தேவதர்ஷினி & Erinn Hayes
முந்தைய பதிவு: தமிழ் சினிமா | நடிகைகள் | வலைப்பதிவு
முன் கதவும் பின்னங்கதவும்: பாகிஸ்தான் – யே ஹை ஹிந்துஸ்தான் மேரி ஜான்: சீதி பாத்; நோ பக்வாஸ்
ஜொள்ளுப்பாண்டி
மகளைப் பார்த்துக் கொள்ளும் தந்தை
ஸ்ட்ரெயிட் ஃப்ரம் தி ஹார்ட்டு; நோ உடான்சு
துள்ளிசைப் பாட்டுடன் மசாலா ஃபைட்
கழுத்தை முறுக்கி நரம்பு சவுண்ட் எஃபக்ட்
மூன்று விளம்பரத் தொகுப்பு
நச்சுப் பொருள் இருந்தா எனக்கென்னா போச்சு?
இந்தக் கால ஜெனரேசன் என்னமா யோசிக்குது!
கமல் – சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. – Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…
இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ‘ஹானா மொன்டானா‘ நாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:

அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy – BostonHerald.com
அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:

பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture: vanityfair.com: “Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney.”
சுருக்கமான பின்னணி:
சிந்தனைவயப்படும் நேரம்:
செய்தி: ‘பகுத்தறிவு கருத்துகளை வளர்க்க இலவச கலர் டி.வி.யை பயன்படுத்த வேண்டும்’
கருத்து: வண்ணத் தொலைக்காட்சி வழங்கினால் குதூகலம்தான் கிட்டும்; இலவச கணினி கொடுத்திருந்தாலோ குதூகலத்துடன் குடும்பமே பயன்பெற்றிருக்குமே!
தொடர்புள்ள செய்தி: BBC NEWS | Technology | UN debut for $100 laptop for poor
Posted in Computer, DMK, Free, Freebie, TV
குறிச்சொல்லிடப்பட்டது 1000, அரசியல், இலவசம், கட்சி, கணினி, கம்ப்யூட்டர், கருணாநிதி, கருத்து, கலைஞர், கார்ட்டூன், சீரியல், டிவி, திமுக, தொலைக்காட்சி, பகுத்தறிவு, மானாட மயிலாட, லேப்டாப்
ஞாநி கட்டுரை: IdlyVadai – இட்லிவடை: “கலைஞர் டி.வி. மன்னிப்பு கேட்கவேண்டும்! என்ற தலைப்பில் ஓ-பக்கங்கள், குமுதம்.”
ஓ பக்கங்களுக்கு பின் தொடர்தல்: :-): மாலை மாற்றுதல் – லெஸ்பியன் ்- குமுதம் – ஞாநி அவதூறு!!
தலைப்பில் குறிப்பிட்ட கருத்து – பின்னூட்டம்: “ஏனோ இந்த பதிவை படித்ததும் ‘ஆடு நனைகிறது என ஓநாய் அழுததாம்’ என்ற பழமொழி நினைவிற்கு வ்ருவதை தவிர்க்க முடியவில்லை”
‘சவுன்ட் வுட்டாக்க வெட்டிடுவாங்க’ என அச்சுறுத்தும் கருத்து – லக்கிலுக் : “திமுக, பாமக போன்ற தலைமைகளை இதுபோல விமர்சித்திருந்தால் தமிழ்நாட்டில் பெரிய பூகம்பமே வெடித்திருக்கும்.”
அபச்சாரம், அபிஷ்டு, ‘கெட்ட வார்த்தை பேசுறான்’ கருத்து: லக்கிலுக் – “ஆயினும் லெஸ்பியன் என்ற சொல்லை கலைஞர் டிவியே கூட பயன்படுத்தவில்லை. ஞாநி தான் பயன்படுத்தியிருக்கிறார்”
Posted in Defamation, Jeyalalitha, Kalainjar, TV
குறிச்சொல்லிடப்பட்டது 60, அதிமுக, அரசியல், ஆன்மிகம், கருணாநிதி, கலைஞர், சசிகலா, சமூகம், ஜெயலலிதா, திமுக, தொலைக்காட்சி, பிரச்சாரம், பெண்
சன் டிவியில் பல மாற்றங்கள்.
1. ஐம்பது சவரனுக்கு நகை போட்டிருக்கிறார்கள். 23 வயது பெண்ணை சந்தோஷமாக இருப்பாள் என்னும் நம்பிக்கையில் அமெரிக்கா அனுப்பி இருக்கிறார்கள். அங்கு சென்றாலும் வரதட்சணை விடாது கேட்டு படுத்தும் கணவன் & குடும்பத்தார். காரில் ஏறும்போது தடுக்கி விழுந்து விபத்தாகி கோமாவுக்கு சென்றதாக கணினி வல்லுநர் கதை விடுகிறார். படித்தவனுக்கு புத்தி, சமூக அறிவு, சிந்தனை இருக்கும் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய் 😦
அது நேற்றைய செய்தி. இன்று அசோக்குமார் & சுபரஞ்சனி.
திருமணத்திற்காகும் செலவில் 50:50 காணும் காலம் வர குறைந்தது ஐம்பதாண்டுகள் பிடிக்கும்.
2. தமிழகத்தில் ஏழைகளுக்கெல்லாம் தொலைக்காட்சி வழங்கி சிவந்த கரங்கள், இப்பொழுது அடுக்குமாடி வீடுகளுக்கும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டியை இலவசமாக வழங்கிவருகிறது. ரேஷன் கார்டு வைத்திருப்போர் எல்லோருக்கும் ஒரு டிவி. இதற்காக ஆகும் செலவை தேங்கியிருக்கும் வழக்குகளை துரிதப்படுத்தவோ அல்லது கிராமப்புற கல்வி மேம்பாட்டுக்கோ அல்லது பிறிதொரு நம்பிக்கை தரும் விஷயத்திற்கோ பயன்படுத்தாமல் விழலுக்கிறைத்த வெந்நீர்.
சீர்வரிசைக்கு முக்காடு போட்டு கேட்கிறார்கள். ‘எனக்கு வந்துடுச்சு; நீங்களும் வாங்கிட்டீங்களா‘ என்று டிவிக்கு வரிசையில் வெளிப்படையாக விசாரிக்கிறார்கள்.
வீட்டில்’டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருங்கள்
– அமைச்சர் அன்பழகன் வேண்டுகோள் (செய்தி: தினமலர்)
“நமது பண்பாடே ஆதரவு தருவது தான். சமூக சீர்திருத்தம் என்பது அனைவரையும் அரவணைப்பது.
என்னைக் கேட்டால், வீட்டில் ‘டிவி’ வைத்திருப்பதை விட பாட்டன், பாட்டியை வைத்திருந்தால் பிள்ளைகளுக்கு பற்று, பாசம், அரவணைப்பு கிடைக்கும்”.
Posted in DMK, Interpretation, Lollu, Quotes, TV
தொடர்புள்ள பதிவு:
அ.அமலோர்ப்பவமேரி, ஆத்தூர்.
உங்கள் இலக்கியப் பயணத்தில் எதிர்ப்புகளை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
‘தினமணி கதிரி’ல் சுதாங்கன் ஆசிரியராயிருந்தபோது, ‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்ற ஒரு தொடரை இலக்கிய ஆர்வலர் சிவா எழுதி வந்தார். தலைப்பைப் பார்த்ததும் தமிழ்நாட்டின் மூத்த முன்னோடிக் கவிஞர் ஒருவர் தீப்பிழம்பாய்ச் சினந்தெழுந்தார். ஒரு சிறு பத்திரிகையில் எதிர்ப்பறிக்கையும் எழுதி வெளியிட்டார். ‘‘யாரோடு யாரை ஒப்பிடுவது? ‘வள்ளுவர் கடல்’; வைரமுத்து குட்டை’’ என்று முடித்திருந்தார்.
அறிக்கை வந்த அடுத்த வாரம் அதே கவிஞரின் தலைமையில் ஒரு நூல் வெளியீட்டு விழா. நானும் அதில் சொற்பொழிவாளன். என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று மன்றம் முழுக்க நிலவியது ஒரு மயான அமைதி. நான் எழுந்தேன். ஒலிபெருக்கி முன்னால் முப்பது நொடிகள் மௌனம் காத்தேன்; பிறகு பேசினேன்.
‘‘வள்ளுவர் முதல் வைரமுத்து வரை’ என்று ஒரு தொடர் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதை ஏற்பதோ எதிர்ப்பதோ அவரவர் உரிமை. அறிக்கை வெளியிடுவது அவரவர் திறமை. ஆனால் அறிக்கையில் பொய் சொல்லக்கூடாது. அறிக்கை வெளியிட்டவர் ‘வைரமுத்து குட்டை’ என்று முடித்திருக்கிறார். நீங்களே சொல்லுங்கள். நானா குட்டை? இங்கிருக்கும் கவிஞர்களில் நான்தானே உயரம்?’’ என்றேன். இறுக்கமாயிருந்த அரங்கம் இன்னிசையாய் சிரித்தது.
சில எதிர்ப்புகள் திருத்திக்கொள்ள; பல எதிர்ப்புகள் சிரித்துக்கொள்ள.
க.சோமசுந்தரம், குடியாத்தம்.
‘‘எச்சத்தால் காணப்படும்’’ என்கிறாரே வள்ளுவர்! அது என்ன எச்சம்?
நீ இல்லாத இடத்திலும், காலத்திலும் உன் பெருமையோ, சிறுமையோ பேசும் நுண்பொருளோ பருப்பொருளோ உன் எச்சம்.
ஜான். புஷ்பராஜ், சீர்காழி.
தமிழ்த் தொலைக்காட்சிகளில் நீங்கள் கூர்ந்து கவனிக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன?
சன் டி.வி. _ சென்றவார உலகம்
ஜெயா டி.வி. _ தேன் கிண்ணம் (கறுப்பு வெள்ளைப் படப் பாடல்கள்)
விஜய் டி.வி. _ நீயா? நானா?
ராஜ் டி.வி. _ செய்திகள்
மக்கள் தொலைக்காட்சி _ நீதியின் குரல்.
என். உஷாநந்தினி, மண்ணச்சநல்லூர்.
கதாநாயகர்களுக்கு நீங்கள் எழுதிய பாடல்களில் பிடித்த பாடல்களைச் சொன்னீர்களே… கதாநாயகிகளுக்கு?
பத்மினி _ பூவே பூச்சூட வா (பூவே பூச்சூட வா),
சரோஜாதேவி _ சின்னக்கண்ணா (தாய்மேல் ஆணை),
லட்சுமி _ கட்டிக் கரும்பே கண்ணா (சம்சாரம் அது மின்சாரம்),
சுஜதா _ தாலாட்டு மாறிப்போனதே (உன்னை நான் சந்தித்தேன்),
ஸ்ரீப்ரியா _ தேர்கொண்டு சென்றவன் (எனக்குள் ஒருவன்),
ராதிகா _ தென்கிழக்குச் சீமையில (கிழக்குச் சீமையிலே),
சரிதா _ கண்ணான பூ மகனே (தண்ணீர் தண்ணீர்),
அம்பிகா _ பாடவா உன் பாடலை (நான் பாடும் பாடல்),
ராதா _ ராசாவே ஒன்ன நம்பி (முதல் மரியாதை),
சுஹாசினி _ நானொரு சிந்து (சிந்துபைரவி),
பூர்ணிமா _ சாலையோரம் சோலை ஒன்று (பயணங்கள் முடிவதில்லை),
ரேவதி _ வான்மேகம் (புன்னகை மன்னன்),
பானுப்ரியா _ நாடோடி மன்னர்களே (வானமே எல்லை),
ஊர்வசி _ சிறிய பறவை (அந்த ஒரு நிமிடம்),
குஷ்பூ கொண்டையில் தாழம்பூ (அண்ணாமலை),
ரோஜா _ ஆசை கேப்பக்களிக்கு ஆசை (தமிழ்ச்செல்வன்),
ஷோபனா _ முத்தம் போதாதே (எனக்குள் ஒருவன்),
நதியா _ அன்புள்ள அப்பா (அன்புள்ள அப்பா),
அமலா _ புத்தம் புது ஓலைவரும் (வேதம் புதிது),
மதுபாலா _ சின்னச் சின்ன ஆசை (ரோஜா),
நக்மா _ தங்கமகன் இன்று (பாட்ஷா),
மனிஷாகொய்ராலா _ கண்ணாளனே (பம்பாய்),
ஐஸ்வர்யாராய் _ நறுமுகையே (இருவர்),
சிம்ரன் _ இன்னிசை பாடிவரும் (துள்ளாதமனமும் துள்ளும்),
ஜோதிகா _ திருமண மலர்கள் (பூவெல்லாம் உன் வாசம்),
ஷாலினி _ சிநேகிதனே (அலைபாயுதே),
யுக்தா முகி _ யுக்தா முகி (பூவெல்லாம் உன் வாசம்),
ரீமாசென் _ ஆரிய உதடுகள் உன்னது (செல்லமே),
த்ரிஷா _ நீ யாரோ? நான் யாரோ? (ஆய்த எழுத்து),
மீனா _ தில்லானா தில்லானா (முத்து),
சௌந்தர்யா _ நகுமோ (அருணாசலம்),
சுஷ்மிதாசென் _ சோனியா (ரட்சகன்),
கஜோல் _ பூப் பூக்கும் ஓசை (மின்சாரக் கனவு),
மீனாட்சி சேஷாத்ரி _ குளிச்சாக் குத்தாலம் (டூயட்),
ஷில்பாஷெட்டி _ தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை (மிஸ்டர் ரோமியோ),
சிநேகா _ காடுதிறந்தே கிடக்கின்றது (வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்),
மீராஜாஸ்மின் _ சண்டக்கோழி (ஆய்தஎழுத்து),
அசின் _ மனமே மனமே (உள்ளம் கேட்குமே).
சட்டென்று நினைவுக்கு வந்தது இவ்வளவுதான்; விட்டுபோனவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்..
கே: வாழ்க்கை என்பது?
ப: கல்யாணத்திற்கும் இழவுக்கும் ஆள்சேர்க்கும் போராட்டம்.
கே: தமிழ்த் திரைப்படங்களில் நீங்கள் அதிகம் கேட்ட வசனம்?
ப: “நீங்க பேசுனதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்.”
கே: யாரோடு பேசினால் அனுபவம் கிடைக்கும்?
ப: ஓய்வுபெற்ற நீதிபதிகள்;
காத்திருப்போர் பட்டியலில் உள்ள காவல்துறை அதிகாரிகள்;
அரைவயதில் களமிழந்த அரசியல்வாதிகள்;
நட்சத்திரங்களின் ஒப்பனைக் கலைஞர்கள்;
கட்டிய வீட்டில் திண்ணைக்கு எறியப்பட்ட கிழவன்;
மூத்த சவரத் தொழிலாளி;
விதவைகளின் மாமியார் மற்றும்
விலைமகளின் தாயார்.