அமெரிக்க தேர்தல்: வெளியுறவுக் கொள்கை

ராஜேஷ் சந்திரா:

1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!

1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).

1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.

ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.

இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.

அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.

1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.

1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.

காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.

1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,

2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?

மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.

லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.

3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?

ஒபாமாவினால் பழசாகும் ஜோக்ஸ்

  • Today on Wall Street, there are only 2 positions:

“Cash”…and “Fetal”

  • Q. What’s the capital of Iceland?

A. About $3.50

  • “I went to buy a toaster — they threw in a free Bank!”
  • Q: In these busy market times, how can you get the attention of your broker?

A: Say, “Hey, waiter!”

  • Q. What do you call 12 investment bankers at the bottom of the ocean?

A. A good start.

  • Q. What’s the difference between an investment banker and a large pizza?

A. A large pizza can feed a family of four.

  • “This Financial Crisis is worse than a divorce. I’ve lost half my net worth and I still have a wife.”
  • “Get my broker, Miss Jones.”

“Yes sir. Stock, or Pawn?”

  • Q. How do you get a broker down from a tree?

A. Cut the rope.

  • Q: What’s the definition of optimism?

A: An investment banker who irons five shirts on a Sunday evening.

  • ”President Bush’s response to this economic crisis was to meet with some small business owners at a soda shop in San Antonio, Texas, this week”

”Well, the bad news? The small business owners are now General Motors, General Electric, and Century 21.”

  • What’s the difference between an investment banker and a pigeon?

A pigeon can still make a deposit on a Ferrari. Box: New Terms for the 2008 market

  • CEO –Chief Embezzlement Officer.
  • CFO– Corporate Fraud Officer.
  • BULL MARKET — A random market movement causing an investor to mistake himself for a financial genius.
  • BEAR MARKET — A 6 to 18 month period when the kids get no allowance, the wife gets no jewelry.
  • VALUE INVESTING — The art of buying low and selling lower.
  • P/E RATIO — The percentage of investors wetting their pants as the market keeps crashing.
  • BROKER — What my broker has made me.
  • STANDARD & POOR — Your life in a nutshell.
  • STOCK ANALYST — Idiot who just downgraded your stock.
  • STOCK SPLIT — When your ex-wife and her lawyer split your assets equally between themselves.
  • FINANCIAL PLANNER — A guy whose phone has been disconnected.
  • MARKET CORRECTION — The day after you buy stocks.
  • CASH FLOW– The movement your money makes as it disappears down the toilet.
  • YAHOO — What you yell after selling it to some poor sucker for $240 per share.
  • WINDOWS — What you jump out of when you’re the sucker who bought Yahoo @ $240 per share.
  • INSTITUTIONAL INVESTOR — Past year investor who’s now locked up in a nuthouse.
  • PROFIT — An archaic word no longer in use.

ஃப்ளிக்கர்வாசிகள்

ரொம்ப நாளாய் ட்ராஃப்டில் அமர்ந்து ஆறிப் போச்சு. இப்போதைய கவனமெல்லாம் அமெரிக்க அதிபரிலேயே மூழ்கி இருப்பதால், ட்ராஃப்ட் அப்படியே பப்ளிஷ் ஆகிறது (:

அன்று ட்விட்டரில் கவர்ந்த சில நட்சத்திரங்களை குறித்த பதிவு. இன்று ஃப்ளிக்கர்.

தமிழ்ப்பதிவுகள் பெருக ஆரம்பித்த காலத்திலேயே, அனைத்தையும் வரிசைக்கிரமமாக வாசிக்க தமிழ்மணம் வந்து சேர்ந்தது. புகைப்படத்திற்கேது மொழி என்பதாலும், அவரவருக்கு பிடித்த வலையகங்களில் நிழற்படங்களை வைத்துக் கொண்டதாலும் ஓரிடத்தில் அனைத்து சென்னைப் படங்கள், மொத்த தமிழ்நாட்டு புகைப்படங்கள் என்று பார்ப்பது சற்று சிரமம்தான்.

ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான சுவையான படங்களைப் பார்க்க ஃப்ளிக்கர் லீச் பயன்படும்.

உதவிய பதிவுகள்:

1. Thomas Hawk’s Digital Connection: Top 10 Hacks on Flickr

2. Thomas Hawk’s Digital Connection: Top 10 Ways to Find Great Photos on Flickr

3. சிவியார்: என் எண்ணங்கள் எழுத்துக்களாய்: “காஞ்சி மற்றூம் வேலூர் பயணக்குறிப்புகள்”

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: III

அமெரிக்கத் தேர்தல்  தகிடுதத்தங்கள்: I
அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: II

5.பொய் சொல்லப் போறோம்
மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் குறைகளுக்கும் மேலாக அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களும் சில அரசு அதிகாரிகளுமே மக்களை குழப்பிவிடும் விஷமத்தனத்தைச் செய்யும் வழக்கமும் கிட்டத்தட்ட அண்மைய தேர்தல்கள் அனைத்திலும் தலைதூக்குகின்றன. 2008 தேர்தலில் ஏற்கனவே கறுப்பின நிறுபான்மையினர் வாழும் பல பகுதிகளில் வாக்களிக்கச் செல்பவர்கள் Parking Violations உட்பட்ட சிறு சட்ட மீறல்கள் செய்தவர்களாயின் கைது செய்யப்படுவார்கள் என துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சில இடங்களில் துண்டு பிரசுரங்களில் வாக்காளர் எண்ணிக்கை அதிகமாயிருப்பதனால் இந்த வருடம் ரிப்பப்ளிக்கன் கட்சிக்காரர்களுக்கு செவ்வாய் கிழமையும் டெமக்ராட்டிக் கட்சிக்காரர்களுக்கு புதன்கிழமையும் தேர்தல்கள் நடக்க இருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன.

சில மாவட்டங்களில் அரசு அதிகாரிகளே மக்களை குழப்பும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். காலராடோவில் வெளி மாநில மாணவர்கள் வாக்காளர்களாக பதிவு செய்யக் கூடாது என அதிகாரி ஒருவர் தவறாக அறிக்கை ஒன்றை கல்லூரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

மின்னஞ்சல்கள் மூலமும் இத்தகைய தவறான செய்திகள் வாக்குப் பதிவை குறைக்கும் வகையில் பரப்பப்படுகின்றன. இவை குறிப்பாக ஊடகங்களை கவனிக்காத அடித்தட்டு மக்களை குறிவைத்து நடத்தப்படும் பிரச்சாரங்களாகும்.

முறையற்ற வாக்காளர் பதிவு டெமெக்ராட்டிக் கட்சிக்கு எதிரான வாதமாகவும், வாக்காளர்களை பயமுறுத்தி அல்லது திசை திருப்பி வாக்களிக்க விடாமல் செய்வதை ரிப்பப்ளிக்கன் கட்சிக்கு எதிரான வாதமாகவும் எப்போதும் வைக்கப்படுகிறது.

அஞ்சல் வழியே வாக்குகளை அனுப்பும் முறயிலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. 2000ம் ஆண்டு தேர்தலில் ஒகையோ மகாணம் எல்லா வாக்குகளையும் அஞ்சல் வழியே பெற்றது இது பெரும்பான்மை வாக்குகள் வருவதை ஊக்குவித்தது(80%). இருப்பினும் பலரும் தங்கள் வாக்குச் சீட்டை வீட்டில் இருந்த வேறொருவர் பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த முறையில் வீட்டில் பலமுள்ளவர்கள் பிறரை தங்கள் விருப்பத்திற்கேர்ப்ப வாக்களிக்கச் செய்யும் வாய்ப்பும் உள்ளது.

டெக்சாசில் அஞ்சல் வழி வாக்குகளைப் பெற சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் சிலர் காசு கொடுத்து வாக்குகளை வாங்குகின்றனர் எனவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. பல கல்லூரி மாணவர்களும் தாங்கள் அஞ்சல்வழி ஒரு மாநிலத்திலும், நேரடியாக இன்னொன்றிலும் இருமுறை வாக்களித்ததாகக் கூறியுள்ளனர்.

ஜனநாயகம் ஒரு சமரச அமைப்பு என்பதை தேர்தல் முறைகேடுகளும், குழப்படிக்கும் சட்டங்களும் மேலும் வலியுறுத்துகின்றன. அமெரிக்க தேர்தல் முறையில் இன்னும் பல மாற்றங்களும் செய்யப்படவேண்டும் என்பதும் இது காலத்திற்கேற்ப செப்பனிடப்பட வேண்டிய அமைப்பு என்பதும் இங்குள்ள பல அரசியல் பண்டிதர்களின் கருத்துமாகும்.

பல மகாணங்களிலும் இழுபறி நிலையில் கணிப்புகள் இருக்கும் 2008 தேர்தலில் முன்பில்லாத வகையில் கோடிக்கணக்கில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்திருக்கும் நிலையில் குழப்பம் மிகுந்த அமெரிக்க தேர்தல் முறை நிறைவான முடிவைத் தருமா இல்லை சந்தேகங்களுடன் நிறைவு பெறுமா என்பதற்கு நாளை விடை கிடைக்கலாம்.
===
நன்றி: டைம், விக்கிபீடியா, http://findarticles.com/

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பதனால் இன்னுமொரு வித்தியாசம்!

இந்த தேர்தலில் ஓபாமா வேட்பாளராக இருப்பது பல அமெரிக்கர்களுக்கு வாக்களிப்பது பெருங்கடமையென நினைவுறுத்துகிறதென்றால் அதில் தவறேதுமிருக்காது.

இதுவரை வாக்களிக்கவே எண்ணம் இல்லாமலிருந்த பல கறுப்பர்கள் (60-70 வயதிலும்) இந்த முறை வாக்குச்சாவடிக்கு முதல் முறையாக வந்து வாக்களிக்கவிருக்கின்றனர்.
ஒபாமா தேர்தல் குழுவினரின் தீவிர முயற்சியாலும், ஓபாமா மீதான ஈர்ப்பாலும் இளைய, புதிய வாக்காளர்கள் பலர் வாக்களிக்கப் பதிந்திருக்கின்றனர், இவர்களில் பெருவாரியானவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

மேற்கண்ட இரு காரணங்களால் தூண்டப்பட்டு, ஆதரிக்கவும் எதிர்க்கவும், இதுவரை நடந்த தேர்தல்களில் ஒட்டுப் போட விருப்பமில்லாதவர்கள் வாக்குச்சாவடிக்கு வரவிருக்கின்றனர்.
இது தவிர, எப்போதும் போல் வாக்களிப்பதைக் கடமையாய்க் கொண்டவர்கள் வாக்களிக்கவிருக்கின்றனர்.

இந்த தேர்தலின் வாக்குப் பதிவு நிச்சயமாக முன்னொப்போதுமில்லாத அளவிற்கு இருக்கப் போகிறது. வாக்குப் பதிவு தினத்தில் நீண்ட வரிசைகளும் பெரும் காத்திருப்பும் அதிகமிருக்கப் போகிறது.

NPR-இல் கேட்ட தகவலின்படி, வாக்குப்பதிவு அலுவலர்களின் சராசரி வயது 72, கேள்விக்குரிய இந்தத் தகவல் குழப்பத்தையும் தாமதத்தையும் கூட்டவிருக்கிறது.

LA Times-இல் இன்று வந்துள்ள தகவலின்படி, நவம்பர் 4 தேர்தல் நாளாக இருந்தாலும், அக்டோபர் 25 அன்றிலிருந்தே லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி பதிவாளர் அலுவலகத்தில் வாக்குப் பதிவது(early voting) ஏற்கனவே தொடங்கிவிட்டது. ஒரு நாளைக்குக் குறைந்தது 2000 வாக்குகள் பதிவாகின்றன.  நவம்பர் 1 சனிக்கிழமையன்று கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கு குறையாமல் காத்திருந்து வாக்களித்துச் சென்றிருக்கின்றனர்.  நாளை நவம்பர் 4 வரப்போகும் பெரும் கூட்டத்திற்கும் காத்திருப்புக்கும் இது முன்னோட்டமே!

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – II

அமெரிக்கத் தேர்தல்  தகிடுதத்தங்கள்: I

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள்: III

3. எந்திரன்
அமெரிக்கத் தேர்தல் முறை குறித்த கவலைகள் மிக அதிகமாக எழுந்தது 2000ம் ஆண்டு நடந்த தேர்தலின்போதுதான். மோசமாக வடிமவமைக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் மக்களை குழப்பிவிட ஆயிரக்கணக்கில் வாக்குகள் செல்லாத வாக்குகளாகிவிட்டது. முடிவில் அல் கோர் ஃப்ளோரிடாவையும் அதிபர் பதவியையும் கோட்டைவிட நேர்ந்தது. தற்போது அத்தகைய வாக்குச் சீட்டுகள் குறைந்து மத்திய அரசின் $3.9 பில்லியன் திட்டத்தின் வாயிலாக பரவலாக வாக்கு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த முறையும் நிறைவானதாயில்லை.

வாக்குச் சீட்டு வடிவமைப்பு பிரச்சனை இந்த முறையும் தலைதூக்கியுள்ளது. அஞ்சல் வழி வாக்குகளை சேகரிக்க மெக் கெய்னின் பிரச்சாரக் குழு வடிவமைத்து அனுப்பிய வாக்குச் சீட்டில் தான் வாக்களிக்க தகுதியானவரா என்பதைச் சுட்டும் ஒரு கேள்வியும் இருந்தது. இது தேவையற்றதென்றாலும் அதை டிக் செய்யாத வாக்குகளை தேர்தல் அதிகாரி நிராகரிக்க, பின்னர் உச்ச நீதிமன்ற தலையீட்டால் அந்த வாக்குகள் எண்ணப்பட்டன. காலராடோ மகாணத்தில் இதேபோல குழப்பமாக வடிவமைக்கப்பட்ட வாக்காலர் பதிவு விண்ணப்பங்கலால் 6400 பேர் வாக்காலர் பட்டியலில் இடம்பெற முடியவில்லை.

2000ம் ஆண்டு தேர்தலுக்குப் பின் அமெரிக்க தேர்தல் முறை ஒரேயடியாக எந்திர வாக்குப் பெட்டிகளின் பயன்பாட்டுக்குத் தாவியது. எந்திர வாக்குப்பெட்டிகள் சரியான முறையில் தயார்படுத்தப்பட(Calibrate) வேண்டும். ஒரு பொத்தானை அழுத்தினால் ஒபாமாவிற்கு என்றும் இன்னொன்றை அழுத்தினால் மெக்கெய்ன் என்றும் திரையில் தெரிகிறது. ஆனால் உள்ளே அதை தவறுதலாகவோ, வேண்டுமென்றோ மாற்றி பதியச் செய்யும் வாய்ப்பும் உள்ளது. 2006 அமெரிக்க காங்கிரஸ் தேர்தலில் (பெயர்ப்பொன) ஃப்ளோரிடாவில் டெமெக்ராட்க ஆதரவு அதிகமாயிருந்த 13வது மாவட்டத்தில் ரிப்பப்ளிக்கன் வேட்பாளர் 369 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாது சர்ச்சைக்குள்ளானது. 18,000க்கும் மேலான வாக்குகள் வாக்கு சேகரிக்கும் எந்திரத்தால் பதிவு செய்யப்படவேயில்லை. அதாவது வாக்காளர் பொத்தானை அழுத்தினார் ஆனாலும் அது பதிவுசெய்யவில்லை. எந்திரங்கள் கோளாறுக்குட்படுபவை என்பதை இது உணர்த்தியது. இதன் பின்னர் ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மகாணங்கள் எந்திர வாக்குகள் தாளிலும் பதிவு செய்யப்பட வேண்டும் எனும் சட்டத்தை உருவாக்கின. தேசிய அளவில் இதை செயல்படுத்த முயற்சிகள் தற்போது நடைபெறுகின்றன. இருப்பினும் பல மகாணங்களும் எந்திர வாக்குப் பதிவை மட்டுமே நம்பியுள்ளன.

எந்திர வாக்கு சேகரிப்பு முறையை அமல் படுத்தும் கெடு 2006ல் முடிந்துவிட்ட போதும் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் இயந்திரங்களற்ற பழைய வாக்கு சேகரிப்பு முறையின்படியே வாக்களிக்கவுள்ளார்கள்.

இயந்திரக் கோளாறுகளும் வாக்குச் சீட்டு குளறுபடிகளும் ஒருபுறமிருக்க போதுமான வாக்குச் சாவடிகளை திறப்பதிலும் அங்கே வாக்காளர் பதிவிர்கேற்ப எந்திரங்களை, வாக்குப் பெட்டிகளை நிறுவதிலும் பல ஏற்ற இரக்கங்கள் உள்ளன. குறிப்பாக புதிதாக வாக்களிக்கும் உரிமைபெற்ற பல இளைஞர்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாயுள்ளனர். இருப்பினும் பல பகுதிகளிலும் வாக்குச் சாவடிகள் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப திறந்து வைக்கப்படவில்லை எனும் குற்றச்சாட்டு இரு கட்சியினராலும் முன்வைக்கப்படுகிறது. 2004 தேர்தலில் ஒகையோ மகாணத்தில் டெமெக்ராட்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் குறைவான வாக்குப் பெட்டிகளே இருந்தன எனும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பலர் காத்திருக்க நேர்ந்ததாயும் ஆயிரக்கணக்கில் வாக்காளர்கள் திரும்பிச் சென்றதாயும் கணக்கிடப்பட்டுள்ளது. வாக்குப் பெட்டி, எந்திர எண்ணிக்கை குறித்த சட்டங்களும் மகாணத்துக்கு மகாணம் வேறுபடுகின்றன. விஸ்கான்சினில் 200 வாக்காளர்களுக்கு ஒரு பெட்டி, விர்ஜினியாவில் 500 முதல் 750 பேருக்கு ஒரு பெட்டி காலரடாவில் “போதுமான அளவுக்கு”.

4. புதிய முகம்
முன்பே சொன்னதுபோல வாக்காளர் பதிவில் இருக்கும் குளறுபடிகளையும், வாக்களிப்பதில் மோசடிகளையும் தவிர்க்கவும் முதன் முறையாக வாக்களிக்க வருபவர்கள் தங்கள் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என சட்டம் உள்ளது. மிக்கி மவுஸ் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும் வாக்களிக்க இயலாமல் போவது இதனால்தான்.

இந்த சட்டமும் மகாணத்துக்கு மகாணம் வெவ்வேறாக அமுல்படுத்தப்படுகிறது. பென்சல்வேனியாவில் மாதாந்திர பில்களில் (Utility Bills) ஒன்றை கொண்டு வந்தால் போதுமானது. இண்டியானாவில் அரசு வழங்கும் ஓட்டுநர் உரிமம் உட்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டை தேவை. இதனால் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள் வாக்களிக்க செல்லாத நிலமை உள்ளது, ஓட்டுநர் உரிமம் அல்லாத அடையாள அட்டைகளைப் பெற இயலும் என்றபோதும். ஒரு கணக்கெடுப்பில் 2001ல் வாக்காளிக்கும் வயதினரில் 6 முதல் 10 சதவீதத்தினர் அடையாள அட்டை இல்லாதவர்களாயிருந்தனர்.

பல வாக்காளர்களுக்கும் இந்த நடைமுறைகள் தெரிந்திருக்காதது இன்னொரு கசப்பான செய்தி. இதனால் வாக்குச் சாவடி வரை சென்று திரும்புவர்களும் உண்டு. இவர்களில் பலரும் சமுக்கத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழைகளும் சிறுபான்மையினருமாகும்.

(தொடரும்…)

அமெரிக்கத் தேர்தல் தகிடுதத்தங்கள் – I

அமெரிக்கா ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கையும் பெருமையும் கொண்ட நாடாகத் தன்னைக் கருதிக்கொள்கிறது. கிட்டத்தட்ட இறை நம்பிக்கையை ஒத்த நம்பிக்கையும் பெருமையும் அது. உலகெங்கிலும் ஜனநாயகத்தை நிறுவிவிட வேண்டும் என்பதை ஒரு உன்னத நோக்கமாகக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. ஆயினும் ஜனநாயகத்தின் அடிப்படையான மக்கள் பிரதிநித்துவத்தின் உயரிய வெளிப்பாடான பொது வாக்கெடுப்பு முறை அமெரிக்காவில் மிகவும் குழப்பம் மிகுந்ததும் குறைபாடுகளுள்ளதுமாகவே காணப்படுகிறது.

1. கல்லூரிச் சாலை
அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பவர்கள் எலக்டோரல் காலெஜ் எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஆவர். அமெரிக்காவின் மகாணங்கள் ஒவ்வொன்றிற்கும் அதன் செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் சபை (House of representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கும் சமமான எலக்டோரல் காலேஜ் வாக்குகள் வழக்ங்கப்படுகின்றன. மொத்தம் 538 எலக்டோரல் காலெஜ் வாக்குகளில் 270ஐப் பெறுபவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினரைப்போல தான் விரும்பும் எவருக்கும் ஆதரவளிக்கும் வாய்ப்பு எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கு உண்டு. இருப்பினும் இவர்கள் அவ்வாறு வாக்களிப்பதில்லை. அமெரிக்காவில் 50ல் 48 மகாணங்கள் தங்கள் மகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளருக்கே அத்தனை எலக்டோரல் காலேஜ் வாக்குகளையும் தந்துவிடுகின்றன. ஆக மக்கள் பிரதிநித்துவம் மகாண அளவிலானதாகிவிடுகிறது. இந்தியாவைப்போல ஒவ்வொரு தொகுதியும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை, கீழ்நிலை பிரதிநித்துவத்தை இந்த முறை மறுதலிக்கிறது. மெய்ன்(Maine) மற்றும் நெபராஸ்கா மகாணங்கள் மட்டுமே மாவட்டவாரியாக வெற்றி பெற்ற வேட்பாளருக்கு எலக்டோரல் காலெஜ் வாக்குகளை வழங்குகின்றன.

இந்த முறையின்படி Popular Vote எனப்படும் நாடு முழுவதுமான வாக்கு எண்ணிக்கையில் அதிக வாக்குகளைப் பெற்ற அதிபர் வேட்பாளர் போதுமான அளவு எலக்டோரல் காலெஜ் வாக்குகளைப் பெற முடியாமல் தோல்வி அடையும் நிலை உள்ளது. 2000ம் ஆண்டு தேர்தலில் அல் கோர் அவ்வாறே தோல்வியைத் தழுவ நேர்ந்தது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் அவ்வாறு தோல்வியடைந்துள்ளனர்.

எலக்டோரல் காலேஜ் முறையை மாற்றியமைக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. குறிப்பாக மகாணங்களில் அதிக வாக்குகளைப் பெற்றவரே அந்த மகாணத்தின் அனைத்து பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறும் முறையை மாற்றி நாடளவில் அதிக வாக்குகளைப் பெற்ற (Most popular votes) வேட்பாளர் பெறும் முறையை உருவாக்கும் முயற்சி நடந்துவருகிறது. இது பிராந்திய மக்களின் பிரதிநித்துவத்தை குறைத்துவிடும் முயற்சியாகும். சரியான மக்கள் பிரதிநித்துவம் மாவட்ட வாரியாக, சிறிய தொகுதிகள் வழியாக நிலைநாட்டப் படுவதே சிறப்பானதாகும். இத்தகைய கீழ்நிலை பிரதிநித்துவம் பிராந்திய அரசியலுக்கு குறிப்பாக சாதி, இன அரசியலுக்கு வழிவகுக்கும் என்பது வேறொரு விவாதத்திற்கான கருத்து.

2. பட்டியல்
அமெரிக்க வாக்காளர் பட்டியல் தற்போது கணினிவழி பதிக்கப்படுகிறது. கணினிமயமாக்கல் வேலையை எளிதாக்கினாலும் முற்றிலும் குறைகளற்ற முறையல்ல. குறிப்பாக தட்டச்சுப் பிழைகளால் தங்கள் வாக்குகளை பலரும் இழக்க நேரிடுகிறது.

வாக்காளர் பட்டியலில் பதிவு செய்தவரின் பெயர் விபரங்கள் ஏற்கனவே இருக்கும் அரசு கணினி தகவல் தொகுப்புகளான (Databases) ஓட்டுநர் உரிமம் பெற்றோரின் தகவல் போன்ற அரசின் தகவல் தொகுப்புக்களோடு ஒப்பிடப்படுகிறது. ஒரு எழுத்து மாறினாலும் வாக்காளரின் தகவல் சரிபார்க்கப்பட முடியாதத்து அல்லது தவறானது என கணினி கூறிவிடும். விஸ்கான்சின் மகாணத்தில் 22% பதிவுகள் இம்முறையில் நிராகரிக்கப்பட்டுள்ளன இதில் தேர்தலை கண்காணிக்கும் ஆறு முன்னாள் நீதியரசர்களில் நான்குபேரின் தகவல்களும் அடக்கம். இறுதியில் விஸ்கான்சின் வாக்காளர் பதிவை ஒப்பிட்டு சரிபார்க்கும் முறையையே கைவிட்டது. ஆனால் ஃப்ளோரிடாவில் 9000 புதிய வாக்காளர்கள் இம்முறையில் வாக்குரிமையை இழந்துள்ளார்கள். இவர்கள் வாக்களிக்கலாம் ஆனால் முறையான ஆவனங்களை சமர்பித்தபின்னரே இவர்களின் வாக்குகள் எண்ணப்படும். ஒகையோவில் 2 லட்சம் பேரின் பதிவுகள் சரிபார்க்க இயலாதவையாக உள்ளன.

வாக்காளர் பதிவுகளை கண்காணிக்கும் அதிகாரிகள் பலரும் மக்களை மிரட்டும் செயல்களும் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக ஹிஸ்பானிக் என அழைக்கப்படும் தென்னமெரிக்க வம்சாவழியினரை அவர்கள் அமெரிக்க குடிமக்களானாலும் தேவையற்ற ஆதாரங்களைக் கேட்டு மிரட்டுவது ஜியார்ஜியா மகாணத்தில் நடந்துள்ளது. மிசிசிப்பியில் தேர்தல் அதிகாரி ஒருவர் தன் வீட்டிலிருந்து வேலை செய்கையில் தவறுதலாக 10,000 வாக்கலர்களை பட்டியலிலிருந்து நீக்கிவிட்டார். பின்னர் இவை பட்டியலில் சேர்க்கப்பட்டன.
வாக்காளர் பதிவு முற்றிலும் பிரச்சனையற்ற முறையாக இல்லை. லட்சக்கணக்கில் வாக்குப் பதிவுகள் விலக்கப்பட்டிருக்கலாம் எனக் கவலை கொள்கிறது டைம் பத்திரிகை. (Millions have been stripped from voter rolls in key states, but the legitimacy of those eliminations remains unclear.).

வாக்காளர் பதிவில் மேலும் ஒரு கவலைதரும் விஷயம் இந்தத் தேர்தலில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஏக்கார்ன் (ACORN) எனும் தன்னார்வக் குழு ஏழ்மை நிலையில் இருப்பவர்களை அவர்களின் பல உரிமைகளுக்காகவும் ஒருங்கிணைக்கிறது. தேர்தல் நேரத்தில் அவர்கள் இத்தகைய கீழ்நிலையில் இருக்கும் மக்களை (குறிப்பாக கறுப்பினத்தவர்கள், பிற சிறுபான்மையினர்) வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யயும் முயற்சிகளில் ஈடுபடுகிறது. இம்முறை ஏக்கார்ன் தனது பிரதிநிதிகளிடம் வாக்காளர் பதிவு எண்ணிக்கைக்கேற்ப உங்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனச் சொன்னதன் விளைவாக மிக்கி மவுஸ் முதற்கொண்ட கற்பனை பாத்திரங்களின் பெயர்களையும் வாக்காளர் பதிவில் சேர்த்து ‘சேவை’ செய்துவிட்டனர் ஏக்கார்னில் வேலை செய்த 13000 பகுதி நேர வேலையாட்களில் சிலர்.

வாக்காளர் பதிவில் நடக்கும் இத்தகைய முறைகேடுகள் இருபெரும் கட்சிகளான குடியர, ஜனநாயகக் கட்சிகளின் ஆதரவு குழுக்களால் தொடர்ந்து நடத்தப்படும் ஜனநாயகக் கேலிக் கூத்தானாலும் இது முறைகேடான வாக்குப் பதிவுக்கு இட்டுச் செல்வதில்லை. மிக்கி மவுஸ் டிஸ்னி சேனலில் மட்டுமே வாக்களிக்கச் செல்ல முடியும். ஆனால் தவறான வாக்குப்பதிவுகளின் விளைவாக வாக்களிப்பவர்கள் அதீத கட்டுப்பாட்டுகளுக்குள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களின் வாக்குப்பதிவு தீவிர சரிபார்த்தலுக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. இது பல விளிம்புநிலை வாக்காளர்களையும் வாக்குப்பதிவிலிருந்து மறைமுகமாக தடுக்கிறது.

(தொடரும்…)

மாலன்: பராக் ஒபாமா: கனவுகளுக்கும் நிஜங்களுக்கும் இடையில்…

கறுப்பின அமெரிக்கர் ஒருவர் வெள்ளை மாளிகையில் குடியேறும் வாய்ப்பினைப் பெற்றார் என்ற ஒற்றைச் சரித்திர வரி ஒரு புள்ளி விபரமாக முடிந்துவிடுமா? அல்லது அமெரிக்காவிற்கும், உலகிற்கும் கூட, தேவைப்படும் ஒரு திருப்புமுனையாக மாறுமா?

ஒபாமாவினுடைய தேர்தல் வெற்றியை கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் ஊடகங்கள், முக்கியமாக இந்திய ஊடகங்கள், சித்தரிக்க விரும்புகின்றன. அங்கீகரிக்கப்பட்ட அடிமைத்தனம், பாரபட்சம், இனத்தைத் ‘தூய்மைப்படுத்தல்’ போன்ற இழைகள் கொண்ட அமெரிக்க வராலாற்றின் பின்னணியில் பார்த்தால் ஒபாமாவின் வெற்றி சிறப்பு மிக்கதுதான்.

அமெரிக்கக் கறுப்பினத்தவர்கள் இன ஒதுக்கலை எதிர்த்து மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்கள் போராடியது ஏதோ நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பல்ல, ஒரு தலைமுறைக்கு முன்னர்தான். இன்றும் கூட சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை உலக அளவில் மிக அதிகமாக (2.3 மில்லியன்) இருக்கும் நாடு அமெரிக்கா; அதில் 40 சதவீதம் பேர் கறுப்பினத்தவர்கள்.

ஆனால் ஒபாமாவின் வெற்றி முற்றிலும் இன ரீதியாக ஈட்டிய வெற்றியல்ல. அது ஒரு வகையில் அமெரிக்க நடுத்தர வர்கத்தின் ஆசைகள் விழைவுகள் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக அமைந்த வெற்றி. அதிபரை மையமாகக் கொண்ட அமெரிக்க அரசிய்ல் அமைப்பு பெருமள்விற்கு அங்குள்ள வணிக நிறுவனங்களின் பொருளுதவியைச் சார்ந்த அரசிய்ல் அமைப்பு. Corporate Funded) என்பது உலகறிந்த ரகசியம்.

இந்தப் பின்னணியில் மத்தியதர வர்க்கத்தின் குரலில் பேசும் ஒபாமாவின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் காரணமாகவே அதிபர் ஒபாமாவின் முன் நிற்கும் சவால்கள் வேட்பாளர் ஒபாமாவின் முன்னிருந்த சவாலகளைவிடக் கடுமையானவை. அவரே அவரது பிராசரத்தின் போது சொன்னதைப் போல, புஷ் இருந்த இடத்தில் ஒரு ஜனநாயகக் கட்சி வேட்பாளரை அமர்த்திவிடுவதன் மூலம் மட்டுமே தேவையான மாற்றங்களை ஏற்படுத்திவிடமுடியாது.

“உலகமயமான பொருளாதாரத்தில் சிலர் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு வளம் அடைந்திருக்கும் அதே வேளையில் மத்திய வர்க்க அமெரிக்கர்களது, மத்தியவர்க்கத்தை எட்டிவிட வேண்டும் எனக் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பவர்களது அமெரிக்கக் கனவு மேலும் மேலும் நழுவிப் போய்க் கொண்டிருக்கிறது” (“While some have prospered beyond imagination in this global economy, middle-class Americans — as well as those working hard to become middle class — are seeing the American dream slip further and further away,”) இவை அயோவா மாநிலத்தில் பிரசராத்தின் போது ஒபாமா சொன்ன வார்த்தைகள்.

ஒரு நிலைக்கு மேல் வளர்ச்சி அடையமுடியாமல் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் நடுத்தர வர்க்கத்தின் இந்த யதார்த்தத்தை ஒபாமா நன்றாக அறிந்திருக்கிறார். இதற்கான தீர்வு என்ன என்பதையும் அவர் சிந்தித்திருக்கிறார்:

இந்த “முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களுக்கு எதிராக நாம் எழாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.மக்கள் எதைக் கேட்கவிரும்புகிறார்களோ அதை அல்ல, அவர்கள் என்ன அறிந்து கொள்ள வேண்டுமோ அதைச் சொல்கிற தலைமை ஏற்படாதவரை நாம் அந்தக் கனவை மீட்டெடுக்கப் போவதில்லை.” (“We’re not going to reclaim that dream unless we stand up to the corporate lobbyists that have stood in the way of progress. Unless we have leadership that doesn’t just tell people what they want to hear but tells everyone what they need to know.”)

இன்று அமெரிக்கப் பொருளாதாரம் இருக்கும் நிலையில் ஓபாமாவால் ‘ முன்னேற்றத்திற்குக் குறுக்கே நிற்கும் வணிக நிறுவனத் தரகர்களு’க்கு எதிராக எவ்வளவு தூரம் ஓபாமாவால் செயல்பட முடியும்?அப்படி செயல்பட ஆரம்பித்தால் அவரால் எத்தனை நாளைக்குத் தாக்குப் பிடிக்க முடியும்? முதலீட்டை முதன்மையாகக் கொண்ட (Captalist) பொருளாதார அமைப்பில் ‘கார்ப்போரேட்’களை எதிர்த்து – எதிர்க்கக் கூட் வேண்டாம், புறக்கணித்து விட்டு- செயல்படுவது சாத்தியமா? சாத்தியமில்லை என்றால், ‘கை நழுவிப் போன கனவை’ மீட்டெடுப்பது எப்படி?

இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒபாமா தன் பிராசாரத்தைத் துவக்கியபோது, இராக் போருக்கு எதிரான மனநிலை அமெரிக்க மத்தியதர வர்க்கத்திடம் விரவிக் கிடந்தது. அதிலும் தங்கள் பிள்ளைகளை போர்முனைக்கு அனுப்பிவிட்டு நெருப்பின் மேல் நின்று கொண்டிருந்த தாய்மார்களின் நம்பிக்கை ஒபாமா பக்கம் நின்றது.

இன்று, பொருளாதாரம் உருகி ஓடும் நிலையில், இராக் யுத்தம் நாளிதழ்களில் காணாமல் போய்விட்டது. 16ம் பக்கத்தில் ஆறாம் பத்தியில் 10 செ.மீ செய்தியாகக் கூட இடம் பெறுவதில்லை. ஆனால் அந்த யுத்தம் மக்கள் மனதில் இப்போதும் இருக்கிறது. அந்தத் தாய்மார்கள் நெஞ்சில் அந்த நெருப்பு இப்போதும் கனன்று கொண்டிருக்கிறது. ஆரம்ப நாள்களில் தனது பிரசாரத்தின் போது இராக் யுத்தத்தை வன்மையாகக் கண்டித்துப் பேசி வந்தார். ‘இந்த யுத்தத்தை முதலில் இருந்தே எதிர்த்து வந்திருக்கிறேன்’ என்ற ரீதியில் அவரது பேச்சுகள் இருந்து வந்தன. ஆனால் அண்மைக்காலமாக பேச்சின் தொனி மாறி வருகிறது.

‘தாக்குதல் நடத்தும் படைகள் மெல்ல மெல்ல 16 மாத காலத்தில் மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ளப்படும்’ என்று சொல்லும் அவர் அதே மூச்சில், ‘எனினும் பயங்கரவதத்திற்கு எதிரான பாசறைகள்’ (bases against counter terror) அங்கே தொடர்ந்து நீடிக்கும் எனறும் சொல்கிறார். அதை விடத் திடுக்கிட வைக்கும் விஷயம், ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானலும் யுத்தத்தை அதிகரிப்பேன் அவை ‘பயங்கரவாதத்திற்கு எதிரான மையமான புள்ளியாக’ விளங்கும் என்ற அவரது அறிவிப்பு.

இவற்றைக் கொண்டு பார்க்கும் போது அதிபர் ஒபாமா ஆட்சிப் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புக்களை – குவான்டநாமோ கொடுஞ்சிறையை மூடுவது, இராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது போன்ற அறிவிப்புக்களை வெளியிடுவார். ஆனால் வெறும் அடையாள அறிவிப்புக்களாகவே (Tokenism)இருக்கும்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ வேறு ஏதோ ஒரு தேசத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.உலகில் உள்ள 195 நாடுகளில் 130 நாடுகளில் தன் ராணுவத்தை நிறுத்தி வைத்திருக்கும் நாடு அமெரிக்கா என்பதை நினைவில் கொண்டால் எந்த அமெரிக்க அதிபரும் சமாதானப் புறாவாக சிறகு விரிக்க முடியாது, பிணந்தின்னிக் கழுகாவே வட்டமுடியும் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒபாமா தனது ஆரம்ப நாட்களின் அடையாள அறிவிப்புகளுக்குப் பின் பொருளாதாரத்தின் பக்கம் தன் கவனத்தைத் திருப்புவார். வேலை வாய்ப்புக்களை அதிகரிக்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டுவார். வசதிபடைத்தவர்களுக்கு அதிக வரி, மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தில் சலுகை, பணியிலிருந்து ஓய்வு பெறுபவர்களின் சேமிப்பைப் பாதுகாக்கும் நடவடிக்கைகள், பலருக்கு மருத்துவக் காப்பீடு போன்ற சில திட்டங்களை அறிவிக்கலாம்.

ஆனால் அவற்றிற்கு அப்பால் பெரும் அற்புதங்கள் நடந்துவிடும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அற்புதங்கள் நிகழ்த்த அமெரிக்க அரசியல், அதன் அடிஆழத்தில் சுழித்தோடும் நீரோட்டங்கள் இடமளிக்காது. உலகெங்கும் உள்ள மத்தியதர வர்க்கத்து மனிதர்களைப் போல தனது கனவுகளுக்கும், யதார்த்தங்களுக்கும் இடையே ஒரு சம்ன்பாட்டைக் காணுவதிலேயே தனது ஆற்றல்களை செலவிட வேண்டிய ஒருவராகவே அதிபர் ஒபாமா ஆகக்கூடும்.

மாலன்

கவர்ச்சிப்புயல் பேலினும் அமெரிக்க அதிபர் தேர்தலும் – தமிழக செய்தித் தொகுப்பு

ஜி- 8ல் இந்தியாவுக்கு இடம்: மெக்கைன் விருப்பம்

யாஹு

ஜி- 8 அமைப்பில் இந்தியாவுக்கு இடம் அளிக்க வேண்டும் என்று, ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜான் மெக்கைன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், உலக அளவில் இத்தேர்தல் ஏற்படுத்தும் தாக்கத்தை அறிந்து கொள்வதற்காக, ஜான் மெக்கைனின் தேர்தல் பிரச்சார ஆலோசகர் ரிச்சர்ட் ஆர் பர்ட், பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியாவுக்கும் சென்று வந்துள்ளார்.


வேட்பாளர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டை: ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு

தினத்தந்தி

அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதன்படி, கடந்த 2004-ம் ஆண்டுக்கு பிறகு, புதிய அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான குடியரசு கட்சி சார்பில் அரிசோனா மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் ஜான் மெக்கைனும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் இலினாய்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த செனட் உறுப்பினர் பாரக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இவர்களைத் தவிர, லிபரேஷன் கட்சி சார்பில் முன்னாள் எம்.பி. பாப் பார், கான்ஸ்டிடியூசன் கட்சி சார்பில் ரேடியோ தொகுப்பாளர் சக் பால்ட்வின், கிரீன் கட்சி சார்பில் முன்னாள் பெண் எம்.பி. சிந்தியா மெக்கினி, சுயேச்சையாக ரால்ப் நடேர் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

அதிபர் தேர்தலுடன் துணை அதிபர் தேர்தலும் நாளை நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் அலாஸ்கா மாநில கவர்னர் சாரா பாலின் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

தேர்தல் நெருங்கும் வேளையில், ஒபாமாவுக்கு ஆதரவாக அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் கிளிண்டன் பிரசாரம் செய்தார். ஆனால் ஜான் மெக்கைனுக்கு ஆதரவாக, அதிபர் புஷ் பிரசாரம் செய்யவில்லை. புஷ்சின் செல்வாக்கு சரிந்து விட்டதாக கருதப்படுவதால், அவரை யாரும் பிரசாரத்துக்கு அழைக்கவில்லை என்று தெரிகிறது.

இரு வேட்பாளர்களின் ஆதரவாளர்களும், வீடு வீடாக போய் வாக்கு சேகரித்தல், தொலைபேசி மூலம் ஓட்டு கேட்டல் போன்ற வழிமுறைகளில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்த தேர்தலில் ஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக, இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. அவர் அதிபர் ஆனால், அமெரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபர் என்ற பெருமையை பெறுவார். அவர் ஹவாய் தீவில் பிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆவார்.

கவர்ச்சி புயல் என்ற அடைமொழியுடன் பிரபலம் ஆகிவிட்ட சாரா பாலின், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரிகிறது. அவர் வெற்றி பெற்றால், முதலாவது பெண் துணை அதிபர் என்ற பெருமையை பெறுவார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுடன், பதவிக்காலம் முடிவடைந்த 11 மாநில கவர்னர் பதவிக்கான தேர்தலும், 33 மாநிலங்களில் செனட் தேர்தலும், அனைத்து மாநிலங்களிலும் பிரதிநிதிகள் சபை தேர்தலும் நாளை நடக்கிறது.


அதிபர் தேர்தலில் கவர்ச்சி புயல்

தினத்தந்தி

அமெரிக்க அதிபர் தேர்தலுடன், துணை அதிபர் தேர்தலும் நடத்தப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்ட சூறாவளிகளையே குப்புறத் தள்ளிவிடும் புயலாக புறப்பட்டு வந்து இருக்கும், சாரா பாலின், குடியரசு கட்சி சார்பாக துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

’44 வயதானவர், 5 பிள்ளைகளை பெற்றவர்’ என்று யாராவது சொன்னால், அது அப்பட்டமான பொய் என்று அடித்துச் சொல்லலாம். அந்த அளவுக்கு அனைவரையும் கட்டிப்போட வைக்கும் கவர்ச்சிக்கு சொந்தக்காரரான சாரா பாலின், அமெரிக்க அதிபர் தேர்தலை கலக்கப் போகும் கதாநாயகி.

முன்னாள் அழகியான சாரா பாலின் பெயரைக் கேட்டதுமே வாக்காளர்கள் மட்டுமல்ல உலக நாடுகளின் தலைவர்கள் கூட ‘கள் குடித்த வண்டு’ போல மயங்கி விட்டனர். சமீபத்தில் அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, குட்டையான ஸ்கர்ட் அணிந்த சாரா பாலின் கையைப் பற்றியபடி விட்ட ‘ஜொள்ளு’ பாகிஸ்தான் வரை வழிந்து ஓடியது. சாரா சம்மதித்தால், அவரை கட்டி அணைக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார், மனைவி பெனாசிரை இழந்த சர்தாரி.

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தின் கவர்னராக இருக்கும் சாரா பாலின் முகத்தில், பிரம்ம தேவனால் அச்சடிக்கப்பட்ட புன்னகை எப்போதுமே ஒட்டிக் கொண்டு இருப்பதே கொள்ளை அழகு. அதிலும் அவரது காந்த கண்களை சிறைவைக்க முயற்சிக்கும் கண்ணாடி தனி அழகு.

அழகை மட்டுமே மூலதனமாகக் கொண்ட சாரா, 1984-ம் ஆண்டு அலாஸ்கா மாகாணத்தில் நடந்த அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றதில் வியப்பு ஏதும் இல்லை.

வாளிப்பான கால்களுடன் மினி ஸ்கர்ட்டில் வலம் வரும் சாரா, முன்னாள் கூடைப்பந்து வீராங்கனை என்பது கூடுதல் ஆச்சரியம்.

கல்லூரி நாட்களிலேயே அரசியலில் ஆர்வம் ஏற்பட்டு குடியரசு கட்சியில் சேர்ந்தார். அவருடைய அரசியல் பணிக்கு பரிசாக, 1992-ம் ஆண்டில் வாஸில்லா நகர கவுன்சில் உறுப்பினர் பதவியும், 1996-ம் ஆண்டில் வாஸில்லா நகர மேயர் பதவியும் கிடைத்தது.

வாஸில்லா நகர மேயராக 2002-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த சாராவுக்கு மூன்றாவது முறையாக போட்டியிட கட்சியில் ‘சீட்’ கிடைக்கவில்லை. எனினும், அலாஸ்கா மாகாணத்தின் எண்ணை மற்றும் எரிவாயு கமிஷன் தலைவர் பதவியில் நியமிக்கப்பட்டார்.

அதன் பிறகு தனது 42-வது வயதில் (2006-ம் ஆண்டு) அலாஸ்கா மாகாண கவர்னராக வெற்றி பெற்று தற்போதும் அந்த பதவியில் இருக்கிறார்.

சாரா பாலின் என்னும் அழகுப் புயலின் அரசியல் வாழ்க்கை ஏறுமுகத்தில் இருந்த அதே நேரத்தில், அவரைச் சுற்றிலும் பரபரப்பான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை. சாரா பாலினுக்கு பிடிக்காத வார்த்தை உண்டென்றால், அது ‘கருக்கலைப்பு’ தான்.

சாரா பாலின் பற்றி இன்னொரு தகவல். 2006-ம் ஆண்டுதான் முதன் முதலாக பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார், சாரா பாலின். அவர் சென்றுள்ள ஒரே வெளிநாடு எது தெரியுமா? குவைத்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி ஆகிய பெரிய கட்சிகள் சார்பாக பெண் வேட்பாளர்களை நிறுத்துவது மிகவும் அபூர்வம். அந்த வகையில், இரண்டாவது பெண் வேட்பாளர் என்ற பெருமை சாராவுக்கு கிடைத்துள்ளது. முன்னதாக கடந்த 1984-ம் ஆண்டில் ஜொரால்டின் பெரைரா என்ற பெண்மணி ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.


அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜான்மெக்கேனுக்காக அர்னால்டு பிரசாரம்

மாலை மலர்

முன்னாள் அதிரடி ஆக்ஷன் நடிகரும் கலபோர்னியா கவர்னரும் ஆன அர்னால்டு தேர்தல் பிரசாரத்தில் குதித்துள்ளார். அர்னால்டு குடியரசு கட்சியை சேர்ந்தவர்.

ஒகியோ பகுதியில் அவரும் ஜான் மெக்கேனும் கூட்டாக தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இரு வரும் ஒன்றாக பஸ்சில் ஒகியோ முழுவதும் சுற்றுப் பயணம் செய்து ஓட்டு வேட் டையாடி வருகிறார்கள்.

பஸ்சை விட்டு இறங்கி ரோட்டில் சென்று செல்ப வர்களுடன் கைகுலுக்கி ஓட்டு சேகரித்தனர். கொலம்பஸ் பகுதியில் நடந்த பேரணியிலும் இரு வரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

அர்னால்டு பேசும் போது “நான் சினிமாவில் தான் அக்ஷன்ஹீரோ ஆனால் ஜான் மெக்கேன் உண்மையிலேயே ஹீரோ. வியட்நாம் போரில் 5 ஆண்டுகளுக்கு மேலாக போர் கைதியாக சிறையில் அடைப்பட்டு கிடந்தவர் அவர். மெக்கேனுக்கு நீங்கள் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.


அதிபர் தேர்தலில் வெற்றி: மெக்கைன் நம்பிக்கை

நியூஸ் ஒ நியூஸ்

“அமெரிக்க அதிபர் தேர்தலில்,கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, உறுதியுடன் வெற்றி பெறுவேன்” என்று, குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


அதிபர் தேர்தல்: ஜான் மெக்கனுக்கு வாக்களித்தார் புஷ்!

யாஹு & மாலை மலர்

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கனுக்கு தபால் ஓட்டுமூலம் வாக்களித்தார்.

4-ந் தேதி ஓட்டுப்பதிவு நடந்தாலும் அன்று ஓட்டுப்பதிவு செய்ய முடியாதவர்களும், வெளியூர்களில் இருப்பவர்களும் முன் கூட்டியே தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் அங்கு உள்ளது. அந்த ஓட்டுக்கள் தபால் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதிபர் ஜார்ஜ் புஷ்சும், அவரது மனைவி லாரா புஷ்சும் தங்களது ஓட்டுக்களை பதிவு செய்து, புஷ்சின் சொந்த மாகாணமான டெக்சாசுக்கு தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.

தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘அமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வீழ்ச்சிக்கு புஷ்சே காரணம்’ என்று குற்றம் சாட்டியவர் மெக்கலைன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜான் மெக்கேன் தனது தேர்தல் பிரசாரத்தின் போது அமெரிக்காவில் தற்போ தைய பொருளாதார நெருக் கடிக்கு ஜார்ஜ்புஷ் தான் காரணம் என்றும், ஈராக் போரில் ஜார்ஜ்புஷ்சின் நடவடிக்கைகள் தவறானவை. 8 ஆண்டு ஆட்சி காலத்தில் அமெரிக்க நிர்வாகம் சீர் குலைந்து விட்டது என்றும் நான் அதிபர் பதவிக்கு வந்தால் இவற்றை சரி செய்து விடுவேன் என்றும் கூறி இருந்தார்.

அதிபரை அதே கட்சி வேட்பாளரே குற்றம் காட்டியது அங்கு பரபரப்பை ஏற் படுத்தியது. ஆனாலும் தன் மீது புகார்களை அள்ளி வீசிய ஜான்மெக்கேனுக்குத் தான் ஜார்ஜ் புஷ் ஓட்டு போட்டார்.


அயல் அலுவக பணியை நிறுத்துவேன் – ஒபாமா!

வெப்துனியா

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக பி.பி.ஓ. நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிடைக்கும் அயல் அலுவலக பணிகளையே செய்து வருகின்றன.

இந்த நிறுவனங்கள் பட்டப்படிப்பு முடித்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றன.

அமெரிக்காவில், அமெரிக்கர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில், இந்தியர்கள் பாதி சம்பளத்தில் வேலை செய்கின்றனர். இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்களின் நிர்வாக செலவுகள் குறைந்து, அதிக இலாபம் கிடைக்கின்றது.

அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் பணிகளை ஒப்படைப்பதால், அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு பாதிக்கப்படுகிறது. இதனை முற்றிலுமாக நிறுத்த வேண்டும், அல்லது கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்காவில் அவ்வப்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழும்.

இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதாக சிக்கலால், அமெரிக்க பொருளாதாரம் நிலை குலைந்துள்ளது. அத்துடன் வேலை இல்லா திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தன்னை அதிபராக தேர்ந்தெடுத்தால், முதல் வேலையாக அமெரிக்க நிறுவனங்கள், அயல் நாடுகளில் கொடுக்கும் அயல் அலுவலக பணிகளை (அவுட் சோர்சிங்) குறைத்து, உள் நாட்டில் வேலை வாய்ப்பை பெருக்க நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.


‘ஒபாமா வாக்குறுதியைக் கண்டு பயப்பட தேவையில்லை’ – கலாம்

தினமலர்

இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன் மாணவர், பொதுமக்கள், தொழில் துறையினர் திருச்சி புனித வளனார் கல்லூரியில் சந்தித்த நிகழ்ச்சியில் கலாம் அளித்த பதில்:

கேள்வி: அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?

பதில்: நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 40,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.


பின்லேடனை ஒழிக்கும்வரை போர் நீடிக்கும் :பாகிஸ்தானுக்கு இந்தியாவால் ஆபத்து இல்லை – ஒபாமா பேட்டி

நியூஸ் ஒ நியூஸ்

பாகிஸ்தானில் அனுபவம் இல்லாத அரசு பதவியில் உள்ளது. அங்கு ஜனநாயகம் திரும்ப அந்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதற்கு ராணுவ உதவி அளிக்க வேண்டும் என்பது மட்டும் அர்த்தம் அல்ல. அங்கு நிலவும் வறுமை,கல்வி அறிவின்மை போன்றவற்றுக்கு தீர்வு காண உதவ வேண்டும் என்று அர்த்தம்.

எனவே, நான் அதிபர் ஆனால், பாகிஸ்தானுக்கு ராணுவம் சாராத உதவிகளை அதிகரிப்பேன்.

அதே சமயத்தில்,பாகிஸ்தானுக்கு பெரிய அச்சுறுத்தல் இந்தியாவால் அல்ல,அந்நாட்டு தீவிரவாதிகளால்தான் என்பதை பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும்.


அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.