Daily Archives: மார்ச் 8, 2009

சுதந்திரம்: விடுதலையும் பேச்சுரிமையும்

பத்ரி: எண்ணங்கள்: எழுத்துரிமை, பேச்சுரிமை, எரிப்புரிமை:

தடை செய்யப்பட்ட இயக்கத்தை (விடுதலைப் புலிகள்) ஆதரித்ததாக அல்லது இந்தியத் தலைவர்களை (உயிருடன் இருப்பவர்களை அல்லது இறந்தவர்களை) அவமரியாதை செய்ததாக அல்லது அவர்களது உருவ பொம்மைகளை எரித்ததாகக் குற்றம் சாட்டி சிலர் கடுமையான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

இது மிகவும் அபாயகரமானது. எமெர்ஜென்சி காலத்தைய நிலையைப் போன்றது.

கறுப்புக்கொடி காண்பித்தல், உருவ பொம்மையை எரித்தல் ஆகியவை ஒருவருக்கு எதிராக தங்களது கோபத்தைக் காண்பித்தல். இதனால் யாருடைய உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தில்லை. குறிப்பிட்ட இடத்தை இதற்கென ஒதுக்கி, அங்கே மட்டும் இதனைச் செய்துவிட்டுப் போகுமாறு அனுமதி அளித்துவிட்டுப் போய்விடலாம் காவல்துறை.

மனிதனுக்கு frustration என்பது ஏற்படுவது இல்லையா? இந்த அரசாங்க மெஷினரியால் எத்தனை முறை சாதாரண மக்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள்? கோபத்தில் வெகுண்டு, ஒருவர் “ஒனக்கெல்லாம் நல்ல சாவே வராது!” என்று சபிக்கும்போது அரசாங்க அதிகாரியைத் திட்டிய குற்றத்துக்காக சிறையில் போடுவேன் என்று சொல்லலாமா?

எதிர்ப்பை அனுமதிக்காத குடியாட்சி, குடியாட்சியே அல்ல.

காட்டுமிராண்டிச் சமூகமாக இருக்கிறோம் நாம். இது மாறவேண்டும்.

தீவிரவாதம் பற்றி முணுமுணிப்பை வெளியிட்டதற்கு முட்டிக்கு முட்டி தட்டிய கதை:

“The Statesman” republished an op-ed from “The Independent,” Britain – “Why should I respect these oppressive religions?”. Some Muslims in Calcutta went berserk like they did in the case of Taslima Nasreen. A case was filed against editor – Ravindra Kumar, and the publisher – Anand Sinha, and they were arrested./blockquote>

இப்பொழுது சமீபத்திய (பழைய!?) செய்தி:

கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் பிரபல நாளிதழான தி ஸ்டேட்ஸ்மேன் (The Statesman) நாளிதழின் ஆசிரியரும் வெளியீட்டாளரும் இன்று (ஃபெப்ரவரி 11) கைது செய்யப் பட்டனர்.

இஸ்லாம் மதத்தினை தாக்கும் விதமாக எழுதியதாக ஆங்காங்கே நடந்த ஆர்ப்பாட்டத்தினை அடுத்து இந்த நாளிதழின் ஆசிரியர் ரவீந்திர குமார் மற்றும் வெளியீட்டாளர் ஆனந்த் சின்கா ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை இணை ஆய்வாளர் பிரதீப் சட்டர்ஜி கூறினார்.

முகமது சகீது என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப் பட்டதாகவும், இந்திய குற்றவியல் சட்டம் 295A மற்றும் 34 ஆகியவற்றின் அடிப்படையில் புகார் அளிக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.

எதை அச்சில் இட்டார் என்று இவ்வளவு கொந்தளித்தார்கள்?

All people deserve respect, but not all ideas do. I don’t respect the idea that a man was born of a virgin, walked on water and rose from the dead. I don’t respect the idea that we should follow a “Prophet” who at the age of 53 had sex with a nine-year old girl, and ordered the murder of whole villages of Jews because they wouldn’t follow him.

Sujatha: Printing & Spelling Mistakes

அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது.

‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகர் ஆகிறார்.

சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்த்கம் சுமையுள்ள புத்த்கம் ஆனது. தன் கட்டுரையில் உள்ள அச்சுப் பிழைகளைக் கணக்கிட்ட பேராசிரியர் அப்படியே அசந்துபோய்விட்டதார் என்று கேள்வி!

“அத்தா! உனை நான் கண்டுகொண்டேன்”, என்ற ஆழ்வார் வரி, ‘அத்தான் எனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது!

அப்புறம் அட்டையில் அறிவித்த பி.எஸ். ஐயா என்பவர் எழுதிய சிறுகதையை உள்ளே தேடு தேடு என்று தேடினேன்.

நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள கடினத்தை நான் அறிவேன்.

ஜனவரி, 1967

முந்தைய சுஜாதா « 10 Hot

Get Cash for your used Computers, Cell phones: Electronics Recycling Guide

சேலையைப் போட்டு எவர்சில்வர் பாத்திரம் கொடுத்தது அந்தக் காலம். மின் பொருளை மறு சுழற்சி செய்து நோட்டு எண்ணுவது இந்தக்காலம். உங்களின் தொழில்நுட்ப சாதனங்களை தள்ளுபடியாக விற்க, வாங்க:

Did you know?

  • The average lifespan of computers in developed countries has dropped from six years in 1997 to just two years in 2005.
  • Mobile phones have a lifecycle of less than two years in developed countries.
  • 183 million computers were sold worldwide in 2004 – 11.6 percent more than in 2003.
  • 674 million mobile phones were sold worldwide in 2004 – 30 percent more than in 2003.
  • By 2010, there will be 716 million new computers in use. There will be 178 million new computer users in China, 80 million new users in India.

1. CollectiveGood

  • உங்களின் வெள்ளித்திரை மானிட்டர், மடிக்கணினி, வீ/ப்ளேஸ்டேஷன்/எக்ஸ் பாக்ஸ் போன்ற விளையாட்டுப் பெட்டி, கேமிரா, ப்ரின்டர், எம்பி3 ப்ளேயர், ஐபாட், செல்பேசி என்று சகலத்தையும் மறுசுழற்சி செய்து, அதற்கான பணமும் தருகிறார்.
  • பணத்தை தொண்டு நிறுவனத்திற்கு தானமாகவும் அளித்துவிடும் வாய்ப்பும் அளிக்கிறார்.
  • 45 நாளுக்குள் எல்லா பணமும் பைசல் செய்யப்பட்டு பரிமாற்ற பட்டுவாடாவும் முடிந்துவிடும்.

2. Flipswap » Get Paid for Recycling Your Phone

  • வருடத்திற்கு வருடம் செல் போன் மாற்றும் ஆசாமியா? அல்லது மாதத்திற்கு மாதம் புது டெக்னாலாஜி வாங்கிப் பழசு மக்கிப் போகிறதா? பழசை இவர்களிடம் அனுப்பினால் கைமேல் காசு கிடைக்கும்.
  • அனுப்பிய பொருளை ரிப்பேர் செய்வார்; பழுது பார்த்தபின் ஓடத்துவங்கி விட்டால் அதை பயன்படுத்த விழைவோரிடம் விற்றுவிடுவார்.
  • செப்பனிட முடியவில்லை என்றால் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத நிலையில் ரிசைக்கிள் ஆகி விடும்.

who-gets-the-trash-e-waste-electronics-waste-recycle-greenpeace
3. Buy and Sell Electronics, Sell Cell Phone, Recycle Electronics – gazelle.com

  • சராசரியாக 115 அமெரிக்க டாலர்கள் உங்களின் பழைய தட்டுமுட்டு சமாச்சாரத்திற்கு கிடைத்தால் எப்படி இருக்கும்?
  • வஸ்துவை நீங்கள் தபாலில் அனுப்புவதற்கான உறை முதற்கொண்டு அனுப்பி வைப்பார். தபால் தலை, கொடுக்கல்/வாங்கலில் நசுங்குதல் என்றெல்லாம் கவலைப்படவே தேவையில்லை.

cell-phone-life-cycle-reuse-throw-sell-buy-money-cash

4. Home | MyBoneYard Recycle

  • விசா தவணை அட்டையாக கொடுக்கிறார்.