Tag Archives: Tamil

அ. முத்துலிங்கமும் தற்கால உலக இலக்கியமும்: சிறுகதைகள்

விடுமுறையில் ரெண்டு கதைகள் படித்தேன். இரண்டுமே பயங்கர எதிர்பார்ப்போடு படித்தேன். இரண்டுமே திருப்தியான கதைகள்.

1. http://www.newyorker.com/fiction/features/2013/10/21/131021fi_fiction_munro
முதியோர் இல்லம் அனுப்ப படுபவரின் வாழ்க்கையை சொல்கிறார் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ. இணையத்திலேயே இலவசமாகப் படிக்கலாம்.

2. http://harpers.org/archive/2013/10/sic-transit-2/
இது இணையத்தில் இலவசமாகக் கிடைக்கவில்லை. சாதாரண விஷயத்தை எப்படி பிரும்மாண்டமாக்குவது என்பதை உணர்த்துகிறார். சமூகக் கதையில் மர்மத்தை உண்டாக்குகிறார். பிறன்மனை நோக்குவதை அறப்பார்வையாக சொல்வதை சத்தமாக கத்தாமல் சன்னமாக உணர்த்துகிறார்.

தமிழில் அ முத்துலிங்கம் கொஞ்சம் இவர்களை எட்டிப் பிடித்து தாண்டிக் கூட விடுகிறார் இங்கே:
http://amuttu.net/viewArticle/getArticle/334

Ideas for future Jeyamohan column in The Hindu

மூலப்பதிவு: தமிழ் எழுத்துருக்களை ஏன் ஆங்கிலத்திலேயே எழுதக்கூடாது – எழுத்தாளர் ஜெயமோகன்

இரண்டாம் உலகப் போரில் ஒரு போஸ்டரைப் பார்த்தேன். ஐம்பதாயிரம் மனிதர்களின் ஒரு வருட உழைப்பை ஜலதோஷம் விழுங்கி விடும் என்று சொன்னது அது. பரபரப்பாக புகைப்பதால் ஒரு வருடத்தில் இரண்டரை நாள்தான் வீணாகும். அதிலும் பாதி சிகரெட் பிடித்தால், ஒரு நாளாக்கிவிடலாம்.

நம் இளைய தலைமுறை ஏராளமாக நோய்வாய்ப்படுகிறது. ஆனால், சீக்கு சொல்லி விடுப்பு எடுப்பதில்லை. காரணம், இந்தியாவெங்கும் ஜலதோஷம் பரவலாகிவருகிறது. கொசு நிறைந்த சூழலில் தொற்று நோயே அசௌகரியத்திற்கு தோற்றுவாய் என நிறுவப்பட்டுவிட்டது. அது தெளிவான உண்மையும்கூட. ஆகவே, எதிர்காலத்திலும் கொசுவே இங்கே நோயின் ஊற்றாக இருக்கும். அதைத் தடுக்கவே முடியாது. வரலாற்றின் போக்கு அது. அதற்கு எதிராகப் பிடிவாதமாக நிலைகொள்வது அடிப்படைவாதம் மட்டுமே.

டெங்குவும் சிக்குன்கன்யாவும் பரவுவதால் சிகரெட் கைவிடப்படுவதைக் கண்டு, அன்புமணி இராமதாஸும் முகேஷ் ஆவணப்படத்தைக் கட்டாயமாக்கினார். விளைவாக, குழந்தைகள் வில்ஸ் ஃபில்டரை எடுத்து, பள்ளி இறுதிவரை அதைப் புகைக்கின்றனர். ஆனால், மாரடைப்பும் நடுவயதில் வருவதாலே சிகரெட்டில் அவர்களுக்குக் கவனம் நீடிப்பதில்லை.

டாஸ்மாக் சரக்கு அல்லது கஞ்சாவை எடுத்துப் பயிலும் குழந்தைகள், எப்படி அவற்றுக்கு அடிமையாகின்றனவோ அப்படித்தான் இன்று நம் குழந்தைகளும் சிகரெட்டைக் கற்கின்றன. அதாவது, போதை எளிதாக அடைவதற்கு மட்டுமே. தட்டுத்தடுமாறி புனைவு உருவாக்கவும் ஓரளவு கிறுக்கவும் கற்கின்றனர். இந்த உண்மையை நாம் மழுப்ப வேண்டியதில்லை.

Cigarette_Smoker_Puff_Hukkah_Mosquito_Repellant_Cigars_Lady_Kill_Cancerஅவர்கள் சந்திக்கும் சிக்கல் என்ன? இளமையில் கொசுவர்த்திச் சுருள் புகையையும் சிகரெட் புகையையும் எதிர் கொள்வதில் இருக்கும் சிரமம்தான் என்று சொல்லலாம். இன்று ஏதேனும் ஒரு நோயில் தகுதியுடையவராக ஆக வேண்டுமென்றால், மிக விரிவான பல்லாண்டு காலப் பழக்கம் தேவைப்படுகிறது. ஆகவே, எதிர்ப்பு சக்திக்கு உதவாமல் வெறுமே கிளுகிளுப்புக்காக மட்டுமே புகைக்கப்படும் ஆறாம்விரலாம் வெண்குழல் சுருட்டை விட்டுவிடுகிறார்கள்.

வாய்க்கும் சுருட்டிற்குமான உறவு என்பது ஒரு கைப்பயிற்சிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். வட்டமாகப் புகை விடுவது நமக்கு இயல்பான ஒன்றாகத் தெரிகிறது. ஆனால், பதின்ம வயதில் ரவுண்டு ரவுண்டாக சுருளவைக்கும் வெள்ளாவிக் கொணர்வது மிகக் கடினமான ஈராண்டுப் பயிற்சி வழியாகவே அந்தப் பயிற்சியை அடைகின்றன.

செயின் ஸ்மோக்கிங் என்பது இன்னும் சிக்கலானது. சரித்திரவியலாளரான வில்லியம் டியுராண்ட் (Will Durant) “மாற்றம் வீட்டிலே துவங்க வேண்டும் என எனக்கு உதித்த நேரத்தில் இருந்து, உலகத்தை மாற்ற எனக்கு நேரம் கிடைக்கவில்லை” என்கிறார். நீங்கள் “அண்ணாமலை” படம் பார்த்து இருப்பீர்கள். அதில் மகன் ரஜினிக்கு சுருட்டு ஆசை உண்டு. அவரின் அந்தப் பழக்கத்தை முறியடிக்க நாள் முழுக்க சுருட்டை மட்டுமே புகைக்க விடுவார் அப்பா ரஜினி. அந்த மாதிரி சித்திரவதையை சுயபோகத்திற்கு நினைத்துப் பாருங்கள்.

இந்நிலையில், இந்தியக் குழந்தை இளமையில் ஒரே சமயம் இரண்டு கொசுக்கள் முன்னால் நிறுத்தப்படுகிறது. டெங்கு கொசுவிற்கு விளைக் களம் தூய நீர். அது அழுக்கு நீரில் இருப்பதில்லை. தமிழ் நாட்டில் தண்ணீர் பற்றாக் குறையால் குடிநீர் வீடுகளில் பாத்திரங்களில் சேகரிக்கப் படுகிறது. இது சரியாக மூடப் படாதபோது மற்றும் தேங்கும் மழை நீரிலிருந்து இக்கொசுக்கள் பரவுகின்றன. கொசுவை அடிப்பதில் நம் உழைப்பு அதற்குக் கட்டாயமாக்கப்படுகிறது.

கையை அடித்தாலும் சரி… கைவிரல்களுக்கு நடுவில் வைத்தாலும் சரி… புகை என அது உணர்ந்து தெளிய நேரமாகிறது. மேலும், விரலில் இடுக்கக் கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. இது கல்வி அல்ல, பயிற்சி. தொடர்ந்து நிகழும் பயிற்சியே நம்மிடம் நீடிக்கும். நம் குழந்தைகள் கொசுவர்த்திச் சூழலிலேயே எழுதுகின்றன, வாசிக்கின்றன. ஆகவே, இரண்டாம் பழக்கமாகக்கொண்ட புகை அவர்கள் கைகளுக்கும் கருத்துக்கும் வழக்கமற்றதாக ஆகிவிடுகிறது.

இந்தச் சிக்கலைத் தாண்டுவதற்கான வழிமுறைகளைத்தான் நாம் யோசிக்க வேண்டும்.

Mosquito coil and burner.நான் பதின்மூன்றாண்டு காலமாக புகைக்கிறேன். புகைக்கும் வேகத்தில் பற்றவைக்க முடியும் என்னால். கண்ணெதிரே சிகரெட் தெரிகிறது, என் கைகளில் நேவி கட்-கள் ஓடுகின்றன. எந்தச் சிரமமும் இல்லை. கொசுவர்த்திப் போட்ட இடத்தில் நான் சரளமாக புகைக்கவும் செய்வேன். ஏன் சிகரெட்டை இவ்வாறு கொசுவர்த்தியாலேயே செய்யக் கூடாது?

பெட்டிக் கடைகளில் இதை விற்றால், வீட்டிற்கு ஒரே ஒரு டார்டாயிஸ் வாங்கினால் போதும். அவர்கள் சிகரெட்டை இன்னும் வேகமாக, இன்னும் சகஜமாக இழுக்க அது உதவும் அல்லவா? நாம் மார்ல்போரோ புகைக்கும்வரை கொசு தள்ளியே இருக்கும். காசும் மிஞ்சும். ஜலதோஷம் வந்தால் மூக்கால் பேசுவது என்போம். இது மூக்கால் சிக்கன்குன்யாவை தடுக்கும் தந்திரம்.

உடனடியாகக் கேள்விப் படும்போது சற்று அபத்தமான, அதீதமான எண்ணமாக இது தோன்றக்கூடும். ஆனால், எல்லா மாற்றங்களும் முதலில் அப்படித்தான் தோன்றும். அவற்றுக்கு மரபு அளிக்கும் கடுமையான எதிர்ப்பும் முக்கியமானது. அந்த எதிர்ப்பையும் கருத்தில்கொண்டு வெற்றி பெற்று நிகழக்கூடிய மாற்றமே ஆக்க பூர்வமாக இருக்கும். ஆகவே, நாம் இதை விவாதிக்க வேண்டுமென நினைக்கிறேன்.

படம்

Tamil Typing – Infographic on Input Methods and Editors

Tamil_Typing

Proverbs: Umbrella

’வெளியே விரியும்; வீட்டிற்குள்ளே சுருங்கும்’

மகளின் தமிழ்ப் புத்தகத்தில் கொடுத்திருந்த விடுகதைக்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அவளும் அறிவியல்பூர்வமாக யோசித்து ‘தோல்’ என்றாள். குளிர்காலத்தில் தோல் தசைகள் சுருங்கும். கோடை சூரியன் காய்ச்ச ஆரம்பித்த பின் சிவப்பாகி நீளும்.

எனக்கு சரியான விடை அது இல்லை. அடுத்ததாக என் மனைவி விடை தெரியும் என்றாள். ‘மில்கி வே’, புவி. நமது சூரிய மண்டலத்தைப் பொருத்தவரை, இந்தப் பேரண்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. ரொம்ப நோவா பார்க்கிறாளோ என்று சந்தேகம் வந்துவிட்டது.

இப்படியே நிறைய பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
– பலூன். வெளியில் போனால் பறக்கிறது.
– முட்டை. வயிற்றுக்குள் குட்டி; வெளியில் வந்தால் குஞ்சு; கொஞ்ச நாளிலேயே முழு வளர்ச்சி
– புத்தகம். கிணற்றுத் தவளையாக இல்லத்திற்குள்ளே முடங்கினால் சிந்தனை சுருங்கும்; உலகைப் பார்க்க கிளம்பினால் மனம் விரிவடையும்.

எதுவும் திருப்தியில்லை. நான் கவிஞன் இல்லை. விஞ்ஞானி. விடை ஒன்றுதான் இருக்க முடியும்.

கடைசியாக துப்பு கொடுக்க ஆரம்பித்தேன். “மழை.”

மகள் உடனடியாக விடை சொன்னாள். “அம்ப்ரெல்லா.”

“தமிழில் சொல்லு…”

“மழையில் இருந்து தப்பிக்க ஷீல்ட் மாதிரி உபயோகிக்கிறோம். எனவே, அதன் பெயர், ‘மழைக் கேடயம்’.

State of Tamil Cinema Reviewers: Movies vs Books

கடந்த பதினைந்து வருடங்களாக பட அறிமுகங்களை எழுதுபவன் + இணையத்திலும் பத்திரிகைகளிலும் விமர்சனங்களை அவ்வப்போது வாசித்தும் வருபவன் என்ற முறையில் எனக்குப் பட்டது….

* பெரும்பலான சமயம் படம் வெளியானவுடன் டாரெண்ட் தரவிறக்கத்தில் படம் பார்ப்பதால், திரையரங்கின் மன ஒருமை கிடைப்பதில்லை. அதை விடக் கொடுமை, ஆங்கிலப் படத்திற்கு ப்ளூ ரே ப்ரிண்ட்டும் தமிழ்ப்படங்களுக்கு திருட்டு விசிடியும் பார்க்க வேண்டும் என்னும் மனப்பான்மை.

* விகடன் விமர்சனம் போல் மார்க் போட்டு வாடிக்கை. எல்லாப் படத்திற்கும் மதிப்பெண் மட்டுமே வழங்கத் தெரியும்.

* திக்குவாய், குருடி போன்ற குறைபாடுகளை நல்ல நடிப்பு என்றும் ரஜினி, விஜய் படங்களை மசாலா என்றும் வகைப்படுத்துவோம்.

* கேமிராவில் ஒளிப்படம் எடுப்பதாலும், நாலைந்து முறை குழந்தைகள் நிகழ்ச்சியை வீடியோ எடுத்ததாலும் சினிமா எடுக்கும் அனைத்து வித்தையும் தெரிந்ததாக நினைக்கிறோம்.

* தொலைக்காட்சி சீரியல் (என்னைப் போல் ஆசாமிகள் தூர்தர்ஷன் நாடகம்) பார்த்தே பழக்கம். திரைப்படங்களிலும் அதே வாசனை எதிர்பார்க்கிறோம்.

* புத்தகத்திற்கு அறிமுகம் எழுதுவதை விட சினிமாவிற்கு அறிமுகம் கொடுப்பது எளிதானது. உதாரணமாக இயக்குநர் பாலா போன்ற புகழ்பெற்ற எழுத்துலக ஜாம்பவானை விமர்சிக்க நிறைய திராணி வேண்டும். ஆனால், ‘பாலா’ போன்றவரை விமர்சிப்பதால் சாதாரண மனுஷனாக அடையாளம் காட்டிக் கொள்ளலாம். இன்னும் விரிவாகச் சொன்னால் ஆயிரம் பக்க புத்தகத்தை தாக்கி எழுதினால் இலக்கியவாதியாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறது. ‘கடல்’ படத்தையும் பரதேசியையும் விமர்சித்தால் humble ஆளாகி விடலாம்.

* மோசமான படத்தைப் பாராட்டியும், சுவாரசியமான படைப்பை மட்டம் தட்டியும் எழுதினால் மட்டுமே கவனம் கிடைக்கிறது.

* சென்ற கால சினிமாவில் இருந்து வித்தியாசமாய் நின்று தமிழ்த் திரைப்படங்களை எது முன்னகர்த்துகிறது என்று கவனித்து பகிர்வதை விட, அந்தத் திரைப்படங்களின் கதையை வைத்து மன்றாடுவது எளிது.

என்னுடைய ஆண்டிராய்ட் போனிற்கு புதிதாக ஏதாவது நிரலியை நிறுவிக் கொண்டே இருப்பேன். சில சமயம் அதைத் தொடர்ச்சியாக பயன்படுத்துவேன். சில சமயம் உடனடியாக நீக்கிவிடுவேன். அது எனக்கு எப்படி உபயோகமாகிறது, ஏற்கனவே இருக்கும் மற்ற அப்ளிகேஷன்களில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது என்பதைப் பொறுத்து என் முடிவு அமைகிறது. வைரஸ் போன்ற தாக்குதல் கொடுத்தால் மட்டுமே, கூகுள் கடை சென்று மட்டகரமான தரமதிப்பீடு தருகிறேன்.

சினிமாவிற்கும் அதே அளவீடு பயன்படுத்தலாம். நோய்க்கிருமி போல் கலையை கீழே இழுக்கிறதா? அல்லது தனிப்பட்ட முறையில் உபயோகமான விதத்தில் முன்னேற்றுகிறதா?

Tamil Thinkers Identity: Generalization vs Speculation: Inventing the Brand

அப்பாவை டிவி பார்ப்பவர் என்று சுருக்கலாம். அம்மா வெறும் சமையற்காரி. மகளோ மூளை வளர்ச்சி பெறாதவள். மனைவி பாலியல் தொழிலாளி.

இப்படி அடைமொழிக்குள்ளும் உருவகங்களுக்கும் நடுவே நிஜ வாழ்க்கை சிக்கிக் கொள்வதில்லை. ஆனால், பெரும்பாலான கலை வடிவங்களின் தமிழ் விமர்சனங்கள் அடைபட்டிருக்கிறது.

ஜெயமோகன் இந்துத்வாவாதி. சாரு நிவேதிதா திருடர். எஸ் ராமகிருஷ்ணன் தேய்வழக்கு. காலச்சுவடு கண்ணன் பிசினஸ்மேன். ’அட்டகத்தி’ தலித் காவியம்; உயிர்மை இலக்கிய பத்திரிகை; மக்கள் தொலைக்காட்சி தமிழை வாழவைக்கிறது.

சிக்குண்டவர்களே புதியவர்களை வலைக்குள் நிறுத்து வைப்பது உப வழக்கம். பெருநிதிக் கிழார், டூரிஸ்ட் இலக்கியவாதி என்று பட்டங்கள் கொடுத்து முடக்குவதும் வாடிக்கை.

திரைப்படத்திற்கு சாயம் பூசுதல், எழுத்தாளர்களை தொலைக்காட்சி சவுண்ட் பைட் பார்ட்டி ஆக்குவது, போன்றவை சந்தைப்படுத்தலின் அங்கம். கருணாநிதி மோதிரம் வாங்கி அண்ணா கையால் போட்டுக் கொண்டது போல் தன் ஆக்கங்களை தானே பிராண்டிங் செய்வது எல்லாமே மார்க்கெடிங்கில் நியாயம்.

மோஸ்தர்களை மட்டுமே முன்னிறுத்தும் தமிழக சூழலுக்கு, போதிய அளவு மாற்று சிந்தனையாளர்கள் இல்லாதது முதல் காரணம். எதிர்கருத்து சொல்பவர்களுக்கு ஆங்கில எழுத்துகள் சோறு போடுகிறது என்பது முக்கிய காரணம்.

வீராணம், வளர்ப்பு மகன் கல்யாணம் & வீரப்பன்

’நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ ஏன் ஹிட் ஆனது?

இரு சாராருக்கு அந்தப் படம் பிடிச்சிருக்கும். செக்குமாடு வேலையில் ஓடும் நடுத்தர வயதினர் ஒரு இடைப்பட்ட காலகட்டத்திலேயே ஸ்தம்பிச்சு நின்னுட்டோம். அதை விட்டு வெளியே வரவேயில்ல. ரஜினி படம், (அ)திமுக ஆட்சி, டெண்டுல்கர் கிரிக்கெட்… இப்படியே தேங்கிட்டோம். இவங்களுக்கு ஹீரோவைப் பார்த்தா அப்படியே தங்களை பார்க்கிற மாதிரியே இருக்கு.

இன்னொரு சாரார்னு பார்த்தா அந்த நண்பர்கள் கூட்டம். தங்களை போராளிகளா உருவகிச்சு உலகை மாத்த நெனைக்கிறவங்க. கடுமையா முயற்சி எடுத்தாலும் எந்த பலனும் தராதவங்க. Efficent-ஆ இருப்பாங்க… ஆனா, effective-ஆ எதுவும் நடத்த மாட்டாங்க.

என்னை மாதிரி இவங்க ரெண்டு பேர் நடுவில் மாட்டிகிட்டு முழிக்கிற அந்த லேடி கேரக்டர்களும் இருக்கிறாங்க

மணி ரத்னத்தின் கடல் – FIR

மணி ரத்னம் படத்தை அவரின் பாடல் திரையாக்கத்திற்காக பார்க்கலாம். சொதப்பலான தில்ஸே முதல் அடிதடி ‘தளபதி’ வரை எல்லாவற்றிலும் பாந்தமான பெண் நாயகிகளுக்காக பார்க்கலாம். ‘ஓடிப் போயிரலாமா’ கீதாஞ்சலி ஒரு வரி ஆகட்டும்; முழம் நீளத்திற்கு முழங்கும் ’நானும் பப்ளிக்தான்’ சொல்லுகிற குரு ஆகட்டும்… வசனம் ஷார்ப் ஆக குத்துவதால் பார்க்கலாம்.

இங்கே அர்ஜுன் சொல்கிறார். ‘சாமர்த்தியக்காரர்களைக் கொன்று விட்டு நிம்மதியாக வாழ்வது ஒரு ரகம். திறமைசாலியை பக்கத்தில் வைத்து வளர்த்துக் கொண்டே ஜாக்கிரதையாக ராஜ்ஜியம் வளர்ப்பது இன்னொரு ரகம். எனக்கு இரண்டாவது வகைதான் பிடிக்கும். சோம்பேறி அல்ல… உஷார் பார்ட்டி ஆக்கும்!’

கண்ணை உருட்டுவதில் ஆகட்டும்; மனக் கொந்தளிப்புகளை நாடி நரம்புகளில் கொணர்வதாகட்டும்; ஏழ்மையும் சுய பச்சாதாபமும் இயலாமையும் வந்து போவதாகட்டும். அர்ஜுன் மிரட்டுகிறார்.

ஷங்கர் மாதிரி பிரும்மாண்டத்தை எடுப்பதிலும் மணி ரத்தினத்திற்கு நாட்டமில்லை. கேயெஸ் ரவிக்குமார் மாதிரி முழுக்க முழுக்க மசாலா வைக்கவும் மனம் ஒப்பவில்லை. ‘பரதேசி’ பாலா மாதிரி ஆல்டர்நேட் ஜாகையும் ஆண்ட்டி-ஹீரோ நாயகனையும் நிலைநிறுத்தவும் முயலவில்லை.

முழுக்க முழுக்க கிறித்துவ இறையியலை பொதுசனத்திற்கு விளக்கி இருக்கக் கூடிய களம். யேசு பிறக்கிறார்; கன்னி மேரி இருக்கிறார்; பிதா கட்டமைக்கிறார்; கொல்லப்படுகிறார்; அவரின் குமரன் மீண்டு எழுகிறார்; பரிசுத்த ஆவியில் முடிக்கிறார்கள்.

இது எல்லாம் ஜெயமோகன் புத்தகம் வெளியான பின் ரசிக்கலாம். இப்போதைக்கு அந்தமான் டூயட், கன்னியாகுமரி வட்டார வழக்கு, கார்த்திக் பையனின் அசத்தல் அறிமுகம் எல்லாம் கொறிக்கலாம்.

முத்துலிங்கம் கொடுத்த ட்ரீட்

முந்தைய முத்துலிங்கம் பதிவுகள்:

1. சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே

2. A Muttulingam is free! But, why?

3. A Muttulingam « Tamil Archives

4. அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

5. கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

6. நேர்காணல்: கண்ணாடியைப் பார்ப்போம்: அ. முத்துலிங்கம் – காலச்சுவடு

எர்டாக் கோக்னர்: நான் மொழிபெயர்க்கப் புறப்பட்டபோது சன்மானத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் சன்மானம் இல்லாமல் உலகில் ஒருவர் எப்படி வாழ முடியும்?

ஜி. குப்புசாமி: ஒரு மொழிபெயர்ப்பாளன் மூல நூலாசிரிய னோடு பக்கத்தில் உட்கார்ந்து வரிவரியாக விவாதித்தே மொழிபெயர்ப்பை முழுமையாக்க வேண்டும். தமிழில் இதற்கான வசதியை ஏற்படுத்தித்தருவதற்கு யார் இருக்கிறார்கள்?


புகழ்பெற்ற மகாபாரதக் கதையைக் கேட்டிருப்பீர்கள். யுதிஷ்டிரரின் ஆட்சியில் இருவருக்குள் சண்டை. நீதி கேட்டு வருகிறார்கள்.

ஒருவன் நிலம் வாங்கியவன். இன்னொருவன் அதை விற்றவன். பூமிக்கடியில் புதையல் கிடைத்திருக்கிறது. தற்போதைய சொந்தக்காரன் அவை எனக்கே சொந்தம் என்கிறான். வீட்டை கொடுத்துவிட்டவனோ, ‘அது என்னுடைய மூதாதருடையது. பூர்வீக சொத்து. எனக்கே உரிமை’ என்று நியாயம் சொல்கிறான்.

பக்கத்தில் இருக்கும் பீமனிடம் உதவி கோருகிறார் தருமர்.

பீமனுக்கு deja vu. ”நேற்று இதே வழக்கு என்னிடம் வந்தது அண்ணா. ஆனால், வேறு விதமாக அல்லவா இருந்தது! நிலத்தை இப்போது வைத்திருப்பவன் ‘புதையல் எனக்கு வேண்டாம்… அது விற்றவரின் பாட்டன் காலத்து ஆஸ்தி. அவரே எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்று வழக்கு தொடுத்தான். இன்று கடும் வாக்குவாதத்தில் இருக்கும் இன்னொருவனோ, ‘அந்த நிலத்தை விற்றபோதே எல்லா உரிமையும் விட்டுக் கொடுத்து விட்டேன். இந்த நகை நட்டு எல்லாமே அவனுக்குதான் பாத்தியதை’ என்று விட்டு கொடுத்து அல்லவா பேசினார்கள்!. இன்று எப்படி… இப்படி?”

தருமர் சொல்கிறார். “நேற்றோடு துவாபர யுகம் முடிந்தது. இன்றில் இருந்து கலியுகம் ஆரம்பித்தது.”

அ முத்துலிங்கம் துவாபர யுகத்தை சார்ந்தவரோ என்னும் சந்தேகம் எனக்கு உண்டு. கலியுக தமிழ் இலக்கிய களத்தில் வித்தியாசமானவர். ஆர்ப்பாட்டமான கருத்து, அதிர வைக்கும் பின்னணி இசை, பன்ச் டயலாக் எல்லாம் போடாத எழுத்தாளர்.

திடீரென்று அழைத்தார்.

முத்துலிங்கத்தோடு என்ன பிரச்சினை என்றால் உங்கள் சங்கோஜங்களைப் போக்கி உங்கள் பிரச்சினைகளை உங்களின் சுக துக்கங்களை பகிரவைத்து ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சாதாரணமாக லெக்சர் கேக்கப் போகும் வர்க்கத்தை சேர்ந்தவன் நான். கதா காலட்சேபம் போல் வாய்ப்பாட்டு கச்சேரி போல் ஸ்டாண்டப் காமெடி போல் பிறர் பேச, நான் வாய் பார்ப்பேன்.

ஆனால், முத்துலிங்கத்திடம் அந்த பாட்சா பலித்ததே இல்லை. கேள்விகளை தயார் செய்தாலும் சரி. விவகாரமான விஷயங்களை உருட்டினாலும் சரி. நம்முடைய கருத்தை வெளிக்கொணர்ந்து நம் பார்வையின் சார்பு நிலைகளை விளக்க வைத்து உற்சாகமூட்டுபவர்.

காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள சீனாவின் சங்க இலக்கியத்தை நேரடியாக தமிழில் பயணி மொழிபெயர்த்துள்ள – கவித்தொகை: வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை புத்தகத்தை சிலாகித்து பகிர்ந்தார்.

சம்பந்தமில்லாமலோ சைல்டிஷாகவோ I Saw a Peacock with a Fiery Tail நினைவுக்கு வந்தது.

முழுக்க முழுக்க கிண்டிலுக்கு மாறி விட்டார். ஆச்சரியமாக இருந்தது. தவணை அட்டை இலகுவான பிறகும் டாலர் தாளை நீட்டுபவனாக, நான் இன்னும் அச்சுத்தாள் புத்தகங்களை விட்டு விடாததை சொன்னேன். ரூபாய் நோட்டில் குறிப்பு எழுதுவது போல் கிண்டிலில் கிறுக்க முடியாததுதான் வருத்தம் என்கிறார்.

வேல்முருகனின் நினைவாற்றல் பிரமிக்கத்தக்கது. 105 ஆண்டுகளுக்கு இரு முறை நிகழும் வெள்ளி கோள் நகர்வு1631, 1639, 1761, 1769, 1874, 1882 and 2004ஆம் ஆண்டுகளில் தசை மாறியது என்பது போல் இன்னின்னார் என்னென்ன எப்பப்ப சொன்னார்கள் என்று விவரங்களும் விஷயங்களும் தூவ பொங்கல் மசாலாவும் மணக்க மாலை இனிதே நிறைவடைந்தது.

அடுத்த தடவை சூரியனின் முகத்தை வெள்ளி கடக்கும் ஆண்டு 2117. அப்பொழுது தமிழ் படைப்பிலக்கிய சூழலும் வலைப்பதிவின் வீச்சும் சூரியனாக இருக்குமா? வெள்ளியாக இருக்குமா? என்னும் கேள்விக்கு விடை தராமல் விடைபெற்றோம்.

Planet Venus is set to move across the face of the Sun as viewed from Earth.

Venus will appear as a tiny black disc against our star

இந்திரா பார்த்தசாரதி என்னும் புலியும் விமர்சக குடிகளும்

முந்தைய பதிவுகள்

1. குருதிப்புனல் (நாவல்)

2. இந்திரா பார்த்தசாரதி: ஆறாம்திணை

3. Interview with Indira Parthasarathy – Balaji Srinivasan

4. முரண்பாடுகள் – தமிழ் சிஃபி சமாச்சார் பத்திகளின் தொகுப்பு ::எதிர்வினை

5. ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன – இந்திரா பார்த்தசாரதி

விமர்சக மொழி

இந்திரா பார்த்தசாரதி என்னுடைய விருப்பமான எழுத்தாளர். அவருடைய நாவல்கள் வாசித்திருக்கிறேன். சிற்சில கட்டுரைகள் வாசித்த அளவில் சுவாரசியம் நிறைந்தவை. படிப்பதற்கு சுவையாக இருந்தாலும், மீண்டும் படிக்கத் தூண்டுபவை. மீண்டும் படித்தாலும் அனுபவ முதிற்ச்சிற்கேற்ப பொருள் கூட்டுபவை.

அன்னியப்படுத்தாத மொழி சுஜாதா வாகர்களைக் கவரும். இன்றைக்கும் பொருத்தமான சமூகக் களங்களும், குடும்பச் சூழல்களும் ரமணி சந்திரன் நேசர்களையும் இழுக்கும். ஆண் மனதின் உளவியலை விரிவாக வெளிக் கொணர்வதால் பெண் சினேகிதிகளிடம் இரவல் கொடுத்தால் பிரச்சினை வரலாம்.

உருவக விமர்சகம்

ஆர்வி-க்கு மகாபாரதம் உவப்பு என்பதால் ஒரு பாரதக் கதை.

அழகிய குட்டி கிராமம். குடியானவனின் வீட்டு கொல்லைப்புறத்தில் மாடு புல் மேய்கிறது. திடீரென்று புலி உறுமல் சத்தம். விவசாயி அழ ஆரம்பிக்கிறான். புலிக்கு ஒன்றும் புரியவில்லை. அழுவதற்கான காரணத்தை வினவுகிறது.

“காட்டின் அரசரே! எனக்கு திருமண வயதில் அழகும் அறிவுமுள்ள மகள் இருக்கிறாள். அவளுக்கு சரியான வரன் அமையவில்லை.”

“எந்த மாதிரி பையனாக பார்க்கிறாய்?” என்கிறது புலி.

“உன்னைப் போல் பலமும் புத்தியும் பராக்கிரமும் நிறைந்தவனாக இருக்கவேண்டும்.”

“அப்படியென்றால், நானே அவளை மணமுடிக்கட்டுமா?”

“இதேதான்… இதைத்தான் நானும் யோசித்தேன். ஆனால், நாமிருவரும் வேறு வேறு வர்க்கம். எனக்கு சரியென்றாலும் இஷ்டமித்திர பந்துக்கள் ஒப்புக் கொள்ளணும். அதற்காக ஊருக்குள் போய் உற்றார் உறவினரிடம் கேட்டு வருகிறேன்.”

சென்று வருகிறான். “என் தலைவரே! அவர்களுக்கும் பேருவகைதான். ஆனால், என் மகளிடம் ஒரு வார்த்தை கேட்டு விடுகிறேன்.”

புலி மீண்டும் விடை தர, வீட்டினுள் சென்று திரும்புகிறான். “ஓ ராஜாவே! என் மகளுக்கு முழு சம்மதம். ஆனால், அவளுக்கு உன் கூரிய நகத்தையும் கோரப் பற்களையும் பார்த்தால் குலை நடுங்குகிறது. அவளை ஆரத் தழுவும்போது அவை பதம் பார்க்குமோ என்று அச்சம் எழுகிறது.”

”ப்பூ… அவ்வளவுதானே. அவற்றை வெட்டி எறிந்து விடலாம்.”

கிராமத்தானும் புலியின் ஆயுதங்களை அதன் ஆணைப்படியே நீக்குகிறான். நீக்கிய அடுத்த கணமே குச்சி கொண்டு புலியை ஓட ஓட விரட்டி அடிக்கிறான்.


லக்ஷ்மி

’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’

இ.பாவின் கதைகளின் சிறப்பே அவரது கதாபாத்திரங்களின் தோல்விதான். தோல்வியென்றால் தாடி வளர்த்து, போதையோடு அருவெறுப்பை கூட்ட ஒரு நாயையும் இழுத்துக்கொண்டு திரியும் ரொமான்டிக் காதல் தோல்வியல்ல. தன் இயலாமையின் உச்சங்களை கண்ணாரக்கண்டு பின் சராசரி வாழ்க்கைக்குள் போய் தன்னை திணித்துக்கொள்ளும் தோல்வி – தன்னை பற்றி தானே வளர்த்துக்கொள்ளும் அறிவுஜீவி பிம்பம் கிழிந்து தொங்க தன்னுள் இருந்து வெளிவரும் தன் உண்மை உருவை உணர்ந்து தளர்ந்து போய்த்திரும்பும் கதாநாயகர்கள் இவரது கதைகளில் மட்டுமே சாத்தியம். எப்படியும் க்ளைமாக்சில் தான் ஹீரோவாய் இருக்கும் ஒரே காரணத்தாலேயே ஜெயித்துவிடும் ரக ஆட்களில்லை இவர்கள். அமிர்தத்தை போன்றவர்களின் கதையை எழுத அபார துணிச்சல் வேண்டும் – இவர்களைத்தான் தினசரி வாழ்வில் நாம் அதிகம் சந்திக்கிறோம் (சில சமயங்களில் கண்ணாடியில் கூட சந்திக்க நேரிடலாம்.)

யோசித்து பாருங்கள், இதே கதையை சிந்து பைரவி எப்படி சொன்னது என்று – கதாநாயகனின் சறுக்கல்களை கூட அறிவுஜீவித்தன ஜிகினாத்தூவி அழகாக்கி விற்கும் சராசரி கதைகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது இ.பாவின் துணிவு நமக்கு வியப்பையளிக்கிறது.


பாவண்ணன்

தாவியலையும் மனம் (எனக்குப் பிடித்த கதைகள் – 71 ) இந்திரா பார்த்தசாரதியின் ‘நாசகாரக்கும்பல்’

குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதே பெரிய மன நிம்மதி. நிம்மதியைத் தேடிய வாழ்க்கை என்பது வாய்ப்பு வசதிகளைப் பெருக்கிக்கொள்வதிலோ அல்லது கூடுதலாகக் கிட்டுகிற சில லட்சங்களுக்காகப் பிடிக்காத வேலையைச் செய்வதிலோ அல்ல என்பதுவும் புரிந்தது. தாவி அலைகிற மனத்தைக் கட்டிப்போடும் சக்தி இந்த உணர்ச்சிக்கு இருக்கிறது. இந்த எண்ணம் மனத்தில் நிழலாடும்போதெல்லாம் இந்திரா பார்த்தசாரியின் ‘நாசகாரக் கும்பல் ‘ என்னும் சிறுகதையும் நிழலாடும்.


ராஜ் சந்திரா

ஒரே தராசை எல்லா எழுத்தாளர்களுக்கும் உபயோகப்படுத்துவதில் வரும் விபரீதம் இது. இ.பா. கதைகள் நேரடியாக வாசகனிடம் பேசுபவை. அதன் நோக்கம் ‘இது போன்ற விளையாட்டுகள் உன் முன்னால் நடப்பவை’ என்று கூறுவதுடன் முடிந்துவிடும். இதில் ‘தரிசனம்’ பார்ப்பது உங்கள் பிழை. இவ்வகைக் கதைகளும் நமக்குத் தேவை என்று நான் நினைக்கிறேன். இவ்வகையான அரசியல் அங்கதங்கள் investigative journalism தரும் திருப்தி.

இ.பா எதை நினைத்து ‘குருதிப்புனல்’ கதையை நகர்த்தினாரோ அது சரியாக எடுபடவில்லை. பலரும் நாயுடுவின் ஆண்மை குறையைத்தான் கண்டார்கள். ஆனால் நாயுடுவின் சாதி வெறி (உ-ம். ‘பறையன் என்னை அடிக்கிறான்’ என்று கத்தும் முக்கியமான காட்சி) அவர்களுக்குத் தெரியவில்லை. Characterization-ல் இ.பா-வின் தோல்வி இது.

அவரின் கதை மாந்தர்களின் உரையாடலில் இ.பா. பிரகாசிக்கிறார் என்று சொல்லலாம். உதாரணமாக ‘மாயமான் வேட்டை’, ‘ஆகாயத் தாமரை’, ‘குருதிப் புனல்’

நாவல்களில் அவர்கள் வைக்கும் வாதங்கள் நிச்சயம் revisit செய்யும் தகுதி பெற்றவை. ஆனால் அ.மி-யின் தீவிர வாசகனாகிய எனக்கு இ.பா-வின் மாந்தர்கள் தரையில் கால் பாவாமல் நடக்க முயன்று கீழே விழுபவர்கள். ஆனால் கீழே விழுவதையும் இ.பா-வே நிகழ்த்துகிறார், as a part of the story.

இ.பா-வின் பாணியில் குறியீடுகளுக்கு இடம் கிடையாது. ‘கொஞ்சமாகக் கொடுங்க ஐயா’ என்றாலும் எல்லாவறையும் கொட்டுவார். அவரின் கதைகளைப் படிக்கும்போது வரும் களைப்புக்கு இதுவும் ஒரு காரணம். ‘ஆகாயத் தாமரை’-யில் கதை நாயகன் தன் frequency-க்கு யாரும் இல்லை என்ற வெறுப்பில் இறுதியில் ஒரு விவசாயியாக/கூலித் தொழிலாளியாக மாறி விடுவான். அதை கதாநாயகி மற்றவர்கள் அடைந்த தோல்வியாக நினைப்பாள். அந்த நினைப்பையும் அவர் வரிகளாக எழுதி நம்மை சிரமப் படுத்துவார். வாசகர்கள் புத்திசாலிகள் என்பதை இ.பா ஒப்புக் கொண்டதில்லை.

அவரின் சிஷ்யரான ஆதவன் கதைகளுக்கும் மேற்சொன்னவை பொருந்தும்.


அ.ராமசாமி

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

இ.பா., சிறுகதைக்கான இலக்கணங்களையோ வரையறைகளையோ குறித்துக் கவலைப் படுபவரல்ல. விசாரணைக்குட்படுத்த விரும்பும் மனப்பாங்கு மட்டுமே அவருக்கு முக்கியம்.. அவரது சிறுகதைகள் ஒரு மையப்புள்ளியில் தொடங்கித் தனி மனிதப் பிரச்சினைக்குள் செல்வது போல் தோன்றினாலும், கதை முடியும் போது சமூகத்தின் பொதுவியாதிகளில் ஒன்றை விசாரணைக்குட் படுத்தும் நோக்கத்தை நிறைவேற்றும் தன்மை கொண்டவைகளாகவே விளங்குகின்றன.


Videos and Interviews

Indra Parthasarathy Documentary Part 1