Tag Archives: ஜெயமோகன்

பாட்டாவின் நதி – ஜெயமோகன்

ஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.

வெளியான இதழ்: மே, 1987

இந்த வழியாகத்தான்
எங்கள் பழைய நதி ஓடியதாம்
முன்பு
ரொம்ப காலத்துக்கு முன்பு.

பெரிய நதி அது.
எங்கள் தாத்தா அதில்தான்
குளிப்பாராம்
அவரோடு பெரிய யானையும்.

அப்புறம் எப்படியோ
நதி நின்று போச்சாம்.
அந்த இடமெல்லாம் மணலாச்சு.
மணல் மேலே
எங்கப்பா வீடுகட்டிக் குடிவந்தார்.
இப்பக்கூட
எங்க கொல்லைப்புறத்தைத்
தோண்டி பார்த்தால்
மீன் முட்கள்
கிடைக்கின்றன.

எங்கள் பெரிய நதியோட
நினைவாகத்தான்
நாங்கள்
சனிக்கிழமைதோறும்
குளிக்கறதில்லை.

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

Washington DC: Jeyamohan Visit – Thanksgiving

வாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.

வாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.

வேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.

பாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.

டைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.

“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க?”

“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”

ஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.

அடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.

பரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.

மணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ!’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.

நாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.

அடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.

வாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.

நடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே?! உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க! இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்!”

“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா?”

“முடிஞ்சா பார்க்கிறோம்! ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.

இரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.

மதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே? உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.

காலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.

கால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.

டிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’

அப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.

அதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.

புறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன? எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது? அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்?

காலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது? அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது?

இப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.

‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க! அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை?” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.

சாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும்! அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா?’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.

அன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்!!’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.

இவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.

சத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.

பட்டால்தான் தெரிகிறது!


அப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:

1. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

2. Tomb of the Unknown. Amphitheater. DC Washington. Arlington http://post.ly/1apD

3. Changing of guards in Unknown Soldier Tomb in Virginia Arlington Cemetery. http://post.ly/1anf

4. Jemo in Arlington Cemetery. DC. http://post.ly/1al7

5. Vote of thanks. Young chap; tense; mispronounces names. I am also mentioned. http://post.ly/1Zpq 8:59 PM

6. How Tamils shd stay united against Atomic power plants & nuclear energy? Y no TN leader against this cause. http://post.ly/1ZpC 8:50 PM

7. Why Nuclear, 123 deals, waste management, accidents, catastrophical predictions, Russia job creation. #energy http://post.ly/1Zp1 8:46 PM

8. Udhayakumar takes over the stage. Asuran book gets released by Sankarapandi. http://post.ly/1Zoo 8:44 PM

9. Koodankulam Nuclear project activist Uthayakumar speech. Pulithevan/LTTE contacts. Prabhakaran dead reminiscences. http://post.ly/1Zog 8:43 PM

10. Commemorative plaque presented to Jeyamohan in Washington DC Meet. http://post.ly/1Zmy 8:27 PM

11. Velmurugan Periyasamy tells abt his expediments with Periyar. EVR’s influence on self. Rationalization & influence. http://post.ly/1Zmn 8:23 PM

12. Shylaja abt Bheema’s characterization in Nathi Karaiyiniley. #JM abt Asoka Vanam. Girl wise inheritance property in his http://post.ly/1ZmC 8:19 PM

13. Tamil language classical structure: Qn. Ans by #JM: 4k divya prabhandham, current poets, Pramil. Su. Vilvaratnam. Abhi. http://post.ly/1Zlp 8:16 PM

14. Qn by him abt fights among writer thinkers. #JM Ans: Appreciates Periyar EVR 4 giving freedom to question. Gr8 ans lac http://post.ly/1ZlU 8:12 PM

15. JM has a gr8 reply abt Periyaar. Compares him with MN Roy, EMS, Ambedkar. EVR is not reason based! http://post.ly/1ZlD 8:07 PM

16. MP Siva chokes with emotion. Wants #JM to become a big writer. Qns abt EVR Periyar. Rationality & spirituality mix. http://post.ly/1Zkw 8:04 PM

17. Religion, Quran, suicides: search of life thru journeys in Ilakkiyam. http://post.ly/1ZkD 7:58 PM

18. Jeyamohan talks abt Oomai Chennai. Janakiraman, Jeyakanthan, Sujatha, Asoka Mithiran, Sundara Ramasamy. Kaadu: how it came into being?! 7:54 PM

19. Sornam Sankarapandi Sudalaimadan condemns the state of responses given by Tamil writers on demise of LTTE. #srilanka statements #sweep 7:50 PM

20. Dr. Thani Cheran disagrees with #JM on Therkku Vazhgirathu. Says TN is not influential wrt Tamil Eezham. http://post.ly/1ZjS 7:47 PM

21. Ans by #JM: A million Tamils r out of TN. How 2 safeguard if free country is separated out. US is best eg of coexistenc http://post.ly/1Zj3 7:41 PM

22. Qn by Saminathan. Multiplicity, diversity x individuality. Will it curtail rebels? How to ensure Independence. http://post.ly/1Zij 7:38 PM

23. JM ans abt education: economy, British looting. Hope for future gen. Famines, hunger will be history. http://post.ly/1ZiE 7:33 PM

24. I’m a reader of Sanga Chitrangal. The only interesting blog is #JM How to bring ilakkiyam to kids? #lit http://post.ly/1Zhr 7:29 PM

25. Shylaja shared her question with me. Y no female chars are shown as intelligent in his fiction; incl Anal & many Mahabh http://post.ly/1Zhb 7:26 PM

26. Sornam Sudalaimadan Sankarapandi qns abt self righteousness with dravidian movement is debased. http://post.ly/1ZhW 7:23 PM

27. AIIMS India Foundation Rave Shankar chats abt #JM blog; Ajithan school was moving. http://post.ly/1ZhA 7:19 PM

28. Audience is hysterical with #JM narration abt common Tamils addiction with Kumudam/Vikadan vs Kaadu http://post.ly/1Zh2 7:17 PM

29. Lit as infotainment vs prev twit. Ilakkiyam is useful in any nook & corner of the world. Why read fiction? http://post.ly/1Zgk 7:14 PM

30. The magnificence absorbed from the universe into self. Iota of world inside each of us. http://post.ly/1ZgZ 7:12 PM

31. #JM talks about Nithya Chaithanya Yathi. Narration definition. Inner vs outer world. Conversations – language http://post.ly/1ZgK 7:09 PM

32. Myladuthurai MP Siva snaps pictures in the #JM #DC Meet. http://post.ly/1ZfW 6:58 PM

33. Writer Jeyamohan gathering in Washington DC. Intro by Peter Yeronimouse. http://post.ly/1ZfE 6:55 PM

34. Library of Congress. Writer Jeyamohan with books, reference, Washington DC. http://post.ly/1ZS0 4:12 PM

35. With Velmurugan in Virginia. Washington DC visits Jeyamohan. http://post.ly/1Yrm 9:37 AM

36. DC welcomed JM. Car chat» Vishnupuram is an anti-kaaviyam. Yuvan’s Manal Keni. What defines a Kappiam? Discussion vs argument mthds Marabu.1:33 AM Jul 25

தொடர்புள்ள பதிவு:
Jeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE

வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது. 🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்

தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”

Jaycee-Dugard-California-kid-child-abuse-11-year-Guardian

பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.

பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.

மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.

இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.

அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
Sac-bee-san-francisco-step-father-old-11-story-newspaper-cuttingஅச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நல்ல வேளை.

கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.

அப்படி ஒரு கொடூரம் இங்கே: The Hindu : Front Page : Soothsayers arrested for poisoning children after predicting their death

அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:

மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்

1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”

2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.

புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.

இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”

ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம்.

Fritzl-Die-Justice-Jury-Sentence-Kids-Children-law-Order-Judges-Courts

வினாக்கள்

  1. செக்ஸ் அஃபென்டர் என்றால் யார்?
  2. இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
  3. அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
  4. மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
  5. அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?

Freedom-Daughters-Dress-Ethics-Morality-cartoon_leunigjpg

பாலியல் குற்றவாளி – Sex Offender

  • சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
  • அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
  • குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
  • சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
  • மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
  • ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.

மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்

அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.

ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்க என்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.

மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.

‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.

Cartoons-look-the-other-way-ignore-sex-offenders-abuse-Martin-Rowson-006

தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்

பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.

1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.

2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.

3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
Babysitter-New-Yorker-Abuse-Cartoons-Comics-Fun-Pun-satire

உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?

1. National Sex Offender Registry

2. Obtaining Information About Sex Offenders

தொடர்புள்ள பதிவுகள்:

1. Jaycee Lee Dugard and the kidnapper’s narrative | Beatrix Campbell | Comment is free | guardian.co.uk

2. Jaycee Lee Dugard kidnap | World news | guardian.co.uk

3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”

4. Is Jaycee Dugard’s tormentor mentally ill? – Broadsheet – Salon.com

5. Afghan law: Wife refusing sex? Deny her food – Broadsheet – Salon.com

6. The blog of Philip Garrido, serial rapist and kidnapper: “sound control” gadget hallucinations. – Boing Boing

7. In True Psycho Fashion, Phillip Garrido Had Blog, Heard God – Phillip Garrido – Gawker

8. Authorities Missed Chances to Find Captives – WSJ.com

9. Woman Held Captive for 18 Years Resurfaces – WSJ.com

HT-Delhi-Kidnap-Ransom-K-and-R-Kids-Money-Extortion-Rich-Servants-housemaids

லிபரல் பக்கம்: இன்னொரு பக்க நியாயம்: மாற்று சிந்தனை

10. Erogenous Zoned: Sending sex offenders into exile – Reason Magazine

11. Hit List: Deadly sex offender registries – Reason Magazine

12. Which pedophiles strike again? – By Daniel Engber – Slate Magazine

13. Who Are the Molesters in Your Neighborhood? The Supreme Court considers the sex offender next door. – By Dahlia Lithwick – Slate Magazine

Terrorists-Extremists-Law-UNA-Bombers-Police-Sex-Offenders

கட்டுரையை முடிக்க பன்ச் டயலாக்கள்

  • கஞ்சா வைத்திருந்தால் கஞ்சமில்லாமல் இருபது வருசம் உள்ளே தள்ளூறாங்க! பொட்டச்சிய வச்சிருந்தா மட்டும் ஏன் பொட்டில் அறைஞ்சு பாடை கட்ட மாட்டேங்கிறாங்க?
  • பொண்ணுங்க மனச பொண்ணுக்குத்தான் தெரியும் என்பது சீரியல் வசனம். ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.
  • சந்தேகாஸ்தபமா இருக்கேன்னு போலீஸ் விசாரிச்சா தப்பே கிடையாது. ஒண்ணு ஒபாமாவோட பீர் கிடைக்கும்; இல்லேன்னா, பொண்ண பதுக்கற பொறுக்கி கிடைப்பாங்க.
  • பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
  • கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
  • அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!

Fun-satire-basement-fence-prison-abduct-sex-rapes-violent-austria

Interview with Jeyamohan: Videos & Audio Chat

நேர்காணுபவர்கள்: தூள்.காம் பிபிபாலாஜி ஸ்ரீனிவாசன் & ச திருமலை ராஜன்

1. தமிழ் இலக்கிய சூழல் இப்போது எப்படி இருக்கு?

2. இணையத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

3. விஷ்ணுபுரம் உருவான கதை

4. எழுத்தாளர் விமர்சகராக இருப்பதில் +ve -ve (இருக்கும் ”சிறந்த”
லிஸ்டில் எல்லாம் இவர் எழுத்துக்களை இவரே சேர்த்துக்கொள்வது)

5. அமெரிக்க பயணம் எப்படி இருக்கு?

6. அவர் ஊர் மக்களின் நகைச்சுவை உணர்வு

7. இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள்

8. தன் எழுத்தை மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழல்

நன்றி: http://www.itsdiff.com/Tamil.html

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.