Tag Archives: ஜெயலலிதா

விரைவு நகரம்: அவசர உணவும் தனிமை வாழ்க்கையும்

மலிவு விலை சிற்றுண்டி கடைகள் சிலப்பதிகார காலத்திலேயே கோலோச்சியதை சாலமன் பாப்பையா முதல் சாரு நிவேதிதா வரை பதவுரை கொடுப்பார்கள். மாநகராட்சி சார்பில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி வழங்கும் சாப்பாட்டு கடைகளை ஜெயலலிதா இன்று திறந்திருக்கிறார்.

அமெரிக்காவில் ஃபாஸ்ட் ஃபுட் மிகவும் பிரபலம் ஏன்?

* தினக்கூலிக்கு ஓடும் மக்கள் அவசர அவசரமாக வேலைக்கு ஓடுவார்கள். ஒரு நிமிடம் தாமதமாக வந்தால் கூட சம்பளப் பிடிப்பு நிறைந்த வாழ்க்கை. அவதி அவதியென ஏதாவது உண்டு கொண்டே உழைப்பதற்கு ஏற்ற உணவு

* அன்றாடங்காய்ச்சி வீட்டில் அரிசி ஸ்டாக் இருக்காது. காய்கறி, பருப்பு எல்லாம் தினந்தோறும் வாங்கி அறுசுவையாக சமைக்க முடியாது. எனவே, சம்பளம் வந்தால் சோறு

* உடைந்த குடும்பங்கள் நிறைந்த அமெரிக்காவில், இல்லத்தரசி இல்லாத சூழலில், மெக்டொனால்ட்சும் சிபோட்லேவும் சுடச்சுட பரிமாறும்.

* சுவையை விட வயிறு ரொம்புதல் முக்கியம். கொஞ்சமாய் சாப்பிட்டாலும், அடுத்த வேளை வரை பசி எடுக்கக் கூடாது. நடு நடுவே நொறுக்குத் தீனிக்கு எல்லாம் பிரேக் கிடைக்காது. ஃபிரென்சு ஃப்ரைசும் கோழிக்காலும் கொழுப்பு நிறைந்த திருப்தி தரும்.

இந்தியாவில் கே.எஃப்.சி. என்பது நண்பர்கள் கூடும் தலமாகவும், சப்வே என்பது பத்தியக் கட்டுப்பாட்டுக்காரர்களின் விருப்ப உணவகமாகவும் இருப்பதுதான் பாரதீய கலாச்சாரமோ?

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

தமிழ் இந்தியா டுடே - ரஜினிகாந்த் சிறப்பிதழ்நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.

ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.

இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.

ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.

பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.

தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.

பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.

படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.

இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.

Tamil India Today - Rajni Special Issue

 

அன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்

வேலாயுதம் துணை ! ஓம் தத் குவாடரோச்சி !!

காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.

அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.

அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி

இந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.

கிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.

உரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

சாட் பெட்டியில் இருந்து…

1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்?’

2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’

3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’

4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’

5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’

6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’

7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்?!’

8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’

9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’

10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’

இவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.

பாதை சரியா? இறுதி முடிவு நல்ல விஷயமா? என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.


Noted Research Writer and Cultural Anthropologist Jeyamohan‘s view

’இன்றைய காந்தி’: கிராமசுயராஜ்யம்

ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்

ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது

மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.

அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.

தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது

விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.

ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!

இந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

மேலும்:

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1


ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே

விகடன்.காம்

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்!

ஏப்ரல் 2011…

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்!

ஆகஸ்ட் 2011..

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.

 


செய்திகள்

சிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.

”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


நிகழ்வுகள் / டைம் லைன்

2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

மார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.

மார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.

மார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.

மார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.

ஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.

ஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

ஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.

அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

Njaani – DMK Movie Production Company & Pondycherry Churches

கற்பிதங்கள் என்றால் என்ன? மூட நம்பிக்கைதான்.

ஜெயலலிதா ரொம்ப பிரில்லியண்ட்டானவர். அசாத்திய அறிவுக் கூர்மையுடையவர் என்பது ஒரு கற்பிதம். இதை கேள்வி கேட்காமல் நிறையப் பேர் ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வளவு பெரிய புத்திசாலி, பிரில்லியண்ட் நபர் எப்படி தன் முழு அரசியலையும் வாழ்க்கையையும் ஏதோ ஒரு சாதாரண பின்னணியில் இருந்து வந்த சசிகலா குடும்பத்திடம் ஒப்படைத்துவிட்டு இருக்கிறார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் கிடையாது.

கருணாநிதி பற்றியும் இது போன்ற கற்பிதங்கள் உள்ளன. அவர் ஒரு பகுத்தறிவாளர், ஜனநாயகவாதி என்பதெல்லாம் அப்படிப்பட்ட கற்பிதம்தான்.

இந்த வார குட்டு

கிறிஸ்துவ மதத்துக்குள் தலித் கிறிஸ்துவர்களுக்கும் வன்னிய கிறிஸ்துவர்களுக்கும் இடையே ஆலய வழிபாட்டில் ஜாதி வேறுபாடுகள் காட்டப்படுவதை நீக்காமல் இரு பிரிவினருக்கும் இடையே மோதல்கள் நடக்கக் காரணமாக இருந்து வரும் புதுச்சேரி மறைமாவட்டப் பேராய நிர்வாகிகளுக்கு

இந்த வார கேள்வி

தமிழில் பெயர் வைத்தால்தான் வரிவிலக்கு என்ற சலுகைக்காக படத்துக்கு தமிழ்ப் பெயர் வைத்துவிட்டு, தயாரிப்பு நிறுவனத்துக்கு மட்டும் ஆங்கிலப் பெயர் வைத்துக் கொள்ளும் சினிமா உலகத் தந்திரத்தை ‘முத்தமிழ் அறிஞரின்’ பேரன் உதயநிதியும் (ரெட்ஜெயண்ட் மூவீஸ்) பின்பற்றுவது முறையா ?

முழுவதும் வாசிக்க: தமிழ்2000: ஓ பக்கங்கள் – 7

Quiz – Tamil Nadu politics

  • தந்தை பெரியாரைக் காட்டிக் கொடுத்து துக்ளக் இதழுக்குப் பேட்டி கொடுத்தது யார்?
  • அய்ந்து மூன்றும் எட்டு – அரசியல்வாதியை வெட்டு! என்று சொன்னவர்கள் யார்?
  • அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதியது யார்

விடுதலை: எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு! – கலி. பூங்குன்றன்

சமீபத்தில் படித்த ‘நச்’ கருத்து

ஞாநி கட்டுரை: IdlyVadai – இட்லிவடை: “கலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்! என்ற தலைப்பில் ஓ-பக்கங்கள், குமுதம்.”

ஓ பக்கங்களுக்கு பின் தொடர்தல்: :-): மாலை மாற்றுதல் – லெஸ்பியன் ்- குமுதம் – ஞாநி அவதூறு!!

தலைப்பில் குறிப்பிட்ட கருத்து – பின்னூட்டம்: “ஏனோ இந்த பதிவை படித்ததும் ‘ஆடு நனைகிறது என ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழி நினைவிற்கு வ்ருவதை தவிர்க்க முடியவில்லை”

‘சவுன்ட் வுட்டாக்க வெட்டிடுவாங்க’ என அச்சுறுத்தும் கருத்து – லக்கிலுக் : “திமுக, பாமக போன்ற தலைமைகளை இதுபோல விமர்சித்திருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பூகம்பமே வெடித்திருக்கும்.”

அபச்சாரம், அபிஷ்டு, ‘கெட்ட வார்த்தை பேசுறான்’ கருத்து: லக்கிலுக் – “ஆயினும் லெஸ்பியன் என்ற சொல்லை கலைஞர் டிவியே கூட பயன்படுத்தவில்லை. ஞாநி தான் பயன்படுத்தியிருக்கிறார்”

DMDK Vijayganth vs AIADMK Jeyalalitha – Tamil Nadu Politics: Cartoons by Mathy

Host unlimited photos at slide.com for FREE!