Tag Archives: Library

நியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்

அனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்

Nizhalil-Jayamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NY-USA-America-Authors-Tamil

மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NYC-US-America-Writers-Tamil

Writer Jeyamohan visit in America

My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்


ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

ஜெயமோகனைக் கவர்ந்த தத்துவவியல் புத்தகங்கள்

புத்தக கடையில் ஜெமோ விரும்பி வாசிக்க எடுத்த நூல்களின் பட்டியல்:

1. Confessions of a Philosopher – Bryan Magee

2. If on a winter’s night a traveler – Italo Calvino

3. 2666 – Roberto Bolano

4. Ludwig Wittgenstein: The Duty of Genius – Ray Monk

5. Pragmatism: The Classic Writings – Edited by H S Thayer

6. The Meaning of Truth: William James

7. Evolution and the Founders of Pragmatism: Philip P Wiener

8. The Geography of Thought: Richard E Nisbett

ஜெயமோகன்: சில குறிப்புகள்

இணைய அறிமுகம், சிறுகுறிப்பு, தகவல் கட்டுரை: Jeyamohan Links: Issues, Controversy, Opinions, Interviews, Fiction « Tamil Archives

வார்த்தைகளின் விளிம்பில்: எழுத்து – ஜெயமோகன் – தொடர்

இன்றும் வலைபதிவர்கள் மட்டுமல்லாமல், சமகால எழுத்தாளர்களுக்கும் ஆதர்சம் சுஜாதாதான். அவர் மேம்போக்காகக் கூறிச் சென்ற வாக்கியங்களை, வேதமாகக் கொண்டவர்கள் நாம். இப்போதும் என்னால் அவர் எழுதிய பல போதனைகளை (க்யூவில் நிற்கும்போது புத்தகம் எடுத்துச் செல்லுங்கள்!) நினைவு கூற முடியும். அவர் minimalist திறமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது.

இப்படிப்பட்ட பெருமைகள் ஜெயமோகனுக்குக் கிடையாது.

குழந்தைகளைப் பற்றி பேசும்போது, ‘அவனோடயும் இவளோடயும் கம்பேர் செய்து பார்க்காதே’ என்போம். சொல்லிவிட்டு, முதல் ரேங்க், கூடப் படிக்கிறவனுக்கு வரும்போது உனக்கு மட்டும் என்ன கேடு? என்றும் தொடர்வோம். எழுத்தாளர்களை ஒப்பிடக் கூடாது. அப்படி சொல்லிவிட்டு, ஜெயமோகனை நான் படித்த வேறு சிலரோடு ஒப்பிட்டுப் பார்த்தால்:

  1. சுந்தர ராமசாமி: ஜே.ஜே சில குறிப்புகள் போல் path breaking; கூட முதல் வாசிப்பிலேயே புரிந்தாலும், வாசகருக்குக் கிடைக்கும் சுவையில் மயங்கி மீண்டும் வாசிக்க அழைப்பது; இதெல்லாம் ஜெமோ-விடம் எனக்கு கிடைக்கவில்லை.
  2. அசோகமித்திரன்: படிக்க கூடிய சைஸ்; ‘கரைந்த நிழல்கள்’ ஏழ்மையைக் காட்டினாலும் ஆனந்த விகடன் சந்தாதாரர் நெருங்கக் கூடிய மாதிரி போகும். ‘காடு’ மாதிரி முன்னுரைகள் பயமுறுத்தாது.
  3. இந்திரா பார்த்தசாரதி: விஷயம் நிறைய தெரிந்தாலும் ஓவர்-ரைட்டிங் இருக்காது. சட்டு புட்டுனு மேட்டருக்கு வருவார். கதாபாத்திரங்கள் எல்லாமே அறிமுகமானவை என்றாலும் அனைத்தும் நீண்ட நாள் ஒட்டிக் கொண்டு விவாதம் எழுப்பும்.
  4. கௌதம சித்தார்த்தன்: கிராமியக் களம். கிட்டத்தட்ட ஜெயமோகன் சிறுகதை மாதிரி மெதுவான ஆரம்பம் என்றாலும் ஈர்க்கும் கதையமைப்பு; துள்ளல் ஓட்டம்; குறியீடு கொண்டிருந்தாலும் துருத்திக் கொண்டு நிற்காது. அதாவது அதிகம் பேசப்படும் ‘டார்த்தீனியம்‘ மாதிரி இவரும் கலக்கல் படைப்பு பல கொடுத்துள்ளார். ஏனோ, சவுண்ட் விடுவதில்லை.
  5. சுதேசமித்திரன்: ஒரு தேர்ந்த சிறுகதையாசிரியர், எவ்வாறு அடுத்த கட்டமாக நெடுங்கதைக்கு மாறுவது என்பதை இவரிடம் பார்க்கலாம். இரண்டு இலக்கிய ஃபார்ம்களிலும் என் மனதைக் கவர்ந்தவர். இ.பா மாதிரியே தெரிந்த விஷயங்களின் இருண்மையை தெரியாத, யாரும் சொல்லத் துணியாத வகையில், அட்வைஸ் மழையாக்காத விதத்தில் லாவகமாக இடுபவர்.
  6. எஸ் ராமகிருஷ்ணன்: இவருடைய சிறுகதைகள் are much much better presented than his நாவல். நாவல் என்று வந்தால் காப்பியமாக, காவியமாக, பக்கம் பக்கமாக போக வேண்டும் என்பதை ஜெயமோகன் மாதிரி வலுக்கட்டாயமாக வைத்துக் கொண்டிருக்கிராரோ என்னும் சந்தேகம் வரவைப்பவர். At least, ஜெயமோகனாவது ‘பின் தொடரும் நிழலின் குரல்’ போன்றவற்றில் அலுக்கவைக்கமாட்டார். ஆனால், ஜெமோவின் ‘லங்கா தகனம்’, ‘பத்ம வியூகம்’ போன்றவற்றை விட இவரின் comparable கதைகள் என்னைக் கவர்ந்தது.
  7. அ. முத்துலிங்கம்: முதல் வாசிப்பிலேயே சொக்குப்பொடி போடுபவர். எதார்த்தத்துடன் வன்முறை காட்டாத அங்கதம் கொடுப்பார். அன்றாட வாழ்வில், மேட்டுக்குடி வாசகர் பார்த்திருக்கக் கூடிய சம்பவங்களைச் சொன்னாலும் சுவாரசியமாகச் சொல்பவர்.
  8. நகுலன்: One of a kind. எழுத்து புரியும்; அணுக முடியும். அனுபவத்திற்கேற்ப, சமயத்திற்கேற்ப அசாத்தியமாகவும் தத்துவமாகவும் அசை போடக் கூடியதாகவும் இருக்கும்.
  9. பாவண்ணன்:எது எழுதினாலும் ‘நன்றாக இருக்கும்’ என்னும் consistency. ஆர்ப்பாட்டமின்மை. அறியாத விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறேன் பார் என்னும் அகம்பாவமின்மை. எழுத்தில் அசோகமித்திரனிடம் பணிவு கலந்த விட்டேற்றித்தனம் தெரியும் என்றால், இவரிடம் அடக்கம் மட்டும் தெளிந்த ஆர்வம் ததும்பும்.
  10. சுஜாதாவைக் குறித்து ஏற்கனவே நிறைய சொல்லியாச்சு.

இப்படி தமிழுக்கு 10 பேர் வைத்துக் கொண்ட மாதிரி நோபல் விருது வென்றவர்களையும், நான் வாசித்த ஆங்கிலப் பெருசுகளான, நய்பால், சல்மான் ருஷ்டி, கோட்ஸி போன்றோருடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஜெயமோகனுக்கேயுரிய தனித்துவ இலக்கிய குணங்கள் என்று பார்த்தால்.

  1. சுஜாதாவிற்கு பின் வெரைட்டி. கேட்டதும் எழுதிக் கொடுக்கும் வேகம். சினிமா, சிறுகதை, சங்க இலக்கியம், பக்தி (ஆன்மிகம்?) சகலமும்!
  2. சுந்தர ராமசாமியிடம் கருத்து கேட்டால் பேசினால் முத்து உதிர்ந்திருமோ என்றுதான் இருக்கிறது. இன்றைய 140 எழுத்து அடக்குமுறை ட்விட்டர் காலத்தில் கூட ஜெயமோகனிடம் சுருக்கமின்மை. இது பெருகி வரும் சிறு பத்திரிகை பதிப்பாளருக்கு வசதி.
  3. சாரு நிவேதிதாவிற்கு எதைப் படிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தால், ஜெமோவிற்கு அதைப் படிக்கும் பொறுமையும், வாசித்த பிறகு, takeawaysஐ தன்னுடைய பாணியில், இந்திய கலாச்சார தர்க்கம் கொண்டு விளக்க முடிவது.
  4. அனுபவம். எந்த எழுத்தாளர் இங்கே சாமியார்களுடனும், பிச்சைக்காரர்களுடனும், புத்தகம் வாசிக்கும் பெருமக்களால் இன்ன பிற அசூயை கொண்டு ஒதுக்கப்படுபவர்களுடனும் வாழ்ந்திருந்துவிட்டு எழுத முடிகிறது?
  5. பிற மொழித் தேர்ச்சி: அமெரிக்காவில் இருந்து கொன்டு ஆங்கில இலக்கியங்களையும், மேல்நாட்டு சஞ்சிகைகளையும், அந்த ஊர் ஊடகங்களின் மாற்றுப் பார்வையும் தெரியவரும்போது மனது விசாலமடைகிறது. இதுவெல்லாம், சிறுவனாக இருந்தபோதே கிடைத்த சூழல்.
  6. தொன்மம், மரபு போன்றதெல்லாம் எழுதக்கூடாதவை; taboo போல் தூரம்னா பார்த்த சமயத்தில் அதையெல்லாம் புதுப்பிக்கத் தெரிந்தவர்.
  7. Convention இதுதான். இப்பொழுது இதுதான் in-thing என்பதால் செவ்வியல் outdated; மார்க்சியமும் மாய எதார்த்தமும் மட்டுமே எழுதவேண்டும் என்று peer pressureகளுக்கு உள்ளாகாமல் ட்ரென்ட் செட்டராய் இருப்பது.
  8. நகைச்சுவை இல்லாத ஆக்கம் பிரசங்கியின் உரை; நகைச்சுவை மட்டுமே கொண்ட இலக்கியம் சிரிப்பாக அர்த்தமிழக்கும் அபாயம் உண்டு. இரண்டையும் கலக்கத் தெரிந்தவர்.
  9. தன்னை முன்னிறுத்திக் கொள்வது; ‘விஷ்ணுபுரம்‘ எழுதியபிறகு, என்னைப் போல் பலரும் ‘என்ன இருக்கு இதில!?’ என்று புறந்தள்ளும்போது சினம் தலைக்கேறாமல் விளக்கிப் பேச வேறு எந்த தமிழ் எழுத்தாளருக்கும் பொறுமையும் வாதத்திறமையும் நேரமும் படைப்பூக்கமும் இருக்காது.
  10. ஒரே கதையை விதவிதமாய் எழுதியவர் பலர். வண்ணதாசன், கி.ராஜநாராயணன் உட்பட பலரும் அயற்சி தருபவர்கள். தொகுப்பை வாங்கினால், வருடத்திற்கொன்றாய் படிப்பது உசிதம். ஜெயமோகனிடம் இந்த ரிஸ்க் இல்லை.

புத்தக லிஸ்ட்

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) –  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40

    பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…

    Books

    எட்டு வயது மகளின் அரை மணிநேரப் பொழுதைப் போக்க புத்தகங்களைக் குறித்து சிறுகுறிப்பு வரைய சொன்னதன் விளைவு:

    Books are interesting because they can bring you into a imaginary world. For example pretend you have never played soccer and you wanted to see what soccer was like so you decided you were going to read a book about soccer and suddenly it feels like you have played soccer after you read the book. From my school library I brought a book called “Punished”! I already read 1 chapter and I can not wait until the next chapter. That made me feel books I read are fiction books. I always daydream and If I read non-fiction books I only read nocturnal or biography books.

    7 Books I had skimmed recently

    1. The Commission: WHAT WE DIDN’T KNOW ABOUT 9/11
    by Philip Shenon
    41cruj5gjbl_bo2204203200_pisitb-sticker-arrow-clicktopright35-76_aa240_sh20_ou01_

    2. The World Is What It Is: The Authorized Biography of V. S. Naipaul
    by Patrick French
    41bpqmpk4l_bo2204203200_pisitb-sticker-arrow-clicktopright35-76_aa240_sh20_ou01_

    3. The Age of Entanglement: When Quantum Physics Was Reborn
    by Louisa Gilder
    51sdobbrapl_sl500_aa240_

    4. Reborn: Journals and Notebooks, 1947-1963
    by Susan Sontag (Author), David Rieff (Editor)
    41zdgsibdil_sl500_aa240_

    5. The World Without Us
    by Alan Weisman
    41xg6tsofrl_bo2204203200_pisitb-sticker-arrow-clicktopright35-76_aa240_sh20_ou01_

    6. I Was Told There’d Be Cake
    by Sloane Crosley
    51ejijbuvql_bo2204203200_pisitb-sticker-arrow-clicktopright35-76_aa240_sh20_ou01_

    7. I Hope They Serve Beer In Hell
    by Tucker Max
    419mgfzlwl_bo2204203200_pisitb-sticker-arrow-clicktopright35-76_aa240_sh20_ou01_

    ஒளிப் பாம்புகள் – பா ராகவன்

    sex-swamis-book-reviews-tamil-art-allowing-let-goபுத்தக விவரம்:
    தலைப்பு: நிலா வேட்டை
    முதற் பதிப்பு: அக்டோபர், 1998
    வானதி பதிப்பகம்
    விலை: ரூ. 32.00

    ரா.கி. ரங்கராஜன் முன்னுரையில் இருந்து சில பகுதி:

    ‘ஒளிப் பாம்புகள்’ யதார்த்தத்தில் இருந்து விலகி, அதே சமயம் சுவாரசியமான பயமுறுத்தலைக் கொண்ட கதை. ஒரு கணம் படமெடுத்து ஆடி மறுகணம் சரசரவென்று வழுக்கிக் கொண்டு ஓடும் நாகப் பாம்பு கதையிலும் இருக்கிறது; நடையிலும் இருக்கிறது!

    When you turn the last page and feel a little as if you have lost a friend – அதுவே ஒரு நல்ல கதையைப் படித்தோம் என்பதற்கு அடையாளம்.

    -oOo-

    பா ராகவன் நன்றியுரையில் இருந்து சில பகுதி:

    power-hungry-flickr-cord-wire-snakes-paraஇந்தத் தொகுப்பில் உள்ள இரண்டு குறுநாவல்களுமே மிகவும் நெருடலான விஷயங்களை விவரிப்பவை. கொஞ்சம் பிசகினால் ஒரு விரச உற்சவமே நடந்துவிடும் என்பது போல. ஆனால், எழுத்தில் ஆடையவிழ்ப்புச் செய்யாத ஆணமையை கல்கி எனக்குக் கொடுத்தது.

    முற்றிலும் குறியீட்டு வகை சார்ந்த, சம்பிரதாய வடிவமற்ற ‘ஒளிப்பாம்புகளை’யும் கல்கியில்தான் எழுதினேன் என்பது பெரும்பாலானோருக்கு வியப்புத் தரலாம்.

    -oOo-

    கதையில் கவர்ந்த சில இடம்:

    • “விலக்கி வைக்க சரியான வழி, கடந்து போவதுதான்!” என்றார் சாமி. “சொந்தக்காரனா இல்லாமெ, பார்வையாளனா மட்டுமே இருக்கணும்னா, அதுக்கான உபாயம். தந்த்ரம் படிக்கிறவன் ஒரு பாம்பாட்டி. அவன் மனசு ஒரு மகுடி.”
    • “கெடைச்சது போதும்னு உட்கார்ந்துடறவன் சித்தன். இன்னும் வேணும்னு போறவன் யோகி. அப்படியே தேடிட்டுப் போக கடேசியிலே மெய்யா ஒண்ணைப் பார்த்துட்டு மிச்சமெல்லாம் ஒண்ணுமில்லேன்னு சும்மா நிக்கறவன் ஞானி!”

    -oOo-

    இரண்டு வரி விமர்சனம்:

    snake-fountain-king-throne-control-oli-paambugalசெப்டம்பர் 3, 2004 சங்கர்ராமன் கொலை செய்யப்பட்டார். நல்லவேலை ‘தவத்திரு பிரம்மானந்த சாமி டிரஸ்ட்பள்ளியின் தலைமை ஆசிரியர் தப்பித்து விட்டார்.

    பாம்பு என்பது அஃறிணை; சாமியார் என்பது உயர்திணை. பாராவின் நடையில் சாமி திடீரென்று உயர்திணை விகுதியில் உலா வருகிறது; அதே ஆளுக்கு அன்னியோன்யமான அஃறிணையும் இட்டு கௌரவிக்கிறார்.

    நாச்சியார் திருமொழியில் அஃறிணைப் பொருளான வெண்சங்கைப் பார்த்து ஆண்டாள் ‘சங்கனாயா’ என்பார். சங்குஅனாயா என்றால் சங்கர்+ஐயா என்றும் பிரிக்கலாம். அஃறிணைச் சங்கு உயர்திணை மரியாதை பெற்றதே நாச்சியார் அனுபவம். தெய்வாம்சம் தருபவர் மனித மாச்சர்யம் பெறுபவது பாரானுபவம்.

    வாய்திறந்து பேசுகிற உயிர்கள் உயர்திணை; வாய் பேச இயலாதவை அஃறிணை. மனதிற்குள் ஆசையை வைத்து குமைவது அஃறிணை; வெளிப்படையாக லஜ்ஜையில்லாமால் போட்டுடைத்து ஆசைக்கு அடிமை என ஒப்புதல் வாக்குமூலம் சொல்வதால் உயர்திணை ஆகிவிடுவோமா?

    மக்கள், தேவர், நரகர் என்னும் முத்திறத்தாரும் ஏனைய உயிர்களை நோக்க உயர் ஒழுக்கம் (உயர்திணை) உடையவர் என்றும் மற்ற உயிர்கள் உயர்வு அல்லாத ஒழுக்கம் (அல் + திணை) உடையன என்றும் நம் முன்னோர் பிரித்துக் கூறினர். ஆறறிவு படைத்த உயர்திணை மாந்தர் ஆறாவது அறிவு கொண்டு அஃறிணை பாம்புகளை ஒளி என்னும் உயிரற்றவைகளாக ஆக்கினால் உயர்திணை.

    அஃறிணை பாம்புகளுக்கு ஒளி கிடைத்தால் மோட்சம்!

    பா.ரா.வின் முந்தைய சிறுகதை: உண்ணி – பா. ராகவன்