Tag Archives: US

Aa Eraa Venkata Chalapathy – Interview Questions

கொஞ்ச காலம் முன்பு A.R. Venkatachalapathy (Professor of History, Madras Institute of Development Studies) சந்திக்கும் சமயம் கீழ்க்காணும் கேள்விக்கான பதிலை வாங்கித் தொகுத்துப் போடும் எண்ணம் இருந்தது. நேர்கண்ட பொழுதெல்லாம், பிற சுவாரசிய உரையாடலில் சென்றதினால், வினாக்கள் மட்டும் இங்கே…

1. அகாடெமிக்கில் இருப்பவர்கள் இலக்கியம் பக்கம் ஒதுங்குவது ரொம்பக் குறைவு. நீங்கள் எப்படி இரு பக்கமும் குதிரையோட்டுகிறீர்கள்?

2. கல்வித்துறை, ஆராய்ச்சியாளர்களின் கவனமும் நவீன தமிழிலக்கியம் மீதான ஆர்வமும் எந்த நிலையில் இருக்கிறது? வருங்காலப் போக்கு எப்படி இருக்கும்?

3. காலச்சுவடு ஆசிரியர் குழுவில் நீண்ட காலமாக பணியாற்றுகிறீர்கள். உங்களின் பங்களிப்பு, சாதனை என்ன? இன்னும் என்ன செய்ய திட்டம்? இன்னும் இதை செய்யமுடியவில்லையே என்று வருத்தம் ஏதாவதுண்டா?

4. தங்கள் புனைவுகள் அதிகம் வெளியானதில்லை. சிறு வயதில் கதை/கவிதை எழுதியதுண்டா? நாவல், சிறுகதை பக்கம் எட்டிப்பார்க்கும் திட்டமுள்ளதா? ஏன் தாங்கள் இன்னும் அந்தப் பக்கம் தலைவைக்கவில்லை?

5. லஷ்மி ஹால்ம்ஸ்ட்ராமுக்கு இயல் விருது கிடைத்தபோது எழுந்த கருத்துகளுக்கு தாங்கள் எந்த ஊடகவெளியிலும் பதிலளிக்கவில்லை. விருதுக்குழுவின் நடுவர்கள் தங்களின் தேர்வுமுறைகளுக்கான முடிவுகளைப் பொதுவில் பகிர்வதில் தவறில்லையே?

6. உங்கள் எழுத்துகளைப் படித்ததில், கேட்டதில், ‘மென்மையான கருத்துகளை முன்வைப்பவர்; பிரச்சினைகளுக்குள் செல்லாமல் விவகாரமான விஷயங்களை அலசுபவர்’ என்னும் எண்ணம் எழுகிறது. இது எவ்வாறு சாத்தியமாகிறது? எங்காவது வம்பில் மாட்டிக் கொண்டதுண்டா?

7. மேற்கத்திய உலகின் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக தொலைக்காட்சியில் தோன்றுகிறார்கள். விவாதங்களில் பங்கெடுக்கிறார்கள். காலையில் பேட்டி கொடுக்கிறார்கள். புத்தகங்களையும் விற்று சிந்தனைகளையும் அலசி சவுன்ட் பைட்களும் தூவிச் செல்கிறார்கள். தமிழகச் சூழலில் டிவி கருத்தரங்கங்கள் குறித்த தங்கள் பார்வை என்ன?

8. ஆராய்ச்சி எழுத்தாளர்கள் என்றறியப்படுபவர், தன் புத்தகத்தைத் தொடர்ந்து, அதைக் காட்சிப்படுத்தலுக்கு கொண்டு செல்கிறார்கள். அதே போல், ஆஷ் கட்டுரை, வ.உ.சி. புத்தகம், புதுமைப்பித்தன் தொகுப்பை ஆவணப்படமாக எடுப்பது சாத்தியமா? திட்டம் உள்ளதா?

9. குழந்தைகள் விரும்பும் fairy taleகளையும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களையும் மீள்பார்வை கொடுத்து, கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தோ, மாற்றுக் கருவுருக்காமோ செய்வார்கள். அதே போல் கலாச்சார, சமூக, அரசியல் சரித்திரத்தை, புகழ்பெற்ற தலைவர்களின் கோணத்தில் வித்தியாச வரலாறாக செய்யும் எண்ணம் உண்டா? அப்படி உருவாக்கினால் எவரது பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்?

10. வரலாற்றாராய்ச்சி எவ்வாறு முக்கியத்துவம் பெறுகிறது? இன்னும் தமிழ் பண்பாட்டு ஆய்வில் என்ன என்ன இடங்களில் தொக்கி நிற்பதாக தாங்கள் கருதுகிறீர்கள்?

11. வாசகராகவோ இரசிகராகவோ இருந்து இலக்கியம் பற்றிய அடிப்படைகளின் மேல் நின்று விமர்சிப்பதற்கும், முனைவராகவோ பேராசிரியராகவோ இருந்து வரலாற்றுப் போக்கில் மதிப்பிடுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளனவா?

12. தமிழருக்கு என்று பல குணாதிசயங்கள் உரித்தாவதாக பண்டிதர்களும் அரசியல்வாதிகளும் சொல்கிறார்கள். தங்கள் பார்வையில் தமிழ்நாட்டுக்கும் திராவிட இனத்திற்கும் சொந்தமான கண்டுபிடிப்புகள், அரிய அதிசயங்கள், சமூக முன்னெடுப்புகள், கலாச்சாரத் தாக்கங்கள் என்ன?

13. திராவிட இயக்க ஆய்வு குறித்த பல புத்தகங்களில் முக்கியமானதும், நம்பகத்தன்மை கொண்டதாக தாங்கள் பரிந்துரைப்பது எது?

14. உங்களை உருவாக்கியவர்களில், உங்கள் ஆதர்சங்களில் சிலருடனான அனுபவங்களைப் பகிர முடியுமா?

15. லன்டன், சிகாகோ, பாரிஸ்… பல ஊர்கள். உலகெங்கும் மனிதர்களிடையே சிந்தனையில் ஒற்றுமை உள்ளதா? கலாச்சாரமும் சமூக அமைப்பும் மாறுபடுவதால் குணங்களும் வேறுபடுகிறதா?

16. தங்கள் வசித்த, விசிட் அடித்த நகரங்களில் பிடித்த ஊர் எது? ஏன்?

17. மற்றவர்களின் கடுமையான விமர்சனங்கள் தங்களை எப்படி பாதிக்கிறது? பத்து வருட உழைப்புக்கு கிடைக்கும் பதிலடிகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

18. சங்கப்பாடல்கள் குறித்தும், பழந்தமிழ் பாக்கள் குறித்தும் தங்கள் அவ்வப்பொழுது புதிய பரிமாணங்களை நயம்பட எடுத்துவைக்கிறீர்கள். இதைத் தொடராக, வெகுசன இதழ்களில் எழுதும் எழுதலாமே?

19. வைரமுத்துவிற்காக ‘காக்கை – நரி – வடை – கதை’ எழுதும் வெங்கடாசலபதியை காண முடிவதில்லையே? எப்பொழுது அடுத்து தென்படுவார்?

20. நாள்தோறும் ஐநூறு வார்த்தை பதிவுகளை எழுதும் தமிழ் வலையுலகத்திற்கு நடுவே, அவ்வப்போது மட்டுமே எழுதுவது ஏன்? அவ்வாறு நெடிய இடைவெளி விட்டு வெளியாகும்போது காணாமல் போகும் அபாயம் இருக்கிறதா?

21. தமிழிணையம் வாசிப்பதுண்டா? எந்த வலைத்தளங்கள் தாங்கள் அன்றாடம் செல்கிறீர்கள்?

22. Kindle, Nook, iPad என்று கையடக்கக் கணினி எங்கும் நிறைந்திருக்கும் இக்காலத்தில் தமிழில் அச்சு ஊடகங்களின் எதிர்காலம் குறித்த தங்கள் கணிப்பு என்ன?

23. அமெரிக்காவில் இப்பொழுதுதான் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இங்கிருக்கும் அரசியல், பொது நிறுவனங்களின் கட்சி விளம்பரத்துக்கான காணிக்கை, பெரும் பொருட்செலவில் அரங்கேறும் தேர்தல் நிதிவசூல், கூடவே மக்கள் வரிப்பணமும் கட்சி வேட்பாளருக்கு ஒதுக்கும் சட்டதிட்டம் ஆகியவை குறித்து இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்க முடியுமா?

24. தங்கள் மாணவர்களின் ஆராய்ச்சிகளில் எதை ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறீர்கள்? அடுத்த பெரிய பிராஜக்ட் என்ன?


சிறுகுறிப்பு

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிடத்தகுந்த வரலாற்று ஆய்வாளர்களுள் ஒருவர். ‘அந்த காலத்தில் காப்பி இல்லை’, ‘நாவலும் வாசிப்பும்’ ‘முச்சந்தி இலக்கியம்’ போன்ற சில முக்கிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய புத்தகங்களை எழுதினவர். குறிப்பாக ‘புதுமைப்பித்தனின் சிறுகதைகளை’ கவனமாக தொகுத்து செம்பதிப்பை தயாரித்தவர். பாரதியின் சில அபூர்வ படைப்புகளை லண்டனிலிருந்து கொண்டு வந்தவர். பாரதியின் கட்டுரைகளை வ.உ.சியின் கடிதங்களை தொகுத்தவர், சு.ராவின் ஜே.ஜே.சில குறிப்புகள்’ புதினத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

அமெரிக்காவில் திராவிட கலாச்சாரம்

மதியம் பதினொன்றே முக்கால்.

‘இன்று எங்கே சாப்பிடலாம்?’

‘மினர்வா போகலாமா?’

‘சரி’

நானும் அவளும் என்னுடைய காரில் பயணிக்க ஆரம்பித்தோம்.

‘ஏதாவது இந்தியப் பாட்டு போடேன்’

கொஞ்சம் தர்மசங்கடம். ஐ-பாடில் ‘ஆடுங்கடா என்ன சுத்தி’, ‘கெடா காறி’; தூக்கத்தை விரட்டும் பாடல்கள் எனக்கு உவப்பானவை. அதிர்ஷ்டவசமாக சிடி-யில் ரங்கீலா இருந்தார்.

‘அனிமல் கிங்டம் மாதிரி ம்யூசிக் ஆக இருக்கே? காட்டுவாசி தீமா?’

இல்லை என்று மறுத்தேன். அமெரிக்காவில் இந்திய ப்ரெட்டும், சிக்கன் டிக்கா மசாலாவும் பிடித்த தக்கினியூண்டு இடத்தை, ஆஸ்கார் ரெஹ்மான் கூட பிடிக்க முடியாது. சாரு, ஷாஜி சொல்வதிலும் பாயின்ட் இருக்கிறது.

வழக்கம் போல் பஃபே தேர்ந்தெடுத்தேன்.

அமெரிக்காவில் மதுவருந்தும் பப்களில் மாபெரும் தொலைக்காட்சி திரை இருக்கும். நாலு டிவியும் நாற்புறம் நிறைந்திருக்கும். எல்லாவற்றிலும் ஏதாவது விளையாட்டு காண்பிப்பார்கள். அவர்களுக்குப் போட்டியாக இந்திய உணவகங்களில் பெரிய திரை வைக்கிறார்கள்.

இந்திப் பாடல், தெலுங்கு ஆட்டம், தமிழ் குத்து என்று ஒருங்கிணைப்புடன் தேசிய உணர்வு பொங்க விடுகிறார்கள்.

‘யூ ட்யூபில் உங்க சண்டைக் காட்சி பார்த்தேன். பஞ்சதந்திரக் கதை மாதிரி மேஜிக்கலா இருந்தது. மலைக்கு நடுவில் கயிற்றுப் பாலம். நட்ட நடுவில் ஒருத்தன் ஆக்ட்ரெஸோட விரலப் பிடிச்சுண்டு இருக்கான். இன்னொருத்தன் அவனோட காலைத் தழுவித் தொங்கிண்டு இருக்கான். தீடீர்னு தன்னோட லெக் பீஸை கட் பண்ணிக்கிறான். பாலத்தை அறுத்து பறந்து போய் ஹீரோயினை அந்தப் பக்கம் விடறான். ரொம்ப காமெடியா இருந்துச்சு.’

‘இராவணன்?’

‘தெரியல… ரெண்டு மூணு பார்த்தேன்! எல்லாமே ஒரே மாதிரி இருந்தது. வெரி கன்ஃப்யூஸிங்.’

மணி ரத்தினத்தின் வழுக்கலுக்கு சுகாசினியே காரணம் என்பதை சுருக்கமாக விளக்கினேன்.

‘இதென்ன சாங்? இஸ் இட் தி எக்ஸ்ப்ளாயிடெடிவ் சீக்வென்ஸ்?’

“என் பேரு மீனாகுமாரி” போய்க் கொண்டிருந்தது. ‘அதென்ன exploitative song?’

‘நீதானே சொல்லிக் கொண்டிருந்தாய். ரொமான்ஸ், சோகம், வீரம், ருத்ரம் போன்ற நவரசங்களும் ஒவ்வொரு படத்தில் எட்டு பாடலாக அமையும் என்று… அது போல் இது போல் டான்சிங்?’

‘இது குடும்பப் படம். இது சூப்பர் மேன் பற்றியது. இந்தியாவில் “தெய்வம் மனுஷ ரூபம்” என்னும் தொன்மத்தை பின்பற்று முருகரை அடியொற்றி “கந்தசாமி” என்று யூ செர்டிஃபிகேட்… அதான் G for General Audiences அத்தாட்சி முத்திரையுடன் வெளியான படம்.’

இந்த முறை அவள் ம்ம்ம்ம்.

‘இதென்ன ரோட்டில் யாருமே இல்லை. வழிப் போக்கர்கள் கூட டீக்கா இருக்காங்களே!’

‘கஜினி; அவனுக்கு அஞ்சு நிமிஷம்தான் உலகம் நினைவில் இருக்கும். அதன் பிறகு மறந்து போகும். மெமண்டோ பார்த்திருப்பியே? அதன் முன் தோன்றிய தமிழன். நீ குந்தர் கிராஸ் மாதிரி. ரொம்பக் கேள்வி கேட்கிறே. உனக்கு ஒரு சமூகமே நொந்து நூடில்ஸாய் இருக்குனு புரிய வாய்ப்பேயில்ல. கலைகள் எங்க நாட்டில் இருக்கக் கூடாதா? உனக்கு இது சதைக் காட்சிசாலை. எங்களுக்கு நிர்வாணா!’

தெம்பாய் இன்னொரு நாப்கின் எடுத்து துடைத்தெறிந்தோம்.

ரத்த சரித்திரம் – How it narrates the Story of BJP vs Congress?

இந்தப் பதிவுக்கு இகாரஸ் பிரகாஷ் எழுதிய ஆயிரத்தில் ஒருவன் விமர்சனம் ஊக்கம் தந்தது.

படத்தின் துவக்கத்தில் வரும் உரிமைதுறப்பு: ‘இந்தப்படத்தில் வரும் சம்பவங்கள் கற்பனையே’
பிறகு துவங்கும் படத்தின் சற்றே பெரிய எழுத்தில் வரும் டைட்டில் கார்டு: ”நிஜத்தில் நடந்த கதை”

என்ன கதை?

காந்தி சிலையுடன் காட்சித் துவக்கம். ஏன்?

ஆனந்தபுரத்தைத் திருப்பி போட்டால் தண்டி. அஹிம்ஸையின் மறுபக்கமாக அரசியல் செய்கிறார் நாகேந்திர மூர்த்தி (ஜின்னா & பிரிட்டிஷார்).

இவரது வலது கரமாக விளங்கும் வீரபத்ரனை (பாரதம்) பெரிதும் நம்புகிறார். விவசாய பாட்டாளிகளுக்காக (பாரதியவாசிகள்) உண்மையாக பாடுபடும் மக்கள் பிரதிநிதி.

இந்தக் கூட்டணியை விரும்பாத நாகமணி (ஜவகர்லால் நேரு) இந்தியாவைக் கலைத்து இரண்டாகப் பிரிக்கிறார். மக்களின் ஆதரவு ஒருங்கிணைந்த பாரதத்திற்கு ஏற்படுகிறது. இதனால் ஜின்னாவும் நேருவும் ஆங்கிலேயரும் இணைந்து வீரபத்ரனை, அவரது நம்பிக்கையான ஆளை (ஹிந்து – ஆர்.எஸ்.எஸ்.) வைத்தே தீர்த்து கட்டுகின்றனர்.

தவறான ஆட்களின் கோள்மூட்டுதலால் அதுவரை காத்து வந்தவரையும் (இந்தியா) அவரது முதல் மகனையும் (காந்தி) கொலைசெய்கிறார்கள்.

கொல்லப்பட்டவரின் இரண்டாவது மகன் (இந்து முஸ்லீம் பிரிவினையை சொல்வதற்காக இரண்டாவது என்னும் குறியீடு) அதற்காக ஒரு பழிவாங்கல் கதையை தன் அரிவாளால் எதிரிகளின் ரத்தத்தால் எழுதுகிறான். அது மாத்திரமல்லாது தனக்கு எவருமே எதிரிகளே இருக்கக்கூடாது என்று ஒரு ஆபரேஷன் திட்டம் (எமர்ஜென்சி) செய்து அனைவரையும் கொல்வதற்கு ஏற்பாடு செய்கிறான்.

அரசியல் அவனை (காங்கிரஸ்) அரவணைக்கிறது.

எதிரிகளைத் தவிர்த்து பிற பொதுமக்களுக்கு அவன் நியாயமாகவே நடந்துகொள்கிறான் போலத்தான் தெரிகிறது.

நடுவில் பிரதாப்பின் மனைவியாக ராதிகா ஆப்தே ராஜீவ காந்தியை அரசியலை விட்டு ஒதுங்கி நிற்கவைக்கும் சோனியா.

சூப்பர் ஸ்டாராக அரசியலில் குதித்தவர் சிவராஜ். (சத்ருஹன் சின்ஹா – அமெரிக்கா) கோகோ கொலாவாக தண்டிபுரத்தில் நுழையும் அவரை வன்முறை வரிகள் கொண்டு, சட்ட வெடிகுண்டு வீசி துரத்தியடிக்கின்றன.

இவர்களை எதிர்க்க யார் சரியான ஆளாக இருக்க முடியும் என்று அவர் யோசிக்கும் போது கண்ணில் படுபவன் மன்மோகன் சிங் + நரசிம்மராவ். உலகமயமாக்கி, பொருளாதார வல்லுநராக்குகிறது.

திருப்பமாக அவனைப்போலவே அவனால் கொல்லப்பட்ட அரசியல்வாதியின் மகன் (பாரதீய ஜனதா கட்சி) உருவெடுக்கிறான். எந்தச் சமாதானங்களுக்கும் உட்படத் தயாராகயில்லாத வெறி (அயோத்தியா ராமர் கோவில் + பாப்ரி மசூதி இடிப்பு) நிறைந்ததாக இருக்கிறது அவன் நோக்கம். வளர்ந்து நிற்கும் இவனை பழிதீர்ப்பது அவனுக்கு கடினமான வேலையாக இருந்தாலும் சில தோல்விகள், போராட்டங்களுக்குப் பின் நினைத்ததைச் சாதிக்கிறான்.

தொடர்புள்ள பதிவுகள்:

1. அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation
2. சந்திரமுகி க(வ)லையா?

விமர்சனம்:
1. பிச்சைப் பாத்திரம் – சுரேஷ் கண்ணன்
2.
ஆதிமூலகிருஷ்ணன்

State of the Union – Obama Speech (2010)

1. Bush has a short one. Sarkozy has a long one. Cher does not use hers. What is it?

2. Is it concession speech? 31 million uninsured; 45,000 deaths annually due to lack of health insurance, according to Harvard study. #SOTU

3. Keeping a poker face & sitting with starry eyes (or dismissive toned) for 90 minutes is no easy job. Kudos to Chief Justices, Joint Chiefs.

4. Obama mentions Dick Cheney with ‘schoolyard taunts’. “Let’s put aside the schoolyard taunts about who is tough.” #SOTU

5. Obama to GOP naysayers: “Just saying no to everything might be good for politics; but that is not leadership” is refreshing. #SOTU

6. Last year’s #SOTU – Health, energy, education – the new new deal; This time all of them were there with boldfaced deficit & debt reduction

7. Republicans stiffness with anything Obama is gently chided with mention of ‘not appreciating the speech even when he talks abt Job creation’

8. No axis of evil; no war on terror declaration; not even Islamic terrorism. boring SOTU speech by president is substancy & principled.

ஞாநி: சந்திப்பும் பேச்சும்

ஞாநி எனக்கு தற்செயலாகத்தான் அறிமுகமானார். ‘கண்டதை சொல்கிறேன்‘ என்னும் ஜெயகாந்தனின் பாடலில் மயங்கி அதன் இரு அர்த்தங்களுக்காகவும் என் தலைப்பாக வைத்து 2003ஆம் ஆண்டில் வலைப்பதிவுக்கு தலைப்பாக்கினேன். கொஞ்ச நாள் கழித்து பழைய ‘இந்தியா டுடே’க்களை தமிழகம் சென்றபோது புரட்டினால் அதே தலைப்பில் ‘ச்’ கூட்டி ஞாநியும் பத்தி எழுதியிருந்தார்; எழுதி வந்தார்.

அட… அபாரம்! சேம் ப்ளட்!! என்று கிள்ள வைத்தார்.

கொஞ்சம் படித்த பிறகு அவர் நம்மைப் போல் அல்ல, ‘நேர்மையான கொம்பன்’ என்று விளங்கியது. குருதிப்புனல் திரைப்படத்தில் கமல் சொல்வார்; இவர் எழுத்தில், செயலில், எண்ணத்தில் வாழ்ந்து காட்டுபவர். நடுத்தர வர்க்கத்தின் மனசாட்சியை தூங்க விடாமல் குடைச்சல் கொடுப்பவர்.

கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் டாக்டர் மாத்ருபூதம் ஜூனியர் ஆகியிருந்தார். ‘அறிந்தும் அறியாமலும்’ தொடர் பலருக்கு ‘புதிரா; புனிதமா’ பார்ட் டூ. கைமைதுனம், சொப்பன ஸ்கலிதம் முதல் குட்டிப் பாப்பாவுக்கு மலம் அலம்பி விடுவதின் சூட்சுமம் வரை படம் போட்டு வெளிச்சமாக்கி புரிய வைத்தவர். மருத்துவர் மாத்ரு பூதம் போல் காமெடி லபக்குதாஸாகவோ, வில்லன் அப்பாவாகவோ மாறும் வாய்ப்புகளும் மணி ரத்னத்தின் ‘இராவணன்’ மூலம் நிறைவேறும் சாத்தியக்கூறுகளும் இருக்கவே செய்கின்றன.

இனி… அவருடைய குறிப்புகளில் இருந்து…

பத்திரிகை, நாடகம், வீடியோ ஆகிய துறைகளில் முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் ஞாநியை பல தடைகளை மீறித் தொடர்ந்து இயக்குவது, மனித வாழ்வைத் தொழும் அனைத்தின் மீதும் உள்ள அக்கறையே.

வாழ்க்கை குறித்தும் நாடகம் குறித்தும் நடுத்தர வகுப்பில் நிலவும் போலி நம்பிக்கைகளை இனம் கண்டு களைய முற்படுவதே ஞாநியின் நாடகக் கொள்கையாகும்.

எப்போதும் யாருடனாவது உரையாடிக் கொண்டிருப்பதில் எனக்கு சிறு வயது முதலே விருப்பம் அதிகம். ஓயாமல் பேசிக் கொண்டிருப்பவனாகவே நான் என் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அறியப்படிருக்கிறேன். எனக்கு சிலை வைத்தால், ஒரு பெரிய வாயின் உருவமும், அதன் கீழே அறுந்து விழுந்து கிடக்கிற பல காதுகளையும் தான் சிலையாக வடிவமைக்க வேண்டும் என்பது நண்பன் வைத்தியின் பிரபலமான கிண்டல்.


தமிழ் படைப்பாளிகளில் மகாஸ்வேத தேவிகள் இன்று வரை இல்லை. வெகுஜன அளவில் 1965 & 1967 காலகட்டத்தில் நிகழ்ந்த மொழிப்போர் பற்றியே தமிழ்ப் படைப்பாளிகள் இதுவரை எழுதத் தூண்டப்படவில்லை என்கிற நிலையில் எண்பதுகளின் நக்சல்பாரிகள் மீதான ஒடுக்குமுறை போன்ற விளிம்பு நிலைப் போராட்டங்கள் பற்றி எழுதும் வாய்ப்பேது…

வன்முறையை துளியும் விரும்பாத எனக்கு, நக்சல்பாரிகளின் வழிமுறைகளுடனோ, அரசியல் பார்வைகள் பலவற்றுடனோ உடன்பாடு இல்லைதான். எத்தனைதான் சீரழிந்திருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்தின் மீது சராசரி குடிமக்களுக்கு இருக்கும் நம்பிக்கையில் எனக்கும் பங்குண்டு.


தீம்தரிகிட போன்ற சமூகத்துக்கு தேவையான கறாரான ஒரு இதழ் நின்று போவதற்குக் காரணம் நமது சமூகத்தில் அயோக்கியர்களும் முட்டாள்களும் இருப்பதாகும். அயோக்கியர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் அவர்கள் கையில் பண பலமும் அதிகார பலமும் இருக்கிறது. நல்லவர்கள் எண்ணிக்கை மிகப் பெரியதாக இருந்தாலும் அவர்களில் கணிசமானவர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

அரசியல் விமர்சனம் என்ற முத்திரை என் விருப்பத்தை மீறி என் மீது பலமாக விழுந்துவிட்ட காரணத்தால், நான் அக்கறை காட்டும் இதர பல விஷயங்கள் பற்றிய என் பார்வைகள் போதிய கவனம் பெறாமல் போயிருக்கின்றன:

  • நாடகம்
  • திரைப்படம்
  • ஆண் – பெண் உறவுகள்
  • பாலியல் கல்வி
  • திருமண முறை
  • இளைஞர்
  • மகளிர் நலன்
  • சூழல் பாதுகாப்பு

‘ஏன் உருப்படாத அரசியல்வாதிகள் பற்றி எழுதி உங்கள் நேரத்தையும் சக்தியையும் இதுவரை வீணாக்கிக் கொண்டிருந்தீர்கள்? இது போன்ற துறைகளில் இன்னும் அதிகம் எழுதியிருக்கலாமே’, என்று செல்லமாகக் கடிந்துகொண்ட வாசகர்கள் பலர்.

வாழ்க்கைத் திறன்கள் என்பதை நான் தனி நபர் முன்னேற்றம் சார்ந்ததாக மட்டும் பார்க்கவில்லை. அரசியல்வாதி, சினிமா படைப்பாளி, மருத்துவர், ஆடிட்டர், ஆசிரியர், எழுத்தாளர், அலுவலக ஊழியர் என்று சமூகத்தை பாதிக்கும் அனைத்துத் துறையிலும் ஆரோக்கியமான மாற்றங்கள் வருவதற்கு, நல்ல மதிப்பீடுகள் தழைப்பதற்கு நமக்குத் தேவைப்படும் பல்வேறு ஆயுதங்களில் வாழ்க்கைத் திறன்கள் முக்கியமானவை என்பது என் கருத்து.

நாடகத்தின் மீது அவருக்கு தீவிர காதலை ஏற்படுத்திய பள்ளி ஆசிரியர்கள் எம்.ஈ. ஸ்ரீரங்கன், ஜி. வேணுகோபால், கே.வீ. ஸ்ரீனிவாசன், முத்துகிருஷ்ணன், கல்லூரி ஆசிரியர் கிருஷ்ணசாமி (எ) கலைமணி ஆகியோருக்கு தன் நாடக வெளியீடுகளை சமர்ப்பிக்கும், அவரின் கனவுகளில் ஒன்று வருடம் முழுவதும் நாடகப் பயிற்சியும் நிகழ்ச்சிகளும் நிகழும் நாடக அரங்கம் ஒன்றைக் கட்டுவதாகும்.

முந்தைய பதிவுகள்:
1. ஞாநி: பயோடேட்டா « Snap Judgment
2. Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி « Snap Judgment
3. Gnani in Boston – 10 Pics « 10 Hot
4. Writer, Filmmaker & the Argumentative Tamilan Gnani in New York/NJ « 10 Hot

ஞாநி: பயோடேட்டா

முந்தைய பதிவு: ஞாநி

புத்தகங்கள்

பழைய பேப்பர்:  Collection of articles on current affairs.

மறுபடியும்: Collection of articles on current affairs.

பலூன்: நாடகம்

தவிப்பு: ஆனந்த விகடனில் வெளியான தொடர்கதை – நாவல்

கண்டதைச் சொல்லுகிறேன்: Collection of articles publishedin India Today Tamil edition

அய்யா:  Filmscript of five part serial on life of Periyar E.V.R.

கேள்விகள்: Interiews with public persons from different walks of life

மனிதன் பதில்கள்: Answers to readers’ questions published in Dinamani kadhir

நெருப்பு மலர்கள்: Articles about unknown and unsung women who shaped history

பேய் அரசு செய்தால்: Articles on current affiars

அயோக்கியர்களும் முட்டாள்களும்: Articles on culture, media and politics

? : Collection of articles on issues

அறிந்தும் அறியாமலும்:  On life education for adoloscents and parents

ஓ பக்கங்கள்:  (five volumes)

என் வாழ்க்கை என் கையில்: (on lifeskils)

தியேட்டர்

1976 –1977: founder member of கூத்துப்பட்டறை – Koothu-p-pattarai, a group formed to revive traditional tamil theatre form of kooth and to evolve a modern idiom of theatre from these roots.

1977: trained in theatre by Prof.S.Ramanujam and Malayalam playwright G.Sankara Pillai.

1978: founded ‘Pareeksha’ – பரீக்ஷா: theatre group to work among the urban middle class audiences of Madras.

1978: founded வீதி open space theatre group.

1980: trained in theatre by bengali theatre person Badal Sircar.

மேடை நாடகம்

Evam Indirajith, Michil, Boma , Bakhi Itihas ( all bengali plays by Badal Sircar translated into tamil)

கமலா (marathi play by Vijay tendulkar translated into Tamil)

Jadhugruhadaha ( bengali play by Ranjith Roy Chaoudhry translated into Tamil)

Another 20 original tamil plays by eminent tamil writers

  • Indira Parthasarathy,
  • N.Muthuswami,
  • Asokamithiran,
  • Sundara Ramaswami,
  • Jeyanthan,
  • Ambai C.S.Lakshmi,
  • K.V.Ramaswami,
  • S.M.A.Ram,
  • Aranthai Narayanan.

எழுதிய நாடகங்கள்

ஏன் ( on homosexuality) (1979)

பலூன் ( about a protest theatre group and the judicial system) (1981)

A Tamil play without a name ( about nameless and forgotten women activists of India in early 20th century, who struggled for rights to education and equality) for workshop production by students of women’s christian college(1999)

Written several one actor plays for both men and women.

மொழிபெயர்ப்பு

Exception and the rule by Bertolt Brecht

Harold Pinter‘s One for the road

J.B.Priestley‘s Inspector calls.

The caucasian chalk circle by Bertolt Brecht

Mother of 1084 by Mahaswetha Devi

பட்டறை

Conducted numerous workshops for children and college students.

Trained over 400 students of M.S. University, Tirunelveli, South Tamilnadu, over a period of two years, in basic skills of theatre. (1995- 1996)

Trained students of Women’s christian college, Madras and directed a workshop production with them. (1999 and 2001 )

Trained students of Bharathidasan university – two batches to prepare them for a tour of India – people and places under vision 2020 programme organised by Lions International. Conducted the tour  for them in 2006 when they met the President of India.

தொலைக்காட்சி & விழியம்

Scripted and directed several tamil television serials for Doordarshan, Madras. Best actress award for the serial விண்ணிலிருந்து மண்ணுக்கு (about a theatre group and a fallen filmstar) (1990)

Best dirctor, best serial and best production awards for the serial பிக்னிக் ( story: writer sujatha) from santhome communication centre.( this fiction serial is about child labour in garages)

Scripted and directed a docu- drama serial வேர்கள் on women freedom fighters of India for Doordarshan during the golden jubilee of Indian independence.( 1997)

Scripted and directed a docu- drama serial அய்யா on the life of rationalist and thinker Periyar EVR for Doordarshan during the 125th birth anniversary of the leader( 2004)

Scripted and directed about 20 video documentaries for M.S.Swaminathan research foundation and its project ACCESS. Subjects ranging from gender issues to bio villages to pre school education for children.

Video films ‘ Reminiscences of Kanuvai Gopal’ about a boy in a child care centre, and devils in the deep sea about problems of fish workers participated in the first international video festival on science and development at Tiruvananthapuram.

Video film ‘What are you Doing?‘ on gender issue selected for screening at the International documentary festival ( miff 2000)at Mumbai in February 2000.

Scripted and produced over 20 episodes of quiz and 10 episodes of children’s programme for GEC tamil channel.(1995)

Scripted and produced 60 minute teaching aid for teachers of early childhood eduction centres in seven languages , titled ‘ Let us learn to help them learn‘ (2001)

Scripted directed and produced two part serial ‘ஆனந்தி‘ for ஸ்டார் விஜய் டிவி (2009)

தொகுப்பாளர்

Compered the international film festival at chennai in 1990 for doordarshan.

Scripted and produced several interview programmes with different personalities for doordarshan and all india radio. Popular programmes include interview with artiste குஷ்பு, profiles on young film makers, on veteran music director கே.வி மகாதேவன்.

Presented news and music programme on FM chennai for m/s priyavision for one year.

Compered election analysis programmes in english for Asianet at chennai. Participated in election analysis programmes of தூர்தர்ஷன் over several elections.

திரைப்படம்

Founder of the one reel movement in colloboration with Pyramid Saimira group,  to show 10 minute films before main films in theatres aimed at introducing new themes and new talents to cinema.Directed and produced the first one reel ‘திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்?‘ featuring actors ரோகிணி and Neelson based on a short story by writer திலீப்குமார். ( december 2007)

Directed the second one reel movement film உள்ளேன் ஐயா featuring actor ‘தலைவாசல்’ விஜய் based on a short story by writer அன்பாதவன் ( february 2008)

Has started a movement for taking cinema directly to home, called கோலம் where the creator and connoisseur directly meet. (2009 august). First digital video movie விசாரணை to be released in July 2010.

இன்ன பிற

Produced several features for all india radio and doordarshan. Scored music for a television short film. Compered a radio programme for one year.conducted interviews with political leaders, film artistes, and scholars for doordarshan.

Translated live into Tamil public speeches of

  • V.P.Singh,
  • George Fernandes,
  • Nagabhushan Patnaik,
  • Asghar Ali Engineer,
  • Nikhil Chakravarthy and
  • Medha Patkar.

வெளிநாட்டு வருகைகள்

Visited Australia in 1994 for festival of India as a writer delegate sent by Government of India.

Visited Nepal in 1998 to attend a workshop on impact of satellite channels on South Asia.

Visistd Singapore and Malaysia in 2009.

Njaani visit to US: அமெரிக்காவில் ஞாநி

எழுத்தாளர் ஞாநி Author & columnist O Pakkangal njaaniஅமெரிக்கா பக்கம் எட்டிப் பார்க்கிறார். தற்போதையப் பயணத்திட்டம்:

ஜூன் 17 – வருகை
ஜூன் 24 வரை சிகாகோ, நயாகரா, கொலம்பஸ்
ஜூன் 25 முதல் 28 வரை – பாஸ்டன் / நியு இங்கிலாந்து வாசம்
ஜூன் 29 – ஜூலை 5 வரை: நியு யார்க், ஃபிலடெல்பியா;
ஜூலை 5 – 7: வாஷிங்டன் டிசி.
ஜூலை 11 – ஊர் திரும்புதல்

ஞானி இணையதளம் :: www.gnani.net

சிறு இன்ட்ரோ

தொலைக்காட்சியில் அவரின் ‘கண்ணாடிக் கதைகள்’ தொடருக்கு வெகுசன வரவேற்பு இருந்தது.

விகடன் குழுமத்திலிருந்து வெளியான ‘ஜூனியர் போஸ்ட்’ இதழை அவர்தான் பொறுப்பேற்றுப் பார்த்துக்கொண்டார்.

அவர் விகடனில் எழுதிய ‘தவிப்பு’ தொடர்கதை – புனைகதையா, நிஜ சம்பவத் தொகுப்பா என மயக்கம் தரும் அளவுக்குக் கற்பனையும் உண்மைச் சம்பவங்களும் பின்னிப் பிணைந்திருக்கும்.

கதாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், குறும்பட இயக்குநர், விமர்சகர், நாடகாசிரியர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர் ஞாநி.

கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம், ஸ்டாலினுக்கு பொறுப்புக்களை வழங்கலாம், ஒரு தந்தையாக கலைஞர், என்பது வயதை தொடும் ஒரு மனிதனாக கலைஞர் ஓய்வு எடுத்து கொள்ளலாம் என்று ஒ பக்கங்களில் எழுதியதால் ஆனந்த விகடன் அரண்டு போய் தொடரை நிறுத்தியது.

சிவாஜி (2007) படத்தில் சரக்கு இல்லை என்பதை ஆணித்தனமாக அடித்து கூறிய அஞ்சாநெஞ்சன். நடிகர் திலகம் சிவாஜியின் இடம் இன்று தமிழ்த்திரையுலகில் காலியாக இருப்பதாகவும் அதை நிரப்புவதற்கு கமலை விட விக்ரமிற்கே அதிக தகுதி இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

தைரியமாக தன் கருத்தை வெளியிடுவதில் ஞானிக்கு நிகர் ஞானிதான். ஒரு முறை ஏதோ ஒரு நடிகையின் சர்ச்சையில் எழுத்தாளர் சுஜாதாவே கருத்து சொல்ல பயந்து கொண்டு, நான் என்ன ஞானியா என்று சொன்னதாக நினைவு.


ஜெயமோகன் எழுதிய அறிமுகம்

தமிழில் நான் எப்போதுமே கவனித்து வாசிக்கும் இதழாளர்களில் ஒருவர் ஞாநி. நான் சின்னப்பையனாக இருந்த காலத்தில் நாடகங்கள் அழிகிறதா என்ற ஒரு விவாதம் குமுதத்தில் வந்தது. அதில் ‘ருத்ராட்சப்பூனைகளே !’என்று சீறி ஞாநி எழுதிய குறிப்பு வெளியாகியிருந்தது. அதுதான் நான் அவரைப்பற்றி படித்த முதல் தகவல். அதன் பின் இந்த முப்பது வருடத்தில் அவரை நுட்பமாகக் கூர்ந்து கவனிப்பவனாகவே இருந்திருக்கிறேன். அதன் பின் அவர் சங்கராச்சாரியாரை பேட்டிகண்டு எடுத்து வெளியிட்டது எனக்கு மிகவும் பிடித்த கட்டுரையாக இருந்திருக்கிறது.

ஞானியின் அரசியல் சமூகவியல் கருத்துக்களில் எனக்கு எப்போதுமே முரண்பாடுதான். அவர் தவறாகச் சொல்கிறார் என்று தோன்றுவதில்லை. மாறாக எளிமைப்படுத்திவிடுகிறார் என்று தோன்றும். சமூக இயக்கம் என்பது எப்போதுமே முழுக்கப் புரிந்துகொள்ள முடியாத முரணியக்கத்தின் விளைவு. வன்முறை இல்லாமல் அம்முரணியக்கம் நிகழ்மென்றால் அது வளர்ச்சிப்போக்காகவே இருக்கும் என்பது நான் கொண்டுள்ள இலட்சியவாத நம்பிக்கை. ஞாநி அந்த முரணியக்கத்தை காண்பதில்லை. கறுப்பு வெள்ளைகளில் நிற்கும் தீவிர நோக்கு அவருடையது. அந்த எளிமைநோக்குதான் அவரை ஈவேராவை நோக்கி இழுத்திருக்கிறது.

ஆனால் தன்னளவில் நேர்மை கொண்ட இதழாளர் என நான் அவரை நினைக்கிறேன். தன் கருத்துக்களுக்காக போராடக்கூடியவர். அதன் பொருட்டு எதையும் இழக்க தயாராக இருப்பவர். சலியாத சமூகக் கோபம் கொண்டவர். தமிழில் இன்றைய தலைமுறையில் அப்படி சிலரை மட்டுமே நம்மால் சுட்டிக் காட்ட முடிகிறது. ஞாநி நான் சொல்லும் பெரும்பாலான கருத்துக்களை எதிர்ப்பார். ஆனால் அவர் தமிழில் ஒரு தார்மீக சக்தி என்றே நான் எப்போதும் எண்ணி,சொல்லி வருகிறேன்.

தமிழில் அவ்வாறு சமூகக் கோபம் கொண்டவர்களாக காட்டிக் கொள்பவர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் தனிநபர்க் காழ்ப்பும் உள்ளடங்கிய சாதிக்காழ்ப்பும் மட்டுமே கொண்டவர்கள் என்பதை நான் பொதுத்தளத்தில் செயல்பட ஆரம்பித்த இந்த முப்பது ஆண்டுகளில் கண்டு சலிபப்டைந்திருக்கிறேன். ஞானி தனிப்பட்ட காழ்ப்புகள் அற்றவர். தனிப்பட்ட கோபங்களுக்கு தாவிச்சென்றாலும் உடனே குளிர்ந்துவிடுபவர்

எனக்கும் ஞாநிக்கும் சில பொது அம்சங்கள் கூட இருக்கின்றன. அவரைப்போலவே நானும் அசோகமித்திரனின் எழுத்துக்களின் தீவிர வாசகன். அவரை போலவே எனக்கும் பழைய போஸ்ட் கார்டு போல உடம்பெல்லாம் முத்திரைகள். ஞாநியை பார்ப்பனர் என்றும் [ இந்துத்துவர் என்றும் கூட !] பிற்போக்குவாதி என்றும் முத்திரை குத்தும் எழுத்துக்களை நான் சென்ற எத்தனையோ வருடங்களாக கண்டுவருகிறேன். அதை முன்வைப்பவர்கள் எவருமே எளிய அடிப்படை நேர்மை கூட இல்லாத அரசியல் ஆத்மாக்கள்

பெரும்பாலான சமயங்களில் ஞாநி முத்திரைகளுக்கு எதிராக அதீதமாக உணர்ச்சிவசப்படுவார். நேரடியாக அவர் எகிறுவதைக்கூட கண்டிருக்கிறேன். என்ன செய்வது, தமிழில் எழுதினால் இது நிகழாமலிருக்காது. நான் சிரிக்கக் கற்றுக் கொண்டுவிட்டேன். அவர் இன்னும் கொஞ்சம் புன்னகையாவது செய்யலாம்.

வாசகர்களுக்கு ஆர்வமூட்டும் அரசியல் சமூகவியல் விவாதங்களுக்காக அதை சிபாரிசு செய்கிறேன்.
www.gnani.net

மேலும்:

ஞாநி அவரது அடையாளமான நீளமான ஜிப்பா போட்டு கிளம்பினார். அந்தக்காலத்தில் அவர் ஜமுக்காளத்தால் ஆன கல்கத்தா ஜிப்பாதான் போட்டுவந்தார். இப்போது சேலைத்துணியால் ஆன வேறுவகை ஜிப்பா. இது இன்னமும் சிறியது, இரண்டு ஞாநிக்களுக்கு தாராளமாக போதும்.

ஞாநி மாதம் ஒருமுறையாவது வந்து அசோகமித்திரனைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனாலும் வழியை துல்லியமாகக் கேட்டு தெரிந்துகொண்டே இருந்தார். பொதுவாக நான் திருப்பங்களுக்கு ஒருமுறை வழி கேட்பவர்களையே கண்டிருக்கிறேன். நேர்கோட்டில்கூட அடையாளம் தேவைப்பட்டது ஞாநிக்கு. முழுக்க வழி கேட்டு சென்றபின் இறுதிப்பகுதி மறந்துவிட்டதனால் மீண்டும் அசோகமித்திரனிடமே வழி கேட்டோம்

ஞாநியை பலகாலமாக அறிந்தும் நெருங்கிப்பழக வாய்க்கவில்லை. ஆகவே ஒரு சந்தர்ப்பமாக அமையட்டுமே என அவரது வீட்டிலேயே தங்க முடிவெடுத்தேன். கே.கே.நகரில் பெரிய வளாகம் கொண்ட அகலமான வீடு அவரது. அதிக மரச்சாமான்கள் இல்லாத கூடத்தை நாடக பயிற்சியறையாகவே வைத்திருக்கிறார் ஞாநி.

ஞாநியின் முன்னாள் மனைவி பத்மா அவருக்கு உடல்நலமில்லை என்பதனால் வந்து தங்கி கவனித்துக்கொண்டிருந்தார்.

அங்கே கே.ஆர்.அதியமானைப் பார்த்தேன். ஞாநியுடன் இப்போது அவர்தான் நெருக்கமாக இருக்கிறார் என்று பட்டது. ஞாநியும் அவரும் கருத்தடிப்படையில் நேரெதிர் புள்ளிகள். அதியமான் தனியார்மயம்-வலதுசாரிப் பொருளியலின் பிரச்சாரத்துப்பாக்கி –பீரங்கியெல்லாம் ரொம்ப பெரிது. நடுவே சோதிடம் பற்றி என்னிடம் கேட்டார். நான் என் பிள்ளைகளுக்கு ஜாதகமே எழுதவில்லை என்றேன். ஏன் என்றார். எங்கள் குலத்தொழிலே ஜாதகம் எழுதுவது என்பதனால்தான் என்றேன்.

ஞாநியின் இல்லத்தில் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி உடல்நிலை தேறியிருக்கிறார். அஞ்சியோபிளாஸ்ட் பண்ணப்பட்ட எந்த ஒரு எழுத்தாளரையும் போல உற்சாகமாக அதைப்பற்றிப் பேசினார். அது தன் உடலை நுட்பமானதோர் இயந்திரமாகப் பார்க்கும் பரபரப்பை அவருக்கு அளித்திருக்கிறது என்று தோன்றியது. நன்றாகவே மெலிந்திருந்தார். பலவகையான நோய்கள் வழியாக கடந்துவந்திருந்தார். குடலில் காசநோய் தாக்கி கடுமையான மருந்துகள் வழியாக நலம் மேம்பட்டபோதுதாந் இதய அடைப்பு கண்டடையப்பட்டது.

ஞாநி நான் பார்த்தபோதெல்லாம் சோடாப்புட்டிக் கண்ணாடிதான் போட்டிருந்தார். அவருக்கு ஒரு கோபக்கார இளைஞர் அல்லது இளம்முதியவரின் தோற்றத்தை அது அளித்திருந்தது. இப்போது அந்தக் கண்ணாடி இல்லை. கண்ணில் காடராக்ட் வந்து அறுவை சிகிழ்ச்சை செய்த போது பழைய இயற்கை விழியாடிகளை தூக்கிக் கடாசிவிட்டு புதிய அளவான ஆடிகளை வைத்தார்களாம். ஆச்சரியமாக இருந்தது.

ஆனால் ஞாநி அவருக்கு வழக்கமான அதி உற்சாகத்துடன்தான் இருந்தார். தொட்டுத்தொட்டு அரசியல் இலக்கியம் இலக்கியஅரசியல் என்று பேசிக்கொண்டிருந்தோம். ஞாநி தன்னைப்பற்றிய வம்புகளைப் பேசுவதில்லை என்பதை இரண்டுநாட்களில் கூர்ந்து கவனித்தேன்.இறந்தகாலம் குறித்தும் அதிகமாகப் பேசுவதில்லை. பரீக்ஷாவின் கடந்தகாலம் குறித்தும் மிக அபூர்வமாகவே பேச்சு எழுந்தது. அவருக்கு வெவ்வேறு சமகாலப் பிரச்சினைகளிலேயே தீவிர ஆர்வம் இருந்தது.

மதியம் ஒருமணிவாக்கில் பத்மா சமைத்த விஜிடபிள்பிரியாணியையும் தயிர்சாதத்தையும் வட்டமாக தரையில் அமர்ந்து சாப்பிட்டோம். தனக்கு பொதுவாக தரையில் அமர்வதும் படுப்பதுமே பிடிக்கும் என்றார் ஞாநி. கட்டில்கூட உடல்நலம் மோசமானபிறகு வந்ததுதான். அவரிடமிருந்த ஒரு மரபெஞ்சுக்கு அவருடைய வயதே ஆகிவிட்டது என்றார் – ஆரோக்கியமாக இருந்தது.

நான்குமணிவாக்கில் திரும்பிவந்தபோது ஞாநியின் பரீக்ஷா நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். பெரும்பாலும் எல்லாரும் இளைஞர்கள்.ஞாநிக்கு தலைமுறை தலைமுறையாக நாடகநண்பர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். கல்பற்றா நாராயணன் கவிதை ஞாபகம் வந்தது, குழந்தைகள் எல்லாரும் ஜெயித்துப்போகிறார்கள், சரசம்மா டீச்சர் இப்போதும் ரெண்டாம்கிளாஸில்தான்.

திரும்பவந்தபோது எல்லாரும் சென்றுவிட்டிருந்தார்கள். ஞாநி உங்களை தேடினார் என்றார் பத்மா. உலகிலேயே மனைவியால் ஞானியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரே மனிதர் இவர்தான் என்று நான் சொன்னேன். இல்லல்ல நான் சங்கர்னுதான் சொல்லுவேன். இப்ப அடையாளம் தெரியணும்கிறதுக்காக ஞானீன்னு சொல்றேன் என்றார் பத்மா.

ஞாநி எங்களிடம் சாப்பிட்டாயிற்றா என்றார். தனசேகரும் பிறரும் கிளம்பிச் சென்றார்கள். நான் ஞாநியுடனும் பிறருடனும் ன் இரவு ஒன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தேன். சமகால அரசியல். சமகாலத்தின் பெரும்பண்பாடு என்பது எப்படியோ ஏதோ வழிகளில் சமசரம் செய்துகொள்வதாக ஆகிவிட்டிருப்பதை ஞாநி மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டினார். சமரசமின்மையின் தோல்வி மீதான கவற்சி சமகால இளைஞர்களில் குறைந்துவிட்டது என்றார். பின்னர் கண்ணயரும்போது பத்மாவும் இந்திராவும் பேசிக்கொண்டிருந்த ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது.


கீற்று :: Dheemtharikida | Gnani

மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது

1982ல் நான் சில நண்பர்கள் உதவியுடன் தொடங்கி, மூன்று இதழ்களுடன் நின்று போய், பிறகு 1985ல் மீண்டும் வெளியிட்டு ஏழு இதழ்களுடன் நின்று போன ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் வெளியிட விரும்புகிறேன்.

சொந்த முயற்சியில் பத்திரிகை நடத்துவது என்ற பரிசோதனையை 1987ல் வெளியிட்ட சென்னை நகரத்துக்கான ‘ஏழு நாட்கள் ‘ என்ற இதழுடன் நான் நிறுத்திக் கொண்டேன். ஒவ்வொரு முறையும் பத்திரிகை நன்றாக விற்பனையானது.(1982ல் முப்பதாயிரம் பிரதிகள் வரை விற்றோம்). கடை விரித்தோம் கொள்வாரில்லை என்ற நிலை இருக்கவில்லை. ஆனால் விற்ற பணத்தை வசூலிக்க முடியாமலும் போதுமான செயல்முறை மூலதனம் இல்லாமலும் முயற்சிகள் முடங்கிப் போயின.

இனி சொந்த முயற்சியில் பத்திரிகை வெளியிடுவது இல்லை என்று தீர்மானித்துக் கொண்டு அந்த முடிவை உறுதியுடன் பதினைந்து ஆண்டுகளாகப் பின்பற்றிவந்திருக்கிறேன். இப்போது ஏன் மறுபடியும் அந்தப் பரிசோதனையில் இறங்க வேண்டியதாகிவிட்டது? சிரங்கு பிடித்தவன் கை போன்ற மன அரிப்புகள் காரணம் அல்ல என்பதை 15 ஆண்டு பிடிவாதமே காட்டும்.

தீம்தரிகிட இருபது ஆண்டுகள் முன்பு தொடங்கப்பட்டபோது அத்தகைய முயற்சிகளுக்கான தேவை இருந்த நிலை இன்றும் மாறிவிடவில்லை என்பது பொதுவான காரணம். அதை விட முக்கியமான காரணம் கடந்த ஓராண்டு காலமாக நான் சந்திக்கும், உணரும் ஒரு மாற்றம். நான் எப்போதும் பெரிய பத்திரிகைகளில் வேலை செய்வதை என் ஜீவிதத்துக்கான வழியாகவும், கருத்து வெளிப்பாட்டுக்கான வழியாகவும் சேர்த்தே செய்துவந்திருக்கிறேன். வருமானத்துக்காக வேறொரு வேலை, கருத்து வெளிப்பாட்டுக்கு இன்னொரு சாதனம் என்ற நிலையில் நான் இருக்கவில்லை.

கடந்த ஓராண்டாக நான் சந்திக்கும் நிலை இதுவரை கடந்த 30 ஆண்டுகளில் நான் சந்தித்திராதது. கருத்துச் சமரசங்கள் செய்துகொள்ளாமல் எனக்கு முழு நேர வேலையோ பகுதி நேர வேலையோ தமிழ் மீடியா சூழலில் கிடைக்கும் வாய்ப்பு இல்லை. தமிழில்தான் இயங்குவது என்று 22 ஆண்டுகள் முன்பு மேற்கொண்ட முடிவை மாற்றிக் கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இதற்கு முன்பு எனக்கு முழுக் கருத்துச் சுதந்திரம் கொடுத்து நான் எழுத அனுமதித்த இதழ்கள் கூட இந்த ஓராண்டில் பல முறை என் கட்டுரைகளை, ஏன், கடிதங்களைக் கூட நிராகரித்தன. வெளியிட்ட ஓரிரு முறையும், சில பகுதிகளை நீக்கிவிட்டு வெளியிட நான் ஒப்புக் கொண்ட பிறகே வெளியிடும் நிலை.

இது பற்றிப் பலருடனும் பல முறை விவாதித்தபோது தெரிய வரும் உண்மை ஒன்றுதான். முன்னெப்போதையும் விட, இன்று மீடியாவில் கருத்துச் சுதந்திரத்துக்கான இடம் சுருங்கிக் கொண்டே வருகிற்து. இதற்குப் பல சமூக, அரசியல் காரணங்கள் உண்டு. சார்புகளை மீறிப் பல்வேறு கருத்துக்களும் குறிப்பாக, பொதுக் கருத்துக்களுடன் முரண்படும் கருத்துக்களும் வாசகர் முன்பு வைக்கப்பட வேண்டும் என்ற பார்வை மங்கிக் கொண்டே வருகிறது.

இந்தச் சூழலில்தான் ‘தீம்தரிகிட ‘ இதழை மறுபடியும் கொண்டு வர விரும்புகிறேன். முதல் இதழ் விழிப்பு உணர்வு தினமான ஏப்ரல் 1 அன்று வெளிவரவேண்டும் என்பது என் அவா. தொடக்கத்தில் இரு மாத இதழாக தீம்தரிகிட ஓராண்டில் ஆறு இதழ்கள் வெளிவரும். ஆண்டு சந்தா: ரூ 100/-.

வெகுஜன இதழ்களின் வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத் தேடல்களுக்கான உணவாக, உந்துதலாக ‘தீம்தரிகிட ‘ இருக்க வேண்டும் என்ற ஆதி நோக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. சிற்றிதழ்களின் நோக்கம், செய்ல்பாடுகளிலிருந்து இது வேறுபட்டது என்பதால் முரண்பட்டது அல்ல.எந்த நல்ல விஷயமும் பலரையும் சென்றடைய வேண்டும்; நல்ல விஷயங்களை நாடுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே என் நிரந்தரமான நோக்கம்.கதை, கவிதை, அரசியல், சமூகம், திரைப்படம், நாடகம், இசை, கலைகள் என்று சகல துறைகளிலும் எப்போதும் போல ‘தீம்தரிகிட ‘ அக்கறை செலுத்தும்.

இதை சாத்தியப்படுத்த, தொடக்கத்திலேயே குறைந்தபட்சம் ‘தீம்தரிகிட ‘ இதழுக்கு ஐநூறு சந்தாதாரர்களாவது தேவை. நீங்களும் உங்கள் முயற்சியினால் இன்னும் சிலரும் சந்தாதாரர்களானால், இது சாத்தியம்தான். ஐநூறு சந்தாதாரர்கள் மார்ச் 15க்குள் கிடைக்காவிட்டால் தீம்தரிகிட இதழை வெளியிடும் என் திட்டம் தளர்ச்சியடையும். அந்த நிலைமை ஏற்படாமல் தவிர்ப்பதில் உங்கள் பங்கை நீங்கள் அவசியம் ஆற்றவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னுடனும் ‘ தீம்தரிகிட ‘ இதழில் வெளிவரும் கருத்துக்கள், படைப்புகளுடனும் நீங்கள் சில சமயம் உடன்படலாம்; சில சமயம் முரண்படலாம். ஆனால் தமிழின் வெகுஜன வாசகர்களின் தீவிரமான அறிவு, ரசனைத்தேடல்களை ஊக்குவிக்க, வளர்க்க உதவுகிற ஒரு களம் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால், தயவு செய்து இந்த முயற்சியை ஆதரியுங்கள்.அடுத்த ஓரிரு வாரங்களில் உங்களுடைய, உங்கள் நண்பர்களுடைய மணியார்டர்கள் வந்து குவியட்டும். அவற்றை அஸ்திவாரக்கற்களாகக் கொண்டு நானும் நண்பர்களும் தீம்தரிகிட இதழை, கோபுரமாக இல்லாவிட்டாலும் சிறு குடிலாகவேனும் கட்டுவோம்.

‘தீம்தரிகிட ‘ இரு-மாத இதழ்.
தனி இதழ் விலை: ரூ 15.
ஆண்டுக்கு ஆறு இதழ்கள்.
ஆண்டு சந்தா:ரூ. நூறு.
வெளிநாடுகளுக்கு: USD 20 (அ) ரூ 1000.


திண்ணை

1. ராஜ் டி.வி Vs தயாநிதி மாறன் : உள் நோக்கம் ?

2. இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் :

a. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? – ரெங்கதுரை
b. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை – மாயவரத்தான்

3. நூலகம்

4. ’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

5. மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

6. வீரப்பன் மட்டும்தான் கிரிமினலா ?

7. எம் எஸ் :அஞ்சலி

8. கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ் :: சுஜாதாவும் ஷங்கரும் – (இந்தியா டுடே செப்.17,2003)

9. பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

10. காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

11. என்னைப் போல் ஒருவனா நீ? – சினிமா விமர்சனம் : உன்னைப் போல் ஒருவன்

12. ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம் :: காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரர்

13. இலக்கியவாதிகளையெல்லாம் சினிமாவுக்கு வாருங்கள் என்று அழைக்கிறார் கமல்ஹாசன்.

14. கேள்வி -2 தமிழன் அறிவைத் தடுத்தாரா பெரியார் ?

15. கல்பாக்கம்

16. குடந்தை குழந்தைகள் கொலைக்கு யார் பொறுப்பு ?

17. ரஜினிக்கு ஒரு பகிரங்க மடல்

18. அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

19. தமிழ் அரசியல்

20. உயிர்ப்பலியும் பெரியாரும்

21. டயரி – வி.பி.சிங்

22. பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

24. முரசொலி மாறன்

25. பாசமா ? பாசிசமா ? – தி.மு.கவும் பா.ம.கவும்

26. இன்னொரு ரஜினிகாந்த் ? – விஜயகாந்த்

27. மஞ்சுளா நவநீதனுக்கு இறுதியாக.


Quotes

1. கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது இளைஞர்களின் பிறப்புரிமை.

கருத்துகள்

1. ஞாநி Vs. சா.நி. – ரவிபிரகாஷ்

2. நித்தியும் ரஞ்சியும் சாருவும் பின்னே ஞாநியும்…

3. பூச்செண்டு – ஞாநி விளக்கம்

4. ‘ஓ பக்கங்கள்’ – பாகம் 3 :: Pa. Raghavan

olla podrida

ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது. ஆனால், ஒரு மாசம் மட்டுமே ஆகியிருக்கிறது. தமிழ்மணம் பக்கம் சென்று ரெண்டு மாசம் இருக்கும் போல் தோன்றியது.

நித்தியானந்தாவிற்கு டாப் 10 போட கொள்ளை ஆசை. நேரம் அமையவில்லை. இப்பொழுதும் போடலாம். அட்லீஸ்ட் ட்விட்டரில் கிடைத்த சம்பாஷணைகளில் கவர்ந்ததைத் தொகுக்கலாம்.

ரோமன் கத்தோலிக்க மதகுருமாரால் மேற்கொள்ளப்பட்ட சிறார் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு வணக்கத்துக்குரிய பிதா, பாப்பரசர் பெனடிக்ட்டும் உறுதுணை நின்றிருக்கிறார். திருச்சபையின் திரைமறை திருப்பலி களப்பணி.

அரசியல்வாதிக்கு அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்றால் துணிச்சல் வரும். ஒபாமா போன்றவருக்கு அதுவே அபயம் என்றால் ஜிம் பன்னிங் (Jim Bunning) போன்ற சிலருக்கு அசட்டுத் துணிச்சல். மறுமுறை வாக்கு கோரினால் நிச்சயம் தோல்வி என்பதால் அதீத நிலைப்பாடா? அல்லது டெமொக்ரடிக் ஆளுங்கட்சியே காசு கொடுத்து கூவச் சொல்லியதா?

கிறித்துவிற்கு முன் பிறந்த போப்பை விமர்சிக்கும் இந்தப் பதிவில் 1907ல் இயற்றப்பட்டது நீங்குவது பாராட்டுவதுதானே பொருத்தம்?

இல்லை… தேர்தல் நிதிக்கு தரப்படும் பணம் எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும், கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஒபாமாவிற்கும் ஹில்லரிக்கும் இதனால் பெரும்பாதிப்பு இருக்காது. ஆனால், அமெரிக்காவில் பென்ச் நீதிபதிகளுக்கும் தேர்தல் உண்டு. அவர்கள் உள்ளூர் வழக்கொன்றில், நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பளித்திருப்பார். அவர், மறுபடி வாக்காளரை சந்திக்கும்போது, அதே நிறுவனம் அசுர பலத்துடன் மீடியாவில் எதிர்மறை விளம்பரத்தை சுழலடிக்கும். போட்டி வேட்பாளருக்கு பற்றுடன் வரவு வைக்கும்.

இதே போல் மாநில சட்டமன்றத்திலும், பெருவணிகர்களைப் பகைத்துக் கொள்ளும் சட்ட மசோதாக்களை ஆதரிக்க அரசியல்வாதிகள் அஞ்சும் சூழல் தோன்றும். இன்று வணிக ஸ்தாபனத்திற்குப் பிடிக்காத சட்ட வரைவை நிறைவேற்றினால், நாளைய பொழுதில் பில்லியன் டாலர் கணக்கில் தீர்த்துக் கட்டப்படுவோம் என்பது அவருடைய லிபிதம்.

ஒவ்வொரு அரசியல்வாதியாக, ஒவ்வொரு நீதிபதியாக, ஒவ்வொரு தேர்தலாக இந்த மாதிரி செலவழிக்க வேண்டாம். வணிக நிறுவனத்தின் பலம் என்பது அல் க்வெய்தாவின் ஆள்சேர்ப்பு மாதிரி. எங்கேயாவது ஒரு வெடிகுண்டு போதும். பூரா பாகிஸ்தானும் தீவிரவாதிகளின் தேசம் மாதிரி தோன்றும். அதே போல், எங்காவது ஒரு சாம்பிள் போதும். ‘அவனுக்கு நேர்ந்த கதி, உனக்கும் ஆவணுமா?’ என்றே மிரட்டி, அனைவரையும் வழிக்குக் கொணரலாம்.

தொடர்புள்ள இடுகை: ஒரு பில்லியனைத் தாண்டிய 2008 தேர்தல் வசூல்! « US President 08

Democrats Far Outspend Republicans On Field Operations, Staff Expenditures – WSJ.com

In 2004, the Democratic Party spent nearly $120 million on advertising in support of then-nominee John Kerry, compared to only $500,000 this fall

தலைப்புக்கு என்ன அர்த்தம்?

1. An incongruous mixture.
2. A spicy stew of seasoned meat, vegetables, chickpeas, etc.

ETYMOLOGY: From Spanish olla podrida (literally, rotten pot), from olla (pot) + feminine of podrido (rotten).

USAGE: “Alice Randall’s collection of cookbooks is formidable, an olla podrida of Junior League and soul food cookbooks and classics like The Joy of Cooking.”
– Penelope Green; What Matters Most; The New York Times; Sep 16, 2009.

துவக்கத்தில் எதற்கு தமிழ்மணம் பேச்சு? அன்றாடம் வராவிட்டால், கவர்ந்திழுக்கிற மாதிரி தமிழ்மணத்தில் எதுவுமேயில்லை. திடீரென்று வந்து விழுபவருக்கு சென்னைக்குப் போன அமெரிக்கன், சேனல்களைத் தாண்டிய கதையாக, டிவியை அணைக்கவைக்கிறது. ‘சூப்பர் சிங்கர்’ எங்கே, துணையெழுத்தோடு ‘ராமாயணம்’ அங்கே என்று காட்ட வேண்டாமோ?

காலச்சுவடு கண்ணன்: சந்திப்பு + அறிமுகம்

காலச்சுவடு கண்ணனை சந்தித்தது குறித்து எழுதுவதற்காக சேமித்தவை.

காலச்சுவடு காலாண்டிதழாக வெளிவந்து கொண்டிருந்தது. வருடத்திற்கு நான்குமுறை மட்டுமே வரும் சஞ்சிகையில் சமகால விஷயங்கள் ஆறி அவிந்துபோன பிறகுதான் விவாதிக்க இயலும். பின்னர், இரு மாதங்களுக்கொருமுறை வெளியானது.

உலக்த்துத் தமிழர்களை கை கோர்க்கவைத்து, பரஸ்பர அறிமுகத்துடன் நிற்காமல், ஒருசேர திரட்டி ‘தமிழினி 2000’ கொண்டாட்டம். ‘தமிழ் இனி 2000′ என்னும் மாபெரும் திருவிழாவை ஒருங்கிணைத்து காலச்சுவடு சார்பாக நடத்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை.

மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் அந்த மொழியாக்கத்தை நூலாக வெளியிடும் பதிப்பகங்களுக்கு பல வகையில் ஆதரவு தருதல், நிதியுதவி செய்தலை பல்வேறு நாடுகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. இதில் அயர்லாந்தும் விதிவிலக்கல்ல.

இதைப் பற்றி முதலில் தெரிந்துகொண்டு என்னை ஊக்குவித்தவர் “காலச்சுவடு’ கண்ணன்.

இவரைத் தெரியுமா?: காலச்சுவடு கண்ணன்

எனக்குத் தெரிந்து சிறுபத்திரிகை நடத்துவது என்பதோ, நல்ல இலக்கிய நூல்கள் வெளியிடும் பதிப்பகம் நடத்துவது என்பதோ தற்கொலைக்குச் சமமாகக் கருதப்பட்ட ஒரு காலம் உண்டு. பல எழுத்தாளர்கள், தாமே பதிப்பகம் நடத்தி, மனைவி நகைகளை அடகு வைத்து, புத்தகம் போட்டு, விற்பனை ஆகாமல், நூலாம்படை சேர்ந்து, எலிக்கும் கரப்புக்கும் தின்னக்கொடுத்தக் கதைகள் ஏராளம்.

மற்றொரு புறம் தி.நகர் பதிப்பகங்கள் செளகரியமாகத் தான் இருந்து வந்திருக்கின்றன. என்ன ஒன்று, எழுத்தாளர்களுக்கு மட்டும் ராயல்டி கொடுப்பதில் கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். இல்லை புத்தகம் போட்டுத் தருவதே, அந்த எழுத்தாளருக்கு, பதிப்பகம் செய்யும் மகா கெளரவமாகக் கருதப்படும்.

இப்போதும், பல பழைய இலக்கியவாதிகள், தாம் புத்தகம் போட்டு, பத்திரிகை நடத்தி, இலக்கியச் சேவை செய்ததாகவும், ஆனால், ‘தமிழ் சமூகத்தை இன்னும் ஆயிரம் ஆண்டுகளானாலும் திருத்தவே முடியாது’ என்றும் சபித்தபடி இருப்பார்கள். இதுபோல் யாராவது பேசத் தொடங்கினாலே நான் மெல்ல அங்கிருந்து விலகிவிடுவேன். கோபம் நெஞ்சு வரை கொப்பளிக்கும்.

உண்மையில், இவர்கள் எல்லாரும் நல்ல புத்தகம்தான் போட்டார்கள். அதில் தவறில்லை. ஆனால், விற்பனை செய்தார்களோ?

எனக்குத் தெரிந்து, விற்பனை என்பதோ, இலக்கியத்தில் இருந்து பணம் சம்பாதிப்பது என்பதோ இழுக்கான ஓர் செயல் என்ற எண்ணம் சிறுபத்திரிகை சூழலில் ஆழ ஊன்றிப் போன கருத்து. அதனால்தான், பணம் தரக்கூடிய பெரிய பத்திரிகைகளுக்கு எழுத்தாளர்கள் எழுதினால், பலரால் தாங்கிக்கொள்ள முடிந்ததில்லை. சீரழிவுக் கலாச்சாரத்துக்குத் துணை போய் விட்டதாக ஒரு புலம்பல் அல்லது விலக்கல் தலைதூக்கும்.

மற்றொரு பக்கம் வேறொரு நிலை. இன்றைக்கும் தி.நகர் பதிப்பகத்தார்களில் பலர், இலக்கியம் பற்றி கொண்டிருக்கும் அபிப்பிராயங்கள் அவ்வளவு நல்லதாக இல்லை. ‘அது படிச்சுட்டு வீசறதுதானே சார்’ என்ற எண்ணத்தோடுதான் புத்தகங்கள் தயாரிக்கிறார்கள். அதனால்தான், சாணிக் காகிதத்துக்கும் கிரிம்வோவுக்கும் நடுவே ஒயிட்ஓ என்றொரு ஜல்லா காகிதத்தை உபயோகிக்கத் தூண்டுகிறது. நாலு தரம் வேகமாகப் பிரித்துப் படித்தால், நிச்சயம் தையல் பிரிந்துகொள்ளும்.

இதுதான் எனக்குத் தெரிந்து 10 ஆண்டுகள் முன்புவரை கூட இருந்த நிலை.

பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. நல்ல இலக்கியத்தையும் அதனைப் படிக்கும் வாசகனிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியும் என்ற நம்பிக்கையைத் தோற்றுவித்தது காலச்சுவடு. பெரும்பாலும், சிறுபத்திரிகை என்பது 300 முதல் 500 படிகள் வரை அச்சடித்து, வேண்டியவர்களுக்கும் சந்தாதாரர்களுக்கும் அனுப்பிவிட்டு, மிச்சத்தை மூட்டை கட்டி வைத்துக்கொள்வார்கள். அல்லது சில புத்தகக் கடைகளுக்கு அனுப்பிவிட்டு, ஒரு வருடமானாலும், பத்திரிகை விற்ற பணத்தை கேட்கவோ, அதற்கான ஒழுங்குமுறையான கணக்கோ வைத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் (அப்படியே கேட்டாலும் விற்ற பணம் கடைகளில் இருந்து திரும்ப வருவது என்பது குதிரைக்கொம்பு என்பது வேறு விஷயம்!)

புத்தகப் பதிப்புக்கும் இதே நிலைதான்.

எல்லாவற்றிலும் மாற்றத்தைக் கொண்டு வந்தது காலச்சுவடு. ஒழுங்கான கணக்கு வழக்கு, முறையான மார்க்கெட்டிங், விற்பனை முகவர் இல்லாத ஊர்களில் நல்ல வாசகரையோ எழுத்தாளரையோ முகவராக்குவது, மேலும் தொடர்ந்த ஃபாலோஅப். பத்திரிகை, பதிப்பகம் என்பதைத் தொழிலாகப் பார்த்தது காலச்சுவடு. வெறும் ஆர்வம் என்ற நிலைக்கு மேல், அதைத் தொழிலாக நினைத்து அணுகுவது எப்படி என்பதைக் காலச்சுவடுவிடம் இருந்துதான் கற்கவேண்டும்.

அதேபோல், புத்தகத்துக்கு அதற்குண்டான மரியாதையை ஏற்படுத்தித் தந்ததும் காலச்சுவடுதான். நல்ல தாள், அழகான அச்சு, தராமான தயாரிப்பு, கெளரவமான பார்வையை உருவாக்கிக்கொடுத்தது காலச்சுவடு என்பதில் எனக்கு இருவேறு கருத்து இல்லை.

காலச்சுவடு காட்டிய அந்த பாதைதான், இன்று செழித்துப் பெருகியிருக்கிறது. தமிழினி, சந்தியா பதிப்பகம், உயிர்மை பதிப்பகம், மருதா, கிழக்குப் பதிப்பகம் எல்லாம் தரமான தயாரிப்பை மேற்கொள்ள, காலச்சுவடே முன்னோடி. தரமான புத்தகங்கள் இன்று அதிகம் விற்பனையாகின்றன என்று ஒவ்வொரு பதிப்பகமும் நல்ல எழுத்தாளர்களைத் தேடிச் சென்று எழுதி வாங்கி வெளியிடுகின்றது.


காலச்சுவடு எந்தத் திசையில் செல்கிறது? – சிங்கப்பூர் காலச்சுவடு வாசகர் சந்திப்பு

கண்ணன்: காலச்சுவடு ஒரு நபர் நடத்திவரும் பத்திரிகையல்ல. ஒரு குழு இருக்கிறது. மாதம் ஒரு தடவை கூட்டம்போட்டு, இதழ் பற்றி விவாதிப்போம். நான் பதிப்பாளர் -ஆசிரியர் என்கிற முறையில் முடிந்த மட்டும் இக்கூட்டங்களில் கலந்துகொள்கிறேன். தலையங்கத்தில் வரும் கருத்துகளை எனது கருத்துகளாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஆசிரியர் குழுவின் கருத்துதான் அது. காலச்சுவடு தமிழிலில் பெண் எழுத்தாளர்களுக்குகஙி கொடுக்கக்கூடிய இடம்பற்றிசஙி சொன்னார். அது பெருமளவு உண்மைதான். நிறையபஙி பெண் எழுத்தாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள், சிலர் கவனம் பெற்றிருக்கிறார்கள். உமாமகேஸ்வரியெல்லாம் காலச்சுவடுக்கு முன்பாககஙி கணையாழியில் நிறைய எழுதியிருக்கிறார்கள். கனிமொழி காலச்சுவட்டில் எழுதுவதற்கு முன்பே அவரது “கருவறை வாசனை” வெளிவந்துவிட்டது. கனிமொழி 2000க்குப் பிறகுதான் காலச்சுவடுக்கு எழுத ஆரம்பித்தார்கள். திலகபாமாவின் மறுப்புரை காலச்சுவடுக்குக் கிடைத்திருக்கிறது. அனேகமாக, அடுத்த இதழில் வந்துவிடும். திலகபாமா ஏன் அப்படிக் கருதினாரென்று தெரியவில்லை. எடிட் பண்ணாம ஒரு பத்திரிகை நடத்தவேண்டிய அவசியமில்லை. அதேபோல மாற்றுக்கருத்துக்களைத் தணிக்கை செய்ய வேண்டிய அவசியமுமில்லை. ஆனால் பக்க வரையறை என ஒன்று இருக்கிறது. வாசகர் கடிதத்திற்கென்று ஆறேழு பக்கங்கள்தான் ஒதுக்க முடியும். ஆகவே, எல்லாவற்றையும் போடுவது என்பது சாத்தியமேயில்லை. ஆனால் எல்லா இதழ்களிலும் மாற்றுக்கருத்து என்பது பதிவாகிக்கொண்டேதான் இருக்கிறது.

கண்ணன்: ஒரு பத்திரிக்கையில விமர்சனங்கள் வரும்போது, அதை அந்தச் சூழலுக்கு வெளியே இருப்பவர்கள் எந்த அளவு புரிந்துகொள்ள முடியும்னு தெரியலை. விமர்சனங்கள் மூலமா மதிப்பீடுகள் வளருது. அப்புறம் சூழல்ல ண்ஸ்ரீர்ய்ஆக இருக்கிறவங்க, கருத்துகளைப் பரப்புறவங்க, இவங்களைப்பத்தி எல்லாம் விமர்சனங்களும் விவாதங்களும் முக்கியம்.

அசோகமித்திரன் லாபி பண்ணித்தான் பரிசு வாங்கினாரா என்பது முக்கியமில்லை. ஆனால், லாபி பண்ணாம எந்தப் பரிசும் உலகில் வழங்கப்படுவதில்லை. இதை எதிர்மறையாக மட்டும் பார்க்க வேண்டியதில்லை. ஒரு எழுத்தாளருக்கு அவரது வாசகர்கள் லாபி பண்ணலாம், பதிப்பாளர் லாபி பண்ணலாம், இலக்கிய நிறுவனர்கள், ஊடகங்கள் லாபி பண்ணலாம். ஆனா எதுக்காகப் பண்றோம், யாருக்காகப்பண்றோம், ஏன் பண்றோம்ங்கிறது முக்கியம். ஒரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஜாதிக்காகப் பண்றதுதான் ஆராயப்படவேண்டியது.

அசோகமித்திரன் தமிழ்ல மிக முக்கியமான எழுத்தாளர். ஆங்கிலத்தில் அவரது கதைகள் மொழிபெயர்க்கப்பட்டு, நல்ல கவனம் கிடைச்சுது. மலையாளத்துல சக்கரியா ஒரு சிறந்த எழுத்தாளர். அவர் எழுதிய ஒரு முன்னுரையில சொல்லியிருக்காரு, அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர்’ 25 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நாவல் என்பதை நம்பமுடியவில்லை என்றும், இதன் மூலம் தமிழில் நல்ல எழுத்துகளே இல்லை என்று நினைத்துக்கொண்டிருந்த அவர் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட அசோகமித்திரனுக்குப் பரிசு கிடைத்தபோது, முற்போக்கு இயக்கத்தைச் சேர்ந்த செந்தில்நாதனும் சு. சமுத்திரமும் சன்டிவியில் அசோகமித்திரனுக்கு “சமூக நோக்கு இல்லை’ என்று பரிசளித்ததைக் கண்டித்துப்பேசினார்கள். அசோகமித்திரனின் எழுத்துக்கு சமூகநோக்கு இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அவருக்கு இன்னும் ஏன் ஞானபீடம் வரவில்லை என்பதுதான் கேள்வியா இருக்கு. ஆனா அசோகமித்திரன் போன்றவர்களைப் பற்றி விமர்சனம் வரும்போது அது பெரும் பிரச்சினையைக் கிளப்புவதில்லை. ஏனென்றால், அவர் ஒரு ல்ர்ஜ்ங்ழ்ச்ன்ப் ச்ண்ஞ்ன்ழ்ங் இல்லை. ஆனா வைரமுத்து போன்றவர்களை விம&

காலச்சுவடு நிகழ்வு: தமிழ் ஊடகங்களில் முஸ்லிம் குறித்த கலந்துரையாடலில் சலசலப்பு — Andhimazhai – Web Address of Tamils: “காலச்சுவடு இதழ் 20 ஆண்டுகள், 100 இதழ்கள், 250 நூல்கள் ஆகியவற்றை கொண்டாடும் விதமாக ஒரு நாள் பண்பாட்டு நிகழ்விற்கு”

காலச்சுவடு – சிற்றிதழ் அறிமுகம் 24 :: Andhimazhai – Web Address of Tamils

“தமிழ்க் கலாச்சாரத்தைச் செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கொண்ட தமிழ் வாசகர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் தமிழ் சூழலில் எளிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று நம்பிக்கை கொள்ள ஆசைப்படுபவனாக என்றும் இருந்து வந்திருக்கிறேன்”

– சுந்தர ராமசாமி
காலச் சுவடு, ஆண்டுமலர்`91

நவீன தமிழிலக்கியப் பரப்பில் ஓங்கி வளர்ந்து விழுதுகள் ஊன்றித் தனக்கென ஒரு தனித்த இடத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றுள்ளார், எழுத்தாளர் சுந்தரராமசாமி.அவரது இதழ் காலச் சுவடும் அப்படியே. தனக்கென ஒரு வெளியை உருவாக்கி தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.1988 ஜனவரியில் முதல் இதழ் வெளிவந்தது.

” காலச்சுவடு தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு காலாண்டிதழ். படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துகளை இதன் வளர்ச்சிப் போக்கில் இயன்றவரைத் தரமாகத் தர இது முயலும்” என்கிறது முதல் இதழ் தலையங்கம்.முதல் 8 இதழ்கள் காலாண்டிதழாக சுந்தரராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

அதன்பிறகு சில ஆண்டுகள் கண்ணன், லஷ்மி மணிவண்ணன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது.ஆரம்பகாலத்தில் காலாண்டிதழாக வெளிவந்து பிறகு இருமாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருந்தது.இடையில் காலம் தவறியும் வந்து கொண்டிருந்தது.

1991 ல் சிறப்பிதழுடன் இதழ் நின்று போனது. ஜனவர் 92 ல் காலச்சுவடு ஆண்டு மலரை சு.ரா. தொகுத்து வெளியிட்டார்.அதன் பின்னர் சுமார் இரண்டரை ஆண்டுகள் கழித்து அக்டோபர் `1994 லிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியது.மே ` 04 லிருந்து மாத இதழாகவும் வெளிவந்து கொண்டிருக்கிறது.இதுவரை (பிப் 06) 74 இதழ்கள் வெளிவந்துள்ளன.

எஸ். நாகராஜன், அம்பை, சேரன், ரவிக்குமார், போன்றோரது விரிவான நேர்காணல்கள் வெளியாகி இருக்கின்றன. நேர்காணல் கொடுப்பவரது முழுப்பின்னணியும் , முழு ஆளுமையும் வெளிப்படும் விதத்தில் இந்த நேர்காணல்கள் அமைந்திருக்கின்றன.

தமிழினி ’00, மாநாடு காலச்சுவடு பயணத்தின் முக்கிய நிகழ்வாகும். உலகம் தழுவிய தமிழ் எழுத்தாளர்களை அழைத்து வெகுஜன இலக்கியம், குழந்தை இலக்கியம் உட்பட தமிழின் அத்தனை முகங்களையும் ஆய்வுக்குட்படுத்தி கட்டுரைகள் வாசிக்கப் பெற்று விவாதங்கள் நடைபெற்றன.அந்தக் கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாகவும் வெளியிட்டிருக்கிறது காலச்சுவடு அறக்கட்டளை.

2002 லிருந்து ஆசிரியர் குழுவில் ரவிக்குமாரும் ( ஆதவனும்) அரவிந்தனும் சேர்ந்தனர்.2003 ல் கனிமொழி ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார். ஆசிரியர் குழுவும் விரிவடைந்திருக்கிறது.பதிப்பாளராகவும், ஆசிரியராகவும் கண்ணன் பொறுப்பேற்றிருக்கிறார்.ஆசிரியர் குழுவில் ஆதவன், அரவிந்தன், நஞ்சுண்டன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ராஜ மார்த்தாண்டன்,பாவண்ணன், குவளைக் கண்ணன், அரவிந்தன், பெருமாள் முருகன், பொ. வேல்சாமி, ஆ.இரா.வேங்கடாச்சலபதி, ரவிக்குமார், சல்மா, ஜே. பி.சாணக்யா போன்றோர் தொடர்ந்து எழுதிவருகின்றனர்.கதை, கவிதை, கட்டுரை, புத்தகவிமர்சனம், நேர்காணல், மொழிபெயர்ப்பு, விவாதம், வாசகர் கடிதம், உள்ளிட்ட பகுதிகள் வெளியாகிவருகின்றன.தமிழகம் மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எல்லாம் காலச்சுவடு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழின் மூத்த படைப்பாளிகளும், முக்கிய ஆளுமகளும் தாங்கள் பிறந்து வளர்ந்த பண்பாட்டுச்சூழல், தொடக்ககால படைப்பு முயற்சிகள், இலக்கிய நடப்புகள் ஆகியவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் “அற்றைத் திங்கள்” எனும் கூட்டத்தை ஓவ்வொரு மாதமும் கோவையில் நடத்தி வருகிறது. சே. ராமானுஜம், அம்பை உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கின்றனர்.

காலச்சுவடு இதழ் சார்பில் காலச் சுவடு பதிப்பகமும் 1995 லிருந்து இயங்கிவருகிறது. சுந்தரராமசாமியின் 107 கவிதைகள் தான் இப்பதிப்பகத்தின் முதல் வெளியீடு. இதுவரை 160 தலைப்புகளில் புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது.

தலித்துகளும், பெண்களும் அதிகமாக பங்கேற்கும் இதழ் காலச்சுவடு என்கிறார் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த அரவிந்தன்.

காலச் சுவடு நவீன இலக்கியச் சூழலில் அழியாத சுவடு பதித்து வருகிறது.

ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணன் பற்றி:

தற்போது 40 வயதைத் தொட்டிருக்கும் கண்ணன் நாகர்கோவிலில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.காலச்சுவடு இதழுடன் சுதர்சன்ஸ் புக்ஸ் நிறுவனத்தையும், சுதர்சனஸ் டெக்ஸ்டைல்ஸையும் சேர்த்தி நிர்வகித்து வருகிறார்.அமெரிக்க அரசு 2002 ல் நடத்திய இன்டர் நேஷனல் விசிட்டர் புரோகிராமில் மற்ற பிரபல பத்திரிகயாளர்களுடன் அமெரிக்கா சென்றுள்ளார்.மீடீயா மெசேஜ் மூலம் தோழி இணையதளத்தை வடிவமைத்து தருகிறார்.

எதிர்காலச் சூழலுக்கு ஏற்ப காலச்சுவடு தன்னை தக்கவைத்துக்கொள்ளும் என்கிறார் அவர்.

மரத்தடி.காம்(maraththadi.com) – முதல் அனுபவம்…

காலச்சுவடு ஆரம்பிக்கட்டதன் நோக்கம் இன்றுவரை அதன் முதல் பதிப்பில் சொல்லப்பட்டது போல கலை, கலாசார, சமுதாய மேம்பாடுகளை மேம்படுத்துவதில் முழுக்கவனமும் எடுத்து திறம்பட செயலாற்றி வருகிறது. மொத்தம் இதுவரை வந்துள்ள ஐம்பதுக்கும் மேற்பட்ட எல்லா இதழிலும் ஒரு புதிய இளைஞருக்காவது வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

காலச்சுவடில் எப்போதும் ஒருதலைப்பட்சமான குழுமனப்பானமை இருந்ததில்லை. ஆசிரியர் குழுக்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றன. கதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கவிதைகளைத்தேர்ந்தெடுப்பவர்களும் கூட மாறுவார்கள். நானறிந்தவரை அப்படி இல்லை என நிச்சயமாகச்சொல்லமுடியும். இருப்பினும் கேள்வியாளர் உறுதியோடு சொல்வதால் கவனிக்கிறேன்.

பாலியல் பற்றிய கருத்து நிதர்சனமான ஒரு கருத்து அல்ல. கோயில் சிற்பங்களிலிருந்து ஆண்டாள் வரை கம்பரிலிருந்து நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்கள் வரை எல்லாமே இங்கு வெளிச்சம். எல்லா கருத்துக்களும் எப்போதும் சொல்லப்பட்டு வருகின்றன. இப்போது மட்டுமே இக்கூச்சல்கள் எழுவது வேடிக்கை மட்டுமேயன்றி வேறொன்றுமில்லை.

கலாப்ரியா எழுதாத பாலியல் வார்த்தைகள் இல்லை. அப்போது யாரும் எதுவும் சொல்வதும் இல்லை. ஆனால் ஒரு சுகிர்தரானியோ ஒரு மாலதி மைத்ரியோ ஒரு சல்மாவோ என்றால் கட்டையைத்தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஏன் பெண்கள் அப்படியெல்லாம் எழுதக்கூடாது?
புதுமைப்பெண்களாய் காட்டிக்கொள்ளும் மாதர் சங்கங்கள்தான் இன்னும் இச்சண்டைக்கு புடவையைத் தூக்கிக்கொண்டு வருகின்றன. காரணம் என்ன தெரியவில்லை.

சுகிர்தராணியின் கவிதையில் ஒன்றுமில்லை என்பதாய் சொல்வது சரியானது அல்ல. கவிதை என்பது ஒரு வாசிப்பில் புரிதல் நிகழ்ந்துவிடக்கூடிய அல்லது எல்லொருக்குமே புரிதல் ஏற்படுத்தக்கூடிய வரையறை கொண்டது அல்ல. படைத்தவரின் பார்வையில் ஒரு அர்த்தமோ, தேர்ந்தெடுத்தவரின் பார்வையில் வேறொரு அர்த்தமோ படிப்பவர்களின் மனதில் வேறொரு புரிதல்களையோ ஏற்படுத்தக்கூடியன. ஒன்றுமேயில்லை
என்பது சரியில்லை. இது குறித்த திலகபாமாவின் கடிதம் எனக்கு வந்தது, அடுத்த காலச்சுவடில் அது இடம்பெறலாம்.

சாகித்ய அகாடமியின் வரையறைகள் யாருக்கும் தெரிவதில்லை. அது ஒரு அரசாங்கத்தால் நிறுவப்பட்ட அமைப்பு. ஆனால் சாகித்ய அகாடமியில் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் கதை 22 மொழிகளில் மொழிபெயர்ப்பாகும். அத்தகைய சூழ்நிலையில் தமிழில் தேர்ந்தெடுக்கப்படும் நூலுக்கு நல்ல தகுதிகள் இருக்கவேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவரும் நல்ல இலக்கியவாதியாக இருந்தால் எல்லோருக்கும் சந்தோசம் காலச்சுவடுக்கும் சந்தோசம். கள்ளிக்காட்டு இதிகாசம் நல்ல புத்தகம். ஆனால் அந்த வரிசையில் இதை விட நல்ல புத்தகங்கள் இருக்கின்றன.
நாவல்கள் வந்திருக்கின்றன. மேலும் வைரமுத்து சினிமாவிலிருந்து வந்தவர். இன்னும் சொல்லப்போனால் அவர் எழுதிய முதல் நாவலே இதுதான். இந்த தகுதிகளை முன்னிறுத்தி கட்டுரைகள் எழுதுகிறது காலச்சுவடு. மற்றபடி யாரையும் வெறுமனே தூற்ற வேண்டிய அவசியம் காலச்சுவடூக்கு இல்லை.

-ve:

Tamil | Essay | Neelakandan | Kalachuvadu Kannan | Secularism | Ravikumar: “காசு கண்ணனின் ஆள்காட்டி அரசியல் – நீலகண்டன்”

தமிழின் முதன்மையான முன்னணி கலை-: “இந்த பழம் புளிக்கும்: இலக்கிய வம்புகள் மற்றும் அரசியல் – ஆர்.அபிலாஷ்”

jeyamohan.in » Blog Archive » காலச்சுவடு நூறாவது இதழ்

Tamil-Ini2000-Aaraamthinai

ஷோபாசக்தி » காலச்சுவடும்.. திருமாவும்..

R P ராஜநாயஹம்: HERE IS THE RUB!: “நாஞ்சில் நாடன் அவதூறுகளுக்கு கண்ணன் எதிர்வினையாற்றிய போது புதுமைப்பித்தன் பிரச்சினையில் சொல்புதிதின் நிலைபாடு பற்றி ஒரு நேரடி விவாதத்திற்கு வருமாறு ஜெயமோகனுக்கும் வேதசகாயகுமாருக்கும் பகிரங்கமாக சவால் விட்டிருந்தார். அதை எதிர்கொள்ளும் ¨தைரியம் இல்லாத பெட்டைத்தனம் தான் ‘நாச்சார் மட விவகாரம்’ என்று விகாரமாக வெளிப்பட்டது. ”

Tamil | Literature | Essay | A.Marx | A.Marx | Kalachuvadu: “தமிழ்ச் சிற்றிதழ்களின் முஸ்லிம் வெறுப்பு – அ.மார்க்ஸ்”

About Us | Kalachuvadu

Washington DC: Jeyamohan Visit – Thanksgiving

வாஷிங்டன் டிசி-க்கு எழுத்தாளர் ஜெயமோகன் சென்று வந்து பல மாதம் ஆகி விட்டது. நினைவில் இருந்து சில துளிகளும் நன்றி நவில்தல்களும்.

வாஷிங்டனுக்கு வருகிறேன் என்று ஜெயமோகன் சொன்னவுடனேயே ராஜனை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டவர் வேல்முருகன். ஸ்ரீகாந்த் மீனாக்ஷி டிசி தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தபோது செயலாளராக இருந்தவர். பிளந்துகிடந்த வாஷிங்டன் தமிழ்ச்சங்கங்களை இணைப்பதில் இவருக்கும் பங்கிருப்பதாக திண்ணை வம்பி கிடைத்தது தனிப்பதிவுக்கான கதை.

வேல்முருகனோடு தொலைபேசியில் கொஞ்சம் tag விளையாடிவிட்டு, கடைசியாக வாய் – அஞ்சலின்றி ஒருவருக்கொருவர் வாயாடும் வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இன்முகத்துடன் அழைத்தார். சபையடக்கமாக தாங்க்ஸ் என்னும் வார்த்தையே சொல்லவேண்டாம் என்று உரிமையோடு பேசினார்.

பாஸ்டனில் இருந்து தன்னந்தனியே நியு ஜெர்சி பயணம். செல்லும் வழியில் வழக்கமான கட்டுமானப் பணிகள். ‘அமெரிக்காவில் மறுமுதலீட்டு திட்டம்’ நடைமுறையாக்கத்தில் நிறைய இடித்துப் போட்டு, மாற்றுப் பாதை கொடுத்திருந்தார்கள். அன்று வெள்ளிக்கிழமை மதியம். விடுமுறை அல்ல. எனினும், இரவில் மட்டுமே பணி நடக்கும் என்று பலகை போட்டிருந்தாலும், வேடிக்கை பார்க்கும் காரோட்டுனர்கள் மெதுவாகவே ஸ்டியரிங் பயின்றார்கள். அடிமட்ட தொழிலாளிகளுக்கான வேலைவாய்ப்பு பெருக பெருக, பெருநிறுவனங்களும் லாபம் ஈட்ட, நமக்கும் தேன் வழியும் என்று multiplier effect எல்லாம் சிந்தித்துக் கொண்டே துகாரமின் வீட்டை அடைந்தபோது ஆறு மணி.

டைனோபாய் ரன்னிங் காமென்டரி கொடுத்துக் கொண்டிருந்தார். ப்ரிட்ஜ்வாட்டர் கோவிலில் ராமரின் பளிங்குச்சிலை முன் நிற்கிறோம். ஜெயமோகன் சிற்ப அழகை ரசிக்கிறார். கை கூப்பவேயில்லை. எந்த தெய்வத்தையும் வணங்கவேயில்லை. சர்வமத ஆலயம் போல் சமணருக்கும் சம ஒதுக்கீடு தந்திருப்பதை குறித்து பேசுகிறார். எங்கள் பேச்சைக் கேட்டுவிட்ட மடிசார் கட்டாத மாமி முகஞ்சுளிக்கிறார்.

“எப்ப சார் துக்கா வீட்டுக்கு வருவீங்க?”

“அது மாமி அல்ல. தாவணி கட்டிய பைங்கிளி. இப்பொழுது ஜெமோ…”

ஒருவழியாக ஏழரை மணிக்கு ‘பராக்கா’வும் (குரங்குத்தவம் – http://kuranguththavam.blogspot.com ) உடன் வந்து சேர்ந்தார்கள். ‘இலவசக்கொத்தனார்’ம் கொஞ்ச நேரத்தில் வந்தவுடன் இணையம், போலி டோண்டு என்று வழக்கமான இடங்களில் போரடிக்க, இட்லி+மசால் தோசை மொக்கிய பிறகு தூக்கக் கலக்கத்துடன் துகாவிடம் இருந்து பிரியாவிடை பெற்றபோது ஒன்பதரை தாண்டி இருக்கும்.

அடுத்த நான்கு மணிநேரம் அதி சுவாரசியம். ராஜன் குறிப்பிட்டது போல் ஆளின் கிரகிப்புக்கு ஏற்ப பேசுவதில் ஜெயமோகன் வித்தகர். என்னுடனும் ‘வெட்டிப் பயல்’ பாலாஜியுடனும் நடந்த உரையாடல்களில் பெரும்பாலானவை சினிமாவும் சினிமா சார்ந்த மயக்கங்களுமாக முடிந்து போனது.

பரந்த வாசிப்பாளரான அர்விந்த் கிடைத்தவுடன் யுவன், நாஞ்சில் நாடன் என்று இலக்கியத்தில் துவங்கியது. கொஞ்ச நேரம் கழித்து ஷாஜி, இளையராஜா, யுவன் என்று இசைப்பயணமாக ஆலாபனை ரீங்கரித்தது. படு காத்திரமாக விஷ்ணுபுரம் ஆராய்ச்சி, காடு நாவலில் பொதிந்த இரகசியங்கள், என்று ஜெயமோகனின் படைப்புலகிற்கு பின்புலம் அமைத்தது. அங்கிருந்து, வேதங்களின் குறியீடு, மகாபாரதக் கதைகளின் இருண்மை, ஞான மரபு, தத்துவார்த்த தர்க்கம் என்று ஆங்கில உலகின் புத்தக அறிவுக்கும் தமிழில் வாசித்த படக்கதைகளுக்கும் முடிச்சுப் போட்டு, அதில் ஜெயமோகனின் டச் உடன் தீர்க்கமாக அலசப்பட்டது.

முதலில் போட்ட திட்டத்தின்படி இந்தப் பயணத்தில் வெட்டிப்பயல் உடன் வந்திருக்க வேண்டும். அவர் கழன்று கொன்டதில், அர்விந்த் சேர்ந்துகொள்ள, எதிர்பாராத விருந்து. நான் அவ்வப்போது வண்டியும் ஓட்டினேன் என்பதால் வாஷிங்டன் வந்து சேர்ந்தது.

மணி ஒன்றரை இருக்கும். செல்பேசியில் வேல்முருகனை அழைக்க, தூக்கக் கலக்கத்துடன் ‘எவ…. அவ!’ என்று உருமினார். அமெரிக்காவில் ஹோட்டல்களுக்குப் பஞ்சமில்லை என்பதால் நர்மதா (ரமதா என்பதை செல்லமாக இவ்வாறும் விளிக்கலாம்), ரெட் லைட் இன் ஆகிய எதிலோ தங்கலாம் என்று மனதைத் தேற்றினாலும், வேல்முருகன் இல்லத்திற்கே வந்துவிட்டோம்.

நாங்கள் மூவரும் வேல்முருகனின் வீட்டை அடைந்தபோது பின்னிரவு இரண்டு ஆகிவிட்டது. சில பல குளறுபடிகள் செய்தோம். பாத்ரூம் கதவு பூட்டியே தாளிட்டு விட்டு, அதன் பின் அடைப்பு என்று கொஞ்சம் எசகுபிசகுகள். அமெரிக்க வாழ்வில் நடப்பதுதான்… சல்தா ஹை.

அடுத்த நாள் காலை எழுத்தாளர் சத்யராஜ்குமார் (http://inru.wordpress.com/ ) இணைந்து கொண்டார். ஜெமோ எல்லோருடனும் இயல்பாக உரையாடினார். வீட்டில் இருந்த வேல்முருகனின் தாயார், இசை பயிலும் மகள், Wii ஆடும் மகனுடன் கொஞ்சல். எல்லோருடனும் சகஜமாக உரையாடுவது எனக்கு எம்பிஏ-வில் கற்றுத்தரப்பட்டது. எனினும், விஷயம் அறிந்து பேசுதல் + கூச்சம் போக்கி சகஜமாக்குதல் — இரண்டும் கைவந்த கலையாக அவருக்கு இருந்தது.

வாஷிங்டன் நினைவுச்சின்னம், லிங்கன் நினைவுச்சின்னம், உலகப் போர் 1,2 நினைவாலயம், ஜெஃபர்சன் சிலை, கொரியா போர், வியட்நாம் சண்டை என்று திக்கொன்றாக அமைந்த பரந்து விரிந்த தளபதிகள்; படைக்களங்கள்; வீரர்களுக்கான மெமோரியல்கள்; அமைதிப் பூங்காக்கள். எதையும் அவசரப்படாமல் நிதானமாக கவனித்தார்.

நடுவே சினிமா நடிகர்களுக்கு மட்டும் நிகழும் சில விஷயங்களும் இங்கே நடந்தது. “சார்… நீங்க ஜெயமோகன் தானே?! உங்க ப்ளாகைத் தொடர்ந்து படிக்கிறேன். இன்னிக்கு டிசி வரதா போட்டு இருந்தீங்க! இங்கேதான் இருப்பீங்கன்னு நெனச்சோம். பார்த்துருவோம்னு நெனச்சோம்… அப்படியே உங்களப் பார்த்ததில ரொம்ப சந்தோஷம்!”

“மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு வரீங்களா?”

“முடிஞ்சா பார்க்கிறோம்! ஆனா, உங்கள இங்க… இப்போ பார்த்து பேசியதுதான் எங்களுக்கு மகிழ்ச்சி”.

இரு சிறு கூட்டங்கள். உச்சிவெயில் மண்டையைப் பிளக்கிறது. ஜெமோ சந்தித்த பரவசத்தில் அவர்களிடமிருந்து பல வினாக்கள். ஜெமோவும் பதில் கொடுத்துக் கொண்டே, அவர்களின் விழைவுகளை, பின்புலங்களை கிரகித்துக் கொள்கிறார். ஒருவரல்ல; இருவரல்ல… இரு சிறு சிறு குழாம்களில் இருந்து ஏழு & எட்டு பேர் இவ்வாறு அகஸ்மாத்தாக தொடர்பு கொண்டார்கள். நான் நடிகை ரஞ்சிதாவுடனும் வைகைப் புயலுடனும் விமானங்களில் அளவளாவியது எனக்கு நினைவிலாடி கிறங்கடித்தது.

மதியம் சமர்த்துப் பையன்களாக தாஸனி வாங்கப் போக, “பாலா… நீங்க தண்ணியடிப்பீங்கதானே? உங்களுக்கு வேணுமின்னா வாங்கிக்கிடுங்க” என்று பெர்மிட் தரப்பட, குளிர்ந்த கரோனா ருசிக்க கிடைத்தது.

காலையில் இட்லி. மதியம் ஒரு சிக்கன் சான்ட்விச். பிற்பகலில் இரு பழங்கள். இதுதான் ஜெயமோகனின் அன்றைய டயட். அது தவிர முந்தின நாள் இரவு பாத்ரூம் களேபரம் போன்ற சிக்கல் முடிந்து உறங்கும் போது இரண்டரை ஆவது இருக்கும். காலையில் ஆறு மணிக்கு எழுந்து, எட்டு மணிக்கு காரில் காலடி.. மன்னிக்க… டயரடி வைத்தாகி விட்டது. கொஞ்சம் போல் வீட்டில் ஓய்வெடுக்கலாம் என்பதையும் நிராகரித்து, ‘போனால் வராது’ எனபதாக காங்கிரஸ் நூலகம், கேபிட்டல் என்று பொசுங்கும் வெயிலில் நடையோ நடை.

கால் டம்ளர் டீ மட்டும் அவருக்கு காட்டிய பிறகு, சிறப்புரையாற்ற அவரை அழைத்து சென்றோம். போகும் வழி வெறும் இருபது நிமிடம்தான் என்றாலும். வெளியில் கொளுத்திய நூறு பதாகையில் இருந்து குளிரூட்டப்பட்ட காரும், காலை எட்டில் இருந்து சாயங்காலம் நான்கு வரை நடந்த நடையும், அந்த நடையின் நடுவே ஆதுரமிக்க ஜெமோவின் சொல்லாடல்களும், அப்படியே கேப் விட்ட இடைவேளைகளில் என்னுடைய டிசி சொற்பொழிவுகளையும் கேட்ட மயக்கத்தில் ஜெமோ கொஞ்சம் கண்ணயர்ந்தார்.

நிகழ்ச்சி அமைப்பாளரான பீட்டர் யெரோனிமௌஸ் அறிமுகம் தர அரம்பித்தார். அதற்கு பவர்பாயிண்ட் வைத்திருந்தார். அதன் பிறகு அடுத்த அறிமுகம் தர வேல்முருகனை அழைக்க, அவர் என்னை அழைத்து ஒதுங்கி விட்டார்.

டிசி வரும் பயணத்தின் நடுவில் ஜெயமோகன் சொன்னது இப்பொழுது நினைவிற்கு வந்து செமையாக இம்சித்தது. ‘எனக்கு அறிமுகம் கொடுப்பவர்கள் சரியான அறிமுகம் தருவதில்லை. “இவர் தீரர், வீரர்; சூரர்” என்றோ, “இவர் பதினேழரை நாவல்களும் மூவாயிரத்து அறுநூற்றி இருபத்தெட்டு பக்கங்களும் எழுதியவர்” என்றோ, “இவர் சாகித்திய அகாதெமி, ஞானபீடம் வென்றவர்” என்றோ, “தமிழகத்தின் விடிவெள்ளி, எழுஞாயிறு” என்று அடைமொழிகளால் குளிப்பாட்டியோ பேச அழைப்பார்கள். அதற்கு பதில் என் எழுத்து எவ்வாறு அவரை சென்றடைந்தது, எப்படி செழுமையாக்கியது என்றெல்லாம் சொல்லலாம்’

அப்படித்தான் அறிமுகம் கொடுத்தேனா என்று தெரியாது. எழுதியும் தயார் செய்யவில்லை. சுருக்கமான அறிமுகம் வைத்தேன்.

அதன் பின் ஜெயமோகன் பேசினார். இருபது நிமிஷங்களுக்குள்ளேயே முடித்துவிட்டார்.

புறவயமான உலகை அகவயமாகப் பார்ப்பதன் அவசியம் என்ன? எப்படி விரிந்து பரந்த அகில அண்டத்தையும் — தக்கினியூண்டு மனசும் கையளவு மூளையும் கொண்டு மதிப்பிடுவது? அவ்வாறு மதிப்பிட்டாலும், புறச்சிக்கல்களை தன்வயப்படுத்தி சிக்கல் நீக்கி உள்ளே கொணர்ந்தாலும், அதை விட குறுகலான மொழியைக் கொன்டு வெறும் 10,000 வார்த்தைகளேக் கொன்ட பாஷையை சாதனமாக வைத்து விவரிப்பது எங்ஙனம்?

காலங்காலமாக உலகம் எவ்வாறு ஒவ்வொரு துளியையும் ஒவ்வொருவருக்குள்ளும் அனுப்பி வருகிறது? அதைப் புரிந்து கொள்வதன் சூட்சுமம் என்ன? கலாச்சாரம் என்கிறோம். பாரம்பரியம் என்று சொல்கிறோம். அதெல்லாம் எப்படி வருகிறது?

இப்படி abstract ஆக அரம்பித்த உரை சட்டென்று ஜனரஞ்சகமாகி கிளைதாவி முடிந்துவிட்டது. சாதாரண கேள்வி – பதில் என்றால், இதில் எழும் வினாக்கள் ஏராளம். அதைக் கேட்டிருப்பார்கள். குளிர் நம்மை அணுகாமல் இருக்க கையுறை அணிந்த கைகளை, பாக்கெட்டுக்குள் திணித்துக் கொள்வது போன்ற மனப்பான்மையுடன் வினாத் தொடுப்பவர் கூட்டம்.

‘வார்த்தை’ பிகே சிவக்குமார் சொன்னது போல் இது வேறு கும்பல். “நீங்க சினிமாவுக்கு வசனம் எழுதியிருக்கீங்க! அதனால், எந்த நடிகை அதிகமாக குலுக்குவார்கள் என்பதைக் குறித்து ஏன் நீங்கள் அவதானிக்கவில்லை?” என்பன போன்ற வினாக்கள் வந்தன. விலாவாரியான தகவல்களுக்கு கீழே இருக்கும் ட்விட் வர்ணனையைப் படிக்கலாம்.

சாதாரணமாக ஜெயமோகன் இத்தகைய கேள்விகளை நேரடியாகவே எதிர்கொண்டு அதற்கும் தர்க்கபூர்வமாகவும் இந்திய சிந்தனை மரபுவழியாகவும் விளக்குவார்; விளக்குகிறார்; விளக்குகினார். அன்று ‘உங்கள் பதிலை மூன்றரை நொடிகளில் முடித்துக் கொள்ளவேண்டும்! அடுத்த கேள்விக்கு செல்ல வேண்டும் அல்லவா?’ என்று ஸ்பீட் செஸ் போன்ற ஆட்டம். கலைஞர் கருணாநிதியின் எகத்தாள ஒன்லைனர்கள் எடுபட்டிருக்கும். விசாலம் கோரும் விவாதம் நிகழ இடம் பொருள் ஏவல் அமையவில்லை.

அன்றைய பின்னிரவில் வேல்முருகன் தனக்கு ‘பெரியார் இன்றளவிலும் முதன்மையானவராகத் தெரிகிறார். அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பியது; அடக்குமுறையை தவிர்த்தது; சுய மரியாதை; தாழ்த்தப்பட்டோருக்கு குரல் கொடுக்கும் விதத்தை நிலைநாட்டியது; பாமரருக்கும் பகுத்தறிவை எடுத்துச் சென்றது’ என்று விரிவாக அடுக்க, ஒவ்வொன்றாக, அனைத்தையும் தவிடு பொடியாக்கும் எதிரணியின் நிலைப்பாடுகளை, அவரே ‘அட… ஆமாம்!!’ என்று மாறிப்போகுமளவு ஜெமோ எடுத்து வைத்தார்.

இவ்வகையான இன்ஃபார்மல் களம் இருந்தால் அன்றைய மீட்டிங் சிறப்புற்றிருக்கும். எட்டரை மணிக்கு அரங்கத்தை காலி செய்ய வேண்டும். ஏழரைக்கு அணு ஆயுதப் பேச்சு என்று வாயில் வாட்ச் கட்டிவிடாத களம் வேண்டும்.

சத்யராஜ்குமார் உடனும் நிர்மலுடனும் ஜெமோ பேசியதும் சுவாரசியமே. நிர்மல் (http://sinthipoma.wordpress.com/2007/05/04/12/ ) குறித்தும் நிறைய எழுதவேண்டும். அவர் அடுத்த நாள் எங்களுடன் இணைந்து கொண்டார்.

இந்த மாதிரி எழுத்தாளர் பயணத்தை அடுத்த முறை திட்டமிட்டால், பாஸ்டனில் இருந்து இரயிலிலோ விமானத்திலோ வாஷிங்டன் செல்வது; அங்கே நிர்மல்/சத்யராஜ்குமார்/வேல்முருகன் பெற்றுக் கொள்வது — என்று சுலபமாக அமைக்கலாம்.

பட்டால்தான் தெரிகிறது!


அப்பொழுது எழுதிய லைவ் டிவிட் கவரேஜில் இருந்து:

1. When a waterfall supposed to represent #FDR presidency is not working, does it symbolize that the administration failed? #Memorials #DC

2. Tomb of the Unknown. Amphitheater. DC Washington. Arlington http://post.ly/1apD

3. Changing of guards in Unknown Soldier Tomb in Virginia Arlington Cemetery. http://post.ly/1anf

4. Jemo in Arlington Cemetery. DC. http://post.ly/1al7

5. Vote of thanks. Young chap; tense; mispronounces names. I am also mentioned. http://post.ly/1Zpq 8:59 PM

6. How Tamils shd stay united against Atomic power plants & nuclear energy? Y no TN leader against this cause. http://post.ly/1ZpC 8:50 PM

7. Why Nuclear, 123 deals, waste management, accidents, catastrophical predictions, Russia job creation. #energy http://post.ly/1Zp1 8:46 PM

8. Udhayakumar takes over the stage. Asuran book gets released by Sankarapandi. http://post.ly/1Zoo 8:44 PM

9. Koodankulam Nuclear project activist Uthayakumar speech. Pulithevan/LTTE contacts. Prabhakaran dead reminiscences. http://post.ly/1Zog 8:43 PM

10. Commemorative plaque presented to Jeyamohan in Washington DC Meet. http://post.ly/1Zmy 8:27 PM

11. Velmurugan Periyasamy tells abt his expediments with Periyar. EVR’s influence on self. Rationalization & influence. http://post.ly/1Zmn 8:23 PM

12. Shylaja abt Bheema’s characterization in Nathi Karaiyiniley. #JM abt Asoka Vanam. Girl wise inheritance property in his http://post.ly/1ZmC 8:19 PM

13. Tamil language classical structure: Qn. Ans by #JM: 4k divya prabhandham, current poets, Pramil. Su. Vilvaratnam. Abhi. http://post.ly/1Zlp 8:16 PM

14. Qn by him abt fights among writer thinkers. #JM Ans: Appreciates Periyar EVR 4 giving freedom to question. Gr8 ans lac http://post.ly/1ZlU 8:12 PM

15. JM has a gr8 reply abt Periyaar. Compares him with MN Roy, EMS, Ambedkar. EVR is not reason based! http://post.ly/1ZlD 8:07 PM

16. MP Siva chokes with emotion. Wants #JM to become a big writer. Qns abt EVR Periyar. Rationality & spirituality mix. http://post.ly/1Zkw 8:04 PM

17. Religion, Quran, suicides: search of life thru journeys in Ilakkiyam. http://post.ly/1ZkD 7:58 PM

18. Jeyamohan talks abt Oomai Chennai. Janakiraman, Jeyakanthan, Sujatha, Asoka Mithiran, Sundara Ramasamy. Kaadu: how it came into being?! 7:54 PM

19. Sornam Sankarapandi Sudalaimadan condemns the state of responses given by Tamil writers on demise of LTTE. #srilanka statements #sweep 7:50 PM

20. Dr. Thani Cheran disagrees with #JM on Therkku Vazhgirathu. Says TN is not influential wrt Tamil Eezham. http://post.ly/1ZjS 7:47 PM

21. Ans by #JM: A million Tamils r out of TN. How 2 safeguard if free country is separated out. US is best eg of coexistenc http://post.ly/1Zj3 7:41 PM

22. Qn by Saminathan. Multiplicity, diversity x individuality. Will it curtail rebels? How to ensure Independence. http://post.ly/1Zij 7:38 PM

23. JM ans abt education: economy, British looting. Hope for future gen. Famines, hunger will be history. http://post.ly/1ZiE 7:33 PM

24. I’m a reader of Sanga Chitrangal. The only interesting blog is #JM How to bring ilakkiyam to kids? #lit http://post.ly/1Zhr 7:29 PM

25. Shylaja shared her question with me. Y no female chars are shown as intelligent in his fiction; incl Anal & many Mahabh http://post.ly/1Zhb 7:26 PM

26. Sornam Sudalaimadan Sankarapandi qns abt self righteousness with dravidian movement is debased. http://post.ly/1ZhW 7:23 PM

27. AIIMS India Foundation Rave Shankar chats abt #JM blog; Ajithan school was moving. http://post.ly/1ZhA 7:19 PM

28. Audience is hysterical with #JM narration abt common Tamils addiction with Kumudam/Vikadan vs Kaadu http://post.ly/1Zh2 7:17 PM

29. Lit as infotainment vs prev twit. Ilakkiyam is useful in any nook & corner of the world. Why read fiction? http://post.ly/1Zgk 7:14 PM

30. The magnificence absorbed from the universe into self. Iota of world inside each of us. http://post.ly/1ZgZ 7:12 PM

31. #JM talks about Nithya Chaithanya Yathi. Narration definition. Inner vs outer world. Conversations – language http://post.ly/1ZgK 7:09 PM

32. Myladuthurai MP Siva snaps pictures in the #JM #DC Meet. http://post.ly/1ZfW 6:58 PM

33. Writer Jeyamohan gathering in Washington DC. Intro by Peter Yeronimouse. http://post.ly/1ZfE 6:55 PM

34. Library of Congress. Writer Jeyamohan with books, reference, Washington DC. http://post.ly/1ZS0 4:12 PM

35. With Velmurugan in Virginia. Washington DC visits Jeyamohan. http://post.ly/1Yrm 9:37 AM

36. DC welcomed JM. Car chat» Vishnupuram is an anti-kaaviyam. Yuvan’s Manal Keni. What defines a Kappiam? Discussion vs argument mthds Marabu.1:33 AM Jul 25

தொடர்புள்ள பதிவு:
Jeyamohan DC பேச்சில் நல்ல தரமான இலக்கியத்தை அல்லது எந்நாடு இலக்கியத்தில் முண்ணனி வகிக்கிறது என்று எதுவும் சொல்லவில்லை: http://bit.ly/GJ4vE