Tag Archives: Readers

நியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்

அனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்

Nizhalil-Jayamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NY-USA-America-Authors-Tamil

மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NYC-US-America-Writers-Tamil

Writer Jeyamohan visit in America

My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்


ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

தேடல் புராணம்

1. ‘arrogance‘ என்று கூகிளில் தேடினால், இந்த வலைப்பதிவுக்கு முதலிடம் கிடைத்திருந்தது. இப்பொழுது மாற்றிக் கொண்டுவிட்டது. (குறிப்பிட்ட பதிவு: DE-MOTIVATIONAL POSTERS « Snap Judgment)

2. கூகிளின் பக்க தர வரிசை

அ) தமிழ் நியூஸ் மீண்டும் ஆறு (முந்தைய பதிவு: Google Page rank – Tamil News)
– ஆறில் ஆரம்பித்து, ஐந்தாக மாறி இருந்த நிலையில், மீண்டும் ஆறு. இதன் அடிப்படை புரியவில்லை. வெறும் 22 புதிய இடுகை மட்டுமே வந்த ஏப்ரல் போல் தேய்ந்து கொண்டிருக்கும் பதிவு தேடல்களுக்கு முக்கியமாகிறதா!?

ஆ) திரட்டிகளில் தமிழ்மணம் மட்டுமே ஐந்து; மற்ற மூன்றும் நான்கு.

இ) கில்லி – நான்கில் இருந்து ஐந்து.

ஈ) தேசிபண்டிட் – ஆறோ/ஏழோ இருந்தது. இப்பொழுது மூன்று. ஏன்!

உ) ஈ-தமிழ் – 5 –> 3

ஊ) சற்றுமுன் – 3 –> 4

எ) வோர்ட்பிரெஸ் பதிவுகள்: அலசல், தமிழில் பங்குவணிகம், தாளிக்கும் ஓசை – 5

ஏ) பிற வோர்ட் பிரஸ்: கவிதைச் சாலை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், திரை விமர்சனம் – 4/10

3. தேடல் வார்த்தைகள்

  • why was the sentence of worldcom ceo bernie ebbers so stringent (25 years in prison)
  • he may be a god but he is no politician
  • send article to kumudum magazine
  • in which film nayandara kissed simbu
  • nayanthara is a bitch
  • is nayanthara older than simbu
  • chameleon green wedding
  • where can i find i-pill in pondicherry
  • konar tamil notes
  • pornofication

How to be picky with blog posts? – Primer for selective reading

Surfing the Internet makes about as much sense as for, say, a biologist to read all the biology journals. You will never learn anything that way. No serious scientist does that .The literature is massive. You get flooded by it. A good scientist is one who knows what to look for, so you disregard tons of stuff and you see a little thing somewhere else. The same is true for a good newspaper reader. Whether it’s in print or on the Internet, you have to know what to look for. This requires knowledge of history, an understanding of the backgrounds, a conception of the way the media functions as filters and interpreters of the world. Then you know what to look for. And the same is true on the Internet.

What We Say Goes by Noam Chomsky

சற்றுமுன்னுக்கு எழுதியதின் தொடர்ச்சியாக இதை வைத்துக் கொள்ளலாம். கில்லிக்கு எவ்வாறு பதிவுகளை இடுகிறேன் என்னும் சொந்தக் கதையாகவும் வைத்துக் கொள்ளலாம். ஒரு வருட இறுதியில் எழுதியதன் அந்தாதியாகவும் தொடரலாம்.

1. In-depth ஆக எழுதுபவர்கள் மிக மிக முக்கியம். பங்கு வணிகத்துக்கு இன்னார்(கள்), விஞ்ஞானம்/அறிவியல், காபி குடித்தல், சிக்கனமாக வாழ்தல் என்று எடுத்துக் கொண்டதை ஆழமாக சூப்பர் ரின் போடுபவர்களைப் புத்தகக் குறியிடுங்கள். குறிச்சொற்களாக, ‘அன்றாடம்’, வாராந்தரி என்று உங்களுக்கு விருப்பமான அடையாளங்களைக் கொடுங்கள். அவ்வப்போது இந்த வலையகங்களில் இருந்து தொடுப்பு கொடுத்து வரவும்.

2. தமிழ்ப்பதிவுகளை அறிய தமிழ்மணம்/தேன்கூடு, ஆங்கிலப் பதிவுகளுக்கு இன்னொரு செய்தியோடை சேவை என்று வைத்துக் கொள்ளவும். தினசரி ஒரு முறை முழுமையாக மேய்ந்துவிடவும். தமிழ்மணத்தில் கடந்த 24 மணிநேரங்களில் எழுதியவை இருக்கின்றது. தேன்கூட்டிலும் தனிப்பட்ட விருப்பங்கள் மூலம் ஒரே பார்வையில் 50 தலைப்புகளை கவனிக்க முடியும்.

3. ஒவ்வொரு விதமான விஷயங்களுக்கு, ஒவ்வொரு கணக்கு தொடங்கவும். ப்ளாக்லைன்ஸ் என்றால் நண்பர்களின் பதிவுகள்; கிஞ்சா என்றால் விடுபட்டுப் போகும் சிலர்; கூகிள் ரீடரில் புகழ்பெற்ற பதிவர்கள்; ஃபீட் ரீடர் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றையும் தனித்துவமாக பயன்படுத்தினால் குழப்பம் இன்றி கோர்வையாக வாசிக்கவும், நேரத்தை மிச்சப்படுத்தவும் செய்யலாம்.

4. Blogroll என்பது முக்கியமான விஷயம். குறிப்பாக ஆங்கிலப் பதிவுலகத்தில் மேய இது இன்றியமையாதது. ஒருவரின் குறிப்பிட்ட இடுகை பிடித்திருந்தால், வித்தியாசமாக இருந்தால், பக்கவாட்டில் நோக்குங்கள். அவர் விரும்பிப் படிக்கும், கவனித்து நோக்கும் பதிவர் பட்டியல் கிடைக்கும். ஒவ்வொன்றாக உள்ளே சென்று மேலோட்டமாகவாவது வாசிக்கவும். சிலது கவராமல் போகலாம். ஓரளவு பிடித்ததை தாற்காலிகமாக செய்தியோடை வாசிக்கும் நிரலில் ‘அண்மையில் சேர்க்கப்பட்டவை’ போன்ற குறிச்சொல்லுடன் சேர்த்து, கவனித்து வரவும். (நான் இதற்கு ப்ளாக்பிரிட்ஜ் உபயோகிக்கிறேன்).

5. ஆங்கிலப் பதிவுலகுக்குள் நுழைவது எவ்வாறு? அமித் அகர்வால் கொடுக்கும் பட்டியலை துணைக்கு அழைக்கலாம். இன்டிப்ளாக் பரிந்துரைகளில் இடம்பெற்றவர்களில் துவங்கலாம்.

6. சென்ற #4 & #5 – ஆகிய இரண்டுமே புகழ்பெற்றவர்களையும் பெத்த பேர் பெற்றவர்களை மட்டுமே சுட்டும். புதியவர்களை அறிய உபயோகம் ஆகாது. இதற்கு பிரகாஷ் சொன்ன கருத்து பயன்படும்:

தமிழ்மணத்திலே இணைச்சுக்காம, சுமார் ஆயிரத்து ஐனூறு பதிவுகள் (அத்தனையும் ஆக்டிவ்) இருக்கிறது.. நான் மானிட்டர் செஞ்சபடி, ஒரு நாளைக்கு ஒரு புதுப் பதிவு துவங்கப்படுகிறது. ரெண்டுல ஒண்ணுக்குத்தான் தமிழ்மணம், தேன்கூடு இருக்க்றதே தெரியும். இது பின்னாலே திரட்டிகளில் இணைச்சுக்கலாம் இல்லாமப் போகலாம். இது எல்லாத்தையும் பார்த்து, கண்காணிச்சு, சேர்த்து திரட்டி ஒண்ணு ஆரம்பிங்க.

புதுசா வரக்கூடிய பதிவுகளை மானிட்டர் பண்ண ஒரு வழி. நுட்ப அறிவு இருந்தா, crawler எழுதிக்கலாம். இல்லாட்டா ஒரு எளிய வழிமுறை.

1. ஏதோ ஒரு feedreader கணக்கு.

2. blogsearch.google.com க்குப்ப் போய், ‘ நான்’, ‘எனது’, ‘என்’, ‘வணக்கம்’ என்று நான் வார்த்தைகளுக்கு தனித்தனியா blogsearch alert செட் செய்து கொள்ளவும் ( sort bydate). இந்த நான்கு வார்த்தைகள் இல்லாமல் யாரும் பதிவு ஆரம்பித்து எழுதமாட்டார்கள் என்பது லாஜிக். இந்த வார்த்தைகள் இல்லாமல் எழுதுகிற பரப்பிரம்மங்கள், பதிவர் என்கிற கேட்டகரியிலேயே வர மாட்டார்கள் 🙂

3. தினம் ராத்திரி, வர பதிவுகளைப் படிக்காமலேயே, add to reader வசதி மூலமாக feedreader இலே சேர்த்துக் கொள்ளவும். ஏற்கனவே சேர்ந்திருந்தால்,. லொள்ளென்று குலைக்கிற மாதிரி ரீடரை configure செய்து கொள்ளவும். that way you can avoid redundancy.

4. மாசத்துக்கு ஒரு முறை ஒபிஎம் எல்லாக எக்ஸ்போர்ட் செய்து கொள்ளவும்.

இது கில்லியின் டிரேட்சீக்ரட் :-). ஒரே மாசத்தில் மொத்த பதிவுகளும் உள்ள வந்துடும்/

7. தமிழில் எழுதும் அத்தனை பதிவுகளையும் கூகிளின் வலைப்பதிவு தேடலில் கண்டுகொள்ளலாம். இதே மாதிரி டெக்னோரட்டியும் பயனுள்ளது. அது பதிவர்களை தரம் பிரித்தும் காட்டுவதால், தேடல் முடிவுகளில் சுவாரசியமான இடுகைகளை அடையாளம் காண்பது எளிதாகும்.

7. (அ) இன்னொன்று ஃபர்ல், டெலிசியஸ், க்ளிப்மார்க்ஸ் போன்ற இடங்களில் யார் அதிகம் படிக்கப் பெறுகிறார்கள், எவ்வாறு குறிச்சொல்லாக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் தரம்/குணம்/மணம்/சுவை காட்டும்.

7. (ஆ) தமிழில் ரோல்யோ, யூரெக்ஸ்டர் போன்றவை இன்னும் பரவலாக பயன்படுத்த ஆரம்பிக்கப்படாததால், பொருத்தமில்லாத முடிவுகள் மாத்திரமே வருகின்றன. பிப்பல் நான் உபயோகித்ததில்லை.

7. (இ) வீடியோக்களை கண்டுகொள்வதற்கு யூட்யூப் தலை பத்து பட்டியல் அல்லாமல் வேறு வழிகளிலும் செல்லவும்.

8. எதைத் தேடுவது? – அன்றாடம் செய்தி படிக்கிறீர்கள்; சில பிரச்சினைகளை சொந்த அனுபவமாக உணர்கிறீர்கள். சினிமா வெளியாகியுள்ளதா… தேடலாம். நியூ யார்க்கில் சத்யாகிரஹா என்னும் தியேட்டர் அரங்கேறுகிறதா… தேடுங்க.

9. எது ‘புதுசு கண்ணா புதுசு’? – டிக், ரெடிட், நியூஸ்வைன், ஸ்டம்பிள் அபான் போன்றவை கொஞ்சம் சத்தத்துக்கும் சத்துக்கும் இடையே உள்ளதை பிரித்து அன்னப்பறவை ஆக்கும்.

10. தமிழில் தற்போதைக்கு மாற்று மட்டுமே ஓரளவு இதை நிரப்புகிறது. ஆங்கலத்திற்கு தேசிபண்டிட், ப்ளாக்பாரதி போன்ற பரிந்துரைத் தளங்களை நம்பியிருக்கிறேன்.

11. மீண்டும் #1-ஐ பார்க்கவும். மற்றவருக்கு தேவை ஆழம்; இந்த மாதிரி தெரிவுகள் தளத்திற்கு தேவை அகலம். ஒரே மாதிரியான விஷயங்களே தொடர்ச்சியாக காணக்கிடைத்தால்; கிட்டத்தட்ட சம்பந்தமுள்ள தலைப்புகளை அடுத்தடுத்து பார்த்தால் அலுத்துப் போகும். 256 தொலைக்காட்சி கன்னல் இருப்பது போல் பல்வண்ணக்கோர்வை தேவை.

12. க்ரீமி லேயர், பிரதிபா பட்டீல், ஃபிட்னா என்று விவகாரமான விஷயங்களில் பன்முகம் என்ற பெயரில் மாற்றுக் கருத்து, எதிர் சிந்தனைக்கு எதிர் சிந்தனை என்று மிக்சர் கொடுக்க வேண்டும்.

13. விடாது கருப்பு, டோண்டு, என்று எல்லாவிதமான பதிவர்களும் இடம்பிடிக்க வேண்டும்.

14. ஒரே பதிவரின் இடுகைகளே மீண்டும் மீண்டும் இடம்பிடிக்கக் கூடாது. ஒரே பரிந்துரையாளரே தொடர்ந்து பதிவுகளை பரிமாறக் கூடாது. இரண்டும் #11-க்கு வழிவகுக்கும்.

15. கொடுக்கும் இரண்டு வரி காமென்ட்களில் துள்ளல் வேண்டும். ‘செத்தவன் கையில் தூர்தர்ஷன் ஷெனாய’ தந்தது மாதிரி அருஞ்சொற்பொருள் கூடாது.

16. எட்டேகால் கிலோபைட்டுக்கு மேல் எழுத்தைக் கண்டால், பொறுமையாக படிக்கவும்; அதற்கான பொருத்தமான பத்தியை கண்டுபிடிக்கும் அவகாசமும் — கொடுக்கும் வேலையில் அமர்ந்திருக்க வேண்டும்.

பிற்சேர்க்கை:

17. சமீபத்தில் சேர்க்கப்பட்ட பதிவுகளை தமிழ்மணமும் தேன்கூடும் பட்டியலிடும். அண்மையில் நுழைந்தவர்களைப் படித்து அறிமுகம் தருவது ஃப்ரெஷ்ஷாகவும் இருக்கும்; வெரைட்டியும் கொடுக்கும்; புதியவர்களுக்கு ஊக்குவிப்பாகவும் பரந்துபட்ட வாசகர் வருகைக்கு வித்தாகவும் அமையும்.

என்ன படிப்பது, எப்படியெல்லாம் வாசிப்பது, எங்கே வைத்துக்கொள்வது, எவரைப் பிடிப்பது, எப்பொழுது என்று நேரங்காலம் பார்ப்பது என்றெல்லாம் ஓரளவு சொல்லிவிட்டேன்.

எதற்காக படிக்கணும்? எதைத் தேர்ந்தெடுக்கணும்??

இரன்டுக்குமான விடை தெரிந்தால், உங்க மின்னஞ்சல் முகவரி தாங்க… அந்த பிரும்ம இரகசியத்தை சொல்லிக் கொடுங்க.

இரண்டுக்குமான விடை தெரியாதவர்கள், உங்க மின்னஞ்சல் முகவரி தாங்க… கில்லிக்கான பரிந்துரையாளர் ஆக அழைப்பு இடுகிறேன். கோஷ்டியில் சேர சரியான நபர் நீங்கதான்!