Tag Archives: Introduction

விமர்சன ஆய்வு: ஜெயமோகனின் “இன்வெர்னெஸ்”

கதை என்ன என்பதை வாசித்து விட்டு வரவும்.

இந்தக் கதையின் மையக் கருத்து உண்மையிலேயே சுவாரஸ்யமானது: ஒரு சொல் — ஜெபமாக பேயுரு கூத்தாக வெறியுருக் கொள்வது; ஊரின் பெயர் உள்ளுணர்வின் நிலையாக மாறுவது; மொழி அகத்திணையின் சிறையாகவோ, விடுதலையாகவோ மாறுவது. ஆனால் சக்தி வாய்ந்த கருத்தும் சக்தி வாய்ந்த கதையும் ஒன்றல்ல.

1. உணர்வு ஆழமின்மை — கதையின் மிகப் பெரிய தோல்வி

இது கதையின் மிகத் தீவிரமான பிரச்சினை.

அந்தப் பெண்தான் கதையின் நெறிமுறை மையம், உணர்வு மையம். ஆனால் ஜெயமோகன் அவளுடைய உள்ளுணர்வை நமக்குக் காட்டவே மறுக்கிறார். அவளது அறிகுறிகளை மட்டும் காட்டுகிறார் — திரும்பத் திரும்ப வரும் வார்த்தை, வீட்டுக்குள் மட்டுமே வாழ்தல், உலகைப் பற்றிய குழந்தைத்தனமான புரிதல் — ஆனால் அவளுடைய அனுபவத்தை ஒருபோதும் தருவதில்லை. அவள் என்ன உணர்கிறாள்? “இன்வெர்னெஸ்” என்ற வார்த்தை அவளுக்கு என்ன? ஆறுதலா? ஏக்கமா? தியான நிலையா? கதை அவள் உள்ளுணர்வுக்குள் நுழைவதை மறுக்கிறது. அவள் எப்போதும் வெளியிலிருந்தே பார்க்கப்படுகிறாள் — ராகவனால், சாதனாவால், வழிகாட்டியால், கதைசொல்லியால் — இந்த தூரம் ஆழமான மர்மம் போல் காட்டப்படுகிறது; ஆனால் உண்மையில் அது தவிர்ப்பு மட்டுமே.

இருபத்தெட்டு ஆண்டு கூத்தாட்டு வெறித்தனம் கதையின் மையமான உண்மை. அது முழுமையாக விளக்கப்படவில்லை. அவள் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் வந்தாள் என்று சொல்கிறார்கள். ஆனால் இந்த வெறித்தனம் இருபத்தெட்டு ஆண்டுகள் — அவள் பிரிட்டன் வருவதற்கு ஒரு தசாப்தத்திற்கும் மேல் முன்பே தொடங்கியிருக்கிறது. அது எங்கு தொடங்கியது? என்ன தூண்டியது? இந்தியாவில் இருந்தபோதா? திருமணத்திற்குப் பிறகா? கர்ப்பகாலத்தில்? இவற்றை கதை நேரடியாக விளக்க வேண்டியதில்லை — ஆனால் அவற்றை கோடிட்டுக் காட்ட வேண்டும், அவற்றின் எடையை நம்மை உணரச் செய்ய வேண்டும். ஜெயமோகன் எதுவும் தருவதில்லை. இந்த சாமியாடித்தனம் எந்த வாழ்க்கை சூழலிலும் வேரூன்றாமல் மிதக்கிறது.

இதை அம்பையின் எழுத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம் — அதே தமிழ் இலக்கிய மரபில் வேலை செய்யும் எழுத்தாளர். “காட்டில் ஒரு மான்” போன்ற கதைகளில் அம்பை இதே போலொரு பெண்ணின் அகத்தேடலையும், அவளது சுதந்திர வேட்கையையும் மையமாகக் கொண்டு உள்ளுணர்வையும் மனவோட்டங்களையும் அழுத்தத்துடனும் உணர்த்துகிறார். ஜெயமோகன் தன் கதாபாத்திரத்தை விசித்திரமான ஷோகேஸ் அழகு பொருளாக, மென்மையான மர்மமாக ஆக்கிவிடுகிறார். இந்த இரண்டுக்கும் இடையே முக்கியமான பெரிய வித்தியாசம் இருக்கிறது.

உணர்வு உச்சகட்டமான தருணம் — அவள் பனியின் மேல் நடந்து போவது — அதிர்ச்சியூட்டும் அலட்சியத்துடன் கையாளப்படுகிறது. ராகவன் அவள் போவதைப் பார்க்கிறார், பிறகு தூங்கிவிடுகிறார். குறட்டை விடுகிறார். விழிக்கிறார். சாதனா அருகில் இருக்கிறாள். இந்த பற்றற்றத் துண்டிப்பு நுட்பமான கலைத்திறனா அல்லது தைரியமின்மையா? இதற்கு முன்பு எந்த உணர்வு திரட்சியும் இல்லாததால், இது அலட்சியம் கலந்த சௌகரியமாகவே வாசிப்பில் முடிகிறது. உணர்வுகளை அடக்கும் நுட்பமான நடை சம்பாதிக்கப்பட வேண்டும்; அது வெறுமையிலிருந்து (மறுமொழி கடிதங்களிலிருந்து) உருவாக்கப்பட்டால், அது நடையல்ல — அது இல்லாமை மட்டுமே.


2. தமிழ் குடும்பம்: வெளித்தோற்றத்தில் மட்டுமே, ஆழத்தில் இல்லை

கதை தமிழ் குடும்ப வாழ்க்கையை கையாட்டுகிறது, ஆனால் அதனுள் வாழவில்லை.

நமக்குக் கிடைப்பவை: கர்ப்பகாலத்தில் வெண்ணை சாப்பிடு என்று அம்மா சொன்னாள் என்ற குறிப்பு. மகள் தாயை அன்போடு கிண்டல் செய்வது. வாழ்க்கையில் சலிப்படையாமல் இருக்கும் கணவர். இவை அறிமுகமான தமிழ்க் குடும்ப வகைகள் — நடைமுறை வாழ்க்கையறிந்த மூதாட்டி, நவீன சுதந்திரமான மகள், தளர்வற்ற கணவர். ஆனால் இவர்கள் கோடுகளால் ஆனவர்கள், மனிதர்களால் அல்ல.

புனைவில் இல்லாதது என்னவென்றால் தமிழ் குடும்ப வாழ்வின் குறிப்பிட்ட சமூகத் திரை — இந்த தலைமுறையினர் இடையேயான கணவன்-மனைவி உரையாடலின் குறிப்பிட்ட சட்டகங்கள், புலம்பெயர் தமிழர் அடையாளத்தின் எடை, இல்லத்தில் பழகும் நேரத்தை கட்டமைக்கும் சடங்குகள், உணவு பண்பாட்டின் குறிப்பிட்ட நுணுக்கங்கள், லண்டன் தமிழர் வீட்டின் இயல்பான உரசல்கள். ராகவனும் மனைவியும் பேசும்த் தமிழ் கதையின் உண்மையான இன்பங்களில் ஒன்று — தாளம் உண்மையானது, பேச்சு இதமானது. ஆனால் எளிமைத் தமிழ் மட்டுமே கலாச்சாரச் சிறப்பாகாது. இதையே ராமேஸ்வரத்தில் கடலில் கூட சொல்லிச் செல்லலாம். தார் பாலவனக் குடும்பத்தில் பாலைவனமாக்கலாம். தஞ்சயில் மருதமாக்கி அறுவடையாக்கலாம். காஷ்மீரத்தில் கைலாயம் கட்டலாம்.

கதையென்றால் தனித்துவம் தேவை.

பூமணியோ, இமையமோ வழக்குத் தமிழை எழுதும்போது, அது சித்தரிக்கப்படும் குறிப்பிட்ட சமூக உலகிலிருந்து பிரிக்கவே முடியாதவகையில் பின்னிப் பிணைந்திருக்கும் — சாதி, தொழில், புவியியல், பிராந்திய / நிலப்பரப்பு, பிரத்தியேக சமூகம் — சூழல் மூலம் வார்த்தைகளின் குறிப்பிட்ட எடை துலங்கும். இங்கோ, எளிமைத் தமிழ் உணர்வுப்பூர்வமாக இனிமையாக இருக்கிறது, ஆனால் சமூக ரீதியில் மண் வாசனையற்றும் இங்கிலாந்து பிரதேசத் தொடர்பற்றும் மிதக்கிறது.

திருமணத்திற்கு முன்பு அந்தப் பெண் யாராக இருந்தாள் என்பதையும் நாம் அறியோம். கதையின் மறைமுக வாதம் — அவள் முற்றிலும் உள்ளுணர்விற்கு திரும்பிவிட்டாள், வெளி உலகம் தன்னை கடந்து போகட்டும் என்று விட்டுவிட்டாள் என்பது — அவள் திரும்புவதற்கு முன்பு யாராக இருந்தாள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவையை உருவாக்குகிறது. ஜெயமோகன் இதை தருவதில்லை. அவளுக்கு கடந்த காலமே இல்லை, சொந்தக் குடும்பமில்லை, மனைவி-அம்மா என்பதற்கு முன்பான அடையாளமில்லை. இது வேண்டுமென்றே செய்த கலை முடிவல்ல; இது வெறும் பள்ளம்.

வாசக இடைவெளி தேவை.
குழிகள் தேவையில்லை.

ஆடு தாண்டும் காவிரியாக இருந்தால் சிறுகதை.
பாம்பன் பாலம் தேவைப்பட்டால் கீதை.

Tamil: A Biography by David Dean Shulman

3. வீட்டுக்குள் அடைக்கப்பட்ட பெண்: அழகுபடுத்தப்பட்டது, ஆய்வு செய்யப்படவில்லை

இங்குதான் கதையின் நெறிமுறையும் அழகியலும் மிகத் தீவிரமாக பிரிகின்றன.

அந்தப் பெண் லண்டனில் பதினேழு ஆண்டுகளாக வாழ்கிறாள், கிட்டத்தட்ட வீட்டிலிருந்தே வெளியே வந்ததில்லை. இன்வெர்னெஸ் எங்கிருக்கிறது என்று தெரியாது. பிரிட்டனின் வரைபடத்தையே பார்த்ததில்லை. வெளியே குளிர் இருக்கிறது, அது கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை பாதிக்குமா என்று கேட்கிறாள் — இயற்பியல் உலகைப் பற்றிய அவளது புரிதல் உண்மையிலேயே கவலைக்குரியது. பிக்பென் கடிகாரத்தை முதல்முறை பார்த்தபோது, “எதுக்கு அவ்வளவு உயரத்திலே வைக்கணும்? தரையிலே வைச்சா எல்லாரும் நேரம் பாப்பாங்கல்லவா?” என்று கேட்டவள்.

ஜெயமோகன் இவை அனைத்தையும் அன்பான பார்வையில் காட்டுகிறார். சாதனா அவளை “ராணித்தேனீ” என்று அழைக்கிறாள் — கூட்டுக்குள்ளே இருக்கும் ராணி, எங்கும் போகாது, எல்லாமே தேடி வரும் என்று. ராகவன் கண்கள் சிரிக்கின்றன. கதைசொல்லி அவளை இதமாக்கத்தக்கவளாகப் பார்க்கிறார். வழிகாட்டிகூட அவளது நிலை பற்றி எதுவும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

ஆனால் கதை என்ன சொல்கிறதோ — அதை அன்பான தொனியுடன் வழங்கினாலும் — அது அந்தப் பெண் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக உலகிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள் என்பதும், அவளுக்கு இருபத்தெட்டு ஆண்டு காலமாக (மன) நலம் குன்றிய அறிகுறி இருக்கிறது, எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை என்பதும், வெளி உலகின் மீது அவளுக்கு இருக்கும் பிடிப்பு மிகவும் குறைவாக இருக்கிறது என்பதும்தான்.

ராகவன் வழிகாட்டியிடம் சொல்கிறார்: “மற்றபடி அவளுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.” அவளுடைய நிலையில் இருக்கும் ஒருவரைப் பற்றி இப்படி சொல்வது அதிர்ச்சியூட்டும் கூற்று — ஆனால் கதை இதை விசாரிக்கவே மறுக்கிறது.

அந்தப் பெண் பதினேழு ஆண்டுகள் வீட்டுக்குள் மட்டுமே இருப்பது ஆன்மீக உள்நோக்கினால் அல்ல. குறிப்பிட்ட சமூக, உளவியல், உறவியல் நிலைமைகளால் அவள் அப்படி ஆகியிருக்கிறாள் — அந்த நிலைமைகளுக்கு பெயர் இருக்கிறது, வரலாறு இருக்கிறது, விளைவுகள் இருக்கிறது. ஜெயமோகன் இதை ஆன்மீக மர்மம் போல் காட்டுகிறார். உண்மையில் இது கடுமையான agoraphobia ஆகவோ, dissociative நிலையாகவோ, அல்லது — கதை மிகவும் தவிர்க்கும் வாசிப்பு இது — சமூக ரீதியில் இயல்பானதாக ஆக்கிவிட்ட, யாரும் கவனிக்காமல் போன தனிமைப்படுத்தலாகவோ இருக்கலாம்.

கதை அறிமுகப்படுத்தும் “ராணித்தேனீ” உருவகம் ஜெயமோகன் நினைப்பதை விட அதிகம் வெளிப்படுத்துகிறது. ராணித்தேனீ தேர்ந்தெடுத்து கூட்டுக்குள் இருப்பதில்லை. அவள் உயிரியலினாலும் சமூக கட்டமைப்பாலும் உள்ளேயே இருக்கும்படி ஆக்கப்படுகிறாள், ஒரேயொரு பணிக்காக வளர்க்கப்படுகிறாள், அவளது வாழ்க்கை முழுக்க இனப்பெருக்கமும் குடும்பப் பணிகளாலும் வரையறுக்கப்படுகிறது. கதை இதை இனிமையான நகைச்சுவையாகப் பயன்படுத்துகிறது. ஆனால் இது கதையின் மையப் பிரச்சினையாக இருக்கவேண்டும்.

அவளது தொழுவிலடித்தலை அழகுபடுத்துவதன் மூலம் — அதை அழகானதாக, புராணக்கதையின் உருவமாக, உலகம் தாங்க இயலாதவொரு வித உள்ளுணர்வாக மாற்றுவதன் மூலம் — கதை ஆய்வு செய்யப்படவேண்டியதை அறியாமல் காதல்கொள்கிறது. இது கற்பனை சக்தியின் கடுமையான தோல்வி.

Tamil: A Biography by David Dean Shulman

4. மொழிபெயர்ப்பிற்கான எழுத்து: மேற்கத்திய ஆலோகச் சிக்கல்

இந்தக் கதை முழுக்க இந்தியாவிற்கு வெளியே நடக்கிறது. ஒவ்வொரு காட்சியும் லண்டனிலோ இன்வெர்னெஸிலோ நடக்கிறது. மையமான நிலப்பரப்பு — உறைந்த ஸ்காட்டிஷ் ஆறு, குளிர்கால வெளிச்சம், கல் சுவர்கள், விறகு எரியும் கபே — இவை ஐரோப்பியமானவை. மையமான சின்னம் இருப்பது ஸ்காட்டிஷ் ஊரின் பெயர். நம் தமிழ்ப் பெண்ணின் உளவியல் நிலை ஐரோப்பிய புவியியல் வழியாக காட்டப்படுகிறது.

இது தவறல்ல. புலம்பெயர் இலக்கியம் இயல்பாகவே ஏற்றுக்கொண்ட நாட்டின் நிலப்பரப்பில் ஈடுபடுகிறது. ஆனால் சிறந்த புலம்பெயர் எழுத்து — வி.எஸ். நைபால், ரோமேஷ் குணேசேகர, ”துவக்க/ஆதிகால” ஜெயமோகன் — கலாச்சாரங்களின் சந்திப்பு உராய்வை, பரஸ்பர ஒளியூட்டலை, பிரத்தியேக நுண்ணறிவை உருவாக்கும். தாய்நாடு அழிக்கப்படுவதில்லை; அது புதிய இடத்துடன் உரையாடல் நடத்தும்.

“இன்வெர்னெஸ்” கதையில் இந்தியா இல்லை. தமிழ்நாடு இல்லை. கதையின் நிலப்பரப்பு, உணர்வு, சின்னக் கட்டமைப்பு — இவை அனைத்தும் எந்த கலாச்சார மொழிபெயர்ப்பும் இல்லாமல் மேற்கத்திய வாசகருக்கு முழுமையாக கிடைத்துவிடும். எளிய தமிழ் உரையாடல், கர்ப்பகாலக் கவலைகள், அம்மா சொல்லிய ஆலோசனை — இவை கட்டமைப்புக்கு அச்சாணியாக இல்லாமல், பூச்சாக செயல்படுகின்றன.

Granta அல்லது The White Review போன்ற ஆங்கில இதழின் இலக்கிய வாசகர் இந்தக் கதையை இப்படி படிப்பார்: ”நவீன ஐரோப்பாவில் தத்தளிக்கும், ஆன்மீக இழப்பில் இருக்கும் மர்மமான இந்தியப் பெண், பொருள் உலகத்துடன் ஈடுபட இயலாமல், இறுதியில் உறைந்த நிலப்பரப்பில் கரைந்துவிடுகிறாள். ”அவளது அடைப்பு சமூக நிலையாக வாசிக்கப்படுவதில்லை — ஆன்மீக உயர்வாக, பாசக்கயிறு மோட்சமாகவே மெய்க்காட்டப்படுகிறது. இந்த வாசிப்பை சாத்தியமாக்கி இருக்கலாம் — எனினும், கதை அதை வீறுகொண்டெழுந்து உணரச் செய்யும் உழைப்பை விதைக்கவில்லை.

ஜெயமோகனின் மிகச் சிறந்த எழுத்து மேற்குத் தொடர்ச்சி மலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை சமவெளிகளில், அவர் தசாப்தங்களாக வாழ்ந்த சமூகங்களின் குறிப்பிட்ட சமூகச் சூழலியலில் வேரூன்றியது. விஷ்ணுபுரம் ஐரோப்பிய சட்டகங்களால் தாங்க இயலாதது. ஏனென்றால் அது தன் குறிப்பிட்ட இடம், வரலாறு, உணர்வு ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றியது. “இன்வெர்னெஸ்” மேற்குலகிற்கு தூக்கிச் செல்லக்கூடியது. அது நன்கு பயணிக்கிறது. எதைத் தியாகம் செய்து பெயர்வுத்திறன் செதுக்கப்பட்டது என்பது கேள்விகளைத் தூண்ட வேண்டும்.


5. ஆராய்ந்த இடத்தின் அடிப்படையின்மை

இன்வெர்னெஸின் விளக்கங்கள் — அதன் வரலாறு, புவியியல், ஹீப்ரூ நெஸ், வெப்பநிலை அளவீடுகள் — கிட்டத்தட்ட முழுக்க வழிகாட்டியின் விளக்க உரை வழியாக வழங்கப்படுகின்றன. இது முக்கியமான நுட்ப சிக்கல்.

கதாசிரியர் தன் கதைக்கான களத்தை வாழ்வதன் மூலம் அல்ல, ஆராய்ச்சி மூலம் அறிந்தால், அந்த அறிவு புனைவில் உணர்வாக அல்ல, தகவலாக வந்து சேரும். வழிகாட்டியின் இன்வெர்னெஸ் பற்றிய விளக்கங்கள் களஞ்சியத் தன்மை கொண்டவை — 2000 ஆண்டில் நகரமான தகவல், Inverness-shire என்ற மாவட்டப் பெயர், Scottish Highlands Authority தலைமையிடம் — இவை வாழ்ந்த அறிவாக அல்ல, படித்த அறிவாக தெரிகின்றன. உறைந்த ஆறும் குளிர்கால வெளிச்சமும் திறம்படவே விளக்கமாக இருந்தாலும், தொகுக்கப்பட்ட காட்சி குறிப்புகளிலிருந்து வந்தது போல் தெரிகின்றன — அனுபவிக்கப்பட்டவை அல்ல.

இதை காடு நாவலில் ஜெயமோகன் வனத்தை காட்டும் விதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். அங்கு, தாவரங்களும் ஒலிகளும் வெளிச்சமும் நீரின் குறிப்பிட்ட தன்மையும் சுற்றுச்சூழல் உடலில் பதிவாகும் விதம் — இவை உள்ளிருந்து அறியப்பட்டவை. நிலப்பரப்பு விவரிக்கப்படவில்லை; அது வாழப்படுகிறது. “இன்வெர்னெஸ்” கதையில், ஸ்காட்டிஷ் நிலப்பரப்பு சின்னமாக பயன்படுத்தப்படுகிறது (உறைந்த ஆறு = உறைந்த உள்ளுணர்வு) ஆனால் வாழப்படவில்லை. ஏ.ஐ. தயாரித்த படம் போல். பனி என்னும் கருத்தாக்கம் மிஞ்சி விடுகிறது. அதன் குளிர் உடலில் தட்டுவதில்லை.

கதையின் மையமான நாடகீய தருணம் — இருபத்தெட்டு ஆண்டுகளாக தன்னுள்ளே வாழ்ந்த வார்த்தையின் இடத்தில் ஸ்தூல உடலில் உண்மையை அந்தப் பெண் தரிசிப்பது — அந்த வார்த்தையின் இடம் சக்தியாக நம்முள் உறையும் அவசியம் தேவைப்படுகிறது. இன்வெர்னெஸ் என்ற நகரம் வெறும் தொகுப்பாக இருந்தால், அந்தப் பெண்ணின் உள் இன்வெர்னெஸுக்கும் வெளி இன்வெர்னெஸுக்கும் இடையிலான மோதலுக்கு எந்த வலுவும் இல்லை.


6. கட்டமைப்பு சிக்கல்கள்

இரண்டு கூடுதல் கவலைகளும் கவனிக்கப்படவேண்டியவை.

காலக்கணக்கின் முரண்பாடு: வழிகாட்டி அந்தப் பெண்ணுக்கு எவ்வளவு காலமாக இந்த நிலை என்று கேட்கிறான். ராகவன் “இருபத்தெட்டு ஆண்டுகள்” என்கிறார். மகளுக்கு பதினாறு வயது. அவள் லண்டன் வந்து பதினேழு ஆண்டுகள். அப்படியென்றால் இந்த பித்தநிலை அவள் பிரிட்டன் வருவதற்கு பதினோரு ஆண்டுகள் முன்பே தொடங்கியிருக்கிறது, மகள் பிறப்பதற்கு பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் முன்பே. இது உண்மையிலேயே சுவாரஸ்யமானது — “இன்வெர்னெஸ்” என்ற வார்த்தை தனக்கு தெரியும் என்று உணர்வதற்கு முன்பே அவளை ஆட்கொண்டிருக்கிறது, கூடுதலாக இந்தியாவில் நடந்த ஏதோவொரு சம்பவத்திலிருந்து. ஆனால் கதை இதை சிறிதுகூட வளர்க்கவில்லை. இது முக்கியமான கதை மர்மம் — ஜெயமோகன் மறந்துவிட்டாரா அல்லது வேண்டுமென்றே ஒதுக்கினாரா என்று தெரியாது. எப்படியிருந்தாலும் இது வாசகனுக்கு சிக்கல்.

முடிவின் இயந்திரத்தனமான வட்டம்: சாதனா வருகிறாள், “இன்வெர்னெஸ்” என்கிறாள். ராகவன் திரும்பத் திரும்ப சொல்கிறார். அந்த வார்த்தை தொற்றுநோய் போல் அல்லது ஆன்மீக பகிர்வாக அடுத்த தலைமுறைக்கும் கணவருக்கும் பரவுகிறது. இது கட்டமைப்பு ரீதியாக புத்திசாலித்தனமானது ஆனால் உணர்வு ரீதியாக வெறுமையானது. ஏனென்றால் அந்த வார்த்தை என்ன என்பது ஆழமாக நிறுவப்படவில்லை, எனவே அதன் பரவல் வெறும் வடிவமாகவே நிற்கிறது. உள்ளது — உண்மையான இன்வெர்னெஸ் — தப்பிக்க முடியாதது என்ற கருத்தை இறுதி கோடிட்டுக் காட்டுகிறது, ஆனால் அந்த உள்ளம் ஒருபோதும் காட்டப்படவில்லை என்பதால், சைகை வெறும் வடிவ சைகையாக மட்டுமே நிற்கிறது.


கனவுருப்புனைவு

துவக்கநிலை எழுத்தாளரின் படைப்பெனில் “இன்வெர்னெஸ்” உண்மையிலேயே சுவாரஸ்யமான மையக் கருத்துடைய கதை — ஒரு ஊரின் பெயர் உள்ளுணர்வின் நிலையாக மாறுவது, வார்த்தைக்கும் உலகிற்கும் இடையிலான இடைவெளி — ஆனால் அது தனது சாத்தியத்தை அடையவில்லை. ஏனென்றால் அது உள்ளுணர்வின் கடினமான வேலையை, அக-கலாச்சார தனித்தன்மையை, தார்மீக சுயபரிசோதனை செய்து நெறிமுறை ஆய்வாக்க மறுக்கிறது.

கதையின் தமிழ் கதாபாத்திரம் அடைக்கப்படுகிறாள், இறுதியில் உட்கொள்ளப்படுகிறாள் — கதை இதை அழகாகக் கண்டறிகிறது. இன்னும் தைரியமான இந்தக் கதையின் வடிவம் இதை *அதிர்ச்சியூட்டுவதாக* கண்டறியும். அவள் இந்த நிலைக்கு எப்படி வந்தாள், அதற்கு அவள் என்ன விலை கொடுத்தாள், அவளுடைய அடைப்பை உருவாக்கிய குறிப்பிட்ட சமூக உலகை பொய்மையற்ற நேர்மையுடன் காட்டுவதற்கான தேவை — இதையெல்லாம் தமிழ் இலக்கியம் தன் சிறப்பான தருணங்களில் எப்போதும் கையாண்டிருக்கிறது: புதுமைப்பித்தனிலிருந்து அம்பை வரை.

இப்படியிருக்க, “இன்வெர்னெஸ்” மேற்கத்திய இதழ்களுக்கும் மொழிபெயர்ப்பு சந்தைக்கும் பயணிக்கக்கூடியது — ஏனென்றால் அது பயணிக்கும்படி தன்னை போதுமான அளவு இலகுவாக்கிக் கொண்டது. பயணிப்பதில் அது என்ன கைவிட்டது என்றால் வலுவாக செதுக்கிய கதாபாத்திர பலத்தை, வேரூன்றிய நிலையை, சமூக ரீதியில் ஆய்வு செய்யப்பட்டதை. அந்த எடைதான் இலக்கிய எழுத்து என்பதை வெறும் மனநிலை சித்திரத்திலிருந்து வேறுபடுத்தி நிலைநிறுத்துகிறது.


ஜெ.மோ. தளத்தில் வெளியான கடிதங்கள்:

ஏ. ஐ. உதவியுடன் எழுதியது

மேலும்:

ஒருநாள் வீட்டை ஆராய்ந்தபோது வேதப்புத்தகத்தின் ஆங்கிலப் பிரதியொன்று கிடைத்தது. புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் கூத்ரீக்கள் – அதுதான் அவர்களுடய ஆரம்பப் பெயர்- அவர்களுடைய வரலாற்றை எழுதியிருந்தனர். அதன்படி இன்வெர்னெஸ் (Inverness) என்ற இடத்திலிருந்து வந்தவர்கள் ஆகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்தில் அவர்கள் கூலிகளாக (peons) வந்தவர்கள் என்பதில் ஐய்யங்களில்லை. அதன்பிறகு உள்ளூர் சிவப்பிந்திந்தியர்களுடன் அவர்கள் இனம் கலந்துவிட்டது. 1870க்குப் பிறகு அவர்களைப் பற்றிய வேறுதகவல்களில்லை. ஆங்கிலத்தை மறந்துபோனார்கள். 

https://www.vallinam.com.my/issue21/story1.html

நீலத்தில் இத்த்தனை நிறங்களா!

டா வின்சி ஓவியமான தி லாஸ்ட் சப்பர் மீது இசைக் குறிப்புகளை வைத்தால், அந்த ஏற்பாடு சிம்பொனி இசையை ஒத்திருக்கும். அந்த ஆபரா இசைக்கும்போது, யூடியுப் குறுஞ்சுருள் போன்ற 40 விநாடிகளில் இராகமாலிகை இன்னிசையை உருவாக்கும், இது கலை ஆர்வலர்களையும் இசைக் கலைஞர்களையும் ஈர்க்கிறது. இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது டா வின்சியின் புகழ்பெற்ற படைப்பின் உற்சாகமான விளக்கமாகும்.

சொல்வனம் 330-ம் இதழ் இப்படிப்பட்ட இதழ்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-330/

ஓவியம் போன்ற கவிதைக்காரருடன் நேர்காணல் – சந்திப்புகள் தரிசனம் ஆவது அபூர்வம் – அது இங்கே பூரணம். நன்றி நம்பி!
மூன்றே முன்று தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் – ஒவ்வொன்றும் சீலைச்சித்திரம். அகநானூறு அந்தக் காலம்; சொல்வனம் 400 இந்தக்காலம்.
ஆலமும் நீலம்; கங்கையும் நீலம்; காதுகள் மட்டும் நீல நிறமுடைய குதிரை சியாமகன்னம் – அது போன்று அருணாச்சலம் ரமணன் எங்கும் கண்ணஞ்சனம் இட்டு துலக்குகிறார்.
கமலதேவியில் ஔவையார் – பெருங்களிறு என்ற படிமத்தை விவரிக்கிறார்.
அரிதான விஷயங்களை தமிழுக்குக் கொணரும் மைத்ரேயன் – முக்கியமான இன்னொரு ஆக்கத்தை மொழியாக்குகிறார்.

நீலத்தில் இத்தனை நிறங்களா!

உங்களின் #1 இடுகை என்னவென்றால் – என்னுடைய ஜெய் மஹேந்திரன் அறிமுகமும் ஆய் கதைகளும் என்று சொல்வீர்கள் என நம்புகிறேன்.

டாலி “மனநோய்-விமர்சனம்” என்னும் ஓவிய முறையைஉருவாக்கினார், அவரின் மிகையதார்த்தவாத படங்களை ஊக்குவிப்பதற்காக தன்னை ஒரு சுய-தூண்டப்பட்ட, மாயத்தோற்ற நிலையில் வைப்பார். அப்படியெல்லாம் திரிபுணர்வாகாத சகுனங்களும் சம்பவங்களும் – 5 : வாசித்து விடுங்கள்.

சொல்வனத்தில் நோபல் கட்டுரைகள்

யூடியூப் விழியங்களோடு பேசும் இயந்திர தற்கற்றல் நுட்பம் தெரியும்.
’புள்ளியியல் இயற்பியல்’ என்னும் துறை இருப்பது தெரிய வந்திருக்கிறது.
இயந்திர கற்றலில் இயற்பியலும் சேர்ந்து நரம்பியல் பின்னலமைப்புகளும் பொறி பறந்து நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

இதை எல்லாம் இன்றைய #solvanam கட்டுரையில் அறிமுகம் செய்கிறார் அருணாச்சலம் ரமணன்.

இன்று செயற்கை நுண்ணறிவு காலம்.
விருதுக்காரர்கள் இலக்கியத்திற்கும் இயற்றறிவு (gen AI)க்கு கொடுக்கும் காலம் எந்த ஆண்டு என்று பின்னூட்டத்தில் சொல்லுங்கள். (என் கணிப்பு – 2030)

அதற்கு முன் சொல்வனத்தில் கட்டுரையை வாசித்து விடுங்கள்.

கண்கூலி

சொல்வனம் இதழின் 326வது வெளியீட்டில் ‘சகுனங்களும் சம்பவங்களும்’ மூன்றாம் பகுதி வந்திருக்கிறது.

#solvanam பத்திரிகைக்கு நன்றி

ஒரு நாடகம்.
ஒரு உயர்தனிச் செம்மல் (வார்த்தை உதவி பி.ஏ.கே அவர்கள்)
ஒரு பரிந்துரை.

இவை மூன்றுமே ஆழமாகவும் இந்திய தத்துவத்துடனும் வாத்தியார்களின் துணை கொண்டும் எழுதியிருக்க வேண்டும். அவ்வாறு எழுத வேண்டும் என்று 326 குறிப்புகள் வரைவோலையாகக் கிடப்பில் இருக்கிறது.

சொ.வ. இதழில் இதை விட மூன்று முக்கியமான ஆக்கங்களும் வெளிவந்துள்ளன:
1. டொரொண்டோ வெங்கட்ரமணன் எழுதிய இருளையும் ஒளியையும் வென்றவன் – ஆதி பகவன் மாதிரி பத்ரியும் வெங்கட்டும்: அவர்கள் முதற்றே பதிவுலகு
2. நிர்மல் எழுதிய பொற்குகை ரகசியம் – சிறுகதைத் தொகுப்பு: வாசிப்பு அனுபவம் – ஆங்கில விஷயங்களுக்கு சாட்ஜிபிடி இருக்கிறது. தமிழ் நூலுக்கு விமர்சனம்/அறிமுகம் கொடுப்பதற்கு சுய சரக்கு தேவை.
3. சிறுகதை சிறப்பிதழ்

வெளியான கதைகளில் எது உங்களுக்கு #1?

Solvanam #297

புத்தம்புதிய சொல்வனம் இதழ் #297 வெளியாகி இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில் மூன்று மாதம் வெயில் அடிக்கும். கோடைக் காலங்களில் கொண்டாட்டம், சுற்றங்களோடு ஊர் சுற்றல் என்றிருப்பதால் இதழை ஆற, அமர படிக்கவில்லை.

இதழ்-297 – சொல்வனம் | இதழ் 297 |25 ஜூன் 2023 (solvanam.com)

எனினும், தொடர்களை விடக்கூடாது.

இரா முருகன் எழுதும் மிளகு அத்தியாயம் நாற்பத்தெட்டு வெளியாகி இருக்கிறது.
(48 அம்மாடீ! 24 மாதங்கள்!! இரண்டு வருடங்களுக்கும் மேல்!!!)

நாகரத்தினம் கிருஷ்ணா மொழியாக்கத்தில் அதிரியன் நினைவுகள் – 16ஆம் பாகம் கிடைக்கிறது.
அதே போல் பானுமதி. ந. தமிழாக்கத்தில் ராஜேஷ்குமாருக்கு முன்பே எட்கர் ஆலன் போ எழுதிய துப்பறியும் கதையான மார்க் தெரு கொலைகள்- இறுதிப் பகுதியுடன் முடிகிறது.

இதெல்லாம் இலக்கியம்.

தற்கால உலகத்தை அமெரிக்க மேற்குலகை அற்புதமாக அறிமுகம் செய்து சமீபத்திய வரலாற்றை செவ்வியல் ஆக்கும் அமர்நாத் அவர்களின் உபநதிகள் – ஒன்பது உள்ளது.
அவர் ஜாஜா-வின் தெய்வநல்லூர் கதைகள் – ஐந்தாம் அத்தியாயத்திற்கு சரியான போட்டி.

எழுத்தாளர் அமர்நாத் கதைகளும் சரி…
சிரித்தே சொக்க வைக்கும் ஜா. ராஜகோபாலன் புனைவும் சரி…
எந்தப் பாணியிலும் இல்லாமல், ஏற்கனவே தமிழ் கூறும் நல்லுலகுக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் நடையையும் நினைவுறுத்தாமல், அது பாட்டிற்கு செவ்வனே சிறப்புற அமைக்கப் பெற்று “பேஷ்!” போட வைக்கிறது.

இந்த மாதிரி தொடர்கதைகளை வாசிக்கிறீர்களா?
இன்றைய ஆறு நொடி டிக்-டாக் சமூக அவசரத்தில் பொறுமையாக ருசித்து ரசிக்கிறீர்களா?
சமீபத்திய “தொடரும்” போடும் இணையக்கதைகளில் எதை விரும்பீனீர்கள்?

சொல்வனம் 294ம் இதழ்

சொல்வனத்தின் புத்தம் புதிய இதழில் 23 உருப்படிகள் வந்திருக்கின்றன.
ஆறு கதைகள்; மூன்று நாவல் தொடர்கள்; மூன்று கவிதைகள் – விட்டு விடலாம்.

கட்டுரைகளில்:

  1. அந்நியனின் அடிச்சுவட்டில் – நம்பி
  2. நாடும் சுவை, தேடும் தொல்லியல் – அருணாசலம் ரமணன்
  3. நோயுற்ற சுயத்தின் அரற்றல் – மௌனியின் படைப்புகளை முன்வைத்து – சுரேஷ் பிரதீப்
  4. சர்க்கரை பூஞ்சை – லோகமாதேவி
  5. நவீனப் போர்விமானங்கள் – ஒரு அரிசோனன்
  6. இன்று நேற்று நாளை – பானுமதி ந.
  7. இந்து மதத்தில் தந்த்ரா நெறிகள் – ஷாராஜ்
  8. காசி – லதா குப்பா (தொடரில் இறுதிப் பாகம்)
  9. ஊர்வசி – அரவிந்தரின் பார்வையில் – மீனாக்ஷி பாலகணேஷ்

இரண்டு கட்டுரைகளை அவசியம் வாசிக்க கோருகிறேன்.

ஆல்பர்ட் காம்யூவைக் குறித்த நம்பி கிருஷ்ணனின் அலசல் – அமர்க்களம் + அட்டகாசம் + அன்னியோன்யம்.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-294/


ஸ்ரீ அரவிந்தரின் கரடு முரடான கவிதையை உள்வாங்கிக் கொண்டு அற்புதமாக மொழியாக்கம் செய்துள்ள மீனாக்‌ஷி – திறம்பட செயல்படுகிறார். – தேவையான அளவு புராணம்; கச்சிதமான செதுக்கிய கவித்துவம்; மூலத்துக்கு இம்மியளவும் பிசகாத தமிழாக்கம் – ஆன்மிகமும் தத்துவமும் தொன்மமும் சரியாகக் கலந்த உச்சம்!

அரிசோனனின் சண்டை விமானங்கள் தொடர் இந்த இதழோடு நிறைவடைகிறது. நிறைய தகவல்.
இரு போதைகள் – மனிதன் எவ்வாறு மிதக்கத் துவங்கினான் என்பதை அருணாச்சலம் ரமணனும் லோகமாதேவியும் கோடிட்டு விவரிக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிகரம் – வழக்கம் போல் சுரேஷ் ப்ரதீப்பின் மௌனி குறித்த பதிவு.
இதுவரை எழுதிய, வெளியாகிய எல்லா விமர்சனங்களையும் தொகுத்து வைத்துக் கொள்கிறார். அதன் பின் தன் பார்வையை முன் வைக்கிறார்.
தமிழுக்கு சிறப்பே இந்த மாதிரியான காத்திரமான தீவிரமான உரையாடல் எழுத்து தான். செமையாக இருந்தது!

நன்றி!

புதிய தமிழ்க் கதைகள் – 293

புத்தம்புதிய சொல்வனம் இதழில் வந்துள்ள கதைகளுக்கான அறிமுகம் + விமர்சனம்:

1. ஜா. ராஜகோபாலன் எழுதிய தெய்வநல்லூர் கதைகள்:
நன்றாக எழுதக் கூடியவர்; கட்டுரைகளில் கவர்ந்தவர் புனைவில் மிளிர்வது கடினம். கட்டுரையாசியராக மிளிர்ந்த ஜாஜா கதாசிரியராகவும் நடத்திக் காட்டுகிறார்.

கதைகளில் அரசியல் சரிநிலை பயங்கள் கூடாது. இன்றைய கதைகளில் உள்ளதை உள்ளபடியே காண்பது அரியதாக உள்ளது. இந்தப் புனைவு சிறப்பான துவக்கம். அந்தக் காலத்திற்கு நம்மை அழைக்கிறது. நீங்கள் பார்த்த, சந்தித்த மனிதர்களைச் சொல்லுகிறது.

எல்லாவற்றையும் விட சுவாரசியமாக இருக்கிறது!


——

2. சாந்தி மாரியப்பன் எழுதிய கொடுக்கு:

முடிவை நோக்கி ஓடும் கதை. “ஆறும் அது ஆழமில்ல…” என, பெண்களுக்குள் இத்தனை விஷயம் இருக்குமா?

நாலு மாதம் கழித்து இந்தப் புனைவின் சமபவங்கள், மனதோரத்தில் கீறலாக நிலைத்திருக்குமா – இல்லை.
படிக்கும்போது திருப்தி கிடைக்கிறதா – ஆம்.

சற்றே சமீபத்திய ‘தப்பட்’, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, ‘அம்மு’, ‘ஜெய ஜெய ஜெய ஹே’ – போல் இன்னொரு முடிவு.

கதையின் நடுவே சம்பவங்கள் பலஹீனம். கதையின் உச்சகட்டம் நிறைவு.


——

3. அர்ஸுலா லெ க்வின் எழுதிய உள்ளும் வெளியும்

இதைக் குறித்து தனியாக எழுத வேண்டும். எழுதலாம்


——

4. பத்மகுமாரி எழுதிய அறுவடை

நெகிழ்வான கதை.

இந்த மாதிரி ஆக்கங்களின் ஆகப் பெரிய சிக்கல் என்னவென்றால், ஐம்பதாண்டுகள் முன்பே இதைப் படித்திருக்கிறோமோ என்னும் சந்தேகம் வரவழைக்கும் விஷயங்களைச் சொல்லும்.

இன்றைய காலகட்டத்தில், இக்கால இளைஞர்களுக்கு இந்த மாதிரி செண்டிமெண்ட் பிழிசல்கள் ஒத்து வருமா?


——

5. ந.சிவநேசன் எழுதிய சைக்கிள்

“வானத்தைப் போல”, விக்கிரமன் படம் போல் இன்னும் ஒரு எளிமையான சம்பவம்.

நடக்கக் கூடியதுதான். நல்லா இருக்கிறதுதான்.

இன்னும் நம் தமிழ் சமூகம் தொலைக்காட்சி நெடுந்தொடர் பிடியில் இருந்து வெளிவரவில்லை என்பதை நினைவூட்டிக் கொண்டால், எவ்வாறு இவ்வாறான புனைவுகள் ஹிட் ஆகின்றன என்பது புரியும்.


——

6. ஜாபாலன் எழுதிய இன்வெர்ட்டி-வைரஸ்

Reactance theory கேள்விப் பட்டிருப்பீர்கள். அதனுடன் கொஞ்சம் கோவிட், நிறைய காத்தாடி ராமமூர்த்தி, எஸ்.வி. சேகர், கிரேசி மோகன் நடை.

தத்துவார்த்தமாக “எதனால் ஊக்கம் கொள்கிறோம்?”, ‘எப்படி சொன்ன காரியத்தை, நம் மனம் செய்ய மறுக்கிறது?’ என்று சென்றிருக்கலாம். ஆராய்ச்சி, சிந்தை வளர மனம் மாறும் நிலை போன்றவற்றை உணர்த்தியிருக்கலாம்.

இப்போதைய அளவில் – ஏதோ நகைக்க வைக்க முயல்கிறார்.


——

நன்றி #solvanam

மேற்கத்திய உலகுடன் ஒப்பிட்டால் இந்தக் கதைகள் இன்னும் மூன்று அல்லது நான்கு தலைமுறை பின் தங்கியே இருக்கிறது. தமிழுலகின் தீவிர சிந்தனையாளர்கள் பணத்தைத் துரத்துவதாலோ அல்லது சீரிய முறையில் புனைவுலகை நெறியாண்டு கற்றுத் தரும் ஆசிரியர்களின் போதாமையினாலா?

Solvanam Stories – 292nd Issue

சொல்வனம் இதழின் 292வது வெளியீட்டில் நிறைய கதைகள் வந்திருக்கின்றன.

ஒவ்வொன்றையும் பற்றி எனக்குத் தோன்றியவை:

  1. 1/64, நாராயண முதலி தெரு: சித்ரூபன் எழுதியிருக்கிறார்

அந்தக் கால நினைவுகள். சொல்வனம் என்றாலே நொஸ்டால்ஜியா என்னும் தேய்வழக்கிற்கு பொருத்தமான ஆக்கம். அவ்வப்போது, அந்தக் கால ‘ரெட்டை வால் குருவி’, ‘அழியாத கோலங்கள், ‘கோகிலா’ என்று பழைய படங்களைப் பார்ப்பேன். இதுவும் அது போன்ற ஒண்டுக் குடித்தன பதிவு. இங்கு சென்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அனுபவித்திருக்கிறேன். அதை சிறப்பாக மலரும் நினைவுகள் கொடுக்கிறார்.

  1. இப்படியும் ஒரு நாள், ஒரு கதை: மோஹன் ஹரிஹரன் எழுதியிருக்கிறார்

இது “Everything Everywhere All at Once” போன்று எல்லாமுமாக இருக்கிறது.
அதி புனைவா… உண்டு
அறிவியல் புனைவா… உண்டுங்க அம்மா
நிஜ சம்பவங்கள்… உண்டு ஐயா
கட்டுரை தளத்தில் தகவல்கள்… அதுவும் உண்டு
இதையெல்லாம் கிண்டலடிக்கும் சுய எள்ளல்… எல்லாம் உண்டு

  1. ஒரு குழந்தையும் இரு உலகங்களும்: விக்னேஷ்

இது சிறப்பான ஆக்கம். மனதில் பதியும் சித்திரங்கள். பாத்திரப் படைப்பு. இருண்மையைக் கோரும் விவரிப்பு. நல்ல படைப்பு!
வாழ்த்துகள்!!

  1. Femino 16: சப்னாஸ் ஹாசிம்

இதை விமர்சித்தால் மாட்டிக் கொள்வீர்கள். முதலில் கதை புரிந்ததா என்று கேட்டுக் கொள்ளுங்கள்… அப்புறம் பெண்ணியம், அரசியல் சரிநிலை, இஸ்லாம் மதம் – வேண்டாம்… மாட்டிக்குவேன். விளங்கிக் கொண்டு வருகிறேன்.

நீங்கள் படித்துப் பார்த்து உங்களுக்குப் புரிந்ததை சொல்லுங்கள்

  1. சுத்தமும் ஐரீனும்: பிரதீப் நீலகண்டன்

கோகுலம் படித்த திருப்தி கிடைக்கிறது. குழந்தைகள் பகுதி துவங்கியிருப்பதை அறிவிக்க மறந்து விட்டார்கள் #Solvanam

  1. ஒரு தபலா, சாரங்கி, கே.கே மற்றும் நான்: தேஜூ சிவன்

தமிழ் தொலைக்காட்சிகளின் சீரியல் பார்த்த நிறைவைத் தரும் நெகிழ்வான உருக வைக்கும் கண்ணீர் காட்சிகள் நிறைந்த சிந்து பைரவி. ‘சுந்தரி’, ‘எதிர் நீச்சல்’, ‘மிஸ்டர் மனைவி’, ‘இனியா’, ‘கயல்’, ‘இலக்கியா’, ‘அன்பே வா’, ‘அருவி’ எல்லாம் பார்த்து கொலை வெறியில் உருவாகிய கதை.

  1. பனிக்காலத்தின் பகல்: ராஜேஷ் வைரபாண்டியன்

தேவலாம். முடிவை நோக்கி ஓடும் கதை. Everything Everywhere All at Once பார்த்ததன் மல்டிவெர்ஸ் விளைவு!

தமிழில் இவ்வளவு பேர் தீவிரமாக இலக்கியத்தை பேணுவது ஆரோக்கியமான விஷயம். பல்சுவையும் உண்டு. உட்பொதியும் கிடைக்கிறது.

உங்களுக்கு எந்தக் கதை கவர்ந்தது?

Tamil Podcasts: Novels, Classics and Literature for Listening

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

கூடிய சீக்கிரமே, Saraswathi Thiagarajan சரஸ்வதி தியாகராஜன் ‘தினம் ஒரு தொடர்’ போர்டு போட்டுவிடுவார்.

இப்போதைக்கு இவற்றை ஒலியும் ஒளியுமாகக் கொடுத்து வருகிறார்:
1. இரா. முருகனின் ‘மிளகு’ – #சொல்வனம் தளத்தில் வெளியாகும் பெருங்காப்பியம் (மாதத்தின் இரண்டாம் ஞாயிறு மற்றும் நான்காம் ஞாயிறு)

2. கரிச்சான் குஞ்சு எழுதிய பசித்த மானிடம்: செவ்வியல் இலக்கியங்கள்

3. தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல்: காலச்சுவடு கிளாசிக்

4. இரா. முருகனின் ‘தினை’ – புத்தம் புதிய புதினம்: திண்ணை (வாரந்தோறும்)

5. அதிரியன் நினைவுகள் – #solvanam Series (மாதத்திற்கு இரு முறை)


6. ராக் தர்பாரி – சொல்வனம் | ஶ்ரீலால் சுக்ல | இந்தி | சரஸ்வதி ராம்நாத் | தமிழாக்கம் : வெள்ளிதோறும்

இது தவிர சமகாலச் சிறுகதைகள், அஞ்சலிகள், சுவாரசியமான கட்டுரைகள், சொல்வனம் இதழில் வெளியாகும் இடுகைகள் எல்லாமும் சொல்வனம் ஒலி/ஒளிவனத்தில் கிடைக்கிறது.

https://www.youtube.com/@thamils/playlists

அவருடன் ஜமீலா. ஜி என்பவரும், வித்யா அருண் என்பவரும் கூட இணைந்து செயல்படுகிறார்கள். சுகா எழுதிய கட்டுரைகளை வித்யா சுபாஷ் வாசித்து இருந்தார்.

தரையில் இறங்கும் விமானங்கள் இந்துமதியால் 1982-ல் ஆனந்த விகடன் இதழில் தொடராக எழுதப்பட்டு பின்னர் நூல்வடிவம் பெற்றது. பொதுவாசிப்புக்குரிய படைப்பு எனினும் நாடகத்தன்மை கொண்ட நிகழ்வுகளோ செயற்கையான உணர்வுகளோ இல்லாமல் எளிய உரையாடல்கள், ரசனையின் பரிமாற்றங்கள் வழியாகச் சென்று நிறைவுறுகிறது. எண்பதுகளின் உணர்வுநிலைகளை மிகச்சரியாக வெளிப்படுத்திய பொதுவாசிப்புக்குரிய நூல்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்படுகிறது (நன்றி: ஜெ. விக்கி)

இந்த நாவல், துரை இயக்கி அஜித் நடித்த திரைப்படமான ‘முகவரி’யை எனக்கு நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தது. இசைத்துறையில் ஆர்வமும் திறமையும் கொண்ட ஓர் இளைஞன் சினிமாவில் முட்டி மோதி தோற்றுப் போய் குடும்பச் சூழல் காரணமாக இறுதியில் பணிக்குச் செல்லும் கதை. இந்துமதியின் நாவலில் இருந்து துரை தூண்டுதல் பெற்றிருந்தாலும் ஆச்சரியமில்லை. அண்ணன், அண்ணி பாத்திரம் உட்பட திரைப்படத்திற்கும் நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த நாவல், தொலைக்காட்சி தொடராக படமாக்கப்பட்ட போது விஸ்வம் பாத்திரத்தில் ரகுவரன் நடித்திருந்தார் என்று நினைவு. ஆனால் ‘முகவரி’யில் நாயகனுக்கு அண்ணனாக, அதாவது பரசு பாத்திரத்தை அவர் ஏற்றிருந்தார். (நன்றி: பிச்சைப்பாத்திரம் சுரேஷ் கண்ணன்)

வலைபரப்பு – உங்களுக்குப் பிடித்த பாட்காஸ்டிங் வலையொலி நிரலி வழியாகக் கேட்கலாம்
காணொளி – யூடியுப் கன்னல் வழியாகப் பார்க்கலாம்.

சொல்வனம் ஒலிவனம் வழியாக: தரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி : ஒவ்வொரு புதன்கிழமையும் கேட்கத் தவறாதீர்கள்!

இந்தியக் கடவுள்களைக் கனவு கண்ட இத்தாலிய பல்துறையறிஞர்

நம்பியின் கட்டுரைகள் பல சமயம் நுழைவதற்கு தடுமாற வைக்கும். அதற்காக முன் பின்னாக வாசிப்பேன். கடைசி பத்தி, நடுவில் ஒரு பத்தி. இடையில் வரும் இன்னொரு அத்தியாயத்தின் முதல் பத்தி. அதன் பின் மீண்டும் இரண்டாம் பக்கத்தில் விட்ட இடத்தில் தொடர்வேன்.

ரொபெர்ட்டோ கலாஸ்ஸோ குறித்த அவரின் கட்டுரை அந்த மாதிரி தாவலை வேண்டாமல், நேரே வாசிக்க வைத்தது.

ஒன்று நம்பி வெகுஜன எழுத்தாளர் ஆகியிருக்க வேண்டும்.
அல்லது எனக்கு நம்பியின் எழுத்துக்கள் பிடிபட்டிருக்க வேண்டும்.

ஆனால், காரணம் இரண்டுமில்லை. இது எடுத்துக் கொண்ட துறை. அதன் பிறகு கொஞ்சம் லகுவாக சொன்ன விதம். வாசகரை எப்படி உள்ளே இழுப்பது என்பதை நம்பி திறம்படக் கற்றுக் கொண்டு விட்டார். அதனால், சற்றே அடர்த்தியையும் விஷய தானத்தையும் கட்டுரை நெடுகத் தூவ விட்டிருக்கிறார்.

இன்னொன்று இந்து மதக் கதைகள்; நன்றாக அறிந்த புராண விஷயங்கள்; இதிகாசங்களிலும் கர்ண பரம்பரையாகவும் சுலோகங்களாகவும் வேதங்களாகவும் சொல்லப்பட்ட தகவல்களை உவமானங்களை தத்துவங்களை அவர் கோர்த்துத் தந்திருக்கும் விதம் அபாரம்.

இப்படி படிக்கட்டு படிக்கட்டாக ஏற்றி நம்மை எங்கெங்கோ அழைத்துப் போகிறார். கிரேக்க தொன்மங்கள், எகிப்திய கடவுள்கள், ரோமானியப் புனைவுகள் – அப்புறம் தற்கால நபகோவ், டி.எஸ். எலியட் என்று நிகழ்கால ஜாம்பவான்களையும் கதம்பமாக்கி மாலையாக்கி இருக்கிறார்.

தமிழுக்கு எப்போதுமே நல்ல எழுத்தாளர்கள் உருவாகிக் கொண்டேயிருப்பார்கள். இப்போது நம்பி.

https://solvanam.com/series/writer-roberto-calasso/