Tag Archives: வரலாறு

ஆசாரக்கோவை கதைகள் 1 – ஆசார வித்து

தூரத்தில் விமானம் தெரிந்தது. அதில் அப்பா வருவார். தூங்குவதற்கு முன் கட்டியணைத்துப் போர்த்திவிட்டு ‘குட் நைட்’ சொல்வார். நாளைக்கு சனிக்கிழமை. வந்துவிடுவார்.

இப்பொழுது விமானம் நெருங்குகிறது. அல்ல… கலிஃபோர்னியா கான்டோர் வந்து இறங்கியது.

“நீ அழிந்து கொண்டிருக்கிறாயாமே”

“சேச்சே! உன் அப்பாவ கிட்டக்கயே வச்சுக்கணும்னு நீ கேட்ட இல்லியா! அதுக்காக வந்திருக்கேன்.”

“கருடன் மேல் பெருமாள் பறப்பது போல் நீதான் எங்கப்பாவ கூட்டிகிட்டு வரப்போறியா?”

“இல்ல… நான் படைச்ச மக்களையெல்லாம் அழிக்கணும்.”

“என்னது?”

“உனக்கு தெரியுமில்லியா? நாந்தான் இந்த உலகத்தை சிருஷ்டிச்சேன். முன்னுமொரு தினத்தில் மேலேயிருந்த முதியவர் பிரளயத்தை உண்டுசெஞ்சார். வாக்கு சாதுர்யம் இல்லாதவங்க எல்லாரும் அம்பேல். நான் மச்சாவதாரம் எடுத்து ஏட்டுச் சுரைக்காய்களைக் காப்பாற்றினேன். இப்பொழுதும் அந்த மாதிரி செய்யணும்”

“எனக்கு ஆசாரக்கோவை ஞாபகத்துக்கு வருது. உனக்கு நன்றி சொல்லணும்.”

நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு
இன்னாத எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை
நல்லினத் தாரோடு நட்டல் இவைஎட்டும்
சொல்லிய ஆசார வித்து

“இருக்கட்டும். உங்கப்பாவை அமெரிக்க ஜனாதிபதி ஆக்கட்டுமா? டைம்ஸ் பத்திரிகையின் ஆண்டுநாயகர் ஆக்கட்டுமா? முதலாவதாக ஆனால் உலக வெம்மையினால் பனிக்கட்டி உருகி, பூமிச்சூட்டினால் சுனாமி கொணர்ந்த கோபன்ஹேகான் நாயகர் என்று புராணம் பாடலாம். இரண்டாமவர் ஆனால், பணமுதலைகளுக்கு டாலர் மாலை தொடுக்கும் கஜேந்திர யானை என்று வரலாறு போடலாம்.”

“இது இட்லி-வடையில் வரும் முனி கடிதம் போல் விஷயக்கோர்வை ஆகிறது. எனக்குப் புரிகிற மாதிரி சொல்லு.”

“ரொம்ப சிம்பிள். கூடிய சீக்கிரமே ஹைதியில் பூகம்பம் வரப்போகிறது. அதற்கு முன் கடவுளுக்கு பலிகடா தேவை. உங்கப்பன் மேல் பழியைப் போடலாம் என்று யோசிக்கிறோம். போதிய பஞ்சப்படியும் பதவியும் கொடுத்து விடுவோம். ரெடியா?”

விக்கிக் குறிப்பு: The Wiyot tribe of California say that the condor recreated mankind after Above Old Man wiped humanity out with a flood.[49] However, other tribes, like California’s Mono, viewed the condor as a destroyer, not a creator. They say that Condor seized humans, cut off their heads, and drained their blood so that it would flood Ground Squirrel‘s home. Condor then seized Ground Squirrel after he fled, but Ground Squirrel managed to cut off Condor’s head when Condor paused to take a drink of the blood.

சுஜாதா: “சோழனை ‘ராஜாதி ராஜா’ என்பதெல்லாம் டூ மச்?”

cholas-pallava-brahmins-history-culture-research-society-booksபர்டன் ஸ்டைனின் ‘பெஸன்ட் ஸ்டேட் இன் மெடீவல் ஸௌத் இண்டியன்’ (Peasant State and Society in Medieval South India By Burton Stein)

ஹவாய் பல்கலைக்கழக சரித்திரப் பேராசிரியராக இருக்கும் ஸ்டைன் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள், செப்பேடுகளிலிருந்து முற்றிலும் புதிய முடிவுகளுக்கு வந்திருக்கிறார். அதே கல்வெட்டுக்கள்தாம், செப்பேடுகள்தாம்; ஆனால் முடிவுகள் முற்றிலும் வேறுபட்டவை.

சோழப் பேரரசு என்பதெல்லாம் ரீல். நாடு, கூற்றம் என்ற பிரிவுகளில் விவசாயிகளும் பிராமணர்களும் ஏறக்குறைய தன்னிச்சையாகப் பரிபாலனம் செலுத்திவந்த நிலப் பகுதிகளின் இறுக்கமற்ற சேர்க்கைதான் சோழ மண்டலம் முழுவதும். சோழ மன்னர்களுக்கு அவர்கள் ஒன்றும் அப்படியே சரண் அடையவில்லை. திறை செலுத்தினாலும் சுதந்தரமாகத்தான் இருந்தார்கள் என்று ஆணித்தரமாகக் காட்டுகிறார்.

அவர் சொல்வது நிசமென்றால் நாம் இதுவரை சோழ ராஜாக்கள் பற்றி எழுதியிருக்கும் சரித்திரக் கதைகள் அனைத்தும் ரீல். எல்லாம் கான்ஸல்!

இந்தப் புத்தகத்தைப் பற்றி நம் தமிழறிஞர்கள் எதுவும் கண்டுகொள்ளாதது வியப்பாகவே இருக்கிறது. ஆழமான ஆராய்ச்சியுள்ள புத்தகம்.

இதில் இருக்கும் அடிக்குறிப்புக்களை நோக்கும் போது கலிபோர்னியா, சிகாகோ போன்ற எத்தனையோ அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் சிலம்பிலிருந்தும் சங்கத்திலிருந்தும் மேற்கோள்கள் காட்டி எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது.

மற்ற பேராசிரியர்கள் உண்மையைத் தேடிக் கொண்டிருக்கும்போது இங்கு ஒரு கோஷ்டி லெமூரியா சரடு விட்டுக்கொண்டிருக்கிறது.

(ஆகஸ்ட் 1989)

முந்தைய கணையாழி கடைசிப் பக்கங்கள் (நன்றி: உயிர்மை பதிப்பக வெளியீடு): சுஜாதா – தமிழ் பாலின்ட்ரோம்

Table of Contents
cholas-pandiyans-kings-books-research-history-culture-tn-tamil-naduIntroduction
I South India: The Region
II Formation of the Medieval Agrarian Order Brahman and Peasant in Early South Indian History
III Peasant Micro Regions: the Nadu
IV The Coromandel Brahmadeya Village
V Right and Left Hand Castes (valaṅgai and iḍaṅgai)
VI The Transition to Supra-local Integration in the Twelfth and Thirteenth Centuries
VII The Chola State and the Agrarian Order
VIII The Vijayanagara State and Society

From Books Reviews (Excerpts)

1. Stein’s characterization of the Chola empire (and by extension of other traditional Indian kingdoms) as a “pyramidal segmentary state” with a king whose principal function is more ritual than executive has not been universally accepted, it has come to constitute the central focus of subsequent discussion of the subject.

2. In a usage borrowed from Aiden Southall, Stein portrays the medieval South Indian state as an organic structure that gained its power and cohesion directly from local society. The basic units of the state were not administrative divisions, but peasant microregions (nadus – நாடுகள்).

Within these areas of intensive rice agriculture, dominant peasant Sudra cultivators with powerful Brahmin priestly groups ruled by means of local assemblies (நாட்டார் – nattaar).

Within each naadu or ‘discrete social universe’, the respectable Vellalas, Kammas and Reddys patronized Brahmin-managed temples, individual priests and most strikingly the large Brahmin-landlord-run villages (brahmadeyas – பிரம்மதேசங்கள்).

The dominant Sudras gained legitimacy and ritual purity in return.

The Pallava-Chola states rose by agglomerating or ‘massing’ several hundred nuclear or core areas, but these medieval rulers did not use vast royal standing armies to conquer and destroy local institutions. Nor did they deploy vast numbers of paid royal officials to integrate their empire – in contrast to the older view K.A. Nilakanta sastri and other historians. To be sure, within the “circumscribed core territories of their capitals’, the Pallava-Chozha monarchs exercised “compelling coercive power’ (p. 24). Beyond the Kaveri River Zone, however the king ruled by ‘ritual hegemony’ rather than executive authority, that is (following A.M. Hocart’s theory of ‘sacral kingship’), by the recognition of the monarch’s superior royal dharma on the part of local notables.

Each Pallava or Choza ruler buttressed this claim by constructing and endowing huge temple complexes, by patronizing Brahmins and by furthering the royal Siva cult.

3. The ‘segmentary model’ was applied to the Chola state in South India by Burton Stein in his influential work, Peasant State and Society in Medieval South India (New Delhi, 1980). Stein has been severely criticized by several historians, in particular, R. Champakalakshmi, ‘Peasant State and Society in Medieval South India – A Review Article’, IESHR, 18, 3–4 (July–December 1981), 411–26; B. D. Chattopadhyaya, ‘Political Processes and the Structure of Polity in Early Medieval India’, presidential address, (Ancient India) PIHC, 44 session (Burdwan, 1983), New Delhi, 1984, 25–63; and James Heitzman, ‘State Formation in South India, 850–1280’, IESHR, 24 (1987), 35–61.

அரசியல் ஆழிப்பேரலை: மணி மு. மணிவண்ணன்

  • பொருளாதார வீழ்ச்சி.
  • பெட்ரோல் விலை எகிறல்.
  • ஜெனரல் மோட்டார்ஸ் தடுமாற்றம்.
  • அமெரிக்காவின் எதிரிகளின் ஏற்றம்.
  • மத்திய கிழக்கில் அமெரிக்கப் படையினரின் வலுவின்மை.
  • வருங்காலத்தைப் பற்றிய நம்பிக்கையின்மை.
  • அமெரிக்க அதிபரின் மீது ஏமாற்றம்.

இத்தனையும் இருந்தும் தேர்தல் நாள்வரை ஆளுங்கட்சியின் வேட்பாளர் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தார். எதிர்க்கட்சியின் வேட்பாளர் மக்களின் முழுநம்பிக்கையைப் பெறவில்லை.

இது மெக்கேன் ஒபாமா போட்டியைப் பற்றிய செய்தியல்ல.

28 ஆண்டுகளுக்கு முன்னர், 1980இல் அதிபர் கார்ட்டர் – ஆளுநர் ரேகன் போட்டியின் கடைசிவாரச் செய்தி.
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததை விட இப்போது நல்ல நிலையில் இருக்கிறீர்களா? நல்ல நிலையில் இருக்கிறீர்கள் என்றால் ஆளுங்கட்சிக்கு வாக்களியுங்கள். இல்லை என்றால் எனக்கு வாய்ப்பளியுங்கள்.” இது குடியரசுக் கட்சி வேட்பாளர் ரோனால்டு ரேகனின் அறைகூவல்.

எதிர்க்கட்சி வேட்பாளர் உலக அரசியல் அனுபவமில்லாதவர். அவரைத் தேர்ந்தெடுத்தால், அணுவாயுதங்கள் வெடிக்கும் மூன்றாம் உலகப் போருக்கு ஆயத்தமாகுங்கள். இது ஆளுங்கட்சியான மக்களாட்சிக் கட்சியினரின் மிரட்டல்.

தேர்தல் நாளான நவம்பர் முதல் செவ்வாய்க்கு மூன்று நாள் முன்னர் வரை மக்கள் வேண்டா வெறுப்புடன் அதிபர் கார்ட்டரைத்தான் ஆதரித்தார்கள். ஈரானில் சிக்கியிருந்த அமெரிக்கப் பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் கார்ட்டரின் தோல்வி, 23% அடமான வட்டி வீதம், வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல் விலையேற்றம், பெட்ரோல் சிக்கனப் படுத்தும் சின்ன கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் தடுமாற்றம் இவை எல்லாவற்றையும் விட மூன்றாம் உலகப் போரை முடுக்கி விடுவதைப் போல சோவியத் யூனியனை மிரட்டிக் கொண்டிருந்த ரோனால்டு ரேகனைத் தேர்ந்தெடுக்க பயமாகத்தான் இருந்தது. ஆனாலும், அவர் போர் வெறியை விட அமெரிக்காவின் ஏற்றத்தைப் பற்றிய அவரது நம்பிக்கையும், உறுதியும் மக்களை ஈர்த்தது.

தேர்தலுக்கு முந்திய மூன்று நாட்களில் ஓர் அரசியல் பேரலை எழும்பியது. அந்த அலையின் தாக்கத்தில்தான் அரசாங்கம் என்பது மக்களின் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை என்ற கொள்கை அமெரிக்க அரசியலின் தாரக மந்திரமாயிற்று. தனி மனிதர்கள், அவர்களது நிறுவனங்கள், அவர்கள் பொருளாதாரச் சந்தை, இவை அரசாங்கத்தின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப் பட்டால் மாபெரும் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற ஏயின் ரேண்ட் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். அப்படி வந்தவர்களில் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேனும் ஒருவர்.

1929இல் பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்குப் பின்னர் அரசாங்கம் கொண்டு வந்த எல்லாக் கட்டுக்கோப்புகளையும் உடைத்தெறியும் முயற்சியில் இவர்கள் ஈடு பட்டனர். அரசு விதிக்கும் வரி மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் துணை போகும் முதலீட்டைப் பறித்து சோம்பேறிகள் சுகமாக வாழ வழிவகுக்கும் போதைப் பொருள் என்பது இவர்கள் வாதம். ஏழ்மைக்குக் காரணம் சோம்பல் என்பது இவர்கள் கூற்று. எதிரி நாட்டுகளைக் கட்டுப் படுத்தவும் அமெரிக்க நிறுவனங்களுக்கு உதவவும் மட்டுமே அரசாங்கம் தேவை என்ற பொருளாதார அடிப்படை வாதம் இவர்கள் அடிநாதம்.

1932-ல் அதிபர் பிராங்க்ளின் டெலினோ ரூசவெல்ட் உருவாக்கிய முற்போக்குக் கூட்டணியை உடைத்தெறிய இவர்கள் அதிபர் நிக்சன் தந்திரங்களைப் பயன்படுத்திப் பிற்போக்குச் சக்திகளைத் திரட்டி மாபெரும் கூட்டணி ஒன்றை அமைத்தார்கள்.

  • மதவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • இனவாதப் பிற்போக்கு சக்திகள்,
  • பொருளாதாரப் பிற்போக்கு சக்திகள்

இவை அனைத்தும் ஒரே கூடாரத்தில் ரேகன் தலைமையில் கூடின. ரூசவெல்ட் தலைமையில் உருவான முற்போக்கு அரசு அமைப்புகள் மக்களின் வரிப்பணத்தை அட்டை போல் உறிஞ்சிக் கொண்டு ஊழலில் ஊறியிருந்தது இவர்களுக்குச் சாதகமாக இருந்தது.

உழைப்பவர்களுக்கு வரி, சோம்பேறிகளுக்கு அரசு சலுகையா? என்ற இவர்கள் அறைகூவல் வரிகளை நம்பியிருந்த அரசாங்கத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்தது. “வரி விதி, செலவு செய்” என்பதுதான் மக்களாட்சிக் கட்சியின் கொள்கை என்று இவர்கள் கட்டிய பட்டம் இன்று வரை மக்களாட்சிக் கட்சியை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது. 1992-ல் அதிபரான பில் கிளின்டனும் கூட இந்தப் பேரலையின் தாக்கத்தை எதிர் கொள்ள முடியாமல் இவர்களோடு ஒட்டி உறவாடிக் கொண்டே முற்போக்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

ரேகனின் பேரலையை வானளாவ உயர்த்தும் முயற்சியில் எழுந்தவர்தாம் இன்றைய அதிபர் ஜோர்ஜ் டப்யா புஷ். ரேகனைப் போன்ற பேரலையில் ஆட்சிக்கு வராமல், தட்டுத் தடுமாறி ஆட்சிக்கு வந்தாலும் தன்னை ரேகனின் மறு அவதாரமாகக் கருதிக் கொண்டவர் டப்யா புஷ். ரேகனைப் போலவே அரசு அமைப்புகளைச் சற்றும் நம்பாதவர் இவர். வாஷிங்டன் மக்கள் வரிப்பணத்தில் வாழும் அட்டைகள் நிரம்பிய குட்டை என்பது இவர் கொள்கை.

ரேகன் கொள்கைகளின் அடித்தளமே ஆடத் தொடங்கியது இவரது ஆட்சியில்தான்.

“கடன் வாங்கு, செலவு செய்” என்ற இவரது பொறுப்பற்ற கொள்கையின் விளைவுகளப் பார்க்கும்போது “வரி விதி, செலவு செய்” என்பது மிகவும் பொறுப்பான செயல் என்றே தோன்றுகிறது. மக்கள் வங்கிக்கணக்குகளைப் பாதுகாக்கத் தனியார் நிதி நிறுவனங்களின் மீது ரூசவெல்ட் ஆட்சி விதித்திருந்த கட்டுப் பாடுகளை வெகுவாகத் தளர்த்தியதில் முன்னணியில் இருந்தவர்கள் டப்யா புஷ், குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கேன், மற்றும் முன்னாள் கூட்டுக் கருவூலக் குழுமத் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பேன்.

என்னென்ன காரணங்களால் 1929 பங்குச் சந்தை வீழ்ச்சி பொருளாதாரப் பெருவீழ்ச்சிக்கு வழி வகுத்ததோ அதே காரணங்கள் மீண்டும் மேலெழுவதைப் பற்றிக் கவலைப் படாமல் கிளிப்பிள்ளை போல் அரசுக் கட்டுப்பாடுகள் தளர்ச்சி, செல்வந்தர்கள் வரி குறைப்பு என்ற மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தவர்கள் இவர்கள். இதில் உண்மையிலேயே பொருளாதார நிபுணரான ஆலன் கிரீன்ஸ்பான் அண்மையில் தனது கொள்கைகளால் அமெரிக்க, மற்றும் உலகப் பொருளாதார அமைப்புகள் அனைத்துமே நொறுங்கும் நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பதை உணர்ந்து, தன் கொள்கைகள் இந்த வீழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்பதை உணராமல் போய் விட்டதைப் பற்றி வருத்தம் தெரிவித்தார்.

ஆனால், டப்யா புஷ்ஷோ, ஜான் மெக்கேனோ இதைப் பற்றிப் புரிந்து கொண்டிருப்பதாகவோ, வருந்துவதாகவோ தெரியவில்லை. ஒபாமாவைப் பற்றிய மெக்கேனின் குற்றச்சாட்டு என்ன – “ஒபாமாவின் கொள்கை ‘வரி விதி, செலவு செய்’ – ஒபாமாவைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் வரி கூடும்” என்பதே. புஷ் – மெக்கேனின் ‘கடன் வாங்கு, செலவு செய்’ கொள்கையால் மக்களின் 401(k) ஓய்வுநிதிக் கணக்குகள் பேரிழப்புக்கு ஆளாகிக் கொண்டிருப்பதைப் பற்றி இவர்கள் வாயைத் திறக்க மாட்டார்கள்.

செப்டம்பர் 11 தாக்குதல் இவர்கள் கண்காணிப்பில்தான் நடந்தது. நியூ ஆர்லியன்ஸ் நகர் இவர்கள் ஆட்சியின் கீழ்தான் மூழ்கியது. ஓசாமா பின் லாடனின் முடியைத் தொடக்கூட இவர்கள் வக்கற்றவர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களிலும் இவர்கள் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் ஆட்சியின் கீழ்தான் பங்குச் சந்தையின் பெரு வீழ்ச்சியும், பொருளாதாரப் பெருவீழ்ச்சியும் தொடங்கியுள்ளன. இவை அனைத்துக்கும் அடிப்படைக் காரணம் அரசாங்கக் கட்டுப்பாட்டைத் தளர்த்துவதற்குப் பதிலாக அரசாங்கத்தையே தளர்த்தும் மனப்பான்மை.

இதை மாற்ற வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால் எத்தைகைய மாற்றம்? மெக்கேனுக்கும், டப்யாவுக்கும் அரசாங்கத்தைப் பற்றிய கொள்கைகளில் வேறுபாடு இல்லை. கடன் வாங்கிச் செலவு செய்யும் கொள்கையிலும் வேறுபாடு இல்லை. புஷ்ஷுக்குப் பதிலாக மெக்கேன் வந்தால் மட்டும் பெரிதாக என்ன மாற்றம் இருக்க முடியும்?

ஆனால், மக்களாட்சிக் கட்சியின் கொண்டு வரும் மாற்றம் என்ன?

அதற்கு எடுத்துக்காட்டு ஒன்றைப் பார்ப்போம்.

1989-ல் டப்யா புஷ்ஷின் தந்தை ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் ஆட்சியின் கீழ் சான் ஃபிரான்சிஸ்கோ நகரம் நிலநடுக்கத்தால் விளைந்த சேதங்களால் திணறியது. முக்கியமான பல மேம்பாலங்கள் சுக்கு நூறாகின. அவற்றை மீண்டும் கட்டி முடிக்கப் பல ஆண்டுகளாகின. நகரத்தின் வளர்ச்சி மட்டுப் பட்டது. பின்னர் 1992-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகரம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்தது. நாட்டின் அதிபர் புஷ்ஷும் சரி, கலிஃபோர்னியா மாநில ஆளுநர் வில்சனும் சரி நகரத்தைக் காப்பாற்ற முன் வரவில்லை. லாஸ் ஏஞ்சலஸ் நாதியற்றுத் தவித்தது.

1994-ல் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்குள்ளே நார்த்ரிட்ஜில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கத்தால் மிகுந்த சேதம் அடைந்தது. நிலநடுக்கத்தின் சேதம் தெரிந்த சில மணி நேரத்துக்குள் அதிபர் பில் கிளின்டன் லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தின் மீட்சித் திட்டத்துக்கு வழி வகுத்தார். அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், மாநில அரசு அதிகாரிகள் இவர்கள் அனைவரும் நிலநடுக்கங்கள் தொடர்ந்து கொண்டிருக்கும்போதும் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு விரைந்து மீட்சிப் பணிகளைத் தொடங்கினார்கள். சில மாதங்களுக்குள் நகரத்தின் உடைந்த மேம்பாலங்கள் மீண்டும் கட்டப் பட்டன. பெருவீதிகள் சீரமைக்கப் பட்டன. நில நடுக்கத்தின் அடையாளமே தெரியாத அளவுக்கு நகரமும் புத்துணர்ச்சி பெற்று வளரத் தொடங்கியது. நல்ல அரசாட்சி என்பதற்கு இலக்கணம் வகுத்தார் பில் கிளின்டன். அவரது ஆட்சியின் கீழ் அமெரிக்கப் பொருளாதாரம் பெரு வளர்ச்சி நிலையை எட்டியது. ஏனென்றால், அரசாங்கத்தின் தேவையை முற்றும் உணர்ந்தவர் அவர்.

2008 தேர்தலின் முக்கியக் கொள்கைப் போராட்டம் இதுதான். அரசாங்கத்தின் தன்மை என்ன? அதன் தேவை என்ன?

குடியரசுக் கட்சிக்காரர்கள், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்கள் அரசியல் எதிரிகளைப் பழி தீர்த்துக் கொள்வார்கள். தங்கள் மத நம்பிக்கைகளை மேம்படுத்துவார்கள். ஊழல் செய்யும் பெரு நிறுவனங்களைச் செல்லமாகத் தட்டி அனுப்பி விடுவார்கள். ஆனால், வெளிநாட்டுக் கொள்கைகளிலும், பொருளாதாரக் கொள்கைகளிலும் கெட்டிக்காரர்கள் என்று எடுத்த பெயரைக் கெடுத்துக் கொண்டுவிட்டார்கள்.

மக்களாட்சிக் கட்சிக்காரர்கள், மக்களின் தனி வாழ்க்கையில் அரசாங்கம் குறுக்கிடுவதை விரும்ப மாட்டார்கள். ஆனால் வசதியுள்ளவர்கள் மீது வரி விதித்து வசதியற்றவர்களுக்கு வாழ்வு கொடுப்பது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமை என்று நம்புபவர்கள்.

பொருளாதார வீழ்ச்சி சமயத்தில் இவர்கள் இருவரில் எவர் கொள்கை மக்களுக்கு ஆறுதலாக இருக்கும்?

1980-ல் கார்ட்டர் காட்டிய பூச்சாண்டிகளையும் மீறி மக்கள் ரேகனை வாக்குப் பேரலை மூலம் தேர்ந்தெடுத்தார்கள். 2008-ல் ரேகன் பேரலை வடியும்போது மெக்கேன் காட்டும் பூச்சாண்டிகளையும் மீறி ஒபாமா பேரலை எழுந்து கொண்டிருப்பது புலப்படுகிறது.

அமெரிக்க வரலாற்றிலேயே முக்கியமான தேர்தல் இது என்று பலர் கருதுகிறார்கள். ஆனால், அமெரிக்க வரலாற்றிலேயே மிக முக்கியமான தேர்தல் எட்டாண்டுகளுக்கு முன்னர் நடந்தது. புதிய ஆயிரத்தாண்டு தொடங்கும்போது தேர்ந்தெடுக்கப் பட்ட ஜார்ஜ் டப்யா புஷ்ஷின் திறமையின்மை அமெரிக்க வல்லரசின் சறுக்கலுக்கு வித்திட்டு விட்டது. கடந்த எட்டாண்டுகளில் அவர் செய்தவற்றின் பின் விளைவுகளில் இருந்து மீளப் பெரு முயற்சி தேவைப்படும்.

ஒபாமா அதிபராகத் தேர்தெடுக்கப் பட்டால் குறைந்தது அமெரிக்கச் சறுக்கல் நிதானப் படலாம். புஷ்ஷின் கொடுங்கோலாட்சியின் கடுமையான விளைவுகளால் வாடும் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே ஒபாமாவின் வெற்றியை வரவேற்கும்.

மணி மு. மணிவண்ணன், சென்னை, இந்தியா.

சூடான இடுகைகள் – அந்தக் காலம்

முன்னொமொரு காலத்தில், மூன்றாண்டுகளுக்கு முன்பு சூடான இடுகைகளாக எவை இருந்தன/எவர் இருந்தார்கள் என்று நினைத்து பார்த்தபோது…

1. ரோசா வசந்த் :: ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…!: “சிம்புவின் ஆண்குறியை அறுக்கவேண்டும்.”

2. மதி கந்தசாமி :: ஓர் ஆணாதிக்க ஆங்கிலப் பேராசிரியர் என்ன எழுதுவார்?..

3. வெங்கடேஷ் :: கமலுக்குப் பின்… – நேசமுடன்

4. மூக்கு சுந்தர் :: My Nose – நண்பர் சுந்தரவடிவேலுக்கு ஒரு பகிரங்க கடிதம்

5. காசி :: தமிழ்மணம் தள நடவடிக்கைகள் பற்றி சில அறிவிப்புகள் – சித்தூர்க்காரனின் சிந்தனைச்சிதறல்கள்

6. டோண்டு :: Dondus dos and donts: சோ என்னும் சிறந்தப் பத்திரிகையாளர்

7. ஆப்பு :: Aappu: “டமில் நியு இயரு விஷ்ஷீ லிஸ்ட்டு”

8. ரஜினி ராம்கி: Rajni Ramki: “அடுத்த ’10’ படங்கள்!”

9. பொட்”டீ” கடை: நான் இந்தியனா?

10. 31. முகத்திரை களைகிறேன்.. | தருமி: 25. ‘இவர்களும்’…’அவர்களும்’

11. பிகே சிவகுமர்: சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ | விமர்சகரும் வாசகரும்

12. முத்து (தமிழினி) :: ஒரு தமிழனின் பார்வை: “மசாலா தமிழ் திரைப்படங்களும் தமிழர்களும்” | ஒரு செய்தியும் சில பின்னூட்டங்களும்

13. சுரேஷ் கண்ணன் :: பிச்சைப்பாத்திரம்: “பிரபல நேர்மையானவர்களின் மற்றொரு முகங்கள்”

14. குழலி பக்கங்கள்: “மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் – ஒரு அலசல் – 1”

15. மாலன் :: என் ஜன்னலுக்கு வெளியே…: “ஜேகே என்றொரு நீராவி என்ஜின்”

Quiz – Tamil Nadu politics

  • தந்தை பெரியாரைக் காட்டிக் கொடுத்து துக்ளக் இதழுக்குப் பேட்டி கொடுத்தது யார்?
  • அய்ந்து மூன்றும் எட்டு – அரசியல்வாதியை வெட்டு! என்று சொன்னவர்கள் யார்?
  • அரசியல் பொறுக்கிகளே, உள்ளே நுழையாதீர்கள்! என்று கிராமங்களின் நுழைவு வாயில்களில் தட்டிகளை எழுதியது யார்

விடுதலை: எச்சரிக்கையாம் கருஞ்சட்டைக்கு! – கலி. பூங்குன்றன்

பழைய நெனப்புதான்… பேராண்டீ

உங்களுக்கு அடக்கம் தேவை… ஆணவம் கூடாது என்கிறாரே முதல்வர்?

குமுதத்தில் வந்த விஜயகாந்த் பேட்டியில்: அடடா… அடக்கத்தைப்பற்றி, அரசியல் நாகரிகம் பற்றி இவர் பேசலாமா? அந்தக் காலத்தில் இந்த ‘அடக்கமான தலைவர்’ எவ்வளவு பேசியிருக்கார் தெரியுமா? காமராஜரையும், ராஜாஜியையும் இவர் பேசாத பேச்சா? எல்லாமே பேப்பரில் இருக்கு. மதுரையில் இந்திராகாந்தியை கறுப்புக் கொடி காட்டி அடித்தவர்கள்தானே… இவர்கள்! நான் அந்த பயங்கரத்தை கண்ணால பார்த்து ஓடினவன். அப்போ எனக்குச் சின்ன வயசு.

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவர் உடனே எழுந்து, ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’ என்றார். சட்டசபை அல்லோலகல்லோலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக அப்புறம் வியாக்யானம் தந்தார். கச்சத்தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே…. சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே?

காமராஜர்… காமராஜர் என்று இப்போது முழங்குகிறாரே… விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிக்கவேண்டும் என்று ஒரே மூச்சில் நின்றவர்தான் இவர். அண்ணா ‘வேண்டாம்’ என்றதையும் கேட்கவில்லை. இவர் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுத்தார் — திருட்டுத்தனமாக! யாரிடமிருந்து அடக்கத்தை கற்றுக் கொள்வது? என்னை எறும்பு என்றார். ஆமை என்றார். இப்போது சந்துல சிந்து பாடறார் என்கிறார். ஆணவத்தில் பேசுவது யார்?

தொடர்புள்ள மன்னிப்பு: IdlyVadai – இட்லிவடை: தமிழில் எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை

கம்யூனிசத்துக்கு ஸ்டாலின்; கமர்ஷியலிசத்துக்கு சுகார்தோ

வியட்நாம் என்றவுடன் அமெரிக்கா கால் நுழைத்து இலங்கையில் ஐபிகேஎஃப் போல் மூக்குடைபட்டதும், நாபாம் தெளித்து அழித்ததும், நேற்றைய ஜனாதிபதியாக விரும்பிய ஜான் கெர்ரியை ‘ஸ்விஃப்ட் போட்‘டியதும், இன்றைய ஜனாதிபதியாக விரும்பும் ஜான் மெக்கெயினின் சிறைக்கால அனுபவமும் அவரவரின் கொள்கை சார்ந்து நினைவுக்கு வரும்.

ஆனால், இந்தோனேசியா என்றவுடன் சுனாமிப் பேரலையோ, நைக்கியின் குழந்தைத் தொழிலாளர்களோ, பாலி தீவிரவாதத் தாக்குதலோ, பஞ்சசீல கொள்கையோதான் நினைவுக்கு வருகிறது.

கம்போடியா, வியத்னாம் மாதிரி மூக்குடைபடாமல் சாணக்கியத்தனமாக வென்ற நாடுகளில் இந்தோனேசியா குறிப்பிடத்தக்கது. கத்தியின்றி, ரத்தமின்றி கரன்சி கொடுத்து அமெரிக்க பாக்கெட்டுக்குள் வீழ்ந்த நாடு.

இந்தியாவில் பாதி சைஸ். கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிகச் சரியாக 17,508 தீவுகள்.

இத்தனை தீவுகள் இருக்கிறதே… இன்னொன்றையும் சேர்த்துக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் கிழக்கு திமோரையும் கையகப்படுத்தினார் தற்போது இறைவனடி சேர்ந்துள்ள சுகார்தோ.

சுகார்டோ எத்தனை பேரை தீர்த்துக் கட்டினார் என்றால் யாரிடம் கணக்கு கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து ஐந்து லட்சத்தில் இருந்து இருபது லட்சம் வரை சொல்கிறார்கள். சுகர்னோ, சுகார்தோ போன்ற இந்தோனேஷியாவின் தலைவர்களிடம் கேட்டால் நாட்டின் 24 கோடியில் ஒரு சதவீதம் சவமானதற்கு ‘இத்தனை ஃபீலிங்கா?’ என்று அழிச்சாட்டியமாக லுக் விடுவார்கள்.

பள்ளிப்படிப்பை முடித்திராததால் அவரிடம் கொள்ளையடித்த பணத்துக்கு சரியான அக்கவுண்டிங் தாக்கலாகவில்லை. ஃபிடல் காஸ்ட்ரோவை விட அதிக அளவு சேர்த்து அகில லோகத்தின் தலை பத்து பணக்காரராக, இந்தோனேசியாவுக்கேற்ற எள்ளுருண்டையாக பதினைந்தில் இருந்து முப்பத்தைந்து பில்லியன் (இந்திய ரூபாயில் இன்றைய மதிப்பில் 100000,00,00,000 கிட்டத்தட்ட 100,000 கோடி ருப்பீஸ்) சேவிங்ஸ் கணக்காகியுள்ளது.

உலகின் அதிகமான இஸ்லாமியர் மக்கட் தொகையை கொண்டநாடு இந்தோனேசியா. ஆயினும் இந்துக்கள், பௌத்தர்கள், கிறிஸ்துவர்களும் உண்டு. மதச்சார்பற்ற ஒரு நாடாக இந்தோனேசியா விளங்குவது பிடிக்காத ஒசாமா பின் லாடனின் அன்பர்கள் சில மாநிலங்களில் ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நவீன இந்தோனேசியாவை நிறுவிய-நிறுவன அதிபர் சுகர்ணோ. 1967-ம் ஆண்டு அதிபர் சுகர்ணோவை நீக்கி விட்டு இராணுவத் தலைவர் சுகார்டோ பதவிக்கு வந்தார். சுமார் 32 ஆண்டுக்காலம் முஷாரஃப்கரம் கொண்டு மக்களை அடக்கி ஆண்டார். ருவாண்டா, இடி அமீன், ஸ்லொபதன் மிலோசெவிச் காட்டிய பாதையில் இவர் ஜனநாயக முறைப்படி கட்சி துவங்கி, கோல்கார் கட்சி என்று நாமகரணமிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று யாருமே இல்லாத பெருமை கொன்டவர் சுகார்தோ. யாராவது கொடி தூக்கினால், கம்யூனிசம் பேசினால், எம்-16 வெட்டு ஒன்று, தாழப் பறந்து பறந்தடிக்கும் விமானம் இரண்டு என்று மும்முரமாக குடியரசைத் தழைத்தோங்க செய்தவர்.

சதாம் உசேனின் குவைத் ஆக்கிரமிப்பு போல் 1975ல் கிழக்கு டிமோர் பக்கம் இவரது பராக்கிரமம் திரும்பியது. குவைத் மாதிரி இல்லாமல் அமெரிக்காவின் ராஷ்டிரபதி ஜெரால்ட் ஃபோர்ட்- இன் பரிபூரண அனுக்கிரகம் இந்தோனேசியா பக்கம் இருந்தது. கடாரம் வென்ற சுகர்னோ என்று அதன் பிறகு வந்த கார்ட்டர், ரொனால்ட் ரீகன், பில் க்ளின்டன், அப்பா புஷ் போன்ற அமெரிக்க ஜனாதிபதிகளால் கொண்டாடப்பட்டார்.

கிழக்குத் டிமோர் போரில் கிளர்ச்சியில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேரை மட்டுமே கொன்று, மீதம் உள்ள ஐந்து லட்சம் தைமூரியர்களை விட்டுவைத்து தன்னுடைய ஜீவகாருண்யத்தை பறைசாற்றி, மனிதர்குல மாவிளக்கு பட்டம் பெற்றார்.

அம்மையாருக்கு உடன்பிறவா சகோதரி, முன்னாள் கலைஞருக்கு சன் டிவி பிரதர்ஸ் போல் கல்லாவை கவனிக்க அவர் மனைவி மேடம் டியன் என்றழைக்கப்படும் சிதி ஹர்தினா (Siti Hartinah Suharto) — உறுதுணையாக கையூட்டுக்கு சிங்கிள் விண்டோவாக திகழ்ந்து பிசினஸ் சூழலை எளிதாக்கினார்.

தற்போதைய இந்தியாவின் ப. சிதம்பரம் போல் பொருளாதாரம் துள்ளி குதித்து விளையாடும் வரை மக்கள் அவர் பக்கம் சிக்கென பிடித்திருந்தார்கள். ‘நீயுமுன்றன் பைநாகப்பாய் சுருட்டிக்கொள்‘ என்று அமெரிக்க வர்த்தகர்கள் ஆசியாவை விட்டு மூட்டை கட்ட, வந்தது சனி.

என்றேனும் மாற்றம் வந்தே தீரும் என்கிற நிலையில் சுகார்டோ பதவி விலகினார். என்றாலும் சீனாவின் மாவோ, கம்போடியாவின் பொல் பொட், பிலிப்பைன்சின் ஃபெர்டினான்ட் மார்கோஸ் போல் தனிப்பெரும் ஆளுமையாக விளங்கி ரசிகர் மன்றக் கண்மணிகள் நெஞ்சத்தில் நீங்காத தலைவனாகி இருக்கிறார்.

இந்தோனேசியாவின் சாலைகள் சுகர்தோவின் மகள் சிதி ஹரிதயந்தி ருக்மண (Siti Hardiyanti Rukmana) பெயருக்கு பட்டா போடப்பட்டு, சுங்கவரி அத்தனையும் அவருக்கு போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு மகனுக்கு இந்தோனேசியாவின் எண்ணெய்க்கிணறுகளும் பெட்ரோல் ஊற்றுக்களும் முழுக்க சொந்தமாக்கப்பட, இன்னொரு மகனுக்கு டிவி, கார், கொக்கோ, தேக்கு, சேமநல பாதுகாப்பு முதல் ஆணுறை நிறுவனங்கள் என்று தொண்ணூறு ஸ்தாபனங்களுக்கு அதிபதியாக்கி நிறைந்த வாழ்வையும் வளத்தையும் வழங்கியிருக்கிறார்.

அவரின் நல்லெண்ணத்துக்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கிட்டத்தட்ட இருபது சதவிகித அரசுத்துறை ஒப்பந்தங்கள் மற்றவர்களுக்காக விட்டுகொடுக்கப்பட்டிருப்பதை சொல்லலாம்.

வாரிசு அரசியலை மறக்காத மக்களாக இந்தோனேசியர்களும் சுகார்னோவின் இரண்டாவது மகளான மேகாவதி சுகர்ணோபுத்ரி கட்சியை ஆதரித்து தேர்தலில் வெல்லவைத்து கோலோச்ச வைத்தார்கள். கட்டாங்கடைசியாக இவரின் ஆட்சிக்காலத்தில்தான் ஐ.நா.வின் கட்டபஞ்சாயத்தால் இந்தோனேசியாவின் ஒரு பகுதியான கிழக்கு தைமூர் தனிநாடாக மாறியது. இதை மேகாவதி நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம் எனக் கூறுவோரும் உண்டு.அண்டைநாடுகளின் மலேசிய மஹாதிர் முகமது, சிங்கை லீ க்வான் போல் சுரண்டல் பெருச்சாளித்தனமற்ற பொருள்முதல்வாதம் பின்பற்றாமல், சிலியில் அல்லக்கையாக இருந்த அக்ஸ்டோ பினோச்சே போல், பரம சௌக்கியமாக வாழ்ந்து கல்யாண சாவு பெற்றிருக்கும் சுகார்தோ நினைவாக பழமாகிப் போன பழமொழி:

அரசன் அன்று கொல்வான்;
அமெரிக்கன் யாருக்கும் தெரியாமல் சப்ளை செய்வான்!


Suharto Indonesia—————————————————————————————————-

தொடர்புடைய இடுகைகளில் குறிப்பிடத்தக்க சில:

உதவியவை:

  1. Varaidhal – Special
  2. Indonesia – Wikipedia, the free encyclopedia
  3. Economist.com | Country Briefings: Indonesia
  4. Indonesia : Country Studies – Federal Research Division, Library of Congress
  5. BBC NEWS | Asia-Pacific | Country profiles | Country profile: Indonesia

கொடுங்கோலன்:

  1. Democracy Now! | Former Indonesian Dictator, U.S. Ally & Mass Murderer, Suharto, 86, Dies
  2. Democracy Now! | The Democrats & Suharto: Bill Clinton & Richard Holbrooke Questioned on Their Support for Brutal Indonesian Dictatorship
  3. Democracy Now! | Massacre: The Story of East Timor
  4. News and Comment: Suharto Dead. Six Billion Alive. Time for a Little Reform.

Economists with GunsAuthoritarian Development and U.S.-Indonesian Relations, 1960-1968

Bradley R. Simpson
Forthcoming: Available in MarchBuy this book
 

—————————————————————————————–
வாழ்விக்க வந்த வள்ளல்:

  1. Suharto’s Indonesia – WSJ.com
  2. Suharto’s Legacy – WSJ.com

ரெண்டுங்கெட்டான்:

  1. NPR: Indonesia’s Suharto Left Iron-Fisted Legacy
  2. Suharto News – The New York Times