Monthly Archives: மே 2007

மெய் வாக்கு

1. முதல்வர் கலைஞர் மு கருணாநிதி : திமுகவில் வாரிசு அரசியல் கிடையாது.

2. தயாநிதி மாறன்: எனக்கும், தினகரனுக்கும், சன் டி.வி.க்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

3. இஃது -/பெயரிலி.யின் தனிப்பட்ட கருத்து; தமிழ்மணத்தினது கருத்து அல்ல.

இந்த இடுகை அதற்கான நோக்கம் நிறைவேறிய பின்னால் விலக்கப்படாத இடுகை.

Periyar – Movie Reviews, Cinema Experiences


பெரியார் திரைப்படம் குறித்த பெட்டகம்

பெரியார்
பெரியார்

பெரியார் திரைப்படம் வெளியாகிவிட்டது. இசையமைக்க இளையராஜா மறுப்பு, ராமர் தொட்டதால் அணில் முதுகில் கோடென்றொல் சீதையின் முதுகிலும் கோடுகள் உண்டா என்று கிண்டலடிக்கும் பாடலை எதிர்த்து வழககு, இப்படிப் பல்வேறு சிக்கல்களைக் கடந்து தமிழகத்தில் ஒருவழியாக இயககுநர் ஞான.ராஜசேகரனின் பெரியார் திரைப்படம் வெளியாகிவிட்டது.

முதல்வாரத்தில் திரையரங்குகளில் நல்லகூட்டம்தான்.
தொடக்கத்திலிருந்து இறுதிவரை சத்தியராஜ் தனது சிறப்பான நடிப்புத்திறன் மூலமாக அனைவரையும் கவர்ந்துவிடுகிறார் என்பதே பொதுவான கருத்தாக இருககிறது

ஆனாலும் பல்வேறு விமர்சகர்கள் திரைக்கதை அமைப்பில் குழப்பம் இருப்பதாகவும், சரியான தாக்கத்தினை பார்வையாளர்கள் மீது ஏற்படுத்தவில்லை என்றும் குறை கூறுகிறார்கள்.

இயககுநர் ஞான.ராஜசேகரனின் திரைப்படம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவும், தயாரிப்பிற்கு நிதிஉதவி செய்த தமிழக அரசு மற்றும் திராவிடக்கழகம் ஆகியவற்றை திருப்திப்படுத்துவதற்காகவும் பல்வேறு சமரசங்கள் செய்துகொண்டு விட்டதாக எழுத்தாளர் ஞாநி குற்றஞ்சாட்டுகிறார்.

ஆனால் இயககுநர் ஞான.ராஜசேகரன் பிராமண எதிர்ப்பு என்ற ஒற்றை பரிமாணத்தில் பெரியாரை பார்ப்பது தவறு, அவர் மிகச்சிறந்த மனிதாபிமானி, அதையே திரைப்படத்தில் சொல்ல முற்பட்டிருப்பதாகக் கூறுகிறார்.

படத்தின் கலையம்சம் பற்றி இன்னும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆயினும் கூட ஒரு சாதி ஆதிக்கத்தைத் தகர்த்து, இறுகிப் போயிருந்த சமூக அமைப்பை கலகலக்க வைத்து கீழ்சாதியினர் என்று கருதப்படுவோர் அரசியல் அதிகாரம் பெற வழிவகுத்த பெரியார் ஈவேரா வைப் பற்றிய ஓர் அறிமுகம் என்ற வகையில் இத்திரைப்படத்தை வரவேற்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

வட்டார வாரிசுகளுக்கு பதவிகள் கூடாது – அன்பழகன்

செய்தி: சிந்தாநதி (வட்டாரத் தமிழில் நூல்கள் கூடாது-அன்பழகன்)
உணர்வு: சென்ஷி
உல்டாக்கம்: அடியேன்

சென்னை வாரிசு, மதுரை வாரிசு, கோவை வாரிசு, நெல்லை வாரிசு என வாரிசை வட்டார அடிப்படையில் பிரிக்கக் கூடாது. வட்டார ஆதிக்கத்தைக் கொண்டு பதவிகளை நியமிக்கவும் கூடாது என்று நிதியமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் அன்பழகன் பேசுகையில், பாசத்தை வெளியிட அமைச்சர் பதவி போல எதுவும் இல்லை. தற்போது மண்ணின் வாசனையுடன் தமிழ்நாட்டில் பதவிகள் வருகின்றன. ஆனால் சமீப காலமாக கொடுக்கப்படும் பதவிகளில் வட்டார ஆதிக்கம் அதிகம் தலை தூக்குகின்றன.

இப்படி கொடுப்பதால் வாரிசு பலவாக பிரியும் நிலை ஏற்படும். பின்னர் எந்தத் வாரிசு சிறந்த வாரிசு என்ற தேவையில்லாத விவாதங்களும் ஏற்படலாம். கடைசியில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதே நல்ல வாரிசு என்ற நிலையும் ஏற்படலாம்.

சென்னை வாரிசு, மதுரை வாரிசு, கோவை வாரிசு, நெல்லை வாரிசு என தமிழ்நாட்டைப் பிரிக்கக் கூடாது. அந்த வட்டாரங்களில் புழங்கும் உறவுகளைக் கொண்டு பதவி அமைக்கக் கூடாது. அதுபோன்ற வட்டார உறவுகள் இடம் பெற ஊக்கம் தரக் கூடாது. தமிழ்நாட்டில், குழப்பமில்லாமல் அரியணைக்கட்டிலில் ஏற்ற வேண்டும்.

வாரிசு இனம் பண்பாட்டை வைத்துத்தான் மதிக்க வேண்டுமே தவிர பதவிகளை வைத்து மதிக்க்க கூடாது.

வாரிசு படங்களிலேயே சுவாரசியமான படம் எது என்றால் அது ‘அக்னி நட்சத்திரம்’தான். அந்தப் படத்தை வாரிசுத் தாத்தா கருணாநிதி ஆய்வு நடத்தி சொல் வண்ணங்களை செயலாக்கினார்.

அதை நிகழ்வுக்கு கொண்டு வர அவர் எவ்வளவு பாடுபட்டு இருப்பார்! நேரு, ஜார்ஜ் புஷ்ஷைக் காட்டிலும் மக்களை இந்த நிகழ்வு மிகவும் கவர்ந்தது. உலக வாழ்க்கையின் உண்மையை வெளிக் கொண்டு வருவதாக இந்த பதவி அமைந்துள்ளது என்றார் அன்பழகன்.

Dinakaran survey – Feedbacks, Blog Posts: Maran vs Alagiri or Sun Network & DMK promotion?

dead_dinakaran_azhakiri_employees

dead_condolences+dianakaran_sun_tv_workers

maran_brothers_watching_dinakaran_victims_madurai

சற்றுமுன்…: ச: கருத்துக் கணிப்பு, தாக்குதல், கொலைகள் – விவாதம்

  • அதிமுக குறித்து கணிப்பு வெளியானவுடன் இப்படி எதுவும் நிகழவில்லை என்பதால் ‘கட்டுக்கோப்பான அதிமுக-வும் கருங்காலிக் கூடமான திமுக-வும்’ என்று ரைமிங்காக சொல்லலாமா 😛
  • ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவை தலைமை தாங்க கொடுத்துள்ள பட்டியலில் என் பெயரை விட்டுவிட்டார்கள்’ – மக்கள் டிவியில் விஜய்காந்த் வருத்தம்
  • ‘பாமக-வில் அடுத்த வாரிசு யார்’ என்று தினகரன் ஏன் சர்வே எடுக்கவில்லை? – ஜெயா டிவியில் முன்னாள் பா.ம.க. விஐபி பேராசிரியர் தீரன்
  • ‘சிவாஜி வெளியாகும் சமயத்தில் ‘அடுத்த வாரிசை’ நினைவூட்டுவது ரஜினியை தன் பக்கம் இழுக்கும் சூழ்ச்சியா!’ – விஜய் டிவியின் ‘நீயா நானா’ தலைப்பு

புகழ்பெற்ற நிறுவனத்தில் வேலை. சன் டிவியின் கம்ப்யூட்டர் பிரிவில் பணி. 30 வயது, 25 வயது. இந்த இருவரின் பெற்றோர் (மனைவி, குழந்தை உள்ளனரா என்று தெரியவில்லை) நிலை பரிதாபகரமானது. கடைநிலை சிப்பந்திகளான காவலாளி மற்றும் பார்சல் பிரிவில் ஊழியரின் நிலை அதனினும் துயரம் மிகுந்தது 😦

தீவிரவாதம், பயங்கரவாதம் என்கிறேன். அழகிரியா மாறனா ஸ்டாலினா என்பதுதான் விஞ்சி எல்லாவிடத்திலும் பரபரப்பு.

‘காயமடைந்தவர்கள்’ என்று அறிவிக்கப்படுபவர்கள், இறந்தவர்களைவிட பாவம். உடல் உபாதைகளினால் வேலை நிலைக்காது. தீப்புண்கள் ஆறுவதற்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ய இயலாத பொருளாதாரம். அதனால் நிகழும் தோற்ற மாற்றங்களுக்கு உளவியல் நிபுணரையும் அணுக முடியாத நிலை. செத்துப் போனவர்களுக்கு இடும் இரண்டு லட்சம் நஷ்ட ஈடு கூட கிடைக்காது.

காலம்: மனுநீதி சோழனாக மாறுகிறார் கருணாநிதி
சிபிஐ… நிலுவை… மேல் முறையீடு… எவனோ ஒருவன் போய் சரண்டர்…

  • அம்பை எய்து தூண்டி விட்ட தினகரன் & மாறன் சகோதரர்கள்; லாபம்: பத்திரிகை விற்பனை உயர்வு; நடுநிலை என்னும் பம்மாத்துப் பெயர்.
  • அம்பாக புறப்பட்டு பலரின் வாழ்க்கையை கொலை செய்து தன் பலத்தை நிரூபித்த மகன் அழகிரி; லாபம்: இருப்பை உணர்த்தல்; மேலிடத்துக்கு மிரட்டல்.
  • காவல்துறையை ஆளுங்கட்சி ஆதரவுடன் பயன்படுத்திய கழகம்; லாபம் – மத்திய அரசு மேல் பொறுப்பை ஒப்படைத்தல்; இமேஜ் பாதுகாத்தல்.

தட்ஸ்தமிழ் செய்தி படித்தேன்… உங்க கருத்து என்ன? முதலமைச்சர் + கட்சித் தலைவரால் சொந்த ஆட்சியிலே இவ்வளவு செய்தால் போதுமானது என்று நினைக்கிறீர்களா?

Continue reading

Three people murdered; 15 Lakhs to shutup; A feast to celebrate

‘ஜெண்டில்மேன்’ படம். மருத்துவம் பயில விரும்பும் மாணவன் அர்ஜுனின் லஞ்சப்பணத்துக்காக சத்துணவுக் கூடத்தில் பணிபுரியும் அவனுடைய அம்மா மனோரமா ‘வேலை செய்யும் இடத்தில்’ தீவிபத்தில் இறக்கிறார். அந்தப் பணத்தை கல்வித்துறை அமைச்சர் (திரைப்படத்தில் பின்னாள் முதலமைச்சர்) தூக்கியெறிந்துவிட்டு பேசுவதாக வரும் வசனம்:

‘முண்டச்சி… அங்கே செத்துப் போனா ரெண்டு லட்சம்தான் கிடைக்கும். கட்சிக்காக தீக்குளிச்சா பத்தோ பதினஞ்சோ தருவோமே… நீ சாவறியா?’

செய்தி:

பலியான மூவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 15 லட்சம் நிதியுஉதவி: கலாநிதி மாறன்

A Song and a Blog Post

உண்மையில் நான் ஒரு கடிகாரம்
ஏன் சுற்றுகிறேன் என்று தெரியாமல்
சுற்றுதம்மா என் வாழ்க்கை

உண்மையில் என் மனம் மெழுகாகும்
சில இருட்டிற்குதான் அது ஒளி வீசும்
கடைசி வரை தனிமையில்தான் உருகும்

பிறரின் முகம் காட்டும் கண்ணாடி
அதற்கு முகம் ஒன்றும் இல்லை
அந்த கண்ணாடி நான்தானே
முகமே என்னிடம் இல்லை

காகிதத்தில் செய்த பூவுக்கும்
என மனதிற்கும் ஒற்றுமை உண்டோ
இரண்டுமே பூஜைக்கு போகாதோ

பூமிக்குள் இருக்கின்ற நெருப்புக்கும்
என் ஆசைக்கும் சம்பந்தம் இருக்கிறதோ?
இரண்டுமே வெளி வர முடியாதோ

செடியை பூ பூக்க வைத்தாலும்
வேர்கள் மண்ணுக்குள் மறையும்
உதட்டில் புன்முறுவல் பூத்தாலும்
உள்ளே சறுகாய் கிடக்கிறேதே.

Raji’sView: மனதைத் தொட்ட ஒரு நிகழ்வு:

அனைவரும், எதோ ஒரு வகையில் சம்பாதித்து, அவர்கள் பிள்ளைகளை வாழ வைத்து விட்டு வாழ்க்கயின் விடுமுறையை அனுபவிக்கத் தொடங்குகிறார்கள்। ஆனால், விடுமுறையை சுகமாக அனுபவிக்க இயலாமல், நோய் வாய் பட்டு, நடக்க இயலாமல், கோல் ஊன்றி கஷ்டப்பட்டு கழிக்கிறார்கள்.

Intrusive editors and Submissive authors

co070508_Cornered_Book_Signing_Author_editor_Meet_Book.gif

Cornered by Mike Baldwin

Hug, Kiss, Love, Lust, Sex – Appropriateness in Public places

சிபா

—அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?—

எனக்கும் இந்தக் கேள்வி உண்டு. பெரும்பாலும் அமெரிக்க சூழலை கருத்தில் கொண்டு சில சிதறல்கள்:

1. அரங்கில் பிஜி-13, ஆர் என்று முத்திரை இட்டு, அந்தரங்கமான பாலுறவுக் காட்சிகள், வன்சொல் உபயோகம், அதீத வன்முறை என்று அடைப்புக்குறிக்குள், எதனால் இப்படி சான்றிதழ் வழங்கினோம் என்பதையும் சொல்லிவிட்டு, காசு கொடுத்து வரவைக்கிறார்கள்.
பேருந்தில், அங்காடியில், விளையாட்டரங்கில் ‘இந்த இடத்தில் வசவுகள் சொல்லலாம்; இங்கு இச்சையை இஷ்டப்படி தணித்துக் கொள்ளலாம்!’ என்று அதிகாரபூர்வமாக அறிவிப்பதில்லை.

2. கட்டிப்பிடிப்பதிலேயே பல வகை இருக்கிறதே… மீண்டும் அமெரிக்க சினிமா தர வரிசைப்படி strong sex sequence, sexual references, brief sexual images, pervasive strong crude and sexual content, graphic nudity என்று பலவகை. இதில் எல்லா விஷயமும் பொதுவில் செய்வது சரியா? எங்கு லகான் போடலாம்? எப்படி லிமிட் வைக்கலாம்?

காட்டாக திரைப்படம் என்றால் குரு-வையும் தென்றல்: வேட்டையாடு விளையாடுவையும் எவ்வாறு ஒப்பிட முடியும்?

3. —அச்சம் கலந்த வெட்க உணர்வினால் கூட அநாகரிகம் என சொல்கிறார்கள் —

கடற்கரையில் நீச்சலுடையில் உலா வந்தால் அழகு. விளையாட்டுகளில் ஊக்குவிப்பு என்னும் பேரில் cheerleading அழகு?! மோதிரம் மாற்றிபின் முத்தமிடுதல் அழகு. ஆதுரத்துடன் ஆரத் தழுவுதலும் அழகு. விரசத்துடன் தொடர்ச்சியான புணர்ச்சிகளில் இறங்கினால் ஒவ்வொருவருக்கும் அளவுகோல் மாறும். பிறரின் ‘ரேட்டிங்’ என்னுடைய எல்லையை மீறும்போதுதான் பிரச்சினை.

தொடர்புடைய இரண்டு திரைக்காட்சிகள்…

அ) ‘விடுகதை‘ திரைப்படத்தின் இறுதிக்காட்சி. மெரீனாவில் வயதான ஆணும் இளமையான பெண்ணும் சிரித்துப் பேசி வருவதைப் பார்த்து பிரகாஷ்ராஜ் சினமுறுவார். உளவியல் அலசலாக ஆராயும் ருத்ரன் ‘அவர்கள் ஏன் அண்ணன், தங்கச்சியாக இருக்கக் கூடாது? ஏன் பேராசிரியர், மாணவியாகவோ பிற உறவுகளாகவோ இருந்திருக்கக் கூடாது’ என்று கேட்பார்.

ஆ) ‘மௌனம் பேசியதே‘ படத்தில் சூர்யாவின் குணச்சித்திரத்தை உணர்த்தும் காட்சி. புதுமணத் தம்பதியர் தோளில் கை போட்டுக் கொண்டு சுகமாகப் பேசி நடை பழகுகிறார்கள். பைக்கில் வரும் நாயகன், அவர்களைத் தடுத்தாட்கொண்டு, ‘அவ என்ன ஓடிப் போயிடுவாளா? ஏண்டா இறுக்கிப் பிடிச்சுண்டு இருக்கே’ என்று கிண்டலடித்து பிரித்து விடுவார்.

அன்னியோன்யம் எவ்வாறு நாளடைவில் தேய்கிறது என்பதையும் இந்தக் காட்சி உணர்த்தலாம் 😉

வயதான காலத்தில் மனைவியை, அவளின் சின்னச் சின்ன செய்கைகளை, ஆடை அலங்காரத்தில் செய்யும் மாற்றங்களை, பகிர்தலுடன் வீட்டின் கடமைகளை எவ்வாறு ஆசை அறுபது நாளாக நின்று போகாமல் தொடர்ச்சியாக மோகம் காட்டுகிறான்?

‘பொது இடத்தில் கணவன் மனைவி கட்டிப் பிடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’

எப்படி கட்டுகிறார், எங்கே பிடிக்கிறார், எவ்வளவு வயது என்று பதில் கேள்வி எத்தனை பேர் கேட்டார்களோ!

Salma – Links

————————————————————————————–
எனக்கு மதப்பற்று கிடையாது
கவிஞர் சல்மா – நேர்காணல் – வி.சி.வில்வம்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியம், துவரங்குறிச்சியைச் சேர்ந்தவர் ரொக்கையா என்கிற கவிஞர் சல்மா. பெண்ணுரிமைப் போராளி, கவிஞர், எழுத்தாளர், பேரூராட்சி தலைவர், சமூகநல வாரியத் தலைவர் என்கிற பயனுள்ள பல முகங்கள் இவருக்குண்டு. இவரின் பச்சை தேவதை, ஒரு மாலையும் இன்னும் ஒரு மாலையும், இரண்டாம் ஜாமங்களின் கதை ஆகியவை புகழ்பெற்ற ஜெர்மன் புத்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

அண்மையில் அமெரிக்கா சிகாகோ பல்கலைக் கழகம் சென்று வந்திருக்கிறார். மே 4,5இல் நிகழ்ந்த தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சி குறித்தான கருத்தரங்கில் இவரின் கவிதைகள், நாவல்கள் சிறந்த படைப்பாக தேர்வாயின. தெற்காசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே படைப்பாளர் இவர். அவரை ‘உண்மை’ இதழுக்காகச் சந்தித்தோம்.
உங்களுக்கான ‘தொடக்கம்’ எப்போது?

பதினாறு வயதில் கவிதை துவங்கியது. பிறகு வாசிக்கும் ஆர்வம் வந்தது. இசுலாமிய சமூகத்தில் எனக்கான கல்வி ஒன்பதாம் வகுப்போடு முடிக்கப்பட்டது. இந்த முடிவு என்னை வெகுவாகப் பாதித்தது. இந்நிலையில் என் எழுத்தும், வாசிப்பும் பல மடங்கு அதிகரித்தன. நிறைய வாசிக்க வேண்டும் என்கிற வேட்கை, என் தேடலை அகலப்-படுத்தியது. கிராமம் போன்ற பகுதியில் வசித்-தாலும், அங்குள்ள நூலகத்தை வெகுவாகப் பயன்படுத்தினேன். வசிக்கும் இடத்தில் வாசிக்கத் தடை விதித்தார்கள். மீறிப் படித்-தேன். தேடித் தேடிப் படித்தேன்.

அத்தேடலில் தான் பெரியார் என் கைக்கு வருகிறார். எத்தனையோ நூல்கள் படித்திருப்-பேன். பெரிய பாதிப்புகள் என்னுள் நிகழ-வில்லை. ஆனால் பெரியார் எழுத்துகள் என் உடலில் வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தின. குறிப்-பாக பெண்ணுரிமைக் கருத்துக்கள் என்னை வியப்படையச் செய்தன. குழப்பமான பல நிலைகளிலும் நான் தீர்வு பெற்றேன். எழுதவும், வாசிக்கவும் எனக்கிருந்த எதிர்ப்பை பெரியாரின் துணை கொண்டு முறியடித்தேன்.

எழுதவும், படிக்கவும் இவ்வளவு எதிர்ப்புகள் – இதில் அரசியல் நுழைவு எப்படி சாத்தியம்?

அது இயல்பானது. துவரங்குறிச்சி பகுதி மகளிர் தொகுதியாக மாறிய நேரம். அப்போது பேரூராட்சி தேர்தல் அறிவிக்கப்படுகிறது. நானும் வேட்பாளராக நிற்கும் நிலை. சுயேச்சையாக நின்று வென்றேன். ‘வென்றேன்’ என்கிற வார்த்தைக்குப் பின் நிறைய போரா-டியுள்-ளேன். ஜமாத் பெரியவர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தந்தார்கள். மீண்டு வந்தேன்.

பேரூராட்சி தலைவராக உங்களின் பணி எப்படியிருக்கிறது?

மக்கள் பாராட்டும்வண்ணம் செயல்-பட்டேன். துவரங்குறிச்சி பேரூராட்சி தேர்தல் பல ஆண்டுகள் நடைபெறாமல் இருந்தது. உள்ளூரில் சிலரின் ஆதிக்கத்தில் அது அகப்-பட்டுக் கிடந்தது. என் பொறுப்புக்குப் பின்-னால் முறையான தேர்தல் நடந்தது. அதே-போன்று பேரூராட்சிக்கு 11 கடைகள் இருந்தன. 20 ஆண்டுகளுக்கு மேல், மிகக் குறைந்த வாடகையில் பலரும் அனுபவித்தார்கள். குறிப்பாக ஆர்.எ°.எ°. ஆட்களின் ஆக்கிர-மிப்பில் இருந்தது. அவர்களை அப்புறப்படுத்தி 11 கடைகளை 18 கடைகளாக மாற்றியமைத்து, இன்றைக்கு ஆண்டு வருமானம் 14 இலட்சம் வருகிறது. இதுபோன்று பல.

அண்மையில் உங்களின் அமெரிக்க வாய்ப்பு மற்றும் வேறு பயணங்கள் குறித்துச் சொல்லுங்களேன்?

அமெரிக்கா, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசிய இலக்கியம் மற்றும் இலக்கிய வளர்ச்சித்துறை இருக்கிறது. தெற்காசிய மொழிகள் அனைத்திலும் இருந்து ஒருவரின் படைப்புகள் தேர்வாகிறது. இம்முறை தமிழில் என் எழுத்துக்களை விவாதத்திற்கு எடுத்திருந்-தனர். அதற்காக அமெரிக்கா சென்றேன். 2002ஆம் ஆண்டு பெண்ணுரிமை மாநாட்டில் பங்கேற்க இலங்கை சென்று வந்தேன். உள்ளாட்சி அமைப்பில் சிறப்பாக செயல்பட்-டதற்காக 2005ஆம் ஆண்டு பாகி°தான் சென்றேன். இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு சிறப்பு அழைப்பாளராக 2006இல் சென்று வந்தேன்.

பொது வாழ்க்கையில் பலப்பல இடையூறுகளைச் சந்திக்க வேண்டி வருமே, உங்களுக்கு எப்படி?

இல்லாமல் இருக்குமா? அதிகபட்சமாய் சந்தித்து விட்டேன். என் அரசியல் நிகழ்வு-களுக்கு என் குடும்ப ஆதரவு உண்டு. அதனால் கொஞ்சம் பலம் பெற்றேன். எழுத்து, பயணம், அரசியல் இவைகளைக் கடக்க ஆண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உண்டு. ஒரு பெண்ணாய் நான் நிறைய போராடியுள்ளேன். பல நிலைகளையும் கடந்துதான் இன்றைக்கு தமிழக அரசால் சமூகநல வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளேன்.

திராவிடர் கழகம் குறித்த உங்களின் பார்வை?

என் வாழ்வின் தொடர் போராட்டங்களில், எனக்கு எல்லாமுமாக இருந்தது தந்தை பெரியார் கருத்துகளே! அந்த இயக்கத்தின் மீது எப்போதுமே நான் அபிமானம் கொண்டுள்-ளேன். அரசியலுக்கு வராமல் பல சாதனை-களை நிகழ்த்துவது திராவிடர் கழகமே! குறிப்பாக ஆசிரியர் மீது நான் தனி மரியாதை வைத்துள்ளேன். அவர்களின் தொடர் உழைப்பும், சுறுசுறுப்பும் என்னை வியப்-படையச் செய்துள்ளன. இந்த இயக்கமே பெண்களை மேம்படச் செய்யும்.

மதம் குறித்து?

எனக்கு மதப்பற்று கிடையாது. மனிதராக வாழவே ஆசை. பெண்ணுரிமைக் கருத்துகளை அதிகம் வலியுறுத்துவேன். பெண்களின் பெயருக்குப் பின்னால் கணவன் அல்லது தந்தையின் பெயரை இணைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தனித்த அடையாளம் தேவையாக உள்ளது.

– நேர்காணல் – வி.சி.வில்வம்

Continue reading

New Environment – Adapt your Head

new_yorker_hairstyles Cartoon