-
-
அண்மைய பதிவுகள்
- ஆரவிந்தன்
- StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்
- தொல்சொல் வேர் தேடும் அகவுநர் திரள்
- Oru Oorla Oru Rajakumari
- பக்கம் திரும்பு, தீப்பொறி உணர்
- “எப்போதும் நிரபராதியை குற்றஞ்சாட்டு”
- ஞானபீட இதிகாசம்: ஆழ்ந்த ஞானங்கள்
- மணல், மழை, பச்சை
- அரசியல்-தத்துவ விளக்கம்
- அளவுகோலின் அபத்தம்
- வாசிப்பின் இன்பமும் மகிழ்கூடுதலும்
- விமர்சன ஆய்வு: ஜெயமோகனின் “இன்வெர்னெஸ்”
- ஸ்டோரிஜட்ஜ்: சென்ற வார இலக்கியம் #5
- நாட்டு நடப்பு
- கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’
காப்பகம்
- ஏப்ரல் 2026
- மார்ச் 2026
- பிப்ரவரி 2026
- நவம்பர் 2025
- ஒக்ரோபர் 2025
- ஜூன் 2025
- மே 2025
- மார்ச் 2025
- திசெம்பர் 2024
- நவம்பர் 2024
- ஒக்ரோபர் 2024
- செப்ரெம்பர் 2024
- ஓகஸ்ட் 2024
- ஜூலை 2024
- ஜூன் 2024
- மே 2024
- மார்ச் 2024
- பிப்ரவரி 2024
- ஜனவரி 2024
- திசெம்பர் 2023
- நவம்பர் 2023
- ஒக்ரோபர் 2023
- செப்ரெம்பர் 2023
- ஓகஸ்ட் 2023
- ஜூலை 2023
- ஜூன் 2023
- மே 2023
- ஏப்ரல் 2023
- மார்ச் 2023
- பிப்ரவரி 2023
- ஜனவரி 2023
- திசெம்பர் 2022
- நவம்பர் 2022
- செப்ரெம்பர் 2022
- ஜூலை 2022
- ஜூன் 2022
- மே 2022
- ஏப்ரல் 2022
- மார்ச் 2022
- பிப்ரவரி 2022
- ஜனவரி 2022
- திசெம்பர் 2021
- ஓகஸ்ட் 2021
- மே 2021
- ஏப்ரல் 2021
- மார்ச் 2021
- ஜனவரி 2021
- திசெம்பர் 2020
- நவம்பர் 2020
- ஓகஸ்ட் 2020
- ஜூலை 2020
- ஜூன் 2020
- ஏப்ரல் 2020
- மார்ச் 2020
- நவம்பர் 2019
- ஒக்ரோபர் 2019
- ஓகஸ்ட் 2019
- ஜூலை 2019
- ஏப்ரல் 2019
- மார்ச் 2019
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- ஒக்ரோபர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஜூன் 2018
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஏப்ரல் 2017
- மார்ச் 2017
- பிப்ரவரி 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- நவம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூன் 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
- ஓகஸ்ட் 2007
- ஜூலை 2007
- ஜூன் 2007
- மே 2007
- ஏப்ரல் 2007
- மார்ச் 2007
- பிப்ரவரி 2007
- ஜனவரி 2007
- திசெம்பர் 2006
- நவம்பர் 2006
- ஒக்ரோபர் 2006
- செப்ரெம்பர் 2006
- ஓகஸ்ட் 2006
- ஜூலை 2006
- ஜூன் 2006
- மே 2006
- ஏப்ரல் 2006
- மார்ச் 2006
- பிப்ரவரி 2006
- ஜனவரி 2006
- திசெம்பர் 2005
- நவம்பர் 2005
- ஒக்ரோபர் 2005
- செப்ரெம்பர் 2005
- ஓகஸ்ட் 2005
- ஜூலை 2005
- ஜூன் 2005
- மே 2005
- ஏப்ரல் 2005
- மார்ச் 2005
- பிப்ரவரி 2005
- ஜனவரி 2005
- திசெம்பர் 2004
- நவம்பர் 2004
- ஒக்ரோபர் 2004
- செப்ரெம்பர் 2004
- ஓகஸ்ட் 2004
- ஜூலை 2004
- ஜூன் 2004
- மே 2004
- ஏப்ரல் 2004
- மார்ச் 2004
- பிப்ரவரி 2004
- ஜனவரி 2004
- திசெம்பர் 2003
பக்கங்கள்
Blogroll
- +: etcetera :+
- =விடை தேடும் வினா?
- அகத்தீடு
- அட்டவணை
- அயில்வார்நஞ்சை
- அரசியல்வாதி
- அரவாணி
- அரிச்சந்திரன்
- அலைபாயுதே
- அவியல்
- ஆகாசவாணி
- ஆங்கிலேயன்
- ஆஞ்ஞானம்
- இங்கிலாந்து
- இதழ்
- இத்யாதி
- இந்தியன்
- இன்று
- இலக்கியன்
- இலம்பகம்
- ஈழத்தமிழன்
- ஈழம்
- உக்கடத்துப் பப்படம்
- உங்க ஏரியா
- உபன்யாசி
- உப்புமா
- உருப்படாதவன்
- உருப்படி
- உலா வரும் ஒளிக்கதிர்
- உலோட்டி
- உஷ்ணவாயு
- ஊர்சுற்றி
- எங்க ஏரியா
- எம்டன்
- எழுத்து
- ஒன்றுமில்லை
- கடலை
- கடி
- கடிகையார்
- கனடா
- கனிமொழி
- கப்பி
- கரிப்புறத்திணை
- கருத்து
- கறுப்பி
- கலகக்காரன்
- கலம்பகம்
- கலாம்
- கவிஞர்
- காக்டெயில்
- காஞ்சி
- கானா
- காபி பேஸ்ட்
- கார்காரர்
- கிரி அஸெம்பிளி
- குசும்பன்
- குடிகாரன் பேச்சு
- குப்பை
- கென்
- கேமிரா கண்ணாயிரம்
- கைக்குள் பிரபஞ்சம்
- கைமண்
- கொலம்போ
- கோமாளி
- கோலு
- சந்தக்கட செல்லாயி
- சன்னாசி
- சரக்கு
- சரம்
- சரஸ்வதி
- சர்வே-சன்
- சற்குரு
- சாட்டான்
- சாம்பார் மாஃபியா
- சிந்தனாவாதி
- சினிமாகாரன்
- சின்ன கிறுக்கல்
- சிவியார்
- சுட்ட தமிழ்
- சுட்டன்
- சுண்டல்
- சுருணை
- சுவரோவியன்
- சூன்யம்
- சென்னைவாசி
- சேவகி
- சோடா பாட்டில்
- ஜெத்மலானி
- ஜெயமோகன்
- டாக்டர்
- டாக்டர்
- டாலர்வாசி
- டிசே தமிழன்
- டின்னர்
- டுபுக்கு
- டூப்புடு
- டைரி
- தங்கபஸ்பம்
- தபால்
- தமிழ் செய்திகள்
- தம்பி
- தல
- திரித்தல்
- துட்டு
- துள்ளி
- தேனிக்காரன்
- தொட்டி
- தோட்டக்காரன்
- நகரம்
- நல்ல பையன்
- நா காக்க
- நாதன்
- நானே நானா
- நார்வே
- நிஜம்
- நிதர்சனம்
- நியூஸிலாந்து
- நிலம்
- நீதிபதி
- நீதிலு
- நேரடி
- நேஹா
- பக்கிரி
- பட்டணம் பொடி
- பண்டிட்ஜி
- பண்ணையார்
- பயணி
- பல-ராமன்
- பாசமுள்ள பாண்டியன்
- பாட்டாளி

- பிலிம்
- புரியிலி
- பெரிய கிறுக்கல்
- பேப்பர் புலி
- பொம்மு
- பொயட்
- போக்கன்
- ப்ப்ப்பூ
- மங்கை
- மடி
- மண்
- மதராசி
- மதுர
- மனோகரம்
- மாத்து
- மீறான்
- முயற்சி
- முயல்
- முரசு (கேப்டன் அல்ல)
- முரு(க்)கு
- மூக்கன்
- மேலெழுத்து
- மொழி
- ரிசர்ச்சு
- ரீல்
- வம்பு
- வலைச்சரம்
- வள்ளல்
- வவ்வால்
- வாதம்
- வால்
- விக்கன்
- விமர்சகன்
- விளையாட்டு
- வெங்காயம்
- வெட்டி
- BBthots
- Blogbharti
- Cinema
- E=mc^2
- Hawkeye
- India Uncut
- Lazygeek
- Sharanya Manivannan
- SMS
- Superstarksa
- Uberdesi
- Unplugged
தெரியாத செய்தியோடை- ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Tag Archives: அமெரிக்கா
குடிபோதையும் கார் ஓட்டுனரும்
பத்ரியின் எண்ணங்கள்: முஸ்தஃபா தாஹிர் லகடா பதிவைப் பின் தொடர்ந்து:
டில்லியில் இந்த மாதிரி சம்பவங்கள் இன்னும் அதிகம். 90களில் நாளொன்றுக்கு குறைந்தது இரண்டாவது இந்தியன் எக்ஸ்பிரசில் இடம்பெறும்.
அமெரிக்காவில் இந்த மாதிரி விபத்துகளைத் தவிர்க்க, ஸ்டியரிங் வீலைத் தொடுவதற்கு முன் வாயை ஊதி ஆல்கஹால் இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்கு சட்டம் இயற்ற முயல்கிறார்கள்.
அந்த மாதிரி சாதனம் வைப்பதை ப்ரைவசி குறுக்கீடு என்று ஒரு சாரார் விரும்பவில்லை (மதுபான/சாராயக்க்கடை லாபியிஸ்ட்)
அப்படி சாதனம் இருந்தாலும் 21+க்குத்தான் மது என்பதையே ஒழுங்காக நடைமுறை செய்யாத சமூகத்தில் இதற்கும் மாற்றுவழி வந்துவிடும் என்று இன்னொரு சாரார் கிடுக்கிப்பிடி சட்டத்தைக் கோருகிறன்றனர்.
குடித்துவிட்டு வண்டியோட்டினால், முதல் முறை செய்த தவற்றுக்கு உரிமம் ரத்து. இரண்டாம் முறை கடுங்காவல் சிறை என்று வைக்கலாம்.
அமெரிக்காவில் விமானத்தை விட்டு தள்ளப்பட்ட முஸ்லீம் குடும்பம்
செய்தி: 'Safest' seat remarks get Muslim family kicked off plane – CNN.com
- அவர்கள் குடும்பம் கொஞ்சம் பெரியது. எட்டு உறவினர்களும் நண்பரொருவரும் சேர்ந்து சென்றார்கள்.
- எல்லோரும் சேர்ந்து உட்கார விரும்பினார்கள். விமானத்தின் வால் பாகத்தில் அமர விரும்பவில்லை.
- முஸ்லீமாக இருப்பதினால் பயணம் தடைப்பட்டது கூட பிரச்சினையில்லை என்கிறார் இர்ஃபான். ஆனால், தடையாகிய பயணத்தை, வேறு வழியில் பிறிதொரு நேரத்தில் தொடர்வதிலும் ஏர் – ட்ரான் இவர்களைப் படுத்தியெடுத்து வருகிறது.
- இவர்களை இறக்கியனுப்பிய பிறகு, சக விமானப்பயணிகள் அனைவரும் மறுபடியும் பாதுகாப்பு சோதனைக்கு உள்ளான கொடுமை தனிக்கதை.
மின் ரத்து: பனிப்புயல் கடந்த பாஸ்டன்
காலை ஆறு மணி. எழுந்திருக்க வேண்டும். குளித்து, காபி போட்டு, பாஸ்டன் க்ளோப் புரட்டலாம்.
அலறிய கடிகாரத்தை பத்து நிமிடம் சயனித்திருக்க அனுமதி கோரி விட்டு, புரண்டமாதிரி கனவுகளைத் தொடரும் அதிகாலை. பத்து நிமிடம் கழிந்த பிறகும் அலாரம் அடிக்கவில்லை.
தூக்கக் கலக்கத்தில் அணைத்திருப்பேனோ? எழுந்து பார்த்தால் கடிகாரத்தில் பளிச்சிடும் எல்.இ.டிக்கள் கருப்பாக இருந்தது. நேற்றைய Patron பலமாக அருந்திய கலக்கம் என்று கண்ணை நம்பாமல், பாத்ரூம் நடக்கும் பாதம், விளக்கை அனிச்சையாக தட்டுகிறது.
எரியவில்லை.
மீண்டும் அணைத்து, போட்டு, அணைத்து மரோ சரித்ரா பார்க்கிறேன். விளக்கு எரியமாட்டேன் என்கிறது.
ஊழல் செய்து மாட்டிக் கொண்ட இல்லினாய்ஸ் கவர்னர் போல் மாஸசூஸட்சிலும் ஏதாவது மந்திரி மாட்டிக் கொண்டு, ஆற்காட்டார் அமைச்சர் ஆகி விட்டாரா?
பாஸ்டனிலும் கரண்ட் கட்.
நம்பமுடியவில்லை. எனினும், பத்து வருடத்திற்கு ஒரு முறை நடக்கிறது. பத்து நிமிடத்தில் வந்துவிடும் என்று நம்பிக்கையுடன் அரையிருட்டில் குறி பார்த்து மூச்சா போய், பிரஷ்ஷில் பேஸ்டை திணித்து, வென்னீரை ஆதுரமாய் சிக்கனமாய் உபயோகித்து, மனைவியை எழுப்பி, விஷயம் சொல்கிறேன்.
‘மின்சாரம் திரும்ப வந்த பிறகு எழுப்பு!’ என்று நம்பிக்கையுடன் சொல்லிவிட்டு, இழுத்துப் போர்த்திக் கொண்டுவிட்டாள்.
நம்பிக்கையை ஊட்டி ஊட்டி, எங்களை சோம்பேறியாக்கி, அமெரிக்காவையே அலட்சியப்பட வைத்திருக்கிறார்கள். எல்லா நம்பிக்கையும் இன்றைய நாளில் தவிடு பொடி ஆகியுள்ளது.
நான்காவது நாளாக இன்றும் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுபவர்களின் நிலை புலம்பி மாளாது.
காபி போடும் எந்திரம் மின்சாரத்திலானது. பாலை சுட வைக்கலாம் என்றால் அடுப்பும் மின்சாரம். காபிதான் இல்லை, வெளியே இருக்கும் அஞ்சு டிகிரி ஃபாரென்ஹெய்ட்டில் இருந்து தப்பிக்க வீட்டுக்குள் சூட்டை ஏற்றும் உபகரணம்; கார் வைத்திருக்கும் கேரேஜ்; பால் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் ஃப்ரிட்ஜ்; சமையல் செய்துபோடும் அடுப்பு; கிணற்றில் இருந்து தண்ணீர் கொடுக்கும் குழாய்…
எல்லாம் மின்சாரம் என்னும் மிடாஸ்.
மிடாஸ் தொட்டது எல்லாம் தங்கம். மகளைத் தொட்டான். அவளும் உலோகமாகி உயிர் விட்டாள். பேராசைக் குழப்பம்.
அமெரிக்காவில் தொட்டதிற்கு எல்லாம் கரண்ட். குளிர்ப்பிரதேசத்தில் இருந்து தப்பித்து அடைக்காக்கும் வீடு கதகதப்பாக இருக்க கரண்ட். கேஸ் அடுப்பிற்கு பதில் கரண்ட் அடுப்பு. காரை garageக்குள் வைத்து இயக்கும் கதவு கரண்ட். எப்படி வெளியே போவோம்?
துப்புகளையும் ஆலோசனைகளையும் தர இருக்கவே இருக்கிறதே இணையமும் கூகிளும்? அதற்கும் மின்சாரம் தேவைப்படும் கணினி.
தொலைபேசியில் கூகிள் வரவேண்டும் என்று கடவுளைப் பிரார்த்திக்கிறேன். மின்சாரம் இல்லாவிட்டால்தான் நினைவுக்கு வருகிறார்.
‘செல்பேசி பேட்டரி உயிரை விடுவேன்; என்னை சார்ஜ் செய்’ என மின்சாரத்தை வேண்டி நின்றது.
ஒரு மணி நேரம் சென்றது. அண்டை வீட்டுக்காரர்கள். நண்பர்கள், முன்னாள் உறவினர்கள், என்றோ கூட வசித்த அபார்ட்மென்ட் சகாக்கள்; உற்றவர்களின் நினைப்பும் கவனிப்பும் அற்ற குளத்துப் பறவையாக தோன்றினார்கள். செல்பேசியில் அழைத்தார்கள். வீட்டிற்கும் அழைத்தார்கள்.
‘மனிதம் சாகவில்லை’ என்று கவிதை வந்தது. ட்விட்டரில் தட்டினால் பேட்டரி செத்துவிடும். வாய்தா வாங்கிக் கொண்டேன்.
இரண்டாவது மணி நேரம் சென்றாகி விட்டது. ‘ஜெனரேட்டர் வாங்கலாமா?’
மூன்றாவது மணி நேரம். காரில் இருக்கும் பவர் உற்சாகப்படுத்தியது. ‘கேம்பிங் சென்றதிலையா? அப்படி நினைப்போம்.’ குடும்பத்துடன் இன்ப சுற்றுலா பயணம் ஆரம்பம்.
எங்கு பார்த்தாலும் மக்களின் மரண…மன்னிக்க… மின்ரத்து பயம்.
பெட்ரோல் நிலையத்தில் பெரிய காத்திருப்புப் பட்டியல்.
சுற்றுப்பட்டி பதினெட்டு கிராமங்களிலும் ஒரு ஜெனரேட்டர் விடாமல் எல்லாமும் எல்லாவிடத்திலும் தீர்ந்து போய் இருந்தது.
வெளியே சாலையெங்கிலும் மரங்கள். ஸ்டெப் – அப் ட்ரான்ஸ்ஃபார்மரா இது? அல்லது ஸ்டெப் டவுனா? கெபேசிட்டர்? ரெஸிஸ்ட்டர்?? பாகம் பாகமாக பாதையெங்கும் மின் கம்பிகள்.
மகள் கேள்வி கேட்டாள். ‘இந்த வைர் எல்லாம் ஏன் பூமிக்குள் புதைந்து வைத்திருக்கக் கூடாது?’
கவர்னர் தெவால் பேட்ரிக் ‘அவசர நிலை‘ அறிவித்து இருந்தார். இந்த மாதிரி எமர்ஜென்சி கேள்விக்கு பதில் சொல்ல மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
மரங்கள் அனைத்தும் பனியைத் தாங்கி பார்த்திருக்கிறேன்.
கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் குண்டான பெண்ணும், த்ரிஷா போல் மாடர்ன் ட்ரெஸில் கொத்தவரங்காய் வத்தலாக இருக்கும் பெண்ணும் சேலை கட்டினால் அழகாய் இருப்பது போல் புத்தம்புதிய வெண்பஞ்சுப் பொதிகள் விழுந்த மரங்கள் அழகியாய் இருக்கும். இலையுதிர்த்த வகைகளும் சரி; இலையுதிராத கிறிஸ்துமஸ் மரங்களும் சரி — பெண்ணுக்கு புடைவை என பாந்தமாக மகிழ்வுடன் அனைவருக்கும் ரம்மியமாய் காட்சி தரும்.
இன்றோ சரவணா ஸ்டோர்ஸ் ஸ்னேஹாவாக ‘ஜொலிக்குதே! ஜொலி, ஜொலிக்குதே!!’ என்று ஒரு இன்ச் நீளத்திற்கு ஐஸ் குத்தீட்டிகள் தாங்கி, ராஜேஷ் குமார் கதை வில்லனாக சிரித்தது. கண்ணெதிரே மின் கம்பிகளை அறுத்தெறிந்தது. பி எஸ் வீரப்பா சிரிப்பாக தரையில் விழும் போது வெள்ளிக்கீற்றுகளை சிந்தியது.
ரத்தம் ஒரே நிறமல்ல. வெள்ளி நிறத்திலும் இருக்கும்.
கத்திகள் உலோகத்தினால் அல்ல. பனியாலும் ஆகி இருக்கும்.
காற்று, நீர், பூமி, வான், நெருப்பு என்று பஞ்ச பூதங்கள் பேரழிவு மட்டும் அல்ல. மரங்களும் பேரழிவு உண்டாக்கும்.
தீவிரவாதிகள் மட்டுமல்ல. இயற்கைக்கும் இரக்கமில்லத வேர் ஒழிப்புகள் சாத்தியம்.
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்.
‘வார் ஆஃப் தி வோர்ல்ட்ஸ்’ மாதிரி மொக்கை மசாலாப்படங்களில் கண்டவற்றை அமெரிக்கர்கள் கண்முன்னே நிறைவேற்றிக் கொண்டிருந்தார்கள்.
மெழுகுவர்த்தி விளக்கு, டார்ச் லைட்கள்… என்னென்ன கிடைத்ததோ அள்ளிக் கொண்டிருந்தார்கள்.
இரண்டு வீடு தள்ளி இடி, மழை, புயலினால் மரம் விழுந்து வீட்டின் கூரை இடிந்தது. காயசண்டிகை போல் வீடு. ஆவென்று வாய்திறந்து பனியெல்லாவற்றையும் விழுங்கும் ஆர்வத்துடன் வாய் பிளந்து காண்பித்தது. தன்னிடத்தில் இருப்பவர்களைக் காட்டிக் கொடுத்து, குளிரை நிரப்பியது.
ரத்தபீஜனாய் பாஸ்டனெங்கும் காயசண்டிகை வீடுகள். வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று வளர்த்தவர்கள் நெஞ்சில் பாய்ந்து பிளந்து திறமூலமாக்கி இருந்தது.
பத்து வீடு தள்ளி இருந்தவர், நெருப்பு கொளுத்துவதற்காக fireplaceல் மரங்களை எரிக்க, தெரியாத்தனமாக ஆர்வக்கோளாறில் கொஞ்சம் அதிகம் சூடாக்க, வீடே திப்பிடித்து சாம்பலானது. உறைவிடத்தில் இருந்த ஒவ்வொரு சாமானும் பஸ்மம். என்னுடைய புத்தக சேமிப்பு மாதிரி எத்தனை விஷயங்கள் எரிந்திருக்கும்! குழந்தைகளின் மனமுவந்த பொம்மைகள்!! ஒரேயொரு தடவை மட்டுமேக் கட்டப்பட்ட மனைவியின் கூறைப்புடைவை!!!
என்னென்னவோ… காலையில் முழுசாய் பார்த்த அகம்; மாலையில் கன்னங்கரேலென்று பாக்கி சொச்சம்.
அடுத்த நாள் நியுயார்க் டைம்ஸை முந்தின நாள் செய்தி படிப்பதற்காக வாங்கினேன்.
‘பான்சி திட்ட’த்தினால் பல் கோடீஸ்வரர்கள் சில லட்சங்களை இழந்ததை முகப்பு செய்தியாக்கி இருந்தார்கள். இத்தனைக்கும் இது பாஸ்டனில் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்காக சிறப்பாக வெளியான லோக்கல் ‘நியு யார்க் டைம்ஸ்’ பதிப்பு.
எந்த அமெரிக்கனும் சாகவில்லை. எனவே செய்தியில்லையாம். எட்டாம் பத்தி மூலை கூட கண்டுகொள்ளப்படவில்லை.
நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்
சென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:
- வாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.
- பாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா?
- நியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.
- நியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
- உள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார். ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது?
- நியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே!? உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே! ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே?’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.
- நடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.
- ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும் சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.
- இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.
- நியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க!
- நியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.
- கோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா?’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா?
- பாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா? ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.
- எம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா?
- பர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.
Posted in America, Personal, Tamil Blog, US, USA, Visitors, Visits
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, ஊர், ஜெர்ஸி, நியு ஜெர்சி, நியுயார்க், நியூ யார்க், Bhavan, Canteen, Eat, Food, Guides, Manhattan, New York, NJ, NYC, Opera, Personal, Places, Saravna Bhawan, Sightseeing, Temples, Tips, Tours, USA, Visit, Visitors
நான் விரும்புவது நமீதாவைத்தான்
மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதைத்தானே தர முடியும்?
வாசகர்களுக்கு என்ன வேண்டும் என்பது முந்தைய காலத்தில் புரியாத புதிராக இருந்தது. இன்றைய சூடான இடுகைகள் காலத்தில் ‘நான் அதெல்லாம் படிப்பதேயில்ல’ என்று வெளியில் மேனாமினுக்கி விட்டு, கதவ சாத்தி க்ளிக்கினாலும் வெளியில் தெரிந்துவிடுகிறது.
அமெரிக்க தொலைக்காட்சிகளுக்கு இந்த விஷயம் தெரிந்திருக்கிறது. மும்பை சாலைகளில் சகட்டு மேனிக்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொண்டிருக்க, அமெரிக்க டிவி நிறுவனங்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை.
பாஸ்டன் க்ளோபும் நியு யார்க் டைம்சும் தலையங்கக் கட்டுரை தீட்டினாலும் என்ன பயன்? யாரும் அதை படிக்கவில்லை என்கிறது இந்த அலசல்
So, you would think that the tragic events that shook Mumbai last Wednesday would have interrupted all that noise. You would be wrong. In fact, on Wednesday night, none of the networks cancelled their very important programming—like Private Practice and Law & Order—to deliver breaking news (at that point, we knew about the hostage situation and 80 people had been declared dead)
if you look at the Globe’s most emailed stories for this past week, the popular articles were overwhelmingly asinine. In first place, with 1,049 recommendations, was “Facebook Broke My Heart,”
Then stories on the SAT not being as important to college admission as it used to be, rats sniffing out bombs and 25 things to do in Boston for under $25 … all of these came before the headlining story on boston.com on Wednesday when the Mumbai attacks began. Not only did the Mumbai story come in sixth place during an incredibly slow news week, the stupid Facebook story was emailed twice as many times (1,049 times, compared to 495).
The top-ranking emailed stories for the Times were an op-ed piece about why we should be angry about the Citibank bailout
The second most-emailed story was about an evangelical TV host who preached from a giant bed with a paisley cover
And then there was the fucked-up story about Black Friday shoppers trampling a Wal-Mart employee to death.
“When they were saying they had to leave, that an employee got killed, people were yelling, ‘I’ve been on line since yesterday morning,’ ” Ms. Cribbs told The Associated Press. “They kept shopping.”
Because, c’mon, priorities! Speaking of priorities, this story ranked below a review of the new Blackberry, but above anything on Mumbai.
Why didn’t the Mumbai attacks merit more attention from us readers? The same reason there were profiles of Americans like the rabbi from Brooklyn and the Virginian father and daughter, and relatively nothing on the estimated 158 Indians killed (out of a total of about 180 fatalities) … because we’re constantly looking for ourselves in everything we consume, and Americans can’t identify with hand grenades and burning hotel rooms like we relate to internet stalking and Black Friday.
டைனோ: எல்லோரும் துப்பாக்கி சுட கற்றிருக்கணும்
டைனோ Says:
நவம்பர் 29, 2008 at 2:04 பிற்பகல்
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி விட்டது, துப்பாக்கி வைத்திருப்பனெல்லாம் கன்சர்வேட்டிவ் என்று கட்டியம் கூறி வெறுப்பை உமிழ்பவர்கள் இதையும் படிக்கவேண்டும்! NRAவின் பக்கத்து நியாயங்கள் அவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால்தான் தெரியும். Right to self-defense!
அனைவருக்கு துப்பாக்கியும் தோட்டாவும் கொடுப்பதால் கிடைக்கும் நன்மை பயக்கும் திட்ட வரைவுகள்:
- மீசை இருந்தால் ஆம்பளை என்பது பழமொழி. துப்பாக்கி வைத்திருப்பவர் வீரர். அத்துமீறி உள்ளே வருபவர்களை துப்பாக்கியை வைத்து சுட குறி பார்ப்பதற்குள், அவர்கள் உங்களிடமிருந்து ஆயுதத்தைப் பறிப்பார்கள். ‘ஏழைகளுக்கும் தோட்டா‘ என்று இந்தத் திட்டத்திற்கு நாமகரணமிடலாம்.
- பாஸ்டன் பக்கம் மாதத்திற்கு இரண்டு குழந்தை (சமீபத்திய இறப்பில் பத்து மாசம் ஒன்றும் மூன்று வயது சிறுவனும்) இறக்கிறார்கள். இந்த மாதிரி துப்பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டில், விளையாட்டாக எடுத்து சுட்டுப் பார்த்து ‘மக்கள் தொகையை மட்டுப்படுத்தல் திட்டம்‘ வெற்றிகரமாக என்.ஆர்.ஏ வினால் நடத்தப்படுகிறது.
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதாக காய்கறி கத்தியைக் கூட ஸ்திரமாக பிடிக்கத் தெரியாதவர்கள் கையில் துப்பாக்கியை திணித்து, ‘புல்லாங்குழல் அடுப்பூதும் திட்டம்‘ என நடுநடுங்க வைக்கலாம்.
- வீழ்ந்து கிடக்கும் நிதிநிலையை நிலைநிறுத்த, துப்பாக்கி விற்பனையை அதிகரித்து, அதனால் புல்லட் ப்ரூஃப் மேலணி மேனியாவை முடுக்கி, தொடர்ச்சியாக தோட்ட புகமுடியா கார்கள் என்று ‘சந்தைப்படுத்தி சதை துப்பும் திட்டம்’ வரவைக்கும்.
- பள்ளிகளில் கடந்த மாதம் எந்தவித தாக்குதலும் நடைபெறவில்லை. (Timeline: US shooting sprees – History of school shootings). இது அமெரிக்க கலாச்சாரத்திற்கு மிகப் பெரிய இழுக்கு. இதைப் போக்க ‘வாசகசாலை சிறார்களை சகட்டுமேனிக்கு சுட்டுத் தள்ளும் திட்டம்‘ அறிமுகம்.
- நத்தார் தினம் நெருங்குகிறது. விரும்பிய டிஃபனி பரிசையும் லெக்சஸையும் கொடுக்க முடியாத வறியவர்கள் (பார்க்க #1 ‘ஏழைகளுக்கும் தோட்டா’) கையில் துப்பாக்கியை கொடுத்து அங்காடிகளையும் கடைகளையும் பாதுகாப்பற்றதாக ஆக்கி, பனி விழாத புவிவெப்ப சூழலின் இறுக்கத்தைக் குறைத்து ‘சடலம் விழும் காலம்’ வருகிறது.
- மான்களும் மூஸ்களும் இன்னும் கொஞ்ச காலமே காடுகளில் காணக்கிடைக்கும். அதற்குள் பாக்கி இருக்கும் ஒன்றிரண்டையும் ஒழித்துவிட ‘சாரா பேலின் சகாயம்’ உதயம்.
- தீவிரவாதி கையில் மட்டும் ஏகே-47 இருக்கிறதே? சஞ்சய் தத் ஆசைப்பட்டதும் இதுதானே! உங்களிடமும் வெடிகுண்டும், ஏவுகணைகளும் கிடைத்தால் ‘பக்கத்து விட்டு பரமசிவத்துடன் பஞ்சாயத்துக்கு செல்லேல்’ என சடக்கென்று பாயும்.
அனானிகள் போலி முகம் கொண்டு அடுத்தவரைத் திட்டுவது போல் அசட்டு தைரியம் கொடுக்க துப்பாக்கி உதவுகிறது.
'என்னவாக இருந்தாலும் தமிழகத் தேர்தல் மாதிரி வருமா?' – வாஷிங்டனில் நல்ல தம்பி
இவரின் முந்தைய பதிவு: மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல்
தொடர்புள்ள பதிவு: வாக்களித்த வைபவம் – மைத்ரேயன்
நேற்று மாலை அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பொழுது 6 மணிக்கே நன்கு இருட்டி விட்டிருந்தது. லேசான மழையில் இலையுதிர்க்கால பொன்னிற இலைகளின் சருகுகளால் சாலையோரங்கள் பொன்னிறக் காசுக் குவியல் போல மழைநீரில் மின்னிக் கொண்டிருந்தன. சிக்னலில் சிவப்பு விழ அநிச்சையாக கால்கள் காரை நிறுத்தின. மழை பெய்யும் பொழுது சிக்னல்களின் மஞசள், சிவப்பு, பச்சைகளை ஒரு வித அழகுடன் மின்னும். மழைக்காலத்து சிக்னல்கள் என் மனதுக்குப் பிடித்த ஒரு காட்சி.
மழையில் நனைந்த சிக்னலனின் ஈரமான சிவப்பை ரசித்துக் கொண்டிருந்த பொழுதுதான் தீடீரென நாளைக்கு எலக்ஷன் நாள் என்பது உறைத்து இடது புறம் இருந்த ஓட்டுச் சாவடியாகிய தீயணைப்பு நிலையத்தை நோக்கினேன். சாதாரண நாட்களில் கூட ஒரு சில தீயணைப்பு வண்டிகள் பள பளவென வெளியில் நிற்க ஆளரவம் தெரியும் அந்த நிலையமோ. மழையிலும் இருட்டிலும் அநேகமாக காணாமலேயேப் போயிருந்தது. இந்த இடத்திலா நாளைக்கு சுமார் ஆயிரம் பேர் ஓட்டுப் போடப் போகிறார்கள் என்று. எந்தவித பரபரப்பும் இன்றி இருட்டில் கிடந்தது அந்த தீயணைப்பு நிலையம்.
மழையில் ஊறிய பச்சை மிளிர, கார் முன்னே செல்ல என் நினைவுகள் மெல்ல பின்னே சென்றன. தேர்தல் என்பது இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான பண்டிகைகளில் தேர்தலும் ஒரு திருவிழாவக மாறிப் போன கால கடத்தில் பல தேர்தல்களைப் பார்த்திருக்கிறேன்.
நம் மக்களுக்கு பரபரபுத் தீனி போடவும், கொண்டாடவும் வம்பு பேசவும் வாய்ப்பளிக்கும் மற்றொரு திருவிழாவாக மட்டுமே நம் தேர்தல்கள் இயங்கி வருகின்றன. உபரியாக தேர்தல் தினங்கள் கிரிமினல்களை உற்பத்தி செய்யும் தினமாகவே மாறி வருகின்றன. தேர்தல் கமிஷன்களின் கெடுபிடியால் திருவிழாவின் உற்சாகம் இப்பொழுதெல்லாம் கொஞ்சம் மட்டுப் பட்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.
இருந்தாலும் சிறு வயதில் தீபாவளியைப் போலவே தேர்தல் தினங்களும் உற்சாகமளிக்கும் தினங்களாகவே இருந்தன.
நிச்சயம் இந்த அமெரிக்க ஓட்டுச் சாவடி போல களையிழந்த ஒரு ஓட்டுச் சாவடியை இந்தியாவின் மனித நடமாட்டமில்லாத காட்டுப்புற ஓட்டுச் சாவடிகளில் கூடக் காண இயலாதுதான். வாக்குச் சாவடிகள் என்றுமே பரபரப்பான ஒரு வித ஆர்வத்தைத் தூண்டும் இடங்களாகவே உள்ளன. ட்யூப் லைட்டுக்கள், துப்பாக்கிகளுடன் போலீஸ்காரர்கள். கலவரப் பகுதிகளில் சட்டித் தொப்பி போலீஸ்கள், பூத்தைச் சுற்றி சுற்றி வந்து காவல் காக்கும் கட்சிக் காரர்கள், மறுநாள் தேர்தலை நடத்த முந்திய நாளே வந்திருந்து
பள்ளிக்கூடங்களில் தங்கியிருக்கும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், அவர்களுக்கு உபசாரம் செய்ய டீக் கடைகள், வரிசை, வரிசையாக வந்து ஏற்பாடுகளைச் சரிபார்க்கும் தேர்தல் அதிகாரிகளின் ஜபர்தஸ்துகள், போலீஸ்காரர்களின் விரட்டல்கள் என்று பூத்கள் மறுநாள் மர்மத்தைத் தன்னிடம் தேக்கி வைத்திருக்கும் ப்ரபரப்பான இடங்களாக்வே இருக்கும்.
தேர்தல் தினத்தன்று ஓட்டுச் சாவடிக்கு 200 அடிக்கு முன்னாலேயே கீற்றினால் வேயப் பட்ட கட்சி அலுவலகங்கள் பரபரப்பாக இயங்கும். கரை வேட்டித் தொண்டர்கள் கைகள் கூப்பி வரவேற்றுக் கொண்டேயிருப்பார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் ஓட்டருக்கும் கட்சி சின்னம் பொறிக்கப் பட்ட சின்ன ஸ்லிப் தயார் செய்வது சரிபார்ப்பது அவற்றை வீடுகளில் கொண்டு கொடுப்பது, என்று தேர்தலுக்கு முந்திய நாளும் தேர்தல் நாளும் பரபரப்பாக இயங்கும் தினங்களாகவே இருக்கும்.
வேட்பாளர்கள் கடைசி கடைசியாக வீடு வீடாகப் போய் ஓட்டுச் சேகரிப்பதும் மும்முரமாய் அந்த இரு தினங்களே நடக்கும். வயதான பாட்டி தாத்தக்களை காரில் அழைத்து வந்து ஓட்டுப் போட வைத்து பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது தனி காமெடியாக இருக்கும். முக்கியமாக தேர்தல் தினங்களில் விடுமுறை இருக்கும். யார் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது கணவன்மார்களால் மனைவிகளுக்கு நினைவுறுத்தப் பட்ட படியே இருக்கும்.
கிருஷ்ணன் நம்பியின் மருமகள் வாக்கு என்ற சிறுகதையில் மாமியாருக்கு ஓட்டுப் போட்டேன் என்று சொன்ன மருமகள் நினவுக்கு வருகிறது. ஓட்டுப் போடும் தினத்தன்று ஃபார்முலா தமிழ் படங்கள் போலவே வெட்டு குத்து கொலை போன்ற வயலன்ஸ் காட்சிகளுக்கும் நம் தேர்தல்கள் குறை வைப்பதேயில்லை. சமீப காலங்களாக தெலுங்குப் படங்களை நிறுவுத்தும் காட்சிகளை தமிழினத் தலைவரும் அவரதம் புத்திரபாக்கியங்களும் குறையில்லாமல் அரங்கேற்றி வருகின்றனர். தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரபரப்பு மிகுந்த ஒரு மசாலா படத்திற்கு இணையானதாகவே இருந்து வருகிறது.
அமெரிக்காவில் ஓட்டுப் போடும் இடம் என்பது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எங்கள் தெருவில் தீயணைப்பு நிலையம். பள்ளிக் கூடம், அரசு கட்டிடங்கள் மட்டுமல்லாது யார் வீட்டு கார் நிறுத்தும் காரேஜ் கூட ஓட்டுச் சாவடியாக உருமாறி விடுகிறது. தேர்தல் நாளன்று காலையில் வந்து ஓட்டுப் பெட்டிகளையும் இன்ன பிற சாதனங்களையும் சாவகசாமாகக் கொண்டு வைத்து விடுகிறார்கள்.
இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள் தவிர வேறு யார் யார் நிற்கிறார்கள் என்பதை நாம் தான் கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும். ஒரு சில போட்டியாளர்கள் ஆட்களை வேலைக்கு அமர்த்தி வீட்டுக்குப் ஃபோன் போட்டு ஓட்டுக் கேட்க்கிறார்கள். மற்றவர்கள் சின்னதாக ஒரு சில இடங்களில் போர்டுகள் வைப்பதுடன் தங்கள் பிரச்சாரத்தை நிறுத்தி விடுகிறார்கள்.
தாரை தப்பட்டை, ரெக்கார்ட் டான்ஸ், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்றவை முன்னே வர வேட்டிகளும் துண்டுகளும் தரையைத் துடைக்க வரும் வேட்ப்பாளர்களை இங்கு காண முடிவதில்லை. இங்கு தேர்தல்கள் டி வி யில் தொடங்கி டி வி யிலேயே முடிந்து விடுகின்றன. உற்சாகத் திருவிழாக்கள் காணக் கிடைப்பதில்லை. தலைவர்களின் திருமுகங்கள் டி வி யில் மட்டுமே காணக் கிடைக்கின்றன.
இந்தியாவில் தேர்தல் திருவிழாவின் பொழுதுதான் தலைவர்கள் வெளியே வருவார்கள். ஐந்தாண்டுகள் ஓய்வில்லாமேலேயே ஹைதராபாத் தோட்டத்திலும் கொடநாட்டுப் பங்களாவிலும் ஒயாது ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா கூட தேர்தல் திருவிழாக்களின் பொழுது மக்களுக்குத் தரிசனம் தரத் தவறுவதேயில்லை. தலைவர்கள் மட்டும் என்ன சிவாஜி, எம் ஜி ஆர் தொடங்கி தவக்களை குமரி முத்து வரை நடிகர்களையும் அருகில் இருந்து பார்க்கக் கிடைக்கும் தருணங்களும் இந்தத் திருவிழாக்கள்தானே?
சிவாஜி என்றால் சிவப்பு, பச்சை, மெரூன், அல்லது ஊதா நிறத்தில் பட்டில் செய்த இறுக்கமான ஜிப்பா அணிந்து வருவார். எம் ஜி ஆரோ பள பளக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் புசு ப்சு தொப்பியும் ஒரு இஞ்சு ரோஸ் பவுடருமாக தரிசனம் தருவார். இன்னும் பல தலைவர்கள் ஜீப்புகளில் கைகளைக் கூப்பிக் கொண்டு நின்று வரும் பிம்பங்களாகவே மனதில் பதிந்து போய் விட்டனர்.
காமராஜர், அண்ணாத்துரை, ராஜாஜி, ஜூப்பில் இருந்து ஊன்று கோலோடு இறங்கிய பி.ராமமூர்த்தி துணையாக ஏ பாலசுப்ரமணியன் போன்ற தலைவர்கள் அவர்கள் நின்று வரும் ஜீப்புடன் சேர்ந்தே என் மனதில் பதிந்து உறைந்து போயினர். இந்திரா என்றால் தலையில் கட்டிய ஸ்கார்ஃப் பட படக்க கூலிங் கிளாசுடன் கன்வெர்டிபிள் காரில் பறந்து செல்லும் படிவம், ராஜீவ் என்றால் ஜிப்சி ஜூப்பில் தொங்கிக் கொண்டு போகும் உருவம், ஜெயலலிதா என்றால் டாட்டா சுமோவில் கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்து கொண்டு கையசைக்கும் தோற்றம் என்று வாகனங்களை விலக்கித் தலைவர்களின் உருவங்களை மனக்கண் முன் கொண்டு வர முடிவதேயில்லை. அது போல வாகனங்களில் விரைந்து செல்லும் தரிசனங்களைக் கூட இங்குள்ள தலைவர்கள் தருவதில்லை.
பல்லாயிரம் வாட்ஸ் ஃபோகஸ் லைட்டுக்களின் வெளிச்சத்தையும் மீறி பளீரென்று தோன்றிய அழகி ஜெயலலிதாவின் முகத்தை முதன் முறை கண்ட நினைவை இன்றும் என்னால் மறக்க முடிவதேயில்லை. தமிழ் நாட்டில் எந்தவொரு நடிகைக்கும் இல்லாதிருந்த தோரணை அது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்காக ஓட்டுப் போட்டேன் என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை 🙂
அதே அழகும் கவர்ச்சியும் இன்று சாராப் பெல்லனிடம் இங்கு காண்கிறேன். ஜெயலலிதாவிடம் இருக்கும் அறிவு மட்டுமே இவரிடம் மிஸ்ஸிங். மற்றபடி இவர ஒரு ஜெயலலிதாவின் க்ளோனாகவே தோன்றுகிறார்.
ஒரு முறை தாசில்தார் ஒருவர் ஓட்டுச் சாவடி அமைப்பதற்காக மேற்உத் தொடர்ச்சி மலைக்குச் செல்ல நேர்ந்ததையும் யானை துரத்தியதால் வெகு நேரமாக பதுங்கிக் கிடந்ததையும் சொல்லி என் ஆர்வத்தைத் தூண்டி விட்டார். யானைகள், சிறுத்தைகள் அதிகம் உள்ள தொலை தூர மலைக் கிராமம் அது. இந்தியத் தேர்தலகள் இது போன்ற சாகசங்களையும் உள்ளடக்கியது.
என் பக்கத்து வீட்டுக்காரர் எலெக்ஷன் டூட்டிக்காக ஒரு ஊருக்குப் போய் விட்டு ரெண்டு கட்சிக்காரர்களுக்குள் சண்டை வந்து விட ஓட்டுப் பெட்டிகளுடன் தூக்கிப் போட்டு இவரையும் கொளுத்த இருந்திருக்கிறார்கள்,. பத்து மைல் தூரம் ஓடி வந்து உயிர் பிழைத்த கதையை இன்றும் சொல்வார். தேர்தல் வேலைக்குப் போவது அப்படி ஒன்றும் சுவாரசியமான காரியமோ, பாதுகாப்பான காரியமோ கிடையாது. உயிருக்கு உத்தரவாதமில்லாத ஓட்டுச் சாவடிகள் இந்தியாவில் லட்சக்கணக்கில் உள்ளன. உயிர் பலி விழாமல் ஒரு பஞ்சாயத்துத் தேர்தலைக் கூட இந்தியாவில் நடத்தி விட முடியாது.
பழைய நினைவுகளுடன் வீடு வந்து உறங்கி காலையில் சற்றுச் சந்தேகத்துடனேதான் ஓட்டுச் சாவடிக்குச் சென்றேன். ராத்திரி ஒருவரைக் கூட காணுமே இன்றைக்கு நிஜமாகவே இந்த இடத்தில் எலக்ஷன் நடக்குமா என்றொரு சம்சய்த்தோடுதான் சென்றேன்.
வீட்டிலிருந்து ஒரு இருநூறு அடி தூரத்திலேயேதான் ஓட்டுச்சாவடி (ஓட்டுப் போட்டால் சாவடிப்பார்கள் என்று எவ்வளவு முன்யோசனையுடன் பெயர் வைத்திருக்கிறார்கள் பாருங்கள்) இருந்தது, காலையில் ஒரு எட்டரை வாக்கில் நடந்தே சென்றோம். வழி மறித்து யாரும் ஓட்டுக் கேட்க்கவில்லை. தோரணங்கள் இல்லை. கொடிகள் இல்லை. ஆரவாரங்கள் இல்லை. ஸ்லிப் கொடுக்க ஆளில்லை.
வயதானவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்கள் வரவில்லை. கரை வேட்டிகள் இல்லை. பட்டா பட்டி டவுசர்கள் இல்லை, அம்மா இரட்டை இலைக்குப் போடுங்க, ஐயா உதய சூரியனுக்குப் போடுங்கள் என்ற கெஞ்சல்கள் இல்லை. அப்படி ஒரு பேரமைதி,.
தீயணைப்பு நிலையத்தில் இருந்து ஒரு நூறடி தூரத்தில் ஒரு பெண் ப்ரோபிஷன் 8 க்கு நோ என்று ஓட்டுப் போடுங்கள் என்று ஒரு நோட்டீஸ் கொடுத்தார்.
ஃபையர் ஸ்டேஷன் முன்னால் சோம்பலாக ஒரு இருபது பேர்கள் வரிசையில் நின்றார்கள்.
அங்கிருந்த ஒரு வாலண்டியரிடம் ஏனுங்க நிஜமாகவே எலக்ஷன் நடக்குதுங்களா என்றேன். ஏன் சந்தேகம் என்றவரிடம் ஒரு போலீசைக் கூடக் காணோமே என்றேன். போலீசா? அவர்கள் எதற்கு என்று சற்றே மிரண்டு போய் என்ன ஏற இறங்கப் பார்த்தார்.
வரிசையில் நகர்ந்து உள்ளே போனோம். முதல் முறையாக ஒரு தீயணைப்பு நிலையத்திற்குள் நுழைந்தேன். உள்ளே எஞ்சினீயரிங் காலேஜ் ஹைட்ராலிக்ஸ் லாப் போல இருந்தது. சுற்றி உயர உயர ஏணிகளை சாத்தியும் நிறுத்தியும் வைத்திருந்தார்கள். மேலே ராட்சச மஞ்சள் வண்ன தண்ணீர் ஹோஸ்கள் ஓடிக் கொண்டிருந்தன. அந்த ஃபயர் ஸ்டேஷனில். இருந்த ரெண்டும் எஞ்சினையும் வெளியே டிரைவ் வேயில் கொண்டு போய் நிறுத்தி உள்ளே ஓட்டுப் போட இடம் தயார் செய்து வைத்திருந்தார்கள்.
எலக்ஷனை நடத்தியதும் தொண்டர்களே. அரசாங்க அதிகாரிகள், ஜீப்புகள். ஜபர் தஸ்துகள், கலெக்டர், எஸ் பி விசிட்கள் ஏதும் கிடையாது. நிறைய பேர் குழந்தைகளையும் வேடிக்கை காண்பிக்க அழைத்து வந்திருந்தனர். எனக்கு முன்னால் நின்ற கருப்புப் பெண்மணி தன் பையனையும் பள்ளிக் கூடத்துக்குப் பெர்மிஷன் சொல்லி விட்டு அழைத்து வந்திருந்தார். அவர்கள் இனத்தில் ஒருவர் பிரசிடெண்டாகப் போகும் வரலாற்றுத் தருணத்தைத் தன் பையனும் காண வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த பரபரப்பு அவரிடம் தெரிந்தது.
எல்லோரிடமும் ஒரு வித தோழமையும் புன்னகையும் தவழ்ந்து கொண்டிருந்தது, மாற்றம் வரப் போகிறது என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டன அந்தப் புன்னகைகள். அனேகமாக 90 சதம் ஒபாமாவுக்கு ஓட்டுப் போடும் கூட்டம் அது. நாங்கள் ஓட்டுப் போடுவதை வேடிக்கைப் பார்க்க சில வயதான இந்தியர்கள் கூடியிருந்தார்கள். யாரையும் யாரும் விரட்டவிலலை. எந்த விதமான கெடுபிடிகளோ பரபரப்புக்களோ இல்லை.
ஒரு பாட்டி என் பெயரைச் சரிபார்த்து இவ்வளவு நீள பெயரை என் வாழ்நாளில் உச்சரிக்க முடியாது டியர் வெரி சாரி என்று சொல்லி, பட்டியலில் இருந்த என் பெயருக்கு மேலாக ஒரு அடிஸ்ஸ்கலை வைத்து பென்சிலால் பெயரை அடித்து விட்டு என்னிடம் வாக்குச் சீட்டைக் கொடுத்தார்.
கையில் மை வைப்பது எல்லாம், இல்லை. ஒரு ரெஜிஸ்டரில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள் அவ்வளவுதான். அதை ஓட்டுச் சீட்டு என்று சொல்வது அபத்தம்,. ரெண்டு பக்கங்களும் 26 தேர்தல்களும் அடங்கிய பெரிய லிஸ்ட் அது. ஜனாதிபதி தேர்வில் ஆரம்பித்து உள்ளூர் முனிசிபாலிட்டி ஸ்கூல் போர்டு வரைக்கும் மொத்தம் 16 பதவிகளுக்கான வாக்கெடுப்புக்களும், ஒரு 10 பிரசின்னைகளுக்கான வாக்கெடுப்புக்களும் நிரம்பியிருந்தன,.
ஜனாதிபதி வேட்பாளர் தவிர பிற பதவிகளுக்குக் குத்து மதிப்பாக ஒரு பெயருக்கு நேர் கோடு போட்டோம். ஆம் பேனாவால் நாம் விரும்பும் பெயருக்கு நேராக ஒரு கோடு கிழிக்க வேண்டும். நம்ம ஊர் மாதிரி முத்திரை குத்துவது எல்லாம் கிடையாது. பல பிரச்சினைகளுக்கான கேள்விகள் குழப்பமான வாக்கிய அமைப்புகளாக இருந்தன.
படித்துப் பார்த்து ஓட்டு போட்டால் சரியாகத் தப்பாகப் போட்டு விடும் விதத்தில் கேள்விகளை மிகப் புத்திசாலித்தனமாக அமைத்திருந்தனர் முட்டாள்கள்.
உதாரணமாக ப்ரோபிஷன் 8: ஓரினபாலர் திருமணத்தைத் தடை செய்ய வேண்டும். இதற்கு யெஸ் என்று கோடு கிழித்தால் ஆம் தடை செய்ய வேண்டும் நோ என்பதற்கு நேர் கோடு கிழித்தால் ஓரின திருமணத்தைத் தடை செய்யும் முயற்சியைத் தடை செய்ய வேண்டும் என்று விசு பட வசனம் போலக் கேள்விகள் அமைந்திருந்தன.
இப்படி ஒரு குப்பாச்சு குழப்பாச்சாக ஓட்டுச் சீட்டை வடிவமைத்தால் எப்படி ஜனநாயகம் வெளங்கும்? ஓரினத் திருமணத்தை தடை செய்ய வேண்டுமா வேண்டாமா?, ரெண்டு நகரங்களுக்கு இடையில் ரெயில் விடலாமா வேண்டாமா? மிருகங்களைச் மாமிசத்திற்காகக் கொல்வதற்கு முன்னால் அவைகளைச் சுதந்திரமாக இருக்க விட வேண்டுமா வேண்டாமா? விபச்சாரத்தை சட்டப் படி அனுமதிக்கலாமா வேண்டாமா? உள்ளூர் பார்க்குகளை மேற்பார்வை செய்ய வரி விதிக்கலாமா வேண்டாமா என்பது போல ஒரு பத்து வேண்டுமா வேண்டாமா ஓட்டுக்களுக்கும் வாக்கிழித்தோம்.
இவர்கள் எலக்ஷன் நடத்தும் விதம் அப்படி ஒன்றும் திருப்திகரமாக இல்லை. அமெரிக்கா இந்த விஷயத்தில் இந்தியாவிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது டி என் சேஷனிடம் இந்த வேலையை அவுட் சோர்ஸ் செய்து விட வேண்டும். 200 வருடங்களுக்கு மேலாகியும் ஒரு எலக்ஷனை ஒழுங்காக நடத்தத் துப்பில்லாத ஒரு தேசமாகவே இருப்பதாகத் தோன்றுகிறது.
நானும் என் மனைவியும் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஆலோசனையெல்லாம் செய்து கோடு கிழித்து, கோடு கிழித்து ஓட்டுப் போட்டுக் கிழித்தோம். எல்லா தேர்வுகளுக்கும் சரியாகத் தப்பாகக் கோடு கிழித்த பின்னால் பூர்த்தி செய்த பாலட்டை ஒரு குப்பைத் தொட்டி போன்றிருந்த மெஷினில் உள்ளே கொடுத்தோம். அது உள்ளே வாங்கிக்க் கொண்டு 111 என்று எனது எண்ணைக் காட்டியது.
காலை 6 மணி முதல் 9 வரை மொத்தம் 111 பேர்கள் போட்டிருந்தனர். பலர் ஏற்கனவே ஓட்டுப் போட்டு போஸ்டலில் அனுப்பி விட்டார்கள். நேரில் வந்து போடுபவர்கள் மிகக் குறைவாக இருந்தது. ஓட்டுச் சீட்டை அந்தக் குப்பைத் தொட்டிக்குள் போட்ட்வுடன் ஒருவர் ஐ வோட்டட் என்றொரு ஸ்டிக்கரைக் கொடுத்தார்.
அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியமான தேர்தல் முதல் முறையாக ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் முக்கிய பதவிக்கு வரப் போகும் எலக்ஷன். வரலாற்றில் நானும் ஒரு அங்கமாக இருந்தேன் என்று சொல்லிக் கொள்ளலாம்
இன்று இரவு மெகயின் ஏன் ஜெயிக்கக் கூடும்?
முதலில் வீடியோ பார்த்துவிடவும்: (இறுதி வரை பார்க்கவும்)
அமெரிக்காவில் ஈகோ முக்கியம். தோல்வி என்பது அகராதியில் கூடாது. இராக்கில் பின்வாங்கும் ஒபாமாவுக்கு வாக்கா? அல்லது வெற்றித் திருமகன் ஜான் மெகயினா?
போரில் சிறைபிடிக்கப்பட்டாலும் உள்ளந்தளராத உத்தமர் மெகயின் என்பது முதற் காரணம்.
அடுத்த வீடியோவும் அமெரிக்கர்களின் மனவோட்டத்தை சொல்கிறது:
நீங்கள் சம்பாதிக்கும் ஓரணாவில் இருந்து அரையணாவைப் பிடுங்கி, பிச்சையெடுப்பவருக்கு தரும் ஒபாமாவுக்கு ஓட்டா? அள்ளது சோம்பேறிகளை உழைத்து சம்பாதித்து முன்னேறச் சொல்லும் ஜான் மெகயினா?
கிடைக்கிற சம்பளத்தை சுளையாக வீட்டுக்கு எடுத்துப் போக சொல்பவரா? ஈட்டிக்கடைகாரராக பாதி பிடுங்கிக் கொள்பவரா?
மெகயின் வருமான வரிவிலக்கு தருவார் என்பது இரண்டாவது காரணம்.
தொடர்புள்ள இடுகைகள்:
1. அசலாக சொன்ன பத்து காரணங்கள்: ஏன் மெகயின்?
2. அமெரிக்க தேர்தல் களம், பாஸ்கர் – உயிரோசை:
மெகைனின் திட்டத்தைப் பொறுத்த வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் வரியை 35% இல் இருந்து 25% குறைப்பது, புஷ் தற்காலிகமாக அறிமுகப்படுத்திய வரிக் குறைப்பை நிரந்தரமாக்குவது, முக்கியமாக அரசாங்கத்தின் செலவைக் குறைப்பது முதலானவை பிரதான அம்சங்கள். ஈராக்கில் உள்ள ராணுவத்தை இப்போதைக்கு, திரும்ப அழைக்க முடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார் மெகைன்.
Posted in ஒபாமா, கருத்து, குடியரசு, ஜனநாயகம், மெக்கெய்ன், வாக்களிப்பு
குறிச்சொல்லிடப்பட்டது America, அமெரிக்கா, அரசியல், இராக், ஒபாமா, சண்டை, தோல்வி, நிதி, போர், மெகயின், வரி, வருமானம், வெற்றி, Citizens, Common man, Defeat, Economy, Finance, Gulf, Iraq, Mccain, Obama, Polls, President, Tax, Victory, Voters, War










