Category Archives: Tamil Blog

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

ராஜ ராஜ சோழன் – தமிழ் புத்தகத் தொகுப்புகள்

ராஜராஜன் என்னும் முடிந்த பெருங்கனவும் முடியாத ஆதிக்கப் புன்மரபும் « பிரபஞ்சன்

இராஜராஜ சோழர் குறித்து எழுத்தாளர் பா. ராகவன்:

கிழக்கில் ராஜராஜ சோழனை மக்கள் தாவி அள்ளும் காட்சியைப் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடிவதில்லை.

நூலை எழுதிய ச ந கண்ணன் புத்தகக் குறிப்பில் இருந்து:
ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.

கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. ஆனால், எல்லைகளை விரிவாக்கிக்கொள்வதற்கு மட்டும் தன் அதிகாரத்தையும், படை வலிமையையும் அவர் பயன்படுத்தவில்லை. போர் வெற்றிகள் மூலம் கிடைத்த செல்வத்தைக் கொண்டு, மக்கள் வங்கி ஒன்றை உருவாக்கினார். எளியோருக்குக் கடன் வழங்கினார்.

ராஜராஜன் ஆட்சிக்காலத்தில் வரி வசூல் மட்டுமல்ல, மக்கள் நலப் பணிகளும் அதிகம். மக்களின் வாழ்க்கை நிலை உயர்ந்தது. காலமெல்லாம் அவர் புகழ் பாடும் தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டது. கலை, ஆட்சி முறை, சமயம், இலக்கியம், பொருளாதாரம், பண்பாடு என்று ராஜராஜனால் செழிப்படைந்த துறைகள் ஏராளம். அந்த வகையில், தென்னிந்தியாவில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றிலும்கூட ராஜராஜனின் ஆட்சி பொற்காலம்தான்.

ராஜராஜ சோழன் நூல் பற்றி பாரா, பத்ரி.

ச ந கண்ணன் பதிவில் இருந்து சில பகுதிகள்:
சோழர்கள் வரலாற்றை முழுமூச்சில் ஆய்வு செய்தவர்களில் மிகமுக்கியமானவர், நீலகண்ட சாஸ்திரி. அவருடைய சோழர்கள் வரலாறு நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் தகவல் குவியல்தான். ஒரு நாவல்போல அந்த நூலை கிடுகிடுவென வாசித்துவிடமுடியாது. ஒவ்வொரு பக்கத்துக்கும் அவர் இணைத்துள்ள ஃபுட்நோட்டே ஒரு நூலின் கனம் தாங்கும். மா. ராசமாணிக்கனாரின் தென்னாட்டு வரலாறு’ நூல் உள்ளதில் மிக எளிமையான மொழியைக் கொண்டது. குடவாயிலின் தஞ்சாவூர் நூல், முழுக்க முழுக்க தஞ்சாவூரின் வரலாறைச் சொல்லும் அதிஅற்புதம். இந்த நூல்களோடு, ராஜராஜனின் ஆயிரமாண்டு சிறப்பிதழுக்காக வரலாறு டாட் காம் உள்பட இணையத்தில் எழுதப்பட்ட பல்வேறு கட்டுரைகளும் ராஜராஜ சோழனின் வாழ்க்கையை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவி புரிந்தன.

இதுவரை, சோழர்கள் வரலாற்றின் ஒரு பகுதியாகவே ராஜராஜ சோழனின் வரலாறு எழுதப்பட்டு வந்துள்ளது. க.த. திருநாவுக்கரசு மட்டும் ராஜராஜ சோழன் பற்றி தனிநூல் எழுதியிருக்கிறார். ஆதாரங்கள் குறைவு என்பதால் அவரைப் பற்றிப் பிரத்தியேகமாக நூல் எழுதுகிற அளவுக்கு யாரும் முயலவில்லை.

ஜடாயு:

// ஆனால், கிட்டத்தட்ட 400 கடைகள் உள்ள கண்காட்சியில் கிழக்கு தவிர வேறு எங்கும் நீங்கள் இந்தச் சோழனைப் பற்றிய ஒரு புத்தகத்தையும் பார்க்க முடியாது. [என்.சி.பி.எச்சில் நீலகண்ட சாஸ்திரியின் சோழர் வரலாறு இருக்கிறது.] //

அன்னம் ஸ்டாலில் “இராஜராஜேஸ்வரம்” (குடவாயில் பாலசுப்பிரமணியம்) கிடைக்கிறது! பெரிய கோயில் ஆயிரமாவது ஆண்டு சிறப்பு வெளியீடாக வந்திருக்கும் செம்பதிப்பு. ஒரு அருமையான கலை, வரலாற்றுக் களஞ்சியம் இந்தப் புத்தகம்.

short cutல் மயங்காமல் ராஜராஜன் பற்றியும் தஞ்சைக் கோவில் பற்றியும் ஆழமாக்த் தெரிந்து கொள்ள விரும்புவோர் நாடவேண்டிய புத்தகம்.

என்னுடைய அம்மா ஆர் பொன்னம்மாளும் இராஜராஜரைக் குறித்து புத்தகம் எழுதியிருப்பதாலும், என் பன்னிரெண்டெ முக்கால் வயதிலேயே இராஜராஜனைக் குறித்து ஆறு நூல்களை தேவநேயப் பாவாணரின் வரலாற்றுப் பகுதியிலும் இரண்டு நூல்களை Oriya Literature பகுதியிலும் கண்டெடுத்தன் தொடர்ச்சியான விசன ட்விட் .

ட்விட்டரில் நான் கருதியது:

கிளியோபாட்ரா, ராஜ ராஜ சோழன் எல்லாம் பெஸ்ட்செல்லர்ஸ்னு சொல்லிக் கொள்ளும் நிலையில் தமிழ் புத்தக வெளியீட்டாளர்கள் இன்றும் இருப்பதை நெனச்சா

அதற்கு மூலகர்த்தா குறளையும் பார்த்து விடுவோம்:

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்

பொருள்: நல்லவர்கள் வறுமையில் வாடுவதையும், தீயவர்கள் செல்வத்தில் திளைப்பதையும் மக்கள் தம் விழிப்புணர்வால் சிந்திக்க வேண்டும்; உரிய மாற்றத்தை சமுதாயத்தில் உருவாக்க வேண்டும்.

இதன் தொடர்ச்சியாக நந்திதா தாஸ் போன்ற சிறப்பான ஆய்வுநூல்களும், ஹன்சிகா மொட்வானி போல் விதந்தோத வேண்டிய புதினங்களும் வெளியாகும் சூழலில் இன்னமும் ஸ்ரீதேவி காலத்து கிளியோபாட்ராவும் எஸ். வரலட்சுமி பாடல் பெற்ற இராஜ ராஜ சோழனின் ரீ-மிக்ஸ்களும் சூப்பர் ஹிட்டாகிறதே என்னும் அங்கலாய்ப்புதான்.

தொடர்புள்ள பதிவுகள் இரண்டு:
1. 2009ல் வெளியான நாவல்கள் :: நேசமுடன் வெங்கடேஷ்
2. தமிழ் நூல் பரிந்துரை – 2010 :: பாஸ்டன் பாலா
3. கே.பி.டி. சிரிப்பு ராஜ சோழன் :: கிரேஸி மோகன் (கிழக்கு)
4. சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

சாரு நிவேதிதா கமல்ஹாசன்
வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார்
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார்.
35 ஆண்டுகளாக எழுதுகிறார் 50 ஆண்டுகளாக கலைச்சேவை
எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது.
சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா
சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார்.
மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம்
அமரந்தா, அவந்திகா வாணி, சரிகா
நடிகர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர்
சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு.

ரத்த சரித்திரம் – How it narrates the Story of BJP vs Congress?

இந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.

படத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’
பிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”

என்ன கதை?

காந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்?

ஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டால் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).

இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.

இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.

தவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.

கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.

அரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.

எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.

நடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.

சூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.

இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.

திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation
2. சந்திரமுகி க(வ)லையா?

விமர்சனம்:
1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்
2.
ஆதிமூலகிருஷ்ணன்

What have you read among Jeyamohan books?

ஜெயமோகன் எழுதிய புத்தகங்களின் பட்டியலை (http://www.jeyamohan.in/?p=11233) கொடுத்தார்.

எனக்கு மூன்று வினாக்கள் எழுந்தன:

1. உங்களுக்கு இந்த லிஸ்ட்டில் மிகவும் பிடித்தது எது?

2. அவசியம் இந்த வருடம் படிக்க வேண்டும் என்று நினைப்பது?

3. அனுராதா ரமணன்/சுஜாதா மட்டுமே அறிமுகமான நண்பருக்கு, பரிசாக எந்த படைப்பை கொடுப்பீங்க?

தர்மசங்கடத்திற்கு தயார் என்றால்… கொசுறு கேள்வி:
இவற்றுள் தங்களைக் கவராத நூல்?

வாக்கெடுப்பு (தற்போதைய நிலை) – தொகுக்கப்பட்ட பதில்:

மனதில் நிற்பவை

காடு – 7

பின் தொடரும் நிழலின் குரல் – 4

விஷ்ணுபுரம் – 3

சங்கச் சித்திரங்கள் – 3

இன்றைய காந்தி – 3

பனிமனிதன் – 2

ஏழாம் உலகம் – 2

நவீன தமிழிலக்கிய அறிமுகம் – 2

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 2

சிறுகதைத் தொகுப்பு – 2

கொற்றவை

பத்ம வியூகம்

இலக்கிய முன்னோடிகள் வரிசை

நாவல் கோட்பாடு

ஊமைச்செந்நாய் (மத்தகம்)

வாசிக்க விழைபவை

கொற்றவை – 6

விஷ்ணுபுரம் – 4

ரப்பர் – 2

சங்க சித்திரங்கள்

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

பின் தொடரும் நிழலின் குரல்

காடு

ஏழாம் உலகம்

குறுநாவல் தொகுப்பு

பரிந்துரை

ஜெயமோகன் குறு நாவல் முழுத் தொகுப்பு – 3

அனல்காற்று – 2

வாழ்விலே ஒருமுறை – 2

சங்கச் சித்திரங்கள் – 2

ஏழாம் உலகம் – 2

காடு

கன்னியாகுமரி

நிகழ்தல்

ஊமை செந்நாய் தொகுப்பு

நிழல் வெளி கதைகள்

நினைவின் நதியில்

இன்றைய காந்தி

தேவகி சித்தியின் டயரி, ஒன்றுமில்லை, விரல், மாடன் மோட்சம்

சிரமதசை

சங்கச் சித்திரங்கள்

இலக்கிய விமர்சனம் தொகுப்பு

ஏழாம் உலகம்

கொற்றவை

விஷ்ணுபுரம்

உங்கள் பதில்களை – https://groups.google.com/forum/#!topic/jeyamohan/R6CvIwQYmfM குழுமத்தில் தரலாம்.

தமிழ் நூல் பரிந்துரை – 2010

சென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

  1. சடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்
  2. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)
  3. நாத வெளியிலே – இசைஞானி இளையராஜா
  4. சித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)
  5. விகடன் தீபாவளி மலர்
  6. நினைவின் தாழ்வாரங்கள்கலாப்ரியா (சந்தியா வெளியீடு)
  7. சென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)
  8. உறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  9. தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)
  10. இரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  11. கிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)
  12. ஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)
  13. திரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)
  14. மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)
  15. ஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  16. கல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)
  17. உரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  18. கிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)
  19. வ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)
  20. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)
  21. தென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)
  22. மதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)
  23. பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப்பிரியன் (நர்மதா)
  24. எங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)
  25. சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்
  26. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்
  27. கேள்விக்குறி – எஸ்.ராமகிருஷ்ணன்
  28. நீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
  29. சிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்
  30. செல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)
  31. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  32. எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
  33. தனிக்குரல் – ஜெயமோகன்
  34. இசையின் தனிமை – ஷாஜி
  35. பூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.
  36. சினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்
  37. கல்கி வளர்த்த தமிழ்
  38. மாயினி – எஸ்.பொ
  39. ஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி
  40. புறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)
  41. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்
  42. என்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)
  43. உப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)
  44. நீர் பிறக்கும் முன் – இந்திரா
  45. ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு

முந்தைய பதிவுகள் சில:
அ)  புத்தக லிஸ்ட்

ஆ)  2008 – Tamil Books

புத்தகப் பதிவுகள்:

தொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:

  1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
  2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  3. புத்தகக் குறி (மீமீ)
  4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
  5. சென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005
  6. வருட இறுதி: புத்தகங்கள் – 2005

சாரு நிவேதிதா சந்திப்பு

பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?

எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’

வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.

அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.

‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.

நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.

சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.

சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.

‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.

சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.

“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று  தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”

இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.

2010 in review

The stats helper monkeys at WordPress.com mulled over how this blog did in 2010, and here’s a high level summary of its overall blog health:

Healthy blog!

The Blog-Health-o-Meter™ reads Wow.

Crunchy numbers

Featured image

The Louvre Museum has 8.5 million visitors per year. This blog was viewed about 160,000 times in 2010. If it were an exhibit at The Louvre Museum, it would take 7 days for that many people to see it.

 

In 2010, there were 39 new posts, growing the total archive of this blog to 4509 posts. There were 50 pictures uploaded, taking up a total of 13mb. That’s about 4 pictures per month.

The busiest day of the year was June 16th with 961 views. The most popular post that day was ரஜினியின் எந்திரன்- தி ரோபோ .

Where did they come from?

The top referring sites in 2010 were digg.com, snapjudge.blogspot.com, iphone5g.net, who-will-win-fifa-worldcup-2010.com, and legal5ounds.com.

Some visitors came searching, mostly for எந்திரன் தி ரோபோ, பலான படங்கள், பொது அறிவு வினா விடை, யூ ட்யூப், and பலான.

Attractions in 2010

These are the posts and pages that got the most views in 2010.

1

ரஜினியின் எந்திரன்- தி ரோபோ July 2009
51 comments

2

யூ ட்யூப் x பலான படம் – தீவினையின் தோற்றுவாய் எது? April 2008
4 comments

3

செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள் August 2009
20 comments

4

வினாடி வினா: உலகமயமாக்கல் பொது அறிவு கேள்விகள் March 2009
8 comments

5

செத்தான் பிரபாகரன் September 2009
53 comments

கலைஞர் மு கருணாநிதியும் தர்மதுரை ரஜினிகாந்த்தும்

Original

கலைஞர் கருணாநிதி, ஆ. ராசா, தயாநிதி மாறன், அழகிரி, ஸ்டாலின், கனிமொழி (2010)

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம் தான்
அட நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன எல்லாம் நம் நிலம் தான்
நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம் மாறும் இந்த வேஷம்

ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
கண்ணுக்குள்ள பேதம் இல்ல பார்ப்பதிலே ஏன் பிரிவு
பொன்னு பொருள் போகும் வரும்
ஆசை மட்டும் போவதில்லை
அடிக்கும் பணம் ஓடிவிடும் பதவி விட்டுப் போவதில்லை

மேடைக்கும் மாலைக்கும் கோடிக்கும் ஆசைப்பட்டு
வெட்டுக்கள் குத்துக்கள் ரத்தங்கள் போவதென்ன
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

சொந்தம் பந்தம் சேர்ந்திருந்தாலும் சொத்து சுகம் தேவையிங்கே
ஆட்சி விட்டுப் போச்சுதுன்னா வாழ்வதிலே லாபம் இல்லே
பா.ம.க. மட்டும் சேர்ந்திருந்தா இன்றும் என்றும் சோகம் இல்லே
கன்றை விட்டுத் தாய் பிரிஞ்சாலும் நாற்காலி சுகம் போல் ஏதுமில்லே

ஊருக்கும் பேருக்கும் காருக்கும் இஷ்டப்பட்டு
வாழ்கின்ற வாழ்க்கைக்கு என்றென்றும் அர்த்தமுண்டு
இதை புரிஞ்சும் உண்மை தெரிஞ்சும் இன்னும் மயக்கமா?

 

ட்விட்டரும் நானும் (2)

முந்தைய ட்வீட்ஸ்

அ. தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

ஆ. டிவிட்டவோ உளறவோ வேண்டியது

இ. ட்விட்டர்த்துவம்

1. What’s wrong with asking for credentials from illegal immigrants in Arizona? If you have it, why can’t you carry a simple license? #immi #AZ

2. was explaining a theory that Faisal Shahzad could be a handiwork of team like ‘Men Who Stare at Goats’ implanted by Team USA.

3. If only Super Singer Junior allows winners by relatives of producers, the picks should be: 1. Vishnu Charan; 2. Bala sarangan #VijayTV #Star

4. 1000thil Oruvan: fun to watch; doesn’t connect; inventive but does not satisfy the inner need for relating to the characters.

5. VTV: Gautam is getting into Bharatiraja/KB type syndrome in which success breeds stereotyped siblings with minimal variations.

6. அவள் பெயர் தமிழரசி: எ.கொ.சா.இ; joins the select list of classic ‘Gigli‘ genre movies in Tamil.

7. அங்காடித் தெரு: அண்ணாச்சியின் மறுபக்கத்தையும் ஓரமா காமிக்கலாம்; சினேகா இடைச்சொருகல் தவிர இன்னொரு பருத்தி வீரன்.

8. Inglorious Basterds: Conspiracy theories consolidated; touches from slavery to smartness with current amnesty regime for dictators.

9. I was appreciating ‘Up in the Air’ to my colleague. He asked me back ‘Do you have any movie that you don’t like?’ My reply: ‘I’m like Gandhi

10. அடுத்தவரோட வேலைக்கு உலை வைக்கிற நுட்பத்தை நுழைக்கிறவருக்கு, அவரோட வேலையில உலை வைக்க ஒரு நாடு பிறந்திருக்கும். #IT #Outsourcing #Tech

11. @peyarili நான் நீங்கதான் விசுவாமித்திரரின் மித்திரர்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

12. அக்கால scientistகள்? Seismologist: அகத்தியர்; Anthropologist: வியாசர்; Ethnologist: வால்மீகி; Geophysicist, Geologist, volcanologist யாரு?

13. Volcanic Ash Cloud இமாலயத்தில் எரிமலை வெடித்தால் கைலாயத்தில் நெற்றிக்கண் திறந்தது எனலாம்.

14. நிலைப்பாடு தமிழ் அல்ல. ‘லைப்’ (life) நடுவில் crisis கொடுக்கிறது. செயலைப் பாடினால் செயல்பாடு?

15. அழகியர் எவ்வாறு காரியத்தில் கண் வையாரோ, அவ்வாறே, தமிழ்ப்பதிவர் தமிழைத் தழைக்க வையார். #Tamils #NewYear

16. Paandavar Bhoomi Memorial Pole in Africa & Oceania. #memorials http://post.ly/XkOZ

17. கறுப்பு, வெளுப்பாவதை புகைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் பார்க்க பார்க்க, என் கண் முன்பே @writerpara நரைக்க கவலையா? கல்வியா?

18.When you say ‘I like’ Catcher in the Rye novelist dies in Google Reader what are you conveying? #Share

19. Today I was one of the last persons getting off the train. Never noticed so many disabled, cane wielders when I used to be one among the 1st

20. ‘சின்னத்தம்பி’யில் மனோரமாவுக்கு நடக்கும் வைபவத்தின் தீவிரத்தோடு, ‘யாரடி நீ மோகினி’யில் தனுஷ் வேலையிழப்பதை ஒப்பிடலாமா? #Ceremony

21. ட்யூனை சுட்டது யார் தேவா-வா? நெப்ட்யூனை சுட்டது யார் நாந்தானே அட நாந்தானே! யுரேனஸ் உதடுகள் உன்னுது? வைரத்தை வெட்டுவது யாரது!

22. Losing one glove is certainly painful;but nothing compared to the pain of losing one, throwing away the other & finding the first one -Hein

23. Misterக்கும் Ministerக்கும் in வித்தியாசம். அதே போல் கடி x கிண்டி [க + in + டி] என்றால் ட்விட் கேஸ் தயார். #Tamil99

24. இந்தியாவிற்கு எதிர்மாறாக மேடைப் பேச்சில் நாகரிகமாகவும், டிவி விளம்பரங்களில் ஏச்சும் பேச்சுமாகவும் இருக்கிறது. #Campaign

25. கிட்னியில் கல் தோன்றுமளவு சிறுநீர் தேக்கக் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ, அது போல் டேட்டாபேஸ் ரொம்புமளவு காத்திருத்தல் தகாது. #TwitGas

26. தான் விடும் குறட்டை பிறர் தூக்கத்தைக் கெடுப்பது தனக்கேத் தெரியாது; அது போல் தன் ட்விட்டின் கரியமில வாயு நச்சையும் அறியார். #TwitGas

27. reminded me of ‘Fight club’ quote: When people think you’re dying, they really, really listen to you, instead of just…

28. EKSI Moment: Even kids can SMS the pledge donation money to Red Cross 4 Haiti. They shd hv basic restrictions for 18+ minors offensive texts

29. பாத்ரூம் போனா உச்சாவோ ரெண்டுக்கோ போவணுங்கிற மாதிரி தமிழருக்கு இலக்கியமோ அறிவுப்பசியோ மட்டுமே சமைக்கப்படும். #TamBooks

30. வேலையில் இந்தப் பெயரின் infamousnessஐ குறிப்பிடுவது விருப்பமில்லை. வலையில் ‘என்ன வேலை’ வினவலையும் விரும்புவதில்லை.

31. As a Employee cum Blogger which gives you more kick? Tough problem analyzed & solved at work (or) A post being received well & reaches mass?

32. குறளுக்கு புராணக்கதை சொல்லும் ஏழாங்கிளாசு வாத்தி போல கதாகாலட்சேபமும் விஜய் ஆன்டனிகளை ஏசுவதாக டெம்பிளேட் ரம்பம். #Piraisoodan

33. ‘ஏதாவது ஹிட் படத்தை II ஆக்கலாம்’ என்ற நிபந்தனையோடு தமிழ் சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பு தந்தால், எந்தப் படம் தேர்ந்தெடுப்பீர்கள்?

34. சூத்திரனே சூத்திரமறிந்த சூத்ரதாரி என்பதற்கும் சூத்ரதாரியே சூத்திரமறிந்த சூத்திரன் என்பதற்கும் உள்ள இலக்கண வித்தியாசம் என்ன? #Sentenced

35. தனி மடலுக்கு பதில் போடாமல், பொது ட்விட்டுக்கு @ போடுவது, பொண்டாட்டியை தூங்கவிட்டுட்டு PPVஇல் பலான படம் பார்ப்பது போலாம். #Twithuvam

36. If I am in Starbucks I get free wi-fi, but no free coffee; If I am at work, I get free coffee with Iron curtains. At home?

37. Learning 48%; Money 31%; and Thinking -25%; Numbers -66%; Sex -85% for the list http://twitter.com/snapjudge/chattytamils

38. @icarusprakash கலக்கல்! “பச்சை சுடிதார் உள்ள வாங்க என்றார். நான் ம.வே.சிவகுமாராக இருந்திருந்தால், ‘எதுக்கு உள்ள’ என்று கேட்டிருப்பேன்.”

39. Watched Harry Potter 6 followed by HP2: Chamber of secrets. Its all falling in place now. Need to watch all of them again in reverse order.

40. How close was the 2nd half of Sujatha’s ‘Pirivom.. Santhippom’ to ‘Anandha Thandavam’? 1st part remained faithful to original AFAI remember.

41. இன்றைய சந்தேகம்: புனைப்பெயரை வைத்து அழைப்பது உங்களுக்குப் பிரியமா (எ.க.: மனுஷ்யபுத்திரன்). (அ) உண்மைப் பெயரா? (உ.: ஹமீது)? #Thalavedichurum

42. அடுத்தது என்னனு தெரியாம இருக்கறத விட, அந்தப் பாட்டை ஸ்கிப் செய்ய முடியாம பொறுமை காப்பதும் சுகம். iPhone shuffleனும் சுகம்.

43. ‘பியர்கடல் பிரந்தாமன்’ கூல். இதே மாதிரி அறுபடை வீடு, பரலோக பரமபிதா, கைலாயவாசி ஆகியோருக்கும் ஏதாவது இருக்கா?

44. கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்கள்’தான் நாளைய இயக்குநர்கள் என்றால், கவலையளிக்கிறது. நல்ல கான்செப்ட்; திராபையான கதைத் தேர்வு.

45. நேற்று அதிக ட்வீட்டுகளை சுவாரசியத்தோடு வழங்கிய பெருமையைத் தட்டிச் செல்பவர்: @vaamanikandan

46. அரசியல்/சினிமா தல மறைந்தவுடன் ஏன் கலாட்டா? 1. ஆள் அவுட்டானபிறகுதான் அவர் மேல கோபத்தக் காட்டமுடியும். 2. ஹீரோவை அடித்து நொறுக்கலாம்.

47. மற்றவர்கள் கருத்து சொல்லும் ட்விட்டரைப் பார்த்தால் தன்னாலே கீபோர்ட் சதை ஆடுதே! இது peer pressureஆ? blood pressureஆ? #Twitthuvam

48. இதை நடைமுறையாக்க என்னுடைய யோசனை. Child offenders could be posted as Security officers. They get kicks & get the job done too.

49. Which is a classic lyric? 1. இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்? (or) 2. மீயா மீயா பூனை; நான் மீசை வச்ச யானை & நான் ஆத்தா வுட்ட புஸ்ஸு.

50. அந்த வரி தவறு என்கிறார் நண்பர். ‘அஞ்சு மணி பஸ்; நான் அதை உட்டா மிஸ்’ஸாம். என்னுடைய காதுகளில்தான் எசகுபிசகு போல…

51. இந்தப் பாடலுக்கு இசையமைப்பது அசெம்பிளி மொழியில் வெப்சைட் உருவாக்கியது மாதிரி என்கிறார் ஆன்டனி. #Objects

52. சமீபத்திய ‘அரசு இலவச மருத்துவ முகாம்’ சென்று வந்த நண்பர் இலவச ஈசிஜி முதல் எலும்புத்தேய்வு சோதனை வரை செய்துகொண்டு DMK அனுதாபியாகி விட்டார்.

53. ‘Chennai Merina is ultra clean; Everything in Govt. schools r free & quality has improved. Why shd I vote 4 somebody else & take risk?’ #DMK

54. பிடுங்கிய மைக் முன் விடாக்கொண்டரில் டாப் யார்? 1. பிறைசூடன் 2. டியெஸ்பி தேவிஸ்ரீபிரசாத் 3. டி ராஜேந்தர் 4. ஹரீஷ் ராகவேந்திரா #Music #TV

55. என் டி திவாரி செய்கை மேல் உள்ள கோபத்தை விட அவன் மீதுள்ள பொறாமைதான் கோபத்தைக் கிளறுகிறது என்பார் பர்னாலாவின் மகன். #NDT #Males

56. பெரியார் வாழ்க்கை வரலாறு கொண்டு வந்தால் அரசு இன்சென்டிவ் ஏதாவது உண்டா? இன்னும் இரு பதிப்பகங்களும் திடீரென்று கொணர்ந்துள்ளதாம்.

57.சுயநலத்தில் டாப் நாடு எது? 1. நவூரு 2. இஸ்ரேல் 3. அமெரிக்கா 4. சீனா – http://nyti.ms/55FtSo

58. Writer நாகார்ஜுனன் ஏன் நடுவில் கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசம் இருந்தார் தெரியுமா? தெலுங்கில் ஹீரோவாக நடிக்கிறீர்களாமே என்று விசாரித்ததால். #Mokkai

59. Happy 60th Birthday to China: Unlike India it has organized corruption, people don’t have freedom to voice the divide between rich & poor.

60. Big Bang Theory is certainly a must-watch; geared for men; with geeks as social outcasts. simple, laugh a minute ritual to unwind. #TV #CBS

61. Question to IR bashers: Ilaiyaraja had written 4/5 books while ARR is yet to write any?

62. How will a TV serial look like if Rajinikanth acted in it? Watch ‘Aaril irunthu Arupathu varai’. #Psenti #Films

63. It’s Always Sunny in Philadelphia is pretty funny, edgy, comedy central-ish. Living without Sun TV is good. Started picking other TV serials

64. All the Indian Grocery stores in New England has variety of books on Hinduism, Krishna, Q&A by ISKCON prominently for a token donation. #God

65. Kaalachuvadu & Uyirmai are better selling (read – more money, cashflow, personnel) but doesn’t respond to e-mails of Subscribers @uyirmmai

66. Have to really appreciate Anyindian & Vaarthai for customer delight; replied for my trivial query over the weekend; resolved it @ivansivan

67. Comcast customer service is great. Patient responses; quick dispatches; solves quirky requests. Nice variety of free OnDemand DVR choices.

68. #Films Superman Returns: Kevin Spacey does justice even to masala chars; For a predictable Rajni like heroic movie, gripping narration.

69. #Films Bheja Fry: Overzealous Milind Soman; always scoffing Sarika; Aam Aadmi idiot hero; Nice premise; Drama like bg & boring developments.

70. 2 new movies recently released which I am looking forward to watch in DVD: Blind Date (Stanley Tucci) & Disgrace (Malkovich & Coetzee novel)

71. பரிதாபமாக பார்வை விட்டு அனுதாபம் சம்பாதிக்கும் போட்டியில் ‘North Station’ வாயிலில் அமர்ந்திருக்கும் ‘Traveling hungry’ போர்டுகாரர் வெல்வார்.

72. 50+ குடுமிகாரர் முக்கிய சாலையின் நடுவில் உற்சாகமாக ஸ்கேட்டிங். அவரின் ஐ-பாடில் ‘இமயம்’ சிவாஜி ‘திருமாலின் திருமார்பில்’ டூயட் பாடியிருபபார்.

73. Writers Nanjil Nadan & S Ramakrishnan have written songs for Suga’s Padithurai; Tamil Film Heroine talks in Tamil! http://bit.ly/2OU8CD

74. Whatever unwritten & hidden in the post is spelled out explicitly via tags. If post is a Cliff Notes, then tags are poems.

75. Started reading Penguin Classic The Love Letters of Abelard and Heloise: http://bit.ly/15tw1p #Romance #Books

76. Tamanna appeared in a single second shot as bride on Shahrukh’s ‘Om Shanthi Om’. Blink after interval & U wud hv missed it. #priorlife

77. What was the first Tamil film to have a scene of a person relieving himself? #Bathrooms #Grossness #Movies

78. was reading this to get motivated to clarify my doubt in Tamil Cinema http://is.gd/3Bn1n

79. @anantha Remembered some Nammavar fight sequences; Nandha ceremony; 7G lecture; but MMKR… thanks!

80. catching up on old DVR; ‘Surviving Suburbia’ is pretty realistic & funny too. Not sure whether women also reciprocate that thought. #TV

81. #Films ‘Welcome to Sajjanpur’: Scary thoughts of Shyam Benegal’s artsy stuff went away. Amrita Rao is 2 chocolatey; matter of fact narrative

82. What is the similarity between IE8 & FF3.5? They both crash when you visit Tamil blogs with their numerous aggregator toolbars, scripts.

83. ‘முதல் வாரத்திலேயே ‘உன்னைப் போல் ஒருவன்’ காலியாக கிடைக்கிறது. கல்லூரி வட்டாரத்தில் மோகன் லால் வசனம் புரியவில்லை’ என்றும் சொன்னார்கள். #UPO

84. 4 girl students frm Panimalar polytechnic missing: http://bit.ly/3MOOKc The women in teens shd hv their right to privacy or it a news item?

85. Arunthathi has a tap & water scene in which the victim slips & hurts himself; Eeram has the same, in which she dies. Where is the original?

86. அந்த ‘அபூர்வ ராகங்கள்’ வழக்கு ரொம்ப பிரசித்தமாச்சே… பாலச்சந்தரின் எந்தக் கதையுமே அவருக்கு சொந்தமில்லையா!? #Films #KB

87. Kancheevaram: Original Story, Screenplay, Movie was written by Suprabharathi Manian; inspired by Priyadarshan: http://bit.ly/3SooxN #Films

88. ‘மச்சான்னு கூப்பிடறதாலே நமீதா உனக்கு கொழுந்தியாளும் இல்லை. உன் கொழுந்தியாள் உன்னை மச்சான்னு கூப்பிடறதாலே அவ நமீதாவும் இல்லை!’ #SMS #Vikatan

89. ‘கமல் தீர்க்கதரிசி. இல்லையென்றால், அவரது குழனதைக்கு ஸ்ருதி என்று அப்போதே பெயர் வைத்திருப்பாரா?’ Literal quote from Gowthami in Vikadan #Film

90. புனைப்பெயரை மனுஷ்யபுத்திரன் என்று வைத்துக்கொண்டால் கவிலக்கியத்துவம். மனுஷய புள்ள என்றால் ப்ளாகத்துவம். ‘ப்’ எங்கே என்றால் சின்னபுள்ளத்தனம்.

91. Kalainjar Karunanidhi’s ‘நீயின்றி நானில்லை’ film title has been changed to ‘பெண் சிங்கம்’. Is it a reference to tagless Kanimozhi? #DMK

92. Actress Tamanna never sees a complete movie or preview of her acted film. She just watches her songs picturization in complete. frm Vikadan

93. ரொம்ப நேரமாக எங்களின் அலுவல் கட்டிடத்தின் மேல் ஹாலிவுட் படம் போல் ஹெலிகாப்டர் அப்படியே நின்று கவனிக்கிறது. வெளியே சென்றதால்தான் தெரிகிறது.

94. Pasanga: Taboo things aren’t watchable by teens like Mid-life crisis of middle-classers in Films. Explores bullying, nepotism, Consanguinity

95. Nadodigal: Cutesy leading ladies; late blooming Sasikumar; open ended real life interpretations without making Cheranish preachments. #Films

96. Arundhathi: Harry Potter met Chandramuki with Vittalacharya strewn in. Except 4 Anouska’s graceless classical dancing, good masla. #Films

97. A broken plastic spoon showed his head inside Complan bottle like a severed human raising its lame hand for help from Sri Lanka.

98. I asked her, ‘Cold! Isn’t it?’. Got reply. ‘It is Friday. Yeh.’ எத்தனை நாளானாலும் இந்த அமெரிக்கன் accentம் வராது. தாட்சணய கேள்விகளும் போகாது

99. அச்சுதனில் இருந்து பிதாச்சுதன் வந்ததா? சூத்தியாவில் இருந்து மதுசூதனுக்குப் போகலாமா? விஷ்ணு 1K நாமமான சுதன்வா டு சுதர்சன் to Shubhanallah!

100. “ஆரஞ்சு நிறம் குறைவாயிருக்கிறது . கால்களை நீருக்குள் அமிழ்த்தியிருக்கும் கொக்குகளை வரைகிறான்.” -நரன்: http://bit.ly/hQJSI #Quotes #TamilBlog

101. Old habits die hard or is it tired hands at keyboard or a longing for Indian cultural heritage? Typed dd/mm/yy in a doc & got befuddled resp

102. குமாரசெல்வா சிறுகதையும் கானகனின் ஊடகம் குறித்த குற்றப்பட்டியல் கட்டுரையும் தவிர பிற எதுவும் இ.வா. காலச்சுவடில் கவனிப்பைக் கோரவில்லை. #Magz

103. What is common between Jeyamohan, A Muttulingam, Manushyaputhiran, Charu Nivethitha speeches in public? All say ‘I don’t read Tamil blogs’.

104. Sruthi: ‘Nothing new to be done in Music; Music itself is couple of 100 years old.’ “Even from AR Rehman I can learn.” http://bit.ly/37p4su

105. People in China eat 5 times because of food abundancy & can be compared to Movies reel abuse: http://bit.ly/biZMZ #Kamal #UPO #Quotes #Video

106. ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படிக்கத் தெரியுமான்னு @shrutihaasan போட்டு கேட்கலாம்; அல்லது ப்ளேசிக்கு எழுத வருமான்னும் கேக்கலாம். #UPO

107. What will be your keywords if a Twitter client allows you to hide tweets automatically based on their appearance (like spam filters)?

108. ‘ஆண்டவனப் பார்க்கணும்… அவனுக்கு ஊத்தணும்’ (மக்கள் என் பக்கம்) சத்யராஜ் பாடலை எழுதியவர் கபீர்தாஸா? ஆதிசங்கரரா?: http://bit.ly/RkzSi

அடுத்தவரப் பத்தி எழுதணும்னா ட்விட்டு (140க்குள் முடி); உன்னப் பத்தி எழுத (பெத்த) பதிவு என்று வழக்கப்படுத்திக்க ராசா. #Twithuvam