Tag Archives: cricket

நானும் ராம் கோபால் வர்மாவும்

நீங்களும் இவ்வாறு ஒப்பிட: Twitterize Yourself: How To Create A Visualization Of Your Twitter Profile [INFOGRAPHIC] – AllTwitter

உங்களுடன் ஒப்பிட சிலர்:

  1. ஏ ஆர் ரெஹ்மான்
  2. சுருதி ஹாஸன்
  3. பிரிட்டிஷ் நந்தி
  4. பர்க்கா தத்
  5. கரன் ஜோஹர்
  6. ஷாரூக் கான்
  7. சசி தரூர்
  8. சேகர் கபூர்
  9. சுசித்ரா
  10. சச்சின் டெண்டுல்கர்

சென்னை இராஜாங்கம்: V

அவ்வப்போது அமெரிக்காவில் விழும் ஒரு இன்ச் snow, ஒன்றரை மில்லிமீட்டர் பனியை, வீட்டு வாயிலில் இருந்து தெருவுக்குத் தள்ளிவிடுவதற்கே கண்களாலும் மூக்காலும் அழுபவன் நான். மிக மிக எளிமையாக வாசலைத் தெளித்துக் கோலம் போடுவது போன்ற கைங்கர்யம் அது.

குட்டி எவரெஸ்ட் மாதிரி இருக்கும் மணற்குவியலை, தலைக்கு மேல் இருக்கும் குப்பை வண்டியில் shovel செய்தவரைப் பார்த்தவுடன் மனம் நாணிக் கோணியது. சர்வ சாதாரணமாக, பகல் 41 டிகிரி வெயிலில் தூக்கிப் போட்டார். நீல்மெட்டல் சென்னையை சுத்தமாக மாற்றியுள்ளது.

முப்பது வருடம் முன்பு ரூபவாஹினிக்காக இலங்கை ஆண்டெனாக்கள் மொட்டை மாடிகளை நிறைத்திருக்கும். காக்கைகளும் அவற்றை ஆசையாகத் திருப்பி வைக்கும். ராஜபக்ஸே தமிழ்த் தொலைக்காட்சியை நிறுத்தி விட்டாரா என்று நாராயணனை விட்டு விசாரிக்க சொல்லவேண்டும். இன்றைய மாடிகள் முழுக்க சாடிலைட் டிஷ் ஆக்கிரமிப்பு. காக்கைகளும் காணாமல் போய்விட்டது. வேடந்தாங்கலிலாவது இருக்கிறதா என்று ப்ளாஸ்டிக் பைகளில் சோறு கட்டி சென்று பார்த்துவர வேண்டும்.

ஆட்டோக்காரர்கள் மெமரி கார்ட் கொண்டு பாட்டு போடுகிறார்கள். ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கிளம்பிய இடத்தில் இருந்து சேரும் இடத்திற்கே கேட்கும் அலறலுடன் கூடிய எம்பி3 ஒலி. வேண்டிய பாடல்களை ஐபாட் shuffle ஆக மாற்றும் வசதி. பண்பலை என்னாச்சு என்னும் கேள்விக்கு ‘போயே போச்சு‘ங்கிறார்.

‘ஏன்’?

கேள்விக்கு பத்ரி மொட்டை மாடியில் பதில் சொன்னார்.

‘எஃப்.எம். ரேடியோக்கள் செய்திகளை ஒலிபரப்ப முடியவில்லை. ஆல் இந்தியா ரேடியா தவிர எவரும் நேரடி நிகழ்வுகளை உடனுக்குடன் சொல்லமுடியாது! ஐ.பி.எல் மாதிரி எத்தனையோ லைவ் விஷயங்கள் வானொலிக்கு வரவேண்டும்’.

மோகம் முப்பது தபா; ஆசை அறுபது ராவு என்பது போல் சிட்டி சென்டரும், எக்ஸ்டென்ஷன்களில் உலவும் ஸ்பென்சரும் பல்கிப் பெருத்தபின் சென்னை யுவன்களுக்கும் காரிகைகளுக்கும் மால் அலுத்துப் போய்விட்டது. அல்லது ஜாகையை மாற்றிக் கொண்டுவிட்டார்கள்.

இன்றளவிலும் ‘சூடிதாரில் நான் வருவேன். சல்வார் கமீஸை நான் மறவேன்’ என்று மதுரை சோமுவாகிறார்கள். லுங்கியைப் போன்ற வண்ணமயமான காற்றோட்டமான ஸ்கர்ட், அதிர்ச்சி மதிப்பீடாக தாவணி, நாகரிகமும் குறையாமல் கற்பும் காக்கும் முக்கால் பேன்ட் எதுவும் காணோம். அதெல்லாம் வந்தால் ‘ராம சேனா’வும் பாரதிய ஜனதாவும் வந்துவிடும் என்னும் பயமோ!

‘கடந்த 48 மணி நேரமாக பெண்களுடன் கலந்துரையாடி, பின்தொடர்ந்து “What women wantனு புரிந்து கொள்வதிலேயே நேரம் போவதாக’ சலித்துக்கொண்டவரிடம்தான் விசாரிக்கவேண்டும்.

Bhajji – Sreesanth row: How to market sports to Men?

ஆணுக்கு என்ன பிடிக்கும்? ஆக்ரோஷமான குத்துச்சண்டை பிடிக்கும். குத்துச்சண்டை விளையாட்டா என்பது விவாதத்துக்குரிய விஷயம். ஆனால், விளையாட்டில் போட்டி மட்டும் பார்வையாளனுக்கு போதாது.

போர்முனைக்கு செல்லும் பயம், கத்தி கிழித்த ரத்தம், கொலைவெறி பகைமை எல்லாம் இருக்க வேண்டும். அப்பொழுது கிடைக்கும் மாமிசத் துண்டுகளில் கேளிக்கைத்தனம் பூர்த்தியடையும்.

அமெரிக்காவில் இதை கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நியு யார்க் யாங்கீஸுக்கும் பாஸ்டன் ரெட் சாக்ஸுக்கும் ஆகவே ஆகாது.

நியூ யார்க் தோற்க வேண்டும் என்பதற்காக ‘செய்வினை’ வைப்பார்கள். பாஸ்டன் பேஸ்பால் வீரரின் சட்டையை விளையாட்டு அரங்கத்துக்குள் புதைத்து வைப்பார்கள். சென்ற வருடம் யாங்க்கீஸ் தோற்றதற்கு காரணம் தேடுபவர்கள் அந்த ‘மந்திரித்த டி-சர்ட்’டை தோண்டி கண்டுபிடித்து வழக்கு தொடுக்கும் நாடகம் எல்லாம் நடக்கும்.

(கடைசியாக அந்த சட்டை $175,100 டாலருக்கு நன்கொடை அமைப்புக்காக ஏலத்தில் விலை போனது நல்ல விசயம்).

இன்று பாஸ்டனுக்கு விளையாடும் வீரர், நாளை நடக்கும் ஏல பேரத்தில் நியூ யார்க்கிற்கு செல்வது சகஜமாக நிகழ்ந்தேறினாலும், இதே மாதிரி அண்டை நகரங்களுக்குள் தீராப்பகை இருப்பது போல் பாவ்லா காட்டி ரசிகர்களை முறுக்கேற்றுவார்கள்.

கபில் தேவுக்கு அழத் தெரியவில்லை என்றால், ஹர்பஜன் சிங்குக்கு அறையத் தெரியவில்லை.

இணையத்தில் பதினாலு தடவை ஃபார்வர்ட் மடலாக படித்த நகைச்சுவையை சொல்லும் ‘அசத்த/கலக்கப் போவது யாரு‘ நபருக்கு ‘டைமிங்’ முக்கியம். இந்த மாதிரி உணர்ச்சிகரமான உச்சகட்டத்திற்கும் ‘டைமிங்’ அதி முக்கியம்.

ஸ்ரீசாந்த் பவுன்சர் போட்டவுடன் ‘திமிரு’ தருண் கோபி எழுதிய இலக்கியத்தரமான டயலாக் ஆன ‘டேஏஏஏஏய்ய்ய்ய்ய்ய்ய்’ என்று கோபமாக அறைந்தால், அதற்கு பெயர் டைமிங். தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளிபரப்பும்.

செய்தி:

மொஹாலி போட்டி முடிந்ததும் வரிசையாக பஞ்சாப் அணி வீரர்கள் ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்து வந்துள்ளார் ஹர்பஜன் சிங். 3-வது வீரராக ஸ்ரீசாந்த் நின்றுள்ளார். அவரிடம் கைகொடுப்பதற்குப் பதிலாக ஓங்கி அறைந்துள்ளார். ஹர்பஜனைத் தொடர்ந்து வந்துகொண்டி ருந்த அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத், அதைக் கண்டு கொள் ளாமல் மற்ற வீரர்களிடம் கைகொடுப்பதில் கவனம் செலுத்தி யுள்ளார்.

மும்பை அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத்துக்கு, போட்டிக்கான சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹர்பஜன் சிங்கை தடுக்கத் தவறியதால் அவருக்குத் இந்தத் தண்டனை.

நேற்றைய கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியில் கூட கைகலப்பு அரங்கேறியது. ஒரு தலை பட்சமாக பாஸ்டன் செல்டிக்ஸ்‘ அணியே வென்று கொண்டிருக்க ஆட்டத்தை விறுவிறுப்பாக்க என்.பி.ஏ. (நேஷனல் பாஸ்கெட்பால் அஸோசியேஷன்) நினைத்தது.

முதலில் நடுவர்கள் பாரபட்சமாக செயல்பட்டனர். எதிரணியின் அராஜகமான செயல்களுக்கு விசிலடித்து குற்றங்கண்டு பிடிக்க வேண்டிய தருணங்களில் கண்டுங்காணாமல் விட்டுக் கொடுத்தும், ‘மாமியார் கை பட்டா குத்தம்’ என்பது போல் பாஸ்டன் லேசாக எதிரணியினர் மேல் உரசினாலும், ‘ஃபவுல்’ என்று ஊக்கப்படுத்தி, பார்வையாளர்களை உசுப்பேத்தினர்.

‘அதாவது நாலு பேருக்கு நல்லதுன்னா’ என்பது போல் நாற்பது பார்வையாளர்களுக்கு கோபம் பொங்கி வர வேண்டும். வந்தது.

அடுத்தது, சண்டக்கோழியாக வளர்த்துவிடப்பட்டிருக்கும் ஒருவர் மேல் ‘Foul’ முழங்கியவுடன், ‘அவன்தான் தவறு செய்தான்’ என்பது அப்பட்டமாக தெரிகிறதே என்று சிலுப்பிக் கொண்டு எழ ஆட்டம் சூடு பிடித்தது.

இதைத்தான் லால்சந்த் ராஜ்புத் + ஹர்பஜன் சிங் + ச்ரீசாந்த் (& நடுவர்(கள்)) செய்யத்தவறி விட்டனர்.

ஆட்டம் ஆரம்பத்தில் ‘முக அழகிரி + தயாநிதி மாறன்’ மாதிரி நட்போடு உரசவேண்டும். நடுவே கருத்துக்கணிப்பு மாதிரி பொறி பறக்க வேண்டும். கடைசியில் அப்பாவியாக மூன்று பேரைப் போட்டுத் தள்ளிவிட்டு நாடகத்தை முழுமையாக்க வேண்டும்.

இதற்காகத்தான் நடிகர்களை கிரிக்கெட் அணிகளின் தூதுவர்களாக நியமிப்பது வசதிப்படும். பெங்களூர் அணிக்கு த்ரிஷாவை தூதுவராக ஆக்கியிருந்தால் ‘சபாஷ்! சரியானப் போட்டி’ என்று எல்லாரும் உற்சாகமடைந்திருப்பார்கள்.

நிஜ களவீரர்களுக்கு பதில் ‘த்ரிஷா – நயந்தாரா இடையே சௌரிப்பிடி சண்டை’ என்று காண கண்கோடி வேண்டும் காட்சிக்காக முந்தின நாளே நுழைவதற்கு க்யூ வரிசையில் காத்திருப்பார்கள்.

ஆனால், ஹர்பஜன்/ஸ்ரீசாந்த் என்று நாடகத்தனமாக, கொல்கத்தாவின் ஷாரூக் கானுக்கும் மும்பை அம்பானிக்கும் வாள் சண்டை என்றால் எவர் நம்புவார்கள்?

தொடர்புள்ள நகைச்சுவைகள்