Tag Archives: படைப்பாளி

StoryJudge: TamilOsai on Air with Siva Durai: இந்த வார இலக்கியம்

லிட்ஃபெஸ்ட் செல்லும் முன் நடந்தது:
இந்தியாவின் பிரபலமான இலக்கிய முகவர்: “இந்த மாதிரியான கதை இந்தியாவில் வேலை செய்யாது.”
ஆனால் என் முகவர்: “உங்களிடம் திறன் இருக்கிறது. இதை நான் வெற்றி பெறச் செய்கிறேன்.”
என்ன நடந்தது… அது இறுதியில்

நான்கு வாரமாக “சென்ற வார இலக்கியம்” குறித்த அறிமுகப் பதிவு இடவில்லை.

டாக்-ஜட்ஜ் தினேஷ் என்றால் பாஸ்டன் வந்து வட்டியும் முதலுமாக வசூலித்திருப்பார்.
ஸ்டோரி-ஜட்ஜ் சிவா சாந்த சொரூபி.

அதனால் தான் இந்த வாரம் பெருமாள், தேசாந்திரி, ஆசான் என எல்லோருக்கும் 33.33%.

அவர் உன்னதம்.
நான் என்றும் ஞானபீடம்.

அவர் இலக்கிய கோளாறு.
நான் அசல் கோலார்.

அதிருக்கட்டும்.

5 இல் பேசியது:

1. நல்லக்கண்ணு x சோ.தர்மன்: த.மு.க.எ.ச x இயக்கம் சாரா எழுத்து - இலக்கியத்திற்குள் இருக்கும் இடது/மார்க்சிஸ்ட் அரசியல்
2. அகழ் & வல்லினம் இதழ்
3. வண்ணநிலவன், போகன் சங்கர், சுரேஷ் வெங்கடாத்ரி இன்ன பிறர் விவாதத்தில்: ஜெயகாந்தன் வெகுசனமும் x தி. ஜானகிராமனின் காமத்துப்பாலும்

6 இல் பேசியது:

1. வரலாற்றாய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய களப்பிரர் ஆட்சியில் தமிழகம் நூலை : களப்பிரர் காலத்து இலங்கை - பாலா கருப்பசாமி
2. வாசகசாலை : ஆலிவ் விதைகளைச் சுமந்த அகதி – ஷாராஜ் குறுநாவல்
3. ஞானபீடம் : ஜெயமோகன் ஏன் பொங்கினார்? - வைரமுத்து, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் என நீளும் பாடல் நோபல்

7 இல் பேசியது:

1. எஸ். ராமகிருஷ்ணன் - அமைதிப் புயல்: அட்சரம் முதல் அகிலம்!
2. ஆனந்த சந்திரிகை & இயல் | சிறார் மின்னிதழ்
3. 2026 - எழுத்தாளர் பி.ச. குப்புசாமி இலக்கிய விருது - க. மோகனரங்கன்.

8 இல் பேசியது:

1. விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும் - சாரு நிவேதிதா கதை
2. விமலாதித்த மாமல்லனின் சிபிஐ கதைகள் தொகுப்பு - நியாயங்களின் திரிசங்கு: காளிப்பிரசாத்
3. இலக்கியம் பற்றிய தவறான புரிதல்கள் : சுரேஷ் ப்ரதீப்

மேலும்:
வல்லினம்
அ) டோன் கனவில் கண்ட இல்லறம் by ஷஃபிக் கசாலி : தமிழில்: சல்மா தினேசுவரி
‘Bahagia di Dalam Balang Kaca’ சிறுகதை தொகுப்பில் வெளியிடப்பட்டது. (மலேசிய புத்தக மற்றும் மொழிபெயர்ப்பு நிறுவனம், 2016); ‘Cerpen Syafiq Ghazali’ (Buku Fixi, 2024) இல் மறுபதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஆ) பனிக்குடில் by ரோஸ்லான் ஜொமெல் : தமிழில்: பிருத்விராஜூ
‘செரங்கா டீ டாலாம் கெப்பாலா’ (Serangga di Dalam Kepala) எனும் சிறுகதை தொகுப்பில் இடம்பெற்றது.

இ) அப்பா தற்கொலை செய்து இறந்தார் by நூர் அடிலா : தமிழில்: ஆசிர் லாவண்யா
ஸ்வரா இதழ் 5இல் (ஜனவரி-மார்ச் 2021) இல் வெளியிடப்பட்டது. தும்பொ மென்ஜாடி போஹோன் சகுரா (Tumbuh Menjadi Pohon Sakura) (கவா புத்தகம், 2024) என்ற சிறுகதைத் தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

ஈ) பெண்களின் நாட்டியம் by ஃபஸ்லீனா ஹிஷாமுடின் : தமிழில்: கி. இளம்பூரணன்
‘வனித்தா’ இதழில் (செப்.2017) வெளியிடப்பட்டது. ‘தாரி பசார் பெரெம்புவான்’ சிறுகதை தொகுப்பில் (Roman Buku, 2018) இடம்பெற்றது

உ) மூன்று பெண்களின் உரையாடல் by ரெஜினா இப்ராஹிம் : தமிழில்: விஜயலட்சுமி
சிறுகதைத் தொகுப்பில் (புக்கு ஃபிக்ஸி, 2015) வெளியிடப்பட்டது. இந்தச் சிறுகதை, புக்கு ஃபிக்ஸி மற்றும் புத்ரஜெயா சர்வதேச புத்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டில், 2015ஆம் ஆண்டின் சிறந்த இருபது சிறுகதைகளுள் (புக்கு ஃபிக்ஸி, 2016) ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

ஊ) சிறுகதை → பேங்கோ → by சுனில் கிருஷ்ணன்
எ) சிறுகதை → சுழலும் ஆழி → by கமலதேவி
ஏ) சிறுகதை → நச்சுப்புன்னகை → by கெளதம் நாராயணன்
ஐ) சிறுகதை → பெருமுலை → by பிரபு முருகானந்தம்
ஒ) கட்டுரை → மொழியும் சொல்லும் → by அ.பாண்டியன்
ஓ) மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணி
ஔ) கட்டுரை → கலை பண்பாடு ஆவணமாக்கல் → by ரம்யா
ஃ) புத்தகப்பார்வை → நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம் → by இன்பா
க) பதிவு → முன்னோடிகளின் வரிசையில் → by அரவின் குமார்

வாசகசாலை

  1. எழுத்தாளர் சுபியின் யாறு, பன்னிரண்டு சிறுகதைகளைக் கொண்ட யாறு – சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து : —> ஆழ்மனத் திசைகள் – ராஜேஷ் வைரபாண்டியன்
  2. செங்காட்டுப் பூ :: சிறுகதைத் தொகுப்பு ::முகிலன் பாரதி ::தமிழ் வெளி வெளியீடு —> தடமற்ற வாழ்வில் தடயமற்ற வாக்குறுதிகளின் நகரதலில்… – இளையவன் சிவா
  3. கவிஞர் நரனின் கவிதைத் தொகுப்பின் தலைப்பு ‘மிளகு-பருத்தி- மற்றும் யானைகள்’. சால்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 2020ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகம். :: -தயாஜி, மலேசியா
  4. பழைய கணக்கு (வாத்தியார்)…..! – கே.ரவிஷங்கர் சிறுகதை
  5. முத்தத்தின் வாசனை! – ராம் சங்கர் சிறுகதை
  6. வேரல் புக்ஸ் வெளியிட்டுள்ள எழுத்தாளர், கவிஞர் கண்ணன் விஸ்வகாந்தி அவர்களின் தாழ்வரை நாவல் பற்றிய கண்ணோட்டம் – கமலா முரளி
  7. குணுக்கம் – சுதர்சன் சிறுகதை
  8. எடுபிடி – கனகா பாலன் சிறுகதை
  9. அந்த இரண்டாயிரம் ரூபாய் சிறுகதை —> ந. அருண் பிரகாஷ் ராஜ்

அகழ்
அ) நேர்காணல் · மம்மர் அறுக்கும் மருந்து (1) – “நமது பல்கலைக்கழகங்கள் வெறும் வகுப்பறைகளாகச் சுருங்கிவிட்டன!” : பெருமாள்முருகன் – விஜயகுமார்
ஆ) ஈழ இலக்கியம்·சிறுகதைகள் · கட்டுச் சோறு : சு. தவச்செல்வன்
இ) நகுலனின் “நினைவுப் பாதை” நாவல் குறித்த “அஹம் மந்திராஸ்மி” கட்டுரை : விஷால் ராஜா

கனலி

  1. நீலவியாபகம் By சு. வெங்கட்
  2. சுருட்டை By கிரிசாந்
  3. நூல் விமர்சனம் : ராஜம் கிருஷ்ணன் கட்டியெழுப்பியமணலூர் மணியம்மையின் வரலாற்றுச் சித்திரம் By சுப்பிரமணி இரமேஷ்

எஸ்.ரா

https://www.sramakrishnan.com/category/cat-60/

அ) தங்கள் பொறுப்பு
ஆ) நிழலானை
இ) நீரறியா அன்னங்கள்
ஈ) காற்றில் மிதக்கிறோம்
உ) கிளி சொல்லாதது
ஊ) தொடுவிரல்
எ) மன்னிப்பு : EMI வசதி உண்டு
ஏ) ஐந்தாவது எம்.ஏ.
ஐ) பறக்கத் தெரிந்த யானை

நிற்க…
துவக்கத்தில் சொன்ன சம்பவம்?

இரு வழிகள்:

  1. என்ன நடந்தது என்றால்…
    கதை இந்தியாவில் வேலை செய்யவில்லை.
    ஆனால் கொரியாவில் நூறாயிரம் பிரதிகள் விற்றது.
    “இந்திய ஆன்மா, யுனிவர்சல் வலி” என்று அவர்கள் சொன்னார்கள்.
  2. கதை published ஆனது.
    Reviews வந்தது — “derivative, over-written, tries too hard.”
    வெளிநாட்டிற்காக இன்னொரு பிரத்தியேக பார்சல் தயார்.

எழுத்தாளர் + சிந்தனையாளர் + குரு = இயக்கம்?

எந்தவொரு எழுத்தாளருக்கும் இல்லாத தலைமைப் பண்பு ஜெயமோகனிடம் இருக்கிறது. வெறுமனே ஃபேஸ்புக் குழு, மின்னஞ்சல் அரட்டை என்று இல்லாமல் செறிவான விவாதம், பண்பட்ட மாற்றுக்கருத்துகளுக்கு இடம், பரஸ்பர அறிமுகம், செல்ல சீண்டல், கடுமையான எதிர்வினை எல்லாவற்றுக்கும் தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார். மடல்கள் தொய்யும்போது தானே நுழைந்து உரையாடலை மேம்படுத்துகிறார்.

அந்தக் குழுவில் அங்கத்தினராக இருப்பது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. மனநிறைவை மட்டுமல்லாது, சுற்றுலா செல்லும்போது அவர்களை நேரடியாகப் பார்த்து உரையாடும் வாய்ப்பையும் தருகிறது.

ஜெயமோகனின் சொல்புதிது குழும நண்பர்களை லண்டனில் சந்தித்தேன். விமான நிலையத்திற்கே வந்து பெட்டி படுக்கைகளை எடுக்க உதவிய கிரி, காடு நாவலுடன் காணக் கிடைத்த எஸ்ஸெக்ஸ் சிவா, படு பாந்தமாக பேசிக் கொண்டிருந்த பிரபு என்று சுவாரசியமான பேச்சு. சிறில் அலெக்ஸும் வந்திருந்தால் இன்னும் கனஜோராக இருந்திருக்கும் என்பது தவிர வேறெந்த குறையும் இல்லாத மாலைப்பொழுது.

தமிழில் எழுதும் எல்லாரையும் தெரியும்னு சொல்லலாம்தான்… ஆனால், அவர்களுக்கு என்னைத் தெரியுமா : )

மேலும், இங்கே நான் சொல்வது தலைமை தாங்கி வழிநடத்தும் குணாதிசயத்தைக் குறித்தது…

ஒருவர் நல்ல சுவாரசியமான/முக்கியமான படைப்பு எழுத்தாளராக இருப்பது வேறு விஷயம். அந்த நல்ல எழுத்தாளரே வழிகாட்டியாக இருந்து, பலரை ஒருங்கிணைத்து, மக்களிடம் செல்வாக்கும் நிறைந்து, அவர்களிடம் செயலாற்றலையும் தோற்றுவித்து, தன்னுடைய வாசிப்பாளர்களுக்கு தன்னிறைவையும் தந்து, அவர்களின் கிரியாஊக்கியாகவும் விளங்குவதை குறிப்பிட நினைக்கிறேன்.

நன்றி ஜெயமோகன்.

R Ponnammal: Awards, Prizes and Life Notes

முந்தைய குறிப்புகள்: ஆர் பொன்னம்மாள் விருதுகளும் அவார்டுகளும்

Noted Kids Author - Book Writer

Achievements - Prizes -Recognition - Josiyam - Jothidam - Aanmeegam - Religion

Ponnammal - Tamil author and Writer on Religion, Gokulam, Kamakoti, Vanathy

Ponnammal - Madras Kuzhandhai Ezhuthaalar sangam - AVM: Kizhakku Pathippagam

Kids and Children Writers: Tamil Authors: Book Publishers: Palaniappa Brothers: Giri Trading

Ponnammal - Thamil Publishers - Noted Writers and Authors

Software Development & Writers, Bloggers, Authors: Technology & Tamil Net

பத்தாண்டு வலை வாழ்க்கை


அசல்

நகல் – தமிழ் புத்தக ஆசிரியரும் வாசகர் குழாமும்

ஜெயமோகன்: ஆளுமைகள் மதிப்பீடுகள்

ஜெயமோகனை சந்தித்த கதை தொடர்கிறது.

நான்: இப்போ எழுதறதில் எதையாவது படிச்சு ரெஃபர் பண்ணுகிற மாதிரி உங்களுக்கு யாராவது இருக்காங்களா? உங்களைக் கவர்ந்தவர்கள்?

“நெறைய பேரு இருக்காங்க. அப்பப்ப சொல்லிடுவேன். உங்களுக்கு அறிமுகமானவர்களில் சேதுபதி அருணாச்சலத்தையும் அரவிந்தன் நீலகண்டனையும் தற்காலத்தின் மிகச் சிறந்த வளரும் எழுத்தாளர்களாக நான் கருதுகிறேன். அந்த வயதில் நான் வாசித்ததை விட, இவர்களின் அகலமும், ஆழமும் நீளமும் அதிகம்.

சொல்லப் போனால், அ.நீ. குறிப்பிடத்தக்க படைப்பாளியாக, தமிழிலக்கிய கர்த்தாவாக வரவேண்டியவர்; வந்திருக்கக் கூடியவர். ஆனால், அவருக்கு அதில் ஆர்வம் இல்லை. அவருடைய முனைப்பெல்லாம், தன்னார்வத் தொண்டில் இருப்பதும் நல்லதே.

சுய உதவிக் குழு, மகளிர் நலன், விவேகானந்தா கேந்திரா என்று அயராது உழைக்கிறார்.

எனக்கு ஏதாவது சந்தேகம் வந்தால் இவர்கள் இருவரிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.

நேசகுமாரை…”

ட்ரெயின் வரும் சத்தத்தில் ஜெயமோகன் உரையாடல் முற்றுப் பெற்று வெங்கட் சாமிநாதனுக்கு தாவிவிட்டது.

“வெங்கட் சாமிநாதனின் நகையுணர்வு மெலிதானது; பிரசித்தி பெற்றது. யாத்ராவில் ஒரு புத்தகத்திற்கு விமர்சனம் போடுகிறார்.

‘இந்தப் புத்தகத்தில் 13 வார்த்தைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

  • ஆசிரியர் பெயர்
  • பக்கங்கள்
  • பதிப்பகம்
  • விலை
  • அச்சிட்டவர்
  • புத்தகத் தலைப்பு

இப்படி போகிறது.

இன்னொரு உதாரணம் சொல்கிறேன். ’35 வயதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும்!’

இன்றைய அளவிலும் கறாரான கருத்துக்கு சொந்தக்காரர்.

வெ.சா. விமர்சனத்தை தனியாகவும், சொந்த வாழ்க்கையில பிரதிபலன் பார்க்காம உதவறதையும் தனித்தனியா வத்திருந்தார். அவர் நேர்மையாக, கடுமையாக விமர்சித்த பலருக்கு தனிப்பட பலப் பல விஷயங்கள் செய்திருக்கார்.

அதை வெளியில் யாருக்கும் சொன்னதுமில்லை. உதவி பெத்துண்டவங்க சொல்லிதான் எனக்கே தெரியும்!

நீங்க சென்னை வரும்போது அவசியம் சந்திக்க வேண்டிய மனிதர்.”

நான்: அச்சச்சோ… மிஸ் பண்ணிட்டேனே! சுஜாதாவைப் சந்திச்சவங்க சொன்னதில் இருந்து எனக்கு பயம் வந்துடுச்சு.

‘அச்சடிக்க காசு கொடுக்கிறவன் கேக்கிறபடிதான் எழுதணும்’

The ‘un-interfering publisher’ is one of journalism’s great myths

பத்திரிகை வெளியிடுபவர், தன்னுடைய இதழின் உள்ளடக்கத்தில் கைவைக்கமாட்டார் என்பது மிகப் பெரிய பொய்.

தலைப்பில் வந்திருக்கும் கருத்தை வழிமொழிந்தவர்: இந்து என் ராம்: http://twitter.com/nramind/status/2508349650

மீடியாவில் இருப்போரின் தரப்பட்டியலையும் தலை பத்து வரிசையையும் http://www.mediaite.com/ வலையகம் வெளியிடுகிறது. இதைத் துவங்கியவர் MSNBC சேனலலின் வழக்கறிஞர். மேலும், ஊடகத் தொடர்பாக ஆலோசனை வழங்கும் நிறுவனத்தை நிர்வகிப்பவர்.

தொடர்புள்ள தள உரிமையாளரின் பேட்டி: Q&A: Mediaite’s Colby Hall And Rachel Sklar – The Web site’s managing editor and editor at large discuss what all the fuss is about

Detractors were quick to point out that site founder Dan Abrams serves in some respects as a publicist, a journalist and a businessman–roles that work best when separate–as CEO of a media consultancy firm and legal analyst for MSNBC in addition to his role at Mediaite.

அதாகப்பட்டது, தன்னுடைய கன்ஸல்டிங்கை காசு கொடுத்து பெறுபவர்களின் ரேட்டிங்கை — மீடீயேட்.காம் உயர்த்திக் காட்டும்.

தொடர்புள்ள ஸ்லேட் கட்டுரை: The fledgling media Web site leaves an acrid aftertaste

This statement combines media hypocrisy, a gaffe, a bit of self-righteousness, and a dollop of stupidity all in one short sentence. The “un-interfering publisher” is one of journalism’s great myths. Every publisher who has the power to hire and fire makes his wishes known, either overtly or covertly. When his signals are ignored or disobeyed, the promised editorial independence always vanishes. Always. Mediaite will be no exception.

தமிழில் இருக்கும் பத்தி எழுத்தாளர்களுக்கும் தொலைக்காட்சி தொகுப்பாளர்களுக்கும் செய்தி ஆசிரியர்களுக்கும் மீட்டர் போடும் வெப்சைட் ஆரம்பித்தால் நன்றாகத்தான் இருக்கும்.

Matt-Bors-Idiot-box-Future-of-Journalism-Media-MSM-Cartoons

தற்போது வெளியாகும் சிறுபத்திரிகை பத்திக் கட்டுரைகள், கருத்துத் தொடர்கள், அனுபவச் சிதறல்கள், இதழ்தோறும் இடம்பெறுபவர்கள்:

அ) காலச்சுவடு

  1. பெருமாள்முருகன்
  2. ஸ்டாலின் ராஜாங்கம்
  3. கவிதா
  4. சச்சிதானந்தன் சுகிர்தராஜா
  5. சக்கரியா
  6. திவாகர் ரங்கநாதன்
  7. ஆ. சிவசுப்பிரமணியன்
  8. ரவிக்குமார்
  9. அ. ராமசாமி

ஆ) உயிர்மை

  1. சாரு நிவேதிதா
  2. எஸ்.ராமகிருஷ்ணன்
  3. ஷாஜி
  4. பிரபஞ்சன்
  5. பிரபஞ்சன்
  6. சு.தியடோர் பாஸ்கரன்
  7. இளைய அப்துல்லாஹ்
  8. மாயா
  9. ஆர்.அபிலாஷ்
  10. அ.முத்துலிங்கம்
  11. எஸ்.வி.ராமகிருஷ்ணன்
  12. யமுனா ராஜேந்திரன்
  13. சுகுமாரன்
  14. அழகிய பெரியவன்
  15. அ.ராமசாமி
  16. ச.தமிழ்ச் செல்வன்
  17. இந்திரா பார்த்தசாரதி
  18. பாரதி மணி
  19. அ.முத்துக்கிருஷ்ணன்
  20. வெங்கடேஷ் சக்கரவர்த்தி

இ) யுகமாயினி

  1. இரா. முருகன்
  2. சுப்ரபாரதி மணியன்
  3. அழகிய பெரியவன்
  4. நவீன்குமார்
  5. சந்திரசேகரன் கிருஷ்ணன்
  6. த அகிலன்
  7. பாவண்ணன்
  8. செங்கை ஆழியான்
  9. நா கண்ணன்
  10. நாகரத்தினம் கிருஷ்ணா
  11. எஸ் வைதீஸ்வரன்
  12. திருப்பூர் கிருஷ்ணன்
  13. இ.பா அம்சப்ரியா
  14. கே பாலமுருகன்
  15. கோவி லெனின்
  16. புதிய மாதவி
  17. சந்திரவதனா செல்வகுமாரன்
  18. ரவி சுப்ரமணியன்
  19. சோலை சுந்தரபெருமாள்

ஈ) புதுவிசை

  1. எஸ்.வி.ராஜதுரை
  2. அழகிய பெரியவன்
  3. டி.அருள் எழிலன்

உ) வார்த்தை

  1. இரா. முருகன்
  2. வ. ஸ்ரீநிவாசன்
  3. சுகா
  4. கே.எம். விஜயன்
  5. நரேந்திரன்
  6. எஸ். ஜெயஸ்ரீ
  7. பி.ச. குப்புசாமி

ஊ) உன்னதம்

  1. கலையரசன்
  2. யமுனா ராஜேந்திரன்
  3. எச்.பீர்முஹம்மது
  4. குட்டிரேவதி