர்கள் அதிகார வர்க்கமாகிறார்கள். சராசரி மலையாளி அதிகாரம் செய்யப்படுபவனாகிறான்.
அரசியல் கட்சிகளும் மதங்களும் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் அடங்கிய இந்த ஆளும் வர்க்கம் சுதந்திரத்துக்குப் பின் வந்த அரை நூற்றாண்டு கால ஆட்சியில் சராசரி மலையாளியை இந்தியா முழுவதும் அல்லது உலகம் முழுவதும் அப்பத்துக்காக அலையும் ஒரு அகதியாக்கிவிட்டிருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பிற கட்சிகளின் பங்களிப்பு இதுதான். மதத் தலைவர்கள், சாதியமைப்புகள், அறிவுஜீவிகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி அலைவரிசைகள் எல்லாவற்றின் பங்களிப்பும் இதுதான். அவர்கள் உண்டு கொழுத்தார்கள்.
:::
மலையாளிக்குக் கேரளத்தில் தன்னுடைய பிள்ளைகளின் எதிர்காலம் இருண்டது, மலையாளத்தால் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயனில்லை என்பது புரிந்துவிட்டது. அவர்களுக்கு ஒரு வேலையோ வருமான மார்க்கமோ கிடைக்க வேண்டுமானால் அவர்கள் கேரளத்தை விட்டு வெளியேற வேண்டுமென்பதும் புரிந்துவிட்டது. அதற்கு மலையாளம் பிரயோஜனமில்லை என்பதும் புரிந்துவிட்டது. மலையாளம் மூலம் பயனடைந்தவர்கள் வரிசையில் தனக்கும் தன்னுடைய பிள்ளை களுக்கும் இடமில்லை என்பதும் புரிந்துவிட்டது. அப்படியாகத்தான் மலையாளம் செகண்ட் லாங்வேஜாகவும் ஆங்கிலம் முதல் மொழியாகவும் மாறியது.
பெரும்பான்மை மக்களுக்குச் சோறுபோடும் மொழியாக இல்லாமற்போயிருக்கிறது என்பதுதான் இன்று மலையாள மொழியின் அவலம். அது சோறுபோடுவது அரசியல் கட்சிகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கும் மதத் தலைவர்களுக்கும் சினிமாக்காரர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் மட்டுமே. (இதில் அப்பாவி மலையாள ஆசிரியர்களும் உண்டு). மலையாளம் அவர்களுடைய மொத்தக் குத்தகையாகிவிட்டது. அதனால்தான் நான் பல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்: ‘மலையாளம் உண்மையைப் பேசத் தெரியாத ஒரு மொழியாக மாறியிருக்கிறது. அதைக் குத்தகையாகக் கொண்டிருப்பவர்கள் எவரும் பொதுவாக உண்மை பேசுபவர்களுமல்ல.’
தமிழின் நிலைமை பற்றி எனக்குத் தெரியாது. அண்டை வீட்டு நிலைமையைத் தமிழ் ஓர் எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டுமா என்றும் எனக்குத் தெரியாது.
Posted in Tamil, Tamil Cinema, Tamil Movies, Tamil Nadu, Tamilnadu
குறிச்சொல்லிடப்பட்டது காலச்சுவடு, சக்கரியா, சுகுமாரன், தமிழ், மலையாளம், Cinema, City, English, Hindi, Kaalachuvadu, Kalachuvadu, Languages, Malayalam, Mother Tongue, Native, OIG, Politics, Sakkaria, Sukumaran, Tamil, Urban, Zachariah
அந்தரத்தில் அநாதரவாக கொடூரமாக சாகடிக்கப்படுவதை எப்படி சொல்லமுடியும்?
From my mother’s sleep I fell into the State,
And I hunched in its belly till my wet fur froze.
Six miles from earth, loosed from the dream of life,
I woke to black flak and the nightmare fighters.
When I died they washed me out of the turret with a hose.
போர் விமானங்களின் அடிப்பகுதியில் இருந்து குண்டுமழை பொழிபவர்கள் ‘Ball Turret Gunner’கள். எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தினால்தான் தன்னுடைய உயிருக்கு உத்தரவாதம்.
இரண்டாம் உலகப்போரின் பனிப்பொழியும் கடுங்குளிரில் அடைந்துகிடப்பவன் இக்கவிதையின் பாடுபொருள்.
விமானிக்கு தப்பித்துப் போக வான்குடை உண்டு. இங்கே தன்னந்தனியே அமர்ந்து இருப்பவனுக்கு ஒன்றும் கிடையாது. பத்து மணி நேரம் முடங்கிக் கிடக்க வேண்டும். கை, கால்களை சாஸ்திரோப்தமாக நீட்டலாகாது.
விமானத்தின் எண்ணெய்க்குளத்திற்கு வெகு அருகிலே வாசம்.வயிற்றுப்பகுதியில் சுட்டால், முதலில் கருகுவது இவன். போருக்கு செல்பவனுக்கு இவ்வளவு துர்லபமான, பாதுகாப்பு சற்றும் இல்லாத இடம் வேறேதும் கிடையாது.
இந்தக் கவிதையில் அந்த இயலாமை வெளிப்படும். ஒளிய முடியாது; போரை விட்டு ஒதுங்க இயலாது. சண்டையின் உக்கிரம் அவன் முன்னிலையில் நடக்கும். துவக்கமோ முடிவோ அவன் கையில் இல்லை. எந்திரத்துடன் எந்திரகதியில் சாவை எதிர்நோக்கும் வானூர்தி பயணம்.
Six miles from earth, loosed from the dream of life
தொட்டுவிடும் தூரத்தில் தரை; ஜீவன் சொப்பனமாகி சறுக்கல்
தாயின் வயிற்றில் சேய் போன்ற வாழ்வின் தொடக்கப்புள்ளி போன்ற சித்தரிப்பில், விமானத்தில் இறுதி ஊர்வலத்தில் அமர்ந்திருக்கும் கோலம். கர்ப்பத்தின் உள்ளே உள்ளே இருக்கும் குழந்தை பேசுமா? இறந்தவன் இங்கு பேச முடியுமா? பேசுகிறான்.
கொலைக்கள விவரிப்பாக ‘When I died they washed me out of the turret with a hose’: தொப்புள் கொடியாக கொண்ட கொள்கை, குழாய்வழியாக அமுதூட்டிய உடல்; பிணமானதும் இங்கே அகற்றுவதற்கு அதே குழாயைக் கொண்டு அலம்பிவிட்டு அடுத்த பலிகடாவிற்கு தயார் செய்யப்படுகிறது.
உயிர் பயனற்றது. இவர்களுக்குத் தேவை உடல்; தற்கொலைப் படை.
கிட்டத்தட்ட தமிழாக்கம்:
தாயின் துயிலில் இருந்தவனை தாய்நாடு தனதாக்க,
கருப்பை கதகதப்பு குளிர் மஞ்சத்தண்ணி ஆடாகிறது.
தொட்டுவிடும் தூரத்தில் தரை; ஜீவன் சொப்பனமாகி சறுக்கல்,
கருங்குந்தாணி குறுக்கிட்டவுடன் கண்ணைக் கசக்க கொள்கைக் கோளாறாளர்கள் பிரசன்னம்.
நான் நொறுங்கியதில் சிக்கியதையும், சவமாகக் கழுவித் தூர எறிகிறார்கள்.முந்தைய இடுகை: Dulce et Decorum Est :: Wilfred Owen – தமிழ்ச் செல்வனின் மரணம்
Posted in Tamil Blog
குறிச்சொல்லிடப்பட்டது Afghanisthan, Attacks, Dead, English, Fights, Freedom, Independence, Iraq, Leadership, Nationalism, Poems, Read, Soldier, Suicide, Terrorism, Translations, War, WWII