Tag Archives: Life

வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்

இவரின் முந்தைய பதிவு: ஒபாமா ஜனாதிபதியானால் என்ன செய்வார்?

இங்கே வாக்களித்து விட்டேன்.

நானும் இன்று வாக்குச் சாவடிக்குப் போனேன். சிறிது மழையில் வீடுகளெல்லாம் நனைந்திருந்தன. நல்ல குளிர். காலை 7.45க்குப் போனால் எப்படி இருக்கும்?

வழக்கமாக வீடுகளெல்லாம் கோடை முடிவதற்குள் வெளிப்பக்கம் அடிக்க வேண்டிய (தேவையாய் இருந்தால்) பெயிண்ட் எல்லாம் அடித்து, கூரைகளை எல்லாம் புதிதாக்கி 90 சதவீதம் வீடுகள் புதுப்பிக்கப் படும் ஒரு பகுதியில் இருக்கிறேன். இந்த வருடம், சென்ற வருடம் போலவே, மக்களின் நிதி நிலை சரியில்லை என்பது தெரிய வர ஆரம்பித்திருக்கிறது. ஒரு தெளிவான வேறுபாடும் புலப்படுகிறது.

காலை இளம் வெயிலில் அந்த ஈரப் பிசுபிசுப்பு உள்ள மெலிய குளிர் காற்றில் நடக்கையில் பல வீடுகள் தம் பொலிவிழந்து காணப்பட்டது புலப்பட்டதில் சிறிது யோசித்ததில் அவை அனேகமாக வயதான மனிதர்கள் வாழும் வீடுகள் என்பது புலப்பட்டது. ஓய்வு ஊதியம், சேமிப்பில் காலம் தள்ளும் மனிதருக்கு வயதானவருக்கு இந்த வருடங்கள் நல்ல வருடங்களே அல்ல.

ஓரளவு பார்க்கப் புதிதாகவும் நல்ல பராமரிப்பிலும் இருந்த வீடுகள் தெருவில் எவை என்றால் புதிதாய்க் குடி வந்தவர்கள், இளம் குழந்தைகள் உள்ளவர்கள், இருவரும் வேலைக்குப் போகும் மனிதர் உள்ள வீடுகள் இப்படி. இன்னும் வேலை பார்க்கும் குடும்பங்களால் இந்தக் கஷ்ட காலத்திலும் அதிகம் பிரச்சினை இல்லாமல் காலம் தள்ள முடிகிறது போலும்.

கூட என் மகள் வந்தாள். கல்லூரியில் இருந்து நேற்று இரவே வந்து விட்டாள்.

ப்ரைமரியில் முதல் தடவையாக வாக்களித்தாள். அவளுடைய மொத்த ஹாஸ்டலும் ஒபாமா என்று தெரிவித்தாள். சிலர் பழமைப் பார்வை உள்ளவர்கள்- மகெய்ன் ஆதரவாளர்கள் உண்டு, ஆனால் ஒபாமாவுக்கு உள்ள பெரும்பான்மை ஆதரவால் மௌனம் காக்கிறார்களாம்.

அவளுக்கு இந்தத் தேர்தலில் வாக்களிப்பதில் மிக மகிழ்ச்சி, பெருமை. அவளை விட வாக்குப் போட உரிமை பெற பல ஆண்டுகள் இன்னும் இருக்கும் மகனுக்கு ஒரே துடிப்பு, தானும் வருவேன் என்று. அம்மாவோடு போ என்று சொல்லி, பள்ளிக்கு அனுப்பி
வைத்தேன்.

பெயரைக்கேட்டு சிறிது திக்குமுக்காடினார் வாக்காளர் உதவியாளர். வயதானவர். ஒரு பென்சில் டிக் போட்டு விட்டு அடுத்த மேஜையில் வாக்குச் சீட்டு கொடுத்தவரிடம் அனுப்பினார்.

சீட்டு கையில். பெண் ஒரு பூத் போன்ற இடத்தில் எல்லாவற்றிலும் வாக்கு போட்டாள். நான் ஒரு மேஜையில் அமர்ந்து கவனமாகக் குறித்தேன். இருவரும் ஓட்டுப் போட அந்த எந்திரத்துக்கு அருகில் போகையில் ஒரு போலிஸ்காரர், மேஜையில் அமர்ந்து பெயர், முகவரி கேட்டார். சொன்னதற்கு அவரும் ஒரு டிக் போட்டுக் கொண்டார் (நோட்டுப் புத்தகத்தில்).

Optical scanner எந்திரத்தருகே இருந்த பெண்மணி என் மகளிடம் இதுதான் முதல் தடவையா பெண்ணே என்றார். இல்லை, ப்ரைமரியில் வாக்களித்தேன் என்றாள்.

வாக்காளருக்கு உதவி செய்பவர்கள் சார்பின்றி இயங்க வேண்டும் என்று ஒரு விதி உண்டு. என்றாலும் மகளுடைய உற்சாகத்தைப் பார்த்து அவ்ருக்கும் உற்சாகம்.

Exciting isn’t it? என்றார்.

ஏன் அப்படிச் சொல்கிறார் என்று எங்கள் மூவருக்கும் தெரியும். சிரித்து விட்டுத் தலை அசைத்தோம். அந்த எந்திரத்துக்குப் போவதற்குள், ஒரு சர்ச்சுடைய பெரிய சமுகக் கூட்ட அறையான அந்த பெரிய கூடத்தில் நாங்கள் பல கருப்பர்களைக் கடந்தோம். அவர்களில் சிலர் வாக்காளர், சிலர் உதவியாளர். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக்
கொண்டோம்.

சொல்லாமல் சொல்வது ஊக்குவிப்பது பாராட்டுவது வாழ்த்துவது எல்லாம் அந்தச் சிறு சிரிப்புகளில் பரிமாறப்பட்டன. அதே பரிமாறல் இந்த நடுவயதைத் தாண்டிய வெள்ளைப் பெண்மணியுடனும் நடந்தது.

வெளியே வந்தோம். சரித்திரம் நிகழ்ந்தது, அதில் நாம் ஒரு சிறு பங்கு வகித்தோம் என்று எங்களுக்குத் தெரிந்திருந்த ஒரு அதிசய நேரம் அது.

சாரா பேலின் – போலி ஒளிப்படங்கள்

அங்கும் இங்கும் – ட்விட்டரில் கதைத்த விவரம்

  1. மகளுடன் (மனைவியுடனும்) இரண்டு படங்கள் மீண்டும் பார்த்தேன்.’திருடா திருடா’ இன்னும் முடிக்கவில்லை. எஸ்.பி.பி. சீக்கிரமே நடிக்க வந்திருக்க வேண்டும்.
  2. இருவர்: ‘இந்தப் படம் இம்புட்டு நல்லா இருக்குமா?’ என்று நான் குசேலன் பார்த்தபிறகு ஆச்சரியப்பட்ட மாதிரி மனைவி அசந்து போனாள். நிறுத்தி நிதானமாக எம்ஜியாரின் ‘நான் ஏன் பிறந்தேன்’ ஆரம்பித்து ஜெயலலிதாவின் சுய வரலாறு எழுதிய கதை வரை பின்னணியோடு படம் பார்த்தாள். நிறையக் கேள்வி கேட்டாள்; நிறைய அளக்க முடிந்தது. படம் பார்த்து முடிக்க ஒரு வாரம் ஆனது:
    • எம் ஆர் ராதா சுட்டாரா? ஏன்?
    • வி என் ஜானகி முதல் மனைவி இல்லையா?
    • மு க.வுக்கு எத்தனை மனைவி? முக முத்து படத்தில் உண்டா?
    • கனிமொழிக்கு சொல்லிக் கொடுக்கும் பாடல் எதில் வருகிறது? என்ன அர்த்தம்?
    • ப்ரூக்ளின் ஆஸ்பத்திரி சென்றதெல்லாம் வரவில்லையே
    • ரிக்ஷாக்காரனா? கட்சி சின்னம் வருமா?
    • அண்ணா யார்? பெரியார் எங்கே?
    • ஆர் எம் வீரப்பனா அல்லது அமைச்சர்களுமா?
  3. அஞ்சலி: மணி ரத்னம் என்றாலே போர் என்ற மகளை நிமிர்ந்து உட்கார வைத்தது. Of course, அழுது விட்டோம்.
  4. மகளுடன் அமெரிக்க அரசியல்: பக்கத்து பென்ச் தோழி மெகயின் ஆதரவாளராம். இரண்டு காரணங்கள் – டினா ஃபே; அப்புறம் ஜான் வந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அதிகரிப்பதாக அவளிடம் சொல்லி இருக்கிறாராம்.
  5. உருளைக் கறி: நாலு கிழங்கை எடுத்தோமா; குக்கரில் வேக வைத்தோமா; தோசைக் கல்லில் ரென்டு பெரட்டு பெரட்டினோமா என்பது என் பாணி. மனைவியோ மைரோவேவ் பயன்படுத்தி நாலு நாழி வேக வைக்கிறார். அதன் பிறகு தோலை உறிக்கிறார் (ஐய்யோ! அய்யய்யோ!!! சத்தெல்லாம் போவுதே); அதற்குப் பிரகு நான் ஸ்டிக் தவ்வா அழுமளவு ரோஸ்ட் நடக்கிறது. பசி வயத்தைப் பிடுங்க எந்த ஷேப்பில் காய் இருந்தாலும் கபளீகரம் ஆகிறது.
  6. ஸீக்வல்: எனக்குத் தெரியாத டேட்டாபேஸா என்று மிதப்போடு வகுப்புக்கு சென்றால் என்னென்னவோ சொல்லிக் கொடுத்தார்கள். கற்றது மைக்ரோசாஃப்ட் அளவு; கல்லாதது ஓபன் சோர்ஸ் அளவு!
  7. கட்டாந்தரையில் அண்ணாமலை: ஆர்வக்கோளாறில் டென்ட் அடித்து தூங்குவது போல் மெத்தையை வீட்டு கீழே படுத்து பார்த்ததில் முதுகு பேந்துவிட்டது. அடுத்த நாள் படுக்கையில் புரண்டு கூட உறங்க முடியாத அவஸ்தை. வாழ்ந்து கெட்ட குடும்பம் என்றால் இதான் அர்த்தமா?
  8. கல்யாணம், காதல்: முஸ்லீம்களுக்கு நடுவில் நிலவும் நிச்சயிக்கப்பட்ட திருமணம் குறித்து என்.பி.ஆர் புலம்பல் கலந்த பழைய பல்லவியை ஒப்பித்தது. புதிதாக எதுவும் இல்லாவிட்டாலும், போக்குவரத்தில் சிக்கிய காலைப்பொழுதில் கேட்டு வைத்தேன். ‘உங்களிருவருக்கும் காதல் உண்டா?’ என்று கொக்கி போட்டு தொக்கி நிற்கவிட்டார்கள். இந்தக் காதல் என்றால் என்ன?
    • வெள்ளி இரவு வெளியில் சாப்பிடுவது
    • அவ்வப்போது ‘ஐ லவ் யூ’ சொல்லிக் கொள்வது
    • அவ்வப்போது இன்னொருவரின் வேலையை எடுத்துக் கொண்டு ஆச்சரிய சந்தோஷம் அளிப்பது
    • எதிர்பாராத நேரத்தில் முத்தமோ சில்மிஷமோ நடத்துவது
    • கண்ணீரைத் துடைத்து விடுவது
    • பெற்றோரை நினைத்து ஏங்க வைக்காத சூழலை உருவாக்குவது
    • பொண்ணுக்கும் பூ பிடிக்கும் என்று மறக்காதது
    • எதிர்பார்ப்புகளில் சிக்கிக் கொள்ளாதது
  9. தமிழ் சங்கமும் ஹாலோவீனும்: பாஸ்டன் தமிழர்கள் மாறுவேடப் போட்டி நடத்துகிறார்கள். அமெரிக்காவில் சூனியக்கார கிழவியும் இளவரசிகளும் (சாரா பேலினும்தான்) ‘ட்ரிக் ஆர் ட்ரீட்’ சென்றால் இவர்கள் ஔவையார், கண்ணகி, வள்ளுவர், பாரதி, கட்டபொம்மன் கேட்கிறார்கள். நான் ‘பெரியார்’ ஆக போகட்டும். கவனம் திருப்புவாள் என்று நினைத்தேன். மனைவியோ ‘சிலப்பதிகாரம்’ என்று வசனத்திற்காக தேட என்னுடைய பதிவே கூகிளில் விடையாக வந்தேற ‘கொடும… கொடும என்று கோவிலுக்குப் போனா.. அங்கே’ என்று சொலவடைத்தாள்.
  10. ஒட்டுக்கேட்டல்: அவனுக்கு நாற்பத்தைந்து வயதிருக்கலாம். நான் முதன் முதலாக சென்ற உணவகத்தில் சரியான க்யூவில் நான் நின்றிருக்க, அவனோ தவறான க்யூவில் நின்றிருந்தான். கூட வந்திருந்தவள் (ஐம்பது இருக்கும்) அவனை என் பின்னே நிற்க சொன்னாள். அவர்களுடன் முப்பது பிராயத்தை பத்தாண்டுகள் முன்பு கடந்தவளும் வந்திருந்ததை என் அருகில் உள்ள இருக்கைகளில் அவர்கள் அமரும்போதுதான் கவனித்தேன்.

அவள்: ‘உன்னோட டேட்டிங் கதை என்னவாச்சு?’

அவன்: ‘ரெண்டு வாரம் முன்னாடி அந்த ரெஸ்டாரென்ட் போயிருந்தோம் இல்லியா? ரொம்ப யதார்த்தமா பேசிண்டிருந்தோம். ரொம்ப நல்லாப் போச்சு. என் வீடு வரைக்கும் வந்தா. ஞாயித்துக்கெழம கூப்பிட்டப்ப ‘ஏர்போர்ட்ல இருக்கேன்‘னு கட் பண்ணிட்டா. அந்த திங்கட்கிழம என்ன அவக் கூப்பிட்டிருந்தா! அவளே கூப்பிட்டா! நான் போன் செய்யாம அவளே பேசினது எனக்கு டென்சன குறைச்சது. சனிக்கிழம சந்திக்கலாம்னு சொன்னா. போன வாரம் நானும் ரெடியா இருந்தேன். ரெண்டரை ஆச்சு; மூன்றரை ஆச்சு; போன் பண்ணினா ரிங் போவுது; நாலரை ஆச்சு. எனக்கு அப்பவே தெரிந்து போச்சு. அஞ்சு ஆச்சு. நான் என் போன ஆஃப் செஞ்சுட்டேன். ஆறு ஆச்சு. இன்னும் அவ போன் ரிங் போயிண்டே இருக்கு. வாய்ஸ் மெஸேஜ் போவுது. ஆஃப் பண்ணல… எடுக்க மாட்டேங்கிறா! திண்ணக்கம். எல்லாம் அந்த ஏர்போர்ட் விவகாரமாத்தான் இருக்கும். டெக்ஸ்ட் மெஸேஜ் செஞ்சேன். அதுக்கும் பதில் இல்ல. அடுத்த நாள் கூப்பிட்டா! ஏதோ சால்ஜாப்பு சொல்றா. எனக்குத் தெரியும்! அவ என்ன ஏமாத்தறா! கடுப்பா பேசி கட் பண்ணிட்டேன். டெக்ஸ்ட் செஞ்சா. மரியாதையா இருக்காதுன்னு நானும் பதில் போட்டேன். திங்கள், செவ்வாய், புதன்… டெக்ஸ்ட்டா செய்யறோம். எனக்குப் பொறுக்கல. போன் செஞ்சேன். அவ எடுக்கல. ஆனா, டெக்ஸ்ட்டுக்கு மட்டும் உடனுக்குடன் பதில்!’

இன்னொருவள்: ‘அவ டீச்சர்னு சொன்னியே? க்ளாஸ்ல இருந்திருப்பாளா இருக்கும்?!’

அவன்: ‘அதெப்படி? க்ளாஸில் இருந்தா — டெக்ஸ்ட் ஒண்டி செய்ய முடியுமா? நேத்திக்குக் கூப்பிட்டா. கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டேன். சரிப்பட மாட்டேன்னு. அவ இந்த சனிக்கிழம கூப்பிடுவான்னு நெனக்கிறேன். அந்த ஃப்ளைட் பார்ட்டி இந்த வீகெண்ட் போய் சேர்ந்துரும். அதற்கப்புறம் என்ன சாப்பிட அழைப்பான்னு எனக்குத் தோணுது’

நான் சாப்பிட்டு முடித்துவிட்டதால் நடையைக் கட்டிவிட்டேன். அவர் தொடர்ந்து கொண்டிருந்தார்.

கடவுள் அமைத்து வைத்த மேடையோ, கல்யாண மாலை கொண்டாடுமோ, மனைவி அமைவதெல்லாமோ முணு முணுக்காமல் – போகிற வழிக்கு ஸீக்வல் பாராயணித்துக் கொண்டேன்.

India Films to Indie Movies – Meme

முதலில் நாகார்ஜுனன் பதிவு. அதன் தொடர்ச்சியாக பிரகாஷ் மீம் வித்திட்டிருக்கிறார்.

1 – அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

ஐந்து வயதில் இருந்து ஓரளவு நினைவில் உள்ளது.

1 – ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

ப்ரியா.

1 – இ. என்ன உணர்ந்தீர்கள்?

  • பெண்கள் சினிமாவில் நுழைந்தால் ஆபத்து பின்தொடரும்.
  • ஸ்ரீதேவி நீச்சலுடை.
  • எவராவது கடத்தி சென்றுவிட்டால் குடும்பப் பாட்டு கற்றுவைத்துக் கொள்ளவேண்டும்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தமிழ்: தசாவதாரம் (ஆங்கிலம்; வால் – ஈ)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

கடைசியாக முழுமையாகப் பார்த்த படம் ட்யூப் தமிழ் வலையகத்தில் – அஞ்சாதே.

ஆனால், மிக சமீபத்தில், பாதி பார்த்த நிலையில் விட்ட படங்கள் தாக்கத்தை நிறையவே கொடுத்தது.

  • அறை எண் 305இல் கடவுள் – மகாமக கொடுமையான நாடகத்தனம்
  • அன்பைத் தேடி – எத்தனையோ பழைய படங்களை புத்துருவாக்கம் செய்யும் நிலையில் இந்த premise நன்றாக இருந்தது. ஏதாவது கற்பனையில் சஞ்சரித்து நிஜத்தைக் கோட்டை விடும் நாயகன் சிவாஜி. (குழந்தை நடிகை) இந்திரா (காந்தி) & நாயகன் (ம.கோ.) ராமுவையும் கோர்த்து அரசியல் கிண்டல் செய்யும் சோ.
  • எவனோ ஒருவன் – சுவாரசியமான அறச்சீற்றம்

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா

எல்லோரும் ‘அவள் அப்படித்தான்‘ என்கிறார்கள். ஆனால், என் வாழ்வை திசை திருப்பக் கூடிய சம்பவத்தை ‘அவள் அப்படித்தான்’ நிகழ்த்தியது.

குழந்தையாக இருந்தபோதே ‘எது கலைப்படமோ அதைச் சொல்லி ஒப்பேத்தலாம்’ என்னும் சுபாவம் innate ஆக அமைந்திருக்க வேண்டும். 1979ஆம் ஆண்டு குழந்தைகளின் ஆண்டாக கொன்டாட்டப்பட்டது. என்.எஃப்.டி.சி ஆதரவில் படம் எடுக்க, சென்னை தூர்தர்ஷனில் audition வைத்தார்கள். நானும் சென்றிருந்தேன்.

குடிகாரனாக, பிச்சைக்காரனாக, ஊமையாக எல்லாம் சிவாஜித்தனமான செயற்கையில், அங்கு வந்திருந்த பிற சிறுவர்களைப் போலவே நானும் ஓவர் – ஆக்டிங்கில் மின்னினேன்.

லன்ச்-ப்ரேக்.

பிற்காலத்தில் ரகுவரனை நாயகனாகக் கொண்ட ‘ஏழாவது மனிதன்‘ உட்பட பல படங்களை இயக்கிய ஹரிஹரனின் குழுவோடு உணவருந்தும்போது எல்லோரிடமும் சும்மா கேள்வி கேட்டுக்கொன்டிருந்தார்கள்.

‘உனக்கு என்ன படம் இப்ப பார்க்கணும்? எது பிடிச்ச படம்?’

அன்னை ஓர் ஆலயம், ஆறிலிருந்து அறுபது வரை மாதிரி அப்போதைய படங்கள் அனைத்தையும் வெள்ளித்திரையில் பார்த்த வெறித்தனமான ரஜினி ரசிகன். அம்மாவின் ஒப்புதல் கிடைக்காதது அந்தப் படத்திற்கு மட்டும்தான். இத்தனைக்கும் முதல் எதிரி கமல் வேறு நடித்திருக்கும் படம். தயங்கவே இல்லை.

பட்டென்று சொன்னேன்: ‘அவள் அபப்டித்தான்’

குழுவினர் திகைத்துப் போனார்கள். அவர்கள் டீம் உழைத்த படம் அது. அங்கிருந்த பலரின் செல்லப்பிள்ளை அது. உடனடியாக எனக்கு சான்ஸ் கொடுத்தார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?!

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – அரசியல் சம்பவம்?

பெங்களூரில் உடனடியாக வருமா? கன்னடர்கள் கல்லெறிவார்களா?

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா – தொழில்நுட்ப சம்பவம்?

இரத்தத்தையும் வன்முறையையும் வலிக்க வலிக்க காட்டுவது.

சாதாரண மனிதனின் ‘சத்ரியன்‘ ஆகட்டும்; விபத்தின் பின்விளைவுகளையும் அடிபட்டவர்களாக எண்ணிக்கையில் 167ஓடு 168ஆக கூடிப் போகும் ‘அன்பே சிவம்‘ ஆகட்டும்; ஏழையாக இருந்தால் என்னவெல்லாம் அமுக்கப்படும் என்று கோடிட்ட ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்‘ ஆகட்டும்.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

சிவகுமார் சுயசரிதை, தினத்தந்தி வரலாறு, தி ஹிந்து விமர்சனம், வலைப்பதிவு அசைபோடல், கனவுத் தொழிற்சாலை குறித்து வண்ணத்திரை முதல் வெகுசன ஊடகங்களில் வரும் கருத்து/கட்டுரை.

7. தமிழ்ச்சினிமா இசை?

  • திருப்புகழ் கூட டி.எம்.எஸ் பாடிய சினிமாப் பாட்டு – ஆன்மிகம்
  • எஸ்.பி.பி பாடிய பாடல் என்பதால் சங்கராபரணம் – கர்நாடக/சாஸ்திரீய சங்கீதம்
  • வேப்பமரத்து உச்சி பேய் முதல் கல்லை மட்டும் கண்டால் – சமூகம்
  • மன்றம் வந்த தென்றலுக்கு என்பதும் கல்யாண மாலை கொண்டாடுவதும் – வாழ்க்கை

என்று எல்லாவற்றுக்கும் இசையை நம்பியிருப்பதால், தனித்தீவுக்கு போக விதிக்கப்பட்டாலும் 80 ஜிபி ஐ-பாட் இல்லாமல் செல்லமாட்டேன்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நிறைய. சில ஸ்பானிஷ்.

  • When Harry met Sally – ஆங்கிலம்
  • City of God – வேற்றுமொழி (துணையெழுத்து உபயம்)
  • Mississippi Masala (தேசி – NRI)
  • Raju Ban Gaya Gentleman – இந்தி

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

நேரடியாக நடித்த படம் – வாண்டட் தங்கராஜ்.

பிடித்ததா? படத்தில் நடித்த அனுபவம் மிகவும் பிடித்திருந்தது.

வேண்டும்போது கிடைக்கும் ஐஸ்-க்ரீம். சொகுசான படுக்கையறையும் விநோதமான விளக்குகளும் கொன்ட உல்லாச அறை வாசம். பழனி கோவிலுக்கு சென்றால் கூட மூலஸ்தானத்தில் இருந்து மூலவரின் சிறுதுளியே பெயர்த்துக் கொடுக்கும் ராஜ மரியாதை.

என்ன செய்தீர்கள்? ஆறு வயதுச் சிறுவன் தங்கராஜ் பழனிக் கூட்டத்தில் தொலைந்து போகிறான். கூத்தில் அனுமனாக வேடந்தரிக்கும் ‘வள்ளி’ நட்ராஜ், வில்லர்கள் கூட்டத்தை Home Aloneஆக ஏய்ப்பது, கடிந்து கொள்ளும் பெற்றோரின் அன்பைப் புரிந்து கொள்ளும் குழந்தை வேடம்.

சினிமா மேம்பட உதவுமா? வெகு இயல்பாக இருந்தது. பாடல் கிடையாது. மூன்று நாளின் சம்பவங்களை 90 நிமிடங்களில் பரபரவென்று தென் தமிழகமெங்கும் சுழன்று விரியும் படம். அலங்காரில் வெளியாகி இருந்தால் மேம்பட உதவி இருக்கும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

  • அருண் வைத்யநாதன் போன்ற தமிழ் சினிமாவின் நாகேஷ் குகூனூர்கள்
  • தொலைக்காட்சி, இணையம், செல்பேசித்திரை என்று விரியும் வழிகள்
  • குறைந்த பொருட்செலவும் பத்து நிமிடத்தில் உலகத்தின் கவனத்தை ஈர்க்கவைக்கும் நேர விரயமாகாத நுட்பங்களின் அணுக்கம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு வாரத்தில், ஒரு நாளில் எத்தனை நேரம் கேளிக்கைகாக ஒதுக்குகிறோம்? அதில் எவ்வளவு மணி நேரம் சினிமா ஆக்கிரமிக்கிறது?

காலையில் அலுவல் கிளம்பும் அவசரம்; செய்தித்தாள் வாசிப்பு. அதன் பின் பயணத்தில் பழைய ராஜா இசையுடன் மோனம். அலுவலில் பதிவுகள் கவனச்சிதறல்; இரவு உணவுக்குப் பின் ஒரு மணி நேர தொலைக்காட்சி. இதில் சினிமா எங்கே இருக்கிறது?

நண்பனின் கார் சாவி தூரத்தில் இருந்தே திறக்கும் வசதி கொண்டது. ஒரு நாள் என்னை அழைத்தான்.

“டேய், கார் ரிமோட் கீ வேலை செய்ய மாட்டேங்குதுடா! எப்படிடா இப்ப காரைத் திறப்பேன்?”

“நேராக காருக்கும் அருகில் செல். உன்னிடம் இருக்கும் சாவியை துவாரத்தில் இட்டு திறக்கலாம்.”

பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் என்னும் பேட்டரி தீர்ந்து போகலாம். சினிமா என்னும் மகிழுந்தைத் திறக்க கற்பனை என்னும் சாவி, ‘விழிகள் மேடையாம்; இமைகள் திரை’யாகுமா?’

இவர்கள் தொடரவேண்டும் என்று நினைக்கிறேன்.

வழிகாட்டலுக்கு மட்டுமாக சில விதிகள்:

  1. இசை, சினிமாப்படங்கள் போன்ற புள்ளிக்கு மூன்றுக்கு மேல் பட்டியல் போடுவதை தவிர்க்கலாம்
  2. புள்ளிவிவர ஆட்டத்தைத் தொடர ஐந்து பேருக்கு அழைப்பு விடுக்கவும்
  3. இந்த வழிகாட்டல்களை முற்றுமாக நிராகரிக்கலாம்; ஆனால், டக்குன்னு பதிவிடணும் 🙂

மதிய உணவு – காமிக்ஸ்

நன்றி: Rose Is Rose

இந்த வார விருந்தினர்: பத்மா அர்விந்த்

பத்மா அர்விந்த்திடம் ஐந்து கேள்விகள்: (மாற்று தேர்ந்தெடுப்புகள் | தமிழோவியம் தொடர்கள் | வலைப்பதிவு)

1. ஒபாமா & மக்கயின் ஆகிய இருவரின் உடல்நலம்/சேமநிதி காப்பீடு (Health care/Insurance) திட்டங்களை ஒப்பிட முடியுமா? அடிப்படை நல்வாழ்வுப் பராமரிப்பு தருவதில் எவர் தொலைநோக்கு உடையவர்? ஏன்?

உடல் நலம் என்பது பல கூறுகளை கொண்டது.

  • காப்பீடு மட்டும் அல்லாமல்,
  • மருத்துவர்களின் ஆரம்பகால அறிவுரைகள் (early intervention),
  • மருத்துவரை சென்று பார்க்க வாகன வசதி (transportation),
  • புரிகிற மொழியில் மருத்துவர்கள் சொல்வதை, மருந்துகளை எடுத்துக்கொள்வதை கிரகிக்க கூடிய எளிமை (health literacy)
  • மருத்துவர்கள் அறையில் காத்திருக்க கூடிய நேர அளவும்(waiting time),
  • மருத்துவரை சந்திக்க கிடைக்கும் முறை (appointment)

இவையாவுமே இன்றைய அமெரிக்காவில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

பல்வேறு மொழி பேசக்கூடிய பல்வேறு கலச்சாரங்களை கொண்ட மக்களிடம் அவர்களுக்கு தோதான முறையில் (comfort zone) மருத்துவர்கள் பழகக்கூடிய முறை (cultural competency) ஆகியவற்றில் இன்னமும் கவனம் தேவை. இவையாவும் சேர்ந்த access to care பற்றிய பற்றாக்குறையை இரு தலைவர்களின் திட்டமும் நேர்த்தியாக அணுகவில்லை.

குழந்தைகளுக்காக காப்பீடில் பிரச்சினை அதிகம் இல்லை. பெற்றோர்களின் காப்பிடு அல்லது அப்படி பெற்றோர்கள் ஏழ்மையில் இருந்தால் மெடிகெய்ட் என்று பரவாயில்லாத உடல்நலக்காப்பீடு இருக்கிறது. அதுவும் சென்ற ஆண்டு நிதிக்குறைப்புக்காளானது.

எத்தனை பேர் ஒருவரின் வருமானத்தை நம்பி இருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வறுமைக்கோட்டின் கீழ் வருவோருக்கு அரசு பல இலவச மருத்துவ உதவிகள், FQHC போன்றவை நடத்துகிறது. அதிகம் பாதிக்கபடுபவர்கள், காப்பீடு இல்லத மக்களின் குறிப்பிடக்கூடிய சதவிகிதம் தொழில்துறையில் consultants, சிறிய வியாபாரிகள், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே.

18 வயதான பிறகு கல்லூரி செல்லும் வயதில் உள்ளவர்கள் 19 முதல் 24 வரை இருப்பவர்கள் பெரும்பாலான மாநிலங்களில் கல்லூரியில் படித்தால் அதுவும் முழுநேர மாணவர்களாக இருந்தால் மட்டுமே குறைந்த கூடுதல் கட்டணத்தில் (additional amount) பெற்றோரின் காப்பீடில் இருக்க முடியும். கல்லூரிக்கு செல்லமாட்டாமல் வேலைக்கு செல்பவர்கள் கிடைக்கும் குறைந்த வருமானத்தில் எப்படி காப்பீடு பெற்றுக்கொள்ள முடியும்?

இந்த இளைஞர்கள் திடீரென அரசு ஆவணங்களில் இருந்து காணாமல் போய், மீண்டும் தங்களுக்கான குடும்பம் அமைத்துக்கொள்ளும் போது வருகிறார்கள். இப்போது நிறைய மாணவர்கள் நிறைய உடல்நலக் கோளாறுகள், மன அழுத்தம் ஆகியவற்றால் துன்புறுகிறார்கள். குழந்தைப்பருவம் முதல் மருத்துவமனைக்கு செல்லும் விவரங்கள் Medical information Bureau வில் சேர்க்கப்படுகின்றன.

ஆயுள் காப்பீட்டுக்கு ஒருவர் விண்னப்பிக்கும் போது இங்கே இருந்து அவரது உடல் நலம் பற்றிய அறிக்கை பெறப்படுகிறது. அதேபோல காப்பீடும் விவரங்களை பார்த்தே காப்பீட்டு விலையை (கட்டணத்தை) நிர்ணயிக்கும. இந்த விலையை காப்பீடு நிறுவனங்கள் கட்டுருத்துமே தவிர அரசாங்கம் நிர்ணயிக்க முடியாது. அப்படி செய்தால் ஆயுள் காப்பீடு, வாகன காப்பீடு போன்ற எல்லாவற்றையும் அரசு கட்டுப்படுத்துமா என்ற கேள்வியும் வரும்.

இவர்களுக்கு மெக்கெயின் சொல்லும் திட்டததாலோ ஓபாமா சொல்லும் திட்டத்தாலோ குறைந்த co-payயுடன் கூடிய காப்பீடு கிடைக்காது என்பதே நடைமுறை.அதிலும் இப்போது நியுஜெர்சி போன்ற மாநிலங்களில் பல மருத்துவ மனைகள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் மிஷல் திட்டம் என்ற ஒன்றை சட்டமாக்க முயற்சி நடந்தது. மிஷல் என்பவர் குடல் புற்றுநோயால் அவதிப்பட்டவர். முழுநேர மாணவியாக தொடரமுடியாமல் காப்பீட்டை இழந்ததால், சரியான சிக்கிசைக்கு வழியில்லாமல் இறந்து போனார். அதற்காக புற்றுநோய் அல்லது தீவிரமான நோய் உள்ளவர்கள் முழுநேர மாணவர்களாக இல்லாமலே மெகெயின் சொல்வது போல மக்கள் தங்களுக்கு தேவையான காப்பீடு தாங்களே வாங்கிக்கொள்லலாம் அரசு வரி சலுகை அளிக்கும் என்கிறார். சலுகை தேவையில்லை, நாங்களே வாங்கிக்கொள்கொறோம் என்றாலும் சில புற்றுநோயாளிகளுக்கு காப்பீடுதர இப்போதைக்கு யாரும் இல்லை.

தீவிரமான நோய் உள்ளவர்கள் தங்கள் செலவிலேயே காப்பீடு வைத்திருந்தால் பணிபோனாலும் அது தொடரக்கூடிய வாய்ப்பு ஊண்டு. ஆனால் சலுகைவிட அதிகமாக இருக்கும் கட்டணத்தை எப்படிக்கட்ட முடியும்? இது பற்றியும் ஓபாமோவோ மெக்கெயினோ strategy வைத்திருக்கவில்லை.

நான் ஒரு காப்பீடு வைத்திருக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம், எனக்கு புற்று நோய் வருகிறது, பணியைவிட்டு போதிய performance இல்லாமல் நீக்கப்படுகிறேன்.பணியில் இருந்து நோயைத்தான் காரணம் காட்டி நீக்க முடியாதே தவிர, பணிக்கு அதிகம் வராதது, என் பங்களிப்பை காரணம் காட்டி நீக்க முடியும். என்னுடைய காப்பீடுக்கு என்னால் கட்டணம் செலுத்த முடியாது, நிறுவனம் காப்பீடு தந்தாலும் அதுவும் நின்று போகும், என் சிகிச்சையை எப்படி தொடர முடியும்?

இது ஒரு hypothetical situation இல்லை. காரனுக்கு நடந்தது, வரிஜீனியாவில். இது போன்ற பிரச்சினைகளை நாங்கள் நாள் தோறும் பார்க்கிறோம். இரண்டு தலைவைர்களும் பொதுப்படையாக சில கோரிக்கைகளை வைத்திருக்கிரார்களே தவிர இது போன்ற மசோதாக்கள் தோல்வியைடய் செய்பவர்களும் இவர்கள்தான்.

இலவச மருத்துவ சிகிச்சை என்றாலும் கூட அதற்கு எப்படி வருவார்கள்? பதவி ஏற்ற ஆரம்பத்தில் கிளிண்டன் public transportation திட்டம் ஒன்ரை கொண்டுவர முயன்றபோது பல கார் நிறுவனங்கள் அவற்றை எதிர்க்க, அதுவும் கிடப்பில் போனது. உடல்நல காப்பீடு தருவது இருக்கட்டும், உடல் நலம் இல்லாதவர்கள் கார் ஓட்ட முடியாதவர்கள் எப்படி மருத்துவ சிக்கிச்சைக்கு வருவார்கள் என்பது பற்றி ஏதேனும் ஒரு கருத்து? நான் படித்ததாக நினைவில் இல்லை.

நிறைய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கடந்த சில வருடங்களில் குறைக்கப்பட்டது (cancer early detection, Prevention oriented child health program, victim assistance program, stop violence to women,early intervention for special child, sexual assault prevention program). அதனால் பாதிக்கப்பட்ட காப்பீடு இல்லாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சரியான விசா இல்லாமல் இங்கே வேலைக்கு அமர்த்தப்படும் மக்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு மெடிக்கெய்ட் தரும் அரசு, பெற்றோருக்காக எந்த உதவியும் செய்வதில்லை. அவர்களுக்கு ஒரு பரவக்கூடிய நோய் வந்தால், அது ஒரு சமுதாயத்தை பாதிக்கும் என்கிறபோது அதற்கான நடவடிக்கைகள், தீவிர சிகிச்சை செலவு எல்லாம் யார் கட்டுவது என்பது பற்றியெல்லாம் எந்த விளக்கமும் இல்லை.

Community health பற்றிய திட்டமும் சிறப்பாக அல்லது தெளிவாக இல்லை.மனநல சிகிச்சைக்கும் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தாலும் இப்போது செனட்டுக்கு போகும் மசோதாக்கள் (mental health for substance abuse, sexual assault and to decrese health disparity) தோல்வியைத்தழுவி இருக்கின்றன.

மருத்துவரை சந்திக்க சென்றால் கிட்டதட்ட குறைந்தது ஒருமணியாவது காத்திருக்க நேரிடுகிரது, அதிலும் சிறப்பு பயிற்சியாளர்களை காணச்சென்றால் இன்னமும் அதிக காலம் ஆகிறது. இதனால் மருத்துவர்களும் interventionஇல் அதிக கவனம் எடுத்துக்கொள்வதில்லை.

அறிகுறிகள் அவ்வப்போதே கவனிக்கப்படாமல் நோய் முற்றியநிலையில் கவனிக்கப்படுவதும் ஒரு குறையாக இருக்கிறது. இதற்கும் காப்பீடு ஒருவகையில் காரணம். நிறைய காப்பீடுகள் இதை ஆதரிப்பதில்லை என்பது பரவலாக மருத்துவர்கள் சொல்லும் காரணம்.

இது குறித்தும் இருதலைவர்களும் கருத்து ஏதும் சொன்னதாக தெரியவில்லை.இருவருமே பொதுவாக கருத்துக்கள் சொல்லி இருக்கிறார்களே தவிர விளக்கமாக ஏதும் சொல்லவில்லை.

Any insurance become affordable if you increase co pay, hospital charge etc. so details are more important even to address issues like prevention. But the truth is one insurance covered costs for a surgery but did not approve anesthetists bill as it required a separate precertification!!

2. (கேள்வி கேட்டவர் ஸ்ரீதர் நாராயண்) சாரா பேலின் ஹிலாரியை விட வேகமாக இருக்கின்றாரே. பாட்டியாகும் விஷயத்தில்தான். 2012-ல் ஆல்-வுமன் அதிபர் தேர்தலாக ஆகக் கூடிய சாத்தியக் கூறுகள் எப்படி

தொடரும்…

திருமணத்திற்கப்பால் உறவும் தனிமனித ஒழுக்கமும்

5. ஜான் எட்வர்ட்ஸிடம் உங்களுக்கு மதிப்பு இருந்தது. திருமணத்திற்கு அப்பால் உறவு கொண்டதால் அது சரிந்துள்ளதா? அவரின் கொள்கைகள் அப்படியே இருக்கும் பட்சத்தில், பில் க்ளின்டன் பாதம் பணியும் ஒட்டுமொத்த ஜனநாயகக் கட்சியும் — அவரை நிராகரித்து ஒதுக்குவது எப்படி சரியாகும்?

ஆம்.

பொதுவில் தனிநபர் வாழ்க்கையையும் அரசியலையும் இணைப்பது எனக்கு ஒவ்வாத விஷயம். ஆனால் தனிநபர் நேர்மையையும் நம்பத்தன்மையையும் மாத்திரமே முன்னிருத்தி அரசியல் நடத்திய ஒருவர் நடைமுறையில் அதற்கு எதிராக நடந்து கொண்டால் அவரது நம்பகத் தன்மை முற்றாக இழந்துபோகிறது.

அந்த வகையில் ஜான் எட்வர்ட் மீதான என் மதிப்பு பெருமளவிற்குச் சரிந்திருக்கிறது. ஆனால் இதற்காக அவரை முற்றாக குழிதோண்டி புதைக்க வேண்டும் என்று நான் கூச்சலிடமாட்டேன்.

அந்தத் தவறில் சிக்கியிருக்காவிட்டால் அமெரிக்காவின் உன்னதமான அதிபர்களில் ஒருவராக கிளிண்டன் நிச்சயமாக கோபுரமேறியிருப்பார். தவறுக்கு வெளியேயாக அவருடைய சாதனைகள் அபாரமானவை. எனவேதான் ஜனநாயகக் கட்சியினர் அவருக்குக் கட்டுப்பட்டிருக்கிறார்கள். தவறிலிருந்து மீண்டெழும் உரிமையை கிளிண்டன் வேண்டிப் பெற்றார்; அதை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். எனவேதான் அது அவருடைய ஒட்டு மொத்த பிம்பத்தில் விழுந்த ஒரு புள்ளியாக மாத்திரமே நின்று போயிருக்கிறது.

மீண்டெழும் வாய்ப்பைத் தேடிப்பெறுவதிலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயிர்த்தெழுந்து வருவதிலும் ஜான் எட்வர்ட்ஸ் எப்படி நடந்து கொள்கிறார் என்று பார்க்க வேண்டும். தவறை நேராக எதிர்கொண்டு அதற்கான சுமையைச் சுமந்துகொண்டு மேலெழுந்து வருவது முற்றாக அவர் கையில்தான் இருக்கிறது. அமெரிக்கர்கள் பொதுவில் எப்படியோ, நான் அவருக்கு அந்த உரிமையைக் கட்டாயம் மறுக்க மாட்டேன்.

வெங்கட் மற்றும் மற்றவர்களின் பார்வைகள், கேள்வி-பதில்கள்

அறிவியல் மாறலாம்; வாழ்க்கை மாறுமா?

சிறில் அலெக்ஸ் நடத்தும் போட்டிக்கு 45+ கதை கட்டியிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக மாறும் அறிவியலில் இருந்து மாறாத வாழ்க்கை தருணங்கள்:

  1. அன்று ஓலைச்சுவடியைக் கிழித்தெறிந்தார் ஒட்டக்கூத்தர்; இன்று இணையப் பதிவுகளை நீக்குகிறார் பெயரிலி/மரவண்டு; நாளையும் இன்னொருத்தர் டெலீட்டுவார்.
  2. அன்று அண்ணா, பெரியார் பேச்சை வாய்பிளந்து வாக்களித்தார்கள்; இன்று சாரு நிவேதிதா, சோ எழுத்துக்களை காசு கொடுத்து படிக்கிறார்கள்; நாளையும் வித்தியாசமான சிந்தனையை முன்வைக்கும் எவரின் அனைத்து அட்சரத்தையும் கண்மூடித்தனமாக…
  3. அன்று குறுநில மன்னர்களுக்கும் இராஜாதி ராஜாவுக்கும் இடையேயான மல்யுத்தப் போர்களை மைதானத்தில் மேட்ச் ஃபிக்ஸ்; இன்று இந்தியா x பங்களாதேஷ் கிரிக்கெட்; நாளையும் கணினி வலையில் நடக்கும் அடையாள யுத்தத்தில் சூது முடிவு.
  4. அன்று இறந்தபின் அசோகனும் பாபரும் உத்தமர்; இன்று எமெர்ஜென்சி இந்திராவும் அத்வானியின் செல்லப்பிள்ளை ஜின்னாவும் மகாத்மா; நாளையும் ஜார்ஜ் புஷ், ஃபிடல் காஸ்ட்ரோ சரித்திர உலக நாயகர்கள்.
  5. அன்று வந்ததும் அதே நிலா; இன்று உள்ளதும் இதே சாந்த் ; நாளை ‘ஜஸ்ட் மூன்’
  6. அன்று குடவோலையில் கடமுடா; இன்று குடியரசு களேபரம்; நாளையும் குல்லா, ஹல்லா.
  7. அன்று இஸ்ரேல் பிரச்சினை; இன்று அமெரிக்க நாட்டாமை; நாளையும் பாலஸ்தீனம் தொடரும்
  8. அன்று ஆன்மிகம்; இன்று அறிவியல்; நாளையும் சான்றோர்.
  9. அன்று சங்கப்பலகை நக்கீரன் + பாண்டியன் போட்டி; இன்று வலைப்பதிவு சிறில் + ஜெமோ மீம்; நாளையும்?
  10. அன்று ஃபிலிப் கே டிக் பயந்தார்; இன்று மைக்கேல் க்ரிக்டன் பயமுறுத்துகிறார்; நாளையும் எவராவது சாவார்.

மின்வண்டி நிலையத்தில் மரணித்த எலியும் மனம் பதறிய மங்கையும்

My ‘Shallow Hal‘ moments

எலி பாஷாணத்தை உண்ட மயக்கமோ? வாழ்வின் இறுதி நிமிடங்களோ? நட்டநடுவில் அனாதையாக எலி. நானும் இன்ன பிறரும் ட்ரெயினைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண்மணிக்கும் இரவு தாமதமாகிய எட்டு மணி காண்பிக்கும் கடிகாரம் இருந்தது. சக பயணி குப்பையாகப் போட்ட பேப்பர் கவரை எடுத்தார். கையால் மிக லாவகமாக எலியை எடுத்து அதனுள் நகற்றினார்.

இறக்கும் நிமிடங்களில் எலிக்கு கௌரவம். கையறு நிலையில் இருந்து அடக்கமான உறக்கம்.

ஜூன் போனால் சென்னைக் காற்றே

1. சென்னையில் டூ வீலர்கள் எல்லாரும் தலையில் எதாவதுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கு ஹெல்மெட். ‘சென்னை-600 028’ விஜயலஷ்மிகளுக்கு துப்பட்டா. இஸ்லாமியர்களுக்கு தொப்பி.

2. பதிவர் சந்திப்புகள் பல சிட்டி சென்டரில் நடக்கிறது. இரைச்சலுக்கு மத்தியில் வாகாக இல்லை. சீட்டு பிடிப்பது தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு இடம் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுப்பிடிச்ச வேலை. மழை பெய்தாலும் ஒதுங்க இடம் தரும் திறந்த வெளி வுட்லண்ட்ஸுக்கு மாற்று கிடைக்க வேண்டும்.

3. குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் பேருந்து, சாதா பல்லவன் என்று இரண்டு வகை மட்டுமே அறிந்த எனக்கு, ஏசி, வெறும் சி, சி இல்லாத ஏ என்று குழப்பமான மாநகரப் போக்குவரத்து. ஒவ்வொரு வண்டியிலும் ஏறியவுடன் நடத்துநர் ‘மினிமம் இருபது ரூபா’ என்று ஆட்டோ ஓட்டுநரை ஒத்து மிரட்டுகிறார்கள்.

4. நுகர்வோருக்கானப் பொருட்காட்சியில் உள்ளே செல்வதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நண்பர் முன்பு எப்போதோ சொன்னதுதான் நினைவிலாடியது: ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க! தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’

5. சென்னை சிடி சென்ட்டரை விட ஸ்பென்சர்ஸில் நவநாகரிக யுவதிகள் வசந்த்களுடன் சுஜாதாவின் எழுத்தை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

6. தசாவதரத்தை காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொன்று வரை 15 காட்சிகள் ஐநாக்ஸில் திரையிட்டிருந்தார்கள். எல்லா அரங்குமே நிறைந்து விட்டிருந்தது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ செல்லலாம் என்று திரையரங்கைப் பார்க்கும் ஆசையில் சென்றால், ‘பேட்டரியை குப்பைத் தொட்டியில் போடுவோம்’, ‘செல்பேசிக்கு தடை’ என்று ஜபர்தஸ்து செய்து கொள்கிறார்கள்.

7. மேலேக் குறிப்பிட்ட ‘ச.சு.’ முதற்கொண்டு இன்டியானா ஜோன்ஸ் வரை துணையெழுத்துகளுடன் பாரிமுனையில் டிவிடியில் இருபது ரூபாய்க்கு லோல்படுகிறது. தசாவதாரமும்தான்.

8. கபாலி கோவிலை பிரதோஷ காலத்திற்காகவாவது எக்ஸ்டென்சன் செய்ய வேண்டும். ‘நந்தா’ பார்த்தபிறகு எல்லோருக்கும் திரயோதசி மகிமை தெரிந்துவிட்டிருக்கிறது.

9. அகலபாட்டை இணையம் சுறுசுறுப்பாக பறக்கிறது. இந்த வேகத்தில் வலை கிடைத்தால், இந்தியாவில் டாரென்ட் இறக்கம் புகழ்பெறும்.

10. இத்தனை மணிக்கு வண்டி வரும் என்பதை 21ஜி, இருவுள் விரைவு வண்டி நிறுத்தங்களில் போட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், இந்த நேரவிவரங்களையும் கணக்கில் எடுத்து கர்மசிரத்தையாக கடிகாரத்தைப் பார்க்க கூடாது.