Tag Archives: Jayamogan

நியு யார்க்கில் ஜெயமோகன்: ஒளிப்படங்கள்

அனைத்துப் படங்களும் ஆக்கம்: கணையாழி வோர்ட்ப்ரெஸ் – நாராயணன்

Nizhalil-Jayamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NY-USA-America-Authors-Tamil

மெட்ரோபாலிடன் ம்யூசியம் ஆஃப் ஆர்ட் :: நியு யார்க் கலை, வரலாறு அருங்காட்சியகத்தில் எழுத்தாளர் ஜெயமோகன்

Jeyamohan-New-York-Metropolitan-Met-Museum-Art-NYC-US-America-Writers-Tamil

Writer Jeyamohan visit in America

My quick takes on his personality, style, discussion topics :: சொல்வனம்

அரிதான இன்னொரு ரகத்தை சேர்ந்தவர் ஜெயமோகன். எடுக்கிறார். முதற் பக்கத்தை நின்று கொண்டே படிக்கிறார். கவனிக்க: வரிக்கு வரி படிக்கிறார். நான் அனேகமாக அமேசானில் கூட ஒரு வரி படித்தால், இரு வரி விட்டு, அடுத்த வரிக்குத் தாவித் தாவி வாசிப்பேன். பொறுமையைப் பார்த்தால் பொறாமையாக இருந்தது. மூன்று பக்கமாவது முழுமையாகப் படிக்கிறார். அதன் பிறகு, வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவெடுக்கிறார். நான் மூன்று மணி நேரம் திட்டமிட்டிருந்த புத்தக நிலைய சுற்றுலா, ஒன்பது மணி நேரம் ஆனபிறகும், ஜெமோ அசராமால், அலசிக் கொண்டிருந்தார்.

முழுவதும் வாசிக்க :: அமெரிக்காவில் ஜெயமோகன்


ஜெயமோகனின் அமெரிக்க வருகை தொடர்பான முந்தைய பதிவுகள்:

ஜெயமோகனின் தொராண்டோ வருகை

எழுதியவர்: வெங்கட் (24 Oct 2001)

எழுத்தாளர் ஜெயமோகன் சற்றேறக்குறைய மூன்று வாரங்களை கனடாவில் கழித்துவிட்டு இல்லம் திரும்பியிருக்கிறார். இந்தப் பயணம் அவருக்கு நல்ல அனுபவங்களைத் தந்திருக்கும் என நம்புகின்றேன். அவரது அமெரிக்கப் பயணம் மாடிமோதும் விமானங்கள், மடித்த அஞ்சல்களில் வரும் வியாதிகள் இன்னபிற எதிர்பாராத காரணங்களால் நிகழாமற் போயிற்று. அமெரிக்காவின் இழப்பு; கனடாவின் இலாபம். அவர் நிறைய நாட்களை எங்களுடன் செலவிட்டுச் செல்லமுடிந்தது.

  • எழுத்தாளர் முத்துலிங்கம்
  • மகாலிங்கம்
  • காலம் செல்வம்

இன்னும்பிற ஈழத்து நண்பர்கள் அவரது பயணத்தை ஒருங்கமைத்திருந்தார்கள். கடந்த 21ம் தேதி ஜெயமோகன் வாசகர்களைச் சந்தித்தார்; மழை ஞாயிறு. சந்திப்பு என்னுடை இல்லத்திலிருந்து நடை தொலைவில்தான் (நல்லதாகப் போயிற்று, ஒண்டாரியோவின் கடுமையான வாகன ஓட்டுநர் அனுமதி விதிகளினால் நான் நாள்வரை காரிருந்தும் “கால்நடைதான்”).

காலை 10 மணி முதல் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் காலம் செல்வத்தால் “வாழும் தமிழ்” சார்பாக நிர்வகிக்கப்பட்டது. நம்பமுடியவில்லை; கண்காட்சியில் குறுந்தொகை முதல் நேற்று வந்த புளியமரத்தின் கதை மறுபதிப்பு வரை – கிட்டத்தட்ட 700 – 800 புத்தகங்கள்..

அடியேனுக்கு ஆ.மாதவனின் கிருஷ்ணப் பருந்து போன்ற அருகிவரும் புத்தகங்கள் சில கிட்டின. இன்னும் சொல்புதிது, எக்ஸில், சதங்கை போன்ற எண்ணிலா சிற்றிதழ்கள். நண்பகலில் ஜெயமோகன் வாசக நண்பர்களுடன் விருந்துண்டார். (அடியேன், கரகரத்த தொண்டையுடன் குடைகீழ் இல்லம் வந்து மிளகு ரசம்-சாதம்).

பிற்பகலில் சந்திப்பு களை கட்டியது. ஜெயமோகனைப் பற்றி சம்பிரதாயமான அறிமுகம் எழுத்தாளர் மகாலிங்கம் அவர்களால் (அந்த அறிமுகத்தின் தேவையின்மை விரைவிலேயே தெரியவந்தது). ஜெயமோகன் விமர்சன மரபும் – தொடர்பும் எனும் தலைப்பில் உரையாற்றினார். தமிழ் விமர்சன மரபை மூன்று பெரும் வகைகளாகப் பகுத்து விரித்துரைத்தார்.

  1. மரபுவழி விமர்சனம் (Geneological criticism – உ-ம் தளையசிங்கம்),
  2. எதிர்வினை விமர்சனம் (Dialectical Criticism, உ-ம் கா.நா.சு / கைலாசபதி)
  3. குழப்பநிலை விமர்சனம் (Chaotic criticism, உ.ம் ஜெயமோகன்).

இறுதியில் ஒரு வாசகன் இவையெல்லாம் கடந்து தன் சுய அனுபவத்தினால் மதிப்பீடு செயதலே எல்லாவற்றிலும் காட்டிலும் சிறந்தது என்பதற்கான விளக்கங்கள். ஜெயமோகன் ஒரு நல்ல ஆசிரியர் என்றுதான் கூறவேண்டும். மிகவும் தெளிவான ஆற்றொழுக்கு உரை.

தொடர்ந்து கேள்வி-பதில் என்று அறிவிக்கப்பட வாசகர்கள் மத்தியில் மௌனம். மெதுவாக ஒரு முதிர்ந்த வாசகர் தன்னை இலக்கிய ஆர்வலனில்லை என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ஜெயமோகனை ஏன் தமிழ்நாட்டுப் பல்கலைகள் ஆசிரியராகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என வினவினார். மடை திறந்தது; தொடர்ந்து சரமாரியாகக் கேள்விகள்.

அவரது விமர்சனக் கோட்பாடுகள் தொடங்கி, படைப்புகள் குறிந்தவை – மிகவும் வலுவான கேள்விகள்; உறுத்தாத குரல்களில்.

அப்பொழுதான் வாசகர்களின் வீச்சை நான் அறியத்தொடங்கினேன். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அரசியல், தனிநபர் குறித்த கேள்விகள் எவையும் கேட்கப்படவில்லை – முற்றிலும் கலை, இலக்கியம் சார்ந்தனவையே.

“இலக்கியம் சலனத்தைத்தான் உண்டுபண்ணுகின்றது – அது முன்னோக்கிச் செல்வதில்லை”

எனும் அவரது கருதுகோளையும், “மொழி மனிதனின் கருவி” என்ற என்னுடைய புரிதலின் மீதானதுமான கருத்துப் பறிமாறல்களில் அடியேனும். இரண்டு விடயங்களிலும் நாங்கள் ஒருமிக்கப்போவதில்லை என்று ஒருமித்து உணர்ந்துகொள்ள அவற்றிலிருந்து எளிதாக விலகவும் முடிந்தது.

(மொழி – கருவி பற்றி அவர் முன்வைத்த கருத்து தற்கால மொழியியல் கோட்பாடுகளைச் சார்ந்தது என்றும்; அவரது ஆழ்மனத்தில் அதில் குறையிருப்பதாகப் படுவதாகவும் சொன்னார்)

நான் தமிழகத்தில் எந்த இலக்கியக் கூட்டங்களுக்கும் அதிகம் போனதில்லை. (அதிக பட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்குமேல் தாண்டாதவைதான் என்னுடைய அனுபவங்கள்). எனினும் சிற்றிதழ்களில் படிக்கும் இலக்கியக்கூட்டம் பற்றிய விபரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டது.

அதிசயமான உண்மை; ஒரு வடதுருவ மூலையில், மழை வலுத்த ஒரு ஞாயிறு மதியத்தில் ஒரு தீவிர எழுத்தாளர்/விமர்சகருடன் மதிய உணவு அருந்தவும், தொடர்ந்து அவரது உரையைக் கேட்டு விவாதிக்கவும் பதினைந்து கனேடிய டாலர்கள் கட்டணத்தில் அறுபது பேர்கள். – வாழும் தமிழென்னும் நம்பிக்கை என்னுள் இலையுதிர் காலத்தில் துளிர்க்கிறது.

இக்கூட்டத்திற்கு முதல் வாரம் அடியேன், ஜெயமோகனை திரு. முத்துலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்திக்க முடிந்தது. ஒரு முறையான நேர்காணலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அது – திசை திரும்பிய கருத்துச் சிதறல்களாக முடிந்தது.

சென்ற புதனன்று இரவு திரும்பவும் ஜெயமோகனைச் சந்திக்க முடிந்தது – இம்முறை என்னுடைய இல்லத்தில். என்னுடைய எல்லா கேள்விகளுக்கும் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பொறுமையாக பதிலிறுத்தார். (நான் எப்பொழுது நான்கு ஒலிநாடாக்களை அச்சிலேற்ற முடியும் என்று தெரியவில்லை).

அவருடைய பல பதில்களும் கருத்துக்களும் இன்றைய “பாஷன்”-சார்ந்த இலக்கியவாதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இறுக்கம் அதிகமில்லாத அவரது நட்பு –

  • இலக்கியம்,
  • மரபு,
  • இவடிவம்,
  • காவியம்,
  • புனைகதைகள் விடுத்த இலக்கியங்கள்,
  • அறிவியல் புனைவுகள்

போன்று இன்றைய இலக்கியவாதிகளால் மறுக்கப்படும் அல்லது ஒதுக்கப்படும் பல விடயங்களைப் பற்றி எளிதாகக் கேள்விகள் கேட்கமுடிந்தது.

எந்த ஒரு போக்கினாலும் பாதிக்கப்படாமல் தன்னுடைய ஆளுமையை முற்றாகத் தனித்துவப்படுத்திச் செதுக்கிக் கொண்டுள்ளார் ஜெயமோகன்.

கிட்டத்தட்ட இரவு பதினொன்றரைக்கு – வற்றல் குழம்பு, சகிதமாக ஒரு நல்ல கும்பகோணம் சமையலை அவருக்கு அளித்து இல்லத்தையும் அவரது துணைவியாரையும் (எங்க ஊர்தாங்க – பட்டுக்கோட்டை) நினைவுபடுத்திவிட்டோம். ஜெயமோகன் வாங்கிவந்த மலர்க்கொத்து இன்னும் என் இல்லத்தின் நடுவில். ஒரு நல்ல நட்பின் தொடக்கம் என ஆழ்மனம் பரவசப்படுகின்றது.

அன்புடன்
வெங்கட்
தொராண்டொ

10 bullet points about, on, with Writer Jeyamohan

ட்விட்டரில் கதைத்தது

1. Chatted with JM abt அணியம் – வறீதையா கான்ஸ்தந்தின். Used to love Tilapia recipes; now getting a guilty feeling while eating the fish. #Books

2. Chatting with Jeyamohan on Tamil TV Media, Nandigram, Ilaiyaraja, Paula Coelho, H1b, Australia, home bldg., Movies. Anything but Ilakkiyam.

3. Probably my happiest moment as a computer type-writer. JeMo also uses phonetic keyboard layout for his jet speed blogs, writing in Tamil.

4. Inspired Quote: There r 3 reader types: 1. Who philosophizes with Vishnupuram; 2. hu adore ‘பின் தொடரும் நிழலின் குரல்’; 3. The bloggers #JM

5. Muttulingam: பிரியாவிடையில் தரப்படும் பரிசு விலைமதிப்பற்றது. Why? அது ஒன்றை எதிர்பார்த்துக் கொடுக்கப்படுவது அல்ல. (அஞ்சலிக்கும் பொருந்துமா?)

6. கண்ணதாசனுக்கும் வலம்புரி ஜானுக்கும் குறிப்பெடுத்து இலக்கியவாதியானது அந்தக்காலம். சாரதியாக வண்டியோட்டும் கைடுகள் ப்ளாகராவது இணையக்காலம். #Lit

7. Draft notes for a blog post on #JM meet: State of Eelam, Tamil Movie director working styles, what does JeMo read, Cauvery Water management.

8. Yesterday’s #JM chats: ஜெயகாந்தன் சபையிலும் சுந்தர ராமசாமி இல்லத்திற்கும் ஆறு தரிசனங்கள்; ஞானம் x கர்மம்; Translations of lit works; Ve.Saa.

9. @dynobuoy Liked ur https://twitpic.com/9moal Jeyamohan’s one liner on US was something along these lines + environment impact of consumerism

10. #JM compliment for me: ‘உங்க வாய்ஸ் டப்பிங்குக்கு ஏற்ற ஒண்ணு. உங்க உருவத்துக்கும் குரலுக்கும் சம்பந்தமேயில்ல. நல்ல கட்டையான ஆம்பளக் குரல்.”

படைப்பின் உச்சம் எது? ‘நான் கடவுள்’படமா! நாக்க முக்க பாடலா?

பாலா & ஜெயமோகனின் பத்து க்ளைமேக்ஸ்‘ என்று எழுதியதற்கு புலவர் விக்கிரமாதித்தன் கடவுளை செல்லமாக அழைத்தது போல் என்னையும் கொஞ்சி மறுமொழி வந்தவுடன் நானும் கடவுள் என்று விளங்கியது.

அன்பே சிவ’மாக கமல் வந்து இன்னும் ‘நீயும் கடவுள்’ என்று நெக்குருகாதது பாக்கி இருக்கு. நெஞ்சை கனக்க செய்வது கமலின் சாமர்த்தியம். மைக்கேல் மூர் மாதிரி டாகுமென்டரி சிதறல் செய்வது பாலா சாமர்த்தியம்.

நிறைய விமர்சனம் படித்து, எல்லாவற்றிலும் கொஞ்சம் பிரசாதமாய் எடுத்து லட்டு விநியோகம் செய்யும் ஆசையுடன் வலைப்பதிவில் கிடைத்த இடுகையெல்லாம் மேய்ந்ததில் பைத்தியக்காரன் (Naan Kadavul: Paithiyakkaran – Metaphors, Symbolism, Balachander Shots, Intentions) பிரித்துப் போட்டிருந்தார்.

குருவி, சிலம்பாட்டம், ஜி போன்ற படங்களை பாலா என்று பெயர் போட்டவர் இயக்கி இருந்தால், பைத்தியக்காரனிடம் இருந்து இன்னும் பல சுவாரசியமான விமர்சனம் கிடைத்திருக்கும். இயக்குநர் பாலாவும் எழுத்தாளர் ஜெயமோகனும் தங்கள் பெயரை அவுட்சோர்ஸ் செய்தால், அழகுள்ளபோதே ஐந்து ஷிஃப்ட் செய்யும் நடிகையாக பணம் பார்க்கலாம். பைத்தியக்காரனும் நுண்மையான டபுள் மீனிங் கொடுப்பார்.

நான் இது போல் நுட்பமாக அவதானித்து நிறைய எழுதுபவன். சாம்பிளுக்கு: வேர் இஸ் தி பார்ட்ட!?

பெருமாள்முருகனின் நிழல் முற்றம்’ ஆரம்பித்து எல்லோரும் திருட்டு டவுன்லோடிட்டு பார்த்து டெலீட்டிய ஸ்லம்டாக் மில்லியனர் தொட்டு சினிமாவை பார்த்த கதை முதற்கொண்டு இல்லாததையும் இன்னாததையும் கூறல் ஆசை. வயாகரா போட்டவுடன் செயலில் இறங்க வேண்டும். ஆறு வாரம் கழித்து சாந்திமுகூர்த்தம் வைத்துக் கொள்ளக் கூடாது. எனினும், வயாகரா வந்துவிடுகிறேன் என்று வெளிப்படுகிறது இங்கே.

விடுதலை

இந்து மதம் பயமுறுத்தும். ‘உம்மாச்சி கண்ணைக் குத்தும்.’ தற்கொலை தீவிரவாதியானால் இஸ்லாத்தில் மோட்சம். ஃபாதரின் மகளுடன் ஜல்ஸா செய்து பாவ மன்னிப்பு கேட்டாலும் கிடைக்கும்.

ஹிந்துவாக இருந்தால் அன்னியன் வந்து கருட புராணம் தண்டனை கொடுப்பார். ஃபுல்லாகி, பூண்டு ஊறுகாய் ஆகி, புழு ஃப்ரை ஆகி, பறவைக் காய்ச்சல் வரும் ஏழேழு ஜென்மம் உண்டு.

கத்ரீனாவில் அகப்பட்டவருக்கு விடுதலை என்பது நியு யார்க்கில் தஞ்சம் புகல். ஆப்பிரிக்காவில் இன அழித்தொழிப்பில் சிக்கியவருக்கு விடுதலை refugee ஸ்டேட்டஸ்.

பௌத்தத்தின் விடுதலை ‘ஆசை’.

கேபிடலிஸ விடுதலை அப்போதைக்கு பிழைத்துப் போவது; நிஜத்தை விட்டு ஓடிப்போவது; குளிர்ந்தால் பக்கத்துவீட்டு நெருப்பில் கதகதப்பு கோருவது.

கம்யூனிச விடுதலை தலைமைக்கு அடிபணிந்து, கடைநிலை யூனியன் மெம்பராய் உழைத்துக் கொட்டுவது.

இதெல்லாம் படத்தில் இருக்கிறதா என்று அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு வரவேண்டாம். படத்தில் பிச்சைக்காரர் சாஃப்ட்வேர் எஞ்சினியர் போல் கடைநிலை சிப்பந்தி. கொஞ்ச நாள் கழித்து ப்ராஜெக்ட் மேனேஜர் பழனி ஆகிறார். அப்புறம், மேலும் பதவி உயர்வு பெற்று பிச்சைக்காரரை வைத்து பணக்காரர் ஆவது விடுதலை என்கிறார்.

ப்ளாகருக்கு விடுதலை எது? நீண்ட பதிவை பின்னூட்டத்தில் சம்ஹரிப்பது. அகோரிக்கு விடுதலை எது? சம்ஹரிப்பு தனக்கானது என்று சஞ்சரிப்பது.

கொஞ்சம் விளம்பர இடைவேளை: நான் கடவுள் தொடர்பான முந்தைய பதிவுகள்

வாந்தி

மல்டி டாஸ்கிங் கிங் ஆக இருக்கலாம். ஹிந்தி, தமிழ், மலையாளம், ஆங்கிலம் என பன்மொழி பண்டிட் ஆக இருக்கலாம். வெள்ளிக்கிழமை கோவிலுக்கு ராகுகாலத்தில் பல ஃபிகர் வரும். ஆனால், உங்க சைட்டு எதுன்னு புரிஞ்சுண்டு, அதை மட்டும் லுக்கு விடுவீங்க இல்லியா?

சொல்ல வந்ததை மட்டும் சொல்வது கலை. தெரிந்ததை எல்லாம் சொல்வது பல்சுவை இதழ்; வலைப்பதிவு; நாவல்/காவியம். ஆனால், சினிமா அல்ல.

இவரோட இப்பொழுது வந்த இன்னொரு படம் ‘அஞ்சாதே‘. நான்கு ட்ராக்கில் செல்லும்:
1. காவல்துறை
2. நட்பு
3. செல்வந்தச் சிறுமி கடத்தல்
4. காதல்

இப்பொழுது அஞ்சாதேவைப் பார்த்து கைக்கிளை கொண்ட நான் கடவுள் கிளை:
1. வறியவர்
2. காசி அகோரி
3. தாய் – மகன்
4. தெய்வம்

முன்னது கோர்த்த விதத்தினால் சிமெண்டும் மணலும் சரியாகக் கலந்த கலவை.

பீரும் விஸ்கியும் வைனும் கலந்து கட்டி அடிக்கலாம்; தப்பில்லை. ‘நான் கடவுள்’ குளுகுளு பியர் ஏற்றுகிறது. அதற்குப் பிறகு கொனியாக், வைன், வெர்மவுத் என்று சகலத்தையும் சர்பத் போல் கலக்கு கலக்க, எனக்கு மைக்கேல் மூர் இயக்கி, பில் மெஹர் ஹீரோவாக, ஆன் கூல்டர் நாயகியாக நடித்து, ரஷ் லிம்பா வசனம் எழுதிய படம் பார்த்த அஜீரணம்.

இப்போது சித்தர் பாடல் ப்ரேக்:

அன்னைகர்ப்பத் தூமையில் அவதரித்த சுக்கிலம்
முன்னையே தரித்தும் பனித்துளிபோலாகுமே;
உன்னிதொக் குளழலும் தூமையுள்ளுளே அடங்கிடும்
பின்னையே பிறப்பதும் தூமைகாணும் பித்தரே. (212)

தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே. (49)

சொற்குருக்கள் ஆனதும் சோதிமேனி ஆனதும்
மெய்க்குருக்கள் ஆனதும் வேணபூசை செய்வதும்
சற்குருக்கள் ஆனதும் சாத்திரங்கள் சொல்வதும்
செய்க்குருக்கள் ஆனதும் திரண்டுருண்ட தூமையே. (50)

சிவவாக்கியரின் சிவவாக்கியம் 205வது பாடல்.

ஐயிரண்டு திங்களாய் அடங்கிநின்ற தூமைதான்;
கையிரண்டு காலிரண்டு கண்ணிரண்டும் ஆகியே
மெய்திரண்டு சத்தமாய் விளங்கிரச கந்தமும்
துய்யகாயம் ஆனதும் சொல்லுகின்ற தூமையே

அடைவுறுதல்

படம் பார்த்தால் நம்ப வேண்டாம்; மயங்கணும்.

கதையில் லயித்து ஒன்றவேண்டாம்; என்றாவது பிச்சைக்காரரைப் பார்த்தால் ‘வெண்ணிலவே! வெண்ணிலவே!! விண்ணைத்தாண்டி வருவாயா?’னு கனவு கஜோள்ளோடு டூயட்டணும்.

ஆளவந்தான்‘ புத்திசாலித்தனம் வேண்டாம்; ‘தசாவதார‘த்தின் பரபரப்பிலோ வித்தை காட்டலிலோ சொக்கணும்.

ஆவணப்படம் எடுத்தால் கூட ஒன்றவைக்கும் சிரத்தையும் தகவலில் உள்ள துல்லியத்திற்கும் புனைவுலக 70 எம் எம்மில் மினுக்கிட வேணாம்; பார்த்தவுடன் பச்சக்கென்று ஒட்டிக்கொள்ளும் வாரணம் ஆயிரமின் drug பயன்பாட்டின் வீச்சும் வீரியமாவது தைக்க வேணாமோ?

வேணாம்கிறார் பாலா. ஒத்து ஊதுகிறார் சாரு நிவேதிதா.

எழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா

நான் கடவுள் குறித்து அவரின் பதிவுகளில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியவை:

காசியில்: கனவின் கதை: “மணிகர்ணிகா கட்டத்துக்கு”

”சார் பெரிய ரைட்டர்!”

ஆனந்த விகடன் பேட்டி 2007

சினிமாவுக்குப் போன இலக்கியவாதி? திரையும் சமரசமும் – ஒரு கடிதம்

படப்பிடிப்பு: தேனியில்…

‘நான் [கிட்டத்தட்ட] கடவுள்’

இசை வெளியீடு: சென்னையில்…

நான் கடவுள், கடிதங்கள்

பதில்: இருகேள்விகள்

நாவல் :ஏழாம் உலகம் :கடிதங்கள்

பயணக்குறிப்பு: இந்தியப் பயணம் 17 – வாரணாசி

மற்ற தமிழ்ப்பட வேலை: கதாநாயகன் தேர்வு

கிசுகிசு – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம்.

முந்தைய பதிவு:
1. “பிச்சைப் பாத்திரம்”

2. வசனகர்த்தா ஜெயமோகன் பேட்டி

3. Om Siva Om – Vijay Prakash: நான் கடவுள் – இளையராஜா

4. Naan Kadavul – Music

5. நான் கடவுள் – அஹம்ப்ரம்மாஸ்மி