Tag Archives: 90s

அஞ்சனக்காரன்

விஜய்காந்த்தை முதன் முதலில் பார்த்தது விவித் பாரதியில். இளையராஜா என்று நினைத்த ‘உள்ளம் எல்லாம் தள்ளாடுதே’ பாடலில். இப்பொழுது பார்த்தால் சலீல் சௌத்ரி!

அசல் ரஜினி இருக்கும்போது இன்னொரு புரட்சியாளரும் ஏழைப் பங்காளரும் எனக்கெதற்கு என்று அவரின் ‘நூறாவது நாள்’ கூட தள்ளிப் போட்டு வந்த எனக்கு, தீபாவளி வந்தது. கூடவே, ‘வைதேகி காத்திருந்தாள்’ படமும் வந்தது.

ராத்திரி ஆனால் பாட்டு பாடுவதை நிறுத்திவிட்டு ரேவதியை கல்யாணம் செய்வானா!? அதை விட்டுவிட்டு வெறுமனே ‘ராசாத்தி… ஒன்ன காணாத நெஞ்சு’னு எவராவது புலம்புவானா? கதாபாத்திரம் நம்பமுடியவில்லை. எனினும், தமிழ் சினிமா. திகிலடையவோ அதிர்ச்சியடையவோ ஏதாவது செய்வார்கள். பத்து வருடத்திற்கு மேல் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெற்ற மனைவியை எரியூட்டி விட்டு வரும்போதே, ‘எந்த வீட்டில் எவ வயசுக்கு வந்திருக்கா?’ என்பதை நேரடியாகக் கேட்டும் பார்த்தும் வளர்ந்த எனக்கு இயக்குநர் ஆர். சுந்தர்ராஜனும் மோசமான படைப்பாளி பட்டியலில் இணைந்து கொண்டார்.

அதன் பின்பும் ‘ஒலியும் ஒளியும்’ பாடல்கள் மூலமே விஜய்காந்த் ஈர்த்தார்.

ராதா படங்களைத் தேடித் தேடி பார்த்தபோது, ‘அம்மன் கோவில் கிழக்காலே’ அகப்பட்டது.
’முத்துமணி மாலை… என்னத் தொட்டுத் தொட்டு தாலாட்ட..’விற்காக ”சின்ன கவுண்டர்” கண்ணில் விழுந்தது.
அன்றைய (இன்றைக்கும் தான்) தேவதையான பானுப்ரியாவிற்காக ‘சத்ரியன்’ + ‘பரதன்’. இதில், ‘புன்னகையில் மின்சாரம்’ பாடலில் சுவர்களே தெரியாதவாறும் வெறும் வண்ணம் மட்டும் பின்னணியில் வருமாறு உழைத்ததாக சாந்தோம் மாணவர், அந்த நாள் நடன இயக்குநர் பிரபு தேவா சொல்ல, பாட்டின் சிறப்பு சற்றே புலப்பட்டது.
’சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ அர்த்தம் புரிந்ததா என்று பொறிப்புரை கொடுத்த விடலை பள்ளித் தோழர்களுக்காக ”பூந்தோட்ட காவல்காரன்”.
’மயங்கினேன்… சொல்லத் தயங்கினேன்!’ குறித்து தமிழ்த்திரை சுப்புடு சுரேஷ் கண்ணன் முதல் மரவண்டு வரை பலரும் மரத்தடி முதல் முகநூல் வரை எழுதி விட்டார்கள்.

விஜய்காந்த் நடித்த முதல் படம் – ‘ஊமை விழிகள்’.
விஜய்காந்த் கொடுத்த முதல் ஏ+பி+சி செண்டர் ஹிட் படம் – ‘அம்மன் கோயில் கிழக்காலே’; அவரின் பிற படங்களில் இதே கதாபாத்திரத்தை ஷோபனா, ரேகா என வாந்தியெடுத்தார்,

பிற்காலத்தில், ‘வல்லரசு’, ‘சிம்மாசனம்’, ‘பேரரசு’, ‘தர்மபுரி’ போன்ற படங்கள் இவரை தெலுங்கு மண்ணில் கொடி கட்டி — தம்பி பாலகிருஷ்ணாவுக்கு டஃப் கொடுக்க வேண்டியவர் தமிழ் மண்ணில் பிறந்த நம்மை இன்னும் கொடுமை செய்கிறாரே என மிரள வைத்தது.

எனினும், இன்றும் என் மனதில் நிற்பது, “தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை! மன்னிப்பு!!”.

விஜயகாந்த் உருவாக்கிய நம்பிக்கைகள் எனக்கு நிஜம்.
’இளைய தளபதி” ஆக விஜய் போன்றோர் உருவாக துணை நின்றது நிஜம்.
சினிமா கல்லூரியில் படித்து விட்டு, வெளியே வந்த புதியவர்களுக்கு துணை நின்றது நிஜம்.
யேசுவோ, மாரியம்மனோ, ஓரங்க நாடகத்தை ஒளியோவியராக்கிய விசுவோ எவருக்கும் கரிசனம் பார்க்காமல் நடித்து குவித்தது நிஜம்.
நடிகர் சங்கமோ, கேப்டன் தொலைக்காட்சியோ, சொந்த கட்சியோ நடத்தி, ஜெயித்தது நிஜம். (இது டி ஆர். ராஜேந்தர், பாக்யராஜ் போன்ற ஆளுமைகள் வழுக்கிய இடம்).
அவருக்கு என் நெஞ்சில் ஒரு பெக் அடிக்க நினைக்கும் போது, ‘ஒரு மூணு முடிச்சால முட்டாளா போனேன்… கேளு! கேளு!! தம்பீ!!!’ நினைவிற்கு வருவதோ, ’சாமிகளே… சாமிகளே… சொந்தக் கதக் கேளுங்க!!’ என தன் பாட்டுக்கு பாடும்போது என்னுள் ஒளிந்திருக்கும் அந்தக் கருப்புத் தங்கம் வெளிவருவதும் நிஜம்.

அஞ்சலிகள்!

பாரதிராஜா படங்கள்

தலை பத்து குறிப்புகள்:

  1. அனேக படத்தின் துவக்கத்திலும் பேசுவார். “என் இனிய தமிழ் மக்களே…”
  2. தன்னுடைய உதவியாளர்களை உருவாக்கி, குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக ஆக்கியது முக்கிய சாதனை. பாசறை, பட்டறை என துணை இயக்குநர்கள் தங்களை பாரதிராஜா கேம்ப் என அழைத்துக் கொண்டனர்.
  3. நாயகன் சம்பந்தப்பட்ட படங்களே எங்கும் நிறைந்திருந்தபோது, பெண்களை முக்கியப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து வழங்கியவர்.
  4. வரிசை பெயர்களை தன் கதாநாயகிகளுக்குத் தொடர்ந்து வழங்கி வந்தவர்.
  5. இவரை காப்பியடிக்கும் எண்ணத்துடன் ஸ்டெல்லா மேரீஸ்  வாசலிலும் இராணி மேரி கல்லூரி வாயிலிலும் தங்களின் ஹீரோயினுக்காக தவமிருந்தவர்கள் எக்கச்சக்கம்.
  6. மணி கௌல், ரிஷிகேஷ் முகர்ஜி, அடூர் கோபாலகிருஷ்ணன், குரு தத், மிருனாள் சென், ஷியாம் பெனகல் போல் இல்லாவிட்டாலும் நம்ம ஊர் நாயகர்
  7. ஒளிப்பதிவாளர்கள் – நிவாஸ், பி கண்ணன்
  8. படத்தொகுப்பாளர்கள் – பாஸ்கரன், டி திருநாவுக்கரசு, சண்டி, வி இராஜகோபால், பி மோகன் ராஜ்
  9. எழுத்தாளர்கள் – மணிவண்ணன், ரங்கராஜன், சந்திரபோஸ், கலைமணி, பஞ்சு அருணாச்சலம், ஆர் செல்வராஜ், கே சோமசுந்தரேஷ்வர், கே கண்ணன், சுஜாதா ரங்கராஜன், எம் ரத்தினகுமார், சீமான்
  10. அரசியல், மகன், போன்ற திசைதிருப்பல்களும் இடையூறுகளும் இல்லாவிட்டாலும், அமிதாப் போல் நல்ல நடிகராகவும் கிடைத்திருப்பார்.
ஆண்டு படம் குறிப்புகள்
1977 16 வயதினிலே முதல் படம்
1978 கிழக்கே போகும் ரயில் கிராமம் – காதல் – ராதிகா
1978 சிகப்பு ரோஜாக்கள் குத்துங்க எஜமான் குத்துங்க! இந்த பொம்பளைங்களே இப்படிதான்!!

நல்லவேளையாக சந்திரசேகரின் மசாலா கம்யூனிசம் இல்லாத சிவப்பு

1979 புதிய வார்ப்புகள் பாக்யராஜ் – பாரதிராஜாவின் ஹீரோக்களில் தேறியவர்
1979 நிறம் மாறாத பூக்கள் மீண்டும் ஒரு கி.போ.ர. – பணம் பண்ணும் வழி
1980 நிழல்கள் வைரமுத்து உதயம்

வறுமையின் நிறம் சிகப்பை விட நேர்மையான, உன்னதமான படைப்பு

1980 கல்லுக்குள் ஈரம் இயக்குநர் இல்லை

என்றாலும், மீண்டும் ரசிக்கலாம்

1981 அலைகள் ஓய்வதில்லை ஸ்ஸ்ஸ்ஸ்… ப்பா…அஆ….
1981 டிக் டிக் டிக் மணிக்கு ‘திருடா… திருடா’ என்றால் பா.ரா.விற்கு இது
1982 காதல் ஓவியம் பாடலுக்கு வை.மு.; இசைக்கு இளையராஜா; இரண்டும் மட்டும் போதுமா?
1982 வாலிபமே வா வா போன படத்தில் வாங்கிய அடியில் இருந்து மீள – அந்தக் கால டபுள் எக்ஸ்
1983 மண் வாசனை ராதா போய் ரேவதி வந்தது… டும்! டும்!! டும்!!!
1984 புதுமைப் பெண் ஏவியெம் #MeToo
1985 ஒரு கைதியின் டைரி சீடன் குருவிற்கு ஆற்றும் கடமை
1985 முதல் மரியாதை இசை, கதை, ராதா, சத்யராஜ், சிவாஜி எல்லோரும் ஜொலிப்பார்கள்
1986 கடலோரக் கவிதைகள் கொடுமை
1987 வேதம் புதிது நீங்க இன்னும் கரையேறாம நிக்கறேளே!
1988 கொடி பறக்குது அமலா டைம்ஸ்
1990 என் உயிர் தோழன் சரிவின் உச்சிக்காலம்
1991 புது நெல்லு புது நாத்து கிராமத்திற்கு போனாலாவது இளமை திரும்புமா?
1992 நாடோடித் தென்றல் இளையராஜாவிற்குத் திரும்பினாலாவது வெற்றியை ருசிக்கலாமா?
1993 கேப்டன் மகள் எல்லோரும் குஷ்பு படம் எடுக்கிறார்கள்
1993 கிழக்குச் சீமையிலே மீட்சி
1994 கருத்தம்மா பாரதிராஜாவின் அம்மா பேரில் ஒரு படம்
1995 பசும்பொன் முடியல
1996 தமிழ்ச் செல்வன் இதற்கு குஷ்பூவே தேவலாம்.
1996 அந்திமந்தாரை அவார்ட் வேணும்
1999 தாஜ் மஹால் பையன் வேணும்
2001 கடல் பூக்கள் பையனும் வேணும்; அவார்டும் வேணும்.
2003 ஈர நிலம் மகனுக்காக
2004 கண்களால் கைது செய் ப்ரியா மணிக்காக
2008 பொம்மலாட்டம் அப்பாடா! இன்னும் டைரக்டரிடம் ஏதோ சரக்கு இருக்கு
2013 அன்னக்கொடி அரசியலில் ஒரு கால்; சினிமாவிலும் இன்னொரு கால்

 

 

இளையராஜா பாடி இசையமைத்ததில் பிடித்தவை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

1. உனக்கெனத்தானே இன்னேரமா
2. மெட்டி ஒலி காற்றோடு
3. தென்றல் வந்து தீண்டும் போது
4. எங்கே செல்லும் இந்த பாதை
5. தாழம்பூ தலையோடு (படம்:ஆல்பம்)

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

6. நிலா அது வானத்து மேல
7. காட்டுவழி போற புள்ள
8. ஜனனி, ஜனனி
9. சாமக்கேழி ஏ கூவுதம்மா
10. தரிசனம் கிடைக்காதா

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

11. உதய கீதம் பாடுவேன்
12. நான் தேடும் செவ்வந்தி பூ
13. உன் குத்தமா என் குத்தமா
14. நம்ம காட்டுல
15. பறவையே எங்கு இருக்கிறாய்.

16. ஒரு ஜீவன்
17. அறியாத வயசு
18. நிலா அது வானத்து மேலே (ரிப்பீட்டு)
19. நல்லதோர் வீணை
20. சந்தரரும் சூரியரும்

21. காதலென்பது பொதுவுடம
22. குண்டுமணி குலுங்குதடி
23. தோள்மேல தோள்மேல
24. பூ மாலையே
25. இந்தப் பூங்காற்று தாலாட்ட

26. ஒரு மஞ்சக் குருவி
27. அம்மன் கொயில் கிழக்காலே
28. என்ன பாட்டு பாட
29. கண்ணியிலே சிக்காதடி
30 கண்ணம்மா காதலெனும்

31. எங்கஊரூ பாட்டுகாரன்
32. காடெல்லாம் பிச்சிப்பூ
33. கண்மலர்களின் அழைப்பிதழ்
34. பொன்னோவியம் கண்டேனம்மா..
35. நில்..நில்..நில்.. பதில் சொல்..சொல்..சொல்.. எனை வாட்டாதே!

36. போடய்யா ஒரு கடிதாசு
37. வீட்டுக்கு வீடு வாசப்படி
38. ஆத்தாடி பாவாடை காத்தாட
39. நின்னை சரணடைந்தேன்
40. உன் குத்தமா என் குத்தமா

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

41. எடுத்து நான் விடவா (எஸ்.பி.பியுடன்)
42 தென்னமரத்துல தென்றலடிக்குது
43. தரிசனம் கிடைக்காதா (ரிப்பீட்டு)
44. ஆறு அது ஆழமில்ல
45. சந்தத்தில் பாடாத கவிதை

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

46. ஊரோரமா ஆத்துப்பக்கம்
47. காதல் ஓவியம்
48. அடி ஆத்தாடி
49. நேத்து ஒருத்தர ஒருத்தர பாத்தோம்
50. அந்த நிலாவத்தான்

ட்விட்டரில் உ.வெங்காயம் சொன்னதில் இருந்து:

51. செவ்வரளி தோட்டத்துல
52. புன்னகையில் மின்சாரம்
53. வெளக்கு வச்ச நேரத்துல
54. நான் தேடும் செவ்வந்திப்பூவிது (ரிப்பீட்டு)
55. தாஸ் தாஸ் சின்னப்ப

ட்விட்டரில் ரோசா சொன்னதில் இருந்து:

56. வாட வாட்டுது (சக்களத்தி)
57. சிறு பொன்மணி
58. துள்ளி எழுந்தது காற்று
59. சொர்கமே என்றாலும்
60. யாரோ யாரோ (உல்லாசம்)

61. ரசிகனே என் அருகில் வா
62. வீட்டுக்கு ஒரு மகனை
63. மலரே பேசு
64. திண்டாடுதே ரெண்டு கிளியே
65. வீணைக்கு வீணை

66. சோளம் விதைக்கையிலே
67. அம்மா எனும் வார்த்தைதான்
68. மருதாணி அரைச்சேனே
69. ஆலமரத்துக் குயிலே
70. தோட்டம் கொண்ட ராசாவே

71. தாலாட்டு மாறிப்போனதோ
72. ஒரு கணம் ஒரு யுகமாக
73. ஏப்ரல் மேயில
74. எம்பாட்டு எம்பாட்டு.(பூமணி)
75. தென்பாண்டி சீமையிலே

76. மைனா மைனா மாமன் புடிச்ச
77. இந்த மான் உன் சொந்த
78. சின்னமணிக்காக சேத்துவச்சேன் பாரு
79. அரிதாரத்தை பூசிக்
80.அப்பனென்றும் அம்மையென்றும் (குணா)

81. மச்சி மன்னாரு
82. திண்டாடுதே (ஆனந்தகும்மி)
83. கலயா நிஜமா (கூலி#1)
84. காதல் கசக்குதையா
85.உன்னோட உலகம் வேறு

86. என்ன பாடுவது .. பாட்டெல்லாம் எனக்கு படத்தெரியாது
87. காட்டு வழி கால் நடையா போற..(அது ஒரு கனா காலம்)
88. என்ன மறந்தாலும் (காதல் சாதி )
89. பாட்டாலே புத்தி சொன்னார்
90. தேவதை படத்தில் கவிதா கி.மூர்த்தியுடன் பாடியது

91. தென்ன மரத்துல தென்றல் அடிக்குது
92. காதல் கசக்குதய்யா
93. இந்திரன் வந்ததும்
94. கத கேளு (மை.ம.கா.ரா)

95.காட்டு வழி போற(ம.மம்ப)
96. கத போலத் தோணும், இது கதையும் இல்ல
97. சோழர் குல குந்தவை போல் – உடன்பிறப்பு
98. பாளையம் பண்ணப்புர சின்னத்தாயி பெத்த மகன் எரிய வராண்டா… ஓரம்போ, ஓரம்போ
99. கண்ணே என் கார்முகிலே

101. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா
102. ராஜா..ராஜாதி
103. எங்க ஊரு காதலை பத்தி – புதுப்பாட்டு
104. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
105. அய்யா வூடு தொறந்துதான் கிடக்கு

106. மரத்த வச்சவன்
107. ஊரு உறங்கும் நேரத்தில் (கண்ணா உனை தேடுகிறேன்)
108. அந்த காண்டாமணி
109. வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள்


கொசுறு:

icarusprakash

  1. தாலாட்டு மாறிப்போனதே – உன்னை நான் சந்தித்தேன்
  2. ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடித் தென்றல்
  3. உள்ளங்கள் இன்பத்தில் ஆடட்டும் – கவரிமான்
  4. சிறு பொன்மணி – கல்லுக்குள் ஈரம்
  5. கண்ணே என் கார்முகிலே -வா :: தங்கமான ராசா.
  6. மெட்டி மெட்டி இராகம் எங்கேயோ – மெட்டி
  7. துப்பாக்கி கையிலெடுத்து, ரெண்டு தோட்டாவு பையிலெடுத்து
  8. பொன்னோவியம், சங்கீதமாம் எங்கெங்கும் – கழுகு

kabishraj

  1. திண்டாடுதே ரெண்டு கிளியே – ஆனந்தக் கும்மி
  2. வீணைக்கு வீணை – வீரத்தாலாட்டு
  3. அம்மா என்னும் வார்த்தைதான் – தாலாட்டு கேட்குதம்மா
  4. மருதாணி அரச்சேனே – ராஜா கைய வச்சா
  5. வாடி என் கப்பக்கிழங்கே

Aravindank

  1. பொன்ன போல ஆத்தா என்னை பெத்து பொட்டா.. :: தேடி வந்த ராசா

nchokkan

  1. கத போலத் தோணும், இது கதையும் இல்ல … (வீரத் தாலாட்டு)
  2. ‘இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான்’