Tag Archives: தமிழ்

நியு இங்கிலாந்து தமிழ் இலக்கிய சங்கம்: எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் வாசகர் சந்திப்பு

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் தன்னுடைய வாசகர்களை நியு இங்கிலாந்து பகுதியில் சந்திக்கிறார்.
அவரைக் குறித்த பின்புலம் + அறிமுகம்: http://www.sramakrishnan.com/?page_id=63

இடம்: Madras Grille, செம்ஸ்ஃபோர்டு

நாள்: வியாழன், ஜூலை 12, 2012
நேரம்: ஆறு மணி மாலை
முகவரி7 Summer Street  Chelmsford, MA 01824
தொடர்புக்கு: bsubra at gmail dot com

பாஸ்டன் பக்கம் இருக்கும் நண்பர்களுக்கும் தமிழ் நூல்வாசிகளுக்கும் தெரியப்படுத்தவும்.

தென்றல் மாத இதழ்: மே 2012: ஆர். பொன்னம்மாள் – அரவிந்த்

நன்றி: எழுத்தாளர் பகுதி: அமெரிக்காவில் வெளியாகும் தென்றல் பத்திரிகை

தமிழ்ப் படைப்பிலக்கிய உலகில் வரலாறு, சமூகம், நகைச்சுவை போன்றவற்றைப் போலவே ஆன்மீகத்திற்கும் மிக முக்கிய இடமுண்டு. ஆறுமுக நாவலர் தொடங்கி வேதநாயக சாஸ்திரியார், ரா. கணபதி, பரணீதரன், மணியன், லக்ஷ்மி சுப்ரமணியம் எனப் பலர் இதன் வளர்ச்சிக்குப் பங்காற்றியுள்ளனர். இவர்கள் வரிசையில் மூன்று தலைமுறைகளாக எழுதி வருபவர் ஆர். பொன்னம்மாள். இவர், மே 21, 1937 அன்று சென்னை, திருவல்லிக்கேணியில் ராமசுப்ரமண்யம்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகளாகத் தோன்றினார். பள்ளிப்படிப்பு சென்னையில். ஏழு வயதில் தந்தையை இழந்தார். அதன் பின் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே இவரால் கற்க முடிந்தது. குடும்பம் கல்லிடைக் குறிச்சிக்குக் குடி பெயர்ந்தது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, ஜில்ஜில், டமாரம், பாப்பா மலர், பாலர் மலர், கல்கண்டு போன்ற பத்திரிகைகள் இவரது வாசிப்பார்வத்தைத் தூண்டின. வளர வளர கல்கி, தேவன், பி.எஸ். ராமையா, எஸ்.வி.வி., எல்லார்வி, லக்ஷ்மி போன்றோர் எழுதிய நூல்கள் படிக்கக் கிடைத்தன. அவை இவரது அறிவை விசாலமாக்கியதுடன் எழுதும் ஆர்வத்தையும் தூண்டின.

தனது வீட்டைச் சுற்றி வசித்த குழந்தைகளுக்கு தினமும் கதைகள் சொல்வது வழக்கமானது. ‘தமிழ்நாடு’ இதழ் அறிவித்த சிறுகதைப் போட்டிக்கு சிநேகிதி ருக்மிணியின் தூண்டுதலால் ஒரு சிறுகதையை எழுதி அனுப்பினார். ஆசிரியரின் பாராட்டுதலுடன் ‘இரட்டைப் பரிசு’ என்ற அச்சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து தமிழ்நாடு இதழிலேயே ‘அன்பு மனம்’, ‘வழிகாட்டி’, ‘இன்ப ரகசியம்’, ‘விதி சிரித்தது’, ‘கண் திறந்தது’, ‘சந்தேகப் பேய்’ போன்ற பல சிறுகதைகள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. 1958ல் எஸ்.எம்.சுப்ரமண்யத்துடன் திருமணம் நிகழ்ந்தது. குடும்பப் பொறுப்பு மிகுந்ததால் தொடர்ந்து எழுத இயலவில்லை என்றாலும் புத்தக வாசிப்பும் நேசிப்பும் தொடர்ந்தது. கணவர் ஒரு பத்திரிகை ஆர்வலராக இருந்ததால் பத்திரிகைகள், நாளிதழ்கள் வாசிக்கக் கிடைத்தன. கணவரின் உறுதுணையுடன் ஜோதிடம் மற்றும் சம்ஸ்கிருதத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார்.

1976ல் தினமணி நாளிதழ், குழந்தை எழுத்தாளர் சங்கப் போட்டி ஒன்றை அறிவித்தது. குடும்பச் சூழலால் அதுவரை எழுதாமலிருந்த பொன்னம்மாள் தனது குழந்தைகளின் தூண்டுதலால் ‘கடவுளின் கருணை’ என்ற சிறுகதையை எழுதி அனுப்பினார். அது பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் பரிசும் கிடைத்தது. தொடர்ந்து சில சிறுகதைகளயும் வானொலி நாடகங்களையும் எழுதிய போதும் முழுமையாக எழுத்தில் ஈடுபட இயலவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுத ஆரம்பித்தார். 1983ல் இவர் எழுதிய ‘கருணை விழிகள்’ என்ற நாவல் தங்கப் பதக்கம் பெற்றது. அது பின்னர் கோகுலத்தில் தொடராக வெளிவந்து சிறுவர்களின் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து தீவிரமாக எழுத ஆரம்பித்தார்.

இவரது முதல் சிறுகதைத் தொகுப்பான ‘கடவுளின் கருணை’யை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டு ஊக்குவித்தது. இவர் எழுதிய ஆயிரம் பக்கங்களுக்கு மேல் உள்ள ‘பாண்டுரங்க மகிமை’யை பிரபல கிரி டிரேடிங் நிறுவனம் வெளியிட்டது. தொடர்ந்து எழுதுமாறு அதன் உரிமையாளர் கிரி ஊக்குவிக்கவே பல நூல்களையும், ‘காமகோடி’ இதழுக்காகப் பல்வேறு, கதை, கட்டுரை, வரலாற்றுச் சம்பவங்களையும் எழுத ஆரம்பித்தார். குறிப்பாக இவர் குழந்தைகளுக்காக எழுதியிருக்கும் ‘கருணை விழிகள்’, ‘பறவைகள் பலவிதம்’, ‘பொன்மனம்’, ‘திருக்குறள் கதைகள்’, ‘பாட்டி சொன்ன கதைகள்’ (மூன்று பாகங்கள்) போன்ற 50க்கும் மேற்பட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கன. ‘ஸ்ரீமத் பாண்டுரங்க விஜயம்’, ‘சிவலீலை’, ‘நாராயணீயம்’, ‘தேவி திருவிளையாடல்’, ‘கருட புராணம்’, ‘நாலாயிர திவ்ய பிரபந்த விளக்கம்’, ‘பரமாச்சர்யாள் பாதையிலே’, ‘குரு ரத்னங்கள்’, ‘சத்ய சாயி வரலாறு’, ‘மகாபாரதக் கதைகள்’ போன்ற ஆன்மீக நூல்கள் பல பதிப்புகள் கண்டவையாகும். குறிப்பிடத்தக்க வகையில் சில நாடகங்களையும் பொன்னம்மாள் எழுதியிருக்கிறார். அவற்றில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்துள்ளது. குழந்தை இலக்கியம், ஆன்மீகம், நாவல், சிறுகதை, வாழ்க்கை வரலாறு என 90 நூல்கள் வரை எழுதியிருக்கும் பொன்னம்மாளின் படைப்புகளை வானதி பதிப்பகம், நியூ ஹொரைஸன் மீடியாவின் தவம் பதிப்பகம் போன்றவை தொடர்ந்து வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றன. இவரது நூல்களுக்கு தமிழக அரசுப் பரிசு, மத்திய அரசின் சிறந்த நூல் விருது, குழந்தை எழுத்தாளர்கள் சங்கப் பரிசு, ஏவிஎம்மின் தங்கப் பரிசு, ஸ்டேட் பாங்க் பரிசு, பபாசி விருது, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா விருது போன்றவை கிடைத்துள்ளன.

“இன்றைக்கு டிவி மற்றும் பெரியவர்களின் ஒத்துழைப்பின்மை குழந்தை இலக்கியத்தை நசிய வைத்திருக்கிறது. குழந்தைகளும் சீரியல் பார்ப்பதற்கு ஃபோர்ஸ் செய்யப்படுகிறார்கள். இதனால் ஏற்படும் விளைவு குழந்தைகள் தங்களின் உலகத்தை இழக்கிறார்கள். முன்பு பெரியவர்கள் குழந்தைகளை ஒதுக்கும்போதோ, ஒதுங்கும்போதோ – புத்தகம் தோழன் ஆனது. புத்திசாலித்தனம் வளர்ந்தது. ஆனால், இன்று டிவி வீட்டுக்குள் வந்துவிட்டபின் நிலைமை மாறிப்போய் விட்டது” என்று கூறும் பொன்னம்மாள், “சிறுவர் இலக்கியத்தில் அழ. வள்ளியப்பாவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது. அறிவியல் சமாசாரங்களை ஈ.எஸ். ஹரிஹரன் எளிய முறையில் கதைகள் மூலமாக சொல்கிறார். தாவரங்கள், மிருகங்கள் குறித்த வாண்டுமாமாவின் புத்தகங்கள் குறிப்பிடத்தக்கனவாய் இருக்கின்றன. மா.கோதண்டராமன் எழுதிய அறிவியல் கட்டுரைகள் ஆழமாகவும் சுவையாகவும் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் இருக்கும். பூவண்ணன் நடைமுறைக்கு ஏற்ப புனைகதைகள் படைக்கிறார். சௌந்தர் எழுதும் குழந்தைகளுக்கான படைப்புகளும் அவசியம் சிறுவர்களின் புத்தக அலமாரியில் இருக்கவேண்டும். ஆனால் இன்று குழந்தை இலக்கிய வளர்ச்சி மிகவும் பின்தங்கியே இருக்கிறது” என்று வருந்துகிறார்.

இன்றைய சிறார் இதழ்கள் குறித்து, “குழந்தைகளே எழுதும் புதிர்கள், ஓவியங்கள் அவர்களின் திறமையை வெளிப்படுத்துகிறது. தமிழார்வத்தையும் வளர்க்கிறது. குழந்தைகளுக்கு மட்டும் நடத்தப்படும் சிறுகதைப் போட்டி, அறிவியல் போட்டி போன்றவையும் வரவேற்கத்தக்கன. சாதனை புரிந்தவர்கள், ரோல் மாடல்கள், பல்துறை விற்பனர்கள், உடல் ஊனமுற்றவர்கள் என பலரின் வாழ்க்கை குறிப்புகளும், சரிதைகளும் குழந்தைகளுக்கு ஊக்கம் கொடுக்கிறது. தூண்டுகோலாக அமைகிறது.” என்கிறார். “குழந்தைகள் ஈரமண். அனைத்து ஊடகங்களும் பத்து சதவீதமாவது முழுக்க முழுக்க வயதுவாரியாகக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டும். பொறுமை, முன்னேற்றம், தன்னம்பிக்கை, அன்பு, பணிவு, சேமித்தல், ஆடம்பரம் தவிர்த்தல், நேரம் விரயமின்மை, காலங்கள் மாற்றம், கனவு, நம்பிக்கை போன்றவற்றை விதைத்து வருங்காலத்திற்குத் தயார் செய்ய வேண்டும்” எனச் சொல்லும் பொன்னம்மாளின் வேண்டுகோள் அவசியம் ஊடகங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

இன்றும் இளைய தலைமுறையினருக்கு இணையாக எழுத்துப் பணியை மேற்கொண்டு வருகிறார் ஆர். பொன்னம்மாள். எழுத்தாளர், கட்டுரையாளர், விமர்சகர் பாஸ்டன் பாலாஜி இவரது மகன்.

Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

குத்துங்கம்மா குத்து: தமிழ் பேட்டை ராப், துள்ளல் கும்மாளம் & சாவு மேளம்

Avan Ivan

http://www.youtube.com/watch?v=WyUhFr0BLug

2012 Anadhan Vikadan Awards for Popular Tamil Cinema, TV and Bestsellers

சென்றவை:
1. விகடன் விருதுகள் – 2010

2. விகடன் அவார்ட்ஸ் 2008

3 Superhit Songs in Tamil Cinema – 2008 Year in Review

4. Tamil Film Songs – Best of 2007 Movie Music

5. 2007 -Year in Review

6. 2006 Reminiscences

7. Year in Reviews – 2006

8. டாப்டென் – 2005

9. பிடித்த 10 படங்கள்

சிறந்த இயக்குநர்: வெற்றிமாறன் – ஆடுகளம்

சினிமா (திரைப்படம்): ஆடுகளம் – ஃபைவ் ஸ்டார் ஃபிலிம்ஸ்

கதாநாயகர் (நடிகர்): விக்ரம் – தெய்வத் திருமகள்

கதாநாயகி (நடிகை): அஞ்சலி – எங்கேயும் எப்போதும்

துணை கதாபாத்திரம் (குணச்சித்திர) நடிகர்: இளவரசு – முத்துக்கு முத்தாக

வில்லி, குணச்சித்திர நடிகை: உமா ரியாஸ் – மௌன குரு

காமெடி, நகைச்சுவை நடிகர்: சந்தானம் – வேலாயுதம், தெய்வத் திருமகள்

ஜோக்ஸ், நகைச்சுவை நடிகை: கோவை சரளா – காஞ்சனா

வில்லன்: ஜாக்கி ஷெராஃப் – ஆரண்ய காண்டம்

முதற்பட புதுமுக நடிகர்: விஜய் சேதுபதி – தென்மேற்கு பருவக்காற்று

கன்னி புதுமுக நடிகை: இனியா – வாகை சூட வா

பேபி ஸ்டார் (குழந்தை நட்சத்திரம்): சாரா – தெய்வத் திருமகள்

பாடல், மியூசிக், இசையமைப்பாளர்: ஜி வி பிரகாஷ்குமார் – ஆடுகளம், மயக்கம் என்ன

கேமிராமேன் (ஒளிப்பதிவாளர்): வேல்ராஜ் – எங்கேயும் எப்போதும், ஆடுகளம்

எடிட்டிங் (படத்தொகுப்பு): கிஷோர் – ஆடுகளம்

ச்டோரி, மூலக்கதை, கதை: வெற்றிமாறன் – ஆடுகளம்

ஸ்க்ரீன்ப்ளே, திரைக்கதை: தியாகராஜன் குமாரராஜா – ஆரண்ய காண்டம்

டயலாக், வசனம்: சமுத்திரக்கனி – போராளி

ஃபைட் சீக்வன்ஸ் (சண்டைப் பயிற்சி): அனல் அரசு – ரௌத்திரம்

டான்ஸ், பாடல் ஆட்டம், குத்துப் பாடல், நடன இயக்குநர்: ராஜு சுந்தரம் – ’வள்ளியே சக்கரவள்ளியே’: எங்கேயும் காதல்

கலை (ஆர்ட் டைரக்‌ஷன்): ராஜீவன் – 7ஆம் அறிவு

ஒப்பனை (மேக்கப்): ஆ கோதண்டபாணி – பானு – ஏழாம் அறிவு

ஆடை வடிவமைப்பு, உடை (ட்ரெஸ், காஸ்ட்யூம்ஸ்): ஸ்வேதா – கோ

பாடலாசிரியர் (சாங் ரைட்டர், கவிஞர்): அறிவுமதி – ’விழியும் விழியும்’: சதுரங்கம்

பின்னணிப் பாடகர்கள் (சிங்கர்): எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி சரண் – ’ஐயையோ நெஞ்சு அலையுதடி’: ஆடு களம்

பாடகி: சைந்தவி – ’பிறை தேடும் இரவிலே’: மயக்கம் என்ன

தயாரிப்பு (ப்ரொடக்‌ஷ்ன்ஸ், டிஸ்ட்ரிப்யூஷன்): ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் – ஏ ஆர் முருகதாஸ் புரொடக்சன்ஸ்: எங்கேயும் எப்போதும்

இலக்கியம், கதை, புனைவு, ஆக்கம், எழுத்தாளர்

நாவல் (நெடுங்கதை): ஆண்பால் பெண்பால் – தமிழ்மகன்

சிறுகதைத் தொகுப்பு (ஷார்ட் ஸ்டோரி): காண்டாமிருகம் – ஜீ முருகன்

புதுக் கவிதை (பொயம், கவிஞர், பா, தளை, பாடல்): சபரிநாதன்: களம் – காலம் – ஆட்டம்

கட்டுரைத் தொகுப்பு (பத்தி, கருத்து, சிந்தனை): அனுபவங்களின் நிழல் பாதை: ரெங்கையா முருகன் – வி ஹரி சரவணன்

மொழிபெயர்ப்பு (ட்ரான்ஸ்லேஷன், மொழியாக்கம்): சிறைபட்ட கற்பனை – க பூர்ணசந்திரன்

புத்தகம், வெளியீடு, ஓவியம், கலை, சிற்பம், புகைப்படம், நிழற்படம், ஒளிப் படம்: வாளோர் ஆடும் அமலை – ட்ராட்ஸ்கி மருது – தடாகம் பதிப்பகம்

சிறு பத்திரிகை (சிற்றிதழ்) : மணல் வீடு – மு. ஹரிகிருஷ்ணன்

இன்ன பிற

விளையாட்டு வீரர் (க்ரிக்கெட், ஸ்போர்ட்ஸ்): ரவிச்சந்திரன் அஷ்வின்

வீராங்கனை: நீச்சல் – ஜெயவீணா

பயிற்சியாளர்: (ட்ரெயினிங்) நீச்சல் – கிரீஷ்

டிவி சேனல்: தொலைக்காட்சி மிடையம்: புதிய தலைமுறை

டிவி நிகழ்ச்சி: (ப்ரொகிராம்): பெரிதினும் பெரிது கேள் – விஜய் டிவி

நெடுந்தொடர் (சீரியல்): திருமதி செல்வம் – சன் டி.வி.

தொகுப்பாளர் (ஹோஸ்ட், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்): சிவகார்த்திகேயன் – ஜோடி நம்பர் #1 சீஸன் 5 (விஜய் டிவி)

தொகுப்பாளினி (பெண்): திவ்யதர்ஷினி: ஹோம் ஸ்வீட் ஹோம் – விசய் தொலைக்காட்சி

பண்பலை: ஹலோ எப்.எம்.

பண்பலைத் தொகுப்பாளர்: மா கா பா ஆனந்த் – ரேடியோ மிர்ச்சி, சென்னை

எப்.எம். தொகுப்பாளினி: ரேடியோ: ஹலோ எப்.எம்., மதுரை

விளம்பரம் – அட்வர்டைஸ்மெண்ட்: ஏர்டெல்: ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்

மோட்டார் பைக் – டூ வீலர்: ஹோண்டா சி பி ஆர் 250 ஆர்

கார்: நாற்சக்கர வாகனம்: மகிழுந்து: மாருதி சூஸூகி – மாருதி ஸ்விஃப்ட் நியூ

35th Chennai Book Fair 2012: Inauguration And Award Function

Earlier Post: அழ வள்ளியப்பா நினைவு விருது: சிறந்த குழந்தை எழுத்தாளர்

What I like about Tamil Nadu?

நியு இங்கிலாந்து கலை இலக்கிய மன்றத்தின் பதினான்காவது சந்திப்பின் போது உறுப்பினர்கள் கீழ்க்கண்ட தீர்மானத்தை அங்கீகரித்தனர்.

  1. முட்டை பரோட்டா சவுண்ட்
  2. வேஷ்டி டப்பாகட்டு
  3. தெருவோர இட்லி கடை
  4. காலை ஹோட்டலில் ஊதுபத்தி
  5. டீக்கட பென்ச்
  6. கோவில் திருவிழா
  7. காலையில் கிராமத்தில் ஃபர்ஸ்ட் ட்ரிப் பஸ்ஸில் காயகறி ஒரு டிக்கெட்டாக வருவது
  8. யாரையும் அக்கானு கூப்பிடறது
  9. ஓட்டல் ஆர்டரில் சர்வரே நாம என்ன சாப்புடனம்னு சொல்லுறது
  10. பழைய பேப்பர் கட
  11. மாட்டு வண்டி சவாரி
  12. தெருநாய்
  13. டிராஃபிக் கான்ஸ்டபிள் காடும் சைகையையும் புரிந்து கொண்டு இடிக்காமல் செல்லும் வாகன ஓட்டுநர்கள்
  14. வாய்க்கால்
  15. மசாலா பால்
  16. வெத்தல
  17. சிதறு தேங்கா
  18. பஸ் ஸ்டாண்டு பக்கத்தில இருக்கும் தியேட்டரில் எப்ப வேணும்னாலும் உள்ளார போயிட்டு வரது
  19. ஆட்டோ வாசகங்கள்
  20. முட்டை போண்டா
  21. வேப்பமரம்
  22. மரத்தடி பிள்ளையார் கோவில்
  23. நுங்கு
  24. தெருவோர கட்சிக் கூட்டம்
  25. மல்லிகப்பூ
  26. சந்தைக்கு காத்திருப்பது
  27. கனகாம்பரம்
  28. பதநீர்
  29. கொடுக்காபுளி
  30. தாவணி
  31. பாண்டிச்சேரி சரக்கு
  32. பட்டுப் பாவாட
  33. சாம்பார் வடை
  34. ரயில் சத்தம்
  35. இடியாப்பம்
  36. வயலோர வெளிக்கி
  37. புளியோதரை
  38. அய்யங்கார் கோவில் தூண் பிசுக்கு
  39. அடை அவியல்
  40. அக்ரஹாரத்து மடிசார் மாமி
  41. இட்லி தோசை
  42. கொசுறு வாங்குவது
  43. அல்வா
  44. வாழைமரம்
  45. கோலம்
  46. மார்கழி மாசப் பூசணிப்பூ
  47. அய்யர் கோவில் பொங்கல்
  48. மாரியம்மன் கூழ்
  49. பன்னீர்
  50. பட்டு புடைவை
  51. வாழையில சாப்பாடு
  52. பறை சாவு மேளம்
  53. ரஜினிகாந்த்
  54. சில்க் ஸ்மிதா
  55. ரேடியோ மிர்ச்சி சுசித்ரா
  56. சரோஜ் நாராயணசாமி
  57. அண்ணாச்சி கடையில் சாக்கு மடித்து உட்கார்வது
  58. குருவி ரொட்டி
  59. ஆரஞ்சு மிட்டாய்
  60. ராஜராஜ சோழன்
  61. கல் கோனான்
  62. இலந்தை வடை
  63. கோமணம்
  64. மாடுக் கொம்புக்கு கட்சிக் கொடி வண்ணம் போட்டிருப்பது
  65. பல்லவன்
  66. தலைப்பாக்கட்டு
  67. சந்திரலேகா
  68. சுக்கா வறுவல் & ஆட்டுக்கறிக் குழம்பு
  69. பலாப்பழம்
  70. மௌன ராகம்
  71. நவ்வாபழம்
  72. ‘கொஞ்சம் கவனித்தால்’ சகலமும் நடந்தேறும் சுமூகம்
  73. ப்ளாட்பாரத்தில் கிடைக்கும் உலகம்
  74. இலந்தப் பழம்
  75. சாயந்தரம் கோவில் நடைபாதையில் சுத்தம் செய்த துணிகள்
  76. ஏவியெம்
  77. சாயரட்சை நாதஸ்வரம் & தவில்
  78. நரசூஸ் காபி
  79. பொன்னியின் செல்வன்
  80. கொழுக்கட்டை
  81. குமுதம் நடுப்பக்கம்
  82. பிள்ளையார் எறும்பு
  83. ஆடிப் பெருக்கு, ஆடிப் பதினெட்டு – சித்ரான்னம்
  84. ஏர் கலப்பை உழுதல்
  85. ம.பொ.சி. மீசை
  86. தட்டச்சு சொல்லிக் கொடுக்கும் பெண்ணின் கைவிரல்
  87. எம்.ஜி.ஆர் தொப்பி
  88. ரேஷன் க்யூ
  89. ஆதிமூலம்
  90. புன்னகை அரசி
  91. விவேகானந்தர் பாறை
  92. தமிழ்99
  93. பெயருக்கு முன் பட்டப்பெயர்
  94. சீரணி அரங்கம்
  95. சரோஜாதேவி
  96. டேப் ரிகார்டரில் இளையராஜா
  97. முன் ஜாக்கிரத்தை முத்தண்ணா
  98. ஆடிவெள்ளிக்காக திறந்த அரங்கில் திருமால் பெருமை
  99. புரியாத மொழியில் கோவில் கல்வெட்டு
  100. தந்தை ஈ.வெ.ரா. பெரியார் லை
  101. மொய் 101
  102. எல்லாரையும் தல போடுவது
  103. திருக்குறள்
  104. விஸ்வநாதன் ஆனந்த்
  105. கைலி
  106. கஷ்டமோ, நஷ்டமோ… ஓடோடி வரும் சுற்றுப்புறமும் சொந்த பந்தமும்
  107. உலகெலாம் பல்கிப் பெருகுவது
  108. ஸ்தோத்திரம் 108
உங்களுக்கு என்ன பிடிக்கும்?

தண்ணியடிக்காத புலம்பல்: கொடுமை சீரீஸ் – 1

மதுரை நியூ காலேஜ் ஹவுசில் கூட மிஞ்சியதை வைத்துதான் கொத்து பரோட்டா போடுவார்கள் என்பதை ஒப்ப சில பதிவுகளைப் பார்க்கும்போது நொந்து நூடுல்ஸ் ஆவதை பதிவு செய்யும் திட்டத்தில் முதல் என்ட்ரி: எழுத்தாளர் தாமரைமணாளன்

இந்தப் பரிந்துரைக்கு உங்கள் பதிவு உரித்தாக ஆறு காரணங்கள்:

  1. ஜெயமோகன், சாரு போன்றோருடன் எடுத்துக் கொண்ட ஒளிப்படம் உங்கள் பக்கமுகப்பில் நேம்ட்ராப் செய்யவேண்டும்
  2. விக்கிப்பீடியா தொகுப்பிற்குக் கூட லாயக்கில்லாத தகவல்கள் கொடுக்க வேண்டும்.
  3. முன்னுமொரு காலத்திலே என்று துவங்க வேண்டும்.
  4. ஜெனரலைஸேஷன் நிறைந்திருக்க வேண்டும்.
  5. தற்கால முக்கிய எழுத்தாளர்களின் மோசமான படைப்புகளை அடையாளம் காட்டாமல், எப்பொழுதோ இறந்து, எழுந்து அடிக்க வராத சந்ததியைச் சார்ந்தவரை சாடும் படைப்பாக இருக்க வேண்டும்.
  6. அழகாபுரி அழகப்பன், ஜெகசிற்பியன் என்று டங்குவார் கழன்றவர்களையும் கவனிக்கும் ஆழ்வாசகரின் அடர்த்தியான ஆக்கமாக வேண்டும்.

இந்த மாதிரி பதிவு படித்து அழுது தொலைப்பதற்கு பதிலாக,

  • கேபிள் சங்கரின் சினிமா விமர்சனத்தையோ, எட்ஜ் கருத்துப் பத்தியையோ படிக்கவும் …
  • ஆர்வி ஆலிவ் கிட்டரிட்ஜ் போன்ற ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கவும் …

மைல்கல் மைனர்களைப் பிரார்த்திக்கின்றேன்.

‘Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines’ by Rajiv Malhotra and Aravindan Neelakandan

The book focuses on role of US and European churches, academics, government and human rights groups in fostering separation of the identities of Dravidian and Dalit communities from the rest on India.

Publisher: Amaryllis.
Pages: 640.
Price: 695 INR

Rajiv Malhotra
His Infinity Foundation, seeks to foster a better global understanding of Indian civilization. Rajiv’s work argues that the dharma offers a complex and open framework for a genuine dialogue among diverse peoples, rather then a zero sum game. He shows the limitations of globalization when it is a parochial imposition of Western paradigms. He is well known as a speaker and writer for a wide audience and is frequently interviewed and invited to deliver keynote addresses. He serves on the Board of Governors of the India Studies program at the University of Massachusetts, and served as a Chairman for the Asian Studies Education Committee of the State of New Jersey.

Aravindan Neelakandan
Aravindan Neelakandan has worked for the past decade with an NGO in Tamil Nadu serving marginalized rural communities in sustainable agriculture. He was awarded a junior research fellowship in cultural economics by the India’s Ministry of Tourism to research the economic potentials of the neglected ruins in Kanyakumari district, in southern Tamil Nadu. These experiences provided him with in-depth knowledge of the history and sociology of Tamil people. He is also a popular science writer in Tamil and a columnist with UPI-Asia, a leading news portal.

1. எஸ் குருமூர்த்தி, துக்ளக் சோ ராமசாமி, தயானந்த சரஸ்வதி பேசியதை ‘தி ஹிந்து’ தொகுக்கிறது.

2. புத்தக வெளியீட்டு நிகழ்வில் அரவிந்தன் உரை – இங்கே

3. புத்தகத்தின் வலையகம்

4. ராஜீவ் மெஹ்ரோத்ராவின் வலைப்பதிவு

5. 6 Provocations In “Breaking India”

  1. Dravidian Identity Constructed, Exploited & Politicized
  2. Linking Of Dravidian & Dalit Identities
  3. Foreign Nexus Exploits India’s Faultiness
  4. Religion’s Role in the Competition for Soft Power
  5. Interrogating the Term “Minority”
  6. Controlling the Discourse on India

6. Rajiv Malhotra along with Aravindan Neelakandan is going to discuss “Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines” in New Delhi on Feb 9 at 4:30 pm, on the occassion of the launch of their book by the same name. The venue is Vivekananda International Foundation, 3, San Martin Marg, Chanakya Puri. Web: http://www.vifindia.org

Book launch and keynote address are by Ram Jethmalani. Speakers include B Raman (Director, Institute for Topical Studies), S. Gurumurthi, Vice Admiral (Retd) Raman Puri, and Upendra Baxi (Emeritus Professor of Law, University of Warwick).

7. தமிழ் ஹிந்து அறிவிப்பு

நூல் பற்றிய அறிமுகம்:

இந்தியாவின் ஒருமைப்பாடும் இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன –

  1. அ) பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்
  2. ஆ) சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள்
  3. இ) மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப் படும் திராவிட, தலித் பிரிவினைவாதம்.

இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும், அலசல்களையும் உள்ளடக்கியது இந்த நூல்.

அமெரிக்க, ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட, தலித் பிரிவினைவாதத்தை வளர்க்கக் களமிறக்கப் படும்

  • மனித உரிமை அமைப்புகள்
  • கல்வியாளர்கள்
  • சிந்தனை வட்டங்கள்
  • மத அமைப்புகள்

ஆகியவை நிழலுருவில் செயல்படும் விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது. ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு, புனித தாமஸ் பற்றிய கட்டுக் கதையை மையமாக வைத்து உருவாக்கப் படும் “திராவிட கிறிஸ்தவம்”, தென்னிந்திய வரலாற்றை உள்நோக்கங்களுடன் திரிக்கும் முயற்சிகள் ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.

நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஐந்து ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர். அந்த ஆய்வுகளின் தொகுப்பாக இந்த நூல் வெளிவருகிறது.

After 2000 – தமிழ் நாவல்: Shortlist

காலச்சுவடு க்ளாசிக் வரிசை வருகிறது. Vanity publishing எனப்படும் தனக்குத் தானே திட்டத்தினால் கூட உயிர்மை போன்ற பதிப்பகங்களின், பிரான்ட் வேல்யூ குறைந்ததாக தெரியாத காலம். கிழக்கு, உயிர்மை, தமிழினி மூலம் வெளியாகும் கதைகள் பரவலான கவனிப்பு பெறுபவையாக இருக்கின்றன.

முக்கியமோ/முகாந்திரமில்லையோ… தெரியாது; எனினும் சாரு நிவேதிதா, ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் புனைவுகள் பெருமளவில் விற்கின்றன.

அப்படி பரவலான கவனிப்பைப் பெறாத, ஆனால் நான் மதிக்கும் சிலரால் (புத்தக விமர்சனங்கள், திண்ணையில் பாவண்ணன், நேசமுடன் வெங்கடேஷ் மின் மடல், தனி அரட்டையில் மெத்தப் படிக்கும் நண்பர்கள்) பரிந்துரைக்கப்பட்ட தமிழ் நாவல்களின் தொகுப்பு இது.

மூன்றாக லிஸ்ட்டை பிரிக்கலாம்.

1) நான் படித்தவை – நிச்சயம் முக்கியமானவை; விருது கோரும் ஆக்கம்: முழுநேரப் பதிவராய் பரபரப்பை கிளப்பாததால் மட்டுமே அதிகம் கவனிப்பு கிட்டாத புனைவுகள்.
2) நான் புரட்டியவை – வாசித்து முடிக்கவில்லை (சுவாரசியம் கிடைக்காததாலோ, பக்க அளவினாலோ அல்லது நண்பராக இல்லாததாலோ); இலக்கியத்தரமானவை

3) விஷ்லிஸ்ட்

படித்ததில் முக்கியமானவை

  • மரகதத் தீவு – காஞ்சனா தாமோதரன் – உயிர்மை
  • வெட்டுப் புலி – தமிழ்மகன் – உயிர்மை
  • காக்டெயில் & ஆஸ்பத்திரி – சுதேசமித்திரன்
  • கொசு – பா ராகவன்
  • அலகிலா விளையாட்டு – பா ராகவன்
  • அவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி
  • மனப்பிரிகை :: ஜெயந்தி சங்கர்
  • சல்மா – இரண்டாம் ஜாமங்களின் கதை
  • உமா மகேஸ்வரி – யாரும் யாருடனும் இல்லை

புரட்டியதில் தரமானவை

  • கரைதேடும் ஓடங்கள் – உஷா ராமசந்திரன் – சந்தியா
  • நட்டுமை – ஆர்.எம்.நெளஸாத் – காலச்சுவடு
  • கீரனூர் ஜாகிர்ராஜா – துருக்கித்தொப்பி & வடக்கேமுறி அலிமா
  • வளவ. துரையன் – மலைச்சாமி – மருதா
  • வட்டத்துள்:வத்சலா
  • பாபுஜியின் மரணம்: நிஜந்தன்
  • நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த்
  • அம்மன் நெசவு: சூத்ரதாரி
  • வா.மு.கோமுவின் – கள்ளி
  • க.சீ. சிவக்குமார் – நாற்று
  • சோ. தருமன் – வலைகள்
  • பாலமுருகன் – சோளகர் தொட்டி

ரிடையர்மென்ட் விஷ்லிஸ்ட்

  • காதில் மெல்ல காதல் சொல்ல – ஏ.ஏ.ஹெச்.கே.கோரி – சந்தியா
  • குவியம் – ஜெயந்தி சங்கர்
  • நாடு விட்டு நாடு – முத்தம்மாள் பழனிசாமி – தமிழினி
  • தலையணை மந்திரோபதேசம் – நடேச சாஸ்திரி – தமிழினி
  • மூன்றாம் சிலுவை – உமா வரதராஜன் – காலச்சுவடு
  • கானல் வரி – தமிழ்நதி – உயிர்மை
  • சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் – வா.மு.கோமு – உயிர்மை
  • அவளது கூரையின் மீது நிலா ஒளிந்திருக்கிறது – வ.ஐ.ச.ஜெயபாலன் – உயிர்மை
  • கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி – உயிர்மை
  • க.வை.பழனிசாமி – ஆதிரை
  • மனோஜ்குமார் – பால்
  • எஸ். செந்திகுமாரின் – ஜீ. செளந்தர ராஜனின் கதை
  • நாகம்மாள் – ஆர்.சண்முகசுந்தரம்
  • பாலிதீன் பைகள் – இரா நடராசன்
  • லங்காட் நதிக்கரை – அ. ரெங்கசாமி; தமிழினி
  • சிறீதர கணேசன் – சந்தி
  • தளவாய் சுந்தரம் – ஹிம்சை
  • கோகுலக்கண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  • பவா செல்லத்துரை – வேட்டை
  • லட்சுமிமணிவண்ணன் – பூனை
  • குமாரசெல்வா – உக்கிலு
  • பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  • சி.எம். முத்து – வேரடி மண்
  • செந்தூரம் ஜெகதீஷ் – கிடங்குத் தெரு
  • மில் :: ம காமுத்துரை

தூக்கம் வர சிரமதசை சாய்ஸ்

  • பா. வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  • காவல் கோட்டம் (சு. வெங்கடேசன்)
  • மஞ்சள் வெயில் : யூமா.வாசுகி
  • மாயினி – எஸ்.பொன்னுத்துரை
  • எம்.ஜி. சுரேஷ் – 37

முந்தைய பதிவு: தமிழ் நூல் பரிந்துரை – 2010