History of Tamil Print Magazines & Tamil Nadu Press – Chronology: Savithri Kannan (Puthiya Parvai)

The original article appeared in புதிய பார்வை dated March 16-31, 2007. This piece quotes only portions which were of interest and facts which will be of use to me. For better clarity, I have taken liberty with pruning the opinions and also rearranged the paragraphs.

சுதந்திரத்திற்கு முந்திய தமிழ் இதழியல் சூழல் :: சாவித்திரி கண்ணன் (புதிய பார்வை)

பத்திரிகைத் தொழில் சீனாவில் வேர்விட்டது. ஜெர்மனியில் உருப்பெற்றது. இங்கிலாந்தில் வலுப்பெற்று வடிவம் கண்டது.

17 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் இங்கிலாந்தில் ஆங்கிலச் செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கின. 17 ஆம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் அமெரிக்காவிலும் செய்தித்தாள்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால் இந்தியாவிலோ இதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பிறகே, 1780 முதல் செய்தித்தாள் வெளியானது. இந்திய இதழியல் துறையின் முன்னோடியான ‘ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹக்கி‘யின் ‘பெங்கால் கெஜட்’ அந்நாளில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்தது.

முதல் முப்பது ஆண்டுகள் ஆங்கிலத்தில் மட்டுமே செய்தித்தாள்கள் வெளிவந்தன. முதன் முதலாக இந்திய மொழிகளில் தமிழ்தான் இதழியலுக்காக அச்சேறிய மொழியாகும். அச்சேறிய ஆண்டு 1812. இதழின் பெயர் ‘மாசத் தினசரிதை‘. இந்த இதழின் ஆசிரியர் தஞ்சையைச் சேர்ந்த ஞானப்பிரகாசம்.

இந்தத் தகவல் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து இதழியல் ஆய்வில் தொய்வின்றி ஈடுபட்டுவரும் மூத்த பத்திரிகையாளர் அ.ம. சாமியின் ‘விடுதலை இயக்க இதழ்கள்’ என்ற நூலில் உள்ளது. ஆனால் இது வரையிலான மற்ற பல ஆய்வாளர்கள் 1820களில் வெளியான வங்காள இதழ்களையே இந்திய பிரதேச மொழிகளில் வெளியான முதல் இதழ்களாக எழுதி வந்தனர். ‘மாசத் தின சரிதை’ விடுதலை இயக்கப் போராட்டத்திற்கு எந்தப் பங்களிப்பும் செய்ததாகத் தகவல் இல்லை. ஆனால், ‘சுதேசமித்திரனுக்கு முன்பாகவே பல தமிழ் இதழ்கள் விடுதலைப் போராட்டங்களுக்கு வித்தூன்றியது’ என்ற தகவல்கள் இப்போதுதான் வெளியாக ஆரம்பித்துள்ளன.

1831 இல் வெளியான ‘தமிழ் மேகசின்‘ தமிழின் முதல் இதழ் என்றும், 1856 இல் வெளியான ‘தினவர்த்தமானி‘யே முதல் வார இதழ் என்றும் கூறுகிறார் மா.பா. குருசாமி. ஆயினும் சுதேசமித்திரனுக்கு முன்பே ‘சேலம் சுதேசபிமானி‘ என்ற மாதமிருமுறை இதழை 1877-லிருந்தே சே.ப. நரசிம்மலு என்ற சிறப்புமிக்க செய்தியாளர் நடத்தியுள்ளார். இதை மற்றொரு இதழியல் ஆய்வாளரான பெ.சு. மணியும் உறுதிப்படுத்துகிறார். தமிழின் முதல் புலனாய்வு இதழ் என்ற கூடுதல் சிறப்பும் இவ்விதழ்க்குரியது. 1881களிலேயே மாஜிஸ்திரேட்டுகளும், தாசில்தாரும் மலினப்பட்டு கையூட்டுப் பெறுவதை கண்டுபிடித்து எழுதியது இவ்விதழ்.

சிறந்த கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், இதழாளர் எனக் கருதப்பட்ட நரசிம்மலு ஒரு கள ஆய்வாளருமாவார். கோவை குடிநீர்ப் பஞ்சம் தீர மலை உச்சியிலிருக்கும் முத்துக்குளம் அருவியிலிருந்து தண்ணீர் கொண்டுவரமுடியும் என்று முதன் முதல் கண்டறிந்து எழுதியவர், வலியுறுத்தியவர் நரசிம்மலு.

1800களின் பிற்பகுதியிலேயே தமிழில் சுமார் ஐநூறு இதழ்கள் வெளிவந்துள்ளன. அதேசமயம், மக்களிடம் இதழ்கள் படிக்கும் ஆர்வம் அதிகம் இருந்ததாகச் சொல்ல வழியில்லை. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் படித்தவர்களின் விகிதாச்சாரமே ஏழெட்டு சதவிகிதத்திற்கு மேலில்லை. அப்படி படித்தவர்களிலும் கூட நாட்டு நடப்புகளை, பொது விவகாராங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் அதிகம் இல்லை.

இதனால் பத்திரிகை ஆரம்பித்தவர்கள் பாடு, படு திண்டாட்டமாயிருந்துள்ளது. பத்திரிகை ஆரம்பித்தவர்கள் எப்படியாவது சந்தா சேர்ப்பதற்காக முதல் சில நாட்கள் இலவசமாக அனுப்பியும் கூட மக்கள் இசைந்து கொடுக்கவில்லை. மேலும் ஆங்கிலம் படிப்பவர்கள் தமிழ்ப் பத்திரிகை படிப்பதைக் காட்டிலும் ஆங்கிலப் பத்திரிகையில்தான் ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே மக்களைப் பத்திரிகை படிக்கவைக்க மன்றாடிப் பார்த்தும் அவர்கள் மசியாத காரணத்தால் மரித்துப் போன பத்திரிகைகளே அதிகம்.

பத்திரிகைகளின் விற்பனையோ சுமார் 50 படிகளிருந்து அதிகபட்சம் 500 படிகள் என்பதாயிருந்தது. விலையோ சுமார் ஒரு பைசாதான். இதில் விதிவிலக்காக விற்பனையை அதிகப்படுத்தி 1000 பிரதிகளைத் தொட்ட பத்திரிகை ஜி. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பட்ட ‘சுதேசமித்திரன்‘தான் .

சுதந்திர வேட்கைக்கான சுடரொளி தாங்கிய இதழாக தமிழ் மக்களால் இது தலையில் வைத்துப் போற்றப்பட்டது. ஆரம்பித்த காலத்தில் அதிக பொருளாதார இடர்ப்பாடுகளைச் சந்தித்தபோதிலும் அழுத்தமான கொள்கைப்பற்றால் மெல்ல, மெல்ல ஆதரவு தளத்தை அதிகப்படுத்திக் கொண்டது.

ஜி. சுப்பிரமணிய ஐயர் முற்போக்குவாதியாக முன்னொடியாகத் திகழ்ந்தவர். விதவைப் பெண்கள் சமூகத்தில் வெறுத்தொதுக்கப்பட்டு சகல இன்னல்களுக்கும் சாட்சியங்களாகிக் கொண்டிருந்த சமூகச் சூழலில், தன் விதவை மகளுக்கு மறு விவாகம் செய்து வைத்தார். இதனால் இந்து பத்திரிகை பாகஸ்தராக இருந்த ஜி. சுப்பிரமணிய ஐயர் பல இடர்ப்பாடுகளுக்கு ஆளாகி கடைசியில் இந்து பத்திரிகையைத் தன் கூட்டாளி வீரரகவச்சாரியிடமே விட்டுவிட்டார். தி ஹிந்து பத்திரிகை ஜி. சுப்பிரமணிய ஐயருக்குப் பிறகு ஆங்கில அரசுக்கு அனுசரணையாக மாறியது.

பாரதியார் சுதேசமித்திரனில் துணை ஆசிரியராகவிருந்து கொண்டு ‘சக்கரவர்த்தினி‘ மகளிர் மாத இதழின் ஆசிரியராக பெண்ணுரிமைக்காக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தினார்.

மண்டையம் குடும்பத்தாரின் ஆதரவில் நடத்தப்பட்ட ‘இந்தியா‘ இதழின் ஆசிரியராக பாரதியார் பொறுப்பேற்ற ஆண்டு 1907

அந்நாளில் ‘இந்தியா’ இதழின் விற்பனை அதிகபட்சமே ஆயிரம் பிரதிகள்தான் என்றபோதிலும் ஒவ்வொரு இதழுமே குறைந்தபட்சம் ஐம்பது பேரிடமாவது கைமாறியது; விவாதிக்கப்பட்டது; விரிவான கருத்துப் பரவலுக்கு வித்தூன்றியது.

பாரதியார் இந்தியா இதழின் வருடச் சந்தாவை எப்படி நிர்ணயித்தார் என்பது சுவாரஸ்யமான செய்தியாகும். சாதாரண பொது ஜனங்களுக்கு ஆண்டுச்சந்தா ரூபாய் 3 என்ற பாரதியார், வசதியாக வருவாய் ஈட்டுவோருக்கு ரூபாய் 15 என்றும், ஜமீன்தார், ராஜாக்களாயிருந்தால் ரூபாய் 30 என்றும், வெள்ளை அரசாங்கத்துக்கு வேண்டுமென்றால் ஐம்பது ரூபாய்க்கு குறைந்து அனுப்ப முடியாதென்றும் அறிவித்தார்.

இந்தியா இதழோடு ‘பாலபாரதம்‘ என்ற ஆங்கில வார இதழும் துணை இதழாக வந்தது. இந்த ஆங்கில இதழின் ஆசிரியரும் பாரதியார்தான். புதுச்சேரி புகலிடம்தானே என்றில்லாமல் ‘விஜயா‘ என்ற மாலை நாளிதழுக்கும் ஆசிரியராக இருந்தார். இது புதுவையில் வெளியான முதல் மாலை நாளிதழாகும். பிறகு ‘சூரியோதயம்‘ என்ற வார இதழிலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆங்கில அரசை எதிர்த்து எழுதினார் பாரதியார். இதனால் இந்தியா இதழுடன் இவ்விதழுக்கும் தமிழ்நாட்டில் விற்பனை தடை விதிக்கப்பட்டது.

அரவிந்தர் ஆசிரியராகவிருந்து நடத்திய ஆங்கில இதழான ‘கர்மயோகி‘யின் தமிழ்ப் பதிப்புக்கு பாரதியார் ஆசிரியராக இருந்தார். இலவசமாக விநியோகிக்கப்பட்ட ‘தர்மம்‘ இதழிலும் ஆசிரியர் பொறுப்பேற்றார். பாரதியாரின் வெற்றி பெறாத முயற்சிகளாக முலையிலேயே அழிந்தது ‘அமிர்தம்‘ என்ற பெயரில் அவர் ஆரம்பிக்கவிருந்த இதழும், ‘சித்திராவளி‘ என்ற பெயரில் முழுக்க முழுக்க சித்திரங்களின் வழியாகவே கருத்தைப் பரப்ப எண்ணிய இதழும்.

பாரதியின் நெருங்கிய நண்பரான சுப்பிரம்ணிய சிவா ‘ஞானபானு‘, ‘பிரபஞ்சமித்திரன்‘ என்ற இதழ்களை நடத்தினார். சமஸ்கிருதம் கலவாமல் தனித்தமிழில் எழுதப்படும் கட்டுரைக்கு ரூபாய் 5 பரிசாகத் தரப்படும் என்றும் சிவா அறிவித்தார்.

…1900..கள் குறித்த குறிப்புகள்… பின்னால் தனிப்பதிவில் தட்டி சேர்க்கும் எண்ணம்…

காந்தியுகத்திற்கு முன்பே தமிழில் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும் ஆதிதிராவிடர்களின் ஆயுதமாகவும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. அவற்றில்

  • சூரியோதயம் – 1869
  • பஞ்சமன் – 1871
  • திராவிட பாண்டியன் – 1885
  • திராவிட மித்ரன் – 1885
  • இரட்டைமலை சீனிவாசனரால் நடத்தப்பட்ட ‘பறையன்‘ – 1893
  • அயோத்திதாச பண்டிதரால் நடத்தப்பட்ட ‘ஒரு பைசா தமிழன்‘ – 1907

குறிப்பிடத்தக்கவையாகும்.

…திராவிட இயக்கங்கள் குறித்த குறிப்புகள்… பின்னால் தனிப்பதிவில் தட்டி சேர்க்கும் எண்ணம்…

ஆதார நூல்கள்:

  1. விடுதலைப் போரில் தமிழ் வளர்ந்த வரலாறு – ம.பொ.சி.
  2. விடுதலை இயக்கத் தமிழ் நூல்கள் – அ.மா. சாமி
  3. விடுதலைப் போரில் தமிழகம் – ம.பொ.சி.
  4. இதழியல் கலை – பொ. குருசாமி
  5. 19ஆம் நூற்றாண்டு தமிழ் இதழ்கள்் – அ.மா. சாமி
  6. இதழாளர் பெரியார் – அ. இறையன்
  7. விடுதலைப் போரில் தமிழ் இதழ்கள் – பெ. சு. மணி
  8. பாரதியின் பத்திரிகை உலகம் – சீனி. விசுவநாதன்
  9. இலக்கிய இதழ்கள் – இ. சுந்தரமூர்த்தி & மா.ரா. அரசு

நன்றி: புதிய பார்வை :: மார்ச் 16-31, 2007

Related piece: Snap Judgement: Tamil Magazine History – Journals, Zines, Media, Newspapers Chronology – Sequence of events and Developments lifted from source அலைஞனின் அலைகள்: குவியம்

‘Dasavatharam’ – Kamal’s plea & Other trivia

தொடர்பான செய்திகள், தகவல்கள்:

1. ‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

2. சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

3. கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

4. ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் தடியடி: கமலும் ஆஸ்கார் ரவியும் பதிலடி

5. டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

6. தசாவதாரத்துக்கு அன்புமணி முட்டுக்கட்டை இடுகிறாரா?

7. கமலின் தசாவதாரம் – குழந்தைகளுக்காக இராமானுஜர் கதை: பாட்காஸ்ட்

8. பாஸ்டனில் தசாவதாரம்

Dasavatharam Kamal kizhavi old lady kungumam Makeup

India Glitz handwritten copyrights lawsuit Dasavatharam Kamal

English IndiaGlitz handwriting copyright Violations legal Dhasavatharam Kamalahasan

  • Kamal has done the story, screenplay and dialogues. Kamal had written the dialogues for Mumbai Xpress and Virumandi in recent times.
  • The story does not straddle between centuries, but between millennia.
  • Kamal starts off as Rangaraja Nambi who gets under sea along with a Perumal idol. Immediately, the story jumps off 1000 years later, with Kamal being shown as a scientist in America.
  • One of the 10 roles the actor doing in Dasavatharam is based on popular pop singer Daler Mehendi.
  • Jayapradha is playing a prominent role in Kamal Haasan’s Dasavatharam.
  • Kamal had played ‘Nepoleon’ in a pivotal role in his Virumandi. Now in his Dasavatharam, he has cast him in the role of a king.
  • திரைப்படத்தில் சுனாமியும் இடம்பெறுகிறது.

நன்றி: இந்தியா க்ளிட்ஸ்

Kosu (Novel) – Pa Raghavan : Bits, Metaphors, Quotes

  • கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு
  • சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.
  • ஆட்சி கையில் வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா
  • வாழ்க்கை சுலபமானதுதான். பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத பட்சத்தில்.
  • பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்ட செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.
  • எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.
  •  துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.
  • எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது. அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது.
  • கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கை கூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்கு தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரெண்டு சென்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும்.
  • எப்போதுமே தொடக்கம்தான் சிக்கல்களும் பிரச்னைகளும் கொண்டது. ஒரு படி ஏறிவிட்டால் போதும். பின்னால் வருபவர்கள் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
  • குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகி விடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.
  • ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.
  • சிறியதொரு குன்று போலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும்.
  • ஒரு கட்டத்துக்கு மேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஒடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம்கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.
  • காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது.
  • தீக்குளிச்சாங்க நிரூபிக்க முடியும்? பேசுனா, அரசியல்வாதி பேச சொல்லித் தரணுமான்னுவிங்க. பேசாம திரும்பிப் போனா திமிரப்பாருன்னுவிங்க. நொந்துபோன மனச, அனுமாரு போட்டோ மாதிரி பொளந்துகாட்டத் தெரியலிங்க எனக்கு.

Kosu (Novel) – Paa Raghavan

கொசுவைக் குறித்த முன்னுரையோடு இந்த நாவல் குறித்த விமர்சனத்தைத் தொடங்கலாம்.

கதைப்படி, தொண்டன் என்பவன் கொசு.

அரசியல் என்னும் ‘நிர்வாண சாமியார்களின் குமுகாயத்தில்’ கொசுவுக்கு சிப்பந்தியாக பணி. சுதந்திரமாக ஆடை களைந்தவர்கள் அனுபவித்து மகிழ்வதை கொசு ஆசையுடன் பார்க்கும். காட்டன் மறைத்த தேகத்தை அணுகுவது எளிது. இடுக்கு போர்ஷன்களில், அவாவுடன் நெருங்கி மறைவாக உறிஞ்சி விட்டு கொசுவாகப் பறந்து விடலாம். மில்லிமீட்டர் மேலாடை கூட மறைக்காத இராசவட்டத்தின் அண்டப் பெருவெளியில், எங்கு தொடங்குவது, எப்படி தொடருவது என்று அடி முடி அறியவொண்ணா கட்சிக்கடலில் தொண்டர்கள் குழம்பும்.

கொசுக்கள் எயிட்ஸை பரப்பாது என்றாலும், சிக்கன் குனியாவில் முடங்க வைக்கும். டெங்குக் காய்ச்சலில் சாவடிக்கும் திறமும் கொண்டது. வாரிசு அரசியலை மீறி புதிய முதல்வர்களை கொடுக்க முடியாவிட்டாலும், கவுன்சிலரின் காலை வாரி விடும் திறன் படைத்தது. சில சமயம் எம்.எல்.ஏ.க்கள் கவிழ்வதால் ஆட்சி மாற்றங்களைக் கூட தந்து விடும் சக்தியும் படைத்தது.

ஓ +வ், ஏ1பி -வ் என்றெல்லாம் சாதி, சமயம் பார்க்காது, கிடைக்கக்கூடியதை வைத்து பிழைப்பு நடத்தும். தொண்டனுக்கு டெமொக்ரட்ஸ், ரிபப்ளிகன் என்னும் பற்றெல்லாம் கிடையாது. ஏதொவொன்றை சிக்கென்று பற்றிக் கொண்டு வாழ்க்கையை தள்ளிக் கொள்ளும்.

ஒரே அடியில் கொசுவை அடிப்பது விக்ரமனின் ஒரே  பாடலில் லட்சாதிபதியாகும் சுகானுபவம் நிறைந்த மனச்சாந்தியை அளிக்கவல்லது. உங்கள் அலுவல் கோபம், இல்லத்தரசி சமையலில் உள்ள நொள்ளை, மழலைகளின் தெனாவட்டு அலட்சியம் என்று அத்தனையும் நொடி நேரத்தில் கொசு நசுக்கப்படும்போது மோட்சம் பெறும். முறையே, மேலிடத்து அருள்பாலித்தல், உள்கட்சிப் பூசல், தொண்டர் படை சேர்ப்பு, என்று அத்தனையும் நொடி நேரத்தில் தொண்டன் என்னும் கொசுவேட்டையில் சித்திக்கும்.

அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சின்னமாக மாகாணத்தின் பறவை, மாகாணத்திற்கான கொடி, எல்லாம் உண்டு. அவ்வாறு சென்னைக்கு என்றாவது என்ன பிராணி தேர்ந்தெடுக்கலாம் என்று யோசிப்பார்களேயானால், ‘கொசு’ என்பதுதான் மதராஸின் ஒருமித்த கருத்தாக இருக்கும்.

கடைசியாக, கொசு பாட்டுக்கு தானுண்டு, தன் பறத்தல் உண்டு என்று வீட்டில் பறக்கும் செல்லப் பிராணியான போல் இருந்தால், சிறுநீர் முதல் சிற்றுண்டி வரை சமபந்தி போஜனமாக சிசுருஷைகள் நடக்கும். கொசு போல் தன் வேலையை மனிதரிடம் காண்பித்தால்தான், அடிபட்டு கொல்லப்படுகிறார்கள்.

யானையின் காதில் புகுந்த கொசு என்று பெரியவர்களைப் பாடாய்படுத்திய கொசுவின் கதைகளை ‘சிவாஜி’ சினிமாக்கள் சொல்லும். பா. ராகவனின் கொசு, அசல் அனுபவங்களின் ரீங்காரமாக, நிஜத்தை, யதார்த்தத்தை டைலர் முத்துராமன் கொண்டு தைக்கிறது.

(தொடரலாம்)

The Ice cream flavor Personality Test

You scream, I scream – what’s your favorite ice cream? Believe it or not, the flavor you favor may tell something about your personality. For example, if you’re screaming for vanilla, which of the following is likely true?

A. You tend to keep your emotions in check.
B. You rely more on logic than intuition.
C. You look for secure romantic relationships.
D. You set moderate goals for yourself.

விடைகள் இங்கே:
What Ice Cream Flavor Are You?
Ice Cream Flavor Personality Test
Personality Quiz Site – tests and quizzes

Anbumani chats with ex-colleague Dayanidhi Maran

AnbumanI Ramadoss dayanidhi maran quote

Inspired by: வ..வ..வம்பு

10 things we didn’t know last week – BBC (Jul 8)

  • Women are no more talkative than men, but use more personal pronouns – “he”, “she” and “I” – while the male of the species talks more about things, so use “a”, “an” and “the” more.
  • Yawning keeps you alert.
  • Pollution kills 750,000 people in China every year.
  • Tony Blair proposed to Cherie while she was cleaning a loo.

முழுவதும்

Political Cartoons (Week of July 9)

Coop elections dinamani mathy polls comparison DMK abuse PMK

More Satire

Karunanidhi Kalainjar aandi dinamani Coop elections Cancel PMK Cartoon

President elections cancel coop polls DMK cartoon 12 adade

Continue reading

’00s Tamil Movies with 50’s Cliches – Sannasi

உலகத் திரைப்படம் பார்ப்பவனெல்லாம் ஏதோ தோஷிரோ மிஃபுனேவும் லிவ் உல்மனும் திரையில் வந்ததும் பேப்பர் கிழித்து பறக்கவிடும் கான்ஃபெட்டி கந்தசாமிகள் மாதிரியான உங்களது இதுபோன்ற கருத்துக்களை இதற்கு முன்பும் பார்த்த நினைவு. உலகத் திரைப்படங்களிலும் குப்பைகளைத் தாண்டித்தான் நல்ல படங்கள் என்று முடிவெடுக்கவேண்டியிருக்கிறது.

Continue reading

Arasu Bathilgal – Tamil Nadu Politics

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

“காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது” என்பதற்கு நல்லதொரு உதாரணம்?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவானேன், பாவம் அந்தச் சகோதரர்களை விட்டு விடுவோம்.

—————————————————————————–

பி.ராஜாமணி பெரியசாமி, முத்தம்பட்டி.

அடுத்தடுத்து வெற்றி கிட்டாமைக்கு எது காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

யாரைச் சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவையா?.