Tag Archives: ஜெமோ

தமிழ் ட்வீட்ஸ் – குறுஞ்செய்தி வாக்கு: சிற்றெழுத்து ஓடை

1. பிச்சைக்காரனின் சிரத்தையையொத்த பகுப்புகள் கொண்ட தமிழ் பேப்பரில் ‘நல்ல எழுத்து’ ( http://www.tamilpaper.net/?cat=23 ) பகுதி அ.மு/மி பவ.

2. பிரிட்டிஷ் ம்யூசியத்துக்கு போன 10 வயசுக்காரி டகடகவென்று எல்லா ஓவியத்தையும் ட்ரேஸ் செஞ்ச மாதிரி ஜெயாவில் #Kamal http://bit.ly/clUIo0

3. பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் பரிதாபமாய் பல்லிளிக்கும்போது ‘They deserve it’ தோன்றினால் பாவமா?

4. ஏழு வருசம் முன்பு போட்ட பதிவை இப்படி ட்வீட்டுவது தவறல்ல; அப்படியே மறுபதிவது இமாலய தவறு. தீபாவளி வாழ்த்துக்கள்: wp.me/p3fCv-se

5. டபுள் கா மீட்டா சாப்பிட்டிருக்கீங்களா? தேவாமிர்தம்னு பேசிக்கறாங்களே… அதேதான். இனிய தீபாவளி ஸ்வீட்.

6. அறிவாளி விஷயமறிந்தவள்; புத்திசாலி விஷயத்தை அலசத் தெரிந்தவள்; சாமர்த்தியசாலி புத்திசாலியை வேலைக்கு அமர்த்தத் தெரிந்தவள்.

7. தூரத்தில் +ல் யேசு பிரும்மாண்டமாய் அழைத்தார். நெருங்கினேன். நெடிந்துயர்ந்த கட்டிடங்களுக்கிடையில் கிறிஸ்து காணாமல் போனார்.

8. குரங்கு கையில் பூமாலை; @charunivedita கையில் இலக்கியம்; அமெரிக்கன் கையில் தெர்மோஸ்டாட்; @peyarili கையில் ஒளிப்படம்; தமிழன் கையில் கலாசாரம்

9. இந்தியாவில் இருந்தால் தாத்தா, பாட்டிகளைக் கொல்லலாம்; இங்கே இருப்பது ஒரேயொரு கார்; எத்தனை முறை பழுதடையச் செய்வது? #லீவு

10. மைக் மோகன் என்பார்கள்; கவர்னர் பட்வாரி போல் எங்கும் அட்டெனடன்ஸ் என்பார்கள்; விமர்சக சுப்புடு என்பார்கள்; கர்னாடக வித்வான் சௌம்யா எனலாம்.

11. ‘சரணம்’ ரெண்டு வகைப்படும் என்கிறார் எஸ் பி ஷைலஜா. ஷரணாகதி – கிருத்திகாவிடம் சரவண பவன்; ச்சரணம் – ரஜினி கல்யாணத்திற்கு பாமக அழைப்பு.

12. ஆயர்பாடியில் இருந்து ஆய் வந்ததா? ஆயா வந்தாளா?

13. Cold வந்தாலும் கணவன்; ஃப்ளூ வந்தாலும் புருஷன் என்றால், அரை மைல் ஓடிட்டு அரைஞாண் கயிறு லூசாயிடுச்சான்னு பார்க்கிற மாதிரி இல்ல என்கிறாள்.

14. காதலை சொல்லத் தெரியாத 80s வகையறா ‘கல்லறை’ cliche கிடையாதென்பதும் @ppothen ‘அப்பாவின் காதலை’ பழசு என்பதை பார்ப்பதும்தான் தமிழ் சினிமா ரசிகர்

15. திருட்டுக் கதை என்றால் @ppothen சாதாரணமா கோபம் வரும். ஆனா, தெரிஞ்சவங்க சுப்ரமணிய ராஜுவை சுட்டுப் போட்டா பாராட்டுவார் போல. #Naalaiya #TV

16. ‘நாளைய இயக்குநர்’ல் மதனுக்கு Suicide வந்தால் பிடிக்கல; மது, சிகரெட்டுக்கு தடா போடுறார்; திருவிளையாடல் எடுத்தாப் பாராட்டுறார். பரிசில் தரார்

17. கலைஞர் டிவி ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’ நிகழ்ச்சியில் தயாரிப்பாளரை ‘சொந்தில்நாதன்’ ஆக்கியதன் பிண்ணனி என்ன? அஞ்சலிப் பாப்பாவையும் காணோமே.

18. நோட் பண்ணதையெல்லாம் நோட் செஞ்சது பதிவர் காலம். இதெல்லாம் நோட் பண்ணணுமா நெனக்கிறது, இந்தக் காலம்.

19. http://www.keetru.com போய் @tamilpaper வருவது தமிழிணையத்தின் சீரழிவு என்று எத்தனை கட்டுரை வந்திருக்கிறது? #Tamils

20. NBCஇன் Olympics அப்புறம் தூர்தர்ஷனின் Commonwealth பார்த்தால், ஷெனாய் வாசிப்புடன் கமலா காமேஷ் கவர்ச்சி டான்ஸ் உணர்ச்சி பொங்குகிறது. #DD

21. So many blue jeans at #necc14 it looks like uniform. Shirts differentiate coders.

22. Saw ‘Buddha‘ in PBS: Very poetic adaptation; imaginative cartoons to symbolize mystical & religious portions; profound quotes in rusticness

23. saw ‘Diary of a Wimpy Kid’: My daughter observed, ‘The book was much better; I had imagined the main character to be different!’ I liked it.

24. What is your strategy? Being a specialist niche player or jack of all arts? In career? In blogs? What works for your company?

25. I used to think FourMediumOneLarge as something to do with whiskey. It seems layout spec for ribbons in sharepoint. #scale

26. Some predictions (rather currently in prod) 1. Mouse is the new remote. 2. JavaScript is the new C language. 3. SharePoint is the new Excel.

27. சிவாஜி படமே பார்க்காத சபதத்தினால், ‘சுமதி என் சுந்தரி’ டைட்டிலில் ஏன் half-clad women from men’s magazines ஏன் நிறைந்திருக்கிறார்கள்?

28. ஹஜ்ஜுக்கும் புத்தாண்டு டைம்ஸ் சதுக்கத்திற்கும் என்ன வித்தியாசம்? சவுதி செல்வதற்கு சென்னை காசு கொடுக்கும். டைம்ஸில் குண்டு வெடிக்கும்.

29. Doordarshan பொதிகையில் ‘வாலிப வாலி’: என்னவாக இருந்தாலும் ‘மலரும் நினைவு’களை அடிச்சுக்க எதுவுமேயில்ல… காமராஜ், கல்கி, ராஜாஜி, அம்மா சென்டி

30. மணிரத்னத்தின் ‘ஆய்த எழுத்து’: என்னதான் ஊர்க்குருவி (& சம் காக்காஸ் ஆல்ஸோ) சுஜாதாவாக நினைத்தாலும், கிட்ட நெருங்க இப்போதைக்கு எவருமே லேதண்டி

31. கற்றது தமிழ்: ‘நான் கடவுள்’ முன்னோடி; ஜெயமோகன் வசனத்தை விட தமிழ் எம்.ஏ ஷார்ப். Flow இருக்கிறது; நாயகருக்காக ‘ஐயோ… பாவம்’ கூட வருகிறது.

32. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு: வெளியாகியபோது வெகுவாக ரசித்த படங்களை இப்போது பார்த்தால், காலப்போக்கும் விமர்சனவலை-மனமும் ரசிக்கவைக்கவில்லை.

33. ‘பார்த்திபன் கனவு’ படம்: செம திக் கதை; கருப்பு சரோஜா தேவி; காரண காரியம் முழுமையாக சொல்லாத திடுக் திருப்பங்கள். குழப்ஸ்.

34. சாமர்த்தியம் என்பது இந்தியராய் பிறந்த எவருக்கும் பாடமாய் அனுபவிப்பது; அவ்வாறு கற்றதை சுயநல பொது பயன்பாடுக்கு மாற்றுவது மேற்கத்திய நாகரிகம்

35. ராசா எத்தனை ராஜா! ஆண்டிமுத்து ராஜாவா? மன்மத ராசாவா? ஸ்பெக்டரம் மாபியாவா? தலித்தியத்தவரா? நீலகிரி பிரபுவா? எப்பவுமே அவரு ராசாவா? #Raja #Rasa

36. Wanted: டாஸ்மாக் நிவேதிதாவும் நீமன் மோகனும் க்ளோபஸ் புத்திரரும் போலோகிருஷ்ணனும் நிறைந்த தற்கால தமிழ் இலக்கியம் வளர வால் மார்ட்கள் தேவை.

37. The perfume from the lady standing in front of me at the Dunkin Donuts is more pleasant, refreshing & strong than the Coffee itself.

38. ஆண்டியார், அல்லி, அரசு, பிரார்த்தனை க்ளப், பராசக்தி என்று பதில் கேட்டால் Monopoly. ‘போலி… போலி’ என்று போலினால் இணையக்காலி. #வார்மிண்ட்

39. Veblen Good என்றால் பூணூல் என்பார் வீரமணி பார்ட்டி. ஐ-பாட் என்பர் சீன அடியார். வெப்ளென் வேண்டாம், வாழை போதும் என்பது 7ஆம் உலகம்.

40. சாப்பிடும்போது கொல்லைக்குப் போனதைப் பற்றி பேசினால் திட்டு விழும். பாத்ரூமில் Food mag படித்தால் பீயை உண்ணத் தோன்றுமா?

41. ஈ ஓட்டும் குறிப்பு: அமெரிக்கக் கொசுக்களை ரெண்டு கையால் தட்டிக் கொல்வதை விட ஒரே கையால் அபகரிப்பது எளிது.

42. தப்புத் தப்பாக செய்தியைத் திரிப்பது பெரிய தவறா? தப்பும் தவறுமாக ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றுவது தவறா?? செய்தியே சொல்லாமல் விடுவது?

43. கலைஞர் டிவிக்கு மொழிபெயர்ப்பவருக்கு இரண்டு மொழிகள் தெரியாது. 1. இந்தி; 2. ஆங்கிலம். எனினும், தமிழில் தட்டச்சுவதால் வேலை கிடைச்சுடுச்சு.

44. டேட் என்றால் நாள்பட பொருள். நாள்போகப் போக முன்னேற்றம். டேட் போடாவிட்டால் பால் கெட்டுப் போகுமே…

45. பாத்ரூமிற்கும் கர்னாடக கச்சேரி அரங்கிற்கும் ஆறு ஒற்றுமை இருக்கு… தெரியுமா?

46. Who in your life demonstrates living to the full (not living recklessly) and what other characteristics do they display?

47. எழுத்தாளனுக்கும் பறக்காவெட்டிக்கும் வித்தியாசம்? 1. ரசிகர்: http://bit.ly/9BBurw 2. கீபோர்ட்நடுங்கி: http://bit.ly/aAec80

48. Oru என்பதில் இருந்து Our பிறந்தது. ‘நாம் அனைவரும் ஒன்று’ என்பதன் குறியீடு. அதை ‘நமக்கு ஒருவர்’ என்று திரிப்பது தவறு. #குக #கால்வெட்டுவல்

49. சூதாட்டம் @akaasi க்கு பிடிக்காது. ஏன்?

50. Santosh Sivan’s Sivapuram: கொஞ்சம் அன்னியன்; Appleஇன் புது கண்டுபிடிப்பு போல் காவ்யா மாதவன்; மலையாள மேஜிக்; எகிறி குதிக்கும் ஜோர்.

51. அங்காடித் தெருவில் ஜவுளிக்கடைகாரரை வில்லனாகக் காட்டுவது சுந்தர ராமசாமிக்கான குறியீடு; பாத்ரூம் சுத்தம் செய்பவர் சாரு நிவேதிதா எனலாமா?

52. வீட்டு வாசல் புல்லை மான் மேய்ந்தால், லயிந்து அழகு பார்க்கும் மனது, வாத்துக் கூட்டம் கபளீகரிக்க வந்தால் அடித்து துரத்துகிறது.

53. தூரத்தில் நீச்சல் குளம். ‘நீந்துவது ஆணா? பெண்ணா?’ கேள்வி எழுகிறது. எல்லாமே எந்திரன் என்கிறது பைனாகுலர் இல்லாத கண்பார்வை தூரதிருஷ்டம்.

54. பதிவருக்கும் எழுத்தாளருக்கும் வித்தியாசம்? ப்ளாகர் கிண்டலடிப்பார்; எழுத்தர் 1/2 மணி நான் ஸ்டாப் கருத்துரை; அவர் பழகியவர்; இவர் பெரியவர்.

55. எட்டு பேரு; அட்லான்டிக் சிடி; விடிய விடிய அரட்டை; சகஜமான கால் வாறல்; கல்லூரி ரீயுனியன் மாதிரி ஒரு சந்திப்பு. வருசா வருசம் பதிவர் விசிட்டணும்

56. கொன்னா பாவம் தின்னாப் போச்சு பழசு. தின்னா வாசம், (பல்) ஃப்ளாஸினா போச்சு புதுசு.

57. Celbrityக்கும் @charuniveditaக்கும் என்ன வித்தியாசம்? புகழை விமர்சித்தால் பிஆர்ஓ வக்காலத்து; சாருவை விமர்சித்தவருக்கு வக்காலத்து கூட்டம்

58. ‘அவசியம் எனில் மட்டுமே பேசலாம்’ என்றால் அவசியமில்லை எனில் கூட அரட்டையடிக்கலாம் என்னும் அர்த்தம் பொதிந்துள்ளதா?

59. ஜெமோ சொன்னப்புறம்தான் தெளிவாக காதில் விழுகிறது ‘அருந்ததிப் பயலே’; அது வசவு என்பதும் விளக்கியபிறகே புரிகிறது.

60. 10 lists hv @charunivedita @uyirmmai has 13; @writerpara – 59; 163 for @selvaraghavank A top 10 for listing count shd be due

61. முதலியம் -> முதலியார்; பிரம்மச்சரியம் -> பிராமணர்; தோட்ட தரணியம் -> செட்டியார்; தேவரடியாரியம் தேவேந்திராவா தர்மேந்திராவா?

62. அந்தக் காலத்தில் இஸ்லாம் மட்டுமே இருந்துச்சு என்பதற்கான அடையாளமே மதார்ஸாவில் இருந்து திரிந்த மதராசப்பட்டினம் என்பதாம்.

63. Massல் ஒரு எம்மும் புடுங்க முடியாது… அப்படியும் பிடுங்கினாக்க, Ass ஆயிடும்.

64. ‘சத்யா’ திரைப்படத்தில் தன் சாதி என்ன என்பதை கமல் வெளிப்படையாக்குவது ஏன் என்பதிருக்கட்டும்! படத்தில் சத்யமூர்த்தி என்ன #caste ? #Satya

65. இதயம் தொட்ட கதைகள் – தமிழ்ச்செல்வனின் `ஒரு பிரம்பு ஒரு மீசை’: வசனம் கொஞ்சம் செப்பனிடலாம். மத்தபடிக்கு அருமை. #JayaTV #Shorts

66. ஆயிரம் பக்கம் எழுதினால் ரெண்டு மூணு சீன் கூடவா உருப்படாம போயிடும்? ‘ராஸலீலா’ மாதிரி திராபைகளில் கூட முத்துகள் உண்டே.

67. அவர்களுக்கு சொந்தமாகவோ பதிப்பாளரோ எடிட் செய்ய கைவரவில்லை. ஓவர்-ரைட்டிங்கை ஒழுங்கு செய்ய இயக்குநரிடம் சரண். கைமேல் பலன்

68. அந்த லிம்கா விளம்பரத்தைப் பார்த்தால் ‘அங்காடித் தெரு’ துவக்கப் பாடல் பார்த்த துள்ளல் ஒட்டிக் கொள்கிறது. அழகான ஜோடி; ஜில் ரம்மியம்.

69. ஜெயா டிவியில் ‘தினம் ஒரு திவ்ய நாமம்’ தலைப்புப் பாடலில் புடைவைத் தலைப்பை பிடித்து கும்மியடிப்பவர்களின் முழுப் பாட்டு கிடைத்தால் ஷேமம்.

70. ‘ஒரு ஷாட்’ எடுத்த ‘நாளைய இயக்குநர்’ 3ஆம் பரிசு: Either I have high standards of School dramas or that 5 min was Magical Bullshitism.

71. Playback singer S Janaki looks incredibly healthy & young with a even more sweet voice at 72. Belated wishes!

72. Turned on ChannelLive. Now eagerly waiting for a notable event like Jaya or Kalainjar’s death on respective TV’s live coverage stream.

73. பதவியில் இருக்கும் போது போனால், மூன்று நாள் விடுமுறை கிடைக்குமே என்று பிஞ்சிலேயே யோசிச்ச ஆளுங்கதானே

74. காஸ்மிக் தூசி யாராக இருக்கும்?

75. Notable recent books: Naked Science by Charles Wheelan. Undressing the dismal science.

76. The drunkard’s Walk by Leonard Mlodinow. How Randomness rules our lives. #books

77. Everyday Survival. Why smart people do Stupid things by Laurence Gonzales. #books

78. Eating the Dinosaur by Chuck Klosterman. #books

79. Traffic. Why we drive the way we do and what it says about us by Tom Vanderbilt. #books

80. When a lover is on the other end, cell rings like rock music; while it is the wife it rings like coins clanking.

81. The quantum is love directly related to the distance, communication medium among (>n) pyaaris & spouse’s cooking capabilities.

82. நவீன ‘நான் சிகப்பு மனிதன்’ Kanagavel Kaakka: ஜூனியர் ஷங்கர் கவின்பாலா என்றால் சீனியர் சுஜாதா மாதிரி @writerpara

83. Thamizhachi Thangapandiyan was the original Priyamani in Veli Rangarajan’s Ravanan by Ku Alagirisami: http://bit.ly/9ohe4y #Maniratnam

84. நித்யானந்தருக்கு மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான். – Manushyaputhiran

85. கார்ப்ரேட் சாமியார் & பரஸ்பர முதுகு சொறிதல்: நமக்குப் பிடித்ததையே அவர் சொல்கிறார். அப்படிச் சொல்வதுதான் நமக்குப் பிடித்திருக்கிறது.-Charu

86. Queen Rocks… ‘We will… we will rick you!’ What is a similar timeless uplifting classic in Tamil? #Songs #Music

87. Phil Jackson is the ultimate closer. Knows when to step up, where to speed things, calls key plays, stops momentum with timeouts.Hate him 🙂

88. Reputation matters to not get into foul trouble. That seems to be the difference between ‘traveler’ Gasol & Wallace.

89. Chitra used to be uncomfortable with the not so subtle advances from Singer Mano on Alka, Sahana, Nithyasree in Vijay TV’s Super Singer Jr.

90. மனோ நன்றாக நிர்வகித்தாரா 😦 He was close to a pervert to with his ‘நீங்க நல்லா அழகா இருக்கீங்க’ when a singer has sung well.

91. Difference between winning team and a loser in NBA: When you cannot shoot field goals, drive & get fouled to get free throws- Michael Jordan

92. ஒருவனுக்கு ஒருத்தி என்றால் ஒருவனின்/ஒருத்தியைத்தான் நசுக்க முடியும். It shd be a n…m cardinality association relationship.

93. Unsung heroes list: Rasheed Wallace. Rombavey sung heroes list: Kevin Garnet, Kobe Bryant.

94. Who is sitting beside Leonardo DiCaprio? Dress லட்சணமா இருக்கு

95. Kobe Bryant, Dwight Howard, Lebron James… everybody is getting switched off one by one by Boston Celtics. It is the defense! stupid

96. Lakers shd be called Rebound பிச்சைக்காரன். If only Celtics can rebound and avoid the second chance rather third chance points by LA…

97. Lakers vs Celtics rivalry buildup seems to be epic like India vs Pakistan, Red Sox vs Yankees, Army vs Navy, Nadal vs Federer. #NBA

98. Without referees intervention, NBA will not be interesting. When players have a bad day, umpires make them champs. Lakers made interesting.

99. இன்றைய முடிபுத்துவம்: பரஸ்பர நம்பிக்கையின் பின்னே இருப்பது மக்களின் மனதில் ஆழமாக இருக்கும் பழிவாங்கும் உணர்ச்சி. #Quotology

100. i3 – மூன்று முகம்; i5 – மைக்கேல் மதன காமராஜன்; i7 – எல்லாம் இன்ப மயம்; பாக்கி எல்லாம் தசாவதாரம்.

101. i3, i5, i7, dual-core, multi-core – அசந்தா அடிக்கறது மைக்ரோசாஃப்ட் பாலிசி; அசராம அப்க்ரேடறது இன்டெல் ஸ்டரடீஜி.

102. ஓ ரெய்லி போல் சாருவோ வக்கணையான வலைப்பதிவரோ டிவி நிகழ்ச்சியில் சார்பான கருத்து வைத்து வலியுறுத்தி அரட்டை அடித்தால் வித்தியாச ஹிட் ஆகும்

103. மடலில் விடாக்கண்டரை குப்பை வீசலாம். மின்னஞ்சல்காரர் எரிதவகை. வலை ராவல்பிண்டிகளையும் கடக்கலாம். முகத்துக்கு எதிரான மொழிவெள்ளத்தை வெல் இயலா

104. மசாலான்னா ‘மெகாதீரா’. தெலுங்குப் பட டைட்டிலில் பேருக்குக் கூட ஆங்கில இனிஷியல் இல்லியே. எப்பத்தான் நாலெழுத்து கத்துப்பாங்களோ? #Telugu #Films

105. இன்றைய உவமை: ஆயில் கிணறு – வலைப்பதிவு. குத்தகை – செய்தியோடை. இரான் – போலி டோண்டு. BP – வினவு: http://nyti.ms/a4G6C3

106. @ivansivan //தினம் சில வரிகள்// துவங்கிய இடத்திற்கே மீண்டும் வந்தாச்சு போலிருக்கே. (‘வாழ்க்கை ஒரு வட்டம்’னு இ.த, அன்னிக்கே சொல்லிட்டாரே 😉

107. There are two types of people: one who has their name in ration cards & others who keep their names in two ration cards

108. பாலைவனச்சோலை கடசீல வர வாழ்க்கைக்கான டயலாக் வலைப்பதிவுக்குப் பொருந்துது. திண்ணைகள் மாறலாம்; ஆனால், அஞ்சு பேர் உட்கார்ந்திருப்பாங்க.

அங்காடித் தெரு: இலக்கியம், குறியீடு, அரசியல் – Extrapolation

திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.

அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.

உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.

  1. சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
  2. (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
  3. ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
  4. ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
  5. ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
  6. நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
  7. பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
  8. பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
  9. மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
  10. நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?

உதவிய பதிவுகள்:

அங்காடித் தெரு, பார்ப்பனீயம், சாதி, பெண்ணியம் – திருமலை ராஜன்

தொடர்புள்ள செய்தி:

:: By NILANJANA S. ROY (NYT) – In India, thousands of women are participating in movements against the abuse of women in public spaces.
முந்தைய இடுகை :: ஜாதி: தேவையா? வேண்டாமா?

முதலில் அங்காடித் தெரு சினிமாவில் நீங்கள் வைத்திருந்த பிராமணப் பெண்ணின் பாத்திரம் உங்கள் கதைப் படி, கதையின் வலுவிற்குத் தேவையான ஒரு பாத்திரம் என்பதையும் அந்தப் பெண்மணியின் மூலமாகவே நீங்கள் மாத விலக்கைத் தீட்டாகவும் அதே நேரத்தில் புனிதமாகவும் கருதும் இந்து மதத்தின் இரு வேறு எல்லைகளை விளக்குவதற்கும் அதன் மூலம் சேர்மக்கனி பெறும் மன தைரியத்தை விளக்குவதற்கும் அந்தப் பாத்திரத்தை நீங்கள் படைத்திருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். நிச்சயம் உங்களது பாத்திரப் படைப்பிற்கு உள்நோக்கம் கற்பிக்கவும் மாட்டேன். அதன் நோக்கம் பற்றி நன்கு அறிந்தவன். மேலும் அந்த வழக்கத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராமணப் பெண்ணைக் காட்டினால் மட்டுமே அந்தக் காட்சிக்கு யதார்த்தமும், நிஜத்தன்மையும் கிட்டும் என்பதற்காக நீங்கள் அதை வைத்திருக்கிறீர்கள் என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நிச்சயமாக நீங்கள் பிராமணர்களை இழிவு செய்யும் நோக்கத்தில் அந்தப் பாத்திரத்தை வைக்கவில்லை என்பதை நன்கு அறிவேன். அதில் எவ்வித சந்தேகமும் கிடையாது. ஒரு காட்சிக்கு அதன் களனும், அந்தப் பாத்திரங்களின் நம்பகத்தன்மையும், களனின் யதார்த்தமும், ஏன் பாத்திரங்கள் கையாளும் மொழியும் கூட முக்கியமானவை என்பதை மலையாளப் படங்களையும், பிற முக்கியமான உலகப் படங்களையும் தொடர்ந்து பார்ப்பவன் என்ற முறையில் இந்தக் காட்சிக்கு நீங்கள் பயன் படுத்தியிருக்கும் பாத்திரத்தின் ஜாதியின் முக்கியத்துவம் குறித்தும் நான் வேறு எவரையும் விட மிக நன்றாகவே அறிவேன்.

நம்பூதிரிகளைக் காட்டாமல் ஒரு பரிணயம் எடுக்கவியலாது. மீனவர்களைக் காட்டாமல் ஒரு செம்மீன் சாத்தியமேயில்லை. கம்னியுஸ்டுகளைக் காட்டாமல் ஒரு அரபிக் கதாவை எடுத்திருக்க முடியாது. நாயர்களைச் சொல்லாமல் ஈழவர்களைச் சொல்லாமல் பெரும்பாலான மலையாளப் படங்களை எடுத்திருக்கவே முடியாது. முஸ்லீம்களைச் சொல்லாமல் ஒரு மிழிகள் சாட்சி எடுத்திருக்க முடியாது. கிறிஸ்துவர்களைக் காண்பிக்காமல் ஒரு அச்சன் உறங்காத வீட்டையோ, ஒரு சின்சையோ தொட்டிருக்கக் கூட முடியாது.

ஆகவே ஒரு படைப்பில் அது சினிமாவாக இருந்தாலும் சரி, நாவலாக இருந்தாலும் சரி அந்தக் கதையில் ஒரு குறிப்பிட்ட இனக்குழுவைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டாலோ அதைச் சொல்லியே ஆக வேண்டும். அப்படிச் சொல்லாமல் மழுப்பினால் அது மணிரத்தினத்தின“இருவர்” சினிமா போல ஒரு வெளிறிப் போன ஒரு அபத்தமான படைப்பாகவே போய் முடியும். அந்தப் படைப்பின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாகி அந்தப் படைப்பே கேலிக்குரியதாகி விடும். ஆகவே ஒரு படத்திலோ ஒரு நாவலிலோ ஒரு ஜாதியோ, ஒரு கட்சியோ, ஒரு இனமோ, ஒரு மதமோ சொல்ல வேண்டிய தேவை அந்தக் கதைக்கு இருப்பின் அதைத் தயங்காமல் சொன்னால் மட்டுமே ஒரு நல்ல படைப்பு உருவாகும் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் ஆட்சேபணையும் கிடையாது.

அதே அடிப்படையில் எனக்கும் அங்காடித் தெரு படத்தில் நீங்கள் படைத்திருக்கும் பாத்திரங்களில் எந்தவித உள்நோக்கமும் கிடையாது என்பதை நான் நிச்சயமாகத் தயங்காமல் சொல்வேன். அப்படி எவ்வித சந்தேகமும் இருந்திருப்பின் மிக நீண்ட இரு பெரும் பதிவுகளை அந்தப் படம் குறித்து

http://solvanam.com/?p=7588
http://solvanam.com/?p=7575

நான் சொல்வனத்தில் எழுதியே இருக்க மாட்டேன்.

இரண்டாவதாக நான் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் என்னை நிறுத்திக் கொண்டு இங்கே எழுதவில்லை. முதலில் அப்படி நிறுத்திக் கொள்ளும் தகுதி எனக்குக் கிடையாது. அப்படியே நான் நிறுத்திக் கொள்ள முயன்றாலும் அதே ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்னைக் கல்லால் அடித்து இறக்கி விட்டு விடுவார்கள். ஆகவே அந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டியதில்லை. நான் இங்கு என் சார்பாக மட்டுமே என் அனுபவத்தின் அடிப்படையில் விளைந்த சில கருத்துக்களை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்கிறேனே அன்றி நான் யாரையும் எந்த ஜாதியின் பிரதிநிதியாகவும் பேசவில்லை என்பதை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.

வேறு எந்த ஜாதிக்கு வேண்டுமானாலும் ஒரு ஒற்றுமையான பிரதிநிதி இருந்து விட முடியும் ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அந்த ஒற்றுமை உணர்வு சாத்தியமே இல்லை என்பது என் தீர்மானமான எண்ணம். அங்கு ஒரே ஒருவர் மட்டும் மிச்சம் இருந்தால் கூட நிச்சயம் இரண்டு விதமான கருத்து அந்த ஒருவரிடமிருந்தே கிளம்பும் அவ்வளவு ஒற்றுமையுள்ள சமூகம் அது. ஆகவே நான் எனக்காக மட்டுமே இங்கு பேசுகிறேன் என்பதையும் தெளிவு படுத்தி விடுகிறேன்.

ஆனால் ஒருவர் ஒரு குழுவிற்காக பேசுவதில் எந்த தப்பும் இல்லை என்பது என் கருத்து. இஸ்லாமியத் தீவீரவாதத்தால் குண்டு வெடிப்புகளால் பாதிக்கப் படும் எந்தவொரு ஹிந்துவும் ஹிந்துக்கள் சார்பாகப் பேசினால் அதை நாம் தவறாக கருத முடியாது என்பதே என் எண்ணம்.

இன்று தமிழ் நாட்டில் ஏழை பள்ளி மாணவர்களில் கிறிஸ்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கு மட்டுமே பண உதவி அரசாங்கத்தால் செய்யப் பட்டு வருகிறது. அதை விடக் கீழான ஏழ்மையில் இருக்கும் இந்து மாணவர்களுக்கு அந்தச் சலுகை மறுக்கப் படுகிறது. வருடத்திற்கு ஒரு கிறிஸ்துவ/முஸ்லீம் மாணவனுக்கு அரசாங்கமே கல்லூரிப் படிப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய்கள் வழங்குகிறது ஆனால் அதே வேளையில் கடும் ஏழ்மைச் சூழலில் வாழும் இந்து மாணவனுக்கு அது கிடையாது என்னும் பொழுது அந்த ஒரு லட்ச ரூபாய்க்காக அந்த ஏழை இந்து மாணவன் மதம் மாற வாய்ப்புகள் உண்டு.

ஆக அரசாங்கமே மதமாறத்தை ஊக்குவிக்கிறது என்ற அநியாயத்தைக் கருதி ஒரு இந்துவாக நான் குரல் கொடுத்தால் நிச்சயமாக அதை ஒரு குழுவின் பிரதிநிதியாக என்னைக் கருதிக் கொள்கிறேன் என்று நீங்கள் குறை சொல்ல மாட்டீர்கள் என்றே எண்ணுகிறேன். அப்படிச் சொன்னால் அது தவறு. ஆக ஒரு சில இடங்களில் பிரதிநித்த்துவக் குரல்கள் ஒலிப்பதில் தவறில்லை என்றே நான் கருதுகிறேன்

இந்த இரண்டு சுய விளக்கங்களுடன் என் கருத்துக்களை வைக்கிறேன்.

முதலில் தமிழ் சினிமக்களில் பிராமண ஜாதி பாத்திரங்கள் இழிவாகக் காண்பிக்கப் படுவது குறித்து சில கருத்துக்கள்.

தமிழ் சினிமா, இலக்கிய, கலைச் சூழலில் இன்று நீங்கள் எந்த ஜாதியையும், எந்த கட்சியையும் குறை கூறும் வகையில் சொல்லி விட முடியாது. ஆனால் அதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு பிராமணர்கள் மட்டுமே. பிராமணர்களை சினிமாக்களில் இழிவாகவும், கேலிக்குரியவர்களாகவும், ஆபாசமாகவும் காண்பிக்கப் படுவது எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் பல வருடங்களகாகத் தமிழ் நாட்டில் தொடர்ந்து வருகிறது. இதை ஆரம்பித்து வைத்தவர்களே பிராமண சினிமாக்காரர்கள் தான் என்பதையும் சொல்ல வேண்டும்.

சூர்யா போன்ற இயக்குனர்கள் பிராமணப் பெண்களைக் காட்டும் விதம் போல் வேறு எந்த விதப் பெண்களையும் பெயர் சொல்லிக் காண்பித்து விட முடியாது. சினிமாக்களில் மட்டும் அல்ல பத்திரிகைகள், இணைய தளங்கள், ப்ளாகுகள் ஆகிய இடங்களிலும் கூட இந்த ஆபாசம் தொடர்கிறது. அதற்கு எந்த விதமான நியாயத்தையும் சொல்லி விட முடியாது. ஒரே காரணம் அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள். எதிர்த்துப் பேச விருப்பம் இல்லாதவர்கள் அல்லது அதற்கான ஒற்றுமை இல்லாதவர்கள்.

ஏற்கனவே தமிழக அரசியலில் அவர்கள் கொடுமையானவர்களாகவும் ஆதிக்க ஜாதியினர்களாகவும் பெரும் வில்லன்களாகச் சித்தரிக்கப் பட்டவர்கள். ஆகவே அவர்களை எப்படி சித்தரித்தாலும் யாரும் எதிர்த்து கேள்வி கேட்க்க மாட்டார்கள், அப்படியே ஒரு சிலர் வந்தாலும் அவர்களை அடித்து விரட்டி விடலாம் என்ற எண்ணம் மட்டுமே இவ்வித சித்தரிப்புக்களுக்குக் காரணம். இதையே நான் எந்த ஜாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் சொல்லியிருந்திருப்பேன்.

ஒரு ஜாதியினரை ஒரு கதையின் நம்பகத்தன்மை கருதி காண்பிக்கக் கூடாதா என்றால் அதற்குப் எனது பதில் தாராளமாக காண்பிக்கலாம் காண்பிக்க வேண்டும் என்பதே. ஆனால் தமிழ் சினிமாக்களில் சமீப காலமாக அந்த வித யதார்த்த நோக்கம் கருதி பிராமணர்கள் காண்பிக்கப் படுவதில்லை. அவர்களது உடை, தோற்றம், மொழி ஆகியவற்றைக் கேலி செய்யும் நோக்கிலும் பெண்களை விரக் தாபத்தில் அலையும் பெண்களாகச் சித்தரிக்கும் நோக்கிலும் மட்டுமே அந்த ஜாதியினர் காண்பிக்கப் படுகிறார்கள் என்பதைத் தமிழ் படங்களைத் தொடர்ந்து பார்க்கும் எவரும் அறிவர்.

இதனால் உனக்கு என்ன? நீ ஏன் அவர்களது பிரதிநிதியாக வருகிறாய் ? என்று நீங்கள் கேட்க்கலாம்.

நான் யாருடைய பிரதிநிதியாகவும் இங்கு வரவில்லை. நான் என்னுடைய பிரதிநிதியாக மட்டுமே இங்கு பேசுகிறேன்.

ஒரு பிராமணப் பெண்ணை தொடர்ந்து தமிழ் சினிமாக்களில் விரக தாபம் மிக்க பெண்களாக சித்தரிப்பதன் மூலம் அந்த ஜாதிப் பெண்கள் தெருவில் வரும் பொழுது அவர்களைக் காணும் எந்தவொரு விடலைப் பையன்கள் மனதிலும், எந்தவொரு பொறுக்கியின் மனதிலும், எந்தவொரு லும்பன்களின் மனதிலும் அவர்களை கேலிப் பொருளாக எளிதில் வக்கிரமாகக் கைக்கொள்ளும் மனோநிலையே ஏற்படும். இதில் படிதவர்களுக்கும் தெருவில் சுற்றும் ரவுடிகளுக்கும் கூட வித்தியாசம் இல்லை.

அதனால்தான் அமெரிக்காவில் பி எச் டி செய்யும் பொறுக்கிகள் கூட இணையத்தில் பாட மறுக்கும் பாப்ப்பாத்திகள் என்று எளிதாக எழுதி விட்டு முற்போக்குப் பட்டமும் வாங்கிக் கொண்டு போய் விட முடிகிறது.

சினிமாக்களில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு தெருமுனை தி க, தி மு க, தனித் தமிழ் கூட்டங்களிலும் இதே விதமான வக்கிரப் பிரச்சாரமே தமிழ் நாட்டில் கடந்த அறுபது வருடங்களாக அவிழ்ந்த்து விடப் பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு சூழலில் சினிமாக்களும் சேர்ந்து கொள்ளும் பொழுது பிராமணப் பெண்களும் ஆண்களும் தெருவில் செல்லும் பொழுது ஏற்படுத்தப் படும் அவமானகரமான செயல்பாடுகளுக்கு இந்த விதமான சினிமாக்களே பொறுப்பாகின்றன. இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தமிழ் இணைய ப்ளாகுகளையும் அதில் வெளியிடப் படும் பின்னூட்டங்களையும் ஒரு நாள் உலாவிப் பார்த்தாலே புரிந்து விடும்.

பிராமணப் பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் கூட கடுமையான கேலிக்கும் தாக்குதலும் அடிக்கடி உள்ளாகின்றனர். ஆவணி அவிட்டம் என்ற பிராமணர்களின் பூணூல் அணியும் சடங்கு முடிந்து அவர்கள் வீடுகளுக்குத் திரும்புகையில் தாக்கப் படுவதும் ஆபாசமாகக் கிண்டல் செய்யப் படுவதும் இன்றும் தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்குகளில் நடை பெறுகின்ற ஒரு காட்சியே. ஒரு முஸ்லீம் பெண் பர்தா அணிந்து வரும் பொழுது செய்யப் படாத ஒரு கிண்டல், ஒரு முஸ்லீம் குல்லா போட்டு வரும் பொழுது, மீசையை மழித்து விட்டுத் தாடி மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பொழுது செய்யப் படாத ஒரு கேலி, ஒரு சர்தார் தாடி வைத்து, டர்பன் வைத்துக் கொண்டு போகும் பொழுது செய்யப் படாத அவமானம், ஒரு பாதிரியார் பாவாடை அணிந்து கொண்டு போகும் பொழுது செய்யப் படாத ஒரு ஏளனம், ஒரு பிராமணப் பெண் மடிசார் கட்டிக் கொண்டு போகும் பொழுதும், ஒரு பிராமணப் புரோகிதர் குடுமி வைத்துக் கொண்டு செல்லும் பொழுதும், ஒரு பிராமணர் பூணூல் அணிந்து கொண்டு போகும் பொழுது மட்டுமே செய்யப் படுவதன் காரணம் என்ன? தமிழ் நாட்டின் இன வெறுப்பு அரசியல் மற்றும் ஆபாச சினிமாக்கள் இரண்டுமே காரணம் என்று நான் சொல்கிறேன்.

இதை நீ ஏன் சொல்கிறாய் என்று கேட்டால் என் மனைவியோ, அம்மாவோ, அப்பாவோ, மகளோ செல்லப் படும் பொழுதும் இதே அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் உள்ளாகக் கூடிய சாத்தியங்கள் இருப்பதினால் சுயநலம் கருதி நான் இவற்றைக் கடுமையாக எதிர்க்கிறேன். கண்டனங்களைப் பதிவு செய்கிறேன்.

இதனால் பாதிக்கப் படாத இந்த நிலைகளையெல்லாம் அறிய நேராத நீங்களோ வேறு எவருமோ இதையெல்லாம் வெற்றுப் புலம்பல் என்று கருதி மிக எளிதாக இடது கையால் ஒதுக்கி விட்டுப் போய் விடலாம் அல்லது ஒரு குழுவின் பிரதிநிதியாக தன்னைக் கருதிக் கொண்டு அநாவசியமாகப் புலம்புகிறான் என்று மிக எளிதாக ஒதுக்கி விடலாம். உண்மை அதுவல்ல இன்றும் இவை போன்ற அவமானத் தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதற்குப் பெரும் அளவில் நம் அரசியல் கட்சிகளும், ஆதிக்க ஜாதியினரின் பழியைப் பிறரிடம் தள்ளி விடும் போக்கும், சினிமாக்களுமே காரணம் என்று நான் கருதுகிறேன். அந்தக் காரணங்களினால் நான் சொந்த வாழ்வில் நானும் என் குடும்பத்தாரும் பாதிக்கப் படும் பொழுதும் அவ்வாறு பாதிக்கப் படும் சாத்தியம் இருக்கும் பொழுதும் அதற்கான காரணங்களை ஒது தனிப்பட்ட ஒரு அநாதயான குரலாகவேனும் ஒரு சிறிய பலவீனமான எதிர்ப்பையாவது பதிய முயல்கிறேன்.

இப்படி சினிமாக்களில் பிராமணர்களை அவமானப் படுத்தும் போக்குகளை ஒரு ஞாநியோ, ஒரு தி ஹிந்து ராமோ ஒரு கமலஹாசனோ கேள்வி கேட்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் சுய அடையாளங்களை மறைப்பதற்கே அவர்கள் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள்.

மேலும் ஒரு கமலஹாசனின் குடும்பப் பெண்களோ, ஒரு பாலச்சந்தரின் குடும்பப் பெண்களோ டவுண் பஸ்ஸில், தாம்பரம் பீச் ட்ரெயினில் செல்பவர்கள் அல்லர், ரேஷன் அரிசிக்காக க்யூவில் நிற்கும் பிராமணர்கள் அல்லர், தனியார் வேலைக்குச் செல்பவர்கள் அல்லர். ஆகவே அவர்களுக்கு இது குறித்து எவ்விதக் கவலையும் கிடையாது, மாறாக ஒரு ஜெயமோகனை தலித்துக்களை அவமானப் படுத்தி விட்டார் என்று சொன்னால் அவர்களுக்கு முற்போக்கு பட்டம் கிட்டும் அவர்களின் ஜாதி அடையாளத்தை மறைக்க உதவும் அதனால் அதை வேகமாகச் செய்வார்கள்.

ஆகவே பாதிக்கப் படுபவர்கள் மட்டுமே இது குறித்து ஏதேனும் சொல்ல முடியும். நான் இந்த விஷயத்தில் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டவன். சிறு வயதில் நான் அனுபவதித்த ஒரு கொடூரமான தாக்குதலின் பயங்கரத்தில் இருந்து இன்றும் மீள முடியாத கடுமையான கசப்பில் உழல்பவன் என்ற முறையில் இவை போன்ற சினிமாக்களை ஒரு தனி மனிதனாக கண்டித்தால் அது தவறு ஏதும் இருக்க முடியாது என்றே கருதுகிறேன்.

சினிமாவில் பிராமணப் பெண் அலைவதாகக் கவர்ச்சி மதிப்பு கருதி மட்டும் காண்பிக்கப் படும் பொழுது அதைப் பார்க்கும் ரோட்டில் அலையும் ரவுடிக்கு அவன் காணும் பிராமணப் பெண்களின் இடுப்பைக் கிள்ளச் சொல்லும் தைரியத்தை அளிக்கிறது. சினிமாவில் குடுமி வைத்த ஒரு புரோகிதர் இழிவு செய்யப் படும் பொழுது ரோட்டில் அதே போலச் செய்யும் ஒரு புரோகிதர் அசிங்கமாக ஏசப் படுகிறார் சமயங்களில் தாக்குதலுக்கும் உள்ளாகிறார். இவையெல்லாம் நடக்கின்றன, நானே கண்டிருக்கிறேன். உங்கள் சூழலில் நடக்கவில்லை என்பதினால் இப்படி நடப்பதேயில்லை என்று சொல்லி விடாதீர்கள்.

ஏன் தமிழ் நாட்டில் தலித்துக்கள் அவமானப் படுத்தப் படுவதில்லையா, கொடுமைக்குள்ளாவதில்லையா நீ அவமானப் பட்டால் என்ன உன் முன்னோர் செய்த பாவத்திற்கு நீ கொடுக்கும் விலை இது என்பது அடுத்த பதிலாக வரும். நிச்சயமாக ஒடு தலித் படும் வேதனைக்கும் அவமானத்திற்கும் வேறு எந்த அவமானமும் ஈடு இணையாகாது. ஆனால் அவர்களை சினிமாவில் அப்படிச் சித்தரிக்க யாரும் துணிவதில்லை.

கட்சி மேடைகளில் யாரும் பேசுவதில்லை. அவர்கள் படும் அவமானம் அந்தந்தப் பகுதிகளில் வாழும் பிராமணர்கள் அல்லாத பிற ஜாதியினரால் உண்டாக்கப் படுவது மட்டுமேயன்றி சினிமாக்கள் காரணமாக இருப்பதில்லை.

எனக்கு ஜெயமோகனைத் தெரியும், ஒரு சினிமாவிலோ ஒரு படைப்பிலோ தேவை கருதி ஒரு ஜாதியோ ஒரு இனமோ, ஒரு மதமோ ஒரு கட்சியோ சித்தரிக்கப் பட வேண்டுமானால் அதன் அவசியம் குறித்து நன்கு தெரியும். ஆகவே அங்காடித் தெருவில் நீங்கள் எந்த வித உள்நோக்கமும் இன்றி அந்தக் கதையின் நம்பகத்தன்மைக்காகவும், அதன் நிஜத்தன்மைக்காகவும் மட்டுமே அந்தக் காட்சியை வைத்திருக்கிறீர்கள் என்பதும் நன்கு தெரியும்.

ஆனால் உங்களை அறியாத உங்கள் எழுத்துக்களைப் படித்தறியாத, உங்கள் நோக்கங்களை அறிந்திராத, தமிழ் சினிமாவில் வழக்கமாக பிராமணர்கள் சித்தரிக்கப் படுவதைக் கண்டு வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்ட அதனால் பாதிக்கப் பட்ட ஒரு சராசரி பிராமணப் பெண்ணோ ஆணோ, அப்படிச் செய்யும் சினிமாக்காரர்களையும் உங்களையும், வசந்த பாலனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவே செய்வார்கள். அது புரியாமல் உங்களைப் பற்றி அறியாமல் செய்யும் ஒரு செயலாகவே நான் கருதுவேன்.

அடுத்து அடையாளம் குறித்து. எனக்கு அடையாளங்கள் ஏதும் கிடையாது. எனக்கு அடையாளங்களின் அவசியமும் தேவையும் கிடையாது. எந்த பிராமணர்களிடத்தும் போய் எதற்காகவும் கெஞ்சி நின்றதும் கிடையாது. ஜாதி என்பது உறவுகளைப் பேணவும் உணவு, சடங்குகள் போன்ற ஒரு சில கலாச்சார அடையாளங்களை தொடர்வதற்காகவும், ஒருவருக்கு ஒருவர் தேவைப் பட்டால் கஷ்டப் படுவதற்கு உதவுவதற்காகவும் வேண்டுமானால் ஜாதிகள் தேவைப் படுமே ஒழிய அவற்றை மீறி அதன் தேவைகள் ஏதும் இல்லை என்ற கொள்கைகள் உடையவன்.

மேலும் ஒருவர் எந்த ஜாதியில் பிறந்தாலும் பிறப்பின் அடிப்படையில் அவர்கள் யாருக்கும் உயர்வானவர்களோ தாழ்வானவர்களோ கிடையாது என்ற நம்பிக்கையும் உடையவன். ஆனாலும் நான் பிறந்த குழுவின் அடிப்படையில் என் மீது நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில அடையளங்கள் திணிக்கப் படுகின்றன. அதற்கு நான் பொறுப்பாக முடியாது, நீ இந்த ஜாதி ஆகவே இப்படித்தான் நடந்து கொள்வாய் என்ற தெளிவான முன் தீர்மானங்கள் கொண்டே இன்று தமிழ் நாட்டில் எவரும் அணுகப் படுகிறார்கள்.

ஆகவே என் மீது திணிக்கப் படும் ஜாதி சார்ந்த அடையாளங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது. ஆகவே ஒரு ஜாதியின் அடையாளமாக நான் இதைச் சொல்லாமல் தனிப்பட்ட அளவில் பாதிக்கப் பட்ட பாதிக்கப் படும் வாய்ப்புள்ளவன் என்ற அளவில் மட்டுமே நான் இதை அணுகுகிறேன் என்பதை மீண்டும் ஒரு முறை தெளிவு படுத்திக் கொள்கிறேன்.

அங்காடித் தெருவில் அந்த பிராமணர் பாத்திரம் குறித்தும் பக்தியுள்ள இந்துக்கள் வில்லன்களாக காண்பிக்கப் படுவதும் குறித்தும் நீங்கள் உள்நோக்கம் கருதி அவற்றை வைக்காவிட்டாலும் கூட வக்கிரம் புரையோடிப் போன நம் தமிழ் சூழலில் அவை எவ்வாறு புரிந்து கொள்ளப் படும் என்ற என் அச்சத்தை எனது அங்காடித் தெருவின் சமூகப் பார்வை என்ற கட்டுரையில்

http://solvanam.com/?p=7588

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். குறை உங்களிடம் இல்லை நம் பார்வையாளர்களிடம் உள்ளது என்பதைச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் ஒரு பிராமணப் பெண்ணை அப்படிச் சித்தரிப்பதினால் எல்லா பிராமணப் -பெண்களுமே அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. நீங்கள் ஒட்டு மொத்த ஜாதியையும் சொல்ல வரவில்லை என்பதை ரப்பர் படித்த, பி தொ நி குரல் படித்த, காடு படித்த, அனைத்து கட்டுரைகளையும் படித்த, ஜெயமோகனுடன் நெருங்கிப் பழகி நேரில் அறிந்த நான் நன்கு அறிவேன். அதில் எனக்கு எவ்விதச் சந்தேகமும் கிடையாது.

ஆனால் இதை அறியாத பொதுவாகவே கடந்த அறுபது எழுபது வருடங்களாக தமிழ் நாட்டில் நிலவி வரும் கடுமையான பிராமணக் காழ்ப்புச் சூழலில் வளர்ந்த பிராமணர்கள் என்றாலே கொடூரமான வெறியர்கள் என்று சொல்லி வளர்க்கப் பட்ட தமிழர்களில் பலருக்கும் இந்தக் காட்சி பிராமணர்களை கடுமையாக வெறுக்க மற்றும் ஒரு காரணத்தைக் கற்றுக் கொடுக்கும் அது போன்ற குரோத மனப்பான்மைக்கு தூபம் போடும்.

இது சினிமாவில் அதை வைத்த உங்கள் நோக்கம் வேறு ஆனால் அது பெரும்பான்மை தமிழர்களிடம் ஏற்படுத்தும் விளைவு வேறு. நீங்கள் அறியாமலேயே விளைவது அந்தக் குரோதம். இந்தச் சூழல் கேரளாவில் கிடையாது. அங்கு படம் பார்ப்பவனுக்குத் தெரியும். சினிமாவில் ஒரு நம்பூதிரியோ, ஒரு முஸ்லீமோ, ஒரு கிறிஸ்துவனோ மோசமாக காண்பிக்கப் பட்டால் அது அதே இனத்தைச் சேர்ந்த அனைவரின் ஒட்டு மொத்தக் குணமும் கிடையாது என்பதை ஒரு எளிய மலையாள ரசிகன் கூட புரிந்து கொள்வான்.

ஆனால் தமிழ் நாட்டில் அந்த நிலை இல்லை. ஆகவேதான் தமிழ் சினிமாக்களில் ஜாதிகளை வெளிப்படையாகக் காண்பிப்பதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. இங்கு நிலவும் சூழலில் ஒரு கட்சியையோ, ஜாதியையோ, தலைவர்களையோ படைப்பின் யதார்த்தம் கருதி கூட அப்படியே காண்பித்து விட முடியாது என்பதுதான் தமிழ் நாட்டு யதார்த்தம். ஆனால் பிராமணர்களை காண்பிக்கலாம் அதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலோனோர் அதை உரிய விதத்தில் புரிந்து கொள்வார்கள். கையை, தலையை வெட்ட வரமாட்டார்கள்.

உண்மைதான்.

அதனால் உங்களைப் போன்ற ஒரு சில படைப்பாளிகள் நேர்மையான காரணங்களினால் ஒரு சின்ன சுதந்திரம் எடுத்துக் கொள்கிறீர்கள் அதில் தப்பும் இல்லை. ஆனால் அந்த சின்ன சுதந்திரம் கூட அப்படிப் பெருந்தன்மையுடன் புரிதலுடன் அமைதி காக்கும் ஒரு தரப்பாருக்கும் கூட எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன என்பதே என் ஆதங்கம்.

இன்றைய தமிழ் சூழலில் ஒரு சிவாஜி, ஒரு எம் ஜியாரை விமர்சிக்க முடியாது. பிராமணர்களைத் தவிர வேறு எந்தவித ஜாதியினரையும் பெருமைப் படுத்துவது அன்றி வேறு எந்த விதமாகவும் விமர்சித்து விட முடியாது. பா ஜ க போன்ற ஒரு சில கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியினரையும் சினிமாவில் விமர்சித்து விட்டு உயிரோடு இருந்து விட முடியாது.

இப்படியாகப் பட்ட ஒரு சூழலில் படைப்புச் சுதந்திரம் கருதி எதிர்ப்புத் தெரிவிக்காத ஒரு சமூகத்தை மட்டும் எப்படியும் காண்பிக்கலாம் என்பது நிச்சயம் படைப்பாளிக்கு எந்த வித எதிர்ப்பையும் ஏற்படுத்தாது ஆனால் அந்த சமூகத்தின் மீது தமிழ் நாட்டுச் சூழலில் ஒரு வித புரிதல் இல்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்த அவை போன்ற யதார்த்தம் கருது உள்நோக்கமின்றி வைக்கப் பட்ட காட்சிகள் காரணமாகி விடுகின்றன என்று கருதுகிறேன்.

இன்றைய சூழலில் தமிழ் நாட்டில் நான் ஒரு சினிமா இயக்குனராக இருந்தால், ஒரு சமுதாயம் அல்லது ஒரு கட்சி மட்டுமே தன் பலவீனம் காரணமாகவோ, எண்ணிக்கை காரணமாகவோ, பெரும் தன்மை காரணமாகவோ, சரியான புரிதலின் காரணமாகவோ அல்லது வேறு எந்த விதமான காரணமாகவோ தன்னைப் பற்றிய நேர்மையான, ஆபாசமான, கேலியான, உள்நோக்குள்ள்ள, இல்லாத அனைத்து விதமான சித்தரிப்புகளையும் பொறுமையுடனும் புன்னகையுடனும் அனுமதிக்கிறது என்றாலும் கூட என் படைப்புகளில் நான் அந்த சமூகத்தை மட்டுமே பயன் படுத்த மாட்டேன். என்று எனக்கு எல்லாவிதமான சமூக அமைப்புகளையும், ஜாதிகளையும்,கட்சிகளையும், தலைவர்களையும் ஒரே விதமாக விமர்சிக்கும், சித்தரிக்கும் உரிமை மறுக்கப் படுகிறதோ அந்தவிதமான ஒரு விஷச் சூழலில் நான் ஒரு சமூகத்தை மட்டும் அது அனுமதிக்கிறது அல்லது அது அனுமதிக்கும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறது அல்லது பெருந்தன்மையாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக என் படைப்புகளில் அந்தச் சமூகத்தைப் பயன் படுத்திக் கொள்ள மாட்டேன் என்பதே என் நிலைப்பாடாக இருக்கும்.

எமர்ஜென்சியின் பொழுது யாரும் இந்திராவையோ அவரது கட்சியையோ ஆட்சியையோ விமர்சிக்க முடியாது. கடுமையான சென்சார், கடுங்காவல் எல்லாம் அமுலில் இருந்தது. அப்பொழுது கவிழ்க்கப் பட்ட தி மு க ஆட்சியும் ஒன்றும் யோக்யமான ஆட்சி அல்ல அது மாநில அளவில் எதோச்சிகாரமும் ஊழலும் அராஜகமும் செய்து கொண்டிருந்த கட்சிதான் (இன்றைக்கும் அதே கதைதான்) அப்பொழுது சோ வுக்கு கருணாநிதியையும் அவர் ஊழல்களையும் விமர்சிக்க முழு உரிமையும் அனுமதியும் இருந்தது.

அன்று சோ தனது துக்ளக்கில் தாராளமாகக் கருணாநிதியை விமர்சிக்கலாம் ஆனால் இந்திராவை விமர்சிக்க முடியாது. அப்பொழுது சோ ஒரு தீர்மானம் எடுத்தார் எப்பொழுது என்னால் ஒரு கட்சியை விட்டு விட்டு இன்று கவிழ்க்கப் பட்டு பலவீனமாக இருக்கும் மற்றொரு கட்சியை மட்டுமே விமர்சிக்க முடிகிறதோ அப்பொழுது நான் கருணாநிதியையும் விமர்சிக்கப் போவதில்லை. என்று என்னால் இந்திராவை விமர்சிக்க எனக்கு அனுமதியும் பேச்சுரிமையும் மீண்டும் கிடைக்கிறதோ அன்றுதான் நான் கருணாநிதியையும் விமர்சிப்பேன் என்று கூறினார்.

சோவின் நிலைப்பாடே என் நிலைப்பாடாகவும் இருக்கும்

என் அச்சங்கள் தேவையற்றதாகவும், அதீதமானதாகவும் நீங்கள் கருதலாம். பாதிக்கப் படாத யாரும் அவ்வாறே கருதுவார்கள். நான் சொல்வது என் அனுபவத்தின் அடிப்படையில் நான் கண்ட சம்பவங்களின் அதன் காரணங்களாக நான் கருதுபவற்றின் அடிப்ப்டையில் அமைந்தவை மட்டுமே. இதையே நான் மலையாள சினிமா சூழலுக்குச் சொல்ல மாட்டேன். அங்கு இயக்குனர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எல்லா ஜாதியினரைப் பற்றியும், மதத்தினரைப் பற்றியும், கட்சியினரைப் பற்றியும் துணிவுடன் விமர்சிக்கும் சுதந்திரம் நேற்று வரை இருந்தது. இன்று கைகள் வெட்டப் பட்ட கிறிஸ்துவ கல்லூரி ஆசிரியருக்குப் பின்னால் கேரளத்திலும் கூட தமிழகத்தில் நிலவும் சூழல் வந்து விட்டிருக்கிறதோ என்ற அச்சம் நிலவுகிறது.

இருந்தாலும் நேற்று வரை இருந்த மலையாள படைப்புலகச் சூழலில் எந்த ஜாதியினரை விமர்சிப்பதிலும் யாரும் தயக்கம் இருந்ததில்லை அதற்கான தேவையும் பெரும்பாலும் இல்லை. ஆனால் தமிழ் நாட்டின் சூழல் வேறு. இங்கு கருணாநிதியையும், எம் ஜி யாரையும் குறிப்பிட்டு ஒரு சாதாரண சினிமா கூட எடுக்க முடியாத சூழல் தான் நிலவுகிறது. மலையாள அரபிக் கதாவில் சர்வ சாதாரணமாக பிரணையில் விஜயனும், அச்சுதானந்தனும் பேசப் படுகிறார்கள். போப்பும், நம்பூதிரிகளும், சங்கராச்சாரியர்களும் மிகச் சுதந்திரமாக விமர்சிக்கப் படும் சூழல் உள்ளது. அங்கு தாராளமாக படைப்புச் சுதந்திரத்தைப் பயன் படுத்தலாம்.

ஆனால் புரையோடிப் போயிருக்கும் தமிழ் நாட்டுச் சூழலில் வேறு விதமாகச் செயல் பட வேண்டிய கட்டாயமே எந்தவொரு படைப்பாளிக்கும் நிலவுகிறது. அந்த சூழல் மாறும் ஒரு காலம் வரும் பொழுது என்று எல்லா ஜாதியினரையும் சமமாக விமர்சிக்கலாம் என்ற காலம் வரும் பொழுது, என்று எல்லா கட்சியினரையும் அரசியல்வாதிகளையும் எவ்வித அச்சமும் இல்லாமல் பகிரங்கமாக நேர்மையாக விமர்சிக்கலாம் என்ற நிலை வரும் பொழுது பிராமணர்களையும் அவர்களில் பலரது சிறுமைகளுக்காகவும், ஆணவங்களுக்காகவும், ஜாதி மேலாண்மைக்காகவும், தீண்டாமைக்காகவும் கட்டாயம் கடுமையாக விமர்சிப்பதில் எந்த வித ஆட்சேபணையும் இருக்க முடியாது.

Ravanan & Angaadi Theru

குரங்கு மாதிரி கார்த்திக் மட்டும் அல்ல; அங்காடித் தெரு இராமனின் உற்ற நண்பர் மாரிமுத்துவும் குதிக்கிறார் என்பது இந்தப் பதிவின் தோற்றுவாய். அங்காடித் தெருவிலும் தாழ்த்தப்பட்டவரை ‘பன்றி’ என்று விளிக்கும்போது வெகுண்டெழாத சமூகம் ஆசனவாய்.

இராவணன் பிரும்மாண்டம். அங்காடித் தெரு குடிசை வீடு. இருந்தாலும் இந்த வருடம் வந்ததில் இந்த இரண்டு மட்டுமே முக்கியமான ஆக்கம்.

இரஜினிகாந்த் படங்களில் வருவது போல் ஐஸ்வர்யா, விக்ரம், பிரபு, கார்த்திக் நட்சத்திரப் பட்டாளம் கொண்டது ராவணன். புதுமுகங்களும் கூடிய சீக்கிரமே கூத்துப் பட்டறை கலைராணி மாதிரி அலுத்துவிடக் கூடிய விக்கிரமாதித்யர்களும் நிறைந்தது ‘அங்காடி தெரு’.

அங்காடித் தெருவில் வசனம் பலம். சுஜாதா இல்லாத உயிர்மையை ஜெயமோகன் மட்டும் வாழவைக்காவிட்டாலும், சாரு நிவேதிதாவிற்கும் வசனம் வராதது மணி ரத்னத்தின் இராவணப் பிரச்சினை.

பவிசு, பரதேசம், சில்லாட்டை என்று வட்டார வழக்கு ஆகட்டும்; வேலையில் சக்கை பிழியபட்டு வீடு திரும்புபவரின் செல்பேசி அலறல் பதில் அன்யோன்யம் ஆகட்டும். வசந்தபாலன் இயக்கமும் ஜெயமோகன் உரையாடலும் நகைச்சுவையையும் வாழ்க்கையையும் இழையவிடுகிறது. இராவணனில் ‘வினவு‘ தளத்துக்கு நுழைந்துவிட்ட அஜீரணம் கலந்த பிரச்சாரப் போலி பித்தளை.

சகோதரிகளுக்கு அப்பாவின் சட்டை; சரவணா ஸ்டோர்சுக்கு ஜோதிலிங்கம் கிளம்பும்போது பள்ளிக்கூட சீராடை. கேரளா விளக்கைத் தூக்கும்போது நெருங்கும் கை; போன்ற நுணுக்கங்கள் நிறைந்தது ‘ரங்கநாதன் தெரு’. இராமாயணத்தில் அன்றும், இன்றும், என்றும் லாஜிக் இல்லா மேஜிக் ரியலிசம்.

இவ்வளவு வித்தியாசம் நிறைந்த படங்களை எப்படி ஒரே பதிவாக்கலாம்?

நான் அங்காடித் தெருவிற்கு விமர்சனம் எழுதவில்லை; படம் வந்தும் நாளாகி க்ளாசிக் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது முதல் காரணம்.

இரு படங்களுமே ஜாலியான மசாலா என்பது முக்கிய காரணம்.

இரண்டு படங்களிலும் அசல் வாழ்க்கை நாயகர்களான காவல்துறையும் தொழில் துறையும் வில்லன்கள்.

மெதுவாகத்தான் அறிமுகம் ஆகிறார்கள். மிடுக்கோடு; கொஞ்சம் அப்பாவியாக; அவர் தொழிலுக்கு பக்தி என்றால், அண்ணாச்சி இறைபக்தி.

அங்கே ராமர்/சீதை/அனுமன்/இலக்குவன்/ஜடாயு/சூர்ப்பநகை சொல்ல பிரும்மப் பிரயத்தனம் என்றால், இங்கே சரவணா ஸ்டோர்ஸுக்கு பல்வேறு முன்னிறுத்தல்.

சாதாரணமாக நாயகியின் அப்பா, எதிர்மறை கதாபாத்திரம் செய்வார். அங்கே நாயகியின் கணவன். இங்கே நாயகிக்கு சம்பளம் தருபவர். இந்த இடத்தில் பெரும்பாலான திரைப்படங்களை ஒத்தே அமைந்திருக்கிறது. மூவருமே நிஜ வாழ்வில் சிம்ம சொப்பனம். அவர்கள் கிண்டலடிக்கப்படும்போது ஒடுக்கப்பட்ட மனம் கிளர்வது இயல்பு.

‘ஓசியில கொடுக்க அரசாங்கமா’ என்னும் கலைஞர் டிவி நையாண்டி அங்கே; ‘எந்தப் பொந்தில் போய் ஒளிஞ்சுண்டிருக்கான்’ என்று வாலியை மறைந்தடித்த ராமரும் இராவணரில் உண்டு.

இரண்டு படத்திலும் மூலக்கதைக்கு சம்பந்தமில்லாத தொகுப்புக் காட்சிகளும் கதாபாத்திரங்களும் மான்டேஜ் சித்திரங்களாக எக்கச்சக்கம். அவை பிரமிக்க வைக்கின்றன; அல்லாட வைக்கின்றன.

சத்தமாக அருளாசி வழங்குவதில் அங்காடித் தெரு ஜொலி சொலிக்கிறது. இராவணனில் புனித பிம்பங்களைக் குறித்து வினா மட்டுமே வைக்கப்படுகிறது.

படத்திற்கும் பாடல்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றாலும், மணி ரத்தினம் அதற்கான கெத்தை நிலைநாட்டுகிறார். இரண்டாவது பல்லவியும் வராதா என்று ஏங்கவைக்கிறார். ‘நான் கடவுள்’இல் ‘பிச்சைப்பாத்திரம் ஏந்தி வந்தேன்’ பாடல் எம்டிவி அடியொற்றி உண்டியல் குலுக்கியது. ஜெயமோகனின் இந்தப் படத்திலும் ‘கண்ணில் தெரியுது வானம்’ நீர் கோர்க்க வைக்கும் புலம்பல். அடுத்ததாக ஜெயமோகனார், சாஃப்ட்வேர் எஞ்சினீயர்களின் பிரச்சினைகளை முன்வைத்து அழுவாச்சி மூன்று நிமிஷம் கொடுக்க விண்ணப்பம் வைத்துவிடுகிறேன்.

இட்டமொழியில் பாரம்பரியச் சின்னம் போன்ற கோவில் இருப்பதை ஆராய முடியாது. அதே போல் திருநெல்வேலியில் வாரணாசி கோபுரமும் கிடைக்கும்.

அ.தெ.வில் ‘வானாகி மண்ணாகி’ காதல் ஊடல். இராவணனில் வீராப்புடன் கோபாவேச பாரதியார் வசன கவிதை.

சூர்ப்பனகைக்கு ஒரு நியாயம்? சீதைக்கு இன்னொரு கற்பு நிலையா? என்று கேட்பது மணிரத்னமாயணம். படி ஏறி இறங்காத நாயகி கனி (அஞ்சலி)க்கு ஒரு நியாயம்? நாயகன் அடி வாங்கும்போது மட்டும் இரக்கநிலையா என்று வினவுவது அங்காடி இராமாயணம்.

காதலியைக் காப்பாற்ற இயலாத கையாலாகாதவர்களினால்தான் இரு கதைகளுமே முன்னகருகிறது. ப்ரியாமணியின் கணவன் நடுங்குகிறான். கன்னுக்குட்டி செல்வராணி சௌந்தரபாண்டியனால் அனாதரவாகும் காட்சி அதனினும் மிரட்சி.

வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் ஆபத்பாந்தவம் லிங்குவிடமும் உண்டு; எஸ்.பி.யும் அதே பயத்துடன் நாயகியை நிராகரித்து வீராவிடமே அனுப்பி வைக்கிறார். இரு இடங்களிலும் ஏமாற்றம்.

அண்ணாச்சி அறியாமல் கனியும் காதல் அங்கே; அண்ணன் ராமனுக்குத் தெரியாமல் மலரும் காதல் இங்கே.

சரி… காதல் எத்தனை வகை?

1. ஆசை: அங்காடித் தெருவில் அஸ்வினி வகை. இராவணனில் வீராவிற்கு வருவது – காமம்; உடல் சார்ந்தது.

2. உடைமை: இது வீராவிற்கும் கைக்கடிகாரத்திற்கும் இடையே உள்ளது. ‘என்னுடைய வாட்ச்’ என்னும் ஆக்கிரமிப்பு சார்ந்தது. பயம் கொணர்வது.

3. சார்புநிலை: அங்கே லிங்குவிற்கும் கனிக்கும் இடையே உள்ளது.

4. சுய அடையாளம்: எஸ்.பி பிருத்விராஜூக்கு இருக்கும் தொழில்பக்தி. காதலுக்கு பதில் அகந்தை தலைதூக்கும்.

சினேகாவின் ஒரிஜினல் பெயர் சுகாசினி. ராவண் வசனம் எழுதியவர் சுஹாசினி. இரண்டு பேருமே இரு படத்திலும் சம்பந்தமில்லை என்பதுதான் சம்பந்தம்.

வாசக அனுபவம்: கன்னியாகுமரி: ஜெயமோகன்

தொடர்புள்ள பதிவு: நாவலில் என்னைக் கவர்ந்த சில இடங்கள், வரிகள், நிகழ்வுகள், கருத்துகள்

மூன்று என்பது முக்கியமான எண். ட்விட்டரில் கூட விசாரித்திருந்தேன்.

சைவத்தில் படுக்கப்போட்ட மூன்று பட்டை; வைணவத்தில் நிற்கும் நாமத்தில் 3 வரிகள்; ராமரும் அணில் முதுகில் 3 கோடு. முப்புரி நூலும் உண்டு. ஏன் #3 ?

orupakkam: 3றிற்கு ஒரு விளக்கம். முழுமையான வடிவை உருவாக்க குறைந்தபட்ச தேவை. triangle is the polygon with min sides. #trilogy

கன்னியாகுமாரியில் மூன்று கடல் சங்கமிக்கிறது. பிரம்மா, சிவன், விஷ்ணு மூன்று பேரும் சேர்ந்த ஸ்தாணுமாலயன். எல்லாம் 3. ஜெயமோகனின் கன்னியாகுமரி நாவலின் நாயகி அந்த இடத்தில்தான் படைக்கப்படுகிறாள்; காக்கப்படுவதாக வாக்களிக்கப் படுகிறாள். ருத்ரனால் சுட்டெரிக்கப்படுகிறாள்.

அந்த மூன்றும் நாயகனுக்கும் அரங்கேறுவதுதான் நாவலின் அபாரம்.

பெண்ணைக் குறித்து ஆண் தெரிந்துகொள்ள விரும்புகிறான். பெண்ணின் உடை புடைவைக்குள் சுருண்டு புதிராக இருக்கிறது என்பதில் ஆரம்பித்து, எதைக் கண்டு பயப்படுவாள்? எதை ரசிப்பாள்? என்பது போன்ற உளவியல் கூறுகள் தொட்டு அனைத்திலுமே ஆணுக்கு, பெண் புரியாத புதிர்.

இந்தப் புதிரைக் கண்டு கொண்டு, சினிமா மூலம் கொஞ்சமே கொஞ்சம் தொட்டுக் காட்டியவனின் கதை கன்னியாகுமரி.

பதின்ம வயதில் உண்டாகும் இனக் கவர்ச்சி. மணமாகியவளிடம் கிடைக்கும் நிபந்தனையற்ற திருமண பரமபத விளையாட்டு. முறை தவறி நடக்கும்போது கிளறும் குற்றநெஞ்சுறுத்தல். மூன்று நிலையிலும் பெண்களைக் கண்டு அச்சமுறும் ஆண் என்று கதையை சுருக்கலாம்.

சினிமாத் தொழிலில் இருக்கும் ஏற்றத்தாழ்வு. ஸ்டோரி டிஸ்கசன் என்றால் என்ன? அட்ஜஸ்ட்மென்ட் செய்துகொள்வது எப்படி? எங்ஙனம் திரைக்கதை – வசனம் – இயக்கம் உருவாகிறது? எவ்வாறு கதைக்காக அலைகிறார்கள் என்பது backdrop.

கன்னியாகுமரி அம்மன் ஆன்மிக புராண வரலாற்றின் குறியீடு — கதாநாயகி; அல்லது நாயகனின் மௌனசாட்சியான மனப்பிராந்தி. அவற்றில் மொழு மொழு கற்பாறைகள் என கட்டி தட்டிப் போன பிம்பங்கள். எத்தனை நாள் காத்திருந்தும் வராத மூர்த்தமாக அடுத்த சினிமாவுக்கான சூப்பர்ஹிட் கதை. உப்புக் கரிக்கும் கடல் அலைகளென மனதில் மீண்டும் மீண்டும் அடிக்கும் நினைவுகள். இந்த மாதிரி குறியீடுகள் மீள் வாசிப்பைக் கோரும் இலக்கியத்தன்மையைக் கொடுக்கிறது.

சினிமாவுக்குள் முழு மூச்சாக நுழைவதற்கு முன்பே ஜெயமோகன் இந்தக் கதையை நல்ல வேளையாக வெளியிட்டுவிட்டார். இல்லையென்றால் பா ராகவனின் ‘நிலா வேட்டை’யில் சொன்ன இயக்குநரின் மறுபாதி போல் இருக்கிறதே என்றெல்லாம் ஹேஷ்யங்கள் வந்திருக்கும். ஜெயமோகனை நான் சந்தித்த பிறகு, நான் படிக்கும் அவரின் முதல் நாவல் என்பதாலோ என்னவோ, பல இடங்களில் அவரே முன்னே வந்து என்னிடம் பேசுவது போல் எனக்குள் பாவனை எழுந்தது. எழுத்தாளரை சந்திப்பது அபாயகரமானது. 🙂

சமீபத்தில் பார்த்த படங்களை ஒப்புமைக்குக் கொன்டு வருவது என்னிடம் உள்ள கெட்ட பழக்கம். அந்த மாதிரி சில படங்களும் இந்த நாவலும்:

1. மௌன கீதங்கள்: ஆனாதிக்க மனோபாவத்தின் உச்சத்திற்கும், அத்தகைய வெளிப்படையான சிலாகிப்பின் பெருமிதங்களுக்கும் பாக்கியராஜ் என்றால், ஆணாதிக்க கோர முகத்தின் பல்லிளிப்புகளுக்கும், தலைதூக்கும் தருணங்களுக்கும் — கண்ணாடியாக கன்னியாகுமரி அமைகிறது.

தன் மனைவியைத் தவிர பிறிதொருவரை கணவன் சுகித்தால் கண்டுகொள்ளக் கூடாது என்பது மௌன கீதங்களின் சப்பைக்கட்டு. அதுவே, மனைவிக்கு என்றால், சட்டதிட்டங்கள் எவ்வாறு மாறும்? கன்னியாகுமரி போட்டு உடைத்தது போல் சொன்னாலும், அழுத்தந்திருத்தமாக உணர்வுபூர்வமாக சந்திக்கு கொண்டு வருகிறது.

2. சிவா மனசில சக்தி: இந்தப் படத்துடன் எல்லாம் ஒப்பிடுவதற்கு ஷமிக்க வேண்டும். என்றாலும், புத்திசாலி பெண் தன்னுடன் அறிவார்ந்த வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அதில் ஆண் சிந்தனை வெல்வது என்பது கன்னியாகுமரியின் ஹீரோ இயக்குநர் ரவிக்கு காமத்தின் உச்சம். ஷார்ப்பான வளைவுகளும் துடிப்பான மூளையும் கொண்டவள் ‘சிவா மனசுல சக்தி’யின் கதாநாயகி. இவ்வாறாகவே அனைத்து பெண்களும் அமைவதெல்லாம் கற்பனையின் உச்சம். வெள்ளித்திரையிலும் அச்சு இலக்கியங்களிலும் மட்டுமே நம்பக்கூடிய வகையில் வெளியாகும் fantasy ecstasy.

காதலைத் திரையில் காட்சியாக்குவது நிறைய பார்த்திருக்கிறோம். அந்தக் காதலை தமிழ் எழுத்தில் வடித்து பெரும்பாலும் படித்ததில்லை. கன்னியாகுமரியில் காமத்தின் உச்சகட்டங்கள் வருகின்றன. விவரிக்கப்படுகின்றன. விலாவாரியாக பின்னணியோடு சொல்லப்படுகின்றன. அவற்றை வெகு லாவகமாக கையாண்டதற்காகவே Hats off சொல்லவேண்டும்.

கன்னியாகுமரி இந்தியாவின் வேர். முக்கடல் சங்கமத்தில் உருவாகும் வித்தில், இந்தியாவே வளர்ந்து நிற்பதாகக் கொள்ளலாம். மூலஸ்தானம். எல்லாவற்றுக்கும் துவக்கமாக இருப்பதால் அங்கே வந்து தங்கள் படத்திற்கான கருவைத் தேடுகிறார்கள். கன்னியாகுமரியும் காத்திருக்கிறாள். இவர்களும் தக்க விதைக்காக காத்திருக்கிறார்கள். குமரியிடம் கருவைத் தேடுவதா? அவளே இன்னும் குமாரிதானே?

மேலே சொன்ன மாதிரி மொத்தமாக நாவல் எழுதினால் பெரும்பாலாரிடம் கொண்டு செல்ல இயலாது. அதை ஜெயமோகன் அறிந்தே இருக்கிறார். அதனால், தாய்மையைக் குறித்து, பாரதம் எழுந்து மரமாக கிளைவிடும் தோற்றுவாய் குறித்து, வாக்குவாதங்களில் ஈடுபடும் துணைவி அதில் சாமர்த்தியமாக தோற்பது குறித்து, நல்ல சினிமா குறித்து, மிட் லைஃப் போராட்டங்கள் குறித்து, வாழ்ந்து கெட்டது போல் பேர் வாங்கத் துடிக்கும் படைப்பாளியின் கோராமை குறித்து, முன்னேற வேண்டுபவர்களின் சமரசங்கள் குறித்து கதையாகவும் குறியீடுகளாகவும் பேசியிருக்கிறார்.

அ முத்துலிங்கத்தை சந்தித்தபோது ஜெயமோகன் குறித்து சொன்ன விஷயம் இது:

இன்னும் கொஞ்ச நேரத்தில் சென்னை ஒளிரும் பொற்கம்பளமாக கீழே இறங்கி இறங்கி காணாமல்போகும் நானும் சில அன்னியர்களும் இருண்ட வானில் மிதந்து கொண்டிருபோம் என நினைக்கிறேன்.

ஒரு சாதாரண வலைப்பதிவை முடிக்கும்போது கூட இவ்வாறு கவித்துவ எழுச்சியுடன், அசாதரணமான சித்தரிப்புடன், படம் பிடிக்கும் ஒளிக்கலைஞனின் சிரத்தையுடன் விட்டுச் செல்கிறார்!’ என்பது அ முத்துலிங்கத்தின் பாராட்டு. இந்த புனைவிலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் உச்சகட்டத்திலும் அதே போன்ற காட்சியமைப்பு இருக்கிறது. அந்தப் பகுதிக்கு முத்தாய்ப்பாக, எண்ணங்களை விட்டு அகலாத படிமமாக, நுரை என்னும் ட்விட் போன்ற வார்த்தைகளையும், அலை என்னும் அனுபவம் போன்ற நிகழ்வுகளையும், கடல் என்னும் வாழ்க்கை போன்ற புரிதல்களையும் மீண்டும் மீண்டும் எழுப்புகிறது.

ஜே ஜே சில குறிப்புகளின் ஜே ஜே போல் இங்கும் ஒரு அவார்டு டைரக்டர் இருக்கிறார். பெயர் கூட ஜார்ஜ். நாவலில் வரும் ஜார்ஜ் ஆதர்ச நெறியாளுநர். ஜோசப் ஜேம்ஸை ஒத்த குறிப்பிடத்தக்க படைப்பாளி.

எண்பதுகளில் வந்த தமிழ் சினிமாவில் வில்லன்களுக்கு மைக்கேல், சூசை என்று கிறித்துவப் பெயர் சூடப்பட்டிருக்கும். அதே போல், அனால், குமரி மாவட்டத்தில் நிறைய மைனாரிட்டி இருப்பதாலும் நாவலில் புழங்கும் எதிர்மறை கதாபாத்திரத்திற்கு ஸ்டீபன் என்று பேர் வைக்கப்பட்டிருக்கிறது.

புனைவு எழுத்தாளர்களுக்கு எழுதக் கற்றுத்தரமுடியாது என்பது என்னுடைய தீவிரமான நம்பிக்கை. விசிறியிலிருந்து காற்றை வரவழைக்கலாம். வெளியில் வெக்கையடித்தால், விசிறியும் வேகும். ஆனால், மாலை நேர கடற்கரைக் காற்றில் (என்னதான் கார்பன் நச்சு கலந்திருந்தாலும்), அந்தக் காற்றை வாங்கப் போகும் சுகமே அலாதி. உணர்ச்சிகளை, உள்ளப் பிரவாகத்தை, ஆழ்மனக் கிடக்கையை அப்படியே தங்குதடையின்றி சொல்லிக் கொண்டு போகிறார்.

கன்னியாகுமாரியின் பிரச்சினைகள் என்று பார்த்தால் முன்னுரையில் உரிமை துறப்புகள் (சற்று இளைப்பாறும் பொருட்டு நான் எழுதிய நாவல் இது. இதன் எளிய கதை நகர்வின்…), உத்தம தமிழச்சியாக வந்துபோகும் நாயகி, சினிமாத்தனமாக இயங்கும் சில பெண் கதாபாத்திரங்களை சொல்ல வேண்டும்.

உரையாடல்களினாலும் எண்ணவோட்டங்களினாலும் சம்பவங்களினாலும் இயக்குநரின் மனைவி இரமணிக்கு கொடுக்கும் விவரிப்பும் அழுத்தமான சித்தரிப்பும் பிற பெண்களுக்கு உருவாகவில்லை.

ஆண்களின் குழப்பங்களைக் குறித்து அறிந்துகொள்ள வேண்டுமா? அவர்களின் வெளிப்படையான புன்சிரிப்புக்கு கீழே புதைந்து கிடக்கும் அழுக்குகளை அவசியம் ஆராய வேண்டுமா? ஆணாகிய நீ படித்தாலும் தன்னிரக்கத்தோடு தன்னல செய்கையை புரிய வைக்க முடியுமா? ‘ஜெமோ’வின் கன்னியாகுமரியை எடுங்கள்.

பிற விமர்சனங்கள்:

1. வ.ந.கிரிதரன்: இந் நாவலிற்கான கரு கி.ராஜநாராயணின் கன்னியாகுமரியை மையமாக வைத்துப் ,பின்னப் பட்ட சிறுகதைகளிலொன்றான ‘கன்னிமை’ என்னுமொரு சிறுகதையினை மையமாக வைத்து உருவானதாக நாவலின் நாயகன் ரவிகுமாரினூடாக நாவலாசிரியர் ஜெயமோகன் நினைவு கூருகின்றார்.

2. ஹரி வெங்கட்: ரவி மற்றும் வேணு ஆகியோர் வார்த்தைகளில் அவர் அறிந்த சினிமாவை பேசுகிறார். மேலும், “அவளை துளைத்து மறுபக்கத்தை அடைந்து மெத்தையின் வெறுமையை அடையலாம்”, எனும் வரியில் ஜெயமோகனின் காமம் தெரிக்கிறது.

3. ஜெயக்குமார்: பொதுவாக ஆண்களுக்கு முதிர்ச்சியான மனநிலை கொண்ட பெண்களைப் பார்த்ததும் ஏற்படும் பயமும் அவர்கள் பால் ஏற்படும் இனம் புரியாத பயமும் அவர்களை தவிர்க்க முடியாமல் நேசிக்கவும் செய்யாமல் செய்துவிடுகிறது.

Interview with Jeyamohan: Videos & Audio Chat

நேர்காணுபவர்கள்: தூள்.காம் பிபிபாலாஜி ஸ்ரீனிவாசன் & ச திருமலை ராஜன்

1. தமிழ் இலக்கிய சூழல் இப்போது எப்படி இருக்கு?

2. இணையத்தினால் ஏற்பட்ட பாதிப்பு

3. விஷ்ணுபுரம் உருவான கதை

4. எழுத்தாளர் விமர்சகராக இருப்பதில் +ve -ve (இருக்கும் ”சிறந்த”
லிஸ்டில் எல்லாம் இவர் எழுத்துக்களை இவரே சேர்த்துக்கொள்வது)

5. அமெரிக்க பயணம் எப்படி இருக்கு?

6. அவர் ஊர் மக்களின் நகைச்சுவை உணர்வு

7. இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடும் எழுத்தாளர்கள்

8. தன் எழுத்தை மார்க்கெட்டிங் செய்ய வேண்டிய சூழல்

நன்றி: http://www.itsdiff.com/Tamil.html

My experiences with A Muttulingam

சொல்வனம் இதழில் வெளியான வியத்தலும் உண்டே கட்டுரையில் இருந்து:

நெடுஞ்சாலைப் பயணத்தின் நடுவே ஜெயமோகன் இணைந்து கொண்டார். கையில் பத்துத் தோட்டாக்குறிகள் போட்ட சிறு குறிப்பு வைத்திருக்கிறார். அதில் இருந்து கேள்விகள் விழுகின்றன. ‘உங்கள் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் எங்ஙனம் உள்ளன?’; ‘கனவுக்கும் எழுத்துக்கும் உள்ள தொடர்பு?’

முழுவதும் வாசிக்க: முத்துலிங்கத்துடன் ஒரு தினம்


தொடர்புள்ள பேட்டி & சுட்டி:

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்: “நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள்!” :: சொல் புதிது ஏப்ரல் 2003 இதழில் வெளியான பேட்டி

ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான ‘அக்கா ‘ வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை கவர்ந்தார் . பிறகு வேலை நிமித்தம் வெளிநாடு சென்றார் .

ஐ நா அதிகாரியாக ஆப்ரிக்க நாடுகளிலும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலும் பணியாற்றினார். இந்த வலுவான அனுபவப்பின்னணியுடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத வந்தார் . அவரது அடுத்த சிறுகதை தொகுப்பை மித்ர வெளியிட்டது . ‘திகட சக்கரம். ‘ தொடர்ந்து ‘ வடக்கு வீதி ‘ முதலிய தொகுதிகள் வெளிவந்தன.

சமீபத்தில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள ‘மகாராஜாவின் ரயில் வண்டி ‘ மிகவும் இலக்கிய முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது. அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளும் புகழ்பெற்றவை. இலங்கை அரசின் சாகித்ய விருது பெற்றுள்ளார் .


A Muttulingam « Tamil Archives

A Muttulingam is free! But, why? « Snap Judgment

கடற்கரய் in தீராதநதி (குமுதம்) – ஜூன் 1, 2007: “ஜனநாயக்தில் எனக்கிருந்த நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது – அ.முத்துலிங்கம்”

சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். ஒரு வனத்தின் புதிர்ப் பாதையைப்போன்று விரியும் இவரின் படைப்புகள் ஒரு வானத்தின் திடீர் திடீர் வண்ணமாறுதலுக்கு ஒத்து இயங்குபவை. கூடவே இவரின் படைப்புலகம் மரபின் வேர்களிலிருந்து விடுபட்டுவிடாதவை.

1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.

இலங்கை அரசின் ‘சாகித்ய விருது’ (1998), ‘இலக்கியச் சிந்தனை விருது’, ‘இந்திய ஸ்டேட் வங்கி பரிசு’ என பல விருதுகள் பெற்றவர். இவரின் 75 சிறுகதைகள் அடங்கிய முழுத் தொகுதி ‘அ. முத்துலிங்கம் கதைகள்’ ஒன்றும், ‘அங்கே இப்ப என்ன நேரம்’ என்ற முழு கட்டுரைத் தொகுதி ஒன்றையும் ‘தமிழினி’ வெளியிட்டிருக்கிறது. ‘வியத்தலும் இலமே’ என்ற, இவர் எடுத்த உலக எழுத்தாளர்கள் நேர்காணல் நூல் காலச்சுவடு வெளியீடாகவும் வந்திருக்கிறது.

‘கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது’’ ‘உயிர்மை’ வெளியிட்டிருக்கும் நூலின் தொகுப்பாசிரியர் இவர்.

Obla Vishvesh :: Three days with Jayamohan

ஒளிப்படங்களுக்கு: ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

I have known from personal encounters that it is a strange experience to meet a man of letters who has lived in one’s world of ideas alone. For, an image of the writer is unconsciously built in one’s mind as one reads more and more of his writings. I remember Sri Aurobindo’s remarks on D.H.Lawrence :

‘Anyhow it seems to me Lawrence must have been a difficult man to live with, even for him it must have been difficult to live with himself.’

Such impressions that the reader forms in his mind makes the writer, I believe, a curious object of observation when he is met in person. One at least unconsciously wants to see if the writer fits in the mould that one has already cast the image of the writer!

I have known the Tamil writer Jeyamohan only a year or so. I must have heard his name before but the name had not registered in my mind since I hadn’t read any of his works. Even now, I haven’t read any of his novels but the few articles that I read in the last one year from his website gave me the impression that here was a writer to whom writing was a commitment in life. A sense of such commitment isn’t some choice one makes as one chooses a profession or even a social service, but something that arises out of an inward response to human life. And such a response is invariably informed not only by a mastery of the writings of many great writers but also through conscious and unconscious observations of life in all its complexities. One not only learns from such writers but also enriches one’s life reading them.

When I knew that a good friend of mine was arranging a trip in US for Jeyamohan and that he would be spending a few weeks in the East Coast, I thought it would be a great occasion for me to spend a few days with a good writer by offering to take him around a few places. We meet people all the time and each encounter makes impressions some of which fade and some of which make a permanent remark. I was very curious to know if a writer (as him) would be a different person from most of the people I have liked to observe.

The first impression that I had of him as he stepped out of the greyhound bus from Boston brought a smile to me, since he didn’t have a mustache and the pictures that I had seen of him had it! He had arrived Albany with the distinction of traveling in a greyhound bus within five days of landing in the US (I have friends in the US who have never boarded a greyhound bus though they have been living here for fifteen years!).

As if it were not enough the bus he had originally booked got overbooked as well and he had to board in a later bus to Albany from Boston (which must be one of the rare events in the history of Greyhound bus service in the US, which gets hardly filled). He was shorter than me and a little older.

In the first few minutes itself, I remember I asked him if he spoke Malayalam at home, since his Tamil sounded strange to me (I found out later that I was not familiar with that accent that is common in Kanyakumari district). He was a little tired and sounded taciturn. I remembered Vairamuthu and I was wondering if he too would talk only a little, though he didn’t look stiff as Vairamuthu. That was only till we reached home.

It was already late in the night when I brought him home. From that moment, except for a short time when he was with his laptop, it was him talking, talking all the time till he dropped out of my car and boarded in another that took him to Milford, CT, along with another set of friends.

One cannot judge a person by his capacity to mingle with people (most great writers are very reserved in their nature; Wordsworth and Lawrence, despite their passion for human relationship and their acute sense of togetherness, were loners in their lives), but one observes an admirable openness towards life in the kind of unreserved nature that Jeyamohan had. He became talkative the moment he settled in our couch.

There was no sense of uneasiness of meeting someone and his family for the first time in life. And when he started talking about the Sourashtrians in Tamilnadu, of whom he knew a lot of information, and his acquaintance with M.V.Venkatram, a Sourashtrian-born Tamil writer, there was no more ice to be broken since he had touched the things that wear dear to my family as Sourashtrians — he was no more a stranger for us from then. The man who had been bits and bytes of written text for me began to materialize himself in flesh and blood as Captain Kirk and his Star Trek Crew would materialize from thin air! And as I found out in the next two days with him, he was not just a store house of information (which he possessed in an amazing quantity), but someone to whom such information was not a matter of some kind of intellectual curiosity, but something that gave a direction in his life.

We went to a few picturesque places around. While those places held their regular charm for me, I was more interested in listening to him. I wasn’t in the least disappointed that he didn’t have anything to say about D.H.Lawrence other than the fact that though he had read ‘Sons and Lovers’ and ‘Lady Chatterley’s Lovers’, he had only found Lawrence to be ‘dated’, for which I would have loved to enter into a heated argument with someone else.

Nor was I perturbed when he said Sri Aurobindo’s exposition of the Gita sounded to him as written for Westerners’ understanding. For, I found that an argument about them would lead nowhere since he had the same interests, the interest in Life as related to the Mind and Civilization both had — only that his interests were given shape from another perspective. And there was no need for me to make a point as well, since I was in the presence of someone who had read far greater than me and hence had a lot to hear from.

On a lonely hiking trail along Lake George, one of the most picturesque lakes in North America, after taking a ride in the ferry which was sparsely filled because of intermittent rains that only added more charm to the lake with one half of it reflecting the somber light and the other half reflecting the lush green of the mountains around, he spoke on the relevance of philosophical thinking and the difference between the Eastern and Western modes of philosophical thought.

He elaborated on the snake-rope analogy of the Upanishads and related it to the two modes of perception and also took it to another level as expounded by his spiritual master, Nithya Chaitanya. Since it seemed to be a subject he loved to speak he was animated but pretty dispassionate in what he spoke. He didn’t seem to lose his mental poise at all when making his point.

Through his explanation I could see that he was reiterating a string of thought that he had in his mind for a long time but which needed constant articulation to strengthen itself into a meaningful argument : the very mode of philosophical thinking (which most readers find often repetitive).

Interestingly he had explained to me earlier how Philosophy relates to learning and life. I had earlier been struck by his simplified remarks on Wittgenstein from one of his essays and hence brought in this subject.

What was the purpose of writing thousands and thousands of pages if one could simplify a philosopher as that? That it gave one a sense of the process of thought (as he explained) was evident in the way he expounded his thoughts on its relevance. One may not need to read someone as Wittgenstein in depth to make a remark as he did in his essay on him, but without informed by the achievement of a voluminous philosopher as Wittgenstein, which can come only by reading him seriously, one could not speak the way he could on such subjects.

After a long talk that lasted till we came to the end of the trial, his eyes suddenly caught an animal that peeped out of its hole from the root of a tree and he was immediately fascinated by it. The lake was looking stunning as well and we switched over to talking something else.

A few friends at Albany wanted to meet him. He for sure seemed to be popular, at least through the quarrels in the battlegrounds of bloggers, if not through his novels. A few friends came to meet him at the Niagara Falls from Toronto .

As always, Niagara falls was crowded. I have never been attracted by this water falls except in unusual occasions as winter when the water freezes, but I was glad that Jeyamohan met some of his good friends from Toronto there and had a nice chat with them, which I too enjoyed listening to. The long drive to and fro Niagara Falls was memorable as well, since he continuously kept talking.

The third day after he came to Albany I dropped him off on the way to Connecticut , where he got picked up by his other friends. His unceasing voice, I kept hearing all through my drive back home.

ஃப்ளோரிடாவில் ஜெயமோகன்

ஒளிப்படங்களில் உடன் இருப்பவர்: தேன் / cyrilalex.com | Cyril Alex (cvalex) on Twitter

சிறிலிடமிருந்து கிடைத்த ட்விட்நடை குறிப்பு: We did Jet skiing, Kayaking, swimming, snorkeling and para sailing.

கயாக்: சிறிய படகில் துடுப்பு கொண்டு அலைகளை எதிர்கொள்வது. நதியில்தான் பெரும்பாலும் கயாக்கிங் செய்கிறார்கள். கடலிலும் படகோட்டலாம்.

ஜெட் ஸ்கீ: தண்ணீரின் மேல் ஸ்கூட்டர் போன்ற சாதனத்தைக் கொண்டு வேகமான விசைப்படகு போல் வளைந்து நெளிந்து பறப்பது. கோவாவில் கூட கிடைக்கும். நமது பின்னால் சிறுவர்களையோ, தனியாக செல்ல முடியாதவர்களையோ டபுள்ஸ் வைத்துக் கொள்ளலாம்.

ஸ்னார்க்கல்: பவளப் பாறைகள் நிறைந்த இடங்களில் ஸ்னார்கலிங் கொண்டு, இயற்கையை நெருங்குகிறார்கள். ‘ஃபைன்டிங் நீமோ’ படத்தை நேரில் பார்ப்பது போல் கோரல் ரீஃப் மீன்களோடு ஒட்டி உறவாடலாம்.

பாரா செயில்: வானத்தில் ஊஞ்சல். உங்களை மோட்டார் படகில் கட்டிவிட்டு, அந்தப் படகு வேகமாக செல்லும். எண்பதடி உயரத்தில் இருந்து காற்றடிக்கும் திசையில் திரும்பி, பறவையாகலாம்.

ஆல்பெனியில் எழுத்தாளர் ஜெயமோகன்

அனைத்துப் புகைப்படங்களும்: DhooL.com :: View topic – SOTD #551: Vishvesh Obla | சொல்வனம் » ஓப்லா விஸ்வேஷ்