Tag Archives: மொழிபெயர்ப்பு

What is the Best Word and Tamil Term for the “Prompt Engineering” – Translations and Coining Fresh words

ப்ராம்ப்ட் எஞ்ஜினியரிங்-கில் தோற்றவர் யார்?

அ) கும்பகர்ணன் – நித்தியத்துவம்

ஆ) பஸ்மாசுரன்

இ) பலராமன்

ஈ) ஹிரண்யகசிபு

எல்லாமே சரி.

என்னையும் சேர்க்கலாம்.

நண்பர்களை சந்திக்கும் எவருமே கணி-அரட்டை பொறியியலில் இருந்து தப்பித்தவர்கள்.

சென்ற வாரம் தோழர்களை அழைக்கும் காலம்.

நல்விருந்துகளில் பிராம்ப்ட் என்பதை எவ்வாறு தமிழில் வார்த்தையாக்கலாம் என்னும் வினா எழுந்தது.

Prompt Engineering எனப்படுவது

1. வல்லே வார்த்தை

(நாலடியார்: நின்றன நின்றன நில்லா எனவுணர்ந்

தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;

சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்

வந்தது வந்தது கூற்று.)

2. வீச்சுக்குறிப்பு (பரோட்டா அல்ல; சொல்லும் பொருளும் ஒலியும் ஒளியும்)

3. நெருக்கனல் (நெருப்புடா… நெருங்குடா பார்ப்பம்)

4. கிண்டு (கிண்டக் கிண்டக் கிடைக்கும்)

5. ஒல்லைப்பாடம் (விரைவில் ஒப்பிக்கும் பாடம்)

போஸ்டர்தான் நட்பும் கொண்டாட்டமும்.

உங்கள் ஆதரவு என்றும் தேவை!

தர்ஜமா

மொழிபெயர்ப்பு நிலையானது அல்ல – கலாச்சாரமும், மொழியியலும் சமூகச் சூழல்களும் காலத்திற்கேற்ப மொழியாக்கத்தை உருவாக்குகின்றன. ‘மறு-மொழிபெயர்ப்பு சார்பு’ காலப்போக்கில் நியாயங்களை, விளக்கங்களை மாற்றுவது.

ஹோமரின் இலியட் டஜன் கணக்கான முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால மொழிபெயர்ப்புகள் வீரத்தையும் பிரம்மாண்டத்தையும் வலியுறுத்தின, அதே நேரத்தில் கரோலின் அலெக்சாண்டரின் நவீன பதிப்பு, மனிதநேயத்தையும் போர் எதிர்ப்பு உணர்வுகளிலும் கவனம் செலுத்தின. இந்தச் சார்பு நிலையினால் ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளரும் சமூகத்தின் அசல் அகநிலைக்கு விசுவாசமாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு இலக்கியம் கதைகளைப் பகிர்வதற்கு மட்டுமல்லாமல், மொழிபெயர்ப்பாளரின் தேர்வுகளையும் கலாச்சாரத் தாக்கங்களின் அடிப்படையிலும் அவற்றை மறுவடிவமைப்பதற்கும் மறுவரையறை செய்வதற்கும் ஒரு சக்திவாய்ந்த செயலாகும்.

சொல்வனத்தின் 331-ஆம் இதழ் அப்படியான செயலூக்கம் நிறைந்த தமிழக வாசகர்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

https://solvanam.com/category/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%b4%e0%af%8d-331/

1. டோபையாஸ் ஓல்ஃப் எழுதிய ‘கணப்பின் ஒளி’: தமிழில் மைத்ரேயன்
2. சதாஅத் ஹஸன் மண்டோ எழுதிய ‘வான வேடிக்கை’ : தமிழில் – அனுராதா க்ருஷ்ணசுவாமி
3. அருண் கொலட்கர் எழுதிய கவிதைகள்: தமிழில் – ஆர் சீனிவாசன்
4. ஆண்டன் செகாவ் உத்வேகத்தில் அசல் தமிழ்க்கதை – வார்ட் நம்பர் 6 நிர்மல்
5. ஃபிரெஞ்சுப் படங்களை தமிழில் அறிமுகம் செய்யும் கே.வி. கோவர்தனன்
6. ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை-என உலக விஷயங்களை அறிவியல் தகவல்களை சுவாரசியமாக்கும் அருணாச்சலம் ரமணன்
7. ஜப்பானியப் பழங்குறுநூறு 99-100 கமலக்கண்ணன்
8. அரவிந்தரை ‘நீ இவ்வாறு இருப்பதனால்’ என தத்துவமும் பருப்பொருள் சார்பற்றதாகவும் கவித்துவமாகக் கொணரும் மீனாக்ஷி பாலகணேஷ்

மூன்றாண்டுகளுக்கு மேலாக வெண்பாக்களில் அக்கால ஆசிய இலக்கியத்தை கமலக்கண்ணன் ஜப்பானியப் பழங்குறுநூறு என நூறு கவிதைகளாக மொழிபெயர்த்து முடித்துள்ளார்.

அவரை வாழ்த்த வாருங்கள்.

இன்னும் நிறைய ஆக்கங்கள்; படைப்புகள். நீங்களும் உங்கள் எழுத்துக்களை அனுப்புங்கள்.

உலகளவில் புகழ்பெற்ற சில எழுத்தாளர்கள் அசல் உரையை விட தங்களின் பிறமொழியாக்கத்திற்காக இலக்கிய அங்கீகாரம் பெறுவர். மன்டோவிற்கும் டோபியாஸ் வுல்ஃப்-க்கும் செகாவிற்கும் டாட்டி-க்கும் இதெல்லாம் புகழாரம்.

எண்ணுதற்கு யாவர் வல்லார்? – கிரயம்

சொல்வனம் தளத்தின் சிறப்பு இந்த மாதிரி விநோதமான கதைகளைத் தமிழில் அறிமுகம் செய்வது; வெறுமனே ஆங்கிலத்தில் இருக்கிறது என்று மட்டும் சுட்டாமல், வாசிக்கக் கூடிய தமிழில் உருவாக்கம் செய்வது!

தந்திரக் கை – கசந்த இனிப்பைச் சொல்லும் கதை. குறுவிசனம்.

ஒன்றை இழந்தால் மட்டுமே இன்னொன்றைப் பெற முடியுமா? இதை மேற்குலகில் Faustian offer என்கிறார்கள்.

இளம் பெண் சமீபத்தில் தனது கணவனையும் மகளையும் திடீரென்று சோகமான விபத்தில் இழக்கிறார். துக்கமும், வாழ்க்கையும் இறப்பும் அவை குறித்த நினைவுகளுமாய் கதை எழுகிறது. என்ன பேரம் போட்டார்கள்? எவற்றை விலை பேசினார்கள்? நினைத்தது நின்றதா?

கதையை எழுதியவர் சொல்லியது:

“பால்ய கால நினைவுகளில் இருந்து இந்தக் கதை உருவானது. அப்பொழுதுதான், அந்தத் தாறுமாறான விளம்பரத்தை அதைவிட தாறுமாறான இடத்தில் தற்செயலாக பார்த்தேன். மூளையில் ஏற்பட்ட வீக்கத்திற்காக என் ஒன்றுவிட்ட அக்கா, அறுவை சிகிச்சைக்குள்ளாக இருந்த சமயம் அது. அந்த சமயத்தில் கடுமையான, நிலையான கலக்கத்தில் இருந்தேன். அப்பொழுது பயத்தால் முடங்கி, செய்வதறியாது அவளின் கணவனை, தினசரி இரண்டு தடவை அழைத்து அவளின் நிலையைப் பற்றி கேட்பேன். அறுவை சிகிச்சை முடிந்து, குணமாகி அவள் சகஜநிலையான பிறகு, இதை எழுதத் துவங்கினேன். ”

solvanam வாருங்கள். வாசியுங்கள். உங்கள் கருத்தைப் பகிருங்கள்.

”கறுப்பர்களைச் சொல்லாமல் கதை சொல்லுங்களேன்”

மேற்குலகின் இலக்கிய வட்டத்தில் சிறுகதைகள் ஆழமான வாசிப்புக்கு போதுமானவை அல்ல என்பது பெரும்பான்மை வாதம். அந்தக் கருத்திற்கு சவால் விட்டு நிராகரிக்கும் ஆக்கங்கள் பரிசு பெறுகின்றன.

அந்த மாதிரியான படைப்பு – டீஷா ஃபில்யா எழுதிய “ஒரு இயற்பியலாளரைக் காதலித்துக் கலப்பதெப்படி? ”

இது எச்.பி.ஓ. தொலைக்காட்சியில் டிவி தொடராக வரப்போகிறது. பென் + ஃபாக்னர் விருது வாங்கியிருக்கிறது. லாஸ் ஏஞ்சலீஸ் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் புகழைப் பெற்றிருக்கிறது.

இந்த மாதிரி பரிசுகள் பெறுவதற்கு முன், முதலில் ஒரு வெளியீட்டாளரைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களை எதிர் கொள்கின்றன. நிராகரிப்புக்குப் பிறகு நிராகரிப்பை எதிர்கொண்ட டீஷா, “ஒவ்வொரு புத்தக வெளியீட்டாளரும் அது “நல்ல பொருத்தம்” அல்ல என்று வலியுறுத்துகின்றனர். ஏன் இவ்வளவு பிரசுரகர்த்தாக்கள் என் தொகுப்பை திரும்ப அனுப்பினார்கள் என்று யோசிக்காமல் இருப்பது கடினம் என நினைத்தேன். அவர்கள் எல்லோரும் கறுப்பு (குணம்) என்னும் அடையாளத்தை அழித்து கருப்பினத்தவர்களின் கதைகளை எழுதச் சொன்னார்கள். அந்த மாதிரி கட்டுப்பாடுகள் இல்லாத பதிப்பகத்தார் கடைசியில்தான் கிடைத்தார்.” என்கிறார்.

கதைசொல்லி நாற்பதுகளில் இருக்கும் ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணி. பள்ளியில் ஓவியம் கற்றுக் கொடுப்பவர். அவளை ஒரு பொதுக்கூட்டத்தில் சந்திக்கிறோம். கலையையும் அறிவியலையும் ஒருங்கிணைத்து எவ்வாறு மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கலாம் என்பதற்காக அந்தக் கல்வி மாநாடு நடக்கிறது. அவளுக்கு கருப்பின ஆண்கள் எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள் என்பதன் மீது ஒரு கண். அந்த ஆடவனை அவளின் அம்மா ஒப்புக் கொள்ள வேண்டும்.

அவள் திறமையான இயற்பியலாளரை சந்திக்கிறாள். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது. ஆனால் அவசரப்படாமல் எச்சரிக்கையாக இருக்கிறார். முதல் சந்திப்பில் மணிக்கூறாக பேசுகிறார்கள். அவளின் வேலையைப் பற்றிப் பகிர்கிறாள். அவனும் தன் வேலையைப் பற்றிச் சொல்கிறான். இருவரும் குறுந்தகவல்கள் அனுப்பிக் கொள்கிறார்கள். இருப்பினும் முதலில் அவனுக்கு காதல் ஆர்வம் இல்லை என்பது போல் தோன்றுகிறது.

உறவின் வளர்ச்சியைப் பார்ப்பதுதான் கதையின் உற்சாகம்.

இந்த அற்புதமான கதையை நீங்கள் படிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

கதையை திற்ம்பட மொழியாக்கம் செய்த ஷ்யாமா அவர்களுக்கு என் வாழ்த்துகள்!

இமையிலி மக்களும் கிழிமுறி பண்பாடும்

ருட்யார்ட் கிப்ளிங் எழுதிய “ஒருவேளை” புத்தாண்டு வாழ்த்தாகக் கிடைத்தது:

ஒருவேளை

தங்களுடையதை இழந்து உங்கள் மீது பழி சுமத்தும் சமயத்தில்,
உங்களை ஒருநிலையாக வைத்திருக்க முடிந்தால்
எல்லா மனிதர்களும் உங்களை சந்தேகிக்கும்போது உங்களை நீங்கள் நம்பினால்,
எனினும் அவர்களின் சந்தேகத்திற்கும் அனுமதி கொடுத்திருங்கள்;
காத்திருக்கும் காலங்களில் சோர்வடையாமல் காத்திருந்தால்,
அல்லது பொய்கள் சொல்லப்பட்டாலும், அந்தப் பொய்களை கையாளாதீர்கள்,
அல்லது வெறுக்கப்பட்டாலும், வெறுப்புக்கு வழி விடாதீர்கள்,
இன்னும் அழகாகத் தோன்றாதே, புத்திசாலித்தனமாகப் பேசாதே:

உன்னால் கனவு காண முடிந்தால் – கனவுகளை உன்னுடைய எஜமானனாக ஆக்காமல் இருந்தால்;
உங்களால் சிந்திக்க முடிந்தால் – எண்ணங்களை உங்கள் குறிக்கோளாக ஆக்காமல் இருந்தால்;
நீங்கள் ஜயகோஷத்தையும் பேரழிவையும் சந்திக்க முடிந்தால்
அந்த இரண்டு ஏமாற்றுக்காரர்களையும் ஒரே மாதிரியாக நடத்துங்கள்;
நீங்கள் சொன்ன உண்மையை உரைக்குமாறு கேட்க உங்களால் முடிந்தால்
முறுக்கப்பட்ட கத்திகளால் முட்டாள்களுக்கான ஒரு பொறியை உருவாக்க,
அல்லது உங்கள் வாழ்க்கையை நீங்கள் அர்ப்பணித்து, அதன் பின்னும் நொறுங்கிய விஷயங்களைப் பாருங்கள்
மேலும் தேய்ந்து போன கருவிகளைக் கொண்டு குனிந்து அவற்றை மீட்டெழுப்பி உருவாக்குங்கள்:

உங்கள் எல்லா வெற்றிகளிளையும் ஒரேயொரு பந்துக் குவியலாக உருவாக்க முடிந்தால்
மொத்தத்தையும் சுண்டிப் போட்டுப் பார்த்து இடருக்கு உள்ளாக்கி
இழக்கவும், உங்கள் தொடக்கத்தில் மீண்டும் தொடங்கவும்
உங்களின் பழைய இழப்பைப் பற்றி மீண்டும் ஒருபோதும் மூச்சுவிடாதீர்கள்;
உங்கள் இதயத்தையும் நாடி நரம்புகளையும் நீங்கள் கட்டாயப்படுத்தினால்
அவை தேய்ந்து மறைந்து நீண்ட நாட்களுக்குப் பிறகும் உங்களுக்கு சேவை செய்ய,
உங்களிடம் எதுவும் இல்லாதபோது பிடித்துக் கொள்ளுங்கள்
அவற்றிடம் சொல்லும் மனத்திட்பத்தைத் தவிர: ‘பொறுங்கள்!’

பெருங்கூட்டத்தினரோடு பேசி உங்கள் நற்பண்புகளைக் கடைப்பிடித்தால்,
அல்லது அரசர்களுடன் உலாவி நடந்தாலும் – சாதாரணத் தொடர்பை இழக்காதீர்கள்,
எதிரிகளோ அல்லது அன்பான நண்பர்களோ உங்களை காயப்படுத்த முடியாது என்றால்,
எல்லா மனிதர்களும் உங்களை நம்பகமாக எண்ணினாலும், எவரும் அளவுக்கதிகமாக சார்ந்தும் இல்லாமல்;
மன்னிக்காத நிமிடத்தை உங்களால் நிரப்ப முடிந்தால்
அறுபது வினாடிகள் மதிப்புள்ள தூர ஓட்டத்துடன்,
பூமியும் அதில் உள்ள அனைத்தும் உன்னுடையது,
மேலும்-அது அதிகம் – நீ ஒரு மனிதனாக இருப்பாய், மகனே!

If— by Rudyard Kipling | Poetry Foundation

இன்று கிழிமுறி – ‘கேன்சல்’ கலாச்சாரம் (Cancel Culture). இமையிலி — “விழித்திரு” (Woke) அறைகூவல் காலம்.

1941-இலேயே கிப்ளிங்-கை ஜார்ஜ் ஆர்வெல் ஒரு கை பார்த்து இருக்கிறார்:

கிப்ளிங் ஒரு ஏகாதிபத்திய போர் வெறியர். அவர் தார்மீக ரீதியாக உணர்ச்சியற்றவர் மற்றும் அழகியல் ரீதியாக அருவருப்பானவர். அதை ஒப்புக்கொண்டு தொடங்குவது நல்லது,

மிகவும் தொழில்மயமான நாடுகளில் உள்ள அனைத்து இடதுசாரிக் கட்சிகளும் ஒரு ஏமாற்று நிலையில் உள்ளன. ஏனென்றால் அவர்கள் உண்மையில் அழிக்க விரும்பாத ஒன்றை எதிர்த்துப் போராடுவதைத் தங்கள் தொழிலாகக் கொண்டுள்ளனர். அவர்கள் சர்வதேசிய நோக்கங்களைக் கொண்டுள்ளனர், அதே நேரத்தில் அந்த நோக்கங்கள் பொருந்தாத வாழ்க்கைத் தரத்தைத் தக்கவைக்க அவர்கள் போராடுகிறார்கள். நாம் அனைவரும் ஆசியக் கூலிகளைக் கொள்ளையடிப்பதன் மூலம் வாழ்கிறோம், மேலும் ‘அறிவொளி’ பெற்றவர்கள் அனைவரும் அந்தக் கூலியாட்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம்; ஆனால் நமது வாழ்க்கைத் தரம், அதனால் நமது ‘அறிவொளி’, கொள்ளை தொடர வேண்டும் என்று கோருகிறது.

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றாலும், கிப்ளிங் ஒரு பழமைவாதவாதி, இது இப்போதெல்லாம் இல்லை. இப்போது தங்களை பழமைவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் லிபரல், பாசிஸ்டுகள் அல்லது பாசிஸ்டுகளின் கூட்டாளிகள். அவர் தன்னை ஆளும் அதிகாரத்துடன் அடையாளப்படுத்தினார், எதிர்க்கட்சியுடன் அல்ல. ஒரு திறமையான எழுத்தாளருக்கு இது நமக்கு விசித்திரமாகவும் அருவருப்பாகவும் தோன்றுகிறது, ஆனால் கிப்ளிங்கிற்கு யதார்த்தத்தின் மீது ஒரு குறிப்பிட்ட பிடியைக் கொடுப்பதற்கு இது உதவுகிறது.

Rudyard Kipling | The Orwell Foundation

இந்த ஆர்வெல் கட்டுரையின் துவக்கத்தில் டி.எஸ். எலியட் என்பவரும் ஃபாஸிஸ்ட் ஆகவும் யூத எதிர்ப்பாளராகவும் அடையாளம் ஆகிறார்.

தமிழிலும் எக்கச்சக்கமான பேர்கள், எழுத்தாளர்கள் தடை செய்யப்பட்டு, அவர்களின் எதிர்தரப்பினாரால் ப்ளாக் ஆகி, கருத்துக்களைக் கேட்காமல் விட்டுவிடுகிறார்கள்.

கேள்விகள்:

  1. ”படைப்பாளியைப் பார்க்காதே. படைப்பைப் பார்!” – என்று வாசிக்க வேண்டுமா?
  2. கோபத்தில் வரும் தகாத வார்த்தை வெளிப்பாடு என்பது ஆழ்மனதில் பொதிந்திருக்கும் வெறுப்பை பொதுவிற்குக் கொணர்கிறதா?
  3. ஒவ்வொரு பிரயோகத்தையும் எவ்விதமான கருத்தையும் – இது யார் மனத்தை புண்படுத்தும்? எந்தச் சமூகத்தை பாதிக்கும்? எவருடைய இனத்தை, மதத்தை, குறியிட்டு இழிபடுத்தும்? :: என்று கவனித்து, யோசித்து, கத்திரி போட்டு, அதன் பின் இன்னும் ஆறப்போட்டு, வெட்டி, சரி செய்த பிறகே ஃபேஸ்புக் / டிவிட்டரில் இட வேண்டுமா?
  4. அந்தக் கால விழுமியங்கள், அப்போதைய கலாச்சாரம் என எல்லாவற்றையும் கருத்தில் இடஞ்சுட்டி பொருள் விளக்க வேண்டுமா?
  5. விக்கிரமாதித்தன் என்னும் மனிதரை விவரிக்க வேண்டுமா அல்லது விக்கி அண்ணாச்சியின் கவிதைகள் எவ்வாறு, அடு எவ்வகை உணர்வுகள் எழுப்புகின்றன என விஷ்ணுபுரம் மேடையில் உரையாற்ற வேண்டுமா?

டபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ?

I suppose it is submerged memories that give to our dreams their curious air of hyper-reality. But perhaps there is something else as well, something nebulous, gauze-like, through which everything one sees in a dream seems, paradoxically, much clearer. A pond becomes a lake, a breeze becomes a storm, a handful of dust is a desert, a grain of sulfur in the blood is a volcanic inferno.                    —W. G. Sebald, The Rings of Saturn

செபால்ட் எழுத்துக்களின் அடிநாதம் நினைவுகள். பழைய விஷயங்களை நினைவில் வைத்திருப்பதால் சித்திரவதைக்குள்ளாவோம். அதனால், பழையதை மறக்க எத்தனிக்கிறோம். ஆனால், நடந்ததை மறப்பதால் எவ்வளவு பெரிய கொடூரத்தை அரங்கேற்றுகிறோம்?

அவரின் ஆஸ்டர்லிட்ஸ் நாவல் முழுக்க ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைகிறது. இடங்களும் மனிதர்களும் மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளும் அவர்களின் அனுபவங்களும் இடறி, அகஸ்மாத்தாகவோ அல்லது வலிந்தோ தட்டுப்பட்டு உரசிக் கொண்டேயிருக்கின்றன. அதுவும் எனக்கு இது நடந்ததாக நான் சொல்லும்போது, அந்த சம்பவத்தின் மாந்தர்கள் கிடைக்கிறார்கள். நான் சொல்லும் வார்த்தை என்னும்போது அந்த நிகழ்வின் உண்மைத்தன்மை உணரப்பட்டு ஆவணப்படம் போல் உரைக்கிறது.

செபால்ட் எழுத்துக்களைக் குறித்த அறிமுகத்தையும் சீபால்ட் குறித்த விமர்சனங்களின் மொழிபெயர்ப்புகளையும் தாங்கி இந்த சொல்வனம் இதழ் வெளியாகி இருக்கிறது.

“It seems to me then as if all the moments of our life occupy the same space, as if future events already existed and were only waiting for us to find our way to them at last, just as when we have accepted an invitation we duly arrive in a certain house at a given time.” 

WG Sebald, Austerlitz

  • ஸெபால்டின் நடையை சுருக்கமாகச் சொன்னால்
    • மனப்பதிவு கலந்த பயணக்குறிப்புகள்
    • புனைவில் கொஞ்சம் சரித்திரமும் தொன்மமும்
    • கதைசொல்லி என்பவர் சில சமயம் செபால்ட்; பல சமயங்களில் செபால்டுக்கே கதை சொல்லுபவர்
    • அந்தக் கதைசொல்லி அலைபாயும் தன்மை கொண்டவர்; மற்றவரின் அந்தரங்கங்களை அனுசரணை கலந்த பரிவுடன் அணுகுபவர்.
    • நாவலில் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக் கொண்டேயிருக்கும் போக்கு
    • ஸெபால்டின் கதைக்களன் அனைத்தும் ஐரோப்பாவையும் அதன் வரலாற்றையும் மட்டுமே சுற்றி வருபவை.
    • அவரின் எழுத்தில் பத்திப் பிரிவினைகள் எதிர்பார்க்கக் கூடாது.
    • ஒப்புமைகள், உருவகங்கள், உவமானங்கள் கிடையாது. வெறும் நேரடி.
    • புகைப்படங்கள் நிறைந்திருக்கும்; கருப்பு-வெள்ளை நிழற்படங்கள் அவை; அந்தப் படங்களுக்கு எந்த அடிக்குறிப்பும் இராது; அவை தோற்ற மயக்கத்தை ஏற்படுத்தும்.
    • யோர்ஹே லூயி ஃபோர்ஹே (Jorge Luis Borges) அவரின் ஆதர்சம்

செபால்ட் படிக்கும்போது கோணங்கியின் கல்குதிரை படிப்பது போல் இருக்கலாம். அவரின் வாசகங்கள் சுழல்பவை; ஆரம்பித்த இடத்திற்கு திரும்ப வருபவை; பிரதிபலிக்கும் கண்ணாடி போல் நிகழ்வை சொல்பவை. கதை கொஞ்சம் முன்னே நகர்வது போல் தோன்றினாலும் நடந்த அந்தக் கால விஷயத்திற்கே கவனத்தைக் கோரி திரும்பத் திரும்ப பழைய காலத்திற்கு கொண்டு நிறுத்துபவை.

“We learn from history as much as a rabbit learns from an experiment that’s performed upon it.” 

― W.G. Sebald

இலக்கியம்

shella

நானும் பேயோனும் அவர் வீட்டில் இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தோம். எப்போதாவது ஒரு மாறுதலுக்காக வாசிப்போம். இருவருக்கும் இலக்கியம் தெரியாது. ஆனால் சினிமாவும் தெரியாது. எனவே இலக்கிய நூல்களை வைத்து சினிமா போல் பார்த்தோம். காபிதான் குறிக்கோள்.

இலக்கிய புத்தகத்தின் மாடர்ன் ஆர்ட் அட்டையில் வலதுகையை ஊன்றி குரோசவாவை யோசித்தபோது என் கண்களில் நீர் துளிர்த்தது.

“அட, என்னாச்சு திடீர்னு?” லபக்குதாஸ் கவலை தெரிவித்தார்.

“என் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சு.”

“உங்க பொண்டாட்டி பக்கத்து ரூம்லதான இருக்காங்க.”

“அதுனாலதான்.”

carrom_chess_both_board_players_table

பேயோன் எழுதியது

Tamil Literary Magazines: Internet Publications

நம்முடைய கைபேசியிலோ, கணினியிலோ, இணைய இணைப்பு இல்லாத போதும் வாசிப்பதற்கு வசதியாக பதாகை இதழ் பிடிஎஃப் வடிவிலும் கிடைக்கிறது. அதைப் பற்றி சில குறிப்புகள்.

முதலில் உள்ளடக்கம்: இரண்டு மணி நேரத்திற்குள் வாசித்து முடிக்கும் அளவுதான் இருக்கிறது, வாரந்தோறும் வெளிவருவதால், இந்த சுருக்கமான 27 பக்க இதழ் என்று முடிவெடுத்திருப்பார்கள்.

மொழியாக்க கதைகள், சுவாரசியமான கட்டுரைகள், தொடர்கதையின் பகுதிகள் என்று எல்லாமும் கிடைக்கிறது. இந்த இதழ் வெளியானவுடன் ‘To Kill a Mockingbird’ கதை உருவான கதை வாசித்தேன். அந்தக் கட்டுரையை தமிழுக்குக் கொணர்ந்த உடனடித்தனமும் அந்த சம்பவங்களின் சுவாரசியமும் நம்முடைய இந்தியச் சூழலுக்கு எவ்வாறு பொருந்துகிறது என்று எண்ணிப் பார்க்க வைக்கும் உறுத்தாத மொழிபெயர்ப்பும் – இந்த இதழை முக்கியமாக்குகின்றன.

இனி *பிடிஎஃப்* புறத்தோற்றம் பற்றிய எண்ணங்கள்:

1. பிடிஎஃப் கோப்பின் முதல் பக்கத்தில் எந்த இதழ், எத்தனையாவது வெளியீடு, எப்பொழுது வந்தது போன்ற முகப்பு தலைப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை.

2. இரண்டாம பக்கமாக – இம்பிரிண்ட் விவரங்களைப் போடலாம். யாரைத் தொடர்பு கொள்வது, எவ்வாறு படைப்புகளை அனுப்புவது, யார் இதை இணையத்தில் போடுகிறார்கள் என்றும் காப்புரிமை குறித்த விவரங்களையும் சேர்க்கலாம்.

3. தலைப்பிலேயே ஆசிரியர் பெயர் போடுவது உவப்பாக இல்லை. எழுதியவர் பெயரை – இன்னொரு எழுத்துருவிலும் (அல்லது சிறிய எழுத்து அளவில்); மொழியாக்கியவர் பெயரை மற்றொரு lineல் கொடுத்தால் – யார் படைப்பாளி என்பது தெளிவாகத் தெரியும்.

4. லூயிஸ் கரோலின் Alice’s Adventures in Wonderland நாவல் குறித்த பதிவு நன்றாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

5. சுட்டிகளை க்ளிக் செய்தால், அந்த தளத்தின் முகவரிக்கே செல்லுமாறு அமைக்கலாம். இப்பொழுது, காபி/பேஸ்ட் செய்துதான் அந்த உரல்களைச் சென்றடைய முடிகிறது.

7. Header and Footer போடலாம். ஒவ்வொரு பக்கத்தின் தலைப்பில், பதாகையின் இதழ் எண், எந்த நாளில் வெளியானது என்று சொல்ல வேண்டும். ஒவ்வொரு பக்கத்தின் அடியில் எந்தக் கட்டுரையை வாசிக்கிறோம் என்பதைச் சொல்லலாம்.

8. எல்லாக் கவிதைகளும் இடது பக்கமாக alignment கொண்டிருப்பதற்கு பதில், சிலவற்றை நடுவாந்தரமாக போடுவது, சிலதை வலதுபக்கமாக நெறிப்படுத்துவது என்று வித்தியாசமாக செய்தால், வாசகருக்கு ஆர்வம் அதிகரிக்கும்.

9. ஆக்கங்களின் பக்க இறுதியில், தொக்கி நிற்கும் கவிதை பத்திகளோ, கட்டுரையின் பாக்கி சொச்சங்களோ இல்லாமல், புதிய பாராக்கள், புதிய பக்கத்தில் துவங்குமாறு செய்யலாம்.

10. பார்டர் போட்டு கட்டம் கட்டலாம்.

நீங்கள் வாசித்துவிட்டீர்களா?

அனைவரையும் கண்காணிக்கும் அன்பான கிருபை கொண்ட கருவிகள்

நன்றி: Richard Brautigan: All Watched Over By Machines Of Loving Grace

நான் யோசிக்க விரும்புகிறேன் (எவ்வளவு
சீக்கிரமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் பசும் புற்றரை
அங்கே பாலூட்டிகளும் கணினிகளும்
ஓருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒன்றாக
நிரல்நெறி இணக்கத்துடன்
நன்னீர் போல்
நிர்மலமான வான்வெளியைத் தொடும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(தயவு செய்து… இப்போதே!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் வனாந்திரம்
கற்பகதரு மரங்களும் கணிப்பொருள்களும் நிரம்பியிருக்க
மனக்கவலையின்றி மான்கள் சஞ்சரிக்க
கணிப்பொறிகளைக் கடந்தால்
அங்கே கான்முகம் போல்
சுழலும் மொட்டுகள் அரும்பும்.

நான் யோசிக்க விரும்புகிறேன்
(அப்படித்தான் இருக்கவேண்டும்!)
தன்னியக்க கட்டுப்பாட்டில் இயங்கும் சுற்றுப்புறச் சூழியல்
நம் பயனில் வேலையில் இருந்து விடுதலை கிட்ட
இயற்கையுடன் மீண்டும் இணைய
நாம் பாலூட்டியாக திரும்ப மாற
சகோதரன்களும் சகோதரிகளுமாய் இருக்க
அன்பான கிருபை கொண்ட கருவிகள்
அனைவரையும் கண்காணிக்கும்.
Nongirrnga_marawili_baratjula_2014_Cybernetics_Forest_Ecology

என் குறிப்புகள்

இந்த ஆக்கம் 1967ல் எழுதப்பட்டது. அப்போது உடோப்பியக் கனவுகள் இருந்தால் சரி. கம்ப்யூட்டரும் காட்டு விலங்குகளும் கைகோர்த்துக் கொண்டு சந்தோஷமாய் வாழுகின்றன என்று எண்ணியிருக்கலாம்.

ஐம்பதாண்டுகள் கழித்துப் பார்த்தால், மனிதன் + முதலியம் ==> முடிந்தவரை குப்பை போடுகிறது. தொழில்நுட்பம் என்பது வேவு பார்ப்பதற்கும், ஒற்றறிவதற்கும், ரகசியமாய் கண்காணிப்பதற்கும், அடுத்தவரின் பொருள்களைத் திருடுவதற்கும், உலகளாவிய உளவுக்கும் நேர்மையாய் இருக்கிறது.

மீண்டும் 1967ல் இருந்த நிலையைப் பார்க்கலாம். இணையம் கிடையாது, உலகளாவிய செல்பேசி பயன்பாடு கிடையாது. ருஷியாவுடன் பிரச்சினைகள் இருந்தாலும், இன்னுமொரு உலகப்போர் மூளும் அபாயம் கிடையாது. ஐஸிஸ் கிடையாது. எல்லோர் கையிலும் ஐபோன் கிடையாது. கணினிக் கழிவுகள் கிடையாது.

அந்தக் காலகட்டத்தில் பறக்கும் கார்கள், சூரியசக்தியில் ஓடும் வீடுகள், பசுமைப் புரட்சி, கூட்டுறவு என நினைத்து எழுதியிருப்பார். இன்று?

அனுபவம் இல்லாத ராஜா

ஒரு ஊருக்குப் போகாமலேயே அந்த ஊரைப் பற்றி கட்டுரை எழுதுவது அநியாயம் என்பது பாரிஸ் நகருக்கு சென்ற பிறகுதான் உதித்தது. லூயிக்கள் குறித்தும், மேரி ஆண்டொனெட் பட விமர்சனங்களும், புரட்சிப் போராட்டங்கள் விவரணையும், சார்கோசி அரசியலும் எழுதி இருக்கிறேன். அசலூர்க்காரன் அந்தப் பதிவுகளை படித்திருந்தால், ‘Autobiography of a Yogi’ படிப்பது போன்ற அசட்டுத்தனம் கலந்த ஆய்வுரையாக எடுத்துக் கொண்டிருப்பார்.

ஒரிரு வருடங்களாவது அந்தந்த நகரத்தில் தங்க வேண்டும். உள்ளூர் மக்களோடு மக்களாக அன்றாடம் புரளவேண்டும். அவர்களோடு நேர்ந்து ‘அமூர்’ போன்ற பிரென்சு படங்கள் பார்த்து திரைப்பட அறிமுகம் எழுதுவதற்கும், அமிஞ்சிகரையில் இருந்து கொண்டு சொந்த அனுபவத்தை வைத்தும் துணையெழுத்தின் தயவிலும் எழுதுவது சினிமாப் பார்வையாக இல்லாமல் தனிநபர் நனவோடையாக மட்டுமே மிஞ்சி விடுகிறது.

பாரிசின் மூத்திர வாசமும், நதிக்கரைகளில் இரவு பன்னிரெண்டு மணிக்கு அணி திரளும் மக்களுடன் மிதமாக தண்ணியடிக்கும் கொண்டாட்டமும், பூங்காக்களில் படைக்கலன் போல் மிகுதியானவர்கள் வாரநாள் மதியம் படுத்து சூரியக்குளியல் அனுபவிக்கும் மனப்பான்மையும், ராஜாக்களை சிரச்சேதம் செய்ததை வெற்றித் திருவிழாவாக்கும் எண்ணமும் ரிமோட் கண்ட்ரோலிலும் புத்தக வாசிப்பிலும் என்றும் உறிஞ்ச முடியாது.