Tag Archives: Read

அவன் – அது = அவள் :: யெஸ் பாலபாரதி

தோழமை வெளியீடு
9444302967
பக்கங்கள் 184
விலை : 120

வாசித்தோர் பார்வை:

லக்ஷ்மி
மலர்வனம்: “யெஸ். பாலபாரதியின்“:: ‘அவன்-அது= அவள்’ விமர்சனம்

கதை என்று எடுத்துக் கொண்டால் என் பார்வையில் இது பிரச்சாரக் கதைதான். அதாவது பாலபாரதியின் பாஷையில் சொல்வதானால் கதை சொல்ல வேண்டிய அரசியலை முடிவு செய்து விட்டு எழுதிய கதை. சொல்ல வேண்டிய விஷயத்தை முடிவு செய்த பின் பலரிடம் பேசி சேகரித்த தகவல்களை சம்பவமாக மாற்றி அவற்றைக் கோர்த்து பின்னப்பட்ட கதை. ஆனால் அதிகம் அறியப்பட்டிராத ஒரு தரப்பாரின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் ஆரம்பகாலப் படைப்புகள் இப்படித்தான் இருந்தாக முடியும் என்பதால் அது ஒரு பெரிய குறையாகத் தோன்றுவதில்லை.
:::
வட்டார வழக்கு, திருநங்கையருக்கென இருக்கும் பிரத்யேக மொழி, அங்கங்கு குறுக்கிடும் மும்பையின் பேச்சு மொழியான ஹிந்தி என பல வேறுபாடுகளிருப்பினும் கூட அதிக பின் குறிப்புகள் தேவைப் படாத அளவு மொழி நடையை எளிமையாகத் தந்திருப்பதாலேயே கதையின் மிகக் கனமான ஆதாரப் பிரச்சனையை மட்டும் கவனிக்க முடிகிறது.
:::
முதல் அத்தியாயத்தின் இறுதியில் கோமதி/கோபிக்கு நேரும் கொடுமை முதலாக கடைசி அத்தியாயத்தின் கடைசி வரி வரை அடுக்கடுக்காக திருநங்கைகளின் பல பிரச்சனைகளை வரிசைப் படுத்தியிருந்தாலும் ஒரேடியாக அழுகாச்சி காவியமாகவும் போய்விடவில்லை கதை.
:::
பல விஷயங்கள் விலாவாரியாக நுணுக்கமான தகவல்களைக் கூட விட்டுவிடாது சித்தரிக்கப் பட்டிருக்கிறது.


சேவியர்

கவிதைச் சாலை :: Xavier – யெஸ். பாலபாரதியின் “அவன் – அது = அவள்: எளிமையான தெளிவான நடையும், சொல்லும் விஷயங்களை வரிசைப்படுத்திய நேர்த்தியும் நூலின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. பல இடங்களில் நூலை மூடி வைத்துவிட்டு சற்று இடைவெளி கொடுத்து, கனத்த இதயத்தை எடையிழக்க வைத்து, வாசிப்பைத் தொடர வேண்டியிருந்தது என்பது கலப்படம் இல்லாத உண்மை.
:::
அட்டையில் திருநங்கை நெல்லை. முத்து மீனாட்சி யின் முகம், படம் எடுத்தவர் தஞ்சை பாரதி.


லக்கிலுக்

புத்தக அட்டை நன்றாக வந்திருப்பதாக பட்டது. இந்த நாவலுக்கு பொருத்தமான அட்டை.
:::
தமிழில் வாடாமல்லிக்கு அடுத்து அரவாணிகள் குறித்து வந்த பிக்‌ஷன் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். எனவே தற்கால தமிழிலக்கிய சூழலில் இந்நாவல் மிக மிக முக்கியமானது என்று நினைக்கிறேன்.


கோவி.கண்ணன்
காலம்: எஸ்.பாலபாரதியின் அவன்-அது: திருநங்கைகளுக்கும் நடக்கும் ரவுடிகள் மற்றும் போலிஸ் கொடுமைகளை சிறப்பாகச் சொல்லி இருக்கிறார்.
:::
ராமேஷ்வரத்தில் நடந்தவைகளைச் சொல்லும் போது அங்கு பேசும் வட்டாரவழக்குகள் வசனங்களிலும், கூவாகம் பகுதியில் கதை செல்லும் போது அங்கு பேசுபவர்கள் பன்ருட்டி வட்டார வழக்குகளில் பேசுவது இயல்பாக இருக்கிறது.
:::
ஓரின புணர்ச்சியாளரான அன்பு ஏன் கோமதியை நிர்வாணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என்பது புரியவில்லை. ஓரின புணர்ச்சியாளார்களுக்கு ஆண்குறி தடையே அல்ல என்றே நினைக்கிறேன்.


Asksen Ashok:

அன்பு என்ற கதாபாத்திரம் முதலில் ஒரு முற்போக்கு எண்ணம் உள்ளவனாகவும், திருநங்கைகள் பற்றிய அக்கரை உள்ளவனாகவும் அறிமுகப்படுத்திவிட்டு பின்னர் அவனே ஒரு சராசரி மனிதனாக, ஒரு குடிகாரனாக சித்தரிக்கபட்டுருப்பதாக கூறியுள்ளீர்..
:::
ஒரு வேளை, இந்த சமூகத்தில் முற்போக்கு சிந்தணாவாதிகளின் லட்சணம் இது தான் என்று தோலுரித்துகாட்டவே பாலா அப்படி சொல்லி இருப்பாரோ?? இன்று முற்போக்கு சிந்தணாவாதி என்று சொல்லிக்கொள்ளும் வியாதிகள் ஊருக்கு உபதேசம் செய்யும் வீரர்கள் தானே..


விக்னேஷ்வரன்
வாழ்க்கைப் பயணம்
பிள்ளைக்கு பேய் பிடித்ததாய் தாய் கருதி பூசாரியை அழைத்து பேய் ஓட்டும் போதும் கதை விவரிப்புகள் இலகுவாக மனதில் பதிகிறது. போலி பூசாரியின் காட்சி விவரிப்புகள் நகைச்சுவையாகவே இருக்கிறது.


புதுகைத் தென்றல்:
நானே நானா?
மும்பையில் என் மாமா வீட்டில் இருந்த பொழுது எதிர் பிளாக்கில் பேரம் மடியாததால் குழந்தையையே தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். கேட்டதை விட பெரியத் தொகை கொடுத்துதான் குழந்தையை மீட்டுக்கொண்டு வந்தார்கள்.

போலிசும் ஒன்றும் செய்ய இயலாது.

திருநங்கையாக இருப்பாதால் ஆண்களிடம் பெரிதாக வம்பு செய்ய மாட்டார்கள். பெண்களிடம் நடந்து கொள்ளும் விதமே வேறு.


முத்துலெட்சுமி-கயல்விழி

உங்கள் அனுபவம் போல தான் எனக்கும்.. தில்லியில் குழந்தை பிறந்தால் பணம் வாங்க வருவார்கள். முதல் முறை எனக்கு பெரிய ப்ரச்சனை இருக்கவில்லை ..சமாளித்துவிட்டேன்.. ஆனால் இரண்டாம் முறை ஆண்குழந்தை என்பதைக்காரணம் காட்டி .. தங்கத்தில் எதையாவது தந்தே ஆகவேண்டுமென்று உள்ளேயே வந்து உட்கார்ந்து கொண்டு மோசமாக நடந்து கொண்டார்கள்.. இத்தனைக்கும் நான் மிக மெதுவாக மதிப்பாகத்தான் பேசினேன். ஆப்பரேசன் ஆகி நிற்க இயலாமல் குளிர்க்காற்று (கதவைத்திறந்து வைத்திருந்ததால்) வேறு..இயலாமையில் எனக்கு வந்த அழுகையைக்கூட பொருட்படுத்தவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.. 😦 கடைசியில் பேரம் 2500 க்கு முடிந்தது.


தொடர்புள்ள பதிவு:
Chennai Saimira :: அவன் – அது = அவள் | நான் சரவணன் வித்யா


என் வாசக அனுபவம்:
ரொம்ப சென்சிடிவான சப்ஜெக்ட். நான் அரவாணி குறித்து சொல்லவில்லை. மூலஸ்தானத்தில் கருங்கல் உள்ளே உறைந்து அருள்பாலிக்கும் லிங்கோத்பவரையும் அரங்கநாதரையும், ‘ஹரே ராம; ஹரே கிருஷ்ணா’வையும் சொல்கிறேன்.

பளிங்குக்கல், பாறாங்கல், என்று காடுகளிலும் மலைகளிலும் சாதாரணமாக இருப்பவை சிற்பியின் உளியில் செதுக்கினால் கடவுள் சிலையாக கைகூப்பித் தொழ மட்டுமே மனம் செல்லும். அவை எவ்வாறு உயிர் பெறுகின்றன, செய்பவரின் சிரத்தை போன்றவற்றை, வெண்கல சிலைகள் முதல் கற்சிலைகள் வரை அனைத்தின் செய்முறைகளின் பின்னணியில் கொஞ்சம் ஆற அமர பார்க்க இயலுமா?

திருநங்கை இவ்வாறு வேறு சக்தி பொருந்தியவர்.

எல்லா கற்களும் வீடு கட்டவும் துணி தோய்ப்பதற்கும் போய்க் கொண்டிருக்கும் வார்ப்புரு நிலையில் இருந்து மாறுபட்டு ஸ்தபதியாக தன்னைத் தானே பாவித்து பின்னமாக்கி முழுமை பெற்றுக் கொள்பவர். சுயம்பு லிங்கத்திற்கும், சிற்பத்திற்கும் தெய்வாம்சம் எவ்வாறு உண்டாகிறது? எங்கே அந்த மாற்றம், தூணில் இருந்து வெடித்துக் கிளம்பும் நரசிம்ம ஆக்ரோஷம் உண்டாகிறது?

புனைவில் மட்டுமே காட்டக்கூடிய இவ்வகையான சௌந்தர்ய சிருஷ்டியை ‘அவன்-அது=அவள்’ மூலமாக ஆணாகப் பிறந்து பெண்ணாக நிலைகொள்ளும் திருநங்கையின் நிஜத்தைக் கொண்டு வாசகனில் நிலைநிறுத்துகிறார் பாலபாரதி.

-oOo-

ராஜ் என்னுடைய நெருங்கிய நண்பர். தொண்ணூறில் மணமான அவருக்கு குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. மாதம் ஒரு தடவையாவது ஏதாவது விருந்து; சந்திப்பு; அரட்டை.

அடிக்கடி அளவளாவுவோம். நிறைய பேசுவோம். கோபிகாவை ஏன் எனக்கு பிடித்திருக்கிறது? உடற்பயிற்சிக்கு Wii மட்டும் விளையாடினால் போதுமா? அலுவலில் எவ்வளவு போனஸ் வரும்? எல்லாம் ஆலோசித்து அலசப்படும்.

ஆனால், இன்றுவரை செயற்கை கருத்தரிப்பு முயல்வீரா? வாடகைத் தாய் செய்து பார்க்கலாமே? தத்து எடுத்துவிடுங்களேன்! – ஒன்று கூட ஆரம்பித்ததில்லை. அவரும் இயல்பாக உரையாடலில் புகுத்தியதில்லை.

அரவாணி குறித்த இந்தப் புனைவில் பாலபாரதிக்கு இதே பிரச்சினை. ‘அவன் – அது = அவள்’ பொலிடிகலி கரெக்டாக எழுதப்பட்ட கதை.

-oOo-

நாவல் என்பது கற்பனைக்கும் அனுபவத்திற்கும் சம பாதி இடம் கொடுத்து உருவாக்குவது. படைப்பு என்னும் பகுதியில் ‘நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா?’ என்று வியக்கவைக்கும் நிகழ்வுகளை நம்புமாறு படைத்து; வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட சம்பவங்களின் உணர்ச்சி வெளிப்பாட்டை போதிய அளவில் ரீமிக்ஸ் செய்தால் சுவாரசியம் + இலக்கியம் தயார்.

இந்த நாவலில் தகவல் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால், உப்புசப்பற்ற பாணியில் அல்லாமல் உரையாடலாக வெளியாவதால் உறுத்தாமல் மனதில் பதிகிறது. கூவாகம், ஆணுறுப்பு நீக்குதல், மலஜலம் கழித்தல் போன்ற அனுதின காலைக்கடன் சங்கதி, செக்ஸ் ஆகிய எல்லாமே உண்டு. அவை எழுதுவதற்கு தனி லாவகம் தேவை. பல ஆக்கங்கள் எழுதிய அனுபவமிக்க எழுத்தாளரின் நடை இங்கேயும் கதையெங்கும் விரவி இருப்பது, ‘இதுதான் முதல் நாவலா!’ என்று அதிசயிக்க வைக்கிறது. (முன்னுரையிலோ, ஆசிரியர் உரையிலோ இது பாலபாரதியின் முதல் கதை என்று குறிப்பு எதுவுமில்லை).

லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயசரிதையைப் படித்தவுடன் இதை உடனடியாக படிக்க எடுத்தேன். இருப்பினும், வாசிப்பு சுவைக்கு எந்தவிதக் குறையும் இல்லாத விறுவிறுப்பான நடை கிடைத்தது. வித்யாவின் விவரிப்பில் சில நடைமுறைகள், விஷயங்கள் தெரிய வந்தால், கிட்டத்தட்ட அதனில் இருந்து மாறுபட்ட தகவல்களும் செயல்பாடுகளும் பாலபாரதியின் கதையில் கிடைக்கிறது.

வித்யாவின் வாழ்க்கை வரலாற்றுக்கும் இந்தப் புனைவுக்கும் ஒற்றுமை நிறைய உண்டு. பம்பாய் செல்வது, கடை கேட்பது (பிச்சை எடுப்பது), கல்லூரி படித்தவர்கள், ஆணாக வளர்ந்து திருநங்கை ஆனவர்கள் என்று நிறைய சொல்லலாம்.

இரண்டு புத்தகத்தையும் ஒருங்கே வாசித்தால், திருநங்கை குறித்த குத்துமதிப்பான பரிமாணம் கிடைக்கும்.

-oOo-

ஏன் குத்துமதிப்பு மட்டும்தான்?

ஏன் ஒருவர் திருநங்கை என்று உணரப்படுகிறார்? அறிவியல் பார்வை தந்திருக்கலாம். புனைவு என்பதற்குரிய உரிமம் எடுத்துக் கொண்டு, ஆண் மகவு மட்டுமே நிறைந்த குடும்பத்தில் கடைக்குட்டியாக பிறந்ததாலோ என்னும் சந்தேகம் தெளித்து, அத்தைகள் சீராட்டா, அடி உதையா என்று குழப்பி, இறுதியாக (ஆசிரியர் விருப்பப்பட்டால்) ‘இவை எதுவுமே இல்லையாக்கும்’ என்று சுயம் அறிதலை விரிவாக தந்திருக்க வேண்டும்.

கோமதியுடன் கூட வசிப்பவரில் பலர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, அதிகம் பள்ளிப்படிப்பு முடிக்காதவர்களாக சொல்லப்படுகிறார்கள். அவர்களில் எவரோ ஒருவரையோ, தனம் போன்ற மூத்த தலைமுறை உறுப்பினர்களையோ, விவரித்து, சம்பவங்களை இரத்தமும் சதையுமாக ஆசிரியர் கொணர்ந்திருக்கலாம். இதன் மூலம், மாறுபட்ட இரு சூழல் கிடைத்திருக்கும்.

-oOo-

திருநங்கையின் பல்வேறு சங்கடங்களையும் மனக்குமுறல்களையும் ‘அவன்-அது = அவள்’ முழுவதுமாக கொடுத்துவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. இவ்வாறு யோசிக்க வைப்பது பாலாபாரதிக்கு கிடைத்த மிகப்பெரிய உச்சம். ஆசிரியனுக்குக் கிடைத்த வெற்றி!

திருநங்கை, தற்பால் நாட்டம் கொண்டோர் படைப்புகளில் தமிழில் பாலபாரதியின் இந்தப் படைப்புதான் சமகால முதல் முயற்சியாக முன்னோடியாக இருக்கிறது. தலித் இலக்கியத்திற்கு ஒப்பான தீவிரமான களத்தில் இயங்கும் அதே சமயத்தில் — உப்புசப்பற்ற விவரணைகளை மட்டும் கொண்டு வாசகனை அயர்வுற வைக்காமல், விறுவிறுப்புடன் ரசனை குன்றாமலும் இருக்கிறது.

-oOo-

எனினும், சங்கர் (பக். 29) என்று அறிமுகமாகும் சகோதரன் சேகர் (பக். 71) ஆகிவிடுகிறான். சொல்லப் போனால், கோமதியின் குடும்பம் குறித்த அறிமுகமாக விளங்கும் அத்தியாயமே அவசரகதியில் விவரணப்படம் போல் சுறுக்கென முடிகிறது. இது கோமதியின் கதை என்றாலும், ‘ஏன் அவர் இவ்வாறு உணர்ந்து கொண்டார்’ என்பதற்கு உடலியல் கூறுகள் தவிர சமூகவியல் பிரச்சினைகளும் காரணமாக இருந்திருக்கலாம் என்னும் சங்கேதத்தை ஆசிரியர் இங்கு உருவாக்கி இருக்க வேண்டும்.

இதே போல் ஆறாம் வயதில் இருந்து கூடப் படிக்கும் சரவணணும் அதிரடியாக கல்லூரியில்தான் (பக். 74) அறிமுகம் ஆகிறார். பால்ய வயதில் இருந்தே கோபியை தெரிந்தவர் என்னும் அழுத்தம் தேவைக்குரிய வலிமையுடன் வெளியாகவில்லை.

தற்பால் நாட்டம் கொண்டவனாக சித்தரிக்கப்படும் அன்பு, ஆண்குறி கண்டவுடன் சுருங்குகிறான் (பக். 157) என்பது நம்ப இயலவில்லை. உறவின் போது பயன்படுத்தபடும் செக்ஸ் பொம்மைகள், கட்டிப்போடுதல், அடிமைப்படுத்தல் போன்ற பல்வேறு முறைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்டிக் கூட அன்பை வில்லனாக மாற்றி இருக்கலாம். அல்லது, அவனின் மனக்கிடக்கைக்கு வேறு ஏதாவது இடைநிகழ்வையாவது புகுத்தி நம்பகத்தன்மையை கூட்டியிருக்கலாம். ஓரினப் புணர்ச்சியாளர்களுக்கு ஆணுறுப்பு மிகவும் மகிழ்வளிக்கக் கூடியதாக இருப்பதால்தான் தற்பால் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

சில இடத்தில் பொதுமையாக்கலில் விவரிப்பு துவங்குவதையும் தவிர்க்கலாம். (பக். 74)

பேராசிரியர்களை சமாளிப்பது இன்னும் கஷ்டம். ஒரு பேராசிரியர் இவனைக் கண்டாலே அசடு வழிவதும்… அன்பாக நடந்து கொள்கிறேன் என்று இவனை இடித்தபடி நிற்பது, தடவுவது போன்ற தொல்லைகளைக் கொடுத்து வந்தார்.

இதே போல் காவல்துறையினர் மோசமாக நடந்துகொள்ளும் இடத்திலும், அந்த இடத்தின் போலிசின் அசிங்கத்தை வீரியத்துடன் வெளிப்படுத்தி இருக்கலாம். நிர்வாணம் செய்து கொள்ளும்போது வாசகனுக்கு பயம் கலந்த மரியாதை கிடைக்கிறது. ஆனால், காவல்நிலையத்தில் அத்துமீறல் நிகழும்போது அசிங்கம் உண்டாக்கும் வேதனைக்கு பதில் சினிமா காட்சி போல் பற்றற்ற விவரிப்பாக முடிகிறது.

-oOo-

பால்குழப்பத்திற்கு உள்ளானோர் குறித்தும், தற்பால் விருப்பமுடையவர் குறித்தும், திருநங்கை குறித்தும் இதுவரை எத்தனையோ விதவிதமான திரைப்படம் பார்த்திருக்கிறேன். அவற்றைப் பார்க்கும்போது இணையத்தில் மேய்வது போன்ற மகிழ்வு கிடைக்கும். தகவல் கிடைக்கும். பச்சாதாபம் வரும். பரிதாபம் தோன்றும். பதிவுக்கு மேட்டர் கூட கிடைக்கும். இதைவிட மோசம்: அவர்கள் உலகம் முழுமையாகப் புரிந்தது போன்ற அதிநம்பிக்கை உண்டாகும்.

இந்த நாவல் ஒரு வாசகனை அவர்களின் உண்மையான உலகுக்குள் அழைத்துச் செல்கிறது. ‘உனக்கு ஒன்றுமே தெரியாதே ஐயா!’ என்பதை உணர்த்தியது. திருநங்கையின் செய்கைக்கு பின்னுள்ள முஸ்தீபுகளை புலப்படுத்தியது. அரவாணிகளின் செயல்பாட்டுக்குப் பின்னேயுள்ள அர்த்தங்களை உறைக்க வைத்தது. அதற்காக பாலபாரதிக்கு நன்றி.

பாலபாரதிக்கு இது முதல் நாவல். அடுத்த முறை இது போன்ற சிறிய தடுக்கல்களை நீக்கி, புதிய களத்தில் தமிழிலக்கியத்தின் மைனாரிட்டிகளை தாழ்த்தப்பட்டவர்களை கண்டுகொள்ளப் படாத சமூகத்தை அறிமுகமும் ஆழ்பரிணாமமும் தருவார்.

நாவலைக் கொணர்ந்தளித்த வெட்டிப்பயலுக்கு சிறப்பு நன்றி.

நான் வித்யா: புத்தகம்

ஏற்கனவே நிறைய விமர்சனம் படித்து இருந்தாலும், பால் மாற்றிக்கொண்ட சிலரோடு பழகி இருந்தாலும், நான் சரவணன் வித்யா, எடுத்தவுடன் கீழே வைக்க முடியாத அளவு பதைபதைப்பான நடையுடனும் வீரியத்துடனும் எழுதப்பட்டிருக்கிறது.

அவசியம் வாசிக்கவும்.


ஆசிப் மீரான்

‘கோத்தி’யாக உலாவரும் சரவணன் தனது ‘நிர்வாணத்து’க்காக ஆந்திரா செல்லும் பகுதியிலிருந்து துவங்கும் அவரது சுயசரிதையில் அவருக்கேற்பட்ட அவமரியாதைகள், துணிச்சலோடு செயல்பட்ட தருணங்கள், அதையும் மீறி காரணமின்றி மிதிக்கப்பட்ட தருணங்கள், எதிர்கொண்ட சவால்கள், உதவிய நண்பர்களின் மீதிருக்கும் அன்பு, தங்களில் ஒருத்தியாக ஏற்றுக்கொண்ட திருநங்கை தோழிகள், திருநங்கைகளின் எழுதப்படாத சட்டம், திருநங்கைகளின் நானிகள், திருச்சி, சென்னை, பூனா, ஆந்திரா, மதுரை சென்னை என்று அலைக்கழித்த வாழ்க்கையில் கடந்து போன சம்பவங்கள், சந்தித்த அவலங்கள் என்று உயிர்வலியைச் சொல்லும் புத்தகம் இது.

“சாத்தான்”குளத்து வேதம்


இகாரஸ்

வாசித்ததும் மனசு கனத்துப் போனது என்று சொன்னால் அது க்ளிஷே ஆகப் பார்க்கப் படுமோ என்று தோன்றுகிறது.

கணிப்பொறி அறிவியலில் இளநிலைப் பட்டமும், மொழியியல் பாடத்தில் முதுகலையும் படித்துவிட்டு, நாடகத்துறையில் ஈடுபாடு கொண்ட ஒருவர், தன்னுடைய ஆண் என்கிற அடையாளத்தைத் துறக்க மேற் கொண்ட முயற்சிகளையும், துறந்த பின்னர் சமூகம் அவரை எதிர் கொண்ட முறைகளையும், சந்தித்த வன்முறைகளையும், நிராகரிப்புகளையும் உள்ளடக்கி எழுதியிருக்கும் இந்த தொகுப்பு, தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் ஒரு மைல்கல்.

Prakash’s Chronicle 2.0


கிருத்திகா

மிகவும் சுயம் சார்ந்த உணர்ச்சிகளையும் அதற்கான ஜீவ மரணப்போராட்டத்தையும் எந்த வித சுய பச்சாதாபமும் இன்றி மிகத்தெளிவாக அதே சமயம் புனைவுகளின் சாயல்களின்றி ஓர் கம்பீரமான் எழுத்து நடையில் படைத்துள்ளார். “Non fiction/Autobiography” என்ற பிரிவின் கீழ் இந்தப்புத்தகம் தொகுக்கபட்டிருந்தாலும், இது அவரது சொந்த வாழ்க்கையாக மட்டும் கருதப்படாமல் மொத்த திருநங்கைகளின் ஒரு வாழ்வியல் போராட்டத்தை விளக்கும் விதமாக அமைந்திருப்பது இந்த புத்தகத்தின் வெற்றிக்கு ஒரு வித்து.

வடிகால்


பத்ரி

இதை எழுதும்போது வித்யா எத்தனை மனச்சங்கடங்களை அனுபவித்திருப்பார் என்பதை வாசிக்கும்போது என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

திருநங்கைகள் குறித்து நமக்குத் தெரிந்ததெல்லாம் ஒன்றுமே இல்லை என்று நிராகரித்துவிடுகிறது இந்தப் புத்தகம். கஷ்டம் என்றும் துன்பம் என்றும் துயரங்கள் என்றும் ஆண்களும் பெண்களும் சொல்வதெல்லாம் உண்மையில் கஷ்டங்கள்தானா, துன்பங்கள்தானா என்று வாசித்ததும் நம்மைக் கேட்கவைக்கிற தன்மை இந்நூலின் முக்கிய அம்சம்.

எண்ணங்கள்


சுரேஷ் கண்ணன்

சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ என்கிற நாவல். ‘பெரும்பாலும் ஒரு ஆணுக்குள் சிறைப்பட்டிருக்கிற பெண்மைதான் ஒரு காலகட்டத்தில் விழித்தெழுந்து ஆண்மையை மறுதலித்து உச்சநிலையில் திருநங்கையாக உருமாற வைக்கிறது’ என்கிற அரைகுறையான புரிதலே அப்போதுதான் ஏற்பட்டது.
:::

‘என்னைத் தவிர எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்களோ’ என்கிற தாழ்வுணர்ச்சி பெரும்பாலோருக்கு தோன்றுவதைப் போலவே எனக்கும் அவ்வப்போது தோன்றுவதுண்டு. துக்ககரமான மனநிலையில் ‘எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கிறேன்” என்று வாழ்க்கையை திரும்பிப்பார்க்கும் போது சுயபரிதாபம் மனமெங்கும் நிறைந்து வழியும்.

பிச்சைப்பாத்திரம்


புத்தகப்பார்வை

நான்கு பேர் வரிசையாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தார்கள். அவர்களுள் மூன்று பேர் வாட்டசாட்டமாக, விறைப்பாக இருந்தார்கள். ஒருவன் மட்டும் கொஞ்சம் சாது போல் தெரிந்தான். பொதுவாக முரடாகத் தோற்றமளிக்கும் ஆள்களைத் தவிர்ப்பது என் வழக்கம். எனவே, அந்த மூவரைத் தவிர்த்துவிட்டு நான்காவதாக இருந்த அந்தச் சாது நபரிடம் போய்ப் பிச்சை கேட்டேன்.

தந்தார். இரண்டு ரூபாய். அவர் தமிழர்தான். எனவே, இயல்பாக ஓர் உரிமை எடுத்து ‘என்ன தமிழ்க்காரரே, ஒரு அஞ்சு ரூபா தரக்கூடாதா?’ என்று கேட்டேன்.

நான் வாக்கியத்தை முடித்திருக்கவில்லை. சற்றும் எதிர்பாரா விதத்தில் பளாரென்று கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நிலை குலைந்து போனேன்.


இறுதிப் பகுதி

எனக்குத் தெரிந்து இந்தியாவில் இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமும் திருநங்கைகள் பிச்சை எடுப்பதிலிருந்தோ பாலியல் தொழில் புரிவதில் இருந்தோ மீள்வதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுத்ததில்லை. ‘நீ பாலியல் தொழிலே செய்; ஆனால் பாதுகாப்பாகச் செய்’ என்கிற போதனை ஒருவர் வாழ்வில் என்ன மறுமலர்ச்சியை உண்டாக்கும் என நினைக்கிறீர்கள்? வெறும் அபத்தம்.
:::
திருநங்கைகளில் பலர் விநோதமாக நடந்துகொள்வதும், உரக்கப் பேசி நடுவீதியில் தர்ம சங்கடம் உண்டாக்குவதும், பாலியல் தொழிலுக்கு வலிய அழைப்பதும், ஆபாசமாக பேசி அருவருப்பூட்டுவதும், முற்றிலும் அவர்களின் தற்காப்புக்காக மட்டுமே என்று நான் சொன்னால், தயவு செய்து நம்புங்கள். அதுதான் உண்மை.

பாதுகாப்பற்ற சமூகத்தில், எங்களுக்கான குறைந்தபட்ச பாதுகாப்பை நாங்கள் இவ்வாறெல்லாம் செய்துதான் உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. உடல் வலிமை மிக்க முரட்டு ஆண்கள் வம்புக்கு வந்தால், எங்களால் எதிர்த்து நிற்க முடியாது. பணிந்துபோகவும் விருப்பமில்லாவிட்டால், அருவருப்புணர்வை உருவாக்கி அவர்களை விலகிச் செல்ல வைப்பதே எங்களுக்குத் தெரிந்த வழி.
:::

விளிம்புநிலை பிரதிநிதி ஒருவரின் நூலை பதிப்பிக்க முன்வந்ததற்காக கிழக்கை நாம் நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.


பேட்டி

மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.

சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.

பார்வைகள்: கேப்பங்கஞ்சி with கவிதா


ஆழியூரான்

26 வயதென்பது வாழ்வை தொடங்க வேண்டிய வயது. சுய சரிதை எழுத வேண்டிய வயதல்ல. ஆனால், இதற்குள் லிவிங் ஸ்மைல் கடந்து வந்திருக்கும் வலி மிகுந்த பாதை, ரணங்களை மட்டுமே அவருக்கு வழங்கியிருக்கிறது.
:::
‘கண்ணாடி எல்லோருக்கும் அவரவர் ஸ்தூல உருவத்தை மட்டுமே பிரதிபலிக்க, திருநங்கைகளுக்கு மட்டும் அவர்களின் மனத்தை, உள்ளே கொந்தளிக்கும் உணர்வுகளை, உள்ளார்ந்த அவர்களுடைய பெண்மையை ஒரு சித்திரமாக மாற்றி கண்ணெதிரே காட்டும். இதை மற்றவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது. உங்களுக்கு முகத்தையும், எனக்கு முகத்துக்குப் பின்னால் உள்ள மனதையும் காட்டும் கருவி அது. எனக்கு என்றால் எங்களுக்கு.. எங்கள் எல்லாருக்கும்.!’

நடைவண்டி


லிவிங் ஸ்மைல் சுயசரிதையில் என்னை மிகவும் பாதித்த சில வாழ்க்கைச் சிதறல்:

எல்லாவிதமான கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு விடலாம். எப்போதாவது நாம் ஓர் அனாதை என்று தோன்றிவிடுமானால் பெரிய பிரச்னை. சுய இரக்கம் ஒரு வலுவான விஷம். [பக். 135]

திருநங்கைகளிடம் வியாபாரம் செய்தால் என்ன? பொருள் முக்கியமா? விற்போர் முக்கியமா? இது என்ன மனோபாவம் என்று எனக்குப் புரியவே இல்லை.

கைதட்டிப் பிச்சை எடுத்தபோது கூடக் காசு தர முன் வந்தவர்கள், வியாபாரம் என்று வந்தபோது, வேறுபக்கம் திரும்பிக் கொண்டார்கள். ஒரு நாளைக்கு ஒரு முரையாவது ‘உழைச்சு திங்க வேண்டியதுதானே! போங்க போங்க’ என்று விரட்டிய மகராசன் யாரும் அந்த ரயில்களில் ஏனோ வரவில்லை. [பக். 153]

யோசித்துப் பார்த்தால் என் பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் நானேதான் காரணமாக இருந்துவந்திருக்கிறேன். நானே விரும்பித் தேடிக் கொண்டவைதான் எல்லாம். இன்னொருத்தரைக் குறை சொல்ல முடியாது.

ஆனால், என் தேவைகள், என் இருப்பு, என் வாழ்க்கை அடுத்தவர்களுக்குப் பிரச்னை தரக்கூடியவையாக அமைவதற்கு நானா காரணம்? புனே எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக அங்கு எனக்கு கிடைத்த சுதந்திரம். ஒரு பெண்ணாக சுதந்தரமாக வலையவர முடிந்ததில் இருந்த ஆனந்தம். ஆனால் அங்கு நான் பிச்சை எடுக்கவோ, விபசாரம் செய்யவோ மட்டும்தான் முடியும். இரண்டுமே எனக்குப் பிடிக்காதபோதுதான் புனேவை விட்டு வெளியேற முடிவு செய்தேன். [பக். 164]

அவரது பழைய சிறு லெண்டிங் லைப்ரரி இப்போது அதிநவீனமாகிவிட்டிருந்தது. உலகம் ரொம்பத்தான் வேகமாக முன்னேறுகிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அவரால்தான் என் முடிவை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. [பக். 168]

இது என்ன வாழ்க்கை என்று புரியவேயில்லை. எல்லாமே நிச்சயமற்றதாக இருந்தது. வேலை கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். தங்க ஓரிடம் கிடைக்கலாம். அதுவும் கிடைக்காமல் போகலாம். ஊர் உறவுகள், சொந்தங்கள் அனைவரும் இருந்தாலும் இல்லாதது போலவே சமயத்தில் தோன்றுகிறது. [பக். 179]

“போற வர்ற வழியில யாராவது உங்களைக் கிண்டல் பண்ணா எப்படி எடுத்துக்குவீங்க?”
சிறிய புன்னகையோடு ஆரம்பித்தேன். “ஒண்ணும் பிரச்னை இல்லை சார். அதெல்லாம் பழக்கமானதுதான். இப்பக்கூட வர்ற வழியில ஆட்டோ ஸ்டாண்ட்லேருந்து கிண்டல் சத்தம் கேட்டுது. நான் நேரா அவங்ககிட்டயே போயி ஆட்டோ வருமான்னு கேட்டேன். உடனே சைலண்ட் ஆயிட்டாங்க. ‘எங்க மேடம் போகணும்’னு மரியாதையாத்தான் கேட்டாங்க. எந்தப் பிரச்சினையும் இல்லாமப் பத்திரமா கொண்டுவந்து இறக்கி விட்டுட்டான். நாம நடந்துக்கற விதத்துலதான் சார் இருக்கு. அதையும் மீறி கிண்டல் பண்றவங்க எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கிட்டிருக்க முடியாதே சார்? சமாளிச்சித்தான் ஆகணும்.” [பக். 190]

எனது உரிமை. என் பெயரை நான் மாற்றிக்கொள்வதற்கான உரிமை. அதற்காக த.எ.அ. துறையிலிருந்து, → தாலுகா அலுவலகம், → வழக்கறிஞர் அலுவலகம், → மதுரை அரசு மருத்துவமனை என்று அலைந்து அலைந்து அதிகபட்ச அலுவலக விடுமுறையும் எடுத்தாயிற்று. நியுமராலஜி, மதமாற்றம், பெயர் ராசிக் காரணங்களுக்காக ஒரே மாதத்தில் இந்த தேசத்தில் ஒருவர் தம் பெயரை மாற்றிக் கொண்டுவிடலாம்.எத்தனையோ அரசியல் தலைவர்களே மாற்றிக் கொள்ளவில்லையா? ஆனால் என் தேவைக்காக என் உரிமைக்காக என் பெயரை நான் மாற்றிக்கொள்ள விரும்பியபோது அதற்காக ஒன்றரை வருடங்கள் அலைக்கழிக்கப் பட்டேன். [பக். 208]

பெண்களை இழிவாகக் கருதும் சமூக அமைப்பில், ஆணாகப் பிறந்த நபர் பெண்ணாக மாறுவதென்பது ஆண்வர்க்கத்துக்கும், ஒட்டுமொத்த ஆண்மைக்குமான அவமானம் என்ற தட்டையான ஆணாதிக்க சிந்தனையே திருநங்கைகளைப் பெண்ணாக ஏற்கமுடியாமைக்குக் காரணமோ? ஆணிடம் அடிமைப்பட்டே வாழ்ந்து பழகிவிட்ட சில பெண்களும் இதே சிந்தனைக்குப் பழகிவிடுகிறார்கள். [பக். 212]


வாசக அனுபவம்:

  • ‘நான் யார்?’ என்னும் தேடலை அப்படியே பகிர்ந்து கொள்வதில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களுக்கும் பிரச்சினை உண்டு. லிவிங் ஸ்மைல் விதிவிலக்காக தன் உள்ளத்தை அப்படியே சொல்கிறார்.
  • வறுமையில் வாடுவோர் படும் கஷ்டமும் உண்டு. படிப்பிற்கு பெரும் முக்கியத்துவம் தரும் நடுத்தர வர்க்க ஆசையின் பிரதிபலிப்பும் கிடைக்கிறது. இதை எல்லாம் புனைவில் படித்து சுரணை மங்கிப் போன சமயத்தில் சுயசரிதை என்பதே சுளீர் என்று உறைக்கிறது.
  • விதி‘ திரைப்படத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததற்காக பூர்ணிமா (ஜெயராம்) பாக்யராஜிடம் தர்மசங்கடமான கேள்வி விழுவதற்கு — பார்வையாளர் வருத்தப்பட்டு கொஞ்சம் போல் முன்னேறியும் ஆகிவிட்டது. எப்போது அந்த சினிமா, அன்றாட வாழ்க்கையில் அரவாணிகளை நோக்கி ஈவிரக்கமற்ற வினாக்களைத் தொடுப்பதை எல்லாம் திரைக்கதை ஆக்கும்?
  • இன வரைவியல் என்று ஆவணப் படம் போல் மூன்றாம் மனித ஆய்வுப் பார்வை அல்லாத, நிசமாகவே நாமறிந்த ஒருவரின் துன்பங்களையும் மனவோட்டத்தையும், ஆசாபசங்களையும் ஒருங்கே பதியவைக்கிறது.
  • She pulled herself out of the abyss and found her way to stability, but the redemptive narrative isn′t what carries the book. It is Living Smile’s brutal honesty in evaluating her life, introspective dual identity and at times painfully direct memoir of the relationships. Her refreshing penchant for straight talk keeps you reading, even when you are dreading the consequences of her choices.
  • Things I’ve Been Silent About போல் குடும்ப விஷயங்களை ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக பேசுவதற்கு தைரியமும் மனப்பாங்கும் பக்குவமும் வேண்டும். வித்யாவிற்கு எல்லாம் இருக்கிறது. வாழ்த்துகள்!

ஸ்மைல் பக்கம்

Rogue Economics: Capitalism’s New Reality :: Loretta Napoleoni

புத்தக ஆசிரியரின் வலையகம்: Rogue Economics

புத்தகம் வாசிக்க: Rogue Economics: Capitalism’s New … – Google Book Search

மேற்கோள் 1: “The first business on the Internet is pornography, the second is gambling, the third is child pornography. There is no doubt about that.”

மேற்கோள் 2: “”We have thankfully watched the fall of the Berlin Wall, but unfortunately the Wall fell on women’s heads.”

‘வேர் இஸ் த பார்ட்டி’ போட்ட சுப்பிரமணிய சுவாமி, உள்ளூர் அமைச்சர் ப சிதம்பரம் போன்ற பல வல்லுநர்கள் படித்த ஹார்வார்ட் பல்கலையில் செய்த ஆராய்ச்சி இது:

குரங்குக்கு காசு கொடுப்பார். பணத்தை வைத்து என்ன வாங்கலாம் என்றும் கற்றுக் கொடுப்பார். முதலில் தனக்குத் தேவையான திராட்சை, தண்ணீர் என்று வாங்கிக் கொண்டது குரங்கு.

குரங்குகளிடம் பணம் புழங்க ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே பாலியல் இச்சைக்காகவும் பணம் கொடுக்க முயற்சித்தன.

மனிதனின் முன் தோன்றலாகிய வானரம், உணவு, இருப்பிடம் என்பதை விட்டுவிட்டு செக்ஸ் நாட்டத்திற்கு செலவழிக்க சென்றதேன்?

நிதி வரும் முன்னே; தவறான எண்ணம் வரும் பின்னே என்பது புதுமொழியா?

  • சுதந்திரத்திற்கும் அடிமை பேரம் அதிகரிப்பதற்கும் என்ன சம்பந்தம்?
  • விலைமாதர் சல்லிசாவதற்கும் கம்யூனிசம் வீழ்ந்ததற்கும் யாது தொடர்பு?
  • வட்டி விகிதம் குறைவதனால் மட்டுமே வீடு விலை ஏறியதா? வங்கி எப்படி விளையாடியது?

புத்தகம்: Amazon.com: Rogue Economics: Capitalism’s New Reality: Loretta Napoleoni: Books

சென்னை புத்ததகக் காட்சி – மனுஷ்யபுத்திரன் (சென்ற வருடம்)

நன்றி: உயிர்மை :: இதழ் 54 – பிப்ரவரி 2008

wrappers-publishers-generic-tamil-booksநடந்து முடிந்த 31 ஆவது சென்னை புத்தகக் காட்சி, மாறுபட்ட மங்கலான சித்திரங்களை பதிப்பாளர்கள், வாசகர்களிடையே உருவாக்கி இருக்கிறது. சென்னை புத்தகக் காட்சி கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுத்தியக்கம், பதிப்புத் தொழில் சார்ந்த மாற்றங்களை அளவிடும் ஒரு பெரும் நிகழ்வாக நடந்தேறி வருவதால் அதன் குணாதிசயங்கள் பற்றிய கேள்விகளும் விவாதங்களும் எழுப்பப்படுகின்றன. சென்னை புத்தகக் காட்சியின் வளர்ச்சி ஏறாளமான பதிப்பகங்கள் தோன்றுவதற்கு உந்துதலாக இருப்பது மட்டுமல்ல, தமிழகத்தின் முக்கிய மையங்களில் புத்தகக் காட்சிகள் நடத்தப்படுவதற்கும் காரணமாக இருக்கிறது.

:::

புத்தகங்களின் மீதான ஆர்வம் ஒரு பண்பாட்டின் விழிப்புணர்ச்சியோடு தொடர்புடையது. இந்த விழிப்புணர்ச்சியே புத்தகங்கள் வாங்குவதை ஒரு அத்யாவசிய தேவையாக மாற்றக்கூடியது. ஒரு சமூகத்தில் அத்தகைய விழிப்புணர்ச்சி பெருகாத வரை புத்தக சந்தையை ஒரு எல்லைக்கு மேல் விரிக்க முடியாது.

:::

கடந்த சில ஆண்டுகளாக சென்னை புத்ததகக் காட்சி கண்ட வளர்ச்சி பல புதிய முதலீட்டாளர்களையும் பெரிய நிறுவனங்களையும் பதிப்புத் துறை நோக்கி ஈர்த்திருக்கிறது. பதிப்புத் தொழில் வளர்ச்சி அடைவதற்கும் விரிவடைவதற்கும் புதிய முதலீட்டாளர்கள் வருவது மிகவும் அவசியம். தமிழ் எழுத்தாளனின் பிரசுரம் சார்ந்த நெருக்கடிகள் ஏற்கனவே பெருமளவு தீர்ந்துவிட்டதுடன் புதிய துறை சார்ந்த நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கான சூழலும் உருவாகி இருக்கிறது.

அதே சமயம் எந்த ஒரு மாற்றமும் தமிழில் நிகழும்போது அதன் எதிர்மறை அம்சங்களே மேலோங்குவது தமிழின் துரதிஷ்டங்களில் ஒன்று.

பதிப்பகத் துறைக்குள் நுழைந்திருக்கும் பெரிய நிறுவனங்கள் சந்தையைக் கைப்பற்றிக் கொள்ளும் ஆவேசத்தில் துறை சார்ந்த நூல்களை வாங்கும் வாசகனின் ஆர்வத்தை சுரண்ட முற்படுகின்றன. மேலோட்டமான தகவல்களுடனும் உவப்பற்ற மொழி நடையுடனும் அவசர அவசரமாக எழுதப்பட்டு, பதிப்பிக்கப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் இந்த நூல்கள் வாசகர்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்துவதை பரவலாகப் பார்க்க முடிந்தது.

ஒரு நூலை எழுதுவதற்கான குறைந்தபட்ச உழைப்போ மொழி ஆளுமையோ இன்றி எழுதப்படும் இத்தகைய நூல்களை பதிப்பிப்பவர்கள் தமிழில் செயல்படும் வெகுசன இதழியல் கலாச்சாரத்தை பதிப்புத் துறைக்குள்ளும் கொண்டுவந்து வெற்றியடையலாம் என நம்புகின்றனர்.

பத்திரிகை வாசகனும் புத்தக வாசகனும் குணாம்ச ரீதியில் வேறுபட்டவர்கள் என்பதை இந்த புதிய முதலீட்டாளர்கள் அறியாததற்கு காரணம் தமிழின் கலை, கலாச்சாரம், அறிவுத்துறைக்கும் இவர்களுக்கும் இடையிலான இடைவெளியே.

தமிழ் பதிப்புத்துறையை முழுக்க ஒரு சந்தையாக மட்டுமே அணுகுகிறவர்கள் இதற்குள் நீண்ட காலமாக செய்யப்பட்டு வரும் அறிவியக்கத்தையும் பண்பாட்டு இயக்கத்தையும் கடுமையாக அவமதிக்கிறார்கள்.

புத்தக கண்காட்சி ஒரு வர்த்தக மையம் மட்டுமல்ல. அது ஒரு பண்பாட்டு நிகழ்வு. அதில் ஏற்படக்கூடிய தளர்ச்சியினை போக்கி அதை வளர்த்தெடுப்பது காட்சி ஊடகங்களால் அழிக்கப்படும் ஒரு சமூகத்தின் பண்பாடியக்கத்தினை பாதுகாக்கும் ஒரு செயல்பாடு.

குறிப்பு: காலச்சுவடு பிப்ரவரி 2007 இதழிலும் இதே போன்ற ஒத்த கருத்துடைய தலையங்கம் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா தன்னை மட்டும் முன்னேற்றிக் கொள்ள நினைத்தால் உலகப் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும்.

FT.com / Columnists / Martin Wolf – Choices made in 2009 will shape the globe’s destiny: Financial Times

Some entertain hopes of restoring the globally unbalanced economic growth of the middle years of this decade. They are wrong. Our choice is between a better balanced world economy and disintegration. And it must be made this year.

public-debt-banking-crisis-ft-graphs-indices

Banking Crises: An Equal Opportunity Menace: The historical frequency of banking crises is quite similar in high- and middle-to-low-income countries, with quantitative and qualitative parallels in both the run-ups and the aftermath. We establish these regularities using a unique dataset spanning from Denmark’s financial panic during the Napoleonic War to the ongoing global financial crisis sparked by subprime mortgage defaults in the United States.

Banking crises dramatically weaken fiscal positions in both groups, with government revenues invariably contracting, and fiscal expenditures often expanding sharply. Three years after a financial crisis central government debt increases, on average, by about 86 percent. Thus the fiscal burden of banking crisis extends far beyond the commonly cited cost of the bailouts. Our new dataset includes housing price data for emerging markets; these allow us to show that the real estate price cycles around banking crises are similar in duration and amplitude to those in advanced economies, with the busts averaging four to six years. Corroborating earlier work, we find that systemic banking crises are typically preceded by asset price bubbles, large capital inflows and credit booms, in rich and poor countries alike.

:: Levy Economics Institute of Bard College ::

usa-america-sector-balances-trade-deficit-balanced-budget-obama

ஜெயந்தி சங்கர்: புது புத்தகங்கள்

mana-pirigai-novel-fiction-tamil-literature-jayanthi-shankar1. மனப்பிரிகை (நாவல்)

அவனுக்கும் அவளுக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போகிறது. ஆனால், இருவருமே ‘திருமணம்’ எனும் வாழ்நாள் கமிட்மெண்டுக்குத் தயாராகவில்லை என்று கருதுகிறார்கள்.

அவ்வாறான வாழ்நாள் பந்தத்துக்கு ஒருவருக்கொருவர் சரியானவர் தானா என்று எப்படித்தான் தெரிந்து கொள்வது என்று யோசிக்கிறார்கள். ஒரு உடன்படிக்கைக்கும் வருகிறார்கள். என்ன உடன்படிக்கை? சந்தியாவும் கோபியும் சேர்ந்தார்களா? திருமணத்திலா? என்னதான் நடந்தது?

நிறைய கிளைக்கதைகளுடன் சிங்கப்பூரில் நடக்கும் இந்தக்கதை புதிய மொழியிலும் வடிவிலும் சொல்லப்பட்டுள்ளது.

பக்கம்- 275 :: சந்தியா பதிப்பகம்


thirai-kadalodi-jeyanthy-sankar-books2. திரைகடலோடி (சிறுகதைகள்)

ஆசிரியரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதியான ‘திரைகடலோடி’யில் பத்து சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.

ரவி சுப்ரமணியம் எழுதியிருக்கும் முன்னுரையில் இருந்து: ‘இந்தக்கதைகளில் வரும் மனிதர்கள் நம் மனிதர்கள். இரண்டாயிரம் வருஷமாய் பொருள் தேடப் பிரிந்து செல்லும் மரபுடைய நம்மினத்தின் வாரிசுகள்.

கதைகளைத் திறம்படச் சொல்வதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உள்ளடக்கத் தேர்வில் செலுத்தும் கவனம் அசாத்தியமானதாக இருக்கிறது. மொழியையும் உணர்வுகளையும் சம்பவங்களையும் சம்பாஷணைகளையும் ஊடுபாவாய் இவர் இணைக்கும் விதம், கதைக்குள் தென்படும் தற்காலத் தன்மை போன்றவை இவரைத் தனித்துக் காட்டுகிறது.’

பக்கம் – 130 :: மதி நிலையம் வெளியீடு


meen-kulam-chinese-shorts-children-jayanthy-sankar3. மீன் குளம்

(சிறார் சீனக் கதைகள் – ஆங்கிலம் வழி)

அரிசி வீதி, இந்த மருத்துவமனையில் பேய் இருக்கிறது, நீர்ச் சக்கரம், டிராகனின் முத்து, மீன் குளம், தவளையின் கால்கள் உள்ளிட்ட 33 சிறார்கதைகள் அடங்கிய இந்த நூல் சிறார்கள் படிக்கக்கூடிய எளிய மொழியில் ஆங்காங்கே கோட்டோவியங்களுடன் அழகிய வண்ண அட்டையில் அமைந்துள்ளது. சீனக்கலாசாரத்தில் சிறார்களுக்கு ருசியும் ஈடுபாடும் ஏற்படக்கூடிய சுவாரஸியம் நிறைந்த கதைகள்.

பக்கம் – 160 :: மதி நிலையம் வெளியீடு

2008 – Tamil Books

சென்ற முறை இந்தியா போனபோது எனி இந்தியனில் வாங்கிய புத்தகப் பட்டியல். பரிந்துரைத்த எனி இந்தியன் தேவராஜனுக்கும் நிழல்கள் பிரசன்னாவுக்கும் நன்றி. கிழக்குப் பதிப்பகத்தில் வாங்கியது தனிப் பட்டியல்.

படித்ததும் பிடித்தவை நீலவண்ணத்திலும், கவராதவை சிவப்பு வண்ணத்திலும், படிக்க எடுக்காதவை கறுப்பு நிறத்திலும் உள்ளது.

வெங்கட்டின் இவ்வருடத் தொகுப்பு :: சென்னை புத்தகக் கண்காட்சி 2009

‘நுனிப்புல்’ உஷா: 2009ன் புத்தக சந்தையும் நான் வாங்கியவைகளும்

தொடர்புள்ள சில:

1. இரண்டாம் ஜாமங்களின் கதை: சல்மா – காலச்சுவடு
2. நாஞ்சில் நாடன் கதைகள் – தமிழினி
3. கானல் நதி: யுவன் சந்திரசேகர் – உயிர்மை
4. கணையாழி கடைசிப் பக்கங்கள் – சுஜாதா
5. சிலுவைராஜ் சரித்திரம்ராஜ் கௌதமன் – தமிழினி
6. ஆழிசூழ் உலகு: ஜோ டி குருஸ் – தமிழினி
7. கன்னி: ஜெ.பிரான்சிஸ் கிருபா – தமிழினி
8. யாமம்: எஸ்.ராமகிருஷ்ணன் – உயிர்மை
9. மணல் கடிகை: சூத்ரதாரி – தமிழினி
10. சாருநிவேதிதா ராஸ லீலா – உயிர்மை
11. சிலிர்ப்பு: தி. ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு
12. வெள்ளாவி: விமல் குழந்தைவேல் – உயிர்மை
13. கமண்டல நதி – நாஞ்சில் நாடனின் புனைவுலகு: ஜெயமோகன் – தமிழினி
14. குள்ளச்சித்தன் சரித்திரம்: யுவன் சந்திரசேகர் – தமிழினி
15. நான் சரவணன் வித்யா: லிவிங் ஸ்மைல் வித்யா – கிழக்கு
16. நளினி ஜமீலா – ஒரு பாலியல் தொழிலாளியின் சுய சரிதை: தமிழில்: குளச்சல் மு. யூசுப் – காலச்சுவடு
17. கண்ணீரைப் பின் தொடர்தல்: ஜெயமோகன் – உயிர்மை
18. நிழல் முற்றம்: பெருமாள் முருகன்
19. மகாராஜாவின் ரயில்வண்டி: அ. முத்துலிங்கம்
20. வாஸவேச்வரம்: கிருத்திகா
21. சூடிய பூ சூடற்க: நாஞ்சில் நாடன்
22. கோவில் – நிலம் – சாதி: பொ. வேல்சாமி – காலச்சுவடு
23. பூமியின் பாதி வயது: அ. முத்துலிங்கம்
24. பெர்லின் இரவுகள்: பொ கருணாகரமூர்த்தி – உயிர்மை
25. ஆழ்நதியைத் தேடி: ஜெயமோகன் – உயிர்மை
26. ஆஸ்பத்திரி: சுதேசமித்திரன் – உயிர்மை
27. நிழல்வெளிக்கதைகள்: ஜெயமோகன்
28. நித்தியக்கன்னி: எம். வி. வெங்கட்ராம்
29. நவீனன் டைரி: நகுலன்
30. நினைவுப் பாதை: நகுலன்
31. இவர்கள்: நகுலன்
32. வாக்குமூலம்: நகுலன்
33. கூகை: சோ தர்மன்
34. தூர்வை: சோ தர்மன்
35. விசும்பு: ஜெயமோகன் – எனிஇந்தியன்
36. உயிர்த்தலம்: ஆபிதீன் – எனிஇந்தியன்
37. நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்: ஜெயமோகன் – உயிர்மை
38. நதியின் கரையில்: பாவண்ணன் – எனிஇந்தியன்
39. துங்கபத்திரை: பாவண்ணன் – எனிஇந்தியன்
40. ஸீரோ டிகிரி: சாரு நிவேதிதா – உயிர்மை
41. என் இலக்கிய நண்பர்கள்: ந.முருகேச பாண்டியன் – உயிர்மை
42. ஒற்றன்: அசோகமித்திரன்

World math and science test results

மாஸசூஸட்ஸ் கலக்கிடுச்சுபா!

Trends in International Mathematics and Science Study (TIMSS)ல் இந்தியாவை கணக்கில் சேர்த்துக்கல 😦

So-called third world countries that have a higher literacy rate than the U.S., like Costa Rica, and others that contribute a significant number of U.S. advance degreed immigrants, like India , were not part of this study; therefore, the results in terms of world competition are worse than portrayed in these charts.

அ) நான்காம் வகுப்பு கணிதம்:

  1. Hong Kong, score: 607
  2. Singapore, score: 599
  3. Taiwan, score: 576
  4. Massachusetts, US, score: 572
  5. Japan, score: 568
  6. Minnesota, US, score: 554
  7. Kazakhstan, score: 549
  8. Russia, score: 544
  9. England, score: 541
  10. Lithuania, score: 530
  11. United States, score: 529
  12. Germany, score: 525
  13. Denmark, score: 523
  14. Quebec, Canada, score: 519
  15. Australia, score: 516
  16. Ontario, Canada, score: 512

ஆ) நான்காம் வகுப்பு அறிவியல்:

  1. Singapore, score: 587
  2. Massachusetts, US, score: 571
  3. Taiwan, score: 557
  4. Hong Kong, score: 554
  5. Minnesota, US, score: 551
  6. Japan, score: 548
  7. Russia, score: 546
  8. Alberta, Canada, score: 543
  9. England, score: 542
  10. United States, score: 539
  11. British Columbia, Canada, score: 537
  12. Hungary, score: 536
  13. Ontario, Canada, score: 536
  14. Italy, score: 535
  15. Kazakhstan, score: 533
  16. Germany, score: 528
  17. Australia, score: 527

இ) எட்டாம் வகுப்பு கணிதம்:

  1. Taiwan, score: 598
  2. Korea, Rep. of, score: 597
  3. Singapore, score: 593
  4. Hong Kong, score: 572
  5. Japan, score: 570
  6. Massachusetts, US, score: 547
  7. Minnesota, US, score: 532
  8. Quebec, Canada, score: 528
  9. Ontario, Canada, score: 517
  10. Hungary, score: 517
  11. England, score: 513
  12. Russia, score: 512
  13. British Columbia, Canada, score: 509
  14. United States, score: 508
  15. Lithuania, score: 506
  16. Czech, score: 504
  17. Slovenia, score: 501
  18. Armenia, score: 499
  19. Basque Country, Spain, score: 499
  20. Australia, score: 496
  21. Sweden, score: 491

ஈ) எட்டாம் வகுப்பு அறிவியல்:

  1. Singapore, score: 567
  2. Taiwan, score: 561
  3. Massachusetts, US, score: 556
  4. Japan, score: 554
  5. Korea, Rep. of, score: 553
  6. England, score: 542
  7. Hungary, score: 539
  8. Minnesota, US, score: 539
  9. Czech, score: 539
  10. Slovenia, score: 538
  11. Hong Kong, score: 530
  12. Russia, score: 530
  13. Ontario, Canada, score: 526
  14. British Columbia, Canada, score: 526
  15. United States, score: 520
  16. Lithuania, score: 519
  17. Australia, score: 515
  18. Sweden, score: 511
  19. Quebec, Canada, score: 507

முழு விவரங்கள்:

1. Survey: Highlights From TIMSS 2007 (pdf)

2. Math Gains Reported for U.S. Students – NYTimes.com

3. U.S. Students Make Gains in Math Scores – WSJ.com

4. Mass. pupils’ math-science test scores near top internationally – The Boston Globe

5. The progress of school education in India by Geeta Gandhi Kingdon :: March 2007

இந்தியாவும் பள்ளிப்படிப்பும்: குறிப்புகள்

1. None of the South Asian countries nor China participated in the international studies of learning achievement such as the .Trends in International Mathematics and Science. Study (TIMSS 2003) in which 46 countries participated, or in the .Progress in International Reading Literacy Study. (PIRLS 2001) in which 35 countries participated.

Moreover, South Asia does not have the equivalent of the SACMEQ study, which is a regional inter-country comparative study of achievement levels in 14 African countries. However, World Bank (2006) applied the TIMSS questions to secondary school students in the Indian states of Rajasthan and Orissa, with permission of the Indian Ministry of Human Resource Development.

The findings show that international mean achievement in maths test was 52 percent for grade 8 students but the average scores of Rajasthan and Orissa students on the same test were 34 and 37 percent respectively. Similarly, the international mean of achievement was 57 percent for Grade 12 students but the corresponding scores for Indian students were 44 and 38 percent in Rajasthan and Orissa respectively.

However, the high international average percentage mark from the 46 TIMSS countries included both high and low income countries. When India did participate in international studies of learning achievement in early 1970s, the performance of Indian children was poor relative to most participating developing countries, according to the International Association for the Evaluation of Educational Achievement (IEA).

2. International comparison of achievement among school-going 14 year olds across 25 high and low-income countries, using IEA data collected in early 1970s, showed that the mean science test score of Indian students was the second lowest.

Iran was behind India by a small margin. Mean scores of students in Bolivia, Thailand, Colombia, Peru, Mexico, Brazil, Chile and Paraguay were all higher than those of Indian students; the mean score of Japanese students was twice as high as that of Indian students.

The results were similar in (own language) reading comprehension: median reading score was 26 points, Chile’s mean was 14 points, Iran’s 8 points and India’s the lowest at 5 points.

மும்பை தாக்குதல்: இரு பதிவுகள்

பாம்பே தீவிரவாதி

பாம்பே தீவிரவாதி

பதிவு ஒன்று: உள்ளூர் வார இதழில் அகஸ்மாத்தாக மும்பை குண்டுவெடிப்பு ஆரம்பம் ஆன அன்று வெளியான பாஸ்டன் ஃபீனிக்சில் வெளியாகிய சீதா நாரயணின் கட்டுரை:

The Phoenix > Features > Terror masala: “Bollywood’s colorful, multi-genre musicals serve up their most interesting character yet: the singing, dancing terrorist.”

As such, writers have recently begun to experiment with realism, to introduce region and dialect into the story, to present more nuanced explanations of characters’ motives, and to dare to depict social problems like political corruption, drug trafficking, gang violence, poverty, and, yes, terrorism. These are depressing problems, so what better way to present them than with a dash of Bollywood élan? Which brings us to an unusual movie protagonist: the singing, romancing, family-loving, dancing, emotionally open . . . terrorist.


பதிவு இரண்டு: என்ன நடக்கும் என்பதை சொல்லும் ப்ளாகேஸ்வரியின் இடுகை.

Blogeswari: நாளை?: ராம் கோபால் வர்மா எப்படி திரையாக்குவார் என்பதையும் மகேஷ் பட் கதை எவ்வாறு இருக்கும் என்று சொல்லியிருக்கிறது.

அவரின் முந்தைய அனுபவங்கள்: Blogeswari: நேற்று…. & மீடியாவிற்கு ஒரு வேண்டுகோள்

இதுவரை உளறியது

நன்றி: உளறல்

தெரியல’ என்பதற்கு இரண்டு அர்த்தங்கள்: விளங்கவில்லை (அல்லது) பார்க்க முடியவில்லை

நான் சட்ட அமைச்சரானால்:

1. மந்திரியாக பதவியேற்பதற்கு குறைந்தபட்சம் இரண்டாண்டுகளாவது லோக் சபா எம்.பி. ஆக இருத்தல் அவசியம்

2. எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் இரு முறைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் இருந்து தேர்தலில் நிற்க முடியாது.

3. இருபது ஆண்டுகளுக்கு மேல் தொடர்ச்சியாக மந்திரி பதவி/எம்.எல்.ஏ/எம்.பி ஆக இருக்க முடியாது. கட்டாய ஓய்வு தரப்படும்.

ஆகிய சட்டங்கள் அமலாக்கப்படும்.


மின்னஞ்சலில் கிடைத்த விவாதக் கருத்து:

“புரட்சி என்று நாடுபவர்கள் கருத்தளவிலும், அமைப்பளவிலும் செயல் திறன் போதாத மக்கள்.

பல கோடி மக்களின் வாழ்வில் நெருப்பைக் கொட்டி கருக அடித்த ஒரு பெரும் செயலை — புரட்சி என்று கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

நம் தனிமனித இயலாமைகளை மக்கள் திரள் இயலாமையாக மாற்றி நம்மை அடியோடு திருத்தினால்தான் நம் வாழ்வு மாறும் என்ற நிலை போலவே சமுதாயமும் என்று கருதும் ஒரு வித கிட்டப் பார்வை இது (myopia).

உடோபியாவுக்குக் கடும் எதிரி மயோபியா. 🙂

அதே நேரம் உடோபியக் கனவுக்கு மக்கள் பலியாகாமல் தவிர்த்துப் பாதுகாப்பதும் மக்களின் மயோபியாதான்.”


  1. நண்பரின் நக்கல் நறுக் :: எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன். அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன? அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.
  2. “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”
    – Kundera
  3. டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.

பா ராகவன் :: (குதிரைகளின் கதை தொகுப்பு)

1. யுவர்ஸ் ஒபீடியன்ட்லி

இருக்கும் வரை எட்டிப் பார்க்காத அக்கறைகளும் அனுதாபங்களும், இறந்தபின் எல்லோருக்கும் எப்படியோ வந்துவிடுகிறது. மரணம் ஒரு நல்ல மருந்து. உயிரோடு இருக்கும் பலரின் மனநோய்களை அது சட்டென்று குணப்படுத்திவிடுகிறது

2. மூன்று காதல்கள்

அரச மரத்தடியில் கொண்டு வைத்த பிள்ளையார் சிலை போல், மாற்றங்களற்றுப் போனது வாழ்க்கை. எப்போதாவது சில்லறை விழும். சிலர் வணக்கிப் போவார்கள். பிழைப்பில் கலவரம் ஏற்பட்டால் தூக்கி, நீரற்ற கிணற்றில் போட்டு விடுவார்கள்.

3. ஆயில் ரேகை

“புத்திசாலி நவீன இலக்கியவாதிகள் தமிழ் சினிமாவுக்கு டயலாக் எழுதப் போகும்போது ஒரு மாதிரி பட்டும் படாமலும் ஸ்டேட்மெண்ட் விடுவார்கள் இல்லியா? அந்த மாதிரி. நான் உலக உத்தமன்தான். அவன் அயோக்கியன்தான். ஆனால், நானும் அவனும் சேரும் இந்த ஒரு விஷயம் மட்டும் புனிதப் பசுவின் பாலிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பது மாதிரி.”

4. பனங்கள், தென்னங்கள், கன்னங்கள் என்று எதிலெல்லாம் மெல்லிய கிக் கிடைக்கிறதோ, அதிலெல்லாம் ஈத்தைல் ஆல்கஹால் இருக்கிறதென்று அர்த்தம். (கன்னங்கள்? சந்தேகப்படாதீர்கள். நம் கண்ணுக்குத் தெரியும் மாபெரும் ஹைட்ரோகார்பன் ப்ராடக்ட், மனித உடல்தான்.)


இரண்டே அறைகள் கொண்ட வீடு :: யுவன் சந்திரசேகர்

தற்காலத் தமிழிலக்கியத்தில் வந்து சேர்ந்திருக்கும் புதிய போக்குகள், எழுத்தாளர்களெல்லாம் பத்தியாளர்களாக உருமாறிக் கொண்டிருக்கும் ரசவாதம், கவிதைகளில் பெரும் தேக்கம் வந்து சேர்ந்திருப்பது, புத்தகங்கள் மிக அதிக எண்ணிக்கையில் பிரசுரமாவதும் அவற்றைப் பற்றி மிகையான கூறுகளில் விளம்பரங்களும் மதிப்புரைகளும் வெளியாகி, அப்பாவி வாசகனைக் கடுமையான ஏமாற்றத்துக்குள்ளாக்குவதும், ஜனநாயகமயமாகும் எல்லாத்துறையிலும் இயல்பாகவே பதர்கள் அதிகரித்துவிடுவது என்று அலைந்து கொண்டிருந்தது பேச்சு.

இசைத்துறையும் விதிவிலக்கில்லை என்றும் சாஸ்திரிய சங்கீதமும் திரைப்பட பாடல்களும் கூட இந்த ஸ்திதிக்கு வந்து சேர்ந்துவிட்டன என்றும் நாங்கள் இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தோம்.

(வார்த்தை – ஜூன் 2008)