Tag Archives: Medical

HBO Serials – “Getting On”: Doctors vs Nurses vs Patients

சன் தொலைக்காட்சி எதற்காக அதிகம் பார்க்கப்படுகிறது? கலைஞர் முன் நிகழ்த்தப்படும் கலை மற்றும் குத்தாட்ட நிகழ்ச்சிகளுக்காகவா? அல்லது வணக்கம் தமிழகம் போன்ற உரையாடல்களும் செய்திகளும் அறியவா? நிச்சயமாக, ராதிகா நடித்து, பாரா போன்றோர் எழுதும் நெடுந்தொடர்களுக்கத்தான்.

நான் எச்.பி.ஓ. பக்கம் ஒதுங்குவதும் HBOவின் சீரியல்களுக்காகத்தான்.

இந்த வருடம் மூன்று சுவாரசியமானதாகத் தெரிகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட True Detective ஏமாற்றவில்லை. அதைத் தனியாக கவனிப்போம்.

பிபிசி-யில் இருந்து அறிவுக்கடன் வாங்கி Getting On உருவாகி இருக்கிறது. ஆஸ்பத்திரியில் நடப்பதை வைத்து காமெடி செய்கிறார்கள். ER, Grey’s Anatomy போன்றவை மருத்துவமனையை இறுகிய முகத்துடன் அணுகி தமிழ்த் தொலைக்காட்சி போல் அழ வைத்து, நேஷனல் ஜியாகிரபி போல் உடலின் கூறுகளை அணு அணுவாக ஆராய்ந்து, பி.பி.எஸ். போல் ஆவணப்படத்தின் ஆழத்துடன் நோய்களையும் சிகிச்சைகளையும் சொல்வதைப் பார்த்த கண்களுக்கு ஆறுதலாக இருந்தது.

முன்னாபாய் எம்பிபிஎஸ் பார்த்ததால் மட்டும் அல்ல… மருத்துவர்களை விட நர்ஸ்கள் மேல் நிறையவே மரியாதை உண்டு. மனைவியின் பிரசவத்தின் போது கண்கூடாக பார்த்ததினால் இருக்கலாம். உறவினர்களை பார்க்க செல்லும்போது இராப்பகல் பாராமல் உழைக்கும் சிரத்தையை தரிசித்ததால் இருக்கலாம். எச்.பி.ஓ.வில் வரும் “கெட்டிங் ஆன்” அவர்களின் சிரமங்களை கீழிரக்காமல், நகைச்சுவையாக சித்தரிக்கிறது.

”அரட்டை அரங்கம்” ஆரம்பிக்கும் முன்பு விசுவும், “சம்சாரம் அது மின்சாரம்” ஆல்பர்ட்டு ஆவதற்கு முந்தைய கிஷ்மூவும் தோன்றிய தூர்தர்ஷன் நிகழ்ச்சியில், மேல்நாட்டு கிஷ்மூ ஆங்கிலத்தில் பேசப் பேச, அதைத் தமிழில் விசு மொழிபெயர்ப்பார். அவர் “Peace” என்பார். விசுவோ, “பட்டாணி” என்பார்.

கொஞ்சம் போல் ஆத்திரமான கிஷ்மூ “Peace… Peace…”. விசு “பட்டாணி… பட்டாணி…”. இப்படியே நாலைந்து நிமிடம் எல்லா உணர்ச்சிகளிலும் வடிவங்களிலும் பட்டாணியும் அமைதியும் அல்லல்படும். அதைப் போன்ற எளிமையான துணுக்குகளும், வாழ்க்கையின் அபத்தங்களும், ஆராய்ச்சிகளின் வெற்றுணர்தல்களும், இன்ஷூரன்சின் அராஜகங்களும் போகிற போக்கில் கிண்டல் அடிக்க எச்பிஓ சரியான கன்னல்.

H1N1 (Swine) Flu? Are you in Danger? Will you die?

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

Mottai Maadi Info Meet on Kizhakku (NHM) Publishers: H1N1 Flu (Swine Virus)

பயப்படுணுமா?

எனக்கு பேக்டீரியாவுக்கும் வைரசுக்கும் வித்தியாசம் தெரியாது.

விக்சனரி அகராதிப்படி Bacteria என்றால் நுண்ணுயிரி; Virus என்றால் நோய்க்கிருமி.

ஸ்வைன் காய்ச்சல் என்று இரண்டு மாதம் முன்பு அழைக்கப்பட்டு இன்றளவில் எச்1என்1 என்று ஏதோ அமெரிக்க விசா போல் உருமாற்றம் கண்டிருக்கும் பன்றி ஃப்ளுவிற்கு நீங்கள் பயப்பட வேண்டுமா?

  • நூறு டிகிரி தாண்டும் காய்ச்சல்
  • தொண்டை அரிப்பு
  • ஜலதோஷம், மூக்கடைப்பு

போன்றவை உங்களுக்கு இருந்தால் பன்றிக்காய்ச்சல் வந்திருக்கிறதா என்பதை அறிய சோதனை செய்யவேண்டும். இந்தியாவில் அந்த சோதனைச் சாலை தற்போதைக்கு இரண்டே இடத்தில்தான் உள்ளது: மும்பை அருகே புனே மற்றும் தலைநகரம் எயிம்ஸ், புது டெல்லி.

உங்களின் சாம்பிள் அங்கே பரிசோதனைக்குச் சென்றபின் 48 மணி நேரம் கழித்தே, உங்களுக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளதா என்பதை ஓரளவு தெரிந்துகொள்ள முடியும். அதற்குள் பலகீனமானவர் என்றால் இறவனடி போய் சேர்ந்திருப்பார்.

எப்படி வரமால் தடுக்கலாம்?

அமெரிக்க துணை ஜனாதிபதி பிடென் வாக்குப்படி, வாசற்படியைத் தாண்டக் கூடாது. எங்கேயாவது கோவில், கோர்ட்டு, கோயிஞ்சாமி கூட்டம் சென்றாலும் பீடிக்கும்.

வருடாவருடம் அமெரிக்காவில் ஃப்ளூ எனப்படும் காய்ச்சலுக்கு இறப்பவர்களின் எண்ணிக்கை: முப்பத்தாறாயிரம் என்பார்கள் சிலர் (36,000 Americans died of Flu related causes each year during the 1990’s.). ஆனால், வழுக்கி விழுந்து இறந்தால் கூட மாரடைப்பு என்று வகைப்படுத்தும் வகையறா என்கிறது CDC – Influenza (Flu) | Q & A: 2007-08 Flu Season

  • கை சுத்தம்: டெட்டாலோ, மெடிமிக்ஸொ… சோப் போட்டு கையை அவ்வப்போது அலம்பி சுத்தாமாக்கிக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக எதையாவது உண்பதற்கு முன்.
  • சளி நீக்கி: கைகுட்டை பழைய ஹைதர் காலத்து நாகரிகம். க்ளீனெக்ஸ் போல் பேப்பர் துண்டு கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். தும்மல் வந்தால் அதைப் பயன்படுத்தவும். உடனடியாக குப்பையில் போடவும்.
  • துஷ்டனைக் கண்டால் தூரவிலகு: எவருக்காவது உடம்பு கொதிக்கிறது, காய்ச்சல் என்றால் காத தூரம் ஓடிப் போவிடுங்கள்.
  • அடைந்து கிடக்கவும்: விமானம், இருவுள் பயணம், பேருந்து சவாரி, ஆலயம், அலுவலகம், பள்ளிக்கூடம் போன்ற மூடிய பிரதேசங்களைத் தவிர்க்கவும்.
  • மேலும் விவரங்கள்

சுவாரசியாமான மறுமொழிகளுக்கும் அறிவிப்பும்: பேப்பர் » கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்

வயது என்ன?

பின் பதின்வயது, இருபதுகள் என இந்த வைரஸ் இளைஞர்களையே பாதிக்கிறது. இயல்பாக இவர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் சிறப்பாக இருக்கும். 50 வயதுகளில் இருப்போரை H1N1 இன்ஃப்ளுயன்சா குறைவாகவே தாக்கியுள்ளது.

தொற்றுநோய் எச்சரிக்கை

உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை நிலையை 5-6 நிலைகளுக்கு உயர்த்தியுள்ளது. 1968 ஆம் ஆன்டுக்குப் பிறகு, ப்ளூ காய்ச்சலுக்காக விடுக்கப்படும் அதிகபட்ச எச்சரிக்கை இது. உலகின் ஒரு பகுதியில் உள்ள இரண்டு நாடுகள், மற்றொரு பகுதியில் ஒரு நாட்டில் நோய் பரவினால் தொற்றுநோய் எச்சரிக்கை விடுக்கப்படும்.

  • நிலை 1-3: பெருமளவு விலங்குகளிடமும் சில மனிதர்களிடமும் பாதிப்பு
  • நிலை 4: மனிதர்களிடையே தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது
  • நிலை 5-6 / தொற்றுநோய்: மனிதர்கள் இடையே மிகப் பரவலாகத் தொற்றிய நிலை.
  • உச்சத்துக்குப் பின்: மீண்டும் மீண்டும் தொற்றுவதற்கான வாய்ப்பு
  • தொடர் தொற்றுநோய்: பருவகாலத்துக்கு ஏற்ப நோய் தொற்றுவது.

தடுப்பு மருந்து கிடையாது

இப்போதைக்கு டாமிஃப்லூவைப் போல், தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பட்டு வருகிறது. ஆனால் இது விரைவிலேயே மருந்துக்கு கட்டுப்படாமல் போகலாம். இன்னும் பயங்கரமானதாக உருமாறலாம்.

தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டாலும் கூட அதன் தடுப்புத் திறன், உரிய பாதுகாப்புத் திறனை பரிசோதிக்க பல்லாண்டு காலம் ஆகும்.

தடுப்பு மருந்து கிடைத்தாலும், வளரும் நாடுகளுக்கு அது போய்ச் சேருமா?

விரைவில் காலத்துக்கு ஏற்ப பரவும் ஃப்லூ காய்ச்சல் உருவாகலாம்.

இதுவரை சேதம்

டபிள்யு.எச்.ஓ அறிக்கைப்படி, 29 நாடுகளில் உள்ள 3,440 ஆய்வுக் கூடங்களில் 48 இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இது இன்னும் பரவினால், வேறு வைரஸ்களுடன் கலந்து மேலும் அதிகமாகப் பரவி, இன்னும் மோசமான ஒன்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

தெளிவாக கணிக்க இயலாததாகவும் தொடர்ச்சியாக மாறிக் கொண்டிருப்பதாகவும் இந்த வைரஸ் இருக்கிறது என்று வொர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் தெரிவிக்கிறது. எனவே அதன் தற்போதைய வடிவம் பறவை, பன்றி, மனிதர்களின் மரபணுக்களைப் பெற்றுள்ளது.

இது தொற்றுநோயாக மாறலாம்.

ஏன்? எதற்கு? எப்படி?

H1N1-Avian-Bird-Flu-Pigs-Swine-Influenza-Health-Medical-Doctor

சில தகவல் உதவி: இந்தியா டுடே

ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்: புத்தக விமர்சனம்

காக்டெயில் தந்த போதையில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கலந்த ஆர்வத்துடன் வாங்கி, உடனடியாக வாசிக்கவும் எடுத்த புத்தகம்.

ஒரு தப்படி கூட தவறவிடாத நெத்தியடி. படித்து முடித்தவுடன் ட்விட்டியது:

சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ (உயிர்மை வெளியீடு) வாசிக்கிறேன். சாருவின் பாணி என்று சொல்லப்பட்டாலும் சாருவை விட 1001 தடவை நல்லாருக்கு. – February 9th, 2009


அம்ருதா – விஜய் மகேந்திரன்:

வெறும் கதை சொல்லல் மட்டும் நாவல் அல்ல. தமிழ் நாவல்களில் பல புதுவகையான உத்திகள் கையாளப்பட்டன. அதில் நான் லீனியரும் ஒன்று. கை போன போக்கில், எழுதிச் செல்வது, முன் மாதிரியான முடிவுகள் எதுவும் வைத்துக்கொள்ளாமலே, ஊடே ஆசிரியரின் மனமொழி இவற்றில் வெளிப்படும்.

பெரும்பாலும் நான் லீனியர் முறையில் எழுதப்படும் கதைகள் தமிழில் கவனத்தைப் பெறுவதில்லை. காரணம் இந்த எழுத்து முறையை கையாள்பவருக்கு அதீத மொழிநுட்பமும், சரளமான மொழிநடையும் அவசியம். அவ்வாறு இல்லாவிட்டால் ஆசிரியர் இதைத்தான் சொல்ல வருகிறார் என்பதே புரியாமல் போய் விட வாய்ப்புகள் அதிகம்.

சுதேசமித்திரனின் “ஆஸ்பத்திரி” நான்-லீனியர் முறைப்படி எழுதப்பட்டுள்ௗ நாவல் என்றாலும் அந்த முறைமைக்குள் மட்டும் முற்றிலும் அடக்கிவிட முடியாத நாவல். இரு மகன்கள் மற்றும் அவர்களது அப்பாவின் மரணம் நிகழும் ஆஸ்பத்திரியையும் மையமாக கொண்டு, முன், பின்னாக சம்பவங்களைக் கோர்த்து “ஆஸ்பத்திரி” என்ற ஸ்தாபனத்தின் மீதான தனது விமர்சனங்கௗயும், ஆற்றாமைகளையும் முன் வைக்கிறார்.

“கொலை செய்வதற்கு எனப் பிரேத்யேகமான சில இடங்கள் உண்டு” என்ற வாசகத்துடன் இந்நாவல் ஆரம்பமாகிறது.

அப்பா உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது, நாங்கள் வீட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா இரவு மேட்ச் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தோம். ஸ்ரீகாந்த் பேட் செய்து கொண்டிருந்தார் எனவும் நாவலின் ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. இந்த ஒருவரி கதை நடைபெறுவது கிட்டத்தட்ட பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்பதைக் குறிப்பால் உணர்த்திவிடுகிறது.

பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ வசதிகள் இந்த அளவு எல்லா மருத்துவ மனைகளிலும் பரவலாக்கப்படவில்லை. முக்கியமாக, சென்னையில் இரு பெரும் மருத்துவமனைகள் அனைத்து வசதிகளையும் கொண்டிருந்தது என்பதையும் நாம் நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். அந்த இரு மருத்துவமனைகளில் வசூலிக்கும் கட்டணங்கள் நடுத்தர வர்க்கத்தினரின் தரத்தை விட மிக அதிகமாக இருந்ததால் வேறு வழியில்லாமல், சொத்துக்களை விற்று, அங்கு மருத்துவம் பார்த்தவர்களையும் நானே கண்டிருக்கிறேன். அங்கு ஒரு நாளைக்கு ஐ.சி.யூ.வில் இருக்க வசூலிக்கப்படும் கட்டணம், இன்று சென்னையில் சாப்ட்வேர் இஞ்சினியராக இருப்பவரின் ஒரு மாதச் சம்பளம் ஆகும்.

நடுத்தர வர்க்கத்தினரின் தரவை மட்டுமே பெரும்பாலும் நம்பி நடைபெறும் இம்மருத்துவமனைகளில் அவர்கள் மருந்துக்குக் கூட மதிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம். அதை பல்வேறு இடங்களில் நாவலில் சுவாரசியமாக பதிவு செய்துள்ளார் சுதேசமித்தரன். பணக்காரராக இருப்பின் வெளிநாடுகளிலும், ஏழையாக இருப்பின் அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவம் பார்த்துக் கொள்வது சகஜம். ஆனால் நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமே தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டியுள்ளது. இதற்கு இந்நாவலில் தகுந்த காரணத்தையும் விளக்கியுள்ளார்.

சுதேசமித்திரனின் முந்தைய நாவலான “காக்டெய்லை” விட பல படிகள் உயர்ந்து நிற்கக் கூடியது ஆஸ்பத்திரி. மெல்லிய அங்கதமும், சுவாரஸ்யமான எழுத்தின் வேகத்தோடும் சேர்த்து சிறந்த கதை ஒன்றையும் சொல்லி விடுகிறார். நான்-லீனியரில் கதை சொல்வது கடினம், ஆனால் அதையும் இஇதில் செய்து காட்டியிருக்கிறார்.

உண்மைகள் உறவாடும் எழுத்துக்களில், நான்-லீனியரின் தனிக்குரலாக சுதேசமித்திரனின் ‘ஆஸ்பத்திரி’ நாவலை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

வௌயீடு : உயிர்மை பதிப்பகம்
பக்கங்கள் : 144
விலை : ரூ.80/-


நாஞ்சில் நாடன் முன்னுரையிலிருந்து:

நாவல் வடிவம் சர்வ சுதந்திரங்களையும் வழங்கும் ஒன்று. அந்தச் சுதந்திரத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு எழுதப்பெற்ற நாவல் ஆஸ்பத்திரி. சுதேச மித்திரனின் சிறப்பு என அவரது மொழியையும், கழிவிரக்கமற்ற சுயஎள்ளலையும், அங்கதத்தையும், வெளிப்படைத்தன்மையையும் கருதுவதுண்டு. அச்சமற்று நினைத்ததை எழுத்தில் கொணரும் நேர்மையும் அவருக்கு உண்டு. அவை யாவும் இந்த நாவலில் தருணம் தெர்ந்து வெளிப்பட்டுள்ளன.

இத்தனை வெளிப்படையான எழுத்து தமிழில் அபூர்வமானது. வாசகனைக் கூசச்செய்யும் உண்மை கொண்டு அறைவது. நேரடித்தன்மையும் நியாயமும் கொண்டது. மொழியைக் கையாளும் திறனும் தீவிரமும் கொண்டது எனவே தனித்தன்மையானது.

அவரது பாதிப்பு முன்னோடியின் சிறகுக் கதகதப்பில் முடங்கிக் கொள்வதல்ல. சுறுசுறுப்பாய் கொத்தித் திரிவது, சிறகடித்துப் பறக்க முயல்வது, சொந்தமாய் இரைதேட வல்லது.

பன்முகப்பட்ட உடல் சிக்கல்களுக்காக மருத்துவமனையும் வீடுமாக அலைக்கழியும் தகப்பனாரையும் மருத்துவமனையையும் அவரது இரண்டு மகன்களையும் முக்கியக் கதாபாத்திரங்களாகக் கொண்டது. மருத்துவமனைகளின் செயல்பாடுகளை அங்கதத்துடன் காட்டமாய் விமர்சனம் செய்வது. அதைப் பயன்படுத்தி சமூக விமர்சனம் செய்வது.

மருத்துவமனையில் அப்பாவை அனுமதித்ததே அவரைக் கொலை செய்வதற்கான முகாந்திரம்தானோ எனும் ஐயத்துடன் தொடங்கும் நாவல், அவரை மின் மயானத்தில் எரியூட்டி முடிந்த பின்பும் அந்தக் கேள்வியுடன்தான் முடிகிறது –

இந்த நாவலில் கொலை நடந்ததா இல்லையா என்று?


சுதேசமித்திரன் வலையுரை:

கவிஞர் விக்ரமாதித்யனுக்கு எனது அன்பு கலந்த நன்றியை இப்போதே வெளியிட்டு விடுகிறேன். எனது முதல் புத்தகமான அப்பா (கவிதைகள்) வெளிவந்தபோது விக்ரமாதித்யன் என்னிடம் தன் இசைவின்மையை மிகவும் மென்மையாக வெளியிட்டார்.

அயல் மொழிகளில் ஒரே வி்ஷயத்தை வேறு வேறு வடிவங்களில் எழுதிப் பார்க்கும் வழக்கம் உண்டு என்பதைக் குறிப்பிட்டு, நீங்கள் ஏன் இதை வேறு வடிவத்தில் எழுதிப் பார்க்கக்கூடாது என்று அவர் கேட்டார்.

‘அப்பா’வைப் பொறுத்தவரை அது அந்த வடிவத்தில் எழுதப்பட்டதுதான் புதிது என்பதை நான் நன்கறிவேன் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் (அப்பா எழுதிய காலத்திலிருந்து கணக்கிட்டால் 11 வருடங்கள்) கழித்து ஆஸ்பத்திரியை ஒரு சிறுகதையாக முதலில் எழுதினேன். சிறுகதை என்கிற அளவில் அது சிறப்பானதாகவே இருந்தபோதும் எழுதியவனின் மனத்துள் கொட்டிக் கிடக்கும் மிச்ச சொச்ச சரக்கை உத்தேசித்து அதை முழுமையாக எழுதி விடுவதுதான் சரியானது என்பதாக தோன்றிக்கொண்டேயிருந்தது. கிட்டத்தட்ட இருபதே நாட்களில் அதைச் செய்து முடித்துவிட்டேன். முடித்துவிட்டு ஒரு முறை வாசித்துப் பார்த்தபோது, விக்ரமாதித்யன் சொன்னதைத்தான் ஓரளவு முயன்று பார்த்திருக்கிறேனோ என்கிற வியப்பு என்னுள் எழுந்தது. அது உண்மையானால் அவருக்கு இன்னுமொரு முறை நன்றி.


என்னுரை

கதை சொல்லும் கலை என்றால்:

  • இயல்பு, எதார்த்தம் என்று உதார் விடுவிடாமல் உண்மை நிலையை பிரதிபலிக்குமா?
  • உவமை, ஒப்புமை, எடுத்துக்காட்டு எல்லாம் எப்பொழுது வெற்றிபெறும்?
  • எங்ஙனம் கதாபாத்திரத்தை மனசுக்குள் உட்கார்த்தி நிரந்தர படுக்கையறை உருவாக்குவது?
  • விவரணை எப்படி தேவையில்லாமல் போகிறது? விவரிப்புக்கும் தகவல்களுக்கும் எங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது?
  • கதாசிரியர் கருத்து, வாசகரின் எண்ணவோட்டம், கதைசொல்லியின் இயக்கம், கதாமாந்தரின் நியாயம் எல்லாம் எப்படி ஒன்றுக்கொன்று உரசாமல் உலாவுகிறது?
  • அட… கற்பனை மனிதர் மேல் கழிவிரக்கம் தோன்றுவது ஏன்?

இதெல்லாம் சுதேசமித்திரனின் ஆசுபத்திரியில் சாத்தியமாவதால் நிறைந்த வாசக அனுபவம் கிடைக்கிறது.

மைத்ரேயன்: ‘நீயும் நானும் வேறல்ல?’

Inequality kills by Peter Wilby :: Politicians take heed: social injustice is, literally, deadly – New Statesman: The WHO report (Closing the Gap in a Generation)

“We traditionally assume that health improvement is delivered by medical advances, better hospitals, more doctors and more spending on health services. Most political argument is about how to achieve these ends, with the role of preventative health – improved lifestyles – now adding a further dimension.

The WHO report is saying something quite different: health is political in the broadest sense because it is influenced by the distribution of power, income, goods and services.

Here are some more facts. US blacks are rich by world standards but, in a highly unequal country, most are very poor by local standards. People from Tunisia, Jamaica, Panama, Libya, Lebanon and Cuba all have higher life expectancies than the US black population.

If black mortality rates were the same as those for US whites 886,202 deaths would have been averted between 1991 and 2000. Over the same period, 176,633 lives were saved by medical advances.”

அசமத்துவம் என்பதை ஒரு தத்துவ, அரசியல், பொருளாதார, அற, பண்பாட்டு ஆய்வுக் கூறாக எடுத்துப் பார்த்து அதோடு சண்டை போடவும், அதே நேரம் அழிக்க முடியாத ஒரு நிரந்தர அம்சமாக, இயற்கையின் தவிர்க்கவியலாத விதியாக அதைப் பார்க்கத் தேவை என்ன என்பதை நிறுவவும் பெருமுயற்சி தேவை என்பது எனக்குத் தெரியும்.

அதைச் செய்யத் தேவையான ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது. திறமை இருக்கலாம். முயற்சி இல்லை. அதனால் அரைகுறையாக இதை உங்களிடம் தள்ளுகிறேன்.

Inequality என்கிற இந்த சொற்பிரயோகத்துடன் எனக்கு நிறைய ஜகடா உண்டு. தன்னளவிலேயே தன்னை மோசமாகக் காட்டும் சில சொற்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலம் புரிந்த எந்த நாட்டிலும் அனேகமாக எல்லா மனிதரிடமும் இந்தச் சொல்லுக்கு ஒரு இழிவான பார்வைதான் கிட்டும். ஏதோ எல்லா மனிதருக்கும் தாம் மிக நல்லவர் என்று ஒரு எண்ணம்.

நடத்தையிலும், நம்பிக்கையிலும் எத்தனை அசமத்துவத்தை தினமும் அவர்கள் நிறுவிக் கொண்டிருந்தாலும், கருத்தளவில் அசமத்துவத்தைக் கறாராகவும், முழுமூச்சோடும் தாம் எதிர்ப்பவராகவும், சமத்துவத்தை அடைவதுதான் தம், மேலும் மொத்த மனித குலத்தின் குறிக்கோள் எனவும் அபத்தமாக நம்பாத மனிதரை நான் இன்னும் பார்க்கவே இல்லை.

அப்படி யாராவது என் கண்ணில் பட்டிருந்தால், அவரை நான் ஒரு அபத்த மனிதராகவோ, அல்லது கிறுக்கராகவோ, அல்லது அதிகார வெறியராகவோ – அதாவது நார்மல்சி என்பதில் இருந்து விலகிய ஒரு அதீத கோணல் மனிதராகவே நானும் பார்த்திருப்பேன்.

அவர் ஒருவரே முழு எதார்த்த வாதி என்று அவரைப் பார்க்க இத்தனை வருடம் கழித்துச் சமீப வருடங்களில்தான் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை.

ஏன் சமத்துவம் என்பது ஒரு மாரீச மான் மட்டுமல்ல, அதை அடைந்தால் மனித குலம் அந்த மான் ஒரு பேரரக்கன் என்பதை அறியும் என்பதையும் பேசலாம்.

இப்போதைக்கு சில அறிவிப்புகளை மட்டும் தருகிறேன்.

அசமத்துவம் என்பதை எடுக்க முடியாது, அழிக்க முடியாது, அது இருப்பதுதான் மனித படைப்பு சக்திக்கே உந்து சக்தி என்று கருதுபவன் நான். அதற்காக நான் விமானத்தில் போக வேண்டும் வேறு மக்கள் தெருவில் குப்பை அள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்று என் மீது ஈட்டி வீச யாரும் தயாராக வேண்டாம்.

ஒரு அளவுக்கு மேல் inequality அசமத்துவம் என்பதைக் குறைக்க முடியாது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் சாதாரணமாக 1:4 என்ற விகிதத்தில் அசமத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள். இதையும் குறைக்க முடியலாம்.

எல்லா மனிதருக்கும் ஒரே சம்பளம் என்றும் அனைவருக்கும் ஒரே தொகைதான் வருடத்துக்கு என்று ஆக்கினாலும் அசமத்துவத்தைக் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் வேலை செய்ய வருபவர்கள் மிகக் குறைவாகவும், வந்தாலும் துலக்கமாகச் செய்பவர்கள் குறைவாகவும், துலக்கமாகச் செய்தாலும் புது உத்திகள், முன்னேற்றத்துக்கான கண்டு பிடிப்புகள் ஆகியனவற்றிற்காக தம் அனைத்தையும் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவும் ஆவர் என்பது என் ஒரு ஊகம்.

எதிர்மறையாக எல்லாரும் அசாதாரண ஊக்கத்துடன் சமூகம் முன்னேற என்று உழைக்கத் துவங்கினால் எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

இது வெறும் உழைப்பு அதற்கான ஊதியம் என்ற ஒரு குறுகிய தளத்தை மட்டும் கருதிப் பேசியது. இதைப் பெருக்கினால் ஏதேதோ விளைவுகள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

குமுதம் குளறுபடி: தலை பத்து டெக்னாலஜி

patch_problemsஅசல்: Kumudam :: மணிவண்ணன்

(சந்தா இன்னும் செலுத்தாதவர்களுக்கான) நகல்: Science & Technology Advancements: Latest & Greatest from 2008 « Top Ten: “21ம் நூற்றாண்டின் உபயோகமுள்ள உருப்படியான கண்டுபிடிப்புகள் ஒன்று முதல் பத்து வரை.”

#2 ஆக எழுதி இருப்பது:

பர்த் கன்ட்ரோல் பேட்ச்

கு.க. சிகிச்சை, ஆணுறை, கருத்தடை மாத்திரைகளை வெறுப்பவர்களுக்கான கண்டுபிடிப்பு. `செக்ஸ்’ஸின்போது பேட்ச் மட்டும் போதும். நோ பேபி. நோ டென்ஷன்.

இப்பொழுது பத்து ஆபத்து:

  1. ஆணுறைக்கு மாற்றாக இதை உபயோகிக்க வேண்டாம்.
  2. ABC News: Do You Know Birth Control Patch’s Risks?: “Do Users of the Birth Control Patch Know Enough About Its Potential Dangers?”

  3. பிரசவத்தின் போது இறக்கும் வாய்ப்பை விட 15 மடங்கு அதிக விபரீத வாய்ப்பு இந்த பட்டியை ஒட்டிக் கொள்வதால் அதிகரிக்கிறது.
  4. இந்த patchஐ உபயோகித்தவர்களில் இன்றைக்கு மட்டும் இதுவரை 17 பேர் மரணம். 62 பேருக்கு முடக்கம்.
  5. மூட்டு வலி, கால் வீக்கம், மூச்சிறைப்பு போன்றவை உங்களுக்கும் வேண்டுமா? இந்த அதிநவீன தொழில் நுட்பத்தை இன்றே நாடுவீர்.
  6. Birth control patch linked to higher fatality rate – Women’s health- msnbc.com: “Report: Device has three times greater risk of stroke, blood clot than pill”

  7. ஆணுறை தவிர இந்த மாதிரி பேட்ச் போடும் முறை பாதுகாப்பானதல்ல. எஸ்.டி.டி போன்ற பால்வினை நோய் தொற்றிக் கொள்ளக் கூடும்.
  8. உடல் பருமன் அதிகரிக்கும்
  9. இரத்தம் உறைந்து, கட்டிக் கொள்ளும். குறிப்பாக நடுத்தர வயதினருக்கு உறைகட்டிக் கொள்ளுதல் அதிகமாகும்.
  10. அமைச்சர் அன்புமணிக்கு பிடிக்காததை செய்ய இயலாது. சிகரெட்டில் ஒரு தம் கூட இழுக்க முடியாது
  11. பக்கத்தில் இருக்கும் படத்தைப் பார்க்கவும்.
  12. பாதுகாப்பான பாலுறவிற்கு பர்த் கன்ட்ரோல் பாட்ச் உபயோகம் ஆனதல்ல. எயிட்ஸ் கூட வந்து சேரலாம்.

வாயைக் கொப்புளித்தால் புற்றுநோய் வரும்

iblisterine-ads

செய்தி: Mouthwash 'can cause oral cancer' – Telegraph: “Some mouthwashes can contribute to oral cancer and should only be available on prescription, researchers have claimed.”

  • சுவாசத்தைப் புத்துணர்ச்சியாக்க லிஸ்டெரின் போன்ற மவுத் வாஷ் உபயோகித்தால் வாயில் புற்றுநோய் வரும் சாத்தியக்கூறு ஒன்பது தடவையாக அதிகரிக்கிறது.
  • பல மதுபானங்களில் இருக்கும் போதையை விட மவுத்வாஷ்ஷில் அதிக சாராயம் உள்ளது. – 26%
  • மதுவை அதிக நேரம் வாயில் வைத்திருப்பதில்லை. உடனே குடித்து விடுவோம். ஆனால், வாயை துப்புரவு செய்யும் திரவத்தை பல நிமிடங்கள் வாயிலேயே வைத்திருப்பதால், கேன்சருக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

mouthwash-dangers-listerine-alcohol-liquor-cancer

அடுத்த அதிபருக்கு Action Plan – பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த் கருத்துகளின் தொடர்ச்சி…

5. அடுத்த அதிபருக்கு நீங்கதான் தொழில்நுட்ப ஆலோசகர். என்ன அட்வைஸ் கொடுப்பீங்க?

சில துறைகள் பற்றி மட்டும் இங்கே:

இமிக்ரேஷன்:

வேண்டும் என்கிறபோது இம்க்ரேஷன் துறை கண்டும் காணாமல் இருக்கிறது. சட்டவிரோதமாக வரும் நிறைய ஹிஸ்பானியர்கள், ஆசியர்கள் கட்டிட தொழில், சுற்றுப்புற சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் சட்டத்திற்கு விரோதமாக வரும் மக்களின் தேவை மட்டும் இல்லாமல் மிக குறைந்த ஊதியம் கொடுத்து எந்த வித பாதுகாப்பும் தர வேண்டாமல் இலாபம் ஈட்டும் அமெரிக்கர்களின் பேராசையும் அடங்கும்.

அட்லாண்டாவில் ஒலிம்பிக்ஸ் போது கட்டிடடம் கட்ட வந்த பல மெக்சிகோகாரர்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கும் போதே ஆளான கேலியும் கிண்டலும் துன்பங்களும் நிறைய குழுக்களை ஆரம்பிக்க காரணமாகின. இவற்றல் உயிரிழந்த குழந்தைகள் நிறைய பேர். இப்போது திடீரென சட்டவிரோதமாக வந்த மக்கள் வெளியேற வேண்டும் என்று சொல்வது எப்படி நியாயமாகும்?

அதற்கு மாறாக தேவைப்பட்டு மக்களை சட்டவிரோதமாக்க கடத்தப்படுவை கண்டும் காணாமல் இருக்காமல், சட்ட பூர்வமாக தற்காலிக விசா தந்து, அவர்களுக்கும் நியாய ஊதியம் கிடைக்க வழி செய்ய வேண்டும். இவர்கள் சட்ட விரோதமாக வந்தாலும் அவர்களுக்கு குழந்தை பிறந்தால் அதன் முழு பாதுகாப்பையும் ஏற்றுக்கொள்ளும் அரசு, அதற்காக ஆகும் செலவு பற்றி யோசிப்பதற்கு முன், இவர்கள் சட்டவிரோதமாக இங்கே கடத்தப்பட்டு வருவதே தங்கள் பேராசைதான் காரணம் என்பதை உணர வேண்டும். அவர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனங்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். இதனால் பல சட்ட விரோத நடவடிக்கைகள் குறையும். அது வருங்காலத்தில் சேமிப்பிற்கு வழி வகுக்கும்.

போக்குவரத்துத் துறை:

மத நிறுவனங்களின் தலையீடு அமெரிக்க தலைவர்களின் கொள்கை சார்பினை நியாயப்படுத்துவதால், 1990களின் ஆரம்பத்தில் இருந்தது போல் அல்லாமல் இப்போதெல்லாம் ஆராய்ச்சிகள் சார்புடையதாகிக்கொண்டு வருவதாக எனக்கு தோன்றுகிரது. அறிவியலாகட்டும், தொழில் நுட்பமாகட்டும் தனித்து சுதந்திரமாக இயங்க வேண்டியது கட்டாயமாகும்.

புதிய போர் தளவாடங்களை வடிவமைக்க ஆகும் செலவில், சில அடிப்படை பிரச்சினைகளை தீர்வாக நிதி ஒதுக்கலாம்.

இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்கா முதியவர்கள் அதிகமாக இருக்கும் நாடாக போகிறது. இதில் பலருக்கு வருமானம் என்பது பென்ஷன், சோசிஷியல் செக்யூரிட்டி ஆகியவை மட்டுமே என்னும் போது காரும், பெட்ரோலும், அதற்கான காப்பீடும் ஒரு பாரமாகிப்போகும். உடல்நலம் தொய்வடையும் தருணம், கார் ஓட்டுவதுகூட முடியாததாகும். இதற்கெல்லாம் பொது போக்குவரத்தை வடிவமைக்க வேண்டியது மிக அவசியமாகும். மக்களின் டோல் வரியை உபயோகித்து இன்னும் அதிக சாலைகள் வடிவமைப்பதை போலவே, பேருந்துகள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆ ரம்பிக்கலாம்.

Foster Care:

மருத்துவக் காரணங்கள், இல்லை பதின்ம வயது பெண்கள், போதைப் பழக்கம், அல்லது மதுவிற்கு அடிமையானவர்கள் நிரந்த குடும்பசூழலை கொடுக்க முடியாதவர்கள் கருவைக் கலைக்க விரும்பினால் அது சரியே. இதில் அரசு தலையிட்டு குழந்தை வளர்ப்பை தான் எடுத்துக் கொண்டு கோடிக்கணக்கில் செலவு செய்வது அனாவசியம்.

சின்ன குற்றங்களுக்காக dyfs தலையிட்டு குழந்தைகள் பொருப்பை எடுத்துக் கொண்டு பிறகு foster care இல் ஒப்படைக்கிறது. இதற்காக ஒரு குழந்தைக்கு மாதம் $800 தருவதால் சில பெற்றோர்கள் அந்த பொறுப்பை ஒரு வேலையாக எடுத்துச் செய்கிறார்கள்.

அதன் பிறகு அவர்கள் தனியே வாழவோ அல்லது தத்து எடுத்துக் கொள்லவோ தயார் செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் மீண்டும் பெற்ரோரிடம் செல்ல வேண்டுமானால், மன நல மருத்துவர்கள், 6 பேர் கொண்ட ஒரு குழு ஒருமனதாக முடிவெடுக்க வேண்டும். இதைப் பயன் படுத்தி மன நல ஆலோசனையை நேரம் இல்லாமை போன்ற காரணங்களுக்காக தட்டிக் கழிப்பது அது மீண்டும் நீதி மன்றத்தீற்கு வருவது போன்ற செயல்பாடுகள் அதிகம் செல்வாவதோடு, குழந்தைகள் நலத்தையும் பாதிக்கிறது. இதை தடுக்கவும் சீக்கிரமே அவர்கள் ரெச்பைட் (respite) பாதுகாக்கப்படவும் கிளிண்டன் அரசு தீர்மானங்கள் எடுத்தது.

அபார்ஷன் சட்டரீதியாக இல்லாத மாநிலங்களில் இந்த ஆதரவற்ற குழந்தைகள் காக்கும் பொறுப்பு ஒரு சோஷியல் பணியாளருக்கு 200 வரை போக, நிறைய கவனக்குறைவுகள் உண்டாகின்றன. அரசாங்கம் பொறுப்பேற்காமல், பெற்றோர் அதிக பொறுப்புடன் இருக்கவும், குறைந்த பட்சம் 6 மாத காலத்துள் அந்த குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பையும் அல்லது அதற்கான செலவை தண்டனையாக கட்டவும் செய்ய வேண்டும்.

உள்நாட்டு பாதுகாப்பு:

பறவைக்காய்ச்சல் மற்றும் உயிரியல் தீவிரவாதம், வேதியியல் ரேடிய கதிர் தீவிர வாதம் என்று எல்லாத்துறைகளிலும் அனாவசியமாக செலவழிக்கப்படும் நிதியை அங்கிருந்து பொது நலத்திட்டத்திற்கு மாற்ற செய்வேன். FEMA போன்ற நிறுவனங்கள் அவசரக்காலம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே மக்களின் விழிப்புணர்ச்சியை தூண்டு வண்ணம் செயல் படலாம்.இது குறித்து

உடல்நலத்துறை:

காப்பீடுகள், அதன் காரணமாக மிக அதிகமான மருத்துவ செலவுகள் என்ற சுழற்சி இங்கே மருத்துவ கவனிப்பை சாதாரண மக்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மிகவும்கடினமாக மாற்றி இருக்கின்றன. ஒவ்வொருவரும் சிகிச்சை முடிந்து தேர்ச்சிபெறஆகும் காலத்தை காப்பீடுகள் தீர்மானிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது மன நலத்திற்கும், வன்புணர்ச்சிக்கான கவுன்சிலிங்கிற்கும் 10 sitting , 15 sitting என்பதையெல்லாம் காப்பீடுகளே தீர்மானிக்கின்றன. இதுவும் தீவிரம், நோயாளியின் தனித்துவம் பொறுத்து மாறும்.

மருத்துவ சிகிச்சைக்காக வரும் போது விசா பற்றிய கேள்விகள் கூடாது என்றாலும், அதிகரித்துவரும் மருத்துவ செலவுகள் மற்றவர்களின் காப்பீடு கட்டணத்தை உயர்த்துகின்றன. இதை தீர்க்க முறைக்கப்பட்ட charity care நிதியை உடனடியாக அதிகரிக்க செய்வேன். மேலும் நோய் வந்தபின் அதை சரிபார்ப்பதைவிட interventionஇல் அதிக கவனம் செலுத்த சொல்வேன்.

முதுமை இல்லங்களில் ஆள்பற்றாக்குறையை சரி செய்ய வேண்டியதும் அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதும் முக்கியம். பரிந்துரை செய்யப்பட்ட மருந்துகள், உணவு துறையின் கட்டுப்பாட்டில் வரும் சில மருந்துகள் பற்றி இன்னமும் யோசனைகள் எழுத ஆரம்பித்தால் இப்போதைக்கு முடியாது என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

போரில் இருந்து வரும் வீரர்கள், வியட்னாம் வீரார்கள் இவர்களின் மன அழுத்தம் அதிகரித்து மன நோய் பெருகிவரும் இந்நேரம், மன நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியம்.

முக்கியமாக, மது அருந்தும் சட்ட வயது வரம்பை 18 ஆக குறைக்க வரும் மசோதாவை இப்போதைக்கு எதிர்க்கிறேன்.

Why Tobacco Kills & How Cigarette Manufacturers ensure New Addicts?

Boston Legal: “Smoke Signals”:

Closing arguments

Michael Rhodes smoked cigarettes for 50 years, got lung cancer and died; we all know what happened here. We also all know this death. Everybody in this room knows somebody who has fought this same battle and dies … agonizing, brutal, excruciating …

But … emotion has no play here. Michael Rhodes was eleven years old when he started smoking, it was 1948. At that time, there was no known risk, and even if there were, at eleven he certainly lacked the capacity to assume it. And after that, he was addicted. They manufacture them to be addictive.

In just the last few years, they’ve increased the amount of nicotine in the average cigarette by 11.6% to make them even more addictive [1]. Recently, we learned that tobacco companies have been adding an ammonia-based compound to cigarettes for years to increase absorption of nicotine [2]. It’s basically the same principle used in crack cocaine.

And let’s look at the obscene strategy they’ve employed here. Smoking may cause cancer, but it didn’t cause this particular cancer. It wasn’t our cigarettes, or it was genetic, or asbestos or a paper mill. Never do they take responsibility ever. And God forbid, if you sue them, they’ll bury you and your lawyer. They might even depose your doctor to death, for good measure. All their insidious methods and cunning corporate tactics aren’t just history, it’s what they continue to do now, today. Because the tobacco industry is like a nest of cockroaches, they will always find a way to survive.

They still go after kids with one strategy after another. They put up brightly colored ads at kid’s eye level in convenience stores. They hire gorgeous twenty-somethings to frequent popular venues and seduce young adults into attending lavish corporate-sponsored parties. Cockroaches will always find a way.

They can’t advertise on TV but they’ve hired PR agencies to hook them up with the film industry. And it’s worked. Researchers estimate that smoking in movies delivers nearly 400,000 adolescent smokers every year [3]. Every time you try to kill the cockroach, it finds another way. It has to, because when you make a product that kills off your consumers, you have to find a way to recruit new customers.

They’ve now got a new feminized version of the macho Camel brand using slogans like “lite” and “luscious” with hot pink packaging. Virginia Slims advertised their “thin cigarette”. Allure Magazine did a whole spread on the cigarette diet [4]. They use social and psychological profiling [5], targeting potential smokers by gender, ethnicity, sexual preference, socioeconomic groups … cockroaches don’t discriminate.

Their CEO comes into this courtroom gloating over their anti-smoking campaign, which is designed to get kids to smoke. In 2003, they spent more than 15 billion on advertising and promotion [6]. That’s a 225% increase from 1998, and they have the audacity to declare they’re trying to discourage smoking. This is not how corporations with a conscience behave.

How in God’s name are cigarettes even legal, can anybody tell me that? They are a deadly concoction of carcinogens that damage every single organ in your body. Why do we not ban them? Because it’s a free country, because freedom of choice is an American ideal worth somebody dying every six seconds? How can any company, especially one with such a conscience no less, knowingly manufacture a product that poisons its users? … and make that product look cool and hip and sexy and fun, so they can get children. How can any attorney defend a company that would do such a thing and how could any society tolerate it, but we do.

There is no conscience at big tobacco. There is no conscience in Washington, which has been bought and paid for by this industry. Conscience has to come from you, the jury. If real regulation is to happen, it has to come from you. People are smoking day after day after day and dying and dying and dying and the tobacco companies keep getting richer and richer. Last year alone, they made 12 billion dollars in profits [7]. How can that be?

How can that be?

References

  1. Connolly et al. Trends in nicotine yield in smoke and its relationship with design characteristics among popular US cigarette brands, 1997-2005. Tob Control. 2007 Oct;16(5):e5.
    View abstract
  2. How an Unregulated Industry Experiments on America’s Kids and Consumers. American Cancer Society Cancer Action Network, American Heart Association, American Lung Association and Campaign for Tobacco-Free Kids. 2008 Feb 20.
  3. Sargent, J. AAP Handout, October 2006. News release, American Academy of Pediatrics.
  4. Morris, L. “The Cigarette Diet.” Allure Magazine. 2000 Mar.
  5. Ling and Glantz. Using tobacco-industry marketing research to design more effective tobacco-control campaigns. JAMA. 2002 Jun 12;287(22):2983-9.
    View abstract
  6. Federal Trade Commission Cigarette Report For 2004 and 2005. United States Federal Trade Commission. 2007
  7. Fortune Global 500 2007: Altria Group.

இந்த வார விருந்தினர்: பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த்திடம் ஐந்து கேள்விகள்: (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு)

1. ஒபாமா & மக்கயின் ஆகிய இருவரின் உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) திட்டங்களை ஒப்பிட முடியுமா? அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர்? ஏன்?

உடல் நலம் என்பது பல கூறுகளை கொண்டது.

  • காப்பீடு மட்டும் அல்லாமல்,
  • மருத்துவர்களின் ஆரம்பகால அறிவுரைகள் (early intervention),
  • மருத்துவரை சென்று பார்க்க வாகன வசதி (transportation),
  • புரிகிற மொழியில் மருத்துவர்கள் சொல்வதை, மருந்துகளை எடுத்துக்கொள்வதை கிரகிக்க கூடிய எளிமை (health literacy)
  • மருத்துவர்கள் அறையில் காத்திருக்க கூடிய நேர அளவும்(waiting time),
  • மருத்துவரை சந்திக்க கிடைக்கும் முறை (appointment)

இவையாவுமே இன்றைய அமெரிக்காவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரங்களை கொண்ட மக்களிடம் அவர்களுக்கு தோதான முறையில் (comfort zone) மருத்துவர்கள் பழகக்கூடிய முறை (cultural competency) ஆகியவற்றில் இன்னமும் கவனம் தேவை. இவையாவும் சேர்ந்த access to care பற்றிய பற்றாக்குறையை இரு தலைவர்களின் திட்டமும் நேர்த்தியாக அணுகவில்லை.

குழந்தைகளுக்காக காப்பீடில் பிரச்சினை அதிகம் இல்லை. பெற்றோர்களின் காப்பிடு அல்லது அப்படி பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்தால் மெடிகெய்ட் என்று பரவாயில்லாத உடல்நலக்காப்பீடு இருக்கிறது. அதுவும் சென்ற ஆண்டு நிதிக்குறைப்புக்காளானது.

எத்தனை பேர் ஒருவரின் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் வருவோருக்கு அரசு பல இலவச மருத்துவ உதவிகள், FQHC போன்றவை நடத்துகிறது. அதிகம் பாதிக்கபடுபவர்கள், காப்பீடு இல்லத மக்களின் குறிப்பிடக்கூடிய சதவிகிதம் தொழில்துறையில் consultants, சிறிய வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.

18 வயதான பிறகு கல்லூரி செல்லும் வயதில் உள்ளவர்கள் 19 முதல் 24 வரை இருப்பவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரியில் படித்தால் அதுவும் முழுநேர மாணவர்களாக இருந்தால் மட்டுமே குறைந்த கூடுதல் கட்டணத்தில் (additional amount) பெற்றோரின் காப்பீடில் இருக்க முடியும். கல்லூரிக்கு செல்லமாட்டாமல் வேலைக்கு செல்பவர்கள் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எப்படி காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்?

இந்த இளைஞர்கள் திடீரென அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போய், மீண்டும் தங்களுக்கான குடும்பம் அமைத்துக்கொள்ளும் போது வருகிறார்கள். இப்போது நிறைய மாணவர்கள் நிறைய உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள். குழந்தைப்பருவம் முதல் மருத்துவமனைக்கு செல்லும் விவரங்கள் Medical information Bureau வில் சேர்க்கப்படுகின்றன.

ஆயுள் காப்பீட்டுக்கு ஒருவர் விண்னப்பிக்கும் போது இங்கே இருந்து அவரது உடல் நலம் பற்றிய அறிக்கை பெறப்படுகிறது. அதேபோல காப்பீடும் விவரங்களை பார்த்தே காப்பீட்டு விலையை (கட்டணத்தை) நிர்ணயிக்கும. இந்த விலையை காப்பீடு நிறுவனங்கள் கட்டுருத்துமே தவிர அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது. அப்படி செய்தால் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு போன்ற எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் வரும்.

இவர்களுக்கு மெக்கெயின் சொல்லும் திட்டததாலோ ஓபாமா சொல்லும் திட்டத்தாலோ குறைந்த co-payயுடன் கூடிய காப்பீடு கிடைக்காது என்பதே நடைமுறை.அதிலும் இப்போது நியுஜெர்சி போன்ற மாநிலங்களில் பல மருத்துவ மனைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் மிஷல் திட்டம் என்ற ஒன்றை சட்டமாக்க முயற்சி நடந்தது. மிஷல் என்பவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டவர். முழுநேர மாணவியாக தொடரமுடியாமல் காப்பீட்டை இழந்ததால், சரியான சிக்கிசைக்கு வழியில்லாமல் இறந்து போனார். அதற்காக புற்றுநோய் அல்லது தீவிரமான நோய் உள்ளவர்கள் முழுநேர மாணவர்களாக இல்லாமலே மெகெயின் சொல்வது போல மக்கள் தங்களுக்கு தேவையான காப்பீடு தாங்களே வாங்கிக்கொள்லலாம் அரசு வரி சலுகை அளிக்கும் என்கிறார். சலுகை தேவையில்லை, நாங்களே வாங்கிக்கொள்கொறோம் என்றாலும் சில புற்றுநோயாளிகளுக்கு காப்பீடுதர இப்போதைக்கு யாரும் இல்லை.

தீவிரமான நோய் உள்ளவர்கள் தங்கள் செலவிலேயே காப்பீடு வைத்திருந்தால் பணிபோனாலும் அது தொடரக்கூடிய வாய்ப்பு ஊண்டு. ஆனால் சலுகைவிட அதிகமாக இருக்கும் கட்டணத்தை எப்படிக்கட்ட முடியும்? இது பற்றியும் ஓபாமோவோ மெக்கெயினோ strategy வைத்திருக்கவில்லை.

நான் ஒரு காப்பீடு வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு புற்று நோய் வருகிறது, பணியைவிட்டு போதிய performance இல்லாமல் நீக்கப்படுகிறேன்.பணியில் இருந்து நோயைத்தான் காரணம் காட்டி நீக்க முடியாதே தவிர, பணிக்கு அதிகம் வராதது, என் பங்களிப்பை காரணம் காட்டி நீக்க முடியும். என்னுடைய காப்பீடுக்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாது, நிறுவனம் காப்பீடு தந்தாலும் அதுவும் நின்று போகும், என் சிகிச்சையை எப்படி தொடர முடியும்?

இது ஒரு hypothetical situation இல்லை. காரனுக்கு நடந்தது, வரிஜீனியாவில். இது போன்ற பிரச்சினைகளை நாங்கள் நாள் தோறும் பார்க்கிறோம். இரண்டு தலைவைர்களும் பொதுப்படையாக சில கோரிக்கைகளை வைத்திருக்கிரார்களே தவிர இது போன்ற மசோதாக்கள் தோல்வியைடய் செய்பவர்களும் இவர்கள்தான்.

இலவச மருத்துவ சிகிச்சை என்றாலும் கூட அதற்கு எப்படி வருவார்கள்? பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து? நான் படித்ததாக நினைவில் இல்லை.

நிறைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த சில வருடங்களில் குறைக்கப்பட்டது (cancer early detection, Prevention oriented child health program, victim assistance program, stop violence to women,early intervention for special child, sexual assault prevention program). அதனால் பாதிக்கப்பட்ட காப்பீடு இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரியான விசா இல்லாமல் இங்கே வேலைக்கு அமர்த்தப்படும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மெடிக்கெய்ட் தரும் அரசு, பெற்றோருக்காக எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு பரவக்கூடிய நோய் வந்தால், அது ஒரு சமுதாயத்தை பாதிக்கும் என்கிறபோது அதற்கான நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை செலவு எல்லாம் யார் கட்டுவது என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.

Community health பற்றிய திட்டமும் சிறப்பாக அல்லது தெளிவாக இல்லை.மனநல சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் இப்போது செனட்டுக்கு போகும் மசோதாக்கள் (mental health for substance abuse, sexual assault and to decrese health disparity) தோல்வியைத்தழுவி இருக்கின்றன.

மருத்துவரை சந்திக்க சென்றால் கிட்டதட்ட குறைந்தது ஒருமணியாவது காத்திருக்க நேரிடுகிரது, அதிலும் சிறப்பு பயிற்சியாளர்களை காணச்சென்றால் இன்னமும் அதிக காலம் ஆகிறது. இதனால் மருத்துவர்களும் interventionஇல் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.

அறிகுறிகள் அவ்வப்போதே கவனிக்கப்படாமல் நோய் முற்றியநிலையில் கவனிக்கப்படுவதும் ஒரு குறையாக இருக்கிறது. இதற்கும் காப்பீடு ஒருவகையில் காரணம். நிறைய காப்பீடுகள் இதை ஆதரிப்பதில்லை என்பது பரவலாக மருத்துவர்கள் சொல்லும் காரணம்.

இது குறித்தும் இருதலைவர்களும் கருத்து ஏதும் சொன்னதாக தெரியவில்லை.இருவருமே பொதுவாக கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர விளக்கமாக ஏதும் சொல்லவில்லை.

Any insurance become affordable if you increase co pay, hospital charge etc. so details are more important even to address issues like prevention. But the truth is one insurance covered costs for a surgery but did not approve anesthetists bill as it required a separate precertification!!

2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி

தொடரும்…