Tag Archives: ஹீரோயின்

என்ன கண்ணுடா இது

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
  • சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
  • பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue

இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

srividya-early-years

விக்கிப்பிடியாவின் பட்டியலை பார்ப்போம்:

  1. அறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)
  2. எழுபதுகள் – சுஜாதா, லஷ்மி
  3. எண்பதுகள்ஷோபா, சரிதா
  4. 90கள்அர்ச்சனா, ரேவதி

நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.

ஸ்ரீவித்யாவும் அப்படிப்பட்ட ஒருவரோ?

இதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ!

Sri_Vidya_Actress_Tamil_Malayalam

 

Rajinikanth Interview on ‘Endhiran’ The Robot on Sun TV

முந்தைய ரஜினி பதிவு: Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

On Director Shankar:

http://youtu.be/bO-d9pvV_ng

On Actress and Heroine Aishwarya Rai:

http://youtu.be/ChXoWnEf320

On his Spiritual Journeys to Kedarnath and Badrinath:

http://youtu.be/vN0PZf0lOHE

Why Rajni is so successful? What makes him tick?

http://youtu.be/5B0E5R6fLp8

Rajnikanth’s dance movements and Next Projects:

http://youtu.be/Fm7eEHF7FUw

ரஜினிக்கொரு ஹீரோயின் வேணுமடா (பாய்ஸ் பாட்டு மெட்டில் படிக்கவும்)

meera-nandhakumar5.jpg

புகைப்படங்கள்: தட்ஸ்தமிழ்

Muthu – Movie Screenplay bits & pieces

மீனா: வேதனை. அவமானம், வெட்கம்!

பாண்டிய மன்னனாக வடிவேலு: ஆமா… இது என் டயலாக் இல்ல?

மன்னனுடன் கூட வந்திருக்கும் மந்திரிகள்: டயலாக்க ரிப்பீட் பண்ணாத்தான் ஜெயிக்க முடியும்.

மீனா: அழகு ராணி; அதிரூப சுந்தரி; ஆடவர் மயங்கும் அற்புத மேனி கொண்ட இந்த அரசிளங்குமரிக்கு, சுடுகாட்டில் எரியும் கொள்ளியில் இருந்து சூடு தாங்க முடியாமல் எழுந்தோடி வந்த பிணம் போல் இருக்கும் இவனா எனக்கு மணமகன்?

பார்வையாளன் ரஜினி: ஆ…ஆச்சு (தும்மல் போடுகிறார்

மீனா கடுப்பாகிறார்

மீனா:  என் கடைக்கண் பார்வை பட்டால் படைபலம் கொண்ட மன்னர் கூட்டம் அனைத்தும் நாடு மறந்து நகரம் மறந்து என் பின்னால் வர தயாராக இருக்கும்போது… என்னை நாடி வந்த பேடியே!

ரஜினி மீன்டும் பெருந்தும்மல்.

மீனா:  என்னை நாடி வந்த பேடியே! இந்த பூலோகத்தில் மட்டுமல்ல. ஏழேழு லோகம் சுற்றிவந்தாலும் உன்னை ஒரு பைத்தியக்காரி கூட மணந்து கொள்ள மாட்டாள். ஹ்ம்ம்ம்… அமாவாசைக்கு பௌர்ணமி மேல் ஆசையா?

Rajni continues his lengthy preludes to and the sneezing process itself.

மீனா:  யோவ்! என்னா? விளயாட்டா இருக்கா? வந்ததில் இருந்து பார்க்கிறேன்… சும்மா தும்மிக்கினே இருக்கே!

ரஜினி அப்பாவியாய் சுற்றுமுற்றும் பார்க்கிறார்.

மீனா:  யோவ்… உன்னத்தான் சொல்றேன்.

காந்திமதி: ரெங்கநாயகி… வேண்டாம்! பேசாமல் இரு.

மீனா: நீங்க சும்மா இருங்க அக்கா! அப்பத்திலிருந்து நானும் பார்த்துட்டே இருக்கேன். தும்மிக்கிட்டே இருக்கியே!? என்ன நெனச்சுட்டு இருக்கே உன் மனசில்?

ரஜினி: ஏம்ப்பா… நாட்டில மனுசன் தும்மினாக் கூடவா தப்பு?

மக்கள்: கோரஸாக அதானே?!

மீனா: தும்மினா ஒண்ணும் தப்பில்லைய்யா…ஆனா! இங்க ஒருத்தி அழகா நடிச்சுட்டு இருக்கும்போது டிஸ்டர்ப் பண்ற மாதிரி தும்முறியே… அதான் தப்பு!

ரஜினி: ஏம்மா… இந்தத் தும்மலு, இருமலு, விக்கலு, கொட்டாவி, நல்லது, கெட்டது, பசி, தூக்கம், பொறப்பு, இறப்பு, பணம், பட்டம், பதவி… இதெல்லாம் கேட்டு வராது. தானா வரும். வந்தாலும் ஏன்னு கேக்க முடியாது. போனாலும் தடுக்க முடியாது.

எச்ச எச்ச எச்ச எச்சா… கச்சச்ச கச்சகச்சா

(ரஜினியின் தோழர்) ரமேஷ்கன்னா: இது வசனம்… முத்து… தூள் கிளப்புமா! ஆ… அக்காங்… நீயும் பேசறியே!?

மீனா:  யோவ்… வசனம் எல்லாம் கிழேயிருந்து என்ன வேணா பேசலாம்யா. இத்தன பேருக்கு முன்னால மேசையேறி பேசிப்பாரு. ஒதறும்!

ர.கன்னா: யாருக்கு உதறும்? என்னா நெனச்சுக்கிட்ட எங்க முத்துவப் பத்தி!? அவர் வண்டியோட்ற ஸ்டைல்ல பார்த்தே இந்த ஊர் மயங்கிக் கிடக்குது.

மீனா: வண்டி ஓட்டிடலாம்யா.. மேடையேற முடியுமா?

ர.கன்னா:  யாரப் பாத்து என்னா கேள்வி கேக்கறே? இது என்னா மேடை? அவர் எந்த மேடையா இருந்தாலும் ஏறுவாரு! தைரியமாப் பேசுவாரு! ஆடுவாரு! பாடுவாரு… பார்க்கிறீயா!?

ரஜினி:  என்ன கண்ணா… இப்படி மாட்டி விடுறீயே!

ர.கன்னா:  சும்மா இரு முத்து! உன் வெயிட்டு உனக்கேத் தெரியாது!

மீனா:  யோவ்… தைரியமான ஆம்பிளையா இருந்தா.. மெடையில வந்து ஆடிப்பாடி நடிக்க சொல்லுய்யா பார்ப்பம்…

கூட்டத்திலொருவர்: என்னா முத்தூ… அந்தப் பொண்ணு அது பாட்டுக்கு பேசிகிட்டிருக்கு. நீ பேசாம ஒக்காந்திட்டிருக்கியே.. மேடையில போய் கொஞ்சம் வெளையாண்டுட்டு வாம்மா…

ரஜினி:   ஐய்யய்யோ… அண்ணே… நமக்கெதுக்கண்ணே இந்த வேண்டாத விளையாட்டெல்லாம்?

கூட்டத்தில் இன்னொருவர்: உன் வேலைய நீ காட்ட வேண்டாமா? போ வாத்யாரே

ரஜினி:  அட சும்மா இருப்பா… ஏதோ சின்னப் பொண்ணு… தெரியாமப் பேசிடுச்சு…

ர.கன்னா:  ஐய்யய்யே… இப்படி சொன்னா கேட்க மாட்டாருப்பா… நாமதான் அவரை மேடையேத்தி வுடணும்

ரஜினி மிரள மிரள மக்கள் குண்டு கட்டாக தூக்குகிறார்கள்.

மேடையில் ஏற்றப்பட்ட ரஜினி: ஏம்ப்பா சுடுது!!

ரஜினி: உங்க பாட்டுக்கு ஏத்திவிட்டீங்க… இவங்களையெல்லாம் எப்படிம்மா மேய்க்கிறது?

மக்கள்: சும்மா பூந்து விளையாடும்மா… இத்தினி பேரு உன் பின்னாடி இருக்கம்ல…

ரஜினி:  எசமான்…??

சரத்பாபு மையமாக உம் கொட்டி தலையாட்டுகிறார்.

ஒருவன் ஒருவன் முதலாளி பேக்கிரவுண்ட் ம்யூசிக்குடன் துண்டு ஸ்டைல் விசிறுகிறார் சூப்பர் ஸ்டார்.

ரஜினி: பெண் பார்க்க வந்த மன்னவனின் மனதைப் புண்படுத்திய மருத நாட்டின் மகளே! ஆண் அழகை முகத்தில் பார்க்காதே… அகத்தில் பார்! மற்றவர்களின் மனதைப் புண்படுத்துவதற்கு பதிலாக, நீ கூறிய அதே… அதே பதிலை, கொஞ்சம் புன்னகையுடன் கூறிப்பார்!

அப்பொழுது நீ அறிவாய்… அதில் இருக்கும் இனிமை! அவைதான் நீ பொறந்த நாட்டிற்கும் புகுந்த வீட்டுக்கும் பெருமை!! பார்த்தாயா… தமிழ் மொழியின் அருமை!!!

மீனா:  எல்லாரும் கை தட்டினா… நீ என்ன பெரிய ஆளா?

ரஜினி:  அவங்க கை தட்டிதாம்மா எல்லாரும் பெரிய ஆளாயிருக்காங்க…

மீனா:  டிராமா பார்க்க வந்தாயா? இல்ல… வம்பிழுக்க வந்தாயா?

ரஜினி:  வம்புக்கு நான் இழுக்கல

மீனா:  என்ன… திமிரா?

ரஜினி:  அது எனக்கில்ல

மீனா:  பின்ன எனக்கா?

ரஜினி:  அப்படீன்னு நான் சொல்லல

மீனா:  யோவ்… நீ உன் மனசுல என்னதான் நெனச்சுட்டிருக்கே?

பொதுவாக என் மனசுத் தங்கம்… ஒலிக்கிறது.

கண்டு ரசிக்க:

மீனா:ரஜினி:

‘தசாவதாரம்’ அசின் புத்தம்புதிய உலக சாதனை!!!

தசாவதாரம் திரைப்படத்தில் தனக்குத் தரப்பட்ட பத்து எழுத்துக்களை ஒரு நாளுக்குள் டப்பிங் முடித்துக் கொடுத்து அசின் உலக சாதனை புரிந்துள்ளார்.

முழு செய்திக்கு: Asin’s new record! – Sify.com

அசினைக் கூப்பிட்டு ‘எப்படி தஞ்சாவூர் பிராமண பாஷை பேசினீர்கள்?‘ என்று விசாரித்தவுடன்,

‘பதினேழாயிரம் அடி முழுக்க பத்து கமல்ஹாசன்களே திரையெங்கும் வியாபித்திருக்க, விஷ்ணுவின் இதயத்தில் கிடைத்த இடமாக தன்னை இவ்வளவு எழுத்து உதிர்க்கவைத்ததே போன ஜென்மத்து பாக்கியாம்’ என்று வியாக்கியானித்தார்