Tag Archives: சாரு

Tamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல்

சமீபத்திய புத்தகங்களில் எதை வாங்க வேண்டும் என்று ஆசை பிறக்கிறது?

என்னிடம் இருக்கிறது தவிர, எந்த நூல்களை தருவிக்க ஆர்வம் கிடைக்கிறது?

இணையத்தில் உள்ள புத்தகக் கடைகளில் மேய்ந்தால் எவை ‘என்னை வாங்கு’ என்று அழைக்கிறது?

இதில் பிரபலமான எழுத்தாளர்கள் நிச்சயம் இருப்பார்கள்; தவிரக்க வேண்டிய நூலாசிரியர்கள் தவற விடப் பட்டிருப்பார்கள்.

பட்டியல்களுக்கேயுரிய விடுபடுதல்களும் இருக்கலாம்.

உங்கள் பரிந்துரையில் சமீபத்திய நூல் வரவுகளில் முக்கியமானவை எவை?

முதலில் நூலகம் தொடர்பான சில வலையகங்கள்:

  1. நியூ ஹொரைசன் மீடியா – கிழக்கு – காமதேனு – https://www.nhm.in/shop/home.php
  2. சென்னை ஷாப்பிங் – http://www.chennaishopping.com
  3. உடுமலை –http://www.udumalai.com/
  4. தினமலர் புத்தக விமர்சனம் + அறிமுகம்: http://books.dinamalar.com/index.asp
  5. நம்ம கோடம்பாக்கம்: http://600024.com/store/books/
  6. நூல் உலகம்.காம் – http://www.noolulagam.com/
  7. டிஸ்கவரி புக் பேலஸ்: http://discoverybookpalace.com/
  8. நியு புக் லான்ட்ஸ் – http://www.newbooklands.com/new/home.php
  9. தமிழ் புக்ஸ் ஆன்லைன்: http://www.tamilbooksonline.in/booklist1.php
  10. கன்னிமரா பப்ளிக் லைப்ரரி – http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-main.pl
  11. சிங்கப்பூர் நூலகம் –http://catalogue.nlb.gov.sg/

இப்பொழுது என்னுடைய பரிந்துரை புத்தக லிஸ்ட்:

1. என்னைத் தீண்டிய கடல் By வறீதையா — வகை : கட்டுரைகள்
2. கவிதை என்னும் வாள்வீச்சு By ஆனந்த் — வகை : கட்டுரைகள்
3. கரை தேடும் ஓடங்கள் By ராமச்சந்திரன் உஷா
4. நாமார்க்கும் குடியல்லோம் By கரு.ஆறுமுகத்தமிழன்
5. எங்கள் நினைவில் சு.ரா. (குடும்பத்தாரின் நினைவுகள்)
6. தாயார் சன்னதி By சுகா
7. தோள்சீலைக் கலகம் : தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் By கணேசன்
8. சினிமா அனுபவம் (அடூர் கோபாலகிருஷ்ணன்) By அடூர் கோபாலகிருஷ்ணன்
9. கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது By அ.முத்துலிங்கம்
10. ஒன்றுக்கும் உதவாதவன் By அ.முத்துலிங்கம்
11. நளிர் — நாகார்ஜுனன்
12. சொல்லாததும் உண்மை (பிரகாஷ்ராஜ்)
13. முக்குவர்: வரலாறு, வாழ்வியல், எதிர்காலம் By வறீதையா கான்ஸ்தந்தின்
14. மயிலிறகு குட்டி போட்டது By பிரபஞ்சன்
15. எழுத்தென்னும் நிழலடியில் By பாவண்ணன்
16. அமெரிக்காவில் மூன்று வாரம் By ம.பொ.சிவஞானம்
17. இலக்கிய ஆராய்ச்சி காலாண்டு இதழ் ( பாகம் – 1 ) By இந்திரஜித்
18. பிறக்கும் ஒரு புது அழகு By காலச்சுவடு கண்ணன்
19. காலத்தைச் செரிக்கும் வித்தை By குட்டி ரேவதி
20. ஓவியம் கூறுகளும் கொள்கைகளும் By புகழேந்தி
21. புனைவின் நிழல் By மனோஜ்
22. நான் கண்ட ரஷ்யா By அகிலன்
23. பல நேரங்களில் பல மனிதர்கள் By பாரதி மணி
24. அடடே! By மதி கார்ட்டூன்கள்
25. உவன் இவன் அவன் By சந்ரு
26. ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
27. அக்கிரகாரத்தில் பெரியார் By பி.ஏ.கிருஷ்ணன்
28. நம் தந்தையரைக் கொல்வதெப்படி By மாலதி மைத்ரி
29. இருப்பும் விருப்பும் By கி.பி. அரவிந்தன்
30. கர்ப்பமாய் பெற்ற கன்னிகள் By அ.கா.பெருமாள்
31. கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள் By தொகுப்பாசிரியர்: ராஜமார்த்தாண்டன்.
32. அம்மாவின் ரகசியம் By சுநேத்ரா ராஜகருணாநாயகதமிழில் :- எம். ரிஷான் ஷெரீப்
33. அனுபவங்களின் நிழல் பாதை By ரெங்கையா முருகன் ,வி .ஹரி சரவணன் — வகை : குறுநாவல்கள்
34. நஞ்சையில நாலு மா By சுந்தரபுத்தன்
35. விழா மாலைப் போதில் By அசோகமித்திரன்
36. குருதியில் நனையும் காலம் By ஆளுர் ஷாநவாஸ் (முன்னுரை: ஆ.மார்க்ஸ்)
37. எழுதுவதெல்லாம் எழுத்தல்ல By பாமரன்
38. ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! By கோபிநாத்
39. சினிமாவின் மூன்று முகங்கள் By சுதேசமித்திரன்
40. எசப்பாட்டு By இந்தியா டுடெ தமிழ்ப் பதிப்பின் எக்ஸிக்யூட்டிவ் எடிட்டர் ஆனந்த் நடராஜன்
41. கலி புராணம் By மு.தளையசிங்கம்
42. இராசேந்திரசோழன் குறுநாவல்கள்
43. பேய்க்கரும்பு By பாதசாரி
44. சனங்களின் சாமிகள் கதை By அ.கா.பெருமாள்
45. தெரிந்த கோவை தெரியாத கதை By கவியன்பன்.கே.ஆர்.பாபு
46. இவன்தான் பாலா By பாலா
47. சுண்ணாம்பு கேட்ட இசக்கி By அ.கா.பெருமாள்
48. நான் நீ மீன் By கலாப்ரியா (கவிதை)
49. முதல் 74 கவிதைகள் By யுவன் சந்திரசேகர்
50. சூரியன் தகித்த நிறம் By பிரமிள்
51. மேன்ஷன் கவிதைகள் By பவுத்த அய்யனார்
52. எனது மதுக்குடுவை By மாலதி மைத்ரி
53. திரும்பிச் சென்ற தருணம் By பி.ஏ.கிருஷ்ணன்
54. பலார்ஷாவிலிருந்தும் நாக்பூருக்கு By தெலுங்கில் ஸ்ரீ விரிஞ்சி (தமிழில் :- கெளரி கிருபானந்தன்.)
55. களவு போகும் புரவிகள் By வேணுகோபால்
56. பூரணி பொற்கலை By கண்மணி குணசேகரன்
57. தஞ்சை ப்ரகாஷ் கதைகள் By காவ்யா சண்முகசுந்தரம்
58. மரணத்தின் வாசனை By அகிலன்
59. மயில்வாகனன் மற்றும் கதைகள் By அஜயன் பாலா
60. மிதமான காற்றும் இசைவான கடலலையும் By தமிழ்ச்செல்வன்
61. லீலை By சுகுமாரன்
62. பிரமிள் படைப்புகள் (முழுத் தொகுப்பு)
63. வெள்ளி விரல் By ஆர்.எம்.நெளஸாத்
64. நான் கொலை செய்யும் பெண்கள் By லதா (காலச்சுவடு)
65. நகரத்தில் மிதக்கும் அழியா பித்தம் By ம.தவசி
66. பதுங்குகுழி By பொ.கருணாகரமூர்த்தி
67. ஒரு பனங்காட்டுக் கிராமம் By மு.சுயம்புலிங்கம்
68. இலட்சுமணப்பெருமாள் கதைகள்
69. கருப்பாயி என்கிற நூர்ஜஹான் By அன்வர் பாலசிங்கம்
70. தொலைகடல் By உமா மகேஸ்வரி
71. லயோலா என்ற பெரும்பாம்பின் கதை By சுகுமாரன்
72. கனவுகளுடன் பகடையாடுபவர்கள் By ஜி.குப்புசாமி (மொழிப்பெயர்ப்பு )
73. என் தாத்தாவுக்கொருதூண்டில் கழி By ஜெயந்தி சங்கர்
74. அப்பாஸ்பாய் தோப்பு By எஸ்.அர்ஷியா
75. லண்டன் டயரி By இரா.முருகன்
76. ஆறா வடு By சயந்தன்
77. எட்றா வண்டியெ By வா.மு.கோமு
78. ராஜூ ஜோக்ஸ் (கார்டூன் நகைச்சுவை)
79. இதழாசிரியர்கள் மூவர் By விக்கிரமன்
80. அதிமனிதர்களும் எதிர்மனிதர்களும் By பிரேம்
81. கரித்தாள் தெரியவில்லையா தம்பீ… By பெருமாள் முருகன்
82. உடைந்த மனோரதங்கள் By பெருமாள் முருகன் (கு.ப.ரா. பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு)
83. சிலுவையின் பெயரால் By ஜெயமோகன்
84. கர்நாடக சங்கீதம் : ஓர் எளிய அறிமுகம் By மகாதேவன் ரமேஷ்
85. சுபமங்களா மொழிப்பெயர்ப்புக் கதைகள்
86. சங்க இலக்கியத்தில் பொது மக்கள் By முனைவர் கு.ராச ரத்தினம்
87. கோப்பை தேநீரும் கொஞ்சம் கவிதையும் By ஹரி கிருஷ்ணன்
88. டயலாக் By ஜூனியர் விகடன்
89. தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள் By யு.சுப்ரமணியன்
90. மதன் ஜோக்ஸ்
91. காவல் தெய்வங்கள் ( காலங்களை கடந்தும் நிக்கிற கிராம தேவதைகள் வழிபாடு ) By பி.சுவாமிநாதன்
92. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா By அறந்தை நாராயணன்
93. நான் எப்படிக் கம்யூனிஸ்ட் ஆனேன்?..வி.பி.சிந்தன் (இளையபாரதி )
94. :நேரு வழக்குகள் – ஆசிரியர் : ஞாலன் சுப்பிரமணியன்
95. சகுனம் By எஸ்.வி.ராமகிருஷ்ணன்
96. ஆ மாதவன் கதைகள்
97. ஒரு புகைப்பட நிருபரின் அனுபவங்கள். : ஆசிரியர்: மதுரை எஸ்.எஸ். ராமகிருஷ்ணன்
98. சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதைகள் : ஆசிரியர் : சபீதா ஜோஸப்
99. சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 1,2) : ஆசிரியர் : பாக்கியம் ராமசாமி
100. உரையாடலினி By   அய்யனார் விஸ்வநாத்
101. கு.அழகிரிசாமி கடிதங்கள் (கி.ரா.வுக்கு எழுதியது) By கி. ராஜநாராயணன்.
102. தொலைக்காட்சி விளம்பரத்தின் உள்முகங்கள் By கழனியூரன்
103. ஆறுமுகசாமியின் ஆடுகள் By சா.கந்தசாமி
104. புதுமொழி 500 – ரவிபிரகாஷ் (விகடன் பிரசுரம்)
105. மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள் – தொகுப்பு: பி.இ.பாலகிருஷ்ணன்
106. விட்டில் – சமகால அரசியல் பகுப்பாய்வு By இராகவன் (காலச்சுவடு பதிப்பகம்)
107. ஈழத்து நாட்டார் பாடல்கள் By ஈழவாணி
108. தமிழினி ஒரு வருட உள்நாட்டு சந்தா

இப்பொழுது உங்களுக்கான வினாக்கள்:

2012-ல் என்ன வாங்கினீர்கள்?

முக்கியமாக புனைவுகளில் சுவாரசியமானவை எவை?

புதிய புத்தகங்களில் தங்களைக் கவர்ந்த கதாசிரியர் யார்?

10 Similes between Writer Charu Nivethitha & Actor Kamalhasan

சாரு நிவேதிதா கமல்ஹாசன்
வயது 56 என்று சொல்லிக் கொள்கிறார் தெளிவாகவே 56 எனப் பகிர்ந்துள்ளார்
பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியது, நண்பர் எழுதியது எல்லாவற்றையும் படைக்கிறார். பார்த்தது, படித்தது, நண்பருடன் பேசியதன் கலவையாக படைக்கிறார்.
35 ஆண்டுகளாக எழுதுகிறார் 50 ஆண்டுகளாக கலைச்சேவை
எங்கிருந்து எடுத்தார் என்பது ஆபீதின் மாதிரி பலர் முயன்று தெரிவித்தாலும் தெரியவருவது துர்லபம். சுட்ட ஒரிஜினலை கண்டுபிடிப்பது இவரிடம் எளிது.
சாரு நிவேதிதாவிற்கு கடிதங்கள் எழுதும் தேவதைளில் அனேகர் ரஷ்மி, தீபிகா போல் மூன்றெழுத்து கனவுக்கன்னி. அவ்வப்போது நேஹாவும் உதயமாகிறார். ஸ்ரீதேவி, சினேகா, அசின், த்ரிஷா
சாரு ‘கமினே‘ பார்த்ததாக எழுதினார். கமல் ‘ஜெயமோகன்‘ பிடித்ததாக மேடையில் பேசினார்.
மனதில் தோன்றியதை வரையும் சர்ரியலிசம், குழப்பினாலும் கவர்கிறது; சாரு claim செய்யும் எழுத்துவகை சறுக்கியலிசம் ஆகி விடுகிறது ஆஸ்கார் படங்கள் புரிந்து மனதில் நிலைக்கிறது; ஹே ராமும் ஆளவந்தானும் சறுக்கியலிஸம்
அமரந்தா, அவந்திகா வாணி, சரிகா
நடிகர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், கவிஞர்
சாகித்ய அகாடெமி, ஞானபீடம், இலக்கிய நோபெல், கலைமாமணி கிடைக்கக் கூடிய நாவல் எழுதிக் கொண்டிருப்பார். மருதநாயகம் வெளியாக நிறைய வாய்ப்புண்டு.

தமிழ் நூல் பரிந்துரை – 2010

சென்ற வருடம் வாங்கிய புத்தகங்களின் பட்டியல்:

  1. சடங்கில் கரைந்த கலைகள் – அ. கா. பெருமாள்
  2. நினைவில் நிற்கும் நேர்காணல்கள் – அண்ணாகண்ணன் (திரிசக்தி பதிப்பகம்)
  3. நாத வெளியிலே – இசைஞானி இளையராஜா
  4. சித்திரம் பேசுதடி: தமிழ்த்திரை பற்றிய காலப் பதிவுகள் – சு. தியடோர் பாஸ்கரன் – உயிர்மை (2004)
  5. விகடன் தீபாவளி மலர்
  6. நினைவின் தாழ்வாரங்கள்கலாப்ரியா (சந்தியா வெளியீடு)
  7. சென்னையின் கதை (1921): கிளின் பார்லோ – தமிழில் ப்ரியாராஜ் (சந்தியா வெளியீடு)
  8. உறங்கா நகரம் (சென்னையின் இரவு வாழ்க்கை): வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  9. தமிழ்நாடு நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக்கட்டுரை – ஏ.கே. செட்டியார் (சந்தியா வெளியீடு)
  10. இரண்டு மரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  11. கிராமங்கள் பேசுகின்றன – கார்முகில் (சந்தியா வெளியீடு)
  12. ஒற்றை வாசனை – இந்திரா (சந்தியா வெளியீடு)
  13. திரௌபதியும் சாரங்கப் பறவையும் – நாகூர் ரூமி (சந்தியா வெளியீடு)
  14. மூன்றாம் பாலின் முகம் (அரவாணி எழுதிய முதல் தமிழ் நாவல்) – பிரியா பாபு (சந்தியா வெளியீடு)
  15. ஊர்க்கதைகள் – வெ. நீலகண்டன் (சந்தியா வெளியீடு)
  16. கல்கி முதல் கண்ணன் வரை – மு. பரமசிவம் (சந்தியா வெளியீடு)
  17. உரையாடும் சித்திரங்கள் – பாவண்ணன் (சந்தியா வெளியீடு)
  18. கிராமங்களில் உலவும் கால்கள் – கழனியூரன் (சந்தியா வெளியீடு)
  19. வ.உ.சி. நூல் திரட்டு – தொகுப்பு : வீ. அரசு (சந்தியா வெளியீடு)
  20. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் – பி.வி. ஜகதீச அய்யர் (சந்தியா வெளியீடு)
  21. தென்னிந்திய கிராம தெய்வங்கள் – தமிழில் : வேட்டை எஸ். கண்ணன் (சந்தியா வெளியீடு)
  22. மதராசப்பட்டினம் – நரசய்யா (பழனியப்பா பிரதர்ஸ்)
  23. பதினெட்டு சித்தர்களின் முக்கிய பாடல்களும் விளக்கங்களும் – தமிழ்ப்பிரியன் (நர்மதா)
  24. எங்கிருந்து வருகுதுவோ – ரா.கி.ரங்கராஜன் (விகடன் பிரசுரம்)
  25. சுந்தர ராமசாமி : நினைவின் நதியில் – ஜெயமோகன்
  26. தேசாந்திரி – எஸ். ராமகிருஷ்ணன்: விகடன் பிரசுரம்
  27. கேள்விக்குறி – எஸ்.ராமகிருஷ்ணன்
  28. நீர் மிதக்கும் கண்கள் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
  29. சிற்றகல் – சிறு பத்திரிக்கை கவிதை தொகுப்பு Author/ Compiler:பூமா ஈஸ்வரமூர்த்தி/ லதா ராமகிருஷ்ணன்
  30. செல்லுலாயிட் சித்திரங்கள்: தமிழ்மகன் (உயிர்மை)
  31. காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ். ராமகிருஷ்ணன்
  32. எக்சிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் – சாரு நிவேதிதா
  33. தனிக்குரல் – ஜெயமோகன்
  34. இசையின் தனிமை – ஷாஜி
  35. பூமியை வாசிக்கும் சிறுமி – கவிதை – சுகுமாரன்.
  36. சினிமாவின் மூன்று முகங்கள் – சுதேசமித்திரன்
  37. கல்கி வளர்த்த தமிழ்
  38. மாயினி – எஸ்.பொ
  39. ஓ பக்கங்கள் (2009-2010): ஞானபாநு – ஞாநி
  40. புறநானூற்றுக் குறும்படங்கள் – தமிழண்ணல் (மீனாட்சி புத்தக நிலையம்)
  41. இலக்கியச் சித்திரங்களும் கொஞ்சம் சினிமாவும் – கு.ஞானசம்பந்தன்
  42. என்னைத் தீண்டிய கடல் / வறீதையா கான்ஸ்தந்தின். (காலச்சுவடு)
  43. உப்பிட்டவரை – ஆ சிவசுப்பிரமணியன் (காலச்சுவடு)
  44. நீர் பிறக்கும் முன் – இந்திரா
  45. ஒரு நகரமும் ஒரு கிராமமும் (கொங்குப் பகுதியில் சமூக மாற்றங்கள்): பேரா.எஸ்.நீலகண்டன் – காலச்சுவடு

முந்தைய பதிவுகள் சில:
அ)  புத்தக லிஸ்ட்

ஆ)  2008 – Tamil Books

புத்தகப் பதிவுகள்:

தொடர்புள்ள என்னுடைய முந்தைய பதிவுகள்:

  1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
  2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
  3. புத்தகக் குறி (மீமீ)
  4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
  5. சென்னை செல்லாமலேக் கடித்தவை: செப். 2005
  6. வருட இறுதி: புத்தகங்கள் – 2005

சாரு நிவேதிதா சந்திப்பு

பத்தாண்டுகளுக்குப் பிறகு உறவினர்கள் சந்தித்துக் கொண்டால், கோவிலில் வைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். பத்து மாதங்கள் கழித்து சந்திக்கும் சிறுவர்கள் பூங்காவின் விளையாட்டரங்கத்தில் ஆடத் துவங்க வேண்டும். பத்து புத்தகங்களை வாசித்தபிறகு, எழுதியவரை எங்கு சந்திக்க வேண்டும்?

எல்லாவிதமான கேள்விகளுக்கும் உலகப்பொதுவிடை: ‘It depends!’

வருடாவருடம் சென்னைக்கு ஒரு முறை எட்டிப் பார்ப்பதுண்டு. கிழக்கின் மொட்டை மாடிக் கூட்டம், ஞாநியின் கேணி, தமிழ் ஸ்டூடியோவின் முழுநிலா இரவுப்படக்காட்சி எல்லாம் நடக்காத சமயமாக தோன்றுவது வழக்கம். பாலபாரதியின் பீச் பதிவர் சந்திப்பு, ரோசா வசந்த்துடன் மேன்ஹட்டன் பார்வை என்று முடிந்து போகும்.

அப்போதெல்லாம் லக்கிலுக், அதிஷா போன்ற சென்ன தாதா பதிவர்களிடம் ‘சாரு நிவேதிதாவோடு ஒரு நைட் அரேஞ்ச் செய்து தர முடியுமா?’ கேட்டதுடன் சரி.

‘ரேட் அதிகம்’ என்பது போல் ஏதோ பதிலொன்றை உதிர்த்து அவர்களும் நழுவி விடுவார்கள்.

நிறைய எழுதுபவர் பேச்சில் கெட்டிக்காரராக இருப்பார். இடையே ஒரு கண்ணாடிச் சுவர் இருக்கும். அதை உடைத்துவிட்டால், சம்பாஷணை சுவாரசியம் அளவிட முடியாதது. சிலர் துவக்கத்திலேயே அவற்றை கிள்ளி எறிவர்; ஆத்மார்த்தமான உரையாடல் நிலையை போதை இல்லாமலேயே ஊட்டுவர். சிலரோ தங்களின் புத்தகங்களின் நீட்சியாக சொற்பொழிவை அமைத்துக் கொள்வர். எப்படியாக இருப்பினும் மாலை நேரத்து மீட்டிங் சுகம் தரும்.

சாருவின் எழுத்தை மேலோட்டமாக படிப்பவருக்கே அவர் மேல் அச்சம் கலந்த குழப்பம் நேரிடும். எந்திரன் விமர்சனம் வாசித்தவுடன் நண்பர் சொன்ன மதிப்பீடு நினைவில் தோன்றியதைத் தவிர்க்கமுடியவில்லை.

‘சுஜாதா யாரையாவது திட்டினால், அது அந்தாளுக்கு அழைப்பு விடுவதாக அர்த்தமாக்கும். ஒரே வருடத்தில் ரெண்டு படம் வருது. ஒண்ணு புது வசந்தம்; இன்னொண்ணு அஞ்சலி. எந்தப் படத்த சுஜாதா “ஆஹா… ஓஹோ…”ன்னு பாராட்டினார்? எதத் தாளிச்சு அதகளமாக்கினார்னு நெனக்கிறீங்க? – “அஞ்சலி திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றின் மோசமான மைல்கல்” என்றார் சுஜாதா. விக்ரமன் படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார். அடுத்த வருஷம் மணிரத்தினத்துடன் இணைந்து விட்டார்’.

சாரு நிவேதிதாவும் கமலைத் திட்டுகிறார். இளையராஜாவைத் தாக்குகிறார். ரஜினி, ஷங்கர் படங்களையும் விட்டுவைக்கவில்லை. நாமும் நிறையவே விமர்சித்திருக்கிறோம். ராசலீலாவை கிழிக்கிறோம். சாரு மடலில் தந்த கவிதை கிவிதையாக்குகிறோம். நானும் கூட்டு சேர நிறையவே சங்கேதம் விட்டுப் பார்த்தாகிவிட்டது.

‘உங்கொப்புரான் சத்தியமா நான் குடிகாரன் இல்ல’ என்று சாரு ஆனந்த விகடனிலும் அவரின் பதிவிலும் தொடர்ச்சியாக எழுதி வந்த காலகட்டம் அது. அப்படியானால் சந்திக்க உகந்த இடம் மதுவகமே என முடிவானது. நித்யானந்தா மாதிரியே குடிப்பழக்கத்திற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார் என்று தோன்றாமல் போனது வேறு பிரச்சினை.

சாருவிற்கு மின்மடலிட்டேன். தொலைபேசி தந்தார். அழைத்தேன். பேசினோம். ஒரேயொரு சந்தேகம் கேட்டார்.

“பாலா, ஆனந்த விகடன் கட்டுரை எழுதுகிறேன். இந்த பிராமணர்கள் எல்லாம் பூணூல் மாற்றிக் கொள்வார்களே… அந்த நாள் எந்த மாதத்தில் எப்பொழுது வரும் என்று  தெரியவில்லை; திண்டாடுகிறேன். கூகிள் கைவசம் இல்லை. உங்களுக்குத் தெரியுமா?”

இதற்கு மேல் சாரு நிவேதிதாவுடன் ஆன சந்திப்பு குறித்து குறிப்பிடத்தக்க விஷயம் எதிவும் கிட்டாததால், இந்தக் கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது.

தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

1. பிச்சைக்காரனின் சிரத்தையையொத்த பகுப்புகள் கொண்ட தமிழ் பேப்பரில் ‘நல்ல எழுத்து’ ( http://www.tamilpaper.net/?cat=23 ) பகுதி அ.மு/மி பவ.

2. பிரிட்டிஷ் ம்யூசியத்துக்கு போன 10 வயசுக்காரி டகடகவென்று எல்லா ஓவியத்தையும் ட்ரேஸ் செஞ்ச மாதிரி ஜெயாவில் #Kamal http://bit.ly/clUIo0

3. பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் பரிதாபமாய் பல்லிளிக்கும்போது ‘They deserve it’ தோன்றினால் பாவமா?

4. ஏழு வருசம் முன்பு போட்ட பதிவை இப்படி ட்வீட்டுவது தவறல்ல; அப்படியே மறுபதிவது இமாலய தவறு. தீபாவளி வாழ்த்துக்கள்: wp.me/p3fCv-se

5. டபுள் கா மீட்டா சாப்பிட்டிருக்கீங்களா? தேவாமிர்தம்னு பேசிக்கறாங்களே… அதேதான். இனிய தீபாவளி ஸ்வீட்.

6. அறிவாளி விஷயமறிந்தவள்; புத்திசாலி விஷயத்தை அலசத் தெரிந்தவள்; சாமர்த்தியசாலி புத்திசாலியை வேலைக்கு அமர்த்தத் தெரிந்தவள்.

7. தூரத்தில் +ல் யேசு பிரும்மாண்டமாய் அழைத்தார். நெருங்கினேன். நெடிந்துயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் கிறிஸ்து காணாமல் போனார்.

8. குரங்கு கையில் பூமாலை; @charunivedita கையில் இலக்கியம்; அமெரிக்கன் கையில் தெர்மோஸ்டாட்; @peyarili கையில் ஒளிப்படம்; தமிழன் கையில் கலாசாரம்

9. இந்தியாவில் இருந்தால் தாத்தா, பாட்டிகளைக் கொல்லலாம்; இங்கே இருப்பது ஒரேயொரு கார்; எத்தனை முறை பழுதடையச் செய்வது? #லீவு

10. மைக் மோகன் என்பார்கள்; கவர்னர் பட்வாரி போல் எங்கும் அட்டெனடன்ஸ் என்பார்கள்; விமர்சக சுப்புடு என்பார்கள்; கர்னாடக வித்வான் சௌம்யா எனலாம்.

11. ‘சரணம்’ ரெண்டு வகைப்படும் என்கிறார் எஸ் பி ஷைலஜா. ஷரணாகதி – கிருத்திகாவிடம் சரவண பவன்; ச்சரணம் – ரஜினி கல்யாணத்திற்கு பாமக அழைப்பு.

12. ஆயர்பாடியில் இருந்து ஆய் வந்ததா? ஆயா வந்தாளா?

13. Cold வந்தாலும் கணவன்; ஃப்ளூ வந்தாலும் புருஷன் என்றால், அரை மைல் ஓடிட்டு அரைஞாண் கயிறு லூசாயிடுச்சான்னு பார்க்கிற மாதிரி இல்ல என்கிறாள்.

14. காதலை சொல்லத் தெரியாத 80s வகையறா ‘கல்லறை’ cliche கிடையாதென்பதும் @ppothen ‘அப்பாவின் காதலை’ பழசு என்பதை பார்ப்பதும்தான் தமிழ் சினிமா ரசிகர்

15. திருட்டுக் கதை என்றால் @ppothen சாதாரணமா கோபம் வரும். ஆனா, தெரிஞ்சவங்க சுப்ரமணிய ராஜுவை சுட்டுப் போட்டா பாராட்டுவார் போல. #Naalaiya #TV

16. ‘நாளைய இயக்குநர்’ல் மதனுக்கு Suicide வந்தால் பிடிக்கல; மது, சிகரெட்டுக்கு தடா போடுறார்; திருவிளையாடல் எடுத்தாப் பாராட்டுறார். பரிசில் தரார்

17. கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.

18. நோட் பண்ணதையெல்லாம் நோட் செஞ்சது பதிவர் காலம். இதெல்லாம் நோட் பண்ணணுமா நெனக்கிறது, இந்தக் காலம்.

19. http://www.keetru.com போய் @tamilpaper வருவது தமிழிணையத்தின் சீரழிவு என்று எத்தனை கட்டுரை வந்திருக்கிறது? #Tamils

20. NBCஇன் Olympics அப்புறம் தூர்தர்ஷனின் Commonwealth பார்த்தால், ஷெனாய் வாசிப்புடன் கமலா காமேஷ் கவர்ச்சி டான்ஸ் உணர்ச்சி பொங்குகிறது. #DD

21. So many blue jeans at #necc14 it looks like uniform. Shirts differentiate coders.

22. Saw ‘Buddha‘ in PBS: Very poetic adaptation; imaginative cartoons to symbolize mystical & religious portions; profound quotes in rusticness

23. saw ‘Diary of a Wimpy Kid’: My daughter observed, ‘The book was much better; I had imagined the main character to be different!’ I liked it.

24. What is your strategy? Being a specialist niche player or jack of all arts? In career? In blogs? What works for your company?

25. I used to think FourMediumOneLarge as something to do with whiskey. It seems layout spec for ribbons in sharepoint. #scale

26. Some predictions (rather currently in prod) 1. Mouse is the new remote. 2. JavaScript is the new C language. 3. SharePoint is the new Excel.

27. சிவாஜி படமே பார்க்காத சபதத்தினால், ‘சுமதி என் சுந்தரி’ டைட்டிலில் ஏன் half-clad women from men’s magazines ஏன் நிறைந்திருக்கிறார்கள்?

28. ஹஜ்ஜுக்கும் புத்தாண்டு டைம்ஸ் சதுக்கத்திற்கும் என்ன வித்தியாசம்? சவுதி செல்வதற்கு சென்னை காசு கொடுக்கும். டைம்ஸில் குண்டு வெடிக்கும்.

29. Doordarshan பொதிகையில் ‘வாலிப வாலி’: என்னவாக இருந்தாலும் ‘மலரும் நினைவு’களை அடிச்சுக்க எதுவுமேயில்ல… காமராஜ், கல்கி, ராஜாஜி, அம்மா சென்டி

30. மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’: என்னதான் ஊர்க்குருவி (& சம் காக்காஸ் ஆல்ஸோ) சுஜாதாவாக நினைத்தாலும், கிட்ட நெருங்க இப்போதைக்கு எவருமே லேதண்டி

31. கற்றது தமிழ்: ‘நான் கடவுள்’ முன்னோடி; ஜெயமோகன் வசனத்தை விட தமிழ் எம்.ஏ ஷார்ப். Flow இருக்கிறது; நாயகருக்காக ‘ஐயோ… பாவம்’ கூட வருகிறது.

32. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: வெளியாகியபோது வெகுவாக ரசித்த படங்களை இப்போது பார்த்தால், காலப்போக்கும் விமர்சனவலை-மனமும் ரசிக்கவைக்கவில்லை.

33. ‘பார்த்திபன் கனவு’ படம்: செம திக் கதை; கருப்பு சரோஜா தேவி; காரண காரியம் முழுமையாக சொல்லாத திடுக் திருப்பங்கள். குழப்ஸ்.

34. சாமர்த்தியம் என்பது இந்தியராய் பிறந்த எவருக்கும் பாடமாய் அனுபவிப்பது; அவ்வாறு கற்றதை சுயநல பொது பயன்பாடுக்கு மாற்றுவது மேற்கத்திய நாகரிகம்

35. ராசா எத்தனை ராஜா! ஆண்டிமுத்து ராஜாவா? மன்மத ராசாவா? ஸ்பெக்டரம் மாபியாவா? தலித்தியத்தவரா? நீலகிரி பிரபுவா? எப்பவுமே அவரு ராசாவா? #Raja #Rasa

36. Wanted: டாஸ்மாக் நிவேதிதாவும் நீமன் மோகனும் க்ளோபஸ் புத்திரரும் போலோகிருஷ்ணனும் நிறைந்த தற்கால தமிழ் இலக்கியம் வளர வால் மார்ட்கள் தேவை.

37. The perfume from the lady standing in front of me at the Dunkin Donuts is more pleasant, refreshing & strong than the Coffee itself.

38. ஆண்டியார், அல்லி, அரசு, பிரார்த்தனை க்ளப், பராசக்தி என்று பதில் கேட்டால் Monopoly. ‘போலி… போலி’ என்று போலினால் இணையக்காலி. #வார்மிண்ட்

39. Veblen Good என்றால் பூணூல் என்பார் வீரமணி பார்ட்டி. ஐ-பாட் என்பர் சீன அடியார். வெப்ளென் வேண்டாம், வாழை போதும் என்பது 7ஆம் உலகம்.

40. சாப்பிடும்போது கொல்லைக்குப் போனதைப் பற்றி பேசினால் திட்டு விழும். பாத்ரூமில் Food mag படித்தால் பீயை உண்ணத் தோன்றுமா?

41. ஈ ஓட்டும் குறிப்பு: அமெரிக்கக் கொசுக்களை ரெண்டு கையால் தட்டிக் கொல்வதை விட ஒரே கையால் அபகரிப்பது எளிது.

42. தப்புத் தப்பாக செய்தியைத் திரிப்பது பெரிய தவறா? தப்பும் தவறுமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவது தவறா?? செய்தியே சொல்லாமல் விடுவது?

43. கலைஞர் டிவிக்கு மொழிபெயர்ப்பவருக்கு இரண்டு மொழிகள் தெரியாது. 1. இந்தி; 2. ஆங்கிலம். எனினும், தமிழில் தட்டச்சுவதால் வேலை கிடைச்சுடுச்சு.

44. டேட் என்றால் நாள்பட பொருள். நாள்போகப் போக முன்னேற்றம். டேட் போடாவிட்டால் பால் கெட்டுப் போகுமே…

45. பாத்ரூமிற்கும் கர்னாடக கச்சேரி அரங்கிற்கும் ஆறு ஒற்றுமை இருக்கு… தெரியுமா?

46. Who in your life demonstrates living to the full (not living recklessly) and what other characteristics do they display?

47. எழுத்தாளனுக்கும் பறக்காவெட்டிக்கும் வித்தியாசம்? 1. ரசிகர்: http://bit.ly/9BBurw 2. கீபோர்ட்நடுங்கி: http://bit.ly/aAec80

48. Oru என்பதில் இருந்து Our பிறந்தது. ‘நாம் அனைவரும் ஒன்று’ என்பதன் குறியீடு. அதை ‘நமக்கு ஒருவர்’ என்று திரிப்பது தவறு. #குக #கால்வெட்டுவல்

49. சூதாட்டம் @akaasi க்கு பிடிக்காது. ஏன்?

50. Santosh Sivan’s Sivapuram: கொஞ்சம் அன்னியன்; Appleஇன் புது கண்டுபிடிப்பு போல் காவ்யா மாதவன்; மலையாள மேஜிக்; எகிறி குதிக்கும் ஜோர்.

51. அங்காடித் தெருவில் ஜவுளிக்கடைகாரரை வில்லனாகக் காட்டுவது சுந்தர ராமசாமிக்கான குறியீடு; பாத்ரூம் சுத்தம் செய்பவர் சாரு நிவேதிதா எனலாமா?

52. வீட்டு வாசல் புல்லை மான் மேய்ந்தால், லயிந்து அழகு பார்க்கும் மனது, வாத்துக் கூட்டம் கபளீகரிக்க வந்தால் அடித்து துரத்துகிறது.

53. தூரத்தில் நீச்சல் குளம். ‘நீந்துவது ஆணா? பெண்ணா?’ கேள்வி எழுகிறது. எல்லாமே எந்திரன் என்கிறது பைனாகுலர் இல்லாத கண்பார்வை தூரதிருஷ்டம்.

54. பதிவருக்கும் எழுத்தாளருக்கும் வித்தியாசம்? ப்ளாகர் கிண்டலடிப்பார்; எழுத்தர் 1/2 மணி நான் ஸ்டாப் கருத்துரை; அவர் பழகியவர்; இவர் பெரியவர்.

55. எட்டு பேரு; அட்லான்டிக் சிடி; விடிய விடிய அரட்டை; சகஜமான கால் வாறல்; கல்லூரி ரீயுனியன் மாதிரி ஒரு சந்திப்பு. வருசா வருசம் பதிவர் விசிட்டணும்

56. கொன்னா பாவம் தின்னாப் போச்சு பழசு. தின்னா வாசம், (பல்) ஃப்ளாஸினா போச்சு புதுசு.

57. Celbrityக்கும் @charuniveditaக்கும் என்ன வித்தியாசம்? புகழை விமர்சித்தால் பிஆர்ஓ வக்காலத்து; சாருவை விமர்சித்தவருக்கு வக்காலத்து கூட்டம்

58. ‘அவசியம் எனில் மட்டுமே பேசலாம்’ என்றால் அவசியமில்லை எனில் கூட அரட்டையடிக்கலாம் என்னும் அர்த்தம் பொதிந்துள்ளதா?

59. ஜெமோ சொன்னப்புறம்தான் தெளிவாக காதில் விழுகிறது ‘அருந்ததிப் பயலே’; அது வசவு என்பதும் விளக்கியபிறகே புரிகிறது.

60. 10 lists hv @charunivedita @uyirmmai has 13; @writerpara – 59; 163 for @selvaraghavank A top 10 for listing count shd be due

61. முதலியம் -> முதலியார்; பிரம்மச்சரியம் -> பிராமணர்; தோட்ட தரணியம் -> செட்டியார்; தேவரடியாரியம் தேவேந்திராவா தர்மேந்திராவா?

62. அந்தக் காலத்தில் இஸ்லாம் மட்டுமே இருந்துச்சு என்பதற்கான அடையாளமே மதார்ஸாவில் இருந்து திரிந்த மதராசப்பட்டினம் என்பதாம்.

63. Massல் ஒரு எம்மும் புடுங்க முடியாது… அப்படியும் பிடுங்கினாக்க, Ass ஆயிடும்.

64. ‘சத்யா’ திரைப்படத்தில் தன் சாதி என்ன என்பதை கமல் வெளிப்படையாக்குவது ஏன் என்பதிருக்கட்டும்! படத்தில் சத்யமூர்த்தி என்ன #caste ? #Satya

65. இதயம் தொட்ட கதைகள் – தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை’: வசனம் கொஞ்சம் செப்பனிடலாம். மத்தபடிக்கு அருமை. #JayaTV #Shorts

66. ஆயிரம் பக்கம் எழுதினால் ரெண்டு மூணு சீன் கூடவா உருப்படாம போயிடும்? ‘ராஸலீலா’ மாதிரி திராபைகளில் கூட முத்துகள் உண்டே.

67. அவர்களுக்கு சொந்தமாகவோ பதிப்பாளரோ எடிட் செய்ய கைவரவில்லை. ஓவர்-ரைட்டிங்கை ஒழுங்கு செய்ய இயக்குநரிடம் சரண். கைமேல் பலன்

68. அந்த லிம்கா விளம்பரத்தைப் பார்த்தால் ‘அங்காடித் தெரு’ துவக்கப் பாடல் பார்த்த துள்ளல் ஒட்டிக் கொள்கிறது. அழகான ஜோடி; ஜில் ரம்மியம்.

69. ஜெயா டிவியில் ‘தினம் ஒரு திவ்ய நாமம்’ தலைப்புப் பாடலில் புடைவைத் தலைப்பை பிடித்து கும்மியடிப்பவர்களின் முழுப் பாட்டு கிடைத்தால் ஷேமம்.

70. ‘ஒரு ஷாட்’ எடுத்த ‘நாளைய இயக்குநர்’ 3ஆம் பரிசு: Either I have high standards of School dramas or that 5 min was Magical Bullshitism.

71. Playback singer S Janaki looks incredibly healthy & young with a even more sweet voice at 72. Belated wishes!

72. Turned on ChannelLive. Now eagerly waiting for a notable event like Jaya or Kalainjar’s death on respective TV’s live coverage stream.

73. பதவியில் இருக்கும் போது போனால், மூன்று நாள் விடுமுறை கிடைக்குமே என்று பிஞ்சிலேயே யோசிச்ச ஆளுங்கதானே

74. காஸ்மிக் தூசி யாராக இருக்கும்?

75. Notable recent books: Naked Science by Charles Wheelan. Undressing the dismal science.

76. The drunkard’s Walk by Leonard Mlodinow. How Randomness rules our lives. #books

77. Everyday Survival. Why smart people do Stupid things by Laurence Gonzales. #books

78. Eating the Dinosaur by Chuck Klosterman. #books

79. Traffic. Why we drive the way we do and what it says about us by Tom Vanderbilt. #books

80. When a lover is on the other end, cell rings like rock music; while it is the wife it rings like coins clanking.

81. The quantum is love directly related to the distance, communication medium among (>n) pyaaris & spouse’s cooking capabilities.

82. நவீன ‘நான் சிகப்பு மனிதன்’ Kanagavel Kaakka: ஜூனியர் ஷங்கர் கவின்பாலா என்றால் சீனியர் சுஜாதா மாதிரி @writerpara

83. Thamizhachi Thangapandiyan was the original Priyamani in Veli Rangarajan’s Ravanan by Ku Alagirisami: http://bit.ly/9ohe4y #Maniratnam

84. நித்யானந்தருக்கு மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான். – Manushyaputhiran

85. கார்ப்ரேட் சாமியார் & பரஸ்பர முதுகு சொறிதல்: நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது.-Charu

86. Queen Rocks… ‘We will… we will rick you!’ What is a similar timeless uplifting classic in Tamil? #Songs #Music

87. Phil Jackson is the ultimate closer. Knows when to step up, where to speed things, calls key plays, stops momentum with timeouts.Hate him 🙂

88. Reputation matters to not get into foul trouble. That seems to be the difference between ‘traveler’ Gasol & Wallace.

89. Chitra used to be uncomfortable with the not so subtle advances from Singer Mano on Alka, Sahana, Nithyasree in Vijay TV’s Super Singer Jr.

90. மனோ நன்றாக நிர்வகித்தாரா 😦 He was close to a pervert to with his ‘நீங்க நல்லா அழகா இருக்கீங்க’ when a singer has sung well.

91. Difference between winning team and a loser in NBA: When you cannot shoot field goals, drive & get fouled to get free throws- Michael Jordan

92. ஒருவனுக்கு ஒருத்தி என்றால் ஒருவனின்/ஒருத்தியைத்தான் நசுக்க முடியும். It shd be a n…m cardinality association relationship.

93. Unsung heroes list: Rasheed Wallace. Rombavey sung heroes list: Kevin Garnet, Kobe Bryant.

94. Who is sitting beside Leonardo DiCaprio? Dress லட்சணமா இருக்கு

95. Kobe Bryant, Dwight Howard, Lebron James… everybody is getting switched off one by one by Boston Celtics. It is the defense! stupid

96. Lakers shd be called Rebound பிச்சைக்காரன். If only Celtics can rebound and avoid the second chance rather third chance points by LA…

97. Lakers vs Celtics rivalry buildup seems to be epic like India vs Pakistan, Red Sox vs Yankees, Army vs Navy, Nadal vs Federer. #NBA

98. Without referees intervention, NBA will not be interesting. When players have a bad day, umpires make them champs. Lakers made interesting.

99. இன்றைய முடிபுத்துவம்: பரஸ்பர நம்பிக்கையின் பின்னே இருப்பது மக்களின் மனதில் ஆழமாக இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சி. #Quotology

100. i3 – மூன்று முகம்; i5 – மைக்கேல் மதன காமராஜன்; i7 – எல்லாம் இன்ப மயம்; பாக்கி எல்லாம் தசாவதாரம்.

101. i3, i5, i7, dual-core, multi-core – அசந்தா அடிக்கறது மைக்ரோசாஃப்ட் பாலிசி; அசராம அப்க்ரேடறது இன்டெல் ஸ்டரடீஜி.

102. ஓ ரெய்லி போல் சாருவோ வக்கணையான வலைப்பதிவரோ டிவி நிகழ்ச்சியில் சார்பான கருத்து வைத்து வலியுறுத்தி அரட்டை அடித்தால் வித்தியாச ஹிட் ஆகும்

103. மடலில் விடாக்கண்டரை குப்பை வீசலாம். மின்னஞ்சல்காரர் எரிதவகை. வலை ராவல்பிண்டிகளையும் கடக்கலாம். முகத்துக்கு எதிரான மொழிவெள்ளத்தை வெல் இயலா

104. மசாலான்னா ‘மெகாதீரா’. தெலுங்குப் பட டைட்டிலில் பேருக்குக் கூட ஆங்கில இனிஷியல் இல்லியே. எப்பத்தான் நாலெழுத்து கத்துப்பாங்களோ? #Telugu #Films

105. இன்றைய உவமை: ஆயில் கிணறு – வலைப்பதிவு. குத்தகை – செய்தியோடை. இரான் – போலி டோண்டு. BP – வினவு: http://nyti.ms/a4G6C3

106. @ivansivan //தினம் சில வரிகள்// துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்தாச்சு போலிருக்கே. (‘வாழ்க்கை ஒரு வட்டம்’னு இ.த, அன்னிக்கே சொல்லிட்டாரே 😉

107. There are two types of people: one who has their name in ration cards & others who keep their names in two ration cards

108. பாலைவனச்சோலை கடசீல வர வாழ்க்கைக்கான டயலாக் வலைப்பதிவுக்குப் பொருந்துது. திண்ணைகள் மாறலாம்; ஆனால், அஞ்சு பேர் உட்கார்ந்திருப்பாங்க.

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

செக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்

தற்சமயம் அமெரிக்காவில் புகழ்பெற்ற Phillip Garrido குறித்த செய்தி: Questions arise over how kidnapper went undetected – Yahoo! News: “For 18 years, Phillip Garrido managed to elude detection as he pulled off what authorities are calling an unfathomable crime, kidnapping and raping 11-year-old Jaycee Dugard, keeping her as his secret captive for nearly two decades and fathering two of her children.”

Jaycee-Dugard-California-kid-child-abuse-11-year-Guardian

பள்ளிக்கு செல்லும் பேருந்து. அதைப் பிடிக்க தன் வளர்ப்பு தந்தையோடு நடந்து செல்கிறாள் 11 வயதுச் சிறுமி. அப்பொழுது அரக்கபரக்க வரும் கார், அவளைக் கடத்தி சென்றுவிடுகிறது.

பதினெட்டு வருடமாக காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கிறாள். போன வாரம் கண்டெடுத்திருக்கிறார்கள். பதினோரு வயதில் இருந்து பாலியல் அடிமை போல் இருந்தவளுக்கு இரு பெண் குழந்தைகள். 13… வெறும் பதின்மூன்று வயதிலேயே முதல் குழந்தையைப் பெற்றுப் போட்டிருக்கிறாள்.

மூத்த மகளுக்கு 15 வயசு. இரண்டாமவளுக்கு 11. அம்மாவாது பதினொன்று வயது வரை சுதந்திரமாக இருந்தாள். இவர்களோ, பிறந்த நாளில் இருந்து முடக்கம். இருவரும் வெளியுலகை பார்த்ததில்லை. அவர்களும் செக்சுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம்.

இந்தச் சிறுமிகள் பள்ளிக்கு சென்றதில்லை. தடுப்பூசி எதுவும் கிடைக்கவில்லை. நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் கூட சென்றது கிடையாது.

அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று என்னைப் போல் பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
Sac-bee-san-francisco-step-father-old-11-story-newspaper-cuttingஅச்சமுண்டு அச்சமுண்டு‘ வெளியான சமயம் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

நல்ல வேளை.

கமல்ஹாசன் – ஒரு தீர்க்கதரிசி‘ போன்று அருண் வைத்தியநாதன் குறித்த அஞ்சல் எதுவும் வந்துசேரவில்லை. வாயில் லிங்கம் எடுப்பது போன்ற இந்த மாதிரி மாயாஜாலங்கள் எல்லாமே ஹம்பக் என்பது என்னுடைய ஆழமான நம்பிக்கை.

அப்படி ஒரு கொடூரம் இங்கே: The Hindu : Front Page : Soothsayers arrested for poisoning children after predicting their death

அப்படியே தொடர்பான சமீபத்திய இரு பதிவுகளும், அதில் பொருத்தமான மேற்கோள்களும்:

மாந்திரீகம், மேஜிக், மாயாஜாலம் – மூடநம்பிக்கை x கலாச்சாரம்

1. சாரு நிவேதிதா ஆன்லைன் – கடவுளைக் கண்டேன் :: பரமஹம்ஸ நித்யானந்தர் – யோகம் நிரோதம்: “ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு ஒரே நபரின் பௌதிகத் தோற்றம் காட்சியளித்தால் அது எப்படி மாயத்தோற்றமாக இருக்க முடியும்? இந்தச் சம்பவத்துக்குப் பிறகும் எனக்கு ஒரு அதிசயம் நடந்தது.”

2. ஜெயமோகன் :: jeyamohan.in » ஆன்மீகம், போலி ஆன்மீகம், மதம்: “இந்த புராணங்கள் தத்துவ விளக்கத்துக்கான கருவிகளாக அமைந்தன. ஏனென்றால் தத்துவ விளக்கத்துக்கு எப்போதுமே படிமங்கள் தேவை. அப்படிமங்களை நம் புராணங்கள் தொடர்ச்ச்சியாக வழங்கின. ஆகவே பின்னர் புராணங்கள் ஒரு தனிமொழியாக [Meta Language] மாறின. அதில் நம் தத்துவம் விரிவாக பேசப்பட்டது. இது புராணங்களின் தத்துவ முகமாக இன்று நீடிக்கிறது.

புராணங்கள் மிக மேலோட்டமாக , வெறும் அற்புதக் கதைகளாக மட்டுமே வாசிக்கபப்டும் புரிந்துகொள்ளப்படும் சூழல் உருவாகியது.

இக்கடிதம் இந்த எளிய புராணமனநிலையில் நின்று எழுதப்பட்டிருக்கிறது. இந்த மனநிலை இன்று இந்துக்களிடம் மிகப்பரவலாக உள்ளது. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் மனிதர்களே இன்று நாம் தொலைக்காட்சிகளில் மேடைகளில் மிக அதிகமாக கண்டுகொண்டிருப்பவர்கள். சொல்லப்போனால் நாம் இந்து மதம் சார்ந்தவர்களாக காண்பவார்கள் அனைவருமே இப்படித்தான் இன்று இருக்கிறார்கள். அவர்கள் தங்களை அற்புத மனிதர்களாக காட்டிக்கொள்கிறார்கள். அருள்வாக்கு சொல்கிறார்கள். ஆசி அளிக்கிறார்கள். நோய் குணமாக்குகிறர்கள். நீர் மேல் நடக்கிறார்கள். நெருப்பில் நீந்துகிறாரர்கள்.”

ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடுவோம்.

Fritzl-Die-Justice-Jury-Sentence-Kids-Children-law-Order-Judges-Courts

வினாக்கள்

  1. செக்ஸ் அஃபென்டர் என்றால் யார்?
  2. இப்பொழுதாவது செய்தியில் நிறைய அடிபடுகிறார்களா? தடுப்பது குறித்து விவாதம் எழும்புகிறதா?
  3. அமெரிக்காவில் இன பேதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? ஹார்வார்ட் பேராசிரியர் கேட்ஸ் வழக்கில் வெள்ளையன், கறுப்பினம் என்றார்களே… அந்த மாதிரி பிலிப் காரிடோ மட்டும் கருப்பனாக இருந்தால், சீக்கிரமே ஆராயப்பட்டிருப்பாரா? அல்லது குறைந்தபட்சம் கடுங்காவலிலேயே வைக்கப்பட்டிருப்பாரா?
  4. மேற்கத்திய உலகுகளில் எப்பொழுதாவது நடக்கும் ஒன்றிரண்டு சம்பவம் பெரிதாக்கப்படுகிறதா? எத்தனை குற்றம் அம்பலமேறுகிறது? எவ்வளவு சதவிகிதம் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றுப்பெற்று நீதி கிடைக்கிறது?
  5. அதெல்லாம் சரி… ஆரம்பத்தில் கடவுள் குறித்து ஏன் இவ்வளவு பில்ட்டப்பு?

Freedom-Daughters-Dress-Ethics-Morality-cartoon_leunigjpg

பாலியல் குற்றவாளி – Sex Offender

  • சிறுவன்களையோ சிறுமிகளையோ வன்புணர்பவர்
  • அவ்வாறு வன்முறைக்குள்ளாக்கியதை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு ஒப்புக் கொண்டவர்.
  • குழந்தைகளிடம் செக்ஸ் வைத்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறை சென்றவர்.
  • சிறார்களிடம் உறவு வைத்துக் கொள்வதை வீடியோ, புகைப்படம் எடுத்து உலவ விடுபவர்.
  • மேற்சொன்னதை பல தடவை பல்வேறு குழந்தைகளிடம் விதம் விதமாக தொடர்ந்து செய்து வருபவர்.
  • ரேப், பொது இடத்தில் ஆடையின்றித் திரிவது, பலர் பார்க்குமாறு மலஜலம் கழிப்பது போன்ற சிறு குற்றங்களும் இதில் அடக்கம்.

மதநம்பிக்கை & கடவுள் மீது பழிபோடும் பக்த சுபாவம்

அந்தக் காலத்தில் வள்ளியும் தெய்வானையும் கந்தசாமிக்கு துணையிருந்தார்கள். தெய்வானையை மணந்த பிறகு, வள்ளியை, யானைகளைக் கொண்டு பயமுறுத்தி இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார் முருகன். எம்பெருமான் தண்டபாணியைக் கூட பாலியல் பலாத்கார லிஸ்டில் திருத்தணிகை காவல்நிலையம் விசாரிக்க வேண்டும். ஆனால், போலீஸ் ஸ்டேசனிலேயே இந்த மாதிரி ரேப் நடந்தேறுவது சினிமாவில் அடிக்கடி பார்க்கும் நிஜம்.

ஃபிலிப்பும் இதையேதான் தன் நம்பிக்கையாக சாட்சியம் சொல்கிறார். கடவுள் அவர் காதில் வந்து ஓதியிருக்கிறார். இளம்வயதில் பெண்ணின் அடக்குமுறையால் பாதிக்கப்படும் ‘சிவப்பு ரோஜாக்களி‘ல் இந்தப் பொண்ணுங்களே இப்படித்தான். குத்துங்க எசமான் குத்துங்க என்பதாக எழும் குரோதம், தனக்கு பலம் கிடைத்தபின், அந்த அதிகாரத்தை பிரயோகிக்க, அடக்கியாள கீழ்ப்படிந்த சிறுவயது சிறுமியை நாடுகிறது. அதற்கு அல்லாவும் துணையாகிறார். பிலிப்புக்கு ஜீஸஸ்.

மாயாவி‘ திரைப்படத்தில் சூர்யாவால் சிறைவைக்கப்படும் ஜோதிகா, திருடன் மேலே காதல்வயப்படும் ஸ்டாக்ஹோம் தாக்கீட்டின்படி 11 வயதில் கவரப்பட்ட Dugardம் இப்பொழுது தன்னை டென்ட் கொட்டகையில் அடைத்து வைத்தவன் மீது பாசமோ, பரிதாபமோ கொண்டிருக்கிறார்.

‘நான் மிகவும் முக்கியமானவன்’ என்று எனக்கு கூட வலையில் இயங்குவதால் பொய்யாகத் தோன்றும். வாழ்க்கையில் மிட்-லைஃப் போராட்டத்தில், நாய்க்குணம் எட்டிப்பார்க்கும் நாற்பது வயதில் இந்த மாதிரி திரிபுணர்ச்சிகள் சாதாரணம். மாயத்தோற்றங்களை இறையாணையாகக் கனவு கொண்டு, செயலாக்கலில் ஈடுபடுவது அபாயம்.

Cartoons-look-the-other-way-ignore-sex-offenders-abuse-Martin-Rowson-006

தனிநபர் சுதந்திரம் & குற்றவாளிக்கு மறுவாழ்வு: புனர்வாழ்வும் புணர்வாழ்வும்

பாலியல் வக்கிரம் பிடித்தவன் என்பதை பிலிப் காரிட் ஏற்கனவே ஒப்புக் கொண்டிருக்கிறான். மூன்று தமிழ் சினிமாக்களை எடுத்துக் கொள்ளலாம்.

1. மகாநதி: சிறைவாசம் குறைப்பு: ஆயுள் தண்டனையாக ஐம்பதாண்டு காலம் கடுஞ்சிறையில் இருந்திருக்க வேண்டியவன். பரோல் என்பது குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டல். அவ்வாறு மனந்திருந்திய செய்கைக்காக, கடவுள் நல்வழி காட்டினார் என்னும் ஒப்புதலுக்காக பத்தாண்டுகளிலேயே விடுவிக்கப்படுகிறான். வெளியே வந்ததும், யேசுவின் சொற்படி வேட்டை தொடர்கிறது.

2. வேட்டையாடு விளையாடு: – Garrido came under suspicion in the unsolved murders of several prostitutes in the 1990s, raising the prospect he was a serial killer as well. Several of the women’s bodies — the exact number is not known — were dumped near an industrial park where Garrido worked during the 1990s. Police executed a search warrant at his home in the investigation.

3. நந்தா: இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் வெளியில் விடுவதில் தப்பேயில்லை. சுதந்திரம் அவசியம். சிறையை விட்டு அனுப்புமுன் சுன்னியை மட்டும் வெட்டி விடுதல் எல்லோருக்கும் நலம்.”
Babysitter-New-Yorker-Abuse-Cartoons-Comics-Fun-Pun-satire

உங்கள் ஊரில் பாலியல் வக்கிரம் பிடித்தவர் இருக்கிறாரா?

1. National Sex Offender Registry

2. Obtaining Information About Sex Offenders

தொடர்புள்ள பதிவுகள்:

1. Jaycee Lee Dugard and the kidnapper’s narrative | Beatrix Campbell | Comment is free | guardian.co.uk

2. Jaycee Lee Dugard kidnap | World news | guardian.co.uk

3. Just another week of rapes | Life and style | The Guardian: “Nearly 50,000 rapes and attempted rapes take place in the UK every year, but only a few are covered by the media. Julie Bindel gives a snapshot of which cases are reported – and how”

4. Is Jaycee Dugard’s tormentor mentally ill? – Broadsheet – Salon.com

5. Afghan law: Wife refusing sex? Deny her food – Broadsheet – Salon.com

6. The blog of Philip Garrido, serial rapist and kidnapper: “sound control” gadget hallucinations. – Boing Boing

7. In True Psycho Fashion, Phillip Garrido Had Blog, Heard God – Phillip Garrido – Gawker

8. Authorities Missed Chances to Find Captives – WSJ.com

9. Woman Held Captive for 18 Years Resurfaces – WSJ.com

HT-Delhi-Kidnap-Ransom-K-and-R-Kids-Money-Extortion-Rich-Servants-housemaids

லிபரல் பக்கம்: இன்னொரு பக்க நியாயம்: மாற்று சிந்தனை

10. Erogenous Zoned: Sending sex offenders into exile – Reason Magazine

11. Hit List: Deadly sex offender registries – Reason Magazine

12. Which pedophiles strike again? – By Daniel Engber – Slate Magazine

13. Who Are the Molesters in Your Neighborhood? The Supreme Court considers the sex offender next door. – By Dahlia Lithwick – Slate Magazine

Terrorists-Extremists-Law-UNA-Bombers-Police-Sex-Offenders

கட்டுரையை முடிக்க பன்ச் டயலாக்கள்

  • கஞ்சா வைத்திருந்தால் கஞ்சமில்லாமல் இருபது வருசம் உள்ளே தள்ளூறாங்க! பொட்டச்சிய வச்சிருந்தா மட்டும் ஏன் பொட்டில் அறைஞ்சு பாடை கட்ட மாட்டேங்கிறாங்க?
  • பொண்ணுங்க மனச பொண்ணுக்குத்தான் தெரியும் என்பது சீரியல் வசனம். ரேப்பும் செய்வாள் பத்தினி என்பது ரியல் விசனம்.
  • சந்தேகாஸ்தபமா இருக்கேன்னு போலீஸ் விசாரிச்சா தப்பே கிடையாது. ஒண்ணு ஒபாமாவோட பீர் கிடைக்கும்; இல்லேன்னா, பொண்ண பதுக்கற பொறுக்கி கிடைப்பாங்க.
  • பரோல் கொடுத்த மகராசர் இனிமேலாவது தாராளப் பிரபுவாக இல்லாம, தன்னுடைய குடும்பத்த ஒரு தடவ நெனச்சுண்டு ரிலீஸ் செய்வாரா?
  • கோடவுனிலிருந்து விடுதலை கிடைச்சாச்சு… ஆனா, புத்தகம் போடு, சுயசரிதை சொல்லு, ஓப்ராவில் வா என்று துரத்தும் மீடியாவிலிருந்து அவளுக்கு எப்போ விடுதலை?
  • அன்னிக்குக் குற்றவாளிங்கள ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிச்சாங்க.. அந்த மாதிரி புத்தம் புது பூமிய உருவாக்கி, அங்கே இந்த மாதிரி பன்னாடைங்கள பதுக்கி வைக்கலாமே!

Fun-satire-basement-fence-prison-abduct-sex-rapes-violent-austria

Manushyaputhiran & Uyirmmai’s Uyirosai 1st Anniversary

அறிவிப்புகள்:

உயிர்மை.காம் வழங்கும் வார இணைய இதழ்: “இது உயிரோசையின் 50ஆவது இதழ் :: மனுஷ்ய புத்திரன்எழுதியதில் இருந்து:

  • நமது பண்பாட்டு வேர்கள், கலை, இலக்கியம், தத்துவம், சமூகம், அரசியல், சர்வதேச விவகாரங்கள், சினிமா என ஏராளமான துறை சார்ந்த எண்ணற்ற கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.
  • 1500க்கும் மேற்பட்ட படைப்புகள் பல்லாயிரம் பக்கங்களுடன் மிக அரிதான பிழைகளுடன் பதிவேற்றம்.
  • எதையும் எழுதலாம் என்ற எழுத்து சுதந்திரத்தையோ இணைய சுதந்திரத்தையோ சிறிதும் ஏற்கவில்லை.
  • ஓராண்டாக உயிரோசை கடும் பொருட் செலவுடன் — ஓராண்டில் கிட்டத்தட்ட 3 லட்சம் ரூபாய்.
  • உயிரோசைக்கு ஒரு சிறிய அளவிலான சந்தா தொகை

Uyirmai.com & Manushyaputhran in Uyirosai.com: “உயிரோசை ஓராண்டு நிறைவு விழா: இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்: உயிரோசையை முன் வைத்து — சிறப்புரைகள்: சாருநிவேதிதா & எஸ்.ராமகிருஷ்ணன்

என்னுரை

உயிர்மை போன்ற பத்திரிகை நடத்துமிடத்தில், உயிரோசை போன்ற இணையத்தில் மட்டும் வெளியாகும் வார இதழ் நடத்துவது வெகு சுலபம்.

மாத இதழ். அதுவும் அச்சில் வெளியாகும் இதழ். ஒல்லியாக விளம்பரம் இன்ன பிறவெல்லாம் கழித்தால் 150 ஒருங்குறி கிலோபைட்டுக்குள் அடங்கும் இதழ். அதற்குள் எல்லோரையும் திருப்தி செய்ய இயலாது.

அதை விட புத்தகமாக்கல் லாபகரமானது. ஜூன் 2009 உயிர்மையை வாங்கமாட்டீர்கள். ஆனால், ஜூன் 2000த்தில் வெளியான புத்தகத்தை பத்தாண்டு கழித்தாலும் வாங்குவீர்கள். விமர்சிப்பீர்கள். வாசிக்கக் கூட செய்துவிடுவீர்கள்.

ஆகவே,

  1. புத்தகத்திற்கு ஆள் பிடிப்பது எப்படி? எழுதவும் ஆள் வேண்டும்; படிக்கவும் கூட்ட வேண்டும்.
  2. பத்திரிகையில் விற்பனையாகாத பெயரை எப்படி சந்தைப்படுத்துவது?
  3. அச்சில் கழித்துக் கட்டப்பட்டதை, மனம் புண்படாமல், தேர்வானதாக சொல்வது எப்படி?
  4. துணை ஆசிரியர் கவிதைகளையும், வளரும் உதவி ஆசிரியர் தலையங்கங்களையும் வெளிவரச் செய்யும் வழி எது?
  5. ப்ராண்ட் அம்பாசடர்களை உருவாக்குவது எப்படி?
  6. அறுபது பக்கத்திற்குள் இடங்கொடுக்க முடியாதவருக்கு, மனதில் மட்டுமல்லாமல், பாலம் அமைத்து, இடங்கொடுப்பது எப்படி?
  7. மூத்த தலைமுறையினருக்கு அறிமுகமானவர்களை வைத்து உயிர்மை பதிப்பகத்திற்கு ரெகுலர் விளம்பரம் பெறுவது எப்படி?
  8. சாரு.ஆன்லைன், ஜெயமோகன். இன், எஸ். ராமகிருஷ்ணன்.காம் போன்ற தனி மனிதர்களே புகழைத் தட்டிச் செல்லாமல், அவரின் வெளியீட்டாளரும் எப்படி தன்னை நிலை நிறுத்திக்கொள்வது?
  9. இணையம் வந்தபிறகு இலக்கியச்சண்டை என்பது நொடிக்கு நொடி பதிவிடுவது. அதற்கு ஈடுகொடுக்க வாரம்தோறுமாவது வெளியாவது.
  10. வாரப் பத்திரிகை குமுதம், மாதமொருமுறை இலக்கியம் சமைக்க ‘தீராநதி‘ ஆகும்போது, மாதாந்தரி சிற்றிலக்கிய சிற்றேடு, வாராந்தரி ஆகக் கூடாதா? கூடுமா?

What did Uyirosai achieve? உயிரோசை என்ன சாதித்தது?

1. தமிழ் சினிமா குறித்த சுவாரசியங்கள் இலக்கியமாகா என்பதை தமிழ்மகன் கொண்டு முறியடித்தது.

2. தனிவலை இல்லாத சுகுமாரன், வாஸந்தி, இந்திரா பார்த்தசாரதி, தமிழவன் போன்ற மூத்த இலக்கியவாதிகளை தொடர்ச்சியாக எழுதவைத்தது.

3. சொந்த வலையகமாக இருந்தால் அமிதாப் பச்சன் போல் ‘என்னை எல்லாரும் திட்டறாங்க’ என்று அழுதோ, மறுமொழிகளை மறைத்து/பின் திறந்து/மீண்டும் மட்டுறுத்தி என்று சுழற்சிக்குள் சிக்கியோ காணாமல் போகும் அபாயத்தை தவிர்த்தது.

3. சுதேசமித்திரனின் potentialல் துளி ஆளுமையாவது வெளிக்கொணர்ந்தது.

4. இந்திரஜித் பத்தி நிஜமாகவே தவறவிட முடியாததாக இருப்பது.

5. Lack of consistency in மனோஜ், மாயா, சஞ்சித், அபிலாஷ் என்பதைக் குறையாக சொல்ல வந்தாலும், அவர்கள் எல்லாம், புது எழுத்தாளர்களாமே!?!

6. இலக்கியவிருதுகள் குறித்து பன்முக விமர்சனம் வராவிட்டாலும், முழுமையான ஆளுமை சித்திரம் கிடைக்காவிட்டாலும், பின்னணியும் அரசியலும் அறியச்செய்திரா விட்டாலும், இன்னின்னாருக்கு இப்படி என்று செய்தியாக்கியது.

7. ‘உரையாடல்‘ மாதிரி போட்டி இல்லாவிட்டாலும், இதழுக்கு ஒரு சிறுகதையாவது வெளியிடுவது. (கவிதைகளும் வருகிறது. எவராவது வாசித்ததுண்டா?)

8. எழுத்தாளருக்குத் தேவை அங்கீகாரம். படைப்பை ‘நல்லாருக்கு!’ என்று குறிப்பால் உணர்த்தி, உயிர்மை வெளியீட்டீல் இடங்கொடுத்து, பீடத்தில் ஏற்றி அமரவைப்பது.

9. தமிழகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்து தொடர் எழுதாமல் இருந்தது.

10. ஒரு வருடம்; 50 இதழ் என்பது லேசுப்பட்ட சமாச்சாரம் இல்லை. அதுவும் இணையத்தில். முணுக்கென்றால் வோர்ட்பிரெஸ், சட்டென்று ப்ளாக்ஸ்பாட் நிலவும் சூழலில், நாலு குதிரை, மூன்று மாடு, ஓரிரு கழுதை, என்று animal farmஐ கட்டி மேய்த்திருப்பது.

How Uyirosai could have done better? உயிரோசை எவ்வாறு மேலும் பரிமளித்திருக்கலாம்?

1. பாபுஜியின் கருத்துப் படம்

2. உயிரோசையின் வடிவமைப்பு

வலையில் உள்ள சில வண்ணங்கள் கண்களுக்கு உறுத்தலாக இருப்பதைச் சரி செய்தால் படிப்பவர்களை அசதியுறாமல் இருக்கச் செய்யும். புகைப்படங்களும் மிகவும் சிதறிப்போன ஒரு தோற்றத்தை அளிக்கின்றன. – வெங்கடாசலம் / சிங்கப்பூர்

3. தமிழ்ப் பெயர்ப்பு

மொழிகளினூடான பயணத்தில், கவித்துவம் பின்தங்கிவிடுகிறதோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. – மெ.உலகநாதன் / சென்னை

4. புது நூல்கள் அறிமுகம் (அல்லது) புது புத்தக விளம்பரம்தானே?

5. குறுந்திரைப்படங்கள் விமர்சனம் + பார்வை

6. பெண் படைப்பாளிகளின் பங்களிப்பு

7. ஓவியங்கள், சிற்பம், நுண்கலை

8. அரசியல் சப்தங்களுக்கு பதில் அனுபவங்களின் பகிர்வு

9. ஈழம், இலங்கை கவனிப்பு

10. பாலியல், பொருளாதாரம்/வர்த்தகம்/நிதிநிலை போன்ற பேசப்படாத & தட்டையான தமிழ் ஊடகப் பார்வை பெறும் தலைப்புகள்.

Where did Uyirosai mimic other websites? உயிரோசை எங்ஙனம் பிற வலையக செயல்பாடுகளை பிரதிபலித்தது?

1. வெட்டி, ஒட்டும் Ctrl+C வகையறா → ஹைக்கூ தொடர், முல்லா கதைகள், சூஃபி கதைகள்

2. திண்ணை

3. சொல்வனம் போல் வாசகர் கருத்துகளைத் தடை செய்தல்

4. கீற்று போல் விளம்பரங்கள்

5. அந்திமழை போல் ஆதிகால வெப்1.0 தோற்றம்

6. தமிழோவியம் போல் அ.ராமசாமி போல் சில எழுத்தாளர்களுக்கு நிழற்படம்; பாவண்ணன் போல் வேறு சிலருக்கு எந்த ஒளிப்படமும் mastheadம் இடாமை.

7. இஷா (ஈசா?) யோகம் மாதிரி பக்கத்திற்குப் பக்கம் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களின் திருவுருவப்படம்.

8. பதிவுகள் மாதிரி marquee scrolling செய்தி ஓடவிடுவது.

9. தமிழ்மணத்தில் இருக்கும் தனிப் பதிவரின் இடுகை போல் ஒற்றைப் பார்வையை மட்டும் தருவது. பத்திரிகைக்கு அழகு பல்நோக்கில் பல்லூடகமாக வருவது.

10. ஆறாம்திணை கொஞ்ச நாள் கழித்து தென்றலானது. அது போல்?

சாரு நிவேதிதா – ராஸ லீலா: புத்தக விமர்சனம்

எங்கேயோ, எப்பொழுதோ, ஃப்ரீயாக கிடைப்பதால் பினாயில் குடிக்கும் தமிழன் ஆகாமல், இரப்பவருக்கு இடவேண்டிய தட்சிணையாக புத்தகத்தை வாங்கிவிட வேண்டும் என்று வாசித்த நினைவு. கருத்தை சொன்னவர் இவராக இருக்கலாம்.

சாருவின் எழுத்து இலவசமாகக் கிடைக்கிறது. அதற்காகவே சாருநிவேதிதாவின் ராஸலீலா வாங்கினேன்.

சாருவின் புதிய புத்தகங்கள் குறித்த அறிவிப்பு பார்த்தவுடன், படித்து முடித்த ராஸ லீலா பற்றி, சமீபத்தில் மிகவும் பிரயத்தனப்பட்டு கொணர்ந்த இரண்டு வரி:

பாத்ரூமில் வைத்திருந்த சாருவின் ‘ராஸ லீலா’, சுத்தம் செய்ய பேப்பர் கிழிக்கும் அவசரத்தில் தவறுதலாக குப்பைத் தொட்டியில் விழுந்துவிட்டது. – Mar 5

இவ்வளவு சிறிய விமர்சனம் ஆகாது என்றால், கொஞ்சம் பெரிய அலசல்: வார்த்தைகளின் விளிம்பில்: Rasa Leela review

நானூறு ரூபாயை சாருவிற்கு தர விருப்பமிருந்தால், நேரடியாக டிடி எடுத்து அனுப்பி விடவும். ராச லீலாவிற்கு செலவழிப்பதை புத்தகம் வாயிலாக ஆசிரியர் வார்த்தையில் சொல்வதானால்: (பக்கம் 286)

‘நான் இப்போது ஒரு நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறேன்.’