அச்சுப்பிழைகளில் நகைச்சுவை இருக்கிறது.
‘சம்போ கந்தா’ என்பதை ‘சம்போகந் தா’ என்று அச்சடித்தவர் தன்னையறியாமல் நகைச்சுவை நாஸ்திகர் ஆகிறார்.
சென்ற இதழில் சில சுவாரசியமான பிழைகள் இருந்தன. சுவையுள்ள புத்த்கம் சுமையுள்ள புத்த்கம் ஆனது. தன் கட்டுரையில் உள்ள அச்சுப் பிழைகளைக் கணக்கிட்ட பேராசிரியர் அப்படியே அசந்துபோய்விட்டதார் என்று கேள்வி!
“அத்தா! உனை நான் கண்டுகொண்டேன்”, என்ற ஆழ்வார் வரி, ‘அத்தான் எனை நான் கண்டுகொண்டேன்” என்று சினிமாப் பாட்டாக மாறியது!
அப்புறம் அட்டையில் அறிவித்த பி.எஸ். ஐயா என்பவர் எழுதிய சிறுகதையை உள்ளே தேடு தேடு என்று தேடினேன்.
நான் இவைகளை எடுத்துரைப்பதில் என் நோக்கம் இதில் உள்ள ஹாஸ்யத்தைச் சொல்வதற்கே. அச்சகத்தார் மன்னிக்கவும். அவர்கள் தொழிலில் உள்ள கடினத்தை நான் அறிவேன்.
ஜனவரி, 1967
முந்தைய சுஜாதா « 10 Hot