Tag Archives: Reviews

Kuselan – DVD Experiences

  • குசேலன் குறுவட்டில் சந்திரமுகியும் இருந்தது.
  • மிக மிகக் குறைந்த எதிர்பார்ப்புடன் பார்த்ததாலோ என்னவோ!? படம் ரொம்பவே பிடித்துப் போயிருக்கிறது!
  • வடிவேலு காட்சிகள் குறித்து எக்கச்சக்க எச்சரிக்கை இருந்ததால், அவரின் அனைத்து சீன்களும் 5 பாடல்களும் கழற்றியபின் படம் ஒன்றரை மணி நேரம்தான்.
  • மீனா அதற்குள் தொலைக்காட்சி தொடருக்கு சென்றிருக்க வேண்டாம். சங்கீதா போல் நாயகி முதல் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பாந்தமாக இருப்பார்.
  • கலக்கல்
    • ஆர் சுந்தர்ராஜன் உடன் ஆன கேள்வி – பதில்
    • கடைசி 20 நிமிடங்கள்
  • மற்றவர்கள்
    • சந்தானம் – சமையற்காரனாக; தோரணை காட்டும் சினிமாக்காரனாக.
    • சந்தானபாரதி – சிகையலங்காரம்
    • லிவிங்ஸ்டன் – வெறுப்பின் உச்சியை பிரபலிக்கும் ஒன்பதாவது அதிசயம் கூட எதார்த்தமான சித்தரிப்பு

‘நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவனாக வாழவும் தெரியணும் பாலு’

Amitav Ghosh – Maitreyan

எழுத்து: மைத்ரேயன்

அமிதவ கோஷ் பற்றி இதற்குள் நீங்களெல்லாம் தெரிந்து வைத்திருப்பீர்கள்.

வங்க தேசத்தில் பிறந்து பிறகு இந்தியாவிலும் அயல் நாடுகளிலும் படித்து ஆய்வுப் பட்டம் வாங்கி அமெரிக்கப் பல்கலைகளில் போதித்து நிறைய கவனிக்கப்பட்டவர். இடது. ஆனால் முதலிலிருந்து படிக்கும்படியான நாவல்கள் எழுதியதுடன் சில வரலாற்று நவீனங்களை எழுதி இருக்கிறார்.

ஓரிரண்டு சுய சோதனை அல்லது தனிநபர் அவசங்களை மையம் கொண்ட நாவல்கள், ஒரு அறிவியல் நவீனம் எல்லாம் எழுதி இருக்கிறார். மிகவும் கவனிக்கப்பட்ட நவீனங்கள் வரலாற்று நவீனங்கள். அவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஒவ்வொன்றும் சில முக்கியமான, கடந்த கால, நன்கு பதிவான சம்பவங்களில் வேர் கொண்டு, நிறைய ஆய்வுத் தகவல்களால் சூழப்பட களனையும் பாத்திரங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டவை.

சம்பவங்கள், மன உளைச்சல்கள், பாத்திரங்களிடையே நடக்கும் உணர்வுப் பரிமாற்றங்கள், சுழல், உடைகள், தட்ப வெப்ப நிலை ஆகியன எல்லாம் எதார்த்த பாணி என்றாலும் கற்பனைதான்.

ஆனால் துவக்கத்தில் இவருடைய நாவல்களில் இருந்த ஒரு முழுமை சமீபத்திய தலைகாணி சைஸ் நாவல்களில் இல்லை. ஒரு புது உலகுக்குப் போய் வந்த உணர்வை நிச்சயம் எழுப்புகிறார்.

Sea of Poppies | Amitav Ghosh | Review by The Spectator – A passage from India :: இந்த விமர்சனக் கட்டுரை அவருடைய சமீபத்திய நாவல் ஒன்றைப் பற்றியது.

The Sea of Poppies என்ற இந்த நாவல் பிரிட்டிஷார் இந்தியாவில் இருந்த கஞ்சா உற்பத்தித் திறனைப் பயன்படுத்தி வருடத்துக்கு 1200 டன் போலச் சீனாவுக்கு ஏற்றுமதி செய்து தம் பொக்கிஷத்தை நிரப்பிக் கொண்டிருந்த காலத்தைப்பற்றியது. இந்த ஏற்றுமதி 1920 வரை கூட நீடித்திருந்தது. இன்றும் சீனருக்கு இந்தியா மீது ஆத்திரமும், எப்படியாவது இந்தியாவைப் பணிய வைக்க வேண்டும் என்றவன்மமும் இருப்பதாக அவ்வப்போது தோன்றினால் அதற்கு இந்த வரலாறு ஒரு காரணமாக இருக்கலாம்.

பிரிட்டிஷாரின் கைப்பாவையாகப் பயன்பட்ட எவருக்கும் இந்த நிலைதான். இந்த விதமான எதிர்வினை பிரிட்டிஷாரைத் தவிர வேறு அனைவரையும் தாக்குவதுதான் வரலாற்றின் விசித்திரங்களில் ஒன்று.

இந்த மதிப்புரையைப் படித்து விட்டும் அமிதவ கோஷின் பையை நிரப்புவதா வேண்டாமா என்று முடிவு செய்யுங்கள். உள்ளூர் பொது நூலகத்தில் ஒலிப்பதிவு வடிவில் இந்த புத்தகம் கிட்டினால் அதைப் பயன்படுத்துங்கள் என்று சிபாரிசு செய்கிறேன்.

Dasavatharam – Eight Year old’s Take

XKCD - Butterfly EffectHi Daddy,

I saw Dasavatharam. It was good but for the fights, monkey scene, villian dying and the tsunami, I closed my eyes. I liked all the different Kamal roles. I had a doubt if the japanese guy was a Kamal. I did’nt really like it because I closed my eyes most of the times. Now, I know what a tsunami is.

You were right. 10A did go fast. Mostly there was only the normal Kamal named Govindaraj. I liked the first song in the movie. I know the first line in the first song. 10A is not made for kids!!!!!!!!!!!!!!!

கார்ட்டூன்: xkcd – A webcomic of romance, sarcasm, math, and language – By Randall Munroe

வார்த்தை :: மே மாதம் – சிவிறுதல்

இது முதல் மாத அறிமுகம்: வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

சென்ற மாத ‘வார்த்தை’க்கு மதிப்பெண். இந்த மாதம் நச்சுன்னு சில வரிகளில் அறிமுகம்:
(குறிப்பிடத்தக்க, தவறவிடக்ககூடாத இடுகைகள் தடிமன் செய்யப்பட்டிருக்கின்றன)

வியனுலகு அனைத்தையும் அமுதென நுகர்வோம் – தலையங்கம் :: பிகேசி

அச்சு ஊடகங்களில் அதிகம் எழுதாத குறைந்தது எழுவர் எழுதியிருந்தனர்… முன்னோடி பத்திரிகைகளின் சாயல் தெரிகிறது என்று சிலர் சொன்னார்கள்.

இணையத்தில் இருந்து சிலரை அறிமுகம் செய்துவைத்தாலும் அவர்களும் வலைப்பதிவுகளுக்கேயுரிய எந்தவித மாற்றமும் இல்லாமல் அறிமுகமாவது பொம்மரில்லுவை சந்தோஷ் சுப்ரமணியம் ஆக்கியது போல.

கடிதங்கள்

மாற்று சிந்தனைகளை முன்வைக்கவில்லை

ஜெயகாந்தன் பதில்கள்

குசேலன் படத்தில் பத்து நாயகிகளோடு சூப்பர் ஸ்டார் மட்டும்தான் நடனம் ஆட வேண்டுமா? அயிட்டம் பாட்டு

ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் – கே.எம். விஜயன்

வக்கீலய்யாவின் குறையைப் போக்குகிறது.

நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் – முருகபூபதி

ஏதாவது புதிய நிரலி ப்ராஜெக்ட் ஆரம்பிப்பதற்கு முன் வார்ப்புருவில் சில கோப்புகளைக் கேட்பார்கள் – இங்கே ஆசிரியர் வார்ப்புருவுக்குள் ஆயிரம் வார்த்தைகளில் ஆஸ்திரேலியாவும் தமிழும் வருங்காலமும் என்கிறார்.

பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள் – கே. பாலமுருகன்

மிக மோசமான தொனியில் செய்துகாட்டிக் கிண்டல் அடிப்பதையும் எவ்வளவு சாதாரணமாக நமட்டுச் சிரிப்புடன் கடந்து விடுகிறான். கடந்து செல்லுதல் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? இவன் கிறுக்குத் ‘தேவனாகத்தான்’ இருக்க முடியும். கிறுக்கனாக இருந்தால்தான் இவர்களைக் கடக்க முடியும்

சிறுகதை என்பது episodic ஆக இருக்கும். இதில் novelistic தன்மைகள் எட்டிப் பார்த்தாலும் புரியாத பாஷை படத்தின் துணையெழுத்தை மட்டும் படித்து விட்டு திரைக்காட்சியைத் தவறவிட்ட அயல்தன்மை.

தமிழில் தேவாரம்: பின்தொடரும் நிழல்கள் – வெளி ரங்கராஜன்
ஐபிஎல் கிரிக்கெட் குறித்து context sensitive ஆக பதிவிட வேண்டும் என்னும் ஆர்வத்தில் ஊக்கமாதுக்களையும் பார்வை நங்கையரையும் மட்டும் சாடிப் பதிவிடுவது போல் ஜாதி, சிதம்பரம் என்று திசை மாறி தடுமாறாமல் ஆட்டத்தைக் குறித்தும் செல்போக்குகளைக் குறித்தும் எளிமையான வரலாற்று அலசல்.

ஆர்தர் சி. கிளார்க்: அறிவியல் புனைவும் முன்னோக்கிய பார்வையும் – துகாராம் கோபால்ராவ்

பல்வேறு இலக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இவைகளில் எதுவுமே தமிழில் வருவதில்லை. வருவதும், மொழிபெயர்ப்புகளாகவே இருக்கின்றன. இவற்றுக்கான ஊற்றுத்தளம் இங்கே இல்லை. முயல்பவர்களுக்கு பிரசுரிக்க தளம் இல்லை. படிக்கும் வாசகர் வட்டம் இல்லை. ஐந்து கோடி மக்கள் உள்ள தமிழ்நாட்டில் இதற்கு ஆயிரம் பிரதிகள் கூட அச்சடித்து விற்கும் பத்திரிகைகள் இல்லை

நீங்கள் வார்த்தை வாங்குவதற்கான காரணம் #1

கார்ட்டூன்: துக்கா
பாலபாரதி கட்டுரை அனுபவமாக விவரித்ததை எளிமையான அணுகக் கூடிய கருத்துப்படமாக்குகிறார்.

அரவக்கோனின் இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள்: புத்தக விமர்சனம் – மோனிகா
சன் டிவி தயாரிக்கும் படத்தை, டாப் 10 இல் முதலிடம் கொடுத்து 25 வாரம் சுரேஷ் விமர்சிப்பார். ஆனால், எனி இந்தியன் வெளியீட்டை, எனி இந்தியன் வெளியீடே நிறைகுறைகளை முழுமையாக அலசுவது வரவேற்கத்தக்க ஆச்சரியம்!

யுகசந்தி – சுகா

மலையாளிகள் வாழ்க்கையிலிருந்து படம் எடுக்கிறார்கள். நமக்கெல்லாம் அந்த மாதிரியான உணர்வு எப்போது வரப்போகிறது என்றெல்லாம் புலம்பினேன். பொறுமையாக நான் சொல்வதைக் கேட்ட பாலு மகேந்திரா “நீ ஜேகேயோட ‘மௌனம் ஒரு பாஷை’ படித்ததில்லையா” என்று கேட்டார்.

சென்றவாட்டி சுகாவிற்கு சொன்ன அதே கருத்துதான் இந்தவாட்டியும்.

உயிர்சுழி – சுப்ரபாரதி மணியன்
பாலமுருகன் pretentious ஆன ஆக்கம் கொடுத்து வாசகனை டிம்பக்டூவுக்கு அனுப்பி வைத்ததற்கு நேர்மாறான அனுபவம். விறுவிறுப்பு, பதைபதைப்பு, இருண்மை என்று கவிதை போல் விரிந்தாலும் திகிலும் சுவையும் மீள்வாசிப்பிலும் தொடரும் சுழி.

வார்த்தை இதழை வெளியீட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை

சர்வாதிகாரத்தை விட கொடுமையானது ஜனநாயகம். (பலத்த கைதட்டு)… யாராவது அமெரிக்காகாரன் வந்து அடக்கினால்தான் சரியாக இருக்கும்…. இலக்கியவாதிகள் பொறுமையில்லாதவர்கள் அல்ல. அவர்களுக்கு எங்கே செல்லுமோ அங்கே அவர்கள் எல்லாம் செய்வார்கள். செல்லாத இடமும் அவர்களுக்குத் தெரியும்.

எதைப் பற்றியும் அல்லது இதுமாதிரியும் தெரிகிறது – வ. ஸ்ரீனிவாசன்

சலிப்புக்கு மாற்றாக அமைவது என வ.ஸ்ரீனிவாசனின் பத்தியையும் சொல்லலாம். குறுங்கட்டுரைகளைப்போலவே வணிக இதழில் இடமில்லாமல் சிற்றிதழாளர்களால் கவனிக்கப்படாமல் தேங்கிப்போன ஓரு எழுத்துத்தளம் இது. பத்தி என்பதன் சிதறுண்ட வடிவமும் மொழிவிளையாட்டுகளும் நகைச்சுவையும் …சரியான உதாரணம் ஸ்ரீனிவாசனின் கட்டுரை.

முதல் இதழில் கலக்கிவிடுவது எளிது. இரண்டாவது ஆட்டத்திலும் எதிர்பார்ப்பை திருப்திபடுத்தி ஜெமோ சொல்வது போல் தோனி ஆகியிருக்கிறார்.

நிழலின் குரல் – ஜெயந்தி சங்கர்
முந்தைய சிறுகதைகளை விட இதில் அனுபவம் மேலும் ஒன்றவைத்து கேள்விகளை தேக்கி உள்விவாதங்களை எழுப்புகிறது. ‘ஒவ்வொரு கதைக்கும் அதன் பௌதிக அளவைச் சாராத சந்தம்/கதி/லயம் இருக்கிறது‘ என்று சென்ற கட்டுரையில் வ.ஸ்ரீ சொல்லியது போல் அப்பாவின் பதில் அதிகப்பட்டு இருப்பதை தவிர்த்து தணிக்கை செய்து இருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

அமெரிக்கா என்றொரு அற்புதம் (ஒரு தேர்தல், ஒரு மதத்தலைவர், ஒரு திரைப்படம்) – கோபால் ராஜாராம்

முன்தொக்காக வந்திருந்த லூயிஸ் கரோல் குறிப்பு பிடித்திருந்தது. மற்றபடிக்கு தமிழக டம்மீஸ்களுக்கான அமெரிக்க ‘க.பெ.’

ஏ.ஜே.பி. தைலர் எழுதிய மார்க்சியம் ஒரு மீள்நோக்கு – தமிழில்: மணி வேலுப்பிள்ளை
ஜார்ஜ் புஷ் பேசினால் என்ன சுவைக்கப் போகிறது என்று அசிரத்தை கலந்த அலட்சியத்துடன் ஆரம்பித்தாலோ என்னவோ ஆச்சரியப்பட வைக்கிறது.

ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் – பி.ச. குப்புசாமி

பாடலில் இருந்த சொல்லின்பம் அத்தகையது போலும். இவ்வாறுதான் வாழ்க்கையைப் பற்றி அர்த்தப்படுத்திக் கொள்ள நேர்கிறது! இப்படியெல்லாம் கூட அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றால், அப்புரம் வாழ்ந்துதான் என்ன பயன்?

கலாம் முதல் ஒபாமா வரை தாரக மந்திரமாக்கும் நம்பிக்கை முதல் உறுதிமொழி வரை ஊக்கமருந்தாக்கும் வித்தையை வித்தையில்லாமல் உள்ளது உள்ளபடி பகிரும் பாங்கு.

‘தசாவதாரம் தமிழ்ப் பெயர் அல்ல – வரிவிலக்கு கிடையாது’

முந்தைய சர்ச்சை சமாச்சாரப் பதிவு: கமலின் தசாவதாரம்: பிரச்சினை வளர்க்க யோசனைகள்: “கேள்வி நேரம்”

அதன் பிறகு வந்த செய்திகள் & கிசுகிசு புனைவுகளின் தொகுப்பு:

1. தசாவதாரம் விழாவில் நடிகர் விஜய் கார் மறிப்பு: “மும்பையிலிருந்து கமல்ஹாசனால் அழைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள், விழா முடிந்ததும் கமலிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். அவர்களை வேறொரு இடத்தில் சந்தித்த அவர், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டாராம். அதோடு அவர்கள் அனைவரும் திருப்பதி கோவிலுக்கு சென்றுவர ஏற்பாடு செய்தார்”

2. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் :: Kumudam Welcomes U

`வேட்டையாடு விளையாடு’ படத்தில் ஒரு ஃப்ரேமை அழகுபடுத்த ஐந்து நிமிடம்தான் தேவைப்பட்டது. பிறகு அடுத்த ஃப்ரேமிற்குப் போய் விட்டேன். ஆனால் தசாவதாரத்தில் ஒரு ஃப்ரேமில் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் இருக்கும். அதே ஃப்ரேமில் இரண்டு வாரங்கள் கழித்து வேறு கெட்டப்பில் கமல் இருப்பார்.

மீண்டும் அதே ஃப்ரேமில் ஒரு மாதம் கழித்து வேறொரு கெட்டப்பில் கமல் இருப்பார். இந்த எல்லா கெட்டப்பில் உள்ள கதாபாத்திரங்களுக்கும் ஏற்றமாதிரி ஒரே லைட்டிங்கை வைக்க வேண்டும். இது ரொம்ப சிக்கலான விஷயம்.

அதேபோல் மேக்கப் போட்டு ஒரு மணி நேரம் மட்டும்தான் மேக்கப் ஃப்ரெஷ்ஷாக இருக்கும். நேரம் ஆக ஆக மேக்கப் இளக ஆரம்பிக்கும். அதனால் முதலில் உள்ள ஸ்கின் டோன், கலர், எல்லாம் மாறிவிடும். அதற்கேற்றபடி ஒளிப்பதிவு செய்யவேண்டும். இதுபோன்று நிறைய சவால்கள்.

இது ஒரு ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலிலான படம். அதற்கான தகுதி இப்படத்தில் எல்லாவிதத்திலும் இருக்கிறது. ஒரு இன்ச் கேமரா ஆங்கிள் மாறினாலும் கூட ஒட்டு மொத்த காட்சியுமே சொதப்பலாகிவிடும். இதனால் பக்காவாக ஸ்டாரி போர்ட் தயார் செய்து ஷூட் செய்தோம். இதைக் கவனிக்கவே எட்டு உதவியாளர்கள் உழைத்தார்கள்.”

3. இது வரை 48 கோடிக்கு விற்பனை ஆகியுள்ள ஏரியா வியாபாரம்: Dasavatharam – Sales gossips: Market rates for various sectors, districts – அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா எவ்வளவு? கலைஞர் தொலைக்காட்சி எத்தனை கோடி தரும்??

தொடர்புள்ள விற்பனைப் பதிவுகள்:

அ) உலகமெங்கும் வசூல் மழையில் சிவாஜி: ரூ.100 கோடியை நெருங்குகிறது

ஆ) AVM, Rajni & Shankar: ‘Sivaji – The Boss’ – Profit & Loss, Distribution woes, Balance Sheet, Income: “சிவாஜி’ த லாஸ்!: சர்ச்சைகளுக்கிடையே ஒரு சாதனை விழா – தினமணி”

இ) Ilaiya Thalabathy Vijai’s Kuruvi beats AVM, Shankar & Rajni’s Sivaji – The Boss: “ரஜினியின் சாதனையை முறியடித்த விஜய்”

ஈ) Why ‘Sivaji’ is delayed?: “65 கோடிக்குதான் படத்தை விற்பனை செய்வோம் என்று கூறி வந்த ஏ.வி.எம் நிறுவனம் 55 கோடிக்கு ஜெமினி லேப் நிறுவனத்திடம் விற்றுள்ளது”

உ) ‘தயாரிப்பாளர்களை வாழ விடுங்கள்; நடிகர்கள் சம்பளத்தை உயர்த்தக் கூடாது’

ஊ) அதிகாரபூர்வ வருமானமும் ஏய்ப்பு வரி விவரங்களும் :: கொடுப்பது ஒன்று எக்செல் கோப்பில் கோர்ப்பது இன்னொன்று

எ) Kuruvi makes box-office History – Super hit Tamil Cinema of the century: Ilaiya Thalapathi Vijai & Director Tharani: “பாக்ஸ் ஆஃபிஸில் பறக்கும் ‘குருவி’!”

ஏ) சிவாஜி – விற்பனை விவரங்கள்

நேற்றைய விவகாரம்: டாவின்சி கோடும் தசாவதாரமும்: கமல் படத்துக்கு தடை கோரி புதிய வழக்கு

கமலின் பத்து திருநாமங்கள் – தசாவதார கதாபத்திரங்கள்

Dasavatharam Posters Bannersகே எஸ் ரவிக்குமாரின் தசாவதாரம் திரைப்படத்தில் கமலஹாஸன் தோன்றும் வேடங்களின் பெயர்கள்: (முந்தைய இடுகை: Dasavatharam « Tamil News)

  1. இரங்கராஜ நம்பி
  2. கோவிந்த் இராமசாமி
  3. அவ்தார் சிங்
  4. பல்ராம் நாயுடு
  5. Audio wrappers Initial Gossipsக்ரிஸ்டியன் ப்ளிட்சர்
  6. ஷிங்கென் நரஹாஜி
  7. ஜார்ஜ் புஷ்
  8. வின்சென்ட் பொவராகன்
  9. கிருஷ்ணவேணி பாட்டி
  10. கலிபுல்லா கான்

படிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்

கரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார்.

மேற்கோளாகக் கொஞ்சமே கொஞ்சம்:

அசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் – எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது – உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு – எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.

இப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று உங்களைப் பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்?

முதலில் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.

‘பால்சாக்’கின் Lost Illusions நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:

ஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். ‘நாவல் ரொம்ப போர்’ என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.

அடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் “the author is dead”. இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன் என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.

ஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து விமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் ‘Changing Places: A Tale of Two Campuses‘ நூலை துணைக்கழைக்கலாம்.

வகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:

  • நீங்க இதுவரைக்கும் வாசிக்காத புத்தகத்தை நினைச்சுக்குங்க…
  • நெனச்சாச்சா?
  • இப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்காங்களே, உங்களுக்கு ஒரு மதிப்பெண்

இதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து ‘அது கூட வாசிக்காதவரா!?’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்!’ என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.

முதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். ‘காந்தியின் சுயசரிதை‘யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் ‘நான் வாசித்திருக்கிறேன்‘ என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், ‘காந்தியக் கூட படிச்சதில்லையா‘ என்னும் ஏளனம் வந்தே தீரும்!

தமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.

டயலாக் விருமாண்டி நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் வீரன்; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் மனுசன்!

இதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட புத்தகம் அல்லது ஆசிரியர் எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து — இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.

கடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.

வாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.

டேன் பிரௌனின் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது பின் நவீனத்துவ உம்பர்ட்டோ இகோ வகையறா.

எதற்காக எல்லாம் கொல்லப்படுகிறார்கள்? இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.

நாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் ‘நகைச்சுவை’யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.

புத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் — எப்படி இறந்தார்கள்?

இப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.

பலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.

இப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் ஹீரோ!

நீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.

வாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.

ஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.

விமர்சகரின் வேலையும் இதுதான்.

கட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை ஆஸ்கார் வைல்ட்-டின் ‘படிக்கலாமா? வேண்டாமா’ என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:

சிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.

1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.
2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல!
3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.

படித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

சன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா?

உதவிய புத்தகம்: புத்தக தினம்

உதவிய பதிவு: Literature, Science, and a New Humanities :: Jonathan Gottschall Measure for Measure – The Boston Globe: “Literary criticism could be one of our best tools for understanding the human condition. But first, it needs a radical change: embracing science”