- நக்மாவும் ரம்பாவும் பிரச்சாரத்திற்கு வருகிறார்கள்
- வருண் காந்தி வாயைத் திறப்பாரா?
- இலவச வண்ணத் தொலைக்காட்சிதாங்க தெரியுது!
- மன்மோகன் சிங்கும் சரத் பவாரும்
நன்றி: தினமணி
தொடர்புள்ள பதிவு: Who will win? Congress vs BJP: Neeraja Chowdhry: India Elections 2009 Analysis « தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பின்னடைவு :: நீரஜா சௌத்ரி“
கடந்த தேர்தலை விட காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறைகிறது; கூட்டணி கட்சிகள் நெருக்கடிக்கு பணிந்தது
2004-ம் ஆண்டு பாராளு மன்றத்தேர்தலின் போது மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 417 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது.
இதில் 150 தொகுகளில் தான் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடிந்தது. இந்த தடவை அதிக இடங்களில் போட்டியிட்டால் தான், கடந்த தடவை வென்ற 150 தொகுதிகளை விட கூடுதல் இடங்களை பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள். இதற்காக
மாநில கட்சிகளிடம் காங்கிரஸ் பேச்சு நடத்தி வருகி றது. ஆனால் காங்கிரஸ் நினைத்த படி எதுவும் நடக்கவில்லை.
கூட்டணி கட்சிகள் எல்லாம் தாங்கள் அதிக தொகுதிகளை வைத்துக் கொண்டு சிறிதளவு இடத்தையே காங்கிரசுக்கு விட்டுக் கொடுக்க முன் வந்துள்ளன.
ஆகியோர் மிக, மிக குறைந்த தொகுதிகளையே காங்கிரசுக்கு கொடுக்க உள்ளனர்.
காஷ்மீரில் உள்ள தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரசுக்கு குறைவான இடங்களைத் தான் தர முடியும் என்று கூறி உள்ளது. இது காங்கிரசுக்கு நெருக்கடியாக மாறி உள்ளது. உத்தரபிரதேசத்தில் கடந்த தடவை காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 73 தொகுதி களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தடவை முலாயம்சிங் யாதவின் சமாஜ் வாடி கட்சியுடன் நட்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரசுக்கு 17 முதல் 20 தொகுதிகள் வரையே கிடைக் கும் என்று தெரிகிறது. எனவே கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இந்த தடவை சுமார் 30 இடங்களை காங்கிரஸ் இழக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு இந்த தடவை ஆந்திரா, தமிழகம் இரு மாநிலங்கள் மட்டுமே ஆறுதலாக அமைந்துள்ளன. ஆந்திராவில் கணிசமான தொகுதிகளை பெற்று வெற்றி பெற முடியும் என்று சோனியா நம்பிக்கையுடன் உள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த தடவை 10 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது. இந்த தடவை 20 தொகுதிகள் வரை தி.மு.க.விடம் காங்கிரஸ் கேட்கிறது. காங்கிரசுக்கு 12 முதல் 15 இடங்கள் வரை தி.மு.க. கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
தொகுதிகள் எண்ணிக்கை குறைவது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவர் கூறுகையில், “கூட் டணி கட்சிகளுக்கு உரிய இடம் கொடுக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அது தான் கூட்டணி தர்மமாகும். இது எங்களுக்கு அதிக பலத்தை தரும்” என்றார்.
1. இராக்: ஒபாமா வந்தாலும் உடனடியாக வாபஸ் ஆரம்பித்துவிடுமா? அங்கு நிலை எப்படி இருக்கிறது? குர்துக்கள் தனி நாடாக்கிக் கொள்வார்களா? மெகயின் அதிபரானால் ஒபாமாவின் நிலையில் இருந்து எவ்வாறு சூழல் மாறுபடும்? ஆருடம் ப்ளீஸ்!
1a) ஒபமா வந்தால் : வாபஸ் ஆரம்பிக்காது. பிரச்சாரத்தில் இதுவரை ஒபாமா தெளிவாகத் தன் நிலையை விளக்கவில்லை. விரைவில் வெளியேறுவோம் என முழங்கி தென் மாகாணங்களை அவர் இழக்கத் தயாராக இல்லை (முக்கியமாக இராணுவத் தலைமையை).
1983-ல் லெபனானை விட்டு வெளியெறுவதற்கு ஒரு குண்டு வெடிப்பு போதுமானதாக இருந்தது. இராக்கில் அது இயலாது. காரணம்: எண்ணை வளம். அருகாமையில் இரான். அமெரிக்கப் ப்டைகள் வெளியேறினால் நிச்சயம் அந்தப் பிராந்தியம் 1800-களுக்குச் செல்லும் வாய்ப்புகள் நிறைய. பிரிட்டன் இரண்டாம் உலகப் போருக்குப் பின் செய்தத் தவறை அமெரிக்கா செய்யாது. இப்பொதைக்கு அமெரிக்கா அங்கே ஆப்பசைத்தக் குரங்கு.
ஒபாமா என்ன செய்ய வேண்டும்: செனட்டில் இருப்பது வேறு, ஜனாதிபதியாக இருப்பது வேறு என்று ஒபாமாவிற்கு முதல் நாளே தெரிந்து விடும் (இதுவரை தெரியாமல் இருந்தால்). எனவே வறட்டு ‘ராம்போ’ வசனங்களை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்து விட்டு இராக்கிய மித வாதிகளைக் கண்டறிய வேண்டும். அவர்களை இராக் மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்.
இராக் நாடு மதப்பிரிவுகளில் மிகுந்த அக்கறை காட்டும் நாடு. இதனால் அனைத்துப் பிரிவினரயும் உள்ளடக்கிய ஒரு குழு பதவியில் இல்லாமல் மக்களை அணுக வேண்டும். தேவைப்பட்டால், முக்தாதா அல் சதர் போன்ற உக்கிரமான மதத் தலைவர்களையும் அந்தக் குழுவில் இடம் பெறச் செய்யவேண்டும். வரும் வன்முறைகளுக்கு அந்த மதத் தலைவர்கள் பொறுப்பு என சுட்ட வேண்டும். இதையும் மீறி அந்த மதத் தலைவர்களின் ஆட்கள் வன்முறையில் இறங்கினால் மக்களே புறக்கணிப்பார்கள். இவை அனைத்தும் பின்புலத்தில் நடக்க வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் சதாமிற்கு ஒரு மாற்றுதானே தவிர மக்கள் இன்னும் அதை ‘வரதராஜ பெருமாள்’ அரசாகத்தான் பார்க்கிறார்கள்.
அமெரிக்க அரசாங்கம் (அரசியல் செயல்களில்) முண்ணனியில் இருப்பதாகக் காண்பித்துக் கொண்டால் பிரிவினை/தீவிர வாதிகள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். இதன் பின் அமெரிக்கத் துருப்புகள் விலகல் ஆரம்பித்தால் நல்லது. நிச்சயம் இன்னும் இரண்டு வருடங்களாவது ஆகும்.
1b) அங்குள்ள நிலை: சதாம் இருந்த வரை செய்திகள் கசிந்தன. இப்போதைய அரசில் (?!) வெளி வருகின்றன. மற்றபடி ஆட்சி முறை அப்ப்டியே தான் இருக்கிறது. ஷியா, சுன்னி பிரிவினரிடயே ‘அமெரிக்கா எப்போ ஒதுங்குவான், நம்ம அடித்துக்கொண்டு சாகலாம்’ என்று காத்திருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் ‘இதெல்லாம் இருக்கட்டும், வடக்கே குர்துக்களின் தலையை எப்படி எடுக்கலாம்’ என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மற்றபடி, பணத்துக்கு விலை போதல், இரு குழுக்களிடையே மோதல் உண்டாக்கி குளிர் காய்தல், வருங்காலத்தைப் பற்றி யோசிக்காமல் முட்டாள்களாகவே இருத்தல் என்ற typical அராபிய ஆட்சி முறை ஜோராக நடக்கிறது.
1c) குர்துக்கள் தனிநாடு பெறுவது இராக்கை விட துருக்கியின் கைகளில் தான் இருக்கிறது. துருக்கி இராணுவம் பலமானது (மற்ற அரபு நாடுகளோடு ஒப்பிடும் போது). இவர்களை மீறி வடக்கே இராக்கில் மட்டும் குர்துக்கள் தனி நாடு பெற முடியாது. துருக்கி நேட்டோவில் இருப்பதால் மேற்கத்திய வல்லரசுகள் சும்மா முனகிவிட்டு பேசாமல் போய்விடும்.
காஷ்மீரைப் போன்றது இந்தப் பிரச்சினை.
1d) மெக்கெய்ன் அதிபரானால்: ஆரம்பத்தில் மெக்கய்னிடம் இருந்த நம்பிக்கை போகப் போக நீர்த்து விட்டது. இராக் பிரச்சினக்கு, இவர் ஆட்சிக்கு வருவதும், டிக் செய்னி வருவதும் ஒன்றுதான். இயல்பாகவே மெக்கெய்ன் இராணுவ வீரர். இவரால் விட்டுக் கொடுத்து தொலை நோக்குப் பார்வையோடு இராக் மிதவாதத் தலைவர்களை அணுக முடியாது,
2. Africom: ஆப்பிரிக்காவில் மூக்கை நுழைப்பது ஜெர்மனி/ஜப்பானில் இருக்கும் நிரந்தர அமெரிக்க படை போல் சாதுவாக சமாதானமாக அமையுமா? அல்லது சவூதியில் புகுந்த அமீனாவாக இன்னும் சில குவைத்களையும் இராக்குகளையும் குட்டி போட்டு குழப்பத்திற்கு இட்டு செல்லுமா?
மத்தியக் கிழக்கு நாடுகளில் பட்ட சூட்டில் ஆப்பிர்க்காவில் அமெரிக்கா சர்வ ஜாக்கிரதையாகத்தான் இருப்பதாகக் கருதுகிறேன் (இதைப் பற்றி சொற்பமாகப் படித்த வரையில்). சொமாலியா மற்றும் சூடான் தவிர்த்து மிகப் பெரியப் பிரச்சினை இதுவரை இல்லை. எகிப்து அமெரிக்காவின் செல்லப் பிள்ளை.
லிபியா, சதாமுக்கு நடந்த மண்டகப்படியில் அரண்டுப் போய் கிடக்கிறது. மற்ற ஆப்பிரிக்க மக்கள் தங்களின் அன்றாடத் தேவைகளிலும் தங்கள் இனத்திலேயே அடைந்துக் கிடப்பதாலும், அமெரிக்காவைப் பற்றி கவலைக் கொள்ளவில்லை.
3. லெபனான், பாலஸ்தீனம்: சுதந்திரம், விடுதலை போன்றவை ஹெஸ்பொல்லா, ஹமாஸ் என்று மொழியாக்கப்பட்ட நிலையை அமெரிக்கா தோற்றுவித்திருக்கிறது. நல்லதா/கெட்டதா? அடுத்து எங்கே ராஜா கவிழ்ந்து மக்கள் ராச்சியம் உதிக்கும்? உதிக்க வேண்டுமா?
Posted in உலகம், ஒபாமா, கருத்து, செவ்வி, மெக்கெய்ன்
குறிச்சொல்லிடப்பட்டது Affairs, Africa, Africom, Alliance, Army, Bush, Chandra, Cheney, Coalition, Conflicts, Congo, Darfur, Dynasty, External, Foreign, Gulf, GWB, Hamas, Hezbollah, Hussein, Imperial, iran, Iraq, Islam, Israel, Kashmir, Kings, Kurds, Lebanaon, Libya, Mccain, Military, Muslims, Obama, Rajesh, Regime, Saddam, Shia, Somalia, Sudan, Sunni, Turkey, War, World, Zaire