Tag Archives: Books

நியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்

அனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்

Nizhalil-Jayamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NY-USA-America-Authors-Tamil

மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NYC-US-America-Writers-Tamil

Writer Jeyamohan visit in America

My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்


ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

ஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்

புத்தக கடையில் ஜெமோ விரும்பி வாசிக்க எடுத்த நூல்களின் பட்டியல்:

1. Confessions of a Philosopher – Bryan Magee

2. If on a winter’s night a traveler – Italo Calvino

3. 2666 – Roberto Bolano

4. Ludwig Wittgenstein: The Duty of Genius – Ray Monk

5. Pragmatism: The Classic Writings – Edited by H S Thayer

6. The Meaning of Truth: William James

7. Evolution and the Founders of Pragmatism: Philip P Wiener

8. The Geography of Thought: Richard E Nisbett

ஜெயமோகன்: சில குறிப்புகள்

இணைய அறிமுகம், சிறுகுறிப்பு, தகவல் கட்டுரை: Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction « Tamil Archives

வார்த்தைகளின் விளிம்பில்: எழுத்து – ஜெயமோகன் – தொடர்

இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:

  1. சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
  2. அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
  3. இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
  4. கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
  5. சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
  6. எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
  7. அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
  8. நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
  9. பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
  10. சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.

இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.

  1. சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
  2. சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
  3. சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
  4. அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
  5. பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
  6. தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
  7. Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
  8. நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
  9. தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
  10. ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.

சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம்

Kaalam-Canada-Sitrithazh-Small-Magz-Tamil-Lit-Coversமுந்தைய பதிவு

  1. தமிழ் சிற்றிதழ்கள்
  2. என்னைக் கவர்ந்த தலை 10 தமிழ் சிறுபத்திரிகைகள்

இணையமெங்கும் சிறுபத்திரிகைகளின் துவக்கம், பல புத்தகங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சி, ஆங்காங்கே வணிகப் பத்திரிகைகளில் வெளிவந்த பதிவாக்கப்பட்ட கவனிக்கத்தக்க மாற்றம், சரித்திரம், வரலாறு என்று பல இடங்களில் கண்டைதையும், படித்ததையும் தொகுக்கும் முயற்சி. அவ்வப்போது சேர்க்கப்படும்.

மேற்கோள் முத்து

1. சு.ரா.: சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை.

Kalai-Images-Pictures-Thamil-Magazine-Covers-Little-Mag2. புதுமைப்பித்தன்: “நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு.”

3. க.நா.சு.: ‘ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை.’

தகவல், பின்னணி, வரலாறு

எழுத்து சிற்றிதழ் சி.சு செல்லப்பா அவர்களை ஆசிரியராகக் கொண்டு , ஜனவரி 1959 முதல், புதுமை இலக்கிய மாத ஏடு என்ற அறிவிப்புடன் 50 பைசா விலையில் வெளிவரத் தொடங்கியது.

க.நா.சு நடத்தி வந்த சூறாவளி , சந்திரோதயம் பத்திரிகைகளில் துணையாசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் சி.சு செல்லப்பாவுக்கு உண்டு.

சுதேசமித்திரன் இதழ் செல்லப்பா எழுதிய கட்டுரை ஒன்றை வெளியட மறுத்த பொழுது எழுந்த கோபத்தில் எழுத்து இதழைத் தொடங்கினார் .

KPR-Keppiyaar-Kumari-District-Alternate-Journals-Issues-Articles-Opinionsந.பிச்சமூர்த்தி எழுத்து இதழின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார் .

எழுத்து நின்றவுடன் சிறிது காலத்திற்குப் பிறகு சுவை என்ற மாத இதழை செல்லப்பா தொடங்கினார் , அதுவும் முதல் இதழோடு நின்று விட்டது.

க.நா.சு இலக்கிய வட்டம் ( நவம்பர் 1963 ) என்ற சிற்றிதழைத் தொடங்கினார்.

பெயர்கள், பட்டியல்

  • நிழல் – ஜூலை 05 « சினிமா, திரைப்பட அலசலுக்கான சஞ்சிகை
  • ஏப்ரல் 2008: வார்த்தை – எனி இந்தியன் இதழ்
  • ஏப்ரல் 2004: பாடலாசிரியர் யுகபாரதி படித்துறை’ என்ற பெயரில் தனியே ஒரு சிற்றிதழ் தொடங்கினார்.
  • மே 2004: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலிருந்து ‘கூட்டாஞ்சோறு’ என்ற இலக்கிய இதழ் ஆரம்பம்.
  • ஜூன் 2004: பெண்களுக்கான சினிமா பற்றி பேசும் ‘கண்ணாடி’ என்ற சிற்றிதழ் கொண்டுவருகிறார் குட்டிரேவதி.
  • கலைஞன் Oppuravu-Literary-Adventures-New-Obsolete-Images-Cover-Photos-artsபதிப்பகம் தொகுத்துள்ள சிற்றிதழ்கள்:
  1. கசடதபற
  2. கணையாழி
  3. மனிதன்
  4. சுபமங்களா
  5. சரஸ்வதி
  6. மணிக்கொடி
  7. சக்தி
  • சாந்தி (தொ.மு.சி ரகுநாதன்)
  • தாமரை(ப.ஜீவானந்தம்)
  • சரஸ்வதி (விஜயபாஸ்கரன்)

கருத்து, வம்பு, கிசுகிசு

உசாத்துணை, இணையத்துக் கட்டுரைகள்

1. Tamil-Neyam-EVR-Periyar-Left-Rational-Thinkers-Contents-Researchமரவண்டின் ரீங்காரம்: எழுத்து சிற்றிதழ்

2. ஆனந்த விகடன் தீபாவளி மலரில்(2004 ) விருட்சம் சிற்றிதழின் ஆசிரியரான அழகிய சிங்கர் அவர்கள் “எழுத்திலிருந்து மணல் புத்தகம் வரை” என்ற கட்டுரையில் சிற்றிதழ்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

3. ஆறாம் திணைஇலக்கியம் :: சிற்றிதழ் வரிசை

தொடர்புள்ள புத்தகங்கள்

1. தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன்

2. புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – வல்லிக்கண்ணன்

3. புதுக்கவிதை முற்போக்கும் பிற்போக்கும் – ந. வானமாமலை

4. புதுக்கவிதை வரலாறு – ராஜமார்த்தாண்டன்

Puthu-Ezhuthu-Manonmani-Preface-Table-of-contents-Index-Search-Fiction-Story5. சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம் -மேலாண்மை பொன்னுச்சாமி

6. இலக்கிய முன்னோடி வரிசை – ஜெயமோகன்

7. இந்திய இலக்கிய சிற்பிகள் (க.நா.சு) – அசோகமித்திரன்

8. இந்திய இலக்கியம் – க.நா.சு.

9. பிரம்மாண்டமும் ஒச்சமும் (சி.சு செல்லப்பாவின் படைப்புலகம்) – பெருமாள்முருகன்

ஆட்டிசம் குறைபாடு: திரைப்படம் & குடும்பம்

உயிரோசை: மாமிக்கு ஏன் மீசை? ஊன வகைமாதிரியின் அபத்தங்கள் – அபிலாஷ். ஆர்

ஓட்டிசம் (autism) எனும் மூளைச்சிதைவு (mental impairment) பிறவி நோயாளிகளில் மிகச் சிலர் சாவண்ட் (Savant) எனும்

  • அதிநினைவுத்திறனுடன், கணிதத்திறனுடன் இருப்பர் (ஒருவர் ஐன்ஸ்டனின் சூத்திரத்தில் கணிதப்பிழை கண்டுபிடித்தார்).
  • படித்த புத்தகத்தை ஒரு வார்த்தை விடாமல் அவர்களால் ஒப்பிக்க முடியும்.
  • இந்த நாள் 2080-இல் என்ன கிழமை என்றால் நொடியில் சொல்வார்கள்.

ஹாலிவுட்டில் ஓட்டிச சாவண்டை (savant syndrome have autistic disorder) முக்கிய பாத்திரமாய் பயன்படுத்தின குறிப்பிடும்படியான ஆரம்ப கால படம் மழைமனிதன் (Rain Man). டஸ்டின் ஹாப்மேன் (Dustin Hoffman) தான் சாவண்டு.

ஒரு நாள் படிக்க புத்தகம் இல்லாமல் போக தொலைபேசி டைரக்டரியை உட்கார்ந்து படிக்கிறார். மறுநாள் உணவகப் பணிப்பெண்ணின் மார்புப் பட்டையில் பெயர் பார்த்து உடனே டஸ்டின் அவளது தொலைபேசி எண்ணை ஒப்பிக்க அவள் கலவரமாகிறாள்.

Autism-Awareness-Month-April-Flickr-For-The-Love-of-Fionaமற்றொரு விபரீதத் திறமையாக கலைந்த சீட்டுக்களை பார்த்தால் ஆட்டத்தின் போது யாரிடம் எதுவென துல்லியமாய் சொல்கிறார். இதை பயன்படுத்தி இவரது தம்பி (டாம் குறூஸ்Tom Cruise) ஒரு ஆட்டத்தில் கோடிகள் சம்பாதிக்க ஒருங்கிணைப்பாளர்கள் குழம்புகிறார்கள்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் ஓட்டிச நபர்கள் பிரபலமானார்கள். ஆனால் ஊடகங்கள் சுவாரஸ்யத்துக்காக அனைத்து குறைவளர்ச்சி மூளைக்காரர்களையும்  (Mental disorders aka psychiatric or psychosocial disability) (சாவண்டுகளாகக் காட்ட ஆரம்பித்தன.

1998-இல் வெளியான “பாதரசம் உயருது” (Mercury Rising) படத்தில் இரண்டு அதிகணினிகளால் கண்டுபிடிக்க முடியாத 2 பில்லியன் மதிப்பு ரகசிய சேதி சங்கேதக் குறியை சிமன் எனும் ஒரு 8 வயதுப் பையன் கண்டுபிடித்து விடுவான்.

எப்படி?

அவன் ஒரு சாவண்டு என்பதால். இந்த உண்மைக்கு புறம்பான விபரீத சித்தரிப்புகளால் இந்த குறைமூளை மனிதர்கள் பற்றி ஒரு மிகை எதிர்பார்ப்பு அமெரிக்காவில் உருவாகி உள்ளது.

ஸ்டுவார்ட் முரேய் எனும் ஒரு ஓட்டிச குழந்தையின் தகப்பன் சொல்கிறார்: “என் குழந்தையை பார்த்தால் எல்லோரும் கேட்பது ‘அவன் சாவண்டா’ என்றே. ‘இல்லை’ என்றால் முகம் சுளிக்கிறார்கள்.”


City Journal: Autism, Non-Hollywood Version – Stefan Kanfer

  • அமெரிக்காவில் பிறக்கும் 150ல் குறைந்தது ஒரு குழந்தைக்கு — ஏதாவது ஒரு விதமான ஆட்டிசம் தாக்குகிறது.
  • ரெயின் மேன்’ திரைப்படம் என்பது மிகை நாடும் கலையின் உதாரணம் என்பதை நிஜ வாழ்வு சம்பவங்களை புத்தகமாக்கும் அனுபவப் பகிர்வு.
  • பெற்றோரின் கவனிப்பு முழுக்க பாதிக்கப்பட்ட குழந்தையிடமே போவதால், சகோதரர்களிடையே உருவாகும் பிளவு; மன உளைச்சல் போன்ற ஆத்ம சிக்கல்களைப் பேசுகிறது.

புத்தகம்: Boy Alone: A Brother’s Memoir, by Karl Greenfeld (Harper, 368 pp., $25.99)

நண்பருக்கு கடிதம்

நலம். நாடலும் அதுவே.

கடிதம் பார்த்தவுடன் பதில் எழுதணும்னு தோணிச்சு. ஆனால், என்ன எழுதலாம் என்று தெரியல.

வேலையில் காய்ச்சு எடுத்துக் கொண்டிருந்தார்கள்னு ஒரு சால்ஜாப்பு சொல்லத் தோணுது. அதற்கப்புறமா இந்தியா + சென்னை போய் மூணு வாரம் ஓய்வெடுத்தப்போ கூட எழுத முடியாமப் போனதுக்கு வருத்தம் சொல்லிக்கறேன்.

மன்னிக்க 🙂

ஆணி புடுங்கறதுனு அலுத்துக்கொள்வது எங்களுக்கு கைவந்த கலை. எழுத்துத் திறமைக்கு மதிப்பில்ல என்று சலித்துக் கொள்வது படைப்பாளிக்கு வலை வந்த கலை.

சென்னையில் ஆட்டோ ஓட்டுறவனோடு பேசிக் கொண்டிருந்தேன். கார்த்தால நாலு மணிக்கு எந்திரிச்சு நாலரைக்கு வண்டிய ஆரம்பிக்கிறவன், மதியானம் ஒன்றரை மணி வரை ஓட்டுறான். அப்புறம் சாப்பாடு; கொஞ்சம் ரெஸ்ட். வெயில் தாழ, நாலு மணிக்கு மீண்டும் இன்னொரு ஷிஃப்ட் போட்டு ராத்திரி 11 மணி வரை அடுத்த ஓட்டம். அதற்கப்புறமும் உழைக்க அவன் ரெடியாம். சவாரி வருவதில்லை என்பதால் உறக்கம்.

நானா இருந்தா இந்தக் கொடுமைய நினைந்து நினைந்து உருகி நாலு பதிவு போட்டிருப்பேன். அவன் ‘சொந்த ஆட்டோ’ என்று பெருமிதம் கொண்டிருந்தான்.

அடுத்தவரை நினைத்து தன்னை மதிப்பிடுபவனுக்கு என்றுமே நிம்மதியில்லை என்பதை இன்றைய நியு யார்க் டைம்சில் பிகோ ஐயரும் சொல்லியுள்ளார். மகிழ்ச்சி என்பது காசினால் வருவதில்லையாம்.

வீட்டில் அனைவரும் நலம்.

மகளுக்கு அவ்வப்பொழுது பொது அறிவு சிற்றுரையாடுகிறேன். கொஞ்சமாய் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்க முயல்கிறேன். தினமும் அரை மணி நேரம் அவளுடன் செலவழிக்க முடிகிறது.

மற்ற நேரம் டிவி.

வாரயிறுதியில் காரில் பயணிக்கும் நேரம் அவள் கூட இருந்தாலும், இன்னும் சரியாக உபயோகிக்கலாம் என்னும் குற்றவுணர்வுடன் பறக்கிறது.

எம்பிஏ-விலோ எஞ்சினியரிங்கிலோ குழந்தை வளர்ப்பை கட்டாயப் பாடம் ஆக்கலாம். திருமணம் ஆவதற்கு முன் செர்டிஃபிகேட் படிப்பு முடித்தால்தான் தாலி என்றாவது வைக்க வேண்டும். சமைக்கக் கற்று கொடுத்தல் முதல் முதலுதவி மருத்துவம் வரை இதில் சேர்க்க வேண்டும்.

மனைவியுடன் சிறு சிறு பிணக்குகள். பிறகு சமாதானங்கள் என்று சௌகரியமாகவே வாழ்க்கை செல்கிறது.

சமீபத்தில் படித்த புத்தகம் எதுவும் மனதில் நிற்கவில்லை. குள்ளசித்தன் சரித்திரம், யாமம் போன்ற புகழ்பெற்ற வெகுசன நாவல்கள்; நூலகத்தில் எடுத்த சில ஆங்கிலப் புத்தகங்கள்… குறிப்பிட்டு பரிந்துரைக்க எதுவும் இல்லை.

நாளிதழ் வீட்டுக்கு வருவதை நிறுத்தி விட்டேன். இணையத்தில் மட்டுமே தினசரி செய்திகள். இங்கே பாஸ்டன் க்ளோப் திவாலாகும் நிலை.

இதுவரை இமையத்தை நான் வாசித்ததில்லை. இப்பொழுதுதான் கோவேறு கழுதைகள் நியு புக்லேன்ட்ஸில் வாங்கினேன்.

சென்ற வருடம் வரை கடல் ஷிப்பிங் இருந்தது. அமெரிக்கா வந்து சேர்வதற்கு இரண்டரை மாதம் எடுத்துக் கொண்டாலும் சல்லிசான காசு. இப்பொழுது அதை எடுத்துவிட்டார்கள். SAL என்கிறார்கள். சுண்டைக்காய் அரைப்பணம்; சுமகூலி முக்காப் பணம் கதை. 4000 ரூபாய்க்கு புத்தகம். அனுப்ப 5000த்திற்கு மேல் எடுக்கிறது! ஸ்பீட் போஸ்ட்டில் எட்டாயிரத்து சில்லறைதானாம்.

இன்னொருத்தர் பார்க்க புத்தகங்களை எடுப்பது எனக்கு ஒவ்வாதது. இந்த முறை உண்மைத் தமிழன அகப்பட்டு விட்டார். சொல்லவும் முடியாமல் நெளியவும் முடியாமல், படித்து, புரட்டி, அலசி தீர்மானித்தேன்.

நியூ புக்லேன்ட்சுக்கோ கடையை மூடும் நேரம். ஒரு நாள் கூத்துக்காக தாமதமாக திறந்து வைத்திருந்தார்கள்.

அங்கே ஒ ஏ கே தேவரின் மகன், சீரியலில் நடிப்பவர் வந்திருந்தார். குழந்தை வளர்ப்பு + பராமரிப்பு குறித்த புத்தகம் வாங்கிச் சென்றார்.

இருக்கும் புத்தகங்களை படித்தால்தான் புதியது வாங்குவது என்பது இனி மசான வைராக்கியம் அல்ல. வீட்டில் குவிந்திருக்கும் நூல்களை ஒரு முறையாவது அலசி ஆராய்ந்து விமர்சனமோ பதிவோ இட்ட பிறகுதான் இனி அடுத்த வாங்குதல் வைபவம்.

நியூ புக்லேன்ட்ஸ் முழுக்க நிறைய தெரிந்த, அறிந்த முகங்களின் புத்தகங்களைப் பார்க்க மகிழ்ச்சியாகவும் பொறாமையாகவும் இருந்தது. இத்தனை பேரை ஒரளவாவது நேரடியாக அறிந்திருக்கிறோமே என்பதில் சந்தோசம். இவர்கள் எல்லாம் எழுதும்போது நமக்கு எழுத வாய்க்க வகையில்லையே என்பதில் திறமை மீது ஏக்கம்.

எனக்கு இந்த வருட கோட்டா முடிந்தது. அடுத்த வருடம் பிழைத்துக் கிடந்தால் ஜனவரியில்தான் சென்னை செல்ல வேண்டும் என்று ஆசை. அது கிடக்கிறது ஜனவரி 2011! பார்ப்போம்.

விடுமுறையில் சொந்த ஊர் சென்று வந்தால் புத்துணர்ச்சியாகத்தான் இருக்கிறது. ‘என்னத்த செஞ்சு… என்னத்த பண்ணி’ என்று கன்னையாவாக அமிழ்ந்திருக்கும் மனசு புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. சொந்த பிசினெஸ் துவங்கணும், ஏதாவது புதுசாக் கத்துக்கணும், மனைவியை இன்னும் கொஞ்சம் ஒழுங்கா நேசிக்கணும், குழந்தைய மதிக்கணும் என்றெல்லாம் தோன்றுகிறது.

சொந்த இடம் வந்தவுடன் வேதாளம்… முருங்கை மரம்…

சீக்கிரம் ரிடையர் ஆகணும். இல்லை… கொஞ்சம் பெரிய லீவாப் போட்டு ஊர் நெடுக சுற்றிவிட்டு அலுத்தபிறகு மீண்டும் வேலைக்கு திரும்பணும்.

நிறைய புலம்பிட்டேன்.

யாரைப் பார்த்தாலும் இப்படி அட்வைஸும் ஆலோசனையுமாக சொற்பொழிவதை நிறுத்த வேண்டும் என்பதை திருப்பதியில் ஒரு மருந்துக்கடைகாரர் சொல்லிக் கொடுத்தார்.

எனக்கு தொண்டையில் கிச்கிச். ஹால்ஸ் எடுத்தோம். அதன் கூட இன்னொரு பெயர் தெரியாத வஸ்து தனிக்கட்டையாக இருந்தது. விக்ஸ் போல் இருமல் மாத்திரை என்று எடுத்துப் பார்த்தேன்.

அதுவோ, சப்புகிற மிட்டாய் அல்ல. கடித்துத் துவைக்கும் இனிப்பு மருந்து. வைத்துவிட்டேன்.

அண்ணன் பையனுக்கு அது பிடிக்கும் என்று நச்சரித்துக் கொண்டிருந்தான்.

‘சின்னப் பயன் சார்… கேட்கிறத வாங்கிக் கொடுக்காவிட்டால் துவண்டு போயிடுவான்; பிஞ்சு வெம்பிடும்’ என்று கருத்து சொல்லி தள்ளிவிடப் பார்த்த ஓனரை பொரிந்து தள்ளியவுடன் தான் இன்டெர்னெட்டில் அனானிமஸ் வசதி எம்புட்டு பெருசு என்று புரிந்து கொண்டேன்.

வாழ்த்துகளுடன்,
அடியேன்

பிரபாகரன்: 1954-2009

நன்றி :: சத்தியக் கடதாசி » Napoleon

பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் எப்போது பிறந்தான்
என்று கேட்கிறார் ஆசிரியர்
ஆயிரம் ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
நூறு ஆண்டுகள் முன்பு என்றனர் பிள்ளைகள்
சென்ற ஆண்டு என்றனர் பிள்ளைகள்
எவருமே அறியார்

பிள்ளைகாள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ன செய்தான்
என்று கேட்கிறார் ஆசிரியர்
ஒரு போரை வென்றான் என்றனர் பிள்ளைகள்
ஒரு போரைத் தோற்றான் என்றனர் பிள்ளைகள்
எவருமே அறியார்

எங்கள் கசாப்புக் கடைக்காரனிடம்
பிரபாகரன் என்றொரு நாய் இருந்தது
கசாப்புக் கடைக்காரர் அதை அடிப்பார்
ஒரு ஆண்டு முன்னர் அது பட்டினியாற் செத்தது
என்றான் சதீஷ்

இப்போது எல்லாப் பிள்ளைகளும்
பிரபாகரனுக்காக வருந்துகின்றனர்.

மிரோஸ்லாவ் ஹொலுப்
மூன்றாங்கையாகத் தமிழில் தழுவல்: சுகன்
(கறுப்பு:2002)
Velupillai-Prabhakaran-LTTE-Tamil-Tigers


Napoleon by Miroslav Holub

Children, when was
Napoleon Bonaparte born,
asks the teacher.

Thousand years ago, the children say.
Hundred years ago, the children say.
Last year, the children say.
Nobody knows.

Children, what did
Napoleon Bonaparte do,
asks the teacher.

He won a battle, the children say.
He lost a battle, the children say.
Nobody knows.

At us the butcher had a dog
František says,
he was called Napoleon.

The butcher used to beat him, and the dog died
of hunger
last year.

And now all the children feel sorry
for Napoleon.
(1960)

புத்தக லிஸ்ட்

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) –  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40

    பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…