1. தேர்தல் ஆதரவு: சிறுபான்மை உரிமை பாதுகாப்பு கழகம் கருத்து : திமுக கூட்டணிக்கு எஸ்றா சற்குணம் தலைமையில் சில ஆயர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதை தேசிய சிறுபான்மை உரிமை பாதுகாப்புக் கழகம் கண்டித்துள்ளது.
ஒரு சில தனி நபர்கள் ஒரு குறிப்பிட்ட கூட்டணிக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிப்பதை, ஒட்டுமொத்த சிறுபான்மையினரின் முடிவு என கருதக் கூடாது.
மத மாற்றத் தடைச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட போதிலும் பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால், இன்றளவும் காங்கிரஸ் கட்சி ஆளும் சில மாநிலங்களில் அந்தச் சட்டம் அமலில் உள்ளது. எனவே, சிறுபான்மை மக்கள் திமுக கூட்டணியை இத்தேர்தலில் ஆதரிக்க மாட்டோம். இம்மக்களை பாதுகாக்கும் வேட்பாளர்களுக்கு தேர்தலில் ஆதரவு அளிப்போம்.
– ஒருங்கிணைப்பாளர் அண்டன் கோம்ஸ்
2. “பொன்’மலையை வெட்டி தலா 1 கிலோ தங்கம்?’: திருச்சியில் தற்போது பரபரப்பாக பேசப்படும் அளவுக்கு ஒரு துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
“அகில இந்திய மலஜலம் கழிப்போர் சங்கம்‘ என்ற பெயரில் உள்ள இதன் தொடக்கமே படு நக்கலாக “பொய்யே துணை’ எனத் தொடங்குகிறது. சங்கம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்… என்ற வாக்குறுதிகள் பட்டியலும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
“குடிசை வீடுகள் அனைத்தையும் மாற்றி சகல வசதிகளும் நிறைந்த வீடுகள் கட்டித் தரப்படும். ஒவ்வொரு வீட்டிலும் இணைக்கப்படும் 5 குழாய் இணைப்புகள் மூலம் பச்சை மற்றும் புழுங்கல் அரிசிகளும், கோதுமை மாவு, துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, எண்ணை வகைகள், ஹார்லிக்ஸ், போர்ன்விட்டா என சகலமும் வீடுகளுக்கே வழங்கப்படும். திருச்சியிலுள்ள “பொன்மலை’யை உண்மையான “பொன்’ மலையாக மாற்றி வெட்டி மக்களுக்கு 1 கிலோ தங்கம் வழங்கப்படும்’
என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
“எஸ்.பி. சையதுமுகமது என்கிற சத்யானந்த யோகி பாபா’ என்ற பெயரில் அச்சடிக்கப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரத்தில் முகவரி ஏதுமில்லை.
3. பொன். தனசேகரன் ::
இவரது சகோதரர் அன்பில் பொய்யாமொழி மறைவுக்குப் பிறகு, அன்பில் பெரியசாமி தேர்தலில் போட்டியிட வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் எம்பியாக இருந்தவர் ஆலடி அருணா.
மகனுக்காக வழக்கமான தமது வீரபாண்டி தொகுதியை விட்டுக் கொடுத்துவிட்ட அவர், சேலம்-2 தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
மகனுக்கு வழிவிட்டு தந்தை தேர்தலில் ஓதுங்கிக்கொண்டுள்ளார்.
இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதையத் தேர்தலிலும் அவருக்கு வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.
முதல் முறையாகப் போட்டியிடுகிறார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் இருந்தவர் இவர்.
4. CPI(M) N Varadarajan – SWOT :: தங்கள் அணியின் பலம், எதிர் அணியின் பலவீனம் என்ன என்பது குறித்து கருத்துக் கூறுமாறு அரசியல் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் அனுப்பியுள்ள கட்டுரை.