சவுதி அரேபியாவின் ஏற்றுமதி

mecca_holy_ruler_king_saudi_arabia_jeddah

வாட்ஸாப் தகவலாக இந்த துணுக்கு வந்திருந்தது:
கீழ்க்கண்ட காரணங்களினால் சவூதி அரேபியாவில் சதுரங்க ஆட்டத்திற்கு தடை.
1. சதுரங்க ராணி பர்கா போட்டு முகத்தை மறைத்துக் கொள்வதில்லை என்பதால்
2. சதுரங்க ராணி எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால்
3. ராஜாவை விட ராணிக்கு அதிக முக்கியத்துவம் என்பதால்
4. ஆணின் துணையின்றி தன்னந்தனியாக சென்று எதிரியை வீழ்த்தமுடியும் என்பதால்
5. ராஜாவிற்கு ஒரே ஒரு ராணிதான் இருக்கிறார் என்பதால்!

இதே போல்தான் சவுதி அரேபியா குறித்த எந்தத் தகவல் வந்தாலும் எல்லோருமே நகைச்சுவையாக புறந்தள்ளி விட்டுப் போய்விடுகிறார்கள். ஆயிரம் செய்திகள் இருந்தாலும் எடுத்துக்காட்டாக ஒன்றே ஒன்றை மட்டும் பார்ப்போம்: இரு டஜன் முஸ்லீம் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான வங்களிகளின் துர்கா பூஜை முடக்கப்பட்டது. (இந்தியா டுடே) ஜார்கண்ட் மாநில எல்லைக்கு அருகில் வங்காளத்தின் பிர்பூம் (Birbhum) மாவட்டத்தில் கங்லாபஹரி (Kanglapahari) கிராமம் இருக்கிறது. இங்கே நான்கு ஆண்டுகளாக நவராத்திரியை முன்னிட்டு கொண்டாடப்படும் துர்கா பூஜா நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இங்கே நிரந்தரமாக கட்டப்பட்ட கோவில் கூட கிடையாது. சும்மா நாலு பந்தக்கால் நட்டு ஒரு திருவிழா நடத்த முடியாமல், தங்கள் பண்டிகையை சகஜமாக அனுசரிக்க முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலருக்காக பலரின் பழக்கவழக்கங்கள் ஒழிக்கப்படுகின்றன. அதே சமயம் சவுதி அரேபியா போன்ற இஸ்லாமிய நாடுகளில் பலருக்காக, சிலரின் எல்லா வாழ்க்கைமுறையும் மாற்றி வைக்கப்படுகின்றன.

durga_puja_half_done_bengal_festival_unfinished-idols

பாதி முடித்த நிலையில் முடங்கி நிற்கும் துர்கா பூஜை சிலைகள்

இதுவோ இந்தியாவில் நடக்கும் செய்தி. இதற்கும் சவுதி அரேபியாவிற்கும் என்ன சம்பந்தம்?

2050ல் உலகத்தில் மிக அதிகமாக முஸ்லீம்கள் வாழ்ம் நாடு எதுவென்று கேட்டால், அது ”இந்தியா” என்னும் விடையாக இருக்கும். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 350 மில்லியன் இந்தியர்களாக அப்போது உயர்ந்து இருக்கும். எண்ணிக்கையில் அதிகம் இருப்போரை வஹாபியர்களாக மாற்ற சவூதி எல்லா ஏற்பாடுகளையும் இப்பொழுதில் இருந்தே நிறைவேற்றி வருகிறது. இஸ்லாமிய சட்டப்படி (ஷரியா) முஸ்லீம் அல்லாதவர்கள் திம்மிக்கள் (இரண்டாம் தர குடிமக்கள்). திம்மிகளுக்கென்று ஜிசியா வரி விதித்து அவர்களை அச்சுறுத்தி வைக்க வேண்டும். மாட்டையும் சூரியனையும் சந்திரனையும் பின்பற்றுவர்களைக் காஃபிர் எனக் கருதிக் கொல்ல வேண்டும் என்பது ஐஸிஸ் அறிக்கை. (ஃபர்ஸ்ட்போஸ்ட்)

  • 13ஆம் நூற்றாண்டில் உலகத்தின் உச்சமாக இருந்த நாளந்தா பல்கலைக்கழகத்தில் புத்த பிட்சுக்களையும் அங்கிருந்த ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் மூன்று மாதமாக சிரமமெடுத்து எரித்தவர்களுக்கு இந்த மாதிரி காரியங்கள் எம்மாத்திரம்?
  • 250 ஆண்டு கால மொகல் ஆட்சியில் தற்போது அமைதிப்ப்புறாக்கள் என சொல்லப்படும் அக்பரும் அவரின் பேரன் காதல் பேரரசர் ஷாஜஹானும் எண்பது மில்லியன் இந்தியர்களைக் கொன்றார்கள். மொகலாயர்கள் இடித்துக் குவித்த கலைப் பொக்கிஷங்களையும், அமைதி என்னும் பெயரில் அவுரங்கசீப் நடத்திய கொன்றொழிப்புகளையும் போல் இன்னொன்றை தடுப்பது எம்மாத்திரம்?
  • இன்றைய பாரதத்தில் 840 மில்லியன் இந்துக்கள் இருக்கிறார்கள். அகண்ட பாரதத்தில் (இந்தியா மற்றும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளில்) 502 மில்லியன் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டு துவங்கும்வரை ஒருவர் கூட இஸ்லாமியராக இல்லாத இந்த தேசத்தில் எப்படி இவ்வளவு பேரை மாற்றினார்கள்? எவ்வளவு இந்துக்களைக் கொன்று குவித்தார்கள்? அதேபோல் மற்றுமொன்றை நடத்த ஐம்பதாண்டுகளாகமுஸ்தீபுகள் தொடங்கிவிட்டன
  • தங்களுடைய சொந்தங்களைக் கொல்வதில் முன்னணியில் நிற்பவர்கள் வெறியூட்டப்பட்ட இஸ்லாமியர்கள். உலகில் நடக்கும் 91% ஆணவக்கொலைகளுக்கு முஸ்லீம் சமூகமே மூலக்காரணியாக இருக்கிறது. மதமாற்றத்திற்காக இந்தச் செய்கை நீளாது என்பது எம்மாத்திரம்?

உங்களிடம் யாராவது சவுதி அரேபியா எதை ஏற்றுமதி செய்கிறது என்று கேட்டால் “எண்ணெய்” என்று விடை சொல்லிவிட்டு பெருமிதமாக காலரைத் தூக்கிவிட்டுக் கொள்வீர்கள். ஆனால், சவுதியின் மிகப் பெரிய ஏற்றுமதி என்பது இஸ்லாமில் வஹாபியிஸத்தை உலகெங்கும் நிலைநாட்டுவது மட்டும்தான். அதற்கு கச்சா எண்ணெய் என்பது சில்லறை வியாபாரம். ஐஸிஸ், அல் க்வெய்தா, தாலிபான் என்பதெல்லாம் கிளை நிறுவனங்கள்.

பாகிஸ்தானில் மட்டும் 24,000 மதராஸாக்களை துவக்கி நடத்த சவுதி அரேபியா முடுக்கி விட்டிருக்கிறது. (எகனாமிக் டைம்ஸ்) இந்தப் பள்ளிகளில் நடத்தப்படும் பாடங்களுக்கு இரண்டே இலக்கணம்:

அ) வஹாபி அல்லாதவர்கள் மீது வெறுப்பு வரவழைப்பது
ஆ) தீவிரவாதிகளை உருவாக்குவது

இந்த 24,000 மதராஸா பள்ளிகளில் ஆயிரக்கணக்கானோர் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர். ஒரே ஒரு குழந்தையை மட்டும் பார்ப்போம்: பதினைந்து வயதே ஆன சிறுவன் தன் கையை தானே வெட்டிக் கொண்ட சம்பவத்தை பிபிசி பதிவு செய்திருக்கிறது. இறைத்தூதரின் பிறந்தநாளைக் கொண்டாட மசூதிக்கு சென்றிருக்கிறான்.

மதபோதகர் கேள்விகளால், பார்வையாளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். “உங்களில் யார் நபியின் வழி செல்கிறீர்கள்?”. எல்லோரும் கை தூக்குகிறார்கள்.

“உங்களில் யார் நபியின் போதனைகளை நம்பவில்லை” என்று கேட்டதற்கு தூக்கக்கலக்கத்தில் கையை உயர்த்திவிடுகிறான். நூற்றுக்கணக்கானோர் அவனைப் பார்வையால் அவமானப்படுத்துகின்றனர். எள்ளி நகையாடுகின்றனர். கூனிக்குறுகி தன்னுடைய கையை அறுத்துவிட்டான்.

1956-ல் வெறும் 244 மதராஸாக்கள் மட்டுமே பாகிஸ்தானில் இயங்கி வந்தன. இன்று இவை கிட்டத்தட்ட நூறு மடங்கு பல்கிப் பெருகியுள்ளன. ஒரு ஒப்புமைக்கு ஜனத்தொகைப் பெருக்கத்தை கணக்கெடுத்துப் பார்ப்போம். 1950களில் 244 மதராஸாக்கள் நாற்பது மில்லியன் மக்களை சென்றடைந்தது. இன்று இது நான்கு மடங்காக 160 மில்லியன் பாகிஸ்தானியர்களாக மக்கள்தொகை உள்ளது. மக்கள்தொகை நான்கு மடங்கேப் பெருகியிருந்தாலும், மதராஸா போதனை மற்றும் மூளைச்சலவை மையங்கள் மட்டும் நூறு மடங்காக உயர்ந்துள்ளது. இப்பொழுதெல்லாம் கணினியிலும் இந்தக் கொலை பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

இன்னொரு ஒப்புமையைப் பார்ப்போம். 1920 முதல் 1991 முடிய கம்யூனிஸக் கொள்கைகளைப் பரப்ப வெறும் ஏழு பில்லியன் டாலர்களை அன்றைய சோவியத் ரஷியா செலவழித்துள்ளது. ஆனால், 1960களில் மட்டும் நூறு பில்லியன் டாலர்களை வஹாபி மற்றும் சலாஃபியிஸ இஸ்லாமியக் கொள்கைகளை நடைமுறையாக்க சவுதி அரேபியா செலவழிக்கிறது. செலவு என்பதை விட அழிக்கிறது என்னும் வார்த்தை இங்கே பொருள்படுகிறது.

24000_madrassas_saudi_wahabbism_pakistan

இது பாகிஸ்தானில்தானே? அங்கே இருந்து வரும் தீவிரவாதிகளைதான் தடுத்துவிடுகிறோமே? இந்தியாவில் என்ன பிரச்சினை?

காஷ்மீரில் நடப்பவை வெளிச்சம் காண்கின்றன. ஆனால், உத்தர பிரதேசத்திலும் கர்னாடகாவின் ஷிமோகாவிலும் நடப்பதில் ஒன்றிரண்டை என்.டி.டிவி இங்கே விவரிக்கிறது. என்.ஜி.ஓ.க்களில் நடக்கும் தில்லுமுல்லுகளையும் அவர்களை சரிவர கண்காணிக்க முடியாத சூழலையும் இந்தக் கட்டுரை வெளிச்சத்தில் கொணர்ந்தது: வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள் – ஆர்.வைத்தியநாதன். அதன் நீட்சியாக எண்டிடிவி செய்திக்கட்டுரையை வாசிக்கலாம்.

சவுதியில் இருந்து சென்ற வருடங்களில் மட்டும் 55 கோடிகள் உத்தர பிரதேச மசூதிகளுக்கு வந்து சேருகின்றன.
1) ஷியா பிரிவினரை ஒடுக்குவது,
2) சலாஃபி பிரிவு இஸ்லாமை முன்னிறுத்துவது,
3) இந்திய முஸ்லீம்களின் சூஃபி பிரிவை நசுக்குவது
என்று பலவழியில் இதை பிரச்சாரகர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இங்கே நன்கொடை அள்ளிவழங்கும் அந்த அல் ஃபரூக் (Al Farooq) குழுமத்தின் மூலகர்த்தா உலக இயக்கங்களினால் தீவிரவாதி என தேடப்படுபவர். ஷேக் ஈத் பின் மொகம்மது அல் தானி அறநல நிறுவனம் (Sheikh Eid Bin Mohammad Al Thani Charitable Association) அல் க்வெய்தாவுடன் பயங்கரவாதத்தை வளர்த்தற்காக தடை செய்யப்பட்டிருக்கிறது.

அமீரகத்தில் (எமிரேட்ஸ் – ஷார்ஜா, அபுதாபி) இருந்தும், கத்தாரில் இருந்தும் குவைத்தில் இருந்தும் இதே போல் பணம் குவிகிறது. இவர்கள் இஸ்லாமிய மரபுவழி மீட்டுயிர்ப்பு சங்கத்தை (Revival of Islamic Heritage Society) சேர்ந்தவர்கள். நிறுவனங்களைத் துவக்கியவரின் முகவரியை ஆராய்ந்தால் அல் குவெய்தாவில் போய் முடிகிறது. அமெரிக்க நிதித்துறையினால் நிரூபணமாகி தலைமறைவாய் இயங்கும் அங்கத்தினர்களைக் கொண்டு தீவிரவாதத்தை எண்ணெய் ஊற்றி வளர்க்கும் இன்னொரு தொண்டு நிறுவனமாக இது இருக்கிறது.

இதே போல் இன்னொரு அமைப்பு உலக முஸ்லீம் லீக் (Muslim World League). இவர்களினால் ரபிதா நம்பிக்கை நிதியம் (Rabita Trust) இயக்கப்படுகிறது. இந்த நிதியம் கொண்டுதான் 9/11 உலக வர்த்தக மையத் தாக்குதல்கள் முடிக்கப்பட்டன. இந்த அமைப்பின் துவக்கத்தில் இருந்து உயிர்நாடியாக செயல்படும் ஜுலய்தான் (Wa’el Hamza Julaidan) என்பவரை 9/11 தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தேடி வருகிறது. இவர்கள் ஷிமோகா மாவட்டத்திற்கு மட்டும் 38 கோடிகளைக் கொடுத்து மதராஸாக்களை சவுதி பீரங்கியாக செயல்பட வைக்கிறார்கள்.

இவர்கள்:
1. மதீனத் அல் – அலூம் கல்வி அறக்கட்டளை – Madeenath Ul-Uloom Education Trust
2. ரபியா பஸ்ரி ரஹமத் – உல்லா – ஹி – அல்லாயாஹ் நன்கொடை அறக்கட்டளை – Rabiya Basri Rahamat-Ulla-Hi-Allayha Charitable Trust
3. சதியா கல்வி மற்றும் நன்கொடை அறக்கட்டளை – Sadiya Educational and Charitable Trust

அப்படி இந்த சலாஃபியிஸத்தினால் என்னதான் சிக்கல் வரப்போகிறது?

ஒரு நாட்டினரை இன அழித்தொழிப்பில் இரக்கமின்றி செலுத்த ஹிட்லருக்கு நாஜியிஸம் உதவியது. அவ்வாறே, ஒரு மதத்தை தீவிரவாத இயக்கமாக எப்படி மாற்றலாம் என்பதற்கு சலாஃபியஸம் உதவுகிறது.

உதாரணமாக டெல்லியில் இருந்து வெளியாகும் நயி துனியா (புதிய உலகம் – Nai Duniya) என்னும் வாரப்பத்திரிகையைப் பார்ப்போம். இதில் நஸீம் ஹிஜஸி என்பவரின் தொடர் வெளியாகிறது. தொடரின் பெயர் – அவுர் தல்வார் டூட் கயீ (அதன் பிறகு கத்தி உடைந்தது). இந்தத் தொடரைப் படித்தால் எவ்வாறு இந்திய முஸ்லீம்களை வெறியூட்டி, எழுத்தின் மூலம், படித்தவர்களையும் ஜிஹாத் மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம் என்பது புலனாகும். இது சலாஃபியிஸம். இதே பத்திரிகை தன்னுடைய பிரத்தியேக செய்தியாக, புலனாய்வு அறிவிப்பாக இந்தக் கற்பனையை அதிகாரபூர்வமாகச் சொல்கிறது: ‘நம் புனித நகரமான மெக்காவின் மீது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குண்டு வீசி அழிக்கத் திட்டமிட்டு இருக்கிறார்’. இது சலாஃபியஸப் பிரச்சாரம்.

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு வீரவணக்கம் செய்யச் சொல்வது சலாஃபியஸம். பேச்சினால் வாதத்தை எதிர்கொள்ளாமல், மாற்றத்தினால் மதக் கொள்கைகளை தற்காலத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளாமல், கற்கால வழக்கங்களிக்ல் தேங்கிப் போய் பேராசிரியர் டி. ஜே ஜோசஃபின் கையை வெட்டுவது சலாஃபியிஸம்.

இஸ்லாமில் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவற்றில் தலையாயவன என்று நான்கைச் சொல்லலாம். அரசியல் மற்றும் தத்துவ இஸ்லாம் ஒரு முக்கிய அங்கம். தனி நபர் முனைப்பெடுத்து முன்னெடுத்த தீவிர சமயப் பிரச்சாரம் இன்னும் இரண்டு உண்டு. நான்காம் பிரிவாக ஜிஹாதி இஸ்லாம். இவற்றையெல்லாம் கலந்தால் தற்கால சலாஃபியஸம் கிடைக்கும். அரசியலிலும் ஈடுபட முடியும். அதே சமயம் சக முஸ்லீம்களிடம் கூட சண்டை போட்டு கொலைகளும் செய்ய முடியும். புனிதப் போர் தொடுத்து அதில் தற்கொலை தீவிரவாதமும் அரங்கேற்ற முடியும். போருக்குப் பின் நடந்த அழிவில் நற்பணி அறக்கட்டளையும் நடத்த முடியும். இது இன்றைய சிரியா போன்ற நாடுகளில் இஸ்லாமை முன்னகர்த்தும் சலாஃபியஸ அணுகுமுறை.

சவூதி அரேபியாவிற்கு எவ்வாறு இப்படி நூறு மில்லியன் டாலர்களை அள்ளிவிட முடிகிறது? எப்படி அதை நிறுத்தலாம்?

saudi_ndtv_india_uttar_pradesh_karnataka_funding_isis_islam_muslim_ngo_madrasas

அடுத்த பகுதியில் பார்ப்போம்.

முந்தைய பதிவு: கச்சா எண்ணெய்யும் கசக்கிப் பிழியும் அரேபியாவும்

வலம் – பத்திரிகை

valam_vinayaga_murugan’வலம்’ என்னும் பெயரில் விநாயக முருகன், நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அகராதியில், இந்த பொருள்கள் இருக்கின்றன:

வலம்

  1. சூழ்போதல்: To go round from left to right, as in temple; வலம் வருதல். தோகையோர் பங்கன்றாளி லுவகையின் வணங்கிச் சூழ்போந்து (கூர்மபு. தக்கன்வேள். 18). பிரதட்சிணஞ் செய்தல். திருமலையே வலம் வந்தனள் (தக்கயாகப். 321).
  2. பரிவேட்டி: Circumambulation from left to right; வலம் வருகை. தேவரெலாமேவி விளைத்த பரிவேட்டியான் (காளத். உலா, 93).
  3. முழுவலயம்: prob. id. + வலம். Victory; வென்றி. (யாழ். அக.); வெற்றி. மணவாள ருடனே வழக்காடி வலது பெற்றேன் (அருட்பா, vi, தலைவிவருந். 12). 3. Skill;
  4. வலக்கட்டாயம்: Compulsion, force; பலவந்தம்.
  5. வலக்காரம்: Right hand; சிறுவலக்காரங் கள் செய்தவெல்லாம் (திருக்கோ. 227).
  6. வலங்கொள்ளுதல்: To win a victory; வெற்றி யடைதல். வலங்கொள் புகழ்பேணி (தேவா. 668, 8).–tr. 1. See வலம்வா-. கடவுட் கடிநகர்தோறு மிவனை வலங்
  7. வலப்பாரிசம்: 1. Army; சேனை. (W.) 2. Strength, power; வலி.
  8. வலம்படுதல்: 1. To be victorious; வெற்றியுண்டாதல். வலம்படு முரசின் (பதிற்றுப். 78, 1). 2. To pass across one’s path from left to right; இடப்பக்கத்தி லிருந்து
  9. வலவன்: Capable man; சமர்த்தன்.
  10. வலக்காரம்: Falsehood; பொய். (நாமதீப. 655.); வலனாக வினையென்று (கலித். 35).; மேழி வலனுயர்ந்த வெள்ளை நகரமும் (சிலப். 14, 9).

இவ்வளவு அர்த்தங்களும் சொல்லிவிட்டு அராபிய மொழி விளக்கத்தை விட்டுவிடலாமா?

By Allah (Arabic: Wallah, وَٱللّٰه) is an Arabic expression meaning “[I promise] by God” used to make a promise or express great credibility on an expression. It is considered a sin among Muslims to use this phrase and follow it up with a lie.

எவர் ஒவ்வொரு நாள் காலையிலும், மாலையிலும் ‘பிஸ்மில்லாஹில் லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷய்உன் பிஃல் அர்ழி வலா பிஃஸ்ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அழீம்’ என்று ஓதுவாரோ, அல்லாஹ்வின் நாட்டப்படி எந்த ஒரு தீங்கும் அவருக்கு நேராது.

பொருள்: எவனுடைய பெயருடன் வானத்திலும் பூமியிலும் எவ்வித தீங்கும் ஏற்படாதோ அப்படிப்பட்ட அல்லாஹ்வின் பெயரால் துதிக்கிறேன். அவன் எல்லாவற்றையும் கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான்.

வலம் அக்டோபர் 2016 (துர்முகி வருடம், புரட்டாசி – ஐப்பசி) இதழின் உள்ளடக்கம்:

valam_1_tamil_magazine_right_rounds

 

இதழைக் குறித்த எண்ணங்களைப் பதிவு செய்து வைக்கலாம். உள்ளடகத்தில் படித்த மட்டும்:

  1. கலைச் சின்னங்களைத் தகர்க்கும் வெளி – வெங்கட் சாமிநாதன்
    • இந்தக் கட்டுரை நிறைவைத் தருகிறது. கொஞ்சம் சிந்திக்கவும் கற்றுத் தருகிறது. சுருக்கப்பட்ட வடிவம் என்கிறார்கள் – அந்த மாதிரி கத்திரி போட்டதே தெரியாமல் செய்ததற்கு வலம் ஆசிரியர் குழுவைப் பாராட்டலாம். ஆனால், ஏற்கனவே வெளிவந்த கட்டுரைகளை, மீண்டும் அச்சில் ஏற்றாமல் அடுத்த இதழ்களில் இருந்து புதியதாக மட்டுமே தரப் பார்க்கலாம்.
  2. நேற்றைய பெருமையும் இன்றைய வறுமையும் – வெங்கட் சாமிநாதன்
    • போன கட்டுரை — எடிட்டிங் நல்ல முறையில் தொகுப்பதற்கான அத்தாட்சி என்றால், இந்தக் கட்டுரை மோசமான முறையில் வெட்டுவதற்கான அத்தாட்சி. குதறியிருக்கிறார்கள்.
  3. வெங்கட்சாமிநாதன்: உரையாடல்களின் நீட்சிசொல்வனம் ரவிஷங்கர்
    • சிறப்பான கட்டுரை. நான் முப்பது பைசா (அமெரிக்க டாலர் மதிப்பில்) போட்டு  இந்த நூலை வாசித்தேன். கொடுத்த பணத்திற்கு நல்ல வரும்படி என்று இதைக் கொணர்ந்ததற்கே சொல்லி விடலாம். அவசியம் வாசிக்கப் பட வேண்டிய எண்ணங்கள்
  4. மாதொரு பாகன் – என்னதான் நடந்தது? – ராஜா ஷங்கர்
    • சமகால வரலாற்றை சொல்லியிருக்கிறார். என்னைக் கவரவில்லை. ஏற்கனவே எனக்கு நன்கு அறிமுகமான விஷயம் என்பதால் போரடித்தது ஒரு பக்கம். இணையத்து நடை என்பதும் சிறு பத்திரிகையின் காத்திரத்தன்மைக்கு சற்றே பத்தரை மாற்றுத் தங்கம் குறைந்து,  ‘குங்குமம்’ சுஜாதா கட்டுரை போல் இருந்ததும் இன்னொரு பக்கம் அலுக்க வைக்கிறது.
  5. இந்தியா சிறுபான்மையினருக்கான தேசம் மட்டும்தானா? லக்ஷ்மணப் பெருமாள்
    • இன்னும் சிறப்பாகவும் ஆழமாகவும் குவிமையத்தை நோக்கி விரிவான வாதங்களை வைத்தும் எழுதியிருக்க வேண்டிய கட்டுரை. தகவல்களும் அலைபாய்வுகளும் கவனத்தை சிதறடிக்கின்றன
  6. அருகி வரும் யானைகள்பி.ஆர்.ஹரன்
  7. மதர் தெரசா: இறுதித் தீர்ப்பு – ஜடாயு
    • ஒரு கட்டுரைக்கு ஒரேயொரு இலக்கு மட்டும்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் என் போன்ற சாதாரணர்களின் சிந்தையில் தெளிவாகப் பதியும். எடுத்த காரியத்தை பொருத்தமான குறிப்புகளோடு கில்லியாகக் குறி பார்த்து சஞ்சலமின்றி எடுத்துரைக்கும் பாங்கும் சமகால எம்.ஜி.ஆர் போன்றோரோடு ஒப்பிடும் பார்வைகளும் – அபாரம். கடந்த இரண்டு/மூன்று கட்டுரைகள் படித்து கடுப்பான சமயத்தில், ‘பத்திரிகை பரவாயில்லை!’ என்று சொல்லவைக்கும் பதிப்பு.
  8. பழைய பாடல் (சிறுகதை) – சுகா
    • ஆப்பிள் மாக்புக் என்னும் கணினியையும் விண்டோஸ் கணினியையும் ஒப்பிட்டால் பார்ப்பதற்கு ஒரே மாதிரிதான் இருக்கும். சொல்லப் போனால் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் கணிபுத்தகங்கள் கொடுக்கப்படும் விலைக்கும் அதன் தரத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், சல்லிசாக இருக்கும். அந்த மாதிரி வலம் இதழை சடாரென்று ஸ்டீவ் ஜாப்ஸ் வந்து அறிமுகம் செய்வது மாதிரி சுகா ஜ்வலிக்கிறார். கதாபாத்திரங்களின் கச்சிதமான அறிமுகம் முதல் உலா வரும் மாந்தர்களை கனவிலும் நிழலாட வைக்கும் சாதுர்யமான செதுக்கல் வரை – எல்லாமே அக்மார்க் எழுத்தாளரின் முத்திரை. இவரை படித்த பிறகு நூலை மூடிவைத்துவிட்டேன். பாக்கியை இன்னொரு நாள்தான் படிக்கணும்.
  9. ‘புதிய தேசியக் கல்விக் கொள்கை – 2016’ – ஒரு பார்வை – B.K. ராமசந்திரன்
  10. காந்தியும் இந்துத்துவ சூழலியப் பார்வைக்கான அடிப்படையும் – அரவிந்தன் நீலகண்டன்
  11. சிவன்முறுவல் (கலை) – ர. கோபு
  12. சுப்புவின் திராவிட மாயை: புத்தக மதிப்புரை – ஹரன் பிரசன்னா
  13. கனவைச் சுமந்தலைபவர்கள் (இந்திய இலக்கியம்) – சேதுபதி அருணாசலம்.

valam-october-2016_first_issue_tamil_vesaa_venkat_saminathan_images_opening_special

saroja_valam_mag

 

ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்

அக்னி: மனித குலத்துக்கும் இறை உலகுக்குமான இணைப்பாக செயல்படும் தன்மை. அக்னி சத்தியத்தின் குறியீடும் கூட. அக்னி நீரில் இருப்பதாகக் கூறும் வேத உருவகத்தை எடுத்துக் கொள்ளலாம். மிக எளிமையாக இது சூரியன் உதித்து வரும் காட்சி எனக் கொள்ள முடியும். இரவில் சூரியன் நீரில் வசிப்பதாக எளிய மனம் உருவகப்படுத்துவதன் விளைவாக இருக்கலாம். ஆனால் நீர் என்பது புராதன தொன்ம உருவாக்கத்தில் ஆதி-ஒழுங்கின்மையின் குறியீடு. ஆதி ஒழுங்கின்மைக்குள் இருக்கும் சிருஷ்டி ஆற்றலினை உருவகப்படுத்த தொல்-கவிகள் பயன்படுத்திய ஒரு உருவகமாக அது வளர்கிறது. அக்னி பிறகு அனைத்து படைப்பாக்க செயலுக்குமான குறியீடாக வளர்கிறது.

ஆழி பெரிது!

anee_visit1

முதன் முதலாக எழுத்தாளர் பி.ஏ. கிருஷ்ணனை சந்திக்க ஆயத்தமான போது வந்த வழக்கம் இது. இன்னாரை நேரில் கண்டு உரையாடப் போகிறோம் என்றால், அவர்களின் எழுத்தில் மூழ்கி அமிழ்தலைத் துவங்குவேன். ஒருவரைக் குறித்து நான் ஆராய ஆரம்பித்தால் ஒரு வாரத்திற்குள் அவரின் பெரும்பாலான புத்தகங்களையும், இணையத்தில் எழுதிக் குவித்ததையும், விமர்சனங்களையும், வம்புகளையும் படித்து முடித்துவிடுவேன். ஒருமுறை பிரும்மாவும் விஷ்ணுவும் சிவபெருமானின் முடியையும் காலையும் பார்ப்பதற்கு முயற்சி செய்தபோது அதில் சிவபெருமானின் தலையை பிரும்மா பார்த்து விட்டதாக பிரம்மாவிற்காக பொய் சாட்சி கூறிய தாழம்பூ கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த மாதிரி தாழம்பூ எதுவும் கிடைக்காததால் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் என்று எழுதிக் குவித்த வஸ்தாதுகளைக் கூட இந்த சட்டகத்தினுள் அடக்கி, ஒரு பருந்துப் பார்வை பார்த்து, அந்த ஒரு துளி அரிசியில் இருந்து முழு சோறும் எப்படி வெந்து இருக்கும் என்பதை உணர்ந்தாவது விடுவேன்.

கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு என்பாள் ஔவை. பதினைந்தாம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட புறத்திரட்டு நூலில் இறைமாட்சி அதிகாரத்துக்கு அடுத்த இடத்தில் கல்வியை வைத்துள்ளனர். ‘விளக்கை விலை கொடுத்துக் கொள்வார்கள். ஆனால், என்ன பொருளைக் கொடுத்தும் இருளைக் கொள்ளமாட்டார்கள்’ என்கிறது பழமொழி நானூறு. ”கல்வி கரை இல, கற்பவர் நாள் சில” என்பது நாலடியார்.

‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்கிறது புறநானூறு.

முழுப்பாடலின் பொருள்: ஒரே தாயின் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுள், அவர்களின் கல்விச் சிறப்புக்கேற்ப தாயின் மனநிலையும் மாறுபடும். ஒரே குடும்பத்தில் பிறந்த பலருள்ளும் “மூத்தவன் வருக” என்று கூறாமல் அறிவுடையவனையே அரசனும் தேடிச் செல்வான். வேறுபட்ட குலத்தாருள்ளும் கீழ்க்குலத்தில் உள்ள ஒருவர் கல்வி கற்றவராக இருந்தால், மேற்குலத்தில் உள்ள ஒருவர் அவரிடம் (கல்வி கற்கச்) செல்வார்.
எட்டுத்திக்கும் வழிகாட்டி கட்டுரையில் நாஞ்சில் நாடன்

எல்லோருக்கும் ‘கற்றது கைம்மண்ணளவு’ என்று உணரும் நேரம் வரும். அது அரவிந்தன் நீலகண்டன் அமெரிக்கா வருகிறார் என்றவுடன், அவரின் எல்லா எழுத்துக்களையும் வாசிக்கவும் தேடவும் அவர் கொடுக்கும் மேலதிக விபரங்களுக்குக்கான குறிப்புகளின் ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதிலும் நேரம் செலவிட ஆரம்பித்தவுடன் ‘கற்றது ஒரு விரலின் நகமே உள்ளது; கல்லாதது இந்த புவனம்’ என்று புரியும் தருணம் வந்தது.

அரவிந்தன் நீலகண்டனுக்கு எதிராக வைக்கப்படும் வாதங்களையும் கருத்துலக மோதல்களையும் ரத்தபீஜன் எனலாம். தன் மாமன்மார்களைக் கொன்றவர்களைப் பழி தீர்த்தே தீருவேன் என்று பெரும் அசுர சேனையுடன் வந்தவன் இரத்த பீஜன். இன்றைய ரத்தபீஜர்கள் தங்கள் சொந்தங்களை கபளீகரம் செய்ய சீனாவில் இருந்து இறக்குமதியான சித்தாந்தங்களோடும், சவுதியில் இருந்து வரும் பணவளத்துடனும் நம்மை நசுக்க ஊடகபலத்துடனும் விளம்பரவுலகின் பீடங்களுடனும் வருகிறார்கள். சப்தமாதர் படை அவனுடன் போரிட்டது. ஆனால், அவனை அவர்களால் வெல்ல முடியவில்லை. காரணம் அவன் பெற்றிருந்த ஒரு விசித்திரமான வரம்.

வரத்தின்படி ரத்தபீஜன் உடலிலிருந்து ஒரு சொட்டு ரத்தம் பூமியில் சிந்தினாலும் அந்த ரத்தத்திலிருந்து ஆயிரம் ரத்தபீஜரர்கள் தோன்றி அவனுக்குத் துணையாகப் போராடுவார்கள்! இந்த ஆயிரக்கணக்கான குட்டி ரத்தபீஜனை வெட்டவெட்ட அவன் உடலிலிருந்து ரத்தம் வழிந்து பூமியில் சொட்ட, சொட்ட, ஆயிரம் ஆயிரமாய் லட்சக்கணக்கில் ரத்தபீஜன்கள் தோன்றி சப்தமாதர் படைகளை துவம்சம் செய்தனர். அப்போது அம்பிகை வெகுண்டு எழுந்தாள். உடனே தன் தோளிலிருந்து மகா உக்கிரம் பொருந்திய அரவிந்தன் நீலகண்டனைத் தோற்றுவித்து ‘ஏ அநீ! நீ சென்று அந்த ரத்தபீஜனை வெட்டி சாய். அப்போது அவர்கள் இடமிருந்து வெளிப்படும் கோடிக்கணக்கான பொய்களையும் புரட்டுகளையும் போலி வார்த்தைகளையும் துளிக்கூட பூமியில் சிந்தாமல் உன் கைகளால் ஏந்தி மூளையாலும் செயலாற்றாலும் சிந்தனைத் திறமையாலும் வாதவலிமையாலும் குடித்து விடு!’ என்று ஆணையிட்டு இருக்கிறார். அரவிந்தனும் பல்லாயிரம் கரம் கொண்டு பலகோடி புத்தகங்களின் சாறு பிழிந்து மொழி வலிமையோடு எல்லா ஊடகங்களிலும், அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ஒவ்வொரு அசுரனாய் கட்டுடைக்கிறார்.

anee_visit2

அவர் சென்ற வாரம் பாஸ்டன் பக்கம் வந்திருந்தார். ஓட்டுநராக சில மணி நேரம் அவருடன் பயணிக்க முடிந்தது. லட்சோபலட்சம் நூல்கள் குவிந்து இருப்பதில் இருந்து நவரத்தினங்களை கண்டுபிடிப்பதைப் பார்த்து பொறாமைப்பட முடிந்தது. நான் நேம் டிராப்பிங் வித்தகன். ஆனால், அநீ, பெயர்களை மட்டும் சொல்வதில்லை. அந்தந்தப் பெயர்களின் ஆராய்ச்சிகளைச் சொல்கிறார். அவர்களின் போதாமைகளை எவ்வாறு கண்டுணர முடிகிறது என்று விளக்குகிறார். வனூச்சி, பேபிஎஸ் ஹால்டேன் என்றெல்லாம் பெயர் விழுந்தவுடன் பதின்ம வயதில் ஃபோர்ட்ரான், பாஸ்கல், கோபால், சி++ என்று நிரலி மொழிகளைக் கண்ட அச்சம் எழுந்தது. ‘இதெல்லாம் குறித்து நான் எழுதியிருக்கிறேனே! அதையெல்லாம் நீங்கள் வாசித்ததில்லையா?’ என்றபொழுது ஃபேஸ்புக்கில் வெட்டியாக கழித்த நேரங்கள் நிழலாடின.

மிக முக்கியமாக, இந்தப் பெயர்களை இந்தியச் சிந்தனையாளர்களுடன் இணைக்கிறார். மேற்கத்திய தத்துவத்தையும், அயல்நாட்டு புரிதலையும் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அதை ஸ்ரீ அரவிந்தருடனும், அம்பேத்காருடனும், பி.ஸ்ரீ.யுடனும், விவேகானந்தருடனும், காந்தியுடனும், பாரதியுடனும், சித்தர்கள் மரபிலிருந்தும் எவ்வாறு ஒருங்கிணைப்பது, அவர்களின் சிந்தையில் இருந்து எப்படி இதை நோக்குவது என்பதையும் உணர்த்துகிறார். அவருடன் உரையாடியவர்கள் சொன்ன ஆராய்ச்சியாளர்களையும் விவரித்த கருத்தாளர்களையும் பட்டியலிட்டால் இந்தக் கட்டுரைக்கு கொஞ்சம் கனம் கிடைக்கும். அதை விட அரவிந்தன் நீலகண்டன் எழுதுவதை கர்மசிரத்தையாக வாசித்தால் நம் அறிதல் முறையில் தெளிவு கிடைக்கும்.

நாகர்கோவில்காரர்களின் தமிழை முதல் முதலாகக் கல்லூரியில்தான் கேட்கப் பெற்றேன். அவர்களின் தமிழைக் கேட்டபோது மையை அச்சுத்தாளில் தெறித்தது போல் பரபரப்பு தெரிந்தது. சாலையில் கார்கள் விரைந்து கொண்டிருந்தாலும், எந்தவித அவசரமுமின்றி, தன் பாட்டுக்கு சாலையின் எதிர்ப்பக்கம் செல்லத் துணியும் அணிலைக் கண்டிருப்பீர்கள். அது கொஞ்சம் மெள்ள நடக்கும். இரண்டடி எடுத்துவைத்தபின் பின் வாங்கும். அதன் பின் மீண்டும் நான்கடி தவழும். சாலையைக் கடப்பதற்குள் ஏதோவொரு காரில் அடிபடுவதற்கான சகல விஷயங்களையும் மிக மெதுவாக மேற்கொள்ளும். இதற்கு நாகர்கோவில்காரர்கள் நேர் எதிர். படபடவென்று பாய்வார்கள். வந்த காரியத்தை முடிப்பார்கள். அரவிந்தன் நாகர்கோவில்காரர். இன்க் ஜெட் அச்சுப்பொறி என்பது மைத்தாரையாகக் கொட்டும். இவரின் பேனாவும் கணிவிசைப்பொறியும் சிந்தைகளாகப் பொழிகிறது. மை தெளிப்பு பதிப்பு எத்திரம் எவ்வாறு பல்வேறு நிறங்களான சிவப்பு, பச்சை, நீலம் மூலமாக அண்டத்தில் உள்ள 64 கோடி வண்ணங்களை உருவாக்குகிறதோ அரவிந்தனும் அவ்வாறே அறிவியலும் வரலாறும் சமூகவியலும் கொண்டு உலகத்தின் அத்தனை விஷயங்களின் வண்ணங்களையும் சுட்டுகிறார். பீடத்தில் இருந்து கொண்டு உரையாடலில் ஈடுபடாமல், இதுதான் என் இறுதி வாக்கு என்று அறைகூவாமல், தன்னோடு பேச அனைவரையும் ஆதுரமாக வரவேற்று தொடர்ச்சியாக ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் தன்னடக்கத்தோடு தன் தரப்பை தெளிவாக சாமனியனுக்கு விளங்க வைத்துக் கொண்டே தடிமனான நூல்களையும் எழுதித் தள்ளுகிறார்.

ஒரு நூலின் தரம் என்பது என்னைப் பொருத்த மட்டிலும் இரண்டு விஷயங்களில் அடங்கி இருக்கிறது. ஒருவர் எத்துணை வெளிப்படையாக எங்கேயிருந்து தன் எழுத்திற்கு ஆதாரங்களும் தன்னுடைய நூலுக்கு மேற்கோள்களும் பெறப்பட்டிருக்கின்றன என்பதை வெளிப்படையாக புத்தகத்திலேயே குறிப்பிடுவது அதில் முதன்மையானது. இந்திய அறிதல்முறைகள் நூலின் இறுதிப் பக்கங்களில் நூற்றியைம்பதிற்கும் மேற்பட்ட உசாத்துணை புத்தகங்களையும் அந்தப் புத்தகங்களில் எந்த இடங்கள் தன் கருத்திற்கு வலிமை சேர்க்கின்றன என்பது குறித்தும் துணைப்பட்டியலை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். இரண்டாவதாக இப்படி 150+ நூல்களை மேற்கோள்களாகச் சொல்லும் எழுத்துக்களில் ஒரு பேராசிரிய அணுக்கமின்மை வந்துவிடும். அத்துணை ஆராய்ச்சிகளை உட்கொண்டதாலோ அல்லது அந்த மாதிரி ஆராய்ச்சியாளர்களுக்காக எழுதுவதாலோ, அவர்களின் எழுத்து உட்புக முடியாததாக வாசித்துப் புரிந்துகொள்ளவியலாத நிலையில் வந்து நிற்கும். இந்தப் பிரச்சினை இல்லாமல், அதே சமயம் வாசகனை விகடன் போல் பேதையும் ஆக்காமல், சரிநிகராக வைத்து தோல்மேல் கைபோட்டு விளக்குகிறார் அரவிந்தன். அவரின் எழுத்து உள்வாங்கியதை திறம்படத் தொகுத்து, இந்தியச் சூழலுக்கு அந்தக் கருத்தாக்கத்தை உணர்ந்து விவரிக்கிறது.

சென்ற வருடத்திற்கான ஆஸ்கார் விருதுகளுக்கானப் படங்களின் பரிந்துரைப் பட்டியலைப் பார்ப்போம். பிக் ஷார்ட் என்பது பொருளாதாரக் கொள்கை குறித்தும் நிதியியல் குறித்தும் பேசும் படம். பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ் என்பது இரண்டாம் உலக்ப் போரின் எச்சங்களாக விளைந்த பனிப்போர் குறித்தும் யூதர்கள் குறித்தும் அவர்களின் அறம் குறித்தும் பேசும் படம். ப்ரூக்ளின் என்பது வந்தேறிகள் குறித்தும் அயல்நாட்டில் குடிபுகும் ஏழைப் பெண்ணின் நிலை குறித்தும் பேசும் படம். இவற்றில் இருந்து மேட் மாக்ஸ் என்பது முற்றிலும் வித்தியாசப்படுகிறது: அது போர் குறித்தும் அறிபுனை கற்பனை குறித்தும் வருங்கால உலகம் குறித்தும் சிந்திக்கிறது. மார்ஷியன் என்பது முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமாக நம்பவியலா விஷயங்களை எளிமையாக விளக்கி செவ்வாய் கிரகப் பயணம் குறித்து புனைகிறது. ரிவெனண்ட் என்பது அமெரிக்காவில் மூதாதையரான பழங்குடி இந்தியர் குறித்தும் அவர்களை மேற்கத்தியர் எவ்வாறு ஆக்கிரமித்தனர் என்பது குறித்தும் நிஜத்தை நாடகமாக்குகிறது. ரூம் என்பது சிறைவைக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. இறுதியாக ’ஸ்பாட்லைட்’: கிறித்துவ பாதிரியார்கள் எவ்வாறு சிறுவர்களை பாலியல் வன்முறைக்கு ஆக்கினார்கள் என்பதையும் அவ்வாறு கீழ்த்தரமான செய்கையில் ஈடுபட்டாலும் சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வாறு தப்பிக்க வைக்கப்பட்டார்கள் என்பதையும் இதில் வாடிகன் பாப்பரசர் எவ்வாறு நேரடியாக சம்பந்தப்பட்டு குழந்தைகளை வன்கொடுமைக்கு உள்ளாக்கினார் என்பதையும் பாஸ்டன் க்ளோப் நாளிதழில் நிஜத்தில் நடந்த துப்புதுலக்கலைச் சொல்கிறது.

இவற்றுக்கும் அரவிந்தன் நீலகண்டனுக்கும் என்ன சம்பந்தம்?

இத்தனை படங்களையும் ஒரே நூலில் ஒரே ஆசிரியர் எழுதிப் படித்தால் எப்படி இருக்கும்? அதுதான் ‘ஆழி பெரிது’ அல்லது ‘இந்திய அறிதல்முறைகள்’. ஆயிரம் சிந்தை கொண்டிருந்தாலும் கவனம் சிதறாமல் ஒரு தலைப்பில் ஒரு அத்தியாயத்தில் இந்த மாதிரி முக்கியமான பலதரப்பட்ட விஷயங்களை வெறுமனே மொழிபெயர்த்து வாந்தியெடுக்காமல் தன் புரிதலின் மூலமும் தன்னுடைய சுய அறிதலின் மூலமும் பாரதவாசிகளுக்கு ஏற்ற மாதிரி பக்குவமாக எடுத்து எழுதுகிறார். அது வீடியோ கேமாக இருக்கட்டும்; செயற்கை அறிவை கணினியில் நுழைப்பதாக இருக்கட்டும்; முப்பரிமாண அச்சு இயந்திரமாக இருக்கட்டும்; கொல்லும் ரோபோவாக இருக்கட்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகட்டும்; இராட்சத யந்திரம் கொண்டு கண்காணிப்பு ஆகட்டும் – இதெல்லாம் குறித்து உங்களை யோசிக்க வைக்க உங்கள் எண்ணங்களைக் கிளற ஒருவர் தேவை என்றால் மட்டுமே நீங்கள் அரவிந்தனை வாசிக்க வேண்டும்.

’ஒற்றைப் பரிமாண மனிதன்’ என்னும் நூலில் மார்க்சிய அறிஞர் மார்க்கியூஸ் இவ்வாறு எழுதுகிறார்:

நாம் அன்னியப்பட்டு இருக்கிறோம். முழுக்க முழுக்க அடிமைத்தனத்தில் மூழுகியிருக்கிறோம். ஒரு பொருளாக மாறிவிட்டோம். கருவியாக செயல்படுகிறோம். நாம் புத்திசாலியாக இருந்தாலும் ஒன்றையும் உணர்வதில்லை. பேருரைக்கும் செயலாற்றலுக்கும் வித்தியாசம் தெரியாமல் நம் சௌகரியங்களில் திளைத்து மூழ்குகிறோம்.

அதில் ஒற்றைப் பரிமாணத்தில் எல்லாவற்றையும் பார்ப்பதை ப்ளாட்டோவின் வழி வந்த மார்க்ஸின் அடிச்சுவட்டில் பயணித்த மார்குஸ் சாடியிருந்தார். இன்று அரவிந்தன் நீலகண்டன், அதே வழியில் அறிவியலின் தத்துவத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறார். மொழியியலின் தத்துவத்தை நுணுக்கி ஆராய்கிறார். தத்துவ ஆராய்ச்சியின் தன்மையையே திறனாய்வு செய்து தருகிறார். சமூக அறிவியலை கண் திறந்து பார்க்க வழிகாட்டுகிறார். முதலியம் ஆகட்டும்; மார்க்ஸியம் ஆகட்டும்; இந்துத்துவம் ஆகட்டும் – குதிரைக்கண் போல் எல்லாபக்கமும் பார்த்து, திரைகளை விலக்குகிறார். கலை, கவிதை, இலக்கியம் என எல்லாவற்றையும் திறந்த மனத்தோடு அணுகக் கோருகிறார். உணர்வதை யோசிக்கவும், யோசித்ததை உரையாடவும், உரையாடியதை செயல்படுத்தவும் அழைக்கிறார். கனவுகளைக் கற்பனையாக்கி, கற்பனைகளுக்கு செயல்பாதை அமைக்க வழியமைக்கச் சொல்கிறார். விளம்பரங்களினால் கட்டமைக்கப்படும் உலகு என்பது ஒன்று. நம் மொழியினாலும் பகுத்தறிவினாலும் கட்டமைக்கப்பட வேண்டிய உலகு மற்றொன்றாக இருக்கிறது. உங்கள் புத்திக்கு உரைப்பட்டதை திறம்பட எடுத்துரைக்க ஆயிரம் அரவிந்தன்கள் தோன்ற வேண்டும்.

மேற்கோளோடு ஆரம்பித்த குறிப்பை மேற்கோளோடு முடிக்கிறேன்:

ஃப்ரான்சுவா மௌரியாக் (François Mauriac) சொல்கிறார்:

ஆள் அரவமற்ற அனாதரவான அரண்மனைகளைப் போன்று பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். அதன் அரசர்கள் மூளையின் ஒருசில அறைகளை மட்டுமே உபயோகிப்பார். அந்த பெரிய அரசவையின் பல்வேறு பாதைகளையும் இருப்பிடங்களையும் மூடிவைத்து தன் இறக்கைகளை விரிக்க துணியார்.

அரவிந்தன் நீலகண்டன் வல்லாளகண்டர். அவர் மூளை என்பது மாட மாளிகை என்றால் சிந்தை என்னும் அரசவை கொண்டு அதன் மூலை முடுக்கெல்லாம் சென்று ஆலாலம் உணர்த்தி உங்களுடைய குச்சில் வீட்டை கூட திறக்கவைப்பார்.

வாழ்க்கைக் குறிப்பு
அரவிந்தன் நீலகண்டன், நாகர்கோயிலைச் சேர்ந்தவர். உளவியலிலும் பொருளியலிலும் பட்டம் பெற்றிருக்கிறார். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் களப்பணியாளராக சேவை செய்கிறார். நிகழ்தமிழின் முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவர். சமூகவியல், அறிவியல், இந்துமதம், வரலாறு, உளவியல், சூழலியல் ஆகிய பன்முகப்பட்ட துறைகளிலும் ஆழ்ந்த வாசிப்பும், புலமையும் கொண்டவர். அரசியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருவதுடன், அறிவியல், தத்துவம், சூழலியல், வரலாறு, சமூகவியல், திரைப்படம், ஆன்மிகம் சார்ந்து நானூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். நாளைய தலைமுறைக்கான தேவைகளை உணர்ந்து தனது எழுத்துகள் மூலம் ஒரு மௌனமான தனிநபர்ப் போராட்டத்தை இடைவிடாது மேற்கொண்டு வருபவர். ராஜீவ் மல்ஹோத்திராவுடன் இணைந்து இவர் எழுதிய “உடையும் இந்தியா?” உலகளாவிய அரசியல் சித்தாந்தங்களால் இந்தியாவிற்கு நேரிடும் அபாயங்களைக் குறித்த ஆதாரபூர்வமான விவாதத்தை முன்வைத்ததது. மனைவி பான்ஷியா நீலகண்டன். மூன்று குழந்தைகள்.

அநீ.யைக் குறித்து பாரா
நாகர்கோயிலில் அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். மாடியில் ஒரு பெரிய ஹாலின் கதவைத் திறந்து என்னை உள்ளே அழைத்துச் சென்றார். மூச்சடைத்துவிட்டது. தமிழகத்தின் எந்த ஒரு அரசு / தனியார் நூலகத்தில் உள்ள சிறந்த நூல்களின் சேகரத்தைக் காட்டிலும் அரவிந்தனின் நூலகம் சிறப்பானது என்று தயங்காமல் சொல்லுவேன். புராதனமான அறிவியல் பத்திரிகைகளின் தொகுப்புகள், என்சைக்ளோபீடியா வால்யூம்கள், ஹிந்துத்துவ, இஸ்லாமிய, கிறித்தவச் சிந்தனையாளர்களின் புத்தகங்கள், பழந்தமிழ் இலக்கியம், நவீன இலக்கியம் [நல்லவேளை, கவிதைத் தொகுப்புகள் கண்ணில் படவில்லை], வேளாண்மை தொடர்பான நூல்கள், மானுடவியல், வரலாறு, விஞ்ஞானம் என்று துறை வாரியாகப் புத்தகங்கள். தன் வாழ்நாள் சம்பாத்தியம் முழுதையும் ஒருவர் புத்தகங்கள் வாங்க மட்டுமே செலவிட்டாலொழிய அப்படியொரு நூலகம் அமைப்பது அசாத்தியம்.

ஒரு சார்லஸ் பேபேஜ் காலத்து கம்ப்யூட்டரை வைத்துக்கொண்டு அத்தைப்பாட்டி பாக்கு இடிப்பது மாதிரி டைப் செய்துகொண்டும் வாசித்துக்கொண்டும் இடையிடையே போன் பேசிக்கொண்டும் இருந்தார்.

அரவிந்தன், இந்தத் தலைமுறையின் மிக முக்கியமானதொரு சிந்தனையாளர். புத்தி விருத்தியில் நாட்டமுள்ளவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய எழுத்தாளர்.

அவர் எழுத்துகளை வாசிக்க:
1. சொல்வனம்

2. தமிழ் பேப்பர்

3. வலைப்பதிவுகள்:

4. தினமணி ஜங்ஷன் :: அறிதலின் எல்லையில்

5. ஜெயமோகன் தளம்

6. திண்ணை

7. ஸ்வராஜ்யா (ஆங்கிலம்)

8. சூத்ர ஜர்னல் (ஆங்கிலம்)

9. தமிழ் ஹிந்து

10. ஹிந்துத்துவ சிறுகதைகள்

11. சுவாமி விவேகானந்தரின் பங்களிப்பு பற்றி பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி

12. விவேகானந்தம் 150

நூல்கள்

aravindhan_neelakandan_nilakandan_aravithan_books

  1. கடவுளும் நாற்பது ஹெர்ட்ஸும், அறிவியல் கட்டுரைகள், தமிழினி பதிப்பகம், 2004
  2. The Wonder Fern Azolla, டாக்டர். கமலாசனன் பிள்ளையுடன் இணைந்து எழுதிய கையேடு, தமிழ், ஆங்கிலம், இந்தி, விவேகானந்த கேந்திர வெளியீடு, 2009
  3. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம், இந்துத்துவ பதிப்பகம் 2010
  4. நம்பக்கூடாத கடவுள், கட்டுரைத் தொகுப்பு, கிழக்குப் பதிப்பகம், 2010
  5. சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம், ஜடாயு, பனித்துளி ஆகியோருடன் இணைந்து எழுதியது, இந்துத்துவ பதிப்பகம், 2010
  6. உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அன்னியத் தலையீடுகளும், ராஜீவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து எழுதியது., கிழக்குப் பதிப்பகம், 2011 (Breaking India: Western Interventions in Dravidian and Dalit Faultlines by Rajiv Malhotra, Aravindan Neelakandan):

    இந்தியாவில் ஆழமாகக் காலூன்றியிருக்கும் மூன்று சர்வதேச வலைப்பின்னல்களால், இந்திய ஒருமைப்பாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிவருகிறது. 1. பாகிஸ்தானுடன் தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதம். 2.நேபாளம் போன்ற நாடுகள்வழியாக, சீனாவால் தூண்டிவிடப்படும் மாவோயிஸ, மார்க்ஸிய அடிப்படைவாதம். 3. மேற்கத்திய உலகால் மனித உரிமைப் போராட்டம் என்ற போர்வையில் திராவிட தலித் அடையாளங்களைத் தனித்துப் பிரிக்க முற்படும் பிரிவினைவாதம். இந்தப் புத்தகத்தில், ஆசிரியர்கள், மூன்றாவதாக மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அச்சுறுத்தலை மட்டுமே பிரதானப்படுத்தி ஆராய்ந்துள்ளனர்.

  7. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம், கிழக்கு பதிப்பகம், 2012
  8. ஆழி பெரிது (இது ஒரு ஹிந்துத்துவ என்சைக்ளோபீடியா), மதி நிலையம், 2014
  9. நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர், கிழக்கு பதிப்பகம், 2014
  10. கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம், மதி நிலையம், 2014
  11. இந்திய அறிதல் முறைகள் : நவீன அறிவியல் புலங்களைப் புரிந்துகொள்ள; சாந்தினிதேவி ராமசாமியுடன் இணைந்து எழுதியது., கிழக்கு பதிப்பகம், 2016 – ரா.கிரிதரனின் அறிமுகம்

இவர்தாண்டா இயக்குநர்

cafe-society-woody-allen-kristen-stewart-jesse-eisenberg

சின்ன வயதில் பாக்யராஜை ரொம்பப் பிடிக்கும். சின்ன வீடு திரைப்படத்தில் தவறு செய்தாலும் தர்மசங்கடத்தில் தவிக்கும் கதாபாத்திரத்தை அரங்கேற்றுவார். முந்தானை முடிச்சு படத்தில் துரத்தி துரத்தி காதலிக்கும் இரண்டாம் மனைவியைக் காண்பித்து ஆண் வக்கிரத்திற்கு நன்றாகவேத் தீனி போட்டார். இன்று போய் நாளை வா போன்ற படங்களில் சாமர்த்தியமான பெண்களையும் அசட்டு ஜொள்ளர்களையும் செமையாக சிரிக்க வைத்தார்.

அமெரிக்கா வந்த பிறகு இரண்டு இயக்குனர்கள் அந்த மாதிரி என்னை நம்பிக்கையாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள். முதலாமவர் கோயன் சகோதரர். இரண்டாமவர் இங்கே கவனிக்கப்போகும் வுடி ஆலன்.

ஒவ்வொரு படத்திலும் ஏமாற்றாமல் எதையோ ஒன்றை எனக்காக வைத்திருக்கிறார். வசனம் ஆகட்டும்; கதாபாத்திர சித்தரிப்பு ஆகட்டும்; சமூக எள்ளல் ஆகட்டும்; திரைப்படம் நடக்கும் நகரம் ஆகட்டும்… எல்லாமே ரம்மியம்.

என்னுடைய கனவுக்கன்னிகள் எக்கச்சக்கம். ஒரு பட்டியல் போட்டு பார்க்கலாம்…

  1. ஜெகன்மோஹினி ஜெயமாலினி
  2. அழகன் பானுப்ரியா
  3. மின்சாரக் கனவுகள் கஜோல் (டி டி எல் ஜே அசல் என்றாலும்…)
  4. Forget Paris டெப்ரா விங்கர்
  5. Pretty Woman ஜூலியா ராபர்ட்ஸ்
  6. When Harry Met Sally மெக் ரயன்
  7. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தபு
  8. பிரேமம் சாய் பல்லவி
  9. நல்லவனுக்கு நல்லவன் ராதிகா

பத்தாவதாக க்ரிஸ்டன் ஸ்டூவார்ட் சேர்கிறார்.

இன்றைய தேதிய கிரிஸ்டன் மிக மிகப் பெரிய நட்சத்திரம். அதாவது தமிழ்நாட்டில் நயன் எவ்வளவு பெரிய நாயகியோ, அதை விட பத்து மடங்கு சூப்பர் ஸ்டார். அவரை அழைத்து, இந்த கதாபத்திரத்துக்குப் பொருந்துவாரா என்று மேக்கப் போட்டு, வசனம் பேசச் சொல்லி, அதைப் படம் பிடித்து, பார்த்த பிறகே வுடி ஆலன் கிரிஸ்டனை நாயகியாக்குகிறார்.

கிரிஸ்டனுக்கும் பேர் சொல்லும் படம் கிடைக்க வேண்டுமானால் டைரக்டர் சொல்லும்படி ஆடித்தான் ஆகவேண்டும்.

இந்தப் படம் என்னுடைய விருப்பமான நகரம் – நகரேஷு நியு யார்க்

படத்தைப் பார்த்தால் நாவல் போல் இருப்பது அதிசயத்திலும் அதிசயம். இந்தத் திரைப்படம் மிகவும் தேர்ந்த புதினம் போல் நெடுங்கதையாக விரிகிறது. மனதில் எங்கோ ரீங்கரீத்துக் கொண்டே இருக்கிறது.

படத்தில் மிகவும் யோசிக்க வைத்த வசனம்:

சாக்ரடீஸ் ஒரு தபா சொன்னார்: “ஆராயப்படாத வாழ்க்கையை வாழ்வதில் அர்த்தம் எதுவுமில்லை”.  ஆராய்ச்சிக்குள்ளாக்கப்படும் வாழ்விலும் எந்த பெரிய அர்த்தமும் இருப்பதாக எனக்குத் தோணல!

keyart-single-cafe-society-vertical

படத்தில் யூதர்களைக் குறித்த கிண்டல்கள் உண்டு. பணக்கார வர்க்கத்தைக் குறித்த கேலிகள் உண்டு. எல்லாமே உன்னதமான நகைச்சுவை. மீண்டும் மீண்டும் பார்த்தாலும் சிந்தித்து பிறகு வெடித்துச் சிரிக்க வைப்பவை.

மீண்டும் பாக்யராஜிற்கே வருவோம். ஏன் அவரை பிடித்து இருந்தது? ஆணாதிக்கம் இருக்கட்டும். அந்த அப்பாவி ஆண் இமேஜ் பிடித்திருந்தது. அவரின் ஏமாளித்தனம் ரசித்தது. ‘கொட்டும் மழைக்காலம் உப்பு விற்கப்போகும்’ ஏமாளித்தனம் ருசித்தது.

இந்தப் படத்தின் தலைவனும் இதே மாதிரி கோமாளி. விட்டில் பூச்சியாய் விளக்கில் வீழ்க்கிறான்.

கொலையை நியாயப்படுத்துவது ஆகட்டும்; அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் போது அடங்கிப் போகும் பக்கத்து வீட்டு தத்துவவியலாளர் ஆகட்டும்; பதின்ம வயதுப் பெண்ணை ஆசைப்படும் கிழ போல்ட்டு ஆகட்டும்; கிடைக்காத உச்சாணிக்கொம்பை நோக்கி ஆசைப்படும் நாயகன் ஆகட்டும் – எல்லாவற்றையும் நம்பகமாகக் காண்பித்து நிராசையையும் உளவியலையும் காதலையும் கலந்து கட்டி அடிப்பதில் வுடி ஆலன், ‘விடு ரைட்டு’ என்று தப்பையும் சரியாக மனதில் பதிய வைக்கிறார்.

நான் பார்க்கும் பெண்கள் எல்லாம் சுவலட்சுமிகள் மாதிரி ஆலோசனை மழை பொழிவதிலும், தேவயானி மாதிரி சின்சியர் சிகாமணிகளாகவும் இருக்கையில், திரையில் மட்டும் கனவுக்கன்னியர் வந்து போவர். இங்கேதான் கிரிஸ்டன் ஸ்டூவர்ட் நாயகி கதாபத்திரம் பளிச்சிடுகிறது. கிரிஸ்டன் தெளிவானவர். வாழ்க்கையில் பணம் முக்கியம். ஹாலிவுட்டில் அந்தஸ்து முக்கியம். பருத்தி வீரன் ப்ரியாமணி போல் காதல் மட்டும் கருத்தில் கொள்ளாமல் நிதர்சனத்தை உணர்ந்து முடிவெடுக்கும் சாமர்த்தியவாதிகள்.

இளமைக் காதலை இப்படி காட்சியாக்கியவர்கள் வெகு வெகு சிலரே. தங்கர்பச்சானின் அழகி இப்படியொரு உச்சத்தைத் தொட்டு இருக்க வேண்டும். ஆனால், அலைக்கழித்து, சுமுகமாக க்ளைமாக்ஸ் சொதப்பலில் முடிந்து, சின்னாபின்னமாகி இருக்கும். முதல் மரியாதை காதல் கூட சௌஜன்யமாக இல்லாமல், கொலயெல்லாம் செய்யவைத்து பரிதாபப் பட வைக்கும்.

வுடி ஆலன் உண்மையைச் சொல்பவர். கனவுகள் என்றும் கனவுகளாக இருப்பதால்தான் மெய் மெய்யாகப் பொய்க்கிறது.

kristen_stewart_cafe_society

எண்பது வயசானாலும் ஏமாற்றாத என் டைரக்டர்டா!!

1. Movie Review: ‘Café Society’ and the Twilight of Woody Allen – The Atlantic

2. Review: ‘Café Society’ Isn’t Woody Allen’s Worst Movie – The New York Times

3. ‘Cafe Society’ Movie Review – Rolling Stone

Massachusetts 2016 elections – Ballot Questions: Yes or No?

நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறார்கள்.

சூதாட்டத்தை இன்னும் அதிகரிக்கலாமா?

Question 1 would allow the Gaming Commission to issue an additional slots license.

இன்னும் துவக்க வேண்டிய சூதாட்ட கேளிக்கை மையங்களையே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் மேலும் ஒன்றா?

முதலில் துவக்க வேண்டியதை துவக்கி நடத்த ஆரம்பிக்கட்டும். அவற்றில் எவ்வளவு காலப்போக்கில் பிழைத்து, பிழைப்பை நடத்துகின்றன எனப் பார்ப்போம். அவற்றினால் எந்த மாதிரி பின் விளைவுகள் வருகிறது என ஆராய்வோம். அதன் பின் அடுத்ததைத் துவக்குவோம்

penn-national-gamings-plainridge-park-casino-slots-parlor-mass

அரசாங்க செலவில் நடக்கும் தனியார் கல்விக்கூடங்களை அதிகரிக்கலாமா?

Question 2 would authorize the approval of up to 12 new charter schools or enrollment expansions in existing charter schools by the state Board of Elementary and Secondary Education per year.

ஒவ்வொரு வருடமும் பன்னிரெண்டு புது பள்ளிக்கூடங்கள் தனியார் கையில் தரப்படும். நாளடைவில் மொத்த மாஸசூஸட்ஸ் மாநிலப் பள்ளிகளுமே தனியாரிடம் கொடுக்கப்படும். பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயிப்பதில் ஆரம்பித்து, எந்த மாதிரி பரீட்சைகளை வைத்தால் மாணவர்கள் தேர்வு பெறுவார்கள் என்பதைப் பொருத்து கேள்விகளை எளிமையாக்குவது வரை எல்லாமே மாறும்.

charterschoolsalicensetosteal

சோற்றுக்கு வளர்க்கப்படும் மாமிச உணவாகும் மிருகங்களைக் கூண்டில் வைக்காமல் திறந்தவெளியில் வளர்க்க வேண்டுமா?

Question 3 would prohibit certain methods of farm animal containment.

நமது தட்டிற்கு வரப்போகும் இறைச்சிகளை எப்படி வளர்க்க வேண்டும்? அவை கால் நீட்டிப் படுத்துக் கொள்ள இடம் தர வேண்டுமா? அல்லது இரண்டே இரண்டு டாலருக்கு சுவைமிக்க மாமிசம் கிடைக்க வேண்டுமா? நிமிர்ந்த நடையும், திரும்பித் திரும்பி உலகத்தைச் சுற்றும் தனிமனித உரிமைகளை பன்றிக்கும் கன்றுக்குட்டிக்கும் தர வேண்டுமா? அவை அவ்வாறு சுதந்திரமாக வாழ்ந்தால்தான் செத்த பிறகு சுவைக்குமா?

இந்த கருத்துக் கணிப்பை ரோட்டில் சுதந்திரமாக அலைந்து திரியும் நாய்களையும் பூனைகளையும் பொறி வைத்து, தேடிப் பிடித்து கருணைக் கொலை செய்து தீர்த்து கட்டும் ஜீவகாருண்ய சங்கம் ஆதரிக்கிறது.

truth-about-factory-farms

சிறிய அளவில் போதைப் பொருளை உட்கொள்ள வயதுவந்தோரை அனுமதிக்கலாமா?

Question 4 would legalize recreational marijuana for individuals at least 21 years old.

எங்கே பார்த்தாலும் கஞ்சா கிடைக்கிறது. வீட்டிற்கே வந்து மாரிவானா (marijuana – மரிஹுவானா என்ற போதைப்பொருள்) கொடுக்கும் அமைப்புகளை நீங்கள் லியனார்டோ நடித்த ‘வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ போன்ற படங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள். இருந்தாலும் இது குற்றம் என்பதால் காவல்துறைக்குத்தான் ரோதனை. இதைவிட மோசமான போதையான சாராயம், தண்ணீர் ஆறாக ஓடி அமெரிக்காவிலும் மூலைக்கு மூலை டாஸ்மாக் இருக்கிறது. பியர் வாங்கினால், மது உட்கொண்டால் –  அரசாங்கத்திற்கு வரி மூலம் வருமானம் கிடைக்கிறது. அதே போல் கஞ்சா வாங்கினாலும் விற்பனை வரி மூலம் பள்ளிக்கூடங்களைப் பெருக்கலாம்; காவல்துறையை மக்களை பாதுகாக்க அதிகரிக்கலாம்.

10_reasons_kanja_marijuana_regulation_legalization

இலக்கியம்

shella

நானும் பேயோனும் அவர் வீட்டில் இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தோம். எப்போதாவது ஒரு மாறுதலுக்காக வாசிப்போம். இருவருக்கும் இலக்கியம் தெரியாது. ஆனால் சினிமாவும் தெரியாது. எனவே இலக்கிய நூல்களை வைத்து சினிமா போல் பார்த்தோம். காபிதான் குறிக்கோள்.

இலக்கிய புத்தகத்தின் மாடர்ன் ஆர்ட் அட்டையில் வலதுகையை ஊன்றி குரோசவாவை யோசித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது.

“அட, என்னாச்சு திடீர்னு?” லபக்குதாஸ் கவலை தெரிவித்தார்.

“என் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சு.”

“உங்க பொண்டாட்டி பக்கத்து ரூம்லதான இருக்காங்க.”

“அதுனாலதான்.”

carrom_chess_both_board_players_table

பேயோன் எழுதியது

Saudi Arabia and Indians in Gulf

ஐஸிஸ்

அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளராக இருந்தவர் பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders). டெமொகிராட் கட்சி சார்பாக போட்டியிட்டவர். இவர் தன்னுடைய சோஷலிஸக் கொள்கையாக இவ்வாறு பேசியிருந்தார்:

நாம் எவ்வாறு ஐஸிஸ் (ISIS)-ஐ எதிர் கொள்ள வேண்டும்? உலக அளவில் கூட்டணியை ஏற்படுத்த வேண்டும். இதில் இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்பு மிக மிகப் பெரியதாக இருக்க வேண்டும். இஸ்லாமின் அகவுயிருக்கானப் போராட்டம் இது. இதில் இஸ்லாமின் உயிரை மீட்க வேண்டுமென்றால் பணம் பலமும் கொண்ட சவூதி அரேபியா, குவைத், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் களத்தில் இறங்க வேண்டும். அவர்கள் தோள் கொடுத்தால் மட்டுமே ஐஸிஸ் தோற்கும். இராணுவத்திற்கு செலவழிக்கும் நாடுகளில் உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் சவுதி போன்ற நாடுகள் ஐஸிஸை தவறவிட்டு, யேமனில் (Yemen) இருக்கும் ஹௌத்தி போராளிகளைத் தாக்குவதில் மட்டுமே குறியாக இருக்கிறார்கள்

இந்தப் பேச்சு சவுதியின் பாதுகாப்புத் துறை மீதும் அமீரகத்தின் விமானங்கள் யேமன் ஹவுத்திகளைக் கொன்று குவிப்பது மீதும் சற்றே கவனத்தைப் பாய்ச்சியது. சவுதியில் சன்னிக்கள் பெரும்பான்மையினராக இருக்கிறார்கள். யேமன் நாட்டிலும் சன்னிக்களே பெரும்பான்மையினர். அவர்களிடமிருந்து வடக்கு யேமனில் ஹௌத்தி இனத்தினர் தங்கள் விடுதலையைக் கோரினார்கள். 2014-ல் ஹௌத்தி போராட்டம் பெரிதாகி, யேமன் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டனர்.

ஹௌத்தி இனத்திற்கு எதிராக பத்து நாடுகளை சவுதி அரேபியா ஒன்று திரட்டியது. பெரும்பான்மை சன்னி பிரிவினர் ஆண்ட யேமனில், ஷியா பிரிவைச் சார்ந்த ஹௌத்தி இனத்தினரை வான் வழியே இந்த பத்து நாட்டு கூட்டணித் தாக்கியது. நூறு போர் விமானங்கள், ஒன்றரை இலட்சம் படைவீரர்களை இதற்காக சவூதி ஒதுக்கியது. 2,415 தடவை வான்வழித் தாக்குதலை நடத்தி ஆயிரக்கணக்கான குண்டுகளை விண்ணில் இருந்து வீசி இருக்கிறது.

இதெல்லாம் ஏன் முக்கியம்?

ஐஸிஸ் வீழ்வதற்காக அறுபது நாடுகள் கொண்ட கூட்டணியில் சவூதியும் அங்கம் வகிக்கிறது. தன் சார்பில் நான்கே நான்கு தடவை மட்டும் எஃப்-15 போர் விமானங்களைப் பறக்க விட்டிருக்கிறது.

பாதுகாப்பு மற்றும் ராணுவ வரவுசெலவு

ஒப்புமைக்காக, அதிக அளவில் இராணுவத்திற்காக செலவிடும் நாடுகளின் பட்டியலைப் பார்ப்போம்:

தர வரிசை நாடு செலவு
($ பில்லியன்)
 % of GDP

உள்நாட்டு ஒட்டுமொத்த‌ உற்பத்தியில் இராணுவத்திற்கான செலவின் பங்கு

அனைத்து உலக நாடுகளும்
1,676.0 2.3
1 United States United States 597.0 3.9
2 China China 215.0 1.9
3 Saudi Arabia Saudi Arabia 87.2 13.7
4 Russia Russia 66.4 5.4
5 United Kingdom United Kingdom 55.5 2.0
6 India India 51.3 2.3
14 United Arab Emirates United Arab Emirates 22.8 5.7

மூலம்: விக்கிப்பீடியா

சௌதி அரேபியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இருக்கும் உறவை விவரிப்பது சிக்கலானது. அமெரிக்காவிற்கு சவுதியின் கச்சா எண்ணெய் தேவையாக இருந்தது. இப்போதும் அந்த நாட்டின் எண்ணெய்க் கிணறுகள் மீது நிறையவே பற்று இருக்கிறது. அமெரிக்காவிற்கு கடன் கொடுக்கும் நாடுகளில் கம்யூனிச சீனாவிற்கு சரியான போட்டியாக சௌதி நாட்டின் அரசர்கள்தான் இருப்பார்கள். அமெரிக்காவில் 700 பில்லியன் டாலர்களை சவுதி மன்னர் பரம்பரை முதலீடு செய்திருப்பதாக ஃபோர்ப்ஸ் கணிக்கிறது.

செப்டம்பர் 11, 2001-ல் உலக வர்த்தக் மைய தாக்குதலில் எண்ணற்றோர் பலியானது தொடர்பான விசாரணையின் முடிவில் வெளியான அறிக்கையில் தணிக்கை செய்யப்பட்ட 28 பக்கங்களை வெளியிட்டால், இந்த முதலீடு திரும்பப் பெறப்படும் என செல்லமாக பராக் ஒபாமாவை மிரட்டும் அளவு சக்தி பெற்ற நட்பு கொண்டிருக்கிறது சௌதி அரேபியா.

அமெரிக்காவின் மொத்த ஏற்றுமதியில் பத்தில் ஒரு பங்கை சவுதி வாங்கிக் கொள்கிறது. எல்லாம் இராணுவத் தளவாடங்கள்தான்.  ஆனால், 2016ன் அதிகாரபூர்வ அறிக்கையை பார்த்தால், அமெரிக்காவில் முதலீடு செய்யும் தலை இருபது நாடுகளில் சவுதி இடம் பிடிக்கவில்லை. கொஞ்சம் போல் தலை சுற்றத்தான் செய்கிறது.

FDI_US_Top_20_Countries_Investment_GDP_Exports_Debt_Income_Stocks

சீனாவைக் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஏன் இப்படி எதிர்மறையாக எழுதித் தள்ளுகின்றன? அதை விட மோசமான அல்லது சீனாவை போலவே பிற்போக்கான கற்கால நாகரிகத்தை சட்டமாக வைத்துள்ள சவுதியை அமெரிக்க செய்தித்தாள்களும் புதிதாக முளைத்த வாக்ஸ், குவார்ட்ஸ், பஸ் ஃபீட், வெர்ஜ் போன்ற வலையகங்களும் ஏன் தொடுவதேயில்லை?

சவுதியின் அரசர்கள் ஆகட்டும், வர்த்தகர்கள் ஆகட்டும் – அமெரிக்க செய்தித்துறையோடு புரையோடிய நட்பு பேணுபவர்கள். அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படித்தவர்கள். 2006 முதல் 2010 வரையிலான நான்கே ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் போர்க்கருவிகளில் 275% அதிகமாக சவுதி அரேபியா வாங்கிக் குவிக்கிறது. எண்ணெய்க் கிணறுகளுக்கு மத்தியில் திரிசங்கு சொர்க்கமாக தனித் தீவை அமெரிக்கர்களுக்காக சவுதி உருவாக்கி இருக்கிறது. இப்படிப்பட்ட பணக்கார பாசத்தினால் ஊடகங்களும் சவுதி குறித்த உண்மை நிலைப்பாடுகளை அடக்கியே வாசிக்கின்றன. சவுதி இளவரசர் லாஸ் ஏஞ்சல்ஸில் பாலியல் குற்றங்களுக்காக மாட்டிக் கொண்டாலும் பெரிதுபடுத்தாது.

இந்திய தொழிலாளர்கள் தவறாக நடத்தப்படுவது மற்றும் உழைப்புச் சுரண்டல்

Complaints_Gulf_Countries_Indians_NRI_Abroad_UAE_torture2-1

இந்தியாவிலும் இதே போன்ற ராஜபோக  மரியாதை சவுதி அரேபியாவிற்கு வழங்கப்பட்டு வந்தது. இப்பொழுதுதான் அங்கிருக்கும் இந்தியர்கள் குறித்த நிலை குறித்து நாளிதழ்கள் செய்திகள் வெளியிடுகின்றன:

1. இந்தியர்களை சவுதி அரேபியா சொந்த செலவில் திருப்பி அனுப்பிகிறது || தினத்தந்தி

முகாம்களில் தங்கியிருப்பவர்கள் பிற நிறுவனங்களில் மீண்டும் வேலையை நாட அனுமதிப்பதாகவும் சவுதி அரேபியா அறிவித்து உள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார். சவுதி அரேபியா சென்று உள்ள வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.கே. சிங், இந்திய தொழிலாளர்களுக்கான ஏற்பாடுகளை முறைப்படுத்திய பின்னர் இந்தியா திரும்புவார்

2. வேலையின்றி தவிக்கும் இந்திய தொழிலாளர்களை சொந்த செலவில் திருப்பி அனுப்புகிறது சவுதி: மாநிலங்களவையில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தகவல் || தி இந்து

சவுதி அரேபியாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், அங்கு ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்தனர். சம்பள பாக்கியும் இருப்பதால், அவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகின்றனர்.

3. சவுதியில் வேலை இழக்கும் குடியேற்றதாரர்க்கு உதவ அழைப்பு || UCAN / வத்திக்கான் வானொலி

சவுதி அரேபியாவில், ஒரு பீப்பாய் எண்ணெய், 100 டாலரிலிருந்து, 30 டாலராக இவ்வாண்டில் குறைந்துள்ளவேளை, அந்நாடு, 2009ம் ஆண்டுக்குப் பின்னர் முதல்முறையாக, வரவுசெலவில் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளது.

4. பாலைவனத்தில் தவிக்கும் இந்தியர்கள் || சிந்தனைக் களம் » தலையங்கம் – தி இந்து

Economy_Saudi_Arabia_Debt_To_GDP_Years

பொருளாதார மந்தநிலை காரணமாகவும் சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலிய விலை வீழ்ச்சி காரணமாகவும் பெட்ரோலிய வள நாடுகள் குறிப்பாக, சவுதி அரேபியாவில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கும் அவல நிலை உருவாகியிருக்கிறது. அன்றாடச் சாப்பாட்டுக்கே வழியின்றி பட்டினியில் வாடுகின்றனர். சவுதியில் மட்டும் இப்படி 10,000 தொழிலாளர்களின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது.

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட மொத்தத் தொகையில் ரூ.2.5 லட்சம் கோடி குறைந்திருக்கிறது. வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளிலிருந்துதான் இந்தியாவுக்குத் தொழிலாளர்கள் அனுப்பிவைக்கும் தொகையில் 50% கிடைக்கிறது. அப்படி அனுப்பும் தொகையில் 40% அதாவது, ஒரு லட்சம் கோடி ரூபாய் கேரளத்துக்கு மட்டும் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கேரளத்திலிருந்து வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளுக்கு 24 லட்சம் பேர் வேலைக்காகச் செல்கின்றனர். அவர்களில் 11 லட்சம் பேர் திரும்புகின்றனர்.

வளைகுடா நாடுகளிலிருந்து தொழிலாளர்கள் அனுப்பும் தொகை மட்டும் கேரளத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 22% அளவுக்கு இருக்கிறது. அது மேலும் தேய்வதால் கேரளத்தின் பொருளாதாரத்துக்குப் பெருத்த பின்னடைவு ஏற்படும். அரசும் தனியாரும், கிராமங்களிலும் நகரங்களிலும் முதலீடுகளைப் பெருக்கினால் தவிர, கேரளத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வேலை தருவதும், வருமானத்தைத் தக்க வைப்பதும் இயலாததாகிவிடும்.

Indian_Consulate_Jeddah

வெளிநாட்டுச் சிறை

சவுதியில் வேலை பார்ப்பதின் சௌகரியம் என்னவென்றால் வருமான வரி கட்ட வேண்டாம். எவ்வளவு சம்பளம் சவுதியில் கிடைக்கிறதோ, அத்தனையும் நமக்கே. நயா பைசா கூட அரசுக்கு கப்பம் செலுத்தத் தேவையில்லை.

ஆனால், எண்ணெய் விலை குறையக் குறைய, இந்த நிலை மாறுகிறது. 72 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறையை சமாளிக்க உள்ளூர்வாசிகளிடம் வருமான வரி போட முடியாது. அயல்நாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்தோரிடம் மட்டும் வருமான வரியை வசூலிக்க அரசு திட்டமிடுகிறது.

1980களில், இதே போன்ற நிலையில், எண்ணெய் விலை சரிந்தபோதும் அயலூர்க்காரர்களிடம் மட்டும் வரி போட்டு நிதி அதிகரிக்க சவுதி அரேபியா யோசித்தது. அப்போது தொழிலாளர்கள் எல்லோரும் ஒன்று கூடி போராட்டக் களத்தில் இறங்கினார்கள். வேலை நிறுத்தம் செய்தார்கள். வெளிநாட்டினருக்கு மட்டும் வரி விதிப்பு கொள்கை கைவிடப்பட்டது. இந்த முறை அரசு முந்திக் கொண்டது. போராடக் கூடியவர்களை வேலையை விட்டு கடாசி விட்டது. சம்பளமும் கிடைக்காமல், வேலைவாய்ப்பும் இல்லாமல், விமானத்திற்கான காசும் இல்லாமல் அனாதரவாக இருப்போருக்கு இப்போது பயணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சவுதி மன்னர்.

தமிழ் நாட்டில் ரேஷன் அரிசி தள்ளுபடி விலையில் கிடைப்பது போல் சவுதியில் தண்ணீருக்கு தள்ளுபடி விலை. தண்ணீர் கொள்முதலுக்கு உண்டான விலையில் விற்றால், குடிமகன்கள் பொங்கி விடுவார்கள் என்பதால் சல்லிசாக விற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மானியத்தை ரத்து செய்வது மற்றும் புகையிலைப் பொருள்களுக்கு வரி விதிப்பது என்று வேறு சில திட்டங்களையும் சவுதி யோசிக்கிறது.

 

NGO_Jeddah_Saudi_Arabia_Oger_Binladen_Bin_Laden_Indians

சவுதியில் வேலை செய்யும் நண்பருடன் பேசியதில் அவர் சொன்னது இது

இப்போது சவுதியில் வணிகம் மிக மோசமான நிலையில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த செய்திதான். சவூதி ஓஜர் (Saudi Oger) மட்டுமல்ல மிகப்பெரிய பல நிறுவனங்கள் (சவூதி பின்லேடன் உட்பட) பல நிறுவனங்கள் வேலையை விட்டுத்தூக்கியுள்ளன. அதேபோல சில நிறுவனங்கள் கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக சம்பளமும் வழங்க வில்லை. இதற்கு முக்கியக் காரணம் அரசு மெயின் காண்டிராக்டருக்கு வேலை முடித்ததற்கு உரிய பணத்தை வழங்கவில்லை. அவர்கள் தங்களுக்குக் கீழே இருக்கும் சப் காண்டிராக்டருக்கு வழங்கவில்லை. இப்படியே இது ஒரு சங்கிலி. இரு மாதங்களுக்கு முன்பாக சவூதி பின்லேடனைச் சேர்ந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். சவூதி சட்டத்தின் படி யாரும் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.

மேலும், சவுதி சட்டத்தின்படி, எந்த இடத்தில் வேலை பார்க்க வந்தோமோ அந்த முதலாளியையோ நிறுவனத்தையோ விட்டுவிட்டு வேறு வேலைக்கு செல்ல முடியவே முடியாது. வேலை பார்க்கும் இடம் கொத்தடிமை போல் நடத்தினாலும், பிச்சைக் காசு கொடுத்தாலும், அதே நரகத்தில் அப்படியே உழல வேண்டியதுதான் தொழிலாளியின் கதி. இதற்கு,  கஃபாலா (பிணையாக்கல்) – கடனுக்காகவும் மற்ற பிரச்சினைக்காகவும் ஆட்களையோ பொருட்களையோ பிணையாக்குதல் என்று பெயர்.

கத்தார் நாட்டில் 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கட்டுமானப் பணிகளில், இத்தகைய கடுமையான வேலை பளுவின் காரணமாக பல தொழிலாளர்கள் இறந்துள்ளனர். கத்தார் நாடே வெளியிட்டுள்ள அறிக்கையின் படி 2010-ஆம் ஆண்டு மட்டும் 4 ஆயிரம் பேர் இறந்துள்ளனர்.

சவுதியில் பிலிப்பைன்கள் யாரும் பிரச்சினைகள் இருந்தால் அந்த அரசு முடிந்தவரை போராடும். இந்தியர்கள் இத்தனை காலமும் இதுகுறித்து இங்குள்ள தூதரகம் பற்றி பொருமியதுண்டு. ஆனால் இப்போது மாற்று அரசின் அதிகாரிகள் தமது மக்களுக்காக பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. 15 டன் உணவை அவசர கால நிவாரணமாக களத்தில் இறங்கி பட்டினியில் வாடியவர்களுக்கு உதவி இருக்கிறது.

 

Saudi_Govt_Arabia_News_Modi_Sushma_indian_media

அவதூறா? அடிமை வர்த்தகமா?

பத்தாயிரம் இந்தியர்கள் இருநூறு நாள்களாக சம்பளமின்றி வேலை செய்கிறார்கள். அதுவும் இவர்கள் எல்லோரும் கை நிறைய ஊதியம் வாங்கும் கணினி நிரலாளர்களோ, எண்ணெய் நிறுவனங்களை மேய்க்கும் மேலாளர்களோ, வங்கிகளில் வர்த்தகம் நிர்வகிக்கும் கணக்கர்களோ இல்லை. தினக்கூலியாக குப்ப்பை அப்புறப்படுத்துவதில் இருந்து கட்டுமானப்பணியில் (Over 800 Saudi companies are ‘ignoring summer midday work ban’ – Al Arabiya English) சுட்டெரிக்கும் வெயிலில் உடலுழைப்பைக் கடுமையாகக் கோரும் ஊழியர்கள்.

இவர்களின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினால்,உலகிற்கு தெரியப்படுத்தினால் என்னவாகும்?

பொங்கியெழுந்தது அரேபிய அரசு. “முப்பது லட்சம் இந்தியர்கள் சௌக்கியமாக சவுதியில் இருப்பது உங்கள் கண்ணில் படவில்லையா? சவுதி ஓஜரில் ஏதோ 800 சொச்சம் இந்தியர்கள்  வேலையிழந்தார்கள். அதற்கு போய், இப்படி கூச்சல் போடுகிறீர்களே!” என்கிறார்கள்.

“இந்தியர்களுக்கு மட்டுமா இந்த மாதிரி அரை வருட சம்பள பாக்கி வைத்திருக்கிறோம்? பாகிஸ்தானியர்கள்,  பங்களாதேஷிகள் போன்றவர்களுக்குக் கூடத்தான் பணம் தராமல் வேலை வாங்கி வந்தோம். அந்த நாட்டினர் எந்த சத்தமும் போடாத போது நீங்கள் மட்டும் உணவு வேண்டும் எனக் கேட்பது அக்கிரமமாகத் தெரியவில்லையா?” என நியாயம் கேட்டிருக்கிறார்கள்.

“இந்தியாவில் கூட கிங்ஃபிஷர், சஹாரா போன்ற நிறுவனங்கள் திவாலாகின. அது போல் எங்கள் சவுதி நிறுவனங்களையும் போண்டி ஆக்கி விட்டார்கள் இந்தியர்கள். எங்களின் பொருளாதார நிலையை புரிந்து கொள்ளாமல் (Saudi Arabia’s economic time bomb | Brookings Institution) சம்பளம் கேட்பவர்களை என்ன செய்யலாம்?” என முறையிடுகிறார்கள்.

“இந்தியாவில் முஸ்லீம்களுக்கு மரியாதை இல்லை என்பதில்தான் இங்கே மீன் பிடிக்க வருகிறார்கள். அதற்குக் கூட கடிதம் எழுதலாமா?” என வருந்துகிறார்கள்.

செய்தி – முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திரமோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்:  தனியார் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டப்படி 63 மீனவர்களுக்கும் மாதந்தோறும் உரிய சம்பள பணத்தை கொடுக்கவில்லை. அந்த 63 மீனவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் அந்த தனியார் நிறுவனத்திடம் உள்ளது. இதனால் 63 மீனவர்களும் சவுதி அரேபியாவில் தவித்தப்படி உள்ளனர். எனவே தாங்கள் இந்த பிரச்சினையில் உடனடியாக தலையிட்டு சவுதி அரேபியாவில் உள்ள இந்திய தூதருக்கு உத்தரவிட்டு, சவுதி அரேபியாவில் உள்ள உயர் அதிகாரிகள் கவனத்துக்கு இதை எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜார்க்கண்டை சேர்ந்த 25 வயது பெண்ணின் கணவர் சவுதியில் வேலைக்கு சென்ற இடத்தில் அவரது முதலாளியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்க்க அந்த பெண் ஓராண்டு காலமாக காத்திருக்கிறார்.  “இதைப் போன்றோரின் நிலையை புத்தகமாக வேறுப் போட்டால், நாங்கள் மாறி விடுவோம் என நம்புகிறீர்களா?” என எழுத வைக்கிறார்கள்.

sour_and_sweet_expat_stories_from_arabia

”இப்போதைக்கு இருட்டில் தடவிப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் எஸ். இருதயராஜன்:  We’re groping in dark on issues facing Indians in Middle East: Expert | The News Minute

சவுதி மன்னர் எப்போது படுதாவை விலக்க அனுமதிப்பாரோ?

தொடர்புள்ள பதிவுகள்

  1. மைத்ரேயன்: பாலையில் துவங்கிய நெடும் பயணம்
  2. அருணகிரி: அரபு நாடுகளில் புரட்சி – ஜனநாயகம் சாத்தியமா?
  3. விக்கி: ஆதாரமற்ற பொருளாதாரம்
  4. சுந்தர் வேதாந்தம்: எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்
  5. முகின்: எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு
  6. பி.எஸ்.நரேந்திரன்: சிரியாவும் இன்ன பிறவும்…
  7. ஜெயக்குமார்: ஷியாவா? ஸுன்னியா?
  8. லக்ஷ்மண பெருமாள்: சவூதி அரேபியாவில் பெண்கள் நிலை – முன்னேற்றமா?
  9. குளக்கரை:சவுதி நிதி, அரபு விதி
  10. பி.எஸ்.நரேந்திரன்: பாலை நிலத்து நினைவலைகள்
  11. ஒரே நாளில் 47 பேரை வெட்டிச் சாய்த்த நாட்டிற்கு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பீடம்
  12. அரவிந்தன் நீலகண்டன்: உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி

பெண்ணின் மார்க்கச்சை

நீச்சலுடை உடுத்திக் கொண்டுதான் எல்லோரும் கடற்கரைக்கு வர வேண்டும் என்னும் சட்டத்தை பிரான்ஸ் முன்மொழிகிறது. இடத்துக்குத் தகுந்த ஆடை என்பதில் – கிறித்துவ கன்னித்துறவிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஒப்புதல் கிடையாது என்பது தெரிய வருகிறது.

கீழ்க்கண்ட புகைப்படத்தில் இயற்கையை ரசிக்க விரும்பும் கிறித்துவ கன்னிமார்களுக்கும் ஆடை ஒரு தடைக்கல்லாக இருப்பதை இமாம் ட்வீட்டுகிறார்:

Twitter_Imams_Nuns_Izzedin Elzir_Christian_Beach_Dress_Burkini_Jesus

மேற்கத்திய கடற்கரையில் இந்தியா மாதிரி இல்லாமல் சில வித்தியாசங்கள் இருக்கிறது. அவை என்ன?

– சென்னையில் வெயில் தாழத்தான் கடற்கரைக்குச் செல்கிறார்கள். பிரான்ஸில் காலை எட்டு மணிக்குச் சென்றுவிட்டு, மாலை ஐந்து மணி வரை குடியிருக்கிறார்கள்.

– சென்னையில் காலார மணலில் புதையப் புதைய நடப்பது குறிக்கோள். பிரான்ஸில் வெயிலில் காய்ந்து உடலின் மேற்தோலை பழுப்பு நிறமாக்குவது குறிக்கோள். சென்னை கோடை உச்சிவெயிலில் கடற்கரைக்குச் சென்றால், “கறுத்துப் போயிடுவே!” என்பது சாதாரணரின் அச்சமாக இருக்கும்.

– சென்னையில் மெரினா போன்ற பலர் கூடும் சமயத்தில் நீச்சலுடையில் வந்தால் பெரும்பாலும் பொறுக்கிகளாவே இருப்பார்கள். பலர் அச்சத்துடன் அவர்களின் பக்கம் செல்லாமல் ஒதுங்கிவிடுவார்கள். பெண்கள் எவராவது குட்டைப் பாவாடை போட்டுக் கொண்டு வந்தால் கூட, அவர்களின் கால்களை வெறித்துப் பார்ப்பவர்களையே சென்னை கொண்டிருக்கிறது.

– பாரிஸில் முழுக்கால் சட்டை அணிந்துகொண்டு, நீச்சலுடை அணிந்து கொண்டிருப்பவர்களை பார்த்துக் கொண்டிருப்பவர்களை துரத்த நினைக்கிறார்கள். பாரிஸில் இருப்பவர்களைப் பொருத்தவரை, கடற்கரை என்பது சூரியக் குளியலுக்கும் வெயில் உடலில் ஏறிவிட்டால் சற்றே நீந்தி குளிர் தண்ணீரில் முழுமையாக நனைவதற்கும்.

உடலைக் குறித்தும் தங்களின் தோற்றத்தைக் குறித்தும் மனக்கிலேசம் உடையவர்களுக்கு பிகினி ஆடை எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக்கி நாணம் கொள்ளச் செய்கிறது. எனவே, அந்த நீச்சலுடைக்கு பதிலாக முழு உடலையும் மறைக்கும் பர்கினி என்னும் உடையை ஒத்துக் கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் சொல்லிவிட்டது.

Game_of_Thrones_shame-nun-2

இந்த சமயத்தில் மிஸ் ஐடாஹோ நினைவிற்கு வருகிறார். அவரோ நீரிழிவினால் அவதிப்படுபவர். இன்சுலின் இல்லாவிட்டால் அல்லது குறைந்துவிட்டால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடிவிடும். இதுவே சர்க்கரை வியாதிக்கு வழிகோலுகின்றது. எப்போதும் குளூகோஸ் ஏற்றிக் கொண்டேயிருக்கும் இறைப்பான் (பம்ப்) கருவியை எங்கே வைத்துக் கொள்வது? மிஸ் அமெரிக்கா போட்டியில் கலந்துகொள்ளவும் வேண்டும். கலந்து கொண்டால், நீச்சலுடையும் தரிக்க வேண்டும்.  ’முதலாம் வகை நீரிழிவு’ பாதிப்பில் இருந்து உயிர் காக்கும் கருவியும் வைத்துக் கொள்ள வேண்டும்.

miss_Idaho_Swimsuit_Diabetes_Insulin_Pump

இவரின் செய்கை பலரின் வாழ்க்கையை மாற்றியது. குழந்தை பிறந்ததினால் வயிற்றில் ஏற்படும் பிறப்புச் சுருக்கங்களைக் காட்டுவதற்கு வெட்கப்பட்டோர், இதே போல் நோயினால் அவதிப்பட்டோர் எல்லோருக்கும் ஒரு சுதந்திரச் சின்னமாக மாறியது.

பிரான்சில் எப்போதுமே மதச்சின்னங்கள் இல்லாமல் நாட்டை நடத்துவது குறித்து சிக்கல்கள் எழுந்துகொண்டேயிருக்கின்றன. இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு பர்கா போட்டு அவர்களின் முழு உடலையும் மறைக்கும் ஆடையை ஷரியா சட்டமாக்க வலியுறுத்துகிறது. பிரான்ஸ் நாடோ, இதன் எதிர் பக்கமாக படுதா போட்டுக் கொண்டு குளிக்க வரக்கூடாது என சட்டம் போட பார்க்கிறது.

ஆனால், காலாகலத்திற்கும் நீச்சலுடை என்பது இப்படித்தான் இருந்திருக்கிறதா? இல்லை என்று எவரும் சொல்வார்கள். ஆனால், 1890களிலேயே இருக்கலாமே என்கிறது இஸ்லாம்:
1890_Bikini

1910களில்…
1910_Bikini

பிகினி – முதல் தோற்றம்:
1946_Bikini_Swimsuit

1950களில் இந்த மார்க்கச்சை + ஜட்டி ஆடை, இத்தாலி போன்ற மேற்கத்திய நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கிறது. எவராவது மார்புக்கச்சையும் உள் காற்சட்டையும் மட்டும் அணிந்துகொண்டு வந்தால் தண்டம் விதித்தனர். 1957ல் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் காவல் துறையினர் அபராதம் விதிப்பதை இங்கே பார்க்கலாம்:
Italy_Bikini_ban_Police

இப்போதெல்லாம் ஒலிம்பிக் போன்ற நீச்சல் போட்டிகளில் நீச்சலுடை கூட தங்களின் வேகத்தைக் கட்டுபடுத்துவதாக நினைக்கிறார்கள். எனவே, உடலின் மீது ஆங்காங்கே ஆடையைத் தெளிக்கப் போகிறார்கள். இதெல்லாம் சரிதான்…

ஆனால், நிகோல் கிட்மன் போட்டுக் கொண்ட நீச்சலுடையை, இரண்டாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு விற்கும் வாய்ப்பையும் அந்த மாதிரி நன்கொடை இந்தியாவில் இருக்கும் ஒன்பது ஏழை விவசாயிகளுக்கு ஆளுக்கு ஒரு பசுமாடு கொடுக்கும் திட்டமும் கைநழுவும் அபாயம் இருப்பதை எவரும் யோசிப்பதில்லை.

நான் ஒரு முட்டாளுங்க

தங்களுக்கு விஷயம் தெரியும் என்று நினைப்பவர்கள், எதையும் கற்றுக் கொள்வதில்லை
லாவோ சூ

Knowledge_Overconfidence_dunning-kruger effect

நட்பாஸ் போகிற போக்கில், கீழ்க்கண்ட முன்முடிபை சொல்லிப் போகிறார்:

சமகாலத்தில் நம்மைப் போன்ற முட்டாள்கள்தான் அதிகம், புரிகிறது

இதைத்தானே பெர்ட்ரண்ட் ரஸல் அன்றே சொன்னார்:

”இந்த உலகத்தில் என்ன பிரச்சினை என்றால், முட்டாள்கள் இரும்புப்பிடி முடிவுகளுடனும், அறிவாளிகள் சந்தேகவாதிகளாகவும் இருப்பதுதான்”
Bertrand Russell, The Triumph of Stupidity in Mortals and Others: Bertrand Russell’s American Essays, 1931-1935 (Routledge, 1998), p. 28

Coginitive_Bias_Social_Behavior_Decision_Calvin_Hobbes

பெர்ட்ரண்டு ரஸ்ஸல் சொன்னது ஒரு எண்ணம். வெறும் விவாதம் இதை விலாவாரியாக ஆராய்ந்து, பல பேரிடம் கணிப்பு நடத்தி, அந்தத் தரவுகளைக் கோர்த்து, ஜஸ்டின் க்ரூகர் (Justin Kruger) என்பவரும் டேவிட் டன்னிங் (David Dunning) என்பவரும் கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி நடத்தினார்கள். இந்த சிந்தனையை ஆதாரபூர்வமாக நிரூபித்தார்கள். இதற்கு டன்னிங் – குருகர் விளைவு (Dunning-Kruger Effect) என பெயரிட்டார்கள்.

அது என்ன சொல்கிறது?

1. திறமையற்றவர்களிடம் தங்கள் திறமை பற்றி அளவுக்கதிகமான மதிப்பீடு இருக்கிறது

2. தங்களை விட அதிதிறன் கொண்டவர்களை திறமையற்றவர்கள் சரியாக மதிப்பிடுவதில்லை

3. தங்களின் போதாமைகளையும் தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் அறியும் சக்தியை – திறமையற்றவர்கள் பெற்றிருக்கவில்லை.

4. அந்த மாதிரி திறமையற்றவர்களுக்கு போதிய அளவு பயிற்சியும் முறையாகக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் கொடுத்தால், தங்களின் திறனற்ற தன்மையை புரிந்து கொள்வார்கள்.

DarwinEatsCake_Cartoons_Dunning_Kruger_Effect

இதையே கொஞ்சம் நீட்டித்து,
– கமல் கவிதை எழுதுவதையும்,
– பத்மா சேஷாத்ரி / ஐஐடி மாணவர்கள் எல்லோரும் தங்களை முதல் மாணவர்கள் என எண்ணம் உருவாக்கிக் கொள்வதையும்,
– ஜெயமோகனின் எல்லா நிலைப்பாடுகளும் தெளிவானவை என்று அவர் நினைப்பதையும்
– மகஸேசே விருது குறித்து உலகமே பெருமிதப் படுவதாக சில தமிழ் பாடகர்கள் கருதுவதையும்
– ஏற்கனவே குண்டாக இருக்கும் என் போன்றோரிடம் கிருஷ்ண ஜெயந்தி பட்ஷணம் எடுத்துக் கொண்டாயா எனக் கேட்டால், ‘ரெண்டே ரெண்டு விள்ளல்’ என்று பதில் அளிப்பதையும்
நினைத்துப் பார்க்கலாம்.

டிரம்ப் தேர்தலில் நிற்பதையும், அவருடைய ஆதரவாளர்கள் எப்படி டொனால்ட் டிரம்ப் சொல்வதையெல்லாம் நம்புகிறார்கள் என்பதும் கூட இதே டன்னிங்-க்ரூகர் தாக்கம் என்கிறார் மிச்சிகன் பல்கலை தத்துவப் பேராசிரியர்.

Calvin and Hobbes_Dunning_Kruger_Effect

கபாலியை முன் வைத்து…

Kabali

ஆடையை முன் வைத்து…

Knights of the Round Table – Simple English Wikipedia, the free encyclopedia

ஆர்த்தர் அரசரின் வட்டமேஜையில் பன்னிரெண்டு பேர் இருந்தார்கள். கபாலி அழைக்கப்பட்ட விருந்துகளில் எத்தனை பேர் இருந்தார்கள்?

  1. கபாலியும் தலித் அரசியலும்
  2. Kabali (2016) – Tamil | Karundhel.com
  3. கபாலி – கனவுக்கும் நனவுக்கும் இடையே / கவின் மலர் – | malaigal.com

”ஒரு ரெண்டு வருஷம் இது மாதிரி வீட்டில் நாம வாழ்ந்திருப்போமா?” என்று கேட்கும் கபாலியிடம் குமுதவல்லி இத்தனை ஆண்டுகள், இத்தனை மாதங்கள், இத்தனை நாட்கள் எனத் துல்லியமாய்க் கூறுகிறார். சிறையில் இருக்கும் கபாலிக்குத்தான் நேரம் அதிகம். கம்பி எண்ணுவதோடு சேர்த்து இந்த நாட்களையும் எண்ணும் வாய்ப்பு அவருக்கு அதிகம் இருக்கிறது. ஆனாலும் இது ஓர் ஆண் மனோபாவம்.

பெரும்பாலான ஆண்களுக்கு தேதி மறப்பதும், இப்படியான காலம் எவ்வளவு என்பதை மறந்துவிடுவதுமாக இருப்பார்கள். பெண்கள் ஒவ்வொரு தேதியையும் நினைவு வைத்துக்கொண்டு இருப்பதும், அடுத்து காதலனையோ கணவனையோ எப்போது சந்திக்க முடியும் என்று நாட்களை எண்ணிக்கொண்டிருப்பதும், சேர்ந்திருந்த நாட்களை கணக்கிட்டுக் கொள்வதுமாக கூடுதலான காதலில் திளைக்கும் பெண் மனதை மிக இயல்பாகச் சொல்கிறது இவ்வசனம். இயக்குநர் ரஞ்சித் ரொமான்ஸ் காட்சிகளை உணர்வுபூர்வமாக அமைப்பதில் மூத்த இயக்குநர்களுக்கு இணையானவராக இருக்கிறார். அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி என அனைத்துப் படங்களிலும் அவை மிகச் சிறப்பாகவே அமைந்துள்ளன.

சென்னைக்கு வரும் கபாலியும் மகளும் விடுதி அறையில் தங்குகையில் உடன் வரும் கறுப்பான மனிதரான விஷ்வந்த்தை (அட்டகத்தியில் தினேஷின் அண்ணனாக நடித்தவர்) சந்தேகப்படும் மகளிடம் “முகத்தை வைத்து முடிவு செய்யாதே…” என்கிறார். ஆனால் அவர்தான் இறுதிவரை உதவுகிறார்.

 

clothing_Invisiblia_Sunglasses_Protect_Insulate_Dress_Change

குளிராடியை முன் வைத்து…

Scientists Explain How Clothes Can Make You Smarter : Shots – Health News : NPR

பள்ளி வகுப்பில் அச்சுறுத்தியவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள குளிராடியை அணிந்தவனின் வாழ்க்கை சம்பவங்கள் –

  1. கபாலி: சில கற்பிதங்களை முன்வைத்து | செங்கொடி
  2. சின்ன சின்ன சினிமா: கபாலி – ஓர் அலசல்
  3. கபாலி – சினிமா விமர்சனம் ~ உண்மைத்தமிழன்
  4. வாழிய வாழியவே: ரஜினி.
  5. Paradesi @ Newyork: நியூயார்க்கில் கபாலி !!!!!!!!!!
  6. மின்னற் பொழுதே தூரம்: ஆங் லீயும் டோங் லீயும்: மிஸ் பண்ணின முருகதாஸ்
  7. திரை விமர்சனம்: கபாலி – தி இந்து
  8. அதிரடிக்காரன்: கபாலிக்கு பறக்கத் தெரியாதா?!!
  9. சினிமா சினிமா: கபாலி (2016) – முழுமையான் படம்

பாலய்யாவை முன் வைத்து…

Rajni_Kabaali_Baliah_My_Father_Dalit

பாலய்யா டா! – தி இந்து

 

One_Out_of_Many

பலரில் ஒருவரை முன் வைத்து…

“That my life will be of interest to readers I dare not assume. But it is an unusual one, and for that reason alone, record should be made of it.”
~ from Allison Amend’s Enchanted Islands

 

purusharthas

புருஷார்த்தத்தை முன் வைத்து…

இவ்வுலகில் நான்கு புருஷார்த்தங்கள் என்று பெரியோர்கள் காட்டியிருக்கிறார்கள். அவை அறம், பொருள், இன்பம், வீடு – என்பன.

  1. இவற்றுள் அறமாவது கடமை. அது உனக்கும் உனது சுற்றத்தாருக்கும், பிறருக்கும் நீ செலுத்த வேண்டிய கடமை. “பிறர்’ என்பதனுள் வையகம் முழுவதும் அடங்கும். தொழில்களெல்லாம் நற்பயன் தருமிடத்து அறங்களாகும்.
  2. பொருள் என்பது செல்வம். நிலமும், பொன்னும், கலையும், புகழும் நிறைந்திருத்தல், நல்ல மக்களைப் பெறுதல், இனப்பெருமை சேருதல், இவையெல்லாம் செல்வம். இந்த செல்வத்தைச் சேர்த்தல் மனித உயிருக்கு ஈசன் இட்டிருக்கும் இரண்டாம் கட்டளை.
  3. இன்பம் என்பது இனிய பொருட்களுடன் உயிர் கலந்து நிற்பது. பாட்டு, கூத்து முதலிய ரஸ வஸ்த்துக்களை அனுபவிப்பது. இவ்வின்பங்கள் எல்லாம், தமிழா, உனக்கு நன்றாக அமையும்படி பராசக்தி அருள் புரிக. உன்னுடைய நோய்களெல்லாம் தீர்க. உனது வறுமை தொலைக. நீ எப்போதும் இன்பம் எய்துக.
  4. வீடாவது பரமாத்மாவுடன் அறிவு கலந்து நிற்பது. “வீடு’ என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். மேல் கூறப்பட்ட மூன்று புருஷார்த்தங்களும் ஈடேறிய பெரியோருக்கு ஈசன் தானாகவே வீட்டு நிலையருள் செய்வான். தமிழா, உனது புருஷார்த்தங்கள் கைகூடுக!
    – சி.சுப்பிரமணிய பாரதி

kabai-posters-Style_da

மலேசியாவை முன் வைத்து…

தமிழ்நேசன், தமிழ்மாறன், வீரசேகரன் அனைவரும் இதர பிற்படுத்தப்பட்டவர்களாகவும், கபாலி தாழ்த்தப்பட்ட வகுப்பினராகவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுதான் ரஞ்சித் மீதான குற்றச்சாட்டு.

இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறக்கூடாது என்று இதர பிற்படுத்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள் என்பதையே கபாலியின் கதாபாத்திரம் எடுத்துரைக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.

“நீங்கள் ஆண்ட பரம்பரைடா, இனி நாங்கள் ஆளப் பிறந்தவங்கடா” என்ற வசனம், தமிழக அரசியலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது என்றே குற்றம் சாட்டப்படுகிறது.

அதேபோல், “நாங்கள் கோட்சூட் போட்டால் உங்களுக்குப் பிடிக்காதா, முன்னேறினா உங்களுக்குப் பிடிக்காதுன்னா சாவுங்கடா” என்ற வசனமும், ஒரு தாழ்த்தப்பட்டவர் இதர பிற்படுத்தப்பட்டோரைப் பார்த்தே சொல்லப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

Kabaali_graphics

ரஜினியை முன் வைத்து…

Rajkumar_Muthuveeran

Kabali-shooting-spot-still1-1

கபாலியை முன் வைத்து…

Hatred is the most accessible and comprehensive of all the unifying agents. Mass movements can rise and spread without belief in a God, but never without belief in a devil. -Eric Hoffer, philosopher and author (25 Jul 1902-1983) – The True Believer