Tag Archives: Temples

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் கருடோத்ஸவம்

சூரியப் பிரபை :: Srinivasa Perumal Brahmotsavam: Day 2

Srinivasa Perumal Brahmotsavam: Day 2

சிம்ம வாகனம்: Day 1

இரவு ஸூர்யப்ரபை:

Srinivasa Perumal Temple Festival: Day 1

த்வஜ ஆரோஹணம்: சப்பரம் Day 1 « Chapparam – Basic Pallakku

இரவு ஸிம்ஹ வாஹனம்

Sreenivasa Perumal Temple Festival: Day 1

கைசிக புராண நாடகம்

ஒளிப்படங்கள், விழியம்: Kaisika Purana Nadagam: Nambaduvaan Sarithiram by Prof. Ramanujam

திருக்குறுங்குடி திரு வடிவழகிய நம்பித் திருக்கோவில் கைங்கர்யமான

கைசிக புராண நாடகம்

பிறவித்துயரிலிருந்து ஈடேற எளிதான வழி எது எனப் பூமாதேவி கேட்க, இசைத்தொண்டே வழி என்று ஸ்ரீவராகப் பெருமான் திருவாய் மலர்ந்தருளியது கைசிக புராணம். இதைக் கேட்ட பூமாதேவி ஆண்டாளாக அவதரித்து பூமாலையுடன் பாமாலையும் சூட்டி திரு அரங்கனை மணந்தார்.

ஸ்ரீ வராக புராணத்தில் உள்ள இந்த புராணத்தை கார்த்திகை மாதம் சுக்லபட்ச கைசிக ஏகாதசி முடிந்த துவாதசி காலையில் வைணவக் கோயில்களில் ஸ்ரீ பராசர பட்டர் வியாக்கியானத்துடன் பாராயணம் செய்து வருகிறார்கள். கைசிக ராகத்தின் பலனைச் சிறப்பித்துக் கூறுவதால் கைசிக புராணம் என்று பெயர் பெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரிக்கு 10 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திர கிரி அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடியில் நம்படுவான் சரிதம் நடைபெற்றதால் அப்பதியிலுள்ள வடிவழகிய நம்பி சன்னதியில் கைசிக ஏகாதசியன்று இந்நாடகம் நடித்துக்காட்டும் கைங்கர்யமாக நடைபெற்று வருகிறது.

மீட்டுருவாக்க முயற்சி

ஐநூறுக்கும் மேலான ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த நாடகம் அதன் முழுவலிமையையும் இழந்து நின்றது. சங்கரக்கம்பர், நாராயணன், குறுங்குடி காந்தம்மாள், நம்பி போன்ற பாரம்பரியக் கலைஞர்களின் கைங்கர்ய உள்ளம் ஓரளவேனும் நடைபெறும் அளவில் இம்மரபைக் காத்து வந்தது.

திருக்குறுங்குடி நம்பி திருக்கோவில் பொறுப்பில் டிவியெஸ் (TVS) குடும்பத்தினர் பங்கேற்றதும் அக்குடும்பத்தில் ஒருவரான நாட்டிய வல்லுநர் திருமதி. அனிதா ரத்னம் அவர்களது உதவியும், முயற்சியும் இந்நாடகத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தது.

திரு நாராயண அய்யங்காரின் தத்துவார்த்த ஆலோசனை, பேராசிரியர் சே இராமானுஜத்தின் ஆய்வு மற்றும் வழிகாட்டல், கலைமாமணி பா. ஹேரம்பநாதனின் வடிவாக்கம் ஆகியவை நம்பி திருக்கோவிலில் பத்து ஆண்டுகளாக இத்திருசேவையைத் தொடர வழி செய்துள்ளன.

நம்படுவான் சரிதம்

பாணர் குலத்தில் பிறந்த சிறந்த வைணவ பக்தரான நம்படுவான் தினசரி இரவில் திருக்குறுங்குடி நம்பியை இசையால் பாடிப் புகழ்வதை தமது கைங்கர்யமாகக் கொண்டவர்.

கார்த்திகை மாதம் சுக்கில பட்சம் கைசிக ஏகாதசியன்று நம்படுவான் உண்ணாது உறங்காது விரதங்காத்துப் பெருமாளை சேவிக்க இரவில் வரும்போது, பிரம்ம ராக்ஷசன் ஒருவனால் வழி மறிக்கப்படுகிறார்.

கொன்று தின்று பசி தீர்த்துக் கொள்ள வந்த அந்த ராஷசனிடம், தான் பெருமாளை சேவித்து விட்டுத் திரும்பி வருவதாகப் பல சத்தியங்கள் சொல்லியும் ஏற்காதபோது, பெருமாள் மீதே சத்தியம் செய்து அனுமதி பெறுகிறார்.

பெருமாளைப் பாடி பிரியாவிடை பெற்றுத் திரும்பும் போது வடிவழகிய நம்பியே கிழவராக வந்து சோதிக்க எண்ணி, இராட்சனிடம் திரும்பிப் போகாமல் தப்பித்துச் செல்லும்படி நம்படுவானிடம் கூறுகிறார். ஆனால் நம்படுவானோ சத்தியம் தவறாமல் இராஷஸனிடமே மீண்டும் வருகிறார்.

ஆனால் ராக்ஷஸன் அவரை உண்பதற்குப் பதில் அவரது புண்ணியத்தில் குறிப்பாக கைசிக ராகத்தில் பெருமாளைப் பாடிக் கிடைத்த புண்ணியத்தில் எள்ளளவாவது தருமாறு கெஞ்சுகிறான். அந்தணர் காலத்தில் சோம சர்மாவாக பிறந்த அந்த இராக்கதன் அகந்தையால் யாகத்தில் மந்திரத்தைத் தவறாகச் சொன்னதால் இராட்சனாக சபிக்கப்பட்டான்.

சாப விமோசந்த்திற்காக நம்படுவானின் கைசிக ராகப் புண்ணியத்தைப் பெறக் காத்திருப்பதாகக் கூறி நம்படுவானின் அடிகளில் விழுந்து வணங்குகிறான். நம்படுவானும் இரக்கப்பட்டு தனது பாட்டின் பலனைத் தந்து அவனுக்கு விமோசனம் கொடுத்து நம்பியின் திருவடிகளை அடையச் செய்தார்.

மீட்டுருவாக்கத் திருத்தொண்டும் பங்கேற்பும்

அரங்கில்
நம்படுவான் கைவாரம்: கலைமாமணி குரு பி ஹேரம்பநாதன்
நம்படுவான்: முனைவர் சுமதி சுந்தர்
திருமதி எம் ராஜகுமாரி
பிரம்மராட்சஷன்: திரு எஸ். கோபி
நம்பிக்கிழவர்: குமாரி எம்.ஏ. அருணோதயம்
துணைப்பாத்திரங்கள்: குமாரி. தமிழ்மதி, குமாரி ஜோதி

இசையில்
நட்டுவாங்கம்: திரு எச் ஹரிஹரன்
பாட்டு: திருமதி எஸ் லலிதா
திருமதி எஸ் பானுமதி
குழல்: திரு என் கிரீஷ்குமார்
மிருதங்கம்: திரு என் ஆர் மணிகண்ட தீட்சிதர்
நாதஸ்வரம்: திரு அருண்குமார்
தவில், சுத்தமத்தளம்: திரு டி செந்தில்குமார்

வல்லுநர் ஆலோசனையில்
தத்துவம்: திரு உ.வே திருநாராயண ஐயங்கார்
அரங்க இயல்: கலைமாமணி நா முத்துசாமி
பனுவல்: முனைவர் ம வேலுசாமி
இசை: பேராசிரியர் ம வைத்தியலிங்கம்
முனைவர் அரிமளம் பத்மனாபன்

ஆவணப்படுத்துதலில்
முனைவர் கு. முருகேசன்
திரு எஸ் ஏ கன்னையா

நிர்வாக ஒருங்கிணைப்பு: திரு ஆர் நாகராஜன்
திரு ஜி ராஜமாணிக்கம்
உதவி: திரு ஜி விஜயகுமார்

வடிவமைப்பு: கலைமாமணி பி ஹேரம்பநாதன்

வழி நடத்துநர்: பேராசிரியர் சே இராமானுஜம்

கலையாக்க ஆலோசகர் மற்றும் தாளாளர்: கலைமாமணி திருமதி அனிதா ரத்னம்

தாளாண்மை: ‘அரங்கம்’ அறக்கட்டளை, சென்னை.

சென்னை ராஜாங்கம் – 2

நேற்று பெருமாளுடன் தொடங்கியதால் இன்று ருத்ரனில் துவங்கலாம். ரஜினி பாட்டு போட்டால் கமல் பாடலும் தொடரும் ‘ஒலியும் ஒளியும்’ கால பாரம்பரியம். வெள்ளீஸ்வரர் கோவிலிலும் ‘வைகாசிப் பெருவிழா’ ஆரம்பிக்க இருக்கிறது. ஸ்ரீனிவாசர் ஷங்கர் படம் மாதிரி. வண்ணப் புகைப்படங்களுடன் பிரும்மாண்டம். இருபக்க பச்சைத்தாளில் தம்பி வெட்டோத்தி சுந்தரம் மாதிரி அமரிக்கையான தயாரிப்புடன் வள்ளீசுவரர்.

கோவில் படிக்கட்டில் அழுக்கான bitch படுத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பைரவர் கழுத்தைச் சுற்றி ருத்திராட்சம் அணிந்திருந்தார்.

கபாலி கோவில் பிரதோஷத்திற்கு ரஜினி பட ஓப்பனிங் போல் கூட்டம் அலைமோதும். இருபது வருடம் முன்பு பார்த்த சிலர் இன்றும் வந்திருந்தார்கள். கோவில்களில் கூட்டம் அதிகரிக்கவும் இல்லை; எல்லா வயது வகையிலும் குறையவும் இல்லை.

நந்திதேவரைப் பார்க்க பெண்மணிகள் தாராளமாக முண்டியடித்து இடிக்கிறார்கள். இனி சல்லிக்கட்டுக்கு ‘மகளிர் மட்டும்’ சிறப்பு போட்டி நடத்தலாம். விருமாண்டித் தோற்றுப் போவார்.

உடற்பயிற்சிக்கும் உண்ணாமுலைக்கும் சம்பந்தம் இருப்பது எத்தனை அட்சரம் உண்மையோ, மகிழ்ச்சிக்கும் மலர்மிசை ஏகுவதற்கும் தொடர்பு இருக்கும்.

வரப்போவதை அறிந்து அறிவுறுத்த சோதிடமும் எண் கணிதமும் கைரேகையும் மூலஸ்தானமும் உதவுமா? சந்தோஷம் குறித்து அமெரிக்க ஊடகங்கள் அலசி ட்ரையரில் போடுகின்றன.

1. What Makes Us Happy? – The Atlantic (June 2009): “Is there a formula—some mix of love, work, and psychological adaptation—for a good life?”

2. What You Don’t Know Makes You Nervous – Happy Days Blog – NYTimes.com: “Happy Days is a discussion about the search for contentment in its many forms — economic, emotional, physical, spiritual — and the stories of those striving to come to terms with the lives they lead.”

‘டெக்கான் சார்ஜர்ஸ்’ கில்லி அடித்து நொறுக்குவார் என்பதை ‘டெல்லி டேர்டெவில்ஸ்’ செவாக் முன்பே அறிந்திருந்தால் யாதொரு வருத்தமும் ரசிகருக்கு இல்லை என்கிறது பிந்தைய கட்டுரை.

Wiiஇல் பௌலிங் போடும்போது ஒரு பால் ஸ்ட்ரைக் செய்தாலே, அடுத்த தடவை கை நடுங்கும். பந்துக்கு பந்து ஆறும், நான்குமாக விளாசி, இடைவேளைக்கு ஒரு பந்து பாக்கி இருக்கும் சமயத்தில், லட்டுவாக தூக்கி அடித்து ஆட்டமிழந்தார் கில்க்ரிஸ்ட்.

‘ஏதோ நடக்கிறது! இதமாய் இருக்கிறது!!’ என்று விட்டுவிடலாம். மேட்ச் ஃபிக்ஸிங் என்பது அந்தக் காலம். பெட் பாக்ஸிங் என்பது இந்தக் காலம்.

Where-is-prabhakaran-LTTE-Nakkeeran-Cover-Storyதமிழகப் பாதை தனிமனிதக் கவலை என்றால், தமிழ்வலை வழி தனி வழி. சென்னையெங்கும் ‘தமிழக அரசியல்’ பத்திரிகையின் சுவரொட்டி அல்லோலகல்லப்படுகிறது. இணையத்தில் வழக்கம்போல் குண்டுச்சட்டி கழுதையாக நக்கீரன் அடிபடுகிறது.

1. உயிருடன் உள்ளார் பிரபாகரன்

2. சிதைவுகள்…: நக்கீரன்: ஊடகத்துறையின் பொறுக்கித்தனம்?

3. புலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்?: பி.இரயாகரன்

கடந்த மூன்று உரல்களைத் தேடும்போது கிடைத்த Ivan Sivan ட்விட்:

TV Artists Union President passed away. http://bit.ly/vo1ud
12:06 PM May 19

Nanjangud Temple

Temple of Nanjundeshwar: Mysore

Temple of Nanjundeshwar: Mysore

மேலும்: ஃப்ளிக்கர்

நியு யார்க் நகரம் – தாங்ஸ்கிவிங் வாரம்

சென்ற வாரம் நியு யார்க் நகரமும் அதன் சார்ந்த வட்டாரங்களிலும் சுற்றிய கதை:

  • வாடகைக் கார் அமெரிக்க தயாரிப்பு. பெரியதாக இருந்தது. துளியசைத்தால் முன்பின் நகர்ந்து சாய்ந்து உயர்ந்து வளைந்து நெளியும் இருக்கை முதல் உள்ளே ஓட்டுநருக்கு ஒரு வெப்பநிலை, பயணிக்கு இன்னொரு குளிர்நிலை வைக்கும் வரை சின்னச் சின்ன சௌகரியங்கள் நிறைந்திருந்தன. எஞ்ஜின் சரியில்லாவிட்டாலும் கவரிங் தூள்.
  • பாஸ்டனில் இருந்து நியுயார்க் செல்லும்வழியில் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 68 மைல் வேகத்தில் சென்றதாக புள்ளிவிவரம் காட்டியது. திரும்பிவரும்போது கும்பலோடு கோவிந்தா போட்டதினால் 35 மைல்தான் ஒரு மணி நேரத்தில் சராசரியாக செய்ய முடிந்தது. மெதுவாக செல்வதற்கு ட்ராஃபிக் மாமா நிறுத்துவாரா?
  • நியுயார்க் கென்ன்டி விமான நிலையம் செல்லும் போதெல்லாம் முன்னுமொரு காலத்தில் எனக்கு நேர்ந்த சம்பவத்தை கூட இருப்பவர்களோடு நினைவு கூர்வேன். பதினெட்டாவது தடவையாக மனைவியும், மூன்றாவது தடவையாக மகளும் கேட்டுவைத்தார்கள். பாஸ்டனில் அந்த மாதிரி செய்தால் கப்பம் கட்ட சொல்கிறார்கள்.
  • நியூ யார்க் ஃப்ளஷிங் கணேஷா கோவில் புனருத்தாரணம் செய்கிறார்கள். நான் அமெரிக்க வந்தபிறகு கட்டி முடிக்கப்பட்ட அரங்கத்திற்கு முதன் முறையாக மேயர் ப்ளூம்பர்க் வந்திருந்தார். மும்பை குண்டுவெடிப்புக்கு இரங்கல் சொன்னார். வலைப்பதிவர்களும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.
  • உள்ளாட்சி அமைப்பின் சபாநாயகரும் வந்திருந்தார்.  ‘இப்போது முறைப்படி பூரணகும்ப மரியாதை செய்யமுடியவில்லை. அடுத்த முறை சாஸ்திரோப்தமாக அழைப்பதாக’ கோவில் நிர்வாகி வாக்களித்தார். இந்து மதம் லெஸ்பியன்களை எப்படி பார்க்கிறது?
  • நியுயார்க்கில் சென்ற இடமெல்லாம் மும்பை குண்டுவெடிப்பிற்காக மன்னிப்பு கோரினார்கள். ‘நீங்கள் இந்தியர்தானே!? உங்கள் ஊரில் இப்படி நடந்துருச்சே! ரொம்பவும் சாரிஈஈஈ… தங்கள் உறவினர், தெரிந்தவர் யாருக்கும் சேதமில்லையே?’ என்று பரிவுடன் விசாரித்தார்கள். அமெரிக்காவின் விடிவெள்ளி சி என் என்னுக்கும் விடாக்கண்டர் லஷ்கர் – இ – தொய்பாவுக்கும் உயிர் நீத்த ஆறு அமெரிக்கர்களுக்கும் நன்றி.
  • நடுத்தெருவில் புதிய ப்ராட்வே ஷோவிற்காக துண்டுச்சீட்டு கொடுப்பவர் முதல் ஃபாந்தம் ஆஃப் தி ஓபராவிற்கு கோட் சூட் போட்ட கனவான் வரை முகமன் கூறி, புன்னகை சிந்தி, துக்கம் விசாரித்தார்கள். ‘இந்தியராகப் பிறந்திட மாதவம் செய்ய வேண்டும்’ என்பது போன்ற அரச கவனிப்பு.
  • ஃப்ளஷிங் கணேஷ் கோவில் சாப்பாடு ஏ1. அது கேண்டீன் என்று சொல்வது இழுக்கு. நியூ ஜெர்சி சரவண பவன் அண்ணாச்சி தொழிலும்  சுவையும் சேவையும் கற்கவேண்டிய தலம்.
  • இதற்கு நேர் எதிர்மாறாக நியு ஜெர்சி ப்ரிட்ஜ்வாட்டர் பெருமாள் உணவகம். சட்னியும் சாம்பாரும் ஜொலிக்காவிட்டால் தோசை சோபிக்காது என்பதை இவர்களுக்கு சொல்ல வேண்டும். எனக்கு தெலுங்கு தெரிசிலது ஆதலால், ஃப்ரீயா விட்டுவிட்டேன்.
  • நியு ஜெர்சி கோவிலில் அபிஷேகம் என்று கேலன் கேலனாக பால் கொட்டாமல் கால் கேலன் பால், அரைக் கரண்டி தயிர் என்று சிக்கனமாக செய்கிறார்கள். சாக்கடையும் சீக்கிரம் ரொம்பி சுற்றுச்சூழலை பாதிக்காமல், கடவுள் பக்தியும் குறைக்காமல், நல்ல பேலன்ஸ். கோவிந்தா வாழ்க!
  • நியூயார்க் நகரத்தில் இரவில் யாரும் உறங்குவதில்லை. வீட்டில் சமைப்பதுமில்லை. பின்னிரவு ஒரு மணிக்கு கூட சாப்பாட்டுக் கடைகளில் க்யூ வரிசை நீள்கிறது. சாலை முக்குகளில் கூட்டம் கூட்டமாக அரட்டை. மெக்டொனால்ட்ஸ் 24 மணி நேரமும் ஃபாஸ்ட் ஃபுட் செய்து தர வைத்திருக்கிறார்கள். பூஜ்யம் டிகிரி குளிருக்காக கதகதப்பாக இறுக்கியணைத்தபடி இணைந்த உடல்களாக அறுபத்தி மூவர் விழா பவனியாக சாரி சாரியான மக்கள். இந்த டவுன்டர்ன், ரிசெஷன் என்பதெல்லாம் வால் ஸ்ட்ரீட் செஞ்ச போலி என்றார்கள்.
  • கோளரங்கம், நேஷனல் ஜியாகிரபியின் 3டி படம் போல் நான் தூங்குவதற்கு இன்னொரு இடம் அகப்பட்டது. ஃபாந்தம் அஃப் தி ஒபராவின் இன்னிசையும் கும்மிருட்டும் ஜெகஜ்ஜாலங்களும் தாலாட்டி உறங்கச் சொன்னது. ‘மகள் குறட்டை பெரிதா, என் குறட்டை பெரிதா?’ என்று சாலமன் பாப்பையா மன்றத்தில் அடுத்த தூக்கம் தொடர எண்ணம். ஆராரிரோ என்பது மேற்கத்திய உச்சரிப்பில் மறுவி ஆபரா ஆனதாக தமிழறிஞர் எவரும் நிறுவவில்லையா?
  • பாம்பே ட்ரீம்ஸ் இன்னும் ஓடுதா? ஃபாந்தம் ஆஃப் தி ஓபரா இருபதாண்டுகளாக நிறையரங்குகளாக வெற்றிகரமாக நடத்தப்படுகிறது. மெழுகுவர்த்தி நிறைந்த பேய்வீடு, ஊஞ்சல், படிக்கட்டு, பறந்து உலாவுதல், பட்டாசு வெடிகள் என்று உறக்கத்தைக் கலைக்க அரும்பாடு பட்டாலும் ஒபரா பாடல்கள் மெல்லிசையாகவே அமைந்திருக்க வேண்டும்.
  • எம்பயர் ஸ்டேட் ப்ல்டிங்கின் 83-வது மாடியை உள்ளரங்கமாக மாற்றவேண்டும். கடுங்குளிரில் புகைப்படம் சுட்டு சூடேற்ற முடியுமா?
  • பர்மா பசார் கனால் தெரு, ஏழாண்டுகளாக தரைமட்டமாகி இருக்கும் உலக வர்த்தக மைய வளாகம், இந்த ஆண்டு தரைமட்டமான வால் தெரு, தொலைக்காட்சிசூழ் டைம்ஸ் சதுக்கம், திரைப்பட தீவிரவாதிகளால் தகர்க்கப்படும் மேன்ஹட்டன் மேம்பாலங்கள், காபந்து கெடுபிடி நிறைந்த சுதந்திர தேவி, காந்தி பொம்மையும் வசிக்கும் மெழுகு காட்சியகம், ரிப்ளியின் நம்பினால் நம்புங்கள் போன்ற புனிதத்தலங்களில் காலடியும் புகைப்பட ஃப்ளாஷ் அடியும் எடுக்காமல் படேல் வால்யூ எனப்படும் தலபுராணம் நிறைவுறாது.

உழைப்பாளி பாட்டாளி வேலைக்காரர் :: PiT June

போட்டித் தலைப்பு
அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work) – அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினங்களை (மனிதர்கள் /மிருகங்கள்) ஒரு படத்துக்குள் கொண்டு வருதல்.

கொசுறு வேலை

எட்டுகின்ற உணவை எட்டாத உயரத்தில் வைத்து குப்பை கருவி காக்கை