Magsaysay For T.M. Krishna: EPiC MAP

a work of formal realism (which I neither condemn nor condone) usually adheres to a particular formula: Exposition informs a person’s Psychology, from which arises their Character, out of which certain Motives emerge, based upon which the character takes Action, from which Plot results (EPiC MAP).
Bonnie Nazdam on the Limits of Cinematic Storytelling

mirror

டி எம் கிருஷ்ணா

1. MS Understood – The Caravan

The myths and misconceptions around India’s most acclaimed musician

2. TM Krishna on why he won’t sing in December sabha

Beyond the little world of art that Carnatic music occupies, what have we, the participants of this mega festival, done for the music? How much effort during the season have we made to bring diverse listeners into the art, take this art to other sections of society?

The Carnatic music in Chennai has become more about the season than about music and this is dangerous for the art. What we see happening in the season is only a symptom of a deeper lack of introspection on the art, its form, access and its integrity.

3.  To sing just with the tanpura has been revealing: Thodur Madabusi Krishna – Times of India

For the first song, the location was a rock in the middle of a waterbody. I went and sat there and said, ‘Give me five minutes’. I just had the tanpura with me. I hummed a few notes and started singing the song that came to my mind. That’s it. Every song in the film was taken in a single take. I didn’t sing twice and there were no retakes to correct any mistakes because that is also part of the idea. What you heard is actually what I sang there. In the movie, you will see me singing a phrase, and then correcting the phrase also. You actually see the artist going through the process of creativity as it is happening within him.

ONE_with_music

4. Between purist and puritan: Unraveling TM Krishna’s musical encyclopaedia | books | Hindustan Times

He loves to, time and again, touch on his core mission of upholding the authentic grammar of the musical form which has “evolved” enough to cause confusion (starting from the spelling: Karnatak, Carnatic, Karnatik?). There is only a fine line dividing the purist from the puritan, and the singer dangerously flirts on the edge. Witness, for instance, questions being raised on the aesthetic value of Raga Dharmavati, much appreciated by many for its melodic soulfulness but described here as “synthetic”.

5. ட்விட்டர்டி எம் க்ருஷ்ணா

6. Interview: TM Krishna | Baradwaj Rangan

7. T.M. Krishna [315] – $.5.00 : Sruti, A Monthly Magazine on Indian Performing Arts.

COVER STORY – T.M. KRISHNA – The voice within by V Ramnarayan: Click here to read more …

8. T. M. Krishna — An Interview

You are described as a singer who stays clear of gimmicks . Would you label yourself as a purist?

Call it purist or whatever but the fact is I am a staunch believer in tradition. Tradition is dynamic, not static. Being purist doesn’t mean you don’t check out other ragas or stifle creativity. Tradition draws a boundary and gives you full freedom to do whatever you want within that framework. Often it is said the artiste gives the audience what it wants. On the contrary you have to decide what to give and so you set the benchmark for yourself.

9. How Do You Solve A Problem Like TM Krishna?

Unlike the world of rock and roll where White musicians from Europe embraced the blues of the Blacks to make it widely acceptable, Tamil Nadu’s musical giants like Illaiyaraja or AR Rahman have reached out and collaborated with Carnatic musicians. They have used classical ragas for melodic compositions, percussion and vintage musical instruments in their film songs. From Carnatic giants like Balamurali Krishna to today’s Sudha Raghunathan or a Bombay Jayashree, Grammy winner Vikku Vinayakaram or a Guitar Prasanna the collaborations between Carnatic musicians and composers for films has only produced wondrous music from the state.

 

Book Focus: A Southern Music: The Karnatik Story

Conversation with Sridala Swami

Hardcover, 1st, 588 pages
Published November 28th 2013 by Harper Collins

Conventionalism and Carnatic Music – Githa Hariharan, T M Krishna at Kerala Literature Festival Kozhikode 2016.

TM Krishna talks about “Living with A Southern Music “as part of the Azim Premji University Colloquium Series.
November 20th, 2014 .

மற்ற வித்வான்களுக்கும் கலைஞர் டிஎம் கிருஷ்ணாவிற்கும் என்ன வித்தியாசம்?

1. Carnatic music is not a candidate in an election: TM Krishna | The Indian Express

Carnatic vocalist TM Krishna, 39, on his decision to stay away from Chennai’s kutcheri circuit from this season, his rejection of the conservative tradition and why not all forms of music will accrue a huge following

2. WHY TM KRISHNA MUST STICK ONLY TO MUSIC | IndiaFacts

Swapan Dasgupta:

Among Nehru’s ‘prejudices’ were ”maharajas, Portugal, moneylenders, certain American ways, Hinduism, the whites in Africa…” The list explains why Nehru was so offensive at the opening of the Ramakrishna Mission Institute in Calcutta, 1961.

There he spoke of ”bogus spirituality”, the absurdity of ”running away from the daily problems of life in the spirituality” — the profundities of undergrad radicalism — and then stalked off. ….Nehru, it was said, ”could be emphatic on a basis of insufficient knowledge”.…..he probably believed that the India of ”cow worshippers and devotees of Ayurvedic medicine and astrology” should be banished from public life……

3. Carnatic music’s successful — can take tough questions now: T M Krishna – Times of India

If i have to learn music, i have to go to a Brahmin. Caste-based discrimination is repugnant to me. But i can’t look away from the fact that this music is the preserve mostly of Brahmins.

I believe we need affirmative action — if any teachers or sabhas spot good non-Brahmin talent, we need to make a push for it. It will only make the art healthy.

There’s no denying that one social group has clung to this music.

4. An artist’s view of politics: Five Scroll columns by Magsaysay award-winner TM Krishna

5. TM Krishna’s challenge to Carnatic orthodoxy – The Social Science Collective :: 

6. T.M. Krishna Doing Things

7. T.M.Krishna – rasikas.org

TMK’s views about the audience, I have seen his indifference and at times down right insulting remarks to the audience–about 2/3 years back during the December season in MA, towards the tail end of the concert he was singing a ragamalika and one of the ragas was not too familiar to one member of the audience who got up to ask what the raga was to which TMK asked apparently in jest(in his opinion)–“You want to know this raga only — So that means you could identify the previous ragas”–he may not have intended to “show” the rasika up but the rasika definitely felt humiliated.

I do not want to take away his talent and concerts-popularity but in my opinion he could be more respectful if not deferential towards the audience.

பிறர் பேட்டிகள், கட்டுரைகள்

1. An Open Letter To T.M.Krishna | Open Letter

you are a larger-than-life musician is evident from your literary and writing skills; your book “A Southern Music: The Karnatik Story” was launched amidst much fanfare by no less a personality than Nobel laureate Amartya Sen! The DVD release with Bombay Jayashri earlier was a unique exercise. You dared to take Carnatic music across to Sri Lanka when things were not too comfortable with the neighbouring country.

2. Say hello to Carnatic Music’s sex symbol :: Tehelka – India’s Independent Weekly News MagazineAkhila krishnamurthy meets TM Krishna in Chennai – Vol 8, Issue 30, Dated 30 July 2011

Son of businessman TM Rangachary and a musicianeducator Prema,

As an adult, he graduated in economics and set tongues wagging when at 21 he married fellow musician Sangeetha Sivakumar, who is five years older. The desire to push boundaries had set in early at the Krishnamurti Foundation India school, an alternative school so wellknown that for generations it has been known as The School. Krishna’s two daughters go there now.

Svanubhava_Carnatic_Music

Krishna is constantly in search of a new project: Svanubhava, a music festival for students he founded with Bombay Jayashri and that he will helm on his own this year onwards; Sampradaya, an organisation that archives south India’s musical traditions and Kalachara Marumalarchi that attempts to revive the temple traditions in Tamil Nadu villages, recreating them as cultural hubs. His baby at the moment is Shabda (the equivalent of TED for Carnatic music) for which he has partnered with musicians RK Shriramkumar and HK Venkatram. – Saayujya the merging

Two years ago at a thematic concert, Krishna requested the organisers not to reveal the theme to the audience. “I sang a love song from the Sangam era, a Kannada poem on winter, a Rabindra Sangeet and Chinnanjiru kiliye (a Tamil song about a mother’s love for a child). At the end, some guessed the theme was rain; others said Rama. The answer was bhakti. That, to me, is surrender,” he says

3. The Proust Questionnaire: ‘I don’t like the idea of virtues’ – T.M. Krishna – The Hindu

If not yourself, who would you be?

Mahatma Gandhi? My, my, what arrogance!!!!!!

4. TM Krishna: A Rebel With(out) a Cause? – R K Raghavan

I am sold to his divine music. We graduated from the same institution, the Vivekananda College in Chennai (Krishna pursued Economics and I majored in Physics). An added problem is that we are ethnically linked; both are TamBrams, that too from the same clannish Iyengar community.

(The writer is a former CBI Director, and a music buff.)

5. ‘Carnatic music is a Brahmin-dominated male chauvinistic world’

He came down heavily on iconic music composer Ilayaraja for using a popular Carnatic music composition with changes in a film. “I don’t have an issue with Carnatic music being used in films, but I don’t like it being called Carnatic because that is not the purpose of that music in the film. If a raga is used for a visual, that is a theatrical expression. Use it the way you want, but don’t call it Carnatic,” he says.

But he sees no dichotomy in his own attempts at “deconstructing” the traditional kutcheri format that Carnatic music lovers hold so dear.

6. Video: Conductor Marin Alsop, How We Listen, Singer TM Krishna | Watch Articulate Online | WHYY Video

7.  T.M. Krishna | Talk | TANK Magazine

Tank I wondered if you could say a few words about Carnatic music and what it means for you.
T.M. Krishna Carnatic music is among the two art-music forms. I use the term art music instead of classical – because I find the word “classical” quite delusional, an unaesthetic way of describing music. So whether it’s Western or whether it’s from India, I prefer to not use classical, but instead I use art music. The two art-music forms are Hindustani music and Carnatic music

The music is based on three elements. The first is the melodic element, the idea of the raga, which to put it very simply is an abstract, melodic identity that has structured itself through generations of connectivity and some amount of habituation, as well as emotional and intellectual construction. That develops through a continuous process of listening, singing, both by the audience and by the musicians. The second element is tala and laya, which is the rhythmic part. Laya is the sense of time and has two elements – like time itself – which is interval and event. The relationship between interval and event and that which lies in-between, is laya. When you construct that relationship into a certain number of beats, say eight counts or ten counts, then you have fixed laya into a framework. This is tala. The third element is text, both linguistic and non-linguistic. Carnatic music is formed of this triangular relationship between text, tala and raga. And depending on how you play with these three elements, the components of these elements, their interactivity, the passages of give and take, as well as the way the musicians allow them to talk to each other, the music unfolds. This is the body and the experience of Carnatic music. 

8. Marghazi Raagam – an interview with T.M. Krishna | Water, No Ice

Have Bombay Jayashri and you performed together before?
T.M.K.:Certainly not for a full-fledged kutcheri. How we first sang together is an interesting story. Jayashri and I were collaborating on a coffee-table book on Carnatic music. We approached the then President of India, Abdul Kalam Azad for the unveiling. He agreed, on the condition that we sing together. It was then that we realized that we hadn’t ever sung together before! So we performed together for an invited audience at the Rashtrapati Bhavan. (The book is called Voices Within, published by Matrka, founded by TM Krishna and Bombay Jayashri, “to create a new platform to present Carnatic music.”)

கர்னாடக இசை கற்றுக்கொள்ள வேண்டும் என யார் அழுகிறார்கள்?- சஞ்சய் சுப்பிரமணியன் பேட்டி

ராகம் பாடும் நேரம் நபருக்கு நபர் வேறுபடுகிறதே. இதில் உங்கள் அணுகுமுறை என்ன?

ஒரே கச்சேரியில் ஒரு ராகத்தை 5 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 10 நிமிடம் பாடுவேன். ஒரு ராகத்தை 20 நிமிடங்களுக்குப் பாடுவேன். இது, எடுத்துக்கொள்ளும் ராகம், அன்றைக்கு சாரீரம் இருக்கும் நிலை, பாடுவதற்கான சூழல் இப்படி எல்லாவற்றையும் பொறுத்து முடிவு செய்யும் விஷயம். இதெல்லாம் ஃபிக்சட் கிடையாது. அரியக்குடி 3 நிமிடம் பாடினார் என்றால் அது அவருடைய சவுகரியம். அவருக்கு அது ஒர்க் அவுட் ஆயிற்று. ஜி.என்.பி. 55 நிமிடம் ராகம் பாடியிருக்கிறார். ஒரே பீரியடில் பத்து விதமாக ராகம் பாடியவர்கள் இருந்திருக்கிறார்கள். மேலேயே பாடிவிட்டுப் போனவர்கள் இருந்திருக்கிறார்கள். கீழேயே பாடிவிட்டுப் போனவர்களும் இருந்திருக்கிறார்கள். மணி அய்யர், ‘கீழே பாடினா பண்டிதர்களுக்குப் பிடிக்கும். மேலே பாடினா பாமரர்களுக்குப் பிடிக்கும்’ என்பார்.

தொடூர் மதுபூசி கிருஷ்ணாவின் எழுத்துகள்

1. An Open Letter from T.M. Krishna to Narendra Modi – The Wire

Mr. Prime Minister, unlike your immediate predecessor you are not a mute spectator, you love to address and impress. We have heard you from Lal Qila, Madison Square garden, Dubai and Silicon Valley, at the home of Google and Facebook. We have seen you being moved by the memory of the hardships faced by your mother. Words, strong and emotional words come to you easily.

2.  Two Voices, One Resonance: How Jinnah and Radhakrishnan Help Us Close Divides – The Wire

Here there is an acknowledgment of the hatred and violence that tore through communities, but Jinnah wants bygones to be bygones. He is unwilling to dwell on the past and dirty himself in its pot holes. He wants people to forgive, forget and move ahead to create a future. Radhakrishnan will of course have nothing of this

Radhakrishnan’s atonement is Gandhiesque, a self-purification, cleansing where the future course of action must be a prayaschita of the past.

3. Myth and reality | The Indian Express

Another invented truism being spread around is that the education system has made people anti-Hindu and pro-religious minorities. Even more laughable is the assertion that leftist academicians with the connivance of western socialist scholars have wiped out Hindu goodness and achievements from our history. If we were to visit the innumerable religious studies, art and language departments around this country, we will find more PhDs that are seeped in Hindu religiosity than of the other kind. But from what the naysayers claim, India by now should have become a mini-Soviet Union, but we are not

4.  Modi and Trump may come from vastly different backgrounds, but in politics they are twins

5. Freebies and movies: Why do the two Dravidian parties have such a hold over Tamil voters?

6. TM Krishna | Scroll.in

 

செய்தி

1. Carnatic musician TM Krishna, social activist Bezwada Wilson among winners of 2016 Ramon Magsaysay award | The Indian Express

40-year-old TM Krishna, who was born in Chennai, has been conferred the award for ‘ensuring social inclusiveness in culture.’

2. T.M. Krishna and the Quest for a Truly Contemporary Art Music – The Wire

 

மகஸேசே கிடைத்த பின் வந்த பதிவுகள்

1. ஜெயமோகன் – சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா

2.  இசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்

கர்நாடக சங்கீதம் ராகங்களாக , கணக்கு வழக்குகளாக கற்றுக்கொள்ள வகுப்புகளும் ஆசிரியர்களும் இருந்தார்களே ஒழிய கர்நாடக சங்கீதத்தை ஒரு கலையாக அணுக, புரிந்துகொள்ள, அதன் அழகியல் நோக்கை அறிந்துகொள்ள எளிய வழிகள் இருக்கவில்லை. சங்கீதத்தில் விற்பன்னர்களாக இருந்தாலும் அதை சங்கீதத்திற்கு வெளியே இருப்பவர்களுடன் கலைச்சொற்கள் சாராது விளக்க பலரால் முடிந்ததில்லை.

இந்த ஒரு தருணத்திலேயே நான் டி.எம்.கிருஷ்ணா வை கண்டடைந்தேன் , அவரின் கர்நாடக இசை குறித்த ஒரு முழு நீள விரிவுரைத் தொடரின் மூலம்.இதில் அவர் கர்நாடக சங்கீதத்தின் அமைப்பு, வடிவம், அழகியல்,கணக்கு வழக்குகள், கணக்கு வழக்குகள் ஏன் முக்கியம் அவை முக்கியமல்லாமல் போகும் இடம் எது, கற்பனைவளம், படைப்பூக்கம் அதன் பிரயோகம் என்பது பற்றி எல்லாம் செய்முறை விளக்கத்தோடு விளக்கியிருப்பார். இதுவே எனக்கு மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. முழுத்தொடரும் கிட்டத்தட்ட 40 சிறு உரைகளால் ஆனது.

3. Rajesh Kumar – விருது சர்ச்சை டி.எம்.கே சர்ச்சை குறித்து நீங்கள்…

ஜெயமோகன் பதிவுதான் சர்ச்சைக்கு மூலம் என்று அறிந்ததும் அதை முதலில் படித்தேன். கர்நாடிக் இசை குறித்து எதுவும் தெரியாது என்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு பிறகு அதை குறித்து எழுதிய ஜெயமோகனே டிஸ்க்ளைமர் கொடுக்கும் அளவு நிலைமை கைமீறி போயிருக்கும் நிலையில் எனக்கும் கர்நாடிக் சங்கீதத்துக்கும் இருக்கும் நீண்ட தொடர்பை முதலில் நான் விளக்கிவிட்டு கருத்து சொல்வதே நல்லது என்பதால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன்.

எனக்கு முதன் முதலில் கர்நாடிக் சங்கீத பரிச்சயம் என்றால் அது சங்கராபரணம் திரைப்படம் மூலம்தான் என்றால் அது மிகையாகாது.

4.  TM Krishna gets Magsaysay award! — Medium : 

கொத்தனார் நோட்ஸ் – elavasam

  • Sumanasa Foundation, mentioned in the citation, helps music students from rural places and bring music to special children as part of their therapy. Laudable causes indeed.
  • I do not feel it is wrong for a performer to experiment like he does on stage and agree not every experimentation would be to the liking of everyone. But it is his freedom to do so and I do not think the art would suffer from it.
  • I have been to some of the concerts he has taken to fishermen villages and I have seen the attendees happy not because they are able to appreciate the art but because they felt included.

5. TM Krishna: Carnatic music’s ‘stunt’ man – Livemint

Krishna has tried to explain why he is breaking the mould. The kutcheri format, as it exists today, is less than 100 years old, he correctly says. It was formalized in the 1920s by Ariyakudi Ramanuja Iyengar to follow a standardized format. First, a brisk varnam; then an invocation on Lord Ganesha; then a few fast-paced krithis or songs without the improvisation; then a heavy piece in a “ghana” ragam or weighty ragam like Kambodhi, Kalyani, or Bhairavi. Then the centrepiece of the concert or the RTP—Ragam, Thanam, Pallavi, which is raga improvisation followed by swara-play, followed by the song in a ragamalika or garland of ragas; then the virtuoso, thani avarthanam, display by the accompanying drummers; then the lighter fare called thukkada, which includes bhajans, abhangs, padhams, javalis and the like.

6. A contrarian world: Stravinsky At Harvard, T.M.Krishna At CII And ‘Semmangudi Mama’. Aravindan Kannaiyan

7. A contrarian world: T.M.Krishna’s Magsaysay Award: A Rebuttal to Jeyamohan and the Hindutva Brigade

 

பிற எதிர்வினைகள்

Nothing Can Bind Us Together Quite Like Music – Part 2 – watchingthewheelsweb

முதலில் கர்னாடக இசை நம்முடைய கல்ச்சுரல் சிஸ்டத்திலிருந்து வெளியே வந்து Curriculum ஆக அமைய வேண்டும். தொன்மையான பாரம்பரிய இசை இந்த இசை. எவ்வளவு பேர் ஒரு கர்னாடக இசை பாடலைப் பொறுமையாகக் கேட்கிறோம். நாம் எப்போது கடைசியாக ஒரு கர்னாடக இசைப் பாடலைக் கேட்டோம் என்று யோசித்துப் பாருங்கள். விடை கிடைக்கும்,

ரமேஷ் விநாயகம் உருவாக்கிய கமகா பாக்ஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீர்களா? அவருடைய இருபத்தைந்து வருட ஆராய்ச்சியின் பலன். இது என்ன என்று தெரிந்துகொள்ள

Curve1.Ramesh Vinayakam unlocks the gamaka – Times of India

“Isn’t it a bit unfair,” starts off Ramesh Vinayakam, “that Western music is able to pen down every note on paper while Carnatic music can’t?”

2. Research – Ramesh Vinayakam

3. Music, out of the box – The Hindu

4. Curves and Lines of Carnatic Music in a Box – The New Indian Express

5. Box of musical goodies – Chennai – The Hindu

6. You can make anyone play music by reading the gamaka box 

ஜடாயுவின் பதில்

1. Magsaysay For T.M. Krishna: Citation An Insult To Carnatic Music – Swarajya

டி.எம்.கிருஷ்ணாவின் அரசியல் நிலைப்பாடுகளை விமர்சிப்பது வேறு. அவரது இசையையும் கலையையும் மதிப்பீடு செய்வதென்பது முற்றிலும் வேறு.

இசையை ரசிப்பதற்கு ராகங்களின் இலக்கணங்கள் தெரிந்திருப்பதோ அல்லது பிரித்து மேய்வதோ அவசியமில்லை தான். ஆனால் ராகதேவதைகளின் பிரசன்னத்தை அபோதபூர்வமாகவாவது உணராமல் இந்தியச் செவ்வியல் இசையில் மனம் லயித்தல் என்பது சாத்தியமே அல்ல. “பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல், கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்” என்று உவமையாகக் குறள் எடுத்தாளும் அளவுக்கு ஆதாரமான விஷயம் அது.

2. The concert at Odukathur Mutt, Ulsoor was part of Utsav, Gokulashtami celebrations by SGBS Trust

“She the wavy ocean of nectar, She, the innermost being in the inner heart…” (sudhA tarangiNi, antarangiNi).. the lines that T.M. Krishna so beautifully rendered in ‘neraval’ perhaps describe the overall musical experience of the wonderful concert last evening. ‘mAye tvam yAhi’, this Kriti of Dikshithar with its overall mystical, meditative import, set to the enigmatic Raga Tarangini, was presented by TMK with the full depth and feel that it deserved.

Breaking of convention and interesting novelties have become so much the ‘norm’ in TMK’s performances that people come with such an expectation.. and they almost never go back with disappointment. The earnest Rasika always enjoys the music, irrespective of the ‘rebel’ elements (or the lack of them). Last night was no exception.

He sang ‘kanaka shaila vihArini (punnAga varAli) as the opening piece, in a relaxed pace. That was followed up with a Yamuna Kalyani Alapana and ‘krishna nee begane baro’ in *violin* for about 30+ minutes by Sriram Kumar ! The audience really got cheered up with this splendid violin treat, totally unexpected, it appeared. Then TMK sang a nice thAnam and the javali ‘adi neepai marulu konnadhi’ in the same Raga, (thankfully :))

A glorious Kedara Gowla Alapana, followed by “Thulasi Bilava” of Thyagaraja followed. The neraval around “uramuna mukhamuna shiramuna bhujamuna – karamuna nEtramuna caraNa yugambuna” was wholesome, as if one can feel the Raga Devata’s full presence from head to toe, with every one of Raga’s limbs shining. For Kalpana Swaram landings, he chose the phrase ‘paramAnandamutO’ in the next line in the lyrics – great aesthetic sense. The Thani Avartanam by Manoj Siva (Mridangam) and Anirudh Athreya (Khanjira) added luster to the piece.

Bharathiyar composition suTTum vizhi chuDar thAn came in a vibrant Ragamalika (Bilahari, Bhairavi, Sama, Vasantha) expressing emotions of joy, throbbing and longing in line with the highly romantic lyrics.

There was never ever a single dull moment in the entire concert. TM Krishna is undoubtedly an exemplary Artist whose music is engaging and absorbing and leaves you spellbound, literally. As a Rasika, these are really my feelings, though I find his writings an opinions on sociopolitical matters totally shallow, misinformed and at times even crooked.

TM Krishna’s overall personality, indeed is an enigma.

 

மகஸேஸே விருது பெற்றவர்கள் – பட்டியல்

Emergent Leadership

Uncategorized

Government Service

Public Service

கர்னாடக இசைக் கல்விமுறைகள்

லெக்சர் டெமான்ஸ்டிரேஷன்கள்

எஸ் சௌம்யா

சுகுணா வரதாச்சாரி

சஞ்சய் சுப்ரமணியம்

தாளமும் சப்தங்களும் – கோட்பாடு

பாடங்கள்

சித்ரவீணா என் ரவிகிரண்

 

 

 

 

India Discovery Center: இந்திய புராதன புலப்பாட்டு மையம்

நேற்று இந்தியா டிஸ்கவரி செண்டர் (இந்திய புராதன புலப்பாட்டு மையம்) நடத்திய விழாவிற்கு சென்றிருந்தோம். அந்த நிகழ்வில் இருந்து சில காட்சிகள்:

ஒளிப்படத் தொகுப்பு

பேட்டி

இந்த மையம் ஆரம்பிப்பது குறித்த நேர்காணலை இங்கேக் கேட்கலாம்:

நிகழ்வுகள்

செய்திக் குறிப்பை இங்கே வாசிக்கலாம்: Launch Of “India Discovery Center” (IDC) In Greater Boston

அவர்களின் வலையகம் இங்கே இருக்கிறது: India Discovery Center – Home

ஏன் துவங்குகிறார்கள்?

  1. அமெரிக்காவின் ஒவ்வொரு நகரத்தில் யூதர்கள் போன்ற சிறுபான்மையினருக்கு கலாச்சார நடுவகங்கள் இருக்கின்றன. அது போல் இந்தியருக்கும் உருவாக்குகிறார்கள்.
  2. அடுத்த தலைமுறையினருக்கு நம்முடைய மூதாதையர் குறித்த விழிப்புணர்வையும் பண்டைய பெருமையையும் எடுத்துரைக்கப் போகிறார்கள்.
  3. இந்து மதத்தினர், இஸ்லாமியர், கிறித்துவர், என நம்பிக்கை சாராமல் அனைவரும் ஒன்றுகூட ஒரு இடம் தேவை.

எப்படி அமைக்கப் போகிறார்கள்?

  • கோவில்களை நிறைய கட்டி இருக்கிறோம். ஆனால், இது மதம் அல்லாத, சமயம் சாராத முயற்சி.
  • வட இந்தியர்கள் கூடும் இடம், தமிழர்கள் ஒன்று சேரும் சங்கம் என்றெல்லாம் இருக்கும். இது தெற்காசியருக்கான பொது மையம்.
  • சிந்து சமவெளி நாகரிகம், சரித்திரம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்ப வளர்ச்சி, என பன்முகங்களை 10,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் துவங்கி, இந்தக் கால இன்ஃபோசிஸ் வரை பதிவு செய்து அனைவருக்கும் அறிமுகம் செய்யப் போகிறார்கள்.

நீங்கள் என்ன செய்யலாம்?

  • இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் நண்பர்களிடமும் நெருங்கியவர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.
  • உங்கள் அலுவலில் பேசி, பொருளோ, பணமோ, நிரலியோ மற்ற உதவியோ பெற்றுத் தாருங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு இந்த மாதிரி இடங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்

NBA

கடவுள் களமிறங்கி விளையாட வந்தால் தோற்க முடியுமா? 1983ல் கிரிக்கெட் என்னுடைய மதம்; அப்போதைய கடவுள் என்றால் மேற்கிந்தியத் தீவுகள் அணி. 2016ல் இப்போதைய மதம் கூடைப்பந்து; இப்போதைய கடவுள் என்றால் கோல்டன் ஸ்டேட் கூடைப்பந்தாட்ட வீரர்கள்.

1975இல் கோப்பையை வெல்லும் அணி, 1979இல் கோப்பையைத் தக்க வைத்துக் கொண்ட அணி, 1983இல் இறுதிச் சுற்றில் ஆடுகிறது. எதிரணியான இந்தியாவோ கொஞ்சம் போல் சோணி. இரண்டு தட்டு தட்டினால், பொத்தென்று வீழ்ந்துவிடுவார்கள். உள்நாட்டுக் குழப்பங்களும் உண்டு. முன்னாள் அணித் தலைவர் கவாஸ்கர், இந்நாள் தலைவர் கபில் என இரண்டு பேருக்கும் நிறையவே உராய்வுகள் உண்டு. இது வரை இறுதிச்சுற்றுக்கு எல்லாம் பெரிய அளவில் தகுதி பெறாத அணி, எல்லாவிதத்திலும் தலைசிறந்த, அனுபவம் மிக்க, போஷாக்கான மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. கோப்பையை வென்றது.

கிட்டத்தட்ட அதே போல் ஒரு நிகழ்வு அமெரிக்க என்.பி.ஏ (NBA) கூடைப்பந்தாட்டத்தின் இறுதியிலும் நடந்திருக்கிறது. ஒரு பக்கம் கலிஃபோர்னியாவின் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் (Golden State Warriors) அணி. அவர்களுக்கு எதிராக க்ளீவ்லாந்து நகரத்தை தாயகமாகக் கொண்ட கவாலியர்ஸ் (Cleveland Cavaliers) அணி. 83ஆம் ஆண்டின் மேற்கிந்தியத் தீவுகள் போல் திறமையும் துடிப்பும் கொண்டவர்கள் கலிஃபோர்னியாக்காரர்கள். கபில் தேவும் காவஸ்கரும் பூனையும் நாயுமாக உர்புர்ரென்று உரசிக் கொள்வது போல் க்ளீவ்லாந்து அணியில் கெவின் லவ் என்பவரும் அணியின் நாயகன் லெப்ரான் ஜேம்ஸும் கொஞ்சம் போல் உரசிக் கொள்பவர்கள். சென்ற வருடம் 2015 இறுதிப் போட்டிகளில், இதே க்ளீவ்லாந்து அணியை குப்புறப் போட்டு சாத்து சாத்தென்று மொத்தி, வீட்டுக்கு அனுப்பி, கோப்பையை கைவசம் வைத்திருப்பவர்கள் கலிஃபோர்னியா மாநில கோல்டன் ஸ்டேட் வீரர்கள்.

இந்த 2016ஆம் வருடமும் இதே இரண்டு அணிகள் இறுதிச்சுற்றுக்கு முன்னேறின. கடைசிப் போட்டியில் மோதிக்கொண்டன. திறமையை பொறுமை வென்றது. நம்பவியலாதது நடந்தேவிட்டது. மயிரிழையில் ப்ரெக்ஸிட் ஜெயித்தது போல், நூலிழையின் மைக்ரோ துளியில் லெப்ரான் ஜேம்ஸின் க்ளீவ்லாந்து வெற்றிக்கோப்பையைத் தட்டிச் சென்றது.

க்ளீவ்லாந்து என்றாலே ஏதோ பாவப்பட்ட நகரம் எனச் சொல்லலாம். கடந்த ஐம்பத்தி இரண்டு ஆண்டுகளாக இவர்கள் எந்தக் கோப்பையையும் வெல்லவில்லை. எந்தப் போட்டியிலும் முதலிடத்தைப் பெறவில்லை. அமெரிக்காவின் ஈசானிய மூலையாக, வடகிழக்கில் ஒதுக்குப் புறமாக இருக்கும் இந்த நகரத்திற்கு எல்லாவிதமான விளையாட்டு அணிகளும் இருக்கின்றன. அமெரிக்க கால்பந்திற்கு என க்ளீவ்லாந்து பிரௌன்ஸ், பேஸ்பால் ஆடுவதற்கு இந்தியன்ஸ் என பல முன்னணி ஆட்டக்காரர்களைக் கொண்ட பணக்காரக் குழுக்கள் இருந்தாலும், அந்தக் குழுக்கள் எல்லாம் இடறிக்கொண்டே இருந்தன. தாயத்துக் கட்டிக்கொள்ளாத குறையாக இதற்கென்று பல்வேறு காரணிகளை க்ளீவ்லாந்துக்காரர்கள் உண்டு செய்தார்கள்.

Chief_Wahoo_Sports_Native_Americans_Cleveland_Indians_logoஅமெரிக்காவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை பகிடி செய்யுமாறு பேஸ்பால் அணியின் முத்திரை இருக்கிறது. சமூக ஆராய்ச்சியாளர்களும் பழங்குடி இந்தியர்களும் இந்த இலச்சினைக்கு ஆட்சேபணை தெரிவித்தார்கள். முதற்குடி இந்தியர்களைக் கிண்டல் செய்வது போல் சின்னம் வைத்திருப்பதால்தான் பேஸ்பால் போட்டியில் வெல்வதில்லை என்பதை ஒரு காரணமாகச் சொல்கிறார்கள். கடந்த ஐம்பதாண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும், க்ளீவ்லாந்து இந்தியன்ஸ் அணியின் பேஸ்பால் பருவகால துவக்க ஆட்டத்தின் போது, இயலிட அமெரிக்கர்கள், “இந்தியன்ஸ்” என்னும் பெயரை மாற்றி வைக்குமாறு போராடுகிறார்கள். இருந்தாலும், மக்களின் மனதில் பதிந்துபோன பெயர் என்னும் காரணத்தைச் சொல்லி, அதை மாற்றுவதற்கு அணியின் முதலீட்டாளர்கள் தயாராக இல்லை.

இது பேஸ்பால் அணி. கூடைப்பந்தாட்ட அணிக்குத்தான் கவாலியர்ஸ் — குதிரைவீரர்கள் என்னும் சாதாரணப் பெயர்தானே? அவர்களால் ஏன் வெல்லமுடியவில்லை என்னும் கேள்வி நிலைத்து இருந்தது. இந்த சமயத்தில்தான் விடிவெள்ளி, சூப்பர் ஸ்டார், தளபதி லெப்ரான் ஜேம்ஸ் அணியில் சேர்ந்தார்.

எல்லோரும் கல்லூரி முடித்த பிறகுதான் என்.பி.ஏ. அணிகளுக்கு ஆடப் போவார்கள். ஆனால், பள்ளிக்கூடத்தில் இருந்து நேரடியாக, வெறும் 19 வயதில் அதிரடியாக க்ளீவ்லாந்து கவாலியர் அணிக்கு லெப்ரான் ஜேம்ஸ் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்தான் ரட்சகர், நமக்குக் கோப்பையைத் தரப் போகும் நாயகர் என்று க்ளீவ்லாந்துக்காரர்கள் உறுதியாக நம்புகிறார்கள். லெப்ரான் ஜேம்ஸும் ஏழாண்டுகளாக க்ளீவ்லாந்து கவாலியர்களுக்காக ஆடிப் பார்த்தார். மற்ற அணிகளின் பணவீச்சுக்கு முன்னால், இவரின் திறமை எடுபடவில்லை. என்னதான் அர்ஜுனன் போல் உயிரைக் கொடுத்து ஆடினாலும், பக்கபலமாக பீமன் தேவை. ரதசாரதியாக கிருஷ்ணர் தேவை. நேரம் பார்த்து நாள் குறிக்க சகாதேவன் வேண்டும். தலைமைப் பொறுப்பெடுத்து வழிகாட்ட தர்மர் வேண்டும்.

இந்த மாதிரி சரியான சக ஆட்டக்காரர்களும் பயிற்சி அளிப்பவர்களும் தகவல் தரவு ஆராய்ச்சியாளர்களும் உடற்பயிற்சியாளர்களும் க்ளீவ்லாந்தில் கிடைக்கவில்லை என்பதால், செழிப்புமிக்க மியாமி அணிக்குத் தாவுகிறார். அதாவது, நாம் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறோம். நாம் நன்றாகத்தான் வேலை பார்க்கிறோம். வேலைக்கேற்ற சம்பளமும் கைநிறைய கிடைக்கிறது. மரியாதையும் நிறையக் கிடைக்கிறது. ஆனால், இந்த இடத்தில் வேலை பார்க்கிறோம் என்று வெளியே நாலு பேரிடம் சொன்னால், கேலியாகப் பார்க்கிறார்கள். உள்ளூரில் மட்டும்தான் பெருமை; நாலு தெரு தாண்டினால், நம் கண் முன்னாடியே கையாலாகாதக் கும்பல் என்று கிண்டலும் கேலியும் மட்டுமே கிடைக்கிறது. இதைத் துடைத்தெறிய மியாமிக்கு மாறிப் போகிறார் லெப்ரான் ஜேம்ஸ். வந்த கையோடு இரண்டு முறை கோப்பையை வெல்கிறார் லெப்ரான்.

ஊர் வாய் சும்மா கிடக்குமா?

மியாமி வந்தத்தால்தான் லெப்ரான் ஜேம்ஸால் கோப்பைகளை வெல்ல முடிகிறது என்கிறார்கள். க்ளீவ்லாந்திலேயே இருந்து கெலித்தால், அது பெருமை. அக்ரோணி சேனையை வைத்துக் கொண்டு அதன் பின் பதுங்கிக் கொண்டு கோப்பையை வெல்வதற்கு லெப்ரான் ஜேம்ஸ் எதற்கு! என ஊர் அவல் மெல்ல ஆரம்பிக்கிறது.

மீண்டும் தாயகம் திரும்பி க்ளீவ்லாந்திற்காக ஆட ஆரம்பிக்கிறார். சென்ற வருடம் இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றார். இந்த ஆண்டு, இறுதிப் போட்டில் வென்றே விட்டார்.

அதுவும் எப்பேர்ப்பட்ட அணியை வென்றிருக்கிறார் என பட்டியம் சொன்னால்தான் க்ளீவ்லாந்து கவாலியர் அணியின் பெருமையும் லெப்ரான் ஜேம்ஸின் இமாலயச் சாதனையும் புலப்படும்.

இதுவரை ஒரு சில தடவை மட்டுமே ட்விட்டர் வலையகம் படுத்திருக்கிறது. எப்போதும் துடிப்புடன் இயங்கும் டிவிட்டர்.காம் இணையத்தளம் கலிஃபோர்னியாவின் கோல்டன் ஸ்டேட் இறுதியாட்டத்தின் போது ரசிகர்களின் ட்விட்டுகளுக்கு ஈடுகொடுக்க இயலாமல் சுணங்கிவிட்டது. அந்த அளவு வெறித்தனமான கோடானுகோடி பார்வையாளர்களைக் கொண்ட அணி.

NBA_Teams_Fans_Watch_Ads_Finals_Attendance_Cities

இவ்வளவு ரசிகர்கள் இருப்பது எப்படி முக்கியத்துவம் ஆகிறது? அதிக அளவு மக்கள் பார்க்க பார்க்க தொலைக்காட்சியில் துவங்கி செல்பேசி திரைகள் வரை விளம்பரங்கள் விற்கலாம். அதுவும் கலிஃபோர்னியா போல் ஜனத்தொகை அதிகம் இருக்கும் இடங்களில், இன்னும் நிறைய பேர், இந்த ஆட்டங்களைத் தொடந்து பார்ப்பார்கள். அமெரிக்காவின் பணக்காரர்கள் அதிகம் வாழும் இடம் கலிஃபோர்னியா. சிலிக்கான் வேலி, ஹாலிவுட் என அங்கேதான் மூளையும் ஜிகினாவும் ஒன்று சேர்ந்து கோலோச்சுகின்றன. அது போன்ற பெரும் மக்கள்திரள் கூட்டம் கூட்டமாக இந்த அணியின் பின் நிற்கிறார்கள்.

இப்பொழுது எனக்கிருக்கும் ஒரே குழப்பம் ஒன்றுதான். பாதி மைதானத்தில் இருந்து பந்தை விட்டெறிந்தாலும் கூடைக்குள் விழவைக்கும் க்ளே தாம்ஸன் (Clay Thompson) + முகத்தில் கை வைத்து கண்ணை மறைத்தாலும், பந்தை லாவகமாக எதிரணியில் கை விரல் இடுக்கில் பாயவைத்து சிக்ஸர் போல் மூன்று மூன்றாக கோல் போடும் ஸ்டெஃப் கரி (Steph Curry) என்னும் திறமைமிக்க இரட்டையர் உள்ள அணி கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ். அவர்களிடம்தான் பணபலமும் இருக்கிறது. அது தவிர அமெரிக்காவின் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட மாநிலமும் பார்வையாளர்களும் விளம்பர வலிமையும் அங்கே இருக்கிறது. இப்படி எல்லாவிதமான சாமுத்ரிகா இலட்சணங்களும் இருக்கும்போது க்ளீவலாந்து கவாலியர்ஸிடம் எப்படித் தோற்றார்கள்?

இப்போது நீங்கள் புதிய மதத்தையும் அதன் தற்காலக் கடவுளையும் அதற்கான சாத்தானையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இப்போதைய மதம் என்பது ”தரவு”. அதன் கடவுளாகக் கருதப்படுபவர் “பகுப்பாய்வியல் நிபுணர்”. கடவுள் என்றால் சாத்தான் இருக்கத்தானே வேண்டும்? சாத்தானாக சூதாட்டத்தை, லாஸ் வேகாஸ் சாதக பாதக விகிதாச்சாரங்களை நிர்ணயிப்பவர்களை, விளையாட்டின் போக்குகளை ஒழுங்குபடுத்தும் சூத்திரதாரிகளாகச் சொல்லலாம்.

ஒரு ஆட்டக்காரரை எப்படி வீழ்த்தவேண்டும் என்பதை இந்த தகவல் தரவுகள் ஆராய்கின்றன. எப்படி இவரை முற்றுகையிட்டால் எவ்வாறு சறுக்குவார் என்பதையும் எந்த முட்டியில் எங்கனம் அடித்தால் கதறுவார் என்பதையும் எப்படி அவரை திட்டினால் பயமுறுவார் என்பதையும் கணினிகள் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றன. தரவு அறிவியலாளர்கள் இதௌ துருப்புச்சீட்டாக, ஆட்டத்தின் கடைசி நொடிகளில் பயன்படுத்துகிறார்கள். எப்போதும் உபயோகித்தால், அதற்கான மாற்றுகளை எதிராளி கண்டுபிடித்துவிடுவார். யார் யாருடன் அணி சேர வேண்டும், எவ்வாறு பந்தை திசை திருப்ப வேண்டும், எப்படி ஏமாற்ற வேண்டும், எவ்வாறு அடி வாங்கியது போல் கதற வேண்டும் என்பதை எல்லாம் வகுப்பெடுத்து நடிக்கவும் இடம் பொருள் ஏவலறிந்து பாயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

உங்கள் திறமையை நீங்கள் நம்பலாம். ஆனால், எப்போது உங்கள் திறமை பளிச்சிடுகிறது என்பதை தகவல்கள் காட்டிக் கொடுக்கும். எவ்வாறு திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்து, ஒரு குதிரை மீது மட்டும் பணம் கட்டி மோசம் போகாமல், பல குதிரை மீது சின்னச் சின்ன பணயங்கள் வைத்து பெரிய பந்தயங்களில் ஜெயிப்பது என்பது தரவு பகுப்பாய்வின் முதலாயக் கடமை.

இதன் இன்னொரு பக்கமாக எப்போதுமே வென்று கொண்டிருந்தால் (அல்லது தோற்றுக் கொண்டிருந்தால்), அந்த அணி மீது ஒரு அலுப்பு வந்துவிடும். ரசிகர்களின் நீடித்த ஆதரவு வேண்டும். அதே சமயம் அந்த ரசிகரின் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் தன் அணி ஜெயிக்குமா / தோற்குமா என்னும் ஊசலாட்டத்திலேயே கழிக்க வேண்டும். அப்போதுதான் அவர் எப்போதும் தொலைக்காட்சியையும் திறன்பேசியையும் கவனிப்பார். தன்னுடைய அணியின் சட்டையை, தொப்பியை வாங்குவார்.

மூன்றாவதாக, ஒருவருக்கு எப்போது சோர்வு ஏற்படுகிறது? எப்போது கால்களில் சுணக்கம் உண்டாகிறது? எத்தனை மைல் ஓடியபிறகு ஓய்வு தேவை? எவர் அருகில் வந்தால் இதயத்துடிப்பு அதிகரித்து, ஆட்டத்தில் ஸ்ருதி விலகுகிறது? எப்போது வேர்வை அதிகரித்து பதற்றம் உண்டாகிறது? அதை நீக்க எவரை அவருக்கு உறுதுணையாக்கலாம்? இதெல்லாமும் தகவல் தரவு ஆராய்ச்சி நிரலியின் முடிவுகள் மூலம் ஆராயலாம்.

இவ்வளவு தகவல்கள் கொடுத்து அதன் அடிப்படையில் முடிவெடுத்தாலும், தனி மனிதனின் ஆற்றலின் உச்சகட்ட வெளிப்பாடாக இருந்தாலும், கால்பந்து போல் கூடைப்பந்தும் கூட்டணி ஆட்டம். தனியாளாக தோரணம் கட்ட முடியாது. கோப்பையை வெல்ல முடியாது. தன்னை நோக்கி பலர் முற்றுகையிடப் போகிறார்கள் என்பதை உணர்ந்தவுடன் தன்னுடைய சகாவிற்கு பந்தைக் கொடுத்துவிட வேண்டும். அடுத்தவரின் மீது நிறைய நம்பிக்கையும் அவர்கள் சிறப்பாக ஆடுவதற்கான களமும் அமைத்துத் தர வேண்டும். நீங்கள் மட்டும் அற்புதமாக ஆடினால், அணி தோற்கும். அதை லெப்ரான் ஜேம்ஸ் நன்கே உணர்ந்திருந்தார்.

பந்தைக் கூடைக்குள் அமுக்கு வருவது போல் பாய்ந்து வருவார். உடனடியாக அவரை மூன்று வீரார்கள் எல்லாப்புறத்திலும் பாதுகாத்து பந்தை அவரிடமிருந்து அபகரிக்க ஓடி வருவார்கள். அவர்கள் எல்லோரும் தன்னுடைய சகவீரர்களை விட்டு தூர விலகி தன்னை மிகநெருங்கிய பின், பந்தை தன் அணிக்காரருக்கு தூக்கியெறிவார். சக அணிக்காரர் கூடைக்குள் பந்தை ஆற அமர உள்ளே தள்ளுவார். லெப்ரான் ஜேம்ஸின் ஸ்கோர் ஏறாது. எதிரணிக்காரருக்கு சோர்வும் குழப்பமும் எகிறும். லெப்ரான் ஜேம்ஸின் சாதனைப் பட்டியல் எண்ணிக்கை அதிகரிக்காது. ஆனால், தன் அணி வெற்றிப்பாதையில் ஒரு அடி எடுத்து வைத்த திருப்தி கிடைக்கும்.

பிறருக்கு என்ன தேவை என்று உணர்ந்து அதை உணர்த்துவதில்தான் வெற்றியின் சூட்சுமம் இருக்கிறது.

மூன்று ஆட்டம் தோற்று, கிட்டத்தட்ட தோல்வியின் வாயிலில் நிற்கும் தருணத்தில், லெப்ரான் ஜேம்ஸின் தோழர் அவருக்கு முகமது அலியின் ஆட்டத்தைப் போட்டுக் காட்டுகிறார். பதினைந்து சுற்று ஆட்டம். முதல் சுற்றுகளில் எங்கு பார்த்தாலும் அடி வாங்குகிறார் முகமது அலி. எதிராளி சோர்வுறுவார் என்பது மட்டுமே அலியின் நம்பிக்கை. ஆனால், அப்போதும் அசராமல் எதிராளியின் மூளைக்குள் புகுந்து உளவியல் விளையாட்டையும் முகமது அலி விளையாடுகிறார். தன் திறமையை காண்பிப்பதன் மூலம், சொற்போரின் மூலம், பொறுமையின் மூலம் அலி இறுச்சுற்றில் வென்று நிற்கிறார். அது லெப்ரானின் தேவை.

இதே போல் தன் கூட்டாளிகளுக்கு என்ன தேவை என்பதை உணர்த்த ஸ்டீவ் ஜாப்ஸ் உரையை லெப்ரான் ஜேம்ஸ் துணைக்கழைக்கிறார். ( http://www.youtube.com/watch?v=UF8uR6Z6KLc )

வாழ்க்கை வேண்டுமென்றே உங்கள் தலையைக் குறிபார்த்து செங்கல் கொண்டு தாக்கும். நம்பிக்கை இழக்க வேண்டாம். நான் ஆப்பிள் நிறுவனத்தை விட்டு தூக்கிக் கடாசப்படாமல் இருந்தால் என் மனைவியை கண்டுகொண்டு இல்லறத்தைத் தெரிந்துகொண்டிருக்க மாட்டேன். பிக்ஸார் நிறுவனத்தைத் துவக்கியிருக்கமாட்டேன். உங்களுக்கு எதுபிடிக்கிறதோ அதைத் தொடர்ந்து மும்முரமாக செய்வதே சுகம்! இது போதும் என்று பாதி வழியில் சமரசம் செய்து கொள்வதோ பிடிக்காத வேலையைச் செய்து நரகத்தில் உழல்வதோ வேண்டாம். மனதுக்கு ரம்மியமானதை ஒரு துளி சலிப்பு கூட இல்லாமல் கடைசி முழம் ஏறி முழுமையடையும் வரை தொடர்ந்து முட்டி மோதி பயணியுங்கள்

உடலிலும் இதே முயற்சியைக் கடைபிடித்து சாகசம் செய்துவிட்டார் லெப்ரான்.

Lebron_James1

மேலும்:

  1. NBA playoffs 2016 – How LeBron James and the Cleveland Cavaliers lifted the curse
  2. LeBron’s dreams come true with NBA title for Cleveland
  3. TrueHoop presents – LeBron struggles to bring Heat culture to Cavs
  4. The Draymond Conspiracy — The Ringer

 

 

AI – part 2

எங்கே பார்த்தாலும் கம்ப்யூட்டரின் உபயோகம் இருக்கிறது. டிவிக்குள் இருக்கிறது. கை கடிகாரத்தில் இருக்கிறது. காரில் இருக்கிறது. இப்பொழுது அந்த கணினிகள் மெல்ல மெல்ல புத்திசாலிகளாகவும் நுண்ணறிவு கொண்டதாகவும் மாறும் காலம். எப்பொழுது ப்ரேக் பிடிக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவெடுக்காமல் காரே தீர்மானிக்கும் அறிவு படைத்ததாக இருக்கிறது. என்ன சாப்பிட வேண்டும் என்று உங்கள் டயட்டை ஃப்ரிட்ஜ் தீர்மானிக்கும். அந்தப் பாதையில் ஒரு படியை மைக்ரோசாஃப்ட் எடுத்து வைத்தது. டீனேஜ் பெண்ணை இண்டெர்நெட்டுக்கு அனுப்பியது. அந்த கணிப்பெண் என்னவானாள் என்னும் கதையை சென்ற இதழில் பார்த்தோம்.

கற்பிக்கப்பட்ட மதிநுட்பம் என்னும் தொழில்நுட்பத்திற்குள் செல்வதற்கு முன் ஜான் சேர்ல் ( John Searle) எழுதிய ‘The Construction of Social Reality’ (Searle 1995) நூலை வாசித்து சுருக்கி விடலாம்.

நிஜ உலகில் தற்சார்பற்ற உண்மை இருக்கிறது; அதற்கு மாற்றாக, எதிர்ப்பதமாக – உங்களுக்கு மட்டுமேயான உண்மைகளும் இருக்கிறது. உதாரணத்தில் இதைப் பார்ப்போம். தமிழில் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார் என்பது தற்சார்பற்ற உண்மை. உலகிலேயே அதிசிறந்த இசையமைப்பாளர் என்றால் அது இசைஞானி இளையராஜா மட்டும்தான் என்பது எனக்கு மட்டுமே தோன்றும் நிதர்சனமான உண்மை. தோனி இன்றும் நன்றாக, ஆரோக்கியமாக இருக்கிறார் என்பது புறவய அணுகுமுறை. எம்.எஸ்.தோனி டி20 அணித்தலைவராக நீடிக்க வேண்டும் என்று என்னுடைய சுய விருப்பம் சார்ந்து தேர்ந்தெடுப்பது அகவழி அணுகுமுறை.

இன்னொரு விதமாக இதைப் பிரிக்கலாம். ஒரு பக்கம் நிதர்சனமான உண்மைகள். இதற்கு உதாரணங்கள் – மலை, மரம், ஓடை, ஆறு, குளம். இன்னொரு பக்கம் சமூக நிர்ப்பந்தங்கள் (‘social reality). இதை திருமணம், நிலம், வீடு, வேலை, போர், புரட்சி, அரட்டை, தண்ணி பார்ட்டி, சங்கம், சட்டமன்றம், உணவகம், விடுமுறை, வக்கீல், பேராசிரியர், மருத்துவர், வரி என்று பல கோணங்களில் சேர்ல் பார்க்கிறார். இவற்றோடு திட்டமிட்ட சமூக அடுக்குகளான பல்கலைக்கழகம், அரசாங்கம், நிறுவனம் போன்றவற்றை இணைக்கும் போது கணினிக்கு சுலபமாக புரியவைக்க முடியாத, சமூகத்தில் பூடகமாக உறைந்திருக்கும் உண்மைகள் உலவவிடப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒரு பிரயோகத்தைப் பார்க்கலாம்: “நீங்க வந்து கல்யாணத்தை நடத்தித் தரணும்.”

இந்த சொற்றொடரை கணினியிடம் கொடுத்து புரிந்து கொள்ளச் சொன்னால், ‘சொல்லப்பட்டவரின் பொறுப்பில் இந்தத் திருமணத்திற்கான செலவுகளும் பணிகளும் திட்டமிடலும் தரப்பட்டிருக்கிறது’ என்று புரிந்துகொள்ளும். இதையே, ஐம்பது வயதில் இருக்கும் தமிழரிடம் புரிந்துகொள்ளச்சொன்னால், ‘கல்யாணத்திற்கு வருமாறு முகஸ்துதி செய்து அழைக்கிறார்’ என்று மொழிபெயர்ப்பார்.

இந்த மாதிரி சமூக உண்மைகளும், அகவழி அணுகுமுறைகளும், தனக்கு மட்டுமே பொருத்தமான மதிப்பீடுகளும் மிக மிக முக்கியமானவை. இது ஆளாளுக்கு மாறுபடும். இடத்திற்கு தக்கவாறு மாறுபடும். ஒரே நபரே மாமியார் வீட்டில் ஒரு அணுகுமுறையும் அலுவலில் வேறொரு அணுகுமுறையும் நண்பர்களோடு கொண்டாட்டத்தில் இன்னொரு அணுகுமுறையும் வைத்திருப்பார். இந்த நபருக்கு எப்போதும் ஒரேயொரு வழிதான் என்று கணினியால் தீர்மானிக்க முடியாது. சமயத்திற்கு தக்கவாறு சமயோசிதமாக பேச வேண்டும்.

இது செயற்கை நுண்ணறிவின் மிகப் பெரிய சோதனை. எப்போதும் ஒரே மாதிரி நட என்று கட்டளையிட்டால், கணினிக்கு எந்த சிக்கலும் இருக்காது.

Intrinsic_Epistemic-subjective-objective

இப்போது சேர்ல் சொல்லும் மற்ற இரு பிரிவுகளையும் பார்த்துவிடலாம். தற்சார்பற்ற உண்மையையும் தனக்கு மட்டுமேயான உண்மையையும் இரண்டு புலன்களில் உணரலாம்: அவையறிந்த கற்பித ஆராய்ச்சி (epistemic) மற்றும் மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி (ontological ).

எனவே, நான்கு வகைகளாக நம்முடைய நம்பிக்கைகளையும் ஆசைகளையும் உத்தேசங்களையும் பிரிக்கலாம்:

1. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை
2. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை
3. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை
4. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை

நான்கு வகைகளுக்கும் உதாரணங்களைப் பார்ப்போம்:

1. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை : எண்பதுகளில் விளங்கிய தமிழ் இசையமைப்பாளர்களை ஒப்புநோக்கினால், சந்திரபோஸை விட இளையராஜா முக்கியமானவர்.

2. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தற்சார்பற்ற உண்மை : இளையராஜாவின் பாடல்கள் சிலவற்றில் கர்னாடக ராகங்களைக் காண முடியும்.

3. அவையறிந்த கற்பித ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை : எண்பதுகளில் விளங்கிய தமிழ் இசையமைப்பாளர்களை ஒப்புநோக்கினால், சந்திரபோஸை விட இளையராஜா நிறைய பாடல்களுக்கு இசையைமத்திருக்கிறார்.

4. மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை : இளையராஜாவின் இசையைக் கேட்கும்போது என்னால் நன்றாக வேலையை கவனித்து, ஆழமாக அந்தப் பிரச்சினையில் மூழ்கி, சிக்கலை விடுவிக்க முடிகிறது.

மேலே சொன்ன உதாரணங்கள் எளிமையானவை. ஆனால், இதைக் கொண்டு மற்ற இடங்களில் கணினி எவ்வாறு அர்த்தம் செய்து கொள்ளும் என்பதில் சிக்கல் நிறையவே இருக்கிறது.

ஒன்றை வைத்து மற்றொன்றை புரிந்து கொள்ள கணினிக்குக் கற்றுக் கொடுக்கப் பார்க்கிறோம். நிறைய பேர் இளையராஜாவைக் குறித்துப் பேசுகிறார்கள். எனவே, அவர் முக்கியமானவர் என்னும் விதியை அதற்கு கற்றுக் கொடுக்கலாம். அல்லது எவ்வளவு ஃபிலிம்ஃபேர் விருதுகள் வாங்கியிருக்கிறாரோ, அந்த அளவிற்கு முக்கியமானவர் என்று சொல்லி வைக்கலாம். அதனுடன் எத்தனை வெள்ளிவிழாப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார், எத்தனை தடவை வானொலியில் அவரின் பெயர் உச்சரிக்கப்பட்டது என்று நிறைய விதிகளை உருவாக்கிக் கொண்டே போகலாம்.

இந்த விதிகளைக் கொடுத்துவிட்டு, எனக்கேற்ற முடிவை (இளையராஜாவே சிறந்த இசைஞானி) என்னும் கற்பிதத்தை எந்த எந்தப் பாதைகளில் கணிதை கொடுக்கிறது என்று பார்க்கவேண்டும். இது சோதனை முடிவு. அதாவது, நமக்கு முடிவு ஏற்கனவே தெரியும். விடை தெரிந்த கேள்விக்கு, கணிதையும் அதே சரியான விடையைக் கொடுக்கிறதா என்று பயிற்சி கொடுக்கும் படலம்.

இதன் அடுத்த கட்டம் – பரிசோதித்துப் பார்க்கும் படலம்.

உதாரணத்திற்கு தமிழ் சினிமாவில் எண்பதுகளில் எஸ்.பி. முத்துராமன் முக்கியமான இயக்குநரா? அல்லது மகேந்திரன் சிறந்த இயக்குனரா? என்னும் கேள்விக்கான விடையை அதே கணிதையிடம் கேட்பேன். அதற்கு என்ன விடை சொல்கிறது என்று பரிசோதனை நடத்துவோம்.

நாம் என்னதான் எல்லா விஷயத்தையும் பாகுபடுத்தினாலும், நம் சாய்வுகளையும் உள்நோக்கங்களையும் கருத்துகளையும் திணித்தாலும் இவற்றுக்கும் அப்பால் நிஜத்தில் அந்த முடிவுகளுக்கு சுதந்திரமான உருவகிப்புகள் இருக்கின்றன. மேலே சொன்ன நான்கு பாதைகளுக்கும் இரண்டு உருவகிப்புகள் இருக்கின்றன – ஒன்று: இயல்பானது; மற்றொன்று: நோக்குபவர் சார்பானது.

இதற்கு உதாரணமாக திருகாணியை முடுக்கி விடுவதைச் சொல்கிறார் ஜான் சேர்ல். ஸ்க்ரூடிரைவரை பார்த்தவுடன் எல்லோருக்கும் தெரியும். அது ஆணிகளை முறுக்க உதவும் என்பது பார்ப்பவரை சார்ந்து புரிந்து கொள்வது. ஒன்றும் தெரியாத எந்திரன் ரோபாட்டிடம் அதே திருகாணியைக் கொடுத்தால், இரும்புக் கம்பி இருக்கிறது என்று சொல்லும்; ஒரு பக்கம் தட்டையாகவும் மற்றொரு பக்கம் மரத்தினால் அந்த இரும்பு மூடப்பட்டிருக்கிறது என்று கண்டு கொள்ளும். கணினியால் இயல்பானவற்றை பட்டியலிட முடியும். நம்மால், அதன் பயன்களை நம் பார்வை சார்ந்து பட்டியலிட முடியும்.

அதாவது, இது ஆடிக் கொண்டிருக்கும் கைப்பிடி பாத்திரத்தை ஆடாமல் ஸ்திரமாக வைக்க உதவும் கருவி என்பது ‘மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை’. இது கணிதைக்கு சட்டென்று விளங்காது. இதைப் புரியவைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும். திருகாணி கொண்டு ஆணிகளை முறுக்கலாம் என்று ஒரு விதி சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு, அந்தத் திருகாணியில் நூறு வகைகள், அளவுகள், வடிவங்கள் இருக்கின்றன என்று ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும். அதன் பின் பாத்திரம் ஏன் ஆடும் என்பதையெல்லாம் பட்டியல் போட வேண்டும். இதற்குள் நீங்களே சென்று பாத்திரத்தை முறுக்கிவிட எண்ணுவீர்கள்.

மனிதருக்கு மட்டுமே உணரக்கூடிய விஷயங்களை ‘மெய்ப்பொருள் மூல ஆராய்ச்சி கொண்டு கண்டறியும் தனக்கு மட்டுமேயான உண்மை’ எனலாம். கொட்டாங்குச்சியில் வயலின் செய்யலாம் என்பது இந்த வகை உண்மை. ஸ்க்ரூடிரைவரைக் கொண்டு கொலை செய்யலாம் என்பது ராஜேஷ்குமார் உண்மை. ’நட் கழண்டுருச்சா’ என்று எவராவது உங்களைப்பார்த்துக் கேட்டால் ஸ்க்ரூடிரைவரை உங்கள் கையில் கொடுக்கக் கூடாது என்பது இன்னும் ‘செயற்கை நுண்ணறிவு’ கொண்டு இயங்கும் கணிதைகள் கண்டுகொள்ளாத உண்மை.

ஆனால், நம்மைப் போல் சிந்திக்கவும் பேசவும் பார்க்கவும் ஏன் கணினிக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்? அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Epistemology_Ontology_Intrinsic_Objective_Subjective

Artificial Intelligence – Machine Learning – Deep Learning

மார்ச் மாதத்தின் 23ஆம் தேதி நல்ல நிறைந்த நாள். பௌர்ணமி; பங்குனி உத்திரம். ஆனால், அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு சந்திராஷ்டமம் என்று எந்த நாள்காட்டியிலும் குறிப்பிடவில்லை. சொல்லியிருந்தாலும் அதையெல்லாம் சத்யா நடெல்லா கண்டுகொண்டிருப்பாரா? அன்றுதான் 18இலிருந்து 24 வயது வரையிலானவர்களுடன் டிவிட்டர் வழியாக அரட்டையடிக்க ட்டே (Tay – ட்விட்டர் ஏ.ஐ?) களத்தில் விடப்பட்டார்.

இந்த ட்விட்டர் கணக்கு தானியங்கியாக இயங்கும். இதற்கு சில விஷயங்களும் சமூக சமயோஜிதங்களும் கொஞ்சம் தெரிந்திருந்தாலும், நாம் எப்படி பழுகுகிறோமோ, அதில் இருந்து கற்றுக் கொள்ளும். நாம் சொல்லும் விஷயங்களில் இருந்தும், நாம் தரும் மேற்கோள்களிலிருந்தும், நம்முடைய உரையாடல்களில் இருந்தும் இந்த ட்டே உருவாகும். அதற்கென்று முன்முடிவுகள் கிடையாது. நம் பேச்சுவழக்கையும் பரிபாஷையும் சங்கேத மொழியையும் இந்த ட்டே உணர முடியுமா என்பதே மைக்ரோசாஃப்ட்டின் பரிசோதனை.

Tay_AI_Bot_Chat_Microsoft

தன் வாழ்க்கையைத் துவங்கிய வேகத்திலேயே, அந்த ட்டே கணக்கு முடக்கப்பட்டது அப்படி என்ன அனர்த்தம் செய்துகொண்டது?

– ஹிட்லர் செய்தது சரி.

– 9/11 நடத்தியது உள்ளடி வேலை. அதை செய்தது புஷ்.

– இப்போதிருக்கும் குரங்கிற்கு பதிலாக டொனால்ட் ட்ரம்ப் எவ்வளவோ தேவலாம்.

– அமெரிக்காவிற்கும் மெக்சிகோவிற்கும் நடுவில் பெருஞ்சுவர் எழுப்பத்தான் போறம். அதற்கு மெக்சிகோ கிட்டயிருந்து காசைக் கறக்கிறம். டிரம்ப எதையும் செய்து முடிப்பவர் என்கிறார்கள்.

இணையத்தில் நடக்கும் எந்த உரையாடலும் நெடுநேரம் தொடர்ந்து விவாதிக்கப்பட்டால் ஒரு சாரார் இன்னொருவரை ஹிட்லர் என்றும் நாஜிக்கள் என்றும் சொல்வார்கள் என்பது புகழ்பெற்ற காட்வின் விதி. அதற்கு ட்டேயும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்து இருக்கிறது.

சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக ட்டே வடிவமைப்பு செய்யப்பட்டிருந்தது. அதற்கு நல்லது எது கெட்டது எது என்று சற்றே கோடிட்டுக் காட்டியிருந்தார்கள். ஆனால், நிச்சயமாக அசூயை தரவைக்கும் உலகமகாபாதகங்களை விட்டுவிட்டார்கள். பதின்ம வயதினரிடம் இருக்கும் நேரம், விடாமுயற்சியோடு பொறுமையாக ஸ்னாப்சாட், குருப் மீ, இன்ஸ்டாகிராம், கிக் என்று எல்லா வழிகளிலும் தனிமொழியாகவும் பொதுத்தகவலாகவும் போட்டுத் தாக்க ட்டே அவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என நம்பிவிட்டது.

மைக்ரோசாஃப்ட்டிற்கு இது முதல் முயற்சியல்ல. இதே போன்ற தானியங்கி அரட்டைக்காரிகளை சீனாவிலும் ஜப்பானிலும் உலவ விட்டிருக்கிறார்கள். சீனாவில் உலாவும் ஷாவோ-ஐஸ் (Xiaoice) என்பதற்கு பல அவதாரங்கள். அதன் உடன் நடக்கும் உரையாடலின் ஒரு பகுதியை நியு யார்க் டைம்ஸில் பார்க்கலாம்:

Microsoft_Bing_XiaoIce_chatbot_NYT_Tay_AI

மனிதர்களுடன் அரட்டையடிப்பதை விட பதினேழு வயது பெண் போல் பாவனை காட்டும் ஷாவோ-ஐஸ் உடன் அரட்டையடிப்பதை நாற்பது மில்லியன் சீன செல்பேசி பயனாளர்கள் விரும்புகிறார்கள். இவர்களில் பத்தில் ஒருவராவது கற்பனை அரட்டைக்காரியிடம் ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொல்கிறார்கள். கணினியை வைத்து எல்லோரும் காரியங்களை சாதிக்க விரும்புவர். ஆனால், இந்த ஷாவோ-ஐஸ் செல்லமாகக் கொஞ்சுவதிலும் ராங்கித்தனம் செய்து முரண்டு பிடிப்பதிலும் எதிர்ப்பேச்சில் விதண்டாவாதம் தொடுப்பதிலும் மட்டுமே கெட்டிக்காரியாக இருக்கிறது. நேற்று என மனநிலையில் இருந்தீர்கள், சென்ற மாதம் எப்படி உற்சாகம் அடைந்தீர்கள், எதைச் சொன்னால் உங்கள் துவள் மனது துள்ளும் என்பதை நினைவில் வைத்து, சமயம் பார்த்து தூண்டிவிடுகிறாள். ஆப்பிள் சிரி, வின்டோஸ் 10ல் புழங்கும் கொர்டானா எல்லாவற்றிற்கும் அக்காவாக கோலோச்சுகிறாள்.

உண்மையில் பார்த்தால், இந்த மாதிரி தானியங்கி பேச்சு இயந்திரம் எழுதுவது என்பது ப்ளாகருக்கோ, வோர்ட்ப்ரெஸ் தளத்திற்கோ சென்று வலைப்பதிவு கணக்குத் துவங்குவது போல் ரொம்பவே எளிதானது. வலைப்பதிவை எழுத ஆரம்பிப்பது எப்போதுமே சுளுவான வேலைதான். ஆனால், அதைத் தொடந்து நிர்வகிப்பது, நல்ல தலைப்புகளாகத் தேர்ந்தெடுத்து, அந்தத் தலைப்புகளில் செறிவான கருத்துகளைக் கோர்வையாகக் கொடுப்பது, கொடுக்கும் கருத்துகளால் ஃபாத்வாக்கள் வராமல் பார்த்துக் கொள்ளுதல் போன்றவை கஷ்டமான வேலை.

நீங்கள் உபயோகிக்கும் அரட்டை பெட்டி என்ன… ஃபேஸ்புக் தூதுவரா? வாட்ஸ்ஸாப் நிரலியா? கூகுள் ஹேங் அவுட்? ஸ்கைப்? வைபர்… எதுவானாலும் கவலை கொள்ள வேண்டாம். அதில் ஒரு தானியங்கி அரட்டை எந்திரம் இருக்கும். ஆங்கிலத்தில் செல்லமாக பாட் (bot) என சுருக்கிவிட்டார்கள். தமிழில் கணினியில் கதைப்பவரை கணிதை என்று அழைக்கலாம்.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து ஃபேஸ்புக் ‘எம்’ என்னும் தானியங்கி கணிதையை இயக்குகிறது. அது உங்களுக்காக சாப்பாட்டுக் கடையில் இடம் போட்டு வைக்கும். உங்கள் மனைவியின் பிறந்த நாளையொட்டி உங்களுக்கு நினைவூட்டுவதோடு நில்லாமல், பிடித்த அட்டிகையை வரவழைத்து பரிசளிக்க வைக்கும். வாரயிறுதிக்கு எங்கே இன்பச் சுற்றுலா செல்லலாம் என்று முழுத் திட்டத்தையும் இடத்தையும் பயணச்சீட்டையும் முன்பதிவு செய்து விடும். சற்றே அதனோடு பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தால் போதும். இத்தனையும் செய்துவிடும். ஃபேஸ்புக் ‘எம்’ முழுக்க முழுக்க தானியங்கியாக் செயற்கை நுண்ணறிவு கொண்டு இயங்குவதில்லை. இதன் பின்னே நிஜ மனிதர்கள் நீங்கள் இட்ட வேலையை செவ்வனே நிறைவேற்றுகிறார்கள்.

மூக்கு ஒழுக சோபாவில் சாய்ந்து இருக்கும்போது, ஒரேயொரு வார்த்தை ‘உடம்பு சரியில்ல’ என்று சொன்னால், ‘மேலுக்கு என்னாச்சு’ என்று கரிசனமாக விசாரித்து, மருந்து பாட்டிலோடு வீட்டிற்கே வந்து, விக்ஸ் தடவிவிடுகிறார்கள். அதை விட்டுவிட்டு, கணினியைத் திறந்து, கூகுள் வரைபடத்தில் பக்கத்தில் எங்கே மருந்து கடை இருக்கிறது என்று தேடி, அந்தக் கடையில் எந்த மருந்து வாங்க வேண்டும் என்று ஆலோசித்து, வண்டியை எடுத்து, ஏழு கடல் ஆறு மலை எல்லாம் வேண்டாம். கணிதையிடம் ஒரு சொல் சொன்னால், கை மேல் பலன்.

அமேசான் நிறுவனமும் அதே போல் அலெக்ஸா வைத்திருக்கிறது. இது சமீபத்திய ஃபோர்ட் கார்களிலும் சாம்சங் ஃப்ரிட்ஜ்களிலும் தோன்றியிருக்கிறது. சுருக்கமாக சொன்னால் உங்கள் வீட்டை கவனிக்கலாம்; பேசினால் விளக்குகளைப் பிரகாசிக்க விடலாம். படுக்கையில் விழுந்தவுடன் உத்திரத்தில் ஒலியும் ஒளியும் பார்க்கலாம். வெறும் அரட்டை கணிதை மட்டுமல்ல. வங்கி கணக்கு வழக்கு, வர்த்தகம், பங்குச்சந்தையில் விளையாடுதல் என மொத்த நிர்வாகத்தையும் கவனிக்கத்தெரிந்தவள் அலெக்சா + அமெசான் எக்கோ.

ஃபேஸ்புக் ‘எம்’மும், அமெசான் அலெக்சாவும் வீட்டினுள் இருக்கும் முன்று/நான்கு பேரோடு மட்டுமே பேசத் தெரிந்தவர்கள். அவர்கள் நடக்கும்விதத்தை வைத்து, அதே முறையில் நடக்க முயலும் கணிதைகள். ஆனால், டிவிட்டரில் அறிமுகமான ட்டே பல கோடி மக்களோடி ஒரே சமயம் பேசுபவள். அத்தனை பேர் சொல்வதையும் காதில் போட்டு வைத்துக் கொள்பவள். அவ்வளவு பேர் பேசியதை வைத்து, குன்ஸாக ஒரு முடிவுக்கு வந்து சேருபவள். கண்ணியமாகப் பேசுபவர்களோடு எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், இணையத்தில் புழங்குவோரிடம் அத்தகைய பொய்யின்றி மெய்யோடு உன்னதம் கொண்டு வரும் பாங்கை எதிர்பார்க்க இயலுமா? வெளுத்ததெல்லாம் பால் என்று கணிதைகள் நம்பிவிடுமா? கணினிகள் ஏன் நம்மைப் போல் சுவாரசியமாக, சங்கேத மொழியில் பேச வேண்டும்? கணினி எதை நன்றாகச் செய்கிறதோ அதை மட்டுமே செய்து கொண்டிருந்தால் போதாதா? மனிதன் போல் சதுரங்க விளையாட்டிலும், ‘மரண கானா’ என்றால் செம பாட்டு என்றும் புரிந்து கொள்ளும் சக்தியையும் ஏன் பெற்றிருக்க வேண்டும்?

அடுத்த பகுதியில் விடைகளை ஆராய்வோம்.

நோக்கு உரல்கள்:

1. Learning from Tay’s introduction – The Official Microsoft Blog

2. Now anyone can build their own version of Microsoft’s racist, sexist chatbot Tay | Technology | The Guardian

3. The Chatbot That’s Acing the Largest Turing test in History

4. Facebook Launches M, Its Bold Answer to Siri and Cortana | WIRED

5. Tay, the neo-Nazi millennial chatbot, gets autopsied | Ars Technica

எதற்காக எழுதுகிறேன் – பதாகை

“You see, in this world, there is one awful thing, and that is that everyone has his reasons.”
― Jean Renoir

சமீபத்தில் ‘கல்வாரி’ (Calvary) படம் பார்த்தேன். ஒருவர் ஏன் கத்தோலிக்க பாதிரியாராக ஆனார் என்பதைச் சொல்லியிருந்தார்கள். அது போல் நான் எழுதுவது என்பதும் திருச்சபையின் பிரசாரகர் போன்று ஃபேஸ்புக் சபையில் சொற்பொழிவாளராகும் விருப்பத்தினால்தான்.

தேவாலயத்தை வைத்தும் கல்வாரி திரைப்படத்தை வைத்தும் மேலும் விவரிப்பதற்கு முன் எழுதுவதற்கான வெளிப்படையான காரணங்களைப் பார்க்கலாம்:

1. மற்றவர்களைத் திருத்துதல்: அதிவிற்பனையாகும் விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்களில் வரும் பொதுமைப்படுத்தல்களைப் படித்து, அவற்றின் போதாமைகளையும் பிழைகளையும் சுட்டிக் காட்டுதல்
2. அனுபவங்களைப் பகிர்தல்: அண்டார்டிகாவிற்கே செல்லாமல், பயணக்கட்டுரை எழுதும் தமிழ்ச்சூழலில், சுயமாகக் கண்டறிந்ததை பலரும் அறிய வைத்தல்
3. விவாதங்களை உருவாக்குதல்: பேசாப்பொருளாக மூடுமந்திரமாக தாளிட்டு வைக்கப்படும் கொள்கைகளுக்கு, மாற்றுக் கருத்துகளைச் சுட்டிக் காடுதல்
4. பொழுதுபோக்கு கேளிக்கையில் ஈடுபடல்: வேலை முடிந்த சோர்வடைந்த வேளைகளில் புத்துணர்ச்சிக்காக ஐ.பி.எல், என்.எஃப்.எல், என்.பி.ஏ எல்லாம் பார்க்காமல், விளையாட்டாக உற்சாகம் அடைதல்
5. தியாகம் செய்தல்: எண்ணங்களைப் பதிவு செய்து காப்புரிமை பெற்று காசாக்குவதில் கிடைக்கும் பணத்தை விட எழுத்தில் பகிர்வதால் திருப்தி கிடைத்தல்
6. தனிமையைக் போக்குதல்: எனக்கெனவே நான் வாழ்கிறேன் என நினைத்து சுயநலத்தில் மூழ்காமல், நண்பர்களைக் கண்டடையும் முயற்சியில் இறங்குதல்.

குதிரைப் பந்தயத்தை நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா? பந்தயத்தின் துவக்கத்தில் பத்து பன்னிரெண்டு குதிரைகள் ஓட ஆரம்பிக்கும். குதிரையை ஓட்டுபவர் அதன் மீது உட்கார்ந்து கொண்டு அதை விரட்டுவார். கடைசியில் ஒரேயொரு குதிரை ஜெயிக்கும். மற்ற குதிரைகளுக்கு தான் தோற்று விட்டோம் என்பது சரியாகப் புரிந்து கொள்ளும் சூட்சுமம் கிடையாது. ஆனால், அதற்கு முன்பு கிடைத்த நல்ல சாப்பாட்டிற்கும், தோல்விக்கு பின் கிடைக்கும் பசும்புல்லுக்கும் பெரிய வித்தியாசம் தெரியப் போவதில்லை. ஜெயித்த குதிரையும் தங்கக் கோப்பையை தன் கால்களினால் தூக்கிக் காட்டி புகைப்படத்திற்கு குதிரைப்பல்லை ஈயென்று இளித்து காண்பிக்கப் போவதில்லை. குதிரை ஜாக்கிக்கும் குதிரையை வாங்கிய பணமுதலைக்கும் ஒளிபாய்ச்சப்படும்.

நான் எழுதுவது என்பது குதிரையைப் போன்றது. தன்னால் இயன்ற அளவு நன்றாக ஓட வேண்டும், யாரோ விரட்டுகிறார்கள் என்பதற்காக, என்னால் எழுத முடியாத ஓட்டத்தில் ஓட்டி, காலை உடைத்துக் கொள்ளும் சம்பவங்களும் உண்டு. சில சமயம் ஓட்டத்தில் இருந்து நிறுத்தம் கண்டு, கொட்டிலில், போட்டதைத் தின்று, காலங்கழிக்கும் தருணங்கள் உண்டு. சில சமயம் நன்றாக ஓடி, முதல் பரிசை யாருக்கோ வாங்கிக் கொடுத்திருக்கிறோம் என்பது தெரியாமல், தன் பாட்டுக்கு அடுத்த ஓட்டத்திற்கு தயார் செய்து கொள்வதும் உண்டு.

calvin-writing-Ourself_Write

நல்ல எழுத்து என்பதற்கு பல அடையாளங்கள் இருக்கின்றன. அதே போல் ‘நீங்கள் எழுத்தாளரா’ என்பதற்கு என்ன அடையாளங்கள் என்று பட்டியலிட்டால், ஏன் எழுதுகிறேன் என்பதற்கான விடைகள் கிடைக்கலாம்.

யார் எழுத்தாளர் என அறியப்படுகிறார்?

அ) தொடர்ந்து எழுதுவது: இந்த நேரம்தான் எழுத முடியும்; இந்த மனநிலையில்தான் எழுதமுடியும்; இந்தச் சூழலில்தான் எழுத முடியும் என்றில்லாமல், எங்கும் எப்பொழுதும் தயாராக இருப்பது
ஆ) பல்வகையில் எழுதுவது: நகைச்சுவைதான் வரும்; சினிமா விமர்சனம்தான் போடுவேன்; கவிதை மட்டுமே வார்ப்பேன் என கொம்பனாக இல்லாமல், எல்லா விதமான முயற்சிகளையும் செய்வது
இ) உரையாடலில் ஈடுபடுவது: இன்னாருடன் பேசினால் விதண்டாவாதம்; இந்தக் கொள்கையை ஆதரித்தோ/எதிர்த்தோ எழுதுவது நேரவிரயம் என்று புறந்தள்ளாமல், பொறுமையாக விளக்குவது
ஈ) நல்ல மனிதராக இயங்குவது: சமரசங்கள் செய்துகொண்டாலும் தன்னளவில் நேர்மையாகவும் தெளிவாகவும் குடும்பத்துக்கும் உற்றார் உறவினருக்கும் பாந்தமான சொந்தமாகவும் நேசிக்கத்தக்கவராக இருப்பது
உ) கல்லுளி மங்கராக இருப்பது: இந்தப் பத்திரிகைக்கு இது போதும்; இந்த வாசகருக்கு இவ்வளவு சொன்னால் போதும் என்று விட்டுவிடாமல், தொடர்ந்து ஆழமாகவும் எளிமையாகவும் முழுமையாகவும் எழுதிக் கொண்டேயிருப்பது.

இப்பொழுது நான் யாரை எழுத்தாளர் என நம்புகிறேன் என்பதைச் சொன்னால், ‘எதற்காக எழுதுகிறேன்… எப்படி அவர் போல் ஆக முயல்கிறேன்’ என்பது எனக்கு பிடிபடலாம்.

சுஜாதாவை எழுத்தாளர் என நினைக்கிறேன். அவரைப் போல் இரட்டை குதிரைச் சவாரி முடியும் என நம்புகிறேன். ஒரு பக்கம் அறிவியல் வேலை; இன்னொரு பக்கம் புனைவு அமர்க்களங்கள்; மற்றொரு பக்கம் தொழில்நுட்ப விளக்கங்களை – சுவாரசியமான கட்டுரைகளாக்குதல்; பிறிதொரு பக்கம் இதழ் ஆசிரியராக பணி; அது தவிர ஆன்மிக ஈடுபாடு; தத்துவ விசாரம்; அறிபுனை ஆக்கங்கள் என ஒவ்வொரு துறையிலும் முத்திரை படைப்புகள். கூடவே எழுத்தாளர் இல்லாத மற்றொரு பணியில் 9 முதல் 5 வரையிலான வேலையிலும் தீவிர செயல்பாடு என பன்முகம் கொண்டவராக இருக்க வேண்டும்.

இதற்கும் ‘கல்வாரி’ திரைப்படத்திற்கும் என்ன சம்பந்தம்?

படத்தின் துவக்கத்தில் இந்த மேற்கோள் வரும்:

“மனந்தளர வேண்டாம்; ஒரு திருடன் காப்பாற்றபட்டான்.
மட்டுமீறிய ஊகம் வேண்டாம்; ஒரு திருடன் பழிக்கப்பட்டவன் ஆனான்!’
புனிதர் அகஸ்டீன்

கல்வாரி மலையில் இயேசு கிறிஸ்துவோடு இரு கள்வர்களும் சிலுவையில் அறையப்பட்டார்கள். அவர்களில் ஒருவன் தன்னுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கோரினான். இன்னொருவன் மனத்தினால் வருந்தாமல் அன்பு உள்ளம் கொள்ளாமல் புறத்தால் மட்டும் பாசாங்கிட்டு சொர்க்கத்திற்கு வழி கேட்கிறான். அப்போது தன் தந்தையை நோக்கி ’பரமபிதாவே இவர்களை மன்னியும்’ (லூக்கா 23:24) என்று பேசினார். தந்தையிடம் பேசிவிட்டு தம் இரு பக்கங்களையும் நோக்கியபோது, இரு திருடர்கள் தம்மை இரண்டாகப் பங்கு போடுவது தெரிந்தது.

அந்த இருவரையும் பாவத்திற்குப் பரிகாரமாக, அன்பின் அடையாளமாக ஆளுக்கொரு சிலுவையைச் சுமந்து கொண்டு கோயிலுக்கு வரவேண்டும் என்று அனுப்பி வைக்கிறார். இருவரும் பக்கத்திலிருந்த காட்டிற்குச் சென்று ஆளுக்கொரு மரத்தைத் தேர்ந்தெடுத்து சிறப்பானதொரு ஆக்கத்தைச் செய்கிறார்கள். தம்முடைய புத்தம்புதிய சிலுவையைச் சுமந்து செல்லுமிடத்திற்குப் புறப்பட்டார்கள். பயணம் நெடுந்தூரமாகவும் முடிவில்லாததாகவும் தெரிகிறது. சிலுவையின் பாரம் அதிகமாகவும் இருக்கிறது. ஓரிடத்தில் ஓய்வு எடுத்தார்கள். ஓய்வு எடுத்த பிறகு ஒரு திருடன் கேட்கிறான். “சிலுவையின் எடையைக் குறைத்து கொள்வோமா?” என்று கேட்டான். “எனக்கு வேண்டாம். நீ வேண்டுமென்றால் சிலுவையைக் குறைத்துக் கொள்” என்று சொன்னான் இன்னொரு திருடன். மற்றவன் குறைத்துக் கொண்டான். மீண்டும் பயணம் தொடர்ந்தது. மீண்டும் ஓய்வு; மீண்டும் மற்றவன் சிலுவையை இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொண்டான். கூட்டாளி மறுப்பு ஏதும் சொல்லவில்லை. கோவில் முகப்பை அடைந்தார்கள். அப்போது தான் தெரிந்தது கோவில் வளாகத்தை அடைய, வழியாக இருந்த பாலம் உடைக்கப்பட்டு இருந்தது. சிலுவையோடு கோவில் வளாகத்தை அடைவது எப்படி என்று இருவரும் யோசித்தார்கள். சிலுவையைக் குறைக்காமல் எடுத்து வந்தவன் சிலுவையைப் பாலமாக வைத்துப் பார்த்தான் சரியாக இருந்தது. சிலுவை மேல் ஏறிக் கரை சேர்ந்து சிலுவையை எடுத்துக் கொண்டான். சிலுவையை குறைத்துக் கொண்டு வந்தவன் சிலுவையை வைத்துப் பார்த்தான் சிலுவை சரியாகப்படவில்லை கரையிலேயே நின்றான். அக்கரை சேர முடியவில்லை.

என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தம்மையே துறந்து தம் சிலுவையை நாள் தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (லூக் 9:23).

அப்போது தான் மனம்மாறிய கள்வனுக்கு ’நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்’ என ஆறுதலாக யேசு கூறியதாக லூக்கா 23:43 சொல்கிறது. இந்த மாதிரி கடைத்தேறத்தான் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஒன்றைப் பற்றி எழுதும்போது அது குறித்த புரிதல் மேம்படுகிறது. திரைப்பட விமர்சனம் ஆகட்டும்; நூல் அறிமுகம் ஆகட்டும்; மனிதரை விமர்சிக்கும் புனைவுகள் ஆகட்டும்; டுளவியலை பூடகமாக உணர்த்தும் கவிதை குறித்த அனுபவப் பார்வைகள் ஆகட்டும்; எழுதும் போது சிலுவையே பாலமாக என்னை மற்றொரு இடத்திற்கு தோணியாக்கி இட்டுச் செல்கிறது – என்றெல்லாம் கற்பனை செய்வதால் எழுதுகிறேன்.

ஆனால், எழுதுவது என்பது போதை மருந்து போல் என்பதை தெளிவாக உணர்ந்தே இருக்கிறேன். வேளா வேளைக்கு உட்கொள்ளாவிட்டால் உடல் சோர்வுறும். மனம் களைப்புறும். அந்த நேரத்திற்கு அபின் தேவை. அதற்காக பிறர் வீட்டிற்கு சென்றுத் திருடவும் தயங்குவதில்லை. திருட்டினால் கிடைக்கும் பொருளை விற்று, உருத் தெரியாமல் மொழிமாற்றி, அதை மயக்கப் பொருளாக உட்கொள்ளும் வரை வெறி அடங்குவதில்லை. இது ஒருவிதமான அடிமைத்தனம். அந்த போதையின் பித்தின் உச்சியில் என்ன சொல்கிறோம் என்று உணராமல் ஜடமேயென்று கொலையும் செய்துவிட்டு, அந்தக் கொலைக்குற்றம் என்னைக் குறிவைக்கும்போது, எழுத்தாளரின் சுதந்திரம் என்று பதுங்கித் தப்பித்து திரிவதற்காக எழுதுகிறேன்.

எதற்காக எழுதுகிறான் என்று பிறர் கேட்கவைக்காதபடி எழுதும்வரை, எதற்காக எழுதுகிறேன் என்றெல்லாம் யோசிக்கப் போவதில்லை.
—-

The Ambassadors by Hans Holbein

என்ன கண்ணுடா இது

ஶ்ரீவித்யா: துயர விழிகளின் தேவதை

சின்ன வயதில் தூர்தர்ஷனில் மட்டும்தான் இந்தப் படங்களைப் பார்த்து இருக்கிறேன்.

  • சாவித்ரி – எனக்குத் தோன்றிய பிம்பம்: எப்போது பார்த்தாலும் அழுகை; மூக்கு சிந்தல்; ஜோடியாக பொருந்தா கதாபாத்திரங்கள் (miscast)
  • சாரதா – அய்யஹோ… துலாபாரம்… இப்பொழுது என் பெண்ணிடம் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ பார்க்கச் சொன்னாலே, அரண்டு ஓடுகிறாள்.
  • பானுமதி – bearable; அதுவும் ‘தொட்டு நடிக்கக் கூடாது’ என்னும் பிரஸ்தாபம், பிராண்ட் நன்கு முன் வைக்கப்பட்டதால், கொஞ்சம் போல் intrigue

இந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவும் அபூர்வ ராகங்களும் நிஜமாகவே கொஞ்சம் ஆசுவாசம் கொடுத்தது. மற்றவர்கள் எல்லாம் சோக சாகரத்தில் மூழ்கடித்து வாழ்க்கையையே எதிர்மறையாக, ஏமாற்றமாக, தோல்விகளாக உணர்த்திய போது, இவரைப் பார்த்தால் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் வந்தது. அந்தத் தலைமுறையின் குறியீட்டின் எச்சமாக இந்தக் கட்டுரையைப் பார்க்கிறேன்.

srividya-early-years

விக்கிப்பிடியாவின் பட்டியலை பார்ப்போம்:

  1. அறுபதுகள் – ஜெயலலிதா (சரி… திமுக ஆட்சியில் இருந்தால், யாருக்கு விருது கொடுப்பார்கள்)
  2. எழுபதுகள் – சுஜாதா, லஷ்மி
  3. எண்பதுகள்ஷோபா, சரிதா
  4. 90கள்அர்ச்சனா, ரேவதி

நிறைய பேரை விட்டிருக்கிறேன். இருந்தாலும், டக்கென்று பார்த்தால், இவர்கள் எல்லோருமே மெரில் ஸ்ட்ரீப் போல் உருகி நடிப்பவர்கள். அதாவது, சிரமதசையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு மட்டுமே மதிப்பு. விக்ரம் கண் தெரியாதவராக, சிவாஜி கால் முடியாதவராக நடிப்பது போன்று ஏழை பிச்சைக்காரராக திரையில் தோன்றினால் விருது கிடைக்கும், நல்ல நடிகர் என்று மதிப்பு உயரும். இவர்களுக்கு நடுவில் அச்சுபிச்சுத்தனமாக நடிக்கும் மோகன், துள்ளலாக வந்துபோகும் நதியா போன்றோர செல்லுபடியாவதில்லை.

ஸ்ரீவித்யாவும் அப்படிப்பட்ட ஒருவரோ?

இதையெல்லாம் இந்தக் கட்டுரை சொல்வதில்லை என்றாலும், குறிப்பால் உணர்த்துகிறதோ!

Sri_Vidya_Actress_Tamil_Malayalam

 

ஸ்ரீமத் ராமானுஜ வைபவம்: ஆர்.பொன்னம்மாள்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Cover

Via Senkottai Sriram

வானதி பதிப்பகத்தின் சார்பில் நூலாகியுள்ளது. ஆர்.பொன்னம்மாள் எழுதியுள்ளார். ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு திருநட்சத்திரத்தை ஒட்டி வெளியிடப்பெற்றுள்ள தொகுப்பு!

வழக்கமாக தற்போது நடைபெறும் புத்தக வெளியீடுகள் போல் அல்லாது, வித்தியாசமாக யோசித்தார் வானதியின் பெயரன் சரவணன்.

ஒருநாள் காலை… கைபேசியில் அழைத்தார். அண்ணா, ஸ்ரீமத் ராமானுஜர் புத்தகம் போடுகிறோம்.. என்று சொல்லி, நூல் தலைப்பு, உள்ளடக்க குறிப்பு தொடர்பாக சில விளக்கங்களைக் கேட்டார். சொன்னேன். அடுத்த சில நாட்களில் மீண்டும் அழைத்தார். அண்ணா… நாம ஸ்ரீபெரும்புதூர் போய், அங்கேயே உடையவர் சந்நிதியில் நூலை வெளியிட்டு உடையவர் பாதத்தில் வைத்து வந்துடலாம். நீங்கதான் வெளியிட வரணும். உங்க கையால் வெளியீடு. ராமானுஜ நூற்றந்தாதி பாடிய உஷா பத்மநாபன் அம்மாவ அழைச்சிண்டு வரேன். அவர் முதல் பிரதியை வாங்கிப்பார் என்றார்.

மறுக்கவில்லை. சரியாக நேற்று திருவாதிரை. எம்பெருமானார் திருநட்சத்திரம். காலை அடியேன் பொத்தேரியில் இருந்து வண்டியில் ஸ்ரீபெரும்புதூருக்கு சென்றுவிட்டேன். அவர்களும் வந்தார்கள். சந்நிதிக்குச் சென்று பெருமாளை, உடையவரை ஸேவித்தோம். பாதத்தில் புத்தகக் கட்டை வைத்து ஆசி பெற்றோம். அப்போது நம் எம்பார் ஜீயர் நினைவுக்கு வர, சரவணனிடம் சொன்னேன்…. நம் ஜீயர் ஸ்வாமிதான் புத்தகத்தை வெளியிட சிறப்பானவர். அவர் திருமாளிகைக்குப் போய், அவர் கையாலேயே வெளியிட்டுவிடுவோம் என்றேன்.

Senkottai_Sengottai_Sriram_Book_Release_Ramanujar_Ponamal_Vaishnaivism

அவ்வாறே சென்றோம். ஜீயர் ஸ்வாமி திருமாளிகையில் அன்று அன்பர் குழாம் அதிகம்! அதோடு அதாக, ஜீயர் ஸ்வாமி புன்னகையுடன் நூலை வெளியிட்டு, பிரதியை உஷா பத்மநாபனுக்கும் அடியேனுக்கும் வழங்கினார்.

பின்னர், அப்படியே எல்லாரும் அமருங்கள். பிரசாதம் சாப்டுட்டு போயிடலாம் என்றார் ஸ்வாமி. அருமையான கதம்ப சாதம், தயிர் சாதம்..! பக்கத்தில் உள்ள மதுரமங்கலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சிஷ்ய கோடிகள் பாகவத சிரோமணிகள் வழக்கமாக திருவாதிரை நட்சத்திரத்தில் கோயிலுக்கு வந்துவிட்டு ஸ்வாமி சந்நிதிக்கு வந்து மதியம் சாப்பிட்டு விட்டுச் செல்வார்களாம். அதனால் ஒரே தடபுடல்!

பரம திருப்தியுடன் எளிய, ஆனால் ஆத்மார்த்தமான ஒரு நிகழ்வுடன் அங்கிருந்தே அலுவலகம் விரைந்தேன்.

பின் இணைப்பு:
புத்தகம் குறித்து பலரும் விசாரிப்பதால், வானதி பதிப்பக எண் தருகிறேன்… போனில் விசாரித்துக் கொள்ளுங்கள்..
VANATHI PATHIPPAKAM
23,Deenadayalu street,T.nagar, Chennai-17
Ph-no: 044 – 2434 2810 / 2431 0769

செங்கோட்டை ஸ்ரீராம்

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Back_Cover_Book

நூலின் முன்னுரையில் சுதா சேஷய்யன் எழுதியதில் இருந்து சில பகுதிகள்:

(இந்த நூலின்) சிறப்பு, நூலின் எழுத்தமைப்பால் ஏற்படுகிறது. பன்னெடுங்காலமாகப் புழக்கத்தில் உள்ள செய்திகளை, அதுவும் மரபும், சமயமும் சார்ந்த செய்திகள, எடுத்துரைக்கும்போது, அவ்வாறான நூலின் மொழி நடை, பாரம்பரியமும், பரிபாஷையும் சார்ந்ததாக அமைந்துவிடும் வாய்ப்பு உண்டு. மிகுதியான பரிபாஷைச் சொற்களும் வடமொழி மணிப்ரவாளச் சொற்களும் கலந்துவிடுமானால், வாசகர்கள் பால்ர் ஒதுங்கிவிடுவார்கள். குறிப்பாக இளைய தலைமுறை வாசகர்கள் அத்தகைய நூலைக் கையிலெடுக்கவே தயக்கம் காட்டுவார்கள்.

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_1

நூலின் மூன்றாவது சிறப்பு, கருப்பொருளுக்கு முன்னாலும், பின்னாலும் உள்ள வரலாற்றுக் குறிப்புகளைத் தக்க இடங்களில், தக்க முறைகளில் அமைத்திருக்கும் பாங்கு. …

Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_2_Munnurai_Preface

… வைணவ குரு பரம்பரையின் பிரபாவத்தை வாசகனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்த நூலாசிரியர், அதற்கான தகவல்களை, திருமலை நம்பி – ராமானுஜர் ஆகியோரின் உரையாடல்களில் பொதித்துக் கொடுப்பது மிகச் சிறந்த யுத்தி.

வைணவ உரைகளில் ‘ஈடுகள்’ முக்கிய இடம் பெறுகின்றன. ஈடு என்பது என்ன, எதைக் கொண்ட ஈட்டுக் கணக்கு வருகிறது போன்ற தகவல்களையும் நூலாசிரியர் போகிற போக்கில் விளக்கியுள்ளார்.
Srimadh_Ramanuja_Vaibhavam_R_Ponnammal_Sudha_Seshayyan_3

சாந்தோம் பள்ளியும் பிரபு தேவாவும் நானும்

Santhome_High_Scholl_Four_4_Class_Grade_Prabhu_Deva

இந்தப் புகைப்படங்களில் நான் எங்கே இருக்கிறேன்? சிவப்பு வட்டத்திற்குள் இருப்பவர் பிரபுதேவா.

நடிகர் + இயக்குநர் பிரபு தேவா தி ஹிந்துவில் வாரந்தோறும் பத்தி எழுதுகிறார். அதில் கிடைத்தவை இவை இரண்டும்:

1. இதுதான் நான் 12: அழுதா அழுவாங்க… சிரிச்சா சிரிப்பாங்க!

சென்னையில் நான் படிச்ச சாந்தோம் ஸ்கூலுக்கும், அதுக்கு பக்கத்துல இருந்த செயின்ட் பீட்ஸ் ஸ்கூலுக்கும் இடையிலதான் ரோஸரி கேர்ள்ஸ் ஸ்கூல் இருக்கு. பாய்ஸ் ஸ்கூலுக்குப் பக்கத்துல ஒரு கேர்ள்ஸ் ஸ்கூல் இருந்தா, அந்த வயசுல மனசுக்கு ஜாலியா இருக்கத்தானே செய்யும்! அதுக்கும் போட்டியா ஒரு பாய்ஸ் ஸ்கூல் எதிர்ல இருந்தா எப்படி? அதுமட்டுமல்ல; நாங்க கிரிக்கெட்ல பெஸ்ட் காட்டினா, செயின்ட் பீட்ஸ் பசங்க ஃபுட்பாலில் சாமர்த்தியம் காட்டுவாங்க. நாங்க தமிழ் பேசுவோம். அவங்க இங்கிலீஷ் பேசுவாங்க.

இப்படி சின்னச் சின்ன எதிரெதிர் விஷயங்கள் இருந்தன. அதனாலேயே ரெண்டு ஸ்கூல் பசங்களுக்கும் எப்பவும் ஒரு கேப் இருக்கும். இதையெல்லாம் ஒருத்தரோட ஒருத்தர் பார்வைகள்ல காட்டுறதோட சரி. எப்பவுமே சண்டை போட்டுக்கிட்டதே இல்லை.

2. இதுதான் நான் 13: 12பி பஸ்ஸும் 5 பைசா வெல்லமும்

சாந்தோம் ஸ்கூல் கிரவுண்ட் ரொம் பவும் பெருசு. அப்போ ஃபுட்பால்தான் என் விருப்பம். கிரவுண்ட்ல ஒரே நேரத்துல 800 பேர் விளையாடலாம். பதினோறு பதினோறு பேராப் பிரிஞ்சி விளையாடு வோம். எந்த பந்து எங்களோடதுன்னு சரியா கண்டுபிடிச்சு விளையாடுவோம். பெரும்பாலும் கையில சிலிப்பரை வெச்சிக்கிட்டேதான் விளையாடுவோம். அதை யாராவது எடுத்துட்டு போய்டு வாங்களோன்னுதான்.

Santhome_High_Scholl_Six_6_Class_Grade_Prabhu_Deva

இப்பொழுது இந்தப் புகைப்படங்களில் நான் எங்கே இருக்கிறேன் எனத் தேடினேன். சில விஷயங்கள் புலப்பட்டது.

அ) எனக்கு எப்போதும் தரை டிக்கெட்டோ அல்லது ஓரத்தில் ஒரு இடமோ ஒதுக்கப்பட்டிருக்கிறது. நண்பர்களின் நடுவில் நிற்க வைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் போதவில்லை. மண்ணில் உட்காருவதை பெரும்பாலானோர் கௌரவமாக உணராததால், அது மட்டுமே எடுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறேன்.

தொடர்புள்ள பதிவு: Shut Up and Sit Down – The New Yorker

ஆ) என்னை நானே அடையாளம் தெரிந்து கொள்ளுமளவுக்கு சுய ப்ரேமை இன்றி இருந்திருக்கிறேன். கண்ணாடியில் அடிக்கடி முகம் பார்ப்பது; சின்ன வயதில் நிறைய நிழற்படம் எடுத்து ஒப்புமைக்காக சரி பார்த்து, பள்ளி க்ரூப் போட்டோவில் தெரிந்து கொள்வது எல்லாம் சாத்தியம் இல்லை.

தொடர்புள்ள பதிவு: The Freedom of Young Photographers – The New Yorker

இ) ஜெயலலிதா எங்கே உட்கார்ந்து இருந்தாரோ, அங்கேதான் அமர்ந்து இருக்கிறேன்.

Jayalalitha_Child_kid_JJ_School_Group_Photo_Bishop+Cotton_Bangalore

உ) பிரபுதேவாவினால் நிறைய விஷயங்களைச் சொல்ல இயலவில்லை. ‘ஒரு நாள் இரவில்’ போல் திரைப்படமாக எடுத்தாலோ அல்லது புனைவினாலே மட்டும் சாத்தியப்படக்கூடிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. அவர் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு எங்களுக்கு கால்பந்து ஆர்வம் போய் வேறு விஷயங்களில் நாட்டம் வந்து சுற்றுலா சென்றது என்று நிறைய சங்கதிகளை எழுதினால், ’இவன் தான் பாலா’ ஆகக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துவிடுகிறார்.

Naan Than Bala

Book Choices to Read: Library Picks for January 2016

Earlier Post: Book Choices to Read: Library Picks for February 2016

1. Presence : Bringing Your Boldest Self to Your Biggest Challenges By Amy Cuddy

Contents:

  • 1. What Is Presence?
  • 2. Believing and Owning Your Story
  • 3. Stop Preaching, Start Listening: How Presence Begets Presence
  • 4. I Don’t Deserve to Be Here
  • 5. How Powerlessness Shackles the Self (and How Power Sets It Free)
  • 6. Slouching, Steepling, and the Language of the Body
  • 7. Surfing, Smiling, and Singing Ourselves to Happiness
  • 8. The Body Shapes the Mind (So Starfish Up!)
  • 9. How to Pose for Presence
  • 10. Self-Nudging: How Tiny Tweaks Lead to Big Changes
  • 11. Fake It Till You Become It

The Stuff That Dreams Are Made Of - braindecoder
2. NeuroLogic : The Brain’s Hidden Rationale Behind Our Irrational Behavior By Eliezer Sternberg

CONTENTS

Introduction: Our Unconscious Logic xi

1. WHAT DO THE BLIND SEE WHEN THEY DREAM? 3
On Perception, Dreams, and the Creation of the External World
Filling in the Gaps . . . The Stuff That Dreams Are Made Of . . . Down the Rabbit Hole . . . A Vision for the Sightless . . . Luke Skywalker Lives in Your Temporal Lobe . . . A Corridor of Sound . . . The Dream Machine

2. CAN ZOMBIES DRIVE TO WORK? 38
On Habit, Self-Control, and the Possibility of Human Automatism
Zombies Among Us . . . Vision Without Seeing . . . Mice in a Plus-Maze . . . Focusing by Being Unfocused . . . How to Identify a Fake Smile . . . Why We Forget to Pick Up a Gallon of Milk . . . Why Do We Eat When We’re Not Hungry? . . . Executive Dysfunction . . . Murder on Autopilot . . . Two Systems for Multitasking

3. CAN YOUR IMAGINATION MAKE YOU A BETTER ATHLETE? 71
On Motor Control, Learning, and the Power of Mental Simulation
The Internal Simulator . . . Flexing Mental Muscle . . . PETTLEP . . . Insights from Stroke . . . How Do You Scratch a Phantom Itch? . . . Neuronal Mirrors . . . Why Is Yawning Contagious? . . . Empathy, Pornography, and the Autism Spectrum . . . Gut Feelings

4. CAN WE REMEMBER THINGS THAT NEVER HAPPENED? 99
On Memory, Emotion, and the Egocentric Brain
A Web of Snapshots . . . The Brains of Rival Sports Fans . . . Why Do We Remember Where We Were on 9/11? . . . Brains in Midtown and Downtown . . . Ignorance Is Bliss . . . “It’s Not a Lie If You Believe It” . . . Fairy Tales in the Confabulating Brain

5. WHY DO PEOPLE BELIEVE IN ALIEN ABDUCTIONS? 127
On Paranormal Experience, Narrative, and the Development of Strange Beliefs
“I Was Abducted by Aliens!” . . . Sleep Paralysis . . . Afraid of Your Shadow? . . . Conversations with God . . . The Walking Dead . . . Cheating on Your Wife—with Your Wife? . . . Visions from the Brink . . . Fighter Pilots and Heart Attack Victims . . . Hostage Hallucinations . . . Attack of the “Old Hag”

6. WHY DO SCHIZOPHRENICS HEAR VOICES? 149
On Language, Hallucinations, and the Self/Nonself Distinction
Whispers from the Microphone . . . “He Can’t Speak If I Interrupt Him” . . . “Someone Else Is Speaking Whenever I Speak” . . . How Are People Similar to Electric Fish? . . . System Failure . . . Can the Deaf Hear Voices in Their Heads? . . . A Disorder of Self-Monitoring . . . Why Can’t You Tickle Yourself? . . . Déjà Vu

7. CAN SOMEONE BE HYPNOTIZED TO COMMIT MURDER? 178
On Attention, Influence, and the Power of Subconscious Suggestion
You Are Getting Very Sleepy . . . The Cocktail Party Effect . . . Overcoming the Stroop Effect . . . Eat Popcorn, Drink Coca-Cola . . . Invisible Faces . . . Brand Names in the Brain . . . When the Brain Makes Excuses . . . “The Knife Went In” . . . One Brain, Two Systems

8. WHY CAN’T SPLIT PERSONALITIES SHARE PRESCRIPTION GLASSES? 210
On Personality, Trauma, and the Defense of the Self
Finding One Self . . . A Brain Divided . . . See No Evil . . . The Fragmentation of the Mind . . . The Hypnotist Within . . . An Eye for an I

Culture and Civilization_Derrida_Philosophy_Marxism_Communism_Socialism

3. Figures of Catastrophe: The Condition of Culture Novel by Francis Mulhern

(from the first chapter)

By the end of the nineteenth century, the question of working-class education in Britain was hardly a novelty, however controversial it remained. The principle of universal, publicly supported elementary schooling for children had been established in law for the greater part of a generation. Adults had been served by the Mechanics’ Institutes since the 1820s, while the Woking Men’s Colleges sponsored a liberal arts curriculum from the mid-century onwards. Yet it was now that the topic caught fire in the imaginative fields of the English novel, in two stories of working-class educational aspiration that furnished the occasions for general assessments of the current state and prospects of culture. In doing so, Thomas Hardy’s Jude the Obscure and E.M. Forster’s Howards End pioneered a new genre, the condition of culture novel.’ p.15

 

4. Democracy against Capitalism : Renewing Historical Materialism by Ellen Meiksins Wood

Renewing Historical Materialism | Solidarity

Ellen Meiksins Wood argues that with the collapse of Communism the theoretical project of Marxism and its critique of capitalism is more timely and important than ever. In this book she sets out to renew the critical program of historical materialism by redefining its basic concepts and its theory of history in original and imaginative ways, using them to identify the specificity of capitalism as a system of social relations and political power. She goes on to explore the concept of democracy in both the ancient and modern world, examining the concept’s relation to capitalism. Wide-ranging study of Marxism and democracy, covering history from ancient Greece to the US Constitution, and thinkers from Weber to Thompson. More accessible than most writing in the field; Will appeal to historians, philosophers and sociologists as well as political theorists

Quantitative Easing in Europe_Adair_Turner_Economists, Policymakers

5. Between Debt and the Devil : Money, Credit, and Fixing Global Finance by Adair Turner

New Yorker:

Lord Turner argues that countries facing the predicament of onerous debts, low interest rates, and slow growth should consider a radical but alluringly simple option: create more money and hand it out to people. “A government could, for instance, pay $1000 to all citizens by electronic transfer to their commercial bank deposit accounts,” Turner writes. People could spend the money as they saw fit: on food, clothes, household goods, vacations, drinking binges—anything they liked. Demand across the economy would get a boost, Turner notes, “and the extent of that stimulus would be broadly proportional to the value of new money created.”

Socialism_Health_Care_Obamacare_Schools_Hospitals_Mediaid_Medicare_Social_Security_Totalitarianism capitalism marx lenin

6. What is to Be Done: A Dialogue on Communism, Capitalism, and the Future of Democracy by Alain Badiou & Marcel Gauchet

Table of Contents

Foreword: The Future of an Alternative, by Martin Duru and Martin Legros
1. The encounter with communism
2. From Marx to Lenin
3. Totalitarianism
4. The return of the communist hypothesis?
5. What is the meaning of the crisis?
6. The end of imperial logic, or the continuation?
7. The deconstruction of capitalism
8. Why we re not finished with politics
Conclusion: In search of a lost deal?

7. Consciousness and the Brain: Deciphering How the Brain Codes Our Thoughts By Stanislas Dehaene

  1. Chapter Summaries (with comments)
  2. New Ways Into the Brain’s ‘Music Room’ – The New York Times
  3. Sizing Up Consciousness by Its Bits – NYTimes.com
  4. A New Method to Measure Consciousness Proposed: Scientific American
  5. What Is the Fundamental Nature of Consciousness? [Excerpt]: Scientific American
  6. Your Brain on Metaphors – The Chronicle Review – The Chronicle of Higher Education
  7. Lucy Film Hinges on Brain Capacity Myth | Observations, Scientific American Blog Network
  8. Think Different: Scientific American
  9. The Folks You Meet on the Border Between Consciousness and Dreams
  10. The Neurologist Who Hacked His Brain—And Almost Lost His Mind | WIRED
  11. The Brain, in Exquisite Detail – NYTimes.com
  12. Daniel Wolpert: The real reason for brains | Video on TED.com