Tag Archives: கருத்து

அன்னா ஹஸாரே: இந்திய இளைஞர்களுடன் உரையாடல்

வேலாயுதம் துணை ! ஓம் தத் குவாடரோச்சி !!

காந்தியின் முதல் எதிரி பிரிட்டிஷ் அரசு அல்ல, இந்தியர்களிடம் இருந்த அச்சம்தான். அவர் அந்த அச்சத்தை எதிர்த்தே இருபதாண்டுக்காலம் போராடினார், அதன்பின்னரே அவரால் பிரிட்டிஷ் அரசை எதிர்க்க முடிந்தது.

அண்ணாவின் முதல் எதிரி இந்திய அரசு அல்ல. நம்மில் உள்ள அவநம்பிக்கைதான்.

அரசியல், ஆளுமை, இந்தியா, காந்தி

இந்தியாவில் இருக்கும் என்னை விட இளையவர்களான அடுத்த தலைமுறையினர் சிலருடன் பேசினேன்.

கிடைத்தது ஏழு பேர். பூனா, கொல்க்த்தா, சென்னை, டெல்லியில் இருப்பவர்கள். இருவர் தமிழர். அதில் ஒருவர் மதுரைக்காரர். எல்லாருமே பதினெட்டில் இருந்து முப்பதுக்குள். கல்லூரி மாணவர்களும் உண்டு.

உரையாடிய அனைவருமே அன்னா மீதும் அரசியல் மீதும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

சாட் பெட்டியில் இருந்து…

1. ’காந்தியும் நேருவும் தோளில் கைபோட்டுக் கொண்டால் சரி. ஆனால், நாளைக்கே மன்மோகனும் (அல்லது அத்வானியும்) அன்னாவும் கை கோர்த்துக் கொண்டால்?’

2. ‘அவருக்கு பா.ஜ.க. என்னும் மதவாதம் மட்டுமே பின்னணியில் இருக்கிறது.’

3. ‘எல்லாரும் குட்டையில் ஊறின மட்டைகள். அன்னாவும் விதிவிலக்கல்ல. இவரால் எனக்கு, சாதாரண ஆளுக்கு நயா பைசா பிரயோசனம் இல்லை.’

4. ‘நான் என் பாஸுடன் (க்ரூப் டிஸ்கஷன் மாதிரி) முரண்பட்டு, வித்தியாசப்படுத்திக் கொள்வது போல் அன்னாவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள விழைகிறார்.’

5. ‘தமிழகத்தில் வைகோ கூவினார். டெல்லியில் ஹசாரே சத்தம் போடுகிறார். நம்ம அப்பா அம்மா, நம்மைப் படிக்க வைப்பது போல் அரசியல்வாதிக்கு போராடத்திற்கு ஆள் சேர்ப்பது.’

6. ‘ரத யாத்திரைக்கும் உண்ணாவிரதத்திற்கும் வித்தியாசம் எனக்குத் தெரியல. ஹீரோயினைத் தேய்த்து விடுவது போல் இதெல்லாம் சும்மா உசுப்பேத்தேல். இதற்கெல்லாம் நான் ஏற மாட்டேன்.’

7. ‘இந்த மசோதாவில் என்ன பிரச்சினை, எங்கே இடையூறு என்று எனக்குப் புரியவில்லைதான்; ஆனால், இவ்வளவு பெரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சேபித்தால், அதில் விஷயம் இல்லாமலாப் போயிடும்?!’

8. ‘இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், இவர்கள் சவுண்ட் குறையாது.’

9. ‘நான் மட்டும் இந்த மாதிரி இவர ஆதரிச்சுப் பேசுனா, பைத்தியம் மாதிரிப் பாக்கிறாங்க. மொத்த குரூப்பே எனக்கு எதிராக ரவுண்ட் கட்டுது. ஆள விடுப்பா…’

10. ‘நல்ல பிரொகிராம் எழுதணும்னு ஆசைப்படுவோம்; ஆனா நடக்காது. அது மாதிரி இவரோட ஊழல் எதிர்ப்பு, வாய்தா வாங்கி தூங்கிடும்’

இவர்கள் அனைவருமே அன்னா-வின் விக்கிப்பிடியா பக்கம் கூட படிக்கவில்லை. தகவல் அறியும் சட்டம் அறிந்திருக்கவில்லை. அவருடைய குறிக்கோளை சந்தேகிக்கின்றனர். அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி அச்சம் கொள்கின்றனர். ’அப்படி நடக்கலாம்; இப்படி ஆகி விடும்’ என்றே ஊகிக்கின்றனர்.

பாதை சரியா? இறுதி முடிவு நல்ல விஷயமா? என்பதைக் குறித்து கவலைப்படாமல் தங்களால் துரும்பைக் கிள்ளிப் போட முடியாது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள்.


Noted Research Writer and Cultural Anthropologist Jeyamohan‘s view

’இன்றைய காந்தி’: கிராமசுயராஜ்யம்

ஊர்கூடி ஒன்றைச்செய்வதற்கே நம் மக்களுக்கு பழக்கமில்லை. அதற்கான மனநிலைகளும் தார்மீகக் கடமைகளும் கட்டுப்பாடுகளும் அழிந்துவிட்ட. ஆனால் எங்கெல்லாம் ஒரு தார்மீக சக்தி உள்ளே புகுந்து அந்த அமைப்பை வெற்றிகரமாக மீண்டும் உருவாக்குகிறதோ அங்கெல்லாம் மகத்தான வெற்றிக்கதைகள் சாத்தியமாகியிருக்கின்றன. சமகால இந்தியாவிலேயே சிறந்த உதாரணங்கள் பல உள்ளன. பாபுராம் ஹஸாரே [அண்ணா] மகாராஷ்டிரத்தில் ராலேகான் சித்தி என்ற ஊரில் செய்த புரட்சியைக் குறிப்பிடலாம்

ராலேக்ஜான் சித்தி ஊருக்கு வரும்போது அந்த ஊரின் சமூகமையமாக இருந்த ஆலயத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டுகொண்டிருந்தது. ஊர் எப்படி இருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் தேவையில்லை. பொருளியல் ரீதியாகவும் தார்மீக ரீதியாகவும் அந்தக் கிராமம் பெரும் சரிவில் இருந்தது

மெல்ல மெல்ல அந்தக்கிராமத்தை மீட்டெடுத்தார். முதலில் ஊருக்கு ஒரு சுயநிர்வாக அமைப்பை அவர் உருவாக்கினார். அதை அரசாங்கத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றாக கட்டமைத்தார். அதைக்கொண்டு கிராமத்திற்குத் தேவையான விஷயங்களை அந்த மக்களே செய்துகொள்ள வழியமைத்தார்.

அண்ணா ஹஸாரே ராலேகான் சித்தியில் செய்த நீர் நிர்வாகம் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டு ஆராயப்பட்டிருக்கிறது. அவர் புதிய தொழில்நுட்பம் எதையும் கொண்டு வரவில்லை. அந்த நிலப்பகுதிகளில் பலகாலமாக இருந்துவந்த முறைதான் அது. நூறுவருடம் முன்பு வெள்ளைய ஆட்சி பாசனத்தையும் பொதுநிலத்தையும் கையிலெடுத்தபோது அந்தமுறை கைவிடப்பட்டு இந்தியாவெங்கும் அவர்கள் அமலாக்கிய ஒரேவகையான நீர்நிர்வாக முறை கொண்டுவரப்பட்டது. அது அந்தக்கிராமத்தை அரைப்பாலைநிலமாக ஆக்கியது.

தேவையான அளவுக்கு மழைபெய்யக்கூடிய நிலம் அது. ஆனால் மழை ஒரேசமயம் கொட்டித்தீர்த்துவிடும். அந்த நீரைச் சேர்த்து வைக்க ஆழமில்லாத நூற்றுக்கணக்கான குட்டைகளை உருவாக்கி வைப்பது பழங்கால முறை. தமிழ்நாட்டில் திருப்பத்தூர் தருமபுரி வேலூர் செங்கற்பட்டு பகுதிகளில் இருந்து இன்று அழிக்கப்பட்டுவிட்ட அதே முறை. வெள்ளையர் ஆட்சியில் இந்தக்குட்டைகள் பராமரிப்பில்லாமல் விடப்பட்டன. அண்ணா ஹஸாரே அக்குட்டைகளை மீட்டெடுத்தார். புதிதாக நிறைய குட்டைகளை உருவாக்கினார். சில வருடங்களில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. திட்டமிட்டு அளவோடு நிலத்தடி நீரைப் பயன்படுத்தி வேளாண்மைசெய்ய ஆரம்பித்தார்கள். கிராமத்தின் பசுமை மீண்டு வந்தது

விவசாயத்துடன் இணைத்தே பசு வளார்ப்பு கோழி வளர்ப்பு போன்றவற்றை செய்தார் அண்ணா ஹஸாரே. மெல்ல மெல்ல அக்கிராமம் அதன் முக அடையாளமாக விளங்கிய வறுமையில் இருந்து மேலே வந்தது. அங்கே நிலவிய கடுமையான குடிப்பழக்கத்தையும் தீண்டாமையையும் ஊர்ப்பஞ்சாயத்துக்கள் மூலம் இல்லாமலாக்கினார். ராலேகான் சித்தி ஒரு கிராமத்தில் என்ன சாத்தியம் என்பதற்கான உதாரணமாக இன்று சுட்டிக்காட்டப்படுகிறது. 1997ல் நான் ராலேகான் சித்திக்குச் சென்று அந்த ஊர் வரண்ட சூழலில் ஒரு பசுமைத்தீவாக இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

அண்ணா ஹசாரே செய்தது மிக எளிமையான விஷயம்தான். ஒரு கிராமத்தின் பிரச்சினைகள் அந்தக்கிராமத்திற்கே உரியவை. அவற்றுக்கான தீர்வுகளையும் அந்தக் கிராம இயல்பிலேயே உருவாக்கிக் கொள்ள முடியும். அந்தந்தக் கிராமங்களில் அதற்கான முடிவெடுக்கும் அமைப்பும் செயல்படுத்தும் வசதியும் இருந்தால் மட்டுமே அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். அவர் கிராமப் பஞ்சாயத்தை உயிர்ப்பிப்பதன் மூலம் அதைச் செய்தார். அதன்மூலம் அந்தமக்கள் மறந்துவிட்டிருந்த ஒரு முறையை திருப்பிக்கொண்டுவந்தார்.

ஆனால் அங்கே இருந்த கிராமப் பஞ்சாயத்தை முழுக்கவே அழித்துவிட்டு அங்கே அரசாங்கத்தின் ஓர் அலகை நிறுவிய நம் இந்திய மைய அரசு அக்கிராமத்தின் எல்லா தனிச்செயல்பாடுகளையும் தடைசெய்கிறது என்பதை நாம் நினைவுகொள்ளவேண்டும். அந்த அதிகார அமைப்பின் ஊழல், பொறுப்பின்மை, தாமதம் அனைத்துடனும் போராடியே அண்ணா ஹஸாரே தன் சாதனையைச் செய்யவேண்டியிருந்தது. ராலேகான் சித்தி தன் தேவைகள் அனைத்தையும் செய்துகொள்வதற்கான முழுச்செலவையும் வரியாக ஏற்கனவே அரசுக்குக் கொடுத்திவிட்டு மேலதிக நிதியாதாரத்தை உருவாக்கி தன் தேவைகளைச் செய்யவேண்டியிருந்தது!

இந்தியா முழுக்க அண்ணா ஹசாரே போன்று நூற்றுக்கணக்கான காந்தியவாதிகளையும் சேவை அமைப்புகளையும் சுட்டிக்காட்ட முடியும். அவர்கள் செய்து காட்டிய கிராமியச் சாதனைகள் நம் கண்ணெதிரே கிராமசுயராஜ்யம் எந்த அளவுக்குச் சாத்தியம் என்பதற்கான உதாரணங்களாக இருந்துகொண்டிருக்கின்றன.

மேலும்:

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்-2

அண்ணா ஹசாரே கடிதங்கள்..

அண்ணா ஹசாரே-இடதுசாரிசந்தேகங்கள்…

அண்ணா ஹசாரே,வசைகள்

அண்ணா ஹசாரே-2

அண்ணா ஹசாரே-1


ஆர்.டி.ஐ முதல் லோக்பால் வரை: அசராத போராளி அன்னா ஹசாரே

விகடன்.காம்

சமகால இந்திய சமூகப் போராளிகளில் குறிப்பிடத்தக்கவரான ஹசாரே, தனது மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ராலேகாவ் சித்தி என்ற ஊரை மேம்படுத்தி இந்தியாவின் ‘மாதிரி சிற்றூர்’ என்ற நிலைக்கு உயர்த்தியவர். இந்த அரும்பணிக்கு, 1992-ல் பதமபூஷன் விருதை வழங்கி கெளரவித்தது இந்திய அரசு.

ஆர்.டி.ஐ. எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு பின்புலமாக இருந்தவர், இப்போது ஊழலுக்கு எதிரான தனது போராட்டத்தை வலுப்படுத்தியுள்ளார். இவர் கடந்து வந்த பாதை…

* கிசான் பாபுராவ் ஹசாரே. 1940-ம் ஆண்டு ஜனவரி 15-ல் மகராஷ்டிராவில் பிறந்த இவர், ‘அன்னா ஹசாரே’ என்று அழைக்கப்படுபவர்.

* ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தமான குடும்பத்தில் பிறந்த ஹசாரே, கடுமையான நிதி நெருக்கடிச் சூழலால், ஏழாம் வகுப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர்.

* இந்திய ராணுவத்தில் வாகன ஓட்டுநராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி மற்றும் ஆச்சரியா வினோபா பாவே ஆகியோரின் தாக்கத்தால் சமூகப் போராளியாக உருவெடுத்தார்.

கிராம மேம்பாட்டுப் பணி…

* ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, 1975-ல் மகாராஷ்டிராவின் ராலேகாவ் சித்திக்கு வந்தார். முதலில், மது எதிர்ப்பு போராட்ட இயக்கத்தைத் தொடங்கி வழி நடத்தினார். அந்த கிராமத்தில் இருந்து மதுவை அறவே ஒழித்தார்.

பின்னர், கிராம மக்களை ஒன்று திரட்டி, ‘ஷ்ரம்தன்’ என்ற தன்னார்வ தொழிலாளர்கள் அமைப்பைத் தோற்றுவித்தார். ஏரிகளை வெட்டுவது, சிறு அணைகளைச் சரிசெய்வது, குளங்களைத் தூய்மைப்படுத்துவது என நீர் மேலாண்மைக்கு வழிவகுத்தார். இதன் மூலமாக, ராலேகாவ் சித்தியில் தண்ணிர் தட்டுப்பாட்டு தடமின்றிப் போனது.

* மகாராஷ்டிராவில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நீர்ப் பற்றாக்குறையைப் போக்குவதற்கு உறுதுணை புரிந்தார்.

* தன்னார்வத் தொழிலாளர்களைக் கொண்டே கிராமத்தில் உயர் நிலைப்பள்ளி கட்டுவதற்கு கிராமவாசிகளைத் தூண்டி, அதில் வெற்றியும் கண்டார்.

* 1998-ல் சிவசேனா – பிஜேபி ஆட்சியின்போது, மகாராஷ்டிராவின் சமூக நல அமைச்சராக இருந்த பாபன்ராவ் கோலப் தொடர்ந்த அவதூறு வழக்கில், ஹசாரே கைது செய்யப்பட்டார். மக்கள் கொந்தளித்து குரல் கொடுத்ததன் எதிரொலியாக, பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தகவல் அறியும் சட்டம்…

* 2000-ன் துவக்கத்தில் மகாராஷ்டிராவில் ஓர் இயக்கத்தைத் தொடங்கினார், ஹசாரே. அதன் பலனாக, அம்மாநிலத்தில் வலுவிழந்து இருந்த தகவல் அறியும் சட்டம் முழு வல்லமை பெற்றது. இதுவே, மத்திய அரசால் 2005-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கு அடித்தளமாக அமைந்தது.

ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா இயக்கம்…

நடப்பு ஆண்டில் (2011) இந்தியாவில் நாளுக்கு நாள் மலிந்துவரும் லஞ்ச – ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தைத் துவக்கியுள்ளார்.

இதனிடையே, முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோருடன் இணைந்து ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ‘ஜன் லோக்பால் மசோதா’ என்ற மாதிரி சட்ட மசோதாவை தயாரித்தனர்.

இது, மத்திய அரசால் தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் சட்ட மசோதாவி விட வலுமிக்கதாக இருந்தது. இதில் அம்புட்ஸ்மன் (ombudsman) எனப்படும் நீதிபதிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்க வகை செய்யும் அம்சத்துக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது.

ஆனால், இந்த மாதிரி சட்ட மசோதாவை மத்திய அரசு ஏற்க மறுத்தது. ஏற்கெனவே அரசால் முன்வைக்கப்பட்ட லோக்பால் மசோதாவுக்கான வரைவுப் பணிகளை மேற்கொள்ள வேளாண் அமைச்சர் சரத் பவார் தலைமையிலான மத்திய அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தான் ஊழல்வாதிகளைக் கடுமையாக தண்டிக்க வகை செய்ய, மத்திய அரசின் லோக்பால் மசோதாவை வலுவாக்கி, அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கடந்த 5-ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார், ஹசாரே.

லோக்பால் சட்ட மசோதாவை இயற்றும் பணியில், அரசு பிரதிநிதிகளுக்கு நிகராக குடிமக்களின் பிரதிநிதிகளும் இணைந்து ஈடுபடும் வகையில், கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதே அன்னாவின் உறுதியான வலியுறுத்தல்.

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா நிறைவேறுவதற்கு, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அன்னா ஹசாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அன்னாவின் புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதாவை வலுவாக்குவதற்காக கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அன்னா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கியிருக்கிறார்!

ஏப்ரல் 2011…

ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவுக்காக, சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு போராடிய மூத்த சமூகப் போராளி அண்ணா ஹஜாரேவுக்கு உலகம் தழுவிய அளவில் ஆதரவுக் கரம் நீண்டது.

அண்ணா விதைத்த புரட்சியால் ஏற்பட்ட இந்திய மக்களின் எழுச்சியைக் கண்டு பணிந்தது மத்திய அரசு. ஊழலுக்கு எதிராக லோக்பால் மசோதா வரைவை உருவாக்குவதற்கு கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றதால், அண்ணா ஹஜாரே தனது உண்ணாவிரத்தை ஐந்தாவது நாளில் கைவிட்டார்.

“இது, உங்களின் வெற்றி,” என்று இந்திய மக்களிடம் கூறிய அண்ணா, “இதோடு நமது போராட்டும் முடிந்துவிடவில்லை. இப்போது தான் தொடங்குகிறது. லோக்பால் மசோதா வலுவானதாக நிறைவேறும் வரை நாம் போராட வேண்டும்,” என்று முழங்கினார்!

ஆகஸ்ட் 2011..

லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமர், நீதித்துறையில் உயர் பதவி வகிப்பவர்களையும் உள்ளடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, மத்திய அமைச்சர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட லோக்பால் மசோதா தான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ஊழலுக்கு எதிராக வலுவான அதிகாரங்கள் கொண்ட லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, ஆகஸ்ட் 16-ல் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

இந்தப் போராட்டத்துக்கு தடை விதித்தபோதிலும் உண்ணாவிரதத்தை துவங்கவிருந்த அண்ணாவை, சுதந்திர தினத்துக்கு அடுத்த நாளில் கைது செய்தது காவல்துறை.

 


செய்திகள்

சிவில் சொசைட்டி உறுப்பினரான கிரண் பேடி கூறுகையில், ‘‘போலீசாரின் யோசனையை நாங்கள் ஏற்கவில்லை. ஒரு மாதம் உண்ணாவிரதத்துக்கு ஹசாரே அனுமதி கோருகிறார்’’ என்றார். இதனால், முட்டுக்கட்டை நீடிக்கிறது. இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரவும் நீடித்தது. முன்னதாக, திகார் சிறையில் ஹசாரேயை வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர் குருஜி சந்தித்து பேசினார். பாபா ராம்தேவ் திகார் சிறை வாசலில் குவிந்திருந்த ஹசாரே ஆதரவாளர்களிடையே பேசினார். ஹசாரேயின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதியிடம் ராம்தேவ் மனு அளித்தார்.

”ஊழலை உடனே கட்டுப்படுத்த அரசிடம் மந்திரக் கோல் எதுவும் இல்லை” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

”சட்டம் இயற்றும் உரிமை மக்களுக்கு கிடையாது. அந்த உரிமையை நாடாளுமன்றத்துக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் மக்கள் வழங்கி உள்ளனர்.” இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.


நிகழ்வுகள் / டைம் லைன்

2011, ஜனவரி 30: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி, அன்னா ஹசாரே தலைமையில் நாடு முழுவதும் ஊர்வலம் நடந்தது. இதில், கிரண்பேடி, சுவாமி அக்னிவேஸ், பிரசாந்த் பூசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிப்ரவரி 26: லோக்பால் மசோதா வரைவுக் குழுவில் மக்களையும் உறுப்பினராக சேர்க்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஏப்., 5 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அன்னா ஹசாரே அறிவித்தார்.

மார்ச் 3: அன்னா ஹசாரேவை பேச்சுவார்த்தைக்கு வரும்படி கடிதம் மூலம் பிரதமர் அழைப்புவிடுத்தார்.

மார்ச் 7: கிரண்பேடி, அக்னிவேஷ், பிரசாந்த் பூஷனுடன் பிரதமருடனான பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார் ஹசாரே.

மார்ச் 8: மத்திய அமைச்சர்கள் அந்தோனி, வீரப்பமொய்லி, கபில் சிபல், சரத் பவார் அடங்கிய துணைக்குழு ஒன்று பிரதமரால் அமைக்கப்பட்டது.

மார்ச் 28: துணைக்குழுவுடன் தொடர்ந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஹசாரே அறிவித்தார்.

ஏப்.,4: உண்ணாவிரத்திற்கு ஆதரவு அளிக்கும்படி தேசம் முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஹசாரே. இவரின் இந்த முடிவு ஆழ்ந்த வேதனை அளிப்பதாக பிரதமர் கருத்து தெரிவித்தார்.

ஏப்.,5: மகாத்மா காந்தியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, இந்தியா கேட்டில் தொடங்கிய பேரணி ஜந்தர் மந்தர் வரை சென்றது. அங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தார் . தொடக்கத்தில் 5,000 ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

ஏப்.,8: ஹசாரே வலியுறுத்தியபடி குழு அமைக்க மத்திய அரசு இசைவு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமையுடன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ளப்போவதாக அறிவித்தார், ஹசாரே.

ஏப்.,9: குளிர்கால கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் உறுதியளித்தார். சுதந்திர போராட் டத்திற்கு பின் நாடு தழுவிய போராட்டமாக பார்க்கப்பட்ட ஊழலுக்கு எதிரான போராட்டம் அன்னாவின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவுற்றதை தொடர்ந்து முடிவுக்கு வந்தது.

ஆக.,16: லோக்பால் மசோதாவில் ஏற்றம் கொண்டு வர வேண்டும் என்று உண்ணா விரதம் இருக்கத் துவங்கும் முன்பே ஹசாரே கைது செய்யப்பட்டார்.

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

Top 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews

‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.

போட்டி குறித்த பதிவுகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன: Snap Judgement: Uraiyadal: Jyovram Sundar & Paithiyakkaaran Short Story Contests: Tamil Bloggers Fiction Competition Results

இனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:

  • யோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.
  • அம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந்திருக்கும்!?
  • கவிதா | Kavitha: அப்பா வருவாரா?: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.
  • நல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.

  • சேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:
  • வேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.

  • நந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.
  • பட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘??’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சின்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.

பார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.

  • ஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு?!’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.
  • வெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.
  • இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
  • நுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்க, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.
  • மைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு
  • அகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.
  • ட்விட்டரில் சொன்னது: Tht piece lacked freshness, was more adjective oriented, pretentious & preachy.

  • இவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.
  • தமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.
  • நீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.
  • நந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.
  • வெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப்பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.
  • GURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.
  • கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா? ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.
  • எண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.

சென்னை ராஜாங்கம் – 2

நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.

கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.

நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.

உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.

வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.

1. What Makes Us Happy? – The Atlantic (June 2009): “Is there a formula—some mix of love, work, and psychological adaptation—for a good life?”

2. What You Don’t Know Makes You Nervous – Happy Days Blog – NYTimes.com: “Happy Days is a discussion about the search for contentment in its many forms — economic, emotional, physical, spiritual — and the stories of those striving to come to terms with the lives they lead.”

‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.

Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.

‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.

Where-is-prabhakaran-LTTE-Nakkeeran-Cover-Storyதமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.

1. உயிருடன் உள்ளார் பிரபாகரன்

2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்?

3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?: பி.இரயாகரன்

கடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:

TV Artists Union President passed away. http://bit.ly/vo1ud
12:06 PM May 19

ஈழப் படுகொலை: முத்துக்குமார் பத்திரிகை ஊழியர் தீக்குளித்து தற்கொலை: பதிவுத் தொகுப்பு

-/பெயரிலி.
அவர்களின் நல்லெண்ணத்துக்கு மதிப்பளித்தாலும், தம்மைத்தாமே கொளுத்திக்கொள்வது பயங்கரமான மடமைத்தனம்.

தம்மைத்தாமே கொன்று கொல்வது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். அதற்குப் பின்னால், எல்லாப்பரபரப்பும் மடிந்தபின்னால், சார்ந்திருக்கும் குடும்பத்தினை ஒரு நாயும் அணுகிப் பார்க்காது.

ஈழத்திலே எத்தனையோ இவர்களின் வயதினை ஒத்தவர்கள் உயிர்வாழ இன்னொரு வழிமுறை கிட்டாதா என்று எறிகணைவீச்சிலே செத்துப்போக, இத்தனை வழிமுறைகளிருக்கும் இவர்கள் இப்படியாக இங்கே செத்துப்போவது அநியாயம்.

தமிழகத்திலே கொளுத்திக்கொள்ளவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல; கொளுத்திக்கொல்லவேண்டியவர்களும் முத்துக்குமாரர்களல்ல.

நடைவண்டி: ‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு.: ஆழியூரான்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்த ரவி என்ற 30 வயது கூலித் தொழிலாளி இன்று காலை இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்துள்ளார். அவர் விடுதலை சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் இருவிதமாகவும் சொல்லப்படுகின்றன.


தீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை!
வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழ் நாட்டில் சேட்டு என்றும், சேட்டனென்றும் வந்தவனெல்லாம் வாழ, சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது.
:::
பட்டினிப் போராட்டத்தின் மூலம் களம் இறங்கியிருக்கும் சட்டக்கல்லூரி மாணவர்களே… உங்கள் போராட்டம் வெற்றிபெற சகதமிழனாக நின்று வாழ்த்துகிறேன். உங்களோடு களம் இறங்க முடியாமைக்கும் வருந்துகிறேன். தமிழ்நாட்டிற்காதவரான போராட்டம் எதுவாக இருந்தாலும் சரி, முதலில் களம் காண்பவர்கள் நீங்கள், வழக்கறிஞர்களும்தான். இந்த முறையும் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே களத்தில் இறங்கியவர்கள் இந்த இரண்டு தரப்பும்தான். உங்களுடைய இந்த உணர்வை மழுங்கடிக்கவே திட்டமிட்டு இந்திய உளவுத்துறை ஜாதிய உணர்வைத் தூண்டிவிட்டு, அம்பேத்கர் சட்டக்கல்லூரி அனர்த்தத்திற்கு வழிவகுத்திருக்கலாம் என்பது என் சந்தேகம்.
:::
ஆயுத தளபாடங்களும், உளவு விமானங்களும்தான் இலங்கை போகின்றனவே தவிர, இந்தியாவால் அனுப்பப்பட்ட ஒரு பாராசெட்டமால் மாத்திரையைக் காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…
அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே…


நர்சிம்
என்ன எழுதுவது?
நெகிழ்ச்சியாக இருக்கிறது என்று எழுதினால் நான் கோழை.. ஏனெனில் நான் நெகிழும் நிகழ்வில் உடன்கட்டை ஏறியிருக்க வேண்டும்
மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றால்.. நான் ஒரு சாடிஸ்ட்.. உன் முடிவில் என்ன மகிழ்ச்சி?
:::
14 பக்க கடிதம் எழுதும் அளவு அவகாசம் இருந்த உனக்கு ஒரு நிமிடம் சிந்திக்க கிடைக்காததை எண்ணித்தான் வருத்தமாக இருக்கிறது.
யார் யாது சொன்னாலும் இது வீரம் அல்ல முத்துக்குமார்.
:::
உன் மரணச்செய்திகள் இன்னும் 3 நாட்களுக்கு உன் உடலை எரித்த தீயை விட பலமடங்கு எரியும்..அதற்கு பிறகு உன் அஸ்தியை போல இந்த நிகழ்வும் கரைந்து மறைந்து மறந்து போகும். என்ன பலன்?
யாவரும் கேளிர்!!…


இட்லிவடை
இவ்வளவு வாய்கிழிய பேசும் தமிழக தலைவர்கள் திருமங்கலம் இடைத்தேர்தலில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு பற்றி ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ?
:::
இலங்கையில் விடுதலைப்புலிகள் வீழ்ச்சி அடைந்தால் தான் இவர்களுக்கு ஈழ தமிழர்கள் மீது பரிவு ஏற்படுமா ? இரண்டு வருஷம் முன்பு எங்கே போனது இந்த பாசம் ?

நடிகர் சத்யராஜ், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, போன்றவர்கள் செங்கல்பட்டு மணவர்களின் உண்ணாவிரத பந்தலில் மாணவர்களை உசுப்பிவிடுகிறார்கள். ஏன் இவர் பையன் “ஸ்டுடண்ட் நம்பர் ஒன்” சிபி இதில் கலந்துக்கொள்ள கூடாது ?
முத்துக்குமரன் தீக்குளிக்க யார் காரணம்?


உண்மைத் தமிழன்
“செத்தாவது தொலைவோம்.. அப்போதாவது இந்தப் பிரச்சினை விஸ்வரூபமெடுக்கிறதா என்று பார்ப்போம்..” என்று அவர் நினைத்து அதனையே செயல்படுத்தியிருக்கிறார்.
:::
இதில் அசிங்கப்படுத்தும்விதமாக சரத்குமார் ஏதோ ஒரு கல்யாண வீட்டில் கையெடுத்துக் கும்பிடுவதைப் போன்ற போஸில் ஒரு தட்டியை அவரது கட்சிக்காரர்கள் வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள்.
:::
அஞ்சலி செலுத்த வந்தவர்கள் அனைவருமே அந்த இடத்தில் அங்கிருப்பவர்களிடம் “முத்துக்குமார் செய்தது சரியானது அல்ல.” என்று சொன்னால் திரும்பி உயிருடன் போவார்களா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு கூடியிருக்கும் இளையோர் பட்டாளம் கொதிப்புடன் காட்சியளிக்கிறது.
:::
மதியம்வரைக்கும் இது தமிழ் உணர்வாளர்களுக்கான போராட்டமாக சென்று கொண்டிருந்தது. மதியத்திற்குப் பிறகு முழுக்க, முழுக்க அரசியலாக மாறிவிட்டது. மாலையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவுக் கூட்டமாக மாறிவிட்டது. மாலையில் வைகோ தனது பேச்சை முடித்தபோது “பிரபாகரன் வாழ்க..” என்று முழுக்கமிட..
:::
ஜெயா டிவி செய்திகளில் மதியம்வரை முதல் விளம்பரம் முடிந்து அடுத்த segment-ல் முத்துக்குமார் விஷயத்தைச் சொன்னார்கள். மதியத்திற்கு மேல் சட்டமன்ற உறுப்பினர் பாபு தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பின்பு இது ஒன்றையே திரும்பத் திரும்ப இப்போதுவரையிலும் காட்டி வருகிறார்கள்.

மதுரையில் தங்களது அலுவலகம் தாக்கப்பட்டபோது அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ரவுடி பட்டம் சூட்டி பரபரப்பை ஏற்படுத்திய சன் டிவி போனால் போகிறதென்று நினைத்து பத்தோடு பதினோறாவது செய்தியாக இதனைச் சொன்னார்கள்.

கலைஞர் டிவியில் நேற்றே ஒரு கொடுமை நடந்தது. பத்திரிகையாளர் என்ற செய்தியைக்கூட போடாமல் “ஈழப் பிரச்சினைக்காக சென்னையில் ஒருவர் தீக்குளிப்பு..” என்று ஒரு வரி செய்தியை மட்டுமே ஓடவிட்டார்கள். பத்திரிகையாளர் என்பதையும், ஈழப் பிரச்சினைக்காக என்பதையும் செய்திகளில் அதிகம் இடம் பெறாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டார்கள் இதன் செய்திப் பிரிவு ஆசிரியர்கள்.

மக்கள் டிவியில் ராமதாஸ் மாலை போடுவதை மட்டுமே திரும்பத் திரும்ப காட்டி அதனை சாதாரணமான ஒரு அஞ்சலி செய்தியாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.
முத்துக்குமார் எதிர்பார்த்தது நடக்கிறதா..?


கொழுவி
எத்தனை ஈழத் தமிழருக்கு 95 இல் யாழ்பாண இடப்பெயர்வின் போது தீக்குளித்து மாண்ட தமிழக உறவின் பெயர் தெரியும்?
முத்துகுமரன்கள் வேண்டாம்


superlinks
த‌ற்கொலைகள் செய்துகொள்வது கோழைத்தனமான முடிவா ?
ஈழ‌த்தில் இந்திய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ அர‌சு ந‌ட‌த்தும் இன‌ப்ப‌டுகொலை போர்


அசுரன்:
“என்னைவிட புத்திசாலியான குழந்தைகள், சிறுவர்கள், வாலிபர்கள், பெண்கள் அனைவரும் இலங்கையில் கொல்லப்படுகிறார்கள். போர் முனையில் சிக்கித் தவிக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்திதான் நான் தீக்குளித்தேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார்.
நக்கீரன்: உயிரை கொடுத்து உணர்வை வளர்த்தாய், நீ இட்ட தீ எரிந்து சமைக்கும் முத்துக்குமரா!!


நாக.இளங்கோவன்
வெறுமனே, “எனக்கு இதில் உடன்பாடு இல்லை, நான் தற்கொலையை வெறுக்கிறேன் – இது கோழைத்தனம்…” என்றெல்லாம் நினைப்பதை விட்டு விட்டு, அவன் உணர்வினைப் போற்றவேண்டும். அதனை மதிக்க வேண்டும். நாமும் உணர்வு கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆன்மாவுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதை.
நயனம் – nayanam: முத்துக்குமரனின் தீக்குளிப்பும் சில கருத்துகளும்!


வினவு
வேலைக்காக தட்டச்சு செய்து வாழும் முத்துக்குமாரின் கைகள் தனது 2000 வார்த்தைகள் அடங்கிய மரண சாசனத்தை ஒரு அரசியல்
கட்டுரையாக நிதானம் தவறாமல் அடித்திருக்கிறது. முத்துக்குமாருக்கு பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தாலும் அவர் இந்த தலைவர்களின் மோசடி நாடகத்தை புரிந்தே எழுதுகிறார். குறிப்பாக தி.மு.கவின் உணர்ச்சிப் பசப்பல்கள் வடிவேலு காமடியைவிட கீழாக இருப்பதாக கேலி செய்கிறார்
ஈழமும் முத்துக்குமாரின் தியாகமும் – நமது கடமை என்ன?


வினவு
முத்துக்குமார் எனும் வீரனின் உயிரைத் துறக்கத் துணிந்த தியாகம் கொழும்பில் இந்திய- இலங்கை கிரிக்கெட் ஆட்டத்தை ரசிக்கும் அற்பங்களின் இழிவை எள்ளி நகையாடட்டும். முத்துக்குமார் எனும் இளைஞனின் தியாகம் ஈழத்தில் கொத்துக் கொத்தாய் செத்து விழும் ஈழத்தமிழனின் பிணங்களைக் கண்டு உவகை கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி, ஜெயலலிதா, இந்து ராம், தமிழக காங்கிரசு நரிகள் முதலான ஒநாய்களின் வெறியை தமிழக மக்கள் அறுப்பதற்கு உதவட்டும். முத்துக்குமார் எனும் அந்தத் தொழிலாளியின் மரணம் புலம்பெயர்ந்த நாடுகளில் வில்லு படத்தை ரசித்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் மரத்துப் போன சுரணையை மீட்டுக் கொண்டு வரட்டும். முத்துக்குமாரின் தீக்குளிப்பு பதிவுலகில் அக்கப்போரையும், அரட்டையையும், வாடிக்கையாகக் கொண்டிருக்கும் சில பதிவர்களுக்கு சமூக அக்கறை என்றால் என்ன என்பதைக் கற்றுக் கொடுக்கட்டும். முத்துக்குமார் எனும் அந்த வார்த்தை இதுவரை ஈழத்திற்காக இது வரை ஒரு துரும்பையும் எடுத்துப் போடாதவர்களின் மனச்சாட்சியை கிளறி எழுப்பட்டும்.
ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!


வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன்
குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது.
அங்கூ…. அங்கூ…: ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்…


பி.இரயாகரன்
புலிப்பாசிசம் எப்படி தனிநபர் பயங்கரவாதத்தை அடிப்படையாக கொண்டு, சமூகத்தை தனக்கு எதிராக நிறுத்தி சீரழிந்து அரசியல் ரீதியாக தற்கொலை செய்கின்றதோ, அப்படித்தான் தனிநபர் தற்கொலையும்;. இந்த வகையில் முத்துக்குமாரனின் தற்கொலையும், புலியிச அரசியல் எல்லைக்கு உட்பட்டதுடன், அதுஎதான் வழிகாட்டியுள்ளது. மக்கள் விடுதலைக்கு வழிகாட்டாத புலிப்போராட்டமோ, தற்கொலையை தேர்ந்தெடுத்தது. அதையே தன் தோல்வியிலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகின்றது.

சமூகத்தின் மீது நம்பிக்கை இழந்து, அவர்களைச் சார்ந்து போராட முடியாது போன நிலையில் தான், புலியிசம் மனித அவலத்தை தன் அரசியலாக உற்பத்தி செய்கின்றது.
முத்துக்குமாரன் தற்கொலையும், தனிநபர் பயங்கரவாதமும்


கலகம் / தமிழ் அரங்கம்
உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் தொடர்கின்றன, இவற்றுக்கு சளைக்காமல் திரையரங்குகளில் படங்களோ வெற்றிகளை குவித்து ஓடிக்கொண்டிருக்கின்றன. டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதுகிறது,மெரினாவில் சுற்றிபார்க்க வருபவர்களும், தீம் பார்க்கில் கூத்தடிக்க போவோரின் எண்ணிக்கையும் குறையவில்லை. தங்க கடற்கரையில் சிலு சிலு காத்து வாங்க கூட்டமோ முண்டியடிக்கிறது.
சுடாத நெருப்பும்,சுடுகிற கண்ணீரும்


வாசு
நிஜமாகவே இலங்கை தமிழருக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது பணம் கொடுத்து அரசியல் கட்சிகள் எதாவது இதை செய்ய சொன்னதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் முத்துக்குமார் எடுத்த முடிவு பைத்தியக்காரத்தனமானது.
Our Thoughts: உயிர் இத்தனை மலிவா?


சக்கடத்தார் சக்(ங்)கடத்தார்
எங்கட பாசத்திற்குரிய உறவுகளே! உங்கள் உள்ளத்தில் இருக்கும் ஆதரவு எங்களுக்கு நன்றாகத் தெரியும். உங்கள் ஆட்சியாளர்கள் எலும்புத் துண்டுக்காக வாலாட்டுவதற்கு நீங்கள் ஏன் இப்படியான வழியில் உங்கள் உயிரை மாய்க்க வேண்டும்?? உங்கள் ஆதரவை, உங்கள் உணர்வைப் புரிந்து கொண்டவராய்த் தானே நாங்கள் இருக்கின்றோம்.. பிறகு ஏன் உறவுகளே இப்படியான வழி முறைகளைக் கைக் கொள்ள வேண்டும்?? இனிமேல் இப்படியான உயிரை மாய்க்கின்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் எம் அன்புக்குரிய உறவுகளே??
கிழவனின் கிறுக்கல்கள்…: தீ கொழுத்தத் தணல் கொடுக்கும் நாட்டில் தீக் குளிப்பா???


சுபானு
நாள்தோறும் வருகின்ற வன்னிச் செய்திகளின் கனதி இங்கே மனங்களில் உறுத்தலைக் கூட்டிக் கொண்டிருக்கின்றது. அதைவிடவும் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் இருக்கின்றதே அது அதைவிடக் கொடுமை. ஒரு இரும்புக் கூட்டுக்குள் விலங்கிடப்பட்டு உணர்வுகளைக் கூட சுதந்திரமாக வெளியிடக் கூட முடியாத மனித மனங்களைக் கொண்டு வாழ வேண்டிய கட்டாயம்.

அதைவிட வருத்தம் என்னவென்றால் எனக்கேன் இந்த வேண்டாப் பொல்லாப்பு என்று என் பல்கலைக்கழக நண்பர்கள் சிலபேர் மனம் விட்டுக் கதைக்கூட பயப்பட்டு ஓடுகின்றார்களே அவர்களை என்னவென்று சொல்வது. வெறுமனே நண்பர் வட்டாரங்களுக்கிடையில் தமது வீரவசனம் பேசிக்கொண்டும், சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் காதல் கதைகளில் தம்மை ஈடுபடுத்திக் கதைத்துக் கொண்டும், நாம் உண்டு எம் வேலையுண்டு என்னும் என இருக்கும் நாம் எங்கே, ஈழத்தமிழர்க்காக தன் இன்னுயிரை தமிழர்க்காக அர்ப்பணித்த அந்த முத்துக்குமார் எனும் இளைஞர் எங்கே.

சின்னத் தீச் சுடர் ஒன்று கையில் பட்டாலே வலியில் துடித்துப் போய்விடுவோம். ஆனால் முத்துக்குமார் தன் உடலையே மண்ணெண்னையூற்றித் ஈழத் தழிழர்களுக்காக தீக்கிரையாக்கினான்
ஊஞ்சல் – Unchal: கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்


யுவகிருஷ்ணா
கடந்த வாரம் பெண்ணே நீ அலுவலகத்துக்கு சென்றபோது கூட முத்துக்குமாரை சந்திக்க நேர்ந்தது. அவர் கூகிளில் தேடிப்பார்க்கும் விஷயங்கள் வித்தியாசமானதாக இருக்கும். நான் சென்றபோது..
மடிப்பாக்கம் லக்கிலுக்: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு


Stop the Vanni Genocide / படுகொலைகளை நிறுத்து
எனது பெயர் முத்துக்குமார், எனது சொந்த ஊர் திருச்செந்தூர் அருகில் உள்ள ஆத்தூர் கொழுவை நல்லூர் ஆகும். எனது தந்தை தாம்பரத்தில் பழைய இரும்புக்கடை வைத்துள்ளார். எனக்கும் அவருக்கும் பேச்சுவார்த்தை கிடையாது.
முத்துக்குமாருக்கு அஞ்சலிகள்


மணிகண்டன்
முத்துகுமரனின் இந்த செயல் அசாதாரணமானது. மக்களின் மெத்தனபோக்கை சற்றே மாற்றும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. இந்த சூழ்நிலையில் அவரின் மையக்கருத்தான “ஈழ மக்களின் துயர் துடைப்போம்” என்பதே முன்னிறுத்த படவேண்டும். அவரது முழு அறிக்கை தமிழகத்தில் உள்ள ஒருமித்த கருத்துள்ள கட்சிகளையும் ஒன்று சேரவிடாது. முத்துகுமரன் உணர்ச்சி கொந்தளிப்பில் எழுதப்பட்ட / பேசப்பட்ட கருத்தை எல்லாம் நம்பிய நல்ல மனிதர்.

பான் கி மூன் சீனர் என்றும், ராஜிவ் காந்தியின் கொலை இன்டெர்போல் விசாரணைக்கு செல்ல வேண்டும் என்று அவர் கூறிய கருத்தை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.


தமிழ் சசி / Tamil SASI

தீக்குளிப்பு போன்றவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் இது போன்ற செயல்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இன்று பேசி விட்டு நாளை எல்லோரும் அவரவர் வேலைகளை பார்க்க சென்று விடுவார்கள். ஆனால் “நீண்ட” துன்பத்தில் சிக்க போவது அந்த இளைஞரை நம்பி இருக்கும் குடும்பம் தான்.

இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும்

இனி பல முத்துகுமரன்கள் உருவாகுவார்கள் போன்ற அரசியல்வாதிகளின் பேச்சு பொறுப்பில்லதது. ஒரு முத்துகுமார் போதும்.

ஹிந்தி திணிப்பிற்காக இது போன்று பல இளைஞர்கள் தீக்குளித்த சாம்பலில் இருந்து தான் திமுக ஆட்சியை பிடித்தது. அப்படி ஆட்சியை பிடித்த திமுகவின் இன்றைய தலைவர் திருக்குவளை முத்துவேல் கருணாநிதி தன்னுடைய வாரிசுகளை தான் ஆட்சியில் அமர்த்த முயலுகிறார். நடுவண் அரசில் அவர் கட்சியின் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தமிழக நெடுஞ்சாலைகளில் ஹிந்தி எழுத்துக்களை நிறுவிய பொழுது அதனை அவரால் தடுக்க முடியாமல் போனது. இது தான் வரலாற்று நிகழ்வு. இதனை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தீக்குளிப்பு போன்ற அர்த்தமற்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.


முத்து தமிழினி
கருணாநிதி இலங்கை பிரச்சினையினால் ஆட்சியை இழந்ததே இல்லை என்று லேட்டஸ்ட்டாக வரும் தகவல்கள் நல்ல காமெடி.1989 ஆட்சி எதனால் போச்சு என்று யாராவது சொன்னால் தேவலை.எனக்கு தெரிந்த அரைகுறை அரசியலும் மறந்து விட்டது.

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார். யாரும் கண்டுக்கலை.
ஒரு தமிழனின் பார்வை:ஈழ பிரச்சினை – கருணாநிதியை கும்முவது தீர்வாகாது


வெற்றி

அது தெற்காசிய பேட்டை தாதா என்ற கோதாவில் இந்தியா எடுத்துள்ள நிலை. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்

முத்து, நீங்கள் மேற்கூறியுள்ள கருத்துடன் எனக்கு உடன்பாடில்லை. காரணம், பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் இருந்த போது காங்கிரசுக் கட்சி போல கண்மூடித்தனமாக தமிழின அழிப்புக்குத் துணை போகவில்லை.

2000ம் ஆண்டில் நோர்வே மூலம் முன்னெடுக்கப்பட்ட சமாதான முயற்சிகளில் பாரதிய ஜனாதாக் கட்சி மறைமுகமாக பெரும் பங்காற்றி இருந்தது என நான் அறிந்தேன்.

அதுமட்டுமல்ல, அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் ஈழ விடயத்தில் தமிழக மக்களினதும் தமிழகத் தலைவர்களினதும் கருத்துக்கும் உணர்வுகளுக்கும் ஓரளவுக்கேனும் மதிப்பளித்துச் செயற்பட்டார்.

பா.ஜ.க தனித் தமிழீழத்தை ஆதரிக்கவில்லையெனினும், ஈழத்தமிழர்களின் சிக்கல் பேச்சுவார்த்தை மூலம் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வை நோக்கியே இருந்தது.

ஆனால் காங்கிரசுக் கட்சி, தமிழின அழிப்புக்கு சிங்கள அரசுக்கு உதவியளித்து வருகிறது.


We The People

நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை. இருக்கவே இருக்கார் கலைஞர் என்று நாமெல்லாம் அவரை கும்முவதாக சில காலம் முன்பு சொல்லியிருந்தேன்.அதே தான் இப்பவும். கலைஞர் ராஜினாமா செய்தால் ஈழம் மலருமா? கருணாநிதியும் இதை நாசூக்காக கேட்டார்.யாரும் கண்டுக்கலை.

அப்புறம் எதுக்கு உண்ணாவிரதம், மனிதசங்கிலி, எம்.பிக்கள் ராஜினாமா என்று டெய்லி நாடகம் போட்டார் என்று அவரிடமோ! இல்லை நீங்களாவோ சொன்னால் தேவலை??!!

1989 தி.மு.க ஆட்சி போனதுக்கு காரணம் ஜெ-ராஜீவ் கூட்டணியே தான் அது தான் அரசியல், நீங்க சொல்லறத பார்த்தா 1980 எம்.ஜி.ஆர் ஆட்சி கலைப்பு ஈழப்பிரச்சனைக்காக என்று சொல்லுவீங்க போல… என்னங்க உங்கள ஒரு அரசியல் புலின்னு நினைச்சா, இப்படி காமெடி பண்ணறீங்க!!?


ராஜ நடராஜன்
கருணா, அனந்தசங்கரி, பிள்ளையான் போன்றவர்கள் இடம் மாறியும் கூட உங்களை புதுப்பித்துக் காட்டும் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை நீங்கள் உருவாக்காததே தமிழக தமிழர்களின் நம்பிக்கையின்மைக்கான காரணமும், இருப்பதை உறுதியாகப் பற்றிக் கொண்டாவது சுய கவுரவத்துடன் வாழலாம் என்ற நம்பிக்கைதான் ஈழத்தமிழனுக்கு இத்தனை அவலங்களுக்கும் மத்தியிலும் இன்னும் மக்களை விடுதலைப்புலிகளின் பக்கம் இழுக்கிறதெனலாம்.

இலங்கை அரசு புலம் பெயர்ந்த தமிழனை மீண்டும் சம உரிமையோடு அணைத்துக்கொள்வதும், அல்லது இரண்டாம்தரக் குடிமகனாக வரவேற்பதும்,அல்லது அகதியாக உலகம் முழுவதும் ஊர்சுற்றவிடுவதும் போன்ற முக்கியமான நிகழ்வுகள் எதிர்காலத்தில் காத்துக் கிடக்கின்றன.மண்வாசனை காரணமாகவோ இயலாமையினாலேயோ தன் மண்ணை விட்டு நகராத உயிரோடிக்கும் உண்மை தமிழர்களின் எதிர்காலம் நிலைக்கவேண்டும்.
பார்வையில்: தமிழகம்,ஈழம், இலங்கை-ஓர் பார்வை


பத்ரி சேஷாத்ரி
விடுதலைப் புலிகளை இலங்கை ராணுவத்தால் அழித்தொழிக்க முடியும் என்று நான் நம்பவில்லை. அப்படியே அது நடந்தாலும், அதையொட்டி, ராஜபக்‌ஷேவும் இலங்கை அரசும் தமிழர்களுக்கு எதையும் அள்ளிக்கொடுத்துவிடப் போவதில்லை. தமிழர்களின் நிலை இப்போது இருப்பதைவிட மிக மோசமாகத்தான் போகும்.

விடுதலைப் புலிகள் அமைப்பால் இலங்கையைத் துண்டாக்கி, தனி ஈழத்தைப் பெறுவது சாத்தியம் என்றும் எனக்குத் தோன்றவில்லை.
எண்ணங்கள்: இலங்கைப் பிரச்னையும் தீக்குளித்தலும்


யட்சன்
தமிழுணர்வாளர்களின் வெறும் வாய்க்கு அவலாய் போனதை தவிர அந்த இளைஞனால் எதை சாதிக்கமுடிந்ததென தெரியவில்லை. இயலாமையின் உச்சத்தில் கவன ஈர்ப்பாய் செய்ததை தியாகமென சொல்வதை காட்டிலும் தற்கொலையென்றே வரையறுக்கலாம்.
:::
விடுதலைப்புலிகளின் செயல்களையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நியாயப்படுத்தும் போக்கினை யார் துவங்கினார்களென தெரியவில்லை.
:::
விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் பக்குவமில்லாதவர்களின் எதிர்வினைக்கு பயந்து முப்பது வருடங்களுக்கு மேலாய் புனிதபதாகையினை புலிகளுக்கு தந்த என் தமிழினமும் குற்றவாளிதான்.
முட்டாள் குமரனும் சில முழு பூசனிக்காய்களும்….


மாலன்
இந்த நெருப்பை மீண்டும் ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்கி அது இன்னும் பல தற்கொலைகளுக்கு இட்டுச் செல்லக் கூடாதே என்பதுதான். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்பதாக வெளியான அறிவிப்பை அடுத்து ராஜீவ் கோஸ்வாமி தீக்குளித்த போது ஊடகங்கள் அதைப் பற்றி எழுதி விசிறிவிட விளம்பர வெளிச்சத்திற்கு ஆசைப்பட்டு 18லிருந்து 24 வயதுள்ள 159 இளைஞர்கள் தீக்குளித்தார்கள்.(அன்று தொலைகாட்சி இந்தளவிற்கு பரவியிருக்கவில்லை, கடவுளுக்கு நன்றி )
:::
விடுதலைப் புலிகள், சிங்கள அரசு இரண்டுமே தங்களது அதிகார எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள, விரிவுபடுத்திக் கொண்ட எல்லைகளைத் தக்க வைத்துக் கொள்ள மோதுகின்றன. இதற்கான வழி போர் என அவை தேர்ந்தெடுத்திருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் இந்த இரண்டு தரப்புமே நிரந்தரமான வெற்றிகளைப் பெற்றதில்லை என்று அறிந்தும் அவை இந்த வழியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன.
:::
இலங்கைத் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதுதான் அவர்களது இலட்சியமாக இருந்திருக்குமானால், அவர்கள் ராஜீவ் – ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள். (அது உறுதியளித்த மாநிலக் கவுன்சில்களின் அதிகாரத்தைப் பின், இந்தப் 18 ஆண்டுகளில், மாநில சுயாட்சிப் போராட்டங்கள் போன்ற அரசியல் விவாதங்கள் (political discourse) நடவடிக்கைகள் (political processes) மூலம் விரிவுபடுத்தியிருக்கமுடியும்.அதை அவர்கள் ஏற்க மறுத்ததற்குக் காரணம் ராஜீவ் – ஜெயவர்த்தன திட்டத்தில் (scheme) தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்பதே. பின்னர் ரணில் விக்ரமசிங்கேயோடு ‘தேனிலவு’ கொண்டாடிய நாட்களில் கூட அவர்கள் ஓர் அதிகாரப் பகிர்வினை எட்டியிருக்க முடியும். ஆனால் விடுதலைப் புலிகளின் இலட்சியம் தமிழர்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பது அல்ல;

தாங்கள் அதிகாரம் பெற வேண்டும் என்பதே.
என் ஜன்னலுக்கு வெளியே…: முத்துக்குமார்

விரலால் பேசுவது இருக்கட்டும்! விழிகள் சந்திக்கலாமே

பாஸ்டன் ஸ்கர்ட் – டிசம்பர் முகப்பு பக்கம்

december-skirt-cover-boston-economy-finance

இதுவரை உளறியது

நன்றி: உளறல்

தெரியல’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்: விளங்கவில்லை (அல்லது) பார்க்க முடியவில்லை

நான் சட்ட அமைச்சரானால்:

1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்

2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.

3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.

ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.


மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:

“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.

பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).

உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. 🙂

அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”


  1. நண்பரின் நக்கல் நறுக் :: எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.
  2. “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”
    – Kundera
  3. டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.

பா ராகவன் :: (குதிரைகளின் கதை தொகுப்பு)

1. யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது

2. மூன்று காதல்கள்

அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.

3. ஆயில் ரேகை

“புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.”

4. பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.)


இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்

தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.

இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.

(வார்த்தை – ஜூன் 2008)

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

மெகயினிடம் எனக்குப் பிடித்தது என்ன? – சொ. சங்கரபாண்டி

சென்ற பதிவு

2. ஒபாமாவின் எந்தக் கொள்கை உங்களை அதிகம் கவர்ந்திழுத்து ஒத்திசைவாக தலையாட்ட வைக்கிறது?

ஒபாமா-பைடனின் வெளியுறவுக்கொள்கை. அதுவும் கூட புஷ் கொள்கைகளை ஆதரிக்கும்/தொடரவிருக்கும் மெக்கெய்ன்-பேலின் வந்துவிடக்கூடாதென்ற பயத்தில்தான்.

3. மெகயினின் பிரச்சாரத்தில் எந்த நிலைப்பாடு உங்களுக்கு உவப்பானதாக அமைந்திருக்கிறது?

இப்பொழுது எதுவுமில்லை.

2000 குடியரசுக் கட்சி முன்னோட்டத் தேர்தலின் போது புஷ்சுக்கு எதிராகப் போட்டியிட்ட காலத்தில் எனக்கு மெக்கெய்னைப் பிடிக்கும். ஒரு சில விசயங்களாவது இருந்தன அப்பொழுது. இப்பொழுது புஷ்சை ஆதரிப்பவர்களைப் பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது.

4. இந்த இருவரும் இல்லாமல், இன்னொருவர் ஜனாதிபதியானால் சரியாக இருக்கும் என்று சொல்ல நினைத்தால் எவரை கைகாட்டுவீர்கள்? எதற்காக?

ஹில்லரி கிளிண்டன்.

(அ) முதல் கேள்வியில் நான் சொன்ன முதல் காரணம் ஹில்லரிக்கும் பொருந்தும். அதற்காக அவரை ஆதரிக்கிறேன்.

மேலும் தனிப்பட்ட அளவில் அவருக்கு நிறைய திறமைகள் இருந்தும் பில் கிளிண்டனின் மனைவி என்பதற்காகவே குடியரசுக் கட்சியினர், கட்சிச் சார்பற்றவர்கள், ஜனநாயகக் கட்சியின் கருப்பினத்தவர், சாதாரண அமெரிக்கக் குடிமக்கள் என அனைவராலும் பின்வரும் வெவ்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப் படிருக்கிறார்.

குடியரசுக் கட்சியினர் அவரையும் கணவர் கிளிண்டனையும் தங்களுக்குச் சிம்ம சொப்பணமாக நினைத்து வெறியோடு எதிர்ப்பவர்கள்.

கட்சி சார்பற்றவர்கள் என்ன வேண்டுமென்று நினைக்கிறார்களென்று அவர்களுக்கே தெரியாது. கேட்டால் எங்களுக்கு மாற்றம் வேண்டுமென்பார்கள் – கிளிண்டனை ஆதரிப்பது நிச்சயம் அவர்களைப் பொருத்தவரை மாற்றமில்லை.

ஜனநாயகக் கட்சி கருப்பினத்தவருக்கு ஒபாமா கிடைத்ததால் ஹில்லரி வேண்டாம்.

சாதாரண அமெரிக்கக் குடிமக்களில் பெரும்பாலோர் தலைவராக வரக்கூடிய பக்குவம் ஒரு பெண்ணுக்கு என்று வெளிப்படையாகச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

எனக்கு பில் கிளிண்டன் காலத்திலிருந்தே ஹில்லரியை பிடிக்கும்.

குறிப்பாக ரஷ் லிம்பாக் நிகழ்ச்சியைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஹில்லரி மேல் அளவு கடந்த பற்று வரும். இவர் ஒரு நாள் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு அமெரிக்கர்களின் பெண் சமத்துவக் கோட்பாடு சோதிக்கப் படவேண்டும் என்று நினைப்பதுண்டு.

ஒபாமாவுடனான முன்னோட்டத் தேர்தல் விவாதங்களில் கூட ஹில்லரியைத்தான் அதிகம் பிடித்திருந்தது. மற்றபடி அவர் உள்நாட்டுப் பிரச்னைகளில் சொன்னதைச் செய்வாரா என்ற நம்பிக்கையின்மையும் மற்ற அமெரிக்கர்களைப் போல் உண்டு.

5. தமிழகச் சூழலோடு அமெரிக்க அதிபர் தேர்தலை ஒப்பிட முடியுமா? வாக்கு வங்கி அரசியல்; இனம், மொழி, பால் பேதங்கள்; ஒரு தலைவரை முக்கியஸ்தராக முன்னிறுத்துவது; விகிதாச்சார பிரதிநித்துவம்; வோட்டுச் சாவடி குழப்படி; வாக்கு எண்ணிக்கை சதவிகிதம்… எதில் ஒற்றுமை? எவ்வாறு வேறுபடுகிறது?

ஒப்பிட முடியாது, கூடாது என்றும் நினைக்கிறேன்.

W & McCain

‘கரிசல்’ சன்னாசியின் ஜார்ஜ் W. புஷ் வாழ்க்கைப்படம் குறித்த திரை விமர்சனம்: டபிள்யூ

கருத்துப் படம்:

கொசுறு படம்: