Tag Archives: Chennai

புத்தக லிஸ்ட்

மே 20 முதல் மூன்று வார சென்னைப் பயணத்தில் வாங்க நினைக்கும் புத்தகப் பட்டியல்:

  1. உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) –  பக்கங்கள் 112. விலை ரூபாய் 65. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  2. ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – பக்கங்கள் 168. விலை ரூபாய் 95. வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம்
  3. இலக்கிய உரையாடல்கள் (நேர்காணல்களின் தொகுப்பு): ஜெயமோகன் & சூத்ரதாரி – Rs.150.00; பதிப்பாளர்: எனிஇந்தியன்; பக்கங்கள்: 288
  4. அம்மன் நெசவு: சூத்ரதாரி – Rs.70.00; பதிப்பாளர்: தமிழினி
  5. மீஸான் கற்கள்: புனத்தில் குஞ்ஞப்துல்லாதமிழில்: குளச்சல் மு. யூசுப்; Rs.150.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  6. நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை: நாஞ்சில் நாடன்; Rs.60.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  7. அஞ்சலை: கண்மணி குணசேகரன்; Rs.160.00; பதிப்பாளர்: தமிழினி
  8. ரப்பர் (நாவல்): ஜெயமோகன் – Rs.75.00; பதிப்பாளர்: கவிதா
  9. உண்மை கலந்த நாட்குறிப்புகள்: அ. முத்துலிங்கம் – Rs.170.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 287
  10. ஏழாம் உலகம்: ஜெயமோகன் – Rs.170.00; பதிப்பாளர்: தமிழினி
  11. எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும்: சாருநிவேதிதா – Rs.60.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 104
  12. என் வீட்டின் வரைபடம்: ஜே. பி. சாணக்கியா; Rs.75.00; பதிப்பாளர்: காலச்சுவடு
  13. தமிழ் மண்ணின் சாமிகள்: மணா; Rs.50.00; பதிப்பாளர்: உயிர்மை; பக்கங்கள்: 80
  14. கூளமாதாரி: பெருமாள் முருகன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  15. டேபிள் டென்னிஸ்: கோபிகிருஷ்ணன்; Rs.15.00; பதிப்பாளர்: தமிழினி
  16. வெள்ளெருக்கு: கண்மணி குணசேகரன் – Rs.90.00; பதிப்பாளர்: தமிழினி
  17. கு.அழகிரிசாமி கடிதங்கள் – கி.ரா.வுக்கு எழுதியது: Rs.140.00; உயிர்மை; பக்கங்கள்: 238
  18. சுந்தர ராமசாமி: நினைவின் நதியில்: ஜெயமோகன் – Rs.100.00; உயிர்மை; பக்கங்கள்: 216
  19. கிருஷ்ணப் பருந்து: ஆ.மாதவன் – Rs.35.00; அன்னம்; பக்கங்கள்: 75
  20. கங்கணம்: பெருமாள்முருகன் – RS 235/-
  21. வட்டத்துள்:வத்சலா – Rs.175.00 – உயிர்மை; பக்கங்கள்: 300
  22. ஒரு பனங்காட்டுக் கிராமம்: மு.சுயம்புலிங்கம் – Rs.90.00; உயிர்மை; பக்கங்கள்: 160
  23. வார்ஸாவில் ஒரு கடவுள்: தமிழவன் – Rs.275.00; உயிர்மை – பக்கங்கள்: 438
  24. நான் பேச விரும்புகிறேன்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; வம்சி புக்ஸ் – பக்கங்கள்: 152
  25. மிதமான காற்றும் இசைவான கடலலையும்: ச.தமிழ்ச்செல்வன் – Rs.150.00; தமிழினி; பக்கங்கள்: 223
  26. பேசாத பேச்செல்லாம்: தமிழ்ச்செல்வன்- RS 80 /-
  27. சொல்லில் அடங்காத இசை: ஷாஜி; தமிழில்: ஜெயமோகன்: Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 200
  28. பாபுஜியின் மரணம்: நிஜந்தன் – Rs.120.00; உயிர்மை; பக்கங்கள்: 208
  29. மேகமூட்டம்: நிஜந்தன்உயிர்மை; Rs:90.00
  30. மரம்: ஜீ. முருகன் உயிர்மை; Rs:140.00
  31. கண்ணகி: சு.தமிழ்ச்செல்வி உயிர்மை; Rs:120.00
  32. பல நேரங்களில் பல மனிதர்கள்: பாரதி மணி உயிர்மை; Rs: 100.00
  33. வெளிச்சம் தனிமையானது: சுகுமாரன் உயிர்மை; Rs: 120.00
  34. ஏறுவெயில் (நாவல்): பெருமாள்முருகன்: காலச்சுவடு: ரூ. 160
  35. சாயாவனம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): சா. கந்தசாமி: காலச்சுவடு: ரூ. 150
  36. பள்ளிகொண்டபுரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்): நீல. பத்மநாபன்: ரூ. 225
  37. சில தீவிர இதழ்கள் (கட்டுரைகள்): காலச்சுவடு: கல்பனாதாசன்: ரூ. 225
  38. வடு: கே.ஏ.குணசேகரன் : காலச்சுவடு: Rs.65.00
  39. வாடிவாசல் (நாவல்): சி. சு. செல்லப்பா : காலச்சுவடு: ரூ. 40
  40. சாய்வு நாற்காலி (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.175
  41. ஒரு கடலோர கிராமத்தின் கதை (நாவல்): தோப்பில் முஹம்மது மீரான் : காலச்சுவடு: ரூ.150
  42. பொய்த் தேவு (நாவல்): க.நா. சுப்ரமண்யம் : காலச்சுவடு: ரூ. 150
  43. வேள்வித் தீ (நாவல்) : எம்.வி. வெங்கட்ராம் : காலச்சுவடு: ரூ. 90
  44. புனலும் மணலும் (நாவல்): ஆ. மாதவன் : காலச்சுவடு: ரூ.90
  45. நான் காணாமல் போகும் கதை (குறுநாவல்): ஆனந்த் : காலச்சுவடு: ரூ.50
  46. போரின் மறுபக்கம்: ஈழ அகதியின் துயர வரலாறு – (அகதியின் அனுபவங்கள்): தொ. பத்தினாதன் : காலச்சுவடு: ரூ.175
  47. அறியப்படாத ஆளுமை: ஜார்ஜ் ஜோசப் (வாழ்க்கைச் சித்திரம்): பழ. அதியமான் : காலச்சுவடு: ரூ.75
  48. உபதேசியார் சவரிராயபிள்ளை – யோவான் தேவசகாயம் சவரிராயன்: (ப-ர்) ஆ. சிவசுப்பிரமணியன் : காலச்சுவடு: ரூ.175
  49. ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்(அனுபவப் பதிவு): டி.வி. ஈச்சரவாரியர்: தமிழில்: குளச்சல் மு. யூசுப் : காலச்சுவடு:  ரூ.100
  50. ஜானு (ஸி.கே. ஜானுவின் வாழ்க்கை வரலாறு): பாஸ்கரன்: தமிழில்: எம். எஸ். : காலச்சுவடு: ரூ. 40

    பட்டியல் அவ்வப்போது சேகரிக்கப்படும். உங்கள் பரிந்துரை ஏதாவது இருந்தால் சொல்லுங்க…

    கமல் மீது என்ன கோபம்?

    Movie-Location-Shooting-Spot-Films-Street-Disruptionமவுஸைக் க்ளிக் செய்வதில் கூட ஓரவஞ்சனை செய்வது பிடித்திருக்கிறது. இடது பக்கத்தை இரு முறை இரு முறையாக அடுக்குத் தொடர் தொடல்கள். ஆனால், எப்பொழுதாவது மட்டுமே வலப்பக்க விசை திருகப்படுகிறது. முக்கியமான மெனுக்கள் வலப்பக்கம் தொட்டால் மட்டுமே வந்து விழும். எனினும் இடப்பக்கம் தொட்டு தொட்டு தேய்ந்து போன உணர்வு.

    எனக்கு ரஜினி இடப்பக்க மவுசு. கமல் வலப்பக்க எலி கிராக்கி.

    ஏன் இப்படி ஆகிப் போனது? டாக்டர் ருத்ரனிடமோ ஆவி மாத்ரூபூதத்திடமோ மானசீகமாக வினவ வேண்டும். அதற்கு முன்னரே இன்று விடை கிடைத்தது.

    நாம் சரியாக செல்லும் பொழுதெல்லாம் இரயில் தாமதமாக ஓடும். என்றாவது அரைக்கால் விநாடி பிசகினால், நேரந்தவறாமையாக ட்ரெயின் ஓடியே போய் விடும்.

    இன்று முந்தைய மண்டகப்படி. நான் டிக்கெட் வாங்கி டாணென்று இருவுள் நிலையத்தில் காத்திருக்க, பணம் வாங்கியபின் கால்ஷீட் கொடுக்க மறுக்கும் நடிகராக ட்ரெயின் ஏதோ யோசனையில் லேட்.

    திங்கள்கிழமை மங்கள்வார் எனப்படும். பாஸ்டன் கோடையை வரவேற்க ஜெயராஜ் ஓவியங்கள் சாலையில் உலா வரும் காலை ஒளிக்கதிர் நேரம். காலை ஒன்பதரை சந்திப்புக்கு ஓடும் அவசரம். ஒவ்வாமைத் தும்மல் ஒரு புறம். (வாசிக்க: My Allergy to Rising Sun & Two Leaves) கோடாங்கி முடிச்சுடன் முழங்கால் பாவாடை சரசரக்க கவனம் கலைப்பவர் இன்னொரு புறம்.

    சிந்தனை வட்டத்தை நிறுத்தி தடுத்தாட்கொண்டார் குளிராடி குண்டர். கூடவே அல்லக்கை குண்டர்.

    ‘தயவு செய்து நில்லுங்கள். நீங்கள் எப்பொழுது செல்ல வேண்டும் என்று நாங்கள் சொல்வோம்!’

    ‘எதுக்கு? “நட ராசா” என்று பச்சை விளக்கு எரியுது… என்ன விட்டுடு! எனக்கு நேரமாச்சு!’

    பதில் கொடுக்காத மரியாதை. பயில்வான் உடம்பு. பெரிய வெள்ளை பேனர். ட்ராலியில் கேமிரா. பாஸ்டன் தெருவில் ஒத்திகையாக ஓடிப் பிடித்து விளையாடுபவர்களை அது சக்கரம் மாட்டித் துரத்தியது.

    ‘ஏய்… பென் அஃப்லக் வந்திருக்கானாம்!’, ‘கெவின் காஸ்னர் தெரிகிறானா பாரேன்!’ ஷூட்டிங் பார்க்க வந்த கும்பலில் ஒருவனாய் நிறுத்தப் பட்டிருக்கிறேன்.

    Kamalahassan

    Kamalahassan

    இப்பொழுது ஃப்ளாஷ்பேக்; கருப்பு வெள்ளைக்கு மாறிடலாம்.

    ‘தொம்’ என்று சத்தம். மீண்டும் மொட்டை மாடியில் பக்கத்து வீடு, எதிர்த்த வீட்டு, கோடியாத்துப் பசங்க ஓடிப்பிடித்து விளையாடுகிறார்கள் என்று சூலம் இல்லாத துர்கையாக மாறிய அக்கா விடுவிடுவென்று மாடி ஏறுகிறார். அங்கே தடிதடியென்று தடியன்கள் குதித்தோடுகிறார்கள்.

    ‘யாரும்மா அங்கே! ஷாட் எடுக்கப் போறோம்மா… ஒதுங்கி நில்லு’

    ‘எங்க வீட்டு மாடி. நான் நிற்பேன்; படுப்பேன்; சூரியக்குளியல் போடுவேன். நீ யாரு ஒதுங்க சொல்ல? வாட்டர் டேங்க் மேல குதிச்சா, உடஞ்சி போனா உங்கப்பனா வந்து காசு கொடுப்பான்? யாரு இங்கே ப்ரொட்யூசர்? கூப்பிடு அவன… ஏற்கனவே விரிசல் விட்டதுக்கு நஷ்ட ஈடு தந்தாத்தான் மேல ஒரு எட்டு வெக்க முடியும்’

    சுத்துப்பட்டி மாட வீதி முச்சும் பாத்துண்டிருக்கு. ‘விக்ரம்’ கமலுக்கு தர்மசங்கடம். லிஸியுடனோ அம்பிகாவுடனோ கொஞ்சவே நேரம் போதவில்லை. நேரில் வரவில்லை.

    தெருக்காரர்களுக்கு ‘எங்க தெருவும் “வனிதாவணி… வன மோகினி” பாடல் பெற்ற தலம்’ என்று சொல்ல முடியாமல் போயிடுமோ என்னும் வருத்தம் கலந்த கோபம். ‘கமல் மட்டும் வந்து மன்னிப்பு கேட்டுட்டாருன்னா அவரோட கெத்து என்னாறது?’ என்று வம்புக் கூட்டம். ‘அவங்க வீட்டுக்கு வந்தா எங்க வீட்டுக்கும் வரவெச்சிடுவேன்’னு முறைவாசல் கும்பல்.

    கமலும் கடைசி வரை வரவில்லை. ஆபீஸ் மேனேஜரும் உடைந்த சிமென்ட் பலகைக்கு எட்டணா கூட சுண்டவில்லை. ஆனால், அம்மா, அப்பா, அடியேன் இறைஞ்சலுக்கும், கொஞ்சலுக்கும், மிரட்டலுக்கும் அடிபணியாமல் மேலும் tan ஆகிக் கொண்டே அன்று படப்பிடிப்பை ரத்து செய்யவைத்த புகழ் அக்காவை சென்றடைந்தது.

    அந்த வீரம் என்னுள் பாஸ்டனில் எட்டிப் பார்த்தது.

    குண்டன் அசந்த நேரம் நடு வீதியில் சாவதானமாக நடக்க ஆரம்பித்தேன். என்னைப் பார்த்து பின் தொடரும் நிழலின் குரலாக ஸ்கர்ட்டுகளும், சூட்டுகளும் கடுக்கா கொடுத்து மிடுக்காக வந்தன. பாதி வழியில் உக்கிர பார்வையுடன்… குளிர் கண்ணாடி வழி உக்கிர பார்வை எப்படி தெரியும் என்கிறீர்களா? அது சரி, கையை உயர்த்தி நாலு பேர் வந்தார்கள்.

    நிலைமையை உணர்ந்த போலீஸ், ‘அவங்களப் போக விடுங்க’ என்றதும் ‘அய்யய்யே… கட்’ என்று கல்லுக்குள் நிழலாய் எங்கோ ஒலி.

    செய்தி: Kevin Costner: actor, director, crooner – The Names Blog – Boston.com: “Boston shooting ‘The Company Men’ with Ben Affleck, Tommy Lee Jones, Chris Cooper and Maria Bello.”

    முந்தைய கமல் புராணம்:

    1. Daedalus & Kamalhasan

    2. ஆளவந்தான்

    3. Dasavatharam – Minute details, questions, trivia, goofs, movie connections

    சங்கமம், கூடல்+வாய், பயினி & சமுசு

    1. மதுரைக்கு காலை நேர ரயில். மாட்டியவர்கள் எல்லோரிடமும் குலம், கோத்திரம் தவிர பாக்கி குறுக்கு விசாரணை நடந்தேறின. ‘ரெட்டை வால் குருவி’ திரைப்படத்தில் விகே ராமசாமியுடன் பேசிக்கொண்டே மோகன் சமாளிப்பது போல் அலுவல் தொலைபேசி, நேர்காணல் தொலைபேசி இரண்டையும் கொடுத்துக் கொண்டே வாய் கொடுத்தவர் ‘BPO’ நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இரண்டாண்டு அனுபவத்தில் புதிய இடத்திற்கான முயற்சியில் மேலாளர் ஆக விண்ணப்பித்திருக்கிறார். வீடு வாங்கியாச்சு. எம்.பி.ஏ.வும் கூடிய சீக்கிரமே சேர்ந்துவிடுவார்.

    2. இவர் SAP குந்துரத்தர். சம்பாதிப்பதே தொழிலில் முதலீடு செய்யத்தான். மாடர்ன் மேட்ரிமனியல் நடத்துகிறார். முதற்பக்கத்தில் தமிழ் கலாச்சாரத்துடன் இருக்கும் பெண்ணைப் பார்த்தாலே, மாபெரும் வெற்றியைப் பெறப் போகும் வலையகம் என்பது உறுதியாகும்.

    3. விதவிதமான ஹோட்டல்களைக் கொண்டு வருவது இவரது கனவு. தற்போதைய வேலையில் போதிய அளவு சேமித்ததும், நண்பர்களுடன் பெங்களுருவுக்கு ஓர் உணவகம் (மூன்று நட்சத்திர பாணியில் கையேந்தி பவன் + சாலோயோர செட்டப் கொண்ட உயர்தர அமைப்பு), சென்னைக்கு சாலட் பஃபே (வித விதமான காய்கறி + ஆர்கானிக் + நேச்சுரல் முன்னிறுத்தப்படும் உணவு) என்றெல்லாம் வாய்ப்பந்தல் போடாமல், கணக்கு போட்டு, திட்டத்தை தெளிவாக வைத்திருக்கிறார்.

    4. ‘தோழா… தோழா… தோள்கொடு தோழா’ என்று பாடிய பாண்டவர் பூமி நாயகியை ‘சிவசக்தி‘ ஆக்கிய பாரா மாட்டினார். ஒரு குழாயைத் திறந்தால் எக்ஸ்பிரெசோ காபி, அடுத்த பொத்தானைத் தட்டினால் சாக்லேட் மில்க், இன்னொன்றைத் தொட்டால் கோக் என்பது போல் அடுத்த கரண் படத்திற்கு எப்படி வசன வேலை நடக்கிறது, குமுதத்தில் ஆயில் ரேகை எவ்வாறு விரிவடையப் போகிறது, சிவசக்தி எவ்வாறு சீரியல் விரும்பிகளை ஈர்க்கப் போகிறது என்று ஊற்றாக கிளை மாறினாலும் எல்லாவற்றுக்கும் சூட்சுமமான புத்திசாலித்தனமாகிய மின்சாரத்தை ஷாக் அடிக்காமல் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.

    5. அடுத்து மாட்டியவர் ‘கிழக்குபத்ரி. ‘என்.எச்.எம் ரைட்டர் இலவசமாகக் கொடுப்பது ஏன்?’, ‘நாளைக்கே கூகிள் போன்ற பெத்தராயுடு வந்து இந்த மாதிரி சிறுசுகளை முழுங்கி விட்டால் என்னாவது?’, ‘அடுத்து புத்தகம் போட சப்ஜெக்ட் பாக்கி இருக்கா?’, Competitive intelligence, proprietary information போன்றவற்றுக்கு கவலைப்படாமல் இப்படி போட்டியாளரும் வந்து வியாபார சூட்சுமத்தை பார்த்து விற்பனை தந்திரங்களை அறிந்து கொள்ளுமாறு இயங்குவது இந்தியாவிற்கு ஒத்து வருமா?’ போன்ற என் கேள்விகளுக்கு புத்தியில் பச்சை குத்துவது போன்ற விளக்கங்களுடன் நம்பிக்கையுடன் பதிலளித்தார்.

    6. மதுரை தருமி, மலேசியா டிபிசிடி, வலைச்சரம் சீனா, உண்மைத்திராவிடர் ஜாலிஜம்பருடன் மதுரை சந்திப்பு அமர்க்களமாக நடந்தேறியது. ‘எந்த புதிய பதிவுகள் தங்களைக் கவர்கின்றன?’, ‘எவரின் இடுகைகளுக்கு க்ளிக் கொடுப்பதில்லை?’, போன்ற சங்கடமான நேரடி வினாக்களுடனும் அமெரிக்காவும் இந்தியாவும், தமிழில் பதிவெழுத வந்த கதை என்று நெருக்கமான சந்திப்புக்கு உரிய சுவாரசியங்களுடன் மகிழ்வாகப் பறந்தது.

    7. மிக்சர், காராசேவு, முறுக்குடன் ஆஜர் ஆன டுபுக்கு சந்திப்பில் நீண்ட காலமாக சந்திக்க நினைத்த செந்தில், அவ்யுக்தாவுடன், ‘எத்தனை சுண்டல் வாங்குவது?’, ‘சுண்டல் ஏன் பேப்பரில் கொடுக்கப்படுகிறது?’, ‘ஆங்கிலப் பதிவர்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழ்ப் பதிவர்களா, தமிழ் சினிமா குறித்து எழுதினாலே போதுமா அல்லது அவ்வப்போது தமிழ் எழுத்துருக்கள் வெளியானால் தமிங்கிலப் பதிவர் என்ப்படுவார்களா?’ என்பன மிக தீவிரமாக கொசுக்கடிகளுடன் காந்தி சிலைக்கடியில் எட்டு பேரால் அலசப்பட்டது.

    8. வளர்மதி, ஜ்யோவ்ராம் சுந்தர், அதிஷா, முரளிகண்ணன், மக்கள் சட்டம், ப்ருனோ, கென் என்று பார்க்காத பல முகங்களை பாலபாரதியும் லக்கிலுக்கும் அறிகம் செய்துவைத்தார்கள். ‘டுபுக்கு சந்திப்பு மெகா மொக்கையா, இந்த சந்திப்பு அதனை மிஞ்சுமா?’ என்று விவாதித்தோம். மழைக்குக் கூட காவல் நிலையம் ஒதுங்கியது கிடையாது என்னும் கூற்றைப் பொய்யாக்கும் விதத்தில் அனைவரும் ‘உள்ளே’ இருந்தார்கள். ‘மேகம் கொட்டட்டும்; செல்பேசி நனையட்டும்; கூட்டம் உண்டு’ என்று (அசல்) பாபா தம் போட்டு காற்றை அனுப்பி, மேகங்களைக் கலைக்கும் கூட்டம்; இருக்கைகளை கால்சட்டை கொண்டு காயவைக்கும் கூட்டம்; சுகுணா திவாகர்+ஆழியூரான் சிறப்புக் கூட்டம் என்று உள்ளரங்குகளுடன் களைகட்டியது.

    9. கிளம்பும் அன்று சென்னைக் கச்சேரி தேவ் & இளா சங்கமித்தனர். பலூன் தவறவிட்ட சிறுமி ஒன்றுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி விழுந்ததை, எடுத்துக் கொடுக்க, அவளோ ‘கிம்மி எ ப்ரேக்’ பார்வை ஒன்றை வீசியதை விசாவதாரத்திற்குப் புகைப்படம் எடுத்தது போன்ற பல முக்கியமான தருணங்கள் நிறைந்த சந்திப்பு இது.

    ஜூன் போனால் சென்னைக் காற்றே

    1. சென்னையில் டூ வீலர்கள் எல்லாரும் தலையில் எதாவதுக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணாக்களுக்கு ஹெல்மெட். ‘சென்னை-600 028’ விஜயலஷ்மிகளுக்கு துப்பட்டா. இஸ்லாமியர்களுக்கு தொப்பி.

    2. பதிவர் சந்திப்புகள் பல சிட்டி சென்டரில் நடக்கிறது. இரைச்சலுக்கு மத்தியில் வாகாக இல்லை. சீட்டு பிடிப்பது தமிழ்மணத்தில் பின்னூட்டம் இட்டு இடம் தக்கவைத்துக் கொள்வது போன்ற நச்சுப்பிடிச்ச வேலை. மழை பெய்தாலும் ஒதுங்க இடம் தரும் திறந்த வெளி வுட்லண்ட்ஸுக்கு மாற்று கிடைக்க வேண்டும்.

    3. குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் பேருந்து, சாதா பல்லவன் என்று இரண்டு வகை மட்டுமே அறிந்த எனக்கு, ஏசி, வெறும் சி, சி இல்லாத ஏ என்று குழப்பமான மாநகரப் போக்குவரத்து. ஒவ்வொரு வண்டியிலும் ஏறியவுடன் நடத்துநர் ‘மினிமம் இருபது ரூபா’ என்று ஆட்டோ ஓட்டுநரை ஒத்து மிரட்டுகிறார்கள்.

    4. நுகர்வோருக்கானப் பொருட்காட்சியில் உள்ளே செல்வதற்கு ஐம்பது ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். நண்பர் முன்பு எப்போதோ சொன்னதுதான் நினைவிலாடியது: ‘வெளிநாடு போகிறவர்கள், எந்த நிலையில் சென்றார்களோ, அப்படியே தேங்கிப் போயிடறாங்க! தமிழ்நாட்டுக்காரங்க தற்காலத்துக்கு ஏத்தபடி அட்ஜஸ்ட் பண்ணி மாத்திக் கொண்டேயிருக்காங்க.’

    5. சென்னை சிடி சென்ட்டரை விட ஸ்பென்சர்ஸில் நவநாகரிக யுவதிகள் வசந்த்களுடன் சுஜாதாவின் எழுத்தை நிஜமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    6. தசாவதரத்தை காலை ஆறு மணியில் இருந்து இரவு பதினொன்று வரை 15 காட்சிகள் ஐநாக்ஸில் திரையிட்டிருந்தார்கள். எல்லா அரங்குமே நிறைந்து விட்டிருந்தது. ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ செல்லலாம் என்று திரையரங்கைப் பார்க்கும் ஆசையில் சென்றால், ‘பேட்டரியை குப்பைத் தொட்டியில் போடுவோம்’, ‘செல்பேசிக்கு தடை’ என்று ஜபர்தஸ்து செய்து கொள்கிறார்கள்.

    7. மேலேக் குறிப்பிட்ட ‘ச.சு.’ முதற்கொண்டு இன்டியானா ஜோன்ஸ் வரை துணையெழுத்துகளுடன் பாரிமுனையில் டிவிடியில் இருபது ரூபாய்க்கு லோல்படுகிறது. தசாவதாரமும்தான்.

    8. கபாலி கோவிலை பிரதோஷ காலத்திற்காகவாவது எக்ஸ்டென்சன் செய்ய வேண்டும். ‘நந்தா’ பார்த்தபிறகு எல்லோருக்கும் திரயோதசி மகிமை தெரிந்துவிட்டிருக்கிறது.

    9. அகலபாட்டை இணையம் சுறுசுறுப்பாக பறக்கிறது. இந்த வேகத்தில் வலை கிடைத்தால், இந்தியாவில் டாரென்ட் இறக்கம் புகழ்பெறும்.

    10. இத்தனை மணிக்கு வண்டி வரும் என்பதை 21ஜி, இருவுள் விரைவு வண்டி நிறுத்தங்களில் போட்டிருக்கிறார்கள். இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டாலும் கண்டுகொள்ளாமல் இருப்பது போல், இந்த நேரவிவரங்களையும் கணக்கில் எடுத்து கர்மசிரத்தையாக கடிகாரத்தைப் பார்க்க கூடாது.

    உழைப்பாளி பாட்டாளி வேலைக்காரர் :: PiT June

    போட்டித் தலைப்பு
    அன்றாட வேலையினூடே ஒரு நாள் (A Day at Work) – அன்றாட வேலையில் ஈடுபட்டிருக்கும் உயிரினங்களை (மனிதர்கள் /மிருகங்கள்) ஒரு படத்துக்குள் கொண்டு வருதல்.

    கொசுறு வேலை

    எட்டுகின்ற உணவை எட்டாத உயரத்தில் வைத்து குப்பை கருவி காக்கை

    சென்னை பயணம்

    ஜூன் இரண்டு முதல் 14 வரை சென்னை வாசம். நண்பர்கள் சந்திக்க தனிமடலிடவும்.

    இந்த மாதிரி ட்விட்டரில் எழுதுவது அனிச்சமாகவும் ப்ளாகரில் நெருக்கமாகவும் மீண்டும் மாறினால், அப்பொழுதும் வலைப்பதிவேனா?

    தொடர்புள்ள பதிவுகள்:
    1. புதசெவி ©: சிம்மக்கல், தெற்குவாசல், தெப்பக்குளம், அண்ணா நிலையம், மாட்டுத் தாவணி : மருத…மருதை

    2. Dubukku- The Think Tank: சென்னையில் சந்திக்கலாமா?

    வருது… வருது! மூழ்காத ஷிப்

    Media, MSM

    தொடர்புள்ள இடுகை: அங்கும் இங்கும் இஸம் உண்டு – இந்தியன் ப்ரெசிஸம்