Tag Archives: கலைஞர்

#Justice4உதயமானBaby

உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் ஓடையில் இருந்து:

செய்தி

தலைப்புக்கேற்ற கீச்சுகள்

உதயநிதி கடந்து வந்த பாதை
மெரினாவுல இடம்
சுபவீ ,வீரமணி
அன்றும் இன்றும் என்றும் திராவிடம்
ஸ்டாலின் பாபு
அப்பா திமுக
தாத்தா எவ்வழி

நக்கீரன்

‘திருமணம் ஆனவருடன் தவறான உறவு வைத்திருந்தேன்’ ஆண்ட்ரியா ஓபன் டாக்! | wrong relationship with married man says andrea | nakkheeran:  பெங்களூரில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார் ஆண்ட்ரியா. அப்போது, முறிந்த சிறகுகள் என்ற தலைப்பில் சோகமான கவிதைகளை வாசித்துள்ளார். சோகத்தை பிரதானப்படுத்துவதை போன்று அந்த கவிதை அமைந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் அதற்கான காரணத்தை கேட்டுள்ளனர். இதைதொடர்ந்து பேசிய ஆண்ட்ரியா, ” நான் திருமணம் ஆன ஒருவரோடு உடல் ரீதியாக தொடர்பில் இருந்தேன். ஆனால் அவர் என்னை மனதளவில் காயப்படுத்தினார். அதில் இருந்து மீள முடியாமல் இருந்த போதுதான் இந்த கவிதையை எழுதினேன்” என்றார். ஆயுர்வேத சிகிச்சைக்கான காரணமும் இதுதான் என்றும் அவர் தெரிவித்தார்.

இன்றைய ஜூனியர் விகடன் கிசுகிசு

மணக்கால் எஸ் ரங்கராஜன் – இசைக் கலைஞர் டாகுமெண்டரி

அம்ஷன் குமார் எடுத்த மணக்கால் எஸ் ரங்கராஜனின் ஆவணப்படம் பார்த்தேன்.

புகழுடன் பாடும் காலத்தில் எந்தவித ரெகார்டிங்கும் செய்யக்கூடாது என்பவரின் வாழ்க்கையை பதிவதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. கர்னாடக சங்கீதத்தின் நுட்பங்களை அறியாதவரும் பாடகரின் திறனை அறிந்துகொள்ளும் விதமாக இருந்தது.

இந்துஸ்தானி இசையின் நுட்பங்களை நுழைப்பது ஆகட்டும், ஒரே பாடலை தனது பாணியில் வித்தியாசமாவது இருக்கட்டும்… சாஸ்திரீய சங்கீதத்திற்கு லெக்சர் – டெமான்ஸ்ட்ரேஷன் இல்லாமல் அனுபவிப்பது எனக்கு சாத்தியம் இல்லை.

மணக்காலுக்கு நல்ல அறிமுகம்

சற்றென்று மாறுது வானிலை: காதலர் தின விஜய் டிவி குறும்படம்

Romantic short film “சற்றென்று மாறுது வானிலை”
Directed by Srinivas Kavenayam
Photographed by Santhosh Cinematographer

Performed by
Adith Arun
Syamantha Kiran &
Nandhini Subramanian.

Telecasted in Vijay tv for Valentine’s Day Special

பகுதி 1

பகுதி 2

நெருப்பிலாமல் புகையுமா?

செய்தி: Blaze destroys Khalsa Mahal; 1 fireman dead

The fire broke out in the offices of Commissioner and Director of Industries and Commerce and Director of Social Welfare. (தொழில் வணிக வரி அலுவலகம்)

Believing that the fire was fully doused, a team led by Divisional Fire Officer, Central Chennai, Priya Ravichandran, entered the building around 1:30 am and suddenly the roof caved in. K.Anbazhagan (55), leading fireman at Teynampet station, died on the spot.

சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.


ஏன்? சில துப்பறியும் எண்ணங்கள்

1. அமைச்சர் எத்தனை அமைச்சரடி: சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த செல்வி ராமஜெயத்தை அமைச்சர் பதவியிலிருந்து முதல்வர் ஜெயலலிதா நீக்கம் செய்தார். புதிய சமூச நலத்துறை அமைச்சராக வளர்மதியையும் நியமித்துள்ளார். சென்ற வருடம் – திமுக: சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன்.

2. ஆட்சியர் ஊழல்: Directorates of Social Welfare, and Industries and Commerceஇல் இருந்து எத்தனை ஆணையர்கள் (தற்போதைய இயக்குநர் ஜோதி நிர்மலா) சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிப்பவருக்கு ‘பரத் – சுசிலா விருது’ வழங்கப் போவதாக அறிவிப்பு.

3. தயார் நிலை: பொங்கல் நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் சொந்த ஊருக்கு செல்கிறார்களா அல்லது சென்னையிலேயே இருக்கிறார்களா என்று சோதனை செய்தார்கள்

4. ஸ்மோக் அலாரம் வணிகம் / தீயோலம் வர்த்தகம்: புகை எழுந்தாலே சத்தம் எழுப்பும் கருவிகளை விற்பவர்களின் சதிச்செயல் இது.

5. புதிய கட்டிடம் எழுப்ப திட்டம்: இருக்கும் எழிலகத்தை இடிக்கச் சொன்னால், புராதனம், கலாச்சாரம், பாரம்பரியம், வரலாற்றுச் சின்னம் என்றெல்லாம் புயல் கிளப்புவார்கள். மதராஸ் மியூசிங்ஸ், தியடோர் பாஸ்கரன், இல கணேசன் எல்லோரும் எழுதத் தொடங்குவார்கள். இப்படி இடித்தால் மல்டிப்ளெக்ஸ் மாடி அமைக்கலாம்.

6. அப்பாவி அன்பழகன் கொலை: நாலு குழந்தைகளுக்கு அப்பாவான நடுத்தர வர்க்கத்தை நடுத் தெருவிற்கு கொண்டு வந்தால் எப்படி சர்வைவ் ஆவார்கள் என்று வேடிக்கை பார்க்கும் ரியாலிடி டிவியின் சூழ்ச்சி. 😦

தாடி வச்ச தவசிரேஷ்டர்: போஸ்டர்

Happy Birthday to Rajni: ’ராஜாதிராஜா’வின் உரை

தமிழ் இந்தியா டுடே - ரஜினிகாந்த் சிறப்பிதழ்நான் ரஜினியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் பேரரசர் ஆறாம் ஜார்ஜ் நிழலாடுகிறார்.

ராஜாதி ராஜா. அவரின் ஒவ்வொரு சொல்லும் இ.பி.கோ. சட்டமாக பின்பற்றும் அடிப்பொடிகள் கொண்ட இராஜாங்கம். ’ஏதாவது முத்து உதிர்க்க மாட்டாரா?’ என்று ஏங்கும் கூட்டம். அவருக்கு திக்குவாய்.

இந்தியாவின் ஜனாதிபதியை விட ஒப்புக்கு சப்பாணியான இங்கிலாந்தின் அரசராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருக்கு எதிராக ஒலித்த குரலாக இருந்தவர். மாட மாளிகையில் வசித்தாலும் போர் வீரனின் சின்னமாக பாட்டாளியின் குறியீடாக முன்னிறுத்தப்பட்டவர். பட்டதரசராக சாமுத்ரிகா லட்சணங்கள் கொண்ட அண்ணன் இருந்தும் ராஜாதி ராஜா ஆனவர்.

ரஜினியை விட திறமையான நடிகர்கள் இருந்தும் கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனவர். வெறுமனே திரையில் தோன்றும் ஹீரோவிற்கு ‘ரஜினி வாய்ஸ்’ பிராண்ட் கொடுத்து, ராஷ்டிரபதியின் ராஜாங்கமாக தமிழகத் தேர்தலை மாற்றிய பெருமை பிபிசி ஊடகங்களுக்கு உண்டு. சமயத்திற்கேற்ப ஹிட்லர் ஜெயலலிதா, ஸ்டாலின் கருணாநிதி என்று முழங்குவதும் உண்டு.

பிரித்தானியப் பேரரசின் நிலப்பரப்புகளுக்கும் முப்படைகளுக்கும் அரசராக இருந்தவருக்கு திக்கு காட்ட இயலாத இயல்பு; ரேடியோவில் பேசுவதற்கான மைக்ரோஃபோனைப் பார்த்தாலே பயந்து நடுங்குவார் என்பதை ‘தி கிங்ஸ் ஸ்பீச்’ திரைப்படம் சித்தரிக்கிறது.

தமிழ் நாட்டின் முடிசூடா மன்னர், முரட்டுக் காளை, ஊர்க்காவலன் என்று போஸ்டரில் ரசிகர்கள் உறுமும் தளபதியும்; தனிக்காட்டு ராஜாவாக, பாயும் புலியாக அதிகாரத்தை நோக்கி சொடக்குப் போட்டு கேள்வி கேட்கும் இராணுவன் வீரனும் தனி மனிதராக பேப்பர் புலியாக இருந்திருக்கிறார். ‘முதல்வன்’ படத்தில் நடிக்கும் தில்லு கூட இல்லாத பயந்தாங்கொள்ளியாக அடங்கிப் போயிருக்கிறார். திருமண மண்டபத்திற்காக சகல சக்திகளிடமும் சரணாகதி அடைந்திருக்கிறார்.

பண்ணையாரை எதிர்க்க எனக்கு திராணி கிடையாது. பணக்காரர்களை எதிர்கொள்ள அன்னா ஹசாரேவாக, அன்று எனக்கு ரஜினி கிடைத்தார்.

படிக்காதவனாக வாழும் ஓட்டை வீட்டுக்காரர்களுக்கு ராஜா வாழ்க்கை கிடைக்காது. எங்களையும் ரஜினி ஓவர்நைட்டில் பணக்காரன் ஆக்கினார்.

இன்றைய தேதியில் ‘சிவில் டிஸ் ஒபீடியன்ஸ்’ என்று காந்தி முழங்கினால் கூட கேட்க ஆளில்லாத முன்னெடுக்க முடியாத முன்னாபாய் சமூகத்தின் சின்னமாக ரஜினி இருக்கிறார். எனவே, நானும் ரஜினிதான்.

Tamil India Today - Rajni Special Issue

 

அன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்

வேலாயுதம் துணை ! ஓம் தத் குவாடரோச்சி !!

காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.

அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.

அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி

இந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.

கிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.

உரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

சாட் பெட்டியில் இருந்து…

1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்?’

2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’

3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’

4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’

5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’

6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’

7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்?!’

8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’

9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’

10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’

இவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.

பாதை சரியா? இறுதி முடிவு நல்ல விஷயமா? என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.


Noted Research Writer and Cultural Anthropologist Jeyamohan‘s view

’இன்றைய காந்தி’: கிராமசுயராஜ்யம்

ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்

ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது

மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.

அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.

தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது

விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.

ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!

இந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

மேலும்:

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1


ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே

விகடன்.காம்

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்!

ஏப்ரல் 2011…

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்!

ஆகஸ்ட் 2011..

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.

 


செய்திகள்

சிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.

”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


நிகழ்வுகள் / டைம் லைன்

2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

மார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.

மார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.

மார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.

மார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.

ஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.

ஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

ஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.

அடுத்த ‘நாயகன்’? – தம்பி வெட்டோத்தி சுந்தரம்

சினிமா ட்ரெய்லர்

தொடர்புள்ள பதிவுகள்:

  1. விழா மாலைப் போதில்…
  2. பாட்டு புஸ்தகம்
  3. சுந்தரம் அழைக்கிறான்
  4. திரைப்படம் >> தம்பி வெட்டோத்தி சுந்தரம்
  5. ட்வீட்: கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.
  6. ப்ரமோஷன் வலையகம் – Thambi Vettothi Sundaram
கதை முழுதும் கன்யாகுமரி – கேரள எல்லையில் நடக்கிறது. படித்தவர்கள் அதிகமிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் நிகழும் குற்றங்களின் சதவீதமும் அதிகம். அதற்கான மூலக் காரணத்தை ஆராயும் திரைக்கதை இது. எல்லைப்புற மக்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், அடிப்படை முன்னேற்றமின்மை, கடத்தல், சட்டமீறல்கள், பதற்றம் போன்றவை தேச எல்லைகளுக்கு மட்டுமே உரித்தானவையல்ல. மாநில எல்லைகளிலும் அதுதான்.

எழுத்தாளர் பா ராகவன் உரை

வைரமுத்து பாடல் வரிகள்

மண்புழுவோ மண்புழுவோ மண்ண திங்குது
அந்த மண்ண தின்னும் புழுவ தவள திங்குது
புழுவ தின்னும் தவளைதான் பாம்பு திங்குது
மேல பறந்து போகும் கழுகு அந்த பாம்ப திங்குது
பாம்ப தின்னும் கழுக தானே நரியும் திங்குது
அந்த நரிய கூடி வேட்டையாடி மனிதன் திங்குறான்

அந்த மனுசனதான் கடைசியிலே மண் திங்குது
அந்த மண்ண புரிஞ்ச மனுசனுக்கு
ஞானம் பொங்குது

வி சி வடிவுடையான்

பட முன்னோட்டம் – பேட்டி

எவன்டி உன்னப் பெத்தான் … கைல கிடைச்சான் செத்தான்

அவசரத்தில் ஆணுக்கானதா, பெண்ணுக்குரியதா என்று கவனியாமல் தவறான கழிவறைக்குள் நுழைந்து விடுவது போன்றது சிம்புவின் திரைப்பாடல்கள். எந்த டாய்லெட்டாக இருந்தால் என்ன… காரியம் நடக்கும்.

இன்னொரு விதத்தில் பார்த்தால் சிம்பு ஒரு ட்ரீம் டெவலபர். அவரைப் போல் பன்முறை சுழற்சிக்குள்ளாக்கக் கூடிய (ரெட்யூஸ். ரீயூஸ். ரீசைக்கிள்) கவி எவரும் இல்லை. நாலு எஃப், எட்டு டி போட்டால் பாடல் தயார். அதையே காலத்திற்கேற்றபடி டெண்டுல்கர், வைரமுத்து, மன்மோகன், ஃபேஸ்புக் என்று எவருக்கும் மாற்றிப் போடலாம்.

கடைசியாக பைந்தமிழ் பா வல்லுநர். சொல்பின்வரு நிலையணி, பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலை அணி எல்லாம் ஒரே செய்யுளில் வருமாறும் புனைகிறார்.

அப்படி ஒரு பாடல் – (படம் :: வானம்)

Oh Baby I feel like flying
Flying up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make Love to me there

உன்னப் பாத்த ஃபெர்ஸ்டு செக்கன்ட்ல என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

பாத்த ஃபெர்ஸ்டு செக்கண்ட்லேர்ந்தே என்னக் காணோம்
தேடிப் பாக்கிறன் கண்டபடி நானும்

சத்தியமா எனக்கு நீ வேணாம்
கண்டிப்பா எனக்கு நான் வேணும்

வந்து என்னக் கண்டுபிடிச்சுக் குடு
இல்ல ரொம்ப சிம்பிள் உன்ன எனக்குக் குடு
இல்ல தயவு செஞ்சு ஒரு GUN எடுத்து என்ன சுடு

எவண்டி உன்னப் பெத்தான்
கைல கிடைச்சான் செத்தான்

I Feel Like Kissing You
I Feel Like Touching You
I Feel Like Holding You
I Feel Like Looking Sweet Love To You..

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸும் நீதான்
என் ட்வீட்டர் ட்வீட்டிங்கும் நீதான்
என் ஸ்கைப் கோலும் நீதான் நீதான்

என் பி பி எம் உம் நீ தான்
என் ஃபேஸ் டைமும் நீதான்
என் ஐ ஃபோன் ஐ பாட் எல்லாமே நீதான்

என் ஐ டியூன்ஸ் ப்ளேலிஸ்டும் நீதான்
அதில் லவ் சோங்கும் நீதான்
அது ப்ளே ஆகிற ஸ்பீக்கர் நீதான்

என் அப்பாவும் நீதான்
என் அம்மாவும் நீதான்
என் சொத்து சுகம் எல்லாமே நீதான்

என் கடவுளும் நீதான்
என் உயிரும் நீதான்
எனக்கெல்லாமே நீதான்

I Feel Like Flying High Oh High Baby Girl
U Know U Make Me Go So Wild Oh Wild
U Baby Girl

உன் பேஸ்ட் ப்ரஷும் நான்தான்
உன் ஷவர்ஜெல்லும் நான்தான்
உன் மானம் காக்கிற மேலாடை நான்தான்

உன் லிப் க்ளொஸும் நான்தான்
உன் ஐ லைனர் நான்தான்
உன் அழகக் கூட்டிற மேக்கப் நான்தான்

உன் டெடி பெயாரும் நான்தான்
உன் பெட் & பில்லொவ் நான்தான்
உன் வீட்டோட நைட் வாட்ச்மான் நான்தான்

உன் நகமும் சதையும் நான்தான்
உன் எலும்பும் நரம்பும் நான்தான்
அது உள்ள ஓடும் ரத்தமும் நான்தான்

உன் ஃப்ரெண்டும் நான்தான்
பாய் ஃப்ரெண்டும் நான்தான்
உனக்கெல்லாமே நான்தான் நான்தான்

Who The F*** is your daddy daddy daddy daddy daddy daddy
if i see him he is just dead body body body body body body body
Who The Fuck is your daddy daddy daddy daddy daddy daddy
if I see him he is just dead body body body body body body body


இப்பொழுது இணையத்தில் கண்ட உல்டா

கலைஞர் சமீபத்துல “அம்மா”வால ஏற்பட்ட மன உளைச்சல்கள கொட்டி சிம்புவோட பாட்டுக்கு தானே வரி எழுதி பாடுறாரு… அதே ட்யூன்ல பாடுங்க..

Oh (Big)Baby I feel like spitting
Spitting up up up in the aaaaaaair
When I Look At You, You Look At Me Like
You Wanna Make fight To Me There

நீ ஜெயிச்ச first செகண்ட்ல என்ன காணும்
தேடிப்பாக்குறேன் தமிழ்நாட்டுல நானும்
நீ ஜெயிச்ச first செகண்ட்லருந்தே என்ன காணும்
தேடிப்பாக்குறேன் சந்து பொந்துல நானும்

சத்தியமா எனக்கு தயாநிதி வேணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்
சத்தியமா எனக்கு தயாநிதி வே….ணாம்
கண்டிப்பா எனக்கு கனிமொழி வேணும்

ஒண்ணு எனக்கு தமிழ்நாட்ட குடேய்…
இல்ல ரொம்ப சிம்பிள் ஸ்பெக்ட்ரம் கேச விடேய்
இல்ல தயவு செஞ்சி கனிமொழியயாச்சும் வெளிய விடேய்….

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
கைல கெடச்சா செத்த்தான் செத்தான் செத்தான் செத்தான்

எவண்டி உன்ன பெத்தான் பெத்தான் பெத்தான் பெத்தான்
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்…

மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு… i feel like….
மூஞ்சப் பாரு.. i feel like….

I FEEL LIKE …. BITING YOU
I FEEL LIKE …. PUNCHING YOU
I FEEL LIKE …. BEGGING YOU
I FEEL LIKE …. FUCKING YOU

என் head ache um நீதான், என் action 500 um நீதான்
என்னப் புடிச்ச 71/2 நீ தான் ((hi pitch))
என் sleeping pills um நீதான், என் power glass um நீதான்
நான் தினமும் போடுற sugar free yum நீதான் (hi pitch)
என் கலைஞர் காப்பீடு நீதான் என் சமச்சீர் கல்வி நீதான்
எனக்கு அடிச்ச ஆ..ப்பும் நீதான்
என் கச்சத்தீவும் நீதான்… என் மஞ்ச துண்டும் நீதான்
என் உண்ணா விரத போரும் நீதான்

என் enemy யும் நீதான். மடி கணிணியும் நீதான்
அட எல்லாமே நீதான்…. நீதான்…. நீதான்… நீதான்…ஆங்….ஆங்… ஆங்,… ஆங்… அஹ அஹ அஹ அஹ..ஆங்ங்ங்ங்…..

மூஞ்சப் பாரு… I FEEL LIKE…

Who the “M..” is your Mummy Mummy Mummy Mummy
நீ என்னை ஆக்கிட்ட Dummy Dummy Dummy Dummy

who the “D..” is your teacher teacher teacher teacher
நீ என்ன படுத்துற torture torture torture torture….

எவண்டி உன்ன பெத்தான்
என் கைல கெடச்சா செத்தான்..
எவண்டி உன்ன ……….த்தான்……. த்தான்……. த்தான்….
அவன் கைல கெடச்சா செத்தான் செத்தான் செத்தான்

வீட்டுப்பாடமாக கீழ்க்கண்டவற்றுக்கு பாடல் எழுதவும்:

  1. சச்சின் டெண்டுல்கர், 100
  2. கவிப்பேரரசு வைரமுத்து, நோபல் இலக்கியம்
  3. சாரு நிவேதிதா, ஞானபீடம்
  4. ஃபேஸ்புக், ஐபிஓ
  5. சோனியா காந்தி, அன்னா ஹசாரே
  6. ரூபர்ட் முர்டாக், பி ஸ்க பி
  7. கேசி ஆண்டனி, சி என் என்
  8. பராக் ஒபாமா, பற்றாக்குறை பொக்கீடு
  9. நெட்ஃப்ளிக்ச், யூ ட்யூப்
  10. பத்மநாபசாமி, புதையல்

ட்விட்டரும் நானும் (2)

முந்தைய ட்வீட்ஸ்

அ. தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

ஆ. டிவிட்டவோ உளறவோ வேண்டியது

இ. ட்விட்டர்த்துவம்

1. What’s wrong with asking for credentials from illegal immigrants in Arizona? If you have it, why can’t you carry a simple license? #immi #AZ

2. was explaining a theory that Faisal Shahzad could be a handiwork of team like ‘Men Who Stare at Goats’ implanted by Team USA.

3. If only Super Singer Junior allows winners by relatives of producers, the picks should be: 1. Vishnu Charan; 2. Bala sarangan #VijayTV #Star

4. 1000thil Oruvan: fun to watch; doesn’t connect; inventive but does not satisfy the inner need for relating to the characters.

5. VTV: Gautam is getting into Bharatiraja/KB type syndrome in which success breeds stereotyped siblings with minimal variations.

6. அவள் பெயர் தமிழரசி: எ.கொ.சா.இ; joins the select list of classic ‘Gigli‘ genre movies in Tamil.

7. அங்காடித் தெரு: அண்ணாச்சியின் மறுபக்கத்தையும் ஓரமா காமிக்கலாம்; சினேகா இடைச்சொருகல் தவிர இன்னொரு பருத்தி வீரன்.

8. Inglorious Basterds: Conspiracy theories consolidated; touches from slavery to smartness with current amnesty regime for dictators.

9. I was appreciating ‘Up in the Air’ to my colleague. He asked me back ‘Do you have any movie that you don’t like?’ My reply: ‘I’m like Gandhi

10. அடுத்தவரோட வேலைக்கு உலை வைக்கிற நுட்பத்தை நுழைக்கிறவருக்கு, அவரோட வேலையில உலை வைக்க ஒரு நாடு பிறந்திருக்கும். #IT #Outsourcing #Tech

11. @peyarili நான் நீங்கதான் விசுவாமித்திரரின் மித்திரர்னு நினைத்துக் கொண்டிருந்தேன்.

12. அக்கால scientistகள்? Seismologist: அகத்தியர்; Anthropologist: வியாசர்; Ethnologist: வால்மீகி; Geophysicist, Geologist, volcanologist யாரு?

13. Volcanic Ash Cloud இமாலயத்தில் எரிமலை வெடித்தால் கைலாயத்தில் நெற்றிக்கண் திறந்தது எனலாம்.

14. நிலைப்பாடு தமிழ் அல்ல. ‘லைப்’ (life) நடுவில் crisis கொடுக்கிறது. செயலைப் பாடினால் செயல்பாடு?

15. அழகியர் எவ்வாறு காரியத்தில் கண் வையாரோ, அவ்வாறே, தமிழ்ப்பதிவர் தமிழைத் தழைக்க வையார். #Tamils #NewYear

16. Paandavar Bhoomi Memorial Pole in Africa & Oceania. #memorials http://post.ly/XkOZ

17. கறுப்பு, வெளுப்பாவதை புகைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் பார்க்க பார்க்க, என் கண் முன்பே @writerpara நரைக்க கவலையா? கல்வியா?

18.When you say ‘I like’ Catcher in the Rye novelist dies in Google Reader what are you conveying? #Share

19. Today I was one of the last persons getting off the train. Never noticed so many disabled, cane wielders when I used to be one among the 1st

20. ‘சின்னத்தம்பி’யில் மனோரமாவுக்கு நடக்கும் வைபவத்தின் தீவிரத்தோடு, ‘யாரடி நீ மோகினி’யில் தனுஷ் வேலையிழப்பதை ஒப்பிடலாமா? #Ceremony

21. ட்யூனை சுட்டது யார் தேவா-வா? நெப்ட்யூனை சுட்டது யார் நாந்தானே அட நாந்தானே! யுரேனஸ் உதடுகள் உன்னுது? வைரத்தை வெட்டுவது யாரது!

22. Losing one glove is certainly painful;but nothing compared to the pain of losing one, throwing away the other & finding the first one -Hein

23. Misterக்கும் Ministerக்கும் in வித்தியாசம். அதே போல் கடி x கிண்டி [க + in + டி] என்றால் ட்விட் கேஸ் தயார். #Tamil99

24. இந்தியாவிற்கு எதிர்மாறாக மேடைப் பேச்சில் நாகரிகமாகவும், டிவி விளம்பரங்களில் ஏச்சும் பேச்சுமாகவும் இருக்கிறது. #Campaign

25. கிட்னியில் கல் தோன்றுமளவு சிறுநீர் தேக்கக் கூடாது என்பது எவ்வளவு உண்மையோ, அது போல் டேட்டாபேஸ் ரொம்புமளவு காத்திருத்தல் தகாது. #TwitGas

26. தான் விடும் குறட்டை பிறர் தூக்கத்தைக் கெடுப்பது தனக்கேத் தெரியாது; அது போல் தன் ட்விட்டின் கரியமில வாயு நச்சையும் அறியார். #TwitGas

27. reminded me of ‘Fight club’ quote: When people think you’re dying, they really, really listen to you, instead of just…

28. EKSI Moment: Even kids can SMS the pledge donation money to Red Cross 4 Haiti. They shd hv basic restrictions for 18+ minors offensive texts

29. பாத்ரூம் போனா உச்சாவோ ரெண்டுக்கோ போவணுங்கிற மாதிரி தமிழருக்கு இலக்கியமோ அறிவுப்பசியோ மட்டுமே சமைக்கப்படும். #TamBooks

30. வேலையில் இந்தப் பெயரின் infamousnessஐ குறிப்பிடுவது விருப்பமில்லை. வலையில் ‘என்ன வேலை’ வினவலையும் விரும்புவதில்லை.

31. As a Employee cum Blogger which gives you more kick? Tough problem analyzed & solved at work (or) A post being received well & reaches mass?

32. குறளுக்கு புராணக்கதை சொல்லும் ஏழாங்கிளாசு வாத்தி போல கதாகாலட்சேபமும் விஜய் ஆன்டனிகளை ஏசுவதாக டெம்பிளேட் ரம்பம். #Piraisoodan

33. ‘ஏதாவது ஹிட் படத்தை II ஆக்கலாம்’ என்ற நிபந்தனையோடு தமிழ் சினிமாவில் உங்களுக்கு வாய்ப்பு தந்தால், எந்தப் படம் தேர்ந்தெடுப்பீர்கள்?

34. சூத்திரனே சூத்திரமறிந்த சூத்ரதாரி என்பதற்கும் சூத்ரதாரியே சூத்திரமறிந்த சூத்திரன் என்பதற்கும் உள்ள இலக்கண வித்தியாசம் என்ன? #Sentenced

35. தனி மடலுக்கு பதில் போடாமல், பொது ட்விட்டுக்கு @ போடுவது, பொண்டாட்டியை தூங்கவிட்டுட்டு PPVஇல் பலான படம் பார்ப்பது போலாம். #Twithuvam

36. If I am in Starbucks I get free wi-fi, but no free coffee; If I am at work, I get free coffee with Iron curtains. At home?

37. Learning 48%; Money 31%; and Thinking -25%; Numbers -66%; Sex -85% for the list http://twitter.com/snapjudge/chattytamils

38. @icarusprakash கலக்கல்! “பச்சை சுடிதார் உள்ள வாங்க என்றார். நான் ம.வே.சிவகுமாராக இருந்திருந்தால், ‘எதுக்கு உள்ள’ என்று கேட்டிருப்பேன்.”

39. Watched Harry Potter 6 followed by HP2: Chamber of secrets. Its all falling in place now. Need to watch all of them again in reverse order.

40. How close was the 2nd half of Sujatha’s ‘Pirivom.. Santhippom’ to ‘Anandha Thandavam’? 1st part remained faithful to original AFAI remember.

41. இன்றைய சந்தேகம்: புனைப்பெயரை வைத்து அழைப்பது உங்களுக்குப் பிரியமா (எ.க.: மனுஷ்யபுத்திரன்). (அ) உண்மைப் பெயரா? (உ.: ஹமீது)? #Thalavedichurum

42. அடுத்தது என்னனு தெரியாம இருக்கறத விட, அந்தப் பாட்டை ஸ்கிப் செய்ய முடியாம பொறுமை காப்பதும் சுகம். iPhone shuffleனும் சுகம்.

43. ‘பியர்கடல் பிரந்தாமன்’ கூல். இதே மாதிரி அறுபடை வீடு, பரலோக பரமபிதா, கைலாயவாசி ஆகியோருக்கும் ஏதாவது இருக்கா?

44. கலைஞர் டிவியின் ‘நாளைய இயக்குநர்கள்’தான் நாளைய இயக்குநர்கள் என்றால், கவலையளிக்கிறது. நல்ல கான்செப்ட்; திராபையான கதைத் தேர்வு.

45. நேற்று அதிக ட்வீட்டுகளை சுவாரசியத்தோடு வழங்கிய பெருமையைத் தட்டிச் செல்பவர்: @vaamanikandan

46. அரசியல்/சினிமா தல மறைந்தவுடன் ஏன் கலாட்டா? 1. ஆள் அவுட்டானபிறகுதான் அவர் மேல கோபத்தக் காட்டமுடியும். 2. ஹீரோவை அடித்து நொறுக்கலாம்.

47. மற்றவர்கள் கருத்து சொல்லும் ட்விட்டரைப் பார்த்தால் தன்னாலே கீபோர்ட் சதை ஆடுதே! இது peer pressureஆ? blood pressureஆ? #Twitthuvam

48. இதை நடைமுறையாக்க என்னுடைய யோசனை. Child offenders could be posted as Security officers. They get kicks & get the job done too.

49. Which is a classic lyric? 1. இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்? (or) 2. மீயா மீயா பூனை; நான் மீசை வச்ச யானை & நான் ஆத்தா வுட்ட புஸ்ஸு.

50. அந்த வரி தவறு என்கிறார் நண்பர். ‘அஞ்சு மணி பஸ்; நான் அதை உட்டா மிஸ்’ஸாம். என்னுடைய காதுகளில்தான் எசகுபிசகு போல…

51. இந்தப் பாடலுக்கு இசையமைப்பது அசெம்பிளி மொழியில் வெப்சைட் உருவாக்கியது மாதிரி என்கிறார் ஆன்டனி. #Objects

52. சமீபத்திய ‘அரசு இலவச மருத்துவ முகாம்’ சென்று வந்த நண்பர் இலவச ஈசிஜி முதல் எலும்புத்தேய்வு சோதனை வரை செய்துகொண்டு DMK அனுதாபியாகி விட்டார்.

53. ‘Chennai Merina is ultra clean; Everything in Govt. schools r free & quality has improved. Why shd I vote 4 somebody else & take risk?’ #DMK

54. பிடுங்கிய மைக் முன் விடாக்கொண்டரில் டாப் யார்? 1. பிறைசூடன் 2. டியெஸ்பி தேவிஸ்ரீபிரசாத் 3. டி ராஜேந்தர் 4. ஹரீஷ் ராகவேந்திரா #Music #TV

55. என் டி திவாரி செய்கை மேல் உள்ள கோபத்தை விட அவன் மீதுள்ள பொறாமைதான் கோபத்தைக் கிளறுகிறது என்பார் பர்னாலாவின் மகன். #NDT #Males

56. பெரியார் வாழ்க்கை வரலாறு கொண்டு வந்தால் அரசு இன்சென்டிவ் ஏதாவது உண்டா? இன்னும் இரு பதிப்பகங்களும் திடீரென்று கொணர்ந்துள்ளதாம்.

57.சுயநலத்தில் டாப் நாடு எது? 1. நவூரு 2. இஸ்ரேல் 3. அமெரிக்கா 4. சீனா – http://nyti.ms/55FtSo

58. Writer நாகார்ஜுனன் ஏன் நடுவில் கொஞ்ச காலம் அஞ்ஞாதவாசம் இருந்தார் தெரியுமா? தெலுங்கில் ஹீரோவாக நடிக்கிறீர்களாமே என்று விசாரித்ததால். #Mokkai

59. Happy 60th Birthday to China: Unlike India it has organized corruption, people don’t have freedom to voice the divide between rich & poor.

60. Big Bang Theory is certainly a must-watch; geared for men; with geeks as social outcasts. simple, laugh a minute ritual to unwind. #TV #CBS

61. Question to IR bashers: Ilaiyaraja had written 4/5 books while ARR is yet to write any?

62. How will a TV serial look like if Rajinikanth acted in it? Watch ‘Aaril irunthu Arupathu varai’. #Psenti #Films

63. It’s Always Sunny in Philadelphia is pretty funny, edgy, comedy central-ish. Living without Sun TV is good. Started picking other TV serials

64. All the Indian Grocery stores in New England has variety of books on Hinduism, Krishna, Q&A by ISKCON prominently for a token donation. #God

65. Kaalachuvadu & Uyirmai are better selling (read – more money, cashflow, personnel) but doesn’t respond to e-mails of Subscribers @uyirmmai

66. Have to really appreciate Anyindian & Vaarthai for customer delight; replied for my trivial query over the weekend; resolved it @ivansivan

67. Comcast customer service is great. Patient responses; quick dispatches; solves quirky requests. Nice variety of free OnDemand DVR choices.

68. #Films Superman Returns: Kevin Spacey does justice even to masala chars; For a predictable Rajni like heroic movie, gripping narration.

69. #Films Bheja Fry: Overzealous Milind Soman; always scoffing Sarika; Aam Aadmi idiot hero; Nice premise; Drama like bg & boring developments.

70. 2 new movies recently released which I am looking forward to watch in DVD: Blind Date (Stanley Tucci) & Disgrace (Malkovich & Coetzee novel)

71. பரிதாபமாக பார்வை விட்டு அனுதாபம் சம்பாதிக்கும் போட்டியில் ‘North Station’ வாயிலில் அமர்ந்திருக்கும் ‘Traveling hungry’ போர்டுகாரர் வெல்வார்.

72. 50+ குடுமிகாரர் முக்கிய சாலையின் நடுவில் உற்சாகமாக ஸ்கேட்டிங். அவரின் ஐ-பாடில் ‘இமயம்’ சிவாஜி ‘திருமாலின் திருமார்பில்’ டூயட் பாடியிருபபார்.

73. Writers Nanjil Nadan & S Ramakrishnan have written songs for Suga’s Padithurai; Tamil Film Heroine talks in Tamil! http://bit.ly/2OU8CD

74. Whatever unwritten & hidden in the post is spelled out explicitly via tags. If post is a Cliff Notes, then tags are poems.

75. Started reading Penguin Classic The Love Letters of Abelard and Heloise: http://bit.ly/15tw1p #Romance #Books

76. Tamanna appeared in a single second shot as bride on Shahrukh’s ‘Om Shanthi Om’. Blink after interval & U wud hv missed it. #priorlife

77. What was the first Tamil film to have a scene of a person relieving himself? #Bathrooms #Grossness #Movies

78. was reading this to get motivated to clarify my doubt in Tamil Cinema http://is.gd/3Bn1n

79. @anantha Remembered some Nammavar fight sequences; Nandha ceremony; 7G lecture; but MMKR… thanks!

80. catching up on old DVR; ‘Surviving Suburbia’ is pretty realistic & funny too. Not sure whether women also reciprocate that thought. #TV

81. #Films ‘Welcome to Sajjanpur’: Scary thoughts of Shyam Benegal’s artsy stuff went away. Amrita Rao is 2 chocolatey; matter of fact narrative

82. What is the similarity between IE8 & FF3.5? They both crash when you visit Tamil blogs with their numerous aggregator toolbars, scripts.

83. ‘முதல் வாரத்திலேயே ‘உன்னைப் போல் ஒருவன்’ காலியாக கிடைக்கிறது. கல்லூரி வட்டாரத்தில் மோகன் லால் வசனம் புரியவில்லை’ என்றும் சொன்னார்கள். #UPO

84. 4 girl students frm Panimalar polytechnic missing: http://bit.ly/3MOOKc The women in teens shd hv their right to privacy or it a news item?

85. Arunthathi has a tap & water scene in which the victim slips & hurts himself; Eeram has the same, in which she dies. Where is the original?

86. அந்த ‘அபூர்வ ராகங்கள்’ வழக்கு ரொம்ப பிரசித்தமாச்சே… பாலச்சந்தரின் எந்தக் கதையுமே அவருக்கு சொந்தமில்லையா!? #Films #KB

87. Kancheevaram: Original Story, Screenplay, Movie was written by Suprabharathi Manian; inspired by Priyadarshan: http://bit.ly/3SooxN #Films

88. ‘மச்சான்னு கூப்பிடறதாலே நமீதா உனக்கு கொழுந்தியாளும் இல்லை. உன் கொழுந்தியாள் உன்னை மச்சான்னு கூப்பிடறதாலே அவ நமீதாவும் இல்லை!’ #SMS #Vikatan

89. ‘கமல் தீர்க்கதரிசி. இல்லையென்றால், அவரது குழனதைக்கு ஸ்ருதி என்று அப்போதே பெயர் வைத்திருப்பாரா?’ Literal quote from Gowthami in Vikadan #Film

90. புனைப்பெயரை மனுஷ்யபுத்திரன் என்று வைத்துக்கொண்டால் கவிலக்கியத்துவம். மனுஷய புள்ள என்றால் ப்ளாகத்துவம். ‘ப்’ எங்கே என்றால் சின்னபுள்ளத்தனம்.

91. Kalainjar Karunanidhi’s ‘நீயின்றி நானில்லை’ film title has been changed to ‘பெண் சிங்கம்’. Is it a reference to tagless Kanimozhi? #DMK

92. Actress Tamanna never sees a complete movie or preview of her acted film. She just watches her songs picturization in complete. frm Vikadan

93. ரொம்ப நேரமாக எங்களின் அலுவல் கட்டிடத்தின் மேல் ஹாலிவுட் படம் போல் ஹெலிகாப்டர் அப்படியே நின்று கவனிக்கிறது. வெளியே சென்றதால்தான் தெரிகிறது.

94. Pasanga: Taboo things aren’t watchable by teens like Mid-life crisis of middle-classers in Films. Explores bullying, nepotism, Consanguinity

95. Nadodigal: Cutesy leading ladies; late blooming Sasikumar; open ended real life interpretations without making Cheranish preachments. #Films

96. Arundhathi: Harry Potter met Chandramuki with Vittalacharya strewn in. Except 4 Anouska’s graceless classical dancing, good masla. #Films

97. A broken plastic spoon showed his head inside Complan bottle like a severed human raising its lame hand for help from Sri Lanka.

98. I asked her, ‘Cold! Isn’t it?’. Got reply. ‘It is Friday. Yeh.’ எத்தனை நாளானாலும் இந்த அமெரிக்கன் accentம் வராது. தாட்சணய கேள்விகளும் போகாது

99. அச்சுதனில் இருந்து பிதாச்சுதன் வந்ததா? சூத்தியாவில் இருந்து மதுசூதனுக்குப் போகலாமா? விஷ்ணு 1K நாமமான சுதன்வா டு சுதர்சன் to Shubhanallah!

100. “ஆரஞ்சு நிறம் குறைவாயிருக்கிறது . கால்களை நீருக்குள் அமிழ்த்தியிருக்கும் கொக்குகளை வரைகிறான்.” -நரன்: http://bit.ly/hQJSI #Quotes #TamilBlog

101. Old habits die hard or is it tired hands at keyboard or a longing for Indian cultural heritage? Typed dd/mm/yy in a doc & got befuddled resp

102. குமாரசெல்வா சிறுகதையும் கானகனின் ஊடகம் குறித்த குற்றப்பட்டியல் கட்டுரையும் தவிர பிற எதுவும் இ.வா. காலச்சுவடில் கவனிப்பைக் கோரவில்லை. #Magz

103. What is common between Jeyamohan, A Muttulingam, Manushyaputhiran, Charu Nivethitha speeches in public? All say ‘I don’t read Tamil blogs’.

104. Sruthi: ‘Nothing new to be done in Music; Music itself is couple of 100 years old.’ “Even from AR Rehman I can learn.” http://bit.ly/37p4su

105. People in China eat 5 times because of food abundancy & can be compared to Movies reel abuse: http://bit.ly/biZMZ #Kamal #UPO #Quotes #Video

106. ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படிக்கத் தெரியுமான்னு @shrutihaasan போட்டு கேட்கலாம்; அல்லது ப்ளேசிக்கு எழுத வருமான்னும் கேக்கலாம். #UPO

107. What will be your keywords if a Twitter client allows you to hide tweets automatically based on their appearance (like spam filters)?

108. ‘ஆண்டவனப் பார்க்கணும்… அவனுக்கு ஊத்தணும்’ (மக்கள் என் பக்கம்) சத்யராஜ் பாடலை எழுதியவர் கபீர்தாஸா? ஆதிசங்கரரா?: http://bit.ly/RkzSi

அடுத்தவரப் பத்தி எழுதணும்னா ட்விட்டு (140க்குள் முடி); உன்னப் பத்தி எழுத (பெத்த) பதிவு என்று வழக்கப்படுத்திக்க ராசா. #Twithuvam