Tag Archives: Capitalism

சிங்கப்பூர்: முதலிய நாடா? கம்யூனிசத் தோட்டமா?

எகனாமிஸ்ட் பத்திரிகையையும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தினசரியையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தால், சிங்கப்பூர் தடையிலா வணிகக் கொள்கை கொண்டிருக்கிறது என நினைப்போம். அயல்நாட்டினரிடம் இருந்து மூலதனத்தை, இரு கரம் கொண்டு சிரம் தாழ்த்தி வரவேற்பதாகக் கேட்டிருப்போம். இதனால் வரிக் கட்டுப் பாடற்ற வாணிபமும் வியாபாரத் தடையின்மையும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு வித்திட்டன என உறுதியான தீர்மானத்திற்கு வந்திருப்போம்.

சிந்தனைக்கு சில தகவல்களும் எண்ணங்களும்:

  1. சிங்கப்பூரின் நிலம் அனைத்தும் அரசாங்கத்திற்கே, முழுக்க முழுக்க சொந்தம்.
  2. உங்களுக்கு வீடு வாடகைக்கு வேண்டுமானால், அரசுத்துறை சார்ந்த ’குடியமைப்பு அபிவிருத்தி குழு’விடம் இருந்து பெறலாம். – கிட்டத்தட்ட 85% குடியிருப்புகளை நிர்வாகமே தருகிறது.
  3. உலக அளவில் வெறும் பத்து சதவிகிதமே அரசு சார்ந்த நிறுவனங்களால் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கிறது. சிங்கப்பூரில் இது உலக அளவை விட இரண்டு மடங்கு அதிகம்! நடுவண் அரசின் நான்கில் ஒரு பங்கு எடுமுதல் பயன்பாட்டை அரசாங்க அமைப்புகளே உருவாக்குகிறது.
  4. சென்னை, மும்பை போன்ற நகரங்களின் அளவோடும், மக்கள் தொகையோடும் சிங்கப்பூர் நகரத்தையும் ஒப்பிடலாம்:

 

நகரம்

சிங்கப்பூர்

மும்பை

சென்னை

1. நிலப்பரப்பு 277 ச.மை. 233 ச.மை. 164.8 ச.மை.
2. மக்கள்தொகை 5,469,700 12,478,447 4,681,087
3. மக்கள் தொகை அடர்த்தி 19,725/ச.மை. 54,000/ச.மை. 28,000/ச.மை.
4. தண்ணீர் போத்தலின் விலை (0.33 லிட்டர் புட்டி) 53.80 14.50 14.50
5. பியர் விலை (0.5 லிட்டர் மது) 362.53 60.00 60.00
6. மின்சார கட்டணம்(சராசரி) 9,629.71 1,483.33 1,483.33

இதை சோஷலிஸம் என்பதா? மார்க்சிஸம் என்பதா? கீனிசிய கோட்பாடு என்பதா?புதுச்செவ்வியல்வாதம் (neoclassicism) என்பதா?

யாராவது, சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ கொண்டிருந்த சித்தாந்தம் ‘இதுதான்!’ என்று அறுதியிட்டு வாதிட்டால், அந்த நபருக்கு நிதிநிலைக் கொள்கை, பொருளாதாரக் கருத்தியல் ஆகியவற்றில் எதுவும் தெரியாது என்பதை மட்டும் உறுதியாக அறியலாம்.

வைணவத் தத்துவத்தில் கேபிடலிசமும் கம்யூனிசமும்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

உயிகளின் பகுப்பு: வைணவ மரபும் மெய்ப்பொருளியலும்: கம்பன் காட்டும் வைணவப் பேருலகம்

  • வீடு பேறு பெற்றோர் – முக்தர்: நித்தியர்
  • ஒரு பொழுதும் தளைக்குட்படாத நிலையானவர்
  • தளைக்குட்பட்டோர்  – பக்தர்கள்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படாதவை: பயிரினங்களும் விலங்கினங்களும்
    • புனித நூல்களால் வழிநடத்தப்படுவோர்: மனிதர்கள் & கடவுள்
      • உலகப்பயன்களை நுகர விழைவோர்: புபுட்சு
        • நன்மையை நாடுவோர்: தர்மபரர்
        • பொருள், இன்பம் விழைவோர்: அர்த்தகாமர்
          • »பல கடவுளைச் சார்ந்து நிற்போர்: வேதாந்த பரர்
          • »ஒரே கடவுளைச் சார்ந்து நிற்போர்:: பகவர் பரர்
            • துன்புறுவோர்: அர்த்தர்
            • அறிவு விழைவோர்: சிக்ஞாசர்
            • பொருளை நாடுவோர்: அர்த்தார்த்தி
      • வீடுபேறடைய விரும்புவோர்:  முமுட்சு
        • தன்னை தூய நிலையில் உணர விழைவோர்: கைவல்யபரர்
        • இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: மோட்சபரர்
          • »அன்புவழிப்பட்டோர்: பக்தர்கள்
            • அன்பினை வழியாக ஏற்றோர்: சாதனை பக்தர்
            • அன்பினை முடிவாகக் கொண்டோர்: சாத்திய பக்தர்
          • »புகல்வழிப்பட்டோர்: பிரபன்னர்கள்
            • அறிவு அன்பு மட்டுமே இறைவனிடமிருந்து பெற விழைவோர்: பரமை கரந்திகள்
            • உறுதிப் பொருளை இறைவனிடமிருந்தே பெற விழைவோர்: ஏகாந்திகள்
              • முன்வினைப்பயன் நுகர்வின் முடிவில் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: திருப்தர்
              • புகலுறுதி மேற்கொண்டவுடன் இறைவனுடன் கூடியிருக்க விழைவோர்: ஆர்த்தர்

மைத்ரேயன்: ‘நீயும் நானும் வேறல்ல?’

Inequality kills by Peter Wilby :: Politicians take heed: social injustice is, literally, deadly – New Statesman: The WHO report (Closing the Gap in a Generation)

“We traditionally assume that health improvement is delivered by medical advances, better hospitals, more doctors and more spending on health services. Most political argument is about how to achieve these ends, with the role of preventative health – improved lifestyles – now adding a further dimension.

The WHO report is saying something quite different: health is political in the broadest sense because it is influenced by the distribution of power, income, goods and services.

Here are some more facts. US blacks are rich by world standards but, in a highly unequal country, most are very poor by local standards. People from Tunisia, Jamaica, Panama, Libya, Lebanon and Cuba all have higher life expectancies than the US black population.

If black mortality rates were the same as those for US whites 886,202 deaths would have been averted between 1991 and 2000. Over the same period, 176,633 lives were saved by medical advances.”

அசமத்துவம் என்பதை ஒரு தத்துவ, அரசியல், பொருளாதார, அற, பண்பாட்டு ஆய்வுக் கூறாக எடுத்துப் பார்த்து அதோடு சண்டை போடவும், அதே நேரம் அழிக்க முடியாத ஒரு நிரந்தர அம்சமாக, இயற்கையின் தவிர்க்கவியலாத விதியாக அதைப் பார்க்கத் தேவை என்ன என்பதை நிறுவவும் பெருமுயற்சி தேவை என்பது எனக்குத் தெரியும்.

அதைச் செய்யத் தேவையான ஆசை மட்டுமே எனக்கு இருக்கிறது. திறமை இருக்கலாம். முயற்சி இல்லை. அதனால் அரைகுறையாக இதை உங்களிடம் தள்ளுகிறேன்.

Inequality என்கிற இந்த சொற்பிரயோகத்துடன் எனக்கு நிறைய ஜகடா உண்டு. தன்னளவிலேயே தன்னை மோசமாகக் காட்டும் சில சொற்களில் இதுவும் ஒன்று.

ஆங்கிலம் புரிந்த எந்த நாட்டிலும் அனேகமாக எல்லா மனிதரிடமும் இந்தச் சொல்லுக்கு ஒரு இழிவான பார்வைதான் கிட்டும். ஏதோ எல்லா மனிதருக்கும் தாம் மிக நல்லவர் என்று ஒரு எண்ணம்.

நடத்தையிலும், நம்பிக்கையிலும் எத்தனை அசமத்துவத்தை தினமும் அவர்கள் நிறுவிக் கொண்டிருந்தாலும், கருத்தளவில் அசமத்துவத்தைக் கறாராகவும், முழுமூச்சோடும் தாம் எதிர்ப்பவராகவும், சமத்துவத்தை அடைவதுதான் தம், மேலும் மொத்த மனித குலத்தின் குறிக்கோள் எனவும் அபத்தமாக நம்பாத மனிதரை நான் இன்னும் பார்க்கவே இல்லை.

அப்படி யாராவது என் கண்ணில் பட்டிருந்தால், அவரை நான் ஒரு அபத்த மனிதராகவோ, அல்லது கிறுக்கராகவோ, அல்லது அதிகார வெறியராகவோ – அதாவது நார்மல்சி என்பதில் இருந்து விலகிய ஒரு அதீத கோணல் மனிதராகவே நானும் பார்த்திருப்பேன்.

அவர் ஒருவரே முழு எதார்த்த வாதி என்று அவரைப் பார்க்க இத்தனை வருடம் கழித்துச் சமீப வருடங்களில்தான் எனக்கு சாத்தியமாகி இருக்கிறது. உங்களுக்கு நான் சொல்வது புரியும் என்று கூட எனக்குத் தோன்றவில்லை.

ஏன் சமத்துவம் என்பது ஒரு மாரீச மான் மட்டுமல்ல, அதை அடைந்தால் மனித குலம் அந்த மான் ஒரு பேரரக்கன் என்பதை அறியும் என்பதையும் பேசலாம்.

இப்போதைக்கு சில அறிவிப்புகளை மட்டும் தருகிறேன்.

அசமத்துவம் என்பதை எடுக்க முடியாது, அழிக்க முடியாது, அது இருப்பதுதான் மனித படைப்பு சக்திக்கே உந்து சக்தி என்று கருதுபவன் நான். அதற்காக நான் விமானத்தில் போக வேண்டும் வேறு மக்கள் தெருவில் குப்பை அள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்று என் மீது ஈட்டி வீச யாரும் தயாராக வேண்டாம்.

ஒரு அளவுக்கு மேல் inequality அசமத்துவம் என்பதைக் குறைக்க முடியாது.

ஸ்காண்டிநேவிய நாடுகளில் சாதாரணமாக 1:4 என்ற விகிதத்தில் அசமத்துவம் இருப்பதாகச் சொல்வார்கள். இதையும் குறைக்க முடியலாம்.

எல்லா மனிதருக்கும் ஒரே சம்பளம் என்றும் அனைவருக்கும் ஒரே தொகைதான் வருடத்துக்கு என்று ஆக்கினாலும் அசமத்துவத்தைக் குறைக்க முடியாது. அப்படிக் குறைத்தால் வேலை செய்ய வருபவர்கள் மிகக் குறைவாகவும், வந்தாலும் துலக்கமாகச் செய்பவர்கள் குறைவாகவும், துலக்கமாகச் செய்தாலும் புது உத்திகள், முன்னேற்றத்துக்கான கண்டு பிடிப்புகள் ஆகியனவற்றிற்காக தம் அனைத்தையும் கொடுப்பவர்கள் மிகக் குறைவாகவும் ஆவர் என்பது என் ஒரு ஊகம்.

எதிர்மறையாக எல்லாரும் அசாதாரண ஊக்கத்துடன் சமூகம் முன்னேற என்று உழைக்கத் துவங்கினால் எனக்கு அதில் எந்த எதிர்ப்பும் இல்லை.

இது வெறும் உழைப்பு அதற்கான ஊதியம் என்ற ஒரு குறுகிய தளத்தை மட்டும் கருதிப் பேசியது. இதைப் பெருக்கினால் ஏதேதோ விளைவுகள் நம் கண்ணுக்குப் புலப்படும்.

பராக் ஒபாமாவும் சாரு நிவேதிதாவும்

சாரு நிவேதிதா எழுதிய ராஸ லீலா நாவலில் இருந்து:

இந்த நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியப் பிரதம மந்திரிகளின் குடியரசு தின உரைகளை கவனித்துப் பாருங்கள். அல்லது, ஜனாதிபதி மக்களுக்கு ஆற்றும் உரைகளக் கேட்டுப் பாருங்கள்.

அச்சு அசல் நக்ஸல்பாரி போராளிகளின் பேச்சு போலவே இருக்கும்.

நாட்டில் நிலவும் பஞ்சம், வறுமை, கோடிக்கணக்கில் வரி பாக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள், அரசியலில் புகுந்துவிட்ட கிரிமினல்களை ஒடுக்க வேண்டியதன் அவசியம், வேலையில்லாத் திண்டாட்டம், ஜாதிக் கொடுமை, பெண்ணடிமைத்தனம் என்று பல பிரச்சினைகளைப் பற்றி நக்ஸல்பாரிகளின் மொழியிலேயே பேசியிருப்பார்கள்.

ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரிகளின் உரையைத் தயாரித்துக் கொடுக்கும் அவர்களது காரியதரிசிகள் ஒருவேளை பழைய எம்மெல் ஆட்களோ என்று கூட பெருமாளுக்கு சந்தேகமாக இருக்கும்.


தமிழினத் துரோகி என்பது போல் சோஷலிஸம் என்பது அமெரிக்காவில் தகாத வார்த்தை. ஒபாமாவை சமதருமம பேசுபவர் என்று சித்தரிப்பதன் மூலம் இழக்கும் வாக்காளர்களைப் பெற முடியும் என்பது மெகயினின் புதிய பிரச்சார யுக்தி.

ஒபாமாவை சோஷலிஸ்ட் என்று முத்திரை குத்தும் ஊடகங்களின் தொகுப்பு மற்றும் $700 பில்லியன் கொடுத்து நிறுவனங்களை தேசியமயமாக்குவது சோஷலிசம் அல்ல என்று பேட்டி கொடுக்கும் மெகயினின் விழியம்:

மேலும் விவரங்களுக்கு: Democracy Now! | McCain Campaign Calls Obama a “Socialist” — But Why is That a Smear?:


பிபிசியில் இருந்து:

மார்க்ஸியத்துக்கு மீண்டும் மவுசா?

கார்ல் மார்க்ஸின் சித்தாந்தம் மீண்டும் பிரபலம் அடைகிறதா? ஜெர்மனியின் மிகப்பெரிய இடதுசாரி பிரசுர நிறுவனங்களில் ஒன்றான டியெட்ஸ்ஸின் பார்வை அது.

தற்போதைய உலக பொருளாதார நெருக்கடி ஆரம்பித்ததிலிருந்து மார்க்ஸின் பிரபல படைப்புகள் எல்லாம் தமது கடைகளில் வேகமாக விற்றுத் தீர்ந்துவருகின்றன என்று அப்பிரசுர நிறுவனம் கூறுகிறது.

கார்ல் மார்க்ஸுடைய பொருளாதாரச் சித்தாந்தம் – அதிலும் குறிப்பாக அதன் ரஷ்ய லெனினிய வடிவம் – சோவியத் ஒன்றியம் 1980களின் பிற்பகுதியில் சிதறுண்டதிலிருந்தே, தனது மொத்த மவுஸையும் இழந்துவிட்டிருந்தது.

ஆனால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை, முதலாளித்துவத்தின் தோல்வியாகப் பார்க்கும் சிலர், நாம் எங்கே கோட்டை விட்டிருக்கிறோம் என்பதை மார்க்ஸின் சித்தாந்தத்தால் விளக்க முடியும் என்று நம்புகின்றனர்.

தொழில்நுட்ப பயன்பாடு x ஏழை முன்னேற்றம் x வருங்கால சுற்றுச்சூழல் பாதுகாப்பு

The waste-pickers of Delhi, India, forage through garbage for anything that can be recycled into cash. A new incinerator that turns trash into electricity will change all that. Because it will reduce the amount of methane off-gassed by landfills, it will generate carbon credits under the Kyoto Protocol. But the incinerator will also emit dioxins, mercury, heavy metals, and fly ash–and put thousands of impoverished waste-pickers out of business.

Maithreyan: Milking the Holy Cows

எழுத்து: மைத்ரேயன்

The sense of the sacred என்பதுதான் நவீனப் பார்வையில் the sense of Sublime என உருமாறி விட்டது என்று எனக்குத் தோன்றுகிறது. பின்னது அழகியல் பார்வையில் உச்ச நிலை சாதனையாகக் காட்டப்படுவது. அனேகமாக கவிதையில் காணப்பட வேண்டும் எனக் கருதப்படுவது.

நவீனத்துவம் என்பது

  • ஏதோ அறிவியல் பூர்வமானது/ சார்ந்தது,
  • பொறியியலும்,தொழில்முறை உற்பத்தியும் சேர்ந்து கொடுத்த பயன்பொருட்களின் ஏராளத்தால்
  • மனிதரின் வாழ்வில் நேர அவகாசத்தைக் கொடுத்து
  • அனைத்து மனிதரையும் சிந்தனையில் இறங்கவாய்ப்பு கொடுத்து
  • பெருவாரியான மக்களை உடலுழைப்பில் இருந்து மெல்ல விலக்கி
  • நுகர்வாராகவும், படைப்பாளராகவும் மாற்ற வழி செய்வது

என்றெல்லாம் ஒரு புறம் ஒரு பார்வை இருந்தாலும், அடிப்படையில் இந்த கருத்தியல் உருவாக ஒரு காரணம் romanticism. இது குறித்து ஐசேயா பெர்லின் (Isaiah Berlin) ஒரு சிறு ஆனால் பளீரென்ற கட்டுரை எழுதி உள்ளார்.

அதற்கு முன் என் வாதத்தைச் சொல்லி விடுகிறேன்.

Sacred என்பதை நாம் புனிதம் என்று தமிழில் சொல்கிறோம் என்பது என் புரிதல்.

புனிதத்தை உடைத்து – அதாவது கேள்விகளுக்கும், சாமானியரின் உணர்தல், அணுகுதலுக்கு அப்பாற்பட்ட தொலைவில் நிற்கும் தன்மையை உடைத்து, அதை எவரும் அணுகும் படிச் செய்வதே நவீனத்துவத்தின் முதன் முயற்சி.

இதில் பல கூறுகள் உண்டு. ஒரு கூறு புனிதம் என்பதே பொய்மை என்று நிறுவுவது. இது ஃப்ரெஞ்சு தடாலடி சிந்தனை.

இன்னொன்று புனிதம் மேலாட்சியாளரின் கட்டுப்பாட்டில் சாமானியரிடம் இருந்து விலக்கி வைக்கப் பட்டிருக்கிறது. இது ஒரு கயமைச் செயல். இதை உடைத்து புனிதத்தை சாமானியரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதை பூடகமாக்கப் பட்ட நிலையில் இருந்து வெளியே இழுத்து சாமானியருக்கு விளங்கும் வகையில் கொடுக்க இலக்கியமும் உணர்ச்சிகளால் ஆன தர்க்கமும்தான் உதவும். இதற்குக் கவித்துவம் உறுதுணை என்று ஒரு வாதம்.

இதுதான் romanticism. இதில் ஜெர்மானியச் சிந்தனை மேல் தூக்கி நிற்கும். இந்த வழிமுறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திய ‘பெருமை’ திருவாளர் மார்க்ஸைச் சேரும்.

ஹேகல் முந்தைய கட்டத்தில் சில மாறுதல்களை மட்டும் செய்து அதன் உள் ஒழுங்கைக் குலைக்காமல் வைத்திருந்தார்.

எதையும் அழிக்கும் நல்ல மனம் கொண்ட மார்க்ஸால் அந்த ஒழுங்கை ஏற்க முடியவில்லை. தன் சுயவாழ்வின் squalor எல்லா சிந்தனையிலும் இருக்க வேண்டும் என்பது அப்பெருமானாரின் துணிபு போலும்.

மூன்றாவது கூறு இன்றைய எவாங்கலியக் கூறு. இதைக் கால்வினிசம் என்று ஆங்கிலத்தில் கூறுவர். அல்லது வேபர் சொல்வது போல நவீன முதலாளியம் என்றும் சொல்லலாம். இங்கு புனிதம் தகர்க்கப்படுகிறது, ஆனால் அழிக்கப் படுவதில்லை.

  • அன்றாட புல்லரிப்புகள்,
  • செயல் நேர்த்தி உள்ள புதுப் புது நுகர் பொருட்கள்,
  • தொடர்ந்த தொழில்முறை முன்னேற்றம்,
  • நுட்பச் சிக்கலின் பரிணாமம்

ஆகியன இதன் உட்கூறுகள்.

கால்வினியம் உழைப்பை – அனேகமாக சாதுரிய உழைப்பை, லாகவ உழைப்பை முதன்மைப்ப்டுத்தி, மொண்ணை உழைப்பைக் கீழிறக்குகிறது. This does not rule out the divine as well. But simply reverses the logic and contends that the state of one’s blessing (wealth that is) is a clear indicator of the divine intent and pleasure.

அதாவது the divine ஐ அடைய நாம் பெரும்பாடு படத்தேவை இல்லை. உலகப் பொருட்கள் மீது வெறுப்பு எல்லாம் கொண்டு துறவற மனத்தோடு இருக்கத் தேவை இல்லை. மோனத்தவம் எல்லாம் செய்ய வேண்டாம். உலகப் பொருட்கள் மீது குவி கவனத்தோடு செயல்பட்டு நம் சாதாரண வாழ்வை மேலும் மேலும் மேம்படுத்த உழைத்தால் போதும்.

அதில் வளப்பம் கிட்டினால் அதுவே the divine has blessed us என அர்த்தம் என்று சொர்க்கத்தைப் பூலோகத்திற்கு இறக்கி சொர்க்கத்தையும் கடவுளையும் புனிதத்தையும் ஜனநாயகப் படுத்தியது இந்த சிந்தனை. இதனுடைய ஒரு இழிந்த உருவில் இந்த சிந்தனையில் the cute is the sublime, and therefore the sacred.

இந்த இழிவைத்தான் Andy Warhol ஒரே நேரம் கிண்டலும் செய்தார், வணங்கவும் செய்தார். அது ஒரு சிரிப்பை உள்ளடக்கிய வணக்கம். மத்திய காலத்துடைய வழிபாட்டு முறை போல, பயம் கலந்த வணக்கம் அல்ல.

இனி பெர்லினின் சில பத்திகள்.

….[in] Fichte’s word, ‘Frei sein ist nichts-frei werden ist der Himmel’ (To be free is nothing- to become free is very heaven’). Failure is nobler than success. Self-immolation for a cause is the thing, not the validity of the cause itself, for it is the sacrifice undertaken for its sake that sanctifies the cause, not some intrinsic property of it.

[இப்படி ஒரு மனப்பாங்குதான் தமிழ்க் கவிஞர் நகுலனை ஆட்டிப் படைத்தது என்பது என்
கருத்து. சுசீலா என்ற பெண் இலக்கே அல்ல, சுசீலா மீதான உளைச்சல்தான் ஈர்ப்பே. ]

These are the symptoms of the romantic attitude. Hence the worship of the artist, whether in sound, or word, or colour, or the highest manifestation of the ever active spirit, and the popular image of the artist in his garret, wild eyed, wild-haired, poor, solitary, mocked-art; but independent, free, spiritually superior to his philistine tormentors.

[இது தருமு சிவராமை அப்படியே வருணிக்கவில்லை?  அவருடைய சீடர்கள் அல்லது புரவலர்களின் அணுகலும் இதில் வருகிறது. ஆனால் தருமு சிவராமு கிட்டத்தில் போனால் அப்படி ஒன்றும் ரொமாண்டிக் சிந்தனை உள்ளவராகத் தெரிய வரமாட்டார்.]

This attitude has a darker side too: worship not merely of the painter or the composer or the poet, but of that more sinister artist whose materials are men- the destroyer of old societies, and the creator of new ones- no matter at what human cost; the superhuman leader who tortures and destroys in order to build on new foundations- Napoleon in his most revolutionary aspect. It is this embodiment of the romantic ideal that took more and more hysterical forms and in its extreme ended in violent irrationalism and Fascism.

Yet this same outlook also bred respect for Individuality, for the creative impulse, for the unique, the independent, for freedom to live and act in the light of personal, undictated beliefs and principles, of undistorted emotional needs, for the value of private life, of personal relationships, of the individual conscience, of human rights.

The positive and negative heritage of romanticism – on the one hand contempt for opprotunism, regard for indivdual variety, scepticism of oppressive general formulae and final solutions and on the other hand prostration before superior beings and the exaltation of arbitrary power, passion and cruelty – these tendencies, at once reflected and promoted by romantic doctrines, have done more to mould both the events of our century and the concepts in terms of which they are viewed and explained than is commonly recognised in most histories of our time.